Re: மெய்கண்டாரியம்

134 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 13, 2013, 12:42:56 AM4/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
நின்னா ஐயா,
மன்னிக்கவும்.... எழுத்துரு தெளிவாக இல்லை என்பதால் மாற்றியிருக்கிறேன். 
TSCII  எழுத்துருவில் இருக்கிறது உங்கள் பதிவு.

..... தேமொழி 


_______________

மய்கண்டாரியம் 1
அன்பர்களே ,

மெய்கண்டாரை ஆழக்கற்று அதற்குமேல்  சிறிது சென்று நான் எழுதிய நூலே ‘அழிவில் உண்மை” என்பதாகும். அதன் தத்துவ நடை சிறிது கடினமாக இருக்க, எளிய வகையில் அக்கருத்துக்களை புரிய வைக்கும் வகையில் தொடங்கியத் தொடரே இது. முற்றுப் பெறாதிருக்கும் அதனை ஒருவகையில் முடிப்பதற்கு அதனை மீண்டும் தொடங்குகின்றேன். மெய்கண்டாரின் சிவஞானபோதம் போலவே இந்நூலும் நூலிய அறிவியல் முறையியலகைக் கொண்டு செல்ல இதற்கு பிரமாண நூற்களாக யாதும் இல்லை,  ஓர் உண்மை தன் உண்மையாம் பண்பை தன்னுலிருந்து தானே உணர்த்திவிடும் அதற்கு வேறு அளவைகளும் பிரமாணங்களும் தேவை இல்லை,

உலகன்

 

தந்தை பெரியாரின் தன்மான இஇயக்கம் இஇந்த  20ஆம் நூற்றாண்டுத் தமிழர்களின் வரலாற்றில் பெரும் புரட்சிகளை உண்டாக்கிற்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆயினும் இஇன்று அது திசைமாறிப்போன  ஓர் புரட்சியாகவே ஆகிவிட்டது.  சிந்தித்து எதனையும் சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு வளராது  போய்விட்டது.  அவர் அன்று ஆதிக்கத்திலிருந்த சில வேதாந்திகளின் சொற்களை நம்பி  கடவுளைக் கற்பனை என்று சொல்லிப்போக, ஓர் சிறிது இஇருந்த இஇறை நம்பிக்கையும் இஇல்லாதுபோய்விட்டது, மக்கள் உள்ளங்கள் ஊழல் வழிச் சென்றுவிட்டன.  நேர்மை நீதியோடு இஇருக்கவேண்டிய அரசியல்,  சாக்கடை அரசியல் ஆகிவிட்டது. தன்மான உணர்வு வளர்ந்துள்ளதாகவும் தெரியவில்லை.  திருமணத்தை குற்றமான ஒன்றாக  செய்யவேண்டும் என்று கூறிய பெரியாரின் கருத்து அவ்வளவு  அபத்தமோ அதேபோன்றது தான் சமயம் வேண்டாம் என்பதும்.  நமக்கு வேண்டியது அருளினைப் பெருக்கி அன்பினை வளர்க்கும் சமயம். அதற்குப் புறம்பான வெறிகளை ஊட்டும் சமயம் அழிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்குக் கிடையாது. ஆனால் சமயமே அழிக்கப்படவேண்டும்  என்பதில் எனக்கு ஓர் சிறிதும் உடன்பாடில்லை.   பெரியார் தாயுமானவர் போன்ற நல்லோர்களின் சமயாதீதப் போக்கை, அதன் சாதிப்பாராட்டாத தன்மையை, அறிவார்ந்த முறையில் , சாதி வேண்டாவெனும் அதி-வர்ணா¡ஸ்ரம தர்மமே தர்மம் எனும் கோட்பாட்டை  அறிந்திருந்தால் அத்தகைய சமயத்தை பண்டைய நாயன்மார்களைப் போன்று ஆழ்வார்களைப் போன்று ஆதரித்து தமிழ மக்களை நல்வழிப்படுத்தி இஇருக்கலாம்.

விடப்பட்ட அப்பணியை துணிந்து செய்வதற்காக மெய்கண்டாரியம் என்ற இஇத்தொடரைத் தொடங்குகின்றேன்.

இத்தொடர் பல கட்டுரைகளை எளிய தமிழில் கொண்டிருக்கும். அழிவிலுண்மை எனும்  எனது பெருந்நூலையே சாதாரண தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதிட முடிவு எடுத்துள்ளேன்.  சூத்திரங்களும் படிமெய்களும் இஇருக்கும். ஆனால் தத்துவ தமிழில்  இஇருக்கும் எடுத்துக்காட்டுகளை  திருத்தி கட்டுரைகளாகப் படைக்கின்றேன்.

இதனை ஏன் மெய்கண்டாரியம் எனக் கூறவேண்டும்? அழிவில் உண்மை மெய்கண்டாரின் சிவஞானபோதம் வழிச் செல்வது.  எவ்வாறு அருட்குறள் திருக்குறள் வழிச் சென்று ஆங்கு  விரிக்கப்படாத பல விசயங்களை  விரிக்கின்றதோ, அதேபோன்றுதான் அழிவிலுண்மையும். ஆகவே இஇக்கட்டுரைகளில் வெளிப்படும் கருத்துக்கள் மெய்கண்டார் பேரிலேயே விளங்கத்தக்கன. 
 

முதல் கட்டுரை: கடவுள் கற்பனையா?

இல்லவே இஇல்லை. இஇறைவன் இஇருக்கின்றான்.  திருஞானசம்பந்தர் "சுடர்தெரிந்துள்ளன் சோதி எம்பெருமான்" என்பது போன்று இறைவனை ஒவ்வொரு நாளும் ஓயாது  தரிசித்துக் கொண்டிருக்கும் எனக்கு அவன் உண்மையாக என் உயிரோடு உயிர் கலந்த ஒருவனாக இஇருக்கின்றான்.  இஇந்த உண்மையை பிறரும் உடன்படு வகையில் நான் உணர்த்தவேண்டும். அது எனது கடமை. அதனை ஒட்டி முதற் சூத்திரம்

சூத்திரம் 1:

அறிவின் திறனும் அவாவின் போக்கும்நூன் 
நெறியின் ஆய்வர் நுழைவுகட் பெற்று 
பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர் 
பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது.

இச்சூத்திரம்  என்னதான் சொல்ல வருகின்றது?  இஇறைவன் காணக்கூடிய பொருள்-- யாராலும் காணவருகின்ற ஒன்று. ஆயினும் அதற்கு சாதாரண ஊனக்கண் பார்வை பத்தாது, ஞானக்கண் பார்வை வேண்டும்.

இதன் பொழிப்பு: தக்க உத்திகள் பெய்தும் பழகியும் இஇறையருளை ஈட்டி, தான் பெயராது அசலனாகி நின்று பிறவனைத்தையும் சலித்து தொழிற்படுத்தும் பேரறிவும் பேராற்றலுமுடைய பதியாகிய இஇறைவனை அனைவரும் ஞானக்கண்ணின் கண்டு மகிழலாம்  என்பது.

இந்த முதல் சூத்திரத்திலேயே சாதிபேதங்கள் அனைத்தும் அடிப்பட்டுப் போகின்றன.  இஇறைவனைக் காணுதற்கு  உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற பேதங்கள் இஇல்லை,  ஞானக்கண்தான் தேவை. அது அனைவரின் உடமையாக , சாத்தியமாக ஏற்கனவே இஇருக்கின்றது. திறக்கவேண்டிய கண்ணைத் திறந்து,   பார்க்கவேண்டிய பார்வையோடு பார்த்தால் அவன் தென்படுவான்.  தூரத்தில் இஇருக்கின்ற ஓர் விண்மீனோ  அல்லது கோளோ  அல்லது  நம் உடலில் நோயைத்தரும் நுண்கிருமிகளோ  சாதாரண கண்களுக்கு புலப்படாது போவதால் இஇல்லையென்று ஆகாது. நுண்பெருக்கி தொலைநோக்கி போன்ற கருவிகள் வழியாக இஇவற்றைப் பார்த்துவிடலாம். இ இதேப்போன்றுதான் இஇறைவனையும் நேராக தரிசிக்கலாம். ஆனால் அவனை தரிசிப்பதற்கு எந்த கருவியும் இஇல்லை: நம் கண்ணே தான் கருவி. ஊனப் பார்வைக்குள்ளே இஇன்னும் எத்தனையோ வகைப் பார்வைகள் நமது சாத்தியங்களாக (our own possibilities)  இஇருக்கின்றன. அவற்றை நாம் வளர்க்கவேண்டும். சாதாரண கணினி இஇருக்கின்றது. அதற்கு இஇணையத் தொடர்பு இஇல்லை என்றால் அது பல மின்மனைகளைப் (websites) பார்க்கமுடியாத குருடு.   இஇணையத் தொடர்பு வந்துவிட்டால், அந்த குருட்டுத்தன்மை இஇல்லாது போகின்றது. கடவுளைக் காணமுடியாது, முயன்றாலும் தெரியவில்லை என்பவன் இஇணையத்தொடர்பு இஇல்லாது குருடு; கண்டு  மகிழ்ந்து இ இறைவன் நலமே இருக்கின்றான் என்பவன், இணையத் தொடர்புடைய கணினி-- முன்பு காணமுடியாத பலவற்றைக் கண்டு , உண்டு உண்டு  என்பவன்.

இதைத்தான் மெய்கண்டாரும் இ இன்னும் பல ஞானிகளும் தமிழகத்தில் வற்புறுத்திச் சென்றுள்ளனர். அதனாலேயே சாதனங்கள் சாதனங்களாக கண்டு பிடித்த வண்ணம் இஇருந்தனர், புதியப் புதிய சாதங்களைக் கண்டு பிடிக்கும்  சுதந்திரத்தையும் அனைவருக்கும் நல்கினர்.

இதனால் நமது அடுத்தக் கேள்வி பார்வைகளைப் பற்றி ஆகின்றது. அடுத்தக் கட்டுரையில் இஇதனை விரிவாக காண்போம்.

(தொடரும்)1

On Friday, April 12, 2013 7:55:25 PM UTC-7, K. Loganathan wrote:

¦Áö¸ñ¼¡Ã¢Âõ 1

«ýÀ÷¸§Ç ,

¦Áö¸ñ¼¡¨Ã ¬Æì¸üÚ «¾ü̧Áø  º¢È¢Ð ¦ºýÚ ¿¡ý ±Ø¾¢Â á§Ä ‘«Æ¢Å¢ø ¯ñ¨Á” ±ýÀ¾¡Ìõ. «¾ý ¾òÐÅ ¿¨¼ º¢È¢Ð ¸ÊÉÁ¡¸ þÕì¸, ±Ç¢Â Ũ¸Â¢ø «ì¸ÕòÐì¸¨Ç Òâ ¨ÅìÌõ Ũ¸Â¢ø ¦¾¡¼í¸¢Âò ¦¾¡¼§Ã þÐ. ÓüÚô ¦ÀÈ¡¾¢ÕìÌõ «¾¨É ´ÕŨ¸Â¢ø ÓÊôÀ¾üÌ «¾¨É Á£ñÎõ ¦¾¡¼í̸¢ý§Èý. மெய்கண்டாரின் சிவஞானபோதம் போலவே இந்நூலும் நூலிய அறிவியல் முறையியலகைக் கொண்டு செல்ல இதற்கு பிரமாண நூற்களாக யாதும் இல்லை,  ஓர் உண்மை தன் உண்மையாம் பண்பை தன்னுலிருந்து தானே உணர்த்திவிடும் அதற்கு வேறு அளவைகளும் பிரமாணங்களும் தேவை இல்லை,

¯Ä¸ý

 

¾ó¨¾ ¦Àâ¡âý ¾ýÁ¡É þ­Âì¸õ ­þó¾  20¬õ áüÈ¡ñÎò ¾Á¢Æ÷¸Ç¢ý ÅÃÄ¡üÈ¢ø ¦ÀÕõ ÒÃ𺢸¨Ç ¯ñ¼¡ì¸¢üÚ ±ýÀ¾¢ø ±ûÇÇ×õ ºó§¾¸Á¢ø¨Ä. ¬Â¢Ûõ ­þýÚ «Ð ¾¢¨ºÁ¡È¢ô§À¡É  µ÷ ÒÃðº¢Â¡¸§Å ¬¸¢Å¢ð¼Ð.  º¢ó¾¢òÐ ±¾¨ÉÔõ º£÷à츢ô À¡÷ìÌõ ÀÌò¾È¢× ÅÇáР §À¡öÅ¢ð¼Ð.  «Å÷ «ýÚ ¬¾¢ì¸ò¾¢Ä¢Õó¾ சில §Å¾¡ó¾¢¸Ç¢ý ¦º¡ü¸¨Ç ¿õÀ¢  ¸¼×¨Çì ¸üÀ¨É ±ýÚ ¦º¡øÄ¢ô§À¡¸, µ÷ º¢È¢Ð ­þÕó¾ ­þ¨È ¿õÀ¢ì¨¸Ôõ ­þøÄ¡Ð§À¡öÅ¢ð¼Ð, Áì¸û ¯ûÇí¸û °Æø ÅÆ¢î ¦ºýÚÅ¢ð¼É.  §¿÷¨Á ¿£¾¢§Â¡Î ­þÕ츧ÅñÊ «Ãº¢Âø,  º¡ì¸¨¼ «Ãº¢Âø ¬¸¢Å¢ð¼Ð. ¾ýÁ¡É ¯½÷× ÅÇ÷óÐûǾ¡¸×õ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.  ¾¢ÕÁ½ò¨¾ ÌüÈÁ¡É ´ýÈ¡¸  ¦ºö§ÅñÎõ ±ýÚ ÜȢ ¦Àâ¡âý ¸ÕòÐ «ùÅÇ×  «Àò¾§Á¡ «§¾§À¡ýÈÐ ¾¡ý ºÁÂõ §Åñ¼¡õ ±ýÀÐõ.  ¿ÁìÌ §ÅñÊÂÐ அருளினைப் பெருக்கி அன்பினை வளர்க்கும் ºÁÂம். «தற்குப் புறம்பான வெறிகளை ஊட்டும் சமயம் «Æ¢ì¸ôÀ¼ §ÅñÎõ ±ýÀ¾¢ø ±ùÅ¢¾ ºó§¾¸Óõ ±ÉìÌì ¸¢¨¼Â¡Ð. ¬É¡ø ºÁ§Á «Æ¢ì¸ôÀ¼§ÅñÎõ  ±ýÀ¾¢ø ±ÉìÌ µ÷ º¢È¢Ðõ ¯¼ýÀ¡Êø¨Ä.   ¦Àâ¡÷ தாயுமானவர் போன்ற நல்லோர்களின் சமயாதீதப் போக்கை, «¾ý º¡¾¢ôÀ¡Ã¡ð¼¡¾ ¾ý¨Á¨Â, «È¢Å¡÷ó¾ ӨȢø , º¡¾¢ §Åñ¼¡¦ÅÛõ «¾¢-Å÷½¡¡ŠÃÁ ¾÷Á§Á ¾÷Áõ ±Ûõ §¸¡ðÀ¡ð¨¼  «È¢ó¾¢Õ󾡸 «ò¾¨¸Â ºÁÂò¨¾ Àñ¨¼Â ¿¡ÂýÁ¡÷¸¨Çô §À¡ýÚ ¬úÅ¡÷¸¨Çô §À¡ýÚ ¬¾Ã¢òÐ ¾Á¢Æ Áì¸¨Ç ¿øÅÆ¢ôÀÎò¾¢ þ­Õì¸Ä¡õ.

Å¢¼ôÀð¼ «ôÀ½¢¨Â н¢óÐ ¦ºöžü¸¡¸ ¦Áö¸ñ¼¡Ã¢Âõ ±ýÈ þ­ò¦¾¡¼¨Ãò ¦¾¡¼í̸¢ý§Èý.

­þò¦¾¡¼÷ பல ¸ðΨø¨Ç ±Ç¢Â ¾Á¢Æ¢ø ¦¸¡ñÊÕìÌõ. «Æ¢Å¢Öñ¨Á ±Ûõ  ±ÉÐ ¦ÀÕóá¨Ä§Â º¡¾¡Ã½ ¾Á¢Æ¢ø «¨ÉÅÕõ ÒâóЦ¸¡ûÙõ Ũ¸Â¢ø ±Ø¾¢¼ ÓÊ× ±ÎòÐû§Çý.  Ýò¾¢Ãí¸Ùõ ÀʦÁö¸Ùõ þ­ÕìÌõ. ¬É¡ø ¾òÐÅ ¾Á¢Æ¢ø  ­þÕìÌõ ±ÎòÐ측ðθ¨Ç  ¾¢Õò¾¢ ¸ðΨøǡ¸ô À¨¼ì¸¢ý§Èý.

­þ¾¨É ²ý ¦Áö¸ñ¼¡Ã¢Âõ ±Éì ÜȧÅñÎõ? «Æ¢Å¢ø ¯ñ¨Á ¦Áö¸ñ¼¡Ã¢ý º¢Å»¡É§À¡¾õ ÅÆ¢î ¦ºøÅÐ.  ±ùÅ¡Ú «ÕðÌÈû ¾¢ÕìÌÈû ÅÆ¢î ¦ºýÚ ¬íÌ  Ţâì¸ôÀ¼¡¾ ÀÄ Å¢ºÂí¸¨Ç  Ţâ츢ýȧ¾¡, «§¾§À¡ýÚ¾¡ý «Æ¢Å¢Öñ¨ÁÔõ. ¬¸§Å ­þì¸ðΨøǢø ¦ÅÇ¢ôÀÎõ ¸ÕòÐì¸û ¦Áö¸ñ¼¡÷ §Àâ§Ä§Â Å¢Çí¸ò¾ì¸É.
 

Ó¾ø ¸ðΨÃ: ¸¼×û ¸üÀ¨É¡?

­þøÄ§Å ­þø¨Ä. ­þ¨ÈÅý ­þÕ츢ýÈ¡ý.  ¾¢Õ»¡ÉºõÀó¾÷ "ͼ÷¦¾Ã¢óÐûÇý §º¡¾¢ ±õ¦ÀÕÁ¡ý" ±ýÀÐ §À¡ýÚ þ¨ÈÅ¨É ´ù¦Å¡Õ ¿¡Ùõ µÂ¡Ð  ¾Ã¢º¢òÐì ¦¸¡ñÊÕìÌõ ±ÉìÌ «Åý ¯ñ¨Á¡¸ ±ý ¯Â¢§Ã¡Î ¯Â¢ர் ¸Äó¾ ´ÕÅÉ¡¸ ­þÕ츢ýÈ¡ý.  þ­ó¾ ¯ñ¨Á¨Â À¢ÈÕõ ¯¼ýÀΠŨ¸Â¢ø ¿¡ý ¯½÷ò¾§ÅñÎõ. «Ð ±ÉÐ ¸¼¨Á. «¾¨É ´ðÊ Ó¾ü Ýò¾¢Ãõ

Ýò¾¢Ãõ 1:

«È¢Å¢ý ¾¢ÈÛõ «Å¡Å¢ý §À¡ìÌõáý
¦¿È¢Â¢ý ¬öÅ÷ ѨÆ×¸ð ¦ÀüÚ
¦ÀÂáô ¦ÀÂ÷ìÌõ ¦ÀÕõ¦À¡Õû ¸¡ñÀ÷
¦ÀöÂÕû ¦ÀÕ츢ý §À½¢ý À¢¨ÆÂ¡Ð.

­þîÝò¾¢Ãõ  ±ýɾ¡ý ¦º¡øÄ ÅÕ¸¢ýÈÐ?  ­þ¨ÈÅý ¸¡½ìÜÊ ¦À¡Õû-- ¡áÖõ ¸¡½ÅÕ¸¢ýÈ ´ýÚ. ¬Â¢Ûõ «¾üÌ º¡¾¡Ã½ °Éì¸ñ À¡÷¨Å Àò¾¡Ð, »¡Éì¸ñ À¡÷¨Å §ÅñÎõ.

­þ¾ý ¦À¡Æ¢ôÒ: ¾ì¸ ¯ò¾¢¸û ¦ÀöÐõ ÀƸ¢Ôõ ­þ¨ÈÂÕ¨Ç ®ðÊ, ¾¡ý ¦ÀÂáР«ºÄÉ¡¸¢ ¿¢ýÚ À¢ÈŨÉò¨¾Ôõ ºÄ¢òÐ ¦¾¡Æ¢üÀÎòÐõ §ÀÃÈ¢×õ §ÀáüÈÖÓ¨¼Â À¾¢Â¡¸¢Â ­þ¨ÈÅ¨É «¨ÉÅÕõ »¡Éì¸ñ½¢ý ¸ñÎ Á¸¢ÆÄ¡õ  ±ýÀÐ.

­þó¾ Ó¾ø Ýò¾¢Ãò¾¢§Ä§Â º¡¾¢§À¾í¸û «¨ÉòÐõ «ÊôÀðÎô §À¡¸¢ýÈÉ.  ­þ¨ÈŨÉì ¸¡Ï¾üÌ  ¯Â÷ó¾ º¡¾¢ ¾¡úó¾ º¡¾¢ ±ýÈ §À¾í¸û ­þø¨Ä,  »¡Éì¸ñ¾¡ý §¾¨Å. «Ð «¨ÉÅâý ¯¼¨Á¡¸ , º¡ò¾¢ÂÁ¡¸ ²ü¸É§Å ­þÕ츢ýÈÐ. ¾¢È츧ÅñÊ ¸ñ¨½ò ¾¢ÈóÐ,   À¡÷츧ÅñÊ À¡÷¨Å§Â¡Î À¡÷ò¾¡ø «Åý ¦¾ýÀÎÅ¡ý.  àÃò¾¢ø ­þÕ츢ýÈ µ÷ Å¢ñÁ£§É¡  «øÄÐ கோ§Ç¡  «øÄР ¿õ ¯¼Ä¢ø §¿¡¨Âò¾Õõ Ññ¸¢ÕÁ¢¸§Ç¡  º¡¾¡Ã½ ¸ñ¸ÙìÌ ÒÄôÀ¼¡Ð §À¡Å¾¡ø ­þø¨Ä¦ÂýÚ ¬¸¡Ð. Ññ¦ÀÕ츢 ¦¾¡¨Ä§¿¡ì¸¢ §À¡ýÈ ¸ÕÅ¢¸û ÅÆ¢Â¡¸ þ­Åü¨Èô À¡÷òÐÅ¢¼Ä¡õ. ­ þ§¾ô§À¡ýÚ¾¡ý ­þ¨ÈŨÉÔõ §¿Ã¡¸ ¾Ã¢º¢ì¸Ä¡õ. ¬É¡ø «Å¨É ¾Ã¢º¢ôÀ¾üÌ ±ó¾ ¸ÕÅ¢Ôõ ­þø¨Ä: ¿õ ¸ñ§½ ¾¡ý ¸ÕÅ¢. °Éô À¡÷¨ÅìÌû§Ç þ­ýÛõ ±ò¾¨É§Â¡ Ũ¸ô À¡÷¨Å¸û ¿ÁÐ º¡ò¾¢Âí¸Ç¡¸ (our own possibilities)  ­þÕ츢ýÈÉ. «Åü¨È ¿¡õ ÅÇ÷츧ÅñÎõ. º¡¾¡Ã½ ¸½¢É¢ ­þÕ츢ýÈÐ. «¾üÌ ­þ¨½Âò ¦¾¡¼÷Ò ­þø¨Ä ±ýÈ¡ø «Ð ÀÄ Á¢ýÁ¨É¸¨Çô (websites) À¡÷ì¸ÓÊ¡¾ ÌÕÎ.   þ­¨½Âò ¦¾¡¼÷Ò ÅóÐÅ¢ð¼¡ø, «ó¾ ÌÕðÎò¾ý¨Á þ­øÄ¡Ð §À¡¸¢ýÈÐ. ¸¼×¨Çì ¸¡½ÓÊ¡Ð, ÓÂýÈ¡Öõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä ±ýÀÅý þ­¨½Âò¦¾¡¼÷Ò ­þøÄ¡Ð ÌÕÎ; ¸ñΠ Á¸¢úóÐ ­ þ¨ÈÅý ¿Ä§Á þÕ츢ýÈ¡ý ±ýÀÅý, ­þ¨½Âò ¦¾¡¼÷Ò¨¼Â ¸½¢É¢-- ÓýÒ ¸¡½ÓÊ¡¾ ÀÄÅü¨Èì ¸ñÎ , ¯ñÎ ¯ñΠ ±ýÀÅý.

­þ¨¾ò¾¡ý ¦Áö¸ñ¼¡Õõ ­ þýÛõ ÀÄ »¡É¢¸Ùõ ¾Á¢Æ¸ò¾¢ø ÅüÒÚò¾¢î ¦ºýÚûÇÉ÷. «¾É¡§Ä§Â º¡¾Éí¸û º¡¾Éí¸Ç¡¸ ¸ñÎ À¢Êò¾ Åñ½õ ­þÕó¾É÷, Ò¾¢Âô Ò¾¢Â º¡¾í¸¨Çì ¸ñÎ À¢ÊìÌõ  ;ó¾¢Ãò¨¾Ôõ «¨ÉÅÕìÌõ ¿ø¸¢É÷.

­þ¾É¡ø ¿ÁÐ «Îò¾ì §¸ûÅ¢ À¡÷¨Å¸¨Çô ÀüÈ¢ ¬¸¢ýÈÐ. «Îò¾ì ¸ðΨâø þ­¾¨É Ţ⚸ ¸¡ñ§À¡õ.

(¦¾¡¼Õõ)1

K. Loganathan

unread,
Apr 12, 2013, 10:55:25 PM4/12/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

K. Loganathan

unread,
Apr 13, 2013, 2:44:06 AM4/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா தேமொழி

உண்மைதான். நான் கவனிக்கத் தவறிவிட்டேன். மாற்றியமைக்கு மிக்க நன்றி. ஏனைய கட்டுரைகள்  நன்முறையில் வந்து விடும்,

உலகன்


2013/4/13 தேமொழி <them...@yahoo.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

K. Loganathan

unread,
Apr 13, 2013, 5:07:18 AM4/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 2: பகுத்தறிவு என்றால் என்ன?

 

இந்தப் பார்வைகளைப் பற்றி நாம் விசாரித்துத் தெளியும் முன்னர், பகுத்தறிவு என்றால் என்ன? என்பதையும் நாம் விளக்கவேண்டும். தந்தை பெரியார் பகுத்தறிவை வளர்க்க பெரிதும் முற்பட்டார். அதற்கு நல்லவோர் காரணத்தையும் தந்தார்:

 

எவன் உண்மையாக சிந்திக்கத் தொடங்குகின்றானோ, அவன் தன் வாழ்க்கையை தானே செவ்வே அமைத்துகொள்வான்.

 

உண்மைதானே? நானும் கடந்த  பல ஆண்டுகளாக சொல்லி வருகின்றேன்: சிந்திக்க தெரியாதவனால், சிந்திக்க மறுப்பவனால் நல்ல சைவனாக,  இந்துவாக ஏன் நல்லவோர் மாந்தனாக இருக்கமுடியாது, வளர முடியாது என்று.   ஆயினும் இன்றைய தமிழர்களின், அதிலும் குறிப்பாக இந்த திராவிடப் பாசறையில் வளர்ந்தவர்களின் பகுத்தறிவின் தன்மை எப்படி இருகின்றது? பலரோடு மோதிய பின் நான் கண்டது:  தமிழ்ப் பண்பாட்டில் எந்தக் குறையிருந்தாலும் அது மூட நம்பிகைகளை வளர்க்கும் இந்து சமயத்தால் வந்தது ஆகவே இந்து சமயத்தை அழித்தால் தான் தமிழச் சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று அவர்கள் கூறுவதே.

 

இந்து சமயம் பகுத்தறிவை வளர்க்காத ஒன்றா? எப்படி இப்படிப்பட்ட சிந்தனை?

 

சிந்தனைய முடக்கி ஓர் சுருதியையோ அல்லது ஓர் மகானையோ இறையுண்மைக்கு இறை நம்பிக்கைக்கு சமய வாழ்க்கைக்கிகு முழு ஆதாரம் என்று கூறுவதால் பகுத்தறிவு சம்ய வாழ்க்கையில் இல்லாது போய்விட்டது என்று கூறுகிறார்களோ?

 

நான் பரிந்துரைக்கும் சம்ய வாழ்க்கை நிச்சயமாக  இத்தன்மையது அல்ல.  அது மேலே  தரப்பட்ட சூத்திரத்தில் விளம்பப்படும் 'நூன்னெறி " வழி செல்வது, அறிவியல் சார்ந்த ஓர் முறையியலைக் கொண்டது தொல்காப்பியத் தமிழர்கள் உலகிற்கு ஈன்ற நன்கொடை இதுதான்.

 

வேடிக்கை என்னவென்றால், உலகில் முதன் முதலாக தத்டுவ விராசனையை சமய வவழ்க்கைஅயை அளவை நெறிக்குக் கொண்டு வந்தவர்களே பாசுபத சைவர்கள் தாம். ஆனால் அவர்கள் உருவாக்கிய நையாயிகம் தொல்காப்பிய ஏரணவீயத்தைத் திரித்துத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் நமது சோம்பேறித்தனத்தால், உலகம் இதனை உணராதே இருக்கின்றது.  நையாயீகம் தொல்காப்பியத்தில் விளக்கப்படும் ஏரணவீயத்தின் திரிபு. இதன் தோற்றம் சுமேருத் தமிழிற்கே செல்கின்றது.

‘ஏது நுதலிய முதுமொழி’ எனும் தொல்காப்பியக் கருத்து சூருப்பாக்கின் நெறியிலேயே(கி.மு 3000) உண்டு

 

இங்கு விளங்கும் பகுத்தறிவு (rationality) தான் என்ன?

 

ஏரணவொழுங்கோடு செல்கின்ற சிந்தனையே உண்மையான பகுத்தறிவு.

 

சொல்லப்படும் ஓர் உண்மையை, அது   ஓர் உண்மையே என்று பிறரும் உடன்பட, தக்க ஏதுக்கள் எசுத்டுக்காட்டுகள்  தரப்படவேண்டும்.  இந்த ஏதுக்களின் எடுத்துக்காடுகளின்  உண்மையை உணர, உரைக்கப்படுவதும் உண்மையென உடன்படவர, அது   ஓர் "மேற்கோள்" ஆகிறது. உரைக்கப்படுவது உண்மையென்று மேற்கொள்ளப்பட்டு ஒழுகப்படுவதால் அது மேற்கோள் ஆகின்றது.

 

இனி  சூத்திரம் என்பது ஓர் ஆழமான  உண்மையை (axiomatic truths)  உணர்த்தும் என்பதால், அதற்கு உடன்பாடு எளிதில் பெறமுடியாது.  முதலில் சூத்திரம் என்னதான் சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமே? அதன் உண்மையை தக்க ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும்   பிறருக்கு  'இப்படிக் காணுக" என்று காட்ட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட  மெய்நெறித்துவாகிய உரையே காண்டிகை உரை என்பது.

 

ஒருவன் ஓர் கிளவியின் உண்மையை இன்னொருவனும் காணவைப்பதே காண்டிகை உரையாகும் (காண்டிகா > காண்டிகை?)

 

ஆங்கிலத்தில் இதனைத் தான் Logical Demonstration  என்பர்

 

இதை நான் சொல்லவில்லை; 2300 ஆண்டுகளுக்கு முன்பே  தொல்காப்பிய மரபியல் இதனை விளக்கி, தமிழப் பண்பாட்டை  நூலிய அறிவியல்வழி செல்லும் ஒன்றாக்கியது.

 

பண்டைய கிரேக்கர்கள் Syllogism  கூறினார்களேத் தவிற இப்பேற்ப்பட்ட காண்டினையைக் கூறவில்ல்லை என்றே நினைக்கின்றேன். பிழை என்றால் சுட்டிக் காட்டவும்

 

1601:

 

பழிப்பில்  சூத்திரம் பட்ட பண்பின்

கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்

 

1602

 

விட்டு அகல் வின்றி , விரிவொடு பொருந்திச்

சுட்டிய  சூத்திரம் முடித்தற் பொருட்டா

ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்

மேவாங்கு  அமைந்த மெய்ந்நெறித் ததுவே

 

"மெய் யாது?" என்ற கேள்வியை மையமாகக் கொண்டு , ஓர்  சூத்திரம் மிக நுட்பமாக உரைக்கும் பொருளை, தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழியாக அனைவரும் உடன்படும் வகையில் எவ்வித கரப்பும் (அதாவது மறைப்பும் திரிபும்) இன்றி முடிப்பதே காண்டிகை உரை என்பது. எந்த ஆய்வு இவ்வாறு செல்கின்றதோ, அது பகுத்தறிவிற்கு  முரண்பாடான ஒன்றல்ல.

 

மெய்கண்டாரியம் இப்படிப்பட்ட முறையியல்  வழியாகத் தான் தனது  கோட்பாடுகளை  நிறுத்துகின்றது என்பதின் பகுத்தறிவிற்கு புறம்பாக அது செல்லவில்லை.

 

இன்னும் ஒன்றையும் நான் சொல்லியாக வேண்டும்.  ஆழமான ஓர் சூத்திரத்தை புரிந்துகொள்ள அடுத்தடுத்துப் பல மேற்கோள்கள் சாதிக்கப்படவேண்டியதாகிறது. மெய்கண்டாரின் சிவஞானபோதத்தில் இதைக் காண்கிறோம். ஓர் சூத்திரத்தின் உட்பொருளை   குற்றமற்ற முறையில் புரிந்துகொள்வது வாழைப்பழம் வெட்டுவதல்ல-- மிகக் கடினமாக உழைத்து  குன்றுச்சிக்கு ஏறிச் செல்வதுபோன்றது . படிப்படியாக ஏறினால் தான் உச்சி அடைய முடியும்.  இதைப்போன்றே சூத்திரத்தின் உண்மையை நிறுத்த  அடுத்தடுத்து தரப்படும் மேற்கோள்கள்; அதனின் இவை  'படிமெய்கள்' ஆகின்றன. சித்தாந்த சாத்திரங்களில் இதனை  'அதிகரணம்' என்பர். அது தேவையில்லை.  இங்கு 'படிமெய்' என்றே பகர்வோம்.

 

மேற்கொண்ட சூத்திரத்தின்  உட்பொருளை பகுத்தறிவிற்கு, முறையாக செல்லும் அறிவியல் சிந்தனைக்கு ஒத்து  வரும் வகையில் அடுத்தடுத்து ஓர் சங்கிலித் தொடர் போல் வரும் படிமெய்கள் வழியாக விளம்பப்படும். எல்லா படிமெய்களும் நிறுத்தப்பட்ட  பின்பு, அவற்றையெல்லாம் புரிந்துகொண்டு சீரணித்து ஒட்டுமொத்தமாக காண அதுபொழுது எழும் உண்மையை நாம் உணரும் போது சூத்திரத்தின் உட்பொருளும் தானே விளங்கும்.

 

தொல்காப்பியர் கூறுவது ‘காண்டிகை உரை’ என்றால், மெய்கண்டார் காட்டுவது ‘விருத்தி காண்டிகை உரை’ யாகும்

 

இப்படிப்பட்ட ஏரணவியல் வழி இறைவனது உண்மையை  அறியலாம்  தெளியலாம்  என்பதே, மெய்கண்டாரியத்தின்  அடிப்படை கோட்பாடு.

 

உடன்  நாம் ஒன்றைக் காணவேண்டும்.

 

இவ்வாறு கூறுவதின், வேதங்கள், உபனிடதங்கள் மற்றும்  தேவராத் திருமுறைகள் திவ்விய பிரபந்தங்கள் போன்ற மறைநூற்கள் கட்டாயம் தேவை என்பதில்லை என்றும் கூறலாம். அவை உதவலாம்-- நிச்சயமாக உதவுகின்றன-- ஆனால் அவை இல்லாது போய்விட்டால் இறைவனது உண்மை  அறியமுடியாது போய்விடும் என்பதல்ல.

 

இறைவனது உண்மையை நாம் நாமே உணரலாம். ஏரண நியதி பிழையாது ஒழுங்காக சிந்திக்கத்தெரிந்தால் போதும், உண்மையக் கண்டுகொள்ளலாம்.

 

இப்படிப்பட்ட திறமை அனைவரிடமும் அவர்களது பிறப்புரிமையாக இருக்கின்றது. இதைத்தான் நான் "ஞானசமத்துவம்" என்கிறேன். ஞானசமத்துவம் என்பது ஓர் உண்மை. அனைவருக்கும் உரித்தாக விளங்கும் ஓர் பிறப்புரிமையை இதுவொன்றும் புதியதல்ல-- பண்டைய நாயன்மார்களின் ஆழ்வார்களின் போராட்டமும்  இதன் அடிப்படையில்தானே எழுந்தது? "வேதாந்தத் தெளிவாம் " சைவ சித்தாந்தம் உரைத்த மெய்கண்டாராலும்  இந்தப் புரட்சிதானே வளர்க்கப்பட்டது? 

 

அந்த பண்டைய புரட்சியை மீண்டும் நடத்த  காலம் கனிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

 

(தொடரும்)1.1



2013/4/13 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 13, 2013, 10:45:39 PM4/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 3: பார்வை வகைகள்.

 

மறைபொருளாக iருக்கின்ற தெய்வங்களை அனைவராலும்  நேரில் காணமுடியும். இது அனைவரின் மறுக்கப்படாத பிறப்புரிமையாக இருக்கின்றது. எப்போது நாம் இதனை அங்கீகரிக்கின்றமோ, அப்போதே   எல்லா மானிட  சமத்துவத்தின்  மூலக்கொள்கையை அங்கீகரிக்கின்றோம். இதைதான் மெய்கண்டார் தமது சிவஞான போதத்தில் விளக்கி இறவாப்பெரும் புகழை அடைந்து தமிழச் சிந்தனைக்கே  உலக வரலாற்றில் ஓர் சிறப்பிடத்தையும் ஈட்டித் தந்துள்ளார்.

 

பார்வைகள் பலவாகும். யாவை அவை? சிறிது விளக்குவம்.

 

முதற்படிமெய்:

 

மேற்கோள்: அறிவு பலவகைப் படும் என்றது.

 

ஏது: பார்வைகள் வழியே அறிவு என்பதின்; பார்வைகளும் பொறிலியப் பார்வை, நூலியப் பார்வை, நுதலியப் பார்வை, பரப்பார்வை, சிவப்பார்வை, அதீதப்பார்வை, அருட்பார்வை  என்றவாறு பலவகைப்படும் என்பதின்.

 

விளக்கம்:

 

சரி, இதனை  பெரியார் போற்றும் பகுத்தறிவிற்கு ஏற்ற முறையில் எப்படி விளக்குவது?  இந்த ஞானி சொன்னார், இந்த மறைநூலில் இப்படிச் சொல்லப்பட்டது ஆகவே அதனைக்  காட்டாயம் இறைவாக்காக  நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கூறி வாயடைத்துவிட்டால் அது பகுத்தறிவு ஆகாது.  நாமும் அப்படி இந்த படிமெய்யை விளக்கப் போவதில்லை. பிறகு எப்படி?

 

முதலில் "காணுதல்" என்பதைப் பற்றி ஓர் சிறிய விளக்கம்.

 

ஓர் பொருளை 'விடயித்தல்' (sensing)  என்பது வேறு "காணல்" (seeing) என்பது வேறு. காணலே காட்சியைப் பயப்பதாகி பொருளுணர்வினைத் தேற்றி "நிருவிகற்ப உணர்வு" என்றும் 'சவிகற்ப உணர்வு" என்றும் உணர்வுகளைப் பயப்பிக்கும்.

 

இங்கு  இந்த உணர்வு வகைகள் தத்துவ நூற்களில் வரும் கலைச் சொற்களால் குறிக்கப்படுகின்றன. கற்றுக்கொள்ளுங்களேன்!

இந்த "நிருவிகற்ப" உணர்வை தொல்காப்பியர் "பொருளொடு புணராச் சுட்டு" என்பர். இந்த உணர்வு வகையில்  மாத்திரம் ஓர் பொருள் இருக்குமெனில் அதனை "அது" "இது" என்றுதான் சுட்டமுடியுமேத் தவிர, பெயரிட்டு "ஆடு' 'மாடு' 'மரம்' என்றெல்லாம் கூறமுடியாது. அதனால் அதனை "நிர்-விகற்பம்" அதாவது "விகற்பம் அற்றது" என்பர் தமிழ அளவைவாதிகள். இதனால் "-விகற்பம்" என்றால் என்ன என்பது தானே புரியுமே? பெயரிட்டு "இது இன்னது, இற்று" எனக் கூறும் வகையில் உணர்வு தெளிந்து இருக்கும்போது அது சவிகற்ப உணர்வு ஆகின்றது.

 

இது ஏன் முக்கியமெனில், இவ்வாறான "காணல்" இல்லையெனில் குறித்தலும் சுட்டலும் உணர்த்தலும் தெரிவித்தலும் தெரித்தலும்  மேலும் இது போன்ற "ஞானச் செய்திகள்" (cognitive acts) இல்லாது போகும்.  அப்புறம் " அறிவு" என்ற ஒன்று எங்கே இருக்கப்போகிறது?

 

இந்த இரண்டு வகை உணர்வுகள் எப்படி சனிக்கின்றன?

 

இதனை இங்கு நான் புத்துலக,  பெரும்பாலும் ஜெர்மானிய உளவியலாளர் கண்டு சொன்ன 'Gestalt  Theory of Perception" வழியாக விளக்கப்போகிறேன். தமிழர்கட்கு இது ஒன்றும் புதிதல்ல-- அன்றே திருமூலர் கண்ட ஒன்றுதான்.

 

ஓர் பொருளை அறியுங்கால், அதனை ஓர் முழுசாக (a Gestalt, a whole)  அறியும்போது அதனது சிறப்பியல்புகளும் பொதுவியல்புகளும் மனதில் பட, அது இன்னது, இற்று என்று தெளிவாக, ஓர் சொல்லால் சுட்டப்படும் தன்மையை எய்துகிறது. மேலும் அதுபொழுது "அவயவம்-அவயவி" என்றவாறும் (part-whole)  அறியப்படுகிறது.  கருத்தில் நிற்கின்ற பலவகைப்பட்ட பொருட்களோடும் அதே பொருளின்  பலவகைப்பட்ட காட்சியறிவுகளோடும் ஒப்பிட்டு,  தொகுத்து வகுத்து அதன் பொதுமைக் கூறுகள் என்ன? சிறப்புக் கூறுகள் என்ன ? வென்று பகுத்தறிந்து   தெளியும்போதே  நிருவிகற்பமாக நின்றவொன்று சவிகற்ப உணர்விற்றாக உயர்கின்றது.  இவ்வாறு தெளிந்துணர்வதே ஒர் பொருளை விடயிப்பதற்கு வேறாக , கண்டு அறிந்து இன்னது இற்று என்று  உணர்வதாகும். இத்தகைய தெளிவுகளே சொற்படுத்தப்படுதற்கும் வேறுவகையில் மனதில் நிறுத்தற்கும்  தொடர்ந்து சிந்திப்பதற்கும் கருதற்கும் ஏதுவாக  இருப்பதின்" அறிவு" என்கின்றோம்

 

இதனால் காணல்வழி ஆகவே பார்வைகள் வழிதான் அறிவு என்பது  உறுதியாகின்றது.

 

சரி-- மேற்கொண்டு என்ன? பார்வைகள் பலவகைப் பட்டது என்று முன்மொழிந்தோமே? அதனை அடுத்து விளக்குவோம்.

 

பார்வைகளில் தனிச் சிறப்பிற்குரியது முதற்கண் நவிலப்பட்ட பொறிliயப் பார்வை யாகும்.  இது எப்படிப்பட்டது?  கண், செவி, மூக்கு , நாக்கு , தோல் என்றவாறு வரும் ஐம்பொறிகள் வழியாக அமையும் "பார்வையும்" மேலும் இவற்றின் விருத்தியாக வரும் தொலைநோக்கி, நுண்பெருக்கி, வெட்பமானி என்றவாறு வரும் கருவிகள் வழியாகவும் பெறப்படுவதாகும்.

இங்கு "காணல்" "பார்த்தல்" என்பதை விரிந்தவோர் பொருளில் நாம் கொள்வதைக் காண்க. ஓர் நாயின் குரைப்பை செவியின் வழியாக அறியும் போது அதுவும் "பார்த்தல்" தான் ; செவி எனும் பொறிலியப்பார்வை வழி அமைவது.

இப்படிப்பட்ட பொறிலியப் பார்வை வழி வரும் அறிவெலாம், திசையுறு வெளியையும் (directional space)  , சுட்டுணர்வின் காலத்தையும் முதற்பொருளாகக் கொண்டு கருப்பொருள் உரிப்பொருள் என்ற வகையில் பொருளறிவு சிறக்கும்.

 

இது அன்றே தொல்காப்பியர் கண்டதுதானே?

 

முதல்கரு உரிப்பொருள் என்ற முன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை (949)

என்றும்;

 

முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (950)

 

என்றும் கூறிச் செல்லவில்லையா?

 

இதனை  மேலும் சிந்திக்க  வேறொன்று தெளிவாகின்றது-- மெய்கண்டார் தெளிந்தவாறு.

 

பொறிலியப் பார்வையின் அறிவெலாம் சுட்டுணர்வேயாகி கண்டறியும் அனைத்தும் தனியாகவும் கூட்டாகவும் தோன்றி நின்று அழிவதாய் காணப்படும் என்றும் ஆகின்றது. இதைத்தான்

 

"அவன் அவள் அது எனும் அவை முவினைமையின்

தோற்றிய திதியே  ஒடுங்கி மலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்"

 

என்று தம் முதற் சூத்திரத்திலேயே  கூறி தம் சிவஞானபோதத்தை தொடங்குகின்றார் மெய்கண்டார்.

 

இதற்குப் பிறகுதான் சிக்கலேத் தொடங்குகிறது. அறிவுடையார் யாரும் இப்படிப்பட்ட பொறிலியப்ப் பார்வை உண்டென்பதை மறுக்கார். கீழான விலங்குகளுக்குக் கூட இப்படிப்பட்ட பார்வைகள் உண்டு.

 

யார் பொறிலியப்ப் பார்வைக்கு மேற்பட்ட பார்வைகள்  இல்லை என்கிறார்களோ, அவர்களே 'உலகாயதர்கள்". இப்படிப்பட்டவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள்.

 

ஆயினும் அடுத்தபடியாக நூலியப் பார்வை, நுதலியப் பார்வை என்றெல்லாம் ருக்கின்றன. இவற்றை எப்படி புரியவைத்து, இப்படிப்பட்ட உலகாயதர்களையும் உடன்பட வைப்பது- பகுத்தறிவு முறையில்?

 

இது அடுத்த கட்டுரையில்.

 



2013/4/13 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 14, 2013, 7:21:00 AM4/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 4 நூலியப் பார்வையும் பிறவும்.

 சென்ற கட்டுரையில் பிரச்சினைக்கு அதிக இடமில்லாத பொறிலியப்பார்வை பற்றி சிறிது விளக்கினோம். இப்பொழுது ஏனையப் பார்வைகளைப் பற்றி சிறிது.

 இனி நூலியப் பார்வை என்பது காணப்படும் அனைத்தையும் ஓர் நூலெனக் காண்பதின் அமைவது.  அதுவென ஒன்றினை நூலாகப் பார்ப்பது?

 

இந்தப் பார்வையே நூலிய அறிவியலுக்கு முதன்மையானது, தொல்காப்பியர் காலத்திலிருந்து (அதற்கு முன்பிருந்தும்) தமிழப் பண்பாட்டின் அடிப்படையாக இருப்பது.

 

வெள்ளையர்கள் கண்டு வளர்த்துள்ளது பொறிலிய அறிவியல்( Positive Sciences) தமிழர்கள் வளர்த்துள்ளது நூலிய அறிவியல்(Hermeneutic Sciences)

 

எல்லா பொருள்களுக்கும் இரண்டு உருக்கள் உண்டு-- புறவுரு என்றும்  புதையுரு வென்றும் இரண்டு.   கட்டுரை,  கடிதம், கவிதை, கதை  போன்ற எழுத்தின் இயன்ற படைப்புக்கள் அனைத்தும் இந்த இரண்டு உருக்களையும் உடையன. "இந்த மொழியால் இயன்றது  இக்கவிதை" என்னும்போது  புறவுருவைத் தான் பார்க்கின்றோம். ஆனால்  "உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிக் கவிதை" என்றவாறு  அதன் உட்கிடைக்கையை, உணர்த்தப்படுவதைப் பற்றிச் சொல்லும் போது புதையுருவைக் காண்கின்றோம்.  ஓர் முகம் இவ்வகையில் இரண்டு உருக்கள் உடைய ஓர் நூல் ஆகும். முகத்தின் வடிவு புறவுரு, அது உணர்த்தும் அகநிலை புதையுரு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா?

 

புதையுருக்கள் பொதுவாக யாதை நாம் அறியாதிருக்கின்றோமோ அதைத்தான் உணர்த்தும். அதனின் "நூல்" என்பது காண்பான் மாட்டு அவனுள் கிடக்கும் அறியாமையை வெளிப்படுத்தும்  ஒன்றாகின்றது.  எப்படியெனில், வெளிப்பட்டு நிற்கும் புறவுருவின் வழி வெளிப்படா நிற்கும் புதையுருவொன்றினை ஒருவாறு உணர்த்தி நிற்பதால்  இவ்வாறு.

 

இவ்வாறு காண்பதொழித்து, புறவுருதான் உரு, புதையுரு என்றவொன்றில்லை என்று கூறி, புதையுருவை பார்க்க மறுத்தால், பார்வை பொறிலியப் பார்வையாகவே நின்று விடுகின்றது; உலகாயதப் போக்கே நீடிக்கின்றது. அசித்துப் பொருட்களின் பூதவாதம்தான் தக்க தரிசன்மாக நிற்கும். ஆன்மா உண்டும் இறிவன உண்டு எனும் சித்டுப் பொருட்களின் உண்மைஅ பார்க்க முடிடாத ஒன்றாகிட நாத்திகமேப் போற்றப்படும்

 

சரி, பகுத்தறிவு முறையில் இப்படிப்பட்ட பார்வை உண்டு என்று நிறுத்துவது எப்படி?

 

இங்கு நமக்குத் தொல்காப்பியர் வழி காட்டுகிறார்.

 

கால உணர்வு இரண்டு வகைத்து. ஒன்று பொறிலியப் பார்வையோடு வரும் உலகியல் சுட்டுக்காலம் (physical time). இதுதான்   நியூட்டனின்  பௌதீகத்திற்கு அடிப்படையானது. இதனையே அறுத்து அறுத்து இவ்வாறு அறுப்பதின் எல்லைக்கேச் சென்று  கணிகங்களின் ஓட்டமாக பண்டைய தமிழ் நாட்டு  புத்தர்கள் கண்டு தமது கணபங்க வாதத்தை நிறுத்தினர்.

 

இந்தப் பொறிலிய சுட்டுக் காலத்திற்கு வேறாகவும் அது தோன்றுதற்கு மூலமாகவும் இருப்பது "குறிப்புக்காலம்" ஆகும். இதனை Henri Bergson  போன்றோர் "psychological time" என்பர்;  நான்  பெரிதும் போற்றி மதிக்கும் Heidegger அவர்கள் " temporality" என்பார். இதனை நான் ஆங்கிலத்டில் ‘Intenional Time’ என்றும் கூறுவேன்

 

இந்தக் கால உணர்வு இன்னும் அடையாவொன்றை அடையவேண்டி  அதனைக் குறித்து நிற்பதால் வரும்  அகந்நிலையில் எழுவதாகும்.

 

ஓர் பொருளை இரட்டுரு நூலாகக் காண, புறவுரு காட்டும் புதையுரு யாது? என்ற கேள்வியொடு அதனை அடைவான் வேண்டி, அதனை அடைந்த தனது எதிர்நிலை ஒன்றினைக்  குறித்து நிற்கும்போது எழுகின்ற  காலவுணர்வு இந்தக் குறிப்புக்கால உணர்வாகும்.

 

ஓர் கவிதையைப்  படிக்கின்றேன்.  அதன் சந்த நயம் தெரிகின்றது, உள்ளுவமங்கள் தெரிகின்றன ஆனல் அவை என்னதான் உணர்த்துகின்றன என்பது முற்றாகத் தெரியவில்லை. அதுபொழுது தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முனைப்பொடு நான் நிற்கும் போது,  எனது இருப்பிநிலையில் இந்த குறிப்புக்காலம் உணர்வு  மிக உறுதியாக இருக்கின்றது.

 

ஆக நூலியப் பார்வைக்கு மறையாக  நிற்பதொன்று உண்டெனப் பட , அதன் மறைப்பண்பை நீக்குவான் பொருட்டு தன்னின் ஓர் எதிர் நிலையை, அந்த மறையை போக்கிய தன்னின் தெள்ளிய எதிர் நிலையை  நுதித்து(project) நிற்கும்  இருப்புநிலை வந்தைமைய குறிப்புக்கால உணர்வும் அகத்தின் இயல்பாய் கூடுகின்றது.

 

காலவுணர்வு இவ்வாறு "பொறிலிய சுட்டுக்காலம்" என்றும் அதற்கு வேறாகிய "குறிப்புக்கால உணர்வு" என்றும் இருப்பது உலக மாந்தர் அனைவருக்கும் பொது. மானிட உள்ளங்களின் பொதுவியக் கூறு இதுவாகும். இதற்கு சாதி சமய பேதங்கள் எல்லாம் தேவையில்லை.

 

இந்தக் குறிப்புக்காலமும் கண்டித குறிப்புக்காலம் என்றும்  (Situational Temporality) பொதுவிய குறிப்புக்காலம்(Universal Temporality) என்று வகுக்க வருகிறது.  ஒரு பொருளால் ஆகும் குறிப்புக்காலம் -- காட்டாக ஓர் கவிதையால் வருவது -- கண்டித குறிப்புக் காலம். பொதுவாக அகத்துச் செறி அஞ்ஞானத்தால் வருவது அகண்டித அல்லது பொதுவிய குறிப்புக்காலம்.

 

இது பின்னால் இன்னும் விரிவாக விளக்கப்படும்.

 

புறவுருவின் பண்புகளை, ஓர் கவிதை ஏன் இத்தகைய உள்ளுவமங்களைக் கொண்டிருக்கிறது என்பது போன்றவற்றை-- விளக்குவது புதையுருவே.  யாண்டு அந்தப் புதையுருவினை தெள்ளத்தெளிவாக அறிகின்றோமோ அதுபொழுதே, ஏன் அந்த புறவுரு  அப்படி இருக்கின்றது என்று புரிந்து  கொள்வோம்.  அந்தக் குழந்தையின் முகம் ஏன் வாடி இருக்கிறது?  தாயாரைக் காணவேண்டும் என்ற ஏக்கத்தல்தான் என்று அறியும் போது, குழந்தையின் முக வாட்டத்தைப் புரிந்து கொள்கிறோம்.

 

இது என்ன மிக சாதாரண விசயம் தானே? என்று எண்ணத் தோன்றலாம். உண்மைதான். ஆனால் சர்வ சாதாரணமான இந்த விசயத்தைக் கண்டு பிடித்து சொல்வதற்குதான் எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பதொடு எவ்வளவு எளிதாக மறந்து  விடுகிறோம்?

 

இதை ஆழ சிந்திக்க   "கற்றல்" என்றால் என்ன என்று ஓர் தெளிவும் பிறக்கிறது. ஓர் நூலாகக் காணப்படுவதின் புறவுருவிலிருந்து, அதன் இயல்புகளை விளக்கும் புதையுருவை அடையும்போதே,  அந்த நூலினைப் "புரிந்துகொள்கிறோம்" (Understand) . இப்படி எல்லாம்   நாம் எங்கெங்கு செய்கிறோமே, ஆங்கெல்லாம் அறியாமை நீக்கம் நடைபெறுதலின் " கற்றல்"  நடக்கின்றது, நமது "புரிந்துணர்வு" (understanding) வளர்கின்றது.

 

இப்படிப்பட்ட கற்றல்களை செய்வதற்கே வாழ்க்கை என்று தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழப் பண்பாடு வளர்ந்துள்ளது. நூற்களை  "மனத்தின் எண்ணி மாசறத்  தெரிந்து கொண்டு" போதிக்க வேண்டும் என்கிறது மரபியல் கடைசி சூத்திரம். இது எதற்கு என்னின்" வினையின் நீங்கி விளங்கிய அறிவு" பெறுதற்கு என்கிறது பிறிதோர் சூத்திரம்.

 

இங்கு புதைந்து கிடப்பதைத்தான் வெளிபடுத்தி விளக்கியுள்ளேன்.

 

இன்னும் முடியவில்லை. தொடர்ந்து  அடுத்தக் கட்டுரையில்

 

(தொடரும்) 1.3

 



2013/4/14 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 14, 2013, 9:31:38 PM4/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 5: நூலியப் பார்வையும் கற்றலும்

 

நாம் விளக்கிக் கொண்டிருக்கும் படிமெய், "அறிவுகள் பலவகைப் படும், ஏனென்றால் பார்வைகள் பலவகைப்படும் என்பதால்" என்பதே. பொறிலியப் பார்வை உண்டென்றும்  அது பொதுவாக எப்படிப்பட்டதென்றும் விளக்கியுள்ளேன். அடுத்ததாக நூலியப் பார்வை. இதுவே மிக முக்கியமான, தமிழப்பண்பாட்டின் தனித்துவத்தை தொல்காப்பியம் காலங்கொண்டே நிறுத்துவது.

சென்ற கட்டுரையில் விளக்கியவாறு " கற்றல் என்பது அகத்துச் செறி அறியாமை  நீக்கம்" என்பதாக  இந்த நூலியப் பார்வை உணர்த்துகிறது. அதனைப் பற்றி இன்னும் சில.

 

இப்படிபட்ட "கற்றல்" பற்றியக் கருத்து நூலியப் பார்வைக்கே உரியது, பொறிலியப் பார்வைக்கு  புலப்படாத ஒன்றுமாம். இதனால் வெள்ளையர்களின்  Behavirism Cognitive Psychology  போன்ற மற்றும் ஏனைய உளவியல் துறைகளிலும் இல்லாதது.

 

அது எப்படி?

 

பொறியப்பார்வையில் , ஒன்றினை நூலெனப் பார்ப்பதும் ஆகவே வெளிப்பட்டு நிற்கும் புறவுரு என்றும் வெளிபடாது நிற்கும் புதையுரு என்றும் காண்பது இல்லை. தோன்றுவதெல்லாம் பொறிகளைத் தாக்கும் தூண்டிகள் (stimuli), அக்கிப்பொருதிகள், (அக்கி: கண்) அதாவது பிரத்தியக்கங்கள்.  இவற்றால்  அகத்து ஆகக்கூடியவை  துள்ளிகள்(responses).  அமெரிக்க B.F.Skiiner-உம், உருஷ்ய Pavlov-யும்  விளக்கியது போல கற்றல் (learning) என்பது "தூண்டி-துள்ளி பந்தங்கள்" (stimulus-response associations).   ஆக கற்றல் என்பது அறியாமை நீக்கமல்ல, மாறாக தூண்டி-துள்ளி பந்தங்களை அறுத்தும் புகுத்தும் பல்கியும் விரித்தும்  நுணுக்கியும் விருத்தி செய்து  கொண்டே போவது.

 

இந்த அடிப்படையிலேதான் அதாவது "conditioning is instructing" என்ற அடிப்படையிலேதான் அமெரிக்கப் பண்பாடும் அதன் தாக்கத்திற்கு ஆளாகிய எல்லாப் பண்பாடுகளும், கூடவரும் நாத்திகதோடு வாழ்கின்றன.

 

இதையெல்லாங் கண்டு அதன் பொய்மையை உணர்ந்துதான் தமிழச் சிந்தனை வளர்ந்துள்ளது. வாகீசப் பண்டிதர்(12 நூற்றாண்டு) தமது ஞானமிர்தத்தில் கூறுகின்றார்( அகவல் 23)

 

"வெருவரும் பூட்சி இருவினை வெறுப்ப

யாங்குப் பட்டதை எனினே வீங்கிய

இந்தியப் போகில் இரும்பறைத் தொழுதி

தன்மாத் திரைத்தாய்ப் பன்முறைக் கொழுத

முப்பொறி யாண்டுச் செப்புற நிறீத்

துன்பப் பண்ணை துயர்பிணி ஒரீஇ

இன்பப் பண்னை  தங்கி யாங்கது

பொறியின் அல்லதைப் புணர்திரம் படாதென்

அறிவினர் ஆக்கத்து அறுதொழின் மரீஇ

முயற்சி தழீஇ இயற்றுங்   காலை

............

இதன் பொழிப்பு பின்வருமாறு: துக்கவேது வாதலால் பயப்படதக்க சரீரம், புண்ணியம் பாவம் மிக உண்டாக அமைந்தது, எவ்வண்ணம் என்று வினவின்;

இந்திரியம் என்னும் பெரிய இறகையுடைய பறவைக் கூட்டம், தன் மாத்திரைகள் என்கிற பால் பழம்  போன்ற விடயங்களை தாவிப் பலமுறை சென்று கோத, அவ்வப்பொருளிலே மன வாக்குக் காயங்களைச் செப்பமாக நிறுத்தி, துன்பங்கள் மிக்கு வருவதினாலே ஆசை அறுத்து, இன்பம்  கூடி வருவதினாலே ஆசை வளர்த்து, இப்படிப் பொறிகள் வழியால் அல்லது வேறு வகையில் பொருளுணர்வு உண்டாகாது என்னும் அறிவினராகி உலகியல் வாழ்க்கையே வாழ்க்கை என்றவாறு உழவே, தொழிலே, வரைவே, வாணிகமே, வித்தையே , சிற்பமென்று  ஆறு கருமங்களில் பொருந்தி வாழ்வர் என்பதாம்.

 

இதேக் கருத்தைத்தான் "conditioning by positive and negative reinforcement" என்பார்   B.F. Skinner.

 

இப்படிப்பட்ட கற்றல் அல்ல நூலியப் பார்வையின் கற்றல். எவ்வாறு அது வேறுபடுகிறது?

 

குறிப்புக்   கால உணர்வின் நூலியப் பார்வைக்கு , தன்னகத்தே  "அறியாமை, தெரியாமை, முடியாமை, விளங்காமை" போன்ற இயலாமைகள் இருக்கின்றன  என்ற உணர்வு தலைப்பட, அதனை தன் அகம்பாவச் செருக்கின் மறுக்காதும் மறைக்காதும் உடன்பட்டு " ஆமாம் , எனக்கு இவ்விசயம் தெரியவில்லை, புரியவில்லை" என்றேல்லாம் அடங்குவதோடும் மட்டுமல்லாது, அந்த அறியாமையை நீக்கிய தன்னின் ஒர் எதிர்நிலையை நுதித்து, "அது நான்  ஆகுவேன்" என்ற உறுதியோடு, அது தானாகும்போது, அறியாமை நீக்கம் நடக்கின்றது, அதனால் அகத்திலே ஓர் தெளிவு வந்தமைகின்றது. இதனைத்தான் 'ஞானம்' என்றும் "உள்ளொளி பெருக்கம் " என்றெல்லாம் கூறுகின்றோம்.

 

"ஞானம்" "ஞால்" என்ற தமிழ் வேரிலிருந்து வந்தவொன்று, "சுடர்வது" என்று மூலப்பொருளது. ‘ஞாயிறு’ என்ற சொல்லின் வேரும் இதுதான்.

 

அகத்திலே இப்படிபட்ட ஞானப்பிரகாசங்கள் இருக்கத்தான் "அறிவு"  என்ற ஒன்று இருக்கின்றது.

 

இந்தத்  தெளிவோடு இன்னொன்றை நாம் மறக்கவேக்  கூடாது: ஓர் விசயம் தொடர்பான அறியாமையை  நீக்கி விட்டால், அறியாமையை முற்றாக நிக்கிவிட்டோம் என்று ஆகாது. நீக்குவதற்கு இன்னும் எத்தனையோ அறியாமைகள் அஞ்ஞானங்கள் இருக்கின்றனவே!

 

யார் இந்த அஞ்ஞானத்தைக் கண்டு, எப்படி இந்த அறியாமை என் அகத்திலே இருக்கின்றது?  ஏன் அதனை நீக்க வேண்டும்? எப்படித்தான் நீக்குவது  என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கக் தொடங்கின்றானோ, அவனே அது முதல் மெய்ய்றிவு வேட்டுவனாக மெய்யுணர்வு வேண்டுபவனாக சைவ சித்தாந்தி யாகின்றான், ஓர் மெய்கண்டானாக உயர அடியெடுத்து வைக்கின்றான்.

 

இந்தக் கேள்வியே வாழ்க்கையின்  மையக் கேள்வியாக எழுந்து அவனைப் பற்றிகொள்ள, அவன் தத்துவ ஞானியும் ஆகின்றான். வாழ்க்கையின் பிற இன்பங்களைப் புறந்தள்ளி மெய்ஞான இன்பமே இன்பம் என்றவாறு வாழத் தொடங்கின்றான.

 

நூலியப் பார்வையோடும் அது கொண்டுவரும் "கற்றல்"  என்றால் என்ன என்ற தெளிவோடும் உண்மையான  ஞான வாழ்க்கை   தொடங்குகின்றது.

 

(தொடரும்)1.4

K. Loganathan

unread,
Apr 15, 2013, 9:32:22 PM4/15/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 6 :ஆணவ மலத்தின் உண்மை

 

"கற்றல் என்பது அகத்துச் செறிந்திருக்கும் அஞ்ஞானத்தை, அறியாமையை  நீக்குவது" என்பது அனைவராலும் உடன்படக்கூடியவொன்றே.  இசுலாத்தில்  இதனை  JAHIL என்பார்கள் என நினைக்கிறேன்.  அந்த அரபுச் சொல் வழியாக வந்துள்ள மலாய்ச் சொல்லாகிய kejahilan எனக்குத் தெரிந்தவொன்று. மேற்கூறிய கருத்தை  இசுலாமிய மாணவ மணிகளிடம்  "Pembelajaran ialah mengkurangkan kejahilan" (நான் மலேசிய அறிவியல் பலகலையில் விரிவுரையாளராகப் பணி செய்த்போது மலாய் மொழியில்தான் பாடங்கள்!) என்று கூறி உடன்பாடா இல்லையா என்று எத்தனையோ முறை கேட்டுள்ளேன். இதுவரை மறுப்பு இல்லை. ஆக இது அனைவரும் உடன்படும்  ஓர்  உண்மையாக எடுத்துக் கொண்டு மேலே செல்வோம்.

 

என்னுள் சிற்சில அறிவுகளோடு அறியாமை இருக்கின்றது. நாளை என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாது, ஓர் ஊகம் இருக்கிறது அவ்வளவுதான்.  குலாலாம்பூருக்கு எப்படிப் போவது? தெரியாது ஆனால் தெரிந்தவர்களைக் கேட்டு  தெரிந்துகொள்ளலாம். இப்படி எத்தனையோ விசயங்கள். எந்த அளவிற்கு ஓர் விசயம் தெரிந்தாக வேண்டுமோ அந்த அளவிற்கு அந்த என் "தெரியாமை" நீக்கத்தின் மேல் ஊக்கம், அதனால்  தேடல் கேட்டல் விசாரித்தல் போன்றவை

 

சரி,  இப்படி எல்லா விசயங்களையும் கேட்டு படித்து கண்டு தொட்டு முகர்ந்து  விசாரித்து  ஆய்ந்து  சிந்தித்து அனுமானித்து என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியுமா?  முடியாது. நாளை என்ன நடக்கப்போகின்றது என்பதை யாரைக்கேட்டு நான் அறிவது? சோதிடக்  கலைகூறுமே! என்பார்கள் சிலர். இந்த பொய் கலைக்குப்  பிறகு வருவோம். அறியாமை இருக்கின்றது என்பது ஓர் உண்மை, அதனை  நீக்கவேண்டும் என்ற ஆவல் ஆர்வம் இருப்பதும் உண்மை. அதன் பொருட்டு பலவகை முயற்சிகளில் இறங்குவதும் உண்மை, மேலும் இது அனைவருக்கும் பொது, உலக மாந்தர் அனைவரும் செய்வது; எல்லா மானிட பேதங்களையும் கடந்தது.

 

இங்கு பிளேட்டோ கூறியதும் கிரேக்க பண்பாட்டின் மையக் கருத்தாக இருந்த ஒன்றையும்  நாம் மறுக்கவேண்டும். அவர்கள் "கற்றல் என்பது மீக்கூர்தலே" (Learning is recalling or reminisence) என்பர். இது நிச்சயமாக பொருந்தாஒன்று. கற்றலால் என் அறிவில் இல்லாதவொன்றை  அறியவருகின்றேன் என்ற உண்மையை மறுப்பதாக  இது இருப்பதால் இது மறுக்கப்பட வேண்டியதாகிறது. நான் இதுவரை பார்க்காத சந்திரனின் மறுபக்கத்தினை  வான்கலன்கள் கொண்டுவந்த நிழற்படங்கள் காட்ட , அறியவருகின்றேன் அல்லவா? அந்த அறிவு எப்படி மீக்கூர்தலாக இருக்கமுடியும்? ஓர் கனவின் வழியாக இன்று செய்ததின் விளைவாக  இன்னும் சில தினங்களில் நடக்கப்போகும் ஒன்றை நான் ஓரளவு அறிந்துகொள்கிறேனே, அது எப்படி மீக்கூர்தலாக இருக்கமுடியும்?

 

கற்றல் வழியாக இதுவரை அறியாதிருந்தவொன்றை அறியவருகின்றேன், இதனால் அகத்தே ஓர் ஞானப்பிரகாசம்  வந்தமைய ஓர் தெளிவும் பிறக்கிறது. அந்த  நூல் என்னதான் சொல்கிறது? பத்து முறைப் படித்துப் படித்து எல்லாவகை உத்திகளையும் பெய்து ஆசு அற அறிந்த  பிறகு, அதனைப் பற்றிய அறியாமை என்னுள் இல்லை.  அதனைக் காணும் போது "இந்நூல்  நுதலுவது எனக்குத் தெரியும்" என்று அதனை  முன்புபோல் படிக்காது விடுகின்றேன்.  கற்றுவிட்ட விசயத்தை  மீண்டும்  எதற்குக் கற்பது? ஆர்வம் பிறக்காது போய்விடுகிறது.  அந்த நூல்,  மெய்கண்டார் கூறுவது போல "அப்-பிரகாசம் அல்ல", மாறாக "பிரகாசம்" ஆய்விட்ட ஒன்று (It has become translucent, no more opaque)

 

ஆக கற்றல் என்பது ஓர் பொருள் அறிவிலே தோற்றுவிக்கும் அப்பிரகாசம் போக்கி (opacity), பிரகாசம் (translucency) ஆக்குவது.

 

இது உடன்பாடு என்றால் , உடன் ஓர் கேள்வி எழுகின்றது? எப்படி இந்த அகமாற்றம், அதுவும் ஐயம் திரிபு என்ற அறிவுணர்வுகளைப் போக்கி , "உண்மை" என்று உணர்வோடு  வரும்வகையில்,  எப்படி இந்த மாற்றம்?

 

இந்த கேள்விக்கு பதிலாகத் தான், இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு, தமிழ  அறிவர்கள் ஓர் விளக்கத்தை தருகிறார்கள்: சிற்சத்திப் பதிவினால் என்று. இப்படி அவர்கள் தெளிவாக கூறத்  தொடங்கி ஆறு நூற்றாண்டுகட்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அது மறக்கப்பட்டுவிட்டவொன்று.

 

இதனை உள்ளொளி என்றும் கூறுவார்கள். ஆக கற்றலைப் உள்ளொளிப் பெருக்கல் என்றும் கூறுவார்கள்.

 

மேற்குலகில் இவ்வாறான ஓர் விளக்கத்தைத் தந்து  டேகார்ட்(Descartes) என்பார், கிரேக்கர்கள் கிறித்துவர்கள் வாய்ப்பட்ட   ஐரோப்பிய மெய்யறிவு விசாரணையை இந்த ஞான திசைக்கு மாற்ற முயன்றார். ஆனால் பொறிலியப் பார்வையேப் பார்வை என்றாடும் வெள்ளையர்கள் உடன் தடம் மாறிப் போய்விட்டனர். டேகார்ட்டின் ஞானப் புரட்சி எழுந்து வளர்ந்த பாடில்லை.

 

கற்றல்வழி சிற்சத்திப் பதிவு நடக்கின்றது; அகத்திலே உள்ளொளி கூடுகின்றது. அப்படியானால் இந்த ஒளி விரட்டும் இருள் எப்படி வந்தது? அறிவிலே இருளைத் தருவதாக, அஞ்ஞானத்தை தருவதாக , வளர்ப்பதாக ஒன்று இருக்க வேண்டுமே?

 

இதைத்தான் திருமூலர் முதற்கொண்டு தமிழர்கள் தெள்ளத்தெளிவாக கண்டுபிடித்து சொற்படுத்தியும் இருக்கின்றார்கள்: ஆணவம் என்ற வொன்று ஆன்மாக்களை அநாதியே பந்தித்திருப்பதால் தான் அகத்திலே அறியாமை இருக்கின்றது என்று

 

(இங்குதான் சைவ சித்தாந்தம் வேதாந்தச் சிந்தனைகளோடு வேறுபட்டு நிற்கின்றது. வேதாந்தங்களில் ஆணவ மலம் இல்லை. நமாழ்வார் ‘மனன் அகம் மலம் அற’ என்று பாடினாலும் இராமாநுசர் அதனை வற்புறுத்தாது போய்விட்டார்.)

 

அப்படியென்றால் அதனை அழிக்கவல்ல இந்த ஞானவொளியை அகத்திலே பதிவிப்பது , புகுவிப்பது, அதன்வழி "உண்மை" "உண்மை" என்று அறியுமாறு செய்வது யார்? ஆன்மாவா? அது எப்படி முடியும் ? அதுதான் அறியாமையில் கிடக்கிறதே?

எல்லா ஆன்மாக்கள் மாட்டும் எல்லா நிலையிலும் எல்லா வகை அஞ்ஞானங்களையும்  நீக்கவல்லதாக ஓர் பொருள் உயிரோடு உயிராகக் கலந்து இருக்கவேண்டுமே?

 

இருக்கிறது. அதைத்தான் "இறைவன்" என்கிறோம்.

 

அறியாமை நீக்கம் கற்றல் என்றால், கூர்தல் முறையில் பின்னே பின்னேப் போக, ஆதிநிலையாக முற்றிலும் அறியாமை இருளே இருக்கின்ற ஓர் நிலை. இது ஆதிகேவல நிலையாகும். அந்த துன்னிருள்  நிலையிலிருந்து எப்படி விடுதலை ? ஓர் ஞானவொளி? ஓர் அறிவு? ஓர் உணர்வு?

 

எல்லாம் இறையருளால்தான் என்று புரிகிறதல்லவா?

 

அத்தோடு இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு, கூர்ந்து கூர்ந்து மேலே செல்வதற்கு ஓர் எல்லை  தெரிகிறதல்லவா? அகத்திலே எந்தவொரு அஞ்ஞானமும் செறிந்திராத ஓர் நிலை ஒவ்வொரு ஆன்மாவின் அடையக்கூடிய எதிர் எல்லை நிலயாகத் தோன்றுகிறது அல்லவா?

 

இது எல்லாருக்குமுரிய ஒன்றாக, அனைவரின் சாத்தியமாக(one's own innermost possibility) இருக்கிறதையும் உணர முடிகிறது.

இதைத்தான் வீடுபேறு என்பர் தமிழர்கள்.

 

இது தமிழர்கட்கு மாத்திரம் உரிய வொன்றல்ல.  அனைவருக்கும் சாத்தியமாக இருக்கும் ஒன்று.

 

இதுதான் மெய்காணியத்தை அடிப்படையாகக் கொண்ட மெய்கண்டாரியத்தின் ஞானசமத்துவம். எந்த சாதியோ, எந்த சமயமோ, எந்த இனமோ, எந்தமொழியோ, எந்தக் கதியோ, எந்தப் பாலோ -- கவலையில்லை. அனைவரும் இந்த ஞானசமத்துவத்தில் ஒன்று.  அனைவரும் திருமூலர் செப்பியவாறு   " ஒன்றே குலம்". மேலும் அனைவருக்கும் "ஒருவனேத் தேவன்"-- அவன் அருளால்தான் இருக்கின்ற அறிவும் இன்னும் எய்யப்டவிருக்கும் பிறவும்.

 

மேலும் ஒன்றை இங்கு நான் வற்புறுத்திக் கூறவேண்டும் வெள்ளையர்களின்  பொரிலிய அறிவியலையும் அதனின்று எழும் தொழிநுட்பங்களையும் கண்டு வியந்து அவன் பண்பாட்டில் மயங்கிக் நாம், வெளையர்கள்ன் பண்பாட்டில் கற்ற்லுக்கும் ஓர் எல்லை உண்டு, அது வீடுபேற்றில் முடியும் என்ற கருத்து அங்கு இல்லை என்பதைக் காணாதிருக்கின்றோம்

 

வீடுபேறு எனும் கருத்து இல்லாத ஓர் பக்குவம் வாராத ஓர் குறைப் பண்பாடு இந்த வெள்ளையர்கள் பண்பாடும் அவர்கள் போற்றும் சமயமுமாகும்

 

பிறப்பறுத்தல் என்பதே வாழ்க்கையின் பெருந்நோக்கு என்பது தமிழ் பண்பாட்டில்தான் இருக்கின்றது

 

தொடரும்)1.5



2013/4/15 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 16, 2013, 11:11:34 PM4/16/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 7:இறைவனின் பார்வை

 

அன்பர்களே,

 

நாம் இன்னும் பொறிலியப் பார்வை கடந்த , அதனுள் புதைந்து கிடக்கின்ற நூலியப்பார்வையை விட்டு மேலே உள்ள பார்வைகளுக்குப் பெயரவில்லை.  நூலியப் பார்வை உண்டெனக் கொண்டுவிட்டால் , அகத்திலே அஞ்ஞான இருள் இருக்கின்றது என்றும் அதற்குக் காரணமாக ஆணவமலம் என்றவொன்று இருக்கின்றது என்றும் கண்டோம்.  இந்த ஆணவ மலத்தைப் பற்றி பிறகு மிக விரிவாக ஆய்வோம். ஆனால்  இப்பொழுது அது உண்டென அறிவதோடும்   அதனால் அகத்தே அறியாமை இருக்கின்றது என்று தெரிந்துகொண்டால் போதும்.

 

பார்வையும் அந்த பார்வைகள வழி அறியப்படும் அனைத்தும், மகிழப்படும் சிறு சிறு உணர்வுகளும் சுவைகளும் பொருட்களின் தோற்ற அறிவுகளும் எப்படி அறிவினிலே திகழ்கின்றன? என்ற கேள்வியை இந்த இருளையையே உதிப்பிக்கும் ஆணவமலப்  பின்னணியில் எழுப்பும்போது, இந்த ஆணவ மலத்தையும் கிழித்துத்  துமிக்கக்கூடிய ஆற்றல் மிக்க  ஓர் சக்தி உலகில்  இருக்கின்றது என்று அறியவருகின்றோம்.  உணர்வுகளை மகிழும் உயிர்கள் அவற்றைத் தாமே படைத்துக் கொள்ளலாமே என்று கேள்வி எழுப்பப்படலாம். ஆனால் ஆணவமலத்தின் உண்மையையும் அதன் அஞ்ஞான இருளையே தரவல்ல பண்பையும்  உணர்ந்தவர்கள் இப்படிப் பட்ட கேள்வியை எழுப்ப மாட்டார்கள். உயிர்கட்கு ஆணவமலத்தை கிழித்து துமித்து ஞானவொளியை  அகத்தே நிறுத்தும் ஆற்றல் இல்லை. உண்டு என்பது எப்படிபோலவெனின், தன் தலை மயிரை  தானே  பிடித்து மேலே இழுத்து உயர முடியும் என்று சொல்வது போன்று தான் ஆகும்.  அப்படி முடியுமா?  முடியாதே!

 

அதுபோலத்தான் உயிர்கள் தாமே உணர்வுகளை உண்டாக்கும் என்று சொல்வதும்.

 

இதை எப்பொழுது உணர்கின்றமோ அப்பொழுதே, தமிழ மெய்யறிவு வரலாற்றில் ஓர் முக்கியமான கருத்தாகிய  "அருள்' என்பதின் உண்மை புரியவரும். நாம் மகிழ்வது அனைத்தும் இறையருளாலேதான். இதை உணர்ந்துதான் காரைக்கால் பேயார் முழங்கினார் " அருளே உலகெலாம் ஆள்விப்பது" என்று. இந்த அருள் இல்லையேல் நமக்கு ஒன்றுமில்ல-- துன்னிருளில் கல்லெனக் கிடக்க வேண்டியது தான்.

 

இவ்வாறு  உண்டாக இந்த உலகையே தந்து அதனை பல்வேறு வகையில் உணர்வில் படுமாறும் செய்து, அஞ்ஞான இருளைபோக்கி ஒன்றறி உயிராக பிறகு கூர்ந்து கூர்ந்து வளர்ந்து மனத்தோடு கூடிய ஆறறி  உயிராக  உயிர்கள் வளர்வதற்கு துணையாக நிற்கின்ற இந்த அருளின்  மூலமாகிய வத்துவைத்தான் 'இறைவன்' என்கிறோம்.

 

இந்த இறைவனுக்குப்  பார்வை  உண்டா?

 

நிச்சயமாக உண்டு. பார்வை இல்லையென்றால் அருளுவது எப்படி? இறைவனே யாதுந் தெரியாது சுத்தக் குருடாக இருந்தால், எதைத்தான் அருளுவான்? எப்படித்தான் அருளுவான்?

 

ஆக அவனுக்குப் பார்வை உண்டு. ஆனால் எப்படிப்பட்ட பார்வை?

 

இதுவரை பார்வைகளை அலசி பொறிலியப் பார்வை, நூலியப் பார்வை என்ற இரண்டு  உண்டென அறிந்து தெளிந்தோம். பகுத்தறிவுக்கு புறம்பாக எந்த பிரமாணத்தையும் நான் கொண்டுவரவில்லை. அனைவருக்கும் பொதுவாகிய சுட்டுணர்வுகளை வைத்தும் அவற்றோடு வரும் காலவுணர்வுகளை வைத்துந் தான் சில உண்மைகளை தெளிவாக்கி இருக்கின்றோம்.

மெய்கண்டாரியத்தின் அடிப்படை மெய்காணல் என்பதுதான். அத்தோடு இந்த மெய்கள் அகத்தில் ஏற்கனவே உள்ளவைதான், இல்லாதவை அல்ல.  ஆனால் என்ன, இருந்தும் எல்லாராலும் சிந்தித்துத் தெளியாது போயிற்று. ஆக நாம் செய்வது தெளிவாக்குவதுதான் (illuminating, enlightening). இவ்வாறு செய்வதைதான் ஏரணவியல் என்கின்றோம்.

 

மெய்கண்டாரின் சிவஞானபோதத்தில்  இந்த ஏரணவியலேப் பயில்கின்றது.  இந்திய உபகண்டத்தில் இந்த ஏரணவியலையே வலுவாகப் பற்றிக் கொண்டு தத்துவவிசாரணை செய்யும்   நூல் வேறொன்றும் இல்லை என்றேத் தெரிகின்றது.(நான் அறிந்த வரையில்)

 

இறைவனுக்கு உரிய பார்வை இந்த இரண்டில் ஒன்று அல்ல, மேலும் இந்த இரண்டுமே அல்ல. காலவுணர்வோடும் ஆகவே சுட்டுணர்வோடும் வரும் அஞ்ஞான இருளைக் கிழிப்பதால் அமையும் இந்தப் பார்வைகள் எப்படி இறைவனது பார்வையாக இருக்க முடியும்?

 

இறைவனுக்கு காலவுணர்வு கூடாது.   அதனால் அவனுக்கு உரியதாக "பார்வையற்ற பார்வை"தான் இருக்கமுடியும்?

இதுவென்ன "பார்வையற்ற பார்வை", முரண்பாடாக இல்லை?

 

முரண்பாடு இல்லை. இறைவனுக்கு உரிய பார்வையை வேறு வகையில் சொல்லவுந் தெரியவில்லை. ஆனால் கருத்து என்னவெனில், அவனது பார்வையில் காலவுணர்வினைத் தரும் 'சுட்டு' இல்லை என்பதே. ஆக இறைவனுக்கு உரிய பார்வை எவ்வித சுட்டும் பயிலாதப் பார்வை.

 

இது மெய்கண்டாரை தழுவித்தான் சொல்லப்படுகின்றது. முதல் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்து  எடுத்துக்காட்டில் இவ்வாறு சொல்கின்றார்:

 

நோக்காது நோக்கி நொடித்து அன்றே  காலத்தில்

தாக்காது நின்று  உளத்திற் கண்டு இறைவன் -- ஆக்காதே

கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக்

கண்டவனின் இற்று இன்றாம் கட்டு

 

இறைவனின் பார்வையில், அஞ்ஞான நீக்கமாகிய "கற்றல்" இல்லை; காலவுணர்வும் இல்லை. அதனால்தான் அவன் "நோக்காது நோக்கி" நொடிக்கின்றான், அதாவது அருள்பாலிக்கின்றான் என்கிறார். அதனை விளக்க ஓர் உதாரனமும் தருகின்றார். ஓர் நிகழ்ச்சியைப் பார்க்கின்றோம்.  அது ஏற்கனவே மிகத் தெளிவாக ஓர் கனவில் அனுபவித்ததாக இருக்க, பார்த்துணரும் போது அது ஏற்கனவே அறிந்தது, புதியது அல்ல என்ற உணர்வுதான் எழுமே தவிர,  இருக்கின்ற தன் அறியாமையை நீக்கும் ஒன்று அப்பார்வையால் ஆகின்றது என்று உணர்வு எழாது போகின்றது.

 

இதைப்பறி  இன்னும் விரிவாக பிறகு ஆயவிருக்கின்றோம், அதனால் இந்த அளவில் அதனைவிடுவோம்.

 

இப்பொழுது இன்னொரு கேள்வி எழுகின்றது. இந்த சுட்டுப்பார்வைகள்  இறைவனுக்கு உரியது அல்லவெனில் யாருடையப் பார்வைகள்  அவை?

 

யாருக்குமே உரியது அல்ல என்ற கூறமுடியாது.  ஏன்? எப்படி? இந்த சுட்டுப்பார்வைகளின் வழி 'கற்றல்" நடக்கின்றதே? யார் கற்பது?

 

உடன் சற்று சிந்திக்கத் தெளிவாகின்றது :  இறைவனுக்கு வேறாகிய ஆன்மாவே இந்த சுட்டுப் பார்வைகளுக்கு உரியது. கற்றுதான் மேம்பட  வேண்டுமென்பதின் இது பசு எனவும் படுகின்றது. இனி ஆணவ மலம் அநாதி என்பதால்,  அதனுள் புதைந்து கிடந்து எந்த உணர்வுமற்று சுத்த கேவலத்தில் கிடந்து  இறையருள் பதியவேத்தான் உணர்வும் பெறும் பண்பின் ஆண்மாக்கள் இதனின்  இறைவனைப் போன்றும், இந்த ஆணவ மலம் போன்றும் அநாதி ஆகின்றது.

 

இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை. அவை ஏற்கனவே இருக்கின்றன. இறைவன் தனது அருளால் அவர்களுக்கு தோற்றத்தைத்தான் தருகின்றான்.

 

இந்தத் தெளிவோடு திருமூலர் அன்றே சொன்ன "பதியினைப் போல் பசு பாசம் அநாதி"  எனும் அநாதிப் பொருளியல் ஆழுண்மையோடு  ஒத்துபோகிறோம். அவர் அடைந்த தெளிவை நாமும் மீண்டும்அடைகிறோம்.

 

இது இன்னொரு உண்மையையும் உணர்த்துகிறது.  பார்வைகளில் நூலியப் பார்வைகளுக்கு  மேலாகவும் பார்வையற்ற பார்வைக்குக் கீழாகவும் இன்னும் எத்தனையோ பார்வைகள் இருக்கின்றன என்பதுதான் அது. ஞானவாழ்க்கை நூலியப் பார்வையோடு முடிவதில்லை. அதன் பிறகே நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதத் பார்வை என்றவாறு இன்னும் இன்னும் மேலான பார்வைகள் வந்தமைய அந்த பார்வையற்ற பார்வையை நெருங்குகிறோம், அதற்கேற்ப பக்குவத்தில் உயர்ந்தும் செல்கிறோம்.

 

இந்த மேலானப் பார்வைகள் ஒரு சிலருக்கு மாத்திரம் உரித்தவை அல்ல, அனவருக்கும் உரித்தாய், அனைவரின் சாத்தியமாக அவை இருக்கின்றன.

 

இப்படி சாத்தியங்களாக இருக்கின்ற  திறன்களை ஒருவன் வளர்க்காது, அதற்கு பொறுப்பாக பிறரை ஆக்கி அவர்களை திட்டிக்கொண்டே இருப்பதால் வாய்தான் கிழியுமே தவிர மேலான ஞானப்பார்வைகள் வந்தமையாது.

 

 

(தொடரும்) 1.6

 



2013/4/16 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 17, 2013, 9:42:35 PM4/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 8 :நுதலியப்பார்வையும் பிறவும்

 

பகுத்தறிவினை புறக்கணிக்காது, உண்மை  என்று ஒன்று இருக்கின்றது, அது யாது? என்ற நோக்கொடு, அக்கேள்வி எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு  தயங்காது செல்லும் போது நாம் ஓர் நெறிபால் செல்கின்றோம். அதனையே திருஞானசம்பந்தர் " திருநெறி" என்றார்; திருமூலர் "சன்மார்க்கம்" என்றார். இந்த மார்க்கம் அனைவருக்கும் உரித்தாக இருக்கின்றது ஆனால் பின்பற்றப்படுவதாக இல்லை. ஏன் இப்படி? அகத்துச் செறிந்திருக்கும் மலமாசுக்களால், மனோவிலங்குகளால் என்று சுருக்கமாக கூறிவிட்டு பிறகு இதனை விரிவாக ஆய்வதற்கு வருவோம்.

 

இதுவரை நாம் பகுத்தறிவிற்கு புறம்பாக யாதும் செல்லவில்லை. ஆயினும் என்ன சாதித்துள்ளோம்?

 

பொறிலியப் பார்வையோடு நூலியப்பார்வையும் இருக்கின்றதென்று தெளிந்து, அவற்றை இன்னும் ஆய்ந்துத் தெளிய எந்த உணர்வும் ஆகவே குறிப்புக்கால உணர்வும் தோன்றாவகையில் துன்னிருள் கேவலாவத்தையை, சுத்தக் குருட்டு நிலையைத் தருவதாக ஆணவ மலம் என்றவொன்று அநாதியே இருக்கவேண்டும் என்று பெறப்பட்டது.   அதனின் அதனைக் கிழித்துக்கொண்டு ஞானம் புணர்த்தும் வகையில் அருட்பிரகாசத்தை ஆதவனெனத்  தந்துதவும் இறைவன் சிவப்பிரகாச  பெரும்பொருளாக அநாதியே இருக்கின்றான் என்றும் தெளிகின்றோம். அத்தோடு இறைவனது  பார்வை  சுட்டு இல்லாத ஆகவே "பார்வையற்ற பார்வை" என்பதின்,   சுட்டுணர்வோடு கூடிய பார்வைகளை மகிழ்வது  இறைவன் அல்ல ஆன்மாக்களே என்றும் அவையும் பதியினைப் போல, அந்த ஆணவ மலத்தைப் போல அநாதியே என்றும் தெளிந்தோம்.

 

இந்தத் தெளிவினால் உடன் பட்டுப்போவது "அகம் பிரமம் அஸ்மி" எனும் மகக வாக்கியதிற்கு அத்துவித  வேதாந்தம்,தரும் ஏகாத்டுவைத பொருளும்  ஆணவமலம் என்றவொன்றில்லை அது தாமத குணமே  எனும் விசிட்டாத்வைதமும்   என்று நாம் உணரவேண்டும். மெய் பிரகாசிக்கும் போது பொய் தானே விழுகின்றது.

 

மேலும் இங்குதான் ஏன் மெய்கண்டார் இறைவனை "சங்காரகாரணாகிய முதல் " என்று வர்ணிப்பதின்  நுட்பமும்  விளங்குகிறது.  ஆணவமலத்தின் உண்மையை, அதன் இருளையேப் பரப்பும் திறத்தினை அறிந்தவர்களால்தான்  இறைவனை சங்கார காரணன் என்றும் தெளிய முடியும்.  சங்காரம் அநுக்கிரகத் தொழில் என்பார் திருமூலர்.  சம்-கரித்தலே   சங்காரம் அதாவது இருளைத் துமித்து அழித்து இல்லாது போக்கி அங்கே  ஞானவொளியைப் பாய்ச்சுவது. எங்கே இறைவன் சங்கார காரணனாக உணரப்படுகின்றனோ, அவன் பஞ்சகிருத்தியனாகவும் உணரப்படுவான். இதனைப் பிறகு மிக விரிவாகக் காண்போம்.

 

ஆன்மாக்களுக்கு உரியது சுட்டுணர்வோடு கூடிய பொறிலிய நூலியப்பார்வைகள். இறைவனுக்கு உரியது சுட்டு இல்லாத பார்வையற்ற பார்வை.  இந்த உண்மை எதனை உணர்த்துகிறது?

 

இறைவனை நெருங்க,  ஆன்மாக்களும் சுட்டு கழன்ற பார்வையற்றப் பார்வையை தாமும் பெறவேண்டும்.  யாவன் இதனை உணர்ந்து அதனை  அடைவதே  தன் வாழ்க்கையின் அடிப்படை நோக்காக கொள்கின்றனோ அவனே சாதாரண உலகியல் மாந்தனாக வாழ்வதொழித்து மெய்ஞானம் தேடித்திரியும் அறிவனாக உயர்கின்றான்.  பண்டையோர் கூற்றுப்படி கர்மகாண்டம் விட்டு உத்தரக் காண்டம்  பெயர்வது இதுதான்.

 

நூலியப்பார்வைக்கு அடுத்ததாக அனைவருக்கும் உரித்ததாக இருப்பது "நுதலியப் பார்வை " என்பது. இதனைத்தான் பண்டையோர் "நெற்றிக்கண் பார்வை" " ஞானக்கண் பார்வை" "விஞ்ஞானப் பார்வை"  " ஞானப் பரியாயக் காட்சி" என்றெல்லாம் என்றெல்லாம் கூறிச்சென்றனர்.

 

 இப்படிப்பட்ட பார்வை இருக்கின்றது என்றதும் உடனேயே ஓர் மலைப்பு தட்டும். உடன்  சரிவர புரியாத ஓர் "mystical" விசயத்தைப் பற்றி அளக்கத்தொடங்கிவிட்டான் என்றும் படும்.  தனக்கு அவ்வளவாகத்  தெரியாத ஓர் விசயத்தைப் பற்றி , அதனால் தான் ஓர்வகையில் அறியாமையில் கிடப்பவன்  என்று சொல்லாதே சொல்லும் வகையில்  இவன் விளக்கத்தொடங்கிவிட்டானே? எப்படி அதனை விடுவது? என்றெல்லாம் எண்ணி முறையாக மறுப்பதை விட்டு விட்டு  எள்ளி நகையாடத் தொடங்குவர், பரிகாசம் செய்வர்.  சிலர் பகுத்தறிவிற்கு புறம்பானது, மூட நம்பிக்கை என்றும் கூறத்தொடங்குவர்.

மெய்காணியத்தை மறவாது போற்றும் மெய்கண்டாரியத்தில் இப்படிப்பட்ட பேதமைகளுக்கு இடம் இல்லை. நுதலியப் பார்வை என்ற ஒன்று இருக்கின்றது என்றால், அது யாது? எப்படிப்பட்டது? எப்படி அதன் உண்மையை   அறிவது என்ற கேள்விகளே எழவேண்டும்.

 

இப்படிப்பட கேள்விகளை  மனதில் கொண்டு தொடர்ந்து பகுத்தறிவிற்குப் பிழையாது  நம் ஆய்வினைத் தொடர்வோம்.

 

பொறிலிய நூலியப் பார்வைகளுக்கு மேலாக அனைவருக்கும் உரித்தாய் நுதலியப் பார்வைகள் இருக்கின்றன.   இது எப்படிப்பட்டதோவெனில், கனவுகளில் உறக்கனவுகளையும் விழிக்கனவுகளையும் தந்து மறையாகவே நின்றிலங்கும் மந்திர சொரூபங்களை காணத் தந்து அறியாமைத் துன்னிருளை இன்னும் இன்னும் போக்குவனவாகும்.  இங்கு "உறக்கனவு" என்பது  பொறிலியப் பார்வையும் நூலியப் பார்வையும்  அடங்கிடும் வகையில் அந்தகரணங்களும் புறக்கரணங்களும் செயலற்றுக் கிடக்கும் போது  தானே   மலரும் காட்சி அனுபவங்களாகும்.  "விழிக்கனவு" என்பது(Lucid Dreams)  அது போன்றுதான்  ஆனால் விழித்திருக்கும்போதே, பொறிபுலன்களிருந்து கழன்று நிற்க அதுபொழுது ஆவது.

 

இந்த நுதலியப்பார்வை நல்குவது "கரந்துரு காண் திறன்" ஆகும்( transductive perception).  இப்பார்வை யாருக்கு இயல்பாக வந்தமைகின்றதோ அவனே சித்தன் ஆகின்றான்.

 

இதனை வளர்த்து வளர்த்து இன்னும் மேலே செல்லும்போதே "சிவப்பார்வை" என்றும் "பரப்பார்வை" என்றும் "அதீதப்பார்வை" என்றும் இன்னும் பலவாறும் பல அசாதரணப் பார்வைகள் சனிக்கின்றன.

 

இவற்றைச்  சிறிது அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்

 

(தொடரும்)1.7

 

உலகன்

 



2013/4/17 K. Loganathan <k.ula...@gmail.com>
...

[Message clipped]  

K. Loganathan

unread,
Apr 18, 2013, 9:24:49 PM4/18/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 9: சிவப்பார்வையும் பிறவும்

 

நுதலியப் பார்வையும் அனைவருக்கும் உண்டு. ஆனால் பெரும்பாலோரால் அது  வளர்க்கப்படுவதில்லை. குழந்தைகள் கூட கனவு காண்கின்றனர்.  உலகம் முழுதும் பண்டும் இன்றும் நாகரீகத்தில் சிறந்தவர்களும்  அல்லாதவர்களும் கனவுகளும் அதனைப் போன்ற அனுபவங்களையும் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர். சுமேரிய நாகரீகம் போன்று பண்டைய நாகரீகங்கள் பல இந்த நுதலியப்  பார்வை ஞானங்களை பெரிதாக மதித்தே வாழ்ந்துள்ளனர்.  இன்று Freud-க்குப் பிறகு  உளவியல் துறையில் கனாவியல் ஓர் முக்கிய ஆய்வுத்துறையாகிவிட்டது.  கனவுகள் எப்படித் தோன்றுகின்றன? அவை எவ்வாறு சேடிக்கப்படுகின்றன? அவற்றின் பொருள் என்ன? அவை தோற்றுவிக்கும் மனோகரணங்கள் என்ன?  அவை பொருள் உள்ளவையா அல்லது வெற்று மதி மயக்கங்களா? எதோவோர் அதீத வகை கற்பனைகளா? என்றெல்லாம் என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்றே கனவு என்பது ஓர்  புராதன மொழி (an archaic language) என்பதாகும். எவ்வாறு சாதாரண ஓர் மொழி அதனால் செய்யப்படும் வினைகளை நோக்க மிக சிக்கலானதோ அதேப் போன்றதே கனவு என்பது. அதுவோர் மொழி என அதனால் பலதரப்பட்ட விசயங்கள் உணர்த்தப்படுகின்றன. இதனால் Freud-இன்  "கனவு என்பது புதைக்கப்பட்ட இச்சைகளின்  பூர்த்திகள்"  என்பது ஓர் கூறாய் இருக்கலாமே தவிர எல்லாக் கனவுகளும் அப்படிப்பட்டவை என்று கூறமுடியாது.

 

ஆனால் பலரால் ஒத்துக்கொள்ளகூடியது கனாவனுபவம்,  மேலும் பொதுவாக  நுதலியப் பார்வை அநுபவங்கள்  ஆன்மாக்களை காலவுணர்வின் வலுவான பிடியிலிருந்து விடுவிக்கின்றன என்பதே. ஒருவன் கனா உலகில் இருக்கும்போது, சுட்டுக்கால உணர்வு இல்லாத வேறோர் உலகிற்குப் போய் விடுகின்றான். அதுபொழுது சில சமயங்களில் இன்னும் மெய்யாகாது ஆனால் எதிர்காலத்தில் மெய்யாகக்கூடிய  ஒன்றை அறியவும் வருகின்றான். FREUD இந்த கருத்திற்கு உடன்பாடு தெரிவிக்காவிட்டாலும் கனாவியல் வல்லுநர்கள் பண்டை காலந்தொடங்கி இன்றுவரை கனவுகள் பல நிகழவிருப்பதை ஒருவாறு சொல்லும் திறத்தன என்றே கொள்கிறார்கள். எனது 12 வருட கால ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆய்வுகளும் இதனை உறுதி செய்கிறது. இன்றுவரை எனக்கு எதிர்காலத்தில் நடப்பதை இன்றே   காணும் வகையில் கனவுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

மெய்கண்டார் கனவுகளை மிகத் துல்லியமாக ஆய்ந்துள்ளதை அவரது சூத்திரங்களும் எடுத்துக் காட்டு வெண்பாக்களும் பல இடங்களில் உணர்த்துகின்றன.  கனவுகளின் இயல்பினை, அவற்றின் ஆரூடப் பண்பினை கீழ்கண்டவாறு விளக்குவர்.

 

நோக்காதே நோக்கி நொடித்து அன்றே காலத்தில்

தாக்காதே நின்று உளத்தில் கண்டு இறைவன் -- ஆக்காதே

கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக்

கண்டவனின் இற்று இன்றாம் கட்டு

 

இறைவன் அனைத்தையும் நோக்காது நோக்கி நின்றாலும் அவனுக்குக் கட்டு இல்லை, உலகத்தோடு பந்தப்பட்டிருப்பது இல்லை என்பதை விளக்க கனவு அனுபவத்தைக் கொண்டு வருகிறார்.  ஒருவன் ஓர் நிகழ்ச்சியை,  அப்போது   கண்முன்னால் அவனுக்கு நேரும் அனுபவமாக, நனவாக, பிரக்ஞையாக காண்கிறான்.  ஆனால் சிற்சல சமயங்களில் அதனை முன்பே  பார்த்திருக்கின்றோமே, பார்ப்பது புதியதல்லவே என்று உணர்வும் வர, இது முன்பு கனவில் வந்தவொன்று , ஏற்கனவே பார்த்தது புதியதன்று  என்ற உணர்வும் உதிக்கும். ஓர் புத்தகக்கடைக்குச் சென்று பல நூற்களை பார்க்கும் போது  சிலவற்றை "வேண்டாம் இது ஏற்கனவே படித்துவிட்ட ஆகவே அறிந்துவிட்ட ஒன்றுதானே" என்று கூறி விடுகிறோம் அல்லையா அதுபோலத்தான்  இதுவும். இறைவன் பார்க்கின்றான் ஆனால் அத்தகைய பார்வைகள் வழி அவன் யாதும் புதிதாக கற்பதில்லை. சர்வக்ஞனாகிய அவனுக்கு அறியாத தெரியாத என்ற ஒன்றில்லை.

 

ஓர் கனவின் வழி முற்கூட்டியே நடக்கவிருப்பதை அறிந்து நினவில் வைத்து பிறகு  அது நிகழ்ச்சியாகும் போது  கண்ட கனவு நினைவு வர, அந்த நிகழ்ச்சயின்வழி  அவன் புதிதாக யாதும் கற்பதில்லை.

 

நுதலியப்பார்வையின் பண்பே இதுதான். எதிராக இருப்பதின் அறியாமை இல்லாது போக்குவதே அதன் பண்பு. அதன்வழி "எதிர்காலம்" என்ற ஒன்று உணர்வில் இருப்பதிலிருந்து  கனவுகள் கழற்ற உதவும்.

 

அதனால் தான் நுதலியப் பார்வைவல்ல பல சித்தர்கள்  ஆரூடம் கூறவல்லார்களாகவும் திகழ்கின்றனர்.  இதனின் போலி வடிவமாகிய சோதிடக் கலையும்  இன்றளவு மக்களிடையே வழங்கியும் வருகிறது.  எதிர்காலத்தை அறிந்துகொள்ள யாருக்குத்தான் விருப்பமில்லை(அதனைக் கண்டு அஞ்சுவாரைத் தவிர்த்து)?

 

இசுலாம் போன்ற சமயங்களும் இவ்வாறான ஆருடத்திறனை வற்புறுத்தி செல்லும்   ஆருட சமயங்களாக (PROPHETIC RELIGIONS) இப்படிப்பட்ட நுதலியக் காட்சிகளால் தான் விளங்குகின்றன.

 

இனி இவ்வாறான நுதலிய அனுபவங்கள் வாய்க்கப் பெற்றாலும் அவற்றின் மயங்கி கனாவுலகிலேயே விழுந்து வெளிவராது   நனவு உலகத்திற்கும் மீண்டு, அக்கனவு என்னதான் சொல்கின்றது , அதன் உண்மைதன் என்ன? என்று விசாரிக்கும் போது விளங்கும் பார்வையே சிவப்பார்வை என்பது. கனாவுலகு என்பது பொறிபுல உலகிற்கு வேறாய ஓர் உலகு, அந்த அனுபவம் வாய்க்க அதனை ஆய்பொருளாக்காது அதனிலேயே மயங்கிப்போதலும் உண்டு. இதனால்தான் மத மாச்சர்யங்கள், முட நம்பிக்கைகள், மருட்கைகள் என்றவாறு பல  மானிட அனுபங்கள். மாயாவினோத சல்லியக் கலைகள் (Magical practices, occultism)  போன்றவை இப்படிப்பட்ட அனுபங்களையே மூலமாகக்  கொண்டிருக்கின்றன. இப்படி மயங்காது, அந்த கனாக்களின் மெய்பொருள்தான் என்ன? என்ற கேள்விகளை தொடுத்து, நூலிய அறிவியல் நியதி பிழையாது அவை உணர்த்தவரும் உண்மைதான் என்ன என்று  ஆயும்பொழுது அகத்தே நின்று நிலவும் பார்வை சிவப்பார்வை என்பது

இத்தகைய சிவப்பார்வையின் எழு தெளிவுகளே  கடபூதிக (metaphysical) உலகினைப் பற்றி ஆன்மாக்களின் அகத்தே நிலவும் அஞ்ஞானத்தைப் போக்கி தெளிஞானம் கொண்டு வரும்.

 

இப்படிப்பாட முறையிலே  அறிவினை வளர்த்துச் செல்லவே தான் மேற்கொண்டு பரப்பார்வை, அதீதப் பார்வை, ஆரருட்பார்வை காலாதீதப் பார்வை போன்ற பிற மேலான பார்வைகள் வரும் என்று கூறிக்கொள்வதோடு இந்த பார்வை வகைகளைப் பற்றிய விளக்கததை இத்தோடு முடிப்போம். பிறகு இத்தொடர் நெடுக இவ்விசாரணை பல்வேறு கோணங்களில்  வந்துகொண்டே இருக்கும் என்பதையும் இப்பொழுதே  தெரிவித்தும் விடுகிறோம்.

 

இதனோடு நமது முதல் படிமெய் முடிவிற்கு வருகின்றது: பார்வைகள் பொறிலியப்பார்வை,  நூலியப் பார்வை, நுதலியப் பார்வை என்றெல்லம் வர, அப்பார்வைகள் வழி பெறப்படும் அறிவுகளும் பல வகையாகின்றன.

 

இது ஏன் முக்கியமெனில்,  அனைவருக்கும் பொதுவாகிய பொறிலியப்பார்வைக்கு மேலே செல விரும்பாதார்,  நூலிய நுதலிய பார்வைகளின் வழி வரும் அறிவுகளை பிழையாக கண்டு  மூட நம்பிக்கைகள், வெற்றுக் கற்பனைகள்  என்றெல்லாம் கூறி இகழ்தற்கு இடம் உண்டு. அவ்வாறு பலர் செய்தவாறும் இருக்கின்றனர்.  உள்ளதை உள்ளவாக் காண வேண்டும், அதுவே உண்மையான பகுத்தறிவு.   உண்மையை இல்லையென்று மறுப்பது எப்படி பகுத்தறிவு ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை.

 

பெரியாரிசம் ஓர் நாத்திகவாதமாகவே திரிந்துவிட்டது.  இதற்குக் காரணமே பகுத்தறிவு என்பதைப் பற்றி அவர்கட்கு நல்லதெளிவு இல்லாது போனதுதான்  பார்வைகளை மையமாக் கொண்ட மெய்கண்டாரியப் பகுத்தறிவு, இறை உண்மைக்கு அறிவார்ந்த முறையில் நல்லவோர் விளக்கம் தந்து இறைமைசார்ந்த வாழ்க்கையை நல்லதே என நிறுத்துகின்றது.

 

(தொடரும்) 1.8

 



2013/4/18 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 19, 2013, 10:40:50 PM4/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 10 : சத்தும் அசத்தும்

முதல் சூத்திரத்து முதல் படிமெய்யை நலமே முடித்து விட்டு, இரண்டாம் படிமெய்க்கு செல்கிறோம். முதல் சூத்திரம் அன்பர்கள் நினைவில் நில்லாது போயிருக்கலாம். அதனை மீண்டும் நினைவுக் கூர்வோம்:

சூத்திரம்

அறிவின் திறனும் அவாவின் போக்கும்நூன்

நெறியின் ஆய்வர் நுழைவுகட் பெற்று

பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர்

பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது.

மிக ஆழமான பல உண்மைகளை தன் அகத்தே,  ஆலம் வித்து சூக்குமாக ஒர் பெரிய ஆலமரத்தையே தன்னுள் கொண்டிருப்பது போல  இது கொண்டிருக்கின்றது. இதன் உள்ளீடாக உள்ள நூன்னெறி யாதென்றும் அறிவின் திறனாக பல்வேறு அறிவுகளைத் தோற்றும் திறத்தையும் கண்டுவிட்டோம். பார்வைகளே எல்லாவகையான அறிவுகளின் உதயத் தளம்; அந்தப் பார்வைகள் பல்வேறு ஆக , அறிவின் திறனும் பல்வேறு ஆக பலவகையான அறிவுகள் சனிக்கின்றன, உள்ளத்தை ஆட்கொள்கின்றன, ஒழுக்கத்தை நிறுத்துகின்றன. இந்தப் பார்வைகளையும் பொறிலியப் பார்வை, நூலியப் பார்வை, நுதலியப் பார்வை மேலும் அதற்கு  நுட்பமாகிய சிவப்பார்வை, பரப்பார்வை, அதீததப்பார்வை அருட்பார்வை என்றெல்லாம் கண்டு  ஓவ்வொரு  பார்வைக்கும் உரியவைகளாக அறிவுகள் பலவகைப்படும் என்று நிறுத்திவிட்டோம்.

இனி அடுத்ததாக

இரண்டாம் படிமெய்:

மேற்கோள் : இனி இவற்றில் அசத்தறிவுகட்கு  வேறாக சிவசத்தறிவு உண்டென்பது

ஏது: காலத் தாக்கமின்றிய ஆகவே சுட்டின்றிய பார்வையற்ற பார்வை உண்டென்பதின்

விளக்கம்:

பார்வைகளின் எல்லையாகிய பார்வையற்ற பார்வைக்கும் , அதனை  அடைய உதவியாக இருக்கும் ஏனைய பார்வைகட்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் உண்டு.  இந்த முடிவான பார்வையற்ற பார்வையில் சுட்டு இல்லாது போக, ஏனையப் பார்வைகளில் அது உண்டு. உண்டெனவே அப்பார்வைகள் வழி தோன்றக்கூடிய அறிவுகளெல்லாம் காலவுணர்வோடும், திசையுறு வெளி உணர்வோடும் தோன்றுவதின். அவை நிலைத்து நிற்காதவையாகி அசத்தாகி விழுகின்றன என்பததே இந்த இரண்டாம படியின் உள்ளடக்கம்.  இந்த பார்வையற்ற பார்வைக்குரிய ஞானம்  "வினையின் நீங்கி விளங்கிய அறிவு" என்று தொல்காப்பியராலும்  'மெய்யுணர்வு' என்று திருவள்ளுவராலும், "செறிவறிவு" என்று திருமூலராலும்  "சிவஞானம்" என்று பல சிவஞானிகளாலும் பகரப்படுவது. இதனை தான் மெய்கண்டார்  சத்தும் அல்லாத அசத்தம் அல்லாத சிவசத்து என்கிறார்.

இப்படிப்பட்ட ஓர் அறிவு இருக்கின்றதா?

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த கருத்துப்பேதம் உலகெங்கிலும் தத்துவஞானிகளிடையே இருந்துள்ளது.  பண்டைய கிரேக்கர்களில் Heraclitus  "எல்லாமே  நின்று நிலைக்காத ஓர் ஆற்றோட்டம்தான் " என Parmenidis  அதனை  மறுத்து " மாறாது என்றும் ஒரே படித்தாக இருக்கும்  ஒரே ஒன்று (Being) தான் உண்மை" என்று கூறிச் சென்றார். நம் இந்திய உபகண்டத்தில்  இரண்டாயிரம் ஆண்டுகளாக இதேப் போராட்டம் தான். புத்தர்களில் பல சாரார்  கணபங்க வாதத்திற்கு உடன்பட்டு , அனைத்துமே சார்பினில் தோன்றி சார்பினில் அழிவது,  நித்திய வத்துவாக  இறைவனோ ஆன்மாவோ இல்லை என்று  அனாத்தும வாதம் கூற, வேதாந்திகளோ, என்றும் ஒரே படித்தாகி  அழியாது ஒரே ஒரு உண்மையாக இருக்கும் பரப்பிரம்மமே மெய் பிறவெல்லாம் பொய் கற்பிதங்கள் என்றவாறு அவர்கட்கு எதிராக கிளம்பி உலகறிவை கற்பனை வயப்பட்டதாக்கினர்.

இப்படிப் பட்ட சூழலில் தான் சைவச்  சிந்தனை  தோன்றி  யாதுதான் உண்மை என்று விசாரிக்கத் தொடங்கி  அறிவின் மூலமாகிய பார்வை விசாரனைக்கு இழுக்கப்பட்டது.  அந்த விசாரணையில் வந்த தெளிவுதான் மெய்கண்டாரின்:

"அசத்து அறியாய் கேள் நீ அறிவு அறிந்த எல்லாம்  அசத்து மெய்கண்டான் ஆயின்" (சூ. 6)

என்று இச்சிக்கலுக்கு  விளக்கமாகும் தெளிவு.  இங்கு மெய்கண்டான் ஆகுதல் என்பது  பார்வையற்ற பார்வையே  தனது பார்வையாக இருக்கும் நிலைக்கு உயர்தல் ஆகும். அந்த பார்வை அமையும் வரை எல்லா அறிவுகளும்  உண்மையெனத் தான் அனைவராலும் ஓம்பப்படும். ஆனால் அந்தப் பார்வையே பார்வையாகிட, அதனால் ஒருவன் மெய்கண்டானாக, அதுவரை ஏனையப் பார்வைகள்வழி அறிவாக  நின்றவை அனைத்தும்   நில்லாது விழுந்து விடும்.

இவ்வாறு விழுந்துவிடும் தன்மையே அதனை அசத்தாக்குகின்றது.

இவ்வகையில் இன்று உலகில் தோன்றி உண்மையென நிற்கும் எல்லா அறிவுகளும் அசத்துத்தான்.   மிக  முக்கியமாக, கால இட உணர்வோடு வரும் மொழியின்  வழி விளம்பப்படும் எல்லாம் அறிவுகளுமே அசத்துத்தான்.

மேற்கில் இவ்வுணர்வு படிப்படியாகத் தெளிவாகி வருகின்றது.  Thomas Kuhn என்பார் நியூட்டன் காலந் தொடங்கி  பல  அறிவியல் துறைகள் தோன்றுவதற்குக் காரணமாய தெரியங்களின்(theories)   தோற்ற மாற்றங்களை விளக்கப்புகுகையில்  அங்கு ஒர் "paradigm shift"   மெய்யாகுவாதாக காண்கின்றார். இன்று உண்மையென்று கொள்ளப்படும் ஓர் அறிவியல் தெரியம் நாளை வீழ்த்தப்பட்டு ஓர் புதிய தெரியத்திற்கு இடந்தராலாம் என்கின்றார். Michele Foucalt  என்பார், அறிவியல் துறைகள் தோன்றுவதின் சமுதாய உளவியல் பாங்குகளை ஆய்ந்து மிக குழப்பமான  சூக்கும வினைப்பாடுகள் பல இருப்பதாகக் கணிக்கின்றார்.   Gadamer  என்பார்  பண்பாட்டு விசயங்கள், கவிதை கதை நாடகம் இலக்கியம் போன்ற விசயங்களை  ஆய்ந்து , அங்கு யாதுமே நிரந்தரம் அல்ல என்பது போல் முடிக்கின்றார். . அறிவின்  வானோரங்கள் (horizon)  பிரிதொன்று தோன்ற அதனோடு முட்டி மோதி பின் இணைந்து கலந்து ஐயிக்கியமாகி புத்துருப் பெற்றுப் போகின்றது என்று ஓர் ஐக்கியவாதம் பகர்கின்றார்.  இதனால்  tradition  மரபிற்கு ஓர் புதிய அதிகாரத்துவத்தை காண்கின்றார். ஆனால் Habermas என்பார் இதனை வன்மையாக மறுத்து மக்களிடையே உடன்பாட்டைக் கொண்டு வந்து ஒத்துப்போம் நிலையில் சார்பற்ற உண்மைகள் புரியவரும் என்கிறார்.

இப்படி இன்னும் எத்தனையோ.

இப்பொழுது     Hegel முன்மொழிந்த தத்துவக் கோட்பாட்டை  தனது தளமாகக் கொண்டு  Marx தனது 'dialectical materialism"  என்பதைக் கொண்டு வந்தார். அதுவும் உலகெங்கிலும்  ஓர் பேயாட்டம் ஆடி அடங்கிவிட்டது போல் தோன்றுகிறது. (இல்லையோ?) இப்பொழுது   இதனை அடித்தளமாகக் கொண்டு இன்னொரு தத்துவக் கோட்பாடு வரவிருக்கிறது, அது யாது ? எப்படி பட்டதாக இருக்கும்?  என்றெல்லாம்  எதிர்ப்பார்ப்புக்கள் எழுந்துள்ளன.

NeoMarxism  என்றவாறு வரலாம்; இன்னொரு ஆட்டம் ஆடலாம்.ஆயினும் அதுவும் அசத்தாகத்தான் விழும். இப்படித்தான் சொல்கின்றார் மெய்கண்டார்:

பூதாதி ஈறும் முதலும் துணையாக

பேதாய், திதி ஆகும் பெற்றிமையிம்-- ஓதாரோ

ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறக்கண்டும்

அன்று என்று உண்டென்ன ஆய்ந்து.

கடைப்பிடிகள், சமயங்கள், மதங்கள், வாதங்கள், சங்கற்பங்கள், தெரியங்கள், பலவகையான idealogyகள் எல்லாமே , ஒன்றில் ஒன்று  தோன்றி உளதாய் நின்று பின் இறப்பன. அதனால் அவற்றின் உண்மைகளை ஆய்ந்துத் தெளிவோர், ஓதார் இவற்றில் யாதும் என்றும் உண்டு என.

மெய்கண்டார்  சடப்பொருள் உலகிற்கு இதனைக் கூறினாலும் அறிவுலகிற்கும் இது பொருந்தும்

என்றும் உண்டாய் இருப்பது இந்த தோற்றமாற்றங்களுக்கு மூலமாய ஆகவே சங்கார காரணனாகிய முதல்தான் வேறல்ல என்று முடிக்கின்றார் மெய்கண்டார்.

உண்மைதானே?

(தொடரும்) 1.2.1



2013/4/19 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 20, 2013, 9:55:37 PM4/20/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 11: ஞானசமத்துவம்

 பார்வைகளே அறிவினைத் தோற்றுகின்றன என்று கண்டோம். அதனின் சனிக்கப்படும் அறிவுகளெல்லாம் இரட்டுரு நூலாகவேத் திகழும் என்றும் கண்டோம். மேலும் பார்வைகள் பலதிறப்பட அறிவுகளும் பலதரப்படும் என்றும் கண்டோம்.  இவற்றில் மிக முக்கியமானது  சுட்டு யாதும் இல்லாத ஆகவே காலவுணர்வு திசையுறு இடவுணர்வு போன்றவை இல்லாத , எல்லாப்  பார்வைகளின் எல்லையாகிய பார்வையற்றப் பார்வை என்பது.

 இவற்றையே இன்னொருவகையில், மெய்கண்டாரைப் பின்பற்றி "அந்நியப் பார்வை" என்றும் "அநந்நியப் பார்வை" என்றும் காணலாம். இறைவன் அனைத்தொடும் அந்நியமின்றி நிற்பதால், யாதையும் அந்நியமாக காணான் என்கிறார் மெய்கண்டார்.

அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்

அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல்  --  அன்னியமாக்

காணான் அவன் முன், கதிர்முன் இருள்போல்

மாணா அசத்து இன்மை மற்று

 

இவ்வாறு அனைத்தையும்  அந்நியமிலாது, அநந்நியமாக் காணும்போது,  "ஒன்று" அல்லது "அது" என்ற சுட்டு ஆங்கு திகழாமையின்  அசத்தறிவு ஆங்கு சனிக்காது என்கிறார்.

பார்வையற்ற பார்வை அநந்நியப்பார்வை, பிறவெல்லாம்   அந்நியப் பார்வைகள். இறைவனுக்கு இயல்பாக விளங்கும் ஒன்று அனைவருக்கும்  உரித்தவோர் சாத்தியமாகவும் இந்த அநந்நியப் பார்வை நிற்கின்றது. அந்நியப்பார்வைகளில் பேதங்கள் பிறங்கும், ஒற்றுமை வேற்றுமைகள் திகழும், சாதி மத  பேதங்கள்  இருக்கும்.  ஆனால் எப்பொழுது இப்படிப்பட்ட  பேதங்கள் இருந்தாலும்  அவற்றின் ஊடே, அனைவருக்கும் சாத்தியமாக  இந்த அநந்நியப் பார்வை இருக்கின்றது  என்று  அறிகிறமோ, அப்பொழுதே அனைவரும் அவ்வகையில் சமம் என்ற உணர்வும் எழுகின்றது. இதுவே சைவங் கூறும் ஞானசமத்துவம் ஆகும்.

 

மெய்கண்டார் வழியில் சென்றவர்களும் மெய்கண்டாரை கார்காத்த வேளாளர் ஆக்கி ஓர் சாதிக்குள் வீழ்த்தி அவரது சாதியாதீத மானிட பொதிவீயத் தனமையை வற்புறுத்தாது போய்விட்டனர்.  சாதிச் சகதியில் கிடப்போர் எப்படி மெய்கண்டார் மிகத் தெளிவாகக் கூறும் சாதியாதீதக் கருத்துக்களை  ஞான சமத்துவத்தை வற்புறுத்த முடியும்?

நாம் அனைவரும் அநந்நியப்பார்வையை மகிழவும்  அந்நியம் இலாது அனைத்தையும்  காணும் சாத்தியம் பெற்றிருப்பதின், நாம் அனைவரும் அவ்வகையில் சமம்.

மேலும் மனித உரிமை எனப்படும் அந்த அரசியல் கோசத்திற்கும் தத்துவார்த்த  முறையில் புதியவோர் விளக்கமும் இதன் வழி நமக்குக் கிடைக்கின்றது.  என்று அப்பர் பெருமான் "நாம் யார்க்கும் குடி அல்லோம்" என்று முழங்கினாரோ அன்றே, யாராலும் தட்டிப் பரிக்கமுடியாத மானிட உரிமைக்கும்  ஒர் தத்துவக் குரல் எழுப்பப்பட்டுவிட்டது.

பொறிலியப் பார்வை தொடங்கி பெயர்ந்து பெயர்ந்து    அன்பினை வளர்த்து அந்நியம் போக்கி, அதனின் அதுவென சுட்டறியும் போக்கும் போக்கி அநந்நியப் பார்வையில் அனைத்தையும் கண்டு மகிழ்வது எனது உரிமை; என் உயிரோடு உயிராக அன்றே கலந்திருக்கும்  ஓர் சாத்தியமாக அது இருக்க,  என்னை ஓர் நாடாள்வானோ, ஞானியோ,  ஆதீனமோ , அரசியல் தீவிரவாதியோ , அறிவனோ, தத்துவஞானியோ, தீர்க்கதரிசியோ மற்றும் எவனுமே அவன் கண்ட பார்வையோடு ஒத்துப் போவதோடு அதற்குள் அடங்கிட வேண்டும் என்று பணிப்பது,  என்னை சிறை செய்வது ஆகும்,  குடிமை செய்வது ஆகும். ஆகவே இது என் உரிமையை மறுப்பதும் ஆகும். நான் யார்க்கும் குடி அல்லோம், அப்படி ஆய்விட்டால் அநந்நியப்பார்வையின் அனைத்தொடும் அநந்நியமாக இருக்கும் உரிமையை இழக்கின்றேன்.  அந்த இழப்பினை தருதற்கு நீ யார்?   நீ அதற்கு இடங்கொடாது வற்புறுத்துவாயெனில், உன்னை எதிர்த்துப்  போராடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

இதுவே எல்லா சுதந்திரப் போராட்டங்களின் உட்கிடக்கை; அத்தகையப் போராட்டங்களை எல்லாம் நியாயப் படுத்தும் உள்ளுணர்வு; அறத்திற்குப் புறம்பானது அல்ல என்று  நிறுத்துவதுமாகும்.

இவ்வாறான பார்வைப் பெயர்ச்சியின் சூக்குமம் தான் என்ன?

எல்லாப் பார்வைகளுக்கும்  ஓர்   வேட்கை நிலை உண்டு. பொறிலியப் பார்வைக்கு உரிய காலவுணர்வு   சடப்பொருட்களின் அசைவினைக் கணித்து  எழும்  பௌதிக காலம் (Physical time).  சூரியன் உதிப்பது போல, இடைவிடாது ஓர் நிரல்பட,   சில அணுக்கள் கதிர்களை வீசுவது போல,  மாறாவகையில் மீண்டும் மீண்டும் ஓர் பௌதிக நிகழ்ச்சி மெய்யாக ,  ஒர் புள்ளியை மையமாக  கொண்டு, அதற்கு முன் என்றும் பின் என்றும் சென்று  ஓர் சுட்டரங்கு உருவாக்கி, நிகழ்ச்சிகளை பொறிலிய சுட்டுக்காலத்தில் படுத்துகிறோம்.  இதனையே பலவேறு வகையில் கணித்து உகம், பல்லாண்டு, ஆயிரத்தாண்டு, நூற்றாண்டு, நாள்,  மணி . நிமிடம். வினாடி, துடி என்றெல்லாம் வகுத்து துல்லியாமக்குகிறோம்.

பண்டை தமிழ் நாட்டு புத்தர்கள்  இந்த பகுப்பின் எல்லைக்கே சென்று, தோன்றியவுடன் அழிவதாக "ஓர் கணம்" இருப்பதாக கொண்டு தமது கணபங்க வாதத்தை முன்மொழிந்தனர்.

ஆனால் இவர்கள் , இந்த பொறிலியப் பார்வைக்குள் மாட்டிக்கொண்டு  அதனின்றி கழன்று வெளியேறத் தெரியாதவர்கள்.  காலத்தை துல்லியமாக்கி  கணங்களாக ஆக்கினாலும்,  இன்றைய பௌதிகத்தில் காலவுணர்வு ஆற்றலின் ஓர் வெளிப்பாடாக கொண்டாலும், அதனை அறிவிலிருந்து இல்லாமற் போக்க முடியவில்லை. காலவுணர்வு ஏதோவோர் வகையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

அப்படியென்றால் இப்படிப்பட்ட காலவுணர்வுகளோடு வரும் எல்லா அறிவுகளும்  ஐன்ஸ்டெய்னின்  பொதுவின் ஒப்பியல் தெரியம் (General Theory of Relaivity)  உட்பட எல்லாமே அசத்தறிவுகள் தான்.

இதைக் கண்டதும் ஓர் கருத்து எழுகின்றது. இப்படி எல்லா இடத்திலும்  காலவுணர்வும் இடவுணர்வும் இருப்பதால், எல்லாப் பார்வைகளும் அந்நியப் பார்வைதான், சுட்டுப்பார்வைதான், எந்த மானிடனாலும் அதனைக் கடந்து கழன்று செல்ல முடியாது, ஆகவே எந்த சுட்டும் இல்லாத அநந்நியப்பார்வை ஓர் கற்பனைதான் வேறொன்றுமல்ல  என்று சொல்ல வருகிறது அல்லவா?

இப்படித்தான் சொன்னார் தொல்காப்பியர். அவருக்கு  முதல் பொருள் இறைவன் அல்ல,  பொழுதும் நிலனும் தான் , காலமும் வெளியும்தான் முதற்பொருள். இப்படித்தான் தன் வாழ்நாளையே இந்த சிக்கலை அவிழ்க்க ஆழமாக சிந்தித்த Kant  என்பாரும் கூறுகின்றார்.

ஆனால் நம் திருமூலரும் மெய்கண்டாரும்  நூலிய அறிவியல் முறையில் சென்றதின் காரணமாக, இது  முடியும் என்கின்றனர்; காலவுணர்வினை கழற்றி எறிந்து  சுட்டின்றிக் காணமுடியும் என்கின்றனர்.

 எப்படி என்பதை அடுத்தக் கட்டுரையில் காண்பம்.

(தொடரும்) 1.2.2



2013/4/20 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 21, 2013, 10:11:31 PM4/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

 கட்டுரை 12: மோனமொழி

 தமிழர் தம் மெய்யறிவு வரலாற்றிலே, அதற்கு சிறப்பான ஓர் இடத்தைத் தருவதாகவும்  உலகப் பண்பாட்டிற்கு ஓர் பெருங்கொடையாகவும்  உலக மக்கள் ஒற்றுமைக்கு பெரிதும் உதவக் கூடியதுமாக இருப்பது   முடிஞானமாக அதேப்பொழுது அனைவரின் உள்ளத்திலும் ஏற்கனவே இருப்பதாக (a priori )   இருக்கின்ற மெய்ஞ்ஞானம் எல்லா மொழிகளையும் கடந்த மோனமுத்திரையால்தான் உணரப்படும் என்பதே அது.  இந்த  மோனமும் ஒரு மொழியாகும். என்று சுட்டுணர்வெல்லாங் கழன்று நின்று ஆகவே எல்லாவகைக் காலவுணர்வுங் கடந்து நின்று  அனைத்தொடும் அந்நியம்போக்கி  காணாதே காண்கின்றோமோ அஞ்ஞான்றே அமைவதாகும்.

 மோனம் அனைவருக்கும் உரிய மொழி, பலவகையான பேதங்களை  உருவாக்கும்  செப்புமொழிகள்  கடந்த  மெய்ஞானத்தெளிவின் யார் அடங்கினாலும் அவர்கட்கு உரிய மொழியாய் அமைவது. இங்கு தமிழ் என்றும் வடமொழி என்றும், அரபு என்றும் கிரேக்கம் ஆங்கிலம்  சீனம் என்றும் இன்னும்  பலவாறு  மொழிபித்தேறி பிதற்றும்  மொழித்தேசியம் கழன்ற நிலை. எனது மொழி தேவபாசை பிறவெல்லாம்  நீசபாசை என்னும்  தற்போதச் செருக்கின் வெறியும்  கடந்த நிலை.

 இப்படிப்பட்டத் தெளிவுகளைத் தரவல்ல காலக் கழற்சியைப் பற்றி திருமூலர் நிறையக் கூறியிருக்கின்றார். அவற்றில் ஒன்றே கீழே வருவது:

 696 (மூன்றாம் தந்திரம்)

 இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்

பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி

ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்

தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே

 பலதிறப்பட்டு காலங்கள்,  யுகங்களாக துடி பிலவம் கணம்போன்ற  துல்லியங்களாக இருக்கின்றன. ஆயினும் உண்மையான சாதகன் , வளர்ந்து வளர்ந்து செல் திறத்து காலவுணர்வைக் கண்டு ,  அதனிற் படாது கழன்று  தன்னை இறைவனோடு ஒன்று படுத்துகின்ற  உயிர் ஓட்டத்தை குருநாடிச் செலவில்  கொண்டுசென்று  சிவஞானப்பிரகாசம் பொருந்தி ஒளிபெற நிற்க,   சொல்லாடும் திறனெல்லாம் இழந்து  இறைவனோடு சுத்த மோனத்தில் வேறற நிற்பன் என்கின்றார்.  அவ்வாறு நிற்கின்ற போதுதான் காலம் இருந்தும் அவ்வுணர்வில் அவன் படாது நித்தியமானவோர்   இருப்பு நிலையில் நிலைத்து நிற்பன் என்கிறார் இங்கு.

எவ்வாறு மெய்கண்டார் , ஒருவன் மெய்கண்டானாக உயரும்போதுதான்  அதுவரை உண்மை உண்மை என்றே நம்பி வாழ்ந்த அனைத்தும்  அசத்தாய் விழும் அதுவரை விழாதே நிற்கும் என்று கூறி சத்திற்கும் அசத்திற்கும் உள்ள  இலக்கணத்தை விளக்கினாரோ அதேபோலத்தான் இங்கும்.

 சுட்டுணர்வில் பட்டு  அதனின் யாண்டும் யாதாவதோர்  முறைவில் காலவுணர்விலேயே  ஆக மரபு வழிப்பட்ட ஓர் ஆன்மாகவே நிலைப்பதிலிருந்து அனைவரும் கழன்று செல்ல முடியும். அதற்குரியதே இறைவனோடு அந்நியம் போக்கும் குருநாடிச் செலவு என்கின்றார் திருமூலர். இது அனைவருக்கும் உரியது;  எல்லாருக்கும் உரியதாக யாண்டும் இருப்பது.

 ஆயினும் ஏன் இதை நாம் அறியாதே கிடக்கின்றோம்? திருமூலரே இதற்கு விளக்கமும் தந்துவிடுகின்றார்.  இடகலை பிங்கலை சுழிமுனை நாடிச் செலவுகளையே மதித்து வாழும் நாம்  குருநாடிச்  செலவில் வாழுந்திறத்து சாதகனாக ஆகாது போதலே தவிர வேறன்று.

 குருநாடிச் செலவு என்றவொன்று இருப்பதை அறியாதும்,  அறிந்தும் அதனை மதித்து சிந்திக்காது போவதும் யாருடையத் தவறு?

 நாத்திகத் திராவிடனை எடுத்துக்கொண்டால் உடன் ஓர் பதில் வரும்:  இதனை மறைத்ததும் அதற்கு பிரச்சாரம் இல்லாது ஆக்கியதும்  எல்லாம்  வேதப் பார்ப்பனர்களின் சதி !

 இதிலே  உண்மை இருக்கின்றதா?. வேதங்களை பிரமாணமாக்கி  ஞானம் என்றால் வேதஞானமே என்று கூறி மக்களை வேதத்திற்கு அடிமையாக்கி அதன்வழி வேத விற்பனனாகிய தனக்கும் அடிமையாக்குவது  இன்றுகூட நடைமுறையில் இருப்பதுதான்.   வேதமொழியாகிய வடமொழியை தேவபாசை என்று கூறும் பித்தலாட்டமும் இப்படிப்பட திராவிட எண்ணங்களைத் தோற்றுவித்துள்ளதா?.

 ஆனால் இப்படிப்பட்ட கூற்றுகள் தவறானவை, சிவஞானம் வேதத்தில் இல்லை, மற்றும் எம் மறை நூலிலும் இல்லை. இது எல்லாருக்கும் உரியதாக இருக்கும் குருநாடிச் செலவில் இருக்கின்றது என்ற் கூறும் திருமூலர் வழியில் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.  ஆனால் யார் இதை வழிமொழிந்து சமயவிளக்கம் தருகின்றார்கள்?

 இவ்வழி செல்லுவதற்கு தானே தனக்குத் தடை எழுப்பினவனாக இருக்கின்றான் இன்றையத் தமிழன்! இவ்வாறு எந்த ஆய்வுச் சிந்தனையும் அற்று    ஓர்  வெறித்தனமாக  எதற்கெடுத்தாலும்   வேதப்  பார்ப்பனர்கள் மேலும் அவர்களைப் போன்ற பண்டாரங்கல் மேலும் பழி போடுவது  தமிழ நாகரீகமாகவே வளர்ந்துவிட்ட ஓர் அவல நிலையைத் தான் இன்று காண்கின்றோம்.

 பகுத்தறிவு என்ற போர்வைக்குள் வெறுப்பு உமிழும் வெறியைத்தான் காண்கின்றோம்

 இங்கு இன்னொன்றையும் கூறவேண்டும். எந்த  மதத்தர்கள் தன் மதத்திலேதான் உண்மை இருக்கின்றது , பிற மதங்களில் இல்லை என்று மதவெறி ஆடுகின்றார்களே, அதற்காக கொடூரமான முறையில் மக்களை  கொன்று குவிக்கவும் தயங்காது வெறிபிடித்துத் திரிகின்றார்களே அவர்களும்  இந்த சுதந்திர ஞானயாத்திரைக்குத்  தடைதான், பெருந் தடைதான்.  ஆக  குருநாடிச் செலவில் செல்வதற்கு மதங்களால் அந்த மதங்களை  கருவியாகக் கொண்டு மக்களை அடிமை படுத்தவிழையும் மதத்தர்களிடமிருந்து  நாம்  உண்மை சாதகம் செய்யும் பொருட்டு ஒதுங்கிட வேண்டியதாக இருக்கின்றது.

 இது இன்றைய சில சைவ குருமார்களுக்கும் பொருந்தும். இறைவனாலேயே அநுக்கிரகிக்கூடிய தீக்கைகளை, பலவகை ஆசாபாசங்களோடு திரியும்  தன்னால் தரமுடியுமென்று பொய் நாடகமாடி அப்பாவி மக்களை தன் அடிகீழ் விழுந்து தனக்கு அடிமையாக்குகின்றார்களே , அதனின்  சுதந்திரத்தை மதித்து வளர்த்தாலேயே அமையக் கூடிய மெய்ஞான யாத்திரைக்கு இவர்களும் தடையாகின்றனர் -- அறிந்தோ அறியாதோ!

  இதேப்போன்ற இந்த கம்யூனிஸ்டுகள் சோசலிஸ்டுகள் போன்றாரைக் கேட்டால்  எல்லாம் முதலாளித்துவத்தின் கொடுமைகள், அடக்குமுறைகள் என்று அவர்கள் மேல் பழிபோடுவார்கள்!  இங்கு பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு  ஒருவனது உழைப்பையே தனதாக்கிக்கொள்ள மக்களை அடிமைபடுத்த விழையும் முதலாளி வர்க்கத்தினர் கண்டிக்கப்படவேண்டியவர் எனினும், இறைவனாலேயே அருளப்பட்டுள்ள  ஞானயாத்திரையை செய்வதற்கு எந்த முதலாளியும் தடை எழுப்ப முடியாது. ஆகவே சோசலிசப் பார்வையில் ஞானயாத்திரை செய்ய  தனக்குத் தானே தடை எழுப்பப்படுகிறதேத் தவிர புறத்தடைகள் என்பன   கற்பிதங்களே.

 பொறிலிய அறிவியல்வாதிகளாக  விளங்கும்  பெரும்பாலான வெள்ளையர்களை  எடுத்துக்கொண்டால், இப்படியொன்று  இல்லவே இல்லை, அபத்தமான கற்பிதம் ,  பிராந்தி  ஞானம்  பொருளற்ற mysticism என்று கூறி தன்னை அத்தகைய ஆய்வினின்று  தூரமாக்கிவிடுகின்றநர். இது ஒரு தப்பிக்கும் உபாயமேத் தவிர, புரிந்துகொள் மார்க்கமல்ல. .  Kant   கூறியதையே மீண்டும் கக்கி  கால இட உணர்வு கடந்த  அறிவு வெற்று பரக்கற்பனை என்று ஒதுக்கிவிடுவது ,  உண்மைதான் என்ன என்று விசாரிக்கும் போக்கின்  எழும் ஒன்றல்ல.

 உள்ளம் என்பது ஓர் வெள்ளைத் துணி, ஐம்புல அனுபவங்கள் பதிவிப்பதே  பொருள்; அத்தகைய பதிவுகள் ஒழுங்கற்று விளையாடும்போது ஆகின்றவையே இப்படிப்பட்ட அனுபவத்திற்கு ஒத்து வராத கருத்துக்கள் என்பர் Locke  என்பார் தொடங்கி இன்றளவு ஆங்கிலேயர்   பலர். இது இந்திய உபகண்டத்து உலகாயதர் சார்வாகர் போன்றாரை ஒக்கும்.

குருநாடிச் செலவிலே முடியக்கூடிய வகையில்  ஞானயாத்திரை செய்வதற்கு மக்கள் உள்ளத்தில் ஓர் அச்சம் இருக்கின்றது.  இந்த அச்சமே பலவகைக்  கற்பனைக் கோட்டங்களை உருவாக்கச் செய்து -  ideology,religion , cults என்றெலாம் உருவாக்கச் செய்து , அதில் தனை சிறைசெய்துகொண்டு ஓர் பொய் அமைதி அடையத் தருகின்றது.

  இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது: உண்மைதான் என்ன? என்ற  கேள்வியையே கேள்வியாகக் கொண்டு வாழமுடியாமையாகும்.   ஒவ்வொரு சங்கற்பமும்  ஓர் சுகமான முகமூடியைத் தர, அந்த முகமூடியும் ஓர் அடையாளத்தைத் தர, அந்த அடையாளமும் ஓர் குழுவைத் தர, அந்தக் குழுவுணர்வுணர்வும் ஓர் பொய் பாதுகாப்பைத் தர,  அச்சம்  தற்காலிகமாக வேணும் ஓரளவு நீங்குகின்றது. பிறகு அதனையே நித்தியமாக்கப் பார்க்கின்றான், அந்த பொய் சுகத்தில் தான் நித்தியமாக இருக்க.

 ஆனால்  யாண்டு: உண்மைதான் என்ன? என்ற கேள்வி வல்லிதாய்  ஒருவனைப் பிடித்தாள்கின்றதோ, அன்றே  இந்த முகமூடிகளைக் கழற்றி வீசிவிட்டு, தனக்கென்று  எந்தவொரு  அடையாளமும் இல்லை,  உண்மையில் தானோர் சுத்த ஆன்மா  என்று உணரத் தலைப்படுவான். இந்த உணர்வோடு தொடங்குவதே  குருநாடி செலவில் முடியத்தரும் ஞானயாத்திரை.

 அதுபொழுதே, குறிப்புக்கால உணர்வு உண்டென உணர்த்தும் நூலியப் பார்வையும் பிறகு  படிப்படியாக காலக் கழற்சியினைக் கொண்டு வரும் நுதலியப் பார்வைகளும்  அதற்கு மேற்பட்ட ஏனையப் பார்வைகளுமாம்.

 

இவற்றின் நுட்பத்தை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.

 

(தொடரும்)  1.2.3

 

உலகன்



2013/4/21 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 23, 2013, 2:47:03 AM4/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 13 :எண்ணறிவும் இருந்தறிவும்

பார்வையற்ற பார்வை மோனத்தோடு வருவது, வைகரி பைசயந்தி மத்திமை சூக்குமை அதிசூக்குமை எனும் ஐந்து வகை மொழிகளாலும் அமையக்கூடிய உணர்வு நிலைகளையும் கடந்து செல்லும் போது தானே அமைவது. இங்கே பகரப்படும் மொழியியல் சைவத்திற்கு  மாத்திரம் உரியதாக மந்தராயணம் சார்பினதாக இன்றளவு  விளங்கி வருகின்றது, இதனைப் பற்றி பிறகு விளக்குவோம்.

ஆயினும் இங்கு இறைவனது ஓர் அற்புதமான உத்தியைப் பார்த்தீர்களா?

சிவஞானம் வேண்டுமா? வீடுபேறு வேண்டுமா? தருகின்றேன், ஆயின் எல்லா வகை மொழிகளையும் கடந்துவா, ஆகவே எல்லா வகை சமயங்களையும் கழன்று சுத்தமாகி மேலே வா! அப்பொழுது அது தானே சுடரும் ! என்கின்றான் இறைவன். வினையின் நீங்கி விளங்கிடு அறிவில் ஒருவன் தன்னை இருத்த, அதுபொழுது தானே விகசிக்கும் மெய்ஞானமே, சிவஞானமே வீடுபேறு அளிக்கவல்லது.

ஆக பிறவகையில் அல்லாது மொழிகடந்த நிலையில்தான் மகிழப்படும் சிவஞானத்தைப் பற்றி இன்னும் எத்தனையோ கூறுகள் இருக்க, அவற்றைப் பற்றியெல்லாம்  விரிவாக ஆய்வோம், சூத்திரத்திற்கு ஏற்றவாறு

இப்போழுது அறிவினை பற்றிய இன்னொரு இலக்கணத்தை சிறிது விளக்குவோம்.

நமக்கு உரியதாக இருப்பது ஞானவந்தகாரம்தான், துன்னிருளின் அமையும் இருள்தான். எப்படியோ  இருளைக் கிழித்துக்கொண்டு சுடரும் ஒளிபோல்,  அறிவு அல்லது ஞானம் விளங்குகின்றது. ‘ஞானம்' என்றாலே இருளிற்குப் புறம்பாகிய பிரகாசம்தானே? (ஞால்>ஞான், ஞானம்: சுடர்வது)

எப்படி அறிவு சனிக்கின்றது? என்று அதன் தோற்றுவாயை நோக்கி நம் சிந்தனை செல்ல, அதுபொழுதே அறிவு இவ்வகையில் எண்ணறிவு என்றும் இருந்தறிவு என்றும் இருவகைப்படும் என்று தெளிகின்றோம். இங்கு  எண்ணறிவை ‘interpretive understanding' என்றும் இருந்தறிவை ‘existential or intuitive understanding' என்றும் ஒருவாறு கூறலாம். ஒன்றினைக் காண்பதால் வரும் அறிவு, ஏற்கனவே அகத்தில் இருக்கின்ற  அறிவுகளை வைத்துக் கொண்டு நினைப்பதால் , சிந்திப்பதால் வரும் அறிவு, ஊகங்களால் வருவது, ஒன்றினைக் காண கேட்க அதனை வைத்துக்கொண்டு பலவாறு அனுமானித்துப் பெறப்படுவது, காணாவொன்றினை கண்டவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து அதனை ஒருவாறு அறிவது, model building என்கிறார்களே அதுபோன்று புனைவுகள் வழி அறிவது என்றவாறு புத்தியின் தொழிற்பாட்டினால் கிடைக்கின்ற அறிவுகளே எண்ணறிவுகள் ஆகும்.

இதற்குப் புறம்பாக அகத்திலே தானே ஞானோதயங்கள்  உதிக்க அதனால் அறிவுகள் ஆன்மாவின் சொத்தாக அமைவதும் உண்டு. காட்டாக கனா அனுபவம். ஒருவன் உறங்கும் போது கனவு தானே உதிக்கின்றது, அதனால் அறியாதிருந்த  ஒன்றினைப் பற்றி  கனவு காண்பவன் அறிய வருகின்றான். இப்படி உள்ளுணர்வுகளாக தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ ஞானோதயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பக்குவத்தில் முதிர முதிர இத்தகைய ஞானவுதிப்புக்கள் பல்வேறு வகையில் அகத்தே வெடிக்கின்றன. இவ்வாறு தெளிவற்ற அறிவுகளாக மலரும் இவற்றை ஆதிசித்துக்கள் என்று கூறலாம். இவை ஐயம் திரிவு தெளிவின்மை குழப்பம் போன்ற உணர்வுகளையும் எழுப்பலாம். அப்படி அவை எழுப்பும் போது தீவிர விசாரனைப் பிறக்க, அதன் முடிவில் தெளிவும் பிறக்க அது பொழுது அந்த சிந்தனைக்கரு,  ஞானவித்து அந்தசித்தாகி அல்லது சித்தாந்தமாகி அகப்படுத்தப்படுகின்றது.

இந்த வேறுபாட்டை இன்னொரு உதாரணத்தின் வழி விளக்கலாம். நிலம் பல்வேறு தன்மையது. வறண்டது ,நீர் நிறைந்தது, வெயில் மிக்கது குளிர் மிக்கது, சேற்றுப்பாங்கானது, மணற்பாங்கானது என்றெல்லாம் இவை ஆகும். தொல்காப்பியர் மிகவும் பொருத்தமாக முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்று ஐந்தாக பகுத்தார். இங்கு கருதப்பட வேண்டியது ஆங்கு முளைக்கும் செடிகொடிகள் வெவ்வேறு தன்மையன என்பதே. ஒவ்வொரு நிலத்திலும் தானே மலரும் செடிகொடிகள் போல, இந்த இருந்தறிவுகள். எந்த அகநிலத்தில் ஒருவனது உயிர் நிலைக்கின்றதோ அதற்குத் தக  ஆங்கெழு ஞானோதயங்கள்.

இதற்கு வேறாக தானே வேண்டிய செடிகொடிகளை பயிர் செய்து வரம்பிட்ட  வயலில் நீர் பாய்ச்சி தக்க உரமிட்டு வளர்ப்பதாகும். தானே மலரும் செடிகொடிகள் மனித முயற்சியால் பிறப்பனவல்ல, ஆனால் வயலில் விளையும் பயிர்கள் போன்றவை மனித முயற்சியின் பயன்களாகத் திகழகின்றன.

இவ்வாறுதான் இருந்தறிவும் எண்ணறிவும். இருந்தறிவுகள் ஆதிசித்துக்களாக தாமே மலர்ந்து சிந்தனையைத் தூண்ட, பல்வேறு உத்திகள் பெய்து தெளியப்பட்டு அந்தசித்துக்களாக அகப்படுத்தப்படுகின்றன.

 

இந்த வேறுபாடு ஏன் முக்கியமாகின்றது?

எல்லா அறிவினையும் இருந்தறிவு என்றோ எண்ணறிவு என்றோ கொள்ளலாமெனினும், இந்த பகுப்பிற்கு விதிவிலக்காக ஓர் ஞானம் உண்டு, எண்ணறிவுத் தோற்றா இருந்தறிவாக சுத்த மோனத்தில் விளைகின்ற ஞானமாகிய சிவஞானம்தான் அது. தானே எழுந்து சுடர்வதின் அது இருந்தறிவாகின்றது.  ஏனைய ஆதிசித்துக்கள் போல, மேற்கொண்டு எவ்வித சிந்தனையையும் அது தூண்டாதுபோதலின், அது எண்ணறிவு பிறப்பிக்கும் ஆதிசித்து அல்லவாகின்றது. ஆக சிந்தனையையே முடக்கவல்ல , ஒடுக்கவல்ல ஞானோதயம் இந்த சிவஞானம் மாத்திரம்தான்.

அதனால்தான் அது ஓர் ஆன்மாவை மோனத்தில் வீழ்த்துவதாகவும், அதிலேயே  நிலைப்பிக்கின்ற ஒன்றாகவும் ஆகின்றது.

சிவஞானம் அறிவு வளர்ச்சியின் எல்லை. அதை அடைந்தவன் சிந்தித்து எண்ணறிவுத் தேற்றும் ஊக்கத்தை இழந்து விட ஞானத்தை அநுப்வித்தவாறு ‘சும்மா’ இருக்கின்றான். இதுதான் அருணகிரி நாதர் தாயுமானவர் போன்றோர் போற்றிய ‘சும்மா இருக்கும் சுகம்’. இது சாதாரண சோம்பல் அல்ல. உடம்பிலும் உள்ளத்திலும் எல்லா சக்திகளும் இருந்தாலும் சிந்திக்கவேண்டும் எண்ணறிவுகளைத் தேற்றி தெளிவு மகிழ வேண்டும் என்ற ஊக்கமே இல்லாமரற் போவது.,\.

ஞானயாத்திரையின் எல்லையாகிய குன்றுச்சிக்கு வந்தாயிற்று, அதனையும் அறிந்தாயிற்று. பிறகு இன்னும் இன்னும் மேலே ஏற வேண்டும் எனும் ஊக்கம் பிறக்குமா?

தொடரும்

உலகன் 

 

 



2013/4/22 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 23, 2013, 9:56:06 PM4/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 14: நாட்டங்கள் பல

 

அன்பர்களே,

 இதுவரை முதல் சூத்திரம் தொடர்பாக இரண்டு படிமெய்களை நிறுத்திவிட்டோம். முதல் படிமெய்யில் பொறிலியப் பார்வை, நூலியப் பார்வை பலவகையான நுதலியப் பார்வைகள் இருக்கின்றன ஆகவே அப்பார்வைகள வழியே சனிக்கும் அறிவுகளும் பலவகை என்று தெளிந்தோம். அடுத்தாற் போல் இப்பார்வைகளில் அந்நியம் போக்கி ஆகவே சுட்டுணர்வு  கடந்து ஆகவே அனைத்தொடும் அந்நியமிலாது ஒன்றித்து நிற்கின்ற பேற்றை மெய்கண்டாரின் நோக்காது நோக்கலாகிய பார்வையற்ற பார்வை தரும் என்றும் அதுபொழுது சுத்தமோனமே  மொழியாகத் திகழும் என்றும் கண்டோம். மேலும் இவ்வாறு செல்லும் வழியில்  மானிடர்களிடையே பல பேதங்கள் இருக்கும்  என்றும் அவை இருந்தறிவு-எண்ணறிவு பேதங்கலால் வரும் என்றும் ஆயினும் இப்பேதங்கள் விளங்கா முடிவான மோன நிலையில் சிவஞானமே ஞானமாய்ச் சுடர, மாந்தராய் பிறந்த அனைவரும் ஒன்றே என்றும் விளக்கி அதன் வழி ஞானசமத்துவம் என்ற ஒன்று இருக்கின்றது, அதுவே அனைவருக்கும் இறைவனலேயே அருளப்பட்ட சமத்துவம் என்று விளக்கினோம்.

இனி இந்த பார்வைக் கருத்தோடு வருகின்ற நாட்டங்கள்(intentionalities)  பற்றி நாம் சிந்திப்போம். நாட்டங்கள் இன்றி பார்வைகள் இல்லைதானே?

 மூன்றாம் படிமெய்:

 மேற்கோள் : நாட்டங்கள் பலவாக அவாக்களும் பலவாகின்றன

ஏது: பார்வைகள் பலவகை என்பதாலும், நாட்டங்களின்றிப் பார்வைகள் இல்லை என்பதாலும்

 விளக்கம்:

 இது எப்படி? முதலில் நாம் சிந்திக்கவேண்டியது நம் பார்வைகள் ஊடே வரும் விருப்பு வெறுப்புக்கள். ஒரு பொருளை எல்லோரும் ஒரே வகையில் காண்பதில்லை. ஓர் அழகிய மங்கையைக் காணும் ஓர் ஞானிக்கு ஓர் குழந்தை எனப்படும். நீலகேசியின் காம ஆட்டங்களைக் கண்டு அந்த சமண முனீந்திரர் இப்படித்தானே அவளை விளித்து அவள் செருக்கை அடக்கினார்? ஆனால் ஓர் காமுகனுக்கு இப்படிப்பட்ட  காமயிச்சைக்கு நல்ல விருந்து எனப்படுவாள்.

இவற்றைத்தான் பொறிலியப் பார்வைகளாதிகளாக விளக்கி உள்ளோம். முடிவான பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து ஏனையவெலாம் மெய்கண்டார் பகர்ந்தவாறு சுட்டுணர்வுகளை சனிப்பிப்பன ஆகவே 'அது" எனும் சுட்டோடு வருவன. இப்படி வரும்  சுட்டுணர்வுகளோடு ஒன்று எனும் உணர்வும் தொடர்ந்து வருவதைக் காண வேண்டும்.  எங்கே சுட்டு இருக்கின்றதோ அங்கே சிலவற்றை ஏற்றலும் வேறு சிலவற்றை ஒதுக்கலும் நடக்கின்றது. 'சுட்டு' என்றாலே இதுதானே பொருள்? பலவற்றை ஒதுக்கி சிலவற்றைத் தேறாவிட்டால்  எப்படி சுட்டு நடக்கும்?

 எங்கே ஏற்றலும்  ஒதுக்கலும் நடக்கின்றதோ அங்கு விருப்பு வெறுப்புகள் உண்டு. விரும்பப்படுவது ஏற்கப்படுகின்றது, வெறுக்கப்படுவது ஒத்துக்கப்படுகிறது. இப்படி வேண்டுதல் வேண்டாமையோடு திகழ்வது மானிடப்பண்பு, அதற்கு அப்பாலாக "வேண்டுதல் வேண்டாமை இலானாக" திகழ்வது, திருவள்ளுவர் செப்பியவாறு இறைவனது பண்பு.

அது சரி, ஆனால் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பேதவுணர்வில் நான் இருப்பதாக எனக்குப் படவில்லையே, நான் சமத்துவம் பாராட்டும் ஓர் நல்லவன் என்று சிலர் வாதாடலாம். அல்லது பிள்ளை  லோகாசாரியரை ஒட்டி வைணவர்கள்  பரபத்தி மார்க்கம் தழுவி இறைவனை மகிழ எந்தவொரு நியமனமும் இல்லை, உண்மையான இறையன்பினைத் தவிர என்று கூறி எதிர் வழக்காடலாம். (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஆயினும் நான் ஓர் முஸ்லிம் என்றும் வைணவன் என்றும் சைவன் என்றும் கிரித்துவன் என்றும் மார்த்தட்டும் போதெல்லாம் அந்த மார்த்தட்டலிலேயே இந்தப் பேதங்கள் சிந்தனையில் இல்லையென்றாலும் ஒழுக்கத்தில் நிற்கின்றனவே? மதுரை சிவப்பிரகாசரை, உமாபதியின் சிவப்பிரகாசத்திற்கு மாபெரும் விரிவுரை எழுதி உபகரித்த அந்த சிவஞான தேசிகரைக் கேட்டால், புத்தி பூர்வமாக இல்லை  ஆனல் அபுத்திப் பூர்வமாக இருக்கிறது என்பார். (It is present as UNCONSCIOUS)

ஏன் இப்படி?

 நாட்டங்கள் என்பன(intentionalities), இஃதென நாம் புத்திப் பூர்வமாக அறியா நிலையிலும் ஓர் முன்னறிவின் காரணமாக அகத்திலே நம்மை அறியாதே நிற்கின்றன. யாது இந்த முன்னறிவு? முத்தி முன்னறிவுதான். எப்படி? இந்த முத்தியை அடையத்தானே எல்லா நாட்டங்களும் எழாமற் போகின்றன?

 அது எப்படி முடியும்? கிறித்தவர்களும் முஸ்லிம்களும் சொர்க்க வாழ்க்கைத்தான் முடிவு என்கிறார்களே? என்று கேள்வி எழுப்பலாம். பதில் என்ன? இந்த சொர்க்கவாழ்க்கை எனும் கருத்து வீடுபேற்றினைப் பற்றிய ஓர் உள்ளுவமம், அதன் மெய்பொருள் வீடுபேறே என்பதாம்

 ஆய்னும் இந்த நாட்டங்கள் எவ்வாறு எழுகின்றன?

 ஐரோப்பியர்களைக் கேட்டால் பெரும்பாலும் அகத்தே பல சுரப்பிகள் இருக்க அவை உமிழும் பல கசிவுகள் உடம்பெங்கும் பரவ பல்வேறு நாட்டங்கள் பிறக்கின்றன என்பர்.  வயிற்றில் உணவு இல்லாதுபோது ஓர் நீர் சுரக்க ‘பசி’ என்ற உணர்வுத் தோன்ற உடன் உண்ணவேண்டுமென்ற நாட்டம் எழுகின்றது என்பர்.

 

இப்பொழுது மரபணுக்களைக் கொண்டு வந்து அவற்றுள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அதற்கேற்பவே நாட்டங்கள் பிறக்கும் என்பர்

 இப்படிப்பட்ட பொறிலிய விளக்கங்கள் எல்லா நாட்டங்களையும் விளக்க முடியுமா? வீடுபேறு அடைய வேண்டும் என்றவோர் நாட்டம் சிலர் உள்ளத்தில் எழுகின்றதே? அதுவும் சுரப்பிகளின் கசிவால் அல்லது மரபணுக்களின் செயலால் வரும் ஓர் நாட்டமா?

அடுத்து இதைக் காண்பம்

 (தொடரும்) 1.3.1

 உலகன்

 



2013/4/23 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 24, 2013, 10:14:07 PM4/24/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 15 நாட்டங்களும் நாடிகளும்

 நாட்டங்களைப் பற்றித் தொடர்வோம். ஆசைகள் விருப்பு வெறுப்புக்கள் நம்மால் அறியப்படுவன, உணர்வில் இருப்பன-- எப்படி அவை தோன்றுகின்றன என்று அறியாத போதிலும். பல இளைஞர்களை யுவதிகளை நான் கேட்பதுண்டு:  ஏன் நீ  திருமணம் செய்துகொள்கின்றாய்? இந்த கேள்வியே அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். என்ன பைத்தியமான கேள்வி என்று பகடி பண்ணுவார்கள். இன்னும் வற்புறுத்திக் கேட்டால், சற்று யோசித்து "எல்லாரும் செய்துகொள்கிறார்கள் அதனால் நானும்" என்பார்கள். எல்லாரும் அப்படியில்லையே, ஒரு சிலர் அந்த வம்பு வேண்டாமென்று ஒதுங்கி விடுகிறார்களே? என்று சொன்னால், விளக்கம் தெரியாது முழிப்பார்கள். ஒர்  இளம் பெண்ணிடம் சொல்வேன்: எனக்கு பத்து லட்சம் ரிங்ஙிட் பெருமானமுள்ள சொத்து இருக்கின்றது, அனைத்தையும் தருகின்றேன், ஆனால் நீ திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்றால், உங்கள் பணமெல்லாம் எனக்கு வேண்டாம் , நல்ல ஓர் ஆடவனோடு குடும்பம் நடத்தவே இருக்கின்றேன் என்பாள்! (எல்லாரும் இப்படி இல்லை) இப்படிப் பட்ட உளவியல் கூறுகளால்தான்  நம் விருப்பு வெறுப்புகளுக்கு மூலமாக நாட்டங்கள்  இருக்கின்றன என்கிறோம்.

 இதனை Freud  "instincts" என்பார்.

 இந்த நாட்டங்கள் இயல்பாகவே அமைந்திருக்கின்றன, கற்று அறிவன அல்ல. ஒர் பெண்மகளுக்கு தான் ஓர் தாய் ஆக வேண்டும் என்ற வேட்கை அவள் தாயாரைப் பார்த்து கற்றுகொள்ளும்  ஒன்று அல்ல -- பெண்ணாக பிறப்பெடுக்கும் போதே அதன் கூறாக அவ்வேட்கை  அமைந்துவிடுகின்றது, பருவம் வர உணர்வில் பட்டு தக்க ஓர் ஆண் துணையை நாட வைக்கின்றது. இத்தகைய நாட்டங்கள் பண்பாடுகளும் சுற்றுசூழல்களும் உருவாக்குவன அல்ல, மாறாக பண்பாடென   ஒன்று இருப்பதற்கு காரணமே இவைதான. வலுவான ஊந்தல்களாகிய இவை முறையான ஒழுக்கங்கள் வழி பூர்த்தியாகாவிட்டால், சண்டை சச்சரவுகள் வெட்டு குத்து கொலை என்றெல்லாம் தோன்றுகின்றன அல்லவா? பண்பாடென்பது இப்படிப்பட்ட இழவுகள் எழாவகை இந்த பேரூந்தல்களை அனைவரும் உடன்படும் வகையில் ஓர் நெறிபடுத்தற்குதான்.

 இனி நம் சித்தர்களின் இன்னொரு கண்டுபிடிப்பையும் நாம் இங்கு கருத வேண்டும். ஆன்மாக்களை பல்வேறு வகையில் செயல்பட வைப்பதாய், அவர்களது ஒழுக்கங்களை  நிறுத்துவதாய் இந்த நாட்டங்கள்  இருக்கின்றன்:  ஏன் இப்படி? எங்கிருந்து இவை வந்து என்னை ஆட்டிப்படைக்கின்றன? தப்பிக்க வழி இல்லையா? இந்த நாட்டங்களின்றி ஓர் சுதந்திரபுருடனாக என்னால்  வாழ  முடியாதா என்றெல்லாம் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இங்குதான் சித்தர்கள் நமக்கு உதவுகிறார்கள்.  நாட்டங்கள் இருக்க, அவற்றை தோற்றுவிப்பனவாக "நாடிகள்' இருக்கின்றன என்கிறார்கள். நாட்டங்களை உள்ளத்தில் விதைப்பன, புதைப்பன  இந்த நாடிகள் என்கிறார்கள்.

 இவற்¨றையெல்லாம் தொகுத்துக் காணுகையில் இவற்றை சுழுமுனை நாடி , இடகலை நாடி , பிங்கலை நாடியென்றும் மேலும் இவற்றிக்கு மூலமாகவும் மேலானதாகவும் குருநாடி அல்லது மேரு நாடி: திருமூலர்) என்றவொன்று இருப்பதாகும் கூறுகின்றனர். இந்த நாடிகள் உடம்பில் வெளிப்படும் வகையிலேதான்  நரம்பு மண்டலமும் மூளைப் பகுதியும் ஓர் ஆனமாவிற்கு அதன் உடம்பின் கூறுகளாய் அமைகின்றனவென்றும் கூறுகின்றார்கள்.  அத்தோடு அமையாது இன்னொன்றும் இருக்கிறது: அதுதான் மரணநாடி-- எல்லா நந்நாட்டங்களின் தோற்றுவாயாகிய மேற்கூறிய நாங்கு நாடிகளையும் செயலிழக்கச் செய்வது இந்த மரணநாடி (இது நான் கூறுவது- ஆணவ மலத்துண்மை வழி)

 பிங்கல நாடியாவது இன்ப அனுபவங்களை பெற்று  மகிழ உந்துவது. இடகலை நாடியாவது பகுத்துப் பகுத்துத் தெளியவேண்டும் என்னும் அறிவுவேட்கையை எழுப்புவது. சுழிமுனை நாடியாவது இறைமை வாழ்க்கைக்கு ஏதுவாயது; சுழிமுனை திறந்தால்தான் நுதல்விழி திறக்கும் , தெய்வ தரிசனங்கள் கிட்டும். குருநாடிச் செலவாவது  உலக பந்தங்களை  எல்லாம் துமித்து பெறவேண்டியது சிவஞானமே என்று ஞானவேட்கையில் ஒருவனை வீழ்த்துவது. சுழிமுனை நாடிச் செலவில் ஆணவமலம் துமிக்கப்பட, குருநாடிச் செலவில் திரோதகம் இறையருளால் போக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். இவை உலக மாந்தர் அனைவர் உள்ளத்திலும் ஏற்கனவே இருக்கின்றவைதான் என்றும் கூறுகின்றார்கள்.

 ஆங்கிலத்தில் இந்த ஆழ் நாட்டங்களை  psychotropism  என்பேன்.

 இவற்றில் மரண நாடியாவது ஆணவமல ஈர்ப்பின் எழுவது -- எல்லா உயர் நாட்டங்களையும் எழவொட்டாது தடை செய்து  மக்களை அஞ்ஞான இருளில் வீழ்த்துவது.  முடிவில் மரணதிற்கும் இட்டுச் செல்வது.

 மக்கள் முன்னேற்றம் என்பது  அவர்கள் உள்ளத்தில் மரணநாடி வலுவிழந்து கிடக்க, ஏனைய நந்நாட்டத்து நாடிகள் உறுதியாக இருப்பதால் வருவது. எதிர்த்து போராடும் வீரத்தை மனோவலிமையை மேலான நாடிகள் தர அதனை இழக்கச் செய்வது மரணநாடியாகும்

 தமிழ் பண்பாடு வீழ்ந்து கிடக்கின்றது ஏன் எனில்: தமிழன் உள்ளத்தில் மேலானான நாட்டங்கள் எழாவகை மரணநாடி வலுவாக இருப்பதால்தான். இதைத் தான் நானும் பகர்கின்றேன். புரியவில்லையா? முயன்று பாருங்கள்!

 (தொடரும்) 1.3.2

 உலகன்



2013/4/24 K. Loganathan <k.ula...@gmail.com>
...

[Message clipped]  

K. Loganathan

unread,
Apr 25, 2013, 9:04:16 PM4/25/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 16 :நாட்டங்களும் பார்வைகளும்

 நாட்டங்களின்றி பார்வைகள் இல்லை என்பது இன்னும் விளக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. கண்கள் இருக்க, அதில் பல விடயங்கள் புறவுலகிலிருந்து பதிந்தாலும், காண்பது அமையும் என்பதில்லை. அதுபொழுது கண்ணும் அதனோடு வரும் மூளையும் ஓர் பதிவானைப் போல, ஓர் redord-ஐப் போல விழுவனவற்றை பதிந்துகொள்ளும் ஆனால் பார்க்காது, காணாது. மனித மூளையும் இவ்வாறு செயல்படக்கூடிய ஓர் யந்திரம்தான். ஆனால் அதனோடு நின்றுவிட்டால், பார்வை என்ற ஒன்று சனிக்காது போகின்றது.

 விழும் விடயங்களில் சிலவற்றைத் தொகுத்து சிலவற்றை நீக்கிஅது' என்று சுட்டுணர்வாய் ஒன்றினை அறிய, பார்க்க அகத்தே ஓர் நாட்டம் வேண்டும். இதனால் நாட்டமின்றி பார்வைகள் இல்லை என்கின்றோம். அதனின் நாட்டங்கள் வேறுபட பார்வைகளும் வேறுபடுமன்றோ?

 இந்த நாடிகளில் முதல்மூன்று நாடிகள் பொறிலியலைப் பார்வையில் உண்டு. பிங்கலை நாடியாவது அகாரத்தால் ஆகவே விந்து மேம்பட்டு நிற்கின்ற திறத்தால் எழுவது என்பர் சித்தர்கள். இதேப்போன்று இடகலை நாடியாவது உகாரத்தால் ஆகவே நாததத்துவம் மேம்பட்டு நிற்கின்ற திறத்தால் எழுவது என்பர். இந்த இரண்டு தத்துவங்களின் ஆட்சி எப்போதும் ஒருங்கே அமைவதில்லை, பலவேறு வகையில் வேறுபடும்  என்றும் கூறுவர். எப்போது இரண்டும் இணைபிரியாது ஒருங்கிணைந்து செயல்படுகின்றனவோ அதுபொழுது சுழிமுனை நாடிச் செலவு என்றும் கூறி, இதுவே அகாரமும் உகாரமும் மகாரமாகிய மந்திரத்தால் இணைக்கப்பட்டு --ம் என ஓர் வகை ஓங்காரத்தின் வழி செயல்படுவது என்றும் கூறுவர்.

 இதனோடு மூளையை வகுப்புக்களுடையாதாய் அதனோடு உடலின் கூறுகளையும் இணைத்து பார்க்கவும் செய்கிறார்கள். மூளையின் வலப்பகுதி (right hemisphere)  விந்துவின் , பெண்மையின் அகாரத்திற்குரியது; இடப்பகுதி (left hemisphere) நாதத்தின் உகாரத்தின் ஆண்மைக்குரியது என்றும் கூறுவர்.  இவை கத்திரி சுழல்போல் எழுந்து மூளையின் வலப்பகுதி இடது கண்னையும் , இடப்பகுதி வலதுகண்னையும் ஆட்சி செய்யும் என்றும் அதேபோல, உடம்பின் வலப்பகுதி அதாவது வாமபாகம் பெண்மைக்குரியதாகவும், இடதுபாகம் ஆண்மைக்குரியதாகவும் காண்பர்.

பொறிலியப்பார்வையிலலேயே வலதுகண்ணின் பார்வையும் இடது கண்ணின் பார்வையும் வெவ்வேறு என்றும் ஓர் விடயத்தை விந்துவின் ஆடசி மிக்கிருக்கும் பெண்கள் பார்க்கின்ற விதமும்  நாதத்தின் ஆட்சி மிக்கிருக்கும் ஆண்கள் பார்க்கின்ற விதமும் வெவ்வேறு என்றும் கூறப்படுகின்றது! ஆக இரண்டு கண்களையும் ஒருங்கே செயல்பட வைத்துப் பார்க்கும்போதே, நாதமும் விந்துவும் ஒருங்கிணைந்து பார்வையை நிறுத்தும்போதே பார்க்கப்படும் பொருளின் மெய்யியல்பு காணவரும் என்பது தெளிவாகின்றது அல்லவா?

 இனி இவ்வாறே நூலியப்பார்வையிலும் நுதலியப் பார்வை போன்ற ஏனையப் பார்வைகளிலும் என்பதைக் காண்க. பிறகு இவை விரிவாக விளக்கப்படும்.

 ஆயினும் இப்பொழுதே முதல் மூன்று நாடிகளையும் கடந்திடும் போது அமைகின்ற குருநாடியைப் பற்றி , அதனின் தனியோர் இயல்பினைப்பற்றி சிறிது விளக்கித்தான்  ஆகவேண்டும்.

 நுதலியப் பார்வை வந்து அமைகின்றபோதே தெய்வ தரிசனங்கள் கிட்டுகின்றன என்பதைக் கண்டோம். ஆனால் அதன் புதையுருவாக இருக்கும் குருநாடி வந்தமையும் போது, இந்த சமய சமாச்சாரங்களை எல்லாம் கடந்து சுத்தமாகி பார்வையற்ற பார்வை அடையவேண்டும் என்றவோர் நாட்டம் வல்லிதாக அமைந்துவிடுவதின் சமயாதீதத் சிந்தனை உள்ளத்தை ஆட்கொள்கின்றது. உண்மைதான் வேண்டும் எவ்விதமான பொய்யும் அல்ல என்ற நாட்டத்தினை தருவது சிவப்பார்வை.  இதனால் தொடர் வளர்ச்சியாக வந்தமைவதே பரப்பார்வையும் அருட்பார்வையும் பிறகு அதன் முடிவாக எவ்வித சுட்டுமில்லாத பார்வையற்ற பார்வையுமாகும்.

 யாண்டு பரப்பார்வை வந்தமைகின்றதோ அதுபொழுது குருநாடிச் செலவு தொடங்கிவிட்டது என்று கொள்ளலாம்.  அறிவு எல்லாபேதங்களையும் கடந்துயாதும் ஊரே, யாவருங் கேளிர்' என்றவாறு செயல்படும். உலகில் நின்று நிலவும் எல்லா சமயங்களையும் மற்றும் ஞானங்களையும் தனது பாரம்பரியத்திற்கு உரியது அல்ல என்று ஒதுக்காது, அவை என்னதான் கூறுகின்றன, அதனையும் பாரத்துவிடுவோமே என்று பார்வையை இன்னும் இன்னும் பரந்ததாக்க யாவன் ஒருவன் ஓர் ஞானயாத்திரை புரிகின்றனோ அவன் இந்தப் பரப்பார்வைக்குரியவன் ஆகின்றான்.

 இதற்கு நல்லவோர் உதாரணம் நமது அருணந்தி சிவாச்சாரியார் தான். சைவசித்தாந்தை மற்றிலும் ஓதாது, சகலாகம பண்டிதராக விளங்கி அவர் காலத்திலல் விளங்கிய எல்லா சமயநூற்களையும் ஏன் திறன்பட ஓதி தெளியவேண்டும்? தனது குறுகியப் பார்வையை விரித்து விரித்து அதனை பரப்பார்வை ஆக்கவேண்டும் என்றோர் வேட்கை ஊந்தத்தானே இவ்வாறெல்லாம்?

 இந்த மரபு தமிழச் சமுதாயத்தில் மிகப் பழையது. தொல்காப்பியத்தில் தோன்றி மனிமேகலை நீலகேசி போன்ற நூற்களில் வளர்ந்து சித்தியார் சங்கற்ப நிராகரணம் போன்ற ஞான நூற்களில் இன்னும் வளர்ந்து 16ஆம் நூற்றாண்டின் மாபெருந் நூலாகிய “சிவப்பிரகாசப் பெருந்திரட்டு’ எனும் நூலில் முடிகின்றது.

 இதன் வழி இன்னொன்றும் தெளிவாகின்றது. சுட்டுப்பார்வைகள்  அனைத்தையும் போக்கும் திறத்தாக விளங்கும் இந்த பார்வையற்றப் பார்வை, இயல்பாகவே தனக்குள் ஓர் வசீகரத்தை ஈர்ப்பினை கொண்டிருக்கின்றது என்பதுதான். நமது அறிவின் ஆழத்திலே அது நமது சாத்தியக் கூறாக இருப்பதொடு மட்டுமில்லாது, “அதனை உனதாக்கிக் கொள்' என்றவாறு நம்மை அதன்பால் ஈர்த்துக்கொண்டே, இழுத்துகொண்டே இருக்கின்றது.

 இயல்பான சுட்டினைப்போக்கும் பார்வையற்ற பார்வையின் ஈர்ப்பின் வெளிப்பாடே இந்த நாடிகளும் என்பதோடு, இடகலை பிங்கலைக் கடந்து சுழிமுனை நாடியில் விழலும் பிறகு அதனையும் கடந்து குருநாடியில் விழுதலும் ஆகும்.  இதனால் தான் இந்த நாடிகளை ‘instinct' என்று கூறாது ‘psychotropism” என்கின்றோம். சரிதானே?

 தொடரும்

 உலகன்



2013/4/25 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 26, 2013, 11:25:33 PM4/26/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

 கட்டுரை 17: மேரு(குரு) நாடியும் அதன் எதிரியும்

 

நாம் படிப்படியாக ஆழஞ் செல்கிறோம். மாந்தர்கள் அனைவரும் எளிதில் உணரும் பார்வைகள் பல, அவற்றினால் எழும் அறிவுகள் பல.  இன்னும் ஆழஞ்செல்ல, பற்பல ஆசைகள் இருப்பதை,  உள்ளே நம்மை நாம் அறியாதே பல வகையான நாட்டங்கள் இருப்பதை,  சற்று ஒதுங்கி நம்மைப் பற்றி நாமே சிந்திக்க நாம் உணருகின்றோம். அதற்குமேல் சாதாரண முறையில் நம்மால் போக முடிவதில்லை. அறிவின் ஆழப்பாய்வு தம்பித்து நின்று விடுகிறது.  இங்குதான் யோகம் தவம் என்றெல்லாம் தேவை படுகின்றன. அருணந்தியார் சொல்வது போல யோகங்கள் செய்து மலங்களை வாட்டத்தான் இன்னும் ஆழஞ் செல்ல முடிகின்றது. இப்படிச் செல்லக் கூடியவர்களை சித்தர்கள் என்றும் அறிவர்கள் என்றும் ஞானிகள் என்றும் கூறுகின்றோம். இதனை ஓரளவாவது புரிந்துகொள்ளக் கூடியவர்கள் இவர்களை மதித்து அவர்களோடு சிந்திக்கின்றனர். முடியாதோர் விதண்டாவாதம் பேசி பகடிபேசி நிந்திக்கின்றனர். என்ன செய்வது?

 

இல்லையேல் அவர்களுக்கு தலைவெடித்து விடுமே!

 

இது இவ்வாறு இருக்க நாம் தொடர்ந்து செல்வோம்.

 

நாடி ஆதிகள் அனைத்தும் ஒரே திறத்தனவா என்ற கேள்வி எழ, அதற்குப் பதிலாக இது. ஓரளவு ஏற்கனவே விளக்கிவிட்டோம்  வேறொரு வகையில் மீண்டும்.

 

யார் பிங்கலைக் கடந்து இடகலைக் கடந்து இரண்டும் ஒன்றித்து இயங்கும் சுழிமுனை கடந்து அதற்கு மேல் விளங்கும் மேரு நாடி அல்லது குரு நாடிக்குக் வருகின்றார்களோ அவர்கட்கு எல்லா வேட்கைகளையும் போக்கும் சிவஞானம் கூடி வரும்.

 

மீண்டும் இங்கே வற்புறுத்துகின்றோம். இது அனைவருக்கும் உரியதாய் அவர்கள் அகத்திலே இருக்கின்றது, பிறப்பினால்  வரும் சாதிச் சழக்காடுகளைக் கடந்து, சமய பண்பாட்டு பேதங்களைக் கடந்து மற்றும் எல்லா வகை பேதங்களையும் கடந்து  அனைவருக்கும் உரிய ஓர் சாத்திதியமாக இருக்கின்றது.

 

இதுவோர் பொதுவியக் கூறு(a universal possibility)

 

ஆனால அப்படி இருந்தும் மிக அரிதாகவே மாந்தர்கள் ஞான நாட்டத்தில் குருநாடிச் செலவில் படுகின்றனர். அதிலும் எத்தனை பேர சுந்தரரைப் போல

 

1.
மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்

கற்றவர் தொழுதேத்துஞ் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே.

 

 

மற்றுப் பற்றுக்கள் யாதுமின்றி வேண்டுவதெல்லாம் மீண்டும் பிறவாமைத் தரும் சிவஞானமே என்று சாதாரணமாக ஏன் நம்மால் இந்த சுந்தரைப் போல இதேப் போன்ற இன்னும் பல ஞானிகள் போல  வாழ முடியவில்லை?

 

நம்மை மேலே ஏறவொட்டாது பிணித்திருக்கின்ற பாசத் தளைகள் தான் இதற்குக் காரணம. சைவர்கள் மிகத் திறம்பட இவற்றை ஆணவம் அதனின்று எழும் கன்மம் மாயை என்றெல்லாம் வகுப்பர். அத்தோடு பல நாடிகளில் நாம்  சாதாரணமாக இருக்க அவை நம்மை மேலே எறவொட்டாது தடுக்கின்றன என்றும் கண்டோம்.

 

நான் ஓர் அரசியவாதி. எனது நாட்டமெல்லாம் அதிகாரத்தை எல்லாம் எனதாக்கி எனக்கு எதிரியாக யாரும் இல்லாதவாறு ஆக்குவதுதான். நான் ஓர் கவிஞன-- கவிகளாகப் பாடிப்பாடொ உலகப் புகழ் பெறவேண்டும், பலரின் பாராட்டைப் பெறவேண்டும். நான் ஓர் ஆடலநன் -- பலவகையான ஆட்டங்களை ஆடி ஆடி நான் மகிழ்வதோடு பிறரையும் மிகிழ்விக்க வேண்டும் நான் ஓர் பாடகன் -- பாடிப் பாடி எனது குரல் இனிமையாலும் பண் பாடும்  திறத்தாதாலும் மக்களை உவக்கவைக்க வேண்டும்  நான் ஓர் சாமியார்- என் அடிமைகளாக ஓர் பெருங்கூட்டத்தைப்ற்று நான் அவர்கட்கு கடவுளாகவேத் தோன்ற வேண்டும்.

 

இப்படி உலகியல் இழுப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இவற்றையெல்லாம் ஓரளவு அனுபவித்து பிறகு உவர்ப்புத் தட்டத் தானே இவற்றைக் கடந்து மேலே போக முடியும்?

 

ஆக நாம் இங்கு நாட்டங்களை நிறுத்தும் இந்த நாடிகளைப் பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டியவர்கள் ஆகின்றோம். அதனால்  சிவதத்துவங்களாகிய நாத விந்துக்களையும் கொண்டுவரவேண்டியதாகின்றது.  மேலே விரித்தவாறு விந்துவின் ஆட்சியில் எழுவது பிங்கலை நாட்டம், நாதத்தின் ஆட்சியில் எழுவது இடகலை நாட்டம், இரண்டும் ஒருங்கே ஈர்க்க அதனின் எழுவது சுழிமுனை நாட்டம்.  அதற்கு மேல் தான் மேரு அல்லது குருநாடி வருகின்றது.

 

அப்படியானால் இப்படிப்பட நாட்டங்கள் யாதும் எழவொட்டாது மக்களைக் கீழே தள்ளி அற்பர்களாக்கும் மரணநாடி எங்கிருந்து வருகின்றது?

 

 

இங்கு  வேதாந்தங்கள் அனைத்தும் வீழ சைவ சித்தாந்தமே உதவுகின்றது. ஆணவமலத்தின் ஈர்ப்பால் எழுவது மரணநாடி என்ற விளக்கம் அங்குதான் உண்டு.

 

இதனைத்தான் Freud அவர்கள் thanatos  என்கிறார். நாம் விரும்புகின்றோமோ அல்லையோ நமக்கு மரணத்தை தருவது மற்றும் கீழான அவத்தைகளை கேவலாவவத்தைகளைத்  தருவது இதுதான். பிறகு இது இன்னும் விரிவாக ஆராயப்படவிருக்கின்றது.

 

அப்புறம் எப்படி இந்த குருநாடியின் எழும் சுத்தசிவஞான நாட்டம்?

 

இப்பொழுது நாதவிந்துக்களின் ஆட்சிகட்கு அப்பால் செல்வதால் வருவது என்று மாத்திரம் சொல்லி பிறகு இதனை பெரிதும் விளக்குவோம்.

 

பிங்கலை நாட்டம் இன்பத்தூய்ப்பிற்குக் காரணமாகி அதனை அடைவான் வேண்டி பற்பல உலகியல் வினைகளை ஆற்றத் தூண்டும். இந்த நாட்டங்களில் மிக ஆழமானது காமயின்ப நாட்டமாகும். உலக வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற நினைவைத் தருவது இதுதான். ஆயினும் இப்படிப்பட்ட நாட்டங்களினால் எழும் வினைகள் எல்லாம் சுட்டறிவினோடு ஆகவே உலகியல் காலவுணர்வோடும் வருவன என்பதால் காலக் கழற்சி மெய்யாகுவதில்லை. இதனால் இத்தகைய இன்ப நாட்டங்கள் பசித்து உண்பானிற்கு விடாது பசி தொடர்வது போல, இந்த வேட்கையும் விடாது தொடரும்.

 

இதனோடு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இந்த இன்ப நாட்டமும் ஆணவமலத் தாக்கத்தால் கீழ் படுதலும் உண்டு.  உடல் இன்பத்தையேக் கருதி அதனை வாணிபம் ஆக்குவோர் ஆணவமலத் தாக்கத்தினர். கட்டுப்பாடற்ற முறையில் கற்பு நெறி ஓர் சிறிதும் போற்றாது கழிகாமவெறி பிடித்து அலைவோரும் இத்தகையோர். தொல்காப்பியர் இப்படிப்பட்ட கீழான ஒழுக்கங்களைத் தான் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் தள்ளினார், பண்பாட்டிற்கு ஒவ்வாதவை என்றெல்லாம் கூறி வாழ்க்கையை நெறி படுத்தினார்.

 

காமவேட்கை ஆணவமலத் தாக்கத்தால் ஓர் வெறியாக பரிணமிக்க வல்லது. அதனால் பண்டு தொட்டே திருமணம் என்பது முறைப்படுத்தபட்ட சடங்கு பூர்வமான ஒன்றாக வளர்ச்சியுற்றது.

 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தர் கரணம் என்ப

 

என்று குமுகாய உளவியல் கருத்தோடு ஆழச் சிந்தித்து தொல்காப்பியர் சொல்லவில்லையா?

ஆயினும் இன்றைய தமிழர்களில் ஒருசாரார் இந்த சூத்திரத்தைப் படித்ததும் என்ன சொல்வார்கள்? இந்த ஐயர் என்ற ஆரியன்தான் மந்திரமோதி முறைப்படி திருமணம் செய்துகொள்வதைக் கொண்டு வந்தான், தூய திராவிடப் பண்பாட்டை ஆரியமய மாக்கிவிட்டான் ஆக முறைப்படி சடங்கு பூர்வமாண திருமணம் தேவையில்ல, அதுதான் தமிழ் பண்பாடு என்பர்.

 

தமிழ் ஐயரை இவர்கள் ஆரியர் ஆக்குவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  பெரியார் மொழியில் எல்லாம் சுத்த வெங்காயம். ஐயர்கள் தமிழ் சான்றோர்கள், ஆழறிவு தந்த தெளிவின் திருமணத்தை முறைப்படி நடக்கின்ற ஓர் விசயமாக்கி வாழ்க்கையையே நந்நெறி படுத்தினார்கள். ஐயா என்ற சொல் மூலத் தமிழாகிய சுமேருத் தமிழில் உண்டு,

 

ஆரியன் என்ற சொல்லும் அங்குண்டு. அது இனத்த்சி சாதியைக் குறிக்காது உயர்வையேக் குறிக்ககும். தமிழனாகிய சூல்கி தனனையே ஆரியன் என்று கூறிகொள்கின்றான.

 

இதை அடுத்து நாதத்தால் வரும் வேட்கைகளையும் பிறவற்றையும் பிறகு காண்போம்

 

(தொடரும்) 1.4.1

 

உலகன்



2013/4/26 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 27, 2013, 11:12:17 PM4/27/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 18: மேரு(குரு) நாடியும் அதன் எதிரியும்-2

 மேலே இன்ப நாட்டத்தை அகத்தே பதிவு செய்யும் பிங்கல நாடி, சிவ தத்துவங்களாகிய நாதம் விந்து என்ற இரண்டில் ஒன்றாகிய விந்துவின் தாக்கத்தால்ல் எழும் அது,  எவ்வாறு ஆணவ மலத் தாக்கத்தால் இழிந்து மிகவும் கேவலமான கழிகாம வெறிக்கு இட்டுச் செல்வதோடு இன்னும் ப்ல மனநோய்கக்ட்கும் உடல் நோய்ககட்குக் இட்டுச் செல்லும் என்று கண்டோம்

 ஆணவ மலத் தாக்கம் அதிகமாக எங்கு இருக்கின்றதோ ஆங்கெல்லாம் இவ்வாறான மரணாவத்தைகள் தோன்றி பல அவலங்களை அநுபவிக்கத்தரும்

 இது அதிகாரவேட்க்கையத் தந்து பிறரை அடக்கிக் கீழே வீழ்த்தி தான் உயரவேண்டும் எல்லா அதிகாரங்களையும் தன் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையை எழுப்பும் நாத தத்துவத்தின் ஆட்சியில் செயல்படும் இடகலை நாடிக்கும் பொருந்தும்.

 இந்த வேட்கையை தொல்காப்பியர் உணர்திருந்ததாகத் தெரிகின்றது,  புறத்திணைகளின் ஒன்றாகிய வாகைத் திணையை விளக்க வரும் போது

 வாகை தானே பாலையது புறனே

தாவில் கொள்கை தத்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப

 தான் கொண்டிருக்கும் கோட்பாடுகளை மிகுதிப்படுத்தி பிறவற்றைவிட உயர்ந்தது என்று சாதித்து வெற்றி கொள்ளல் வாகை சூடுதல் என்ற துறையின் பொருளாகும். இப்படிப்பட வேட்கைகள அனைத்த்தும் அகத்தே நாதத் தத்துவம் உறுதியாக இருக்க நாட்டங்கள் அனைத்தும் இடகலை நாட்டங்களாக இருக்க எவ்வாற்றினும் பிறரை வீழ்த்தி வென்று வாகை சூடுதலே நோக்கமாக இருக்கும்.

 இனி இந்த ‘நாதம்’ என்ற சொல், சுமேருத் தமிழில் ‘நீத’ என்று வந்து ஆண்மையைக் குறிக்கும். ஆக நாதத்துவம் ஆண்மைக்குரிய இலக்கண்மாக பண்டே கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிகின்றது. ‘நாதன்’ என்றாலே தலிவன் ஆண்மகன் என்றுதானே பொருள்?

 ஆனால இங்கு ஓர் சிக்கல் உண்டு.

 நல்ல அறம் பிழையாது போராடும் வீரனுக்கும், நீதி நேர்மை என்றெல்லாம் பாராது எப்படியாகிலும் தான் வெற்றி அடையவேண்டும் எனும் நோக்கின் ஓர் அரக்கனுக்கும் வேறு பாடு உண்டே? ஏன் அது? எப்படி அது?

 மீண்டும் சைவத்தின் இந்த அநாதிப் பொருளியலில் ஓர் கூறாக விளங்கும் ஆணவ மலத்துண்மை நமக்கு உதவுகின்றது. நீதி நேர்மையோடு போராடுவது அகம் சுத்தமாக உள்ளவர்கள் போராடும் நெறி- அகத்திலே ஆணவம் செறிந்து அசுத்தமான உள்ளத்தினர் போராடும்ந நெறி அநீதியாகிய அறத்திற்குப் புறம்பாகிய மறநெறி. அழுக்கு நெறி.

 பொதுவாக ஆணவ மலம் அகத்தே செறிந்து மக்களது உள்ளத்தை அசுத்தமான ஒன்றாக அழுக்குப் படிந்த ஒன்றாக ஆக்கிவிட்டால், இன்ப நாட்டமும் கழிகாம வெறியாக கீழிறங்கிவிட, உயர வேண்டுமெனும் வேட்கையும் பிறரை எவ்வகையாலும் கீழே வீழ்த்தி வெற்றி கொள்ள வேண்டும் எனும் வேட்கையாக விழும். சமுதாயமே பொல்லாதவர்களின் தீயவர்களின் அரக்கர்களின் சமுதாயமாக ஆகிவிடும்.

இது மட்டிலுமா?

 இதைவிட இன்னும் மோசமான நிலைகளும் உண்டே? அவை யாவை என்பதை அடுத்தக் கட்டுரையில் காண்பம்

 அதற்கு முன்பு ஓர் கேள்வியையும் கேட்டு வைக்கின்றேன்.

 பாரதத்தில் வேதாந்த தாக்கந்தான் எங்கு பார்த்தாலும். மகான்கள் சாதுக்கள் அனைவரும் வேதாந்திகளாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆத்ம ஞானம் என்றவாறு சாங்கீயத்தின் முக்குண பிரகிருதி அடிப்படையில் ஏதோ சொல்ல முயல்கின்றாகளேத் தவிற, அதற்கு மேல் சென்று அநாதிப் பொருளியலை திறம்பட நம் மெய்கண்டார் போல நிறுத்தி அதன்வ்ழி மானிட இயல்புக்ளை இப்போது நாம் இங்கு விளக்கும் வகையில் நாத விந்துக்கள் வழியும் பாசங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்றவாறும் விளக்குவது இல்லை.

 வேதாந்திகளால் ஏன் ஒருவன் கழிகாம வெறியன் ஆகின்றான, நீதி நியாயம் என்றெல்லாம் பாராத  ஓர் அரக்கன் ஆகின்றான் என்று விளக்க முடியாது. இந்த துப்பு இல்லாது ஓர் தரிசனம் எல்லா ஞானிகளாலும் போற்றப்பட அந்த துப்புள்ள திறன் உள்ள மெய்கண்டாரியம் ஏன் பரவலாக மக்களால் அறியப் படாத ஒன்றாக இருக்கின்றது?

 தொடரும்

 உலகன்

 

  

 

 

  



2013/4/27 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 28, 2013, 10:35:44 PM4/28/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 19 : இலயித்தது மலத்தால்

 பண்பாடுகள் செழித்து உயர்ந்து பின் தாழ்ந்து சென்று அழியவும் செய்கின்றன. இந்த் நெடிய உலக வரலாற்றில் நிரந்தரமாக  எந்தப் பண்பாடும் நாகரீகமும் இருந்ததாகத் தெரியவில்லை, அனைத்துமே அசத்து- தோன்றி  நின்று அழியும். இந்த உலகம் பொய்யல்ல , கற்பனை அல்ல, என்றும அழியாது சுடர்ந்தவாறு இருக்கும் பரபிரமத்தின் மேல் நாம் திணிக்கும் கற்பிதங்கள் அல்ல. இல்லது தோன்றாது. உள்ளதாகிய உலகில் உள்ள அனைத்தும் தொன்றி நின்று அழியம் இயல்பிற்று.

 இந்த உண்மையை எப்படி நிறுத்துவது என்று கேட்டால என்ன சொல்வது? உலகத்தை பார் அது தெரியும் என்றுதான் கூற முடியும். ஆனால் அதிலும் சிக்கல் உண்டு. ஒருவன் பொறிலியப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டிருந்தால் உலகின் ஆழத்தில் உள்ளே உள்ளே ஓர் பெரும் சித்துப் பொருள் நின்றவாறு அழியும் உலகினை மீண்டும் மீண்டும் தோற்றியவாறு இருக்கின்றது அதனால இந்த உலகமும் அதில் நம் வாழ்க்கையும்தொடர்கின்றது  என்று உண்மையை உணரமுடியும் என்கின்றார் மெய்கண்டார்.

 நாம் ஏற்கனே விளக்கிவிட்டவாறு பொறிலியப் பார்வைக்கு மேற்சென்று நூலியப் பார்வையிலாவது உலகைப் பார்க்க வேண்டும் அது பொழுதுதான் இந்த பேரண்டமே இரட்டுருவின் ஓர் பெரும் நூலாகத் தோன்றி காணவரும் புறவுறுவிலிருந்து காணவரா புதையுருவினைக் கண்டு அங்கு அழிவிற்குக் காரணமக ஆணவ மலம் இருக்கின்றது அதனைக் கண்டித்து இறைவன் அடக்கி ஆண்டு தன் சக்திகளைப் பாய்ச்சத்தான் உலகம் தொடர்ந்து இருக்கின்றது நாமும் ஓர் உடல் பெற்று வாழ்கின்றோம் உயிர்த்தவாறு பல செய்து கற்று அஞ்ஞானம் போக்குகின்றோம் என்றெல்லம் அறிய வருவோம்

 இந்த பரந்து பேரண்டமே நாம் வாழும் இந்த உலகமே. நாடு நாடுகளாக நாம் நம் அணுத்துவத்தால் பிரித்து பிரித்து உரிமை கொண்டாடி அரசியல் ஆடும் நாம் சற்றே உயர்ந்து நாடு என்ற பிரிவுகளை எல்லாம் மறந்து, இந்த உலகையே நூலாகக் கொண்டு, மறை நூலாக சுருதியாக என்றும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும் ஞான நூலாக நாம் கண்டால், எல்லா வீழ்ச்சிகட்கும் அழிவுகட்கும் மரனத்திற்கும் காரணமாக இருக்கும் ஆணவ மலத்தையும் அதனைக் கண்டித்து அடக்கி வைக்கும் இறைவனது திருத் தாண்டவத்தையும் காணமுடியும்

 “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்பது ஞானத்டின் ஓர் நல்ல எல்லை.  ‘நான் தான் எல்லாம், எனக்கே எல்லாம்” என்பது அதன் எதிர் எல்லை, முன்னது உயர்ந்து ஆணவமலம் கடிந்து அணுத்துவத்தைக் கெடுத்து பரத்துவம் எய்திய நிலை, பின்னது ஆணவமலத்தை அகத்தேச் செறியவிட்டு அறிவும் அணுத்துவப்பட்டு, தன்னை ஓர் மிகச் சிறிய வட்டத்திற்குள் சிறைசெய்து குறுகுவது. தன்னை ஓர் சாதிக்குள் இனத்திற்குள்  அடக்கி பிறகு அந்த சாதிக்குள்ளும் பல கிளைச் சாதிகளை உண்டாக்கி, அவற்றிலும் தன் சாதியை உயர்த்தி பிறசாதிகளை கீழ் தள்ளி பரத்துவமும் பொதுத்துவமும் ஓர் சிறிதும் தோன்றாவகை வாழ்ந்தால் அந்த பண்பாடு நிச்சயமாக அழியும் -- சங்கார காரணனாகிய இறைவனே அழித்து விடுவான். இல்லையேல் எவ்வாறு புதியதாக் ஓர் நல்ல பண்பாட்டை நாகரீகத்தை உண்டாக்குவது?

 இப்படிப்பட்ட கருத்துகளை எல்லாம் என்னால் கீழ்வரும் மெய்கண்டாரின் வெண்பாவில் காண்முடிகின்றது, வியந்து மகிழவும் முடிகின்றது. ஞானிகளில் மிகச் சிறந்து ஞானியாகவும் மெய்கண்டார் சுடர்கின்றார்,

 இந்த வெண்பாவையும் அதற்கு நான் எழுதிய உரையையும் இங்கு தருகின்றேன் படித்து மகிழுங்கள். வியந்து மெய்கண்டாரை உளமார பாராட்டுங்கள்

 >>> 

 எடுத்துக்காட்டு 1.2
       
இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால்
       
இலயித்தவாறு உளதாக வேண்டும் --- இலயித்தது
       
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
       
அத்திதியும் ஆதியும் அங்கு

இதன் பொருள்:


இலயித்ததாம் மலத்தால்:
       
மூவினைப் படுவதாகக் பொறிலியக் கண்ணிற்குப் படும் இவ்வுலகு, நூலியக் கண்ணிற்கு இலயிப்பதாய், மீண்டும் உண்டாகித் தொடர்வதாய்த் தோன்றும். மலம் என்ற ஒன்றாலேயே இந்த இலயிப்பு நடைபெறவேண்டும் என்பது.
       
இது ஏனெனில், இலயிப்பு என்பது எல்லா மலர்ச்சிகளையும் ஆகவே ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி சுத்த அணுவாக்கி குருடாக்குவது என்பதால் என்க.

இலயித்த தன்னில், இலயித்தவாறு உளதாக வேண்டும்:
       
பொறிலியப் பார்வைக்கு உலகம் தொடர்வதாகவே படுகின்றது என்பதால், எப்பொழுது இவ்வுலகு இலயிக்கப் படுகின்றதோ அதே பொழுது இலயித்தவாறே மீண்டும் உளதாகித் தொடரவும் வேண்டும். ஆகவே  நிமித்த காரணமாக நின்றுவொன்று மாலத்தைத் துமித்து  தனது அருளால் மீண்டும் அதனை இலயித்தவாறே   உளதாக்கவேண்டும் என்பது. இல்லையேல் பொறிலியப் பார்வையின் தொடர்ச்சி உணர்வும் மெய்யாகாது போம் என்றவாறு
       
இனி இவ்வாறான நூலியப்பார்வை தேவையிலை, பொறிலியப்பார்வையே போதும், ஆகவே நிற்பதாகிய இவ்வுலகிற்குள்ளேயே, அது முற்றிலும் நசித்துவிடும் இயல்பும் இருக்கும் என்பதாகவும் சிலர் கூறுவர். திருமாலியத்தினர் இவ்வாரானவர்கள என்றுந் தெரிகின்றதுஅதனையே இங்கு வழிமொழிந்து மறுக்கின்றார்.

 
இலயித்தது அத் திதியில் என்னில்:


       
உலகமே ஒடுங்கி அணுவாகி நிற்பது பொறிலியக் கண்ணிற்கு வரும் மூவினைப்படும் உலகின் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில்;
 
அழியாது:

 
       
பொறிலியக் காட்சிக்கு ஒன்று அழிய பிறிதொன்று தோன்ற என்றவாறு பலவாக நிற்பதில் கருத்தூன்றியேப் பற்றி நின்று அதன்வழி ஒன்று இருக்க, பிறிதொன்று அழிவதை காணமுடியுமே ஒழிய , உலகமே முற்றிலும் ஒடுக்கப்படுவதைக் காணமுடியாது. காலவுணர்வின்றியும் திசையுறுவெளியின்றியும் பொருள் நுகர்ச்சி பொறிலியக் கண்ணிற்கு இல்லை என்பதால், ஏதாவதோர் வகையில் கால இட உணர்வும் இருக்கவே வேண்டும் என்பதால், உலகம் முற்றாக ஒடுங்காது இப்பார்வைக்கு என்பதாம்.

அவை அழிவது:

       
இப்படி பொறிலியப் பார்வைக்குத் தோன்றினும், குறிப்புக்கால காலவுணர்விற்றாகிய  நூலியப் பார்வைக்கு இந்த உலக  இலயிப்பு காணக்கூடிய வொன்றாகும்.

இது எப்படி என்னில், நூலியப் பார்வையில்  ஓர் ஆன்மா மாட்டு எழும் பொருள் உணர்வு அதனை ஓர் நூலாக, இரட்டுருப் பொருளாகவே காணத்தரும். புறவுருவொன்றினைக் காட்டி அதன்வழி அப்பிரகாசமாக இருக்கும் (concealed reality) புதையுருவினைக் காட்டி காண்போனின் அகத்திருக்கும் அறியாமை துன்னிருளைக்  காட்டி நிற்க, அதனை உணரும் அவன் அந்த அறியாமையை போக்கவேண்டும் என்ற முனைப்போடு எழ, ஓர் உறுதி நாட்டமும் சித்திக்க அதனோடு குறிப்புணர்வும் எழ, குறிப்புக் காலவுணர்வும் உதிக்கின்றது. புதையுருவாக நிற்பது மறையாகத் தென்படாது போக, இந்தக் குறிப்புக்காலவுணர்வும் தோன்றாது. இதன்வழி தன்னுள் அறியாமைத்துன்னிருள் இருப்பதாலேயே குறிப்புக்காலவுணர்வு தோன்றுகின்றது, அதுவே பொறிலியப்பார்வையின்போது சுட்டுக்காலவுணர்வாகத் திரிகின்றது என்றும் காலவுணர்வின் தோற்றத்தை அறிகின்றோம்.   இனி இவ்வாறு நூலியப் பார்வையிலேயே நிற்க, தன் அறிவோடு அறியாமை இருளும் இருக்கின்றது , ஒளியோடு இருளையும் தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். அந்நிலையே ஒடுங்கி அணுவாக இருக்கும் நிலையாம். தனக்கு அதுவாக இவ்வுலகிற்கும் அது மெய்யானவொன்றே என்று, அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்று இத்தன்மையோன் உணர்வான் என்பதாக ஆசிரியர் குறிப்பாய் உணர்த்துகின்றார்.

அத்திதியும் ஆதியும் அங்கு:

       
இனி இவ்வாறு உலகவொடுக்கம் உண்மையாக, அது விரிந்து கிடக்கும் அனைத்தையும் அணுவாக்கிச் சுறுக்கி விரிவையும் ஆகவே உயிர்கட்கு பார்வையையும் போக்குவது என்பதால், இது இவ்வாறான அணுத்துவத்தைத் தரும் ஆணவமலத்தாலேயே ஆகக்கூடியது, அதனை தொழிற்படுத்தி உலகத்தை ஒடுக்கும் சங்கார காரணனாகிய ஒரு  முதலே, இனி இவ்வுலகு உதித்து நிற்பதற்கும் மீள மீள உளதாதற்கும் காரணமாக நின்று தனிமுதல்வனாக தற்பரனாக நிற்கும் என்றது.

 >>> 

 இதுவெல்லாம் ஏன் இங்கு?

 இன்றைய தமிழ் பண்பாடு அனுத்துவப் பட்ட பண்பாடு, நாத்திகமும் பொய் மதங்களும் காவி உடுத்திய பொய் சாமியார்களும் இருக்கின்ற தெளிவையும் பரிக்கின்ற வேதாந்தங்களும்  ஏற்கனவே இருந்த பரத்துவச் சிந்தனைகளை எல்லாம் போக்கி ‘ஒன்றே குலமும் ஒருவனேத் தேவன்’ என்பன போன்ற வாக்குகளை எல்லாம் அற்பமாக்கிக்விட்ட பண்பாடாகவே இன்றையப் பண்பாடு எனக்குத் தோன்றுகின்றது.

 இதனை உணர்த்டதினால்தானே அதிலிருந்து விடுபட வேண்டும் உயர்ந்து உயர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கமும் பிறக்கும்?

 தொடரும்

 உலகன்

 




2013/4/28 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 29, 2013, 10:43:54 PM4/29/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

கட்டுரை 20: நாம் யார்க்குங் குடி அல்லோம்

 

பண்பாட்டின் மக்களின் ஓர் நாகரீகத்தின் வீழ்ச்சியின் மூல காரணம் ஆணவ மலமே, அனைதையும் கீழே இழுத்து முடிவில் அழித்து இல்லாது பொக்கும் யமதர்மனின் வாகன்மான இந்த எருமையே என்று அறிந்தவுடன், அதிலிருந்து தப்பிக்க ஓர் வழியும் கிடைத்து விடுகின்றது அல்லவா?

 ஆனால் என்னதான் அந்த வழி? மகிசாசுரமர்த்தினியாகிய துர்கைக்கு பூசையா?

 இது போன்ற பூசைகள் தேவைதான் ஆனால் அதற்கு மேல் ஆணவமலத்தால் வரும் ஞான அந்தகாரத்தைப் போக்கக் கூடிய வழி யாதென்று கண்டு நாம் அதனைப் போற்ற வேண்டும். அந்த வழிதான் என்ன?

 இருளைக் கடிவது ஒளி என்பதுபோல அகத்துச்  செறியக் கூடிய மலத்தால் வரும் ஞான அந்தகாரத்தை போக்க, அனைவர் உள்ளத்திலும் ஞானச் சுடரை வளர்க்க வேண்டும் தக்க போதனாமுறை வழி எல்லார் அகத்தும் ஞாவொளி சுடர்வது மாத்திரமின்றி அது இன்னும் இன்னும் பிரகாசமாகிக் கொண்டே இருந்தால்தான் ஆணவ மலம் அண்டாது, எருமை வாகனம் ஏறி எமதர்மனும் வந்து உயரைக் கவ்விச் செல்ல அஞ்சுவான.

 ஆனால் சரியான உடன் நல் விளைவுகளைத் தரவல்ல போதாவியல் தான் என்ன?

 ஆதி சங்கரரும் அவரைத் தழுவி வேதாந்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வரும் சாதான சதுட்டயமா? வேதப் பாராயணம் கேட்டல் அவற்றை மனப்பாடம் செய்தல் ஆழச் சிந்தித்தல் வைராக்கியமாக இருந்து வேறொன்றையும் நாடிச் செல்லாதிருத்தல் போன்றவற்றை செய்தால் அகத்தே அனைவர் உள்ளத்திலும் ஞானப் பிரகாசம மலர்ந்து விடுமா?

 இல்லை எல்லா ஆகமங்களும் கூறுவது போல அரைய கிரியை யோகம் ஞானம் போன்ற செயல்களில் ஈடுபாடு காட்ட வேண்டுமா?

 நிச்சய்மாக் இல்லை, வேதங்களிலிருந்து ஒரு சுலோகமும் அறியாதவனும் பல நாடுகளின் நல்ல ஞானியாக எழுந்துள்ளான்.  இவ்வாறு கோயில்களே இல்லாத பண்பாடுகளிலும் நல்ல ஞானிகள் உண்டு.

 ஆக அனைவருக்கும் பொதுவாகிய ஓர் சாதனம் தான் யாது?

 இங்குதான் நம் அப்பர் பெருமான் உதவுகின்றார்.

 இறைவன் தான் யார்க்கும் குடி அல்லாதவன் அவனை நெருங்கினால்தான் அகத்தே ஞனபிரகாசம் தானே மலர்ந்திடும் ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ இருளும் உயிரை நெருங்காது.

 தான் யார்க்கும் குடியல்லாத சங்கரனின் நெருக்கத்தை, தான் யார்க்கும் குடியலாத் தனமையே வளர்க்கும், ஒவ்வொரு ஆன்மாவின் சுயத்தை மீட்கும் அதன் சுதந்திரத்தை வளர்க்கும் ஓர் போதனாமுறையே ஈட்டித் தரும்.

 அடிமைத் தனத்தை வளர்க்கும் எந்த சமய சாதனமும் பயனின்றி விழும், பண்பாட்டின் சிதைவுக்கும் அழிவுக்கும் வித்திடும்.

 அதுதானே இப்பொழுது தமிழ் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது?

 காவி உடுத்தி சாமியாராகத் திரியும் பெரும்பாலோர்,  அடியார்கள் அனைவரும்  தனக்கே அடங்கி அடிமையாகி இருக்க வேண்டும் தன்னையே இறைவனாக நினைத்து தனக்கே உடல் பொருள் ஆவி அனைத்தையும அர்ப்பணிக்க வேண்டும் என்றல்லவா நினைக்கின்றார்கள்?

 இவரகட்கு ஏற்ப பெரும்பாலான மக்களும் இவ்வாறு ஒருவனுக்கு அடிமைப் பட்டு கிடத்தலையே விரும்பி அதுவே தக்க வழி என்று நினைத்து தன் சுயத்தை வளர்க்காது இப்பேற்ப்பட்ட சாமியாரகட்கும் இழக்கின்றார்கள்.

 அடிமை படுத்துபவன் உள்ளத்திலும் அடிமைப் படுகின்றவன் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்க மாட்டான் என்பதொடு அங்கே ஆண்வ மலத்தை விரட்டும் ஞானப்பிரகாசமும் சுடராது.

 பண்பாட்டு வீழ்சியின் முதன் படியே இப்படிப்பட்ட சுயத்தின் இழப்புதான். இன்றையத் தமிழர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இதனை நினைக்க மிகவும் வேதனையாகவும் இருக்கின்றது.. இதனால்தான் போலும் உலகிலேயே முதன் முதலில் மனித சுயத்தைப்பற்றி மிக ஆழமாக சிந்தித்து முழங்கிய அப்பர் பெருமானின் “நாம் யாருக்கும் குடி அல்லோம்” எனும் பாடல் போற்றுவாரின்றி வாளே கிடக்கின்றது. இளமை காலத்திலேயே எனை ஈர்த்து எனை சைவன் ஆக்கிய அந்தப் பாடலை இங்கு தருகின்றேன்-- அனைவர் உள்ளதிலும் அது ஆழப் பதிய.

961.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
   
நரகத்தில் இடர்படோம் நடலை  யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
   
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
   
சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
   
கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே

naamaarkkung kudiyalloom namanai yanjcoom
    narakattil idarpadoom nadalai illoom
eemaappoom piNiyaRiyoom paNivoo malloom
    inbamee yennaaLun tunba millai
taamaarkkung kudiyallaat tanmai yaana
    cangkaran cangkaveN kuzaiyoor kaatiR
koomaaRkkee naamenRum miiLaa aaLaayk
    koymmlarcee vadi iNaiyee kuRukinoomee

ஓர் சிறிய நாட்டின்   தலைவனாக இருக்கும் யாருக்கும்  அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம்,   அவ்வாறு செய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்;   பலவித தண்டனைகள் கொடுத்து  வாழ்க்கையை நரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்எச்சூழ்நிலையிலும்   மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம், எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லைஇவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம்  தாம் யார்க்கும் குடியல்லாத  சர்வ சுதந்திரத் தன்மையான   அர்த்தநாரீ வடிவத்து வெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது  மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக
 
Meaning

No one is subject to anyone and we shall NOT fear the God of death
    We shall not suffer the fire of Hell and any kind of misfortunes
Forever in self dignity and free of ailments , we shall NOT submit to anyone
    There is only happiness and no sufferings at all for
We have become totally people of unredeemable  servitude to the King of Supreme Autonomy
    Who wearing in one ear the brilliant white conch,  appears as the Sangkaran, the redeemer of all
And have submitted ourselves to  His FEET of fresh blossoms
 
naamaarkkung kudiyalloom: No one is subject to anyone

namanai yanjcoom: we shall not fear  even the God of Death

 narakattil idarpadoom : We shall NOT suffer the  fire of Hell

nadalai illoom: we are free also from any kind of misfortunes

eemaappoom piNiyaRiyoom:  forever in self dignity and free of ailments

paNivoo malloom : and we shall NOT submit to anyone

inbamee yennaaLun tunba millai: there is only happiness and no sufferings at all

taamaarkkung kudiyallaath tanmai yaana : BEING who as the KING is supremely autonomous

cangkaran cangkaveN kuzaiyoor kaatiR: The Sangkaran , the redeemer of all wearing a brilliant white conch in one of His ears

koomaaRkkee naamenRum miiLaa aaLaayk: to this KING we have become totally people of unredeemable servitude

koymalar ceevadi iNaiyee kuRukinoomee : have submitted ourselves to His FEET of fresh blossom

 ஒவ்வொரு உயிரும் ‘நாம் யார்க்கும் குடி அல்லோம்’ என்றவாறு முழங்கி தன் சுயத்தின் மீட்சியை மகிழும் வகையில் யாண்டு போதனா முறை அமைகின்றதோ ஆண்டே அனைவர் உள்ளத்திலும் ஞானம் வளரும் பண்பாட்டின் சிதைவும் இல்லாது போகும்

தொடரும்

 உலகன்

 

 

 



2013/4/29 K. Loganathan <k.ula...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages