நான்மணிக்கடிகை

575 views
Skip to first unread message

சீனுத்தாத்தா

unread,
Jul 25, 2011, 2:23:34 PM7/25/11
to மின்தமிழ்
மதிப்பிற்குறிய வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு துடங்குகிறேன்.
ஒரு வாராக நாலடியாரை ஒவ்வொரு தலைப்புகளாகத் தனித்தனியே
'மின்டமிலில்' (mintamil) (உரைகளுடன்) பரிசுரித்து முடித்துவிட்டு
சு்ம்மாயிராமல் 'பதினென்கீழ்க்கில் மூன்றாவதான் "நான்மணிக்கடிகை"யையும்
அப்படியே பிரசுரிக்கத் துடங்கிக் குளறுபடி செய்யதுடங்கியபின் சில
நாட்களுக்கு பின்தான் தோண்றியது. அதனை ஒரு தனிடத் தலைப்பினில்
பிரசுரிப்பது தான் முறையாகும் என்று. இப்பொழுது துடங்குகிறேன்:

பதினெண் கீழ்க்கணக்கு

விளம்பி நாகனார் இயற்றிய

நான்மணிக்கடிகை

திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்
(இளவழகனார்)
உரை

நான்மணிக்கடிகை
முகவுரை


கீழ்க்கணக்கு நூல்களுள் அடி அளவினால் நாலடியார் பெயர் பெற்றது போல,
பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக்கடிகை பெயர்
பெற்றுள்ளது. கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே,
நான்மணிக்கடிகை என்னும் தொடர் நான்கு இரத்தினத்துண்டங்கள் என்னும்
பொருளைத் தருவதாகும். ஒவ்வொருபாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத்
தேர்ந்தெடுத்துப்பிணைத்து, அழகிய சொற் கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளனர்.
அதனோடு சொல்லும் முறைமையிலும்ஓர் ஒருமைப்பாடு அமைந்திருத்தலை நூல்
முழுவதும் காணலாம். ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலை ஆகிய இடைப் பிறவரல்கள்
இன்றி, நந்நான்கு பொருள்களைப் பாடல்தோறும் திறம்படஅமைத்துள்ள ஆசிரியரின்
புலமைத் திறனும் கவித்திறனும் யக்கத்தக்கனவாம்.

இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவராவர். நாகனார் என்பது இவரது
இயற்பெயரையும் விளம்பி என்பது இவரது ஊர்ப் பெயரையும்
குறிப்பதாகக்கொள்ளலாம். இள நாகனார், இனிசந்த நாகனார்,
வெள்ளைக்குடிநாகனார், என்று இவ்வாறு 'நாகனார்' என்ற பெயரைத்தாங்கிய
புலவர் பலர் தொகைநூல்களில் காணப்படுகின்றனர். எனவே, நாகனார் என்பது
நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் ஒரு பெயரே ஆகும். விளம்பி
என்பது ஊர்ப்பெயர் அன்றி, வேறு காரணம் பற்றிய அடைமொழியாக இருத்தலும்
கூடும்.

இவர் பெயர் சங்கத்துச்சான்றோர் பெயர் வரிசையில் காணப்பெறாமையினாலும்,
கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப்'பிற்சான்றோர்' எனப் பேராசிரியர்
குறித்துள்ளமையினாலும், இவர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்
என்பதுதெளிவு. சங்க நூல் கருத்துகளையும், திருக்குறளின் கருத்துகளையும்
இவரது நூல் சிற்சில இடங்களில் அடியொற்றிச்செல்லுகிறது. 'நாக்கு' (75)
என்ற பிற்காலச் சொல்வடிவம் இதன்கண் எடுத்தாளப் பெறுதலும், அசனம்
(79),ஆசாரம் (93), சேனாபதி (52) முதலிய வடசொல் ஆட்சிகளும்,'எஞ்சாமை' (25)
முதலிய எதிர்மறைத் தொழிற்பெயரை எதிர்மறை வியங்கோள் பொருளில்
வழங்கியிருத்தலும், பிறவும், இவர் பிற்சான்றோர் என்பதை
உறுதிப்படுத்துவனவாம். இந்நூலுள் வரும் 'அல்லவை செய்வார்க்கு அறம்
கூற்றம்'(82) என்னும் செய்யுள் அடியும், 'அல்லவை செய்தார்க்கு அறம்
கூற்றம் ஆம் என்னும் பல்லவையோர் சொல்லும்பழுது அன்றே' என்னும்
சிலப்பதிகார வெண்பாப்பகுதியும் சொற்பொருள் ஒற்றுமையுடையன.
'பல்லவையோர்சொல்' என்று சிலப்பதிகாரம் சுட்டுவதால், இது
அக்காலத்துப்பெருக வழங்கிய ஒரு பழமொழியாகலாம். இரண்டு நூல்களும் இதனை
எடுத்தாளுதலினால், இந்நூல்கள் ஒரே காலப்பகுதியில் தோன்றியனபோலும்!

இந் நூலின் முதற்கண் உள்ள கடவுள்வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும்
மாயவனைப் பற்றியவை. எனவே, இந் நூலாசிரியரை வைணவ சமயத்தினர்
என்றுகொள்ளலாம்.

கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டு நீங்கலாக இந்நூலுள் 101
செய்யுட்கள் உள்ளன.'மதிமன்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், நூலுள்,
'கற்ப, கழிமடம் அஃகும்(27)', 'இனிது உண்பான் என்பான்'(58), என்னும் இரு
செய்யுட்களும் பஃறொடைவெண்பாக்கள். ஏனைய எல்லாம் நேரிசை, இன்னிசை, அளவியல்
வெண்பாக்கள்.

மதிப்புரை

நான்மணிக்கடிகை என்பது, கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் ஒன்றாகும்.

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா
நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது,
திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள்,
திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை,
முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன.

இனி நான்மணிக்கடிகை என்னும் இந்நூலை இயற்றினார் விளம்பிநாகனார் எனப்படும்
நல்லிசைப் புலவராவர். நாகனார் என்னும் பெயருடைய இவர் விளம்பியென்னும்
ஊரிலே பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் என்று
வழங்கப்பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். இவர் கடைச்சங்கப் புலவர் எனக்
கொள்ளப்படுதலின் இவரது காலம் கி. பி. 200க்கு முற்பட்டதெனக் கருதலாம்.

இவர் இயற்றிய இந் நூலின் காப்புச் செய்யுளான் இவரது சமயம் வைணவம் என்பது
தேற்றம்.

‘நான்மணிக்கடிகை' என்னும் இந்நூற்பெயர், நந்நான்கு வகையான நீதி
மணிகளாற்கோக்கப்பட்ட ஒருவகை அணிகலன் என விரியும். கடவுள் வாழ்த்து உட்பட
நூற்று நான்கு வெண்பாக்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது. இது, கடைச்சங்க
நூலாகலின் இதன் நடைச்சிறப்பினைப்பற்றிக் கூறல்வேண்டா.

இந் நூற்குப் பழைய உரை ஒன்று உளதேனும் அது குறிப்புரையா
யிருக்கின்றமையின் மாணவர்க்கும் பிறர்க்கும் தெளிவான முறையிற்
பயன்படுமாறு திருவாளர் தி. சு. பாலசுந்தரம்பிள்ளை யவர்களால் எழுதப்பட்ட
பதவுரை கருத்துரை விளக்கவுரைகளோடு இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

மாணவர்தம் பருவத்திற்கேற்ற நீதிகளும், உண்மைகளும் இந்நூலின்கண்
மிளிர்வதனால், இது பள்ளிக்கூடங்களிலும் பாடமாக வைக்கப்படுகின்றது.
தமிழகம் இதனை ஆதரிப்பதாக ;

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

(தொடரும்)


Venkatram Shrinivas

unread,
Jul 26, 2011, 2:54:52 PM7/26/11
to மின்தமிழ்

1
நான்மணிக்கடிகை
மூலமும் உரையும்

கடவுள் வாழ்த்து

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.

(இதன் பொருள்) மதி - திங்கள், மன்னும் மாயவன் - அழிதலில்லாத திருமாலினது, வாள் முகம் ஒக்கும் - ஒளியையுடைய திருமுகத்தை ஒத்திருக்கும்; கதிர்சேர்ந்த ஞாயிறு - ஒளிசிறந்த ஞாயிறு, சக்கரம் ஒக்கும் அவனது சக்கரப் படையை ஒத்திருக்கும், முதுநீர்ப் பழனத்து - வற்றாத நீரையுடைய கழனிகளில் முளைத்த, தாமரைத்தாளின் - செந்தாமரைத் தண்டினின்றும், எதிர் மலர் - தோன்றுஞ் செந்தாமரைப் பூ, அவன் கண் ஒக்கும் - அவன்றன் கண்களை ஒத்திருக்கும்; பூவைப் புதுமலர் - காயா மரத்தின் புதுப் பூ; நிறம் ஒக்கும் - அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும்.

(விளக்கவுரை)மன்னுதல்-நிலைபெறுதல். மாயவன் - வியக்கத்தக்க ஆற்றலுடையவன்; திருமால். ஒக்கும் : செய்யுமென்னுமுற்று. என்றும் உள்ள நீரென்பார், ‘முதுநீ' ரென்றார். முதுமை - பழைமை; தொன்றுதொட்டு என்றும் வற்றாது வந்த நீரென்பது பொருள். எதிர்தல் - தோன்றல்; ‘எதிர்பூஞ் செவ்வி'(வேனிற்காதை. 48) என்னுஞ் சிலப்பதிகாரத்திலும் இப்பொருளுண்மை காண்க. எதிர்மலர் - செவ்வி மலர் எனினுமாம். ‘மதிமுக மொக்கு' மென்று கூறிய உவமையை ‘முகம் மதியொக்கு' மென்னுங் கருத்திற் கொள்க; பிறவும் அன்ன. இதனை ‘மாறிய வுவமை' யென ஓரணியாகக் கொள்ளுப. ‘நான்மணிக்கடிகை' யென்னும் நூல் ஒவ்வொரு பாட்டிலும் நந்நான்கு பொருள் வைத்துக் கூறுதலின், அக்குறிப்பினை இக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் நான்கு பொருளே கூறிக் குறிப்பதாயிற்று. இக் குறிப்பினை மேற்பாட்டினுங் காண்க. இது பஃறொடை வெண்பா. மற்று : அசை.

2 படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆப்பனி1 தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்.

(இ-ள்.) படியை - உலகத்தை, மடியகத்து இட்டான் - வயிற்றில் வைத்தான், அடியினால் - தன் திருவடிகளால், முழு நிலம் - உலகங்கள் முழுமையும், முக்கால் கடந்தான் - மூன்று முறைகளில் தாவியளந்தான்; அக்காலத்து - இந்திரன் மழை பெய்வித்தபோது, ஆ பனி - ஆனிரைகளின் நடுக்கத்தை, தாங்கிய - தடுக்கும் பொருட்டு, குன்று எடுத்தான் - ‘கோவர்த்தன' மென்னும் மலையைக் குடையாகத் தூக்கினான்; சோவின் அருமை - பாணாசுரனது அழித்தற்கு அரிய நெருப்பு மதிலை அழித்த மகன் - அழித்த பெருமானான திருமால்.

(வி-ரை.) யசோதைக்குக் கண்ணன் எல்லா உலகங்களையுந் தன் வயிற்றகத்திற் காட்டினனாதலின், ‘படியை மடியகத் திட்டா' னென்றார். மடியகத்து : உருபின்மேற் சாரியை நின்றது. மடி - வயிறு; ‘மடியகத்திட்டாள் மகவை' (கனாத். 22) என்னுஞ் சிலப்பதிகார வடிக்கு அடியார்க்கு நல்லா ருரைக்கும் உரையைக் காண்க. ‘மூக்கா லென்றது, ஒருகால் நிலவுலகத்தையும் மற்றொருகால் விண்ணுலகத்தையும் கடந்து பின்னொருகால் மாபலியின் தலைமேல் வைத்துக் கீழுலகத்தையும் அளந்தன னென்றற்கு : தாங்கிய : செய்யிய வென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; தாங்குதல் - துயர்கெடுத்தல். ஆயர்பாடியினர் தேவேந்திரனுக்குத் தைப் பொங்கலில் இட்ட பொங்கலுணவைத் தான் ஏற்றுக்கொண்டமையால், இந்திரன் சினந்து கல் மழை பெய்வித்த போது பசுக்கள் நடுங்குதல் கண்டு ‘கண்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்து அவற்றைப் பாதுகாத்தமையால், ‘ஈண்டுக் குன்றெடுத்தா' னென்றார். ‘உஷா'வி னிடத்திருந்த ‘அநிருத்தனை' மீட்டற்குச் சென்றபோது ஆங்கெதிர்த்துப் பொருத பாணாசுரனை அவன் மதிற் கோட்டையோடு அழித்தமையே ‘சோ' அழித்த வரலாறு. அம்மதில் நெருப்பினானியன்ற தாகலின், ‘சோவின் அருமை' என்றார். மகன் - இங்கே பெரியோன் என்னும் பொருட்டு.

(2)


(பாடம்) 1 ஆனிரை, ஆநிரை,

(தொடரும்)

2011/7/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

N. Ganesan

unread,
Jul 26, 2011, 2:57:53 PM7/26/11
to மின்தமிழ்

On Jul 25, 1:23 pm, சீனுத்தாத்தா <see...@gmail.com> wrote:
> மதிப்பிற்குறிய வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு துடங்குகிறேன்.
> ஒரு வாராக நாலடியாரை ஒவ்வொரு தலைப்புகளாகத் தனித்தனியே
> 'மின்டமிலில்' (mintamil) (உரைகளுடன்) பரிசுரித்து முடித்துவிட்டு
> சு்ம்மாயிராமல் 'பதினென்கீழ்க்கில் மூன்றாவதான் "நான்மணிக்கடிகை"யையும்
> அப்படியே பிரசுரிக்கத் துடங்கிக்  குளறுபடி செய்யதுடங்கியபின் சில
> நாட்களுக்கு பின்தான் தோண்றியது. அதனை ஒரு தனிடத் தலைப்பினில்
> பிரசுரிப்பது தான் முறையாகும் என்று. இப்பொழுது துடங்குகிறேன்:
>

ஜூலை 15 தேதியிட்ட என் மடல்:

-------------------
அன்பின் இன்னம்பர், சீனு தாத்தா,
நான்மணிக்கடிகை நூல் உள்ள வலைவரி:
http://218.248.16.19/library/l2900/html/l2900ind.htm?book_id=33

அன்புடன்,
நா. கணேசன்

----------------------

> ஊரிலே பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் ...
>
> read more »

Innamburan Innamburan

unread,
Jul 26, 2011, 3:44:28 PM7/26/11
to mint...@googlegroups.com
யான் செய்த தவறு யாது, திரு.கணேசனார்?  கீழே உள்ளது நான் உங்களுக்கு காட்டியபிறகு தான், நீங்களே விஷயம் அறிந்து, முனைவர் நக்கீரனாரருக்கு மடலனுப்பினீர்கள். மேலும், மற்றைவர் படைப்பை எனது என்று என்றுமே நான் சொல்லவில்லையே. உசாத்துணைகளை சுட்டுகிறேன். இன்றைய "அன்றொரு நாள் நோக்குக.' இனியும் ஐயமிருந்தால், தீர்ப்பது என் கடனே.
இன்னம்பூரான்

நான்மணிக்கடிகை நூல் உள்ள வலைவரி:
http://218.248.16.19/library/l2900/html/l2900ind.htm?book_id=33




2011/7/26 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jul 26, 2011, 3:55:43 PM7/26/11
to மின்தமிழ்

On Jul 26, 2:44 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> யான் செய்த தவறு யாது, திரு.கணேசனார்?  கீழே உள்ளது நான் உங்களுக்கு
> காட்டியபிறகு தான், நீங்களே விஷயம் அறிந்து, முனைவர் நக்கீரனாரருக்கு
> மடலனுப்பினீர்கள். மேலும், மற்றைவர் படைப்பை எனது என்று என்றுமே நான்
> சொல்லவில்லையே. உசாத்துணைகளை சுட்டுகிறேன். இன்றைய "அன்றொரு நாள் நோக்குக.'
> இனியும் ஐயமிருந்தால், தீர்ப்பது என் கடனே.
> இன்னம்பூரான்
>    நான்மணிக்கடிகை நூல் உள்ள வலைவரி:
http://218.248.16.19/library/l2900/html/l2900ind.htm?book_id=33
>

Dear I sir & Sri. Srinivas,

This is a past mail. Pl. don't worry.

It will be better if Cheenu Thatha
tells the source of Tamil Virtual University.

Anbudan,
N. Ganesan


> 2011/7/26 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Innamburan Innamburan

unread,
Jul 26, 2011, 4:12:21 PM7/26/11
to mint...@googlegroups.com
I agree.
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



2011/7/26 N. Ganesan <naa.g...@gmail.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages