Re: [MinTamil] சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள் !!

340 views
Skip to first unread message
Message has been deleted

வேந்தன் அரசு

unread,
Jul 18, 2008, 5:11:42 PM7/18/08
to minT...@googlegroups.com


2008/7/18 srirangammohanarangan v ranga...@gmail.com:
 
"மிகப்பழைய    தமிழ்  நூல்  எனக்  கருதப்படும்  தொல்காப்பியத்திலே  திருமால்,  முருகன்,  இந்திரன்,  வருணன் என்னும்  வேதக்கடவுளர்  நால்வருக்கு  நாலுவகை  நிலங்கள்  உரியனவாகக்  கூறப்பட்டுள்ளன. 
 
ஆவலுடன் வாசித்தேன். நன்றி அரங்கரே.
 
உண்மை. ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்
 
சங்கபாடல்களில் நெய்தல் நிலத்து கடவுளாக வருணனையும் மருத  நிலத்துக்கு உரிய  கடவுளாக  இந்திரனையும் எங்கும் பாடவில்லை.
 
தொல்காப்பிய செய்தவிதியை சங்கத்தார் புறக்கணித்து விட்டார்களோ?.
 
 
 
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

srirangammohanarangan v

unread,
Jul 19, 2008, 10:56:58 PM7/19/08
to minT...@googlegroups.com
நன்றி  வேந்தன்  அரசு,  உடனே  படித்து,  தவறாது   பின்னூட்டம்  இடுவதில்   முன்மாதிரி  நீங்கள்.  எனக்கும்  இதில்  முனைப்பு  குறைவு.

2008/7/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
--~--~---------~--~----~------------~-------~--~----~



Tthamizth Tthenee

unread,
Jul 20, 2008, 12:21:20 AM7/20/08
to minT...@googlegroups.com
"இந்துமதம்  என்ற  மீப்பொது  மதநெறி   ஆகிய  அனைத்தின்  மீதும்   திரும்பிவிட,  மக்களின்  வெறுப்பு    இடைவிடாமல்   மூட்டப்பட்டுக் 
கொண்டே  வந்திருக்கிறது.  ஒரு  காரணம்   இதற்கு    வெளிப்படையாகத்  தெரிவது என்னவென்றால்,  எப்பொழுதேனும்  அசந்துவிட்டால்   மீண்டும்   ஜாதிக்கொள்கை  நுழைந்து  ஆக்கிரமித்துவிடுமோ  என்ற  அச்சம்   காரணம்.   ஆனால்   அதுமட்டும்  காரணம்  அன்று.   இந்துமதம்  என்ற    அமைப்புள்   பங்குபெறும்    மக்களிடை   ஒற்றுமையும்,   இணக்கமும்,   தம்முடைய   மரபுச்  செல்வங்களின்பால்   ஒரு  புத்துயிர்ப்பு கொண்ட   புரிதலும்,  மீள்வாசிப்பும்,   புனரமைப்பும்  ஏற்பட்டுவிட்டால்  என்ன  செய்வது  என்ற  கவலை  ஒருசில  சக்திகளிடையே     மும்முரமாக  இருப்பதும்  காரணம்.  "
 
 
 
 
அன்புள்ள திரு  ரங்கன் அவர்களே நீங்கள் சொல்லிய
அத்துனை விஷயங்களும் மருதலிக்க முடியாத வலுவான ஆதாரங்களோடு  எழுதி இருக்கிறீர்கள்
 மேற்க்கண்ட வரிகள் தான் இத்தனைக்கும் முக்கியமான
காரணம்  என்றுதான் தோன்றுகிறது ,
எப்போதுமே பிரித்தாளும் சூழ்ச்சியையே தளராமல்
செய்து கொண்டிருக்கும் சிலர் இதை நன்கு ஆழ்ந்து படித்து
தங்களை பொது நோக்கிற்கு மாற்றிக் கொள்ளுதல்
தமிழுக்கும், மனித நேயத்துக்கும் வழி வகுக்கும் என்பதில் ஐய்யமில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
மனிதமும்,உலகமும் காப்போம்
Message has been deleted

வேந்தன் அரசு

unread,
Jul 20, 2008, 6:16:15 PM7/20/08
to minT...@googlegroups.com
அரங்கர்
 
இந்த வேத வரிகள் எந்த வேதத்தில் இருந்து எடுககபப்ட்டது?
 
மேலும்
 
வேத  முதல்வன்--- என்ப --- --
தீது  அற   விளங்கிய  திகிரியோனே   
 
 
இந்த என்ப என்ற சொல்லை கவனிக்க வேண்டும்.
 
அந்த காலத்தில் படிப்பறிவு குறைவு. ஓதப்பட்ட  வேதங்களை (மறை என்றே தமிழில் சொல்லப்படும்)  தமிழ் அறிஞர்கள் கூட அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு
 
எனவே புலவர் செவிவழி  கேட்டதுதான் " என்ப"  என்ற சொல்லால் குறிக்கிறார் என கொள்ளலாமா?
 
 மாறாக இப்படி யாத்து இருக்க்லாம்

"வேத  முதல்வன்--- அன்றோ --- --
தீது  அற   விளங்கிய  திகிரியோனே "  
Message has been deleted

வேந்தன் அரசு

unread,
Jul 21, 2008, 9:30:44 AM7/21/08
to minT...@googlegroups.com


2008/7/20 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
வேந்தன்,   காலம்  விட்டுக்  காலம்  போய்ப்  பார்க்கும்  போது   நாம்  பல  அளவுகால்களையும்,   காரணிகளையும்  விடுத்தும்,  மாற்றியும்  கொள்ள  வேண்டியிருக்கிறது.   உதாரணத்திற்கு   படிப்பு என்பது.    அச்சு  வந்த  பின்னர்தான்    படிப்பு என்று  கண்வழிக்  காரியம்   அறிவு  பெறுவதற்கு   நெறியாக  அமைந்தது.   நமது   அறிவுக்கூடங்கள்,  கலாசாலைகள்,   பல்கலைக்கழகங்கள் எல்லாமே    கண்,  படிப்பு  என்ற   அடிப்படையில்    இயங்குவது எனலாம்.  அந்தக்  காலத்தில்   கண்   படிப்புக்கு  முக்கியம் என்பதைவிட  காதுகள்   படிப்புக்கு  முக்கியம்.  எனவே   நாம்  'படித்தவர்கள்'  என்று  சொல்வது   அந்தக்  காலத்தில்    'கேட்டவர்கள்'  என்ற  சொல்லால்   கையாளப்பட்டது.    அறிவுக்கு   'கேள்வி'   பெருநெறியாகக்  கருதப்பட்டது.  எனவேதான்   செல்வத்துட்ச்  செல்வம்  செவிச்செல்வம் என்றார்  செந்நாப்  போதாரும்.
 
"கற்றிலன் ஆயினும் கேட்க."
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Jul 24, 2008, 11:50:36 AM7/24/08
to minT...@googlegroups.com
'பொலிக  பொலிக   போயிற்று  வல்லுயிர்ச்  சாபம்' 
 
மணிப்ரவாளமாய் சங்கம் முழங்கத்தொடங்கி விட்டது
 
வளரட்டும்  சத் சங்கம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/7/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
சங்கப்  புலவர்  பாடும்  'பொலிக  பொலிக' !
 
 
'பொலிக  பொலிக   போயிற்று  வல்லுயிர்ச்  சாபம்' என்று  பாடியது   நம்மாழ்வார்   மட்டும் என்று  நினைத்தேன்.   ஆனால்   இன்னொருவரையும்   அந்த  அணியில்  சேர்க்க வேண்டும்  போல்  இருக்கிறது.  அவர்தான்   பரிபாடலின்   முதற்பாடலைப்  பாடிய  பெருமகனார்.  எதையோ  எதற்கோ  முடிச்சு  போடுகிறேன்  என்றுதானே    நினைப்பீர்கள்.   பொறுங்கள்.   அப்புறம்  நீங்களே  சொல்வீர்கள்.
 
திருமாலைப்  பாடுகிறார்   புலவர்  முதல்  பரிபாடலில்.  ஏதோ  கோவிந்தா கிருஷ்ணா  திருமாலே  என்று   தனக்குத்  தோன்றியதைப்  பாடக்கூடாதோ?    அது என்ன?   வேதம் எப்படி  எப்படியெல்லாம்    திருமாலைத்   துதித்ததோ   அப்படியே    சாயை பிடித்தா  பாடுவது?   பிற்காலத்தில்   யாராவது   ஆரிய  மாயை என்று   சாடமாட்டார்களோ?    சரி   பாடத்தான்   பாடினாரே   இப்படியா  அப்பட்டமாக   'நான்    வேதங்கள்    புகழ்ந்த   நெறிப்படியே   பாடுகிறேன்'  என்று   பதிவு  செய்து  வைப்பது?   சரி  அது  அந்தக்காலம்.    உள்நோக்கத்துடனான   வெற்று  அரசியலும்,    பிளவுகளில்   அடைகாக்கும்   வெறுப்பின்   சூழ்ச்சியும்    புலவர்கள்   மத்தியில்    இல்லாத   காலம்.   மதத்தின்   பெயரால்   சில   விஷமிகள்   திரிவினைகள்   செய்யத்துணியாத  காலம்.     அவ்வளவு ஏன்?   தமிழுக்கு     ஒரு  நல்லடிக்காலம்.     தமிழ்ப்புலவர்களும்   எம்மொழியும்  கற்று,   எப்பொருளிலும்   பெய்ப்பொருள்   காண  முயன்ற  காலம்.    சரி   நமது    கருத்துக்கு  வருவோம். ஏன்  இவ்வாறு  கூறுகிறேன்  என்றால்,   திருமாலைப்  பற்றி   மறை  கண்ட  முடிவு,   அவன்   அன்றலர்ந்த   செந்தாமரை  அன்ன  கண்ணினன்,  'தஸ்ய  யதா  கப்யாஸம்   புண்டரீகம் ஏவம்  அக்ஷிணீ' (அந்தப்  பரமபுருஷனுக்கு  சூரியனால்  மலர்ந்த  தாமரை  போன்ற  இரு  கண்கள்  உள) ---
காயாவின்  மலர்ந்த   பூவை  ஒத்தக்  கருநிறம்   உடையவன் ---   அகலகில்லேன்   இறையும் என்று   அலர்மேல்  மங்கை  உறை  மார்பா  என்ற  படி  திரு   விரும்பி   வாழும்   மார்பினை  உடையவன்  --  மார்பில்   கௌஸ்துபம் என்ற   மணியினைப்  பூண்டவன் -- நீலமலை  ஒன்றைச்  செந்நெருப்புச்  சூழ்ந்துகொண்டிருப்பது   போன்ற   பொன்னாலான   பீதாம்பரத்தை  உடையவன் ---  அனைத்தினுள்ளும்   அந்தர்யாமியாய்    நிறைந்து  அனைத்துப்  பொருட்களையும்  நியமிப்பவனாய்   இருப்பவன் --  என்று  இவையெல்லாம்    வேதங்கள்    திருமாலைப்  பற்றி   உரைக்கும்   புகழ்.    இப்பொழுது    சங்கப்  புலவரிடம்  வருவோம்: 
 
எரிமலர்    சினைஇய   கண்ணை!  
பூவை   விரிமலர்   புரையும்  மேனியை! 
மேனித்  திரு  ஞெமர்ந்து   அமர்ந்த  மார்பினை!! 
மார்பில்   தெரிமணி   பிறங்கும்   பூணினை!!  
மால்வரை  எரி  திரிந்தன்ன   பொன்புனை   உடுக்கையை!!  
 
(ஞெமர்ந்து --  பரந்து,  விரும்பி,  நிறைந்து)
சரி    இத்தனையும்   சங்கப்  புலவர்  பாடிவிட்டுப்  பேசாமல்   போகக்கூடாதா?   நாங்கள்  பாட்டுக்கு   இப்பொழுது,    இவர்  பாடித்தான்   வேதமே   அதைக்  காப்பியடித்தது  என்று  சொல்லி  மகிழ்ந்து  போவோமே!   என்ன  செய்வது?   அது  சங்கப்  புலவருக்கு   உடன்  பாடில்லை.    உடனேயே   கூறுகிறார்,  
 
சேவல்  அம்  கொடியோய் ! 
நின்  வலவயின்  நிறுத்தும்  
ஏவல்  உழந்தமை   கூறும்  
நா  வல்   அந்தணர்   அரு   மறைப்  பொருளே!!!  
 
சரி ஏதாவது   தெரியாமல்  சொல்லியிருப்பார்,   போகப்  போகப்  பார்க்கலாம் என்றால்   இவர் என்ன  ஆழ்வாரா   அன்றேல்   சங்கப்  புலவரா  என்று  வேறுபாடு   தெரியாத   அளவிற்கு   அவருடைய   வரிகள்   சுழலிடுகின்றன.   இப்படியே   போனால்   ஆழ்வார்  சங்கப்  புலவரோ   என்ற  நிலைக்குத்தான்   வருவோம்.  (  அய்யய்யோ   யாரும்  கோபத்தில்  முறைக்காதீங்கோ!)    புலவரின்    பொற்குரல்   தொடர்கிறது:
 
'பொருவேம்'  என்றவர்   மதம்   தபக்   கடந்து,
செருமேம்பட்ட   செயிர்  தீர்   அண்ணல் !
இருவர்  தாதை!   இலங்கு  பூண்  மாஅல்! 
தெருள    நின்   வரவு   அறிதல்  
மருள்  அறு   தேர்ச்சி   முனைவர்க்கும்  அரிதே!! 
 
'கூடாரை  வெல்லும்  சீர்  கோவிந்தன்'  என்றாள்   சங்கத்  தமிழ்மாலை   முப்பதும்    தந்த   கோதை. 
அது என்ன    இருவருக்கும்   மட்டும்  தாதை?  
'நாராயணாத்   ப்ரஹ்மா   ஜாயதே   நாராயணாத்   ருத்ரோ   ஜாயதே'  (நாராயணோபநிஷத்)  'நான்முகனை   நாராயணன்   படைத்தான்,   நான்முகனும்   தான்முகமாய்ச்   சங்கரனைத்  தான் படைத்தான்'  என்று   திருமழிசையார்    தமிழ்ப்படுத்திய    வேத  வாக்கியத்தைச்  சங்கப்  புலவர்    இரு  சொற்களிடைத்  தேக்கி   வெளியிடும்  அழகே  தனி!    'இருவர்  தாதை'.    சரி   அவ்வாறு  சொன்னவுடன்    அது என்ன    'இலங்கு  பூண்  மா அல்' ?   சாந்தோக்கியம்  கூறுகிறது,  'ஆப்ரணகாத்   ஸர்வ   ஏவ    ஸுவர்ண:'    'நகத்திலிருந்து    எல்லாம்   பொன்மயமானவன்'.  
அடுத்த  வரிதான்    மிக  உச்சக்  கட்டமான   வரி!   'தெருள   நின்  வரவு  அறிதல்   மருளறி  தேர்ச்சி   முனைவர்க்கும்  அரிதே'.     'வரவு  அறிதல்'  என்றால்?     அவதாரக்  கொள்கை  என்பது   திருமால்   நெறிக்கே   உரித்தான    கருத்து.    உயர்வற  உயர்நலம்  கொண்டவன்,  ஒத்தாரை  மிக்காரை   இலையாய   மாமாயன்   எப்படி  எந்நின்ற  நீர்மையுமாய்ப்   பிறக்கிறான்?   என்பது    ஞானிகளுக்கும்   பெரும்  புதிர்  என்கிறது    திருமால்  நெறி.     இனிவருவது    சங்கப்   புலவர்   உரைக்கும்   திருமால்  நெறி:  
 
அருமை  நற்கு  ஆயினும்  
ஆர்வம்  நின்வயின்   பெருமையின், 
வல்லாய்!    யாம்  இவண்  மொழிபவை  
மெல்லிய  எனாஅ   வெறாஅது 
அல்லி  அம்   திரு   மறு    மார்ப!  
நீ  அருளல்   வேண்டும் 
 
சரி   தன்னோடு  விட்டாரா?   சுற்றம்  புடை  சூழ,  உற்றார்   நட்டார்   அனைவரையும்   சேர்த்துத்தானே    சங்க  காலத்திலிருந்து    கோதை  உரைத்த  மறைத்தமிழ்   வரையில்   பழக்கம்.    கூட்டு  சேர்த்துக்  கொண்டுதானே   கோவிந்தனை  வழிபடச்  சொல்லுகிறாள்   கோதை.   சங்கப்  புலவர்,  
 
ஆங்கு, 
காமரு  சுற்றமொடு   ஒருங்கு    நின்   அடியுறை 
யாம்  இயைந்து   ஒன்றுபு   
வைகலும்   'பொலிக'  என, 
ஏமுறு  நெஞ்சத்தேம்   பரவுதும் --- 
வாய்மொழிப்  புலவ!    
நின்  தாள்  நிழல்   தொழுதே
 
கடல்வண்ணன்  பூதங்கள்  மலியப்  புகுந்து   உழிதரக்   கண்டேன்  என்று    இறும்பூது  எய்திய    நம்மாழ்வார்    சங்க  காலத்தை   நினைத்துத்தான்   பாடினாரோ?     'பொலிக  பொலிக   போயிற்று  வல்லுயிர்ச்  சாபம்'         

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 4:12:38 AM7/25/08
to minT...@googlegroups.com
2008/7/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> சங்கப் புலவர் பாடும் 'பொலிக பொலிக' !

> கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரக் கண்டேன் என்று


> இறும்பூது எய்திய நம்மாழ்வார் சங்க காலத்தை நினைத்துத்தான்

> பாடினாரோ? 'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்'


எல்லா ஆழ்வார்களும் இறைவனுக்கு மங்களாசாசனம் செய்தனர். எம் முதல்தாய்
சடகோபனோ நம்மைப் போன்ற அடியார்க்கு மங்களாசாசனம் செய்தார். அவர் அப்படி
'பொலிக, பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்' என்று
முழங்கவில்லையெனில் இன்று நமக்கேது தெம்பு?

எனக்கு பல சமயம் தோன்றும் எதை வைத்து ஒரு இலக்கியத்தின் வயதை நிர்ணயம்
செய்கின்றனர்? சங்கத் தமிழும், கொள்கையும், ஆழ்வார் பாசுரங்களும்
அப்படியே - சில நேரங்களில் வரிக்கு, வரி (உம்.திருமழிசை) ஒத்துப்
போகின்றனவே. 'சங்கத்தமிழ்' என்று சொன்ன ஆண்டாள் வாய் பொய்க்குமோ?

மிக அருமையாகப் போகிறது ரங்கன். மேலும் சொல்லுங்கள்.

கண்ணன்

இரவா

unread,
Jul 25, 2008, 12:41:48 PM7/25/08
to minT...@googlegroups.com


"தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்" என்பார்.
 
அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன.

 

"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே" என்கிறது புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான் குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது.
 
சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். ("பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே" - தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் 'வேட்கோவர்' என்று குறிப்பிடுகிறது.
 
வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல.
 
விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொள்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு.
 
அதுதான் புகழ்பெற்ற 'சித்தூர் ஜில்லா அதாலத்' எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர்.
 

நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர்.

 

இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்' என்றே அழைக்கப் படுகின்றனர்.

 

அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு" என்கிறார்.

 
வேளாளர்கள் காராளர்களாகி, களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குலத்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், "நீடு சூத்திர நற் குலஞ்செய் தவத்தினால்" (இளையான்குடி நாயனார் புராணம்-1) எனவும் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல" (வாயிலார் நாயனார் புராணம்-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார்.
 
வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, 'சதுர்த்தர்' என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், 'இருபிறப்பாளர்க் கேவல் செயல்' என்கிறது.
 
வெள்ளாளர்கள் தாங்கள் சூத்திரர் என்பதை மறைப்பதற்காக, அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்களையும், சங்க காலத்தில் அந்தணருக்குச் சமமாக இருந்த பறையர்களையும், கம்மாளர்களையும், வேட்கோவர்களான குயவர்களையும், செல்வச் செழிப்பில் இருந்த வைசியர்களான செட்டியார்களையும் இன்னும் சில சாதியினரையும் சூத்திரர் ஆக்கிவிட்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 

ஊர்ப் பார்ப்பான்

அகநானூற்றில் "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை" என்ற 24 ஆம் செய்யுளுடக்கு, அந்நூல் பழைய அரும்பதவுரைக்கார்ர்வேளாப் பார்ப்பான்யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்" என்று எழுதியுள்ளார்.

இதனால், வைதிகச் சடங்கு நடத்தாத பிராமணரை "ஊர்ப்பார்ப்பான்" என்பது அக்கால வழக்கென்பது தெரியலாம். ஊர்ப்பார்ப்பான் என்பதனால், இவர்கள் மேற்கொண்ட தொழில், நகரவதிகார முதலிய இலௌகிக விருத்திகள் என்று சொல்லலாம். முதலிராசேந்திரன் காலத்தில் வரையப்பட்ட (தீர்க்காலிதிரு) வல்லத்துச் சாஸனமொன்றுஊரார் சொல்ல எழுதினேன்; இவ்வூர் "ஊர்க்காணத்தான்"  ஊர்ப்பார்ப்பான் பரதயன் கிழவன் ஈசுவரசன்மன்"(S,I.I.IV-90)எனக் கூறுவது மேலே நான் கூறிய கருத்தை நன்கு விளக்குதல் காணலாம்.

அகநானூற்றுக் கூற்றால், "சங்கறுப்ப தெங்கள் குலம்" என்று கூறிய நாக்கீரர், ஊர்ப்பார்ப்பார் குலம் இத்தகையது போலும். "சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர்" என்று சாத்தனார் மணிமேகலையில் கூறுவது இவ்வூர்ப் பார்ப்பாரது குலவொழுக்கத்தை நினைத்தென்று கருத இடமுண்மையுங் காண்க.

ஐயங்கார்

வைஷ்ணவப் பிராமணர்களுக்கு இப்பட்டப் பெயர் வழங்குகிறது. இது 500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த வைஷ்ணவர்க்குள் வழங்குடைய தென்பதற்கு நூல்களிலேனும் சாஸனங்களினேனும் ஆதாரமில்லை. ஐயங்கார் வழக்கு வைஷ்ணவர்க்குரியதாக நான் பூர்வமாகக் காணும் சாஸனம் சகாப்தம் 1390-இல் (1468 பி.பி) திருப்பதி மலையில் உள்ளதாம்.
(இலக்கிய சாஸன வழக்காறுகள், இராகவையங்கார். பக்கம். 272.)

--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

இரவா

unread,
Jul 25, 2008, 1:14:45 PM7/25/08
to minT...@googlegroups.com


பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே. இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு. மேலும் தமிழகத்தில் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்ல. தொல்காப்பியம் சொல்லுகின்ற முதல் மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

 

"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்"
- என்கிறது அப்பாடல்.

 

மேலும், மரபாக இருந்துவரும் ஞானவெட்டியார் பாடல்கள்,

 

"... ... பூணூலந்
தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே"

"பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ
பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும் விகிதமாய்

வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"

"பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ"

 

இவற்றையும், 13-14 ஆம் நூற்றாண்டு தொடங்கி கிடைத்துள்ள வள்ளுவர் சிலைகள் பலவற்றிலும் பூணூல் வடிக்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டே வள்ளுவரின் படங்கள் பூணுலுடன் வரையப்பட்டன. பறையர் சமூகத்தினர் மட்டுமின்றி, விஸ்வகர்மாக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற கம்மாளர்களும் பூணூல் அணிபவர்கள்தான்.
 
விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
 
நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.

 

இரவா

unread,
Jul 24, 2008, 1:07:18 PM7/24/08
to minT...@googlegroups.com

"நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப" என்ற பாடல் வரியிலுள்ள நான்மறைகளும் (ரிக், யஜுர், சாம அதர்வண) வேதங்கள் தான் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது. நான்மறை என்றால் அந்த ஆரிய வேதங்களைத் தான் குறிக்கும் என்பது சிலர் விட்ட புளுகு. இப்படியே போனால் நான்கு என்று தமிழில் குறிப்பிடுவதெல்லாம் ஆரிய வேதங்கள் நான்கையும் தான் குறிக்கும் என்று வாதாடத் தொடங்கி விடுவார்கள் போலிருக்கிறது.

சிவவழிபாடு தமிழர்களுடையது, சிவன் என்ற சொல்லும் தமிழ்ச்சொல்லே, ஆகமங்களும் முதலில் தமிழில் தானிருந்து சமக்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு திருகு தாளங்கள் செய்யப்பட்டன. ஆரிய வேதங்களை விடத் தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் திருமந்திரத்திலும், திருமறைகளிலும் உண்டு.

சில சங்ககாலப் பாடல்கள் நாயன்மார்களின் பக்திக்காலத்தைச் சேர்ந்தவை, சில பாடல்கள் ஞானசம்பந்தருக்குப் பிந்தியவை அதனால் தான் சில சங்ககாலப் பாடல்களில் நாயன்மார்களின் பக்தி வாடை வீசுகிறது.

"முத்தமிழ் நான்மறை முளைத்த அருள்வாக்கால் விதி கூறி" என்கிறது கல்லாடம், இங்கு முத்தமிழாலான நான்மறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கல்லாடனார்.

"முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்" என்கிறார் திருஞானசம்பந்தர்

"வான் தமிழ்மறை யோர்க்கு வானுரை கொடுத்த

தீந்திறல் நெடுவேல் சேரலன் காண்கு" என்கிறது சிலப்பதிகாரம். இங்கு தமிழ்மறையை மட்டுமல்ல அத் தமிழ்மறையை ஒதுபவர்களைத் தமிழ்மறையோர்கள் என்கிறார் இளங்கோவடிகள்.


"
தாங்கி மிகைமை வைத்தான் தமிழ்சாத்திரம் " என தமிழ்சாத்திரம் தந்த சிவனைப் போற்றுகிறார் திருமூலநாயனார்/

"
சதாசிவ தத்துவம் முத்தமிழ் வேதம்" (76) என்று முத்தமிழ் வேதத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் திருமூலநாயனார்

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 9:12:46 PM7/25/08
to minT...@googlegroups.com
2008/7/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> 'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்'
>
> மணிப்ரவாளமாய் சங்கம் முழங்கத்தொடங்கி விட்டது
>
> வளரட்டும் சத் சங்கம்

இது மணிப்பிரவாளம் இல்லையே! சுத்தமான தமிழ்க் கட்டுரை. வடமொழி மேற்கோள்
காட்டுகிறார். அவ்வளவுதான்.

மணிப்பவளம் என்பது அறிஞர் மொழி, புலவர் மொழி, கல்விமான்கள் மொழி. சென்னை
ஆட்டோ ஓட்டுநர் பேசும் மொழியை நாம் மணிப்பவளம் என்று சொல்வதில்லை :-)
மணிப்பவளம் என்ற சொல்லிற்கேற்ப மணி, மணியான செந்தமிழ் சொற்கள், பவளம்
போன்ற வடமொழி சொற்கள் இடையில். ஒரு ஆபரணம் அது. மணிப்பவளத்தைப் புரிந்து
கொள்ளும் வல்லமையும், புலமையும் பெற்றோர் மின்தமிழ் புலத்தில் அரிது.
ரங்கன் போன்றோர் அரிதாகி வருவது மரபை இழப்பது போல் படுகிறது...

கண்ணன்

anupam srivatsav

unread,
Jul 26, 2008, 12:30:44 AM7/26/08
to minT...@googlegroups.com
Mr. Irava has written about wearing the holy thread by all people of Tamil Nadu.  It is true that all have equal rights for that.  It is equally true that everyone has the right to follow the rituals,  and religious duties.  Let us all, instead of simply claiming our right, let us wear the thread and follow the religious duties 'religiously'.  Otherwise, there is no merit.  Simply saying would be as ridiculous to say "My ancestors were kings, but I am a pauper".  This is my humble opinion.  Any comments, please write to the group.
With regards,
Anupam.

2008/7/25 இரவா <vasude...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2008, 4:10:12 AM7/26/08
to minT...@googlegroups.com
ஆட்டோ ஓட்டுநர் பேசும் மொழியை நாம் மணிப்பவளம் என்று சொல்வதில்லை
 
அதனால்தான் திரு ரங்கன் எழுத்தை ரசித்து
மணிப்ரவாளம் என்று சொன்னேன்
 
சுத்தமான தமிழ்க் கட்டுரையை மணிப்ராவாள நடை
என்று வர்ணித்தால் என்ன தவரு..?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

 
2008/7/26 Narayanan Kannan <nka...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jul 26, 2008, 4:21:35 AM7/26/08
to minT...@googlegroups.com
>ரங்கன் எழுத்தை ரசித்து மணிப்ரவாளம்:என்று சொன்னேன்
 
மணிப்பவளம் தான் மணிப்ரவாளம் என்று திரிந்தது. மணிமிடைப் பவளம் என்பது அகநானூற்றில் ஒரு பகுதி. பவளம் என்ற சொல் முற்றிலும் தமிழே. ரகரத்தை உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு உள்ள வழக்கம். (நன்றி: திரு இராம.கி)

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2008, 4:34:54 AM7/26/08
to minT...@googlegroups.com
திரு கண்ணன் நடராஜன் அவர்களே
சரி மணிப்பவளம் என்றே எழுதுகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
2008/7/26 Kannan Natarajan <thar...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2008, 4:37:02 AM7/26/08
to minT...@googlegroups.com
ஆனால் எனக்கொரு சந்தேகம் உண்டு
ப்ரவாகம், ப்ரவாளம் என்பதெல்லாம்
மருவியதல்ல தமிழ்ச் சொல்வழக்கே என்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2008/7/26 Kannan Natarajan <thar...@gmail.com>

Narayanan Kannan

unread,
Jul 26, 2008, 5:54:45 AM7/26/08
to minT...@googlegroups.com
2008/7/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

>> சுத்தமான தமிழ்க் கட்டுரையை மணிப்ராவாள நடை
> என்று வர்ணித்தால் என்ன தவரு..?
>

என்ன இப்படி அந்தர்பல்டி? சுத்தமான தமிழ்க் கட்டுரை எப்படி
மணிப்பவளமாகும்? மணிதானே உண்டு. பவளம் எங்கே? பெரியவாச்சான் பிள்ளை
வியாக்கியானம் படித்துப் பாருங்கள் இல்லை வேறு ஏதேனும் வேதாந்த உரை
படித்துப்பாருங்கள். மணிப்பவள நடையின் ஆழ்ந்த பொருள் விளங்கும்.

ஏன்? திருப்புகழ் பல மணிப்பவளம்தான்.

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.


அதுதான் அவரும் பெருமாளே என்கிறார் போலக்கிடக்கு :-)

கண்ணன்

anupam srivatsav

unread,
Jul 26, 2008, 6:23:39 AM7/26/08
to minT...@googlegroups.com
Aha, How many Sanskrit words in Tirupugazh!!!!
For example:
apakara, nindai, vanchar, upadesha, mantra, ibha, mukhan, himavan, uttami, bala, japamaala, sadguru natha...

Twelve words in this small song... I think, Arunagirinathar has written in Sanskrit only.  He has included some Tamil words too.

You may have some diffierent opinion, but, the song which you mentioned shows that.
Please let me know if you think differently.
With regards,
Anupam.

2008/7/26 Narayanan Kannan <nka...@gmail.com>

anupam srivatsav

unread,
Jul 26, 2008, 5:10:56 AM7/26/08
to minT...@googlegroups.com
Pravaham is Sanskrit word.  pra upasarga purvaka vah dhaatu with ghany pratyaya.

I dont know how to explain the above technical things in Tamil in deriving the word "pravaham".
I am not sure about pravalam.

2008/7/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

anupam srivatsav

unread,
Jul 26, 2008, 6:27:41 AM7/26/08
to minT...@googlegroups.com
Whether Sanskrit or Tamil or Hindi or anyother language... true catholicity can be traced to as great poet as Tiruvalluvar himself.  He said, "Epporul yar yar vai ketpinum, apporul mei porul kanbadu arivu".  Let us not praise the glory of one language by pulling the other language down.  Our faith and devotion to Tamil is not and will not affected by the greatness and richness of any other language.  At the same time, we are open to receive good things from any other languages.  Let us follow Tiruvalluvar.
Anupam.

2008/7/26 anupam srivatsav <anupam.s...@gmail.com>

Narayanan Kannan

unread,
Jul 26, 2008, 7:12:54 AM7/26/08
to minT...@googlegroups.com
ஹா! ஹா! உண்மைதான் :-)

மருமானைப் பாடுகிறேன் என்று பாடலுக்குப் பாடல் மாமாவைப் பாடுவார் :-)

பெருமாளே! பெருமாளே!!

கண்ணன்

2008/7/26 anupam srivatsav <anupam.s...@gmail.com>:

anupam srivatsav

unread,
Jul 26, 2008, 7:37:36 AM7/26/08
to minT...@googlegroups.com
Hi hi hi...
True.... maayon maruganai, mandradi maindanai, vaanavarku melaana devanai...

Like this only are his songs.  He uses all adjectives for marumaan.  But, happily, he sings about maamanar.

In the puranas, it is said that Rama did Shiva Puja and Shiva praised Rama.  But, Rama's follower (ie monkeies) and Shiva's followers (ie demons) are fighting with each other.  Luckily, Arunagirinathar is not in that group.

Anupam.



2008/7/26 Narayanan Kannan <nka...@gmail.com>
ஹா! ஹா! உண்மைதான் :-)

வேந்தன் அரசு

unread,
Jul 26, 2008, 9:04:42 AM7/26/08
to minT...@googlegroups.com
பவளமா? பவழமா?
 
இதற்கு விடை காண தொலுகுமொழியை நாடலாம்
 
தெலுகில் பொகடாலு என்பார்கள்
 
தமிழின் ழகரம் தெலுகில் டகரமாகும்
 
எழு= ஏடு
அழு = ஏடுவு
அவிழ் - உடுபு
பாழ் = பாடு
கூழ் = கூடு
 
எனவே பவழம் என்பதே சரி
 
தமிழின் ழகரம் வடமொழியில் ரகரமாகும். இதன் மறுதலையும் சாத்தியமே
 
தமிழ் - தமிழஹ- திரமிள- திராவிட
 
 
மண்ணுவதால் மணி
 
"மண்ணா மணி போல் தோன்றும் மலை"  கலித்தொகை

devoo

unread,
Jul 26, 2008, 1:27:53 PM7/26/08
to மின்தமிழ்


On Jul 24, 8:32 pm, "srirangammohanarangan v" <ranganvm...@gmail.com>
wrote:
> *சங்கப்  புலவர்  பாடும்  'பொலிக  பொலிக' ! *
> **
> **
> 'பொலிக  பொலிக   போயிற்று  வல்லுயிர்ச்  சாபம்' என்று  பாடியது   நம்மாழ்வார்
> மட்டும் என்று  நினைத்தேன்.   ஆனால்   இன்னொருவரையும்   அந்த  அணியில்  சேர்க்க
> வேண்டும்  போல்  இருக்கிறது.  அவர்தான்   பரிபாடலின்   முதற்பாடலைப்  பாடிய
> பெருமகனார்.  எதையோ  எதற்கோ  முடிச்சு  போடுகிறேன்  என்றுதானே
> நினைப்பீர்கள்.   பொறுங்கள்.   அப்புறம்  நீங்களே  சொல்வீர்கள்.
>
> திருமாலைப்  பாடுகிறார்   புலவர்  முதல்  பரிபாடலில்.  ஏதோ  கோவிந்தா கிருஷ்ணா
> திருமாலே  என்று   தனக்குத்  தோன்றியதைப்  பாடக்கூடாதோ?    அது என்ன?
> வேதம் எப்படி  எப்படியெல்லாம்    திருமாலைத்   துதித்ததோ   அப்படியே    சாயை
> பிடித்தா  பாடுவது?   பிற்காலத்தில்   யாராவது   ஆரிய  மாயை என்று
> சாடமாட்டார்களோ?    சரி   பாடத்தான்   பாடினாரே   இப்படியா  அப்பட்டமாக
> 'நான்    வேதங்கள்    புகழ்ந்த   நெறிப்படியே   பாடுகிறேன்'  என்று   பதிவு
> செய்து  வைப்பது?   சரி  அது  அந்தக்காலம்.    உள்நோக்கத்துடனான   வெற்று
> அரசியலும்,    பிளவுகளில்   அடைகாக்கும்   வெறுப்பின்   சூழ்ச்சியும்
> புலவர்கள்   மத்தியில்    இல்லாத   காலம்.   மதத்தின்   பெயரால்   சில
> விஷமிகள்   திரிவினைகள்   செய்யத்துணியாத  காலம்.
> அவ்வளவு ஏன்?   தமிழுக்கு     ஒரு
> நல்லடிக்காலம்.     தமிழ்ப்புலவர்களும்   எம்மொழியும்
> கற்று,   எப்பொருளிலும்   பெய்ப்பொருள்   காண  முயன்ற  காலம்.    சரி   நமது
> கருத்துக்கு  வருவோம். ஏன்  இவ்வாறு  கூறுகிறேன்  என்றால்,   திருமாலைப்
> பற்றி   மறை  கண்ட  முடிவு,   அவன்   அன்றலர்ந்த   செந்தாமரை  அன்ன  கண்ணினன்,
> 'தஸ்ய  யதா  கப்யாஸம்   புண்டரீகம் ஏவம்  அக்ஷிணீ' (அந்தப்  பரமபுருஷனுக்கு
> சூரியனால்  மலர்ந்த  தாமரை  போன்ற  இரு  கண்கள்  உள) ---
> காயாவின்  மலர்ந்த   பூவை  ஒத்தக்  கருநிறம்   உடையவன் ---   அகலகில்லேன்
> இறையும் என்று   அலர்மேல்  மங்கை  உறை  மார்பா  என்ற  படி  திரு   விரும்பி
> வாழும்   மார்பினை  உடையவன்  --  மார்பில்   கௌஸ்துபம் என்ற   மணியினைப்
> பூண்டவன் -- நீலமலை  ஒன்றைச்  செந்நெருப்புச்  சூழ்ந்துகொண்டிருப்பது   போன்ற
> பொன்னாலான   பீதாம்பரத்தை  உடையவன் ---  அனைத்தினுள்ளும்   அந்தர்யாமியாய்
> நிறைந்து  அனைத்துப்  பொருட்களையும்  நியமிப்பவனாய்   இருப்பவன் --  என்று
> இவையெல்லாம்    வேதங்கள்    திருமாலைப்  பற்றி   உரைக்கும்   புகழ்.
> இப்பொழுது    சங்கப்  புலவரிடம்  வருவோம்:
>
> எரிமலர்    சினைஇய   கண்ணை!
> பூவை   விரிமலர்   புரையும்  மேனியை!
> மேனித்  திரு  ஞெமர்ந்து   அமர்ந்த  மார்பினை!!
> மார்பில்   தெரிமணி   பிறங்கும்   பூணினை!!
> மால்வரை  எரி  திரிந்தன்ன   பொன்புனை   உடுக்கையை!!
>
> (ஞெமர்ந்து --  பரந்து,  விரும்பி,  நிறைந்து)
> சரி    இத்தனையும்   சங்கப்  புலவர்  பாடிவிட்டுப்  பேசாமல்   போகக்கூடாதா?
> நாங்கள்  பாட்டுக்கு   இப்பொழுது,    இவர்  பாடித்தான்   வேதமே   அதைக்
> காப்பியடித்தது  என்று  சொல்லி  மகிழ்ந்து  போவோமே!   என்ன  செய்வது?   அது
> சங்கப்  புலவருக்கு   உடன்  பாடில்லை.    உடனேயே   கூறுகிறார்,
>
> சேவல்  அம்  கொடியோய் !
> நின்  வலவயின்  நிறுத்தும்
> ஏவல்  உழந்தமை   கூறும்
> நா  வல்   அந்தணர்   அரு   மறைப்  பொருளே!!!
>
> சரி ஏதாவது   தெரியாமல்  சொல்லியிருப்பார்,   போகப்  போகப்
> பார்க்கலாம் என்றால்   இவர் என்ன  ஆழ்வாரா   அன்றேல்   சங்கப்  புலவரா  என்று
> வேறுபாடு   தெரியாத   அளவிற்கு   அவருடைய   வரிகள்   சுழலிடுகின்றன.
> இப்படியே   போனால்   ஆழ்வார்  சங்கப்  புலவரோ   என்ற  நிலைக்குத்தான்
> வருவோம்.  (  அய்யய்யோ   யாரும்  கோபத்தில்  முறைக்காதீங்கோ!)    புலவரின்
> பொற்குரல்   தொடர்கிறது:
>
> 'பொருவேம்'  என்றவர்   மதம்   தபக்   கடந்து,
> செருமேம்பட்ட   செயிர்  தீர்   அண்ணல் !
> இருவர்  தாதை!   இலங்கு  பூண்  மாஅல்!
> தெருள    நின்   வரவு   அறிதல்
> மருள்  அறு   தேர்ச்சி   முனைவர்க்கும்  அரிதே!!
>
> 'கூடாரை  வெல்லும்  சீர்  கோவிந்தன்'  என்றாள்   சங்கத்  தமிழ்மாலை
> முப்பதும்    தந்த   கோதை.
> அது என்ன    இருவருக்கும்   மட்டும்  தாதை?
> 'நாராயணாத்   ப்ரஹ்மா   ஜாயதே   நாராயணாத்   ருத்ரோ   ஜாயதே'  (நாராயணோபநிஷத்)
> 'நான்முகனை   நாராயணன்   படைத்தான்,   நான்முகனும்   தான்முகமாய்ச்
> சங்கரனைத்  தான் படைத்தான்'  என்று   திருமழிசையார்    தமிழ்ப்படுத்திய    வேத
> வாக்கியத்தைச்  சங்கப்  புலவர்    இரு  சொற்களிடைத்  தேக்கி   வெளியிடும்
> அழகே  தனி!    'இருவர்  தாதை'.    சரி   அவ்வாறு  சொன்னவுடன்    அது என்ன
> 'இலங்கு  பூண்  மா அல்' ?   சாந்தோக்கியம்  கூறுகிறது,
> 'ஆப்ரணகாத்   ஸர்வ   ஏவ    ஸுவர்ண:'    'நகத்திலிருந்து    எல்லாம்
> பொன்மயமானவன்'.
> அடுத்த  வரிதான்    மிக  உச்சக்  கட்டமான   வரி!   'தெருள   நின்  வரவு
> அறிதல்   மருளறி  தேர்ச்சி   முனைவர்க்கும்  அரிதே'.     'வரவு
> அறிதல்'  என்றால்?     அவதாரக்  கொள்கை  என்பது   திருமால்   நெறிக்கே
> உரித்தான    கருத்து.    உயர்வற  உயர்நலம்  கொண்டவன்,  ஒத்தாரை  மிக்காரை
> இலையாய   மாமாயன்   எப்படி  எந்நின்ற  நீர்மையுமாய்ப்
> பிறக்கிறான்?   என்பது    ஞானிகளுக்கும்   பெரும்
> புதிர்  என்கிறது    திருமால்  நெறி.     இனிவருவது    சங்கப்   புலவர்
> உரைக்கும்   திருமால்  நெறி:
>
> அருமை  நற்கு  ஆயினும்
> ஆர்வம்  நின்வயின்   பெருமையின்,
> வல்லாய்!    யாம்  இவண்  மொழிபவை
> மெல்லிய  எனாஅ   வெறாஅது
> அல்லி  அம்   திரு   மறு    மார்ப!
> நீ  அருளல்   வேண்டும்
>
> சரி   தன்னோடு  விட்டாரா?   சுற்றம்  புடை  சூழ,  உற்றார்   நட்டார்
> அனைவரையும்   சேர்த்துத்தானே    சங்க  காலத்திலிருந்து    கோதை  உரைத்த
> மறைத்தமிழ்   வரையில்   பழக்கம்.    கூட்டு  சேர்த்துக்  கொண்டுதானே
> கோவிந்தனை  வழிபடச்  சொல்லுகிறாள்   கோதை.   சங்கப்  புலவர்,
>
> ஆங்கு,
> காமரு  சுற்றமொடு   ஒருங்கு    நின்   அடியுறை
> யாம்  இயைந்து   ஒன்றுபு
> வைகலும்   'பொலிக'  என,
> ஏமுறு  நெஞ்சத்தேம்   பரவுதும் ---
> வாய்மொழிப்  புலவ!
> நின்  தாள்  நிழல்   தொழுதே.
>
> கடல்வண்ணன்  பூதங்கள்  மலியப்  புகுந்து   உழிதரக்   கண்டேன்  என்று
> இறும்பூது  எய்திய    நம்மாழ்வார்    சங்க  காலத்தை   நினைத்துத்தான்
> பாடினாரோ?     'பொலிக  பொலிக   போயிற்று  வல்லுயிர்ச்  சாபம்'

சங்கப் புலவரது பாடலா? ஆழ்வார் பாசுரமா?
திருவாசிரியமும் இம்மயக்கத்தைத் தரும்.
பலமுறை படித்துச் சுவைத்தேன், நண்பரே!
சாந்தோக்யத்தின் சாயல் அப்படியே தோய்ந்துள்ளது. என்ன கூறுவது? இவருக்கு
என்ன சாயம் பூசலாம்?
தேவ்

devoo

unread,
Jul 26, 2008, 2:21:20 PM7/26/08
to மின்தமிழ்
‘ப’ வை ‘ப்ர’ ஆக மாற்றி வடசொல் என்பர் என்னும் குற்றச்சாட்டு-
வடமொழி அகராதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட ‘ப்ர’ வில் தொடங்கும்
சொற்கள் உள்ளன. எவை எவை தமிழிலிருந்து சென்றவை என்று பட்டியலிடத் தயாரா?
தேவ்

devoo

unread,
Jul 26, 2008, 2:33:14 PM7/26/08
to மின்தமிழ்



//> *அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர்,
தட்டார்,
> கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர்,
> கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன.*
>
> **
> *"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே" என்கிறது
> புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான்
> குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது. *//
----------------------------------------------------------------------------------
இந்த இழையின் தலைப்பு ‘சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள்’ என்பது.
இதில் சாதிப்பட்டியல் எதற்கு?
இழை பிரித்து முலாம் பூசி மகிழ்வதில் என்ன சுவையோ?
தேவ்

devoo

unread,
Jul 26, 2008, 3:46:29 PM7/26/08
to மின்தமிழ்


.// ரகரத்தை உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு
உள்ள வழக்கம்.//

பஞ்சு, பட்டு, பகழி, பச்சை, படை, பழி, பலா, பறவை, பரவை, படகு, பல்,
பல்லி, பட்டினம், பசை போன்ற சொற்களில் நீர் கூறியபடி ரகரத்தை நுழைத்து
ப்ரஞ்சு, ப்ரட்டு, ப்ரகழி, ப்ரச்சை, ப்ரறவை, ப்ரல்லி என்றாக்கி வடமொழியை
வளம் பெறச்செய்து விட்டனரா என்று மற்றுமொரு முறை கூர்ந்து கவனித்தேன்.
அகராதியில் அப்படியெல்லாம் சொற்கள் இல்லை.
தேவ்
Message has been deleted

இரவா

unread,
Jul 26, 2008, 11:13:14 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்

நான்கு வேதங்கள்

ஆதியில் வேதம் ஒன்றாக இருந்தது. அதற்கு இருக்கு என்று பெயர். இருக்கு வேதத்தில் 1028 பதிகஙகள் உண்டு. பதிகங்கள் என்பன பத்துப் பாடல்கள் கொண்டவை. வேதத்தில் உள்ள பதிகத்தில் பத்துக்குக் கூடியும் குறைந்தும் பாடல்கள் காணப்படுகின்றன. விளங்கும் இலகு நோக்கிப் பதிகம் என்னும் சொல் இங்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவைகளில் பதினொரு பதிகங்கள் வாலகில்லியராற் அவைகளை நீக்கிப் பார்த்தால் இருக்கு வேதத்திலுள்ளவை 1017 பதிகங்களே. 1017 பதிகங்களிலும் 10,600 பாடல்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 33 வரிகள் அச்சிட்டால், இருக்கு வேத பாடல்கள் முழுமையும் 600 பக்கங்களில் அடங்கும். இது கிரேக்க கவியாகிய ஹோமாரின் இல்லியாட் என்னும் நூல் அளவு ஆகும்.

1. It is error to suppose that the pure Aryan race exists any where. The Aryans from very early time were extensively eclectic, and this eclecticism was the secret of their cultureal success. They freely mix with other races. This happened in Europe as well as in India-ibid.

இருக்குவேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலமல்லாமல் அட்டகம் என்னும் இன்னொரு பிரிப்பும் உண்டு. முதல் மண்டலத்திலுள்ள பாடல்கள் பல இருடிகளாற் பாடப்பட்டவை. இரண்டு முதல் எட்டுவரையில் உள்ள பதிகங்கள் ஒவ்வோர் இருடி குடும்பத்தினராற் பாடப்பட்டவை. ஒன்பதாம் மண்டலப் பாடல்கள், பல இருடிகளாற் பாடப்பட்டவை அப்பாடல்கள் முழுமையும் சோம இரசத்தைக் கடவுளாகத் துதிக்கின்றன. ஒன்பதாம் மண்டலத்துக்கும் பத்தாம் பதிகங்கள் காணப்படுகின்றன. பத்தாம் மண்டலப் பாடல்கள் பத்து இருடிகளால் செய்யப்பட்டவை. இப்பாடல்களின் நடை, பொருள்களைக் கொண்டு இவை பிற் காலத்தன என வேத ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர்.

இருக்குவேதத்தினின்றும் பல பாடல்களை எடுத்தும், அவைகளோடு பிற பாடல்களைச் சேர்த்தும் பின்னும் இரு வேதங்கள் செய்யப்பட்டன. அவை யசுர், சாமம் எனப்படும். யாகக் கிரியைகளிற் படிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுதி யசுர் எனப்பட்டது. யசுர் வேதத்திற் காணப்படும் பாடல்களில் பாதிவரையில் இருக்குவேதத்தில் உள்ளன.

சாமவேதத்தில் 1550 பதிகங்கள் வரையில் உள்ளன. இவைகளுட் பெரும்பாலான இருக்குவேதத்தின் ஒன்பதாவது பத்தாவது மண்டலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. சாமவேதம் யாகங்களில் இசையோடு பாடப்படும் பாடல்கள் அடங்கிய பகுதி.

பாடல்களுக்கு நாலு அடிகள் உண்டு@ சில சமயங்களில் மூன்று அல்லது ஐந்து அடிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடிக்கும் எட்டு, பதினொன்று அல்லது பன்னிரண்டு அசைகள் உண்டு. அடிகள் பெரும்பாலும் ஒரே வகையாகவுள்ளன@ சில சமயங்களில் நீளமாகவும் காணப்படுகின்றன. இருக்குவேத பாடல்கள் செய்யப்பட்ட மொழி, மிகப் பழமையுடையது. அம்மொழியின் வளர்ச்சியாகிய பிற்கால இலக்கிய மொழிக்குப் பாணினி முனிவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இலக்கணஞ் செய்தார்.

அதர்வண வேதம் நாலாவதாக உள்ளது. இதில் பில்லி சூனியம் போன்ற மந்திர வித்தைகள் கூறப்படுகின்றன. இதை வேதங்களுட் சேர்க்கலாமா, விடலாமா என்னும் கருத்து நீண்டகாலம் இருந்து வந்தது. ஆகவே சில இடங்களில் நான்கு வேதங்கள் என்றும் சில இடங்களில் மூன்று வேதங்கள் என்றும் கூறப்பட்டிருத்தலைக் காணலாம். மனுஸ் மிருதி மூன்று வேதங்களைப் பற்றிக் கூறுகின்றது.

வேதங்களிற் கூறப்படும் கடவுளர்


இருக்கு வேதத்திற் சொல்லப்படும் கடவுளர், இயற்கையின் உருவகங்களாவர். இறந்தவர் வணக்கமே இயற்கை வணக்கமாக மாறியுள்ளதென்பது பல்லோர் கருத்து.1 இராமாயணத்தின் சிக்கல்கள் (Riddles in Ramayana) என்னும் நூலில், ஆரியரின் தெய்வங்கள் அவர்களின் இறந்த முன்னோர்கள் என வைத்தியா என்னும் அறிஞர் கூறியுள்ளார். வேத பாடல்கள், சோமச்சாறு, நெய், மாமிசம் முதலியவைகளை நெருப்பில் பலியாக இட்டு யாகஞ் செய்யும் போது படித்தற்குரியன.

வேதங்களிற் கூறப்படும் தேவர்கள், தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தர், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அஸ்வினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு, அல்லது, வாதா, பிருதுவி, அக்கினி, பிரகஸ்பதி, சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சுதுட்ரி (Sutlej) ஆறு, சரஸ்வதி (ஆறு) முதலியோராவர். தேவுக்களும் முன்பு இறப்பவர்களாயிருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தெய்வங்கள், வடிவில் மனிதனைப் போன்றனவே. தீக்கடவுளின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன், இவ்வகையினன். கடவுளர், குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கிறார்கள். அவர்களுடைய உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு அவ்வுணவு பலிகள் மூலம் கிடைக்கின்றன. அக்கினி அவர்களுக்கு அவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். சில சமயங்களில் அவர்கள் தமது தேர்களில் வந்து பலிகளை ஏற்கின்றனர். அவர்களின் இருப்பிடம் வானத்திலுள்ள சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்விப்பதால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறுகளைப் போக்குகின்றனர். உலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர்.

Narayanan Kannan

unread,
Jul 27, 2008, 12:57:07 AM7/27/08
to minT...@googlegroups.com
2008/7/27 devoo <rde...@gmail.com>:

> ----------------------------------------------------------------------------------
> இந்த இழையின் தலைப்பு 'சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள்' என்பது.
> இதில் சாதிப்பட்டியல் எதற்கு?
> இழை பிரித்து முலாம் பூசி மகிழ்வதில் என்ன சுவையோ?
> தேவ்

ஜாதி வைத்து குழப்படி செய்து எம் நோக்கை திசை திருப்புவோரை மின் தமி
குழுமத்திலிருந்து விலக்க முடிவு செய்துள்ளோம்.

காலம் விரயமாகிப் போய்க்கொண்டிருக்கிறது. மின்பரப்பில் எத்தனையோ தளங்கள்,
குழுமங்கள் அங்கு போய் பெய்யட்டும் இந்த அமிலமழை.

கண்ணன்

Narayanan Kannan

unread,
Jul 27, 2008, 1:12:00 AM7/27/08
to minT...@googlegroups.com
2008/7/27 இரவா <vasude...@gmail.com>:

> 1. It is error to suppose that the pure Aryan race exists any where. The
> Aryans from very early time were extensively eclectic, and this eclecticism
> was the secret of their cultureal success. They freely mix with other races.
> This happened in Europe as well as in India-ibid.
>

Indian Institute of Science - Super Computer Division ல் வேலை
பார்க்கும் ஓர் விஞ்ஞானியுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது.
கட்டுக்குடுமி, பஞ்ச கச்சம். வித்தியாசமான கெட்அப். அவர் சொன்னார்
வெள்ளையனுடன் இனிமேல் வேதம் பேசுவதில்லை என்று. அதாவது ஆங்கில
ஏகாதிபத்திய காலத்தில் இந்தியர்கள் போற்றி வழிபடும் மறை பொருளைத்
திரித்து மாசு படுத்தி அவர்கள் எண்ணத்தில் குழப்படி செய்யும்படி ஏவப்பட்ட
சில ஏஜெண்டுகள் செய்துவிட்ட திருகுதாளங்கள் 21ம் நூற்றாண்டில்
எதிரொலித்துக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.

சமிஸ்கிருதம் இந்தியமொழி. நம் தந்தையர் மொழி. கம்பனும், நம்மாழ்வாரும்,
திருமழிசை ஆழ்வாரும், ஞானசம்பந்தனும், அருணகிரியும் அறிந்த மொழி. இன்றும்
தமிழ் மண்ணில் வாழும் மொழி (இராஜபாளையத்திற்கு அருகில் 'ராஜு' என்று
சொல்லக்கூடிய மறவர்கள் இன்றும் பேசி வருகிற மொழி). அதைக் கற்பதொன்றும்
அரிதான செயலல்ல. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் கற்றுப் புலமை
பெறவில்லையா?

அப்படிக் கற்று, அறிந்த பின் வாது செய்ய வந்தால் சரி. அந்த
மொழிப்பரிட்சயமே இல்லாமல் வெள்ளையன் சொன்ன மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு
வாது செய்ய வந்தால் என்ன செய்வது? திருமூலர், ஞானசம்மந்தன், கம்பன்,
நம்மாழ்வார் இவர்களும் வேதப்பொருள்தானே சொல்லியிருக்கிறார்கள். அதை
மேற்கோள் காட்டிப் பேச வேண்டியதுதானே? விஷயம் அறிந்தோரின்
நூல்களிலிருந்து எடுத்துப்பேச வேண்டும் என்பது புலவர் தொழில்.

இதை மனதில் வைத்துத்தான் அந்த பெங்களூரூ விஞ்ஞானி அப்படி என்னிடம்
சொன்னார். இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய மொழியின் ஞானத்தை அறிய
ஆங்கில வழி வரவேண்டியுள்ளதே என்பதே இங்குள்ள் அவலம்.

கண்ணன்

Message has been deleted

Tirumurti Vasudevan

unread,
Jul 27, 2008, 3:30:36 AM7/27/08
to minT...@googlegroups.com
ஜம்பு நாதன் என்ற அறிஞர் ஒருவர் தமிழிலேயே வேதத்தை மொழி பெயர்த்து உள்ளார். இவர்கள் அதையாவது படித்து விட்டு பேசலாம்.

என்னதான் முயன்றாலும் மேனாட்டவரால் வேதத்தின் பொருளை உணர்தல் அரிது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட சரியாக பொருள் சொல்ல இயலாது. அதற்கு சம்ஸ்கிருதத்துடன் மீமாம்ஸை என்ற சாத்திரம் படிக்க வேண்டும். அபோது கூட சில இடங்கள் இலைமறை காய் மறையாகவே இருக்கும். பார்வைக்கு ஏற்ப வியக்கியானம் செய்யவும்  இயலும்.
அதனால்தானே அது மறை!

நம் நாட்டவர் சொல்வதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதுவே வெள்ளைக்காரன் சொன்னால் கேள்வி கேட்காமல்  அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்! ஹும்!
ஆரய்ச்சிகள் என்ன சொல்ல முடியும்? "இப்படி இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன." அப்படித்தான் சொல்ல முடியும். அதற்கு மேல் உறுதியாக சில விஷயங்கள் மட்டுமே சொல்ல முடியும். வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே விஷயத்தை காண முடிந்தால் ஒழிய அதை உறுதியாக சொல்லவே முடியாது.

திவா

2008/7/27 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/7/27 இரவா <vasude...@gmail.com>:
> 1. It is error to suppose that the pure Aryan race exists any where. The
> Aryans from very early time were extensively eclectic, and this eclecticism
> was the secret of their cultureal success. They freely mix with other races.
> This happened in Europe as well as in India-ibid.
>


--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

வேந்தன் அரசு

unread,
Jul 27, 2008, 8:43:12 AM7/27/08
to minT...@googlegroups.com


2008/7/27 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

ஜம்பு நாதன் என்ற அறிஞர் ஒருவர் தமிழிலேயே வேதத்தை மொழி பெயர்த்து உள்ளார். இவர்கள் அதையாவது படித்து விட்டு பேசலாம்.

என்னதான் முயன்றாலும் மேனாட்டவரால் வேதத்தின் பொருளை உணர்தல் அரிது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட சரியாக பொருள் சொல்ல இயலாது. அதற்கு சம்ஸ்கிருதத்துடன் மீமாம்ஸை என்ற சாத்திரம் படிக்க வேண்டும். அபோது கூட சில இடங்கள் இலைமறை காய் மறையாகவே இருக்கும். பார்வைக்கு ஏற்ப வியக்கியானம் செய்யவும்  இயலும்.
அதனால்தானே அது மறை!
 
இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.
அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.

Narayanan Kannan

unread,
Jul 27, 2008, 8:58:58 AM7/27/08
to minT...@googlegroups.com
2008/7/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.
> அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.
>

இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?

முன்பு கோடி காட்டினேன். ஆண்டாளின் பாசுரங்கள் தமிழ்தான். ஆனால் அதை ஏன்
'வேதத்தின் சாரம்' என்று சொல்லுகிறார்கள் என்று. அதுவொரு துறை. அத்துறை
சார்ந்த அறிவும், மொழிநடையும், பரிட்சயமும் வேண்டும்.

ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஒருவர் கற்றை இயல் விதிகளை இப்போதே இங்கேயே
விளக்கு என்று பொது மன்றத்தில் கேட்பதில்லை. முதலில் பௌதீகம் படிக்க
வேண்டும், B.Sc., M.Sc வரையிலாவது அத்துறை சார்ந்த அறிவை உருவாக்கிக்
கொள்ள வேண்டும். பின் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ள குழுவில்
சேர்ந்து அது பற்றி மேலும் அலச வேண்டும். இதுதான்முறை.

ஒரு மரியாதையினால், மதிப்பினால் உங்களுக்கு சிலர் கோடி காட்டத்தான்
முடியும். பல்லாயிரமாண்டு வேள்வியின், தேடலின் முடிவை சட்டு புட்டுன்னு
சொல்லிப் போ! என்று எப்படிக் கேட்க முடியும்?

வெறும் பெருமைக்காகச் சொல்லவில்லை. தேட்டமிருந்தால் போய் பாருங்கள். விடை
கிடைக்கும். இது ஆச்சார்ய பீடமல்ல. சின்ன மின்குழு.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Jul 27, 2008, 10:43:34 AM7/27/08
to minT...@googlegroups.com


2008/7/27 Narayanan Kannan <nka...@gmail.com>

devoo

unread,
Jul 27, 2008, 1:02:40 PM7/27/08
to மின்தமிழ்
// இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.
அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.//

'மறை-சந்தஸ்-வேதம்’ என்பது அத்தனை எளிதான விஷயமன்று. மாந்தரின்
அறிவாற்றல் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்டு வியாச முனிவர் அதை
நான்கு பகுதிகளாகப் பிரித்தார். ஈசனின் மூச்சுக்காற்றான மறை இயல்பாகவே
பேறு செய்தோருக்குப் புரியும்படியும், பேறற்றோருக்கு விளங்காத
வகையிலும்தான் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்தது தான் ‘புருஷ ஸூக்தம்’.
அதில் ‘க்ரீஷ்ம இத்ம:’ ‘சரத் ஹவி:’ என உள்ளது. ‘விராட் புருஷன் செய்த
வேள்வியில் கோடை காலம் இந்தனம் ஆயிற்று; முன்பனிப் பருவம் அவியுணவானது’
என்பது அதன் பொருள். மேதாவிகள் உரையிட்டுள்ளனர்; குழப்பமே எஞ்சும்.
ஸ்ரீமத் பாகவதம் இலக்கிய வடிவில் இருப்பினும் அதிலும் பொருள் விளங்காத
ச்லோகங்களை சுக முனிவர் யாத்துள்ளார்.’சுக க்ரந்தி’ என்று கூறுவர்; சுகர்
போட்ட முடிச்சு. அவை ஸமாதி நிலையில்தான் பொருளை விண்டுரைக்கும்.
நிருக்தம்,சந்தஸ்,சிக்ஷா, கல்பம், வ்யாகரணம், மீமாம்ஸை என ஸாங்கோபாங்கமாக
எல்லாம் கற்றால்தான் ஓரளவு பொருள் புரியும்; வேதங்களில் ஒன்றுமே இல்லை
என்றால் இத்தனை முஸ்தீபுகள் எதற்கு? அத்யயநனம் செய்வதற்கான நியமங்கள்
எதற்கு? பக்கம் பக்கமான பாஷ்யங்கள் எதற்கு? ‘ப்ராதிசாக்யம்’ எனும்
அட்டவணை எதற்கு? ‘உப ப்ரஹ்மணம்’ எனப்படும் இதிஹாஸ- புராணங்கள் எதற்கு?
இவையெல்லாம் யாரை வெருட்டி மிரட்டுவதற்கு?
சும்மா என்ன இருக்கிறது? என்ன இருக்கிறது? என்று புலம்பினால் என்ன விடை
கூறுவது?
தேவ்

Tthamizth Tthenee

unread,
Jul 27, 2008, 1:33:33 PM7/27/08
to minT...@googlegroups.com
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புறியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புறிந்து கொண்டால் அவன்தான்இறைவன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/7/27 devoo <rde...@gmail.com>

anupam srivatsav

unread,
Jul 27, 2008, 11:48:52 PM7/27/08
to minT...@googlegroups.com
Dear Sri Srirangam Mohanarangan,

Very nicely you have pointed out the ignorance of the so called "critics".  Let them do the research impartially and they may understand the true significance of the Vedas and the purpose behind the Vedas.

With love,
Anupam.

2008/7/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
தேவூ  சார்,  இதெல்லாம்  புகை   மனிதர்களுடன்  சண்டை  போடுவதுபோல்   மிகுந்த  ஆயாசத்தைக்  கொடுக்கக்கூடியது.  வாய்க்கு  வந்ததைப்  பேசுபவர்க்கு எந்த   உழைப்பும்,   படிப்பும்,  அறுதிப்பாடும்  தேவையில்லை.  தான்  கூறியதை  வைத்து  யாராவது  அறிஞர்கள்,  'என்ன  இப்படிக்கூறுகிறார்களே'  என்று எள்ளி  நகையாடினால்     வாய்க்கு  வந்ததைப்  பேசுவோர்க்கு   அதைப்பற்றியெல்லாம்  வெட்கமே  கிடையாது.  எப்படியோ   தங்கள்  மேல்  பிறருடைய   கவனம்   திரும்பினால்  சரி.  
 
இப்படித்தான்   வேறொரு   குழுமத்தில்    ஒரு  அறிவு  சிகாமணி    'நான்மறை என்றால்   சைவத்தில்   வேறு  நான்மறை.  அது  வடமொழி  நான்மறையைக்   குறிக்கவில்லை'  என்று ஏதேதோ   பிதற்றினார்.   அவருக்குப்  பதிலாக    திருஞானசம்பந்தர்   திருமுறையில்   இருக்கும்   பகுதிகளை  எடுத்துக்காட்டியும்,   திருமந்திரப்  பகுதிகளை எடுத்துக் காட்டியும்   விளக்க  முயன்றேன்.     அதில்  நவ  ஆகமம்  என்று  வருவதைப்  பார்த்து,  'ஆகமம்தான்.   மறை  கிடையாது'  என்று  மறுபடியும்   குதித்தார்.    சரி  மரை  கழண்டால்   நாம் என்ன  செய்யமுடியும்?   நவ  ஆகமத்தில்   முக்கியமானது   காமிகா  ஆகமம்.   அது   1890  களில்   பதிப்பாகியுள்ளது.   அதிலிருந்து    பகுதிகளை  எடுத்துக்காட்டினேன்.   உடனே  சுமேரியா,   கணவாய், என்று    சம்பந்தமில்லாமல்   ஆரம்பித்துவிட்டார்.   இவர்களிடம்  பேசுவதற்குத்  தேவையானது    ஆர்வமோ,   அறிவோ,   சரியான  தகவல்களோ,  குறிப்புகளோ   அல்ல.    வெறும்   வேடிக்கை  பார்த்து  ரசிக்கும்  மனோபாவம்  இருந்தால்  போதும்.   அது என்ன   நான்மறை  சம்பந்தமான   பகுதிகள்  என்று   நீங்கள்  கேட்பதற்கு  முன்னரே   நானே   கீழே  தந்துவிடுகிறேன :--- 
 
'வேதத்தை  விட்ட   அறம்  இல்லை  வேதத்தின் 
ஓதத்தகும்  அறம் எல்லாம்  உள;    தர்க்க  
வாதத்தை  விட்டு,  மதிஞர்,   வளமுற்ற   
வேதத்தை   ஓதியே    வீடு   பெற்றார்களே.  
(திருமந்திரம்  51)  
 
'இந்த   வேதம்   வேற!   அந்த  வேதம்  வேற!  என்று  பேதையர்   கூறித்திரியப்  போகின்றனரே  என்று    திருமூலரே    அடுத்து  வருகின்ற   பாடல்  ஒன்றில்   தெளிவாக்குகிறார். 
 
'இருக்கு  உருவாம்  எழில்  வேதத்தின்   உள்ளே 
உருக்கு  உணர்வாய்   உணர்   வேதத்துள்  ஓங்கி 
வெருக்கு  உரு  ஆகிய    வேதியர்  சொல்லும் 
கருக்  குருவாய்  கண்ணனும்  ஆமே ' 
(திருமந்திரம்   53)  
 
சரி  திருமந்திரம்    ஆகம   சுருக்கம்.   தேவாரத்தில்   மூவர்  முதலிகள்   பாடியுள்ளனரா   வேதத்தின்   பெருமையை?  என்றால்,   திருஞான  சம்பந்தர்   தாம்  பாண்டிய  நாட்டுக்குப்  போக  முற்படுவதன்  நோக்கத்தைப்  பத்துப்  பாடல்களில்    தெரிவிக்கிறார்.    இதற்கு என்ன  செய்ய? 
 
'வேத  வேள்வியை   நிந்தனை  செய்து  உழல்
ஆதமில்  அமணொடு   தேரரை
வாதில்  வென்றழிக்கத்   திருவுள்ளமே.... 
 
வைதிகத்தின்  வழியொழுகாதஅக்  
கைதவம்  உடைக்   காரமண்   தேரரை எய்தி  வாது  செயத்  திருவுள்ளமே....
 
மறைவழக்கம்  இலாத  மாபாவிகள் 
பறி  தலைக்  கையர்,   பாயுடுப்பார்களை  
முறிய  வாது  செயத்  திருவுள்ளமே... 
 
அந்தணாளர்   புரியும்  அறுமறை  
சிந்தை  செய்யா  அருகர்  திறங்களைச்  
சிந்த  வாது  செயத்  திருவுள்ளமே... 
 
வேட்டு  வேள்வி   செயும்   பொருளை,  விளி 
மூட்டு   சிந்தை   முருட்டு  அமண்  குண்டரை  
ஓட்டி   வாது  செயத்  திருவுள்ளமே .... 
 
அழலோம்பு   மறையோர்  திறம் 
விழலது  என்னும்  அருகர்   திறத்திறம் 
கழல  வாது  செயத்  திருவுள்ளமே..'  
(தேவாரம்,  திருஞான  சம்பந்தர்  திரு  ஆலவாய் 108,   3956 -- 3962) 
 
அதெல்லாம்  என்ன   நூற்சான்று   இருந்தால் என்ன?     'அது  வேற  தேவாரம்,  அது  வேற  திருஞான  சம்பந்தர்,   அது  வேற   மறை '  என்று எதையாவது   உளறிக்கொட்டினால், எதிராளி    ஒரு  சமயம்  அலுத்துப்  போய்  'அடப்  போய்யா   வெட்டி  வேலை'  என்று   பின்வாங்கினால்,  அதுதான்   இவர்கள்     விரும்புவது.   இவர்களை  விடுங்கள். 
நீங்கள்   வாருங்கள்     இழையின்  முக்கியக்  கருத்திற்கு.  


devoo

unread,
Jul 28, 2008, 1:19:52 PM7/28/08
to மின்தமிழ்
// மணிப்பவளம் தான் மணிப்ரவாளம் என்று திரிந்தது. மணிமிடைப் பவளம் என்பது
அகநானூற்றில் ஒரு பகுதி. பவளம் என்ற சொல் முற்றிலும் தமிழே. ரகரத்தை
உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு உள்ள
வழக்கம்.
(நன்றி: திரு இராம.கி)//

‘ப்ரவாளம்’ பவளத்திலிருந்து தோன்றியது, சரி
நான் வேறு பல சொற்களைக் காட்டுகிறேன்; மூலத்தமிழ் வடிவம் உம்மிடமிருந்து
கிடைக்குமா? எந்த எந்தத் தமிழ்ப் பதங்களில் ரகரத்தை நுழைத்து
வயப்படுத்திக் கொண்டனர் என்று கூற இயலுமா?
ப்ரணவம்,ப்ரகாசம்,ப்ரஸாதம்,ப்ரமாதம்,ப்ரசாரம்,ப்ரஸாரம்,ப்ரவாணம்,
ப்ரவாஸம்,ப்ரபாதம்,ப்ரதாபம், ப்ரவாஹம்,ப்ரவாசநம், ப்ரயாசாநம், ப்ரயாணம்,
ப்ரதாவநம்,ப்ரதேசம்,ப்ரவேசம்,ப்ராக்ருதம்,
ப்ரசாந்தம்,ப்ரஸாதகம்,ப்ரஹாரணம்,ப்ராங்கணம்.
இன்னும் வேண்டுமா?
தேவ்



anupam srivatsav

unread,
Jul 29, 2008, 12:10:47 AM7/29/08
to minT...@googlegroups.com
Hahaha Devooooooo,

Enna kekkuringa neenga?  Tamil and Sanskrit ??? Only those know know Sanskrit can answer your questions.  I dont think anyone in this group knows Sanskrit.  If you want I can prove that all the words which you said are from Sanskrit and Sanskrit origin only.  But, who can understand the technical and grammatical derivations of the words?

With regards,
Anupam.

2008/7/28 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Jul 29, 2008, 1:07:19 AM7/29/08
to மின்தமிழ்


On Jul 29, 9:10 am, "anupam srivatsav" <anupam.srivat...@gmail.com>
wrote:
But, who can understand the
> technical and grammatical derivations of the words?


Dear Sir,
Pl. just explain grammatical derivations of 'Prachaaram' &
'Pravaaham'.
That may put an end to da immature comments.
Dev

anupam srivatsav

unread,
Jul 29, 2008, 2:29:29 AM7/29/08
to minT...@googlegroups.com
Dear Dev ji:-

Explanation for Prachaaram :-

There is some thing called Upasarga in Sanskrit language.  In Tamil, if we say "athivegam", it implies "Super fast".  Athi in Athivegam is called Upasarga in Sanskrit and these upasargas modify the following verb.  (it is used LIKE adverb in Sanskrit)

The word Pra is one such upasarga.  Pra implies the meaning "nicely done".  It is added to the verb chru, which means "to go".  In Tamil we apply some vigudhi to verbs, so that we can use it in sentenses.  In Sanskrit it is called as pratyaya.  In the case of Prachara, we have to apply ghay pratyaya, which will make the verb a noun.

Therefore pra + chru + ghay = pracharaH

which means, to go nicely everywhere, or to spread the message everywhere.

The second case or objective case of pracharaH = pracharam.

ex: arasiyal thalaivargal indru pracharam seidhargal.


Explanation for Pravaham :-

pra + vah (to carry) + ghay = pravaahaH

Its objective case = pravaaham


Hope one can follow.

With regards,
Anupam.

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 8:16:53 AM7/29/08
to minT...@googlegroups.com
Therefore pra + chru + ghay = pracharaH
 
pra + vah (to carry) + ghay = pravaahaH
 
தமிழுக்கும் வடமொழிக்கும் முதல் எழுத்து ஒற்றுமை இருக்கு
 
சர, செல் என்ற இரண்டுக்கும் சகரம் முதல் எழுத்து ஒற்றுமை
 
அதுபோல் வண்டி, வாகனம், குண்டி, குதம்
 
எனவே இருமொழிகளும் தொடக்கத்தில் ஒருகுடியினரால் பேசபப்ட்டு பின் அந்த குடிகள் பரவியபோது மொழி திசை மாறி இருக்கும்
 
 தமிழில் முன்னொட்டு இல்லை. அல்லது அரிது
வடமொழியில் முன்னொட்டு பெரிய வேலை செய்யும்
 
விபச்சாரம்
அபச்சாரம்
ஆச்சாரம்
ப்ரச்சாரம்

Narayanan Kannan

unread,
Jul 29, 2008, 9:53:12 AM7/29/08
to minT...@googlegroups.com
On 7/29/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> எனவே இருமொழிகளும் தொடக்கத்தில் ஒருகுடியினரால் பேசபப்ட்டு பின் அந்த குடிகள்
> பரவியபோது மொழி திசை மாறி இருக்கும்

இரண்டு மொழிக்கும் நிச்சயம் சம்மந்தமுண்டு என்றுதான் வேதாந்த தேசிகரும்
சொல்கிறார். இரண்டிற்குமிடையில் கொடுக்கல் வாங்கல் நிறைய உண்டு.

நீங்களெல்லாம் சேர்ந்து அந்த ஒருமையைத் தேடித்தாருங்கள்! மிகவும்
மகிழ்வாக இருக்கும்.

கண்ணன்

devoo

unread,
Jul 29, 2008, 11:57:25 AM7/29/08
to மின்தமிழ்
On Jul 29, 5:16 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
//Therefore pra + chru + ghay = pracharaH
pra + vah (to carry) + ghay = pravaahaH
 தமிழில் முன்னொட்டு இல்லை. அல்லது அரிது
வடமொழியில் முன்னொட்டு பெரிய வேலை செய்யும்//


இதனால் ‘ப்ர’ என்பது முன்னொட்டு மட்டுமே. பகரத்தில் ரகரத்தை நுழைத்துச்
சொற்களைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் உத்தி அன்று என்பது தெளிவாகிறது
அல்லவா?
நான் அந்த முடிவையே விரும்பினேன்; அன்பர்கள் பணியை எளிதாக்கி விட்டனர்.
நன்றி.
தேவ்

devoo

unread,
Jul 29, 2008, 1:14:48 PM7/29/08
to மின்தமிழ்
//On Jul 26, 1:21 pm, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
ரகரத்தை உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு
உள்ள வழக்கம்.
(நன்றி: திரு இராம.கி)//

‘உபஸர்கம்’ (முன்னொட்டு)
ப்ர, பரா,அப,ஸம்,அநு,அவ,நிஸ்(நிர்), துஸ்(துர்),
வி,ஆ,நி,அதி4,அபி,அதி,ஸு,உத்,அபி4,ப்ரதி,பரி,உப
ஆகியவை முன்னொட்டுகள். ‘உபஸர்கம்’ எனும் சொல்லிலுள்ள ‘உப’ என்பதும் ஒரு
முன்னொட்டு தான்.
இந்த முன்னொட்டுகளுக்குத் தம்மளவில் யாதொரு பொருளும் கிடையாது. தம்மோடு
இணைகின்ற வேர்ச் சொல்லை ஒட்டியே பொருள் தரும். ஒரே வேர்ச் சொல் (தாது) பல
பொருள்களைத் தருவதாகவும் இருப்பதுண்டு.
‘ப்ர’ என்பதிலுள்ள பகரத்திற்கும், ரகரத்திற்கும் பிற மொழிச் சொற்களை
மதம் மாற்றும் உள்நோக்கம் அறவே கிடையாது என உணர்க.
நம் குழுமதிலுள்ள அன்பர்களும் இதை உறுதி செய்கின்றனர்.
தேவ்


வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 3:07:18 PM7/29/08
to minT...@googlegroups.com


2008/7/29 devoo <rde...@gmail.com>

//On Jul 26, 1:21 pm, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
 ரகரத்தை   உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு
உள்ள வழக்கம்.
 (நன்றி: திரு இராம.கி)//

'உபஸர்கம்' (முன்னொட்டு)
ப்ர, பரா,அப,ஸம்,அநு,அவ,நிஸ்(நிர்), துஸ்(துர்),
வி,ஆ,நி,அதி4,அபி,அதி,ஸு,உத்,அபி4,ப்ரதி,பரி,உப
ஆகியவை முன்னொட்டுகள். 'உபஸர்கம்' எனும் சொல்லிலுள்ள 'உப' என்பதும் ஒரு
முன்னொட்டு தான்.
 
 
 
சம்சாரம் - இணைந்து ஒழுகுபவள்
 
அச்சாரம்?
சமாச்சாரம்??
 

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 3:09:07 PM7/29/08
to minT...@googlegroups.com
முதல் எழுத்து ஒற்றுமை
 
சமஸ்கிருதம் , செம்மொழி, சீர், செம்மை, செங்குன்றன், செங்கோல்

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 3:31:20 PM7/29/08
to minT...@googlegroups.com


2008/7/27 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/7/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
> இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.
> அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.
>

இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?

முன்பு கோடி காட்டினேன். ஆண்டாளின் பாசுரங்கள் தமிழ்தான். ஆனால் அதை ஏன்
'வேதத்தின் சாரம்' என்று சொல்லுகிறார்கள் என்று.
 
என்று சொல்லுகிறார்கள் என்றுதான் சொல்லுகிறீர்க்ளே ஒழிய ஒரு சாம்பிள் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்
 
 
(இங்கே வேதம் என்பதை நான்மறையை மட்டும் என கொள்கிறேன்)

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 3:34:38 PM7/29/08
to minT...@googlegroups.com


2008/7/27 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/7/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
> இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.
> அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.
>

இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?
 
வேட்கையாக இருக்கு கண்ணன்.


ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஒருவர் கற்றை இயல் விதிகளை இப்போதே இங்கேயே
விளக்கு என்று பொது மன்றத்தில் கேட்பதில்லை. முதலில் பௌதீகம் படிக்க
வேண்டும்,
 
கேட்பவருக்கு இல்லையேனும் கற்றை இயல் விதிகளை அவற்றை சொல்லுபவருக்கு தெரியுமே
 
நான்மறை??

ஜடாயு

unread,
Jul 29, 2008, 5:35:10 AM7/29/08
to மின்தமிழ்
பரிபாடல் செய்யுள், வேத மந்திரம் இரண்டிலும் இழையோடிக் கொண்டிருக்கும்
ஒரே ஆன்மிக, பண்பாட்டு சிந்தனைச் செவ்வி பற்றி மிக அழகாக
எழுதியிருக்கின்றார் ஸ்ரீரங்கம் மோகனரங்கம்.. அருமையான கட்டுரை.
தொடரட்டும்..

இதே போன்று வேதகாலம் முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தியப்
பண்பாட்டுத் தொடர்ச்சியை விளக்கி மேலும் பல கட்டுரைகள் வரவேண்டும்..

இந்த மேற்கோள் தொகுப்பைப் பாருங்கள் -

http://www.tamilhindu.com/2008/07/nalvazhvu-venduvom-quotes/


நல்வாழ்வு வேண்டுவோம்!
~ ஜடாயு | நாள்: 2008-07-04 | Edit | பார்வை: 94 | அச்சிட


தேவர்களே!
காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும்.
பூஜைக்குரியவர்களே!
கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும்.
உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன்
ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும்.
உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும்.

- வேத சம்ஹிதை, உபநிஷத் சாந்தி மந்திரம் (”பத்ரம் கர்ணேபி:” என்று
தொடங்கும்)


ஒளி பொங்கும் இந்த சூரிய மண்டலத்தை
நூறு கார்காலங்கள் காண்போம்
நூறு கார்காலங்கள் வாழ்வோம்
நூறு கார்காலங்கள் கூடி மகிழ்ந்திருப்போம்
நூறு கார்காலங்கள் ஆனந்தமடைவோம்
நூறு கார்காலங்கள் (நல்லதைக்) கேட்போம்
நூறு கார்காலங்கள் (நல்லதைப்) பேசுவோம்
நூறு கார்காலங்கள் புதிதாய்ப் பிறப்போம்
நூறு கார்காலங்கள் வெல்லப் படாதிருப்போம்.

(இங்கு கவித்துவமாக “கார்காலங்கள்” என்று சொல்லப்பட்டது ஆண்டுகளைக்
குறித்தது)

- வேத சம்ஹிதை சாந்தி மந்திரம் (”பச்’யேம ச’ரத: ச’தம்” என்று தொடங்கும்)

தேவி!
கல்விமான்களாகவும், புகழ் தேடுபவர்களாகவும், செல்வமுடையவர்களாகவும்
எம்மை ஆக்குவாய்.
வடிவழகு அருள்வாய் வெற்றி அருள்வாய் கீர்த்தி அருள்வாய்
(தீமைகளாகிய) எங்கள் பகைவர்களை நாசம் செய்வாய்.

- அர்கலா ஸ்தோத்ரம், தேவி மகாத்மியம், மார்க்கண்டேய புராணம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

(மலர்மிசை ஏகினான் - மனமாகிய மலர்மீது அமர்ந்த இறைவன்; மாணடி - பெருமை
பொருந்திய திருவடி; நிலமிசை : மண்மீது; நீடு : நீண்டகாலம்)

- திருக்குறள் 1.3

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை(வு) இலை
கண்ணில் நல்லஃ(து) உறும் கழுமல வள நகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(வைகலும் எண்ணில் - தினந்தோறும் நினைந்து வழிபட்டால்; நல்லஃது உறும் -
எப்பொழுதும் நல்லவையே தோன்றும்; கழுமல வளநகர் - திருக்கழுமலம் என்ற வளம்
பொருந்திய ஊர்; பெண்ணின் நல்லாள்: உமாதேவி; பெருந்தகை - பெரியோனாகிய
சிவபிரான்)

- திருஞானசம்பந்தர் தேவாரம் (திருமுறை 3.24.1)

கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினியன கண்டோம்,
தொண்டீர்! எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்,
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே.

(தொண்டீர் - தொண்டர்களே; எல்லீரும் - நீங்கள் எல்லோரும்; வண்டார் தண்ணந்
துழாயன்: வண்டுகள் அலங்கரிக்கும் குளிர்ச்சியான துளசி மாலை அணிந்தவன்)

- நம்மாழ்வார் திருவாய்மொழி 5.2.2 (நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

சித்தத்திலே நின்று சேர்வதுணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.

மாறுதலின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்,
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.

- மகாகவி பாரதி (”வையம் முழுதும்” என்ற பாடல்)

சார்ந்த வகை: இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள்
குறிச்சொற்கள்: features, அமுதமொழி, சமூகம், வேதம்

Narayanan Kannan

unread,
Jul 29, 2008, 9:06:16 PM7/29/08
to minT...@googlegroups.com
2008/7/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> என்று சொல்லுகிறார்கள் என்றுதான் சொல்லுகிறீர்க்ளே ஒழிய ஒரு சாம்பிள் கொடுக்க
> மாட்டேன் என்கிறீர்கள்
>
>
> (இங்கே வேதம் என்பதை நான்மறையை மட்டும் என கொள்கிறேன்)
>


அன்பின் வேந்தரே:

நாதமுனிகள் காலம் தொட்டு வழி வழியாய் வேத, உபநிடதங்களையும் திராவிட
வேதசாரமான ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் முறையாக ஆய்ந்து துய்யும்
ஒரு போக்கு தமிழகத்தில் காணக்கிடைக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம்
ஈட்டின் தமிழாக்கத்தை புருஷோத்தம நாயுடுவின் தமிழ் கொண்டு வெளியிட்டது.

காலட்சேபம் என்றொரு வழக்கம் இருக்கிறது. அதில் நாலாயிர திவ்யப்பிரபந்தம்
அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கம்
சொல்லி மகிழும் ஒரு நீண்ட சம்பிரதாயமும் உள்ளது.

உபன்யாசம் என்றொரு வழக்குமுண்டு. இது, காலட்சேபத்தின் சாரத்தை சில
மணிகளில் வழங்கும் உரைகள். பெரிய, பெரிய ஜாம்ப்வான்களின்
உபன்யாசங்களையெல்லாம் காலம் பதிக்காமல் கொண்டு போய்விட்டது. சமகால
அரங்கில் இரண்டு பேர் ஜொலிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ஸ்ரீகிருஷ்ணப்பிரேமி
அண்ணா மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். வேளுக்குடியின் உரைகள் பல
தொலைக்காட்சிகளில் காணக்கிடைக்கின்றன. கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசங்கள்
மிகவும் முறையாக ஆடியோ கேசட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில்
வாங்கலாம்.

ஆண்டாள் பற்றிய ஒரு அழகிய உபன்யாசம் பிரதிவாதி பயங்கரம்
அன்னங்கராச்சாரியர் சுவாமிகளால் "ஆண்டாள் திருக்கல்யாணம்" என்ற தலைப்பில்
கீழ்க்காணும் உரலில் கேட்கக்கிடைக்கிறது.

http://www.acharya.org/mmedia/audio/upanyasam/index.html

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் எனும் http://www.acharya.org/whatsnew.html
இத்தளத்தில் முறையாக நாலாயிரத்திற்கும் உரை சொல்லும் ஒரு பதிவு
இருக்கிறது. மதுரகவிதாசன் என்பவர் எளிய, அழகிய தமிழில் உரை சொல்லுகிறார்.
கேட்டு அனுபவியுங்கள்.

கிருஷ்ணப்பிரேமி அண்ணா பற்றிய விவரங்களை தேவராஜ் சார் மேலும் சொல்லலாம்.

தேடும் உள்ளம் வரவேண்டும். அள்ள, அள்ளக் குறையாத அளவு அமுதப்பிரவாகம்
காத்திருக்கிறது.

சங்கம் தொட்டு வரும் மரபு பற்றிய மேல் விவரங்களை அரங்கனார் அருளவேண்டும்.
மிகவும் ஆச்சர்யமான ஒரு தொடர்ச்சி உள்ளது.


"செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்"

கண்ணன்

பிகு: லண்டன் கல்யாணசுந்தர குருக்கள் ஒரு மின்னுலகத்தேனீ. அவருக்கு
இன்னும் பல தளங்கள் தெரியும். எனக்கு அவ்வப்போது அருமருந்து தருபவர்
அவரே!

Narayanan Kannan

unread,
Jul 29, 2008, 9:22:51 PM7/29/08
to minT...@googlegroups.com
அன்பின் ஜடாயு:

வருக, வருக.
நீங்களோர் மின்பதிவுத் தாரகை.
நீங்களும் அரங்கனாரும் சேர்ந்து ஒரு Pan Indian paranoma தந்து அதில்
நம்மவரின் அளப்பரிய பங்களிப்பைக் காட்டி எப்படி இந்திய ஞானம் என்பது
சிறுதுளி பெருவெள்ளம் (I mean regional contribution) போல் இந்திய
மண்ணில் உருக்கொள்கிறது என்று இங்கு காட்ட வேண்டும்.

ஆண்டாள் சொல்வது போல் கூடி நின்று

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!!
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

கண்ணன்


2008/7/29 ஜடாயு <jata...@gmail.com>:

devoo

unread,
Jul 29, 2008, 11:08:15 PM7/29/08
to மின்தமிழ்


On Jul 30, 12:31 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
// முன்பு கோடி காட்டினேன். ஆண்டாளின் பாசுரங்கள் தமிழ்தான். ஆனால் அதை
ஏன்
'வேதத்தின் சாரம்' என்று சொல்லுகிறார்கள் என்று.

என்று சொல்லுகிறார்கள் என்றுதான் சொல்லுகிறீர்க்ளே ஒழிய ஒரு சாம்பிள்
கொடுக்க
மாட்டேன் என்கிறீர்கள்//
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)


வேதமும், கோதையும்:

வேத மந்திரங்களில் செழுமையையும், உடல் நலத்தையும் (இம்மைக்கான பலன்களை)
தேவர்களிடம் கோரும் ஸூக்தங்கள் உள்ளன; ஆண்டாளும் தோழியரைப் பறை
வேண்டுவதற்காகக் கண்ணனிடம் அழைத்துச் செல்வது போல் அபிநயிக்கிறாள். அவளது
உண்மையான நோக்கம் மாதவனிடத்தில் மீளாஅடிமை வாழ்வைக் கோரிப் பெறுவதே.
மறைகளின் முக்கிய நோக்கம் இறவாப்பெருநிலையை மாந்தருக்கு அளிப்பது.
(கீதையும் மறைகளின் உண்மையான நோக்கை உணர்த்த அவதரித்ததுதான்)
முதலிலேயே அதை உபந்யாஸம் செய்தால் யாரும் அருகில் நெருங்க மாட்டார்.

மறை மொழிகளின் ப்ரார்த்தனை பெருவாரியாகப் பன்மையில் அமைந்துள்ளது.
(எ-கா) காயத்ரி மந்த்ரத்தின் ‘தியோ யோ ந:‘ (ந:-நமக்கு)
பச்யேம, ஜீவேம, நந்தாம, மோதாம, பவாம சரத: சதம். (சேர்ந்து
காண்போம்,வாழ்வோம்,இன்புறுவோம்)
பிற மதங்களில்தான் கூட்டுவழிபாடு என இன்றும் பல அறிவுஜீவிகள்
கொடிபிடித்து வருகின்றனர் !!
நாச்சியார் கூடி இருந்து குளிர வழிகாட்டுகிறார்.

மறையின் போக்கில் திடீர் திடீரென மாயவனின் உலகளந்த லீலை ஆங்காங்கே
பேசப்படும்; மறை புகன்றால் அப்படியே ஏற்க வேண்டியது தான்; குழும
ஆராய்ச்சியால் பயனில்லை.
பாவையிலும் அதையொட்டி முதலிலும், இடையிலும், இறுதியிலும் ‘ஓங்கி
உலகளந்த’
உத்தமனைப் போற்றுகிறார் பட்டர்பிரான் கோதை.

பாவை இரண்டாம் பாடலில் இடம்பெறும் நியமங்கள் வேள்விக்குரிய நியமங்களின்
கூறு.
இது போலவே ஸம்ஹிதைக்கும், பாவைக்குமான ஒற்றுமைகள் பல உள.
வேதத்தின் பல கூறுகளை அதை அத்யயநம் செய்தறியாத ஆண்டாள் எப்படி உணர்ந்தாள்
என்பது வியப்புக்குரிய உண்மை; ஆண்டாளின் தனித்தன்மை பலவிதங்களிலும்
பூர்வாசார்யர்களை வியக்க வைத்துள்ளது.

தேவ்

devoo

unread,
Jul 29, 2008, 11:25:37 PM7/29/08
to மின்தமிழ்


//On Jul 30, 12:34 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
wrote:


ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஒருவர் கற்றை இயல் விதிகளை இப்போதே
இங்கேயே
விளக்கு என்று பொது மன்றத்தில் கேட்பதில்லை. முதலில் பௌதீகம் படிக்க
வேண்டும்,

கேட்பவருக்கு இல்லையேனும் கற்றை இயல் விதிகளை அவற்றை சொல்லுபவருக்கு
தெரியுமே
நான்மறை?? வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)//

மறையின் உட்பொருளை விளக்குவது கடினம் என்றுதான் ஒப்புக்கொள்கிறார்களே
ஐயா!
விடாமல் கேட்கிறீரே.
ஒருகால் வேதாகமங்களை ஓதாமல் உணர்ந்த நம்பியாண்டார் நம்பி எதிரே
வந்தாலும், அவர் கூறுவதைப் புரிந்துகொள்ள முடியுமா?
பரிபக்வம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
வேத உண்மைகள் வாரப் பத்திரிகைகளில் வெளியாகும் ‘டிட்பிட்ஸ்’ அல்ல; போகிற
போக்கில் படித்து விட்டுக் கடாசுவதற்கு.
‘மகட்குத்தாய் தன் மணாளனோடாடிய சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு
எங்ஙனே?’ என்னும் கேள்வி உம்மைப் போன்றோருக்கானதுதான்.
தேவ்


devoo

unread,
Jul 30, 2008, 3:43:49 AM7/30/08
to மின்தமிழ்
On Jul 29, 2:35 pm, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> கண்டோம் கண்டோம் கண்டோம்
> கண்ணுக்கினியன கண்டோம்,
> தொண்டீர்! எல்லீரும் வாரீர்
> தொழுது தொழுது நின்றார்த்தும்,

‘ஜடாயு’ அவர்களின் வரவு நல்வரவாகுக !
வருகை புரிந்தமைக்கு நன்றி.
கண்ணன் சார் கூறியதை அப்படியே அக்ஷரம் பிசகாமல் வழி மொழிகிறேன்.
தேவ்


ஜடாயு

unread,
Jul 30, 2008, 4:59:50 AM7/30/08
to மின்தமிழ்
தேவு, கண்ணன் - தங்கள் முகமன் மொழிகளுக்கு மிக்க நன்றி தன்யனானேன்.

வேதம், ஆகமம், சைவம், வேதாந்தம், சித்தாந்தம் - இவை பற்றி தமிழகத்தில்
சில அபத்த பண்டிதர்கள் கூறிவரும் பொய்மையும், அறியாமையையும் கலந்த
விஷயங்களை இரவா இந்தத் திரியிலும் அப்படியே கொட்டியிருக்கிறார்..
(வேதத்தில் சிவ/லிங்க வழிபாடு இல்லை, சைவத்தில் வேதத்தை விட ஆகமம்
முக்கியம், சைவப் பெரியோர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் இத்யாதி
இத்யாதி....)

வாரியார் சுவாமிகள், தருமபுர ஆதினத்தார்கள், பண்டிதர் சிவஸ்ரீ
அருணைவடிவேல் முதலியார் போன்ற பல பெரியோர்கள் இந்தப் புரட்டுகளை மிகத்
தெளிவாக மறுத்திருக்கிறார்கள்... வேத-சைவ மரபுகளின் ஒருமையை அற்புதமாக
விளக்கியிருக்கின்றனர்..

சமீபத்தில், தமிழகத்தில் நன்கறியப்பட்ட ஒரு ஆன்மிகப் பேச்சாளருடன் இது
தொடர்பாக நான் நிகழ்த்திய உரையாடல் - ஏற்கனவே 4 பகுதிகளாக திண்ணை இதழில்
வந்தது.. இங்கு இரவா கேட்ட, கேட்காத பல கேள்விகளுக்கும் இதில்
விடையளிக்க முயற்சித்திருக்கிறேன்..

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்:

பகுதி 1: http://jataayu.blogspot.com/2008/06/1.html
பகுதி 2: http://jataayu.blogspot.com/2008/06/2.html
பகுதி 3: http://jataayu.blogspot.com/2008/06/3.html
பகுதி 4: http://jataayu.blogspot.com/2008/06/4.html

தாயுமானர், குமரகுருபரர் தொடங்கி வ.உ.சி வரையில் வேதநெறியும், சைவமும்
ஒன்றே, வேதாந்தமும், சித்தாந்தமும் ஒன்றே என்று அறுதியிட்டுக்
கூறியுள்ளனர்.. அத்தகைய மேற்கோள்கள் சிலவும் இந்தத் தொகுப்பில் உண்டு.

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 9:46:50 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/29 devoo rde...@gmail.com



மறையின் உட்பொருளை விளக்குவது கடினம் என்றுதான் ஒப்புக்கொள்கிறார்களே
ஐயா!
விடாமல் கேட்கிறீரே.
 
 
இப்படி சொல்லித்தான் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே எம் நிலை. அதனால் ஒரு  விடிவு  கிடைக்கும்  வரை  கேட்பேன்.
 
 விளக்குவது கடினம் என்றால் அது யாருக்குமே தெரியவில்லை என்றுதான் அருத்தம். யாருக்குமே தெரியலேன்னா  வேதத்தில் அது இருக்கு இது இருக்குனு சொல்வதை நிறுத்தி விடலாம்
 
இருப்பதை மட்டும் சொல்லுங்கள்.  புரிந்துகொள்வேன்.
 
கெமிஸ்றி படித்தவனுக்கு பிசிக்ஸ் சொல்லிகொடுபப்து அவ்வளவு கடினமான் செயலா?
 
 
 
--

devoo

unread,
Jul 30, 2008, 11:59:29 AM7/30/08
to மின்தமிழ்
On Jul 30, 6:06 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
// சங்கம் தொட்டு வரும் மரபு பற்றிய மேல் விவரங்களை அரங்கனார்
அருளவேண்டும்.
ஆச்சர்யமான ஒரு தொடர்ச்சி உள்ளது.
கண்ணன்//


வேதத்தின் சாயையைப் பரிபாடலில் இருப்பதை இருப்பதைப் பார்த்து வியந்தோம்;
சங்கத்தமிழின் தொடர்ச்சியே ஆழ்வார்களின் பைந்தமிழ்ப் பாசுரங்கள் என்று
பலவகையாக நிரூபித்தாலும் ஒப்புக்கொள்ளாதவர்களை என்ன செய்ய இயலும் ? நாலு
கவியாரான திருமங்கை மன்னர் காலத்திற்கு 900 ஆண்டுகளுக்குப் பின்தோன்றிய
திவ்ய கவியாரின் பாடல்களிலும் சங்கநடை தொடர்வதாக உணர்கிறேன்.
நடுநிலையாளர் நயமுணர்த்த வேண்டும் -

மலர்தலை யுலகத்துப் புலமை சான்ற
பதின்மரும் பணித்த பாடலோ தையொடு
முதுமறை கரங்க முரசம் ஆர்ப்ப
வலம்புரி பிளிறும் பொலம்புரி கோயில்
ஆழியஞ் செல்வ! ஆதியம் பரம!
வாழி வாழி ! மாயோய் வாழி !
நெடியோய் வாழி! நின்மாட் டொன்றே !
அடியேன் வேண்டுவ தஃதுநீ மறுக்கேல்:
பூவரும் அயன்முதல் யாவரும் அறியா
மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தித்
தொழுதகைத் தொண்டர்தம் தொண்டருள்
சேர்க்காது,
எழுவகைத் தோற்றத் தின்னாப் பிறப்பின்
என்பொழியாக்கையுள் சேர்ப்பினும், அவர்பால்
அன்பொழி யாமை அருள்மதி எனக்கே !
(திருவரங்கக் கலம்பகம்)

பாடல் ஆசிரியச் சுரிதக வகையைச் சார்ந்தது என நூல் பகர்கிறது.
அது யாதென்றறியேன். பாடம் சொல்லும் தகுதி வாய்ந்த பலர் குழுமத்தில்
உள்ளனர். நூல் நயத்தைப் பகிர்ந்து கொண்டால் அனைவரும் சுவைத்து
இன்புறலாம்.

தேவ்



devoo

unread,
Jul 30, 2008, 2:13:22 PM7/30/08
to மின்தமிழ்


On Jul 30, 12:07 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
//சம்சாரம் - இணைந்து ஒழுகுபவள்
அச்சாரம்?
சமாச்சாரம்??//

ஸம்ஸார: - பாதை, உலகியல் வாழ்க்கை (ஸம்யக் ஸ்ரவதி இதி ஸம்ஸார:)
புருஷ: - ஆண்மகன், உடலுள் உறையும் பரமன் (புர்யாம் சேதே இதி புருஷ:)
மனைவியை ‘சம்சாரம்’ என்றும், கணவனை ‘புருஷன்’ என்றும் கூறுவது
தமிழகத்தில் மட்டும் உள்ள பாமரர் வழக்கு. அது என்றிலிருந்து, எப்படி
ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
‘அச்சாரம்’ என்பது வட சொல் அன்று.
ஸமாசாரம் - செய்தி, நன்னடத்தை

‘ஸ’ ‘ச’ இவற்றுக்கிடையேயான வேறுபாட்டையாவது குறைந்த பட்சம் கற்றுணர்க.

‘கெமிஸ்ட்ரி’ தேர்ச்சி பெற்றாயிற்று; ‘பிஸிக்ஸ்’ மட்டும் தான் பாக்கி
என்று வேறு சொல்லிக்கொள்கிறீர்.

தேவ்


வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 7:50:55 PM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 devoo <rde...@gmail.com>
 நீங்க சொல்லுற பிஸிக்ஸ் புரியுதுஙக தேவூ
 
நன்றி
 
சந்திப்பு என்பதுக்கும் "சம்" என்ற வேர்சொல்தானே?

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 8:24:03 PM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
>
> இப்படி சொல்லித்தான் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே எம் நிலை. அதனால் ஒரு
> விடிவு கிடைக்கும் வரை கேட்பேன்.


:-)

இதனால்தானோ கிருஷ்ணனை மாயாவி என்று வைத்தனர்?

வேந்தன் இது நிச்சயம் "ஏமாற்று வேலை"தான். எதையும் நம்ப வேண்டாம்! சுத்த
சத்வ நிலை வரும்வரை!!

ஆனால் எங்களை நிரூபிக்கச் சொல்லாதீர்! நாங்கள் யாரும் இராமகிருஷ்ணர் இல்லை :-))

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 9:14:29 PM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>
சொல்லமாட்டேன் கண்ணன்.
வேதத்தில் இது இருக்கு என்று நீங்கள் சொல்லாதவரையில்.

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 9:17:55 PM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> சொல்லமாட்டேன் கண்ணன்.
> வேதத்தில் இது இருக்கு என்று நீங்கள் சொல்லாதவரையில்.

வேதத்தில் 'அது' இருக்கு என்று சொல்லவில்லை. வேதவே விக்கித்துப்போய்
நிற்கிறது என்றுதான் சொல்கிறோம் :-))

கண்ணன்

Subramaniam

unread,
Jul 30, 2008, 5:07:58 PM7/30/08
to மின்தமிழ்

> வேந்தன், காலம் விட்டுக் காலம் போய்ப் பார்க்கும் போது நாம் பல
> அளவுகால்களையும், காரணிகளையும் விடுத்தும், மாற்றியும் கொள்ள
> வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு படிப்பு என்பது. அச்சு வந்த
> பின்னர்தான் படிப்பு என்று கண்வழிக் காரியம் அறிவு பெறுவதற்கு

ஆகா அபாரம்

இன்றும் .... அச்சுக்லை வளர்ந்தபோதும், (மறை)நூல் எட்டில் மட்டும்
இல்லாது... living tradionஆக... வாழும் வழியாய் இருக்க வேண்டுமெனில்,
ஏட்டில் அல்ல, அவை மனதில் நிற்கவேண்டும்

அதானால் தான் "கேள்வி" முன் நிருத்தப்பட்டிருக்க வேண்டும்

எந்த ஒரு பாட்டையும் பாடும் போது (சினிமாப் பாட்டயினும்,
இறைவணக்கமாயினும்) மனதில் வரும் எண்ணங்கள், தட்டித் தடவி புத்தகத்தில்
படிக்கும் போது வாரா


அன்புடன்
சுப்பு



On Jul 21, 7:56 am, "srirangammohanarangan v" <ranganvm...@gmail.com>
wrote:
> வேந்தன், காலம் விட்டுக் காலம் போய்ப் பார்க்கும் போது நாம் பல
> அளவுகால்களையும், காரணிகளையும் விடுத்தும், மாற்றியும் கொள்ள
> வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு படிப்பு என்பது. அச்சு வந்த
> பின்னர்தான் படிப்பு என்று கண்வழிக் காரியம் அறிவு பெறுவதற்கு
> நெறியாக அமைந்தது. நமது அறிவுக்கூடங்கள், கலாசாலைகள்,
> பல்கலைக்கழகங்கள் எல்லாமே கண், படிப்பு என்ற அடிப்படையில்
> இயங்குவது எனலாம். அந்தக் காலத்தில் கண் படிப்புக்கு
> முக்கியம் என்பதைவிட காதுகள் படிப்புக்கு முக்கியம். எனவே நாம்
> 'படித்தவர்கள்' என்று சொல்வது அந்தக் காலத்தில்
> 'கேட்டவர்கள்' என்ற சொல்லால் கையாளப்பட்டது. அறிவுக்கு 'கேள்வி'
> பெருநெறியாகக் கருதப்பட்டது. எனவேதான் செல்வத்துட்ச் செல்வம்
> செவிச்செல்வம் என்றார் செந்நாப் போதாரும்.
>
> 2008/7/21 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>:
>
> > அரங்கர்
>
> > இந்த வேத வரிகள் எந்த வேதத்தில் இருந்து எடுககபப்ட்டது?
>
> > மேலும்
>
> > வேத முதல்வன்--- என்ப --- --
> > தீது அற விளங்கிய திகிரியோனே
>
> > இந்த என்ப என்ற சொல்லை கவனிக்க வேண்டும்.
>
> > அந்த காலத்தில் படிப்பறிவு குறைவு. ஓதப்பட்ட வேதங்களை (மறை என்றே தமிழில்
> > சொல்லப்படும்) தமிழ் அறிஞர்கள் கூட அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு
>
> > எனவே புலவர் செவிவழி கேட்டதுதான் " என்ப" என்ற சொல்லால் குறிக்கிறார் என
> > கொள்ளலாமா?
>
> > மாறாக இப்படி யாத்து இருக்க்லாம்
>
> > "வேத முதல்வன்--- அன்றோ --- --
> > தீது அற விளங்கிய திகிரியோனே "

Subramaniam

unread,
Jul 30, 2008, 5:14:36 PM7/30/08
to மின்தமிழ்
பெருமானோ, பெருமாளோ !!

உங்க புண்ணியத்தில் ஒரு திருப்புகழ் படிக்க முடிந்தது....

நாங்க பட்டையும் படிப்போம் !!!

அன்புடன்
சுப்பு


Narayanan Kannan wrote:
> 2008/7/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> >> சுத்தமான தமிழ்க் கட்டுரையை மணிப்ராவாள நடை
> > என்று வர்ணித்தால் என்ன தவரு..?
> >
>
> என்ன இப்படி அந்தர்பல்டி? சுத்தமான தமிழ்க் கட்டுரை எப்படி
> மணிப்பவளமாகும்? மணிதானே உண்டு. பவளம் எங்கே? பெரியவாச்சான் பிள்ளை
> வியாக்கியானம் படித்துப் பாருங்கள் இல்லை வேறு ஏதேனும் வேதாந்த உரை
> படித்துப்பாருங்கள். மணிப்பவள நடையின் ஆழ்ந்த பொருள் விளங்கும்.
>
> ஏன்? திருப்புகழ் பல மணிப்பவளம்தான்.
>
>
>
> அபகார நிந்தைபட் ...... டுழலாதே
> அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
>
> உபதேச மந்திரப் ...... பொருளாலே
> உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
>
> இபமாமு கன்தனக் ...... கிளையோனே
> இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
>
> ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
> திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
>
>
> அதுதான் அவரும் பெருமாளே என்கிறார் போலக்கிடக்கு :-)
>
> கண்ணன்

Hari Krishnan

unread,
Jul 30, 2008, 11:04:23 PM7/30/08
to minT...@googlegroups.com
 
Narayanan Kannan wrote:
>
> ஏன்? திருப்புகழ் பல மணிப்பவளம்தான்.
 
தலைப்பை விட்டு தள்ளிப் போதல், statutory warning என்றெல்லாம் அச்சுறுத்துகிறார்கள்.  நானும் பத்து வருஷமாய் மின்மடல் குழுக்களில் குப்பை கொட்டி, அலுத்து ஒதுங்கி, ஏதோ கண்ணபிரான் திருவாக்கால் திரும்ப வந்தவன்தான்.  எல்லா இடங்களிலும் சகஜமாக உரையாடுவது வழக்கம்தான்.  ஆனாலும் இப்படி ஒரு வார்த்தை வந்தால் நேற்றைக்குத்தான் இங்கே வந்தவன் என்பதனால் பேசத் தயக்கம் ஏற்படுகிறது.  இருந்தாலும் இதோ ஒன்றே ஒன்று சொல்லிவிட்டு ஓடிப் போய்விடுகிறேன்.  இனிமேல் தலைப்பா புடவையா எது பெரிசு என்று தீர்மானம் ஆனபிறகு எந்தப் பக்கத்தில் நிற்பது என்று தெரிந்துகொண்டபின் எழுதுகிறேன்.
 
திருப்புகழில் சுமார் 60 சதம் தமிழ்தான், தமிழ்தான், தமிழ் மட்டுமேதான்.  ஆம்ம்ம்மாம்...செந்தமிழாலே பகரார்வமீ அப்படின்னு முருகனிடம் கேட்டுக் கொண்டவர் எங்காளு.  அந்தப் பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன். 
 
சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணிபாச சங்க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா
குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.
 
கூறு இட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ.  இது நிச்சயமா தமிழ்தான்.  தமிழ் மட்டும்தான்.  ம்ம்?  இன்னா? புர்தா?
 
இப்போதைக்கு வார்த்தை வார்த்தையா பிரிச்சு மட்டும் போடறேன். 
 
சிகர அத்ரி கூறு இட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆரவம் ஈ. பணி பாச சங்க்ராம, பணா மகுட, நிகராட்சம, பட்ச, பட்சி துரங்க ந்ருபகுமரா, குக, ராட்சச பட்ச விட்சோப தீர குண துங்கனே.
 
இன்னா தமிளு இன்னா தமிளு...
 
வேணா.  அப்பாலிக்கு அல்லாம் தலப்பு உட்டு அன்னான்ட போய்ட்ட அப்டீன்னு மொலுமொலுன்னு புட்ச்சிக்குவாங்கோ... எனுக்கு இந்த குயு பத்தி அன்டர்ஸ்டான்டிங் ஆன அப்பாலிக்கி ரைட்டிங் பண்றதா வேணாவா அப்டின்னு பாத்துக்கலாம்.
 
வேலும் மயிலும் துணை. 
--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 11:43:57 PM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> தலைப்பை விட்டு தள்ளிப் போதல், statutory warning என்றெல்லாம்
> அச்சுறுத்துகிறார்கள். நானும் பத்து வருஷமாய் மின்மடல் குழுக்களில் குப்பை
> கொட்டி, அலுத்து ஒதுங்கி, ஏதோ கண்ணபிரான் திருவாக்கால் திரும்ப வந்தவன்தான்.
> எல்லா இடங்களிலும் சகஜமாக உரையாடுவது வழக்கம்தான். ஆனாலும் இப்படி ஒரு
> வார்த்தை வந்தால் நேற்றைக்குத்தான் இங்கே வந்தவன் என்பதனால் பேசத் தயக்கம்
> ஏற்படுகிறது. இருந்தாலும் இதோ ஒன்றே ஒன்று சொல்லிவிட்டு ஓடிப்
> போய்விடுகிறேன். இனிமேல் தலைப்பா புடவையா எது பெரிசு என்று தீர்மானம் ஆனபிறகு
> எந்தப் பக்கத்தில் நிற்பது என்று தெரிந்துகொண்டபின் எழுதுகிறேன்.
>

அன்பின் ஹரி:

திரும்ப ஆரண்யவாசம் வேண்டாம் :-) நீங்கள் எழுதுங்கள். தமிழ்ச் சுவை
அறிந்தால்தானே அதைக் காக்க வேண்டுமென்ற புத்தி வரும்.


> திருப்புகழில் சுமார் 60 சதம் தமிழ்தான், தமிழ்தான், தமிழ் மட்டுமேதான்.
> ஆம்ம்ம்மாம்...செந்தமிழாலே பகரார்வமீ அப்படின்னு முருகனிடம் கேட்டுக் கொண்டவர்
> எங்காளு. அந்தப் பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன்.
>

ஹா! ஹா!!

எங்க அக்கா இந்தப்பாட்டையெல்லாம் பாடுவார்கள் சின்ன வயதில். என்னதான்
சொன்னாலும் அதிலே ஒரு சுகம் இருக்கு ஐயா. இவரின் சந்தத்திற்கு நிகர்
வேறுயார்?


கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Jul 31, 2008, 12:21:45 AM7/31/08
to minT...@googlegroups.com
ஹரி வாத்யாரே! உங்களுக்கு தெரியாததா!
நல்லாத்தான் எளுதறீங்க.
இன்னா, வேற ஒரு நூலு ஆரம்பிச்சு எளுதலாம்.

கொஞ்சம் அண்ணாண்ட போனா எழுத ஆரம்பிச்சவரு ஆப் ஆய்டாரு பாருங்க.
அதான். வேற ஒண்ணுமில்லே!
தப்பா எளிதி இர்ந்தா மன்னாப்பு கேட்டுகிறேன்.. இன்னா?
திவா

ஜாம்பஜார் ஜக்குவ எங்கியாச்சும் பாத்தீங்களா?

2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> தலைப்பை விட்டு தள்ளிப் போதல், statutory warning என்றெல்லாம்
> அச்சுறுத்துகிறார்கள். நானும் பத்து வருஷமாய் மின்மடல் குழுக்களில் குப்பை

> கொட்டி, அலுத்து ஒதுங்கி, ஏதோ கண்ணபிரான் திருவாக்கால் திரும்ப வந்தவன்தான். .....

> வேணா. அப்பாலிக்கு அல்லாம் தலப்பு உட்டு அன்னான்ட போய்ட்ட அப்டீன்னு
> மொலுமொலுன்னு புட்ச்சிக்குவாங்கோ... எனுக்கு இந்த குயு பத்தி அன்டர்ஸ்டான்டிங்
> ஆன அப்பாலிக்கி ரைட்டிங் பண்றதா வேணாவா அப்டின்னு பாத்துக்கலாம்.


--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

devoo

unread,
Jul 31, 2008, 2:46:29 AM7/31/08
to மின்தமிழ்


On Jul 31, 8:04 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
றே ஒன்று சொல்லிவிட்டு ஓடிப்

// சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணிபாச சங்க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா
குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.

சிகர அத்ரி கூறு இட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆரவம் ஈ. பணி
பாச
சங்க்ராம, பணா மகுட, நிகராட்சம, பட்ச, பட்சி துரங்க ந்ருபகுமரா, குக,
ராட்சச
பட்ச விட்சோப தீர குண துங்கனே//

ஹரிஹி நான்கு வரி எடுத்து 27 சொற்களாகப் பகுத்தார். ஏழு தமிழ்ச் சொற்களே
எஞ்சின. என்ன கூறுவது ?
அருணகிரியார் முத்தமிழை ‘தமிழ்த்ரயம்’ என்று விளித்தவர்; இந்த
விவாதத்தில் காரணமாகத்தான் இவரை இழுக்கவில்லை; கந்தனிடம் ஜபமாலை பெற்று,
உபதேசமும் வாங்கியாயிற்று. அவன்தான் ‘சும்மா இரு; சொல்லற’ என்றானே!
பேசாமல் இருந்தாரா? ஆறுமுகனின் அர்ச்சையில் தணியாத ஈடுபாடு. கௌமார
ஆழ்வார்; வைணவர் போல் மணிப்ரவாளம் வேறு; ‘பெருமாளே!பெருமாளே!!’ என்று
ஊர் ஊராகக் காடும் மேடும் மலையும் சுற்றியலைந்து கந்தனைப் பாடுவதில்
தணியாத ஊற்றம்.
இந்த ஜல்லிக்கு இந்த மஹாபுருஷரும் வேண்டுமா? சேறு நம்மேல் விழுவதோடு
நிற்கட்டும்.
தேவ்

Hari Krishnan

unread,
Jul 31, 2008, 3:25:07 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

ஹரி வாத்யாரே! உங்களுக்கு தெரியாததா!
 
ஜாம்பஜார் ஜக்குவ எங்கியாச்சும் பாத்தீங்களா?
 
எனக்கு விளங்கவில்லை.  நான் எப்போதாவது எழுதியதை அல்லது வேறு ஏதேனும் நிகழ்வைச் சுட்டுகிறீர்களோ?  ஜாம்பஜார் ஜக்குவுக்கு ஏதோ ஒரு சமயம் விசித்திர வியாக்கியானம் எழுதிய நினைவிருக்கிறது.  எப்போது, எந்தக் குழுவில், யாருக்கு விடைசொல்கையில் என்பதெல்லாம் நினைவில்லை. 
 
அப்படி ஏதும் இல்லையென்றால் போகிறது.  இருந்தால் நினைவூட்டுங்கள்  :-)

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 3:30:23 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> ஜாம்பஜார் ஜக்குவுக்கு ஏதோ ஒரு சமயம் விசித்திர
> வியாக்கியானம் எழுதிய நினைவிருக்கிறது.

இவ்வருடம் சென்னை வந்த போது எப்போதோ குழந்தையில் பார்த்த ஜக்கு வந்து
நின்றான். அவன் அக்காள் சக்குவும் வந்திருந்தாள்.

பதவுரை: ஜக்கு = ஜகன்நாதன், சக்கு = சகுந்தளா

பிகு: சந்தோஷி எனும் அழகான பெயர் "சுக்கு" என்றாகிவிட்ட மர்மத்தை
குருக்கள் ஐயா வீட்டில் பார்த்தேன் :-))

Hari Krishnan

unread,
Jul 31, 2008, 3:37:12 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> ஜாம்பஜார் ஜக்குவுக்கு ஏதோ ஒரு சமயம் விசித்திர
> வியாக்கியானம் எழுதிய நினைவிருக்கிறது.

இவ்வருடம் சென்னை வந்த போது எப்போதோ குழந்தையில் பார்த்த ஜக்கு வந்து
நின்றான். அவன் அக்காள் சக்குவும் வந்திருந்தாள்.
 
அதேதான்.  கல்லூரி நாட்களில் போட்ட ஸ்கிட் ஒன்று உண்டு.  நானும் இன்னொரு நண்பனும் சேர்ந்து எழுதியது.  சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் ஒருமுறை சினிமாவுக்குப் போறார் (பொம்மலாட்டம்தானே அந்தப் படம்?).  மறுநாள் கதை சொல்ல வந்து உட்கார்ந்தால் பாகவதம் மறந்து போய் வாஆ வாத்யாரேஏஏஏஏ ஊட்டாஆஆண்டே (அவருடைய ஸ்டைலிலேயே இதைச் சொல்வோம்) என்று தொடங்கி, வாத்தியார் என்றால் குரு, வீடு என்றால் மோட்சம்.  மோட்சத்துக்கு வழிகாட்ட குருவே நீ வா, வராவிட்டால் விடமாட்டேன் என்று அது போகும்.
 
ஜம்பு அஜா ஜக்கு. ஜம்புத் தீபத்தை முற்றிலும் ஜயித்தவனான ஜகந்நாதன்.  இப்படி எப்போதோ எழுதியிருந்த நினைவு.  அதைத்தான் இவர் நினைவூட்டுகிறாரா என்பது தெரியவில்லை. 

Tirumurti Vasudevan

unread,
Jul 31, 2008, 3:53:25 AM7/31/08
to minT...@googlegroups.com
ஹரிகி,

மன்னிக்கணும்.
ஜாம்பஜார் ஜக்கு ன்னு வலைபதிவு போட்டார் ஒத்தர். நல்லாவே இருந்தது. அவர்
புதிர் போட்டி நடத்தி நான் சரியாக எல்லாத்துக்கும் விடை கொடுத்து பரிசு
எல்லாம் வாங்கினேன். (கைதட்டல்தான் வேற என்ன?)

ம்ம்ம், எனக்கு பரிசு கொடுத்த வேளை பதிவுகள் நின்னுபோச்சு. நீங்க
எழுதியது அவர் நடை மாதிரி இருந்ததால சும்மா இருட்டில் ஒரு கல்.
மன்னிக்க
திவா

2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:


>
>
> 2008/7/31 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
>>
>> ஹரி வாத்யாரே! உங்களுக்கு தெரியாததா!
>
>
>>
>> ஜாம்பஜார் ஜக்குவ எங்கியாச்சும் பாத்தீங்களா?
>
>
> எனக்கு விளங்கவில்லை. நான் எப்போதாவது எழுதியதை அல்லது வேறு ஏதேனும் நிகழ்வைச்
> சுட்டுகிறீர்களோ?

> அப்படி ஏதும் இல்லையென்றால் போகிறது. இருந்தால் நினைவூட்டுங்கள் :-)


--

Subramaniam

unread,
Jul 31, 2008, 2:34:38 PM7/31/08
to மின்தமிழ்
>
> ‘ப’ வை ‘ப்ர’ ஆக மாற்றி வடசொல் என்பர் என்னும் குற்றச்சாட்டு-
> வடமொழி அகராதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட ‘ப்ர’ வில் தொடங்கும்
> சொற்கள் உள்ளன. எவை எவை தமிழிலிருந்து சென்றவை என்று பட்டியலிடத் தயாரா?
> தேவ்

அந்த சுமார் 350ல் ஒரு 35தை இங்கே எடுத்து போடமுடியுமா ? OTLலில்
தேடியாவது வடமொழி கற்கலாம்



அன்புடன்
சுப்பு



On 7월26일, 오후10시21분, devoo <rde...@gmail.com> wrote:
> On Jul 26, 1:21 pm, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
>
>
>
> > >ரங்கன் எழுத்தை ரசித்து மணிப்ரவாளம்:என்று சொன்னேன்
>
> > மணிப்பவளம் தான் மணிப்ரவாளம் என்று திரிந்தது. மணிமிடைப் பவளம் என்பது
> > அகநானூற்றில் ஒரு பகுதி. பவளம் என்ற சொல் முற்றிலும் தமிழே. ரகரத்தை
> > உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு உள்ள வழக்கம்.
> > (நன்றி: திரு இராம.கி)
>
> > > இது மணிப்பிரவாளம் இல்லையே! சுத்தமான தமிழ்க் கட்டுரை. வடமொழி மேற்கோள்
> > >> காட்டுகிறார். அவ்வளவுதான்.
>
> > >> மணிப்பவளம் என்பது அறிஞர் மொழி, புலவர் மொழி, கல்விமான்கள் மொழி. சென்னை
> > >> ஆட்டோ ஓட்டுநர் பேசும் மொழியை நாம் மணிப்பவளம் என்று சொல்வதில்லை :-)
> > >> மணிப்பவளம் என்ற சொல்லிற்கேற்ப மணி, மணியான செந்தமிழ் சொற்கள், பவளம்
> > >> போன்ற வடமொழி சொற்கள் இடையில். ஒரு ஆபரணம் அது. மணிப்பவளத்தைப் புரிந்து
> > >> கொள்ளும் வல்லமையும், புலமையும் பெற்றோர் மின்தமிழ் புலத்தில் அரிது.
> > >> ரங்கன் போன்றோர் அரிதாகி வருவது மரபை இழப்பது போல் படுகிறது...
>
> > >> கண்ணன்
>
> > >> மனிதமும்,உலகமும் காப்போம்
>
> ‘ப’ வை ‘ப்ர’ ஆக மாற்றி வடசொல் என்பர் என்னும் குற்றச்சாட்டு-
> வடமொழி அகராதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட ‘ப்ர’ வில் தொடங்கும்
> சொற்கள் உள்ளன. எவை எவை தமிழிலிருந்து சென்றவை என்று பட்டியலிடத் தயாரா?
> தேவ்

Subramaniam

unread,
Jul 31, 2008, 3:54:30 PM7/31/08
to மின்தமிழ்

>
> வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்:
>
> பகுதி 1:http://jataayu.blogspot.com/2008/06/1.html
> பகுதி 2:http://jataayu.blogspot.com/2008/06/2.html
> பகுதி 3:http://jataayu.blogspot.com/2008/06/3.html
> பகுதி 4:http://jataayu.blogspot.com/2008/06/4.html
>
> தாயுமானர், குமரகுருபரர் தொடங்கி வ.உ.சி வரையில் வேதநெறியும், சைவமும்
> ஒன்றே, வேதாந்தமும், சித்தாந்தமும் ஒன்றே என்று அறுதியிட்டுக்
> கூறியுள்ளனர்.. அத்தகைய மேற்கோள்கள் சிலவும் இந்தத் தொகுப்பில் உண்டு.

இந்த இடுகைகளை படித்தால் நான் "கற்றது கைமண்ணளவு கல்லாதது கடலளவு" என்பது
தெளிவாகிறது ...

அற்புதம் ... நன்றி

devoo

unread,
Jul 31, 2008, 10:59:49 PM7/31/08
to மின்தமிழ்


On Jul 31, 11:34 pm, Subramaniam <mani...@gmx.net> wrote:
// அந்த சுமார் 350ல் ஒரு 35தை இங்கே எடுத்து போடமுடியுமா ? OTLலில்
தேடியாவது வடமொழி கற்கலாம்//

கோசத்தில் உள்ளதை அப்படியே கொட்டுவதற்குத் தயார்.
தமிழ்க் குழுமமா வடமொழிக் குழுமமா என அன்பர்கள் முகம் சுளிக்கக் கூடும்.
நற்கருத்துப் பகிர்வு என நாம் கருதுவதைச் சுண்டல் வினியோகமா என்கிறார்
ஓர் அன்பர்.
மேதா விலாஸம் இழை பிரியக் காரணமாகக் கூடாது.
மேலிட அனுமதி இருந்தால் தனி இழையாகத் தரலாம்.
பல உறுப்பினர்கள் பங்கு கொள்வதில்லை; காரணத்தை ஆராய வேண்டும்; ஒரு சிலர்
மட்டுமே பேசி வருவதாக உணர்கிறேன்.
ஒருங்குறி ஒரு சிலருக்குப் பிரச்னை தருவதாகத் தெரிகிறது.
தேவ்






Subramaniam

unread,
Aug 1, 2008, 12:25:52 AM8/1/08
to மின்தமிழ்

> பல உறுப்பினர்கள் பங்கு கொள்வதில்லை; காரணத்தை ஆராய வேண்டும்; ஒரு சிலர்
> மட்டுமே பேசி வருவதாக உணர்கிறேன்.
> ஒருங்குறி ஒரு சிலருக்குப் பிரச்னை தருவதாகத் தெரிகிறது.


தமிழில் தட்டெழுவது... தமிழ் எழுத்துரு ... நேரம் ... இன்ன பிற

இருப்பவருக்காக எழுதுங்கள்.... இல்லையேல் தனிமடலாய் அனுப்ப இயலுமா ?

கூகிள் குழுக்களில் தனிமடல் அனுப்ப ஒரு பொத்தான் உண்டு

முன் நன்றிகளுடன்


அன்புடன்
சுப்பு





Narayanan Kannan

unread,
Aug 1, 2008, 1:16:26 AM8/1/08
to minT...@googlegroups.com
2008/8/1 devoo <rde...@gmail.com>:

> மேதா விலாஸம் இழை பிரியக் காரணமாகக் கூடாது.

உறைக்கச் சொல்லுங்கள். அறிவு கூடக் கூட அடக்கம் கூடும் என்பார்கள் :-)
ஆனால் அது பல சமயம் நடைமுறைப்படுவதில்லை :-)
அறிவைப் பகிர்ந்து கொள்வதில்தானே சுகம். இங்குதான் பாராட்ட எல்லோரும் இருக்கிறோமே!
ஓ! எல்லாப் புகழும் இறைவனுக்கு!! என்பது இவர்களுக்குப் பிடிக்காதோ ;-) ?

> பல உறுப்பினர்கள் பங்கு கொள்வதில்லை; காரணத்தை ஆராய வேண்டும்; ஒரு சிலர்
> மட்டுமே பேசி வருவதாக உணர்கிறேன்.

இது மடலாடற்குழுக்களுக்கே உள்ள பிரச்சனை.

பலர் சும்மா வேடிக்கை பார்ப்பார்கள்
பலர் சேர்ந்த பிறகு படிப்பதே இல்லை
பலர் எட்டிப்பார்த்து விட்டு ஓடிப் போய்விடுவர்
பலர் 'இவன்' என்ன சொல்லறான், 'இவனுக்கு' நான் என்ன பதில் சொல்ல என்று இருப்பர்.
சிலர் அடேங்கப்பா! இதெல்லாம் பெரியவா சமாச்சாரம், நாம ஒதுங்கி இருத்தலே
நலம்! என்று இருப்பர்.
சிலர் 'நம்மிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஏதோ பேசுகிறார்கள்,
கேட்டுக்கொண்டு இருப்போம்' என்று இருப்பார்கள்.
சிலர் வயதில் சின்னவர்களா இருப்பதால் பதின்ப வயதுக் கூச்சத்தில் இருப்பர்!
சிலர் வேண்டிய போது வந்து பங்களித்துவிட்டு ஒதுங்கிவிடுவர்.
ஒரு சிலரே, முன்வந்து எழுத வருவர்!

நான் முன்பு சுட்டியவாறு, இணையம் என்பது ஓர் அறிவுக் களஞ்சியம்.
சொல்லுவார் சொன்னால் கற்க நிறைய உள்ளது. கற்றது கைமண் என்பதை ஒவ்வொருமுறை
இணையப் பரப்புள் நுழையும் போதும் உணர்கிறோம். ஒரு சமுதாயம் முன்னேற
வேண்டுமெனில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளப் பழக வேண்டும்.
பகிர்தலில்தான் நம் எதிர்காலமே உள்ளது. அதை மின்னுலகம்
எளிமையாக்கிவிட்டது.


> ஒருங்குறி ஒரு சிலருக்குப் பிரச்னை தருவதாகத் தெரிகிறது.

இது உண்மையான பிரச்சனை. பாருங்கள் ஒவ்வொரு கடிதத்திலும் திரு.சுந்தரராஜன்
அவர்களுக்கு சொல்லித் தந்தேன் 'வெட்டி/ஒட்டுவது' எப்படியென்று. அவர்
விலகும் போது ஒரு வால் கடிதத்துடன் விலகிவிட்டார் :-)) பலருக்கு இது
இன்னும் 'பிரம்மவித்தை' போல் படுவதே காரணம். இந்த technophobia ஐ எப்படி
நீக்குவது?

கண்ணன்

devoo

unread,
Aug 1, 2008, 2:53:06 AM8/1/08
to மின்தமிழ்


On Aug 1, 10:16 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
// உறைக்கச் சொல்லுங்கள். அறிவு கூடக் கூட அடக்கம் கூடும் என்பார்கள் :-)
இன்னும் 'பிரம்மவித்தை' போல் படுவதே காரணம். இந்த technophobia ஐ எப்படி
நீக்குவது?//

நன்றி கண்ணன் சார்,
மடல் தெளிவைத் தருகிறது; நானும் குழுமத்திற்கு மட்டுமல்லாது,
இணையத்திற்கே புதியவன். தட்டித்தடவிக் குழுமத்தோடு சேர்ந்து கொண்டேன்.
இணைய நுட்பம் அறவே தெரியாது. இலக்கியத் துறையில் ஏதோ தெரிந்ததைப்
பகிர்ந்து கொண்டேன். ‘ஜடாயு’ சாருக்கும் தெரிவித்தேன்.
வகை தொகை மீறிய வட சொற்களின் பயன்பாடு,’மீப்போது’ போன்ற தமிழ்ச் சொற்கள்
இவை பெரும்பாலானோரை மிரளச் செய்துவிடும்.
மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களாவது பங்கு பெறும் வகையில் தலைப்புகள்
அமைவது நன்று ; அவ்வப்போது அனைவருடைய கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.
சர்ச்சை சூடு பிடித்தால் நீங்கள் கூறுவது போல் கருத்துகளின் மோதல் என்று
விட வேண்டும்; தனி நபர் மோதலாக்கக் கூடாது;
கூட இருப்பவர்களும் கொம்பு சீவி விடக்கூடாது.
இது போன்ற முதிர்ச்சி குழுமத்தில் பரவலாக இருக்க வேண்டும்; கேலியும்,
கிண்டலும் சுவை கூட்டும் அளவே இருக்க வேண்டும்.
‘டோண்டு’ சார் விவகாரம் சைபர் க்ரைம் அளவு பெரிதாகிப் பின் தீர்வு
கண்டுள்ளது.
இவையெல்லாம் கவலையளிக்கும் செய்திகள். இம்மடல் பதிவு பெறத் தகுதி
உடையதென்றால் பதிப்பிக்கலாம்.
தேவ்


ஜடாயு

unread,
Aug 1, 2008, 5:22:27 AM8/1/08
to மின்தமிழ்
On Aug 1, 12:54 am, Subramaniam <mani...@gmx.net> wrote:
> > வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்:
>
> > பகுதி 1:http://jataayu.blogspot.com/2008/06/1.html
> > பகுதி 2:http://jataayu.blogspot.com/2008/06/2.html
> இந்த இடுகைகளை படித்தால் நான் "கற்றது கைமண்ணளவு கல்லாதது கடலளவு" என்பது
> தெளிவாகிறது ...
>
> அற்புதம் ... நன்றி
>
> அன்புடன்
> சுப்பு

மிக்க நன்றி சுப்பு ஐயா. இந்த கேள்விபதில் தொகுப்பை ஒரு மின் நூலாக்கி
வெளியிடுகிறோம் என்று தமிழ்ஹிந்து.காம் தளத்தினர் கேட்டிருக்கிறார்கள்.
விரைவில் வரும்.

இரவா

unread,
Aug 1, 2008, 10:25:56 PM8/1/08
to minT...@googlegroups.com, தமிழாயம்
 
 

அன்பு ரங்கர்க்கு!

வணக்கம்.

         

          உங்களிடம்  ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

 

கேள்வி – 1.

 

வேதத்தின் கருத்துகள் பதியப்பட்டிருப்பதாக க் கூறுகின்ற, சங்க இலக்கியத் தொகை நூல் "பரிபாடல்" எந்த நூற்றாண்டைச் சார்ந்த்து?

 

கேள்வி – 2

 

தொல்காப்பியம் கூறும் கடவுளர்கள் எல்லாம் வேதக்கடவுளர்கள் என்றால், தொல்காப்பியக் காலத்தில் வடமொழி எழுத்து வடிவம் கொண்டிருந்ததா?

 

கேள்வி – 3

 

"பரிபாடலிலே,  "அந்தணர்  அருமறைப்  பொருள்" என்றும்,   "அந்தணர்  அருமறை"  என்றும்  "ஒரு  சார்  அறத்தொடு  வேதம்  புணர்  தவம்  முற்றி...திறத்தின்  திரிவு  இல்லா  அந்தணர்"

 

என்றும் கூறப்பட்டுள்ளது என்றால், பரிபாடலின் காலத்தில், வடமொழி தமிழகத்தில்  பேசப்பட்டதா?

 

கேள்வி - 4 

 

"நான்மறைக்  கேள்வி  நவில்குரல் எடுப்ப 

ஏம  இன்துயில் எழுதல்"

 

என்னும்  வரிகள், வேதபாடசாலையைத் தான் குறிபிடுகிறது! என்று எவ்வாறு நிறுவுகின்றீர்கள்?

 

கேள்வி – 5

 

எழுத்து வடிவமும் இல்லாத ஒரு மொழி. இலக்கணமும் இலக்கியமும் இல்லாத ஒரு குடியின் கருத்துகள், இலக்கிய வளமும் இலக்கண நலமும் பெற்று, நிலைத்த

குடியினயினரான தமிழர் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றன! என்று ஓயாமல் க்குறிக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியதாகத் தெரியவில்லையா?

 

கேள்வி – 6

 

வேதம் எப்போது எழுதப்பட்டது? எப்போது எழுதி முடிக்கப்பட்டது? எழுதியது யார்? அவற்றின் உள்ளடக்கம் எவ்வளவு?

 

கேள்வி – 7

 

தமிழில் உள்ள கருத்துகளைக் கேட்ட  பேச்சு மொழி வழக்கினர்,  பிற்காலத்தில் தங்கள் மொழியில் சேர்த்திருக்கலாம் அல்லவா?

 

கேள்வி – 8

 

தற்போது எழுத்து வடிவம் பெறாத மொழியைப் பேசும் நரிக்குறவர்கள், தங்கள் மொழி வரிவடிவம் பெற்ற பின்பு, அவர்கள் மொழியிலுள்ளவை தான் தமிழில் உள்ளன! என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?

 

மேற்காணும் கேள்விகளுக்கு சான்றுகளுடன் கூடிய பதில்களை எதிர்பார்க்கின்றேன்.



--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Aug 1, 2008, 11:15:11 PM8/1/08
to minT...@googlegroups.com
A clarification: All these questions presume that Vedas were NOT
created by native Indians but by an immigrant society. Is that true?

Who are Tamils?

Kannan

வேந்தன் அரசு

unread,
Aug 2, 2008, 7:56:07 AM8/2/08
to minT...@googlegroups.com
எல்லாரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்தான்.
 

ஜடாயு

unread,
Aug 2, 2008, 9:23:20 AM8/2/08
to மின்தமிழ்
// கேள்வி – 5
எழுத்து வடிவமும் இல்லாத ஒரு மொழி. இலக்கணமும் இலக்கியமும் இல்லாத ஒரு
குடியின்
கருத்துகள், இலக்கிய வளமும் இலக்கண நலமும் பெற்று, நிலைத்த
குடியினயினரான தமிழர் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றன! என்று
ஓயாமல்
க்குறிக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியதாகத் தெரியவில்லையா? //

அபத்தக் களஞ்சியமான கேள்வி. தமிழ் மொழியின் எந்த இலக்கியமும் வேத
இலக்கியத்திற்கு *முற்பட்டது* என்பதற்கு இதுவரை உருப்படியான ந்த
வரலாற்று ஆதாரமும் யாராலும் தரப் படவில்லை.. கூறப்பட்டவை அனைத்தும்
crackpot theories, highly hypothetical & extremely stretched
imaginations.. இத்திறக்கில் சீரிய முயற்சிகளை மேற்கொண்ட
எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்ற உண்மையான அறிஞர்களின் கருத்துக்களும்
தமிழகத்தின் இருண்ட காலகட்டத்தில் பரிகசிக்கப் பட்டு, உதாசீனப் படுத்தப்
பட்டன..

இந்தக் கேள்வியின் தொனியே இப்படி வெற்று ஊகங்களை கூவிக்கூவி பிரசாரம்
செய்யும் திராவிட இயக்க கலாசாரத்தை அப்படியே பறைசாற்றுகிறது !!

அந்தக் காலம் மலையேறிவிட்டது என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.


// கேள்வி – 6
வேதம் எப்போது எழுதப்பட்டது? எப்போது எழுதி முடிக்கப்பட்டது? எழுதியது
யார்?
அவற்றின் உள்ளடக்கம் எவ்வளவு? //

ஏன் ஐயா? உங்களிடம் இணையத் தொடர்பு இல்லையா - இப்படி ஒரு pedestrian
கேள்வியை அனுப்புவதற்கு முன் இதைப் பற்றி இணையத்தில் கொட்டிக் கிடக்கும்
விவரங்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவே
இல்லையா?

திராவிட இயக்க கலாசாரத் தாக்கம்...?

// கேள்வி – 7
தமிழில் உள்ள கருத்துகளைக் கேட்ட பேச்சு மொழி வழக்கினர்,
பிற்காலத்தில்
தங்கள் மொழியில் சேர்த்திருக்கலாம் அல்லவா? //


..லாம். கலாம்.. ஆதாரம்.. ஆதாரம் எங்கே சார்??? அதைத் தானே திரும்பத்
திரும்பக் கேட்கிறோம்?

திருப்பித் திருப்பி ஒரு டுபாக்கூர் ஊகத்தை சொல்லிக் கொண்டே இருப்பதன்
மூலம் மக்களின் மூளையில் அதைத் திணிக்கலாம் என்று நம்புபவரா நீங்கள்?
கிறிஸ்தவ மதப்பிரசார மிஷன்களில் உடனடியாக சேருங்கள்.. . "புனித தோமையார்
தான் திருவள்ளுவருக்கே குரு... தோமா திராவிடர் ஆனால் ஞானசம்பந்தர்
திராவிடர்... இஸ்ரேல் திராவிட நாடு, ஆனால் கர்நாடகா ஆரிய சதி பூமி"
என்று இஷ்டத்துக்கு கதை விட்டு பிழைப்பு நடத்த சரியான இடம்!

வேந்தன் அரசு

unread,
Aug 2, 2008, 9:28:54 AM8/2/08
to minT...@googlegroups.com
இரவா கேட்கும் ஒரு கேள்வி
 
வடமொழிக்கு எழுத்து வடிவம் எங்கிருந்து வந்தது?
 
ப்ராமி.
 
பிராமி சிந்துமொழியில் இருந்து வந்தது
சிந்து நகரிகம் திராவிட நகரிகம் என்றுதானே இன்று வரை ஏற்கப்படுகிறது?

Narayanan Kannan

unread,
Aug 2, 2008, 10:28:05 AM8/2/08
to minT...@googlegroups.com
ஜடாயு!

Superb!!

இப்போதுதான் அமைதியாக வாசிக்க முடிந்தது!

உம்மை 'நவயுக பாஷ்யக்காரர்' என்று சொல்லலாம் போலுள்ளது.

"பிரதிவாதி பயங்கரம்' ஜடாயு வாழ்க!!


கண்ணன்

இரவா

unread,
Aug 2, 2008, 8:53:38 AM8/2/08
to மின்தமிழ்
அனுமன், வாலி, சுக்ரீவன், சடாயு, அணில் இவர்களும் தமிழர் தானே!

On Aug 2, 4:56 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Aug 3, 2008, 3:55:57 AM8/3/08
to minT...@googlegroups.com
அன்பின் ஜடாயு:

உங்கள் நான்கு கட்டுரைகளும் அற்புதமாக வந்துள்ளன. வைணவ சம்பிரதாயங்களுடன்
வரும் காலங்களில் பரிட்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தேடல் மேலும்
பொலிவு பெறும்.

ஆகமங்கள் காஷ்மீரத்திலிருந்து வருகின்றன. சரஸ்வதி பீட
விற்பன்னர்களிடமிருந்து ஆகமங்களின் உட்பொருள் அறிய ஸ்ரீராமானுஜர் வடக்கே
போகிறார். போய் ஏட்டுப்பிரதி வாங்கியும் வருகிறார். ஆனால் ஏதோ அரசியல்
காரணங்களுக்காக அதை மீண்டும் பறித்துச் சென்றுவிடுகின்றனர். அப்போது
உடையவரின் வலக்கரம் போல் திகழும் கூரத்தாழ்வான் தனது photographic memory
கொண்டு அப்படியே படித்ததை படி எடுத்துவிடுகிறார்.

எல்லா ஆகமங்களையும் ஆராய்ந்து வேதத்திற்குப் புறம்பில்லாத ஆகமங்களை
முறைப்படுத்தி (உம்.பாஞ்சராட்திரம்) கோயில் ஒழுங்கு செய்கிறார்
ஸ்ரீராமனுஜர். வைதீக மார்க்கிகள் இதற்காக உடையவருக்கு என்றும்
நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். ஜேப்பி ஒருமுறை தமிழ்.வலையில் சொன்ன
மாதிரி வைஷ்ணவர்கள் என்றில்லை சைவக் கோயில் ஒழுங்கிலும் இராமானுஜரின்
பங்கு அளப்பரியதாக உள்ளது.

பகவத்பாதாளுக்கு ஆகம பரிட்சயம் உண்டு என்று ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
என்னிடம் சொல்லியுள்ளார். சங்கரர் வைதீகர்கள் விலக்க வேண்டிய ஆகமங்கள்
பற்றிய குறிப்பைத் தருகிறார். இராமானுஜருக்கு அத்வைதம் அத்துப்படி என்பது
நீங்கள் அறிந்ததே. வேதாந்திகள் அனைவரும் சங்கர பாஷ்யத்தில் தேறாமல் மேலே
செல்லமுடியாது.

இராமானுஜ சித்தாந்தத்தை உள்வாங்கிக்கொள்ளாமல் வைதீக மார்க்கம் பற்றி
தீர்க்கமாக நாம் பேசமுடியாது (ஏன் சிவாச்சார்யர்கள் பாஷ்யம் எழுதவில்லை
என்ற கேள்வியிலிருந்து பலவற்றிற்கு விடை அங்குள்ளது)

உங்கள் தேடல் இன்னும் பொலிவுபெற வாழ்த்தும்

அடியேன்
கண்ணன்

2008/8/2 Narayanan Kannan <nka...@gmail.com>:

ஜடாயு

unread,
Aug 3, 2008, 5:41:39 AM8/3/08
to மின்தமிழ்
கண்ணன், தங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

> உங்கள் நான்கு கட்டுரைகளும் அற்புதமாக வந்துள்ளன. வைணவ சம்பிரதாயங்களுடன்
> வரும் காலங்களில் பரிட்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தேடல் மேலும்
> பொலிவு பெறும்.

இப்போதும் பரிச்சயம் இல்லாமல் இல்லை.. பள்ளிப் பருவத்திலிருந்தே
பிரபந்தம் படித்து வருகிறேன், விசிஷ்டாத்வைத கோட்பாடுகளும் சிறிதளவு
கற்றுள்ளேன்.. வீட்டில் பூஜையறையில் ஸ்ரீராமானுஜர் சித்திரமும்
நாயன்மார்கள், சங்கரர், ராமகிருஷ்ணர், விவேகானநதருடன் கூட உண்டு..

என்ன செய்வது? ஜிகாதி தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளில் நாட்டு மக்களைப்
படுகொலை செய்வதும், கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆக்கிரமிப்பும், கலாசார
அழிப்பு வேலைகளும் மனதை வாட்டுகின்றன... சம்பிரதாயங்களின் சாரத்தை
உள்வாங்கி அதனை ஒரு சமூக சக்தியாக மாற்றும் செயல்பாடுகளிலேயே நேரத்தை
அதிகம் செலவழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறேன்..

அன்னை பராசக்தி அவ்வழியில் என்னை மேன்மேலும் வழிநடத்துகிறாள்...

> ஸ்ரீராமனுஜர். வைதீக மார்க்கிகள் இதற்காக உடையவருக்கு என்றும்
> நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீராமானுஜரே வைதீக மார்க்கி தானே! அவர் வேறுபட்டவர் அல்லவே! பின்
இப்படி சொல்வது கூட அவசியமற்றது.. (நம்முள் நாமுபசாரங்கள் செய்வதோ? -
பாரதி). வைதிகம் என்பதற்கு அந்தக் கேள்வி பதில் தொகுப்பிலும் இதே போன்றூ
தான் விளக்கம் அளித்திருந்தேன்.

>. இராமானுஜருக்கு அத்வைதம் அத்துப்படி என்பது
> நீங்கள் அறிந்ததே. வேதாந்திகள் அனைவரும் சங்கர பாஷ்யத்தில் தேறாமல் மேலே
> செல்லமுடியாது.

உண்மை, உண்மை.

> இராமானுஜ சித்தாந்தத்தை உள்வாங்கிக்கொள்ளாமல் வைதீக மார்க்கம் பற்றி
> தீர்க்கமாக நாம் பேசமுடியாது (ஏன் சிவாச்சார்யர்கள் பாஷ்யம் எழுதவில்லை
> என்ற கேள்வியிலிருந்து பலவற்றிற்கு விடை அங்குள்ளது)

ஸ்ரீகண்டாசாரியார் எழுதியிருக்கும் சைவ பரமான பிரம்மசூத்திர பாஷ்யம்
பற்றி அந்தத் தொகுப்பில் குறிப்பிட்டிருந்தேன்,... பின்னர் வந்த அப்பய்ய
தீட்சிதர் இதற்கு ஒரு விரிவுரையும், மேலும் சில வேதாந்த விளக்க உரைகளும்
எழுதியுள்ளார்... அதனால் சிவாச்சாரியார்கள் பாஷ்யம் எழுதவில்லை என்பது
சரியான தகவல் அல்ல.

சைவ மடங்களில் இந்த பாஷ்யங்கள் பெருமளவில் பயிலப்படாமல்
இருந்திருக்கலாம்.. ஆயினும், சைவ சித்தாந்தம் என்பது வேத, வேதாந்த
மரபின் கனி என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கவில்லை...
சமீபத்திய குழப்பக் கூச்சல்கள் போடுபவர்கள் காலனியம் பரப்பிய வெறுப்பியல்
கருத்தாங்களால் வழிதவறியவர்கள், some programmed robots spewing set
prejudices (நன்றி: விமர்சன பிதாமர் வெ.சா).
Message has been deleted

வேந்தன் அரசு

unread,
Aug 3, 2008, 11:35:23 AM8/3/08
to minT...@googlegroups.com
நடு நிலையான கட்டுரை.
 
>ஆனால்  அதற்குப்  பதில்  பாண் என்றால்  பேச்சு என்று  பொருந்தாத  சொல்பிறப்பியல்  சாகசங்கள்  வடமொழி  அறிஞர்களால் 
மேற்கொள்ளப்  படுகின்றன. 
 
இதுபோன்ற காரணங்களலதான் இந்த எதிர் வினைகள் ஏற்படுகின்றன் என அந்த அறிஞர்கள் உணரவேண்டும்
 
பண் என்ற சொல்லில் இருந்து பாணன் பிறந்திருக்க வாய்ப்பு அதிகம்
 
Reply all
Reply to author
Forward
0 new messages