இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை. சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.
இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.
அங்கோர், எல்லோரா, தராசுரம், பட்டடக்கள், மல்லை, பேலூர், எலீபெண்ட என்று பல இடங்களில் உள்ள இதே கரு உடைய சிலைகளை இணைத்துள்ளேன்.
துன்பம் என்ற தலைப்பு கொடுத்துவிட்டு இன்பமாகவல்லவா தொடர்கிறது!!!கண்ணன், தலைப்பைத் தனி இழையாக இட முடியாதா?திவாகர்
On 1/11/08, venkatram dhivakar <venkdh...@gmail.com > wrote:அருமை விஜய்! தொடருங்கள்!!திவாகர்
On 1/11/08, Vijay kumar <vj.ep...@gmail.com > wrote:தராசுரம் கோயில் ஒரு அறிய கலை பொக்கிஷம்.
இந்த சிலைகளை காணுங்கள். முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகள் இவை.
இவற்றின் அறிய அம்சம் இவற்றின் மூக்குத்தி மற்றும் காதணிகள் அணிய வழி செய்யும் துவாரங்கள். இன்றைய பாணியில் மேல் காதில் துவரம் மற்றும் மூக்குத்தி. மிக சிறிய துவாரத்தை ( ஒரு புல்லோ சிறு குச்சி மட்டுமே உள்ளே செலுத்த இயலும்) அச் சிற்பி எவ்வாறு அமைத்தான் என்பது ஒரு புதிர்.
On 1/11/08, Vijay kumar <vj.ep...@gmail.com > wrote:
ஆம். இவை அளவில் மிக சிறிய சிற்பங்கள் என்பதை குறிக்கவே பெரிய புராண கதை சிற்பத்தை ஒத்த வாலி வதம் சிற்பத்தை காட்டி உள்ளேன். வாலி வதம் சிற்பத்தின் முன் உள்ள ஹீரோ பேனாவின் அளவை வைத்து சிற்பத்தின் நுணுக்கத்தை அறியலாம்.
On 1/11/08, Tirumurti Vasudevan <agni...@gmail.com > wrote:முன்னர் அனுப்பிய இரு படங்களில் ஒன்று வாலி வதம் போல உள்ளது.
திவா
2008/1/11 Vijay kumar < vj.ep...@gmail.com>:
>
>
> படங்களின் பட்டியலில் சிறு மாற்றங்கள் தேவை. தனி மடல் அனுப்பி உள்ளேன்.
>
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
நல்லது இனி இங்கே தொடர்வோம்.
அற்புதம்!
கண்ணன்
நீங்கள் கொடுத்துவரும் படங்களையும், இவ்விழையில் வரும் கதைகளையும் நம்
மரபுச் சுவடு வலைப்பதிவில் இணைக்க உள்ளேன்.
நன்றி கூற வேண்டிய நபர்களோ, வலைப்பதிவோ, தளமோ இருந்தால் அறியத்தாருங்கள்.
தமிழ்ப் பண்பாட்டு மாணவர்களுக்கு (உள்நாடு+வெளிநாடு) அது பயன்படும்.
கண்ணன்