தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் இன்றாகும்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.
2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
சகோதர நாடெனக் கூறப்படும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின் அழிப்பினை நிகழ்த்திவிட்டு வெற்றிக் களிப்பில் உள்ளது சிங்கள அரசு.
பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை.
விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிடவேண்டுமென்றும், தாக்குதல் திட்டத்தினை திசைமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது மிகமோசமான திட்டமிட்ட தாக்குதல்களைச் செய்தனர்.
துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக மகிந்த அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில், 2009 மே18 இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவித்தது மகிந்த அரசு.
முள்ளிவாய்க்கால் மண்ணில் மூச்சடங்கியவர்கள் போக எஞ்சியவர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டார்கள். அவ்வாறு தரம்பிரிக்கப்பட்டவர்களில் சிலர் சிறைக்குச் செல்ல, பலர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இற்றைவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காவியம் முற்றுப் பெறவில்லை. அந்தவகையில், கடந்த 2009இல் இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புலம்பெயர் சமூகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் மாணவர்களும், ஐநா சபை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தக் கோரியும், தண்டனை வழங்குமாறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தாயக மக்களுக்காக போராடும் புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகள், ஒன்றிணைந்து நீதிகேட்டு போராட்டமாக வெடிக்கும் போது, அது அனைத்துலக சமூகங்களுக்கு கொடுக்கப்படும் பாரிய அழுத்தமாகவே காணப்படும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
போரில் மோசமாக சேதமடைந்த சுகாதாரக் கட்டமைப்பு இன்னமும் முழுமையாக சீராகவில்லைஇலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம், இப்போதும், பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக அங்கு மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
வீடமைப்புத் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன அங்கு செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. பிரதான வீதி சீரமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் புது மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்காலை ஊடறுத்து முல்லைத்தீவுக்குச் செல்லும் முக்கிய வீதி இன்னும் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
கடற்தொழிலையே இப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். எனினும் பல குடும்பங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன. உணவுக்கும் பிள்ளைகளின் கல்விக்கும் அல்லாட நேர்ந்துள்ளதாக அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
தொண்டு நிறுவனங்களின் உதவியோடு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அந்த வீடுகள் முற்றுப் பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. அந்த வீடுகளின் சுவர்களுக்குரிய சீமெந்து பூச்சு வேலைகளை வீட்டு உரிமையாளர்களே செய்ய வேண்டும் என்று வீடுகளைக் கட்டிக்கொடுத்தவர்கள் தெரிவித்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சாப்பாட்டுக்கே வழியற்ற நிலையில் வீட்டுச் சுவர்களுக்கான பூச்சு வேலைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இருந்த போதிலும் கூடாரங்களிலும், கொட்டில்களிலும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தங்களுக்கு இந்த கல்வீடுகள் பாதுகாப்பையும் நிம்மதியையும் அளித்திருப்பதாகவும் அவர்கள் நன்றியோடு குறிப்பிடுகின்றனர்.
புதிய வீடுகள் பாதுகாப்புணர்வைத் தந்தாலும் போரின் கொடுங்கனவுகள் போகமறுக்கின்றனஇந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்குப் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அந்த வீடுகளை முழுமையாக நிர்மாணிக்க முடியாதிருப்பதாக இன்னும் சிலர் கூறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி யுத்தத்தின் போது இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மோசமான உயிரிழப்புக்கள், பாதிப்புகளில் இருந்து அந்த மக்கள் மீட்சி பெறும் வரையில் அங்கு உண்மையான அபிவிருத்தியைக் காண முடியாது என்று சிவானந்தரூபி செந்தமிழ்ச்செல்வன் என்ற பெண்மணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
யுத்த மோதல்களின்போது சீறி வந்த துப்பாக்கிக்குண்டுகள், எறிகணைகள் மற்றும் குண்டுகளின் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் ஏற்க முடியாமல் தவித்த தற்காலிக வைத்தியசாலையாகச் செயற்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை இப்போது புதுப் பொலிவு பெற்று கல்வியிலும் சிறந்து விளங்குவதாக அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.
மோசமான யுத்த மோதல்களில் சிக்கி, உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில், மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியுள்ள தாங்கள், இப்போதுள்ள சூழலில் அங்கு வாழ முடியும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், அன்றைய நிலைமைகளை மீண்டும் எண்ணிப்பார்க்கும்போது, மரண பயமே தமது மனங்களைச் சூழ்ந்து கௌவுவதாகவும் அங்குள்ள பலரும் கூறுகின்றனர்.
முற்பகல் 10.30 மணிக்கு சுடரை முதலமைச்சர் க. வி விக்கினேஸ்வரன் ஏற்றிவைத்தார். அதைத் தொடந்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடர்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபவித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.
அத்துடன் உயிரிழந்தவர்களுக்கான சமயக் கிரியைகளும் அங்கு இடம்பெற்றன.



இதைப்பற்றிப் படிக்கும்போதெல்லாம் இதயத்தில் ஒரு முள் தைக்கிறது.
முள்ளிவாய்க்கால்: ஆறு ஆண்டுகளாகியும் ஆறா வடுக்கள்; தீரா பிரச்சனைகள்
The Honourable Jason Kenney issued the following statement on occasion of the 6thanniversary of the end of the Sri Lankan Civil War:
“Six years have passed since the end the Sri Lankan Civil War. On May 18, we reflect on the tragedies that occurred as the 25-year conflict came to a close, particularly as they affected Sri Lanka’s Tamil minority.
“I join with the members of Canada’s Tamil community in remembering the tens of thousands of people who were killed and displaced. Indeed, we remember that many Canadian Tamils had themselves found refuge in Canada directly as a result of the bloody conflict in their homeland.
“Canada remains committed to remembering the victims of the Sri Lankan civil war. Our government has consistently urged Sri Lankan authorities to demonstrate accountability by thoroughly investigating allegations that up to 40,000 Tamil civilians were killed by Sri Lankan troops in its final phase. Canada will continue to stand for the truth, as we did when Prime Minister Stephen Harper made the principled decision not to attend the 2013 Commonwealth Heads of Government Summit hosted by the Rajapaksa regime due to their refusal to adequately address our important concerns.
“Earlier this year the people of Sri Lanka, including Tamils, exercised their democratic right to vote, choosing to reject the Rajapaksa regime and electing a new government under President Sirisena. I am hopeful that this new government will continue to pursue a constructive approach to addressing the crimes of the past, while actively pursuing reconciliation with the Tamil community.
“As we remember the victims of the civil war, we commit to working with the new government in Sri Lanka and the international community to promote truth, justice and reconciliation, and to preventing such atrocities from ever being repeated.”