கலைகின்ற கனவுகள் (ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் கவிதைகள்)

211 views
Skip to first unread message

G J Thamilselvi

unread,
Sep 5, 2013, 3:03:03 AM9/5/13
to mint...@googlegroups.com
நேசத்தின் ஆழ்கிணற்றில்...!

கரு நிலா முற்றத்தில்

கரு மை பூசிய சாலையில்

ஒளி நிலவாய் அவன் நின்றான்

அண்டவெளி வீரன் அவன்

 

அந்த பரட்டை தலைக்குள்

எத்தனை குருவிகளோ ?

உள்ளுரையும் மூளைக்குள்

எத்தனை கதறல்களோ ?

 

ஊ ஊ ஊ என்று இசை மொழிந்தான்

ஆ ஆ ஆ என்று ராகமிட்டான்

அந்த ஓலத்தில் நாய் ஒன்றினைந்தது

வாலை ஆட்டிய படி பாசப்பிழம்பென

 

பரிகசித்து நகரவோ பயந்து அலறவோ

ஒரு மனிதமும் இல்லை

கரு நிலா மை பூசிய முற்றத்து இரவில்

முற்றுபெறாமல் இசைக்கப்படுகிறது

ஒரு அபஸ்வர ராகம்

 

கால் அகற்றி அமர்ந்து எழுகையில்

நடராச பாவனையில்

நடுங்கி தான் போகிறது

ஒளி இழந்த நடு இரவு

 

நட்சத்திரங்கள் நடுங்கி

மேக சீலைக்குள் முகம் புதைக்க

ஆக்ரோஷித்து சிரிக்கிறான்

அவன் பைத்தியக்காரன்

 

ஆடை கலைந்ததுணரா நிர்வாணன்

மழலை போல் துள்ளி ஓட

விளையாட்டு பாவனையில்

நடம் புரிகிறான் பைரவ மூர்த்தி

 

வீதி கொஞ்சும் மங்கல் விளக்கொளியில்

இரவு தேநீர் கடை ஒன்றில்

கை ஏந்துகிறான் கவலையற்ற கடவுளவன்

கொட்டப்பட்ட தேநீரில் சரிபாதி பங்கு வைத்து

எறியப்பட்ட ரொட்டி துணுக்கை

படையலாக்குகிறான் பைரவனிற்கு

 

உண்ட களைப்பு உறங்க மறுத்த விழிகள்

சுருண்டு கொண்ட பைரவனிற்கு

தாலாட்டு வைபவம் தான்

ஊ ஊ ஊ ஓ ஓ ஓ

இசைக்கப்படுகிறது ஒரு அபஸ்வரம்

நேசத்தின் ஆழ்கிணற்றில்.


Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:33:58 AM9/5/13
to mint...@googlegroups.com
என் சுவாச காற்றே...!


கார் முகில் கேசம்
என் கண்களை கொள்ளைக்கொள்கிறது..!

நெற்றியில் முத்தமிட ஆசை
எழுகிறது………!

வில்லாய் வளைந்த புருவம்
என்னுள் வியப்பில் விழுகிறது..!  
          
உன் காந்த விழிகளில்
நெஞ்சம் தொலைகிறது…….!

இமைகளின் படபடப்பில்
இதயம் பறக்கிறது…………!

உன் சுவாச காற்றில்
என் சுவாசம் கரைகிறது…….!  

உன் மீசை குறும்பில்
பெண்மை தொலைகிறது……..!

உன் இதழ்களின் சுழிப்பில்
மின்சாரம் பிறக்கிறது………….!

உன் தொண்டை அசைவில்
கண்கள் அசைய மறுக்கிறது…..!

உன் நெஞ்சமதில் மஞ்சமிட
என் உயிர் உயிர்க்கிறது……….!


2013/9/5 G J Thamilselvi <thamil...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:34:31 AM9/5/13
to mint...@googlegroups.com
நீ மட்டும் வாழ்கிறாய்

விழிகளின் தழுவலில் காதலின் உதயம்
இத்தனை ஈர்ப்பா உன்னிடத்தில்
மனம் இரும்பாய் ஒட்டிக்கொண்டது,
காந்த யுத்தத்தில்.

தொட்டுச்சென்றாயா என்ன?
கோடி ரோஜாக்கள் பனித்ததாய்
சில்லென்று பரவி சிறகடித்த உணர்வு.

பகலவன் முகத்தை இருளுக்கு உறவாக்க
யுகங்கள் கரைந்து நிமிடங்கள் மட்டும் எச்சமாய்.
முடியா பகல் ஒன்றை நமக்காக படைக்காமல்,
தவிக்கச்செய்ததால் பகையாய் போனான் இறைவன்.

உன் வார்த்தைகளில் பிறந்த ஏக்கம் தான்
அது திருடிச்சென்றது என்னவோ என் தூக்கம்தான்
அவஸ்த்தைகள் மட்டும் ஒன்றாய் இருக்க,
பிரிவு உன்னை தீண்டாமல்,
என்னை மட்டும் இம்சித்தாலும்,
நித்தம் என்னுள் நீங்காமல்…………
நீ மட்டுமே வாழ்கிறாய்.


2013/9/5 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:34:59 AM9/5/13
to mint...@googlegroups.com
முத்தத் தேடல்

தென்றலின் தீண்டல்
என சிலிர்த்து நிமிர்ந்தேன்.
என் அருகில் நீ இருந்தால்,
நான் என்ன செய்வேன்?

உன் மூச்சு காற்றல்லவா,
தென்றலாய் எனை தீண்டியது.
உனை நோக்க இயலாமல்,
என் விழி உனை தாண்டியது.

நகரவும் முடியாமல் – உன்
மார்பில் சாயவும் இயலாமல்
தவிக்கிறது நெஞ்சம்.

அடுத்தென்ன செய்வாய்?
என்றதொரு எதிர்பார்ப்பு
நம் இதழ்கள் இணைய செய்வாய்
நெஞ்சுக்கூட்டில் பரபரப்பு.

படபடக்கும் பட்டாம்பூச்சிகளின்
சிறகடிப்பு…………………
இதழ்கள் உறவாடியிருந்தால்
முடிந்திருக்கும்
உடல்களின் ஏக்கம்
விலகி நீ நடந்ததினால்
உண்டானது உள்ளத்தின் தாக்கம்.

காதல் முத்திரையில்
காமத்தை கடந்து சென்ற,
உன் பாதச்சுவடுகளை இன்று வரை
பார்த்து நிற்கிறேன் நான்
முத்தமிட நீ வருவாய் என.


2013/9/5 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:35:34 AM9/5/13
to mint...@googlegroups.com
பகலவனை பார்த்து...!

ஒரு பறவை மெல்ல சிறகடிக்கும் தூரம்தான்
நம்மிடையேயான இடைவெளியோ?
வினாவிற்குள் விடைதேடினேன்
எத்தனை தூரமாய் இருந்தால்தான் என்ன?
மஞ்சளாய் நீ ஜொலித்த ஒரு மாலையில்
உன் மீது மையல் கொண்டேன் நான்.

வான நீலத்தில் உன் வண்ணம்
நிமிடத்தில் நிறம் மாறும் சேதிதான் என்னவோ?
மஞ்சள் சிவந்த தங்கபழமாய் அல்லவா
உருமாறினாய்.

உன் இதமான வெம்மையில்
என் உடல் அடைந்த கிளர்ச்சியினை
உன்னிடத்தில் விவரிக்க சற்று நேரில்
வந்தால் என்ன செய்வாய்?

ஓ காதலிப்பது நான் தானே
என் காதலின் அவஸ்தை உனக்குள்
உயிர்க்குமா என்ன?
உணர்ச்சி கொந்தளிப்பில் என் காதல் பிதற்றல்கள்
உனக்கு பைத்தியங்களின் மொத்த உருமாற்றமாகலாம்.

உன் பிம்பத்தில் இடைபுகுந்து
பறவை பறந்த இடைவெளிக்கூட
என் இதயத்தை கிழித்து சென்றதாய்
விக்கித்து நின்றேன்.

உனை தீண்டினால் நான் தீய்ந்து போவேன்
எனத்தெரிந்தும் கூட
உன் தீக்கரங்களில் சரண்புக சித்தமானேன்
எட்டாதவனாய் நீ இருந்தாலும்,
எட்டி நின்றேனும் உனை காதலிப்பேன்.

Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:36:06 AM9/5/13
to mint...@googlegroups.com
நீ பேசாத நாட்கள்

நீ பேசாத நிமிடங்கள்
கானலாகிறது..............
எத்தனையோ நட்புகளில்
நானும் ஒருத்தியானேன்.

உன்னிடம் தனி இடம் தேடி
தவிக்கிறது மனது.
பொதுவாய் நட்பிற்கென்று
இலக்கணம் வகுப்பவன்
நீ என்றாலும் கூட
இலக்கிய கதாநாயகியாய்
பாவனை செய்கிறது
என் மனம்.

கொஞ்சம் தூரத்தில்...
கொஞ்சும் தூரத்தில்
அல்லாத உறவு
அவ்வளவே நீ என் மீது கொண்ட
நட்பின் வெளிப்பாடு,

இயன்ற வரை அல்ல
வாழ்வின் இறுதி வரை
நீ வேண்டும் என்றே

தவிக்கிறது நெஞ்சம்.

நீ கவிஞன்
உணர்வுளை கவிதையாக்கி
எழுத்து வரிகளுக்குள்,
உனை மறைத்துக்கொள்ள
இயல்பாய் முடிகிறது.

என் தவிப்பும் தடுமாற்றமும்
உனக்கெங்கே புரியப்போகிறது
நீ பேசாத நாட்கள்
என்னுள் மரண
வலிகளை மட்டுமே பிரசவிக்கிறது.

Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:36:37 AM9/5/13
to mint...@googlegroups.com
காதல் மட்டும் வாழ்கிறது.

காற்றுக்கொண்டு
தூது அனுப்பி
கார்மேகம் சேதி சொல்லி

நித்தம் உன் நினைவுகளில்
நான் வாடி

நித்திரையில் முத்தமிட்டு
நினைவுலகில் வெட்கப்பட்டு

பார்த்தும் பாராமல்
விழிகளால் தழுவி

கால்கடுக்க நின்று
காத தூரம் பின்தங்கி

உன் நிழலாய் பின் தொடர்ந்து
திரும்பாயோ என ஏக்கம் கொண்டு

திரும்பினால் முகம் மலர்ந்து
திரும்பாத நாட்கள்
மனம் அரும்பாய் கூம்ப

இருவராய் நடந்த பாதையில்
இன்று நான் மட்டும் தனியனாய்.

கடந்த நினைவுகள்
சுகமாய் பரவ
தோற்ற என்னுள்
நித்தம் காதல் மட்டும் வாழ்கிறது.

Thamil Selvi

unread,
Sep 5, 2013, 3:37:14 AM9/5/13
to mint...@googlegroups.com
வலியின் சுகம்

உன்னை கண்ட தினம்
உன் பார்வையில் நான்
லயிக்காமல் இருந்திருந்தால்...

உன் குரல் வந்த திசை எல்லாம்
என் விழியும் உனை தழுவி
சுகிக்காமல் இருந்திருந்தால்...

கூட்ட நெரிசலில் எதார்த்தமாய்
தீண்டுவதாய் எண்ணி
நம் விரல்கள் பிணையாதிருந்திருந்தால்...

சந்தர்ப்பவசமாய் சந்திப்பதாகச் சொல்லி
நாம் இருவர்
சந்திக்காமலேயே இருந்திருந்தால்...

தகவலுக்காகவென தன்னிச்சையாய்
அலைபேசி எண்கள் நமக்கு
அறிமுகமாகாமலேயே இருந்திருந்தால்...

மணிக்கணக்காய் பேசி
மணிமுட்கள் நகர்ந்த தடம்
உணராத நாட்கள் வராமலேயே இருந்திருந்தால்...

காதலை சொல்லாமல்
காதல் வளர்த்த வாழ்வொன்றை
வாழாதே இருந்திருந்தால்...

இன்று உன் பிரிவு தந்த
வலியின் சுகம் சுகிக்காமலேயே
இறந்திருப்பேன்.

Rathinam Chandramohan

unread,
Sep 5, 2013, 1:33:42 PM9/5/13
to mint...@googlegroups.com
Elimaiyana Inimayana Kavithaigal  

உனை தீண்டினால் நான் தீய்ந்து போவேன்
எனத்தெரிந்தும் கூட
உன் தீக்கரங்களில் சரண்புக சித்தமானேன்

Kanam Thorum Nava navamai Thondrum Katchi Kannukul vandhadhu.
Hats off Mdm


2013/9/5 Thamil Selvi <thamil...@gmail.com>



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Thamil Selvi

unread,
Sep 6, 2013, 4:24:17 AM9/6/13
to mint...@googlegroups.com

தாய்மை

தேசாந்திரியை போல, பாதசாரியை போல

வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு

அழையா விருதாளியாய் வந்து

அழிச்சாட்டியம் செய்யவென.

 

விடியலில் சிறகடிக்கும்

மலைக்கூடு பறவைபோல

அழுத்தமாக உணர்த்திச் செல்கிறது

அதன் இருப்பை உறுதி செய்யவென

 

பாறை கண்புகா இடைவெளியில்

கசிந்தோடும் நீர் போல

இதயத்தை வருடிச் செல்ல

வருகிறது அந்த மெய் உணர்வு

 

எண்ணில் அடங்கா துளிகளிலே

ஒரு துளியாய் உள் நுழைந்து

உறவாடும் அணு பொருளில்

உயிர்க்கிறது பெண் உணர்வு

 

மகரந்த சேர்க்கையிலே

மலர்விடும் அரும்பாக

தளிர்நடை பயின்று

மணக்கிறது அந்த சேய் உணர்வு

 

உதிரத்தை உணவாக்கி

உள்ளுணர்வை மொழியாக்கி

வளர்த்தெடுக்கும் வார்ப்பினிலே

உதிக்கிறது தாய் உணர்வு

 

பிரிந்தோடும் கிளை போல

விலகியோடும் உறவாக

நெகிழ்ந்தோடி போயிடினும்

வேர் பற்று அம்மாவின் அன்புணர்வு

 

தேசாந்திரியை போல, பாதசாரியை போல

வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு

எல்லாமே அதுவாக வியாபிக்கும்

தாய்மையின் சேய் உணர்வு.



2013/9/5 Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com>
mother-and-daughter.jpg

prime bala

unread,
Sep 6, 2013, 8:24:53 AM9/6/13
to mint...@googlegroups.com
very nice ... great..


2013/9/6 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 8, 2013, 1:03:33 AM9/8/13
to mint...@googlegroups.com
காத்திருப்பு

அந்தி வான வேளை ஒன்றில்
அத்துவான மலை முகட்டில்
தங்க மழை தூவி நின்றான்
செங்கதிர் இரவி அவன்

வானம் எங்கும் நீலம் கவிழ
செம்மை பூசி வெட்கம் பரவ
மஞ்சள் நிறத்தின் அழகில் மிளிர
நெற்றி பொட்டாய் விண்ணில் தகித்தான்

ஆடுகள் இல்லம் சேர
இடையச்சி கழியை வீச
பாறை ஒன்றின் மீதிருந்து
பார்த்திருந்தேன் அந்த காட்சி

மாடுகள் மருண்டு ஓட
அதட்டலின் ஓசை கேட்க
புல்லினம் சிறகடித்து வானில் ஏற
காத்திருந்தேன் அவனை காண

நொடிகளோ நகர மறுக்க
கதிரவன் முகத்தை மறைக்க
முழுமதி விண்ணில் நடக்க
மேகங்கள் துணைவர கண்டேன்

துணைவனை காணவில்லை
துயர் வந்து சேதி சொல்ல
விழி நீர் துளிர்க்கும் நேரம்
அவனும் வந்து நின்றான்

பொய்யாய் முகத்தை திருப்ப
பின் நின்று அணைத்துக்கொண்டான்
தனித்தே தவித்தேன் என்றேன்
துணையாய் இருந்தேன் என்று
இதயத்தைச் சுட்டினான்

இளகி அழுதேன் நான்
ஏன் என்றான் அவன்
ஆறுதலுக்கென்று - அவன்
நெஞ்சத்தில் முகம் புதைத்து
இதற்காக தான் என்றேன்.



2013/9/6 prime bala <prim...@gmail.com>
waiting.jpg

Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:06:52 AM9/8/13
to மின்தமிழ்
நேசம் அருமை.  பிச்சை வாங்கினாலும் பங்கு வைக்கத் தோன்றுகிறதே!

Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:09:17 AM9/8/13
to மின்தமிழ்
கொஞ்சம் புரியலை இது.  முதல் மூன்று ஆணாலும் கடைசி மூன்று பெண்ணாலும் சொல்லப்பட்டவையா.  ஏனெனில் உன் சுவாசக் காற்றில் என் சுவாசம் கரைகிறதுக்கு அப்பால் மீசைக்குறும்புனு வந்திருக்கே!!!!!!!


2013/9/5 Thamil Selvi <thamil...@gmail.com>
என் சுவாச காற்றே...!


Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:11:17 AM9/8/13
to மின்தமிழ்
உன் வார்த்தைகளில் பிறந்த ஏக்கம் தான்
அது திருடிச்சென்றது என்னவோ என் தூக்கம்தான்//

தூக்கம் தொலைத்து அவஸ்தையுடன் காதலா? :)))


2013/9/5 Thamil Selvi <thamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:12:42 AM9/8/13
to மின்தமிழ்
நல்ல எதிர்பார்ப்பு.  கடைசியில் எதிர்பாராத வரிகள்.

காதல் முத்திரையில் காமத்தைக் கடந்து சென்ற பின்னரும் முத்தமிட ஏன் எதிர்பார்க்கணும்?


2013/9/5 Thamil Selvi <thamil...@gmail.com>

360.gif

Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:14:15 AM9/8/13
to மின்தமிழ்
ஒருதலைக்காதலா?  ம்ம்ம்ம்ம்??? அதுவும் தீய்ந்து போகக் கூடத் தயாராக???? :)



Thamil Selvi

unread,
Sep 8, 2013, 9:14:48 AM9/8/13
to mint...@googlegroups.com
முத்தம் என்பது அன்பின் மொழி...அது காம செயல்பாடுகளுக்கான ஒன்றல்ல



360.gif

Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:15:12 AM9/8/13
to மின்தமிழ்
ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலிருக்கே!  புரிஞ்சுக்க முடியலையாமா? அதுவும் கவிஞன்??? :)))



Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:16:01 AM9/8/13
to மின்தமிழ்
என்ன ஆச்சு?? சண்டையா?  சரியாப் போயிடும். :)



Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:17:04 AM9/8/13
to மின்தமிழ்
நல்லா இருக்கு அனுபவம்.  உணர்வுகளை வெளியிட்டுச் சொல்ல நன்றாய்ப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். 



Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:18:08 AM9/8/13
to மின்தமிழ்
என்ன சொல்றது.  சும்மாவானும் நல்லா இருக்குனு சொன்னா அது வெறும் பேச்சு. 



Thamil Selvi

unread,
Sep 8, 2013, 9:18:42 AM9/8/13
to mint...@googlegroups.com
தங்கள் கருத்துக்கள் நன்றாய் இருக்கிறது. ஆனால் எந்த எந்த கவிதைக்காக சொல்லப்பட்டது என்று தான் தெரியவில்லை.



On Sun, Sep 8, 2013 at 6:47 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
நல்லா இருக்கு அனுபவம்.  உணர்வுகளை வெளியிட்டுச் சொல்ல நன்றாய்ப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். 



Thamil Selvi

unread,
Sep 8, 2013, 9:19:39 AM9/8/13
to mint...@googlegroups.com
என்ன சொல்றது.  சும்மாவானும் நல்லா இருக்குனு சொன்னா அது வெறும் பேச்சு. 


பிறகு இப்ப எப்படி தான் இருந்ததாம்


On Sun, Sep 8, 2013 at 6:48 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
என்ன சொல்றது.  சும்மாவானும் நல்லா இருக்குனு சொன்னா அது வெறும் பேச்சு. 



Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 9:19:34 AM9/8/13
to மின்தமிழ்
ஆஹா, அருமைங்க.  தனிமையின் தவிப்பும், கடைசியில் துணையின் அருகாமையும், அதன் விளைவால் வந்த கோபத்துடன் கூடிய மகிழ்வும், அதற்கேற்ற படமும்.  அருமைனா அருமை தான். 



Thamil Selvi

unread,
Sep 8, 2013, 9:21:16 AM9/8/13
to mint...@googlegroups.com
நன்றியோ நன்றி தமிழ்செல்வியை பாராட்டிய கீதா (செல்ல) அம்மாவிற்கு


2013/9/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஆஹா, அருமைங்க.  தனிமையின் தவிப்பும், கடைசியில் துணையின் அருகாமையும், அதன் விளைவால் வந்த கோபத்துடன் கூடிய மகிழ்வும், அதற்கேற்ற படமும்.  அருமைனா அருமை தான். 



Thamil Selvi

unread,
Sep 10, 2013, 3:06:40 AM9/10/13
to mint...@googlegroups.com
உணர்வுகளின் கிறுக்கல்கள்

பசுவின் வருடலில் 
சுகித்து நிற்கிறது கன்று
லயித்து போகிறேன் நான்

***
அப்பாவினிடத்தில்
அம்மாவை கண்டேன்
அவர் என் தலை வருடிய போது
***
அம்மா அப்பாவானாள்
கோபத்தின் உச்சத்தில்
பிரம்போடு
சிரித்து வைத்தேன் நான்
சிலிர்த்து போனாள் அவள்

***

கிள்ளினால் வலிக்கும் என்று
சூடுவதில்லை நான்
ரோஜாவை

***

நம்பிக்கையின் சாரத்தில் மட்டுமே
உயிருடன் இருக்கிறது நட்பு

***

வார்த்தைகளில்
கொட்டப்படுகிறது
உள்ளத்தின் நினைவுகள்
நட்பென்றேன் 
நட்பாக வந்தாய்
சந்தேகத்தை சாரல் போல்
தெளிக்க எங்கே கற்றாய்

***
சேவை என்பது இல்லை என்றான்
மனித நேயம் போற்றப்படுதலில்
சேவை என்றொரு வார்த்தை
அர்த்தமிழந்து போனது
மனித நேயத்தின் அர்த்தம் என்ன
கேட்க மறந்தேன் நான்

***
வாழ்வியல் தேடலின் நிமித்தம்
நேசங்களை வார்த்தைகளில்
வார்த்துவைக்கிறேன்
அழகியலாய் தொடருமோ என

***




2013/9/8 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 10, 2013, 3:12:42 AM9/10/13
to mint...@googlegroups.com
உணர்வுகளின் கிறுக்கல்கள்

ரோஜா மலரின்
 மென்மைக்குள் நீர்த்து 
போகிறது என் சுவாசம்

***
புல்லின் அசைவில் 
அழிந்து போகிறது 
புறவெளியின் அழுகுரல்கள்.


***
அழுகுரலின் ஓலத்தில் 
இசையை காண்பவள் நான்

***
எட்டியே நின்றுவிடுங்கள்
இங்கு வலிகளின் சுவடுகள் மட்டுமே
மகிழ்வின் மாட்சிகளுக்கு இடமில்லை.
***

நட்பாக நட்பே வா
இனமற்ற பெருவெளியில்
அன்பை சுகிப்போம்
***

பெருங்கடலின் மென் உணர்வை 
பகிர்ந்தளிக்க எண்ணுகிறேன்
மற்றொரு பெருங்கடலின்
கொந்தளிப்பில்
காணாமல் போகிறது அது

***

வாழ்தல் மரணமுற்று போகிறது
குளிரில் முனகும்
தெரு நாயை அணைத்து 
தேற்ற முடியாத போது
***

பொக்கை வாயின் புன் சிரிப்பில்
காந்தங்களை கொட்டி வைத்தது யார்?

***

பசுவும் கள்ளத்தனம் செய்கிறது
திருடுகிறான் என உணர்ந்து
பால் மடியை இறுக பிடித்து

***


2013/9/10 Thamil Selvi <thamil...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 10, 2013, 2:24:39 PM9/10/13
to மின்தமிழ், Subashini Tremmel
கவிதையை வாசிக்கும் போது கவிதையின் சோகத்தின் தாக்கத்தை உணர்ந்தேன். 


2013/9/10 Thamil Selvi <thamil...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Thamil Selvi

unread,
Sep 10, 2013, 3:48:03 PM9/10/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel

நேசத்தின் படையல்


விதை ஒன்று விழுந்திருக்கும்
மண்ணிலே புதைந்திருக்கும்
உயிரினை தேக்கி வைத்து
காலத்திற்காக ஏங்கியிருக்கும்

விண்ணோ நேசத்தினை
மழையாய் பொழிந்திருக்கும்
இரு தளிர் விட்ட நாள் பொழுதில்
மனமோ மகிழ்ந்திருக்கும்

இளந்தளிர் பச்சையென
மலர் அற்ற பருவத்திலே
பசுமை மங்கை சிரித்திருப்பாள்
விழிகள் அது ரசித்திருக்கும்

கரும்பச்சை இலை இடையில்
சிவந்த நிற மலர் இருக்க
மழலையாய் தோன்றியது
மலர் கொத்து பூக்கள் அது

இயற்கையின் இயக்கத்தில்
இறைவனின் மாட்சி இது
நெகிழ்ந்து வியந்து நின்றேன்
நேசத்தின் படையல் இது.




2013/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Flowers.jpg

Thamil Selvi

unread,
Sep 11, 2013, 8:16:42 AM9/11/13
to mint...@googlegroups.com
உங்களையும் சோகப்படுத்திவிட்டதா உணர்வுகளின் கிறுக்கல்கள்


2013/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 11, 2013, 8:28:22 AM9/11/13
to mint...@googlegroups.com
உணர்வுகளின் கிறுக்கல்கள்

கண்கள் பேசட்டும்
நாம் மௌனமாக இருப்போம்
காதல் புத்தகத்தில்
திருப்பப்பட வேண்டிய
பக்கங்கள் அநேகம்

***

நீ இருக்கிறாய்
என்று தான் விழிக்கிறேன்
இல்லாமல் போகிறாய்
கனவே கானல் நீரா நீ

***

உன் புன்னகையில்
ஒளிந்துகொள்கிறது
எனக்கான காதல்

***

பகிர்ந்துக்கொள்ள
பல்லாயிரம் இருக்கிறது
என்னிடத்தில்
பெற்றுக்கொள்ள
நீ இருக்கிறாயா ?

***

என் வீடு ஒரு
ஆலயம்
அங்கே தான்
அம்மா இருக்கிறாள்
கடவுளாக

***

முத்தங்கள்
அன்பின்
பேச்சுமொழி

***

நான் தீண்டத்தகாதவளா
சுண்டுவிரல் தீண்ட
இத்தனை தயக்கம்

***

என் விழிகள்
வாசலை மேய்வது
உனக்காகதான்

***

உனக்காக என்னிடம்
இருக்கிறது வெற்றிடம்
நிரப்பவென
எப்போது வருகிறாய்

***

நேரில் வா
என்றேன்
கனவில் வா
என்கிறான்
காதல் வஞ்சகன்

***




Thamil Selvi

unread,
Sep 13, 2013, 7:03:42 AM9/13/13
to mint...@googlegroups.com
சகோதரத்துவம்

வகுப்பறையில் மயங்கினாள் அவள்

தாங்கிக்கொண்டான் அவன்

காதல் என்றொரு வதந்தி

பரவியது விரைவில்

 

சகோதரத்துவம் என்று

முழங்கி நின்றார்கள்

இருவரும்

தயங்கி நின்றேன் நான்

 

தவித்து பகன்றார்கள் அவர்கள்

ஒரு மகளாய் பிறந்தால்

அண்ணனையும் தம்பியையும்

எங்கே தேடுவது

 

ஒரு மகனாய் பிறந்தாள்

தங்கையையும் தமக்கையையும்

எங்கே காண்பது

வினா எழுப்பினார்கள்

 

உடன் பட்டேன் நான்

சகோதரத்துவம் பரந்து

விரியட்டும் என்று.



2013/9/11 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 13, 2013, 7:04:16 AM9/13/13
to mint...@googlegroups.com

பாதை எங்கிலும்

விழித்தெழு
மெல்ல இமைகள் பிரித்து
உனக்காக தான் இந்த விடியல்
காகங்களின் இன்னிசையில்
புலர்கிறது பொழுது
புத்துணர்ச்சியை வடித்து

புன்னகை மலரட்டும்
இதழ்களில்
உலகின் இன்பங்கள்
உன் காலடியில்
வெற்றியின் சுவடுகளில்
பயணிக்கிறது
உன் பாதம்

கவலை முட்கள்
குத்துமோ என அச்சம் எதற்கு
துணிச்சல் காலணியை
அணிந்து துரித நடைபோடு
கால்கள் இடறாதபடி
அன்புமலர்கள் தூவக்காண்பாய்
பாதை எங்கிலும்


2013/9/12 Thamil Selvi <thamil...@gmail.com>
சகோதரத்துவம்

வகுப்பறையில் மயங்கினாள் அவள்

தாங்கிக்கொண்டான் அவன்

காதல் என்றொரு வதந்தி

பரவியது விரைவில்

 

சகோதரத்துவம் என்று

முழங்கி நின்றார்கள்

இருவரும்

தயங்கி நின்றேன் நான்

 

தவித்து பகன்றார்கள் அவர்கள்

ஒரு மகளாய் பிறந்தால்

அண்ணனையும் தம்பியையும்

எங்கே தேடுவது

 

ஒரு மகனாய் பிறந்தாள்

தங்கையையும் தமக்கையையும்

எங்கே காண்பது

வினா எழுப்பினார்கள்

 

உடன் பட்டேன் நான்

சகோதரத்துவம் பரந்து

விரியட்டும் என்று.




2013/9/11 Thamil Selvi <thamil...@gmail.com>
vanthachu cj


2013/9/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

பிரைவேட் வலை.

தலைப்பு:  "உணர்வுகளின் ஓவியங்கள்"  என்றிருக்க வேண்டும்.

சி. ஜெ.


2013/9/11 Thamil Selvi <thamil...@gmail.com>
உணர்வுகளின் கிறுக்கல்கள்

என் வீடு ஒரு
ஆலயம்
அங்கே தான்

என் விழிகள்

Subashini Tremmel

unread,
Sep 13, 2013, 8:46:03 AM9/13/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/9/13 Thamil Selvi <thamil...@gmail.com>

சகோதரத்துவம்

வகுப்பறையில் மயங்கினாள் அவள்

தாங்கிக்கொண்டான் அவன்

காதல் என்றொரு வதந்தி

பரவியது விரைவில்

 

சகோதரத்துவம் என்று

முழங்கி நின்றார்கள்

இருவரும்

தயங்கி நின்றேன் நான்

தமிழ்ச்செல்வி - இந்திய சூழலில் ஒரு ஆணும் பென்ணும் பழகுவது என்பது பலருக்கு சுவாரஸியமான விஷயமாகின்றது.  பயந்து போகும் இளைஞர்கள் ஒரு உறவு முறை பெயரை வைத்துக் கொண்டு பழகினால் பிறறது கடுஞ்சொல்லிலிருந்து தப்பிக்கலாம் என நினைக்கின்றனர். இது எனக்கு அவர்கள் மேல் பாவ உணர்ச்சியையே ஏற்படுத்துகின்றது. பலர் இப்படி பழகி விட்டு பின்னர் காதலிக்கவும் செய்கின்றனர். இதுவும் சமூகத்தில் பேச்சாகவும் கேலியாகவும் கொள்ளப்படுகின்றது. ஆக மொத்தம் ஆண்-பெண் உறவு என்பது பலருக்கு சுவாரஸியமான ஒரு விஷயம். குறைசொல்லிப் பேசிக்கொள்ளவும் நேரத்தைப் போக்கிக் கொள்ளவும் உள்ள ஒரு விஷயமாகத் தான் எனக்கு இது படுகின்றது. அடிப்படையில் யாருடைய மனமாவது புண்பட வேண்டும். இதுதான் நடக்கும். 

ஐரோப்பிய சூழலைப் பற்றி நான் விவரிக்க வேண்டியது அவசியம் என நினைக்கின்றேன்.

அலுவலக நண்பர்களாக இருந்தாலும் சரி, பக்கத்து வீட்டு நண்பர்களாக இருந்தாலும் சரி இங்குள்ள சூழலில் ஒருவருடன் மற்றொருவர் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தால் அதனையும் ஒரு பொருட்டாக நினைத்து அவர்களைச் சேர்த்து வைத்துப் பேசும் சமூகப் போக்கு  இங்கில்லை. பக்கத்து வீட்டுக்காரனும் பக்கத்து வீட்டுக்காரியும் ஒரு ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டால் கூட அதனை ஒரு பொருட்டாக நினைத்து பேசும் சமூகப் போக்கு இங்கில்லை. அதனால் ஆணோ பெண்ணோ வேரொரு பாலாருடன் பழக உறவு முறைகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

போலிகளை உருவாக்க முனையும் நேரம் வாழ்க்கையே போலியாகிப் போகின்றது. 
நேர்மையும் உண்மையும் பிறருக்காக இல்லாமல் நமக்கே நமக்காக இருக்க வேண்டிய சூழலை வளர்க்கின்ற சமூகத்திலேயே போலி மறையும். 

சுபா


 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Sep 13, 2013, 9:17:53 AM9/13/13
to மின்தமிழ்
இதன் பின்னணியில் திருமண உறவின் அடிப்படையிலான உறவுகள் பற்றிய மானுடவியல் சித்தாந்தம் உள்ளது

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள cousin என்ற உறவுமுறை.  இது தமிழகத்தில் ஒரு குழப்பமான சூழலில் காதலை மறைக்கப் பயன்படுத்தப்படுகிறது 

 இதற்கு முக்கைய அடிப்படை endogamous  என்ற நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதைச் சில பிரிவுகள் அனுமதிப்பதே

இன்னும் பல பிரிவுகளில் குறிப்பாக பழங்குடிகளில் cousi உடன் பாலுணர்வுடன் பழகுததும் திருமணம் செய்துகொள்ளுவதும் பெருங் குற்றம்.  அவர்கள் சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் மற்ற பிரிவுகளில் திருமணம் செய்துகொள்ளும் exogamus உறவு மட்டும்தான்

குலம் கோத்திரம் பார்த்த காலத்தில் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்துகொள்வதில்லை

வவ


2013/9/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 17, 2013, 2:53:57 AM9/17/13
to mint...@googlegroups.com
நீ அழைப்பாய் என

நெஞ்சுக்கூட்டில் இனம் புரியா படபடப்பு
இமைகளின் தழுவலில் இணைபிரியாமல்
ஒட்டிக்கொள்ளும் உன் உருவம்.
ஒருவரிடமும் பேச பிடிக்காமல்
உறங்குவதாய் பாசங்கு செய்யும் மனம்

இந்த நொடியே என் அலைபேசி
இசைமழை தூவும்
அதில் இதமாய் உன் குரல் மேவும்
என்றொரு ஆழ்ந்த எதிர்பார்ப்பு

அதுவும் தான் நடந்தது
அக்காவின் அங்கலாய்ப்பை
ஆர்வமே இல்லாமல் செவி மடுக்க
அந்த தருணங்களின் சித்தரிப்பில்
காத்திருப்பில் உன் அழைப்பு

பதறிய மனம் சிதறிபோன
கண்ணீர் முத்துக்களோடு
மீண்டும் அழைத்துப்பார்க்கிறேன்
நீண்ட மணியோசைக்கு பிறகு
பீங்ங்க் பீங்ங்க் பீங்ங்க்
என்ற ஒலியே பதிலாய்

உனக்கு பணியிருக்கும்மென்று
என் உயிரை தேற்றிக்கொள்கிறேன்
என் காதல் வலிகளை
நீ அறியாமல் கொல்கிறேன்.
தினம் தினமும்.


2013/9/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 17, 2013, 3:36:28 AM9/17/13
to mint...@googlegroups.com
அன்பின் சுபா

இந்திய சூழலில் ஒரு ஆணும் பென்ணும் பழகுவது என்பது பலருக்கு சுவாரஸியமான விஷயமாகின்றது.  பயந்து போகும் இளைஞர்கள் ஒரு உறவு முறை பெயரை வைத்துக் கொண்டு பழகினால் பிறறது கடுஞ்சொல்லிலிருந்து தப்பிக்கலாம் என நினைக்கின்றனர். நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தீர்கள். இது ஒரு வகையில் நிஜம் தான். நான் மேற்குறிப்பிட்ட சகோதரத்துவம் கவிதையானது, நான் மகளின் பள்ளிக்கு பெற்றோர் கூட்டத்திற்கு சென்றபோது என் மகளின் சிநேகிதி குறித்து இப்படி ஒரு கருத்து இருப்பதை சொல்லி விசாரணை நடந்தது.

அது தனிப்பட்ட முறையில் நடக்காமல் எல்லா பெற்றோர் முன்னிலையிலும் விசாரித்தது எனக்கு மனம் வருத்தமாகவே இருந்தது. இருப்பினும் அந்த பெண் அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் வந்தால் மயங்கியிருக்கிறாள். அவன் அருகில் இருந்ததால் தாங்கிக்கொண்டான் அவ்வளவே அந்த நிகழ்ச்சி. என் மகளுக்கு ஆறு நண்பர்கள், நான் அவர்களை செவன் பேர்ட்ஸ் என்று அழைப்பது வழக்கம்.

பள்ளிக்கு போகும் போதெல்லாம் மகளின் நட்பு வட்டத்தில் இல்லாதவர்களும் என்னை சூழ்ந்துக்கொள்வது பிரியத்தின் அடையாளம். அன்று அவர்கள் இருவர் கண்கலங்கியதில் அவர்கள் நண்பர்களும் சேர்ந்து கலங்கியது நெகிழச்செய்தது.

ஆண் பெண்ணோடும், பெண் ஆணோடும் பேசக்கூடாது என்று சட்டம் போட்டால் யாரோடு வாழ்கிறோம் விலங்கினங்களோடா என்று பரிந்து பேசிய மாணவர்களின் அதிரடி. என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பார்க்கின்ற எல்லோர் மேலும் காதல் வராது சகத்தோழன் சகோதரன் என்ற பழக்கம் தான் என்று உறுதியாக பேசியது

ஒரு குடும்பத்தில் தனித்து பிறந்துவிட்டால் ஒரு அண்ணனையோ தம்பியையோ, சகோதரியையோ சமுதாயத்தில் தான் கண்டெடுக்க வேண்டியிருக்கிறது என்ற பேச்சு

அங்கிருந்த எல்லோரையும் அதிர செய்தது. முதல்ல எங்கள நம்புங்கப்பான்னு அந்த பொண்ணு அழுதது நெகிழ்ச்சி.

அந்த கவிதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் பதில் தாமதம் ஆகிவிட்டது சுபா

நட்புடன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி


2013/9/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:25:30 AM9/17/13
to மின்தமிழ்
கிள்ளினால் வலிக்கும் என்று
சூடுவதில்லை நான்
ரோஜாவை
நல்ல ரசனைதான். :)))))


2013/9/10 Thamil Selvi <thamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:26:59 AM9/17/13
to மின்தமிழ்
பொக்கை வாயின் புன் சிரிப்பில்
காந்தங்களை கொட்டி வைத்தது யார்?

எல்லாமே நன்றாக இருந்தாலும் இது ரொம்பப் பிடிச்சது. 


2013/9/10 Thamil Selvi <thamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:27:49 AM9/17/13
to மின்தமிழ்
நேசத்தின் படையல் அருமையான படையல். 


2013/9/11 Thamil Selvi <thamil...@gmail.com>

நேசத்தின் படையல்



Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:29:39 AM9/17/13
to மின்தமிழ்
வார்த்தைகளை எல்லாம் எங்கே இருந்து தேர்ந்தெடுக்கிறீர்கள்?? காதல் வஞ்சகன், மிக அருமையாக இருக்கு. 


2013/9/11 Thamil Selvi <thamil...@gmail.com>
உணர்வுகளின் கிறுக்கல்கள்


நேரில் வா
என்றேன்
கனவில் வா
என்கிறான்
காதல் வஞ்சகன்

***




-- 

Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:31:43 AM9/17/13
to மின்தமிழ்
உண்மை தான்.  ஒரே மகனைப் பெற்ற தாய், தந்தையரும், ஒரே மகளைப் பெற்ற தாய், தந்தையரும் புரிந்து கொள்ள வேண்டும்.  எல்லாத்தையுமே காதல் என நினைக்கக் கூடாது.  விழுகிறாள் என்ற அநுதாபம், பச்சாத்தாபம் இவற்றில் கூடப் பிடிக்கலாமே.  இதுக்கெல்லாமா காதலைக் கொண்டு வருவது! மனிதர்கள் தாம் எத்தனை கீழே போகிறார்கள்! :(


2013/9/13 Thamil Selvi <thamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:33:22 AM9/17/13
to மின்தமிழ்
//கவலை முட்கள்
குத்துமோ என அச்சம் எதற்கு
துணிச்சல் காலணியை
அணிந்து துரித நடைபோடு
கால்கள் இடறாதபடி
அன்புமலர்கள் தூவக்காண்பாய்
பாதை எங்கிலும்//

நல்லதொரு காலணி கிடைத்துவிட்டது.  இனி என்ன??? மலர்ப்பாவாடை தான். வாழ்த்துகள் 



2013/9/13 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 17, 2013, 4:35:20 AM9/17/13
to mint...@googlegroups.com
எத்தனை அவமானம் அவ்விருவருக்கும், உதவும் எண்ணம் கனவிலும் வராது அம்மா என்றான் அந்த மகன். கீழே ஊசி விழுந்தாலும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளகூடிய குழந்தைகள் அவர்கள்.


2013/9/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2013, 4:36:31 AM9/17/13
to மின்தமிழ்
எப்போவோ ஓரிரு முறை இவ்வாறு நடக்கும் தான்.  மிகவும் மெல்லிய மனம் கொண்டிருந்தால் எப்படி?? சமாளிச்சுக்கணும். :))))


2013/9/17 Thamil Selvi <thamil...@gmail.com>
நீ அழைப்பாய் என


Thamil Selvi

unread,
Sep 17, 2013, 4:36:56 AM9/17/13
to mint...@googlegroups.com
கீதாம்மா எல்லா கருத்துரைகளுக்கும் சேர்த்து

நன்றி...! நன்றி...! நன்றி...!


2013/9/17 Thamil Selvi <thamil...@gmail.com>

Thamil Selvi

unread,
Sep 17, 2013, 4:37:31 AM9/17/13
to mint...@googlegroups.com
ம்ம்ம்


2013/9/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>

G J Thamilselvi

unread,
Sep 20, 2013, 12:41:14 PM9/20/13
to mint...@googlegroups.com

யாரோ நடக்கிறார்கள்


காற்றில் யாரோ நடக்கிறார்கள்

கால்கள் முடக்கிக்கொண்டு

காற்றில் யாரோ சிரிக்கிறார்கள்

இதழ்கள் இறுக்கிக்கொண்டு

 

கைவீச தோன்றும் போது

திசைகள் அது அருகில் இல்லை

திசை தேடி ஓடும் போது

திசை திருடன் காணவில்லை

 

உயிரது அழுதிடும் போது

தவித்திடும் மனங்கள் இல்லை

வறுமையில் பசித்திடும் போது

தருவதற்கு யாருமில்லை

 

அழுகை அது இசைத்திடும் போது

ஆழ் மனதின் முழுநிலை

அழுகை என்னும் ஓலத்தின் போது

அன்பு எங்கும் வறுமை நிலை

 

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

பொய்யை விதைத்துக்கொண்டு

காற்றில் யாரோ பறக்கிறார்கள்

உண்மை மறைத்துக்கொண்டு

 

தவித்திடும் இதயங்கள்

உலகத்தில் பல உண்டு

ஒலித்திடும் அழுகையில்

தவித்திடும் மனம் உண்டு

 

நிலை அதை பாராது

அணைத்துக்கொண்ட உயிர்கள் உண்டு

துணிச்சல் எனும் நேர்க்கோட்டில்

அன்பினை உயிர்த்துக்கொண்டு

காற்றில் யாரோ விதைக்கிறார்கள்

அன்பெனும் செழுமை விதை

காற்றில் யாரோ அறுக்கிறார்கள்

முழுமையின் கனவு எல்லை

Thamil Selvi

unread,
Sep 20, 2013, 12:50:22 PM9/20/13
to mint...@googlegroups.com

என் சின்னரும்பு செல்லமே

சிருங்கார வண்ணமே

கன்னத்துல ஏனடி

கைய கொஞ்சம் தள்ளடி

 

விளையாட்டு தோழியா

விளையாட நான் வாரேன்

பட்டாம்பூச்சி இறக்க ஏறி

உலகத்தை காட்டபோறேன்

 

வண்ண வண்ண மலரினிலே

நீயுந்தான் மலரான

சூடிக்கொள்ள நான் துணிஞ்சேன்

இதயத்துல கண்மணியே

 

சோகத்தை தூரத்தள்ளு

பட்டாம்பூச்சி இறக்க ஏறு

வானத்துல ஏறி போயி

மின்மினி கொண்டு வருவோம்.



2013/9/20 G J Thamilselvi <thamil...@gmail.com>

--
child.jpg

Kamala Devi

unread,
Sep 20, 2013, 12:54:27 PM9/20/13
to mint...@googlegroups.com
செல்வி
ஒவ்வொரு கவிதையாய் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
முழுமை பெற்ற பிறகு சொல்வேன் அம்மா.
மனமுவந்த வாழ்த்துக்களுடன்
சேச்சி


From: G J Thamilselvi <thamil...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, 21 September 2013, 0:41
Subject: [MinTamil] Re: கலைகின்ற கனவுகள் (ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் கவிதைகள்)

G J Thamilselvi

unread,
Sep 21, 2013, 12:05:27 PM9/21/13
to mint...@googlegroups.com

வார்த்தைகள் வற்றி விட்டதை
போன்றதொரு வரட்சி
புதியதொரு சிந்தனை எழாமல்
பழையதும் புதுப்பிக்கபடாமல்

குவிந்து கவனம்
ஏதோ ஒன்றின் அசைவில்
லயித்து போனதில் 
நான் இல்லாமல் போனேன்

உள்ளேயோ வெளியேயோ
அசைதல் எங்கே நிகழ்கிறது
விடை தேடும் முயற்சியில்
இயக்கம் மட்டும் நிகழ்தலாக

பார்வையாய் நின்றவளின்
பரு உரு கடந்தபோது
அருவமானதொன்றை 
பார்த்தேன் என்னுள்

அதென்ன என்ற கேள்வியினுடே
உறுப்புகள் துணையின்றி
பார்க்கிறேன் பேசுகிறேன்
உடலற்றவளாய்

ஆணா பெண்ணா என்று
எழுந்த கேள்வியில்
உயிர் உடல் புகுந்தபின்
நேரும் என்றொரு அகக்காட்சி

உயிரோ ஆணுமின்றி பெண்ணுமின்றி
மூன்றாதோர் இனமுமின்றி
மழலை போல் விளையாடி செல்கிறது
கையிற் அகப்படா காற்றாக

Subashini Tremmel

unread,
Sep 21, 2013, 4:19:48 PM9/21/13
to மின்தமிழ், Subashini Tremmel
எங்கிருந்து வார்த்தைகளை தேடுகின்றீர்கள். :-)))

புதியதொரு சிந்தனை எழாமல்
பழையதும் புதுப்பிக்கபடாமல்

விடை தேடும் முயற்சியில்
இயக்கம் மட்டும் நிகழ்தலாக

அருமையான வரிகள். மிக ரசித்தேன்.

சுபா

2013/9/21 G J Thamilselvi <thamil...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dr. N.Kannan

unread,
Sep 21, 2013, 8:37:55 PM9/21/13
to mint...@googlegroups.com
சபாஷ்!
க.>


Sent from Samsung Mobile


-------- Original message --------
From: G J Thamilselvi
Date:22/09/2013 00:05 (GMT+08:00)
To: mint...@googlegroups.com
Subject: [MinTamil] Re: கலைகின்ற கனவுகள் (ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் கவிதைகள்)

Geetha Sambasivam

unread,
Sep 22, 2013, 7:36:57 AM9/22/13
to மின்தமிழ்
எங்கேயோ போயிட்டீங்க!!!!!  அற்புதம்.  இதுக்கு மேல் சொல்ல வார்த்தையில்லை  அதுவும்

உள்ளேயோ வெளியேயோ
அசைதல் எங்கே நிகழ்கிறது
விடை தேடும் முயற்சியில்
இயக்கம் மட்டும் நிகழ்தலாக//

நினைக்கையிலேயே ஆச்சரியம் பொங்குகிறது. இந்த வயசில் இத்தனை ஆழமான சிந்தனையா?  வெளுத்துக்கட்டுங்க. 



G J Thamilselvi

unread,
Sep 23, 2013, 6:55:15 AM9/23/13
to mint...@googlegroups.com
தும்பிக்கு ஒரு மடல்


தும்பியை பிடித்து நுனி வாலில் நூல்கட்டி

பறக்க விட்டு ரசித்ததொரு தினத்தில்

மருகி போனேன் நான்

மாற்று திறன் கொண்ட எனக்கு புரிந்தது

வால் அறுந்த தும்பியின் வலி

அவர்களுக்கு புரியவில்லை ஏன்?

 

தயங்கி தயங்கி சொன்னபோது

போடி நொண்டி என்று

விளையாட்டில் சேர்க்காமல்

விரைந்தோடி பறந்தனர்

சிட்டுகளின் இறக்கைகளை

தனதாக்கிய மகிழ்வோடு


முழங்கால் தேய்தலோடு

வலம் வந்த நாட்கள் எல்லாம்

என் உலக தும்பிகளுக்கு

விரைவு மடலிட்டேன்

விரைந்து ஓடுங்கள்

கொய்து கிழிக்க ஒரு இராட்சத

கூட்டம் கொடூரன் தலைமையில்

குரூரமாக வருகிறதென்று


Geetha Sambasivam

unread,
Sep 23, 2013, 7:54:59 AM9/23/13
to மின்தமிழ்
:(


2013/9/23 G J Thamilselvi <thamil...@gmail.com>

N. Kannan

unread,
Sep 23, 2013, 8:23:04 AM9/23/13
to மின்தமிழ்
ஆகா! இந்தப்பார்வையே மின்தமிழுக்குப் புதிது!

ஆற அமர உட்கார்ந்து யோசிக்கையில் எத்தனை வன்முறைகள் செய்கிறோம், செய்திருக்கிறோம், செய்வோரைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!

நம்முள் மென்மையை வளர்த்துக்கொள்வதற்குப்பதில் கர்மக் கோட்பாட்டைக் கொண்டு வந்துவிடுகிறோம். ஒன்று இவன் அடுத்த பிறவியில் வால் அறுபட்ட தும்பியாவான் இல்லையெனில் அது முன்பிறவியில் இவனைப் போல் கொடுமை செய்திருக்கும். இந்தச் சமாதானம் போதும் வன்முறையும், ஏழ்மையும் மண்ணில் தழைப்பதற்கு.

அருளாளர்களுக்கு மட்டும் ஏனோ புரிகிறது, ‘வாடிய பயிரைக் கண்டபோது வாடுவது!’ இரந்துண்டு வாழ்வாரைக் காணில் உலகு இயற்றியான் பரந்து கெடுக!’ எனக் கோபமுறுவது!

நாம் அற்ப ஜீவிகள், வன்கொடுமையுடன் வாழ்வோம்!

நா.கண்ணன்


2013/9/23 G J Thamilselvi <thamil...@gmail.com>
தும்பிக்கு ஒரு மடல்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Hari Krishnan

unread,
Sep 23, 2013, 8:36:37 AM9/23/13
to mintamil
2013/9/23 G J Thamilselvi <thamil...@gmail.com>

முழங்கால் தேய்தலோடு

வலம் வந்த நாட்கள் எல்லாம்


மனசுல ரத்தம் சொட்டுது.  எனக்கு ஒரு தம்பி உண்டு.  பீமசேனன் மாதிரி பிறந்து பத்தாவது மாதத்தில் போலியோ தாக்கி, இன்றளவும் முழங்கால்.

கவிதை இருக்கட்டும்மா.  ரொம்ப நல்லா இருக்கு; மனச உருக்குது.  ஆனா, மனசு தைரியத்தை தளர விட்டுடாதீங்க.  என் தம்பிக்கு, பிறந்தபடி இருப்பது வலது கையும், மூளையும் மட்டும்தான்.  நல்லவேளையா மூளை பாதிப்பில்ல.  இன்னிக்கு ரயில்வேயில் சீஃப் ஆஃபீஸ் சூப்பிரன்டென்டென்ட்டா இருக்கான்.  எல்லாம் எங்கம்மா சொல்லிக் கொடுத்த தைரியம் மட்டும்தான்.

நீ திடங்கொண்டு போராடு பாப்பா.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Thamil Selvi

unread,
Sep 23, 2013, 8:55:01 AM9/23/13
to mint...@googlegroups.com
நன்றி கீதாம்மா, கண்ணன் சார், ஹரி அண்ணா


2013/9/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Kamala Devi

unread,
Sep 23, 2013, 9:36:12 AM9/23/13
to mint...@googlegroups.com
ஈற்றடியில் எதுகையை மறந்த ஹிம்சை இல்லை.
ஆனால் வரி வரியாய் மெளனமாய் அவதானிக்கிறேன்
செல்வி
ஹரியின் மொழியில் சொல்லத்தெரியவில்லை.
ஆனால் மனசு பாகாய் உருகுகிறது
சேச்சி
கமலம்
 


From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mintamil <mint...@googlegroups.com>
Sent: Monday, 23 September 2013, 20:36
Subject: Re: [MinTamil] Re: கலைகின்ற கனவுகள் (ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் கவிதைகள்)

tsparu2001

unread,
Sep 23, 2013, 12:16:48 PM9/23/13
to mint...@googlegroups.com
உங்கள் கவிதை ஒவ்வொன்றையும் படித்து ரசிக்கிறேனம்மா. இந்தக் கவிதை படித்து அழுகை வந்தது.ஆனாலும் கீற்றாக ஒரு நம்பிக்கை. தரை மெழுகும் போது ஓடும் எறும்புக்கும் வழி விடும் நெஞ்சம் படைத்த உத்தமர்களும் இருக்கிறார்கள் நம்மிடையே!!. ஆகவே தும்பிகள் ஒரேயடியாக அஞ்ச வேண்டியதில்லை. கவியருவி பொழியும் தமிழ்(செல்வி) வாழ்க பல்லாண்டு!!. நிஜமாகவே நீங்க தமிழ்த்தாயின் செல்லம் தான்.

Rathinam Chandramohan

unread,
Sep 23, 2013, 1:21:30 PM9/23/13
to mint...@googlegroups.com

என் உலக தும்பிகளுக்கு

விரைவு மடலிட்டேன்


Eppadipatta varthaigal


This is Kavithai.



2013/9/23 tsparu2001 <tspar...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

துரை.ந.உ

unread,
Sep 24, 2013, 12:16:37 AM9/24/13
to Groups
Inline image 1 
உன்னால் முடியும் ..இல்லையெனில்.............
Inline image 2
யாரால்தான் முடியும் ........!


2013/9/23 G J Thamilselvi <thamil...@gmail.com>
தும்பிக்கு ஒரு மடல்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
ant.jpg
1qqqqqqqq.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages