சுப்பிரமணிய சிவா நினைவு நாள் !

123 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jul 23, 2014, 8:10:06 AM7/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
நன்றி: விகடன்

ஜூலை 23: விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிபோட்ட சுப்பிரமணிய சிவா நினைவு இன்று.. 
சிறப்பு பகிர்வு




சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்ரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.

தமிழகம் முழுக்க அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது.

தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார். பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.

காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர். திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை; இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.

புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.

- பூ.கொ.சரவணன்


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Innamburan S.Soundararajan

unread,
Jul 23, 2014, 5:10:37 PM7/23/14
to mintamil, Subashini Tremmel
இதையும் ஒரு கண் பார்க்கிறது, ஸுபாஷிணி.
24 07 2014

*

அன்றொரு நாள்: அக்டோபர் 4


Innamburan Innamburan 

Tue, Oct 4, 2011 at 4:20 PM


அன்றொரு நாள்: அக்டோபர் 4

‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!  ‘லொட்!லொட்!

இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.

(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)


[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.] 


ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.



அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:


''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''


நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது


"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...

சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.


அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)

"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’

ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:

வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.


தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:


‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.

இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...

...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...

...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.

சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.

காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார். 

எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.

இன்னம்பூரான்

04 10 2011


SubramaniyaSiva.jpg

உசாத்துணை:


.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17


Geetha Sambasivam 

Tue, Oct 4, 2011 at 4:33 PM



சத்தியம்.  பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை.  நன்றி பகிர்வுக்கு.

2011/10/4 Innamburan Innamburan <innam...@gmail.com>

எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.

இன்னம்பூரான்

04 10 2011


Nagarajan Vadivel 

Tue, Oct 4, 2011 at 6:24 PM



//சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//

காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண் விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?

ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு விளக்கங்கள்

1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில் விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்

2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில் உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்

காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில் வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம் 

திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும் முதலியார் என்றே கூறிக்கொள்வர்

எனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்

கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்

நாகராசன்

காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.

கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்

2011/10/4 Innamburan Innamburan <innam...@gmail.com>



Innamburan Innamburan 

Tue, Oct 4, 2011 at 6:37 PM

To: mint...@googlegroups.com

நன்றி பல. திரு.வி.க. அவர்கள் சைவ வேளாளர் தாம். நான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினேன். பிரசுரம் செய்வது எப்படி என்று தெரியவில்லை, திடீரன்று இங்கு வந்து விட்டதால்.  திரு.வி.க. அவர்களின் அலைவரிசையும், சிவா அவர்களின் அலை வரிசையும் சிறிது வேறுபட்டவை. அதனால் தான் இந்த அடை மொழிகள். இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியவர் திரு.வெ, சாமிநாத சர்மா. தற்காலம், தமிழ் மரபு கட்டளைக்கு இந்த பாமர கீர்த்திகளை ஆதாரத்துடன் கூறக்கூடியவர், திரு.பெ.சு.மணி. அவரை நேர் காணல் செய்து பயன் பெறலாம். எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.இன்னம்பூரான்

04 05 2011


N. Ganesan 

Tue, Oct 4, 2011 at 7:04 PM






On Oct 4, 7:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
> காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண்
> விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
> ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு
> விளக்கங்கள்
> 1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில்
> விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
> 2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில்
> உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
> காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில்
> வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ
> முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம்
> திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும்
> முதலியார் என்றே கூறிக்கொள்வர்
பாரதிதாசனாரும் இசைவேளாளர். மிக இளமையிலேயே
சங்கீதம், முருகன் மீதும், கீர்த்தனைகள் பாடியவர்.
சீகாழி முத்துதாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை,
... தமிழின் இசைவளம் கூட்டியவர்கள் இசைவேளாளர்களே.
தமிழ் சினிமாவின் முதல் 50 ஆண்டுகளில் நடிகைகள்
பலரும் காவிரிக்கரை கிராமங்களின், மற்ற ஊர்களின்
நட்டுவனார் குடும்பங்கள். குலத்தொழிலாக சங்கீதமும்,
தமிழும் பின்னி இருந்தது சினிமா, டிவி போன்றவற்றால்
வளர சாத்தியம் ஆனது. ஏ. ஆர். ரகுமானின் தந்தையாரும்
சென்னைக்கருகே உள்ள சிற்றூரின் பழங் கோயிலில்
இசை வளர்த்த குடும்பத்தவரே. அவர்களும் முதலியார்
என்பார்கள்.

நா. கணேசன்

> எனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ
> வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்
> கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
> நாகராசன்
>
> காஞ்சிபுரம்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%...>மாவட்டத்துச்
> சைதாப்பேட்டை<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%...>வட்டத்துத்
> *துள்ளம்* என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு
> ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ> நாட்டில்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4_%E0%AE%A8%E0...>
> திருவாரூர்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%...>என்ற
> ஊரைச் சேர்ந்தவர்கள்.
>
> கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர்.
> ஆசிரியத் தொழிலுடன்
> வணிகமும்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%...>புரிந்தவர்.
> இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண்
> குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை
> மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள்
> ஒருவரே கல்யாணசுந்தரனார்
> 2011/10/4 Innamburan Innamburan <innambu...@gmail.com>

[Quoted text hidden]

> ...
>
> read more »

[Quoted text hidden]


Innamburan Innamburan 

Tue, Oct 4, 2011 at 8:24 PM

To: mint...@googlegroups.com

To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.


Nagarajan Vadivel 

Tue, Oct 4, 2011 at 8:44 PM



முதலியார் என்ற ஜாதி தமிழகத்தின் பல பகுதிகளில் மற்ற ஜாதியினரையும் குறிப்பிடுவதா்க அமைந்து குழப்பத்தை உருவாக்குகிறது

ஆற்காட் முதலியார், கைக்கோளர், செங்குந்தர் இசை வேளாளர், துளுவ வேளாளர் என்று பல பெயர்கள்.  உயர்ஜாதி பிற்பட்டோர் என்று சமூகத்தில் முன்னேறியவர் பின் தங்கியவர் என்ற இரு நிலைகள்

நீதிக்கட்சியின் கடாட்சத்தால் கல்விபெற்று அரசு அலுவலகத்தில் முக்கிய பதவிகளைப் பெற்று ஒரு வலிமைபெற்ற குழுவாக உருவானது

சுய்ரியாதை சுதந்திரப்போராட்டம் காங்கிரஸ் திராவிட அரசுகளில் முதல்வர் பதவிவரை கைவசப்படுத்திய சாதனை என இந்த சாதிப்பிரிவு தமிழகத்தின் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகும்

நாகராசன்

2011/10/4 Innamburan Innamburan <innam...@gmail.com>

To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.


[Quoted text hidden]


rajam 

Tue, Oct 4, 2011 at 8:54 PM


சத்தியம்! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு! நன்றி! 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Anbu Jaya

unread,
Jul 23, 2014, 6:22:08 PM7/23/14
to mintamil
வணக்கம். இ ஐயா. 2011ல் எழுதியதை மீள்பதிவு செய்தமைக்கு நன்றி. முழுமையாகப் படித்தேன் என்று உறதி கூறுகிறேன்.

அதிகம் பறைசாற்றப்படாத சுதந்திரப் போராட்ட விரர்கள் பற்றி உங்களிடம் உள்ள செய்திகளையெல்லாம் சேர்த்து ஒரு மின்பதிப்பாக கிரியேடிவ் காமன்ஸ் உரிமையுடன் வெளியிடலாம் ஐயா. நண்பர் சீனிவாசன் அவர்களின் குழு அதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள் என்று எண்ணுகிறேன். 

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் இல்லாவிட்டால் என்னைப் போன்றோருக்கு சிவம் அவர்களின் அருமை தெரிந்திருக்காது. உங்களிடம் உள்ள குறிப்புகளும் காலவெள்ளத்தில் அழிந்துவிடக் கூடாது.

பதிவுக்கு நன்றி ஐயா. 


அன்புடன்,
அன்பு ஜெயா

Innamburan S.Soundararajan

unread,
Jul 23, 2014, 9:23:40 PM7/23/14
to mintamil
மிக்க நன்றி ஐயா. சீனிவாசன் நண்பர். நான் கொஞ்சம் வேலை செய்யவேண்டும். அடிக்கடி பரிக்ஷையும் மருத்துவ அலைச்சலும் படுத்துகின்றன.

உமது உறுதியை போற்றுகிறேன்.

இன்னம்பூரான்
Reply all
Reply to author
Forward
0 new messages