சமணம் - அடிப்படைகள்

990 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jun 21, 2015, 6:37:39 AM6/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய  பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.

மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.சமணம் என்பது இன்று வரலாற்று விசயம் மட்டுமே .. தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத அழிந்த ஒரு மதம் என்ற எண்ணமும் அங்கே பரவியிருக்கின்றது. மலேசிய இந்தியர்களின் சமய தளத்திலும் பல்கலைக்கழக தமிழ்த்துறை கல்வியாளர்கள் தளத்திலும் இன்னமும் நல்ல நட்பு கொண்டிருப்பதால் என்னால் இதனை துணிந்து கூற முடியும்.

இந்தப் பார்வை வரலாற்று பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் ஒரு முக்கிய விசயத்தை அதன் முழு பரிமாணத்தைக் காணாமல் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு மட்டும் பார்வையைக் குறுக்கிக் கொண்டு காணும் தன்மையை வளர்ப்பதாக இருப்பதையே காண்கின்றேன். 

மலேசிய சூழலை மட்டும் மனதில் வைத்துச் சொல்ல வில்லை. எனது ஃபேஸ்புக் தளத்தில் நண்பர்கள் கேட்கும் வினாக்களிலிருந்தும் தமிழகத்தில் பல பகுதி மக்கள் இன்றளவும் சமண நெறி வழக்கில் ஓரளவேனும்  இருப்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது.  

தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது. இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.

சமணம்  என்பது ஒரு சமயமல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி என்று நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்ட இரண்டு மடாதிபதிகள்- மேல்சித்தாமூர், திருமலை மடாதிபதிகள் இருவருமே தமது உரையில் குறிப்பிட்டமை சிந்திக்கத்தக்க ஒரு விசயமாக கருதுகிறேன். 

என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா...  என போட்டியின்றி........ 
  • இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது.. 
  • இதன் அடிப்படை கூறுகளாக அமைந்திருப்பவை எவை.. 
  • இதில் உள்ள சடங்குகள்
  • கடைபிடிக்கப்படும் வாழ்வியல் விசயங்கள்
  • கோயில் அமைப்பு
  • வரலாற்று செய்திகள்
இப்படி சில அடிப்படை தகவல்களை நான் வாசிக்கும் நூல்களிலிருந்து சிறிது சிறிதாக தொகுத்து வழங்காலம் என நினைக்கின்றேன்.
ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை. 

ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம். 

ஆக முதலில் மோட்சம் என்பதை சமணம் எவ்வாறு காண்கின்றது என்பதிலிருந்து என் குறிப்பை தொடங்கலாம் என நினைக்கின்றேன்.

மோட்சம்
  • ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
  • நிர்வாணம் என்பது குளிர்வடைதல் என்று பொருளாகும்.
  • மூவுலகை வென்றதன் அடையாளமாக முக்குடைகள் அமைகின்றன..
  • பல சிற்பங்களில் நாம் தீர்த்தகரர் வடிவங்களில் காணும், தேவர்கள் பூமழை பொழிதல், திவ்ய தொணி எழுப்புதல், ஒளிமண்டலம் சூழ்தல், சாமரம் வீசும் பெண்கள் ஆண்கள், சிம்மாசனம் (1, 3, அல்லது 5 சிங்கங்கள் ஆசனமாக இருப்பது என்ற வகையில் அமைக்கப்பட்ட சிம்மானசம்) ஆகியன. கீழுள்ள படத்தில் இவற்றைக் காணலாம் - திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்கள் தொகுதியின் ஒரு சிற்பம் இது.


சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.

1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.

தொடர்வோமே....!

சுபா


--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Geetha Sambasivam

unread,
Jun 21, 2015, 6:42:25 AM6/21/15
to மின்தமிழ்
நல்லதொரு அலசல். தமிழ் பேசும் சமணர்கள் பலரை நன்கறிவேன். ஶ்ரீபால் என்னும் காவல் துறை அதிகாரி ஒரு சமணரே எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கருத்துகள் கூறும் அளவுக்கு சமணம் குறித்த அறிவு இல்லாததால் அன்பர்கள் முக்கியமாக பானுகுமார் சொல்வதைப் படிக்கக் காத்திருக்கிறேன். நன்றி.

Oru Arizonan

unread,
Jun 21, 2015, 5:56:37 PM6/21/15
to mintamil
2015-06-21 3:37 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
மோட்சம்
//ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
சுபா//


உயர்திரு பானுகுமார் அவர்கள், "ஆன்மா என்று ஒன்று இல்லை.  தான் சமணராக இருந்தாலும், சமணநூல்கள் படித்திருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள இயலவில்லை.  அறிவுபூர்வமான விளக்கம் தேவை."  என்று வேறொரு இழையில் பதிந்திருந்தார்.

அவருக்கு நான் சில கேள்விகளை முன்வைத்தேன்.  இருமுறை நினைவுபடுத்தினேன்.  இன்றுவரை அவரிடமிருந்து பதில் இல்லை.

இப்பொழுது நான் இன்னும் ஒரு கேள்வி வைக்கிறேன்.

சமண சமயத்தில் //ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்// என்று உயர்திரு சுபா அவர்கள் பதிந்திருக்கிறார்கள்.

ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால்தான் ஒருவர் தன்னை ஒரு  சமணர் என்று கூறிக்கொள்ள முடியும்.  இதுதான் சமணத்தின் அடிப்படை நியதி.  

எனவே,ஆன்மா இருப்பதை ஒப்புக்கொள்ளாத  இரா.பா. அவர்கள் தன்னை ஒரு  சமணர் என்று எப்படிச் சொல்லிக்கொள்கிறார்?  

இது அவர் மனதைப் புண்படுத்தவேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை.  அப்படிப் புண்பட்டால் நான் வருத்தப்படுகிறேன்.

சில கேள்விகளை மற்றவர் முன் வைக்கிறார்.  ஆனால், அது சம்பந்தமாக மற்றவர் கேட்டார் பதிலிறுக்க மறுக்கிறார்.  அப்பொழுது அவர் கருத்துக்கு எப்படி, எவ்வாறு பதில் சொல்ல இயலும்?  There will not be any closure to any question, unless the person who wants to respond is clarified regarding some basic assumptions. Otherwise, it will be deemed that the person who raised the question has done just for the sake of raising and not for meaningful discourse.

எனவேதான் இந்த அடிப்படைக்கேள்வியை நான் அவர்முன் வைக்கிறேன்.  இந்தக் கேள்விக்கு அவரைத்தவிர வேறு யாரும் பதில் சொல்வது சரியாக இருக்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தாங்கள் இக்கேள்விக்குப் பதில் அளிக்காவிட்டால், மௌனம் என்பக்கத்து வாதம் சரி என்று நான் மட்டுமல்ல, அனைவரும் எடுத்துக்கொள்ளும்படி ஆகிவிடும்.

எந்த ஒரு சைவ இந்துவும் சிவன் இல்லை எனமாட்டார். வைணவ இந்துவும் விஷ்ணு, இல்லை என்று சொல்லமாட்டார்.  மோட்சம் என்றால், பிறப்பிறப்புச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, ஆன்மா சிவபதம் [கைலாயம் அடைந்து சிவனுடன் ஒன்றுவது] என்றும், திருமாலைச் சரணடைந்து வைகுந்தம்ஏ எகுவது என்றும் நம்புகிறார்கள்.  எச்சமயத்தைப் பின்பற்றுபவரும்,-- யூத, கிறித்தவ, இஸ்லாமிய, புத்த இன்னும் இதர பல சமயத்தோரும் --  ஆன்மா இல்லை எனமாட்டார்.

எனவேதான் சமணர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஆன்மா என்று ஒன்று இல்லை என்னும்போது, தாங்கள் சமணரா என்னும் இந்த தர்மசங்கடமான கேள்வியைத் தங்கள்முன் வைக்கவேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

பி.கு.  உயர்திரு சுபா அவர்களே!  என் கேள்வி இழையைத் திசை திருப்பும் நோக்கமன்று.  சமணம் பற்றிய இவ்விழையில் மோட்சம் பற்றிய முதல் கருத்தே ஆன்மா பற்றியதாக இருக்கிறது.  சமய அறிஞர் என்று நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளும் பெருமதிப்பிற்குரிய பானுகுமார் அவர்களின் மௌனம் கலைந்து, அவர் ஆன்மா பற்றி என் கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டும் என்பதே என் பணிவான விருப்பம்.

தேமொழி

unread,
Jun 21, 2015, 7:47:06 PM6/21/15
to mint...@googlegroups.com, oruar...@gmail.com
திரு. அரிசோனன் 

திரு. பானுகுமார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் அதைப் பற்றியக் கவலை எனக்கில்லை.

ஆனால் இது போன்று நீங்கள் எழுப்பும் கேள்விகளின் மற்றொரு கோணத்தை என்னை எடுத்துக்காட்டாக கொண்டு விளக்க விரும்புகிறேன்.

நான் என்னை இந்து என்று சொல்லிக் கொள்ளமாட்டேன்.

பிறந்த பொழுது இயற்கையில் உள்ள பாலின வேறுபாடு, இன (racial) வேறுபாடு தவிர்த்து பிற யாவையுமே சூழ்நிலையால் அமைவது....

அறியா வயதில், மொழி, செல்வ நிலை, மதம் இவையெல்லாம் மாற்றபட்டாலும் நமக்குத் தெரியாது... திரைப்படங்களில் காட்டப்படும் வேறு வேறு இடங்களில் வளரும் இரட்டைப் பிறவிகள் கதைகள் போல.

நாமும் நாம் வளர்ந்த சூழ்நிலை தாக்கத்தினாலும்  காலப் போக்கில் மாறிவிடுவதும் உண்டு. 


இதன் அடிப்படையில்தான் நான் என்னை இந்துவாகப் பிறந்தவள் என்றும், தமிழர், இந்தியர் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதும் அமைகிறது 

திரு. பானுகுமாரை சமண மத விளக்கம் கேட்கும் பொழுது,    ஏதோ ஒரு பெரியார் பற்றிய கேள்விக்கு  நான் விளக்கம் தரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தது என் நினைவிற்கு வருகிறது. 

எப்படி நீங்கள் அரிசோனாவில் வாழ்வதால் அரிசோனாவைப்  பற்றிய மேலதிகத் தகவல் தரமுடியுமோ, எப்படி என்னால் என் பார்வையில் கலிஃபோர்னியாவைப் பற்றிய தகவல் தரமுடியுமோ அது போலத்தான் ஒரு பின்னணியில் இருந்தவர்கள் அதைப் பற்றிய தங்களது கோணத்தைப் பகிர்ந்து கொள்ள இயலும்.  

அந்த நிலையை மேற்கொள்வதால் அவர்கள் அப்பிரிவிக்கு அதிகாரப்பூர்வமான பிரதிநிதி அல்ல. 

ஏதோ ஒரு இலக்கியத்தில், அறிவியல் துறையில் ஒருவர் அதிகம் ஆர்வம் கொண்டு தெரிந்து வைத்திருந்தால் பிறர் அவரிடம் தகவல் கேட்கப் போவோம், "subject  authority" என்ற தகுதியை மட்டுமே வழங்கலாமே ஒழிய, ஒருவரை அங்கே அந்தப் பிரிவில் நிரந்தரமாக வகைபடுத்துவதோ, அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்ப்பதோ அதிகப்படியான எதிர்பார்ப்பு. 

எப்படி திராவிடக் கழகம் செய்வதற்கெல்லாம் நான் பொறுபேற்க முடியாதோ, எப்படி ஹிட்லரின் குற்றங்களுக்கு ஜெர்மன் மக்கள் பொறுப்பேற்க இயலாதோ, எப்படி கோட்சேயின் குற்றத்திற்கு ஹிந்துதுவா பொறுபேற்க முடியாது என்று எதிர்பார்க்கபடுகிறதோ அது போலத்தான் சமணமதத்தில் பிறந்ததால் அதில் உள்ள கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும் திரு. பானுகுமார் பொறுபேற்க வேண்டும் என்ற நிலைப்பாடும். 



////
ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால்தான் ஒருவர் தன்னை ஒரு  சமணர் என்று கூறிக்கொள்ள முடியும்.  இதுதான் சமணத்தின் அடிப்படை நியதி.  

எனவே,ஆன்மா இருப்பதை ஒப்புக்கொள்ளாத  இரா.பா. அவர்கள் தன்னை ஒரு  சமணர் என்று எப்படிச் சொல்லிக்கொள்கிறார்?  
....

எனவேதான் சமணர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஆன்மா என்று ஒன்று இல்லை என்னும்போது, தாங்கள் சமணரா என்னும் இந்த தர்மசங்கடமான கேள்வியைத் தங்கள்முன் வைக்கவேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
////


திரு. பானுகுமார் சமணமததில் பிறந்தவரா அல்லது தன்னை சமணராக இன்னமும் கருதிக் கொள்பவரா என்பது போன்ற தனிப்பட்டமுறையில் அமையும்   கேள்விகளைத்  தவிர்த்துவிடுங்கள். அதை அவரே விருப்பபட்டு சொன்னால் மட்டுமே முறையாக இருக்கும். 

"நீங்கள் அறிந்தவரை  சமண மதம் ஆன்மாவைப் பற்றிக் கூறுவதைக்  குறித்துச்  சொல்ல முடியுமா" எனக் கேட்டால் அது அவருக்கு நாம்  'subject authority' என்றத் தகுதியை நாம் அளிப்பதாக அமையும்.  சமண மத செய்திகளைப்  பகிர்ந்து கொள்வதால் அவர் அம்மத்தின் அதிகாரபூர்வமான பிரதிதியும் அல்ல. 

அவருக்கு பதில் தெரியாவிட்டால் அதைத் தேடித் தருவதும், பதிலளிக்கவே  விருப்பமில்லாவிட்டால் தவிர்த்துவிடுவதும் அது அவர் உரிமை என்பதை நாம் மதிக்க வேண்டும்.

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Jun 21, 2015, 9:20:34 PM6/21/15
to மின்தமிழ்

2015-06-22 5:17 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எப்படி கோட்சேயின் குற்றத்திற்கு ஹிந்துதுவா பொறுபேற்க முடியாது என்று எதிர்பார்க்கபடுகிறதோ

​புரியவில்லையே
ஊர்சுத்தி​

Seshadri Sridharan

unread,
Jun 21, 2015, 10:03:39 PM6/21/15
to mintamil
2015-06-22 3:26 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
உயர்திரு பானுகுமார் அவர்கள், "ஆன்மா என்று ஒன்று இல்லை.  தான் சமணராக இருந்தாலும், சமணநூல்கள் படித்திருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள இயலவில்லை.  அறிவுபூர்வமான விளக்கம் தேவை."  என்று வேறொரு இழையில் பதிந்திருந்தார்.
ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால்தான் ஒருவர் தன்னை ஒரு  சமணர் என்று கூறிக்கொள்ள முடியும்.  இதுதான் சமணத்தின் அடிப்படை நியதி.  

 மனம் என்பதே இல்லை என்கிறார்கள் ஆதன் இருப்பை எப்படி இவர்கள் ஏற்பார்கள். எல்லாவற்றையும் ஆதனே அனுபவிகின்றது உடலும்  மனமும்  கருவி என்கிறார் எனது ஆதனிக ஆசான் ஆனந்த மூர்த்தி என்ற பிரபாத்து ரஞ்சன் சர்க்கார். ரமணர் நெஞ்சகத்தின் வலப்பகுதியில் தான் ஆதனின் இருப்பை உணரமுடியும் என்கிறார். இதை நான் உணர்ந்துள்ளேன். காதல் காம இச்சை ஆகியன மூலஅடிப்படையில் (மூலாதாரத்தில்) எழுவதாக  சொல்லப்படுகிறது. ஆனால் காதல் காம உணர்வுகள் நெஞ்சகத்தின் வலப்பகுதியில் எழுவதை நான் 2 - 3 மாதங்கள் முன் உணர்ந்துள்ளேன். இது ''ஆதனே எல்லாவற்றையும் அனுபவிக்கின்றது'' என்ற எனது ஆதனிக ஆசான் கருத்தை மெய்ப்பிப்பதாக உள்ளது.   

எண்டிமீனன் 

Geetha Sambasivam

unread,
Jun 21, 2015, 11:46:20 PM6/21/15
to மின்தமிழ்
புரிஞ்சுக்கணுமே! 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jun 22, 2015, 2:32:53 PM6/22/15
to மின்தமிழ், Subashini Tremmel

--

​திரு.அரிசோணன் அவர்களுக்கு,

1. திரு.பானுகுமார் தன்னை சமண அறிஞர் என்று ஏதாவது இழைகளில் சொல்லிச் சென்றுள்ளாரா என யோசித்துப் பார்க்கின்றேன். நான் அறிந்த வரையில் இதுவரை இல்லை. அவர் சமண சமயம் சார்ந்த பல கட்டுரைகளை தொடர்ந்து வழங்குகின்றார். ​சமணம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கின்றார். தனது ஆர்வத்தில் ஆய்வை மேற்கொள்கின்றார். சமனம் பற்றிய பல குறிப்புக்களை வழங்குகின்றார். சமண சமய குடும்ப பின்னனியைக் கொண்டிருக்கலாமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கின்றது. ஆயினும் இது வரை அவரை நேரில் பார்த்திருந்தும் கூட நான் இதனைக் கேட்டதில்லை. ஆக சமண சமயத்தின் ஒரே அதாரிட்டி நம் இரா.பானுகுமார் தான் என்பது போன்ற தொணியில் கேள்வி கேட்பது எனக்கு சரியாகப் படவில்லை.  அது மட்டுமல்ல.. அவர் பதிலளிக்காததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என நீங்களே நினைத்து முடிவு கட்டிக் கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. பலர் ஓய்வு பெற்று வீட்டிலிருப்பவர்கள். பலர் பணியில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள். நாம் நினைத்த நேரத்திற்கு ஒருவர் வந்து உடன் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சரியல்ல.

2. நான் 2 முறை சமண மடாதிபதிகள் - மேல்சித்தாமூர் சமண மடாதிபதி, அதன் பின்னர் அண்மையில் திருமலை மடாதிபதி ஆகிய இருவரது பேட்டிகளை வெளியிட்டேன்.அண்மையில் தான் அது நிகழ்ந்தது. சமணம் பற்றி உண்மையாக அதன் கோட்பாடுகளில் சிலவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்தப் பேட்டிகளை தாங்கள் கேட்கலாம். மிக எளிய பேச்சுத்தமிழில் இருவருமே உரையாற்றுகின்றனர். கேட்டுப் பாருங்கள். இவர்கள் சமண நெறிகளிலேயே  வாழ்பவர்கள். இவர்கள் கருத்துக்களை தாங்கள் நம்பி சமணக் கருத்துக்களாக மேற்கோள் காட்டலாம்.

3. நான் எனது இக்கட்டுரையிலும் சரி கடந்த 2 விழியப் பதிவு வெளியீடுகளிலும் சரி.. குறிப்புக்காகப் பயன்படுத்திய நூல் திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்னும் 500 பக்கம் கொண்ட விரிவான ஒரு ஆய்வு நூல். இதனை ஆய்வாளர் திரு.ஆர்.விஜயன் அவர்கள் எழுதியுள்ளார். இதன் குறிப்புக்கள் திருமலை மடாதிபதியால் சரிபார்க்கபப்ட்டு ஆசி வழங்கப்பட்டு வெளிவந்த நூல் என்பதைக் குறிப்பிடுவது தகும் எனக் கருதுகின்றேன்.

4. இந்த இழையில் நான் ஒரு வரியைக் குறிப்பிட்டிருந்தேன். " என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா உன் சமயம் சிறந்ததா...  என போட்டியின்றி........  " இந்த இழை அமைய வேண்டும் என்பது நான் தொடங்கியதன் நோக்கம். ஆனால் உங்கள் பதிவில் போட்டி மன்ப்பாண்மையின் தொணி தெரிகின்றது.  இந்த இழை அத்தகைய விவாதங்களுக்கான இடமல்ல. 

பொதுவான ஒரு கருத்து .. அண்மையில் த.ம.அ சமணம் சார்ந்த  வெளியீடுகள் செய்வதாலும் இந்த இழையை நான் ஆரம்பித்திருப்பதாலும் நான் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என யாரேனும் நினைத்தால் அதில் உண்மையில்லை. நான் தனிப்பட்ட வகையில் மதங்களை கடந்த நிலையில் தான் என்னை வைத்திருக்கின்றேன். அதுவே என்னை பல்வகைத் தேடல்களை எந்தவித மனத்தடைகளும் இன்றி செயல்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது.

சுபா





 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Jun 22, 2015, 5:38:17 PM6/22/15
to mintamil
உயர்திரு சுபா அவர்களுக்கு,

தாங்கள் உயர்திரு பானுகுமார் அவர்களுக்குப் பதிலாகப் பதிலளிக்கும்போது நான் மேலே எழுத எதுவுமில்லை.  அவரையும் இனி எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை.

//நாம் நினைத்த நேரத்திற்கு ஒருவர் வந்து உடன் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சரியல்ல.//
அது எனக்கும் தெரியும்.  அவர் விரும்பினால் பலரின் இழையில் கருத்துப்  பதிவார். விரும்பாவிட்டால், அவருக்கு நேரம் இல்லாமல் போய்விடும்.  இதுவே உண்மை போலும்!  தங்களுக்கும், தேமொழி அவர்களும், மற்ற பலருக்கும் நேரம் இருக்கிறது.  அவருக்கு இல்லை. விட்டுவிடுகிறேன்.

//இவர்கள் கருத்துக்களை தாங்கள் நம்பி சமணக் கருத்துக்களாக மேற்கோள் காட்டலாம்.//  அதை நம்பித்தான் "ஆன்மா" பற்றிய கேள்வியை அவருக்கு வைத்தேன்.  

தாங்கள் கூறியபடி, // திரு.பானுகுமார் ... சமண சமயம் சார்ந்த பல கட்டுரைகளை தொடர்ந்து வழங்குகின்றார். ​சமணம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கின்றார். தனது ஆர்வத்தில் ஆய்வை மேற்கொள்கின்றார். சமனம் பற்றிய பல குறிப்புக்களை வழங்குகின்றார்.// 

ஆன்மா பற்றி அவரது கருத்து எனக்கு வியப்பளித்தது.அவரை நான் சமணம் பற்றி எக்கேள்வியும் கேட்கவில்லை.  அவர் அறிவுபூர்வமான விளக்கம் கேட்டார்.  நான் அறிவுபூர்வமான் சில கேள்விகள் கேட்டேன், அவரது  ஆன்மா பற்றிய கேள்விக்கு தரவு உருப்படி [datum] அமைப்பதற்காக

அவர் மீண்டும் மீண்டும் கேட்டதால் நான் அவர்க்கு மீண்டும் மீண்டும் பதில் கேள்வி வைத்தேன். பதிலில்லை. தாங்கல்லும், உயர்திரு தேமொழி அவர்களும் கூறிய கருத்தை அவர் வைத்திருந்தால், உடனே நான் விலகி இருப்பேன்.  குறைந்த பட்சம் அவர் இதையாவது செய்வது இணக்க நயப்பண்பு [courtesy] அல்லவா!

தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.

தங்களுக்குப்பல பணிகள் உள்ளன.  தங்களுக்கும், உயர்திரு தேமொழி அவர்களுக்கும் மதிப்புக் கொடுத்து,தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் இரா.பா. அவர்களை மீண்டும் ஆன்மா கேள்வி கேட்கமாட்டேன்.  தங்களுக்கு என்மீது தவறான அபிப்பிராயம் வரும் சந்தர்ப்பங்களையும் தவிர்க்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jun 22, 2015, 5:43:13 PM6/22/15
to mintamil


2015-06-21 16:47 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நன்றி தேமொழி,

தங்களது புகைப்படம் மிகவும் நன்றாக வடிவமைக்கப்படிருக்கிறது.  தங்கள் பார்வையில் ஒரு வேகம் தெரிகிறது. தங்களின் கண்கள் தங்களின் உள்ளத்தைப  பிரதிபலிப்பது போல  உள்ளது.  எனக்குத் தோன்றியதை எழுதினேன்.  தவறாக எண்ணவேண்டாம்.  இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.

இப்புகைப்படத்தின் வண்ண மாற்றத்தைத் தாங்களே செய்தீர்களா?
ஒரு அரிசோனன் 

Hari Krishnan

unread,
Jun 22, 2015, 11:01:19 PM6/22/15
to mintamil, Subashini Tremmel

2015-06-23 0:02 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
சமண சமய குடும்ப பின்னனியைக் கொண்டிருக்கலாமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கின்றது. ஆயினும் இது வரை அவரை நேரில் பார்த்திருந்தும் கூட நான் இதனைக் கேட்டதில்லை. ஆக சமண சமயத்தின் ஒரே அதாரிட்டி நம் இரா.பானுகுமார் தான் என்பது போன்ற தொணியில் கேள்வி கேட்பது எனக்கு சரியாகப் படவில்லை.  

பானுகுமார் திகம்பர பிரிவைச் சேர்ந்த சமணர்தான்.  பல வருடங்களுக்கு முன்னால் அகத்தியர் குழுவில் அறிமுகமான போதே இதைச் சொல்லியிருக்கிறார்.  அவரை சமண சமயத்தின் ஒரே அதாரிடி என்று நினைப்பது சரியில்லை என்பது உண்மையே.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Jun 22, 2015, 11:30:33 PM6/22/15
to mintamil

2015-06-23 3:08 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.

இப்படிப் பலர் மனங்களிலும் தோன்றத்தான் செய்கிறது.

Dev Raj

unread,
Jun 22, 2015, 11:55:57 PM6/22/15
to mint...@googlegroups.com
சரி.
தனி நபர் குறித்த பேச்சுகள் இருக்கட்டும்.

ஜைநம் ஆத்மாவின் இருப்பை ஒப்புக்கொள்கிறதா ?
அதன் இயல்பு யாது ?முக்த நிலை என்பது என்ன ?
அதை இவ்வுலகிலேயே பெற இயலாதா ?

இவை குறித்துப் பேசுவோமே


தேவ்

Dev Raj

unread,
Jun 23, 2015, 12:16:40 AM6/23/15
to mint...@googlegroups.com
சமணம் ஆன்மாவின் இருப்பை ஒப்புக்கொள்கிறது என்றே தெரிகிறது -


In Jainism, Jiva and soul are more or less described synonymously. When
the spiritual or psychic status of the Jiva is described it is referred
to as the soul, and when the physical structure about the soul is
described it is called Jiva.

The jiva is that which grows, decays, fluctuates, varies, eats, sleeps,
awakes, acts, fears, rests, has knowledge and perception, attempts to
self defend, and reproduces. These and more qualities of the jiva are
obvious through a physical body when the soul is present in it but when
the soul leaves these qualities cease. These qualities are external
features and consciousness (chetan) is the basic inner feature of the
soul. This also makes it clear for us that the body and the soul are
separate entities.

Since the soul has a flexible size, pervades the entire body that it
occupies. For example, the same soul can occupy the body of an ant or
an elephant. Such bodies stay alive as long as there is a soul within.
A live body, or rather, a body with a soul is described  here as a
Jiva.

Jivas are categorized in two groups.
1. Liberated Jiva or Siddha.
2. Non-liberated Jiva or Sansari Jiva.



இதன் அடிப்படையில் இழையை வளர்த்தலாம்


தேவ்

Oru Arizonan

unread,
Jun 23, 2015, 1:07:31 AM6/23/15
to mintamil
2015-06-22 20:55 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:


ஜைநம் ஆத்மாவின் இருப்பை ஒப்புக்கொள்கிறதா ?

 ஆம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

Soul and karma 
Main article: Karma in Jainism

According to Jains, souls are intrinsically pure and possess the qualities of infinite knowledge, infinite perception, infinite bliss and infinite energy in their ideal state.[35] In reality, however, these qualities are found to be obstructed due to the soul's association with a substance called karma.[36] The ultimate goal in Jainism is to obtain moksha, which means liberation or salvation of the soul completely freeing it from karmic bondage.

The relationship between the soul and karma is explained by the analogy of gold. Gold is always found mixed with impurities in its natural state. Similarly, the ideal, pure state of the soul is always mixed with the impurities of karma. Just like gold, purification of the soul may be achieved if the proper methods of refining are applied.[36] The Jain karmic theory is used to attach responsibility to individual action and is cited to explain inequalities, sufferings and pain 

[36]  Jaini, Padmanabh S. (1998), The path of Purification, Motilal Banarsidass,ISBN 978-81-208-1578-0, retrieved 10 January 2013

சுபா அவர்களின் குறிப்பிலும், //
  • ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.// என்றே குறிப்பிடுகிறார்.

http://www.jinalaya.com/jainism/concept.htm 

Jiva (the soul) is a beginningless, endless and eternal entity.

Jiva is self-proven. Jiva is so called because it remains alive in all the three phases of time-past, present, future.

An entity having sentience is called jiva. Jiva is called Atma (the soul). Jivas are infinite and multifarious.

http://www.jainworld.com/philosophy/fundamentals.asp  

1.      Jiva (soul): All living beings are called Jivas. Jivas have consciousness known as the soul, which is also called the atma (soul - chetan).  The soul and body are two different entities. The soul can not be reproduced.  It is described as a sort of energy which is indestructible, invisible, and shapeless. Jainism divides jivas into five categories ranging from one-sensed beings to five-sensed beings. The body is merely a home for the soul.  At the time of death, the soul leaves the body to occupy a new one.  Tirthankaras have said that the soul has an infinite capacity to know and perceive. This capacity of the soul is not experienced in its present state, because of accumulated karmas.

சமணம் ஆத்மா இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறது என்று நான் நூறு உதாரணங்களைச் சுட்டலாம். நான் கொடுத்துள்ளவை அனைத்தும் சமண இணையங்களிளிருந்துதான், விக்கிபீடியா தவிர. மறுப்பு எழுதுபவர்கள் சமணப் புத்தகங்களிலிருந்து சான்றுகாட்டவேண்டுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2015, 1:16:06 AM6/23/15
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.

2015-06-21 2:37 GMT-08:00 Suba.T. <ksuba...@gmail.com>:
சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய  பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.

மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே
இவையே எனது நிலையும் புரிதலும் கூட.
 
மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.
மனிதர்களுக்கு இயற்கையிலேயே உள்ள உணர்வுகளையும் அடக்கி அவற்றையெல்லாம் வெல்லும் மனவலிமை மிகுந்தவர்களா அவர்களை நான் காண்கிறேன்.
 
தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது.
இவற்றிற்கும் சமணத்திற்கும் என்ன தொடர்பு?
இதைச் சற்று விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வேன்.

 
இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.
சமணக்கூறுகள் ஏதும் தமிழரது வாழ்வியல்முறைகளில் கலந்து உள்ளதா?
சற்று விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வேன்.
 

என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா...  என போட்டியின்றி........ 
  • இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது.. 
தமிழகத்தில் இந் நெறி வளரவில்லை.
வடநாட்டு அரசர்களது ஏவலின் பேரில், அவர்கள் வழங்கிய நிதியை ஆதாரமாகக் கொண்டு, திட்டமிட்டு சமணநெறி தமிழகத்தில் பரப்பப் பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் 10/15 பேர் என்று இருந்து கொண்டு சமணத்தைப் பரப்ப முயன்றுள்ளனர் என்பதே எனது புரிதல்.
 

ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை. 

ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம். 
சமணத்தை நான் புரிந்து கொண்ட வகையில் எனது மேற்கண்ட ஐயங்களை எழுதியுள்ளேன்.
தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Dev Raj

unread,
Jun 23, 2015, 1:49:43 AM6/23/15
to mint...@googlegroups.com

சமணர்களின் இரு பெரும்பிரிவினரும் சான்றாக ஒப்புக்கொள்ளும்
‘தத்வார்த்த ஸூத்ரம்’ உடலின் கண் உறையும் ஆன்மாவின் இருப்பையும், 
அதற்கு நேர்கின்ற ஆஸ்ரவம், பந்தம், ஸம்வரம் போன்றவற்றையும், 
முக்தியின் இயல்பையும் கூறுகிறது -

ஜீவ - ஜீவாஸ்ரவ - ப₃ந்த₄ - ஸம்வர - நிர்ஜரா - மோக்ஷாஸ்தத்த்வம்||

ஆன்மாவைச் சமணம் ஒப்புக்கொள்கிறது என ஆகிறது


தேவ்
 

Suba.T.

unread,
Jun 23, 2015, 7:00:40 AM6/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-22 23:38 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
உயர்திரு சுபா அவர்களுக்கு,

தாங்கள் உயர்திரு பானுகுமார் அவர்களுக்குப் பதிலாகப் பதிலளிக்கும்போது நான் மேலே எழுத எதுவுமில்லை.  அவரையும் இனி எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை.

​திரு.பானுகுமாருக்கு பதிலாக நான் பதிலளிக்கின்றேன் என்று சொல்வது வேடிக்கை. என் இழையில் நீங்கள் ஒரு கருத்தை பதிகின்றீர்கள். அதற்கான பதிலே அது. முழுதாக மீண்டும் என் பதிவைப் படித்துப் பாருங்க்கள். நீங்கள் இரா.பானுகுமாரை கேட்ட கேள்விகளுக்கு நான்  பதிலளித்திருக்கின்றேனா? 


//நாம் நினைத்த நேரத்திற்கு ஒருவர் வந்து உடன் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சரியல்ல.//
அது எனக்கும் தெரியும்.  அவர் விரும்பினால் பலரின் இழையில் கருத்துப்  பதிவார். விரும்பாவிட்டால், அவருக்கு நேரம் இல்லாமல் போய்விடும்.  இதுவே உண்மை போலும்!  தங்களுக்கும், தேமொழி அவர்களும், மற்ற பலருக்கும் நேரம் இருக்கிறது.  அவருக்கு இல்லை. விட்டுவிடுகிறேன்.
 
​இதுவே ஒரு குத்தலான மொழியாகத்தான் எனக்குத் தெரிகின்றது.  மற்ற பலருக்கு நேரம் இருக்கின்றது. ஒருவருக்கு ஏன் இல்லை எனக் கேட்பது எவ்வகையில் சரி என எனக்குத் தெரியவில்லை.  அவரவர் தமக்கு நீரம் இருக்கும் போது வருவர். நானோ தேமொழியோ மின் தமிழ் மட்டுறுத்துனர்கள். அதிலும் நான் நிறுவனர் என்ற ரீதியில் எல்லா பதிவுகளையும் படித்தே ஆக வேண்டும். வித்தியாசம் இருக்கின்றதல்லவா?

 

//இவர்கள் கருத்துக்களை தாங்கள் நம்பி சமணக் கருத்துக்களாக மேற்கோள் காட்டலாம்.//  அதை நம்பித்தான் "ஆன்மா" பற்றிய கேள்வியை அவருக்கு வைத்தேன்.  

தாங்கள் கூறியபடி, // திரு.பானுகுமார் ... சமண சமயம் சார்ந்த பல கட்டுரைகளை தொடர்ந்து வழங்குகின்றார். ​சமணம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கின்றார். தனது ஆர்வத்தில் ஆய்வை மேற்கொள்கின்றார். சமனம் பற்றிய பல குறிப்புக்களை வழங்குகின்றார்.// 

ஆன்மா பற்றி அவரது கருத்து எனக்கு வியப்பளித்தது.அவரை நான் சமணம் பற்றி எக்கேள்வியும் கேட்கவில்லை.  அவர் அறிவுபூர்வமான விளக்கம் கேட்டார்.  நான் அறிவுபூர்வமான் சில கேள்விகள் கேட்டேன், அவரது  ஆன்மா பற்றிய கேள்விக்கு தரவு உருப்படி [datum] அமைப்பதற்காக

அவர் மீண்டும் மீண்டும் கேட்டதால் நான் அவர்க்கு மீண்டும் மீண்டும் பதில் கேள்வி வைத்தேன். பதிலில்லை. தாங்கல்லும், உயர்திரு தேமொழி அவர்களும் கூறிய கருத்தை அவர் வைத்திருந்தால், உடனே நான் விலகி இருப்பேன்.  குறைந்த பட்சம் அவர் இதையாவது செய்வது இணக்க நயப்பண்பு [courtesy] அல்லவா!

தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.

​இது சரியான பார்வையாக எனக்குப் படவில்லை. பள்ளிக்கூடத்தில் இளம்பிராயத்தில் குழந்தைகள் சண்டை போன்ற தொணியில் இது அமைந்திருக்கின்றது.
என் மனதில் தோன்றிய கருத்தை ஒரு இழையாக்கியிருக்கின்றேன். அதில் இந்த நெறி பற்றிய தகவல்கள் தொகுப்பாக வர வேண்டும் என்று விரும்புகின்றேன். இந்த நெறியை அறிந்து கொள்ள உதவுவோருக்கு எவ்வகையிலாவது இது பயன்படுமா.. அல்லது எனக்கேவாவது என் ஆய்வுகளுக்கு உதவுமா என்பது மட்டுமே  இந்த இழையின் நோக்கம். இதனை என் முதல் பதிவை நன்கு வாசித்தவர்கள் புரிந்து கொள்வர். 
 

தங்களுக்குப்பல பணிகள் உள்ளன.  தங்களுக்கும், உயர்திரு தேமொழி அவர்களுக்கும் மதிப்புக் கொடுத்து,தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் இரா.பா. அவர்களை மீண்டும் ஆன்மா கேள்வி கேட்கமாட்டேன்.  தங்களுக்கு என்மீது தவறான அபிப்பிராயம் வரும் சந்தர்ப்பங்களையும் தவிர்க்கிறேன்.

​ஒருவரை வற்புறுத்தி ஒரு பதிலை வாங்குவது அல்லது வாங்க முயற்சிப்பது அல்லது ஒரு கருத்தை வலிந்து ஒருவர் மேல் திணிப்பது என்பவை அனைத்துமே என்னைப் பொறுத்தவரை ஒரு வகையில் வன்முறை  கூறுகளே. 

சு
​பா​


அன்புடன்,
ஒரு அரிசோனன் 

-- 

Suba.T.

unread,
Jun 23, 2015, 7:01:46 AM6/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-23 5:30 GMT+02:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-06-23 3:08 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.

இப்படிப் பலர் மனங்களிலும் தோன்றத்தான் செய்கிறது.
யார் அந்தப் பலர் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

சுபா
 
 

Suba.T.

unread,
Jun 23, 2015, 7:06:32 AM6/23/15
to Kalairajan Krishnan, மின்தமிழ், Subashini Tremmel
2015-06-23 7:15 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2015-06-21 2:37 GMT-08:00 Suba.T. <ksuba...@gmail.com>:
சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய  பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.

மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே
இவையே எனது நிலையும் புரிதலும் கூட.
 
மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.
மனிதர்களுக்கு இயற்கையிலேயே உள்ள உணர்வுகளையும் அடக்கி அவற்றையெல்லாம் வெல்லும் மனவலிமை மிகுந்தவர்களா அவர்களை நான் காண்கிறேன்.
 
தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது.
இவற்றிற்கும் சமணத்திற்கும் என்ன தொடர்பு?
இதைச் சற்று விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வேன்.

 
இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.
சமணக்கூறுகள் ஏதும் தமிழரது வாழ்வியல்முறைகளில் கலந்து உள்ளதா?
சற்று விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வேன்.

​இந்த இழையில் நான் அவ்வப்போது பதிய நினைத்திருக்கும் குறிப்புக்களிலிருந்து என்னால் முடிந்த வகையில் விளக்க முயற்சிக்கின்றேன். ​
 
​தாங்கள் அதுவரை நான் அண்மையில் வெளியிட்ட சமண மடாதிபதிகளின் பேட்டியைக் கேட்டால் சில விசயங்கள் இது தொடர்பிலும் கிடைக்கும்.​ 1 மணி நீர பீட்டியாக 2 பேட்டிகள் இவை. 


 

என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா...  என போட்டியின்றி........ 
  • இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது.. 
தமிழகத்தில் இந் நெறி வளரவில்லை.
வடநாட்டு அரசர்களது ஏவலின் பேரில், அவர்கள் வழங்கிய நிதியை ஆதாரமாகக் கொண்டு, திட்டமிட்டு சமணநெறி தமிழகத்தில் பரப்பப் பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் 10/15 பேர் என்று இருந்து கொண்டு சமணத்தைப் பரப்ப முயன்றுள்ளனர் என்பதே எனது புரிதல்.
 

ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை. 

ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம். 
சமணத்தை நான் புரிந்து கொண்ட வகையில் எனது மேற்கண்ட ஐயங்களை எழுதியுள்ளேன்.
தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
​என் வேலை பளுவும் என் பதிவுகளின் பரப்பும் பற்றி தாங்கள் சற்று அறிவீர்கள். ​ஆக நான் இந்த இழையில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் வாசிக்கும் நூலிலிருந்து குறிப்புக்களைப் பகிர்ந்து வர நினைத்திருக்கின்றேன். முடிந்தவரை வாரம் 1 பதிவாவது செய்ய ஆவல். தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

நன்றி
சுபா

N. Kannan

unread,
Jun 23, 2015, 11:58:36 PM6/23/15
to mint...@googlegroups.com

ஒரு பருந்துப்பார்வையில் பார்த்தால் இந்திய சமயங்கள் எல்லாம் அடிப்படையான சில புரிதல்களில் ஒன்றுபடுகின்றன, ஆனால் they differ in details and interpretation என்று தோன்றுகிறது. சமணமும், பௌத்தமும் வேதத்தின் இறையாண்மையை (அதாரிடி) ஏற்றுக்கொள்வதில்லை என்று தோன்றுகிறது. ஆயினும் இவையனைத்தும் ஒன்றைச் சார்ந்து ஒன்று என்றே பரிணாமமுற்றிருக்கின்றன. எனவேதான் சநாதன நெறி (the eternal philosophy of the east) என்பது பொதுவான பேராக இருக்கும் என்று தோன்றுகிறது.

நா.கண்ணன்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 24, 2015, 3:16:45 AM6/24/15
to Suba.T., மின்தமிழ்
வணக்கம்.
தமிழர்களது மொழியும், பண்பாடும், வழிபாடும், விழாக்களும் சமணம் சார்த்தன அல்ல.  
நமது வழிபடு தெய்வங்களை அவர்களது வழிபடு தெய்வங்களாக மாற்றிக் கொண்டு, எங்களது சாமியைத் தங்களது சாமி என்று கூறிச் சமணத்தைப் பரப்பியுள்ளனர் என்பது என்பது எனது கருத்து.

kandan

unread,
Jun 24, 2015, 6:00:14 AM6/24/15
to mint...@googlegroups.com
கி .கந்தன் 
வணக்கம். 

தமிழனின் பண்பாட்டில் இல்லாதது ஏதும் இல்லை,இந்திய மதங்களின் வளர்ச்சியில் இறை வடிவங்களின் கொடுக்கல் வாங்கல் என்பது நிதர்சனமானது, இது மத வளர்ச்சியல் தவிர்ககமுடியாத ஒன்று. இன்னும்சொல்லபோனால்  ‘ image worship is the contribution of Budhhism “ என்பது பலவரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.


Oru Arizonan

unread,
Jun 24, 2015, 3:26:43 PM6/24/15
to mintamil
2015-06-24 3:00 GMT-07:00 kandan <dr.kk...@gmail.com>:

 //இன்னும்சொல்லபோனால்  ‘ image worship is the contribution of Budhhism “ என்பது பலவரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.//


உயர்திரு கந்தன் ஐயா அவர்களே,

மேற்சொன்ன கருத்துபற்றிய சில ஆய்வுகளின் விவரம் தருகிறீர்களா?  அவற்றைப் படித்து அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Jun 25, 2015, 3:17:45 AM6/25/15
to Kalairajan Krishnan, மின்தமிழ், Subashini Tremmel
​முக்கியமான ஒரு கருத்து இது. அதிலும் தமிழர்களின் மொழி பண்பாடு வழிபாடு எனச் சொல்வது எனக்கு பிடித்திருக்கின்றது. 

சில கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன. 
தாங்கள் உங்கள் கருத்தின் படி ​தமிழர் சமயம், பண்பாடு என்பன பற்றி எழுதுங்கள். அவை எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தன.. தாய் தெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு என்ற வகையில்..
அதில் இந்து சமய வழிபாடு என்பதைப் பற்றி  எவ்வாறு காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.
தாங்கள் ஒரு தனி இழையாக இதனை தொடக்கினாலும் நன்றாக இருக்கும்.

சுபா

 

அன்பன்
கி.காளைராசன்

kandan

unread,
Jun 26, 2015, 3:21:08 AM6/26/15
to mint...@googlegroups.com

வணக்கம்
சொந்த பணிககாக சென்னையில் உள்ளேன்
விரைவில் பதில் தருகிறேன்.

கந்தன்

--

Suba.T.

unread,
Jul 5, 2015, 6:15:46 AM7/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 2

இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.

மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.

முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
  • இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
  • இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
  • யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
  • யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
  • சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
  • சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
  • பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு.
  • இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
Inline image 1
பூண்டி பொன்னெழில்நாதர் ரிஷபநாதர் சிற்பம்

தொடரும்
சுபா


2015-06-21 12:37 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய  பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.

மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.சமணம் என்பது இன்று வரலாற்று விசயம் மட்டுமே .. தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத அழிந்த ஒரு மதம் என்ற எண்ணமும் அங்கே பரவியிருக்கின்றது. மலேசிய இந்தியர்களின் சமய தளத்திலும் பல்கலைக்கழக தமிழ்த்துறை கல்வியாளர்கள் தளத்திலும் இன்னமும் நல்ல நட்பு கொண்டிருப்பதால் என்னால் இதனை துணிந்து கூற முடியும்.

இந்தப் பார்வை வரலாற்று பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் ஒரு முக்கிய விசயத்தை அதன் முழு பரிமாணத்தைக் காணாமல் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு மட்டும் பார்வையைக் குறுக்கிக் கொண்டு காணும் தன்மையை வளர்ப்பதாக இருப்பதையே காண்கின்றேன். 

மலேசிய சூழலை மட்டும் மனதில் வைத்துச் சொல்ல வில்லை. எனது ஃபேஸ்புக் தளத்தில் நண்பர்கள் கேட்கும் வினாக்களிலிருந்தும் தமிழகத்தில் பல பகுதி மக்கள் இன்றளவும் சமண நெறி வழக்கில் ஓரளவேனும்  இருப்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது.  

தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது. இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.

சமணம்  என்பது ஒரு சமயமல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி என்று நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்ட இரண்டு மடாதிபதிகள்- மேல்சித்தாமூர், திருமலை மடாதிபதிகள் இருவருமே தமது உரையில் குறிப்பிட்டமை சிந்திக்கத்தக்க ஒரு விசயமாக கருதுகிறேன். 

என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா...  என போட்டியின்றி........ 
  • இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது.. 
  • இதன் அடிப்படை கூறுகளாக அமைந்திருப்பவை எவை.. 
  • இதில் உள்ள சடங்குகள்
  • கடைபிடிக்கப்படும் வாழ்வியல் விசயங்கள்
  • கோயில் அமைப்பு
  • வரலாற்று செய்திகள்
இப்படி சில அடிப்படை தகவல்களை நான் வாசிக்கும் நூல்களிலிருந்து சிறிது சிறிதாக தொகுத்து வழங்காலம் என நினைக்கின்றேன்.
ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை. 

ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம். 

ஆக முதலில் மோட்சம் என்பதை சமணம் எவ்வாறு காண்கின்றது என்பதிலிருந்து என் குறிப்பை தொடங்கலாம் என நினைக்கின்றேன்.

மோட்சம்
    • ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
    • நிர்வாணம் என்பது குளிர்வடைதல் என்று பொருளாகும்.
    • மூவுலகை வென்றதன் அடையாளமாக முக்குடைகள் அமைகின்றன..
    • பல சிற்பங்களில் நாம் தீர்த்தகரர் வடிவங்களில் காணும், தேவர்கள் பூமழை பொழிதல், திவ்ய தொணி எழுப்புதல், ஒளிமண்டலம் சூழ்தல், சாமரம் வீசும் பெண்கள் ஆண்கள், சிம்மாசனம் (1, 3, அல்லது 5 சிங்கங்கள் ஆசனமாக இருப்பது என்ற வகையில் அமைக்கப்பட்ட சிம்மானசம்) ஆகியன. கீழுள்ள படத்தில் இவற்றைக் காணலாம் - திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்கள் தொகுதியின் ஒரு சிற்பம் இது.


    சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.

    1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

    2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.

    தொடர்வோமே....!

    சுபா

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 5, 2015, 6:35:36 AM7/5/15
    to mintamil

    வணக்கம்.


    On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
    >
    > பகுதி 2
    >
    > இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
    > பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
    >
    > மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
    >
    > முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
    > இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
    > இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
    > யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    > யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
    > பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு

    > இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.

    இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?

    >> சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.
    >>
    >> 1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.
    >>
    >> 2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.
    >>
    >> தொடர்வோமே....!
    >>
    >> சுபா
    >>
    >
    >
    > --
    > Suba.T.
    > http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    > http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
    > http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
    > http://ksuba.blogspot.com - Suba's Musings
    > http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    > http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
    >  
    > http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    > http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    > http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    > http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    > http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    > http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
    > http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
    >  
    >

    Suba.T.

    unread,
    Jul 5, 2015, 9:17:34 AM7/5/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-07-05 12:35 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

    வணக்கம்.
    On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
    >
    > பகுதி 2
    >
    > இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
    > பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
    >
    > மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
    >
    > முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
    > இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
    > இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
    > யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    > யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
    > பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு

    > இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.

    இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?


    அப்படி இருக்கும் எனது தொகுப்பில் இருக்கும் படத்தை பிறகு தேடி பகிர்கின்றேன்.

    சுபா​
     

    Mohanarangan V Srirangam

    unread,
    Jul 5, 2015, 9:37:49 AM7/5/15
    to min tamil
    • யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    • யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    • >>>>>

    இவை உங்களுடைய நம்பிக்கைகளா? அல்லது ஏதேனும் நூலில் உள்ள தகவலைத் தந்திருக்கிறீர்களா? (கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டும்.)

    ***



    --

    Suba.T.

    unread,
    Jul 5, 2015, 9:52:04 AM7/5/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-07-05 15:37 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
    • யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    • யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    • >>>>>

    இவை உங்களுடைய நம்பிக்கைகளா? அல்லது ஏதேனும் நூலில் உள்ள தகவலைத் தந்திருக்கிறீர்களா? (கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டும்.)


    ​குறிப்பிட்டமைக்கு நன்றி.
    நூல் ஆதாரம் கீழே குறிப்பிட வேண்டும் என நினைத்திருந்தேன். அவசரத்தில் விடுபட்டு விட்டது. 
    இவை நூல் வழங்கப்பட்ட கருத்துக்கள்.

    சுபா​
     

    Suba.T.

    unread,
    Jul 5, 2015, 9:53:07 AM7/5/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-07-05 12:15 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    பகுதி 2

    இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
    பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.

    மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.

    முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
    • இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
    • இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
    • யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    • யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    • சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
    • சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
    • பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு.
    • இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
    Inline image 1
    பூண்டி பொன்னெழில்நாதர் ரிஷபநாதர் சிற்பம்

    ​நூல் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்ற நூலிலிருந்து இத்தகவல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

    சுபா

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 7, 2015, 2:35:24 AM7/7/15
    to mintamil, Subashini Tremmel
    2015-07-05 5:17 GMT-08:00 Suba.T. <ksuba...@gmail.com>:


    2015-07-05 12:35 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

    வணக்கம்.
    On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
    >
    > பகுதி 2
    >
    > இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
    > பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
    >
    > மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
    >
    > முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
    > இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
    > இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
    > யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    > யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
    > பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு

    > இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.

    இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?


    அப்படி இருக்கும் எனது தொகுப்பில் இருக்கும் படத்தை பிறகு தேடி பகிர்கின்றேன்.
    அமணர் எல்லாவற்றையும் துறந்து முழுநிர்வாணம் எய்திய நிலையில் அவர்களுக்குச் சின்னங்கள் ஏதும் கிடையா.  சின்னங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டே அவர்கள் முழுநிர்வாணம் அடைகின்றனர் என்றே கருதுகின்றேன்.
    ஹீனயானம் முடிந்து, இந்துக் கொள்கைகளைச் சமணம் உள்வாங்கிக் கொண்டு மகாயாணம் தோன்றிய போது, இதுபோன்ற சைவச் சின்னங்கள் முற்றும் துறந்த முழுநிர்வாணிகளுக்கும் கற்பிக்கப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு!
    அதனால்தான் கேட்டேன்.

    Suba.T.

    unread,
    Jul 7, 2015, 2:45:35 AM7/7/15
    to Kalairajan Krishnan, mintamil, Subashini Tremmel
    ​ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு சின்னம் உண்டு. புகைப்படத்துடன் நிச்சயம் 
    பதிகிறேன்.
    ​ ​

    சுபா​
     

    அன்பன்
    கி.காளைராசன் 

    Banukumar Rajendran

    unread,
    Jul 7, 2015, 3:55:56 AM7/7/15
    to mint...@googlegroups.com
    தாங்கள் பல்கலைக்கழகத்தில் பணியிலிருந்து, முனைவர் பட்டமும் பெற்றவர். தாங்கள் இதுபோல் எழுதியிருப்பதால், நிச்சயம் அறிஞர் பெருமக்கள் எழுதிய நூலிலிருந்து, படித்துவிட்டுதான் மேலே சொன்ன கருத்தை எழுதியிருப்பீர்கள்.

    தயவுக் கூர்ந்து, அந்து நூலின் தகவலை எனக்கு சுட்டுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!


    வணக்கத்துடன்,

    இரா.பா





     
    இதுபோன்ற சைவச் சின்னங்கள் முற்றும் துறந்த முழுநிர்வாணிகளுக்கும் கற்பிக்கப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு!
    அதனால்தான் கேட்டேன்.

    அன்பன்
    கி.காளைராசன் 

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 7, 2015, 4:46:24 AM7/7/15
    to mintamil
    வணக்கம்.

    2015-07-06 23:55 GMT-08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


    2015-07-07 12:05 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


    2015-07-05 5:17 GMT-08:00 Suba.T. <ksuba...@gmail.com>:


    2015-07-05 12:35 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

    வணக்கம்.
    On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
    >
    > பகுதி 2
    >
    > இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
    > பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
    >
    > மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
    >
    > முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
    > இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
    > இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
    > யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    > யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
    > சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
    > பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு

    > இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.

    இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?


    அப்படி இருக்கும் எனது தொகுப்பில் இருக்கும் படத்தை பிறகு தேடி பகிர்கின்றேன்.
    அமணர் எல்லாவற்றையும் துறந்து முழுநிர்வாணம் எய்திய நிலையில் அவர்களுக்குச் சின்னங்கள் ஏதும் கிடையா.  சின்னங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டே அவர்கள் முழுநிர்வாணம் அடைகின்றனர் என்றே கருதுகின்றேன்.
    ஹீனயானம் முடிந்து, இந்துக் கொள்கைகளைச் சமணம் உள்வாங்கிக் கொண்டு மகாயாணம் தோன்றிய போது,

    தாங்கள் பல்கலைக்கழகத்தில் பணியிலிருந்து, முனைவர் பட்டமும் பெற்றவர்.
    பணியிலிருக்கும் போது படித்துப் பட்டம் பெற்றவன்.
     
    தாங்கள் இதுபோல் எழுதியிருப்பதால், நிச்சயம் அறிஞர் பெருமக்கள் எழுதிய நூலிலிருந்து, படித்துவிட்டுதான் மேலே சொன்ன கருத்தை எழுதியிருப்பீர்கள்.
    இல்லை ஐயா.
    என்னிடம் உள்ள நூல்களையே நான் முழுமையாகப் படித்து அறிந்து கொண்டவனல்ல நான்.  நான் முழுமையாகக் கற்று (உணர்ந்து?)ள்ள ஒரே நூல் என்று என் மனத்திற்குக் தோன்றுவது திருப்பூவணப் புராணம் ஒன்றே.

    மற்றபடி,
    ஒட்டுத் துணியையும் புறம் தள்ளி, முற்றும் துறந்து, முழுநிர்வாணம் அடைந்து, வேண்டுல் வேண்டாமை இலாத நிலையையை அடைந்த மகானுக்கு உருவச் சிலை செய்வதும், அவருக்குக் காளைச் சின்னம் உண்டு என்பதும், அவரது சிலைக்கு மலர்வழிபாடு செய்யப் பெற்றிருப்பதையும் படத்தில் பார்த்தவுடன் என் மனதில் ஏற்பட்ட ஐயங்கங்களே கேட்டுள்ளேன்.

    “ஒரு காலகட்டத்தில், முழுநிர்வாணம் அடைந்தோரது கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் எவரும் இல்லாத காரணத்தினால், அவர்களது கோட்பாடுகள் ( Philosophy) ஹீனதிசை யை அடைந்து விட்டன.  அதனை புத்துருவாக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில், இந்துக் கொள்கைகளான உருவவழிபாடு, சின்னங்கள், மலர்வழிபாடு, இவற்றை உள்வாங்கிக் கொண்டு மகாயானத்தை உருவாக்கியுள்ளனர்.“  என்பதே எனது புரிதல். 

    நான் எனது அறிவில் தெளிவு பெறவே எனது ஐயங்களைக் கேட்கிறேன் ஐயா.

    Banukumar Rajendran

    unread,
    Jul 7, 2015, 4:53:53 AM7/7/15
    to mint...@googlegroups.com
    சரி. ஐயங்கள் என்றால் பரவாயில்லை. இதற்கு மின் தமிழில் எனக்கு தெரிந்ததை (படித்தை) எழுதியிருக்ககிறேன். தேடிப் படித்துக் கொள்ளவும். தற்போது எழுத நேரமில்லை ஐயா.





     

    “ஒரு காலகட்டத்தில், முழுநிர்வாணம் அடைந்தோரது கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் எவரும் இல்லாத காரணத்தினால், அவர்களது கோட்பாடுகள் ( Philosophy) ஹீனதிசை யை அடைந்து விட்டன.  அதனை புத்துருவாக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில், இந்துக் கொள்கைகளான உருவவழிபாடு, சின்னங்கள், மலர்வழிபாடு, இவற்றை உள்வாங்கிக் கொண்டு மகாயானத்தை உருவாக்கியுள்ளனர்.“  என்பதே எனது புரிதல். 

    நான் எனது அறிவில் தெளிவு பெறவே எனது ஐயங்களைக் கேட்கிறேன் ஐயா.


    பெளத்ததையும், சமணத்தையும் குழப்பிக் கொண்டு கேள்விக் கேட்டிருக்கிறீர்கள்.

    நேரம் கிடைக்கும்போது, மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களின் பொத்தகமான "சமணமும் தமிழும்" என்ற நூலை படிக்குமாறு வேண்டுகிறேன். ஆன்லைனில் கிடைக்கிறது.

    நன்றி.

    இரா.பா



     

    அன்பன்
    கி.காளைராசன்

    --

    dorai sundaram

    unread,
    Jul 7, 2015, 8:13:56 AM7/7/15
    to mint...@googlegroups.com
    இடப (ரிஷபம்) உருவத்துடன் கூடிய  ஆதிநாதர் சிற்பப்படத்தைப் பார்க்க.
    சுந்தரம்.
    P1040845.JPG

    Banukumar Rajendran

    unread,
    Jul 7, 2015, 8:28:10 AM7/7/15
    to mint...@googlegroups.com
    ஈரோடு - விஜயமங்களம் - ஆதிபகவன் சிற்பம்!

    நன்றி ஐயா!


    இரா.பா

    Banukumar Rajendran

    unread,
    Jul 7, 2015, 9:29:39 AM7/7/15
    to mint...@googlegroups.com
    Inline image 1

    Nagarajan Vadivel

    unread,
    Jul 7, 2015, 9:47:47 AM7/7/15
    to மின்தமிழ்
    தற்போது நமக்குக் கிடைக்கும் வரலாற்றுத் தகவல்கள் முழுமையானதும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் இல்லை என்பது பெரிய குறை.  ஆயினும் சென்னைப்பல்கலைக்கழக மரபணுவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தமிழக சாதி அமைப்புகளை மரபணு அடிப்படையில் ஆய்வுசெய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்
    தமிழகத்தின் சாதிப்பிரிவுகள் திராவிடர் மற்றும் இந்தோ யூரோப்பியன் என்ற இரு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  இந்து முஸ்லீம் கிறித்துவம் மற்றும் சமணம் ஆகிய சமயப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் .  மொத்தம் 27 பிரிவுகளாக மரபணு அடிப்படையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 2பிரிவுகள் - நாடோடிகள் வடபுலச் சமணர்கள் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தவர்கள். தமிழர்களில் கலப்புப் பிரிவினர் நால்வகை  - ஆங்கிலோ இந்தியன், லெப்பை முஸ்லீம் நாடார் கிறிஸ்டியன் தமிழ்ச் சமணர் என்ற நான்கு பிரிவுகள் என்றும் மீதியுள்ள பிரிவினர் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  பிராமணர்களான ஐயரும் ஐயங்காரும் மரபணு அடிப்படையில் யமிழர்களே.  பெளத்தர்கள் சமயப்போரில் விரட்டப்பட்டு ஆதிதிராவிடகளாக மாறியுள்ளனர்


    Abstract We analysed the genetic structure of ∼1000 samples representing 27 ethnic groups settled in Tamil Nadu, south India, derived from two linguistic families (Dravidians and Indo–Europeans) representing four religious groups (Hinduism, Islam, Christianity and Jainism) using 11 mtDNA markers. Out of 27 ethnic groups, four are in situ populations (Anglo-Indian, Labbai Muslim, Nadar Christian and south Indian Jain) and two are migrants (Gypsy and north Indian Jain) from north India to Tamil Nadu, and 21 are native ethnic groups. Six of the markers we used were monomorphic (HaeIII663, HpaI3592, AluI5176, AluI7025, AluI13262, 9-bp deletion) and five markers were polymorphic (DdeI10394, AluI10397, HinfI12308, HincII13259 and HaeIII16517). Haplogroup frequencies, genetic affinities and admixture analysis are based on the genotype data of polymorphic markers observed in these populations. Haplogroup frequencies indicate that various ethnic groups entered Tamil Nadu during different time periods. Genetic affinities and admixture estimates revealed that the ethnic groups possessing advanced knowledge of farming cluster in a branch (C), and could be the late arrived settlers as agriculture, was introduced to this region at about 5 to 3 thousand years ago. In situ ethnic groups appear to have arisen at various times as a result of the prevailing dominant socio-cultural forces. Hierarchical Hindu caste system created many ethnic groups in the history of its existence; some of them became isolated for considerable period of time. Over all, among Tamil ethnic groups, in spite of caste systems’ rigidity, built in flexibility in the system in the form of hypergamy and hypogamy had allowed maternal gene flow between them


    ​எனவே மின்தமிழில் தமிழ்ச் சமணர்கள் வடபுலச் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும் பிராமணர்கள் வந்தேறிகள் என்பதையும் மரபணுவில் தனித்தமிழ்த் தேசிய இனவாதத் தமிழர்கள் மற்றும் வடுக கன்னட தெலுங்கு ஆதிக்க சாதிகள் என்றும் இல்லை என்று மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொண்டு ஆள விடுங்க சாமி நீங்க நல்லாயிருப்பீங்க
    இணையமுனி
    டிஸ்கி: மறுப்புத் தெரிவிக்க விரும்புவோர் இணைப்பில் உள்ள முழுக்கட்டுரையையும் படிக்கவும்

    2015-07-07 14:23 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    genetics.pdf

    Banukumar Rajendran

    unread,
    Jul 7, 2015, 9:47:43 AM7/7/15
    to mint...@googlegroups.com
    சளுக்கை ஆதிபகவன்:

    Inline image 1

    பெரணமலூர் ஆதிநாதர்:

    Inline image 2

    சோலை அருகாவூர் ஆதீஸ்வரர்:
    Inline image 4

    தெறக்கோயில் ஆதிநாதர்:

    Inline image 5

    செய்யார், வெள்ளைக் கிராமம் ஆதிபகவன்:
    Inline image 6

    இரா.பா


    Suba.T.

    unread,
    Jul 7, 2015, 10:13:36 AM7/7/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-07-07 15:47 GMT+02:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    சளுக்கை ஆதிபகவன்:

    Inline image 1

    பெரணமலூர் ஆதிநாதர்:

    Inline image 2

    சோலை அருகாவூர் ஆதீஸ்வரர்:
    Inline image 4

    தெறக்கோயில் ஆதிநாதர்:

    Inline image 5

    செய்யார், வெள்ளைக் கிராமம் ஆதிபகவன்:
    Inline image 6

    இரா.பா



    2015-07-07 18:59 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    Inline image 1

    ​அனைத்து படங்களும் அருமை. என் பதிவிற்கு உதவுவனவாக அமைந்துள்ளன. நன்றி.

    சுபா



    --

    Suba.T.

    unread,
    Jul 7, 2015, 4:11:55 PM7/7/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    பகுதி 3

    சென்ற பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றிய விபரங்களைத் தொடங்கியிருந்தேன். முதலாம் தீர்த்தங்கரர் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் தொடர்வோம்.

    2ம் தீர்த்தங்கரர் - அஜிதநாதர்
    பெற்றோர் ஜிதசத்துரு- விஜயசேனை. இவர்கள் அயோத்தி நகரத்தின்  மன்னரும் அவரது மனைவியும் ஆவர்.
    சின்னம் - யானை. இவரது நல்வினைகள் குன்று போல் இருப்பதைக் காட்டும் சின்னம் இது. இவர் ஏழிலைப் பாலை மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்.

    3ம் தீர்த்தங்கரர் - சம்பவ நாதர்
    பெற்றோர் த்ரிடராஜன் - சுஷேணை ஆகியோர்.
    சுவாவஸ்தி என்னும் நகரில் பிறந்து வளர்ந்தவர். சாலமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் புரிந்து ஞானம் பெற்று சம்மேத மலையில் நிர்வாண கதி அடைந்தார்.
    சின்னம் - குதிரை. இது நன்னெறி என்னும் தேரை இழுத்துச் செல்வது என்ற வகையில் பொருள் கூறப்படுகின்றது.

    4ம் தீர்த்தங்கரர் - அபினந்தன சுவாமி 
    பெற்றோர் - சாகேத நகர மன்னர் சம்பரனுக்கும் அவர் மனைவு சித்தார்த்தைக்கும் பிறந்தவர். 
    வேங்கை மரத்தடியில் அமர்ந்து பல காலம் தியானத்தில் ஈடுபட்டவர்.
    சம்மேத மலைச் சிகரத்தில் முக்தியடைந்தார்.
    சின்னம் - குரங்கு. கொள்கைப் பிடிப்பை வலியுறுத்தும் சின்னமாக இது கருதப்படுகின்றது.


    நன்றி- திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்ற நூலிலிருந்து இத்தகவல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. *ஆசிரியர் ஆர்.விஜயன்

    சுபா

    2015-07-05 12:15 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 8, 2015, 2:52:39 AM7/8/15
    to mintamil
    வணக்கம்.
    2015-07-07 0:53 GMT-08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    இதற்கு மின் தமிழில் எனக்கு தெரிந்ததை (படித்தை) எழுதியிருக்ககிறேன். தேடிப் படித்துக் கொள்ளவும். தற்போது எழுத நேரமில்லை ஐயா.
    இவ்வளவு பொருமையாகப் பதில் சொல்லியதற்கு நன்றி ஐயா.
    தங்களது பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கிறேன் .

    அன்பன்
    கி.காளைராசன்

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 8, 2015, 2:53:13 AM7/8/15
    to mintamil
    வணக்கம்.

    2015-07-07 4:13 GMT-08:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
    இடப (ரிஷபம்) உருவத்துடன் கூடிய  ஆதிநாதர் சிற்பப்படத்தைப் பார்க்க.
    மிக்க நன்றி.

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 8, 2015, 2:56:43 AM7/8/15
    to mintamil
    வணக்கம்

    2015-07-07 5:29 GMT-08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    Inline image 1

    2015-07-07 17:58 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    ஈரோடு - விஜயமங்களம் - ஆதிபகவன் சிற்பம்!
    படங்களுக்கு நன்றி.
    ஒட்டுத் துணிகூட இல்லாமல் எல்லாவற்றையும் துறந்தவரோடு, காளை மனம் ஏனோ ஒட்ட மாட்டேன் என்கிறது. 

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 8, 2015, 3:00:46 AM7/8/15
    to mintamil
    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    2015-07-07 5:47 GMT-08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
    தமிழ்ச் சமணர்கள் வடபுலச் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும் பிராமணர்கள் வந்தேறிகள் என்பதையும் மரபணுவில் தனித்தமிழ்த் தேசிய இனவாதத் தமிழர்கள் மற்றும் வடுக கன்னட தெலுங்கு ஆதிக்க சாதிகள் என்றும் இல்லை என்று மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொண்டு
    காசி பயணத்திற்கு ஆனவற்றை செய்கிறேன். 
    ஆள விடுங்க சாமி நீங்க நல்லாயிருப்பீங்க
    தங்களது மாணவன்
    (யாரையும் முட்டாத )காசிக்காளை 
    --

    Oru Arizonan

    unread,
    Jul 8, 2015, 3:10:38 AM7/8/15
    to mintamil
    // மொத்தம் 27 பிரிவுகளாக மரபணு அடிப்படையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 2பிரிவுகள் - நாடோடிகள் வடபுலச் சமணர்கள் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தவர்கள். தமிழர்களில் கலப்புப் பிரிவினர் நால்வகை  - ஆங்கிலோ இந்தியன், லெப்பை முஸ்லீம் நாடார் கிறிஸ்டியன் தமிழ்ச் சமணர் என்ற நான்கு பிரிவுகள் என்றும் மீதியுள்ள பிரிவினர் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  பிராமணர்களான ஐயரும் ஐயங்காரும் மரபணு அடிப்படையில் யமிழர்களே.  பெளத்தர்கள் சமயப்போரில் விரட்டப்பட்டு ஆதிதிராவிடகளாக மாறியுள்ளனர்//

    இப்படிச் சொல்லிவிட்ட கையுடன், // பிராமணர்கள் வந்தேறிகள் என்பதையும் மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொண்டு ஆள விடுங்க சாமி //என்று எழுதினால் எப்படி?  முன்னுக்குப்பின் முரணாக  இருக்கிறதே!  

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/d/optout.



    --
    பணிவன்புடன்,

    Nagarajan Vadivel

    unread,
    Jul 8, 2015, 3:27:27 AM7/8/15
    to மின்தமிழ்
    அது தவறாக எழுதப்பட்டது என்று தெரிந்தே கேள்விகேட்பது முறையா?  சொல்லவந்தது மஹாஜனங்கள் என்றழைக்கப்பட்ட ஐயர்களும் ஐயங்கார்களும் அசல் தமிழர்களே என்பதுதான்.  
    ஏனோ அவர்களுக்குச் சமஸ்கிரிதத்தின்மீது அப்படி ஒரு ஈர்ப்பு. 
    சமஸ்கிரிதத்தை வளர்த்ததில் பெரும்பங்கு தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இவர்களுக்கே உரியது
    இணையமுனி

    Oru Arizonan

    unread,
    Jul 8, 2015, 3:33:25 AM7/8/15
    to mintamil
    //ஏனோ அவர்களுக்குச் சமஸ்கிரிதத்தின்மீது அப்படி ஒரு ஈர்ப்பு. 
    சமஸ்கிரிதத்தை வளர்த்ததில் பெரும்பங்கு தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இவர்களுக்கே உரியது.//

    இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே.  மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும்.  அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.

    இது சரியா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    Nagarajan Vadivel

    unread,
    Jul 8, 2015, 3:40:19 AM7/8/15
    to மின்தமிழ்
    அப்படியானால் ஆகம நூல்களை ஏன் சமஸ்கிரிதத்தில் இவர்கள் எழுதவில்லை.  தமிழ் வளங்களை ஏன் சமஸ்கிரிதத்தில் அறிமுகப்படுத்தி அகில இந்திய கவன ஈர்ப்பைப்பெற முயற்சி செய்யவில்லை
    இணையமுனி

    --

    தேமொழி

    unread,
    Jul 8, 2015, 4:29:23 AM7/8/15
    to mint...@googlegroups.com, oruar...@gmail.com
    உண்மையான காரணம் திரு கணேசன் பகிர்ந்த ஹார்வர்ட் கட்டுரையில் இருக்கிறது...



    On Saturday, July 4, 2015 at 10:38:41 PM UTC-7, N. Ganesan wrote:


     “Its never about language per se, it’s always about political power. Language becomes symbolic of that power hierarchy. Language is never really about language, it’s about the politics, authority, and oppression behind it,” said Professor Wolfram (http://harvardpolitics.com/world/towards-linguistic-singularity/)


    India has had languages of the elite in the past — Sanskrit was one, Persian another. They were needed to unite an entity more linguistically diverse than Europe. But there was perhaps never one that bore such an uneasy relationship to the languages operating beneath it, a relationship the Sanskrit scholar Sheldon Pollock has described as “a scorched-earth policy,” as English. (http://www.nytimes.com/2015/03/22/opinion/sunday/how-english-ruined-indian-literature.html?_r=1)

    தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ள இக்கால ஆங்கிலப் பயன்பாடு போல அக்கால சமஸ்கிரதப் பயன்பாடு என்றாகிறது.

    இந்த மனப்பான்மை இருக்குமானால் மொழிபெயர்ப்புகள் இருவழிப் பாதையாக இருக்க வாய்ப்பே இல்லை. 

    ..... தேமொழி 

    Suba.T.

    unread,
    Jul 8, 2015, 5:25:11 AM7/8/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    ​மனம் எப்படி பழக்கப்படுத்தப்பட்டு உள்ளதோ அதனையே பிடித்துக் கொண்டிருக்கும். 
    துறவு என்பதை முழுமையாக மணம் காணும் பார்வைக்கேற்ப வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.

    ஒட்டுத் துணி என்பது செயற்கை.
    இயற்கையை எந்த அலங்காரமும் இல்லாமல் காணும் மனம் தேவை.

    கு
    ​ழந்தை பிரசவம் நமக்கு உணர்த்தும் உண்மை இது.

    சுபா
     
    அன்பன்
    கி.காளைராசன்

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/d/optout.



    --

    Dev Raj

    unread,
    Jul 8, 2015, 6:37:59 AM7/8/15
    to mint...@googlegroups.com
    On Tuesday, 7 July 2015 13:11:55 UTC-7, Suba.T. wrote:
    3ம் தீர்த்தங்கரர் - சம்பவ நாதர்
    சுவாவஸ்தி என்னும் நகரில் பிறந்து வளர்ந்தவர்.
     

    श्रावस्ती - ச்ராவஸ்தி , சரியான வடிவம்

    தேவ் 

    Dev Raj

    unread,
    Jul 8, 2015, 6:51:22 AM7/8/15
    to mint...@googlegroups.com
    On Wednesday, 8 July 2015 00:40:19 UTC-7, இணையமுனி wrote:
    அப்படியானால் ஆகம நூல்களை ஏன் சமஸ்கிரிதத்தில் இவர்கள் எழுதவில்லை.  

    ஆகம நூல்கள் சங்கதத்தில் அமைந்துள்ளன :
    காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வ்யாமளம், காலோத்தரம், சுப்ரம், மகுடம்

    தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
    சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே
                                                 - திருமூலர்    


    தேவ் 

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Jul 9, 2015, 4:13:54 AM7/9/15
    to mintamil
    வணக்கம்.

    இணைப்பில் உள்ள காசிக்காளை படம் பார்த்து மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    ஆடும் மாடும்

    Geetha Sambasivam

    unread,
    Jul 9, 2015, 5:35:15 AM7/9/15
    to மின்தமிழ்
    //இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு.
    இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.//

    ஆம், சுபா, திருக்கயிலை யாத்திரையின் போது இந்த அஷ்டபத் மலையை அருகிலிருந்து தரிசித்தோம். சமணர்களுக்கு முக்கியமானது என்ற தகவலும் அங்கே கிடைத்தது. இந்த அஷ்டபத் மலைக்கும் கயிலை மலைக்கும் இடையே தான் நந்தி ஸ்வ்ரூபத்தில் மலை! 

    சமணம் என்பது சமயமில்லை. வாழ்வியல் நெறி என்பது சநாதன மதம் எனப்படும் இந்து மதத்துக்கும் பொருந்தும் ஓர் விஷயம். பகிர்வுக்கு நன்றி சுபா.

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 1:01:29 PM7/9/15
    to mintamil

    2015-07-08 2:33 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
    இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே.  மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும்.  அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.

    பண்டிதர் மொழியில் தான் நூல்கள் எழுதப்படும். அப்போதுதான் அவர்கள் பலருக்கும் அதை கற்றுக்கொடுப்பார்கள்.

    பைபிளின் மூலமொழி கிரேக்க மொழி. காரணம் என்ன? ஏன் பைபிள் கிரேக்கமொழியில் எழுதபட்டது?

    ஏசுநாதரின் தாய்மொழி அராமிக். ஏசுவின் சீடர்கள் (12 அப்போஸ்தலர்கள்) தாய்மொழியும் அராமிக். கிறிஸ்துவமதம் பரவியது அன்றைய ரோமானியபேரரசில். அப்பேரரசின் மொழி லத்தீன். ஆனால் அன்று பண்டிதர்கள், மேல்தட்டு மக்கள் பேசிவந்த மொழி கிரேக்கம். Language of the elites என அண்றைய கிரேக்க மொழியை அழைப்பார்கள்.ரோமானிய பேரரசின் இலக்கியநூல்கள் அனைத்துமே அன்று மக்கள் அதிகம் பேசாத கிரேக்க மொழியிலேயே எழுதபட்டன.

    அதனால் தான் புதிய ஏற்பாட்டின் மூலநூல்கள் அனைத்தும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன.


    --

    Nagarajan Vadivel

    unread,
    Jul 9, 2015, 1:09:05 PM7/9/15
    to மின்தமிழ்
    நான் கேட்டது ஒரு சின்னக் கேள்வி.  மாண்டூக் உபநிஷத்தை எழுதும் திறன் கொண்டவர் தமிழில் உள்ள ஒரு சங்கப்பாடலையோ அல்லது சைவக் கருத்தையோ ஏன் சமஸ்கிரிதத்தில் எழுத முற்படுவதில்லை.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் காசியில் கிளைமடம் நிறுவிச் சைவம் வளர்த்தவர்கள் (திருப்பணந்தாள் ஆதீனம் தவிர) எவ்வளவு தமிழ் வளங்களைச் சமஸ்கிரிதத்தில் வெளியிட்டுள்ளனர்

    இங்கே மின்தமிழில் சமஸ்கிரித வளங்கள் தமிழில் பேசப்பட்ட அளவுக்குத் தமிழ்க்கருத்துக்கள் சமஸ்கிரிதத்தில் மொழி மாற்றம்பெற ஒரு சிறு முயற்சியாவது நடந்ததுண்டா?

    இணையமுனி

    --

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 1:19:19 PM7/9/15
    to mintamil
    பழைய காலங்களில் இம்மாதிரி மொழிபெயர்ப்பு என்றெ பேச்சே கிடையாது. எந்த நூலும் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கபட்டதே கிடையாது. வேதம் முதல் புராணம் வரை எந்த நூலும் தமிழில் மொழிபெயர்க்கபடவில்லை. காளிதாசன் நூல்கள், அர்த்த சாஸ்திரம், வால்மிகி இராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றுக்கும் இதுதான் நிலை. (கம்பராமாயணம் வால்மிகியின் மொழிபெயர்ப்பு அல்ல)

    மொழிபெயர்ப்பு என்பது 20ம் நூற்ராண்டில் தோன்றிய விஷயம். அன்று ஒரு மொழியின் மூல நூலை கற்பதாக இருந்தால் அம் மூலமொழியையே கற்று நூலில் தேர்ச்சி அடையவேண்டும் என்பதே விதி.


    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 1:22:27 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 10:01:29 AM UTC-7, செல்வன் wrote:

    2015-07-08 2:33 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
    இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே.  மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும்.  அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.

    பண்டிதர் மொழியில் தான் நூல்கள் எழுதப்படும். அப்போதுதான் அவர்கள் பலருக்கும் அதை கற்றுக்கொடுப்பார்கள்.

    பைபிளின் மூலமொழி கிரேக்க மொழி. காரணம் என்ன? ஏன் பைபிள் கிரேக்கமொழியில் எழுதபட்டது?



    பலருக்கும் ஓர் நூல் சென்று சேரவேண்டும் என்ற நோக்கம் இருந்தால் செய்ய வேண்டியது ..அந்தந்த மொழிகளில் அந்த நூலை மொழி பெயர்க்க வேண்டியது.
    அதுதான் லாஜிக்.

    பலரும் படிக்க வேண்டும் என்று அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் ...என்று முதலிடத்தில் இருக்கும் நூல்   பைபிள் ..
    உங்கள் கோட்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள் செல்வன்.

    ஒரு நூல் முக்கியமானதாக இருந்தால் பாராட்டப்பட்டு பல மொழியினரும் மொழிபெயர்க்க விரும்புவார்கள்.

     இங்கு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் பட்டியல் உள்ளது..


    அதில் கிட்டதட்ட 3000 மொழிகளில் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட "இலக்கியம்" பைபிள்  என்ற குறிப்பு உள்ளது 

    (பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, பைபிளை இலக்கியம் என்று குறிப்பிட்ட இப்பாவிகளை மன்னியும்).

    பட்டியலில்  ஒரு தமிழ் நூலும் இடம் பிடித்துள்ளது. அது என்ன நூல் என "திரு திரு" என விழிப்பவர்கள் தமிழராக இருக்க வாய்ப்பில்லை (இந்த வாக்கியத்திலேயே க்ளூ கொடுத்திருக்கிறேனே)

    மன்னிக்கவும் Sanskrit நூல் எதுவும் காணோம் 

    ..... தேமொழி

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 1:27:29 PM7/9/15
    to mintamil

    2015-07-09 12:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    பலருக்கும் ஓர் நூல் சென்று சேரவேண்டும் என்ற நோக்கம் இருந்தால் செய்ய வேண்டியது ..அந்தந்த மொழிகளில் அந்த நூலை மொழி பெயர்க்க வேண்டியது.
    அதுதான் லாஜிக்.


    அம்மாதிரி கருத்தாக்கம் அன்றைய இந்தியாவில் கிடையாது. பிற நாடுகளில் இருந்திருக்கலாம். இந்தியாவில் இல்லை. அன்று நூல்கள் புலவர் சபையில் அரங்கேற்றம் செய்யபடும். புலவர்கள் ஏற்றுக்கொண்டால் நூல்கள் சிறப்பானவையாக கருதபட்டு பரிசு அரசனால் வழங்கபடும். புலவர் சபை அதை ஏற்க மறுத்தால் நூல் காலி.

    கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாமே பண்டிதர் மத்தியிலேயே புழங்கின. மக்களுக்கு அக்கதைகள் நாடகமாக, உபன்யாசமாக சொல்லபட்டனவே ஒழிய நூல்களை அச்சடித்து, மொழிபெயர்த்து, பரப்புவது அன்றைய டெக்னாலஜியில் சாத்தியமல்ல. அதை படிக்கும் அவசியம் மக்களுக்கும் அன்று கிடையாது.

    அச்சுகூடங்கள் வளர்ந்தபின்னரே மேலைநாடுகளில் பைபிள் மொழிபெயர்க்கபட்டு பரப்பபட்டிருக்கலாம். இந்தியாவில் அது வழக்கமல்ல.

    --

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 1:34:41 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com
    அதாவது ...

    ஒருவர் தனது கருத்தை  பலரும் படிக்க  வேண்டும் என்று விரும்பினால், பிற மொழிக்காரர்களும்  தனது தாய்மொழியைக் கைவிட்டு ....தானே  வலிய சென்று  சமஸ்கிரதத்தில் எழுதி வைத்துவிடுவார்கள் என்கிறீர்கள்.

    please note the point your honour...


    இனிமேல் யாரவது எல்லாமே சமஸ்கிரதத்தில் இருந்துதான் அடுத்தமொழிக்கு போனது என்றால், ஒருவழிப் பாதை கருத்துப் பரவல் என்றால் ...அக்கருத்தை எப்படி உள்வாங்க வேண்டும் என்பது விளங்கும்.

    பாவம் திருவள்ளுவர் என்னென்னமோ எழுதினார் இந்த உண்மை தெரியாமல், தனது  கருத்துகளின் மதிப்பு புரியாமல், தன்னடக்கத்துடன் தமிழில் எழுதினால் போதும் என நினைத்திருக்கிறார்.  என்ன ஒரு பிழைக்கத் தெரியாத மனிதர்.

    ..... தேமொழி 

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 1:41:40 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 10:01:29 AM UTC-7, செல்வன் wrote:

    2015-07-08 2:33 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
    இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே.  மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும்.  அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.

    பண்டிதர் மொழியில் தான் நூல்கள் எழுதப்படும். அப்போதுதான் அவர்கள் பலருக்கும் அதை கற்றுக்கொடுப்பார்கள்.

    பைபிளின் மூலமொழி கிரேக்க மொழி. காரணம் என்ன? ஏன் பைபிள் கிரேக்கமொழியில் எழுதபட்டது?

    1. The texts were mainly written in Biblical Hebrew, with some portions (notably in Daniel and Ezra) in Biblical Aramaic. Biblical Hebrew, sometimes called Classical Hebrew, is an archaic form of the Hebrew language. The very first translation of the Hebrew Bible was into Greek.

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 1:44:55 PM7/9/15
    to mintamil

    2015-07-09 12:34 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    அதாவது ...

    ஒருவர் தனது கருத்தை  பலரும் படிக்க  வேண்டும் என்று விரும்பினால், பிற மொழிக்காரர்களும்  தனது தாய்மொழியைக் கைவிட்டு ....தானே  வலிய சென்று  சமஸ்கிரதத்தில் எழுதி வைத்துவிடுவார்கள் என்கிறீர்கள்.

    பண்டைய காலத்தில் சமஸ்கிருதத்தில் நூல் எழுதிய தமிழர் ஒருவர் பெயரை சொல்லுங்கள். தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.


    பாவம் திருவள்ளுவர் என்னென்னமோ எழுதினார் இந்த உண்மை தெரியாமல், தனது  கருத்துகளின் மதிப்பு புரியாமல், தன்னடக்கத்துடன் தமிழில் எழுதினால் போதும் என நினைத்திருக்கிறார்.  என்ன ஒரு பிழைக்கத் தெரியாத மனிதர்.

     பக்தி இலக்கியங்கள், ஆழ்வார் பாசுரங்கள், கம்பராமாயணம் எல்லாமெ அப்படித்தான்...தமிழ்பேசும் மக்கள் நலனுக்ககாவே தமிழில் எழுதப்பட்டன. மொழிபெயர்த்து உலக அளவில் பிரபலமாவோம் என இவர்கள் யாருமே கருதியதில்லை. காளிதாசனும் குமார சாம்பவத்தை இந்தியா முழுக்க மொழிபெயர்க்கவில்லை. இலக்கியம் படைக்க நினைத்தான். படைத்தான்...அவ்வளவுதான். 20ம் நூற்றாண்டு கருத்துக்களை சங்க காலத்தில் பின்பற்றவில்லை என அவர்களை குறைகூறூவது முறையல்ல. அன்று மொழிபெயர்ப்பு எனும் கான்செப்டே கிடையாது
    --

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 1:45:57 PM7/9/15
    to mintamil

    2015-07-09 12:41 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    The texts were mainly written in Biblical Hebrew, with some portions (notably in Daniel and Ezra) in Biblical Aramaic. Biblical Hebrew, sometimes called Classical Hebrew, is an archaic form of the Hebrew language. The very first translation of the Hebrew Bible was into Greek.

    இது பழைய ஏற்பாடு. நான் குறிப்பிட்டது புதிய ஏற்பாடு


    --

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 1:59:39 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 10:44:55 AM UTC-7, செல்வன் wrote:

    2015-07-09 12:34 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    அதாவது ...

    ஒருவர் தனது கருத்தை  பலரும் படிக்க  வேண்டும் என்று விரும்பினால், பிற மொழிக்காரர்களும்  தனது தாய்மொழியைக் கைவிட்டு ....தானே  வலிய சென்று  சமஸ்கிரதத்தில் எழுதி வைத்துவிடுவார்கள் என்கிறீர்கள்.

    பண்டைய காலத்தில் சமஸ்கிருதத்தில் நூல் எழுதிய தமிழர் ஒருவர் பெயரை சொல்லுங்கள். தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.


    Works

    For more details on this topic, see Adi Shankara bibliography.

    Adi Shankara's works are the foundation of Advaita Vedanta school of Hinduism, and his doctrine, states Sengaku Mayeda, "has been the source from which the main currents of modern Indian thought are derived".[32] Over 300 texts are attributed to his name, including commentaries (Bhāṣya), original philosophical expositions (Prakaraṇa grantha) and poetry (Stotra).[32][33] However most of these are not authentic works of Adi Shankara and are likely to be works of his admirers or scholars whose name was also Shankaracharya.[34][35] Piantelli has published a complete list of works attributed to Adi Sankara, along with issues of authenticity for most.[36]

    Authentic works

    Adi Shankara is most known for his systematic reviews and commentaries (Bhasyas) on ancient Indian texts. Among his commentaries, Shankara's masterpiece work isBrahmasutrabhasya (literally, commentary on Brahma Sutra), a fundamental text of the Vedanta school of Hinduism.[32]

    His commentaries on ten early Primary Upanishads are also considered authentic by scholars,[32][34] and these are: Bhasya on the Brihadaranyaka Upanishad, the Chandogya Upanishad, the Aitareya Upanishad, the Taittiriya Upanishad, the Kena Upanishad,[37] the Isha Upanishad, the Katha Upanishad, the Mundaka Upanishad, the Prashna Upanishad, and the Mandukya Upanishad.[38][39] Of these, the commentary on Mandukya, is actually a commentary on Madukya-Karikas by Gaudapada.[39]

    Other authentic works of Shankara include commentaries on the Bhagavad Gita (part of his Prasthana Trayi Bhasya).[40] His Vivarana (tertiary notes) on the commentary by Vedavyasa on Yogasutras as well as those on Apastamba Dharma-sũtras (Adhyatama-patala-bhasya) are accepted by scholars as authentic works of Adi Shankara.[38][41]Among the Stotra (poetic works), the Daksinamurti Stotra, the Bhajagovinda Stotra, the Sivanandalahari, the Carpata-panjarika, the Visnu-satpadi, the Harimide, the Dasa-shloki, and the Krishna-staka are likely to be authentic.[38][42]

    Shankara also authored Upadesasahasri, his most important original philosophical work.[41][43] Of other original Prakaranas (प्रकरण, monographs, treatise), seventy six works are attributed to Adi Shankara. Modern era Indian scholars such as Belvalkar as well as Upadhyaya accept five and thirty nine works respectively as authentic.[44]

    Shankara's stotras considered authentic include those dedicated to Krishna (Vaishnavism) and one to Shiva (Shaivism) – often considered two different sects within Hinduism. Scholars suggest that these stotra are not sectarian, but essentially Advaitic and reach for a unified universal view of Vedanta.[42]

    Adi Shankara's commentary on the Brahma Sutras is the oldest surviving. However, in that commentary, he mentions older commentaries like those of Dravida, Bhartrprapancha and others which are either lost or yet to be found.[45]

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 2:10:53 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 10:45:57 AM UTC-7, செல்வன் wrote:

    2015-07-09 12:41 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    The texts were mainly written in Biblical Hebrew, with some portions (notably in Daniel and Ezra) in Biblical Aramaic. Biblical Hebrew, sometimes called Classical Hebrew, is an archaic form of the Hebrew language. The very first translation of the Hebrew Bible was into Greek.

    இது பழைய ஏற்பாடு. நான் குறிப்பிட்டது புதிய ஏற்பாடு



    ஹ்ம்ம் .............



    ..... தேமொழி 

     

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 2:16:30 PM7/9/15
    to mintamil
    அன்றைய கேரள பிராமணர்கள் நம்பூதிரி ஜாதி. தமிழ் பிராமணர்கள் பாலக்காடு தாண்டி இருந்ததாக தெரியவில்லை.ஆதி சங்கரர் ஜாதியும், தாய்மொழியும் உறுதியாக தெரியாது.


    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 2:17:25 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 10:44:55 AM UTC-7, செல்வன் wrote:
     காளிதாசனும் குமார சாம்பவத்தை இந்தியா முழுக்க மொழிபெயர்க்கவில்லை. இலக்கியம் படைக்க நினைத்தான். படைத்தான்...அவ்வளவுதான். 20ம் நூற்றாண்டு கருத்துக்களை சங்க காலத்தில் பின்பற்றவில்லை என அவர்களை குறைகூறூவது முறையல்ல. அன்று மொழிபெயர்ப்பு எனும் கான்செப்டே கிடையாது


    சரி...இனி தமிழ் இலக்கியங்கள் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்தது என்று யாரவது சொன்னால்  உங்களைக் கூப்பிட்டனுப்ப  வேண்டியதுதான்.  நீங்கள் அவர்களை ஒரு கை பார்த்துவிடுவீர்கள்  என்ற நம்பிக்கை இருக்கிறது.  உங்களைதான் மலைபோல நம்பியிருக்கிறேன் செல்வன். 


    ..... தேமொழி 



    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 2:17:29 PM7/9/15
    to mintamil

    On Thu, Jul 9, 2015 at 1:10 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


    ஹ்ம்ம் .............


    Flashback..

    "அதனால் தான் புதிய ஏற்பாட்டின் மூலநூல்கள் அனைத்தும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன..." :-)

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 2:21:36 PM7/9/15
    to mintamil

    2015-07-09 13:17 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    சரி...இனி தமிழ் இலக்கியங்கள் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்தது என்று யாரவது சொன்னால்  


    எந்த தமிழ் இலக்கியமும் வடமொழியில் இருந்து வந்தது கிடையாது. குரானில் உள்ள கருத்துக்களை சீராப்புராணத்தில் எழுதினால் அது அரபி இலக்கியமாகிவிடுமா? அரபிகளுக்கு சீராப்புராணம் என்றால் என்னவென்றே தெரியாது

    ஒரு மத கருத்தை, வரலாற்றை இன்னொரு மொழியில் இலக்கியமாக படைப்பதற்கும் மொழிபெயர்ப்பதுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் குழப்பம் வராது

    --

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 2:31:11 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 11:16:30 AM UTC-7, செல்வன் wrote:
    அன்றைய கேரள பிராமணர்கள் நம்பூதிரி ஜாதி. தமிழ் பிராமணர்கள் பாலக்காடு தாண்டி இருந்ததாக தெரியவில்லை.ஆதி சங்கரர் ஜாதியும், தாய்மொழியும் உறுதியாக தெரியாது.


    ஆதி சங்கரர் காலத்தில்  மலையாளம் இருந்தது என்கிறீர்கள் ...அவர் மலையாளி என்கிறீர்கள் ..எச்சரிக்கை...நீங்கள் அவர் காலத்தை பின்னுக்கு இழுத்தால் பலர் சண்டைக்கு வருவார்கள்.

    ..... தேமொழி 

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 2:35:13 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com


    On Thursday, July 9, 2015 at 11:21:36 AM UTC-7, செல்வன் wrote:


    ஒரு மத கருத்தை, வரலாற்றை இன்னொரு மொழியில் இலக்கியமாக படைப்பதற்கும் மொழிபெயர்ப்பதுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் குழப்பம் வராது

    அப்படியானால் அது.... அந்த மொழியில் இருந்து இந்த மொழிக்கு தழுவல் என்கிறீர்கள்.

    இனி "தமிழர்கள் சமஸ்கிரதர்களை தழுவியது போல, சமஸ்கிரதக்காரர்கள் தமிழர்களை ஏன் தழுவவில்லை?" என்று கேள்வியை  மாற்றி அமைக்க வேண்டியது பேராசிரியர் பொறுப்பு.


    ..... தேமொழி 

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 2:36:48 PM7/9/15
    to mintamil
    நம்பூதிரிகள் மலையாளிகள் அல்லர்.

    சங்கரர் காலத்தில் மலையாளம் இல்லை.

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/d/optout.

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 2:41:28 PM7/9/15
    to mintamil

    2015-07-09 13:35 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    அப்படியானால் அது.... அந்த மொழியில் இருந்து இந்த மொழிக்கு தழுவல் என்கிறீர்கள்.

    காமடி பண்ணகூடாது :-). குருன்னு அம்பானி வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து மணிரத்தினம் ஒரு படம் எடுத்தார். அது என்ன குஜராத்தி மொழியின் தழுவலா?

    வேறு மாநிலத்தில் பிறந்தவரது வாழ்க்கை வரலாற்றை இன்னொரு மொழியில் எழுதினால் அது தழுவல் ஆகிவிடுமா? மொழிபெயர்ப்பு ஆகிடுமா?




    --

    தேமொழி

    unread,
    Jul 9, 2015, 2:45:16 PM7/9/15
    to mint...@googlegroups.com, hol...@gmail.com
    இதுவும் உதவாது, 
    அவர் குடும்பம் வடக்கிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்கிறீர்கள்,  வந்தேறிகள் என்றால் அதற்கும் பலர் சண்டைக்கு வருவார்களே என்னதான் செய்வது?  
    தமிழ் நாட்டுப் பகுதியில் வாழ்ந்த அவரை  நான்  தமிழர் என்றுதான் முத்திரை குத்துவேன்.  

    ..... தேமொழி 

    செல்வன்

    unread,
    Jul 9, 2015, 3:03:20 PM7/9/15
    to mintamil

    2015-07-09 13:45 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    தமிழ் நாட்டுப் பகுதியில் வாழ்ந்த அவரை  நான்  தமிழர் என்றுதான் முத்திரை குத்துவேன்.  

    அப்படியே கலிபோர்னியா பகுதியில் வசிப்பதால் நீங்களும் ஆங்கிலேயர் என சொல்லிகொண்டு ஏன் நீங்கள் ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கவில்லை என யாராவது சண்டைக்கு வந்துவிடபோகிறார்கள் என எனக்கு பயமாக இருக்கிறது :-)



    --

    Oru Arizonan

    unread,
    Jul 9, 2015, 3:07:01 PM7/9/15
    to mintamil
    2015-07-09 11:16 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
    //அன்றைய கேரள பிராமணர்கள் நம்பூதிரி ஜாதி. தமிழ் பிராமணர்கள் பாலக்காடு தாண்டி இருந்ததாக தெரியவில்லை.ஆதி சங்கரர் ஜாதியும், தாய்மொழியும் உறுதியாக தெரியாது.//
     
    ஆதி சங்கரர் காலத்தில் மலையாளம் ஒரு மொழியாகத் தோன்றவில்லை.  தமிழின் ஒரு அசைபாகவே இருந்தது.  வடமொழியின் மீது பற்று உள்ள நம்பூதிரி பிராமணர்கள் -- தமிழே அவர்கள் தாய் மொழியாக இருந்தாலும் -- தமிழில் வடமொழியை வலிந்து திணித்தார்கள்.  அதுவே மணிபிரவாளம்[மணி=வடமொழி+பவளம்=தமிழ்] தோன்றக் காரணமாக இருந்தது.

    உயர்திரு தேமொழி அவர்கள் சொல்லுவது சரியே.  தென்னாட்டில் வடமொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்.  அவர்கள் [ஆதி சங்கரர் காலத்திலும், பின்னாலும்] தங்கள் கொள்கைகள் இந்தியால் முழுவதும் பரவவேண்டும் என்று விரும்பினார்கள்.  அப்பொழுது தாங்கள் சொல்வது போல இந்தியா முழுவதும் அறிஞர்கள் மொழி வடமொழியாக இருந்தது.  [Some callit Ellite language].

    எனவே, தங்கள் கொள்கைகள் பரவ ஆதிசங்கரர், இராமானுஜர் போன்றோர் வடமொழியைக் கைக்கொண்டனர்.  ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும், தங்கள் கொள்கையை தமிழகத்தில் மட்டுமே பரப்ப விரும்பினார்கள்.  எனவே, அவர்கள் தமிழிலேயே அனைத்தையும் எழுதினார்கள்.

    ஒரு அரிசோனன்  

    Oru Arizonan

    unread,
    Jul 9, 2015, 3:10:24 PM7/9/15
    to mintamil
    2015-07-09 11:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
    //தமிழ் நாட்டுப் பகுதியில் வாழ்ந்த அவரை  நான்  தமிழர் என்றுதான் முத்திரை குத்துவேன்.  //

    இதில் எனக்கு மாற்றுக்கோணமோ, கருத்தோ கடுகளவுகூட இல்லை, உயர்திரு தேமொழி அவர்களே!  தங்கள் முத்திரை, அசல் அக்மார்க் முத்திரை!

    Oru Arizonan

    unread,
    Jul 9, 2015, 3:14:35 PM7/9/15
    to mintamil
    2015-07-09 12:02 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

    //அப்படியே கலிபோர்னியா பகுதியில் வசிப்பதால் நீங்களும் ஆங்கிலேயர் என சொல்லிகொண்டு ஏன் நீங்கள் ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கவில்லை என யாராவது சண்டைக்கு வந்துவிடபோகிறார்கள் என எனக்கு பயமாக இருக்கிறது :-)//

    யாமறிந்த ஜோக்குகளில் செல்வன் ஜோக்குபோல சிறந்ததொன்றும் காணோம்!
    உண்மை, இது வெறும் புகழ்ச்சி இல்லை!

    தொமொழி ஆழிலேஹ்யர்  --  பர்ருங்கஹல், சிர்த்துஹ் திரித்துக் அணைக்குக் தாடசொபெஹ் கூடாஹ் வர்ஹ்வில்லாஹ்.

    ஒரு அறிசாஹனம் 

    Suba.T.

    unread,
    Jul 20, 2015, 4:17:07 PM7/20/15
    to மின்தமிழ்


    2015-07-09 10:13 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
    வணக்கம்.

    இணைப்பில் உள்ள காசிக்காளை படம் பார்த்து மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ​இந்தப் படத்தை திறக்க முடியவில்லையே. என்ன பார்மெட்டில் உள்ளது எனத் தெரிந்தால் ஏதும் முயற்சிப்பேன்.

    சுபா

    Suba.T.

    unread,
    Jul 20, 2015, 4:32:14 PM7/20/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    பகுதி 4

    சென்ற பதிவில் 24 தீர்த்தங்கரர்களில் முதல் நால்வரின் பட்டியலையும் அவர்களது வரலாறு, சின்னம் ஆகியன் பற்றியும் குறிப்பு வழங்கினேன். இதனை தொடர்கின்றேன்.

    5ம் தீர்த்தங்கரர் - சுமதி நாதர் 
    பெற்றோர்:  மன்னன் மேகரதன் அவரது மனைவி மங்கலை.
    சின்னம் : சக்ரவாகப் பறவை   - வீழ்ச்சியில்லா வலிமையைக் காட்டும் சின்னம்.
    தவம்: பிரியங்கு என்ற மரத்தின் கீழ் அமர்ந்து ஞானோதயம் பெற்றார்.

    இவர் ஒரு பெண் தீர்த்தங்கரராகவும் இருக்கலாம் என்றும் குறிப்பு சொல்கின்றது. ஸ்டீவன்சன்  என்ற ஆய்வாளர் இவர் ஒரு பெண் தீர்த்தங்கரர் என்று குறிப்பிடுகின்றார். ஆதாரம்  Moor, Hindu Pantheon, Kalpasutra P.337.

    6ம் தீர்த்தங்கரர் - பத்மபிரப சுவாமி
    பெற்றோர்: கௌசாம்பி நாட்டு மன்னன் தரணனுக்கும் அவரது பட்டத்து அரசி சுசீமை என்பவருக்க்ழ்ம் பிறந்தவர்.
    சின்னன்: மோட்சம் மலர்ந்ததைக் காட்டும் தாமரை மலர் இவரது சின்னம்.
    தவம்: சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    7ம் தீர்த்தங்கரர் -சுபார்சுவ ஜினபதி
    பெற்றோர்: காசிப்பட்டணத்தைச் சர்ந்த சுப்ர திஷ்டன் பிரிதிவிசேனை என்போருக்கு மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்: சுவஸ்திகா
    தவம்: காட்டுவாகை என்னும் மரத்தடியில் தவமியற்றி சம்மேத மலையில் நிர்வாண கதி அடைந்தார்.

    8ம் தீர்த்தங்கரர் - சந்திரபிரபர்
    பெற்றோர் : கங்கையின் கிளை நதியான சீதா நதியின் கரையில் அமைந்த சுகந்திலை நாட்டில் வாழ்ந்த மகாசேனன், லட்சுமனை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். மன்னர் மரபில் வந்தவர்.
    சின்னம் : வாழ்க்கை ஒளியைக் காட்டும் இளம்பிறை இவரது சின்னம்.
    தவம்: சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    தொடரும்..
    சுபா



    2015-07-07 22:11 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    பகுதி 3

    சென்ற பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றிய விபரங்களைத் தொடங்கியிருந்தேன். முதலாம் தீர்த்தங்கரர் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் தொடர்வோம்.

    2ம் தீர்த்தங்கரர் - அஜிதநாதர்
    பெற்றோர் ஜிதசத்துரு- விஜயசேனை. இவர்கள் அயோத்தி நகரத்தின்  மன்னரும் அவரது மனைவியும் ஆவர்.
    சின்னம் - யானை. இவரது நல்வினைகள் குன்று போல் இருப்பதைக் காட்டும் சின்னம் இது. இவர் ஏழிலைப் பாலை மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்.

    3ம் தீர்த்தங்கரர் - சம்பவ நாதர்
    பெற்றோர் த்ரிடராஜன் - சுஷேணை ஆகியோர்.
    சுவாவஸ்தி என்னும் நகரில் பிறந்து வளர்ந்தவர். சாலமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் புரிந்து ஞானம் பெற்று சம்மேத மலையில் நிர்வாண கதி அடைந்தார்.
    சின்னம் - குதிரை. இது நன்னெறி என்னும் தேரை இழுத்துச் செல்வது என்ற வகையில் பொருள் கூறப்படுகின்றது.

    4ம் தீர்த்தங்கரர் - அபினந்தன சுவாமி 
    பெற்றோர் - சாகேத நகர மன்னர் சம்பரனுக்கும் அவர் மனைவு சித்தார்த்தைக்கும் பிறந்தவர். 
    வேங்கை மரத்தடியில் அமர்ந்து பல காலம் தியானத்தில் ஈடுபட்டவர்.
    சம்மேத மலைச் சிகரத்தில் முக்தியடைந்தார்.
    சின்னம் - குரங்கு. கொள்கைப் பிடிப்பை வலியுறுத்தும் சின்னமாக இது கருதப்படுகின்றது.


    நன்றி- திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்ற நூலிலிருந்து இத்தகவல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. *ஆசிரியர் ஆர்.விஜயன்

    சுபா

    2015-07-05 12:15 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    பகுதி 2

    இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன். 
    பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும்  சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.

    மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.

    முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர். 
    • இவருக்கு ஆதிநாதர், அருகன்  என்ற பெயர்களும் உண்டு.
    • இவர் அயோத்தி என்னும்  பட்டிணத்தில் பிறந்தார்.
    • யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
    • யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
    • சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
    • சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண்  குழந்தையின் பெயர் சுந்தரி.
    • பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு.
    • இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
    Inline image 1
    பூண்டி பொன்னெழில்நாதர் ரிஷபநாதர் சிற்பம்

    தொடரும்
    சுபா


    2015-06-21 12:37 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய  பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.

    மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.சமணம் என்பது இன்று வரலாற்று விசயம் மட்டுமே .. தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத அழிந்த ஒரு மதம் என்ற எண்ணமும் அங்கே பரவியிருக்கின்றது. மலேசிய இந்தியர்களின் சமய தளத்திலும் பல்கலைக்கழக தமிழ்த்துறை கல்வியாளர்கள் தளத்திலும் இன்னமும் நல்ல நட்பு கொண்டிருப்பதால் என்னால் இதனை துணிந்து கூற முடியும்.

    இந்தப் பார்வை வரலாற்று பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் ஒரு முக்கிய விசயத்தை அதன் முழு பரிமாணத்தைக் காணாமல் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு மட்டும் பார்வையைக் குறுக்கிக் கொண்டு காணும் தன்மையை வளர்ப்பதாக இருப்பதையே காண்கின்றேன். 

    மலேசிய சூழலை மட்டும் மனதில் வைத்துச் சொல்ல வில்லை. எனது ஃபேஸ்புக் தளத்தில் நண்பர்கள் கேட்கும் வினாக்களிலிருந்தும் தமிழகத்தில் பல பகுதி மக்கள் இன்றளவும் சமண நெறி வழக்கில் ஓரளவேனும்  இருப்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது.  

    தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது. இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.

    சமணம்  என்பது ஒரு சமயமல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி என்று நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்ட இரண்டு மடாதிபதிகள்- மேல்சித்தாமூர், திருமலை மடாதிபதிகள் இருவருமே தமது உரையில் குறிப்பிட்டமை சிந்திக்கத்தக்க ஒரு விசயமாக கருதுகிறேன். 

    என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா...  என போட்டியின்றி........ 
    • இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது.. 
    • இதன் அடிப்படை கூறுகளாக அமைந்திருப்பவை எவை.. 
    • இதில் உள்ள சடங்குகள்
    • கடைபிடிக்கப்படும் வாழ்வியல் விசயங்கள்
    • கோயில் அமைப்பு
    • வரலாற்று செய்திகள்
    இப்படி சில அடிப்படை தகவல்களை நான் வாசிக்கும் நூல்களிலிருந்து சிறிது சிறிதாக தொகுத்து வழங்காலம் என நினைக்கின்றேன்.
    ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை. 

    ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம். 

    ஆக முதலில் மோட்சம் என்பதை சமணம் எவ்வாறு காண்கின்றது என்பதிலிருந்து என் குறிப்பை தொடங்கலாம் என நினைக்கின்றேன்.

    மோட்சம்
    • ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
    • நிர்வாணம் என்பது குளிர்வடைதல் என்று பொருளாகும்.
    • மூவுலகை வென்றதன் அடையாளமாக முக்குடைகள் அமைகின்றன..
    • பல சிற்பங்களில் நாம் தீர்த்தகரர் வடிவங்களில் காணும், தேவர்கள் பூமழை பொழிதல், திவ்ய தொணி எழுப்புதல், ஒளிமண்டலம் சூழ்தல், சாமரம் வீசும் பெண்கள் ஆண்கள், சிம்மாசனம் (1, 3, அல்லது 5 சிங்கங்கள் ஆசனமாக இருப்பது என்ற வகையில் அமைக்கப்பட்ட சிம்மானசம்) ஆகியன. கீழுள்ள படத்தில் இவற்றைக் காணலாம் - திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்கள் தொகுதியின் ஒரு சிற்பம் இது.


    சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.

    1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

    2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.

    தொடர்வோமே....!

    சுபா



    --
    Suba.T.
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com - Suba's Musings
    http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
     



    --
    Suba.T.
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com - Suba's Musings
    http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
     



    --
    Suba.T.
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com - Suba's Musings
    http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
     

    Thiagarajan

    unread,
    Jul 20, 2015, 9:16:48 PM7/20/15
    to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
    திரு சுபா அவர்களுக்கு நன்றி. சமணம் பற்றிய விளக்கம் அருமை.

    தமிழ் மக்களிடையே சமணம் எந்த காலகட்டத்தில் பரவியது ?



    http://www.tamiljains.org/ ல் உள்ள கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    தியாகு

    Suba.T.

    unread,
    Jul 21, 2015, 4:54:43 PM7/21/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-07-21 3:16 GMT+02:00 Thiagarajan <thiagu...@gmail.com>:
    திரு சுபா அவர்களுக்கு நன்றி. சமணம் பற்றிய விளக்கம் அருமை.

    தமிழ் மக்களிடையே சமணம் எந்த காலகட்டத்தில் பரவியது ?
    என்னிடம் உள்ள Studies in Jainism  என்ற நூலில் கி.மு 3ம் நூற்றாண்டு வாக்கில்  சமணம் தென்னிந்தியப்பகுதியில் குறிப்பாக தமிழக நிலப்பாரப்பில் பரவியது என்ற குறிப்பு உள்ளது.

    கி.மு 4ம் நூ மன்னன் சந்திரகுப்த மௌரியரும் சமண துறவிகளின் ஒரு குழுவினரும் பத்ரபாகு துறவியின் வழிகாட்டுதலில்  தெற்கு நோக்கி கர்னாடகாவின் சிரவணபெலகுலா பகுதிக்கு வந்தனர் என்றும் அங்கிருந்து இந்த சமண மத நெறிகளை பரப்பினர் என்றும்  பின்னர் படிப்படியாக தெற்கு நோக்கி சமணம் பரவியது என்ரும் இந்த நூலில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    சுபா
     
    ​.

    Suba.T.

    unread,
    Jul 22, 2015, 4:54:35 PM7/22/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    பகுதி 5

    சென்ற பதிவில் 24 தீர்த்தங்கரர்களில் எட்டு பேர் பற்றிய  பட்டியலையும் அவர்களது வரலாறு, சின்னம் ஆகியன பற்றியும் குறிப்பு வழங்கினேன். இதனைத்தொடர்கின்றேன்.

    9ம் தீர்த்தங்கரர் - புஷ்பதந்தர் (சுவிதி என்ற பெயரும் இவருக்கு உண்டு)
    பெற்றோர்: சுக்ரீவn ராமை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். காகந்தீபுரம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்.
    சின்னம்: முதலை -  நற்கொள்கைகளை விடாப்பிட்யாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் என்பதை உணர்த்தும் சின்னம் இது.
    தவம்: நாவல் மரத்தின் கீழ் அமர்ந்து தவம் இயற்றினார்.  சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம். 

    10ம் தீர்த்தங்கரர்  - சீதள தீர்த்தங்கரர் 
    த்ருடதரந்சுனந்தை என்போருக்கு மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்: கல்ப தரு (மரம்)
    தவம்: வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து தவம் இயற்றினார்.  சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம். 

    11ம் தீர்த்தங்கரர் - சிரேயாம்ஸ சுவாமி 
    பெற்றோர்: ஷேமபுர மன்னன் விஷ்ணு-மனைவி நந்தை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்: கருடன் (கூரிமையான பார்வை).
    தவம்: தும்புரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் இயற்றினார்.  சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம். 

    12ம் தீர்த்தங்கரர் - வாசு பூஜ்யர் (வாசுபத்யா)
    பெற்றோர்: வசுபூஞ்யர் என்ற மன்னனுக்கும் ஜெயவதி என்ற அவரது அரசிக்கும் மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்:  காட்டெருமை (அமைதியின் உருவம்)
    தவம்: தும்புரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் இயற்றினார்.  சம்பாபுரியில் அக்ரமந்திரம் என்னும் மலையே இவரது மோட்சத்தலம். 

    தொடரும்

    சுபா

    Suba.T.

    unread,
    Aug 5, 2015, 5:12:24 PM8/5/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    பகுதி 6 

    24  தீர்த்தங்கரர்களின் பட்டியலைத் தொடர்கின்றேன். 

    13ம் தீர்த்தங்கரர் - விமலநாதர்
    பெற்றோர்: கிருதவர்மாஜெயசியாமை ஆகியோருக்குப் பிறந்தவர். காம்பில்யாபுரம் என்பது இவரது ஊர்.
    சின்னம்: காட்டுப் பன்றி ( நல்வாழ்வை தோண்டி எடுத்துக் காட்டும் பொருள் கொண்ட சின்னம்)
    தவம்: நாவல் மரத்தடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.


    14ம் தீர்த்தங்கரர் - அனந்த நாத தீர்த்தங்கரர்
    பெற்றோர்: அயோத்தி நகர அதிபதியான சிம்மசேனௌக்கு மகனாகப் பிறந்தவர் தாயின் பெயர் ஜயசியாமை.
    சின்னம்: கரடி (  கொள்கையை விரட்டிப் பிடிக்கும் விதமாக பொருள் கொண்ட சின்னம்)
    தவம்: அரச மரத்தடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.


    15ம் தீர்த்தங்கரர் - தர்மநாதர்
    பெற்றோர்: ரத்னாபுரத்தில் பானுமகாராஜனுக்கும் சுப்பிரபைக்கும் மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்: வஜ்ராயுதம்(  வல்லமையை விளக்கும் பொருள் கொண்ட சின்னம்)
    தவம்: ஏழிலப்பாலை என்ற  மரத்தடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.


    16ம் தீர்த்தங்கரர் - சாந்திநாத சுவாமி
    பெற்றோர்: அஸ்தினாபுரத்தில் விஸ்வசேனந்ஜராதேவி தம்பதியருக்கு  மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்: மான்(  அனைவர் உள்ளத்தையும் கவர்வது என்ற பொருள் கொண்ட சின்னம்)
    தவம்: னந்தியாவட்டம் என்ற  குறுமரத்தடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    தொடரும்..
    சுபா

    Suba.T.

    unread,
    Aug 19, 2015, 4:54:24 PM8/19/15
    to மின்தமிழ், Subashini Tremmel

    சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர் பட்டியலைத் தொடர்கின்றேன்.

    17ம் தீர்த்தங்கரர் - குந்துநாதர்
    பெற்றோர்: அஸ்தினாபுரத்தில் சூரசேனன் ஸ்ரீகாந்தை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்.  
    சின்னம்: ஆடு இவரது சின்னம்
    தவம்: மஞ்சாடி எனும் மரத்தடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    18ம் தீர்த்தங்கரர் - அரநாதர்
    பெற்றோர்:  சுதர்சனன் - மித்ரசேனை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்.   
    சின்னம்: நந்தியாவர்தம் எனும் மீன் வடிவை சின்னமாகக் கொண்டவர் 
    தவம்: மாமரத்தின் அடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    19ம் தீர்த்தங்கரர் - மல்லிநாதர்
    பெற்றோர்:  கும்பன் - பிரஜாவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்.   
    சின்னம்: அனைத்திலும் முழுமைத்தன்மையைக் காட்டும் பூரண கும்ப வடிவை சின்னமாகக் கொண்டவர் 
    தவம்: அசோகமரத்தின் அடியில் இருந்து தவம் இயற்றினார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    20ம் தீர்த்தங்கரர் - முனிசுவ்விரத சுவாமி
    பெற்றோர்:  இராஜகிருகத்து மன்னர் சுமித்ரன் - பத்மை  தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்.   
    சின்னம்: ஆமை
    தவம்:  சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    தொடரும்..

    சுபா
    --
    Suba.T.
    http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
    http://www.heritagewiki.org/- மரபு விக்கி
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com - Suba's Musings
    http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
    http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்

    Suba.T.

    unread,
    Aug 31, 2015, 4:38:00 PM8/31/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    சமண தீர்த்தங்கரர்கள் 24 பேர் பட்டியல் தொடர்கின்றது.

    ​21ம் தீர்த்தங்கரர் - நமி நாதர்
    பெற்றோர்:  விஜயன் என்ற மன்னருக்கும் பிப்பலா என்ற அவருடைய மனைவிக்கும் மகனாகப் பிறந்தவர் 
    சின்னம்: இந்தீவரம் என்பது இவருக்கான சின்னமாகும்
    தவம்:  மகிழ மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.


    ​22ம் தீர்த்தங்கரர் - நேமி நாதர்
    பெற்றோர்:  துவாரகையில் பிறந்த கிருஷ்ணன் (கிருஷ்ணபகவான் இவரது உறவு என்ற குறிப்பும் உள்ளது)   சமுத்திர விஜயன் சிவதேவி ஆகியோரது மகனாவார்.  
    சின்னம்: ஆழ்கடல் சங்கு இவருக்கான சின்னமாகும்
    தவம்:  மூங்கில் மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.


    ​23ம் தீர்த்தங்கரர் - பார்சுவநாதர்
    பெற்றோர்:   காசி நாட்டு மன்னர் விஸ்வசேனா அவரது மனைவி பிராமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
    சின்னம்: முகம் மலர்ந்து விரிந்த முகம் கொண்ட பாம்பு  இவருக்கான சின்னமாகும். இவர் நாகர் குலத்தவர் என்ற குறிப்பினையும் காணலாம்.
    தவம்:  தேவதாரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.
    இவரது காலம் கி.மு. 817 முதல் 717 வரை என்ற குறிப்பைக் காண்கின்றோம்.
    தீர்த்தங்கரர்களில் இவரது காலக்கணக்கு தொடங்கியே ஆண்டுக் குறிப்பு இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ​24ம் தீர்த்தங்கரர் - வர்த்தமான மகாவீரர்
    பெற்றோர்:  சித்தார்த்தன் என்ற மன்னருக்கும் பிரியகரணி என்ற அவரது மனைவிக்கும்   மகனாகப் பிறந்தவர்.
    சின்னம்: வீரத்தின் அடையாளமான சிங்கம்   இவருக்கான சின்னமாகும்
    தவம்:  நீர்னிலைகளின்  அருகே இருந்த ஓர் பாறையின் மீது  அமர்ந்து தவம் செய்தார். சம்மேத சிகரம் இவரது மோட்சத்தலம்.

    இவர் திருமணமானவர் என்றும் அரசராக இருந்து பின்னர் துறவரம் மேற்கொண்டவர் என்ற குறிப்பும் உண்டு.

    இவர் அகிம்சை என்ற கொல்லாமை பண்பினை மக்களுக்குப் போதித்தார். 
    மக்கள் மரக்கறி உணவையே உண்ண வேண்டும் என வறுபுறுத்தி இக்கொள்கையை பரப்பினார். துறவிகள் கொண்ட மடங்கள் உருவாகக் காரணமாக இவர் இருந்தார்.
    கி.மு 599ம் ஆண்டில் பிறந்தார்.
    கி.மு 527ல் தமது 72ம் வயதில் மோட்சம் எய்தினார்.

    இவரது சமகாலத்தில் புத்த சமயத்தை தோற்றுவித்த புத்தரும், ஆசிவகசமயத்தைத் தோற்றுவித்த மற்கலி என்பவரும் வாழ்ந்தனர். புத்தர் மகாவீரரை விட வயதில் இளையவர்.

    குறிப்புக்கள். திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு.

    சுபா
    http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்

    Suba.T.

    unread,
    Nov 2, 2015, 4:22:32 PM11/2/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    இன்று இந்த இழையில் சமண நெறியில் இருக்ககூடிய பிரிவுகளைப் பற்றி சில குறிப்புக்கள் வழங்குகின்றேன்.

    1. திகம்பரர்
    2. ஸ்வேதாம்பரர்
    3. ஸ்தானகவாசி 
    என 3 பிரிவுகள் இருப்பதாக அறிய முடிகின்றது.

    இன்றைய பதிவில் திகம்பரர்கள் பற்றி சில குறிப்புக்கள்

    திக்கு  என்றால் திசை
    அம்பரம் என்றால் ஆடை
    நான்கு திசைகளையும் தமது அடையாக இவர்கள் கருதுவதால் இச்சாதுக்கள் உடலில் ஆடைகளைத் தரிப்பதில்லை. எனவே ஆடைகளை விலக்கிய துறவிகளாக இருந்தனர்.

    இந்த திகம்பர சாதுக்கள் மயில் பீலி, நீர்கெண்டி அற நூல்களை  ஆகிய மூன்றினை மட்டுமே தமக்கென வைத்திருப்பர். இவர்கள் மலைப்பகுதியில் தங்கியிருப்பர். மக்களிடையே அறம்பரப்புவதிலும், கல்வி போதிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருப்பர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் தமிழ்ப்பேசும் சமணர்கள் அனைவரும் திகம்பரப் பிரிவைச் சார்ந்தோர். இவர்கள் நைனார் எனப்படுவர். 

    குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு

    சுபா

     

    Suba.T.

    unread,
    Nov 15, 2015, 7:56:40 AM11/15/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    இசக்கியம்மன், பொன்னியம்மன் பற்றிய சில குறிப்புக்கள்.
    நூல்: தெய்வம் என்பதோர்..
    ஆசிரியர்: தொ.பா
    பக்:22


    நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கப்பெறும் இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டட்டுப்போயிற்று. ஆனால், அம்பிகா யக்‌ஷி என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும், பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது. இதனைப் போலவே தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடப்பெறும் பொன்னியம்மனும் ஜ்வாலா மாலினி  என்ற சமண சமயப் பெண் தெய்வமே ஆகும். சமண மதம் வேரற்றுப் போனாலும் அம்மதம் உருவாக்கி வைத்திருந்த தாய்த்தெய்வங்களை வைதீகத்திற்கு அடிமைப்படாத எளிய மக்கள் -  குறிப்பாக பெண்கள் தங்களுடைய வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு அக்கோயில்களைப் பேணிக் காத்து வருகின்றனர்.

    Dhivakar

    unread,
    Nov 15, 2015, 8:07:49 AM11/15/15
    to மின்தமிழ்
    // இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டட்டுப்போயிற்று. ஆனால், அம்பிகா யக்‌ஷி என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும், பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது. இதனைப் போலவே தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடப்பெறும் பொன்னியம்மனும் ஜ்வாலா மாலினி  என்ற சமண சமயப் பெண் தெய்வமே ஆகும். சமண மதம் வேரற்றுப் போனாலும் அம்மதம் உருவாக்கி வைத்திருந்த தாய்த்தெய்வங்களை வைதீகத்திற்கு அடிமைப்படாத எளிய மக்கள் -  குறிப்பாக பெண்கள் தங்களுடைய வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு அக்கோயில்களைப் பேணிக் காத்து வருகின்றனர்.//

    இப்படியெல்லாம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகி விட்டது சுபா.. சமண மதம் பற்றி அறியாதவர்கள் இவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    முதலில் சமண மதத்தில் தெய்வ நம்பிக்கை என்ற ஒன்றே இல்லை. சமணர்களின் தெய்வக் கோட்பாடுகளை தெளிவாக பலர் விளக்கியுள்ளனர். முதலில் தெய்வமே இல்லை எனும்போது ஆண் தெய்வம் பெண் தெய்வம் எப்படி வரும் என்று தெரியவில்லை.

    கிராமத்துத் தெய்வங்களில் பல தெய்வங்களுக்கு நிஜக் கதை உள்ளது. பல நல்ல ஜீவன்கள் அவர்கள் மறைவுக்குப் பின் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும். இந்த நிலை இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கில் உள்ளன.

    அப்படித்தான் இசக்கி அம்மனையும் பொன்னி அம்மனையும் எடுத்துக் கொள்ளவேண்டும். மதச் சாயம் பூசுவதில் என்ன பயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

    அன்புடன்
    திவாகர்

    --

    Suba.T.

    unread,
    Nov 15, 2015, 8:19:44 AM11/15/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-11-15 14:07 GMT+01:00 Dhivakar <venkdh...@gmail.com>:
    // இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டட்டுப்போயிற்று. ஆனால், அம்பிகா யக்‌ஷி என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும், பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது. இதனைப் போலவே தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடப்பெறும் பொன்னியம்மனும் ஜ்வாலா மாலினி  என்ற சமண சமயப் பெண் தெய்வமே ஆகும். சமண மதம் வேரற்றுப் போனாலும் அம்மதம் உருவாக்கி வைத்திருந்த தாய்த்தெய்வங்களை வைதீகத்திற்கு அடிமைப்படாத எளிய மக்கள் -  குறிப்பாக பெண்கள் தங்களுடைய வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு அக்கோயில்களைப் பேணிக் காத்து வருகின்றனர்.//

    இப்படியெல்லாம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகி விட்டது சுபா.. சமண மதம் பற்றி அறியாதவர்கள் இவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    முதலில் சமண மதத்தில் தெய்வ நம்பிக்கை என்ற ஒன்றே இல்லை. சமணர்களின் தெய்வக் கோட்பாடுகளை தெளிவாக பலர் விளக்கியுள்ளனர். முதலில் தெய்வமே இல்லை எனும்போது ஆண் தெய்வம் பெண் தெய்வம் எப்படி வரும் என்று தெரியவில்லை.

    கிராமத்துத் தெய்வங்களில் பல தெய்வங்களுக்கு நிஜக் கதை உள்ளது. பல நல்ல ஜீவன்கள் அவர்கள் மறைவுக்குப் பின் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும். இந்த நிலை இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கில் உள்ளன.

    அப்படித்தான் இசக்கி அம்மனையும் பொன்னி அம்மனையும் எடுத்துக் கொள்ளவேண்டும். மதச் சாயம் பூசுவதில் என்ன பயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

    ​தாங்கள் தொ.பா வின் நூல்களையும் ஆய்வுகளையும் எழுத்துக்களையும்  வாசித்ததில்லையோ என  அய்யமுற வைக்கின்றது உங்கள் பதில்.

    சுபா

    Dhivakar

    unread,
    Nov 15, 2015, 9:11:32 AM11/15/15
    to மின்தமிழ்
    அடியேனும் சமணம் பற்றி மூன்றாண்டுகள் ஆய்வு செய்துள்ளேன் சுபா. பதினைந்து நாட்கள்  ச்ரவணபெலகுலாவில் இருந்துள்ளேன். அங்குள்ள  ஒரு சில சமண அடியார்களிடம் இப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளேன். சமணம் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் வேறு. நான் பொதுவான கருத்து ஒன்றைத்தான் ஐயமில்லாமல் கூறியுள்ளேன். 

    என் ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட புதினம்தான் விசித்திரசித்தன். முழுக்க முழுக்க சமணம் பற்றிய நூல் இது.

    எனக்கு தொ. பா பற்றித் தெரியாது. அவர் நூல்களை வாசித்ததில்லை.. நீங்கள் மேலே குறிப்பிட்ட அவரது குறிப்பினைக் கொண்டுதான் என்னால் பதில் சொல்ல இயலும் இல்லையா.. .

    அன்புடன்
    திவாகர்

    Suba.T.

    unread,
    Nov 15, 2015, 9:39:08 AM11/15/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-11-15 15:11 GMT+01:00 Dhivakar <venkdh...@gmail.com>:
    அடியேனும் சமணம் பற்றி மூன்றாண்டுகள் ஆய்வு செய்துள்ளேன் சுபா. பதினைந்து நாட்கள்  ச்ரவணபெலகுலாவில் இருந்துள்ளேன். அங்குள்ள  ஒரு சில சமண அடியார்களிடம் இப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளேன். சமணம் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் வேறு. நான் பொதுவான கருத்து ஒன்றைத்தான் ஐயமில்லாமல் கூறியுள்ளேன். 

    என் ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட புதினம்தான் விசித்திரசித்தன். முழுக்க முழுக்க சமணம் பற்றிய நூல் இது.

    எனக்கு தொ. பா பற்றித் தெரியாது. அவர் நூல்களை வாசித்ததில்லை.. நீங்கள் மேலே குறிப்பிட்ட அவரது குறிப்பினைக் கொண்டுதான் என்னால் பதில் சொல்ல இயலும் இல்லையா.. .

    அன்புடன்
    திவாகர்

    ​தொ.பாவின் தமிழக் நிலப்பரப்பின் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகள் மிகச் சிறந்தவை. மேலும் பல தொடர் ஆய்வுகளுக்கு ஆரம்பப்புள்ளியைக் கொடுப்பவை.
    சமணம் பெரிதா ஏனையவை பெரிதா என்றெல்லாம் நாம் நோக்காமல்  ​
     
    ​கால மாற்றத்தில் நிகழ்ந்த  விசயங்களை நாம் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாது ஆராய்ச்சி மனத்துடன் நோக்குவது ஆய்வுக்கு பயன் தரும் என்பது மட்டுமே என் எண்ணம்.
    ​தாங்கள் சீறிய ஆய்வை விரும்புபவர் என்பதால் மட்டுமே குறிப்பிடுகின்றேன்.

    சுபா

    ​ 

    Dhivakar

    unread,
    Nov 15, 2015, 10:51:22 AM11/15/15
    to மின்தமிழ்
     //
    ​கால மாற்றத்தில் நிகழ்ந்த  விசயங்களை நாம் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாது ஆராய்ச்சி மனத்துடன் நோக்குவது ஆய்வுக்கு பயன் தரும் என்பது மட்டுமே என் எண்ணம்.//


    சுபா,
    உணர்ச்சிகளின் அடிப்படை மேல் அமைக்கப்பட்ட சிலைகளும் சமாதிக்கோயில்களும், பெண் தெய்வக் கோயில்களும் தென்னிந்தியாவில் ஏராளம், ஏராளம்.  பானுகுமார் அவர்கள் கொடுத்த நிசடிகளைப் பற்றிய ஒரு குறிப்பு இன்று மின் தமிழில் பார்த்தேன்.நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நிசடிகள் எல்லாமே சமணத் துறவிகளின் சமாதிக் கோயில்கள்தான். அவர் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டு என குறிப்புக் கொடுக்கிறார். நான் இன்னமும் பழைய காலம் அதாவது 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே நிசடிகள் தென்னிந்தியாவில் ஏராளமாக இருந்தன என்பேன்.

    பெரியார் சிலைகளும், அண்ணா சிலைகளும் உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே.. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பெரியார் சிலை ஏதேனும் பூமிக்கடியில் தென்பட்டால் அன்றைய ஆராய்ச்சியாளர் பெரியாரை ஒருகாலத்தில் மக்கள் தெய்வமாக வணங்கினர் என்று ஆராய்ந்துதான் கூறுவார். 

    தெய்வம் என் வந்துவிட்டால் அங்கு ஆராய்ச்சிக்கு இடமே இல்லையம்மா. உணர்ச்சிகள்தான் இங்கு மையம்.கொண்டுள்ளன. தமிழ்நாடு உணர்ச்சிகளின் தலையாய களம்.  உங்களுக்குத் தெரியாததா?

    தொ. பாவின் குறிப்புகள் கொடுத்தமைக்கு நன்றி.. சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயம் படிக்கிறேன்.

    anbudan

    --

    Suba.T.

    unread,
    Nov 15, 2015, 11:05:00 AM11/15/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-11-15 16:51 GMT+01:00 Dhivakar <venkdh...@gmail.com>:
     //
    ​கால மாற்றத்தில் நிகழ்ந்த  விசயங்களை நாம் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாது ஆராய்ச்சி மனத்துடன் நோக்குவது ஆய்வுக்கு பயன் தரும் என்பது மட்டுமே என் எண்ணம்.//


    சுபா,
    உணர்ச்சிகளின் அடிப்படை மேல் அமைக்கப்பட்ட சிலைகளும் சமாதிக்கோயில்களும், பெண் தெய்வக் கோயில்களும் தென்னிந்தியாவில் ஏராளம், ஏராளம்.  பானுகுமார் அவர்கள் கொடுத்த நிசடிகளைப் பற்றிய ஒரு குறிப்பு இன்று மின் தமிழில் பார்த்தேன்.நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நிசடிகள் எல்லாமே சமணத் துறவிகளின் சமாதிக் கோயில்கள்தான். அவர் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டு என குறிப்புக் கொடுக்கிறார். நான் இன்னமும் பழைய காலம் அதாவது 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே நிசடிகள் தென்னிந்தியாவில் ஏராளமாக இருந்தன என்பேன்.

    பெரியார் சிலைகளும், அண்ணா சிலைகளும் உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே.. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பெரியார் சிலை ஏதேனும் பூமிக்கடியில் தென்பட்டால் அன்றைய ஆராய்ச்சியாளர் பெரியாரை ஒருகாலத்தில் மக்கள் தெய்வமாக வணங்கினர் என்று ஆராய்ந்துதான் கூறுவார். 

    தெய்வம் என் வந்துவிட்டால் அங்கு ஆராய்ச்சிக்கு இடமே இல்லையம்மா. உணர்ச்சிகள்தான் இங்கு மையம்.கொண்டுள்ளன. தமிழ்நாடு உணர்ச்சிகளின் தலையாய களம்.  உங்களுக்குத் தெரியாததா?

    தொ. பாவின் குறிப்புகள் கொடுத்தமைக்கு நன்றி.. சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயம் படிக்கிறேன்.

    anbudan

    ​தமிழகத்தின் இந்தப் பண்முகத்தனமை தான் என்னைக் கவர்வது.
    எத்தனை ​
     
    ​சமயங்கள்.. 
    சமய மறுப்புக் கொள்கைகள்..
    எத்தனை பண்பாட்டு விழுமியங்கள்..
    எத்தனை சடங்குகள்..
    எத்தனை சின்ன சின்ன செய்திகள்
    இவை கால ஒட்டத்தில் மறக்கப்படக்கூடாது. மறைக்கப்படக்கூடாது..  
    அவற்றின் இயல்பான தன்மைகள் பதியப்படவேண்டும். இயல்புத் தன்மை கால ஓட்டத்தில் மாற்றம் கொண்டிருந்தால் அதுவும் பதியப்பட வேண்டும்.
    நான் சமயம் கடந்த.. அந்தச் சமயம் தரும் பற்று கடந்த.. உணர்ச்சி கடந்த அளவில் தான் என் ஆய்வுகளையும்  பதிவுகளையும் செய்ய விரும்புகின்றேன். செய்கிறேன்.. இது தேவை எனக் கருதுகிறேன்.

    சுபா


    ​ 

    Dhivakar

    unread,
    Nov 15, 2015, 11:38:09 AM11/15/15
    to மின்தமிழ்
    வாருங்கள் சுபா, நிறைய பதியுங்கள். வாழ்த்துகள் கூட.

    இவை சம்பந்தப்பட்ட ‘குகைக் கலவரம்’ என்ற ஒன்றைப் பற்றி உங்களிடம் நேரில் பகிர்ந்து கொள்கிறேன். இவை உணர்ச்சிகளின் மாறுபட்ட கோணத்தைக் காட்டும் நிகழ்வுகள். அதிசயங்கள், ஆச்சரிய நிகழ்வுகள் எல்லாமே இந்தப் பிராந்தியங்களில் நடந்தவைதான். ஆராய்ச்சிக்கு மூலாதாரம் இல்லாதவை. உணர்ச்சிகளின் குவியலில் அரங்கேற்றப்பட்டவை. ஒரு சில ஆதாரங்களைக் காட்டுகிறேன்.

    இக்காலக் கண் கொண்டு அக்கால நிகழ்ச்சிகளை பார்ப்பவர் மிக அதிகம் என்பதால் நான் இவைகளையெல்லாம் பதிவதில்லை. கடந்த கால நிகழ்வுகள் கொடுமையாக இருக்கும் பட்சத்தில் இக்காலத்தில் அதுவும் மங்களகரமான சூழ்நிலையில் அக்கொடிய நிகழ்வுகளைப் பதிவதால்.நட்டம் நமக்கே.  அதுவும் ஒரு துன்பம் முடிந்து இன்பம் ஆரம்பிக்கும் சூழ்நிலையில் பழையதை சுட்டிக் காட்டிப் பேசினால் விளைவுகள் மாறிப்போய் விடுவது சகஜம்தானே..

    ஆகையினால் பதிவதற்காக அல்லாமல் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

    சர்வேஜனா சுகினோபவந்து !! 
    அன்புடன்
    திவாகர்

    --

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Nov 16, 2015, 1:39:29 AM11/16/15
    to mintamil, Subashini Tremmel
    வணக்கம்.
    2015-11-15 18:26 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
    நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கப்பெறும் இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டட்டுப்போயிற்று. ஆனால், அம்பிகா யக்‌ஷி என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும், பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது.
    சமணர்களின் அப்பிகா  யக்‌ஷி யின் படமும்,
    தாங்கள் இங்கே குறிப்பிடும் இசக்கியம்மனின் படமும் காணக் கிடைக்குமா?
    மேலும், 
    இசக்கியம்மன், பகவதியம்மன் இவர்களைப் பற்றி தொ.பா அவர்களின் கருத்துக்களைத் தாங்கள் பதிவு செய்துள்ளது போன்று,  இத் தெய்வங்களை வழிபடுவோரின் கருத்துக்களையும் அன்புடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  வழிபடுவோரின் கருத்தைத் தாங்கள் பதிவு செய்யாத காரணத்தினால் தங்களது கருத்து ஒருதலைப்பட்சமாக உள்ளது!

    முன்பு மக்களைத்தான் மதம்மாற்றம் செய்தார்கள், இப்போது மக்கள் கும்பிடும் சாமிகளையே மதம்மாற்றம் செய்கின்றனரோ? என்று ஐயம் ஏற்படுகிறது.

    அன்பன்
    கி.காளைராசன்







    --
    It is loading more messages.
    0 new messages