https://www.vikatan.com/news/tamilnadu/111735-periyar-is-the-man-of-solutions.html
24/12/2017
"கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்"
டிசம்பர் 24. இன்று, தந்தை பெரியாரின் 44 வது நினைவு நாள். தமிழ்நாட்டின் சிந்தனை முறையை மாற்றியதில் பெரியாருக்கு மிகப் பெரிய பங்குண்டு. சாதிய, பெண்ணிய, மத வாத கருத்துகளின் அடிப்படைகளை எதிர்த்து துணிவோடு கேள்விகளை எழுப்பியவர். அந்தப் போக்கு அவரைப் பின் தொடர்ந்தவர்களிடமும் பொதுச் சமூகத்திடமும் பரவியது. அதன் நீட்சியாகவே வட இந்தியாவை விட, தமிழகம் மாற்றுக் கருத்துகளை உரையாடும் தன்மையோடு விளங்குகிறது. சமூகத்தின்பால் அக்கறையோடு இயங்கி வருபவர்களில் சிலரிடம் தங்கள் வாழ்க்கையில் பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிக் கேட்டோம்.
கவிஞர், பாடலாசிரியர் உமாதேவி:
"என்னுடைய அண்ணன் பெரியாரைத் தொடர்ந்து வாசிப்பார். எனக்கு, பெரியார் பற்றிய அறிமுகத்தை அப்பாதான் தந்தார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதுதான் பெரியார் சிந்தனைகள் நூலைப் படித்தேன். எங்கள் அப்பா அம்மாவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம். ஆனால், அன்றாடப் பிழைப்புக்கு அல்லல்படுகையில் அரசியல் பெரிதாய் ஒட்டாமல் இருந்தது. பெரியார் சிந்தனைகளைப் படித்த பிறகு, 'பெண் ஏன் அடிமையானாள்' போன்ற சுயமரியாதை வெளியீடுகளை வாங்கிப் படிப்பேன். இவற்றின் தாக்கத்தால் பெரியாரை ஒரு புகைப்படமாக மட்டுமே கடந்து போக முடியவில்லை. அவரின் எழுத்துகள், சுயமரியாதைச் சிந்தனையின் புகட்டுவதாகவே எப்போதும் இருக்கும். அன்னை மீனாம்பாள் போற்றிய பெண்களுக்கான தலைவர் பெரியார். அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பேத்கரின் தலைவர். நவீன இந்தியாவின் உயிர்ப்புள்ள மாற்றுச் சிந்தனையாளர். ஜாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட நினைக்கிறவர்களுக்கு, பெரியாரே மிகச் சிறந்த வழிகாட்டி. பவுத்தத்தை அம்பேத்கர் சமயமாக அறிவித்தார். பெரியார் தன் பகுத்தறிவு பார்வையில் வாழும் வழிமுறையாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு லெஜெண்ட். அம்பேத்கர் ஒரு லெஜெண்ட். பெரியாரும் அம்பேத்கரும் மார்க்ஸூம் பேசியது மானுட விடுதலையை நோக்கியது. அதை எடுத்துக் கொண்டே நாம் ஒட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தலைவர்களின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்காமல், புரொஃபைல் படங்களிலும், சட்டைகளிலும், பேனர்களிலும் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொள்வதைப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது அவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதே!
சமூகச் செயற்பாட்டாளர் உடுமலை கௌசல்யா:
"பெரியார், என்னைச் சாதி ஒழிப்புக்காரியாக வார்த்தெடுத்த தந்தை அவர். இந்த உணர்வும் சேர்ந்துதான் நான் தந்தை பெரியார் என அழைக்கிறேன். தந்தையாக மட்டுமில்லை எப்போதும் உடன் பயணிக்கும் தோழராகவும் அவரே உள்ளார். சாதி ஒழிப்புக்கு நேர்மையாகப் பங்களிக்க வேண்டுமானால் சமூகம் பெண்ணுக்கென வைத்துள்ள வரையறைகளை மீறித்தான் ஆக வேண்டும். பெரியாரைச் செவிவழியாகவும், நூல்கள் வழியாகவும் உள்வாங்கியபோது விடுதலைஉணர்வு என்னை ஆட்கொண்டது. இச்சமுகம் பெண்களுக்கென்று பண்பாட்டுச்சிறைகள் வைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் தயக்கம் இல்லாமல் உடைத்து வெளிவர வைத்தது என் தோழர் பெரியார்தான். பெரியாரிடம் ஒருமுறை கூட ஆணாதிக்கத்தனம் வெளிப்பட்டது இல்லை. இப்போதுள்ள ஆண்கள் கூடத் தயங்கும் விஷயங்களை, எந்தத் தயக்கமுமின்றி அன்றே பேசியிருக்கிறார். பெண்களை கிராப் வெட்டிக்கொள்ளுங்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் தேர்ச்சி பெறுங்கள், குழந்தை பெற்றுத்தரும் கருவிகள் அல்ல, காதலின் பேராலும் சிறைப்படக் கூடாது, காதல் முறிந்த பிறகு, தொடரும் இல்லறம் ஆணாதிக்கம் என்று எந்தக் கட்டுகளுமற்ற சிந்தனைச் சிறகைப் பெண்களுக்குப் பொருத்தியவர். நான் ஒரு அடுப்பங்கரைப் பெண்ணாக, குழந்தைப் பெற்று தரும் கருவியாக, அலங்காரத்திற்குரிய போகப் பொருளாக இருந்து கொண்டே சாதி ஒழிப்பிற்குப் பங்களிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி என்னைச் சிந்திக்கச் செய்தவர். விடுதலைப் பெண்ணாக மாறி சாதியத்திற்கு எதிராக என்னை ஆயுதமாக்கியவர். யாரையும் வெறுக்கக் கூடாது, அனைவரையும் நேசிக்க வேண்டும் என்ற மனிதநேயம் சொல்லி கொடுத்தவர்.பெண்கள் பொதுவாழ்வுக்கு வெளிவர முடிகிறது என்றால் முதன்மை காரணம் இவர்தான் என்பேன்.
சாதி ஒழிப்புக்கு மட்டுமல்ல பெண் விடுதலையின் அடையாளமும் இந்தக் கிழவன்தான். அவரைச் சுமந்து பழகிய பிறகே கம்பீரமானவளாகவும் வலிமையானவளாகவும் உணர்கிறேன். அவரின் நேர்மையும் தன்னிழப்பையும் உள்வாங்கிக் கொண்டேன். அந்தத் தன்னிழப்போடு சாதி ஒழிப்பு, பெண் விடுதலைக்கு அவர் காட்டும் அரசியலைத் திறந்த மனதோடும் நேர்மையோடும் கற்கிறேன். அந்தப் பயணம் விடுதலை அரசியலுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் என்றால் அதைத் தயக்கமின்றி முன்னெடுப்பேன். பெரியாரின் அந்த அப்பழுக்கற்ற நேர்மையை இழந்தால் அது பெரியாருக்குப் பெருமை சேர்க்காது. நான் சமரசமில்லாமல் நேர்மையோடு லட்சியப் பயணம் மேற்கொள்வதன் மூலம் பெரியாருக்குப் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது."
கவிஞர் மாலதி மைத்ரி:
"நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோதுதான் 'பெண் ஏன் அடிமையானாள்' புத்தகத்தைப் படித்தேன். அந்தச் சிறிய தொகுப்புதான் என் வாழ்க்கையையே மாற்றியது. அதற்கு முன்பே 12 வயதிலேயே பெண்கள் எப்படி அடிமையாக நடத்தப்படுகிறார்கள், மதம், கடவுள் ஆகியவை எப்படிச் சமூகத்திலும், ஆண் பெண்ணிலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது குறித்த கேள்விகள் எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே வரும். ஆனால், அவற்றிற்கான விடை குடும்பம், சமூகத்தால் தரப்படுவதில்லை. ஏன் அப்படி நடத்துகிறீர்கள் என்பதற்கு, 'பெண் என்றால் அப்படிதான் இருக்க வேண்டும்' என்ற பதில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கான பதில் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தில் இருந்தது. அதைப் படிக்கும்போது என்னைப் போலவே ஒருவர் சிந்திக்கிறாரே என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. அந்தப் புத்தகம் ஒரு மாரல் சப்போர்ட்டாக இருந்தது. நான் சிந்திப்பது, நினைப்பது இந்த உலகத்தைப் பார்ப்பது சரியானதுதான் என்கிற தன்னம்பிக்கையைக் கொடுத்தது பெரியார். வெளியில் பேசுவது, இந்தச் சமூகம் பெண்ணுக்காக உருவாக்கி வைத்திருப்பது எல்லாம் பொய் இதை நம்பக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன் பின்புதான் நான் என்ன நினைக்கிறேனோ, அதுபடி தான் நடக்க வேண்டும் என்கிற உறுதிகொண்டேன். பெரியார் பேசியவற்றில் விதவை மறுமனமும், திருமண விடுதலையும் கூட இந்தச் சமூகத்தில் இன்னும் இயல்பாகவில்லை. பெரியார் இந்த மொத்த சிஸ்டமும் மாறும் வரை அவசியம் தேவை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி: https://muthukumarann.wordpress.com/2009/08/29/பெண்களை-அடிமைகளாக்க/பெண்களை அடிமைகளாக்க..
பெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்
மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.
ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.
பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.
கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக
உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.
அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை
///நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை////இக்கருத்துக்களைப் பாரதியார் சொல்லியிருக்கிறார்.கற்பு நிலை என்று சொல்ல வந்தால் - இருகட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்.பெரியாரின் திராவிட கழகத்தார் பலர் இரு மனைவியர், மூவர், மூவருக்கும் மேலாய்க் கூட வைத்திருந்தனர்.ஆண்கள் கற்பு நெறி பற்றித் தந்தை பெரியார் எங்காவது சொல்லியிருக்கிறாரா ??? அவர் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர். 75 வயதில் 25 வயது பணிப்பெண்ணோடு உறவு [திருமணத்துக்கு முன்பு] கொண்டவர்.
நன்றி: சிறகு http://siragu.com/நவம்பர்-26/நவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள்!!. ஆம் அன்று தான் தந்தை பெரியார் அவர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அந்தப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டர்கள் 10000 பேர் பெருந்திரளாக அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர். தமிழக காவல்துறை செய்வதறியாது 3000 பேரை கைது செய்தனர். அதில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவர்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஒரு ஊரில் ஒரு இடத்தில் என்ற அளவில் நடைபெறவில்லை.
‘விடுதலை’ நாளேட்டில் வந்த தகவல்படி, சென்னையில் – 35 இடங்கள், வடார்க்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென்னார்க்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.
அரசியல் சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று தமிழ்நாட்டில் பெரியார் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறையில் மிகக் கொடிய அடக்குமுறை அவர்கள் மீது கையாளப்பட்ட போதும் அவர்கள் யாரும் பிணையில் வரவில்லை, எதிர்வழக்காடவில்லை. 3 மாதங்களிலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நம் தோழர்களுக்கு வழங்கப்பட்டது!!குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 16 வயதே நிரம்பிய திருச்சி வாளாடியைச் சார்ந்த சிறுவன் பெரியசாமி, பெரியார் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றுவரும் கருஞ்சட்டைத் தொண்டன் சட்டத்தை எரித்தான். நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு விதித்த தண்டனை இரண்டு ஆண்டுகள். தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான். ஏழைத் தாய்க்கு ஒரே மகன், பொருள் வசதி இல்லாமையால் மகனை ஒருமுறைகூட சென்று அவரது தாயால் பார்க்க முடியவில்லை.
அப்போது தமிழக ஆளுநராக இருந்த ஆளுநர் விஷ்ணுராம் மேதி, சிறையைப் பார்வையிட வந்தவர், சிறுவனின் போராட்டம் பற்றி அறிந்து வியந்து, மொழி பெயர்ப்பாளர் வழியாகக் கேட்டார். “உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன், இனிமேலாவது இதேபோல் சட்டத்தை எரிக்காமல் இருப்பாயா?”
சிறுவன் கூறினான்:
“என் தலைவர் பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்தபோது நான் மட்டும் தான் சட்டத்தை எரித்தேன், வெளியே அனுப்பினால் என் தோழர்களைக் கூட்டி மீண்டும் எரிப்பேன்.” என்றான்.ஆளுநர், “கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறி நகர்ந்தார்.
ஆனால் சிறையின் மோசமான உணவு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அந்தக் குழந்தை சிறையினுள் மாண்டான். மோசமான உடல் நிலை இருந்தபோதும் உறுதியாகப் பிணைக்கோர மறுத்து சிறையிலேயே மாண்டான். சிறையில் மட்டுமல்லாமல் வெளிவந்ததும் 18 தோழர்கள் உடல் நிலைக் குறைவு காரணமாக மாண்டார்கள்.
அந்தக் காலத்து சிறை என்பது கொடுமையானது. கருஞ்சட்டைத் தோழர்கள் அனைவரும், மோசமான குற்றங்களை இழைத்த கிரிமினல்கள் போலவே நடத்தப்பட்டனர். ஆனால் துவண்டுவிடாது போராடினர்!!.
இவ்வாறு சுயமரியாதை தோழர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈன்று இந்தப்போரட்டத்தை முன்னெடுத்தபோதும், இன்றும் சாதியத்தின் கோர முகங்கள் தமிழ்நாட்டில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றது, மக்களின் ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. அந்த நிலையை மாற்றிட சாதி ஒழிப்பு வரலாற்றை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியத் தேவை உள்ளது.
///நவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள்!!. ஆம் அன்று தான் தந்தை பெரியார் அவர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.///பெரியார் சாதியைப் பாதுகாக்கும் எந்த அரசியல் சட்டப் பிரிவுகளை எதிர்த்தார் ?
CHAPTER IX:LAST DAYS OF E.V. RAMASAMYpages 228-229Agitation against castes on name boards:In those days, the board “Brahmins Hotel” was displayed, following the lead given by the Brahmins, to indicate that only vegetarian food was served there. Dravidar Kazhagam objected to the Varna dharma connotation and started an agitation symbolically in front of a hotel in Madras (Chennai) on 5th May 1957. Batches of volunteers agitated daily and 1010 of them courted arrest till 22nd March 1958 when it culminated in success.[15]Burning the Provisions of Indian Constitution Supporting Casteism:A Conference was held at Thanjavur on 3rd November 1957 where thousands of black shirt volunteers participated. It was also decided in that conference to burn the copies of certain containing certain Articles of of the constitution as a mark of protest since they upheld the caste divisions of Varnashrama Dharma. [16]The Articles 13, 25, 372 of the Constitution of India that helped to safeguard Varna-Jaathi (Caste system) was burnt by about 10,000 volunteers of Dravidar Kazhagam on 26th November 1957. In this historic agitation, about 3000 of them were sentenced to undergo various terms of rigorous imprisonment, from two months to three years. [17]On December 14, 1957, Periyar was sentenced to undergo six months imprisonment in a case based on fabricated police diaries where in he was accused of asking his followers to use force against Brahmins, an accusation that Periyar naturally denied.[18]Two of the volunteers, Ramasamy and Vellaichamy were imprisoned for burning the provisions of the Constitution supporting casteism, died in jail. Their bodies were obtained with great effort by Maniammai from the unwilling and obstructing prison authorities and burried with due honours, after being taken in an emotionally charged procession through the main streets of Tiruchirappalli. Due to the rigours they underwent in prison, about 15 people died soon after they were released.In June 1960, Periyar asked people to burn the map of India as a protest against the Central Government using the Union of India for upholding and safeguarding caste system. About 4000 people were arrested for taking part in this agitation.[19]______________________________________________________________________________15) Gopalakrishnan, M.D., op.cit., p.40.16) Nambi Arrooran, K., Tamil Renaissance and Dravidian Nationalism, Madurai, 1980, p.170.17) Letter.No. 239 / 57 dt: 22.11.1957, File Pupblic General (B), Chennai, Tamilnadu Archives18)G.O.No. 350 , Public Genaral (B) dt 07.02.1958 Confidential - 9089, Chennai, Tamilnadu Archives & Fort Night Report for the Second half of May 1938, Chennai, Tamilnadu Archives.19) Iqbal Narain, State Politics in India, New Delhi, p.62.
3. பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.
* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.
Posted Date : 07/03/2016பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?
மார்ச் 8... உலக மகளிர் தினம். பெண்களுக்கான உரிமைகள் குறித்த சிந்தனைகளையும், அதற்காகச் செயலாற்றியவர்களையும் நினைவுகூரும் நாள் இன்று. பெண்ணியம் என்றாலே ஏதோ அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம் என்கிற மனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலை குறித்த வீரியமிக்க சிந்தனைகளை முன்வைத்த மரபு நமக்குண்டு.
காங்கிரஸில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தார். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இவை இரண்டும்தான் பெரியாரின் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடித்தளங்கள் என்றே சொல்லலாம். ஆனால், இதை அவர் மட்டுமே சாதிக்கவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிய நூற்றுக்கணக்கான பெண்களும், பெண்ணியச் சிந்தனையாளர்களும் காலத்தைத் தாண்டிச் சிந்தித்தார்கள். வெறுமனே பெண்களுக்கான உரிமைகளைப் பேசுவது என்பதைத் தாண்டி சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுதியும் பேசியும் வந்தனர். மேலும் உலகளாவிய சிந்தனைகளான மார்க்சியம், தாராளவாதம் போன்ற சிந்தனைப்போக்குகளோடு இந்தியப் பெண்களின் பிரச்னைகளை அணுகவும் முற்பட்டனர்.
காலத்தால் மறந்துபோன நம் முன்னோடிப் பெண்ணியச் சிந்தனையாளர்களின் செயல்பாடுகளில் சில துளிகள் இவை....
* பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.
* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.
* மூன்றாவது தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 50 வயதான ஒரு ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரது கணவர் கட்டாய உறவு கொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டை விட்டு வெளியேறி பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.* சுயமரியாதை இயக்க ஆதரவாளரான டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியை ஆதரித்து தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்குத் துணை நின்ற சுயமரியாதை இயக்கம்தான், ''பெண்களுக்குச் சமயக்கல்வி அளிக்கப்படவேண்டும்” என்று அவர் பேசியபோது எதிர்த்தும் வந்தது. இதை எதிர்த்து குடியரசுவில் எழுதியவரும் தி.சு.மாசிலாமணி என்ற பெண்தான்.
* ''பல மனைவிகளுடைய கடவுள்களை விமர்சிக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு பெண்ணை மணந்துகொள்வதை ஏற்றுக்கொள்கிறதா?”” என்று ஒரு கூட்டத்தில் பெரியாரிடம் கேட்கப்பட்டது. “கடவுள்களை விமர்சிப்பதாலேயே அவர்களின் எல்லாச் செயல்களையும் கண்டிப்பதாக ஆகாது. கடவுள் மூச்சுவிடுவதாகப் புராணத்தில் இருப்பதால் நாம் மூச்சுவிடுவதை எதிர்க்கிறோமா என்ன? அதனால், பலதார மணத்தை நாங்கள் ஏற்கிறோம். இதே உரிமை பெண்களுக்கும் இருக்கவேண்டும்” என்றும் பெரியார் பதில் அளித்தார்.
* சுயமரியாதை இயக்க முன்னணி வீரர் அ.பொன்னம்பலத்தாரின் மனைவி சுலோசனா, ஏற்கனவே திருமணமானவர். ஆனால், கணவரோடு வாழ விருப்பமில்லாததால் அவருடைய சம்மதத்துடன் பொன்னம்பலத்தாரைத் திருமணம் செய்துகொண்டார்.
* பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனார் சிவகாமி என்ற விதவையைத் திருமணம் செய்துகொண்டார்.
* 1935-ல் மாநில சுயமரியாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார்.
* 1930-களில் கருத்தடை பற்றிய கட்டுரைகளைக் ‘குடி அரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. அப்போது அரசாங்கம்கூட குடும்பக்கட்டுப்பாடு குறித்த பிரசாரங்களை முன்னெடுக்காத காலகட்டம் அது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
* காத்ரின் மேயோ எழுதிய ‘பாரத மாதா’ என்ற புத்தகம் இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து அம்பலப்படுத்தியதால் அது இந்தியர்களை இழிவுபடுத்துவதாகத் தேசியவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அதை மொழிபெயர்த்து குடி அரசு தொடராக வெளியிட்டது.* சோவியத் ரஷ்யாவில் பெண்களின் நிலை குறித்த கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. துருக்கிப் பெண்கள் விடுதலை குறித்து ஹாவிட் ஹானும் என்பவர் ஆற்றிய உரை வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக நவீனச் சிந்தனைகளும், பெண்ணியச் சிந்தனைகளும் அயல்நாடுகளில் பேசப்படும்போது சாத்தியப்பட்டவரை அதை மொழிபெயர்த்து, ‘குடி அரசு’ இதழ் வெளியிட்டு விவாதித்தது.
* ‘ஆண் - பெண் வித்தியாசம்’ குறித்து 1935-ல் நாகை முருகேசன் என்பவர் எழுதிய கட்டுரையொன்றில் ஏங்கெல்ஸ் தொடங்கி பாகோபென், ஹூம்போல்ட் ஆகிய மானுடவியலாளர்களின் ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.
* சுயமரியாதை இயக்கத்துக்காரர்களால் பல பத்திரிகைகள் நடத்தப்பட்டன. அதில் ’அறிவுக்கொடி’ என்ற இதழை நடத்தியவர் எஸ்.சி.சிவகாமி அம்மாள் என்ற பெண்.
* 05.05.1935-ல் ‘பெண்கள் நிலையமும் பிள்ளை வளர்ப்பு விடுதியும்’ என்ற கட்டுரையை எழுதிய மயில்வாகனன், குழந்தை வளர்ப்பில் இருந்து பெண்களை விடுவித்து, அதற்காகத் தனியான விடுதிகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.
* பெண்ணுரிமை தொடர்பாக ‘குடி அரசு’ இதழில் வெளியான சில கட்டுரைகள் : தேவதாசிகளுக்கு ஒரு வேண்டுகோள், ரஷ்யாவில் ஆண்-பெண் ஒழுக்கம், ஆண்மை அழியவேண்டும், சமதர்மத்துக்குப் பெண்கள் விடுதலை அவசியம், *முஸ்லிம் பெண்களும் அடிமைகளேதான், பர்தாவின் கொடுமை, கத்தோலிக்க மதமும் பெண்களும், பெண்கள் நாடு - ஆண்களுக்கு வேலையில்லை, சோசலிசமும் பெண்களும், சோசலிச உலகில் பெண்கள், பெண்களும் தொழிலாளிகளே, பெண்களும் சங்கமும்.
* சுயமரியாதை இயக்க மாநாடுகளோடு தனியாகப் பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டன. ஆனாலும், பெண்களுக்கென்று தனித்துவமான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதத்தை நீலாவதி அம்மையாரும், ராகவனும் தொடங்கி வைத்தார்கள். அதேபோல் பெண்கள் நிலையம் ஒன்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
* சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிவந்த, தொடர்ச்சியாக ‘குடி அரசு’ இதழில் எழுதிவந்த பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: தி.சு.மாசிலாமணி, பினாங்கு ஜானகி, நீலாவதி அம்மையார், ஜெயசேகரி, லட்சுமி, கிரிஜாதேவி, அன்னபூரணி, சுப விசாலாட்சி, சிதம்பரம் அம்மாள், பண்டிதை ரங்கநாயகி, வள்ளியம்மாள், குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ், தருமு அம்மாள், நீலாம்பிகை, கே.ஏ.ஜானகி அம்மாள்.
* இசை வேளாளர் சாதியில் பிறந்த குஞ்சிதம் அம்மையார் இந்தியாவின் முதல் பெண் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். முதல் பார்ப்பனரல்லாத இளைஞர் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசியவர். ''கோயில்களை மருத்துவமனைகளாக மாற்றவேண்டும்” என்றும், ''கோயில் வருமானத்தைக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு முழுமையான இலவசக் கல்வி அளிக்கவேண்டும்” என்றும் 30-களில் பேசினார். முதலியார் சாதியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க வீரர் குருசாமி ஒரு தலித் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருந்தார். பெரியாரும், மற்ற தோழர்களும் அவருக்காகப் பெண் பார்த்து குருசாமியைச் சமாதானம் செய்து குஞ்சிதம் அம்மையாருக்குத் திருமணம் செய்கிறார்கள்.
பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் குருசாமி - குஞ்சிதம் அம்மையாருடைய திருமணம். குருசாமி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை. திருமணத்தன்று குருசாமியின் தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று தந்தி வருகிறது. பெரியாரும் மற்றவர்களும் பதறிப் போகிறார்கள். “எங்கள் குடும்பத்திலேயே துணிச்சலான பெண் அவள்தான். இது திருமணத்தை நிறுத்துவதற்கான சதி” என்கிறார் குருசாமி. திருமணம் முடிந்தபிறகு அவரது அனுமானம் உண்மைதான் என்று தெரியவருகிறது. இருவரின் திருமணத்தின்போது குஞ்சிதம் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அதை மொழிபெயர்ப்பவர் ''இதுவரை யார் யார் உரைகளையோ மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு பெண் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்ப்பது பெருமையாக இருக்கிறது” என்கிறார். திருமணத்துக்குப் பிறகு தாலி அணியாமலும், பொட்டு வைக்காமலும் இருந்ததால் குஞ்சிதம் அம்மையாருக்குப் பள்ளியில் ஆசிரியர் பணிபுரியும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. பாரதிதாசன் கவிதைகளை முதன்முதலில் பதிப்பித்த பதிப்பாசிரியர் குஞ்சிதம் அம்மையார்தான்.
இவையெல்லாம் வெறுமனே 1928-35 காலகட்டத்து நிலை. இந்த சிறியளவிலான குறிப்புகளை வாசித்தாலே கருத்தியல் ரீதியாக சுயமரியாதை இயக்கம் எத்தகைய செயல்பாடுகளைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். மேலும் ஒருபுறம் சனாதனம் உச்சத்திலும், இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு உச்சத்திலும் இருந்த காலத்தில் இத்தனை பெண்கள் கற்பு, குடும்பம், குழந்தைப்பேறு ஆகியவை குறித்து சுதந்திரமாகவும் சுயசிந்தனையோடும் விவாதித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமானது!
- ரீ.சிவக்குமார்
குறிப்பு: * # பெரியாரும் இந்து அல்லாத மதங்களும்
//////////////////1. 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலை குறித்த வீரியமிக்க சிந்தனைகளை முன்வைத்த மரபு நமக்குண்டு.2. காங்கிரஸில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தார். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இவை இரண்டும்தான் பெரியாரின் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடித்தளங்கள் என்றே சொல்லலாம். ஆனால், இதை அவர் மட்டுமே சாதிக்கவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிய நூற்றுக்கணக்கான பெண்களும், பெண்ணியச் சிந்தனையாளர்களும் காலத்தைத் தாண்டிச் சிந்தித்தார்கள். வெறுமனே பெண்களுக்கான உரிமைகளைப் பேசுவது என்பதைத் தாண்டி சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுதியும் பேசியும் வந்தனர். மேலும் உலகளாவிய சிந்தனைகளான மார்க்சியம், தாராளவாதம் போன்ற சிந்தனைப்போக்குகளோடு இந்தியப் பெண்களின் பிரச்னைகளை அணுகவும் முற்பட்டனர்.3. பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.
* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.
4. பல மனைவிகளுடைய கடவுள்களை விமர்சிக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு பெண்ணை மணந்துகொள்வதை ஏற்றுக்கொள்கிறதா?”” என்று ஒரு கூட்டத்தில் பெரியாரிடம் கேட்கப்பட்டது. “கடவுள்களை விமர்சிப்பதாலேயே அவர்களின் எல்லாச் செயல்களையும் கண்டிப்பதாக ஆகாது. கடவுள் மூச்சுவிடுவதாகப் புராணத்தில் இருப்பதால் நாம் மூச்சுவிடுவதை எதிர்க்கிறோமா என்ன? அதனால், பலதார மணத்தை நாங்கள் ஏற்கிறோம். இதே உரிமை பெண்களுக்கும் இருக்கவேண்டும்” என்றும் பெரியார் பதில் அளித்தார்.5. * 1935-ல் மாநில சுயமரியாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார்.
6. * 1930-களில் கருத்தடை பற்றிய கட்டுரைகளைக் ‘குடி அரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. அப்போது அரசாங்கம்கூட குடும்பக்கட்டுப்பாடு குறித்த பிரசாரங்களை முன்னெடுக்காத காலகட்டம் அது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.7. *முஸ்லிம் பெண்களும் அடிமைகளேதான், பர்தாவின் கொடுமை, கத்தோலிக்க மதமும் பெண்களும்,8. ''கோயில்களை மருத்துவமனைகளாக மாற்றவேண்டும்” என்றும், ''கோயில் வருமானத்தைக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு முழுமையான இலவசக் கல்வி அளிக்கவேண்டும்” என்றும் 30-களில் பேசினார். முதலியார் சாதியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க வீரர் குருசாமி ஒரு தலித் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருந்தார். பெரியாரும், மற்ற தோழர்களும் அவருக்காகப் பெண் பார்த்து குருசாமியைச் சமாதானம் செய்து குஞ்சிதம் அம்மையாருக்குத் திருமணம் செய்கிறார்கள்9. 1928-35 காலகட்டத்து நிலை. இந்த சிறியளவிலான குறிப்புகளை வாசித்தாலே கருத்தியல் ரீதியாக சுயமரியாதை இயக்கம் எத்தகைய செயல்பாடுகளைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை அறியலாம் ///////////////////////////////////பெரியார் காலத்தில் தொடங்கிய இந்த சமூக சீர்திருத்த நிகழ்ச்சிகளை 21- ஆம் ஆண்டில் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றனவா ???
On Friday, February 23, 2018 at 9:16:35 PM UTC-8, jayabarathans wrote://////////////////1. 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலை குறித்த வீரியமிக்க சிந்தனைகளை முன்வைத்த மரபு நமக்குண்டு.2. காங்கிரஸில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தார். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இவை இரண்டும்தான் பெரியாரின் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடித்தளங்கள் என்றே சொல்லலாம். ஆனால், இதை அவர் மட்டுமே சாதிக்கவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிய நூற்றுக்கணக்கான பெண்களும், பெண்ணியச் சிந்தனையாளர்களும் காலத்தைத் தாண்டிச் சிந்தித்தார்கள். வெறுமனே பெண்களுக்கான உரிமைகளைப் பேசுவது என்பதைத் தாண்டி சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுதியும் பேசியும் வந்தனர். மேலும் உலகளாவிய சிந்தனைகளான மார்க்சியம், தாராளவாதம் போன்ற சிந்தனைப்போக்குகளோடு இந்தியப் பெண்களின் பிரச்னைகளை அணுகவும் முற்பட்டனர்.3. பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.
* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.
4. பல மனைவிகளுடைய கடவுள்களை விமர்சிக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு பெண்ணை மணந்துகொள்வதை ஏற்றுக்கொள்கிறதா?”” என்று ஒரு கூட்டத்தில் பெரியாரிடம் கேட்கப்பட்டது. “கடவுள்களை விமர்சிப்பதாலேயே அவர்களின் எல்லாச் செயல்களையும் கண்டிப்பதாக ஆகாது. கடவுள் மூச்சுவிடுவதாகப் புராணத்தில் இருப்பதால் நாம் மூச்சுவிடுவதை எதிர்க்கிறோமா என்ன? அதனால், பலதார மணத்தை நாங்கள் ஏற்கிறோம். இதே உரிமை பெண்களுக்கும் இருக்கவேண்டும்” என்றும் பெரியார் பதில் அளித்தார்.5. * 1935-ல் மாநில சுயமரியாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார்.
6. * 1930-களில் கருத்தடை பற்றிய கட்டுரைகளைக் ‘குடி அரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. அப்போது அரசாங்கம்கூட குடும்பக்கட்டுப்பாடு குறித்த பிரசாரங்களை முன்னெடுக்காத காலகட்டம் அது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.7. *முஸ்லிம் பெண்களும் அடிமைகளேதான், பர்தாவின் கொடுமை, கத்தோலிக்க மதமும் பெண்களும்,8. ''கோயில்களை மருத்துவமனைகளாக மாற்றவேண்டும்” என்றும், ''கோயில் வருமானத்தைக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு முழுமையான இலவசக் கல்வி அளிக்கவேண்டும்” என்றும் 30-களில் பேசினார். முதலியார் சாதியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க வீரர் குருசாமி ஒரு தலித் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருந்தார். பெரியாரும், மற்ற தோழர்களும் அவருக்காகப் பெண் பார்த்து குருசாமியைச் சமாதானம் செய்து குஞ்சிதம் அம்மையாருக்குத் திருமணம் செய்கிறார்கள்9. 1928-35 காலகட்டத்து நிலை. இந்த சிறியளவிலான குறிப்புகளை வாசித்தாலே கருத்தியல் ரீதியாக சுயமரியாதை இயக்கம் எத்தகைய செயல்பாடுகளைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை அறியலாம் ///////////////////////////////////பெரியார் காலத்தில் தொடங்கிய இந்த சமூக சீர்திருத்த நிகழ்ச்சிகளை 21- ஆம் ஆண்டில் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றனவா ???காலத்திற்கேற்ற தேவைகள் என்றுமே செய்யப்படும்
///பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.////இளமை மாது மணியம்மை விதவைத் திருமணம் பெரியார் மரணத்துக்குப் பிறகு ஏன் நிகழவில்லை என்று ஒரு வினா எழுகிறது.
On Saturday, February 24, 2018 at 8:35:22 AM UTC-8, jayabarathans wrote:///பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.////இளமை மாது மணியம்மை விதவைத் திருமணம் பெரியார் மரணத்துக்குப் பிறகு ஏன் நிகழவில்லை என்று ஒரு வினா எழுகிறது.பெண்களின் வாழ்வு குறித்த முடிவுகளை அவர்களின் கையிலேயே விட்டு விடுவதும், அந்த உரிமையை மதிப்பதும் பெண்ணியம்.
2018-02-25 0:04 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, February 24, 2018 at 8:35:22 AM UTC-8, jayabarathans wrote:///பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.////இளமை மாது மணியம்மை விதவைத் திருமணம் பெரியார் மரணத்துக்குப் பிறகு ஏன் நிகழவில்லை என்று ஒரு வினா எழுகிறது.பெண்களின் வாழ்வு குறித்த முடிவுகளை அவர்களின் கையிலேயே விட்டு விடுவதும், அந்த உரிமையை மதிப்பதும் பெண்ணியம்.பெரியார் + மணியம்மை திருமணம் என்பது பெரியார் மட்டும் எடுத்த முடிவுதானே !
தந்தை பெரியார் வல்லமை படைத்த ஒரு பகுத்தறிவுவாதி. ராஜாஜி கூறியோ,
///ராஜாஜி வேண்டாம் இந்தத் திருமணம் என்று தான் பெரியாருக்கு ஆலோசனை கூறியதாக நான் அறிவேன் ///அது உண்மை. அறிஞர் அண்ணாவும் வேண்டாம் என்றுதான் தடுத்துள்ளார். பெரியார் - மணியம்மை திருமண முடிவுக்கு அவரே காரணக் கர்த்தா.
பிறருக்கு உபதேசம் செய்த பெரியார் தானே எதிர்த்திசையில் போகலாமா ? பொதுமேடையில் அவர் பேசும் போது மற்றவர் தன்னை முதலில் எடைபோடுவார் என்று பெரியாருக்குத் தெரியாதா ?
///பெரியாரும் மணியம்மையும் முடிவெடுத்து உடன்பட்டு சட்டப்படி திருமணம் செய்து கொள்வதில் என்ன குற்றம் இருக்க முடியும்? அதில் அடுத்தவர் ஏன் தலையிட வேண்டும்?///தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க வேண்டியது கிழவர் - குமரி ஒவ்வாத் திருமணம். இந்த உடன்பாட்டுத் திருமண ஒப்பந்தம் சட்டப்படி நேர்மை என்றாலும், சமூகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி, இளம் பெண்டிர் வாழ்க்கை பாழாகும். இந்தத் திருமணத்தை எப்படிப் பெண்ணிய வாதிகள் ஏற்கிறார் என்பது வியப்பாக உள்ளது.
பகுத்தறிவுப் பெரியார் இதைச் செய்து, கட்சி பிளந்து, பிணக்கம் பெருகி, வரலாற்றை மாற்றிய இத்திருமணம் மிகவும் இகழப்படுகிறது.
On Monday, February 26, 2018 at 8:57:44 PM UTC-8, jayabarathans wrote:///பெரியாரும் மணியம்மையும் முடிவெடுத்து உடன்பட்டு சட்டப்படி திருமணம் செய்து கொள்வதில் என்ன குற்றம் இருக்க முடியும்? அதில் அடுத்தவர் ஏன் தலையிட வேண்டும்?///தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க வேண்டியது கிழவர் - குமரி ஒவ்வாத் திருமணம். இந்த உடன்பாட்டுத் திருமண ஒப்பந்தம் சட்டப்படி நேர்மை என்றாலும், சமூகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி, இளம் பெண்டிர் வாழ்க்கை பாழாகும். இந்தத் திருமணத்தை எப்படிப் பெண்ணிய வாதிகள் ஏற்கிறார் என்பது வியப்பாக உள்ளது.அதில் என்ன தமிழர்கள் சமூகம் என்ற பிரிவினை? உலகம் முழுவதும் மனிதராகப் பிறந்தோருக்கு உணர்வுகள் ஒரேபோல்தானே இருக்கும்!!!
கைம்பெண் ஏன் அதிகமாகிறார்கள், அவர்கள் விரும்பினால் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள என்ன தடை?
பெரியார் தமிழர்; தமிழரை உயர்த்தப் பிறந்தவர்; தமிழருக்காகத் தமிழில் எழுதியவர்.