மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - முன்னுரை

86 views
Skip to first unread message

rajam

unread,
Sep 12, 2011, 12:26:42 AM9/12/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Narayanan Kannan, Innamburan Innamburan, Dhivakar V
மணிமேகலை என் உயிரில் ஒரு பகுதி. அவள் கதையை எவ்வளவு விளக்கமாகச் சொல்ல முயன்றாலும் எனக்குத் தோல்வி.
விட்டு ... விட்டு ... இடையீடுகளின் இடுக்கில் ... ஏதோ சொல்லப் பார்க்கிறேன். 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மணிமேகலைக் காப்பியம் என்று சொன்னவுடன் ... மணிமேகலை என்ற ஒருத்தியைப் பற்றித்தான் சிலருக்கு நினைவு வரும்.

இந்தக் காப்பியக் கதையை நடத்திச் செல்ல வேறு பல பெண்களைப் பற்றிய செய்திகளும் தேவை என்று தெரிகிறது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மணிமேகலைக் காப்பியத்திலிருந்து நமக்குத் தெரிய வரும் பெண்கள் பலர்:
-----------------------------------------------------------------------------------
1. சித்திராபதி
2. வயந்தமாலை
3. மாதவி ( < தாரை; முற்பிறப்பில்)
4. சுதமதி ( < வீரை; முற்பிறப்பில்)
5. மணிமேகலை ( < இலக்குமி; முற்பிறப்பில்)
6. கோதமை
7. அமுதபதி
8. நீலபதி
9. தீவதிலகை 
10. சாலி
11. (திலோத்தமை; நேரடிக் குறிப்பில்லை)
12. ஆதிரை  
13. காயசண்டிகை   
14. சீர்த்தி (சோழ அரசி; இராசமாதேவி) 
15. மருதி 
16. விசாகை   
17. வாசந்தவை  
18. வாசமயிலை  
19. பீலிவளை 
20. கண்ணகி
21. நீலி

++++++++++++++++++++

தெய்வங்கள் பலர்:
-----------------------
மணிமேகலா தெய்வம்
சம்பாபதி
தூணில் இருந்த பாவை / கந்திற்பாவை (?)
சிந்தாதேவி
துர்க்கை (?)
விந்தாகடிகை
ஒரு பெரும் தெய்வம் (?)

+++++++++++++++++++

பொதுவாகக் குறிப்பிடப் பெற்ற பெண்கள்:
----------------------------------------------
1. எட்டிகுமரனுடன் இருந்த காதற்பரத்தை  
2. நாடகக் கணிகையர் / சித்திராபதி, மாதவி இவர்களின் ஆயத்தவர்
3. தூண்களில் ஒரு சித்திரம் (?)
4. புண்ணியராசனின் உரிமை மகளிர்

++++++++++++++++++++++++++++

மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் ஏன் இத்தனைப் பெண்களின் இருப்பை / கதைகளை இந்தக் காப்பியத்தில் புகுத்தினார்? இந்தப் பெண்களைப் பற்றிய செய்திகள் எந்த அளவிற்கு அவர் படைத்த காப்பியப் போக்கிற்குத் தேவை; எந்த அளவிற்கு அக்காலச் சமூகம் பற்றித் தெரிந்துகொள்ளப் பிற்காலத்தவருக்கு உதவும்? இவை போலப் பல கேள்விகள் ஆழமான தேர்ந்த இலக்கிய ஆராய்ச்சிக்குத் தேவை.
இக்கால ஆய்வாளர்கள் இவற்றைப் புரிந்துவைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை.

++++++++++++++++++++++++++++++
இந்த எல்லாரையும் பற்றி எழுத விருப்பம். இயலுகிறதா என்று பார்ப்போம்.
அன்புடன்,
ராஜம்

seethaalakshmi subramanian

unread,
Sep 12, 2011, 12:42:34 AM9/12/11
to mint...@googlegroups.com
அருமையான தொடர். மணிமேகலை கதை தெரியுமே தவிர இலக்கியம் முழுவதும் படித்ததில்லை
என்னைப்போன்றோர்க்கு இது ஒரு விருந்து
சீதாம்மா

2011/9/12 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Sep 12, 2011, 9:17:46 AM9/12/11
to mint...@googlegroups.com
இவ்வளவு விளக்கமாய் மணிமேகலை படித்ததில்லை அம்மா.  நீங்கள் ஈடுபாட்டுடன் எழுதுவதைப் பார்க்கையில் மறுபடி ஒருமுறை படிக்கணும்போல் இருக்கிறது.  கிடைத்தால் படிக்கணும். உங்களால் இயன்றபோது நீங்கள் உங்கள் ஆய்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  காத்திருக்கோம்.

2011/9/12 rajam <ra...@earthlink.net>
++++++++++++++++++++++++++++++
இந்த எல்லாரையும் பற்றி எழுத விருப்பம். இயலுகிறதா என்று பார்ப்போம்.
அன்புடன்,
ராஜம்

--

Krishnan S

unread,
Sep 12, 2011, 9:28:52 AM9/12/11
to mint...@googlegroups.com
அன்பார்ந்த இராஜம் அம்மா அவர்களுக்கு,

  >இந்த எல்லாரையும் பற்றி எழுத விருப்பம். இயலுகிறதா என்று பார்ப்போம். <
   நிச்சியம் இயலும். அதற்கான ஆற்றலை நிச்சியம் எம்மை ஆளும் அம்மை
     அருள்வாள். தொடர்க
அன்பொடு,
கிருஷ்ணன்\
சிங்கை

2011/9/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி



Subashini Tremmel

unread,
Sep 13, 2011, 10:29:03 AM9/13/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
ராஜம் அம்மா,

மணிமேகலையை மீண்டும் தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி. இப்படி எளிமையாக விளக்கும் போது எளிதாகக கற்றுக் கொள்ள (தெரிந்து கொள்ள) முடிகின்றது. வகுப்பில் முதல் வரிசையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பாடத்தை தொடருங்கள்.

குறிப்பு: ஏற்கனவே டாக்டர்.ராஜம் அவர்கள் எழுதிய தொடரை வாசித்திராதவர்கள் மரபுவிக்கியில் இணைக்கப்பட்டிருக்கும் மணிமேகலை பகுதிகுச் சென்று வாசிக்கலாம்.

அன்புடன்
சுபா

2011/9/12 rajam <ra...@earthlink.net>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Sep 30, 2011, 5:45:38 PM9/30/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
எங்கே தொடரை காணோமே.. அதிக வேலையா?

சுபா

2011/9/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 30, 2011, 9:16:52 PM9/30/11
to Subashini Tremmel, மின்தமிழ்
இன்னும் ஒரு சிறு பத்தி எழுதி முடிக்க வேண்டும். விரைவில் முடிக்கப் பார்க்கிறேன், சுபா. முடித்ததும் "கண்ணகி" பற்றிய பத்தி வரும். உங்களைப் போன்றோரின் ஆர்வமும் ஊக்கமும் எனக்கு ஊட்டம்!

karuannam annam

unread,
Sep 30, 2011, 9:32:16 PM9/30/11
to mint...@googlegroups.com


2011/10/1 rajam <ra...@earthlink.net>

இன்னும் ஒரு சிறு பத்தி எழுதி முடிக்க வேண்டும். விரைவில் முடிக்கப் பார்க்கிறேன், 

ஒரு சிறு பத்தி மட்டுமே முடிக்க வேண்டும் என்று அறிய மிக்க மகிழ்ச்சி அம்மா. தங்களின் பணி எங்கள் நற்பேறு.

மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Innamburan Innamburan

unread,
Oct 1, 2011, 12:29:26 AM10/1/11
to mint...@googlegroups.com
வெயிட்டாக இருக்கும். வையிட்டிங்க்.


2011/10/1 karuannam annam <karu...@gmail.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages