அற்புதம்!அற்புதம்! அற்புதமே!:அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009
உ
ஸ்ரீ:
எல்லாம் அவன் செயல்
கதை சுருக்கம்
எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள்.அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்ரு அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும். ஆனால் பகவானை வந்து நினைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எப்பவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ காரியம் என் கண் முன்னே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு. அது போல் எனக்கு(ம்), ஆழ்வார்களுக்கு(ம்) பகவான் தெரிசனம் தருகிறான். அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற்றையும் காப்பாத்துகிறேன் என்கிற மாதுரி கையை காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில் சிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல் பட்டு பலன் இரு(க்)கிறது. நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன். யார் அழைத்துப்போவார்கள். எனக்கோ வயதாகி விட்டது. கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும். இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால், நான் சனிக்கிழமை
தோறும் வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வந்தேன். எதற்கு என்றால், என் பேரன் பேத்திகளுக்கு நல்ல ரோஜாப்பூ மாலை போடு என்றும், கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டே, துளஸி மாலையை சனிக்கிழமையில் சாத்தி வருகிறேன். அதனுடைய பலன் எனக்கு கிடைத்து, பேரனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பிள்ளையோட பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. நான் வந்து என் பெண், பிள்ளை, பேரன், பேத்தி உள்பட நன்றாக இருக்கவேண்டும் என்று திருவேங்கடமுடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு கனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது. மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார். அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு மூன்று பிள்ளை. அவர்களில் இரண்டாவது பிள்ளைக்கு கிட்னி ட்(ர)பில் வந்து ரொம்பவும் 2 வருஷம் கஷ்டப்பட்டான். டாக்டர்கள் பார்த்து ஆப்ரேஷன் செய்யவேண்டும். இல்லாத போனால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி விட்டார். நாங்கள் ரொம்ப பயந்து போனோம். அவனுக்கு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறார்கள். என்ன செய்வது. கடவுள் தான் துணை என்று இருந்தோம். அப்படியிருக்கும் போது டாக்டர் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நாலு பெண்கள். அதனால் நான் பெண்கள் எல்லாரையும் டெஸ்ட் செய்து ஒருவருதும் சரியில்லாமல் இருந்து, என் பெரிய பிள்ளையுடைய க்ர்னி(கிட்னி) சரியாக இருக்கிறது என்று சொல்லி, அவன் தான் தம்பிக்குக் கொடுத்தான். என்ன செய்வது. என் பெரிய மாட்டுப்பெண்ணுக்கும் உடம்பு சரியில்லாதவள். அவளும் சம்மதப்பட்டுத்தான் க்ர்னி தம்பிக்குக் கொடுத்தான். க்ர்ணி கொடுத்து மூன்று வருஷம் ஆகிறது. இருவரும் செளக்யமாக இருக்கிறார்கள். நானும் என் குலதெய்வத்தை வேண்டி வெளக்கு ஏத்தி வைத்தேன். இரண்டாவது பிள்ளை க்ர்ணி அண்ணாவிடம் வாங்கிக்கொண்டு நல்லபடியாக இருக்கிறான். அவன் இருப்பது நெய்வேலியில் இருக்கிறான். நானும் நெய்வேலி ஸ்ரீனிவாஸப்பெருமாளுக்கு வெளக்கு ஏத்தி வைத்தேன். ஆனால் சின்னப்பிள்ளை நெய்வேலுக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல் ஆகிறது. இப்படி என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் பகவானுக்கு மனம் இறங்கி, இரண்டு பிள்ளையையும் நல்லபடியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறான். அவன் செயலில் தான் எல்லாம் நடக்கிறது. அதை நான் என் வயதுக்கு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இரண்டாவது பிள்ளையும் இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து விட்டான். பெரிய பிள்ளையும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து விட்டான். எல்லாரும் நல்லபடியாக இருப்பதை அவன் செயலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்
கண்ணன் எம்பிரான் என்று கண்ணீர் மல்கி
வாழ்வது சுகம்.
நல்ல இடுகை. அம்மாவிற்கு என் வந்தனங்கள்.
க.>
2009/11/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>: