இந்தியத்தமிழ்நாடு தவிர்த்து தமிழ் இலக்கியம் இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது.
80களுக்குப் பிறகு தமிழர்களின் உலகப்பரவல் புகலிட இலக்கியத்திற்கு புதிய
முகம் வழங்கி உள்ளது. இத்தமிழ் வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை அலச
சிங்கப்பூர் முன்வந்திருக்கிறது. இக்கருத்தரங்கின் மேல் விவரங்களைக்
கீழ்க்காணும் தளங்களில் காணலாம்.
http://www.singaporetamilwriters.com/wtwc/
http://www.singaporetamilwriters.com/wtwc/en/
நீண்ட இடைவெளிக்குப்பின் பல நண்பர்களை மீண்டும் சந்திப்பேன் நாளை!
இந்தியாவிலிருந்து மாலன், தமிழவன், மலேசியாவிலிருந்து ரெ.கா, முத்து,
சபாபதி, கனடாவிலிருந்து சேரன், ஜெர்மனியிலிருந்து சுசீ, பாரிசிலிருந்து
லக்ஷ்மி
இப்படிப் பல நண்பர்களைக் காணுவேன். சிங்கப்பூர் இலக்கிய வட்டத்திலிருந்து
கமலம், ஜெயந்தி சங்கர், பாலு மற்றும் பலர்.
சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக இப்படியொரு கருத்தரங்
நடத்த கனாக்கண்டிருக்கிறது!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உங்கள் மடலை இப்போதுதான் வாசித்தேன்.
பேரா.செல்வாவுடன் அறிமுகமாகியுள்ளது. இனிய மனிதர். அவருக்கு என் பேச்சு
மிகவும் பிடித்துப் போனது!
தாங்கள் 2009 மாநாட்டிற்கு சென்றது மகிழ்வு. இங்கு இவ்வளவு வாயடிக்கும்
கமலம், மைக் முன்னால் ஒரே அடக்கம். சத்தமே கேட்பதில்லை :-)
நா.கண்ணன்
2011/10/27 K R A Narasiah <naras...@gmail.com>:
மிக நன்றாக நடந்தது.
நா.கண்ணன்
2011/10/28 கவி.செங்குட்டுவன் <kavi.sen...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



On Nov 2, 6:06 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் - 1
>
> இம்மாநாடு பற்றியும், அதன் நோக்கம் பற்றியும், பேச்சாளர்கள் பற்றியும் அறிந்து
> கொள்ள முதலில் செல்ல வேண்டிய இடம்:
>
> தமிழில்:http://www.singaporetamilwriters.com/wtwc/
> ஆங்கிலத்தில்:http://www.singaporetamilwriters.com/wtwc/en/
>
உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நிகழ்சிகளை
தருவதற்கு நன்றி. முக்கியமான விழாவாக தெரிகிறது.
நா. கணேசன்
> இம்மாநாட்டை நடத்திய சிங்கை எழுத்தாளர் சங்கம் பற்றி அறிந்து கொள்ளhttp://www.singaporetamilwriters.com/
> செவ்விய ...
>
> read more »
>
> vairamuthu.jpg
> 121KViewDownload
>
> bus.jpg
> 93KViewDownload
>
> malan.jpg
> 30KViewDownload
> உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நிகழ்சிகளை
> தருவதற்கு நன்றி. முக்கியமான விழாவாக தெரிகிறது.
>
உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கம் என்பதே சரி. நிகழ்ச்சிகள்
மிகக்கட்டுமான கருத்தரங்கு தரத்தில் அமைந்திருந்தன. அப்படியே வழங்கவும்
பட்டன.
அதில் விழாவின் கூறுகள் மாலைப் பொழுதில் அமைந்தன.
இக்கருத்தரங்கிற்கு முன் நரசய்யா குறிப்பிடும் சிங்கப்பூர் எழுத்தாளர்
மாநாடு நடந்திருக்கிறது. நான் கலந்து கொண்டது கருத்தரங்கில் மட்டுமே.
நான் முன்பு சொல்லியபடி எங்கள் ஆய்வகத்தில் அக்டோபர் 10 தொடங்கி 21 வரை
சூழலியல் பயிற்சிப்பட்டறை அமைந்ததால் அதன் ஏற்பாட்டுக்குழுவில் இருக்கும்
என்னால் அதிக நேரம் செலவிட வழியில்லை.
ஆயினும் சிங்கப்பூர் எழுத்தாளர் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள்
வெளியிட்ட மாநாட்டு இதழில், “தமிழகத்தின் தெற்காசிய, தூரக்கிழக்கு
தொடர்புகள்” என்ற கட்டுரை எழுத்தித்தந்தேன்.
ஆயின் நான் கருத்தரங்கில் பேசிய தலைப்பு:
தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்:
வேர் கொண்டு விண் எழுதல்!
இத்தலைப்பில் ஒரு கட்டுரையும் சமர்ப்பித்தேன். அது கருத்தரங்கில்
வெளியிடப்பட்டாலும் கட்டுரைகளின் செம்மைப் பதிப்பு கொண்ட நூலொன்று
பின்னால் வருமென்று அறிவிப்பு.
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் கவிஞனாக, சிறுகதை, கட்டுரை எழுத்தாளனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறிமுகமாகியுள்ளேன். தமிழ் இணையம் தோன்றிய பின் மூத்த மின்குடியானவன் எனும் தகுதியில் மதுரைத் திட்டத்தில் உழைத்தது, உத்தமம் அமைப்பில் ஆரம்ப காலம் தொட்டு உழைத்தது, 2001-ல் தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கியது, பின் இ-சுவடி எனும் மின்னாடற்குழுவை உருவாக்கி 2006 வரை நடத்திவிட்டு அதற்கு மின்தமிழ் என்ற புதிய பேர் சூட்டி 2006 முதல் நடத்துவது பற்றிச் சொன்னேன். [ இவரது, உதிர் இலை காலம், நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் புகலிடப் பின்னணி கொண்டவை. மெய்நிகர் உலகின் மூலம் சர்வதேசத் தமிழ்க் குடிமகனை உருவாக்கும் முயற்சியாக, ‘மின் தமிழ்’ எனும் மடலாடற்குழுவை உருவாக்கி, ‘ஊஞ்சல் இலக்கியம்“ “கூடல் திணை” போன்ற அடுத்த நூற்றாண்டு இலக்கிய முயற்சிகளின் தோற்றுவாய்க்கான ஒரு தளத்தை உருவாக்கி வருகிறார். இவரது எண்ணற்ற மின்கவிதைகள், கட்டுரைகள் புலம் பெயர் சூழலை, அதன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக உள்ளன. சமகால இலக்கிய ஊடகமான மின்வெளியின் மூலம் சுய வெளியீடுகளான வலைத்தளம், மடலாடற்குழு போன்றவை இவரது எழுத்தைத்தாங்கி வருகின்றன.] இத்தனையும் 30 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் சொன்னேன் :-) இதை இங்கு விரிவாகப் பதிவதற்குக்கொரு காரணமுள்ளது. தமிழர்கள் இணையத்தளத்தில் தரமறிந்து கேள்விகள் கேட்பதில்லை. இணையம் தரும் முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு அநாமதேயமாக யாரையும், யாரும் கேள்வி கேட்கும் பழக்கம் வந்துள்ளது. அவர்களுக்கு இம்மாதிரி சமயங்களில்தான் பதில் சொல்ல வாய்ப்பு அமைகிறது. கி.பி 2000திலிருந்து என் வளர்ச்சியையும், பங்கையும் அறிந்தே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னை அழைத்தது. சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ நான் போவது இது முதல் முறையன்று. தமிழ் இணையம் தோன்றிய காலத்திலிருந்து அதன் தோற்றத்தில் பங்குற்ற எல்லோருடனும் உடனிருந்து வளர்ந்திருக்கிறேன். கற்றோரைத்தான் கற்றோர் காமுறுவர்!
உங்கள் தோழி வந்திருந்தார். அவரைப் பார்த்தது உங்களைப் பார்த்தது போலருந்தது.
கிளம்பும் போது ஒன்று சொன்னார் போல் எல்லோரும் என்ன அப்படியே ஒரு நடை
மலேசியா வந்துவிட்டுப் போவதுதானே என்று சொன்ன போது சத்தியமாக ‘வாசுதேவக்
குடும்பம்’ என்பது இதுதான் என்று உணர்ந்தேன். நீங்களெல்லாம் அன்பால் மிக
உயர்ந்தவர்கள்.
நா.கண்ணன்
2011/11/4 meena muthu <ranga...@gmail.com>:

இலக்கியத்தின் பயன் என்ன? இலக்கியம் ஏன் செய்ய வேண்டும்? புகலிட இலக்கியம் நமக்கு என்ன சொல்கிறது? அதற்கொரு மாநாடு தேவையா?
மனித வளர்ச்சியின் சில முக்கிய கட்டங்கள் பற்றி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கோபால் ராஜாராம் (திண்ணை ஆசிரியர்) பேசினார். மனிதனுக்கு இயற்கையாகவே தான் பார்த்து, கேட்ட அனுபங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உள்ளது. எழுத்து பேச்சு வடிவங்கள் தோன்றுமுன்னமே காட்டுவாசிகள் எந்தெந்த மிருகங்கள் எங்கெங்கு வசிக்கும், அவை எத்தகையன என்பது போன்ற விஷயங்களைச் சொல்ல நடித்துக் காட்டுவது ஆதிவாசிகள் பற்றிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்ப்பது, கேட்பது என்பது இயல்பானது, இயற்கையானது என்றார் கோபால்ராம். அதனால்தான் நம்ம சனங்கள் அடாது மழை பெய்தாலும் விடாது டிவி முன்னால் உட்கார்ந்து இருக்கிறார்கள்! டிவி பரிசு கொடுத்து வோட்டுக் கேட்பதும் இதனாலேயே! ஆனால் அடுத்த நிலையாக தான் பார்த்ததை, கேட்டதை எழுதி வைப்பது என்றொரு பழக்கம் வருகிறது! அது அடுத்த பெரிய மானுட மாற்றம்.
//எழுத்து பிறக்கிறது. எழுதத்தெரிந்தவுடன் இலக்கியம் பிறக்கிறது. பேச்சு, நடிப்பு இவைகளில் இல்லாத ஒரு பாரிய அனுகூலம் எழுத்திற்கு உண்டு. அது என்னவெனில் நம் அக உணர்வைத் துல்லியமாக எழுத்தில் வடித்துவிடமுடியும் என்பதுதான்! எனவேதான் “தமிழ்” என்றாலே அது ‘அகத்திணையை” குறிப்பது என்றொருகாலத்தில் இருந்தது. அகத்திணை வடிவில்தான் முதன்முறையாக காதல் உணர்வுகள் பதிவாகின்றன. பின் அதுவே பக்தி இலக்கியம் எனும் பூஞ்சோலையாக மலர்கிறது. அடுத்த கட்ட நிலையாக அகத்தில் தோன்றும் உள்ளுணர்வை புறச்செயல்கள் மூலம் நிரூபித்துக் காட்டும் அறிவியல் மொழி பிறக்கிறது. கணிதம் என்பதே அறிவியலின் மொழி. எனவேதான் எண்ணும், எழுத்தும் மானுடத்தின் கண்ணாகின்றன!//
இப்படி வளர்ந்த இலக்கியம் மனித வளர்ச்சியின் கண்ணாடி போல் அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் பதிவாக நிற்கிறது. தமிழனின் ஆதி இலக்கியம் எனப்பேசப்படும் சங்க இலக்கியமே, ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் மிக நளினமான (sophisticated) உலகப்பார்வையை முன்வைக்கிறது. அது ஏன்? என்று என் கட்டுரை ஆராய்கிறது. பட்டுப்பாதையில் கோலோச்சிய தமிழனுக்கு அருமருந்தாய் அமைகிறது நம்மாழ்வார் முன்வைக்கும் ஒரு சூட்சும உளவியல். [http://groups.google.com/group/mintamil/msg/ba9071c24dda7401]
//கடவுள் என்பதோர் புரிதல். ஒரு தேடலின் தெளிவு. ஓர் கவிதை.
இப்புரிதல் என்பது அவரவர் பக்குவம், மனோபாவம் சார்ந்தது
இது பற்றியும் என் கட்டுரை பேசுகிறது. காலனித்துவ ஆட்சியில் தமிழன் கூலிக்காரனாய் பர்மா, மலேசியாக் காடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறான். அங்கு அவன் வாழ்வை சித்தரிப்பது இலக்கியமே. அது நாட்டுப்புற பாடல் வடிவில் இருக்கலாம், கவிதையாக, ஒப்பாரியாக, சிறுகதையாக தன்னை இனம் காட்டிக்கொள்கிறது. 80 களில் தோன்றும் இலங்கைப் பேரினவாதம் லட்சக்கணக்கில் தமிழர்களை உலகெங்கும் சூறையாடுகிறது. அங்கும் போனவுடன் இவன் செய்யும் முதற்செயல் இலக்கியம் படைப்பதே! எனவே தமிழனின் ஒட்டுமொத்த வாழ்வியலை அறிந்து கொள்ள இலக்கியம் அவசியமாகிறது.
எனது பேச்சை ஒரு overview வாக அமைத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். அவ்வாறே செய்தேன். என் அமர்வில் பேசிய முனைவர் சேரன் மிக அழகாக புலம் பெயர் ஈழத்தவரின் அவலங்களை அவர்கள் ஆக்கிய கவிதைகள் மூலம் சொல்லி ஒட்டுமொத்த தமிழ் மனதில் இது குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்க முயன்றார். தமிழனின் ஏகோபித்த குரலைச் சொல்லும் வண்ணம் ஒரு சர்வதேச அமைப்பு என்ற ஒன்று உருவாகாத நிலையில் சிறு அளவில் ஐரோப்பாவில் தோன்றிய இலக்கிய சந்திப்புகள் எவ்வண்ணம் இவ்விழிப்புணர்வு தணிந்துவிடாத வண்ணம் காத்தன என்று பெர்லின் சுசி விளக்கினார். இவ்விலக்கிய சந்திப்புகளின் ஒரு அங்கமாகவே நா.கண்ணனும் ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறார். இணையம் தோன்றிய பின் ஈழத்தவரின் துயர் பாரிய வடிவில் பதிவாகியுள்ளது. ஆயின் இவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைவிடப் பலமடங்கு துன்பத்தை தோட்டத்துக் கூலியாக மலேசியா சென்ற தமிழன் கண்டு இருக்கிறான் என்பதை மிக விவரமாக முனைவர் வே.சபாபதியின் ஆய்வு காட்டியது. ரப்பர் தோட்டத்தில் பட்ட அவதி, தேயிலைத் தோட்டத்தில் பட்ட கஷ்டம், பின் சியாம் ரயில்பாதை போடும் திட்டத்தில் அற்ப கொசு போல் செத்தொழிந்தது, பின் ஜப்பானியர் ஆக்கிரமிப்பில் பட்ட துன்பங்கள், அதன் பின் தற்போது பூமிபுத்ரர்களின் கையில் வதிக்கும் இரண்டாம் குடிமக வாழ்வு என்று 20 நிமிடங்களுக்குள் ஒரு பெரும் காவியத்தையே நம் முன் கொண்டு வந்து காட்டினார் பேரா.சபாபதி.நா.கண்ணன், ழான், மலேசியப் பேராளர், ரெ.காஅந்த அமர்வு என் கண்முன் காட்டிய விஸ்வரூப தரிசனம் என்பது மலேசியத் தமிழர் பட்டிருக்கும் பாடுதான். இந்தியத் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் இதைக் கண்ணுரும் போது ஒன்றுமே இல்லை என்றாகிவிடுகிறது. ’தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!’ எனும் போது நெஞ்சு உருகுகிறது. ஆனால் பிஜித்தீவில் இந்தியர் படும் அவதியைக் (தமிழர் கூட இல்லை) அறிந்து கண்ணீர் வடிக்கும் பாரதி மலேசியத்தோட்டத்து தமிழ்த் தொழிலாளர் பட்ட அவதி பற்றிப் பதிவு செய்யாமல் போகிறான். நல்ல வேளையாக இம்மாநாடு நடந்தது! இன்று உலகு அறிந்து கொண்டது.
இந்தியத்தமிழர்கள் எவ்வளவுதூரம் இந்த அவதியுறும் தமிழர் வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போயிருந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரிகளின் வருகை காண்பிக்கிறது! இவர் சிங்கப்பூரில் போய் சமிஸ்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்ற அபத்தமான பரிந்துரையை முன்வைக்கிறார். இதை சிங்கப்பூர் இலக்கியம் ஆவணப்படுத்துகிறது. இந்த அபத்தத்தின் விளைவுதான் தமிழ்வேள் சாரங்கபாணியின் வரவு. தமிழன் தன் வாழ்வை, தன் அடிப்படை நலன்களை இழந்து தவிக்கும் போது வாய்மொழியையும் இழக்க வேண்டிய அவலத்தை பண்டிதர்கள் முன்மொழிதல் என்பது என்ன காலமுரண்? இந்த மாநாடு இத்தகைய அபத்தங்கள் மீண்டும் தோன்றிவிடக்கூடாது என்றுதான் அறிவியற்புலத்தை முன்வைத்து பாடம் நடத்துகிறது.
//உலகின் மாற்றங்கள் பெரும் ஆயுதப்புரட்சியைவிட அறிவியல் புரட்சியின் மூலமாகவே நடத்தப்பட்டுள்ளன. அறிவே இறுதியில் வெல்லும். எனவேதான் அறிவு சார்ந்து ஒரு உலகக் கருத்தரங்கை சிங்கப்பூர் முன்னடத்தியது. அங்கு அறிவுடையோர் விழித்துக் கொண்டால் பின் மற்றோரை எழுப்பும் பறையை இலக்கியம் கொட்டும் என்பது எதிர்பார்ப்பு! //
இன்னும் வரும்....நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> சரியான கோணத்திலான ஆய்வு. அருமை. திரு கோபால் ராஜாராம் அவர்களின் எண்ணங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
>>
நான் இங்கு வழங்குவது அங்கு கேட்ட கருத்தோடு என் புரிதலையும்
தோய்த்துத்தருவது. அவர் அகத்திணை பற்றியெல்லாம் சொல்லவில்லை. அவர்
சொன்னது பார்த்தல், கேட்டல் இயல்பானது என்பதும். எழுத்தின் பிறப்பு
முக்கிய நிகழ்வு என்பதுமே!
> பட்ட துன்பத்தில் என்ன பாகுபாடு இருக்க முடியும்? தலைக்கு மேல் போனால் சாண் என்ன முழம் என்ன? அதில் நீ பட்ட பாடு பெரியதா, நான் பட்ட பாடு பெரியதா என்ற வினாவின் பயன் தான் என்ன?
>>
அப்படிச் சொல்லிவிட முடியாது!
நீங்கள் காட்டும் மனநிலைதான் ஒட்டுமொத்த தமிழ்நிலை.
நாம் கஷ்டத்தைப் பற்றிப் பேசத்தயங்கிறோம்.
அது பொது மன்றத்தில் இகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டுமென்று
பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
இதனால்தான் ஜெர்மன் வதை முகாம்களில் பட்ட அவதியை விடக்கூடுதல் அவதியை
இலங்கை வதை முகாம்களில் பெற்றும் தமிழன் இதுவரை ‘தன் அனுபவமாக’ ஒன்றையும்
எழுதி வைக்கவில்லை. இது இலக்கியத்தின் மறைமுகம்:-(
ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளில் இந்த அவதி, இந்த சுய அடக்குதல் கண்ணீராக
வெளிவந்திருக்கிறது.
இது குறித்து நான் பேசினேன். தமிழனின் ஒப்பாரி என்பது ஒரு சின்ன
வெளிப்பாடு. ஒரு வடிகால்.
புகல் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளவும் ஒரு மனநிலை வேண்டும்.
ஆஸ்திரேலியப் பெட்டையொன்று கேட்டது, இவர் எங்கட மனுசர் இல்லையா? நம்ப
இயலவில்லை! என்று.
நா.கண்ணன்
2011/11/5 coral shree <cor...@gmail.com>நான் இங்கு வழங்குவது அங்கு கேட்ட கருத்தோடு என் புரிதலையும்
> சரியான கோணத்திலான ஆய்வு. அருமை. திரு கோபால் ராஜாராம் அவர்களின் எண்ணங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
>>
தோய்த்துத்தருவது. அவர் அகத்திணை பற்றியெல்லாம் சொல்லவில்லை. அவர்
சொன்னது பார்த்தல், கேட்டல் இயல்பானது என்பதும். எழுத்தின் பிறப்பு
முக்கிய நிகழ்வு என்பதுமே!
அப்படிச் சொல்லிவிட முடியாது!
> பட்ட துன்பத்தில் என்ன பாகுபாடு இருக்க முடியும்? தலைக்கு மேல் போனால் சாண் என்ன முழம் என்ன? அதில் நீ பட்ட பாடு பெரியதா, நான் பட்ட பாடு பெரியதா என்ற வினாவின் பயன் தான் என்ன?
>>
நீங்கள் காட்டும் மனநிலைதான் ஒட்டுமொத்த தமிழ்நிலை.
நாம் கஷ்டத்தைப் பற்றிப் பேசத்தயங்கிறோம்.
அது பொது மன்றத்தில் இகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டுமென்று
பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
இதனால்தான் ஜெர்மன் வதை முகாம்களில் பட்ட அவதியை விடக்கூடுதல் அவதியை
இலங்கை வதை முகாம்களில் பெற்றும் தமிழன் இதுவரை ‘தன் அனுபவமாக’ ஒன்றையும்
எழுதி வைக்கவில்லை. இது இலக்கியத்தின் மறைமுகம்:-(
ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளில் இந்த அவதி, இந்த சுய அடக்குதல் கண்ணீராக
வெளிவந்திருக்கிறது.
இது குறித்து நான் பேசினேன். தமிழனின் ஒப்பாரி என்பது ஒரு சின்ன
வெளிப்பாடு. ஒரு வடிகால்.
புகல் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளவும் ஒரு மனநிலை வேண்டும்.
ஆஸ்திரேலியப் பெட்டையொன்று கேட்டது, இவர் எங்கட மனுசர் இல்லையா? நம்ப
இயலவில்லை! என்று.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இல்லை சுபா!
இவர் வேறு. ம.எ.சங்கத்தில் இருக்கிறார். பெயர் மறந்துவிட்டது.
ரெ.காவிற்குத்தெரிந்திருக்கும்.
நா.கண்ணன்
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 3
நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எஸ்.பி உதய சங்கரின் பேச்சு மலாய் மொழியில் தமிழ்க் கதைகளையும், கவிதைகளையும் கொண்டு சேர்க்கும் போதுள்ள அரசியல் சிக்கல் பற்றிப் பேசியது. 21ம் நூற்றாண்டில் நாகரீகமடைந்துவிட்ட உலகு காணாத ஒரு கோணம் அவர் எங்களுக்குச் சொன்னது. தமிழர்கள் மலேசியாவில் பல காலம் வாழும் போது தேசிய மொழியை ஏன் பேசவில்லை என்ற பேச்சு வருகிறது. சரி பேசுகிறேன் எனப் புறப்பட்டு மலாய் மொழியில் ஒரு தமிழன், ஒரு இந்து (முஸ்லிம் அல்லாதவர்) புத்தாக்கம் செய்யும் போது மலாய் அரசு அசூசை கொண்டு எழுத்தைத்தடை செய்கிறது என்று அவர் முன்வைத்த வாதம், அயலக இலக்கியத்தின் புதியதோர் சிக்கலை எங்கள் முன் வைத்தது!
இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அவர் பேச்சின் மூலம் மலேசியாவில் நிலவும் நிறவாதத்தை முன்னிருத்தினார்.
அதாவது மலாய் மொழி (பாகஸா மலேசியா) என்பது பூமிபுத்திரர்களான, முஸ்லிம்
மலாய்காரர்களுக்கு மட்டும் உரித்தானது. எனவே இந்து, கிறிஸ்தவத்தமிழர்கள்
முன்வைக்கும் இலக்கியத்தை பாகாஸா மெலேயு என்றுதான் அழைக்க வேண்டும்
என்பது அரசு தரப்புவாதம். அதாவது முஸ்லிம் அல்லாதோர் எழுதும் எழுத்து
புனித மலாய் மொழியில் சேராது என்பது போன்றதோர்வாதம். பிற மொழிக்கும் சம
அந்தஸ்து உள்ளதெனில் இந்நேரம் ரெ.கா போன்ற நல்ல எழுத்தாளர்களுக்கு அரசு
முஸ்லிம்களுக்கு வாரி வழங்கும் சலுகைகள் என்றோ கிடைத்திருக்க வேண்டும்
என்பது உள்குமுறல். இதுதான் நான் புரிந்து கொண்டது. சரியோ, தவறோ!
(உணர்ச்சி நிரம்பிய அமர்வு)
நா.கண்ணன்
2011/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
--
Dear Kannan
அன்பின் நரசய்யா:
!
இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.நா.கண்ணன்--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
அன்பின் நரசய்யா:
இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.
கீதா, நமது இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில்லாததால் தான் இன்று உலக அளவில் பேசப்படவில்லை, என்றுஎன்னுடையஆசிரியர்கள் கூறுவார்கள். தரமான மொழிபெயர்ப்பு,ஹ்ம்ம், தனி இழையில் பேசலாம்.அன்பு கமலம்
--
கீதா என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் ஆச்சர்யக்குறி
மட்டும் நிற்கிறது!!
நா.கண்ணன்
2011/11/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
Subramanian Krishnamoorthy) graduated from Raja’s college pudukkottai, securing the first rank in the university in Sanskrit. He then took his M.A degree in English literature from Nagpur University. Apart from Tamil, his mother-tongue, English and Sanskrit, he knows Hindi, Bengali and German.
After teaching at college for a few years, he joined the audit department of the government of India at madras in 1954. In 1955 he was transferred to Kolkata, where he has been living ever since, except for a 3-year spell in Delhi. He retired from the Indian audit & accounts service 1987.
He has been writing short stories and articles in English and Tamil for over four decades. Two Tamil short story collections (nandriku oru vilai & manitham) and two English short story collections (the peasant and other stories & modern aesopfabbs) have been published. He has written comprehensive Tamil biographies of Kazi Nazrul Islam, Sarat Chandra Chattopadhyay, Premchand & Iswar Chandra Vidyasagar.
He has translated Tirukural and Silappadikaram in to Tamil.
தேவ்
> *‘Rakta Bonya’, his Bengali translation of Indra Partharathi’s Tamil novel
> ‘Kurudippunal’, has been awarded the Sahitya Akademi translation Prize &
> Nikil Bengal Sahitya Samelana Prize.*
>
> He has translated Tirukural and Silappadikaram in to Tamil.
> டிசம்பரில் வெளிவரவிருக்கும் எனது நான்காவது சிறுகதைதொகுப்புக்கு
> (செம்புலப்பெயனீர்) கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி முன்னுரை எழுதியுள்ளார்.
> அவரது சகோதரர் பேரா. ஸ்வாமிநாதன் மகாபலிபுரம் என்ற நூல் ஆங்கிலத்தில்
> எழுதியுள்ளார். அதை நான் தமிழில் மாமல்லபுரம் என்ற தலைப்பில்
> மொழிபெயர்த்துள்ளேன்.
>
> நரசய்யா
> 2011/11/6 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இங்கேயும் பேசலாம் :-)
>
> > கீதா என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் ஆச்சர்யக்குறி
> > மட்டும் நிற்கிறது!!
>
> > நா.கண்ணன்
>
> > 2011/11/7 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:
> > > ஹ்ம்ம், தனி இழையில் பேசலாம்//
>
> > > அதே! தனி இழையில் பேசலாம்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> கல்கத்தா சு. கிருஷ்ண்மூர்த்தி, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனலை
> மொழிபெயர்த்து ஸாஹித்ய அகாதெமி பரிசு பெற்றவர். அவரை பற்றி:
>
மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
>>ஆனாலும் எம்போன்றோருக்குச் சில இடங்களில் வருத்தம் தோன்றும்; தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பினும் >>தமிழைப் போற்றிப் பேணுகிறோம். ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன்!
காரணம் அறிய அவா!
நா.கண்ணன்
2011/11/8 K R A Narasiah <naras...@gmail.com>:
மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
> கல்கத்தா சு. கிருஷ்ண்மூர்த்தி, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனலை
> மொழிபெயர்த்து ஸாஹித்ய அகாதெமி பரிசு பெற்றவர். அவரை பற்றி:
>
காரணம் அறிய அவா!
>>ஆனாலும் எம்போன்றோருக்குச் சில இடங்களில் வருத்தம் தோன்றும்; தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பினும் >>தமிழைப் போற்றிப் பேணுகிறோம். ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன்!
நா.கண்ணன்
நா.கண்ணன்--
On Nov 10, 12:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //தமிழை முதன்மைப் படுத்தி வாழ்த்துப்பா பாடும் பழக்கம் கழகத்தவர் கொண்டு
> வந்தது//
>
> http://www.youtube.com/watch?v=S3AJJwUjO2A
>
> நாகராசன்
தமிழ்த்தாய் சினிமாவோடு இணைந்துவிட்டதால்,
http://www.youtube.com/watch?v=UHrBJ_FibdY
தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி
வைத்துவிட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
நா. கணேசன்
> 2011/11/10 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 6
>
> > இந்த மாநாடு தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது!
>
> > தமிழ் வாழ்த்து என்று சொன்னவுடன் மலேசியாவில் கவிஞர் சீனி நைனா முகம்மது
> > அவர்கள் தம் வாழ்த்துப் பாவை விளக்கிச் சொன்ன உரை நினைவிற்கு வருகிறது. அதற்கு
> > முன் இந்த அழகிய பாடலை இதுவரை கேட்காதோருக்காக, இதோ இணைப்பு:
>
> > புதிய தமிழ் வாழ்த்து<http://voiceofthf.blogspot.com/2011/01/blog-post_27.html>
> ...
>
> read more »
>
> தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி
> வைத்துவிட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
> பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
> உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>
மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
நன்றி.
நா.கண்ணன்
On Nov 10, 7:45 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
>
>
> > தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி
> > வைத்துவிட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
> > பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
> > உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>
> மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
>
எதை நிருவ?
நன்றி.
நா. கணேசன்
> தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி வைத்துவிட்டனர்.
இதை!!
க.>
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
>> > பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
>> > உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>>
>> மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
>>
>
> எதை நிருவ?
>
> நன்றி.
>
> நா. கணேசன்
>
>> நன்றி.
>>
>> நா.கண்ணன்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
On Nov 10, 8:00 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி வைத்துவிட்டனர்.
>
> இதை!!
தமிழ்மன்னர்களிடம் ஔவை அறிவுரைகள் புறநானூற்றில்.
தமிழ் தேசியத்தை அழகான காப்பியமாக்கி இளங்கோ அடிகள்,
சம்பந்தர் 150+ முறை தமிழின் சிறப்புகளை வாழ்த்தாக்குகிறார்.
இவர்கள் தொடங்கிவைத்ததை வில்லி பாரதத்தில், கருணைப்பிரகாசரில்
விரிந்து, வெள்ளையர் கண்ட திராவிட மொழியியலுடன்
சேர்ந்து சுந்தரம்பிள்ளையின் வாழ்த்து தமிழ்வாழ்த்து ஆனது.
பின்னர் சுந்தரம்பிள்ளை பாடலைப் பார்த்து நூற்றுக்கணக்கான
தமிழ்த்தாய் வாழ்த்துகள் பாடப்பட்டுள்ளன. எனக்குப் பிடித்த
பாடல் பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனாரது.
நா. கணேசன்
>
> க.>
>
> தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
>
>
>
>
>
>
>
>
>
> >> > பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
> >> > உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>
> >> மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
>
> > எதை நிருவ?
>
> > நன்றி.
>
> > நா. கணேசன்
>
> >> நன்றி.
>
> >> நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
> தமிழ்மன்னர்களிடம் ஔவை அறிவுரைகள் புறநானூற்றில்.
> தமிழ் தேசியத்தை அழகான காப்பியமாக்கி இளங்கோ அடிகள்,
> சம்பந்தர் 150+ முறை தமிழின் சிறப்புகளை வாழ்த்தாக்குகிறார்.
> பின்னர் சுந்தரம்பிள்ளை பாடலைப் பார்த்து நூற்றுக்கணக்கான
> தமிழ்த்தாய் வாழ்த்துகள் பாடப்பட்டுள்ளன. எனக்குப் பிடித்த
> பாடல் பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனாரது.
>
உதாரணங்கள் காட்டுங்களேன். அப்படி இல்லை என்றுதான் சீனி நைனா முகம்மது சொல்கிறார்!
க.>
வணக்கம், நண்பர் சேரன் என்ன பேசினார்? என்று யாராவது சொன்னால்
நன்றி.
நா. கணேசன்
http://thedipaar.com/news/news.php?id=36105
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர்
தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மூன்று
நாள் மாநாட்டை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த கவிஞர் வைரமுத்து
பேசியது:
தென்னாட்டுத் தமிழ் அறிஞர்களோடு பன்னாட்டுப் படைப்பாளிகளும் ஒரு கூரையின்
கீழ் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கூடிக் கலையும் மற்றுமொரு கொண்டாட்டமாகவோ அல்லது நம் பெருமைகளை மட்டுமே
ஓயாது பேசுகின்ற கூட்டமாகவோ இந்த மாநாடு முடிந்துவிடக் கூடாது. சில
கேள்விகளை நாம் முன் வைக்கவேண்டும்.அந்தக் கேள்விகள் தர்க்கத்துக்கும்,
நியாயத்துக்கும் உள்பட்டவையாயின், அவற்றுக்கான விடைகளை நாம் தேடியாக
வேண்டும்.
உலகமயமாதல் என்று பெரும் புயலில் உலகத்தின் குறு மொழிகளும், சிறு
மொழிகளும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்ற கூற்று உண்மையா? அது
உண்மையானால் தமிழ் மொழிக்கும் தீங்கு நேருமா? அப்படி நேருமானால் தமிழ்
மொழி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வழிகள் எவை? என்பதையும் இந்த மாநாடு
விவாதிக்க வேண்டும்.
நம் பலங்களை மட்டும் பேசியே பொய்வலிமை பூண்டுவிட்டோம். நம் பலவீனங்களும்
பேசப்பட வேண்டும். ஒரு மாநாட்டில் தனி நபர்கள் பின்னுக்குத்
தள்ளப்பட்டுத் தத்துவங்களே முன்நிறுத்தப்பட வேண்டும்.
முதலில் நம்மை நமக்குள் மதிக்கும் மனோபாவம் வளரவேண்டும். முதல் மனிதன்
பேசிய மூத்த மொழி என்ற பெருமை நம் வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால்,
வீட்டுக்கு வெளியே நிலைமை வேறாக இருக்கிறது. கன்னடம் நமது சகோதர
மொழிதான். அதன் மீது எப்போதும் நமக்கு மதிப்புண்டு. இந்தியாவின் உயர்ந்த
இலக்கிய விருது என்று கருதப்படுகிற "ஞானபீடம்' பரிசை கன்னட மொழி எட்டு
முறை பெற்றிருக்கிறது. தமிழ் இரண்டு முறைதான் பெற்றிருக்கிறது. இந்த
ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசின் கடைசிப் பட்டியலில் இரண்டு
இந்தியப் படைப்பாளிகள் இடம் பெற்றிருந்தார்கள். அதில் ஒருவர் ராஜஸ்தானைச்
சேர்ந்த சிறுகதை எழுத்தாளர். மற்றொருவர் மலையாளக் கவிஞர்.
நோபல் பரிசுக்கு இரண்டு இந்தியர்கள் இறுதிச் சுற்று வரை இடம் பெற்றது
நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால், "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி' என்று அகப்பெருமை பேசுகிற தமிழ்ப் படைப்பாளியின்
பெயர் அதில் இடம் பெறவில்லையே. நோபல் பரிசு ஒன்றும் ஒரு மொழியின்
அளவுகோல் அல்ல. எனினும் அதில் இடம் பிடிக்காத குறை நம் இனத்துக்கு
இருக்கிறதே. உலகப் படைப்புகளுக்கு இணையான பெருமையும் நமக்கு உண்டு. அதை
உலகத்துக்கு எடுத்துச் சொல்லாத பலவீனமும் நமக்கு உண்டு.
எனவே, தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகள், பிற
மொழியாளர்களின் முன்னிலையில் உலகமெங்கும் வெளியிடப்படவேண்டும்.
போகச் சமுதாயத்திலும் போர்ச் சமுதாயத்திலும் தான் உன்னத இலக்கியங்கள்
பிறக்கும். இன்று தாய்த் தமிழ்நாட்டை விட, தமிழ் ஈழத்திலும் புலம்
பெயர்ந்த தமிழர்களிடமும்தான் அந்த உன்னத இலக்கியம் உருவாகும் வாய்ப்பு
அதிகமாக உள்ளது.
உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை ஒன்றுகூட்ட "உலகத் தமிழ்ப் படைப்பாளிகள்
மையம்' ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் அதற்கு பொருத்தமான
தளமாகத் திகழும் என்று நம்புகிறேன் என்றார் வைரமுத்து.
இவை பத்திரிக்கைக் குறிப்புகள். இது போல் நம் ழான், சாஷா எபலிங்
பற்றியும் சிங்கைச் செய்திதாளில் வந்தது. ழானிடம் காப்பியுண்டு என்று
நம்புகிறேன். கடைசி நாளன்று அன்பு ஜெயா எனக்கும் அவருக்குமென்று இரண்டு
நாளிதழ்கள் வாங்கிவிட்டு, இந்தியா பறந்துவிட்டார், என்னிடம் கொடுக்காமலே
:-)) எனவே என்னால் அச்சேதியை இங்கு இடமுடியாது.
சேரன் பற்றிய செய்திக் குறிப்பு உண்டா என்று தெரியவில்லை. எங்கள்
கட்டுரைகள் புத்தக வடிவில் பின்னால் வரும். நான் மலருக்கு எழுதிய
கட்டுரையை வெளியிடலாமா என அனுமதி கோருகிறேன்.
நா.கண்ணன்
2011/11/11 N. Ganesan <naa.g...@gmail.com>:
>
> செய்யாவிட்டாலும் கேடு, செய்தாலும் கேடு.
>
மேல் விவரங்களுக்கு நன்றி ரெ.கா!
என்னுடைய பெரிய அதிர்ச்சி என்னவெனில் இன்றைய ஆங்கில வெளியீட்டு
வரிசையிலும், பரிசு பெறுவதிலும் இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள் முதன்மையில்
நிற்கின்றனர். ஆங்கிலத்தின் கடந்த நூற்றாண்டு வளர்ச்சிக்கு முக்கிய
காரணம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதோர் பங்களிப்புதான். நிலமை
அப்படியிருக்க மிகச் சின்னத்தனமாக (narrow mind) மலேசியா தன் மொழி வளத்தை
மலேயாவின் பிற இனக்குழுக்களின் தரவுகளால் வளப்படுத்தாமல் இப்படியொரு
இனவாத நோக்கைக் கொள்வது மலேசியாவை காலத்தின் மிகப்பின்னால் வைக்கிறது.
இங்கு வந்திருக்கும் ஏமென் பின்.முனைவர் பட்டதாரி மலேசியாவில் முனைவர்
பட்டம் பெற்றவர். அவர் சொல்கிறார் அவருக்கு வேண்டிய வேதிமங்களை மலாய்,
முஸ்லிம் இனத்தவர் அல்லாதோர் நடத்தும் கம்பெனிகள் வாயிலாக
பெறத்தடையென்றும், முஸ்லிம் மலாய்க்காரர் கம்பெனியைக் கண்டு பிடித்து
ஆடர் கொடுக்காதவரை ஆய்வு இல்லையென்று. இவையெல்லாம் பத்தாம்பசலித்தனம்.
இதுதான் மலேசியாவையும், சிங்கப்பூரையும் வித்தியாசப்படுத்துகிறது.
சிங்கப்பூர் பிற இன வருகையால் முன்னேறும் நாடு. மலேசியா தன் குடிகளையே
மதத்தின் பெயரால் பின்தள்ளும் நாடு. மிக வருத்தமாக உள்ளது.
இதில் ஒரு பாஸிடிவ்வான விஷயம் என்னவெனில் உதய சங்கர் ஒரு குளவிக்கூட்டைத்
திறந்திருக்கிறார். “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்”. வாழ்க மலேசியா!
நா.கண்ணன்




நா.கண்ணன்--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு விளக்கம். ஒரு மலேசியர் மலாய் மொழி அல்லாத மொழியில் (தமிழ், சீனம், ஆங்கிலம்) எழுதும் இலக்கியம் மலாயில் மொழிபெயர்க்கப்பட்டால் அதனை mainstream மலாய் ஏடுகள் பதிப்பிக்க மாட்டா. ஏனெனில் மலேசியர் மலாய் மொழியிலேயே எழுத வேண்டும் என்பது அவர்கள் கொள்கை.
Uthaya Sankar SB மற்றும் Kavya கூகள் செய்து பாருங்கள். மேல் விவரங்கள் கிட்டும். (கவனம்: இவை மலாய் மொழித் தளங்கள்.)
ரெ.கா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 10, 8:46 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > தமிழ்மன்னர்களிடம் ஔவை அறிவுரைகள் புறநானூற்றில்.
> > தமிழ் தேசியத்தை அழகான காப்பியமாக்கி இளங்கோ அடிகள்,
> > சம்பந்தர் 150+ முறை தமிழின் சிறப்புகளை வாழ்த்தாக்குகிறார்.
> > பின்னர் சுந்தரம்பிள்ளை பாடலைப் பார்த்து நூற்றுக்கணக்கான
> > தமிழ்த்தாய் வாழ்த்துகள் பாடப்பட்டுள்ளன. எனக்குப் பிடித்த
> > பாடல் பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனாரது.
>
> உதாரணங்கள் காட்டுங்களேன். அப்படி இல்லை என்றுதான்சீனிநைனா முகம்மது சொல்கிறார்!
>
1) பூவராகன் மடியில் வளரும் பூதேவி தாயாராக வில்லி பாரதப் பாயிரம்
தமிழ்த்தாயைப்
போற்றுகிறது. எனக்குத் தெரிந்து தமிழ்த்தாய் வாழ்த்தில் முதல்பாக்களில்
இது ஒன்று.
இங்கே பாடலைத் தந்து விளக்கமும் எழுதியுள்ளேன்.
2) துறைமங்கலம் வீரசைவர்கள் மூவர். காளத்திப் புராணம் செய்த
கருணைப்பிரகாசர் பாடிய
தமிழ்த்தாய் வாழ்த்து 17-ஆம் நூற்றாண்டு. பாட்டு வேண்டுமானால் தருகிறேன்.
சீனி. நைனா முகமதுவை தமிழ்த்தாய் வாழ்த்து வரலாறு கட்டுரை தரச்
சொல்லுங்களேன்.