உறவில் உள்ள மரபுகள் (அத்தை)

76 views
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Nov 14, 2012, 5:42:01 AM11/14/12
to mintamil, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

தலைப்பிரசவம்.
மகள் பிறந்திருந்தாள்.
மகளைத் தூக்கிக் கொண்டு மனைவியை அழைத்துவர வேண்டும்.
வீட்டில் எல்லோரும் ஒன்றுகூடி உட்கார்ந்து இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
எனது தாய்தந்தையர் நல்லநாள் பார்த்து முடிவு செய்வோம் என்றனர்.
நானும் எனக்கு வசதியான ஒரு நாளைச் சொன்னேன்.
எனதருகில் நின்று கொண்டிருந்த என் தங்கையும் அவளுக்கு வசதியான நாள் ஒன்றைச் சொன்னாள்.
என் சொல் சபையேறவில்லை.
என் தங்கை சொல்லே சபையேறியது.

Inline image 1
(படம் - நன்றி koodal.com)

எனது மகளைத் தூக்கிவர நாங்கள் சென்றிருந்தோம்.
எனது அத்தை என் மகளைத் தூக்கிவந்து, என் மகளின் அத்தை (எனது தங்கை)யின் கைகளில் கொடுத்தார்கள்.
என்பிள்ளையை என்னிடம் கொடுப்பார்கள் என்று இறுமாந்திருந்த எனக்கு ஏமாற்றமே.
நான் இதுபற்றி அப்போது ஏதும் அதிகமாகக் கருத்தில் கொள்ளவில்லை.

இப்போது, என்மகள் தலைப்பிரசவத்திற்காக எங்களது இல்லத்திற்கு வந்திருந்தாள்.
பிறந்திருந்த பேரனைத் தூக்கிச் செல்ல என்மகளின் நாத்தனார் (எனது மருமகன் கூடப் பிறந்தவள் - எனது பேரனுக்கு அத்தை) வந்திருந்தாள்.
எங்களது பேரனை எனது மனைவி தூக்கிக் கொடுக்க, பேரனின் அத்தை வாங்கிச் சென்றாள்.

பிறந்த குழந்தையை அத்தை வாங்கிச் செல்கிறாள்.
இது என்ன மரபு?

நாம் பிறந்து வளர்ந்து சிவனடி சேரும்வரை,
நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்.
அத்தனைக்கும் சிறப்பு இருக்கிறது.  
நாம் அறிந்தோ அறியாமலோ,
வழிவழியாக, வாழையடிவாழையாக 
நாம் நமது மரபுகளைப் பின்பற்றி வருகிறோம்.

அன்பன்
கி.காளைராசன்

2receiving baby.jpg

Geetha Sambasivam

unread,
Nov 14, 2012, 5:44:16 AM11/14/12
to mint...@googlegroups.com
அத்தை மடி மெத்தையடி.

2012/11/14 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம்.


பிறந்த குழந்தையை அத்தை வாங்கிச் செல்கிறாள்.
இது என்ன மரபு?

நாம் பிறந்து வளர்ந்து சிவனடி சேரும்வரை,
நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்.
அத்தனைக்கும் சிறப்பு இருக்கிறது.  
நாம் அறிந்தோ அறியாமலோ,
வழிவழியாக, வாழையடிவாழையாக 
நாம் நமது மரபுகளைப் பின்பற்றி வருகிறோம்.

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Nov 15, 2012, 11:41:50 PM11/15/12
to mint...@googlegroups.com
கீதா (+ கண்ணதாசன்) சொன்னதுபோல் "அத்தை மடி மெத்தையடி."

அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-) அத்தை-னா பிற்காலத்துலெ மாமியார் ஆகக்கூடிய தகுதி. அதுனாலெ தன் மருமகப் புள்ளெயெ அவங்க சரியாத் தூக்கிப் பிடிப்பாங்க. 


On Nov 14, 2012, at 2:42 AM, கி.காளைராசன் wrote:

வணக்கம்.

தலைப்பிரசவம்.
மகள் பிறந்திருந்தாள்.
மகளைத் தூக்கிக் கொண்டு மனைவியை அழைத்துவர வேண்டும்.
வீட்டில் எல்லோரும் ஒன்றுகூடி உட்கார்ந்து இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
எனது தாய்தந்தையர் நல்லநாள் பார்த்து முடிவு செய்வோம் என்றனர்.
நானும் எனக்கு வசதியான ஒரு நாளைச் சொன்னேன்.
எனதருகில் நின்று கொண்டிருந்த என் தங்கையும் அவளுக்கு வசதியான நாள் ஒன்றைச் சொன்னாள்.
என் சொல் சபையேறவில்லை.
என் தங்கை சொல்லே சபையேறியது.

<2receiving baby.jpg>
(படம் - நன்றி koodal.com)

எனது மகளைத் தூக்கிவர நாங்கள் சென்றிருந்தோம்.
எனது அத்தை என் மகளைத் தூக்கிவந்து, என் மகளின் அத்தை (எனது தங்கை)யின் கைகளில் கொடுத்தார்கள்.
என்பிள்ளையை என்னிடம் கொடுப்பார்கள் என்று இறுமாந்திருந்த எனக்கு ஏமாற்றமே.
நான் இதுபற்றி அப்போது ஏதும் அதிகமாகக் கருத்தில் கொள்ளவில்லை.

இப்போது, என்மகள் தலைப்பிரசவத்திற்காக எங்களது இல்லத்திற்கு வந்திருந்தாள்.
பிறந்திருந்த பேரனைத் தூக்கிச் செல்ல என்மகளின் நாத்தனார் (எனது மருமகன் கூடப் பிறந்தவள் - எனது பேரனுக்கு அத்தை) வந்திருந்தாள்.
எங்களது பேரனை எனது மனைவி தூக்கிக் கொடுக்க, பேரனின் அத்தை வாங்கிச் சென்றாள்.

பிறந்த குழந்தையை அத்தை வாங்கிச் செல்கிறாள்.
இது என்ன மரபு?

நாம் பிறந்து வளர்ந்து சிவனடி சேரும்வரை,
நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்.
அத்தனைக்கும் சிறப்பு இருக்கிறது.  
நாம் அறிந்தோ அறியாமலோ,
வழிவழியாக, வாழையடிவாழையாக 
நாம் நமது மரபுகளைப் பின்பற்றி வருகிறோம்.

அன்பன்
கி.காளைராசன்


Niranjan Bharathi

unread,
Nov 15, 2012, 11:55:21 PM11/15/12
to mint...@googlegroups.com
ஒரு சின்ன திருத்தம்.
அத்தை மடி மெத்தை அடி - இது வாலி எழுதிய பாட்டு. கண்ணதாசன் எழுதியது அல்ல. 

2012/11/16 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Nov 16, 2012, 12:04:07 AM11/16/12
to mint...@googlegroups.com
On Nov 15, 2012, at 8:55 PM, Niranjan Bharathi wrote:

ஒரு சின்ன திருத்தம்.
அத்தை மடி மெத்தை அடி - இது வாலி எழுதிய பாட்டு. கண்ணதாசன் எழுதியது அல்ல.
ஓ, திருத்தத்துக்கு மிக்க நன்றி! எனக்குக் கண்ணதாசன் + விசுவநாதன் + ராமமூர்த்தி + டி.எம்.எஸ் கலவையே மனதில் இருக்கு! :-)

கி.காளைராசன்

unread,
Nov 16, 2012, 7:17:16 AM11/16/12
to mint...@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2012/11/16 rajam <ra...@earthlink.net>

கீதா (+ கண்ணதாசன்) சொன்னதுபோல் "அத்தை மடி மெத்தையடி."
அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-) அத்தை-னா பிற்காலத்துலெ மாமியார் ஆகக்கூடிய தகுதி. அதுனாலெ தன் மருமகப் புள்ளெயெ அவங்க சரியாத் தூக்கிப் பிடிப்பாங்க. 

அக்கா,
குழந்தையின் கழுத்தைப் பிடித்து நல்லபடியாகக் குழந்தையைத் தூக்குவதைக் கருத்தில் கொண்டால், எனது அம்மா ஆறு குழந்தைகளைப் பெற்று வளர்த்தவர் அவரது கையிலேயே “இந்தாங்க உங்க பேத்தியைப் பிடிங்க“ என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். 
அதைவிடுத்து “அத்தை“ என்ற ஒரே காரணத்திற்காகக் குழந்தையை எனது இளவயதுத் தங்கையிடம் கொடுத்தார்கள்.

பாட்டிமடியைவிட,
அத்தை மடிக்கு அப்படியென்ன முதலுரிமை?

தம்பி
காளை

rajam

unread,
Nov 18, 2012, 7:06:23 PM11/18/12
to mint...@googlegroups.com, "கி.காளைராசன் Krishnan"
பிற்காலத்துலெ அந்த "அத்தை" வீட்டுக்குப் போகக்கூடிய புள்ளெ-னு சொல்லாமெ சொல்றாங்களோ? தெரீலெ.
  

அதொட, அந்த அப்பா புள்ளெயெப் பெத்த (!) மகிழ்ச்சிலெ தலெகால் புரியாம நெலெ தடுமாறி இருப்பாரு. அவரு கைலெயா பச்செப்புள்ளெயெக் குடுக்குறது?!!!

அது சரீ. காது குத்தும்போது ஏன் மாமா மடி முக்கியமாகுதாம்?
  
 
அப்புறம் ... திருமணத்தின்போது மாமன் தோள் தூக்குறது-னு ஒரு சடங்கு உண்டு. அப்பொ மட்டும் ஏன் மாமாக்கு உரிமை?
:-) :-) :-) 


Tthamizth Tthenee

unread,
Nov 19, 2012, 9:35:17 AM11/19/12
to mint...@googlegroups.com, "கி.காளைராசன் Krishnan"
மாங்காய்க்கு மிஞ்சின   ருசியுமில்லே
மச்சானுக்கு   மிஞ்சின உறவுமில்லே

 

மீன் பிடிக்கப் போகிறவர்கள் கூட  மச்சானிடம்  கயிறைக்  கொடுத்து பிடித்துக் கொள்ளச்   சொல்லிவிட்டு  தைரியமாகக் கடலில் இறங்குவர்

 

மாமா அத்தை  இரு உறவு முறைகள் தான்   முதன் முதலில் பெண்ணெடுத்து பெண்கொடுக்க  தகுந்த உறவாக இருந்தது
 
அதனால்  மாமனுக்கும் அத்தைக்கும்  முதல் மரியாதை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/11/19 rajam <ra...@earthlink.net>

செல்வன்

unread,
Nov 19, 2012, 11:33:03 AM11/19/12
to mint...@googlegroups.com


2012/11/15 rajam <ra...@earthlink.net>

அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-)


செல்வன் விதிவிலக்கு:-)

பிரசவ அறையில் முதல் முதலாக குழந்தையை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். மறக்க முடியாத அனுபவம். மனைவி கர்ப்பமாக இருக்கையில் கணவன் என்னென்ன செய்யவேண்டும் என்பதுக்கு பயிர்சி வகுப்பு எடுத்தார்கள். தம்பியோ, தங்கையோ பிறந்தால் எப்படி கவனிக்க வேன்டும் என்பதுக்கு முதல் குழந்தைக்கு பயிர்சி வகுப்புகள் எடுத்தார்கள். அதனால் குழந்தையை நான் தாராளமா கையில் எடுத்தேன். நம் ஊரிலும் இதுபோல வரவேண்டும்.
--
செல்வன்


செல்வன்

unread,
Nov 19, 2012, 11:42:27 AM11/19/12
to mint...@googlegroups.com


2012/11/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

மாமா அத்தை  இரு உறவு முறைகள் தான்   முதன் முதலில் பெண்ணெடுத்து பெண்கொடுக்க  தகுந்த உறவாக இருந்தது
 
அதனால்  மாமனுக்கும் அத்தைக்கும்  முதல் மரியாதை


உறவுகளுக்கு ஒவ்வொரு காரணத்துக்காக மரியாதை கொடுப்பது நம் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. முடிந்தவரை அவற்ரை கடைபிடிப்பது என இருக்கிறேன். அதே சமயம் அதை பெரிய விஷயமாக எடுத்துகொண்டு சிலர் சன்டைக்கு வரும் சூழலலையும் தவிர்க்க முனைகிறேன். சிலர் ஏன் பத்திரிக்கையில் பெயரை போடலை என்பதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துகொன்டு சன்டைக்கு வந்தது உன்டு. மனஸ்தாபங்களும் ஏற்பட்டது உண்டு. அம்மாதிரி ஏட்டிக்கு போட்டி அந்தஸ்து விஷயங்களாக இவை ஆகிவிடாமல் பார்த்துகொள்ளணும்.

ஒருதரம் கல்யான வீடு ஒன்றில் மாப்பிள்ளை வீட்டாருக்கு முதல் பந்தியில் இடம் இல்லை என்ற பிரச்சனையால் பெரிய அடிதடி சன்டை ஆகி கைகலப்பு வரை போய்விட்டது. கல்யானம் நிற்கும் சூழல் வந்து அப்புறம் நல்லவேளையாக நடந்தது. இம்மாதிரி விஷயங்களை அதனால் மரியாதை என எடுத்து கொள்ளாமல், பாரம்பரியம் என்ற அளவில் நிறுத்திகொள்வது நல்லது.

Innamburan Innamburan

unread,
Nov 19, 2012, 4:29:45 PM11/19/12
to mint...@googlegroups.com
செல்வன் விதி விலக்கு. கரீக்ட். 


2012/11/19 செல்வன் <hol...@gmail.com>

Narayan Swaminathan

unread,
Nov 19, 2012, 6:47:31 PM11/19/12
to mint...@googlegroups.com
நானும் என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது “லமாஸ்” வகுப்புகள்
எடுத்துக் கொண்டதுண்டு. அது எடுத்துக் கொண்டால்தான் மனைவி பிரசவத்தின்போது
கணவன் அருகில் இருக்கலாம். கணவன் அருகில் இருப்பது பெண்களுக்கு தைரியத்தைத்
தரும், கணவனுக்கும் மனைவி பிரசவிக்கும்போது என்ன பாடு படுகிறாள் என்பதை
நேரடியாய்ப் பார்ப்பதால் அன்பும் இரக்கமும் வரும் என்பதற்குதான் இது.
 
மூச்சை உள்ளிழுக்க, வெளியே விட, முக்க, முனக பயிற்சிகள். எல்லாம் முடிச்சாச்சு.
 
வலியெடுத்தவுடன் மருத்துவ மனை போனோம்.
 
சோதித்துவிட்டு, ”குழந்தையின் இதயத்துடிப்பு குறைகிறது, தொப்புள் கொடியில் கழுத்து
சிக்கிக்கொள்கிறது, ஆயுதம் போட்டுதான் எடுக்க வேண்டும். சர்ஜரி செய்யறச்சே உள்ள
இருக்க அனுமதி இல்லை, வெளியே உட்காருங்கள்” என்று அனுப்பி விட்டார்கள்.
 
சிறிது நேரத்தில் “உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார்கள்.
 
உள்ளே போனால் குழந்தையைக் காணோம்.
 
மனைவி அசையாமல் கண்மூடி படுத்திருக்கிறாள். பிரசவத்தில கோளாறு
போல. மனைவி இறந்துவிட்டாள் என்ற பயம் வந்து விட்டது.
 
அழுகை துக்கம் தாங்காமல் மயக்கம் வந்துவிட்டது.
 
டாக்டர் நர்சிடம், “அவரைப்பிடிச்சு உட்கார்த்தி வையுங்க. மயங்கறாரு.
ஜூசு குடுங்க” என்றார்.
 
என்னிடம் “என்ன உங்களுக்கு ? காலையில் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலயா?”
என்று கேட்க அழுகையுடன் மனைவியைச் சுட்டிக்காட்டி “என்னாச்சு சார்”
என்று கேட்டேன்.
 
“அவங்களுக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கோம். நல்ல வேளையா சிசேரியன்
தேவைப்படல. இன்னும் பத்து நிமிஷத்துல அவங்களுக்கு முழிப்பு வந்துடும்.
குழந்தயைக் கழுவ எடுத்துட்டு போயிருக்காங்க. ஆமா நீங்க இப்படி மயங்கி விழுந்தா
நான் உங்களுக்கு வைத்தியம் பண்ணறதா, இல்ல உங்க பெண்டாட்டிக்கு வைத்தியம்
பண்ணறதா ? போயி வெயிட்டிங் ரூம்ல இருங்க” என்று விரட்டினார்.
 
வெளியே வெயிட்டிங் ரூம் போனால் என் கண்களில் வழிந்த நீரைப் பார்த்து விட்டு
எல்லோரும் “என்ன சார், ஏதாவது பிரச்னையா” என்றார்கள். “இல்ல. எல்லாம்
நல்லபடியா ஆச்சு. குழந்தை பிறந்தாச்சு” என்றேன்.
 
“அதுக்கு ஏன் அழறீங்க. வாழ்த்துகள். ஆமா ஏன் உங்களை உடனே வெளியில
விரட்டிட்டாங்க” என்ற விசாரணை வேற.
 
அப்புறம் அரைமணி கழித்து உள்ளே போய் தாயையும் சேயையும் பார்த்தேன்.
 
டாக்டர் “நர்ஸ் குழந்தையை அவர்கிட்ட குடுங்க, எதுக்கும் பக்கத்திலேயே இருங்க..
அவரு மறுபடியும் மயக்கம் போட்டுடப் போறாரு” என்று நக்கலடித்தார்.
 
குழந்தையை சும்மா தூக்க முடியாது. அதுக்குன்னு ஒரு கவுன், கையுறை எல்லாம்
போட்டுக்கணும். இத்துனுண்டு குழந்தையைத் தூக்குவது இனிமையான அனுபவம்தான்.
 
ஆறு வருசம் கழிச்சு என் இரண்டாவது பெண், மனைவியை மருத்துவ மனையில் விட்டுவிட்டு
காரை பார்க் செய்துவிட்டு உள்ளே வருமுன்னேயே பிறந்து விட்டாள். உள்ளே போனால்
சின்னத் தொட்டிலில் போட்டிருக்கிறார்கள். தலையில் ஒரு பச்சை ரிப்பன் ஒட்டி இருந்தது.
செயின்ட் பாட்ரிக் டேயில் பிறந்ததால் இந்த அலங்காரம் செய்தார்களாம்.
 
பாவம் பெண்கள். ஒரு உயிரை முன்னூறு நாள் வயித்தில சுமந்து முக்கி முனகிப் பெறுதல்
மிகப்பெரிய செயல்தான்.
 
நாம் முப்பதுமூணு பெர்சண்ட் இடம் குடுக்க முக்கறது தப்புனுதான் தோன்றுகிறது.
 
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
 
 

No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 2013.0.2793 / Virus Database: 2629/5904 - Release Date: 11/18/12

Innamburan Innamburan

unread,
Nov 19, 2012, 9:25:25 PM11/19/12
to mint...@googlegroups.com
அந்தக்காலத்திலே பெரியவா, பிரசவத்தை ஒரு கண்டம் என்று சொல்வார்கள். குழந்தை பிறந்தபின் தாயும், சேயும்
நலம் என்பார்கள். பெரிய உயிர் என்று மரியதையாக சொல்வார்கள். ஒரு வெள்ளைக்கார டாக்டர் என்னிடம்  இது Transplant மாதிரி ஒரு புனர்ஜன்மம் என்று. 33% என்ன. ஜகத்தையே கொடுக்கலாம், சார்.
இன்னம்பூரான்

2012/11/19 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>

செல்வன்

unread,
Nov 19, 2012, 9:54:33 PM11/19/12
to mint...@googlegroups.com


2012/11/19 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>

பாவம் பெண்கள். ஒரு உயிரை முன்னூறு நாள் வயித்தில சுமந்து முக்கி முனகிப் பெறுதல்
மிகப்பெரிய செயல்தான்.
 
நாம் முப்பதுமூணு பெர்சண்ட் இடம் குடுக்க முக்கறது தப்புனுதான் தோன்றுகிறது.


ஒரு பர்சண்ட் கூட கொடுக்க கூடாது.

காரணம் கொடுக்கும் நிலையில் நாம் (ஆண்கள்?) இல்லை. வாங்கும் நிலையில் பெண்களும் இல்லை. திறமை உள்ளவர்கள் 100% பதவிகளையும் அடையவேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

எம்பி, எமெலே பதவிகளில் இட ஒதுகீடு என்பது பெண்களை முன்னேற்றாது. போட்டி போட்டு மேலே வரவேன்டும். அப்படி வந்த ஜெயலலிதா, இந்திரா, மம்தா போன்றோர் ஜொலித்தார்கள். பெண் என்பதற்காக ஜனாதிபதியாக ஒருவர் ஆக்கபட்டார். அவர் பெயராவது யாருக்காவது நினைவு இருக்கா?

பெண்கள் விக்டிம் மனபான்மைக்கு ஆளாககூடாது. ஆண்கள் நம்மை வஞ்சித்து விட்டார்கள், பதவிகளை அடித்து பிடிங்கு விட்டார்கள், அவர்களை கிழே தள்ளி நாம் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர கூடாது, ஆண்களுக்கும் வர கூடாது.

அரசியல் என்பது ரவுடித்தனம், மொல்லமாரிதனம், கேப்மாரிதனம் செய்துதான் ஜெயிக்கும் விஷயம். அப்படி செய்துதான் ஆண்கள் ஜெயிக்கிரார்கள். அப்படி ஜெயிப்பவர்களால் தான் சர்வதேச அரங்கில் பெர்வேஸ் முஷாரப்புடனும், அல்கொய்தாவுடனும் போட்டி போட்டு அரசியல் செய்ய முடியும். Women should beat men in that game.Many successful women have done that.

Narayan Swaminathan

unread,
Nov 19, 2012, 10:53:29 PM11/19/12
to mint...@googlegroups.com
இப்ப இருக்கிற அரசியல் திருமயிலாடுதுறை பேருந்து நிலையம்
போல இருக்கு.
 
சீர்காழி பஸ்ஸுக்கு ஜனங்க காத்திட்டு இருக்கும். பெண்கள் ஒரு வரிசையில நிக்கும். ஆண்கள் கூட்டம் கூட்டமா பிரிஞ்சு பீடி குடிச்சிட்டு இருக்கும்.
 
பஸ் வந்தவுடனே ஆண்கள் கூட்டம் பாய்ஞ்சு வந்து ஏறிடும். பெண்கள்
பாவமா “நாங்க வரிசல நிக்கிறோமில்ல”னு ஓலமிடும்.
 
“முடிஞ்சா நீயும் மோதி ஏறிக்க”னு கத்திட்டு இவனுக உள்ளே போயிடுவானுக.
 
“இவனுகளையும் பெத்தாளெ ஒருத்தி வேல மெனக்கிட்டு”னு
சாபமிட்டு, அப்புறம் கிடச்ச இடத்தில பெண்கள் வந்து ஏறிக்கும்.
 
பெண்கள் சட்டசபை, பாராளுமன்றத்துல கணிசமா இருந்தா, கூச்சல்
குறைவா இருக்கும்.  பேச எழுந்தா ‘டேய், உட்கார்டா’னு கத்தாது.
 
ஊழல் கொஞ்சம் குறைவா இருக்கும்.
 
வேட்டிய உருவற கலாச்சாரம் போகும்.
 
வயித்தில அடிக்காம, பாத்துப் போட்டுக் குடுங்கய்யா ! (;-)
 
சுவாமிநாதன்
 
 
----- Original Message -----
Sent: Monday, November 19, 2012 6:54 PM
Subject: Re: [MinTamil] உறவில் உள்ள மரபுகள் (அத்தை)



N. Kannan

unread,
Nov 20, 2012, 8:23:08 AM11/20/12
to mint...@googlegroups.com
சூப்பர் இடுகை!

எங்க அக்கா பிரசவத்திற்கு (மதுரை பொதுமருத்துவமனை) உதவிக்குப்போன என்
சித்திக்கு அக்காவிற்கு குளுகோஸ் ஏத்த குத்தின ஊசியிலே துளி ரத்தத்தைப்
பார்த்துட்டு மயக்கம் வந்துவிட்டது. நர்சுக்கு அக்காவைக் கவனிப்பதா,
சித்தியைக் கவனிப்பதா என்று தெரியவில்லை.

அ.முத்துலிங்கம், எல்லே சுவாமிநாதன் இருவருக்கும் நகைச்சுவை எழுத்து
என்பது கூடவே பொறந்தது போலும்!

நா.கண்ணன்

2012/11/20 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>:

Subashini Tremmel

unread,
Nov 20, 2012, 12:11:00 PM11/20/12
to மின்தமிழ், Subashini Tremmel


2012/11/20 செல்வன் <hol...@gmail.com>



2012/11/19 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>
பாவம் பெண்கள். ஒரு உயிரை முன்னூறு நாள் வயித்தில சுமந்து முக்கி முனகிப் பெறுதல்
மிகப்பெரிய செயல்தான்.
 
நாம் முப்பதுமூணு பெர்சண்ட் இடம் குடுக்க முக்கறது தப்புனுதான் தோன்றுகிறது.


ஒரு பர்சண்ட் கூட கொடுக்க கூடாது.

காரணம் கொடுக்கும் நிலையில் நாம் (ஆண்கள்?) இல்லை. வாங்கும் நிலையில் பெண்களும் இல்லை. திறமை உள்ளவர்கள் 100% பதவிகளையும் அடையவேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

எம்பி, எமெலே பதவிகளில் இட ஒதுகீடு என்பது பெண்களை முன்னேற்றாது. போட்டி போட்டு மேலே வரவேன்டும். அப்படி வந்த ஜெயலலிதா, இந்திரா, மம்தா போன்றோர் ஜொலித்தார்கள். பெண் என்பதற்காக ஜனாதிபதியாக ஒருவர் ஆக்கபட்டார். அவர் பெயராவது யாருக்காவது நினைவு இருக்கா?

பெண்கள் விக்டிம் மனபான்மைக்கு ஆளாககூடாது. ஆண்கள் நம்மை வஞ்சித்து விட்டார்கள், பதவிகளை அடித்து பிடிங்கு விட்டார்கள், அவர்களை கிழே தள்ளி நாம் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர கூடாது, ஆண்களுக்கும் வர கூடாது.

எனது கருத்தும் இதேதான் .
திறமையின் அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தகுந்த இடத்தைப் பெற வேண்டும். 

சுபா

 

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2012, 12:18:27 PM11/20/12
to mint...@googlegroups.com
திறமை என்று எதைச் சொல்லுகிறீர்கள்
உடலியல் உளவியல் ரீதியில் உள்ள வேறூபாடுகள் காரணமாக இரு பாலரையும் சமம்
என்று நினைப்பது நடத்துவது இயல்புக்கு மாறானது
வளர்ச்சியைத் தடை செய்வதை நிறுத்தினாலே போதும் அவர்கள் த்ங்களின் திறமையை
முழுமையாக வெளிப்படுத்த பயன்படுத்த

நாகராசன்

2012/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Nov 20, 2012, 12:28:07 PM11/20/12
to மின்தமிழ், Subashini Tremmel



2012/11/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

திறமை என்று எதைச் சொல்லுகிறீர்கள்
அறிவு, கல்வித் தகுதி, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் குவாலிட்டி, ரிஸ்க் மேனேஜ்மெண்ட்.  இதைத்தான்.

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

செல்வன்

unread,
Nov 20, 2012, 12:43:17 PM11/20/12
to mint...@googlegroups.com


2012/11/19 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>
இப்ப இருக்கிற அரசியல் திருமயிலாடுதுறை பேருந்து நிலையம்
போ
சீர்காழி பஸ்ஸுக்கு ஜனங்க காத்திட்டு இருக்கும். பெண்கள் ஒரு வரிசையில நிக்கும். ஆண்கள் கூட்டம் கூட்டமா பிரிஞ்சு பீடி குடிச்சிட்டு இருக்கும்.
 
பஸ் வந்தவுடனே ஆண்கள் கூட்டம் பாய்ஞ்சு வந்து ஏறிடும். பெண்கள்
பாவமா “நாங்க வரிசல நிக்கிறோமில்ல”னு ஓலமிடும்.
 
“முடிஞ்சா நீயும் மோதி ஏறிக்க”னு கத்திட்டு இவனுக உள்ளே போயிடுவானுக.


அதுக்கு லாஸ் ஏஞ்சலீஸில் இருப்பது மாதிரி "முதலில் வந்தவர்களுக்கு சீட்டு" எனும் முறையை அறிமுகப்படுத்தினால் போதுமே? ஆண்- பெண் பேதமின்றி முதலில் வருபவர்களுக்கு சீட்டு கிடைக்கும்.

பெண்களுக்கு இத்தனை சதவிகிதம் என ஒதுக்கினால் அதில் லல்லுபிரசாத்துக்கு பதில் ரப்ரி தேவியை நிற்க வைப்பார். மாநகராட்சி தேர்தலில் எங்க வார்டு பெண்களுக்கு ஒதுக்கபட்டதால் கவுன்சிலருக்கு பதில் அவர் மனைவியை நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார். அந்த அம்மா கணவன் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுகிட்டு ரப்பர் ஸ்டாம்பு கவுன்சிலரா இருக்காங்க. மாகராட்சி மீட்டிங்குகளில் அவர் வாயை திறப்பதே இல்லை. அதனால் வார்டு பிரச்சனைகள் மன்றத்தில் பேச ஆள் இல்லை. இதே பொது களத்தில் ஆண்களுக்கு சமமா இறங்கி ஜெயிச்சு முதல்வரான மம்தா, அம்மா எல்லாம் எப்படி துடிப்பா செயல்படறாங்க?

அதனால் இம்மாதிரி இட ஒதுகீட்டு முறையில் பெண்களை ஜெயிக்க வைப்பது அவர்களுக்கும் நல்லதல்ல, சமூகத்துக்கும்ந் அல்லதல்ல. ரப்ரிதேவி முதல்வர் ஆனதால் பீகாரில் பெண்கள் நலன் என்ன முன்னேற்றம் அடைந்தது?

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2012, 12:52:56 PM11/20/12
to mint...@googlegroups.com
மூளை தொடர்பான ஆய்வு முடிவுகள் மனித மூளையின் இடம் வலப் பகுதிகளைப்
பயன்படுத்துவதில் ஆண் பெண் இருவரும் வேறுபடுகிறார்கள் என்று
குறிப்பிடுகிறது

அதுபோன்றே ஐ க்யூ பெண்களைப் பொருத்தமட்டில் 160 என்ற அளவுக்கு மிகாமல்
நிலைப்பதாகவும் அதனால் ஆண்களுக்கே உரிய ஜீனிய்ஸ் நிலை என்ற மாறுபடும்
சிந்தனை வேகம் பெண்களுக்கு இல்லை என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது

மேலாண்மையில் பீட்டர் விதி என்ற ஒரு நியதி ஒரு பதவியில் நீடிக்கும்போது
அப்பதவிக்கான செயல்களை மேற்கொள்ளும் சக்தியை இழக்கும்போது அவன் அடுத்த
உயர்பதவிக்குச் செல்கிறான் என்று விளக்கும். பெண்கள் தாங்கள்
எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும் திறனை ஒரு போதும் இழக்காமல் இருப்பதால்
அவர்கள் பதவி உயர்வு அதிகம் பெறுவதில்லை

இதுவே ஏன் அதிகமாக ஆண்கள் மேலாண்மைப் பதவிகளில் இருப்பதை விளக்குவதாகவும்
குறிப்பிடப்படுகிறது

Innamburan Innamburan

unread,
Nov 20, 2012, 12:57:52 PM11/20/12
to mint...@googlegroups.com
 நான் கூட ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்தேன். அத்தனை சுலபமாக தீர்வு காணமுடியாது. ஓட்டப்பந்தயத்தில் handicap கொடுப்பது 
இல்லையா? You cannot throw the baby with the bathwater. ஒரு வழிமுறையை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். வழிமுறையை ஒழிப்பதில் நஷ்டம் தான். என் கருத்துக்களை பதிய நீண்ட கட்டுரை ஆகிவிடும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் domestic violence என் ஆய்வில் அலசியபோது, இந்திய நிலைமையின் படு மோசமான நிலையை கண்டு நடுங்கினேன். நீங்கள் நல்லவர்கள். தேங்க்ஸ்
இன்னம்பூரான்

2012/11/20 செல்வன் <hol...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 20, 2012, 1:00:45 PM11/20/12
to mint...@googlegroups.com
பீட்டர் விதி நியதி அல்ல. அது ஒரு கேலி. எனக்கு தெரிந்த வரை மூளை தொடர்பான ஆய்வு முடிவுகள் நீங்கள்
சொல்லும் முடிவுக்கு வந்ததாக செய்தி இல்லை. நீங்கள் விவரங்கள் கொடுங்கள். நான் தேடிப்பார்க்கிறேன்.
இன்னம்பூரான்

2012/11/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Sampath Ramaswami

unread,
Nov 20, 2012, 1:24:39 PM11/20/12
to mint...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Nov 20, 2012, 1:26:15 PM11/20/12
to mint...@googlegroups.com
Sampath, I do not see your input here.
innamburan

2012/11/20 Sampath Ramaswami <ramaswam...@gmail.com>

செல்வன்

unread,
Nov 20, 2012, 3:18:36 PM11/20/12
to mint...@googlegroups.com


2012/11/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

மேலாண்மையில் பீட்டர் விதி என்ற ஒரு நியதி ஒரு பதவியில் நீடிக்கும்போது
அப்பதவிக்கான செயல்களை மேற்கொள்ளும் சக்தியை இழக்கும்போது அவன் அடுத்த
உயர்பதவிக்குச் செல்கிறான் என்று விளக்கும்.  பெண்கள் தாங்கள்
எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும் திறனை ஒரு போதும் இழக்காமல் இருப்பதால்
அவர்கள் பதவி உயர்வு அதிகம் பெறுவதில்லை


மூளைக்குள் என்ன இருக்கு, இல்லை என்பது நம் கட்டுபாட்டில் இல்லை. அது ஆண்டவன் படைத்தது. நாம் செய்யவேன்டியது பாலின அடிப்படையில் வாய்ப்புக்கள் மறுக்கபடாத சமூகத்தை படைப்பதே. மற்றபடி இந்த பீட்டர் விதியை எல்லாம் நான் நம்பவில்லை. பெப்சி தலைவர் இந்திரா நூயி ஒரு பெண். யாஹு தலைவர் ஒரு பெண். நிர்வாகதிறன் இல்லாமலா அவர்கள் பதவிக்கு வந்தார்கள்?

வாய்ப்பு மறுக்கபடாமல் இருந்தால் பெண்கள் இயல்பாக முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது

Innamburan Innamburan

unread,
Nov 20, 2012, 4:33:47 PM11/20/12
to mint...@googlegroups.com
வாய்ப்பு மறுக்கபடாமல் இருந்தால் பெண்கள் இயல்பாக முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது.

~ பாயிண்ட் மேட்.
~ தட் ஈஸ் தெ ரப்.
~ வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?
~ இல்லையென்றால், பெண்கள் சமூகம் ஏன் முன்னேறவில்லை?
~ ஆம் என்றால், உதவியது என்ன?
இன்னம்பூரான் 

2012/11/20 செல்வன் <hol...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 20, 2012, 4:46:34 PM11/20/12
to மின்தமிழ், Subashini Tremmel
>>~ வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?
ஆம். பல்வேறு வகைகளில் எனக் கூறலாம். சடங்குகள் சம்பிரதாயங்கள், சமூக எதிர்பார்ப்பு, ஜாதி கொள்கை. குடும்ப எதிர்பார்ப்பு, குடும்பத் தேவைகள், என பற்பல வகைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் என வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்திக் கொள்ளாத பெண்கள் இருக்கின்றனர். இந்த நிலை ஆண் சமூகத்திலும் உண்டு. ஆக இரு பாலருக்கும் பொருந்தும் ஒரு விஷயம்தான் இது.

எனது அனுபவத்தில் உதாரணமாகச் சொல்வதென்றால், மலேசியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பெண்கள் கல்வித்துறைகளிலும் வேலை வாய்ப்புக்களிலும் மிகப் பெரிய அளவில் பங்கெடுத்துக் கொண்டும் பணி புரிந்தும் வருகின்றனர். தாய்லாந்து, வியட்னாம்  போன்ற நாடுகளிலும் இதனைக் காணலாம். மலேசியாவில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு உண்டு; 50%க்கும் மேல் கூட சில துறைகளில் என இருப்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கின்றேன். இங்கு பெண்களை வெளி உலக வேலைகளிலுருந்து ஒதுக்கும் சமூக நடைமுறை ஏறக்குறைய குறைந்து விட்டது (ஒரு சில மிகத் தீவிரமான இஸ்லாமிய சமூகத்தினரைத் தவிர்த்து) . இதனால் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முன்னேறும் பெண்களை இங்கே உதாரணமாகக் காணலாம்.

சுபா

2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 20, 2012, 5:05:49 PM11/20/12
to mint...@googlegroups.com
முதல் உலகயுத்த காலகட்டத்திலேயே, இங்கிலாந்தில் பெண்களில் சமுதாய பங்கு அதிகரிக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள்
கழிந்த பின் இன்று பெண்கள் பிஷப்களாக ஆகமுடியாது என்று ஆண்கள் ஆங்கிளிக்கன் கிருத்துவத்துறை தீர்மானித்து இருக்கிறது. இந்திய நிலைமை நீங்க்ளே ஊகித்துக்கொள்ளலாம்.
இன்னம்பூரான்

2012/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 20, 2012, 5:14:50 PM11/20/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

முதல் உலகயுத்த காலகட்டத்திலேயே, இங்கிலாந்தில் பெண்களில் சமுதாய பங்கு அதிகரிக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள்
கழிந்த பின் இன்று பெண்கள் பிஷப்களாக ஆகமுடியாது என்று ஆண்கள் ஆங்கிளிக்கன் கிருத்துவத்துறை தீர்மானித்து இருக்கிறது. இந்திய நிலைமை நீங்க்ளே ஊகித்துக்கொள்ளலாம்.

ஊகிக்க முடிகின்றது..
ஒரு தகவலுக்காக.. ஜெர்மனியில் ப்ரோட்டெஸ்டன் கிறிஸ்துவ  மதத் தலைவராக ஒரு பெண் பதவி வகித்தார் (2009 -2010ம் ஆண்டு மார்கரெட் கஸ்மான் ) என்பதும்   இம்மதப்பிரிவின் செனட் சபைத்தலைவராக ஒரு பெண் 7 ஆண்டுகள் (2003 - 2009 பார்பரா ரிங்க்கெ) பதவி வகித்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கவை.

சுபா

செல்வன்

unread,
Nov 20, 2012, 7:28:34 PM11/20/12
to mint...@googlegroups.com
2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

பாயிண்ட் மேட்.
~ தட் ஈஸ் தெ ரப்.
~ வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?
~ இல்லையென்றால், பெண்கள் சமூகம் ஏன் முன்னேறவில்லை?
~ ஆம் என்றால், உதவியது என்ன?



பெண்கள் சமூகம் முன்னேறவில்லை என யார் சொன்னது? ஆசியநாடுகளில் நாடுகளில் முன்னேறலை, மேற்கு நாடுகளில் முன்னேறிவிட்டார்கள்.

முன்னேறாமல் இருக்கும் நாடுகளிலும் முந்தைய தலைமுறையை ஒப்பீட்டால் நன்கு மாற்றம் தெரிகிறது. இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகளில் இந்தியாவில் மேலும் மாற்றம் வரும். மத்தியகிழக்கில் ஒரு நாலைந்து தலைமுறை கூடுதலாக எடுக்கலாம்.
 
உதவியது என்ன என கேட்டால் ஜனநாயகம், கல்வி, சட்டம், சமூகம் அடைந்த மாற்றம், அதற்கு போராடிய தலைவர்கள் என பல காரணங்களை சுட்டி காட்டலாம்.
--
செல்வன்

செல்வன்

unread,
Nov 20, 2012, 7:40:08 PM11/20/12
to mint...@googlegroups.com
2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

முதல் உலகயுத்த காலகட்டத்திலேயே, இங்கிலாந்தில் பெண்களில் சமுதாய பங்கு அதிகரிக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள்
கழிந்த பின் இன்று பெண்கள் பிஷப்களாக ஆகமுடியாது என்று ஆண்கள் ஆங்கிளிக்கன் கிருத்துவத்துறை தீர்மானித்து இருக்கிறது. இந்திய நிலைமை நீங்க்ளே ஊகித்துக்கொள்ளலாம்.


பிஷப்பாக ஆவதுதான் பெண்கள் முன்னேற்றமா? ஒப்பீட்டளவில் கிறிஸ்தவ நாடுகளில் பெண்கள் நிலை மிக,மிக பரவாயில்லை. இம்மாதிரி விஷயங்களை அதனால் எவ்வகை குறியீடாகவும் கருத வேண்டியது இல்லை. விதியை இன்னமும் கடுமையாக்கி "பெண்கள் Nun ஆக முடியாது" என மாற்றினால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன்:-)

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2012, 8:50:51 PM11/20/12
to mint...@googlegroups.com
//மூளைக்குள் என்ன இருக்கு, இல்லை என்பது நம் கட்டுபாட்டில் இல்லை. அது

ஆண்டவன் படைத்தது. நாம் செய்யவேன்டியது பாலின அடிப்படையில் வாய்ப்புக்கள்
மறுக்கபடாத சமூகத்தை படைப்பதே. மற்றபடி இந்த பீட்டர் விதியை எல்லாம் நான்
நம்பவில்லை. பெப்சி தலைவர் இந்திரா நூயி ஒரு பெண். யாஹு தலைவர் ஒரு பெண்.
நிர்வாகதிறன் இல்லாமலா அவர்கள் பதவிக்கு வந்தார்கள்?

வாய்ப்பு மறுக்கபடாமல் இருந்தால் பெண்கள் இயல்பாக முன்னேறுவதை யாரும்

தடுக்க முடியாது//

மூளையைக் கடவுள் படைத்தார் அது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை என்று
வாதிடும்போது நான் ஒதுங்கிக்க் கொள்ளத்தான் வேண்டும். பெண்களுக்காக
வாதிடுவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை
அலசு மறுக்கும்போது நான் என்ன செய்ய முடியும்

ஆணும் பெண்ணும் சமம் ஈக்வல் என்பது திசை திருப்பும் வாதம் அவர் அவர்
திறமைக்கேற்ப வளர்வதைத் தடை செய்தும் சக்திகளைத் தடுத்து நிறுத்துவது
ஈக்விடி. இதைச் செய்ய ஒரு புதிய சமுதாஉஅம் படைக்கப்படவேண்டும் என்று
வாதிடுவது வியுப்புக்குரியது

தனக்கு என்ன வேண்டும் என்று முடிவெடுக்கும் திறன் எம்பவர்மென்ட்

தன்னால்தான் முடியும் என்று எண்ணிச் செயலில் இறங்கும் பண்பு லோகஸ் ஆஃப்
டெசிசன் மேகிங்

இதையெல்லாம் தாரளமாக பெற்றவர்கள் ஆணுக்கு நிகராக என்று சொல்லக் கூடாது
ஆணை விஞ்சி முன்னேற முடியும்

ஏதோ தாய்க்குலங்களைத் தாங்கிப்பிடிப்பதாக நினைத்து என்னைத் தாக்க
வேண்டாம். சமுதாஉஅம் என்றால் குழுக்களின் உரசல் இல்லாமல் இருக்காது.
ஒரு குழுவை அதாவது ஆண்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதும் பெண்கள்
வளர்ந்து விடுவார்கள் என்று நினைப்பது சரியல்ல

இந்தியா போன்று சீனாவும் 50 ஆண்டுகளுக்கு முன் பெண்ணியம் பற்றிய சிந்தனை
இல்லாமல் அத்ன் சரிபாதி மனித வளத்தைப் பயன்படுத்தாமல் பழமை வாதம்
பேசிக்கொண்டிருந்த நாடுதான்

இன்று சங்காயில் 65% விழுக்காடு விமான நிலையக் காரோட்டிகள் பெண்கள்

பெண்களை அவர்கள் கட்டியுள்ள கண்ணாடிக்கூட்டிலிருந்து வெளிவரச்
சொல்லுங்கள் வளர்ச்சி கண்முன்

மனிதனின் வளர்ச்சி மனிதனால் மட்டுமே முடியும். Who can develop man Man
himself - Julius Nyerere, President of Tanzania

பெண்களின் முன்னெற்றம் பெண்களால் மட்டுமே முடியும்

அவர்கள் ஆண்களை நம்புவது அவர்களின் முன்னேற்றதுக்கு தடை ஆடு கசாப்புக்
கடைக்காரனை நம்புவது போன்றது

ஏற்கனவே வீட்டில் பெண்களின் கொடுங்கோல் இங்கே இணையத்திலுமா

வேண்டாமடா சாமி

நாகராசன்.

2012/11/21 செல்வன் <hol...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2012, 9:31:11 PM11/20/12
to mint...@googlegroups.com
பீட்டர் விதி நியதி அல்ல என்று வாதிட்டாலும் அதை ஒரு அனுமானமாக
எடுத்துக்கொண்டு ஆய்வு நடத்தப் பட்டுள்ளது

மேலாண்மைத் துறையில் உயர் பதவியில் ஏன் பெண்கள் அதிகம் இல்லை என்பது
தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு இது ஒரு விளக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது

நாகராசன்

2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2012, 9:39:57 PM11/20/12
to mint...@googlegroups.com
ஒரு குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தை மூன்றாண்டுகள் வளர்ச்சியடையும்
வரை சரிவிகிதச் சத்துணவு வழங்கப்படாவிடில் அதன் அறிவு வளர்ச்சிக்கு
ஆதாரமான மூளைப் பகுதிகள் வலுவிழந்து விடும் அதன் காரணமாக அதன் பிற்கால
வளர்ச்சி முழுமையானதாக இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறது

பிறந்த குழந்தைகளில் உணவில் ஆண் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து பெண்
குழந்தைக்குச் சரிவர் உணவு கொடுக்காத சராசரி தமிழ்த் தாயை நீங்கள்
பாராட்டுவீர்களா

பிறந்த மறு வினாடியே பெண் குழந்தை என்றால் கொண்ரழிக்கும் செயலில்
ஈடுபவுவது பெண்கள் அதில் தாய் எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் அமையியாக
வருந்தினால் போற்றுவிர்களா

குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் குழந்தைகளில் அதிகம் பெண்
குழந்தைகளா அல்லது ஆண் குழந்தைகளா? அவ்வாறு விசி எறியும் தாயைப்
பாராட்டுவீர்களா

வெளிச்சந்தையில் விறமை ஆகும் குழந்தைகளில் அதிகம் ஆண் குழந்தைகளா பெண்
குழந்தைகளா பெற்ற குழந்தையை விற்கும் தாய் பெண்ணியத்தின் சின்னம் என்று
பாராட்டுவீர்களா

நாகராசன்

2012/11/21 Innamburan Innamburan <innam...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Nov 20, 2012, 10:16:25 PM11/20/12
to mint...@googlegroups.com
பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டு வருவதாக ஒரு ப்ரமையை ஏற்படுத்தி  அவர்களுக்கு சலுகை அளிக்கிறோம் என்கிற பேரில்

 

அந்த மாணவர்கள்  30   மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று வரையறைத்து
 
அந்த மாணவர்களின்  திறமையை ஊக்குவிக்காமல்
 
30 மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அவர்களை நினைக்க வைத்து
 
அவர்களின்  உண்மையான அறிவு வளர்ச்சியை தடுத்தார்கள்.
 
படிக்க வேண்டும் ,படித்தால்தான் மதிப்பெண் பெற முடியும் ,  படித்தால்தான் அறிவு பெற முடியும்  என்பதை அவர்களுக்கும் உணர்த்தி, அவர்களாலும் படிக்க முடியும்  என்று உணர்த்த தவறி விட்டார்கள்.
 
ஏன் இதை இங்கே சொல்கிறேனென்றால்
 
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடற்கூறு வித்யாசப் படுகிறதே ஒழிய  மூளைத் திறனில் வித்யாசம் இல்லை
 
ஆகவே
ஆண் பெண் இன வித்யாசம் பாராமல் இருந்தாலே பெண்கள் தாமாகவே முன்னேறுவர் என்பதில் ஐயமில்லை.
 
பல பெண்கள் இப்போதும் ஆண்களை விடத் திறமையாக நாடாளுகின்றனர்..
பல பெரிய பதவிகள் வகிக்கின்றனர். பல பொறுப்புகலிளி இருக்கின்றனர்.
 
ஆகவே பெண் சக்தியை குறைவாக மதிப்பிட்டு  அவர்களுக்கு சலுகை வழங்குகிறோம் என்கிற பெயரில்  அவர்களையும் இயலாதவர்களாக ஆக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
 
ஆகவே பெண்களை பெண்களாக மதித்து அவர்களின் திறமையை தூண்டுதலே சரியான வழி முறையாக இருக்கும்.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


 
2012/11/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

செல்வன்

unread,
Nov 20, 2012, 11:10:46 PM11/20/12
to mint...@googlegroups.com


2012/11/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஏதோ தாய்க்குலங்களைத் தாங்கிப்பிடிப்பதாக நினைத்து என்னைத் தாக்க
வேண்டாம்.  சமுதாஉஅம் என்றால் குழுக்களின் உரசல் இல்லாமல் இருக்காது.
ஒரு குழுவை அதாவது ஆண்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதும் பெண்கள்
வளர்ந்து விடுவார்கள் என்று நினைப்பது சரியல்ல



ஐயா,

இங்கே இந்த இழையில் நீங்கள் உட்பட யாரும் பெண்களுக்கு எதிராக பேசவில்லை. அதனால் நீங்கள் எடுத்து போட்ட ஒரு விதியை நான் நம்பவில்லை என சொல்வதால் உங்களை நான் தாக்குகிறேன் என பொருள் அல்ல.

அறிவியல் ஆய்வுகள் இன்று ஒன்று சொல்லும், நாளை மற்றொன்றை சொல்லும். அதனால் ஒரு அனுமானம் நிருபிக்கபட்ட உண்மையாக ஆகாதவரை அதை உறுதியாக நம்பி முடிவுகள் எடுப்பதில் பயனில்லை என்பது என் கருத்து. அதனால் இந்த விதியை நான் நம்பவில்லை. நீங்கள் அதை பயன்படுத்தி இந்த இழையில் உங்கள் கோணத்தில் தீர்வுகள் சொல்வதை நான் தடுக்க போவது இல்லை.

ஒரு பிரச்சனைக்கு பலவித அணுகுமுறைகள், கருத்துக்கள் இருப்பது புரிந்துகொள்ள கூடியதே.
--
செல்வன்

Sampath Ramaswami

unread,
Nov 21, 2012, 11:55:36 AM11/21/12
to mint...@googlegroups.com
’பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா!’ என்றார் மஹாகவி.பெண்ணை மலிவாக
எடைபோடும் ஆண்கள் உள்ளவரை பெண்ணினத்தின் துயர் தீராது.
பெண்களை மதிக்காத நாட்டிற்கு கதி மோக்‌ஷம் கிடையாது. பெங்களூர்
ரமணியம்மாள் குறித்து மேதை நரஸய்யாவின் பகிர்வு னெ நெஞ்சைத் தொட்டடு.
ஸம்பத்

> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

Subashini Tremmel

unread,
Nov 21, 2012, 1:58:17 PM11/21/12
to மின்தமிழ், Subashini Tremmel



2012/11/21 Sampath Ramaswami <ramaswam...@gmail.com>
..

ரமணியம்மாள் குறித்து மேதை நரஸய்யாவின் பகிர்வு னெ நெஞ்சைத் தொட்டடு.
இந்த விஷயம் பற்றிய பதிவை நான் வாசிக்கவில்லை. இதே இழையில் வந்ததா? எனக்கு இந்த மடல் வரவில்லை என்பதால் கேட்கின்றேன்.

சுபா

கி.காளைராசன்

unread,
Nov 24, 2012, 4:49:27 AM11/24/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

எனது மகள் பிறந்திருந்தபோது, மருத்துவமனையில் என்னிடமும் கொடுத்தனர்.  ஐயா செல்வன் குறிப்பிடுவதுபோல, அது  மறக்கமுடியாத அனுபவம்.

ஆனால், முறைப்படி குழந்தைச் தூக்கிச் செல்லும் போது 
அத்தையிடம்தான் குழந்தையை ஒப்புவிக்கின்றனர்.  இந்த மரபுதான் ஆச்சரியமாக உள்ளது.
எனது மகளுக்கு அத்தைமடி மெத்தையாக இருந்ததோ என்னவோ?
எனது தங்கை, எனது மகளை வாங்கியதும் குமட்டில் குத்தினாள்! கன்னத்தைக் கிள்ளினாள்.
ஆனால், பாசத்தைப் பொழிந்தாள்.

இன்றும் எனது மகள்மீது எனது தங்கைக்குப் பாசம் அதிகமே.

அன்பன்
கி.காளைராசன்



2012/11/19 செல்வன் <hol...@gmail.com>


2012/11/15 rajam <ra...@earthlink.net>
அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-)


செல்வன் விதிவிலக்கு:-)

பிரசவ அறையில் முதல் முதலாக குழந்தையை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். மறக்க முடியாத அனுபவம். மனைவி கர்ப்பமாக இருக்கையில் கணவன் என்னென்ன செய்யவேண்டும் என்பதுக்கு பயிர்சி வகுப்பு எடுத்தார்கள். தம்பியோ, தங்கையோ பிறந்தால் எப்படி கவனிக்க வேன்டும் என்பதுக்கு முதல் குழந்தைக்கு பயிர்சி வகுப்புகள் எடுத்தார்கள். அதனால் குழந்தையை நான் தாராளமா கையில் எடுத்தேன். நம் ஊரிலும் இதுபோல வரவேண்டும்.

--
செல்வன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Dec 2, 2012, 4:05:42 AM12/2/12
to mint...@googlegroups.com
//பெண்கள் விக்டிம் மனபான்மைக்கு ஆளாககூடாது. ஆண்கள் நம்மை வஞ்சித்து விட்டார்கள், பதவிகளை அடித்து பிடிங்கு விட்டார்கள், அவர்களை கிழே தள்ளி நாம் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர கூடாது, ஆண்களுக்கும் வர கூடாது. //


செல்வனோடு நூற்றுக்கு இருநூறு சதம் ஒத்துப் போகிறேன். (எத்தனாவது முறை?)



2012/11/20 செல்வன் <hol...@gmail.com>



பெண்கள் விக்டிம் மனபான்மைக்கு ஆளாககூடாது. ஆண்கள் நம்மை வஞ்சித்து விட்டார்கள், பதவிகளை அடித்து பிடிங்கு விட்டார்கள், அவர்களை கிழே தள்ளி நாம் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர கூடாது, ஆண்களுக்கும் வர கூடாது.

அரசியல் என்பது ரவுடித்தனம், மொல்லமாரிதனம், கேப்மாரிதனம் செய்துதான் ஜெயிக்கும் விஷயம். அப்படி செய்துதான் ஆண்கள் ஜெயிக்கிரார்கள். அப்படி ஜெயிப்பவர்களால் தான் சர்வதேச அரங்கில் பெர்வேஸ் முஷாரப்புடனும், அல்கொய்தாவுடனும் போட்டி போட்டு அரசியல் செய்ய முடியும். Women should beat men in that game.Many successful women have done that.
360.gif
Reply all
Reply to author
Forward
0 new messages