மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

802 views
Skip to first unread message

meenavan2

unread,
Jan 15, 2014, 2:55:59 AM1/15/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

பதிப்புரை

"மாதவ மேகலை" என்னும் இக்காப்பியத்தை வெளியிடுவதில் வானதி பதிப்பகம் மிக்க ம்கிழ்ச்சி அடைகிற்து.உரைநடை நூல்களே
பெருகிவரும் இக்காலத்தில் செய்யுள் இலக்கியங்கள் அத்தி பூத்தது போல் அருமையாக்ப் படைக்கப் படுகின்றன.செய்யுளிலும் புதுக்
கவிதை ஆட்சி செய்து  வருகின்றது.இந்நிலையில்  கவிஞர் மீனவன் ம்ரபுக் கவிதையில் வளம் நிறைந்த காப்பியத்தை நமக்குத்
தந்துள்ளார்.

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை  இயற்றப் பெற்றது.மணிமேகலையில் அக்காப்பியத் த்லைவியின் முழு வாழ்வும்
நிறைவு  பெறவில்லை.எனவே மணிமேகலைக் காப்பியத்தில் இருந்து மற்றொரு காப்பியம் பிறக்க வழி இல்லையா?என அண்ணா
மலைப்  பல்கலைத் தமிழ்த்துறைத் தலைவர்,பேராசிரியர்,கலைமாமணி,டாக்டர்,ஆறு.அழகப்பன் அவர்கள் ஒரு வினாவை எழுப்பி
னார்.அவர் ஒரு ந்ல்ல ப்டைப்பாளர்.ஆதலால் அவர்களின் வினாவில் படைக்க முடியும் என்ற குறிப்புப் பொருள் பொருந்தியிருத்
தல் இயல்பே.அவர்களின் எண்ணத்தை ம்துரைத் தமிழ்ச் சுரங்கத்தார் செயற்படுத்தக் கருதினர்.அதன் விளைவே மாதவ மேகலை.
இதனைப்  படைத்த ஆசிரியர் மீனவன் காப்பியக் கவிஞர் என்னும் தகுதி பெற்றதுடன்,தமிழ்ச் சுரங்கத்தாரின் பொற்கிழியையும்
பெற்றுச் சிறப்புக்கு உரியவராகத் திகழ்கின்றார்.

மாதவ மேகலை - இந்நாள்  உலகியல் போக்கில் வேண்டத் தக்க காப்பியமாகும்.இது மணிமேகலையைப் போலவே பஸ்ப்யொழிப்
பினை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்ட காப்பியம்." உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதனை வலியுறுத்தும்
இலக்கியம்.இகாப்பியத்தில் காணப்படும்  அறக்கருத்துக்கள் என்றும் பாராட்டத்தக்க சிறப்புக் கொண்டன.திருமணம் ஆகாத பெண்
களுக்குத் திருமண்ம் செய்து வைத்தலைப் பேரற்ம் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது.இது புதிய அறமானாலும் மக்கள் வாழ்வில்
நடைமுறைப் படுத்த வேண்டிய சமுதாய அறம்.இது போன்ற நல்வாழ்வுக் கருத்துக்கள் இந்நூலில் பரந்து கிடக்கின்றன.

சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர்.இவ்விரண்டுடன் மாதவ மேகலையையும் இணைத்து " முக்காப்பியங்கள்" எனத் த்மிழ் கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும் என்பது,பேராசிரியர்,கலைமாமணி,டாக்டர்;
ஆறு.அழ்கப்பனார் அவர்களின்  எண்ணம்.இந்த எண்ணம் நிறைவேறும் என்பதனை இக்காப்பியத்தைப் படிப்பவர்கள் அறிவார்கள்.

இக்காப்பியத்திற்குச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர்,டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரை
நல்கியுள்ளார்கள்.இவர்களின் அணிந்துரை இக்காப்பியத்திற்கு அணி செய்கின்றது.இவர்களுக்கு என் உளமார்ந்த  நன்றி என்றும்
உரியது.

பதிப்புலகில் தமிழ்த்தாத்தா உ.வே.சா.அவர்கள் த்ன்னிகர் இல்லாத் தலைமையாளர்.அவர்களின் பதிப்பினைப் போல் இக்காப்பி
யத்தை வெளியிட வேண்டும் என்பது என் ஆவல்.அது ஓரளவு நிறைவேறியுள்ளது.

மாதவ மேகலை தமிழ்த்தாயின் அணிகலன்களில் புதிய அணிகலன்.இதனைத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டி வரவேற்கும்
என்ற நம்பிக்கை  எனக்கு உண்டு.
 
இந்நூலினை  அழகுற  அச்சிட்ட சிதம்பரம் இராமகிருட்டிணா அச்சகத்திற்கு என் நன்றி.

25.12.85.                                                                                                                                            வானதி திருநாவுக்கரசு

meenavan2

unread,
Jan 15, 2014, 7:43:43 AM1/15/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

கதைச் சுருக்கம்

மனித வரலாற்றில் தீரா நோயாக் இருப்பது பசிப்பிணி.உலகம் தோன்றியது முதல் இப்பசிப்பிணி போக்க எடுத்துக் கொண்ட முயற்சி
கள் பல.
" அற்றார்  அழிபசி  தீர்த்தல் அஃதொருவன்
   பெற்றான் பொருள்வைப் புழி"
என்பது வள்ளுவம்.பசிப்பிணி ம்ருத்துவர்கள் பலரிருந்த  உண்மையைச் சங்கத்தமிழ் பரக்கப் பேசுகிற்து.பசிப்பிணி போக்கும் கருத்தை மையமாகக் கொண்டே ம்துரைக் கூல  வாணிகன் சீத்தலைச் சாத்தனார் "மணிமேகலை"என்ற்தோர் தீந்தமிழ்க் காப்பியத்
தைப் பாடினார்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடலூர் வள்ளலார் பசிப்பிணி நீக்குதலைச் சன்மார்க்க நெறிகளில் ஒன்றாகக் கருதி
னார்.சத்திய ஞான தர்மச்சாலை அவர் கண்ட அன்னசாலை.அவர் கால்த்தில் மூட்டிய அடுப்புத்தீ இன்னும் அணையாமல் எரிந்து
கொண்டிருக்கின்ற்து.மக்களின் பசித்தீ இன்னும் அணையவில்லை.வள்ளற் பெருமான்,மணிமேகலை,இருபதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த பாரதி பசியை எதிர்த்துப் புரட்சிக் குரல் எழுப்பினர்." தனியொருவனுக்கு உண்வில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்"
என்பது அவர் எழுதி வைத்த நெருப்புத் தொடர்.இத்தொடர்ச்சியில் தீரா இப்பிணிக்குத் தீர்வு காணும். நோக்கில் மீண்டும் ஓர் இலக்கி
யத் தொண்டாற்றத் தோன்றியதுதான் இம்மாதவ மேகலைக் காப்பியம்.அதன் கதைச்சுருக்கம் வருமாறு.

பசிப்பிணி மருத்துவியாம் மணிமேகலை கலைதெரி நகரான காஞ்சியில் தங்கியிருந்து அறம்பல செய்து வருகையில் ஆண்டுள்ள
அறவண அடிகளைச் சந்திக்கிறாள்.அருளுடை நெஞ்சத்து அற்வண அடிகள் மணிமேகலைக்கு அமுதசுரபி கிடைத்த வரலாற்றை
எடுத்துக் கூறி, " பெரும்பசி களையும் இப்பேரறம்  பார்மேல்  இடையறாது இயங்குவ்தாகுக " என்று வாழ்த்தியருளினார்.அங்கிருந்து
நீங்கிய மேகலை பௌத்த நெறி போற்றும் அறவோர் வாழும் தவப்பள்ளியைச் சார்ந்தாள்.அப்போது அங்குவந்த ககன சாரிகள் ஆண்
டுள்ள அற்வோர்க்கு மணிமேகலையின் பிறப்பு வரலாற்றை எடுத்தியம்பினர்.

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த  மணிமேகலை துற்வு பூண்டது முதல் மணிபல்லவத் தீவில் அமுத சுரபி பெற்றது வரை
நிகழ்ந்த  உண்மைகளைக் கேட்டறிந்த அற்வோர் பள்ளியிலிருந்த முனிவர்கள்,

" பிற்ப்பெடுப் பதுவே பெரும்பே ரின்பம்
  பிறந்தபின் மீண்டும் பிறவா  ஞானம்
  உறுதல் என்பதும் உயர்பே ரின்பம்
  குறைவிலா ஞானம்  கூடிய  காலை
 அறஞ்செயும் நெஞசம் ஆர்தலும் இன்பம்
  உலகத் துயிர்களின் உறுதுயர் அகற்றும்
  நல்வழி நாடுதல் நனிபே ரின்பம் "
என்றெல்லாம் மணிமேகலைக்குக் கூறின்ர்"

"............ பசித்தோர்   முகம்பார்த் திரங்கி

  உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே"

என்னும் உயர்தத்துவத்தை  எடுத்துரைத்துக் காஞ்சிமா நகர்ப்புறத்தே மழையின்றிப் பஞ்சத்தில் வாடுவோரை நும் அமுதசுரபியால்
காப்பாற்றுவாயாக என விண்ணப்பித்தனர்.அது கேட்ட மேகலையும் அவ்விடத்திற்குக் க்டிதேகினாள்.

அக்காலை தொண்டை நாட்டுக் காஞ்சிப்பதியை  இளந்திரையன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான்.அவன் சோழன் நெடுமுடிக்
கிள்ளியின் மகன்.நாக நாட்டரசன் ம்களான் பீலிவளை சோழ் நாட்டுக்கு வந்த போது ஊழ்வசத்தால் கிள்ளி அவளைக் காதலிக்க
அதனால் அவளும் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள்.சில திங்கள் கழிந்ததும் அவள் தன் மகனுடன் நாக நாடடைந்தாள்.ஆண்டு
சில சென்றபின் மகனை கடல்வழிச் செலவுடைய கம்பளச் செட்டி மூலம் சோழ்ன் கிள்ளியிடம் சேர்க்க அனுப்பி வைத்தாள்.வழி
யில்  கலம் கவிழ்ந்தது.தப்பிய கம்பளச் செட்டி மூலம் செய்தியறிந்த  சோழன் மனங்கல்ங்கி மகனைத் தேட ஏவலரை ஏவினான்.
அலைகளின் வழியே மிதந்து வந்த அக்குழந்தையைக் கண்டெடுத்தவர்கள் இளந்திரையன்  என்ற பெயருடன் வளர்த்து வருவதாக
ஏவலர் மூலம் கேட்டுண்ர்ந்த  சோழன் பெரிதும் மகிழ்ந்தான்.ம்கனைத் தருவித்து மணிமுடி சூட்டிக் காஞ்சித் தலைவனாக்கினான்.
அந்நாளில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தை நீக்கி உணவளித்து உதவி வந்த மணிமேகலையின் அறப்பணியை  அறிந்த இளந்திரையன்
அவளை வரவேற்று  வாழ்த்தி வணங்கினான்.

" காஞ்சி பஞ்சமுறக்  கண்டு வருந்தினேன்.வருந்திய  என் முன் ஒரு தெய்வம் தோன்றி மன்னவ்! வருந்தேல்! மேவிய தவத்து
மேகலை என்பாள் பசி நோய் தீர்க்கும் பாத்திரத்தோடு தோன்றுவாள்.அவள் வரவால் வான்ம் பொழியும்.வையம் தழைக்கும்.பஞ்ச
மும் தீரும்.ஆத்லால் அவள் தங்கிடக் கோமுகிப் பொய்கையோடு த்ரும பீடிகை அமைந்த சோலை ஒன்றினை மணிபல்லவம்
போலச் சமைப்பாய் என்றுரை  தந்தது.அவ்வாறே அமைத்துள்ளேன் " என்று மணிமேகலையிடம் கூறினான்.மன்னன் மொழியைக்
கேட்டுண்ர்ந்த மேகலை அக்கோட்டத்தை அடைந்தாள்.புகார்க்கண் காயசண்டிகை என்பாளின் யானைத்தீ என்ற பெரும்பசியைப்
போக்கிய அவள் மக்களுக்கு மேலும் அறப்பணி செய்து வந்தாள்.

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் காஞ்சிப் பதியினின்றும் நீங்கிக் கான்வழி வந்த மணிமேகலை கருவீனும் நிலையில் இருந்த பெண்
ஒருத்தியைக் கண்டாள்.அவ்ளை யார்? என வினவினாள்." நான் ஈன்றோரை இழந்து கூடல் நகர் விடுத்து அத்தையிடம் வாழக்
கருதிக் காஞ்சி வந்தேன்.அத்தையும் இறந்தனள்.ஆதரவற்ற என்னை ஞானமாநிதி எனும் ஆசான் தன் மகள் போல் வளர்த்தார்.
அவர்தம் இருங்கலைக் கழகத்தில் வஞ்சியில் இருந்து  கல்வி கற்க வந்த  சங்கமன் மேல் காதல் கொண்டேன்.அதனால் கருவுற்
றேன்.அவனுடன் வஞ்சி சென்றேன்.அவ்ன் பெற்றோர் எங்களை ஏற்க மறுத்தனர்.அதுவே பிணியாக்ச் சங்கமன் இறந்தான்.மீண்டும்
காஞ்சி வரும் வழியில் கருவீனும் இந்நிலையில் இக்கானகம் உற்றேன்." எனக் கூறிக் குழந்தையை ஈன்று உயிர் துறந்தாள் அப்
பெண்.தாமரைப்பூப் போல் தரையில் கிடக்கும் அப்பிள்ளை மதியைக் கையில் ஏந்தியவாறு இக்குழந்தையை எடுத்து வளர்ப்பார்
யார்? என் எண்ணி நடந்தாள்  மணிமேகலை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 15, 2014, 8:12:59 AM1/15/14
to mintamil
காப்பியப் புலவருக்கு வணக்கம்.

மாதவ மேகலை கதையைப் படித்து வருகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

2014/1/15 meenavan2 <meen...@gmail.com>

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் காஞ்சிப் பதியினின்றும் நீங்கிக் கான்வழி வந்த மணிமேகலை கருவீனும் நிலையில் இருந்த பெண்
ஒருத்தியைக் கண்டாள்.அவ்ளை யார்? என வினவினாள்." நான் ஈன்றோரை இழந்து கூடல் நகர் விடுத்து அத்தையிடம் வாழக்
கருதிக் காஞ்சி வந்தேன்.அத்தையும் இறந்தனள்.ஆதரவற்ற என்னை ஞானமாநிதி எனும் ஆசான் தன் மகள் போல் வளர்த்தார்.
அவர்தம் இருங்கலைக் கழகத்தில் வஞ்சியில் இருந்து  கல்வி கற்க வந்த  சங்கமன் மேல் காதல் கொண்டேன்.அதனால் கருவுற்
றேன்.அவனுடன் வஞ்சி சென்றேன்.அவ்ன் பெற்றோர் எங்களை ஏற்க மறுத்தனர்.அதுவே பிணியாக்ச் சங்கமன் இறந்தான்.மீண்டும்
காஞ்சி வரும் வழியில் கருவீனும் இந்நிலையில் இக்கானகம் உற்றேன்." எனக் கூறிக் குழந்தையை ஈன்று உயிர் துறந்தாள் அப்
பெண்.
இப்படியெல்லாம் நடந்தால் யாரால்தான் பொறுத்துக் கொள்ள இயலும்!

Subashini Tremmel

unread,
Jan 15, 2014, 11:50:34 AM1/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
மகிழ்ச்சியான செய்தி ஐயா.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சுபா


2014/1/15 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Jan 15, 2014, 11:53:05 AM1/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
தங்கள் படைப்பை இங்கு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. தொடருங்கள் ஐயா. 
இனிமையான தமிழில் நன்றாக இருக்கின்றது கதைச் சுருக்கம்.

சுபா


2014/1/15 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Jan 15, 2014, 10:48:03 PM1/15/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

சிறுகுடி என்னும் பெயருடைய ஆயர் பாடியில் வாழ்ந்த செல்வன் வில்லவனும் அவனது இல்லத்தரசி கோதையும் ஆண்டு பலவா
கப் பிள்ளை இல்லாக் குறையால் வருந்தினர்.ஆயர் குலத் தெய்வமாகிய  கண்ணனைப் போற்றிக் குரவை ஆடின்ர்.ஒருநாள் குரவை
யின் முடிவில் "நுங்கள் குறை தீரும்" எனறதொரு வாக்கு எழுந்தது.குழந்தையொடு மணிமேகலை ஆங்குத் தோன்றினாள்.தாயற்ற
குழவியை வளர்த்து வருமாறு வில்லவனை வேண்டினாள்.அவனும் அவ்வேண்டுகோளை ஏற்று,அக்குழவியை வாங்கிக் கோதை
கைக்கொடுக்க,கோதை ம்கிழ்ந்தாள்.குழந்தைக்கு "மாதவன்" எனப் பெயரிட்டு வளர்க்குமாறு மணிமேகலை கூறினாள்.

வில்லவனும் கோதையும் இன்பமுற மாதவன்  ஏற்றமுடன் வளர்ந்தான்.ஐந்து வயதாயிற்று.வில்லவன் செந்தமிழ்க் குமரனர்பாற்
சென்று,மாதவன் வரலாற்றைக் கூறி அவனுக்குக் கல்வி கற்றுத் தர வேண்டினான்.அவரும் மகிழ்வுடன் ஒப்பினார்.மாதவனுக்கு
ஞானச் சிறப்பு,ஞானம் பெறும் வழி,கற்றோர் சிற்ப்பு,மொழிச் சீர்மை,தமிழர் பண்பு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்.அவ்னின் கல்வி வள்ர்ச்சி கண்டு ம்கிழ்ந்தார்.மாதவனும் கசடறக் கற்றுத்  தேர்ந்தான்.வில்லவன் இல்லம் வந்த மணிமேகலை மாதவனுக்கு
ஆசை,ஆசை அவித்தல்,துக்கமேற்றல்,துக்க நீக்கம் எனும் நான்கு உண்மைகளை விளக்கினாள்.புத்தம்,சங்கம்,தம்மம் எனும் முத்
திற மணியின் சிறப்பினையும் எடுத்தியம்பினாள்.மேலும் பசித்தோர்க்கு உதவுதல் பேரறம்,அதுவே தருமச் செவ்வழி என்றெல்லாம்
உரைத்து,இவற்ரை நெஞ்சிற் கொண்டு இனிது வாழ்வாயக  என்று வாழ்த்தினாள்.

மாதவன் நல்லறச் சிந்தையுடன் வளர்ந்து  வருகையில் சில கயவர்கள் அவனை இழித்தும்,பழித்தும் கூறின்ர்.மாதவன் அவற்றிற்கு
எல்லாம் வருந்தாமல் அறம் ஒன்றே குறிக்கோளாய் வாழ்ந்தான்.ஒரு நாள் ஆட்ற் கூடம் சென்று ஆடல் பழ்கி மீளும் அழகி ஒருத்
தியைக் கண்ட  அக்கயவர்கள் அவளுக்குக் கேடு சூழக் கருதினர்.அவ்வழி வந்த மாதவன் அலறித் துடித்த கன்னியின் குரல் கேட்டு
விரைந்தோடி அககயவரை நையப் புடைத்தான்.அவளைப் பாதுகாப்பாக இல்லம் கொண்டு சேர்த்தான்.பலரும் மாதவனைப் பாராட்
டினர்.அக்கீழ் மக்களும் அவனது ஆற்றல் கண்டு அட்ங்கினர்.

மெய்த்தவ மாந்தர்  வாழும் காஞ்சியில் பொய்த்தவம் பூண்ட சிலரும் வாழ்ந்து  வந்தனர்.கலக வழியில் மனங்கொண்டு கணடன பேசித் திரிவோர் பலரும் மணிமேகலையைப் பழித்துரைத்தனர்.இவள் மாயத்திற்த்தினள் என்றும் மகப்பெற்ற தாய் என்றும் தூற்றி
னர்.தவ நெறியைப் பழித்த தருக்கர்கள் சிலர் மணிமேகலையோடு  வாதிட்டனர்.எல்லோருக்கும் மேகலை நல்லுரை வழங்கினாள்.
இஃதேலாத அக்கயவர்கள் அவள்வயின் இருந்த அமுத சுரபியைக் கள்வர் மூலம் இரவிடை அவள் அறியாவாறு கவர்ந்து வரச்
செய்தனர்.பாத்திர்ம் காணாத மேகலை பெரிதும் கலங்கினாள்.அமுத்சுரபி யார் கைப்பட்டதோ?இப்பேரறம் தொடர்ந்து  வளரும்
என்ற் அறவணரின்  அருளுரை பொய்த்ததோ?என ஏங்கினாள்.அற்வோர்பாற் சென்று முறையிட்டாள்.அற்வண்ர் வாழும் பள்ளி
போந்து அவரடி வணங்கினாள்.அமுதசுரபியைக் காணாத தன்மையைக் கூறி வருந்தினாள்."வருந்தற்க"அப்பாத்திர்ம் அறமுடையார்
கையில் இருந்தால்தான் உணவு  ந்ல்கும்,கயவர் கைப்படின் பலன் தாராது.இரண்டொரு நாளில் நின்கை மீளும்"என் அறவணர் ஆறு
தல் கூறினார்.

அறவணர் உரை கேட்ட மேகலை "விதிவழி  ஆகுக்"என் எண்ணி ஆயர்பாடிக்கு வந்தாள்.வில்லவனுக்கும் மாதவனுக்கும் பாத்திரம்
மறைந்த நிலையைக் கூறினாள்.பாத்திர்ம் போன பரிபவத்தோடு கயவர்கள் கூறும் பழியும் சேர்ந்ததே என்று சிந்தை மெலி ந்தாள்;
பின் தன் தவப்பள்ளி நோக்கி நடந்தாள்.பசி வாட்டிட வருந்தியவர் அன்னை மேகலை பசி ஆற்றுவாள் என் அவளிட்ம் வந்தனர்.
பசிபோக்க வேண்டி வந்த  அவர்தம் அவலக் குரல் மேகலையின் மனத்தைத் தீப்போற் சுட்டது."அமுத சுரபி" எங்குற்றதோ,அறிகி
லேன்.ஆத்லின் அருள்வாரைத் தேடிச் செல்க என்று கூறி அயர்ந்தாள்.

இந்நிலையில் மேகலைபால் வசைபல் கூறி வந்த கயவரை மக்கள் எதிர்த்தனர்.அவர்கள் அஞ்சி ஓடினர்.கவர்ந்து வந்த அமுத சுர
பியினுள் கைவிட்டு அள்ளக கருதினர்.ஆனால்  ஒன்றும் தோன்றா நிலை கண்டு இன்னலுற்றனர்.பலன் தராத அப்பாத்திரத்தை
இரவில் அவள்பால் வைத்து மீண்ட்னர்.மறுநாள்  எழுந்த  மேகலை தன்னருகே பாத்திரம் இருக்கக் கண்டாள்.பாத்தரம் மீளும் எனப்
பகர்ந்த  அறவணர் அருளுரையை எண்ணிப் பசித்தோர்க்கு உதவும் பேரறத்தைத் தொடர்ந்தாள்.


On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Jan 16, 2014, 2:44:36 AM1/16/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

கோவலன் குடிக்கண் வளர்ந்த மாதவனின் இளமை ந்லங்கண்டு கன்னி ஒருத்தி காதல் கொண்டாள்.அவள் ந்ம்பிக்கும் பத்திரை என்
பாளுக்கும் பிறந்த அன்னம் என்னும் பெயரினள்.மாதவனும் ஆற்றுக் காட்சி கண்டு வருங்கால் அன்னத்தை கண்டு காதல் கொண்
டான்.இருவரும் தூமப்பணி போல் தோய்ந்து மகிழ்ந்தனர்.

காதல் கைம்மிக மாதவன் செய்பணி மற்ந்தான்.அவ்னது வாட்டங் கண்ட கோவலன் அதற்கான காரண்த்தை ஆராய்ந்தான்.மாதவன்
அன்னத்தின்பாற் கொண்ட செய்தியை வில்லவன் தன் மனைவியிடம் கூறினான்.அவன் மாதவனுக்கு அன்னத்தை மண்ம் பேசி முடிக்குமாறு இய்ம்பினாள்.வில்லவனும் மண்ம் பேசுவதற்கான ஏற்பாட்டைச் செய்தான்.மணம் பேசச் சென்ற்வன் மீள வந்து அன்
னத்தின் தந்தை  ந்ம்பி,"வில்லவன் பெற்ற மகனா மாதவன்?அவன் எடுத்து வளர்த்த குழந்தை அல்லவா?அவன் எக்குடியோ அறி
யோம்.பெண் த்ருதற்கு இல்லை"என மகட்கொடை மறுத்ததைக் கூறினார்.வில்லவனும் கோதையும் வருத்தம் மேலெழ நின்றன்ர்.
இஃத்றிந்த மணிமேகலை அவர்களைத் தேற்றி,"அவலம் ஒழிப்பீர்"மாதவன் வாழ்வில் பெரும்பயன் வர இருப்பதால் ;இங்ஙனம் தடைப்பட்டது.இனிவரும் நிலையை ஆய்க,என ஆறுதல் கூறினாள்.

வில்லவன் உறவினர் மூலம் தன் தந்தை மகட்கொடை மறுத்ததை அறிந்த அன்னம் வருந்தினாள்.தன் உறுதியான மன நிலையை
மாதவனிடம்  சொல்ல எண்ணினாள்."இல்லற வாழ்வில் இன்பம் துய்க்க எண்ணிய என்னை இன்மெனும் வலைக்குள் தள்ளி ஆராக்
காதல் அவிப்பவர் வாழும் உலகில் வாழாது நலமான் வழியை நண்ணுதலே அழ்காம்.எனவே யாரும் அறியாவாறு தங்களுட்ன்
செல்லவே என் நெஞ்சம் விரும்புகின்ற்து.அதற்குத் தடையேற்படின் என் நெஞ்சம் தாங்காது.என் மன நிலைக்கு  மாறாகப் பெற்றோர் மணம் முடிப்பின் என் பிணத்தைத்தான் அவர்கள் காணலாம்."என்று மாதவனிடம் கூற வேண்டி,அவனைக் காண்பதற்
காகச் சோலைக்கு வந்தாள்.மல்லிகைப் பந்தருக்கு அருகிருந்த மேடையில் அமர்ந்தாள்.அந்நிலையில் அரவமொன்று  அவளைத்
தீண்டிற்று.நஞ்சு  தலைக்கொள்ள அன்னம் உயிர் நீத்தாள்.அன்னம் இறந்தமை கண்டு மாதவன் மயங்கி வீழ்ந்தான்.ஆராக் காதலி
அன்னத்தை இழ்ந்த மாதவன் துன்பமே வடிவானான்.தன் இல்லத்திற்கு வந்த் மணிமேகலையிடம் வில்லவன் இறந்த்தையும்,மாத
வன் மனம் வருந்துவதையும் கூறினான்."துன்பம் அவனை இனித் தொடராத வண்ணம் அழைத்துச் செல்வேன்" எனக் கூறி மாதவ
னோடு அருந்தவ  முனிவராம் அறவணபாற் சென்றாள்.மன ஆறுதல் பெற்வே மாதவனை இங்கு அழைத்து வந்த்தாகக் கூறினாள்.
அறவணரும் "அனைத்தும் ஊழ்வினைச் செயல்.இவனை இங்கு விடுத்து நாளை நீ இங்கு வருக!நாம் நன்னெறிக்கண் இவனைச்
செலுத்துவோம் எனப் பகர்ந்தார்.மேகலையும் தன் தவச்சாலைக்கு மீண்டாள்.

மறு நாள் காலைப் பொழுதில் மேகலை அற்வணரின் தவப் பள்ளி போந்து மாதவனுடன் அறவணரைப் பணிந்தாள்.அவரும் மாத
வனை நோக்கி,"உத்தமச் செல்வனே! புத்தரின் புண்ணியம் போல் திரண்டு நிற்கும் நின்பால் நிகழ்ந்தவை அனைத்தும் அறிவேன்,
கவலற்க! இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்.

" .............................பூமியிற் பிறந்த
 உயிர்கள் யாவும்  ஒருநாள்  மடிதல்
 துயர்தரும் உலகில் தொடர்ந்திடும் உண்மை
 ...........................................................
 உற்வும் ந்ட்பும் உயிர்போங்  காலை
 தொடர்ந்தே வாரா  என்பதும்  துணிவே"

என ஆறுதல் கூறி மேலும் தொடர்ந்தார்."இவ்வுடம்பு பொய்,இங்குள்ள யாவும் நில்லாது ஒழியும்.செல்வம் பாழ்படும்.என்வர் உல
கத்து உயிர்கள்பால் அன்பு காட்டுக.அருள்ற்ற கொடியவனான அங்குலி மாலனைப் புத்தர் அன்பால் திருத்தினார்.பாத்திரத்தில் உள்ள
உண்வின் மூலம் இப்பசிப்பிணி போக்கும் பேரறம் மணிமேகலைக்குப்பின் நின்வழித் தொடரும்"என வாழ்த்தி உரைத்தார்.அவ்வாறு
செய்யும் தகுதி எனக்கு உளதா? என வினவிய  மாதவனுக்கு அறவணர் அவனுடைய பழ்ம்பிறப்பை உணர்த்தலானார்.


On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

Subashini Tremmel

unread,
Jan 17, 2014, 3:38:11 AM1/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிக அழகிய இலக்கியத் தமிழில் வழங்கியிருக்கின்றீர்கள்.
ஆங்காங்கே மெய்யெழுத்துக்களாக் சில எழுத்துப் பிழைகள். நான் வபலைப்பூவில் சேர்த்து வைக்கும் போது திருத்தி பின்னர் இணைக்கிறேன்.

சுபா


2014/1/16 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Jan 18, 2014, 7:42:39 AM1/18/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

" காசிவாழ் அந்தணன் அபஞ்சிகனின் மனைவி சாலினி என்பாள் தான் கற்பிழந்த பெரு ந்துயர் நீங்குவான் வேண்டித் தென்திசை
நோக்கிக் குமரியாடப் போந்தாள்.வ்ழியிடைல் குழந்தை பெற்ற அவள் அங்குள்ள சோலையில் விட்டுச் சென்றாள்.குழவியின் அழுகுரல் கேட்டு வந்த அங்குள்ள ஓர் "ஆ" அக்குழந்தையைக் காப்பாற்றியது.வயனங்கோட்டில் வாழும் இள்ம்பூதி என்பாந்தன் மனைவியோடு க்டவுளை வண்ங்க வருங்கால் அங்கிருந்த குழவியைக் கண்டெடுத்து ஆபுத்திரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந் தான்.அந்தணர் இல்லில் வளர்ந்த ஆபுத்திரன் அந்தணர் வேள்விக்கெனக் கட்டி வைத்திருந்த பசுவைக் கட்டவிழ்த்துப் போக்கினான்.
சினமுற்ற அந்தணர்கள் இளம்பூதியிடம் கூறி ஆபுத்திரனை வீட்டை விட்டுத் துரத்தினர்.ம்துரைக்குச் சென்ற அவ்வாவின் மகன்
அங்கு பிச்சையெடுத்துத் தானும் உண்டு பசித்தோர்க்கும் கொடுத்து உதவி வந்தான்.

அதுகண்ட செழுங்கலை நியமத்துச் சிந்தாதேவி அள்ள அள்ளக் குறையாத அடிசில் வழங்கும் அமுதசுரபி ஒன்றினை அளித்தாள்.
அதன் மூலம் பசிப்பிணி போக்கி வருகையில் இந்திரனால்  மதுரையில் பஞ்சம் நீங்கிடச் சாவக நாட்டில் உள்ளோர் பஞ்சத்தால்
வாடுதல் அறிந்து கலமேறிய ஆபுத்திரன் மணிபல்லவம் சேர்ந்தான்.ஆளரவமற்ற அவ்விடத்தில் அமுதசுரபி பயன்படாமை கண்டு
அதனைக் கோமுகிப் பொய்கையுள் இட்டு "அறனெஞ்சுடையார் வரின் அவர்கையகம் சேர்க" எனக் கூறி உயிர் துறந்தான்.காவிரிப்
பூம்பட்டினத்தில் இருந்த மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டுவரபபட்ட மணிமேகலையிடம் அப்பாத்தி
ரம் சேர்ந்தது.அதன் மூலம் அறம் செய்த மணிமேகலை இப்போது தனக்குப் பின்னும் இவ்வறம்  தொடர வேண்டுமென நினைக்
கின்றாள்.சாவக நாட்டில் புண்ணியராசன் என்ற பெயருடன் மறுபிறவி எடுத்த ஆபுத்திரன் இப்பிறவியில் இதோ என்முன் மாதவன்
வடிவிலே உள்ளான்.

மேற்கண்டவாறு மாதவனின் பழம்பிறப்பினை உணர்த்திய அறவண அடிகள் மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியை
வாங்கி மாதவனிடம் கொடுத்தார்.அவன் அதனை வணங்கி ஏற்று :உலகோர் பசிப்பிணியை உயிர்ப்பணியாகக் கொள்வேன்" என
அறவணரிடம் உறுதி கூறினான்.அருகிருந்த மேகலையை நோக்கிய அற்வணர்,"புத்தர் பிறந்த விசாக முழுமதி நாளில் முத்தி பெறு
வாய்" என ஆசி வழ்ங்கினார்.

அமுத சுரபியைப் பெற்றுக் கொண்ட மாதவன் தன் வரலாற்றை உணர்ந்ததோடு தன் பிறப்பின் குறிக்கோளை எண்ணி மகிழ்ந்தான்.
மக்களுக்குத் தொண்டாற்றும் மன நிறைவோடு துறவு பூண்டான்.அறவணர் கூறியாங்குத் தான் தங்கியிருந்த தவப்பள்ளியில்
போதி மரத்தின் கீழ் வீற்றிருந்தவாறே முத்திப்பேற்றினை  அடைந்தாள் மணிமேகலை.ம்க்கள் அவலம் தாங்காது புலம்பினர்.
மணிமேகலையின் உடலை அகிலும் சந்தனமும் விரவிய குழிக்கண் இட்டுச் சேமம் செய்து மேடை எழுப்பினர்;ம்க்கள் அவளை
வண்ங்ககி மீண்டனர்,
" முடியாப் பசியை முடிக்கும் பணியே
   என்றும் அறமென் றியம்பிய மேகலை "
யின் வழித்தோன்ற்லாய் மாதவன் அறம் செயப் புறப்பட்டான்.
"உண்டி கொடுக்கும் உயர்பணி தொடர்கிறது"


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

Subashini Tremmel

unread,
Jan 19, 2014, 3:10:43 AM1/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
தொடர்ந்து வாசித்து வருகிறேன். 
அழகான நடையில் உள்ளது. நன்றி.

சுபா


2014/1/18 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Jan 20, 2014, 10:36:32 PM1/20/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

மாதவ மேகலை

வாழ்த்துப் பாயிரம்

எண்சீர் விருத்தங்கள்

பொதியமெனும்  ம்லைப்பிறந்தாய்  புனல்கொ  ழிக்கும்
   பொன்னியிலும்  நீநடந்தாய்  தமிழ்ம  ணக்கும்
நதிவைகைக் கரையினிலும்  நடன மிட்டாய்
  நற்புலவர்  அகமிருந்தாய்  புறத்தும்  சென்று
பதிசிறந்த  வஞ்சியிலும்  பாட  நின்றாய்
  பாவலர்க்கும்  படியளந்தாய் பாரை யாண்ட
மதிமன்னர் மூவருக்கும் மகளே ஆனாய்
  மாறாத  இளமையிலே  மகிழ்ச்சி  பெற்றாய்.................1

சீர்முகத்தில்  கவியானாய்!  வயல்வி  ளைந்த 
  செங்கரும்புச்  சுவையானாய்!  உழவர் தங்கள்
ஏர்முகத்தில்  பொலிந்தெழுந்த  பச்சை  நாற்றின்
  இயல்புடைய  மொழியானாய்! இசையு மானாய்!
போர்முகத்து  மன்னவரும்  பூக்கள்  தூவப்
   புன்னகைத்தாய்! பொலிவுதரும்  இயற்கை கொஞ்சும்
பார்முகத்தில் முதன்மொழியாய் நீயே  ஆனாய்
   பாடுபவர் உளங்கவர்ந்த பாவை யானாய்.....................2

பண்ணசைவும்  உன்னசைவே  பாவை  மார்தம்
   பரத்தும்  நின்னெழிலே  பாவ  லர்க்குன்
கண்ணசைவும்  கவியசைவே கருத்துச்  சேர்ந்த
   காதலிலும்  நின்சுவையே  அழகு  கூட்டி
மண்ணசையும்  பயிர்களிலும்   மற்று  முள்ள
   மாறாத  இயற்கையிலும்  நீய  சைந்தாய்
விண்ணசையும்  சுடர்களைப்போல்  விள்ங்கு  முன்றன்
   விரலசைந்தால்  நாவசையும்  கவிதை  யாகும்.        3

நாவளந்த  பாவலர்க்கும்  படைக ளாலே
   நாடளந்த  மன்னவர்க்கும் படிய ளந்தாய்
பூவளந்த  குழல்மாதர்  வாயில்  என்றும்
   பொலிகின்ற  தாலாட்டில  நீக  லந்தாய்
பாவளந்த  நூல்களெலாம்  போற்றிப் பாடப்
   பாரளந்த  திருமகளே எங்கள்  நாட்டில்
நீவளர்ந்த  காரணத்தால்  நிமிரந்து  நின்றோம்
   நின்பாதப்  போதுகளை  நெஞ்சில்  ஏற்றோம்.             4

சங்கத்தார்  சீதனங்கள்  பத்துப்  பாட்டு,
   சபைமணக்கும்  தொடைவரிசை  எட்டே யாக
அங்கத்தில்  மணிசேரப்  பரதம்  ஆடும்
   அடிகளிலே  சிலம்பணிந்து வளையும்  தாங்கிப்
பொங்குமெழிற்  குண்ட்லத்தைக்  காதிற் பூட்டிப்
   பொன்னழகு  மேகலையும்  பொலியச் சூட்டிச்
செங்கையில்  குறட்செங்கோல்  ஏந்தி  நின்ற
   சீருக்கே  வணக்கங்கள்  கோடி  சேர்த்தோம்.                5

காலத்தை  வென்றவளே மூத்தி ருந்தும்
   கன்னியென ஆனவளே நினது  செய்ய
கோலத்தைப்  பாடுபவர் நெஞ்சி லேறிக்
   குடிமுழுதும்  ஆண்டவளே நன்னைப்  போல
ஞாலத்தை  அளந்தமொழி  உலகி லுண்டா
   நற்றமிழர்  வாழ்வுக்குப்  பொருளே யான
சீலத்தைப்  பாடுதற்கே  எனது  நாவைச்
  செலவழிப்பேன்  நீடூழி  நின்று  காக்க ...........................6

கற்றவர்கள் பெருந்தனமே..த்மிழர் நாட்டுக்
  கலைகட்குத்  தாயகமே  ஆசை  விட்டுப்
பற்றறுத்த  துறவியர்க்கும்  பாவாய் நின்று
  பாசத்தைப்  பொழிந்தவளே அமுத ஊற்றாம்
வற்றாத  சொல்வளமே  எம்மை  எல்லாம்
  வாழ்விக்கும்  தெய்வதமே  வாழ்க வாழ்க
முற்றாத இளமையிலே  மொழிக  ளுக்குள்
  மூத்தவளே  வணக்கம்யான்  மொழிகின் றேனே.        7

பாயிரம்   நிறைவுற்றது

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.


On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 21, 2014, 12:14:52 AM1/21/14
to mintamil
தமிழ்த் தாய் வாழ்த்து பலமுறை படித்துவந்தேன். நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014/1/21 meenavan2 <meen...@gmail.com>

பொதியமெனும்  மலைப்பிறந்தாய்  புனல்கொ  ழிக்கும்

meenavan2

unread,
Jan 21, 2014, 2:27:13 AM1/21/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

மாதவ மேகலை

(பதிகம்)

{நகரங்களிற் சிறந்த நகரம் காஞ்சிபுரம்.இங்கே சமயக் க்ணக்கர்கள் நிறைந்திருந்தனர்.பல்கலைக் கழகம் பாங்குறத் திகழ்ந்தது.மணி
மேகலைக்கு அறம் அறிவுறுத்திய அறவண அடிகள் இங்கே வாழ்ந்தார்.இத்திருநகரை மணிமேகலை கண்ட,"கச்சிகாண் காதை"
முதலாக மேகலை"முத்தி மேவிய காதை"இறுதியாக உள்ள முப்பது காதைகளையும் தமிழ்ப் பேராசிரியர்,கலைமாமணி,டாக்டர்
ஆறு.அழகப்பன் அவர்கள் அளித்த காப்பியப் ப்டைப்புக் குறிப்பால் மீனவன் என்னும் கவிஞர் மாதவமேகலையைப் பாடினார்.}

நிலைமண்டில ஆசிரியப்பா

கண்ணுதற்  கடவுள் கழக்மோ  டமர்ந்து
பண்ணுறு  செந்தமிழ்ப்  பாவகை  ஆய்ந்து
கொடுத்த்வை  சுவைத்த குடமுனி  தன்கை
எடுத்த  கரகத் திருந்த நற்பாவை
பெயல்விழ  லின்றிப்  பெருவற்ங்  கூறினும் ..................5
வயலொடு  படைப்பை  வாவி  ஆறுகள்
தாய்மனம்  எனனத்  தழைத்து  வளந்தரப்
பாயும்  இமிழிசை   பரந்தாங்   கிலங்க
மதுவிரி தாழை  மணங்கூட்(டு)  உண்டு
புதுமணப் பெண்போல்  பொலிபூம் புகார்க்கண்              10
மாறா  வணிகன் மாநா  யாகன்தன்
பேறாய்  வந்த  பெற்றகரும் புதல்வி
கண்ணகி  என்னும்  கயல்விழிச் செல்வியின்
பண்ணமை  கைதொடப்  பலகால்  நோற்றுப்
பற்றிய  செல்வன் பாவலர்  போற்றும்                           15
மாசாத்  துவன்தன்  மகனே  ஆன
கோவலன்  என்னும்  குன்றாச் செல்வன்
ஆவியை  நிகர்த்த  ஆடற்  கணிகை
மாதவியோடு  ம்கிழ்ந்துறை  நாளில்
போதெனப் பிறந்த  பூங்கொடி மேகலை                         20
ஆபுத்தி  ரன்கை  அமுத  சுரபியால்
அற்றார்  தங்கள் அழிபசி  அகல
வற்றாச்  சோறு  வழங்கிவாழ் போதில்
விற்கொடிச் சேரர் வியன்நகர்  வஞ்சி
முற்படச் செல்ல மூவாத்  தந்தையை                            25
ஈன்ற தாதை  இடர்கெடத்  துறவு
பூண்டமா சாத்துவன் புகழடி  வணங்கலும்
ஆண்டபே  றெழில்சேர்  அணிமிகு  காஞ்சி
ம்ழைவள மின்றி  மயங்கும்  நிலையினை
விளம்பக்  கேட்டே விரைந்த  மேகலை                         30

பதிகம் தொடரும்


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்





On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Jan 21, 2014, 6:16:54 AM1/21/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

மாதவ மேகலை (பதிகம் தொடர்ச்சி)

வான்வழி   யுற்றவ்  வளநகர்ப்  போந்து
பான்மொழி மதலை பத்தினி  அரசு
தம்மை  விடுத்துத்  தருவளர் கானிடை
மெய்ம்மைப் பொருளை  மேவிய குணத்துப்
புத்தன் திருவடி போற்றுமா  முனிவர்                             35
அத்தமில் அருள்சால்  அறவணர் தம்மின்
திருவடி வணங்கித் தேறா நெஞ்சம்
ஒருமைப் பயன்கொண்(டு)  உயர்நிலை  எய்த
அருள்வீர்  என்றலும் அறவணர்  அருளி
இரும்பசி களைந்த  இயல்பினிப் படிமேல்                      40
இடையறா தியல இனிதுடன்  வாழ்த்தி
விடையினை நலக விழாவயர் காஞ்சியின்
பல்வகை வீதிப்  பான்மைகள்  கண்டு
இல்லார்க களித்த இயல்பினை  இயம்பும்
கச்சிகாண்  காதையும்  ககன சாரிகள்                              45
அறவோர் உணர  அவள்வர  லாற்றை
உரைத்த காதையும்  உயர்பேர் உலகிற்
பசித்தார்க்(கு) உதவப்  பாவைசெல்  காதையும்
புசித்தோர் கூடிப்  புண்ணியப்  பாவையைப்
போற்றிய காதையும்  பொலிமணி மேகலை                 50
கானிற் குழ்வி  கண்ட  காதையும்
வானச்  சுடரென வந்த  குழவியை
வளரான்  வில்லவன்  வண்கரத்  துய்த்து
வளரக் கொடுத்த வளஞ்சொல் காதையும்
நற்றவச் சேய்க்கோர்  நாமம்  கூடி                                  55
நவின்ற காதையும் நலமுறு  கல்வியக்
குழவி  பெறவே  கொடுத்த காதையும்
ஒருதனிச்  சேய்க்காங்(கு) உயர்நல  ஞானம்
உணர்த்திய  காதையும் ஒளிசேர்  ஞாயிறாம்
புத்தரின் நல்லறம் புகட்டிய காதையும்                          60
காளை மாதவன்  கடிநக  ராங்கண்
கயவர்கைப்  பட்ட கன்னிதன் துயரம்
களைந்த காதையும்  காய்வுறு  நெஞ்சத்
தயல்மதத் தார்க்கே  அன்பறி வித்த
காதையும்  சில்லோர்  கயவர் மேகலை                        65

பதிகம் (தொடரும்)

காப்பியக் கவிஞர்,நா,மீனவன்



On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Jan 21, 2014, 10:28:42 PM1/21/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

மாதவ மேகலை (பதிகம் தொடர்ச்சி)

கரத்துறை  சுரபியைக் கடத்திய  காதையும்
பரிபவ முற்ற  பாவை மேகலை
அறவணர்  பாற்சென்(று)  அடுத்த காதையும்
அயரா(து)  அடிசில் அளிக்கும்  தெய்வப்
பாத்திரம் மீண்டும் பாவைபால் வருமென                           70     
அறவணர்  அவட்காங்(கு)  அறிவித்த காதையும்
ஏதமில் மேகலைக்(கு)  இல்லாப்  பழியைக்
கயவர் கூடிக் கற்பித்த காதையும்
பாத்திரம்  இன்மையால் பசி நோயுற்றுக்
கவலுறும்  மாந்தர்க் கண்ட காதையும்                                 75
பொல்லாக் கயவர்ப்  போக்கிய  கடிகை
பாவைபால் மீளப் பார்த்த  காதையும்
வில்லவன் வளர்த்த வியன்பெருஞ் செல்வனை
அனனம்  என்பாள் அவண்வரக் கண்டு
காமம்  ஆங்கே  கால்கொள்  காதையும்                               80
மாதவன்  அன்னம்  மயங்கிய காதையும்
மாதவர்க்  காக வில்லவன்  அன்னத்(து)
இல்லம்  சேர்ந்து  இயல்மணம் பேசிய
காதையும்  அன்னம் காளை மாதவன்
அறியச் செய்தி  அறிவித்த காதையும்                                 85                               
தளிர்க்கொடி அன்னத் தாதை நம்பி
மகட்கொடை ஆங்கே  மறுத்த  காதையும்
அணிமலர்ச் சோலயில்  அன்னம  தன்னை
அரவம் தீண்ட  அவள்படு  காதையும்
மங்கை  அன்னம்  மரணம்   கண்டு                                      90
மாதவன் புலம்பி  மயங்கிய  காதையும்
மாறா  மயக்கம்  உற்ற  மாதவன்
தன்னை  அற்வணர்  தம்பால் உய்த்த
காதையும்  தெய்வக  கருணைசால்  அறவணர்
அல்லல்  அகற்றி  அருளிய  காதையும்                               95
மாதவன்  பிறப்பறி  வித்த காதையும்
பொன்றா  உலகிடைப்  புகழறம் புரிந்த
மணிமே  கலையாம்  மகிழ்தவச்  செல்வி
முத்தி  பெறுநாள்  மொழிந்த  காதையும்
தாய்நிகர் மேகலை  தன்கைப்  பாத்திரம்                          100
பெற்ற  மாதவன்  பெருநிலம்   பேண
மேகலை முத்தி மேவிய  காதையும்
ஆக  இவ்வணம்  ஆறைந்  தாகத்
தாயாய்  அமைந்த  தமிழ்மொழி  வாழ்த்தொடு
பல்வகைச் செய்யுள்சேர்  பான்மைத்  தாகப்                   105
பொற்புறு  செம்மைப்  புகழ்தமிழ்  நாட்டில்
வெற்புயர்  பொதியில்  விழைபூந் தமிழைச்
சங்கத்  திருத்திய  சால்புடை  நோன்தாள்
வ்ழுதியர்  ஆண்ட  பாண்டிய  நாடடைச்
சேர்ந்த மாவட்டம் சிவகங்  கையிலே                              110
கண்டர  மாணிக்கக் கவின்பதிப்  பிறந்தோன்
உம்பர்  நாடிருக்கும்  உயரமு(து)  ஒப்பக்
கவிதை  பாடிய  கம்பர்தம்  பெயரால்
உள்ளுறு  சந்தத்(து)  ஒண்கவி சேர்ந்த
பிள்ளைத்  தமிழ்நூல்  பெட்புறப் பாடி                               115
ஆயிரம்  பரிசென  அடைந்தநற்  கவிஞர்
தூய  நற்கவிதை  துலங்குப்ல் அரங்கில்
ஆய  கவிதைகள்  ஆர்க்குநற்  புலவன்
மீனவன்  பாட  மேல்வகை  செய்து
நெறிதந்(து)  உதவிய  த்மிழ்நெஞ்  சுடையார்                   120
நாளும்  உயரும்  நற்பே  ராசான்
கலைமா  மணியெனக் கற்றோர் போற்றப்
பல்கலை  கண்ட  அண்ணா  மலையார்
தமிழிசை வளரத் தனித்துறை போற்றி
வளர்த்த கழகம்  வள்ர்தமிழ்த் துறையின்                         125
தலைவர்  மேன்மைத்  தமிழ்ச் சுரங்கத்தின்
தலைவரும்  ஆன  தண்டமிழ்  வாணர்        
நாட்கக்  கலையில்  நாட்டம்  மிக்கார்
நாடக்  நூல்கள்  நனிபல  செய்தார்
நாடகக்  கலையென நல்லதோர்  இதழை                          130
நாட்டிற்  களித்த  நாடகச்  செல்வர்
திருமலை  மன்னன்  சிறப்பினை  விளக்கும்
திருமலை  நாடகத்  தேனிறால் அளித்த
ஆ(று)அழ  கப்பன்  அளித்தனென்  நூலென்.                      134

பதிகம் நிறைவுற்றது


மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

மாதவ மேகலை (முதற்காதை)


On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 21, 2014, 11:53:50 PM1/21/14
to mintamil



2014/1/22 meenavan2 <meen...@gmail.com>

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

மாதவ மேகலை (பதிகம் தொடர்ச்சி)


பொன்றா  உலகிடைப்  புகழறம் புரிந்த
மணிமே  கலையாம்  மகிழ்தவச்  செல்வி
முத்தி  பெறுநாள்  மொழிந்த  காதையும்
தாய்நிகர் மேகலை  தன்கைப்  பாத்திரம்                          100
பெற்ற  மாதவன்  பெருநிலம்   பேண
மேகலை முத்தி மேவிய  காதையும்
ஆக  இவ்வணம்  ஆறைந்  தாகத்
தாயாய்  அமைந்த  தமிழ்மொழி  வாழ்த்தொடு

கதையின் முப்பது காதைகளின் சுருக்கத்தைப் பாவாக்கி அளித்துள்ள நயம் அருமை.
 
பல்வகைச் செய்யுள்சேர்  பான்மைத்  தாகப்                   105
பொற்புறு  செம்மைப்  புகழ்தமிழ்  நாட்டில்
வெற்புயர்  பொதியில்  விழைபூந் தமிழைச்
சங்கத்  திருத்திய  சால்புடை  நோன்தாள்
வழுதியர்  ஆண்ட  பாண்டிய  நாடடைச்

சேர்ந்த மாவட்டம் சிவகங்  கையிலே                              110
கண்டர  மாணிக்கக் கவின்பதிப்  பிறந்தோன்

அதே கண்டரமாணிக்கத்தில் செந்தமிழ்க் கவிஞரின் பங்காளியாக, தமிழ் ஆர்வலனாகப் பிறந்த நற்பேறுக்கு மகிழ்கிறேன்.
 
கலைமா  மணியெனக் கற்றோர் போற்றப்
பல்கலை  கண்ட  அண்ணா  மலையார்
தமிழிசை வளரத் தனித்துறை போற்றி
வளர்த்த கழகம்  வளர்தமிழ்த் துறையின்                         125

தலைவர்  மேன்மைத்  தமிழ்ச் சுரங்கத்தின்
தலைவரும்  ஆன  தண்டமிழ்  வாணர்        
நாட்கக்  கலையில்  நாட்டம்  மிக்கார்
நாடக்  நூல்கள்  நனிபல  செய்தார்
நாடகக்  கலையென நல்லதோர்  இதழை                          130
நாட்டிற்  களித்த  நாடகச்  செல்வர்
திருமலை  மன்னன்  சிறப்பினை  விளக்கும்
திருமலை  நாடகத்  தேனிறால் அளித்த
ஆ(று)அழ  கப்பன்  அளித்தனென்  நூலென்.                      134

எண்பது வயதிலும் ஓய்வின்றி இயன்ற வழிகளிலெல்லாம் தமிழ்ப் பணியும், ஆன்மீகப் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றி வருகின்ற நாடகக் காவலர் பேராசிரியர் திரு ஆறு.அழகப்பனாருக்குச் சிறப்பான தகுந்த நன்றியுரை.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

meenavan2

unread,
Jan 23, 2014, 5:10:13 AM1/23/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

1.கச்சிகாண்  காதை

[பதியெழு வறியாப் பழ்ங்குடி கெழுமிய புகார் நகர்க்கண் கோவலனுக்கும் மாதவிக்கும்
பிறந்தவளான ம்ணிமேகலை கலைநிறை  நகரான காஞ்சிக்கு அண்மையில் அருளுடை
நெஞ்சத்து அறவண அடிகள் தங்கிய பள்ளீக்குச் சென்று அவரைப் பணிந்து வணங்கினாள்.
பணிந்த மேகலையை நோக்கிய அடிகள்" கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் நரை மூதாளர்,
நலிபிணிப் பட்டோர்,தேற்றுவார் இல்லார்,பசியால் வருந்துவோர் ஆகியோரைத் தேடிச் சென்று
அமுதளித்து அவர்தம் பசிதீரக் க்ண்டு வாழும் தோகையே!மணிபல்லவத்துக் கோமுகிப் பொய்
கையில் இருந்த ஆபுத்திர்னின் அமுதசுரபி நின்கைச் சேர்ந்ததும்,பசிப்பிணி மருந்தாகிய அமுதினை
ஆதிரை இட்டதும்,இட்ட  அமுதம் எடுக்க எடுக்கக குறையாமல் வர,அதன் வழியே அதன் வழியில்
காவிரிப் பூம்பட்டினத்தில் அறம் செய்ததும்,அது கண்ட  சோழ மன்னன் வேண்டச் சிறைக் கோட்டத்தை
அறமாக்கிப் பெரும்பசி களைந்ததும் ஆகிய பேரறம் இப்பார் மேல் இடையறாதியங்க அருள் கிடைக்க"
என்று வாழ்த்தினார்.மேகலை அவரை வணங்கி,அவர்தம் பள்ளி நீங்கி,அகழி தாண்டிக் கோட்டையுள்
நுழைந்து பலவகை வீதிகளின் வளமெலாம் கண்டாள்.சோலைகள்,செய்குன்றுகள்,வாவிகள்,ஆடலரங்குகள்
ஆகியன கட ந்தாள்.நகர் மருங்கிருந்த  மண்டபம் சேர்ந்தாள்.அங்குள்ள ப்சித்தோர்க்கும்,பிணியாளர்களுக்கும்
அமுத சுரபியில் இருந்து  அள்ளக் அள்ளக குறையாத உண்வை அளித்து மகிழ்ந்தாள்]

meenavan2

unread,
Jan 23, 2014, 6:01:00 AM1/23/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

நிலை மண்டில ஆசிரியப்பா

பூமகள் மேனி  புளகம் போர்க்க
நாமகள் நாவில்  நடமிட் டிலங்கச்
செம்மலர்த் திருவின் சீரருள் சுரக்க
அம்மலர்க் கியையவெண்  அணிமல ராளின்
கண்ணருள் பெருகிக் கலந்தமா  நகரெனக்                     5
கற்றோர் உரைக்கொரு கலைவரம் பாகிப்
பற்றலர் உன்னிப் பார்ப்பினும்  அஞ்சும்
கொற்றமா மதிலும்  கொடிக்கோ  புரமும்
கொண்டது ஞானக்  கொழுஞ்சுட  ரென்னும்
ஒண்டிறல்  வாய்ந்தோர் உயிரென வாகப்                     10
பல்கலைத் தோகை பாங்குற விரித்து
மயிலெனப் பொலியும்  மாண்பினை  உடைத்தாய்
உயர்பேர் உலகில் உயர்செஞ் சுடர்போல்
இலங்கும் தலைமை  ஏற்றுத் திகழ்ந்து
மலைபோல் அசையா மாண்பும் பெருமையும்             15
திகழப்  பெற்றது: தெய்வதச்  சீர்த்தி
அகமெலாம் கொண்ட ஆன்றோர் கூடி
ஆய்ந்தநூற்  பொருளணி  அழகுகள்  பூண்டு
தூய  புலவர்வாய்த் துலங்குபா வெள்ளம்
அகழியிற்  போந்தவ் வகநகர்  காக்கத்                            20  
தகைசால்  பெரியோர் தம்முரை ஒப்பத்
துலங்கும் பொன்னகர் தோன்றுமா மன்னர்
சிலைக்கைச் செங்கோல் செலுத்திய நகரம்
இமையத் திருந்த  இறைவியின்  திருவருள்
சுமந்த  நகரெனச்  சொல்லுமோர்  மொழிக்குப்             25
பொருந்திய  வாறு  பொருள்பல வற்றால்
அறம்வளர்  மாதர் அடிமலர் படியக்
கனிவது மதில்சேர்  கஞ்சிமா நகரம்
நனைமலர்க்  காவும் நளிர்படு வாவியும்
படிந்த  தென்றல் பைந்தமிழ்  மன்றக்                            30
கொடியில் ஆடிடும்  கோலத் திருநகர்
அலைகடல் உலகத் தழகிய  கண்ணாம்

ம்ணிமேகலை  அறவணரைச்  சார்தல்

கலைதெரி  காஞ்சிக்  கடிநகர்ப்  பாங்கர்
நிலைதரும் அறம்பல நிகரிலா துரைக்கும்
அருள்தரு நெஞ்சத் தறவணற் சார்ந்து                         35
பொருள்பொதி  சமயப் புதைபொருள்  தேர்ந்து
மாறா  வாய்மை  மனங்கொள்  மடக்கொடி
குற்றம்  நீக்கிய  குணத்தகை  யாளன்
பற்றிலா முனிவன் பாதம்  தோய்ந்து
ப்ணிதலும் அன்னான் பாவையை நோக்கித்                40


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Jan 24, 2014, 4:56:18 AM1/24/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
கச்சி காண் காதை தொடர்ச்சி

அறவணர் மேகலைக்கு உரைத்தல்

திரையொளி கடல்சூழ் திருவிட  மதனில்
நரைமூ தாளர்  ந்ற்பிணிப் படடோர்
திருந்துவாழ்  வில்லார்  தேற்றுவார் அற்றார்
பெரும்பசித் தீயெனும் பெரும்பணி  உற்றார்
அருந்திடு  வீரென  அமுதளித்  தவர்பசி                            45
தீர்த்தமை  கண்டுளம்  திளைத்திடு  சிறப்பால்
தொழ்த்தகு  பணிசெய்  தோகையே கேளாய்

பாத்திர  வர்லாறு  நினைவு  கூர்தல்

அழிபசி யகற்றும்  அமுத சுரபி
அறம்புரி  கொள்கை ஆபுத்தி  ரன்பின்
உறுபுனற் கோமுகிப்  பொய்கையுள்  ளிருந்தே                50
எழுமுகிற்  கிடையிருந்  தெழுந்தவெண்  மதிபோல்
எழுந்து  நின்கை  இருந்த பின்னர்ப்
பாரத மடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆருயிர் மருந்தை  ஆதிரை  இடுதலும்
அள்ளக் குறையா  அடிசில்  வந்ததும்                               55
பூவிரி  கோலப் பொன்னி  வளந்தரும்
காவிரிப்  பூநகர்  இருந்தறம் கண்டதும்
அதிர்கழல்  வேந்தன்  அறிந்தவண்  வேண்ட்
அருஞ்சிறைக்  கோட்டம்  அறக்கள மாக்கி

அறவணர் வேண்டுகோள்

இரும்பசி  களைந்த  இயல்பினிப் படிமேல்                     60


மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Jan 27, 2014, 5:13:05 AM1/27/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

கச்சிகாண் காதை (தொடர்ச்சி)

இடையறா  தியல இன்னருள் செய்வாய்

அறவணரை மணிமேகலை வணங்கி மீளல்

என்றலும் அறவோன் இணைமலர்  அடிக்கண்
தன்றலை தாழ்த்தித் தாளிணை  ஏத்தி
மாறா அறஞ்செய் மணிமே  கலைநல்
நாவலந்  தீவின்  நயனம்  போல்வாள்                            65


 காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Feb 3, 2014, 1:46:53 AM2/3/14
to mint...@googlegroups.com

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்


On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Feb 6, 2014, 1:15:29 AM2/6/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

கச்சிகாண் காதை (தொடர்ச்சி)

தேவர்  கோட்டத் திருமுன் நீங்கி
நலந்தரு நவ்வி  எனநடை  நடந்து
கலங்கொள் க்ருத்துக் காரிகை  அளக்கர்

மேகலை அகழி தாண்டல்

வந்துசூழ்ந்  தசைத்து  வளைத்தது  மான
இந்திரை கேள்வன்  எழில்நிறம்  கொண்ட                     70
அகல்வள  வறியா அகழிநீர்  தாண்டிப்

கோட்டை வாயிலுள் நுழைதல்

பான்மதி  என்னப்  படரொளிப்  பதாகை
அசைதரும் இஞ்சி  அகன்பெரு வாயில்
இடைநுழைந்  தியங்கித் தவம்பெறு  மூதூர்

நகர் வளம்

அடிசிற்  பொருளுறை  ஆவண  மறுகும்                      75
அலைமீன்  விலைஞர் உப்புப்  பகர்வோர்
கள்விலை யாட்டியர்  காழியர் கூவியர்
வெள்நிண  விலைஞர்  விரைமலர் விற்போர்
திரிதரு  மறுகும் தெய்வப்  படிமச்
செம்பின் வினைஞர்  வெண்கலக் கன்னார்                  80
அம்பொன்  தட்டார் அணிமரங் கொல்வோர்
ஓவத்  துறையில்  உயர்ந்தோர் அதள்வினை
செய்வோர் துன்னர் சிதர்மலர் தொடுப்போர்
பயில்முறைப்  பாணர்  பஞ்சின் வணிகர்
காலக் கணக்க்ர் கஞ்சனம்  இடுவோர்                            85
ஆலைபாய்  மறுகும்  அணிகட லுய்த்த
நத்துப் போழ்நர்  நளிர்மணி வினைஞர்
கொத்துப் பவளம்  முத்தொடு கோப்போர்
தன்பெரு  மறுகும் தகைமாண்  புற்ற
ஈரியற் கூத்தின்  இயல்பு  தெரிந்த                                 90
ஆர்வலர்  உறையும்  அணிசேர்  மறுகும்
நாலிரு  வகைத்தாய்  ந்விலப் படுமோர்
கூல  வீதியும்  கொடித்தேர்  வீதியும்
பல்வகைத்  தாளப் பாங்ககு  தெரிந்தோர்
சொல்வகை அறிந்த சூதர் மாகதர்                                95

காப்பியக் கவிஞர்,நா.மீனவன்



On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Feb 6, 2014, 7:24:25 AM2/6/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Feb 7, 2014, 2:37:48 AM2/7/14
to mint...@googlegroups.com
       1.கச்சிகாண்காதை (தொடர்ச்சி)


இருந்தாள்  மறுகும் எழில்புரை மேனி
விருந்தெனப்  பொருட்கு  விலையிடும்  மகளிர்
வாழணி  மறுகும்  வண்ணங் குயிற்றிய
நுண்ணூல் வினைஞர்  நூலோர்  மறுகும்
பொன்னிலை  காண்போர் பொலிமனை  வீதியும்                    100
1.கச்சிகாண்காதை (தொடர்ச்சி)

இருந்தாள் மறுகும் எழில்புரை மேனி
விருந்தெனப் பொருட்கு விலையிடும் மகளிர்
வாழணி மறுகும்  வண்ணங் குயிற்றிய
நுண்ணூல் வினைஞர் நூலோர் மறுகும்
பொன்னிலை காண்போர் பொலிமனை வீதியும்                    100
மன்னிய்  ம்ணிவளம்  மதிப்போர்  தெருவும்
ம்றையோர்  அமைச்சர்   எண்பே  ராயம்
ஐம்பெருங்   குழுவோர்  அரைசியற்  பணிசெய்
ஏனோர்  பலராய் இருந்துறை  மறுகும்
அம்பலம்  சதுக்கம்  அகல் நாற்சந்தி                                                               105
கம்பமா இவுளி கலைபயில்  வதனைக்
காண்போர்  உறையும்  கலிமிகு மறுகும்
பூணணி  மகளிர்  பொருந்துசெய்  குன்றும்
நாண்மலர்  சிந்தும்  நறுமலர்க்  காவும்
வளஞ்சால்  மங்கை  வனப்பமைந்  தன்ன                                                      110
இளமரக்  காவென்  றிலங்கு  சோலையும்
விண்ணீர் அன்ன  வியனொளி  உடைத்தாய்த்
தண்ணீர்  இலங்கு  தடமலர்  வாவியும்
காவிய்ங் கண்ணார்  களிநடம்  பயிலும்
ஓவியம்  தீற்றி  உயர்மணி  குயிற்றி                                                               115
முத்துத்  தாமம்  முறைப்பட  நாற்றிய
ஆடல்  அரங்கும்  அணிசேர்  இளைஞர்
வருபகை  மாற்றும்  வாள்பயில் களமும்
பூமலி  கூந்தற்  புரியிழை  மாதர்
குயிற்கிசை பயிற்றக் கூடிய  கூடமும்                                                            120
வேளிநாட்  டாளர்   விருந்தயர்  இருக்கையும்
களிதரு  விழாமலி  கடவுட்  கோட்;ட்மும்
நல்கிய  பேரெழில்  நலம்பல  கண்டு
பல்வகைக் காஞ்சியின்  பாங்கர்  இருந்த
நல்லெழில்  குறைந்த  மண்டபம்  குறுகிக்                                                       125

அற்றார்க்கு  அமுது தருதல்
   
கோலே  காலாக்  கொண்ட  வறியவர்
உள்ளக டொட்டி  உறுபசி நோயால் 
ஊற்றம் ஒடுங்கி  உறைந்து  கிடந்தோர்
ஆற்றாப்  பிணிகொண்  டவதிப்  பட்டோர்
போற்றார்  இன்றிப்  புலம்புறு  மாக்கள்                                                            130  
தம்மைக் கண்ட தளிர்க்கொடி தன்னிரு
கண்கள் நீரைக்  கட்லெனப்  பொழிய
இல்லார்க்  கடிசில்  நில்லா  தளிக்கும்
ஆபுத் திர்ன்கை  அமுத  சுரபியை
எடுத்ததிற்  சுரந்த  இடையறா உணவைக்                                                       135
கொடுத்தன்ள்  உண்டார்  கொடும்பசி  தீர்ந்தே
களித்தவர் முகங்கண்  டகங்களித்  தனனென்.

கச்சிகாண் காதை  நிறைவுற்றது
கவிஞர்.நா.மீனவன்.




meenavan2

unread,
Feb 7, 2014, 11:56:41 PM2/7/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வர்லாறு உரைத்த காதை

உயிர் காப்பாற்றும் உயர்தனி  மருந்தாகிய  உண்வினை மணிமேகலையிட
அதனை உண்ட மக்கள் ம்கிழ்ந்தனர்.மலர்முகச் செல்வியாகிய மணிமேகலையை
வாழ்த்திடனர்.அதன்பின் மணிமேகலை அங்கிருந்து நீங்கிப் பல்வேறு இயற்கைக்
காட்சிகளைக் கண்டு களித்தாள்.புத்தர் நெறி போற்றும் அறவோர் வாழும் பள்ளியைச்
சேர்ந்தாள்.அப்போது அங்கு வந்த ககன சாரிகள் ஆண்டுள்ள அறவோருக்கு மணிமே
கலையின் வரலாறு கூறின்ர்.காவிரிப்பூம் பட்டினத்தில் மன்னர் பின்னோரான் பெருங்குடி
வணிகர் தம் குலத்துத் தோன்றிய கோவலன் கணண்கியை மணந்தான்


கவிஞர்.நா.மீனவன்

On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Feb 10, 2014, 12:32:36 AM2/10/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வரலாறு உரைத்த காதை

அந்நாள் அரசவை ஆடற்கணிகையாகிய மாதவி மனைக்கு ஏகி அங்கு விடுதல்
அறியா  விருப்பினன்  ஆனான்.சில நாளில் மாதவியைப் பிரிந்து கண்ணகியோடு
கவுந்தி அடிகள் துணைவர மதுரை சென்ற்னன்.கண்ணகியின் பண்ணமை காற்சிலம்பு
விலை கூறுங்கால் பாண்டியன் பொற்கொல்லன் சூழ்ச்சியால்  கள்வனெனக் குற்றம்
சாட்டப் பட்டுக் கொலை ஆனான்.கண்ணகி பாண்டியன் முன் காற் சிலம்புடைத்துக்
கணவன்மேல் வந்த பழி நீக்கி வஞ்சி சென்று  வானாடு அடைந்தாள்.மாதவி துறவு
பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவியாக்கினாள்.மேகலையின் அழகு கண்ட
அரசன் மகன் உதயணன் அவளை அடையத் துடித்த போது மணிமேகலா தெயவம்
அவளை எடுத்து வான்வழிச் சென்று மணிபல்லவத்திற் சேர்த்தது.அங்குள்ள பீடிகையை
வணங்கிய மணிமேகலை தன் பழம்பிறப்பை உணர்ந்தாள். கோமுகிப் பொய்கையுள் இருந்த
ஆபுத்திரன்கை அமுதசுரபி மேகலை கையிற் கிடைத்தது. அதன் மூலம் அவள் அற்றார்க்கு
உணவளிக்கும் அற்ச் செயலைத் தொடங்கினாள்.அவளே இவள்.இவளே அவள் என்றனர்.
அறவோரும் அவளை வரவேற்று மகிழ்ந்தனர்.


மீனவன்

On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Feb 10, 2014, 4:13:05 AM2/10/14
to mint...@googlegroups.com

meenavan2

unread,
Feb 10, 2014, 5:00:53 AM2/10/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வரலாறு உரைத காதை


நிலை மண்டில ஆசிரியப்பா

மணிமேகலை உணவிடல்

எரிகதிர்  என்ன  இருந்துகாய்  பசியாண்டு
எரியுறு  மெழுகென  இரிந்தலைந்  தோட
உயிர்காப்  பாற்றும்  உயர்தனி  மருந்தைப்
பெயலென  மேகலை  பெய்தங்  கிருத்தலும்

மக்கள் மகிழ்ச்சி

விரிகடல் ஒலியை  விஞ்சிடு மாறு                                         5
வருநனி  ஓசை வயின்வயின் கேட்க
உண்டோர்  பசிதீர்நத்ங்  குள்ளம்  களிக்கக்
கண்டோர் நெஞ்சில் கதித்த  மகிழ்ச்சி
அலைபாய்  நீத்தம்  அதுவெனப்  பரவத்

மக்கள் வாழ்த்து

தகைசால்  அறஞ்செய் தகைமிகு  தையல்!                            10
மலர்முகச்  செவ்வி!நின்  காண்பே  பெரிதெனப்
பலரும்  வாழ்த்த்ப் படர்ந்தனள்  நீங்கி

இயற்கைப் புனைவு

தளையவிழ்  பூக்கள்  தாதுகு  பொதும்பர்
கிளையொடு பசுங்கிளி  கிளரிசை  பயிற்றல்
தோகை  மயிலெனத் துலங்கிடு மகளிர்                                15
ஓகையால்  அழைக்கும்  ஒலியினை  நிகர்க்கும்
கொங்குதேர்  தும்பி  கூட்டிய  தேனும்
பன்மலர்  விரிந்து பல்கிய  தேனும்
நன்பலா  வெடித்து  நல்கிய  தேனும்
அருந்தமிழ்ப்  புலவோர்  அவையிற் பொழிந்த                        20
பெருந்தமிழ்க்  கவியென்ப்  பெருக்கெடுத் தோடும்
சோலையின்  ம்ணத்தைச் சுமந்தெழு  தென்றல்
வேலையிற்  களைத்தோர்  மேனியைத் தடவல்
ஞாலத்  தொல்லயில்  தவித்திடு  மாக்கள்
உள்ளத் துயர்ந்தோர்  உரையெனப்  படியும்                             25
கனியிருஞ்  சோலை  நாற்புறஞ்  சூழ
ஒளிமிகுந்  துலவும்  உயர்பெருங்  கோட்ட்ம்

அறவோர் பள்ளி

நா.மீனவன்

meenavan2

unread,
Feb 10, 2014, 7:29:02 AM2/10/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வரலாறு உரைத காதை

கோட்டத் தயலே  கொகையின் வழுவா
நாட்டத்  துயர்ந்த  நல்லறச்  சாரணர்
வானிழிந் தங்கே  வந்துவந் திரங்கித்                                            30
தானறம்  உரைக்கும்  தனிப்பெரும்  பள்ளி
மண்ணிற்  பெருஞ்சுகம் மதியா திருக்கும்
தீர்த்தர்  வாழும்  தெய்வதப்  பள்ளி

அறவோர் நன்மை

கார்போல்  என்றும்  கருணைசெய் மேலோர்
ஐங்கணை  வில்லியின்  ஆற்றலை  வென்றோர்                       35
பொங்கெழில்  மேனிப்  புத்த ஞாயிறு
தானொளிர்  கதிரெனத்  தனிப்பெருந்  தவத்தோர்
ஊன்பொதி  மாந்தர்  உடல்நோ  வஞ்சிக்
காயெரி  வெம்மைக்  கானம்  நண்ணிய
தூயவன் புத்தன்  சொல்வழி  நடப்போர்                                       40
அல்லவை கடிந்தோர் அறவழி  காட்டிச்
செல்லல்  அகற்றும்  செந்நெறி  யாளர்
கோணிலை  மாறினும்  கோள்நிலை  மாறா
மாணிலை  யாளர் மகிழ்ந்திருந்  துறையும்
அறவோர்  பள்ளியின்  அயலே  நெருங்க                                    45
வருமவள்  சீத  வதனமா  மதியின்
விரிந்த  பேரொளியில் விளங்கிய  அருளைக்
கண்டறம்   உணர்ந்த  ககன சாரிகள்

ககன சாரிகள்

ககன சாரிகள்  மணிமேகலை வரலாறு  கூறல்
மண்டிய  மகிழ்வு  மனமீக் கூர
இருந்தனர்  அவர்தம்  இன்னருள்  சுரக்கும்                                 50
திருந்திய  தவத்துத்  தேசுகொள்  வதனம்
நோக்கிப்  பெரியீர்  நுவலருந்  தவத்தீர்!

ஆபுத்திரன்  அறப்பணி

காக்கும்  அறமுரை  காவலர் கேட்பீர்
பொதியச்  செந்தமிழ்   போந்திருந்  தகலாப்
பதியெனும்  பாங்கர்ப்  பொருந்திய                                              55
செழுங்கலை  நியமச் சிந்தா தேவி
வழங்கிய அமுத சுரபியை  வாங்கிய
ஆபுத்  திரன்தன் அறப்பணி தொடரப்

காவிரிச் சிறப்பு

meenavan2

unread,
Feb 11, 2014, 12:40:56 AM2/11/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வரலாறு உரைத காதை

பொன்னும்  மணியும்  பூவுடன்  உந்தித்
தண்மலர் விழியெனத் தவழ்சேல்  காட்டி                                60
உழவர் நெஞ்சிற்  குவப்பை யூட்டி
வளவர் நாட்டுயர்  வ்ஞ்சியாய்  ஒசிந்து.
நத்துச்  சங்கு  நல்லணி பூண்டு
தத்தி  நடந்து  தணவா  தாகி
உற்றார்க் குதவும்  உறுநட்  பாளர்                                             65
பற்றினார்  பால்வரு பாசம்  விடாது
காப்பது  போல்தன்  கரையயல்  சார்ந்த
பூப்புனை  கோதையிற் பொலியும் கழனியை
என்றும்  காக்கும் இறைவியாம்  காவிரி
குன்றா  வளத்தைக்  கூட்டிட நிறைந்து                                     70
திருமகள் முகமெனத் திகழ்பூம் புகார்க்கண்
வருபகை மாற்றும் வான்சுட்ர்ச் சோழர்

கோவலன் சிறப்பு

பின்னோ  ராகிய  பெருங்குடி  வணிகர்
தம்குலத்  தெழுந்த  தனிவேற் குமரன்
கோட்டமில் கலைகளில் குறையா  ஆர்வ                               75

நா.மீனவன்

meenavan2

unread,
Feb 11, 2014, 7:05:45 AM2/11/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வரலாறு உரைத காதை

கண்ணகி சிறப்பு

நாட்டம்  நனிகொள் கோவல  நம்பி
வண்டுதேன்  உண்ண வ்ழங்குமா  மலரைக்
கொண்டபூங்  குழலாள்  குளிர்கார்  வென்றவள்
தன்னடி  அந்தத்  தரைமகள்  அறியா
வண்ணம்  இருந்த  வாங்கொடி யான                                      80
கண்ணகி  நங்கை  தன்றுணை  யாகப்
பொருந்தினன்  பின்னால் புரிகுழல் நங்கை

மாதவி சிறப்பு

இருங்கடல் அமுதென  இளைஞ்ர்பா  ராட்டும்
ஆட்ற் கணிகை  அவள்நல  முண்ணும்
வேட்கையில்  சென்று விடுதல்  அறியாது                             85
உறைந்தவள்  இல்லில் உயர்மனை  மறந்தான்

மாதவியைப் பிரிதல்

போகூழ் வந்து  புகுந்தத  னாலே
போற்றரும்  வான்பொருட்  குவையெலாம் போக்கினன்
அலைமன முடையான்  அவள்தனைத்  துறந்தே
சிலையெழில் தன்மனைத் திருவிடம் சேர்ந்தான்                  90
சேர்நதவன் தன்மனை  உறைவா  னாகித்
தோகைபின்  னாகத் துறவுக் கரசி

மதுரை நிகழ்ச்சிகள்

மாதவக் கவுந்தி  மகிழ்துணை யோடு
காதங்  கடந்து  கவின்சால்  மதுரை
மூதூர்க் கேகி  முன்வினை யுறுப்பக்                                       95

meenavan2

unread,
Feb 12, 2014, 7:06:07 AM2/12/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

2.வரலாறு உரைத காதை

கண்ணகி  ந்ல்லாள்  காற்சிலம் பொன்றை
நல்வினைப் படுத்த நாடிச்செல் காலையில்
பாண்டியன் தேவிகாற்  பசும்பொற் சிலம்பை
வேண்டிக் கவர்ந்த  விலங்குநடைக்  கொல்லன்
வஞ்சத்  தாலவன் வாணாள் முடியத்                                        100
தாங்கா  தத்துயர் தாங்கேட்  டரற்றி
நீங்கா இப்பழி  நீக்குவன்  யானென
எழுந்தனள் ஓடி  எழில்வளர் மதுரைச்
செழியன்  முன்னர்ச் சிலம்புடைத் தங்கே
அவன்பழி உணர்த்தி அறம்நிலை  நிறுத்தி                                105 
அவனுயிர் ஒழிய  அடர்சினம் நீங்காள்
கொடிதவழ் கூடல் கொடுந்தீக்  காக்கி
எஞ்சா  ந்ல்லிசை  ஏற்றநற்  சேரரின்
செங்குன் றத்துச் சேர்ந்துதன்  கணவன்
வானோர் வ்டிவில்  வரஇவன்  தன்னுடன்                                110
வானவர்  நாடு  வழிக்கொண் ட்னளே.

மணிமேகலையின்  வரலாறு  கூறல்

இப்பியிற்  பிறந்த இனமணி  போலத்
தப்பிலள்  கணிகையர்  தங்குலம் பிறந்த
மாதவி  போதி  மாதவர்த்  தொழுதே
ஆதியங் கட்வுள் அவனருள் வேட்டுத்                                       115
துறவு  பூண்டே  தோலா  நலஞ்சால்
அறவழிச் செல்லும் அன்னாள் கோவலன்
தன்னொடு  வாழ்ந்த  தகைசால்  வாழ்வில்
மின்என  இந்த மேதினித்  தோன்றிய
பொன்மணி  மேகலை என்னும் பூவையை                              120
உருவஞ் சிறந்த ஓவியம் போலும்
பருவப்  பாவையைப்  பகவன் முன்றில்                       
புரிகுழல்  நீக்கிப் புனிதத்  துறவின்
நெறியினிற் செலுத்தி  நின்றனள் ஆங்கே
ஊராள்  வேந்தற்  கொருமக னான                                             125
சீரார்  உதய குமரன்  அவள்தன்
நேயம்  விரும்பி  நிழலெனத் தொடர
மாயத்  தால்மணி மேகலா தெய்வம்
வான்வ்ழி  எடுத்து  ம்ணிபல்  லவத்தில்
தானறம்  உணர்த்தும்  தரும  பீடிகை                                         130
வழிமுற்  பிறப்பினை  உணர்த்திக் கோமுகி

பாத்திரம் பெறுதல்

எழில்சேர்  பொய்கையுள் இருந்ததே  யான
அள்ளக் குறையா  அடிசில்  நல்கும்
அமுத சுரபி  அவள்கைச் சேரச்
செய்த  பின்றைச் சீர்சால்  புகார்க்கண்                                       135
பசிநோ யாளர் பல்பிணி யுற்றார்
தொடரும்  வருத்தத்  தொடக்கினில்  வீழ்ந்தோர்
ஆற்றா மாக்கள்  அல்லல் நீக்கி
மாற்றிய  காரிகை  இவள்மணி  மேகலை
என்றுரை  செய்ய  இருந்தவர்  கேட்டு                                        140
நன்றிவள்  திறமெலாம்  நாமறிந்  துணர்ந்தனம்
என்மகிழ்ந்  தவளை  இன்முகம் காட்டி
மனமொழி  யாலே  மாண்புற  வணங்கி
இயம்பினர் மேகலை இசையினை  ஆங்கென்.

இரண்டாம் காதை  முற்றும்

மீனவன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 12, 2014, 11:48:47 AM2/12/14
to mintamil
2014-02-10 15:30 GMT+05:30 meenavan2 <meen...@gmail.com>:

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்


இயற்கைப் புனைவு

கொங்குதேர்  தும்பி  கூட்டிய  தேனும்
பன்மலர்  விரிந்து பல்கிய  தேனும்
நன்பலா  வெடித்து  நல்கிய  தேனும்
அருந்தமிழ்ப்  புலவோர்  அவையிற் பொழிந்த                        20
பெருந்தமிழ்க்  கவியெனப்  பெருக்கெடுத் தோடும்
சோலையின்  மணத்தைச் சுமந்தெழு  தென்றல்

வேலையிற்  களைத்தோர்  மேனியைத் தடவல்
ஞாலத்  தொல்லையில்  தவித்திடு  மாக்கள்

உள்ளத் துயர்ந்தோர்  உரையெனப்  படியும்  
 
                           
அருமை.

meenavan2

unread,
Feb 14, 2014, 2:54:34 AM2/14/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

3.பசித்தார்க் குதவப் பாவைசெல் காதை

{அறவோர் பள்ளியிலிருந்த முனிவர்கள் மேகலையை நோக்கி,"உலகிற்
 பிறந்தோர் அனைவரும் உயர் அறம் செய்ய வேண்டும்,அதன் மூலம்
நல்வழி நாட வேண்டும்,என்பதை உணரந்து,அரச வாழ்வு துறந்து,ஞானம்
பெற்ற புத்தரின் வழிச் செல்லும் நீ,' உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
என்பதற்கு இணங்க அறம் செய்வாய்:இக்காஞ்சி மாநகரின் புறத்தே மழை
பொய்த்தமையால் பஞ்சம் உண்டாயிற்று.அதனால் பசிப்பிணி உற்றோர் பலர்.
அவர்கட்கெல்லாம் சோறளித்து உதவுவாயாக." என வேண்டினர்.அது கேட்ட
மேலையும் கன்றினை நினைத்துச் செல்லும் காரான் போல அவர்களைத் தேடிக்
கடிது சென்றாள்.}


நிலைமண்டில ஆசிரியப்பா

முனிவர்கள் மணிமேகலையின் அறம் போற்றல்

அல்லல்  மாக்கள்  அரும்பசி களையும்
ந்ல்லோய் ! கேள் நீ:  நாவலந்  தீவில்
பிறப்பெ டுப்பதுவே  பெரும்பே  ரின்பம்
பிறந்தபின்  மீண்டும்  பிறவா ஞானம்
உறுதல் என்பதும்  உயர்பே  ரின்பம்                                           5
குறைவிலா  ஞானம் கூடிய  காலை
அறஞ்செயும் நெஞ்சம்  ஆர்தலும்  இன்பம்
உலகத்  துயிர்களின்  உறுதுயர்  அகற்றும்
நல்வழி  நாடுதல்  நனிபே  ரின்பம்
என்பதை  உணர்ந்தே  இச்சை யறுத்து                                     10
வன்கண்  விலங்கினம்  வளர்கா  னேகி
உண்டி  மறந்தே உளம்நிலைப்  படுத்துப்
பொலியும் சாகைப்  போதிநன்  னிழற்கீழ்
உலகம்  உவப்ப  உணர்ந்த  உற்வோன்
ஏடுகொள்  தாம்ரை  இணையடி  நோவ                                    15
நாடும்  காடும்  நடந்துதம்  கோளைப்
பரப்பிய  பேரொளிப்  பகலவன்  என்னும்
புனித ஞானப்  புத்தர் பெருமான்
உலகத் திலதமாய்  உயர்வுற்  றிலங்கும்
கபில  வத்துக்  க்டிநகர்ப்  பிறந்தோன்                                       20
அருள்ஒளிப்  போதி  அடிக்கீழ்  இருந்த
திருமகன்  தெளிந்து  தெரிந்த  கொள்கையின்
வழிப்படர்  தவத்தின்  வனிதையே  ஆன்றோர்
மொழிவழி  பசித்தோர்  முகம்பார்த்  திரங்கி
உண்டி  கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே                              25
எனப்புகழ்ந்  துலகம்  ஏற்றிப்  போற்ற
மண்டிய பசிக்கு  மருந்தெனும்  அறத்தைச்
செய்யுமுன்  பெருமைச்  சிறப்பறிந்  தோம்யாம்
உய்வழி காட்ட  உயர்மரப்  போதி
மாமுனி  அருளிய  மறைபீ  டகத்தில்                                        30


மீனவன்

On Wednesday, January 15, 2014 1:25:59 PM UTC+5:30, meenavan2 wrote:

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Feb 18, 2014, 5:20:22 AM2/18/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

3.பசித்தார்க் குதவப் பாவைசெல் காதை(தொடர்ச்சி)
தாமுள நெறியைத் தலைமேற்  கொள்நீ
உரைபபது  கேளாய் ! உயர்மதிற் கச்சி

காஞ்சிப் பதிக் கயல் சென்று உணவிட வேண்டல்

நகர்மருங்  காக  நலிவிடம்  பலவுள
பகர்தற் கரிய பஞ்சம்  தொடர
வான மாரி  பெயல்வறங்  கூரத்                                                 35
தானம்  வாரித் தருபவர் இன்றிப்
பதியுறை  மாந்தரைப் பசிப்பிணி வருத்த
நதிப்புனல்  காணா நன்செய் நத்தம்.
வாய்திறந்  தாங்கே  வான்மழை  வேட்க
அற்றவர் இலம்போல் அணிமலர் வாவி                                  40
வற்றிக் காய்ந்துதன்  வண்ணம்தீய
முற்றித்  திரண்ட முதுகாய்க்  குலைகள்
அற்றுப் பெண்னையும்  அதனயல் தெங்கும்
ஈனா ம்லட்டின் இனைத் தசைந்  தேங்கத்
தேனார் வள்டினம் திரிந்த  வாவிகள்                                         45
ஊன்தோல்  காய்ந்த உடம்பெனத்  தோன்றக்
கஞ்சன் இலத்தில்  காலடி  படரா
நெஞ்சத்  தாரென  நீங்கிய  புட்கள்
வான்வழிக்  கொள்ள  வடவைத் தீயெனத்
தானெரி  முற்றிய தகைமைத்  தென்னப்                                  50
பசித்தீ  பற்றிப்  பரிபவ  முற்றார்
தருமச்  செவ்வியர் தனறுணை  காணாது
அருந்துயர்ப்  பட்டெழும்  அவலமோ  பெரிதே
பிச்சைப் பாத்திரப்  பெருஞ்சோ  றெடுத்து
நச்சினார்க் கெல்லாம்  நாள்நாள்  உதவிக்                                55
காக்கும்  பணியே  கைக்கொள்  வாயென
ஆக்கங்  கூற  அணிமணி  மேகலை

மணிமேகலை பிச்சையிடச்  செல்லல்

ஆதிரை  இட்ட  அடிசில்  அறாதே
ஆதுலர்க்  குதவும்  அமுத சுரபியை
ஏந்திய  கையள்  இனனருள்  நெஞ்சுடன்                                  60
போந்தக்  கோட்டம்  புறம்பிடச்  சென்றாங்கு
ஓங்குறு  மதில்சேர்  ஒண்புகழ்க்  காஞ்சி
நீங்கிக்  கடந்து  நெடுந்தொலை ஏகி
அறப்பெருஞ்  செல்வி அவளுரு வென்னுந் 
திறத்தினில்  திக்ழ்வாள்  தெய்வம்  இவளென                         65
உரைக்கும்  தகைமை  உற்றவ ளாகிப்
பல்கலைக்  காஞ்சி  பாலா  றூட்ட
நல்வள முற்று  நனிநனி  சிறக்கக்
கன்றை நினத்துக்  க்டிதுசெல்  காரா
என்றிடு  மாறங்  கேகினள்  அவளென்.                                     70

3.பசித்தார்க் குதவப் பாவைசெல் காதை நிறைவுற்றது


 காப்பியக் கவிஞர்.நா.மீனவன்



meenavan2

unread,
Feb 22, 2014, 6:32:24 AM2/22/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்(தொடர்ச்சி)

4.புண்ணியப் பாவையைப் போற்றிய காதை

{சோழன் நெடுமுடிக்கிள்ளி சோழ நாட்டை ஆண்ட போது,நாக
 நாட்டைச் சேர்ந்த பீலிவளை அங்கு வந்தாள்.சோழ்னின் காதலுக்கு
ஆட்பட்டாள்.அதனால் ஒரு மகவையும் பெற்றெடுத்தாள்.சில திங்கள்
சென்றபின் தன் மகனுடன் நாக நாடு சென்றாள்.மகன் வளர்ந்தான்.
பின்னர்ப் பெற்ற ம்கனைக் கடல் வழிச்செல்லும் கம்பளச் செட்டி மூலம்
சோழனிடம் சேர்க்குமாறு அனுப்பினாள்.வழியிற் கலங்கவிழ்ந்து உடைந்தது.
தப்பிய கம்பளச் செட்டிகள் மூலம் செய்தி அறிந்து  காணாமற் போன மகனைத்
தேடத் தொடங்கினான்.அலைகளின் வழியே மிதந்து வந்த அக்குழந்தையைக்
கண்டெடுத்தமையால் இளந்திரையன் என்ற பெயருடன் வளர்வதாக ஏவலர்
கூறினர்.சோழன் அவனைக் காஞ்சியின் மன்னன் ஆக்கினான்.அவன் காஞ்சியை
ஆண்ட பொழுது பஞ்சமுற்ற பகுதிகளில் மணிமேகலை மக்கட்கு உதவினாள்.
மக்கள் மகிழ மழை பொழிந்தது.உழவோர் பாடிக் களித்தனர்.மேகலையின்
பணிகண்ட மன்னன் அவளை வாழ்த்தினான்.வணங்கினான்.அவளால் பஞ்சம்
தீரும்,மழை பொழியும் எனவும் அதனால் மணிபல்லவம்போல் ஓரிடம்
அமைத்தமையையும் கூறினாள்.மேகலை மகிழ்ந்தாள்.அக்கோட்ட்த்தை அடைந்தாள்}

தொடரும்

meenavan2

unread,
Feb 25, 2014, 3:56:12 AM2/25/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்)
 காப்பியக் கவிஞர்.நா.மீனவன்(தொடர்ச்சி

நிலைமண்டில ஆசிரியப்பா

4.புண்ணியப் பாவையைப்  போற்றிய  காதை

இளந்திரையன் வரலாறும்  பஞ்சமுற்ற பதியும்

வென்றி  நெடுவேல் வியன்பெருந்  தானை
குன்றுதல் இல்லாக்  குலப்பெருஞ்  சோழன்
நெடுமுடிக் கிள்ளி  நிறைபுனல் நாட்டின்
முடிவேந்  தாகி  முற்பட  ஆளும்
அந்நாள்  அதனில்  அணிசேர்  பூம்பொழில்                  5
நன்னா   டான  நாகநாட்  டரசன்
பெற்றநல்  மகளாம்  பீலி  வளையாள்
உற்றனன்  கண்ட சோழனும்  ஊழாற்
பள்ளத்  தின்வழிப்  பாய்புனல் போலக்
காதலில்  மயங்கிக் களித்து   வாழ்நாளில்                     10
மாதொரு  மகனை மகிழ்ந்தே பெற்றனள்
பெற்ற  மகனைத்  தன்பெரு  நாட்டில்
கொண்டு  வளர்த்தாள் குலமகன்  வளர்நாள்
பெற்ற  மகனைப்  பெருமையோ  டெடுத்து
வெற்றிசேர்  கிள்ளி  வியன்கைப்  படுத்த                       15
எண்ணினள்  பின்னர்  எழிற்சோ    ணர்ட்டை

meenavan2

unread,
Feb 25, 2014, 4:48:25 AM2/25/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்(தொடர்ச்சி)


4.புண்ணியப் பாவையைப் போற்றிய காதை

நண்ணிடு  வணிகன்  நன்கல  முடைய்
கம்பளச் செட்டியின்  கையகம்  கொடுத்தனன்
வாங்கிய  அவனும்  வங்கம் ஏறி
நீங்கிய   காலை  நிகழ்ந்தசீர்  கேடால்                                         20
கலம்சிதை  வுற்றது  கம்பளச்  செட்டியும்
அலைகடல்  நீந்தித் அணிபுகார்  சேர்ந்தனன்
சேர்ந்தவன்  உரைத்த  செய்தியை  அறிந்த
மன்னவன்  கிள்ளி  மனங்கவல் வுற்றான்
அன்னசேய்  தன்னை  அடையத்  துடித்துக்                                25
காவலர்க்  கூவிக்  கண்டுவரு  கென்றான்
ஏவலர்  சென்றனர்  எங்கணும்  தேடினர்
தேடுங்  காலை  திரைவழி  மிதந்து
வாடுங்  குழவியை  வழியிற் கண்டோர்
நாடி  வள்ர்க்கும்  ந்ற்செயல்  அறிந்தார்                                     30
தொண்டைக் கொடியிடைச் சுற்றிய  வாறு
கண்ட  குழவி  கடற்றிரை  மீது
வந்தது  கண்டு  வாரி  எடுத்தவர்
திரையன்  என்ப்பேர் செப்பி  வளர்த்தனர்
இதையறி  வீரென  இயம்பினர் காவலர்                                    35

மீனவன்

கவிஞர்.மீனவன் (மாதவ மேகலை (காப்பியம்)
தொடரும்

meenavan2

unread,
Mar 2, 2014, 6:23:27 AM3/2/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்(தொடர்ச்சி)

4.புண்ணியப் பாவையைப் போற்றிய காதை;

பெற்ற சோழன் பெரிதுளம்  மகிழ்ந்து
கற்றவர் போற்றும் காஞ்சியை ஆளும்
மன்னவன் ஆக்கி மணிமுடி சூட்டினன்
அவனே  கச்சி ஆளுமை கொண்ட
அரசென விளங்கினன் அந்நாள் அதனில்            40
வாழ்மணிக் காஞ்சி  வளநகர்ப் புறத்தே
சூழ்பல குடிகள் சூழ்ந்தவை எண்;ணில
கடிநகர்  மருங்கே காவதம்  தாண்டி
மடியுற் றவைதாம்  மாமழை இன்றி

மணிமேகலை துயர்

வாடிக் கிடக்;க வருவார்க் கெல்லாம்                45
தேடிச் சோறு  திருந்திட அளிக்கும்
மாமலர் நெடுங்கண்  மாதவி ஈன்;ற
தேமலர்க்; கோதை தெய்வத் திருமகள்
பூமலர்  மன்மதன் புறங்கொடுத் தேக
ஆசை அவித்தே அறவோன் தன்எழில்              46
மாசறு  சேவடி மனக்கண்  நிறுத்திப்
புண்ணியம் ஒன்றே பொருளெனக் கொண்ட
காரிகை கண்டு கசிந்தனள் இரங்கிச்

மணிமேகலை  உணவளித்தல்

சீரற் றிலகும் சிறுகுடி சேர்ந்த
தனியுறு  மன்றம் தானடைந்  தாங்கண்            55
இருந்தோர் ஏக்கற் றேங்கித்  தம்முளம்
வருந்தினர் தெய்வம் வந்த தீங்கென
ஆலித்; தெழுந்தடி பணிய அவனருள்
பாலித் தெழுதுயர் தன்கண் பனித்திட
நீர்முத் திறக்கி நெருங்கியோர் தமக்கெலாம்        60

மீனவன்
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 4, 2014, 12:48:01 AM3/4/14
to mintamil
சிறு திருத்தத்துடன் தொடர்ச்சி:

மாதவ மேகலை (காப்பியம்) தொடர்ச்சி
காப்பியக் கவிஞர்-நா.மீனவன்

வார்முத்  தன்ன  வண்சோ  றளித்துப்
பெருங்கடல்  முத்தெனப் பிறங்கினள்  ஆங்கே

மக்கள் மகிழ்ச்சி

தருஞ்சோ  றுண்டே  தம்துயர்  தீரப்
பூத்த  வதனப்  பொங்கெழில் வான்மழை
பார்த்துக்  களிக்கும்  மயிலென மகிழ                                            65
உண்டவர் எழுந்தே  ஊர்க்குள் ஓடிக்
கண்டவர்  தம்மைக் கடுகிக் கூவி
வான்கொடி  என்ன  வந்தநல் நங்கை
தானிருந் தறஞ்செய் தருக்கீழ்க்  காட்டப்
பிறவித்  தொடக்கறு  பெரியோர் போலத்                                     70
தருசோ  றுண்டவர்  தாமுளங்   களித்தார்

மீனவன்



Message has been deleted

meenavan2

unread,
Mar 5, 2014, 9:16:18 PM3/5/14
to mint...@googlegroups.com


On Wednesday, 5 March 2014 13:52:10 UTC+5:30, meenavan2 wrote:
On Wednesday, 5 March 2014 13:52:10 UTC+5:30, meenavan2 wrote:
Message has been deleted

meenavan2

unread,
Mar 8, 2014, 5:13:46 AM3/8/14
to mint...@googlegroups.com


On Tuesday, 4 March 2014 11:18:01 UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:

meenavan2

unread,
Mar 8, 2014, 5:15:15 AM3/8/14
to mint...@googlegroups.com

பதிபல செல்லல்

பசித்தோர்  வருகெனப்  பதிபல  சென்று
புசிக்கச்  சோறு  புரிந்துநான்  நல்கும்
அறப்பணி  தொடர்ந்தே  அகமகிழ் வேளை
வறங்கூர்  பகுதியில்  வாழ்வோர்  வாழ்வுற                             75
நலறஞ்  செயுமவள்  நளினமா  மலரடி

எங்கும்  மழை பொழிதல்

புல்லிய  மண்மகள்  பொருந்துளம்  மகிழ்ந்தனள்
கான்வாழ்  மயிலெனக்  கதித்தெழு  முகில்கள்
வான்மேற்  கொள்ள  வாய்த்தெழு  மின்னல்
இயற்கைப் பாவையின்  இடைமே  கலைபோல்                    80
தயங்கொளி  உமிழத்  தன்பகை   அயர
முழங்கும்  மன்னவன்  முரசொலி  எனவிடி
முழ்க்கிட  வான்மகள்  முதுகளி  முதுகளி  கொண்டே
தானருள்  புரியத்  தண்டுழி  சிந்தப்
பகர்விசும்  பிருந்து  பாய்மழை  நீத்தம்                                     85
தலைசெறி  மலைமகள்  தன்மணி  மார்பில்
அணிமுத்  தாரமாய்   அழகுடன் இலங்க
இல்லார்க்  களிக்கும் இலைஎனா  வள்ளல்
பல்புகழ்  பாரிற்  பரவிய  பான்மைபோல்
வெள்ளம் விரவி  விரிநிலம்  பரவிப்                                         90    
பரதம்  பயிலெழிற் பாவையைப்  போல
அற்புதம்  காட்டி  அசைந்தொசிந்  தாடி
இரும்பே  ராசான்  இயம்பிய மேலாம்
அரும்பொருள் முகந்துல  களிக்கும்  முனைவ்ர்போல்
அறம்பொருள்  என்ன  அப்புனல்  வாங்கி                                95 
உட்கொள்  கால்கள்  ஊரெலாம்  ஓடி
நற்பயன் பெருக்கி  நாளெலாம்  காக்கும்
கழனியிற்  சேரக்  களமர்  களிகொள
இழைபுனல்  நிரம்பிய  விளைவயற்  பரப்பில்
கம்புள்  தாரை  கனைகுரல்  நாரை                                          100
செம்போத்  துள்ளான்  சீர்கருங  காக்கை
அன்னச்  சேவல்  ஆர்த்தெழுந்  தொலிசெயப்
பண்ணை  உழுவோர் பயிலிசை  ஓதை
விண்ணில்  நிறைந்து  விளைந்தது  இன்பே.

meenavan2

unread,
Mar 9, 2014, 12:45:40 AM3/9/14
to mint...@googlegroups.com

புண்ணியப் பாவையைப் போற்றிய காதை(தொடர்ச்சி)

அறுசீர் விருத்தம்

உழவோர் பாடல்

நந்தியாம்  பொற்பை  விட்டு                                                  105
   நடந்தபா  லாற்று  வெள்ளம்
செநதமிழ்க்  கலைகள்  தேர்நதார்
   உளமெனச்  செழித்துப்  பொங்கும்
அந்திவான்  மீனைத்  தேடி
   அலைதல்போல் ஆற்று  வாளை
உந்தியே  வானில்  தாவி
   உழவரேம்  விருந்தாய்  ஆகும்.

பெருமலைப்  பிறந்த  நீத்தம்
   பிறங்குபூ மகள்தன் மார்பில்
திருமணி  ஆரம்  போலத்                                                      110
   திகழ்தர ஓடிப்  பாயும்
வருபுனல்  கால்கள்  வாங்கி
   வளமிலார்  ம்னம்போற் காய்ந்த
செருவினை  நெகிழச் செய்தே
   செஞ்சாலி  எமக்குச்  சேர்க்கும்.

Meenavan M

unread,
Mar 26, 2014, 12:56:02 AM3/26/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

பூவினைச்  சுமந்து  செல்லப்
    புதுமணப்  பெண்போற் செல்லும்
ஓவியப் புனலைத் தாங்கி
    உள்ளதோர்  கழனி எங்கள்
ஆவியாய்க் கருதி வாழும்                                                 115
    அன்பரேம் ஆண்டுப் போந்தே
தா(வு)இலா  நல்லேர் பூட்டித்
    தான்உழத்  தலை நாட்  செய்வோம்.

கலைகளை நாடிச் செல்லும்
    கற்றவர்  நெஞ்சம் போல
நிலைபெற  உழுத சாலின்
    நெறிவழிக்  கொழுபின் செல்ல
குலைதரு செந்நெல்  அள்ளிக்
    கொழிக்குமோர்  தொழிலின் வல்லேம்
தலைத்தலை தொழிலை ஆற்றித்                       
              120
    தரணியைக் காத்தல்  செய்வோம்.

ஆசையைத் துறந்தார் உள்ள
   ஆண்வம்  அழிந்தாற் போல்
ஓசைநீர் பாய  நன்செய்
    உள்ளபூங்  குவ்ளை எல்லாம்
மாசுறு  சேற்றில்  ஆழ்ந்து
    மடிந்திட  ஓடும்  சாலில்
காசறு  முத்தம் காண்போம்
    கடமையை  நாளும்   செய்வோம்.

சேற்றினை  உழககி  வண்ணச்                        
                  125            
   செந்நெலின்  விதைகள் தூவி
நாற்றினைப்  பறித்து  நட்டு
   நற்களை  அகற்றி  நாங்கள்
ஏற்றினைத்  தெய்வ மாக்கி
   ஏத்துவோம்  எழுந்த  செந்நெல்
நாற்றிசைப்  பசுமை  காட்டி
   நடித்திடக்  களிப்போம்  நாங்கள்.



meenavan2

unread,
Mar 26, 2014, 1:48:26 AM3/26/14
to mint...@googlegroups.com

4.புண்ணியப் பாவையைப் போற்றிய காதை

( தொடர்ச்சி)
அறிஞரின் இல்லம் சேர்ந்தே
   ஆயுமா  ணாக்கர் தன்போல்
செறிதரு  பயிர்கள்  தம்மில்                                       130
   சேர்ந்தொளிர்  மணிகள் எல்லாம்
மறிபடாப் புலமை  யாளர்
   மனமெனச் செஞசோ  றாக்கி
வறிஞர்தம்  வயிற்றுத் தீயை
   வாட்டிட  வாரிப்  பெய்வோம்.

தரைமகள்  தன்னை  நோக்கித்
   தளிர்நடை  பயில்பெண் போல
விரைவுற  வளர்ந்த  சாலி
   வியன்தலை  கவிழ்ந்து  நோக்க
உரைபுகழ்  உழவோர் யாங்கள்                                    135
   ஒளிர்தரு  கதிர்கள் தம்மில்
அரிந்தெடுத்(து)  அரியாக் கட்டி
   அணிகளம்  அதனிற் சேர்ப்போம்.

கற்றவர்  நெஞ்சே  போலும்
  கதிரடி களத்திற்  சேர்ந்த
உற்றநெல்  அரியைத் தூக்கி
  உயர்மணிப்  பொலியாச் சேர்த்து
மற்றவை  மனயிற் கூட்டி
  மகிழ்ந்திடும்  உழவோர் யாங்கள்
பற்றுடன்  உலகம் காக்கும்                                         140
  பண்பினேம் பாரே  சொல்லும்

கொல்பசி  நோய்க்கே கூற்றம்
  கொடியவெம்  போர்கள் செய்யும்
வில்லிசை  வீரர்க்  காற்றல்
   விளைநிலம்  வியன்சேர் பள்ளின்
நல்லிசைக்(கு)  ஊற்றம்  நாட்டின்
   நாயகம்  நாங்கள்  என்றே
பல்லிசை  கொள்வோம் மேழிப்
   பயனினால்  உலகு காப்போம்

கொற்றவர் போற்ற  வாழ்வோம்                               145
   குடிநல   வாழ்வே  காப்போம்
நற்றவர்  நலங்கள் ஓங்க
   நாடுவோம்  நலிந்து  வாழும்
உற்றவர் ஊரார் வந்தால்
   உவந்திட  உதவிக்  காப்போம்
கற்றவர் மதிக்க  வாழும்
   களமரேம் யாங்கள்  அம்மா.

மீனவன்
நிலைமண்டில  ஆசிரியப்பா

meenavan2

unread,
Mar 26, 2014, 8:30:30 AM3/26/14
to mint...@googlegroups.com

எனவிசை பாடி ஏர்த்தொழி  லாற்றி
வித்தில் ஆயிரம்  விளைத்திடு  செம்மலோர்                               150
எத்திசை தன்னிலும்  இத்தொழில் மேவ
உத்தம  மாந்தர்தம்  உளம்போல் யாவரும்
நித்தமும்  நலம்பெற நேர்ந்தருள் மேகலை
நெஞ்சங் களிகொள நேர்கண் டாரெலாம்
தஞ்சம்  தாயெனத் தாள்பணிந் தேத்தி                                            155
எஞ்சா  முழ்க்கொலி  எழுப்பின்ர்  கேட்டு
மகிழ்ந்தனள்  ஆகி  மணிமே  கலைவரக்
காவலன்  அவளைக்  கண்டடி பணிந்து
நாவலந்  தீவின் நல்லறப்  பாவாய்!
பல்வளங்  கண்ட  படர்புகழ்க் காஞ்சி                                                160
நெல்வள மற்று  நீர்வளஞ்  சுருங்கி
வருந்தியான் நிற்க வருந்துவேன்  முன்னர்
ஒருபெருந் தெய்வம் உருவுடன்  தோன்றி
மாகலைக் காஞ்சி  மன்னவ  வருந்தேல்

(மீனவன்)

meenavan2

unread,
Mar 28, 2014, 4:18:27 AM3/28/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்(தொடர்ச்சி) 4.புண்ணியப் பாவையைப் போற்றிய காதை

மேகலை  என்னும்  மேவிய  தவத்துக்                            165
காரிகை ஒருத்தி  கனிந்தமு  தூட்டிப்
பாரிதைக்  காக்குமோர்  பாத்திரத்  தோடு
தோன்றுவள்  அவள்தன்  துலங்குபே  ரருளால்
வானம்  பொழியும்  வையம் தழைக்கும்
இன்னும்  அறம்பல  இடையறா  தியலும்                       170
என்றுரை  செய்ய  இயம்பிய  படியான்
கோமுகிப்  பெயர்கொள்  கோல்நீர்  வாவியும்
தாமுறை  பல்லவம்  தானிங்  குற்றதோ
எனும்ப்டி  யமைத்தேன்  இயல்முற் பிறப்பின்
தன்மை  உரைத்திடு  தரும  பீடிகை                                 175
பொருந்திய  காவகம்  பொற்புற  அமைத்தேன்
தெய்வம்  போற்றித்  தினமும்  துதிக்கச்
செய்தொரு  கோயிலும்  சீர்பெற வாக்கினேன்
என்றலும்  மேகலை  இனிதுளம்  ம்கிழ்ந்து
சென்றனள்  கோட்டம்  சேர்ந்தனள்  உவந்தென்.            180

நான்காம் காதை நிறைவுற்றது.

(மீனவன்)

Meenavan M

unread,
Mar 31, 2014, 9:10:37 AM3/31/14
to mint...@googlegroups.com
மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

5.கானில் குழவி  கண்ட காதை

[யானைத்தீ எனும்  பசி நோயால் துன்புற்ற காயசண்டிகையின்
பசி  நீக்கிய அமுதசுரபியின் மூலம் காஞ்சியின் ப்ல்வேறு பகுதிகளில்
அறம் புரிந்து வந்த மணிமேகலை,க்ருவீனும் நிலையில் கன்னி ஒருத்தியைக்
கண்டு அவள்  யாரென  வினவினாள்.நான் ஈன்றோரை இழந்த நிலையில் மதுரையில்
இருந்த அத்தைபால் அடைக்கலம் புகக் காஞ்சி  வந்தேன்.அவளும் இறந்த  செய்தி
கேட்டு,ஆதரவற்ற  என்னை ஞானமா நிதியெனும்  ஆசிரியர் எனைத்தன் மகள்போல்
வளர்த்தார்.அவரிடம் கல்வி கற்றுவரும் நாளில் வஞ்சியிலிருந்து வந்த சங்கமன்மேல்
அன்பு வைத்து அவனுடன் காதல் கொண்டு கருவுற்றேன்.பின் அவனுடன் வஞ்சி சென்றேன்.
அவன் பெற்றோர் எங்களை ஏற்கவில்லை.அதுவே நோயாக அவனிறக்க மீண்டும் காஞ்சி
வரும் நிலையில் இக்கானகம் அடைந்தேன்;எனச் சொல்லிக் குழந்தையை ஈன்ற நிலையில்
உயிர் துறந்தாள்.அழுகின்ற குழந்தையைக்  கையில் ஏந்தியவாறு மணிமேகலை நடந்தாள்.

{மீனவன்}


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

meenavan2

unread,
Apr 7, 2014, 12:36:38 AM4/7/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

5.கானில் குழவி  கண்ட காதை

நிலைமண்டில ஆசிரியப்பா

காய சண்டிகை வரலாறு

தந்தித் தீயெனும்  தாங்கொணாப்  பசிநோய்
வந்து  வருத்த  வாடிய விஞ்சைக்
கன்னி  எழில்சேர்  காய  சண்டிகை
தன்பெரு  பசித்தீ  தானகன்  றேக
உண்ணும்  அமுதம் ஊட்டிய  காரிகை                                 5

மக்கள்  பாராட்டு

தண்ணளி  பெற்றோர் தம்முளம்  மகிழ்ந்தே
அறப்பெருஞ்  செயலென்  றடிம்லர் போற்ற
நறுமலர் மேகலை நற்பணி  நடாத்தி
வருநாட்  காலை  வளநகர்க் காஞ்சிப்

மணிமேகலை  கான்வழி ஏகல்

On Wednesday, 15 January 2014 13:25:59 UTC+5:30, meenavan2 wrote:

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Apr 14, 2014, 3:32:40 AM4/14/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

5.கானில் குழவி  கண்ட காதை

பதியின் நீங்கிப் படர்ந்தனள் ஓர்கான்                                       10
செடியும் செழித்தபல் மரமும் செறியக்
கொடியும் மண்டிக் குவியிருள் மலிய
அடர்த்தெழு பகலவன்  ஆயிரம் கதிரும்
தொடர்கொள் முயற்சியின் தோற்றுப் பின்னிட                     
அச்சுதன் மேனிப் ப்ச்சையும் வென்று                                      15
கொழுநனைப் பிரிந்த  கோதையர் என்னத்
தழுவிய கொடிகள் தாம்களித் தாடிட்
இலையும் கிளியும் ஏதென அறியா
நிலைகாண்  போர்தம் நெஞ்சம் ம்யங்க
அரசொடு வேம்பும் ஆரும் போந்தையும்                                 20
கருவேல் படரால்  காஞ்சியும் கலந்து    
நல்லோர் தீயோர்  நயனிலர் கூடிவாழ்
பொல்லா  உலகெனப் போ ந்தவ்ர் அஞச
இருள்படர்ந்  தெங்ஙனம் ஏகுவோம் என்ன
வருவார்க் கச்சம் வழங்கும்  கான்வழி                                     25
வருங்கால் ஆயிடை வஞ்சி  ஒருத்தி
முனகுதல் கேட்டு முன்விரைந் தோடி
நனியிலை செறிந்து  நண்ணுதற் கியலாத்

கருவீனும் நிலையில் கன்னி ஒருத்தி

தருவின்  கீழொரு தையல் வ்யாப்பிணி
உற்றொரு மகனை உடனீன்றவ  ளாய்                                    30
முற்றிய  நோயால் முட்ங்கர் நிலையில்
ஆவிதன் மெய்யில் அடங்கா  தியங்கப்
பாவையின் மெய்யுறு பாட்டினைக்  கண்டே
ஏந்தி  எடுத்தவள் இசிவினைப் போக்கப்
போந்தவள்  முகமருள் பொங்கிட நோக்கிக்                             35
கொடுவிலங்  கரவொடு கூகையும் பிற்வும்
ந்டுக்கம் த்ருவனம் நண்ணி  இதனிடை
இடர்ப்பட் டேங்கி இனையும்நீ  யாரென?

கருவீன்ற கன்னிதன் வ்ர்லாறு  உரைத்தல்

மடவரல்  அந்த மயக்கமோ டுரைப்பாள்
கலைசேர் தவமுனி கடுந்தவ மியற்றிய                                   40    
மலையிற் பிறந்து மலர்த்தா துண்டு
வந்திடு  தென்றல் வைகையிற் ப்டிந்து
செந்தமிழ்ப் புலவோர் சீரென வளர்ந்து
தவழும் கூடல் தனைவிட் டகன்று
நவகலைக் காஞ்சி நகர்ப்பதி வந்தேன்                                      45
ஈன்ற்வர் மறைய இங்குவந் துற்றேன்
தாதையின்  பின்வரு தையல் ஒருத்தி
மாதவக் காஞ்சி மாபதி இருத்தல்
அறிந்திவண் வருங்கால் அன்னவள் உலகுவிட்
டிறந்தனள் என்பதை ஈண்டுவந் தறிந்தேன்                             50
வருந்திய  எனது  வாட்டம் போக்கிட
வருபவர்  யாரென்  வருந்தியான் அலைந்தேன்
அலைந்த வென்முன்  அருள்தரு முகமும்
நிலைத்த நல்லறமே  நிகழ்த்துநல்  வாயும்
கொண்டநல் ஞானக் கொழுந்தினைப் போல்வார்                   55
அண்டினார்க் கருளும்  ஆதர  வாளர்
ஞானமா  நிதியெனும் நாமம்  உடையார்
தானும்  தோன்றித்  தஞ்ச மளித்து
மகளென் நினைந்து  மதித்து வளர்த்தார்
அருங்கலை   அறிந்த  ஆசான்  அவன்தன்                              60   
இருங்கலைக் கழகம் எனுமொரு காவில்
வருங்கலைத் தேனுகர் வண்டென வானேன்
ஓர்கலை ஞானம்  உணர்ந்த வக்காலை

சங்கமனைக் காணல்

சார்எழில் மேனிச் சங்கமன்  என்னும்
வஞ்சிப் பதியான்  வளர்கலை  பயிலும்                                   65
எஞ்சா நசையுடன்  இவண்வந் தணையக்
காளை அவன்பால்  காதல்கொள்  நெஞ்சமென்
தாளை உடைத்துத் தான்வளர்ந் தமையால்
ம்ங்கைஎன் நெஞ்சும் மாறனை  வென்ற
சங்கமன்  நெஞ்சும்  சங்கம மாகிக்                                            70
காம்ங்  கால்கொள்க் காதலன் பாலென்
பெண்மையை விருந்தாய்ப்  படைத்தபின் சிலநாள்
கழித்தவன் என்னைக் கைபிடித் தேகக்
கழித்த நெஞ்சுடன் கவின்சேர்  வஞ்சி
நகர்ப்பதி புகுந்தவன் நன்மனை சேர்ந்தேன்.                            75

(தொடரும்) மீனவன்

meenavan2

unread,
Apr 14, 2014, 6:26:40 AM4/14/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

5.கானில் குழவி  கண்ட காதை

எங்கள் கடிமணம் ஏலாப்  பெற்றோர்
சங்கமன் நெஞ்சைச் சஞ்சலப்  படுத்த
இன்பம்  நுகரா தின்னல் நுகர்ந்து
துன்புறு   நாளில் துணைவன்  சங்கமன்
நெஞ்சினில் உற்ற  நீள்பெருந் துயரம்                              80
எஞ்சா  தாக இதுபெரு நோயாய்
மடிந்தனன்  பினயான் மனையகம் இருத்தல்
முடியாத் தன்மை மூண்டத  னாலே
வெம்பிய  மனத்தொடு வெறுத்தேன் வாழ்க்கை
வள்ர்ந்த  கருவை வயிற்றிற்  சுமந்து                              85
கருவீன்  காலமிக் கானக  முற்றேன்
ஒருமகன் ஈன்றேன் உயிரினி  மெய்விட்
டகன்றிடும் விரைவில் எனவுரை சொல்லிப்
பகவதி  காப்பீர்  எனப்ப்ணிந்  தேங்கி
அகமூச்  சொடுங்க ஆவியும் நீத்தனள்                            90

மணிமேகலை குழவியை எடுத்தல்

வாணாள்  உலந்த  வ்னிதைபாற்  கிடந்தே
இருகால்  உதறி  இனைந்தழும்  மகவின்
திருமுகம் நோக்கித்  தேற்றாத் துன்பம்
ஊற்றாய்ப்  பெருக  உலகை  நடத்தும்
மாற்றா  விதியின்  மாவலி  எண்ணித்                           95
தன்னிரு கரத்தால்  தாம்ரைப்  பூவென
மண்ணிற்  கிடக்குமப்  பிள்ளை  ம்தியினை
எடுத்தவள்  அணைத்தவா றேகினள்  ஆங்கென்.

ஐந்தாம்  காதை  நிறைவுற்றது

(தொடர்ச்சி) மீனவன்

meenavan2

unread,
Apr 18, 2014, 7:53:57 AM4/18/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

6.குழவி வளரக் கொடுத்த காதை

{மணிமேகலை தான் எடுத்த குழந்தையை வளர்ப்பார் யார் என 
எண்ணினாள்.அப்பொழுது ஆயர்பாடியில் வாழ்ந்த பல்லான்
செலவன் வில்லவன் என்பவனும் கோதை என்பவளும் தொட்டு
அணைத்துச் சுகம் தரும் தூயதோர் பிள்ளையில்லாக் குறையால்
தெய்வத் தல்ங்கள் தோறும் சென்று வணங்கி வந்தனர்.தம் குல்தெய்வம்
ஆகிய் கண்ணனைப் போற்றிக் குரவையாடினர்.குரவையின் முடிவில்
நுங்கள் குறை தீரும்  என்றொரு வாக்கு எழுந்தது.அப்பொழுது குழந்தை
யோடு மணிமேகலை அங்கு தோன்றினாள்.தாயற்ற இக்குழவியை வளர்த்து
வருமாறு வில்லவனை வேண்ட,அவனும் வாங்கிக் கோதையின் கையில்
கொடுக்க,கோதையும் மகிழ்ந்தாள்.குழந்தைக்கு மாதவன் என்று பெயரிட்டு
வளர்க்குமாறு மணிமேகலை கூறினாள்.


நிலை மண்டில ஆசிரியப்பா

கோவ்லன் - மாதவி

பூவிலை மடந்தையர் குலத்தில் பூத்த
பாவை மாதவி  பல்கலைச் செல்வி
கோவல வண்டு கூடிய் மாமலர்

மணிமேகலை சிறப்பு

உதர நிலத்திடை உதித்த தீஞ்சுடர்
கதறிய குழவியைக் கையெடுத் தணைத்தனள்

குழந்தையை  வளர்ப்பவர்; யார்? என எண்ணுதல்

ஈன்ற தாயிழந் தேங்குமிக் குழவியை
மகவென வள்ர்க்கும் மாண்புடை யோர்யார்?
என நினைந் தெண்ணி எதிவரு காலை

(தொடரும்) மீனவன்

meenavan2

unread,
Apr 24, 2014, 4:31:52 AM4/24/14
to mint...@googlegroups.com

எனநினைந்  தெண்ணி எதிர்வரு  காலை

வில்லவன் -கோதை-ஆயர்குலச் சிறப்பு

செல்வச் சிறுகுடி என்னும் சீறூர்
பல்வளம் பொதுளிப் பச்சைக் கொம்பும்                           10
மஞ்சளும் சேர்ந்து மயங்கித் தோன்றக்
கொல்லையான் நிரைகள் கூடிச் செல்லும்
முல்லை நிலத்திடை முகிழ்த்தெழு பூக்கள்
மலைந்த கண்ணியர் மணிபுரை உருவத்
திருமால் வணங்கும் தெய்வப் பெற்றியர்                        15  
வரிவிழி மாதர் வளர்க்கும் ஏறுகள்
தழுவும் திண்ணிய தடந்தோ ளாளர்
கருமா வரையெனக் காணும் காரி
விரித்த கொம்புள வெண்கால் எருது
கொலைவன் மறவர்பால் கூற்றெனப் பாயும்                  20
நிலையினில் மதர்த்து நிமிர்வுறப் பாயும்
வரிவிழி  மாதர் வளர்க்கும் ஏறுகள்
தழுவிக் கோதையர் தடந்தோள் அணைவார்
வாழ்கான் முல்லை வளநில முடையோர்
நல்லான்  வளத்தால் நலம்பெற் றிலங்கும்                      25

meenavan2

unread,
Apr 25, 2014, 7:21:49 AM4/25/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

On Wednesday, 15 January 2014 13:25:59 UTC+5:30, meenavan2 wrote:

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

இல்லத் தலைவன் இல்லார்க் குதவும்
வள்ளல் ம்னம்போல் வளப்பால் சுரக்கக்
கொள்ளும்  செல்வக் குடியெனத் திகழும்
ஆயர் குலத்திற  கருமருந் தானோன்
தூயமால் போலத் துலங்கிடு  மனத்தன்                                    30
வில்லவன் என்பான் விளங்குவேற் கண்ணாள்
இல்லத் தரசி  இனியவள் கோதை
அன்புடை யாளொடும் அகமகிழ்ந் தில்லறப்
பண்புடை வாழ்க்கை பயின்றிருந்  தனனே


பிள்ளையில்லாக் குறை

பல்வள மிருந்தும் பல்லாண்  டாகியும்                                     35 
தங்குலம் வளரத்  தானொரு  மகவிலாத்
துன்புறு  நெஞ்சால் தொல்விதி  நொந்தனன்
அணைப்பார்  தங்கள் அகமகிழ் கொள்ள
இணைமலர்க் கால்கள் எடுத்தடி வைக்கப்
பூமகள்  மேனி புளகம்  போர்க்கச்                                              40
சிறுகயல் இரண்டும் சேர்விழி  யாக
நறுமலர் அணிகுழல் நன்னுதல் நீவப்
பல்காழ் மேகலை பக்கம  தசைய
எல்லிடும்  அரைஞாண்  இடுப்பிருந் தொசியக்
குழலும் யாழும்  தோற்குமென் குதலை                                   45
வழங்குவாய்  அமுதம் மார்பினை நனைக்கச்
சித்திரை  நிலவெனச் சீர்முகம் இலங்கப்
பத்தரை  மேனிப்  பசும்பொன் வண்ணம்                                                           
இதுவென மதிக்கும் இயல்பின  தாக
உதயக் கதிரென  உச்சிச் சுட்டி                                                    50
ஒளிவிடக் கண்டிருள் உளமிரிந் தோட
முளிதயிர்  சேர்த்திமுத் தரிசியின் அமுதம்
இட்டவாய் சிரித்தங் கிருகை நீட்டித்
தொட்டளைந் தகம்களி தூயநற்  குழவி
இல்லா னாகி  இடையறாத் துயரில்                                           55
அல்லும்  பகலும் அன்னோன்  மூழ்கினன்

(மீனவன்)
 

meenavan2

unread,
Apr 29, 2014, 2:06:02 AM4/29/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

தெய்வம் பேணல்

உலகம் காக்கும் ஓங்குயர் விழுச்சீர்
நலமலி தெய்வம் நண்ணி உறையும்
தலம்பல சென்று  தாள்பணிந்  பதேத்திப்
புதல்வ ரின்றிப் பொருந்திய  வாழ்க்கை                            60
சிதல்வாய்ப் பட்டுத் தேய்மரம் போலாம்
ஊற்றுநீர்  தொடர்ந்தே ஊறுதல் போலப்
போற்றரு  கான்முளை பொருந்தப் பெறுதல்
வேண்டினன்  அருள்வீர் விரைந்தேன் வேட்டே
யாண்டெலாம் பணிதலும் அருட்கொடை நேர்தலும்      65
தலைப்பணி யாகத் தாங்கினன்  சால்பில்
ஆயர்தங்  குல்த்தின் அருட்பெருந் தெய்வம்
மாயவன் கோட்டம் மனையும் பிறரும்
சூழ்தர நாடித் தொழுதுபணிந் தேத்தினன்
ஏழிசைக் குரவர் இனத்தவர் ஆடினர்                                 70

குரவைப் பாட்டு

நீலக் கருமுகிலே!
  நெஞ்சுறையும்  நெடுமாலே!
கோல  நதியமுனைத்
  துறைவளர்ந்த கோம்கனே!
மாலை துளவமென
  மார்பில்  அணிந்தவனே!
ஓலம்  எனவழைத்தோம்
  ஓடிவர மாட்டாயோ!

நீண்ட்  குழலூதி                                                                  75
  நெஞசம்  கவர்ந்தவனே!
ஆண்ட பெருமையுள்ள்
  ஆயர்குடிக் குயிர்நிலையே!
தூண்டா மணிவிளக்கே!
  துணையிருந்து  காப்பவனே
வேண்டும்  குறைகேட்டெம்
  வேதனைகள் நீக்காயோ

எங்கோ  பிறந்தவன்நீ
  இங்கே  வளரவந்தாய்
செங்ககைக் குழ்லூதிச்                                                      80
  சித்தம்  மகிழவந்தாய்
சங்கைக் கரம்சுமந்து
  சக்கரமும் தான்சுமந்தாய்
எங்கள்முகம் பார்க்கலையோ!
  எமதுகுறை கேட்கலையோ!

மங்கை யசோதை
  மனமகிழ வந்தவனே
எங்கள்குலத் தலைவருக்கோ
  இன்னுமொரு பிள்ளையில்லை
பொங்கும்  அலைகடலில்                                                85
  பொருந்தியே கண்வளர்ந்தாய்
எங்கள்குறை  கேட்கலையோ


(தொடரும்) மீனவன்   

On Wednesday, 15 January 2014 13:25:59 UTC+5:30, meenavan2 wrote:

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Apr 30, 2014, 11:54:20 PM4/30/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை காப்பியம் (தொடர்ச்சி)

  இன்னுமுகம்  பார்க்கலையோ

நிலைமணடில  ஆசிரியப்பா

என்ற குரவையின் இன்னிசை முடிவில்
இறையருள் வாய்க்கும் இன்றே நில்மனக
குறையதும் தீருமென்  றோர்குரல் எழுந்ததே

மணிமேகலையைக் காணல்

பசிப்பிணி  மருத்துவம் பான்மையிற்  செய்தருள்                            90
தவத்திற நோன்பினள் தங்கை ஏந்திய
பொன்மலர்க் குழந்தைப் பொற்புடன் அங்கே
இன்னடி வைத்தனள் எந்தாய்  வருகெனப்
பொன்னடி  போற்றினர் போந்திருந் தாரெலாம்
வில்லவன் மனையொடு  வீழ்ந்து  வணங்கினர்                                95
அல்லல் நீக்கும் அருளுடை மேகலை

மணிமேகலையின்  அருளுரை

தெய்வம் பரவும்  தேர்ந்த கொள்கையீர்
வையம்  வாழ்த்த  வளர்பெரு நிதியம்
படைத்தனி ராயினும்  பாலக ரின்றி
இடர்ப்படு சிந்தையோ  டிருப்பதை அறிகுவம்                                  100
போதிப் பேரொளிப் புண்ணியப்  ப்டிமையன்
ஆதி மாதவன்  அருளுமக்  காக்கினன்
ஓதும்  என்னுரை  உள்ங்கொள் வீரென
நற்றவத் தாட்டியின்  நலத்தகு சீறடி

(தொடரும்) (மீனவன்)

meenavan2

unread,
May 5, 2014, 6:19:23 AM5/5/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை(தொடர்ச்சி)

(குழவி வளர்க் கொடுத்த காதை)

வில்லவன் - கோதை கூற்று

பற்றிய  கோதையும்  பாவையின் கண்வனும்                              105
உம்முரை  தெய்வத் தோருரை என்றும்
பொன்னுரை  அதனைப் போற்றுதல் என்கடன்
என்றுரை  செய்தலும் இன்னருள் மேகலை

மணிமேகலை குழவியைக் கொடுத்தல்

கரமலர் இருந்த கவின்மலர்க் குழவியை
விரைவினில் அளிக்க வில்லவன் பெற்றுக்                                  110
குழல்மலர்க் கோதைபாற் கொடுத்தனன் கொடுத்தஅப்
பொழுதினில் மேனி புளகம்  போர்த்திட
ஐயிரு திங்கள் அகட்டிடைத் தாங்கிப்
பையலைப் பெற்றதோர்  பாவையைப் போலவும்
அரும்பாக் கொடியில் அரும்புகண்  டுள்ளம்                                  115
களிமகிழ்  கொள்ளும் கன்னியைப் போலவும்
துளிதரு கார்காண்  தோகையைப் போலவும்
ஒளிளமகிழ்க் கோதைதன் உள்ளம் மகிழ்ந்தனள்

மணிமேகலை கூறுவன

பற்றறு  தெய்வப்  பாவையும் ஆங்கே
மற்றிது கேட்பீர் மாணெழிற் குழவியைப்                                       120
பெற்றதோர் அன்னைபோல் பேணிநீர் காக்க
இல்லார்க் குதவுதல் இடைவழிச் சுரத்துச்
செல்வார்  அருந்த நீர்தரு பந்தல்
அமைத்தல் வாழ்வில் ஆதரம்  இன்றிக்
குமைவார்க் குதவல் கூடிப் பிரிந்த                                                  125
இல்லறத் தார்க்கிடை ஏற்படும் பிணக்கை
ஒல்லயில்  போக்கி உடங்கூட்டு  வித்தல்
அன்ன யாவினும் ஆயிரம் புண்ணியம்
ஆதர வில்லாக் குழவியை அன்புடன்
தீதிலா  வண்ணம் திருந்திடக்  காத்தல்                                            130
ஆதலால் இந்த அரும்பெருங் குழவியைக்
காதலால்  வளர்த்திக் காசினி மீதில்
ஓது கல்வியும்  உயர்பேர் ஒழுக்கமும்
அறம்புரி சிந்தையும் அடக்கமும் சால்பும்
திறமிகு பொறையும் தெய்வச் சிந்தையும்                                      135
இல்லார்க் குதவும் இரக்கப் பண்பும்
வ்ல்ல காளையாய் வளர்த்திவ் வுலகம்
போற்றச் செய்வது பொருந்துநும் கடனெனக்

குழவிக்கான பெயர் கேட்டல்

கோதையும் அன்னாள் கொழுநனும் ம்கிழ்ந்து
போதிவாழ் ஒளியெனப் பொலியும் அம்மையீர்!                               140
தீதிலம் இனியாம் செல்வற் பெற்றனம்
ஓதிய படியே  உயர் ந்திவன் என்குடிக்
கான்முளை  என்னக் கருதி  வளர்ப்போம்
ஏதிவன் பேரென  எழில்மணி மேகலை

மாதவன்  எனப் பெயர் கூறுதல்

மாதவப்  புத்தன் அருளென மலர்ந்த                                                  145
போதெனத் திகழுமிப் புதல்வ்னை நீவிர்
மாதவன்  என்க  என்றலும் மற்றவர்
மாதவத் தாட்டியைப் பணிந்தனர் ம்கிழ்நதென்.

6.குழவி வளரக் கொடுத்த காதை நிறைவுற்றது

(மீனவன்)

meenavan2

unread,
Jul 11, 2014, 4:40:20 AM7/11/14
to mint...@googlegroups.com

அன்புள்ள காளை அவர்களே
யாப்பு நன்கு தெரியின் பாடல்களைப் பிரித்து எழுதலாம்.
மூலத்தை அப்படியே ஒருமுறை எழுதிப் பின்னர் மறுப்டி
பிரித்தெழுத முற்படின் கால விரயமாகும்.கோவிலூர் ஆதீனம்
வெளியிட்டு வரும் திருநெல்லை மாத இதழில் வெளிவரும்
மகாவித்துவான் பிள்ளையவர்கள் யாத்த கோவிலூர்ப் புராண
மூலத்தைப் பதம் பிரித்துத்தான் எழுதி வருகிறேன்.விரைவில்
மின்தமிழிலும் வெளியிட இருக்கின்றேன்.
எடுத்துக் காட்டாக தாங்கள் எழுதிவரும் புராணப் பாடல்களில்
இரண்டைப் பிரித்து எழுதியுள்ளேன்.


பாடல்
தூல லிங்கம்என்(று) உரைத்திடு சுடர்ஒளி  மானத்(து)
ஏல வார்மது  ந்றியநீர் ஆட்டிவண்(டு) இசையாம்
சீல மந்திரத் தொடுமலர் தூய்அருச் சித்துச்
சாலும்  அன்பரை ஒத்துநின்(று) ஓங்குமந்  தாரம்
                                                                                                      

மாதவ மேகலை தொடர்ச்சி - மீனவன்

7.பெயர் சூட்டு காதை

{மணிமேகலை தந்த குழந்தையொடு வில்லவனும் கோதையும்
தங்கள் மனைக்குச் சென்றனர்.உறவினரை அழைத்துக் குழந்தையைத்
தொட்டிலில் இட்டு விழாக் கொண்டாடி ம்கிழ்ந்தனர்.மணிமேகலை
கூறியவாறே மாதவன் எனப் பெயரிட்ட்னர்.}

நிலைமண்டில ஆசிரியப்பா

வில்லவன் கோதை மீளல்

பாற்பயன் கொள்ளும் பான்மையர் செம்மல்
நாற்பொருள் உண்ர்ந்த  நாயகி  ஆணையின்
வழிப்படர்  நெஞ்சொடு வாழ்த்திய சுற்றம்
சூழ்தர மனையுடன் மனையகம் வழிக்கொள

ஆயர் வாழ்த்து

செழிக்கும்  நல்லான் செல்வக் கோவலர்                                      5
பரவி  வதியும் பகர்நெடுந்  தெருத்தொறும்
உற்வின் நெருங்கி உம்துயர் தீர்ந்தென
அன்பின் வாழ்த்தி அழ்குசேய் கண்டே
பண்பின் மகனிவன் பரமனே என்ன்ப்
போற்ற ம்கிழ்ந்தவர்  போந்தனர்  தம்மில்                                      10
மீனவன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 11, 2014, 4:56:44 AM7/11/14
to mintamil, Meenavan M, Subashini Tremmel, Geetha Sambasivam
ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் பூரண குணமடைந்து திரும்பவும் இணையத்தில் மாதவமேகலை காப்பியத்தைக் காப்பியக் கவிஞர் திரு மீனவன் பதிவிடுவதைக் காண மிக்க மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து தன் சிறந்த கவிதைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2014-07-11 14:10 GMT+05:30 meenavan2 <meen...@gmail.com>:

குழவிக்கான பெயர் கேட்டல்

கோதையும் அன்னாள் கொழுநனும் மகிழ்ந்து

போதிவாழ் ஒளியெனப் பொலியும் அம்மையீர்!                               140
தீதிலம் இனியாம் செல்வற் பெற்றனம்
ஓதிய படியே  உயர் ந்திவன் என்குடிக்
கான்முளை  என்னக் கருதி  வளர்ப்போம்
ஏதிவன் பேரென  எழில்மணி மேகலை

மாதவன்  எனப் பெயர் கூறுதல்

மாதவப்  புத்தன் அருளென மலர்ந்த                                                  145
போதெனத் திகழுமிப் புதல்வ்னை நீவிர்
மாதவன்  என்க  என்றலும் மற்றவர்
மாதவத் தாட்டியைப் பணிந்தனர் ம்கிழ்நதென்.

அருமை!
சொ.வி 

Suba.T.

unread,
Jul 11, 2014, 5:01:20 AM7/11/14
to சொ. வினைதீர்த்தான், மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 10:56 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் பூரண குணமடைந்து திரும்பவும் இணையத்தில் மாதவமேகலை காப்பியத்தைக் காப்பியக் கவிஞர் திரு மீனவன் பதிவிடுவதைக் காண மிக்க மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து தன் சிறந்த கவிதைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
​ஐயா மீனவன் அவர்களுக்கு உடல் நலம் பூரண குணமடைய எனது பிரார்த்தனைகள், மீண்டும் அவர்கள் பதிவுகளைக் காண்பதில் மகிழ்ச்சி.

சுபா​

meenavan2

unread,
Jul 11, 2014, 6:52:27 AM7/11/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை - தொடர்ச்சி - மீனவன்


7.பெயர் சூட்டு காதை

{மணிமேகலை தந்த குழந்தையோடு வில்லவனும் கோதையும்
தங்கள் மனைக்குச் சென்றனர்.உறவினரை அழைத்துக் குழந்தையைத்
தொட்டிலில் இட்டு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.மணிமேகலை
கூறியவாறே மாதவன் எனப் பெயரிட்டனர்.}

நிலைம்ண்டில ஆசிரியப்பா


வில்லவன் கோதை மீளல்

பாற்பயன் கொள்ளும் பான்மையர் செம்மல்
நாற்பொருள் உணர்ந்த நாயகி  ஆணையின்

வழிப்படர் நெஞ்சொடு  வாழ்த்திய சுற்றம்
சூழ்தர மனையுடன் மனையகம் வ்ழிக்கொள


ஆயர் வாழ்த்து

செழிக்கும் ந்ல்லான் செல்வக் கோவலர்                                     5

பரவி  வதியும் பகர்நெடுந் தெருத்தொறும்
உறவின் நெருங்கி உம்துயர் தீர்ந்தென
அன்பின் வாழ்த்தி  அழகுசேய் கண்டே
பண்பின் மகனிவன் பரமனே என்னப்
போற்ற மகிழ்ந்தனர்  போ ந்தனர் தம்மில்                                  10

குழந்தை கிடைத்த செய்தி

பல்லோர்  வயிற்றுப் பசிநோய்  தீர்க்கும்
கோதைத் தாமம்  குழலொடு  நீக்கிய
மாது  மேகலை மகிழ்ந்தினி தளித்துக்
கொடுத்த குழவி கொள்கெனக கூறி
அடுத்தவர் க்ரங்களில் அகமகிழ்ந் தளித்தனர்                             15
எடுத்தவர் மகிழ்வின் எல்லைகண்  டனரே

உறவினரை அழைத்தல்

தனிப்பெருங்  குலத்தார் தமையெலாம்  அழைத்து
மன்பதை ஆளும்  மாதவச் செல்வி
என்குலம்  விளங்கிட  ஈந்த  குழவியைத்

தொட்டிலிடல்

தொட்டிலில் இட்டுத் தோகையர் கூடிக்                                        20
கட்டிக் கரும்பிதன்  கவின்பா  ராட்டி
நாமம் சூட்டி  நாடெலாம் மகிழ
ஏமம் சாற்றி  எடுப்பதோர்  விழாவும்
நாளையே  என்றனன் நல்லான்  வில்லவன்

இல்லத்தை அணி செய்தல்

பாளை  கமுகொடு பன்மலர் நிரைத்து                                          25
விண்மீன் என்ன விளங்கொளி காலும்
தண்ணிய  முத்துத் தாமம் நாற்றிப்
பொற்புறு  புதுமணல் புறமெலாம் பரப்பி
நிற்கும் காவணம் நிரல்பட  அமைத்து
வண்டிருந்  தூத  வாய்விரி பூக்கள்                                                30
கொண்டநற் சரங்கள் குலவிடத் தூக்கி

உறவினர் மகிழ்தல்

த்ரைமகள் மேனிதன் தாகம் தணிய
விரைகமழ் பன்னீர் விதிர்த்தன  ராகிப்
பூரண கலசப் பொற்குடம் தாங்கி
ஆரணம்  முழங்க ஆன்றவர் சான்றோர்                                        35
கூடிய காலை குடமுழா இயங்க
நாடிய தவத்தின் நாயகி தரவரும்
மதிபுரை வதன மலரென இயங்கும்
கதிரொளி மேனிக்  க்ண்மணிக்  குழவியை
வான்கொடித்  தொகுதி வந்ததை ஒத்துத்                                      40
தான்திகழ்  செல்வத் தனிக்குல மாதர்
ஒளியுமிழ் வைரத் தொளிசேர் தொட்டிலில்
எடுத்தவர் இட்டே  இதயம் மகிழ்கொள
அன்புசேர் நெஞ்சுடன்  ஆசிகள் கூறித்
தாமரு  கிருந்து  தண்மலர் தூவினர்.                                              45

தொடரும் - மீனவன்

meenavan2

unread,
Jul 11, 2014, 11:14:32 PM7/11/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை(தொடர்ச்சி)
7.பெயர்சூட்டு காதை

பொதுநிலை வாழ்த்து

நல்லூண்  அளித்து நனந்தலை  உலகில்
தொல்லை தருபசித் துயர்ப்பணி துடைக்கும்
மெல்லியல் மேகலை மிகுபுக்ழ் மேவத்
தந்தஇக் குழவி தன்மர போங்கச்
சந்ததம் வாழ்கெனச் சாற்றினர் பல்லோர்                                 50
வில்லவன் குலத்திடை விளங்கிய  பெரியோர்
வல்லவிக் குழவி வளமெலாம்  வளர்க்கும்
கோவலர் குலத்துக் குலமுடி மணியாய்
நாவலந் தீவிடை  நலமுற வாழிய
எனமனம் உவந்தே இனிதுற் வாழ்த்தின்ர்                                 55

வாழ்த்து மடை

பொங்கும்  புனல்பெருகிப்
    பொன்மேனி  மாயவன்தன்
தங்க உடல்தழுவித்
    தழைத்துவரும் யமுனையிலே
ம்ங்கை ய்சோதை
    மடியில் விளையாடும்
எங்கள்குலக் கண்ணனைப்போல்
    இசையோங்கி  வாழியரோ!

கையிற் குழலெடுத்துக்                                                                60
    காதில்  இசைத்தேனைப்
பெய்யும்  வடிவழகன்
    பேராளன் எங்கள்பிரான்
வையம்  அளந்தகண்ணன்
    வந்ததுபோல்  வந்தவனே!
உய்ய  வழிதருவான்
    உயரருளால் வாழியரோ!

வந்தார்  மனங்குளிர
   வரவேற்றுச்  சோறளித்துச்
சிந்தா  குலம்தீர்க்கும்                                                                  65
   சிறப்புடைய குலம்வளர
வந்தாய்  உனைவாழ்த்தி
    வாசமலர் தூவுகிறோம்
கொந்தார்  மலர்சூடிக்
    குலமோங்க வாழியரோ!

பால்போல் மனமுடையோம்
   பசுப்போல்  அருளுடையோம்
ஆல்போல்  தழைத்துவரும்
   ஆயர்  குடிப்பிறந்தோம்
மாலைக் கடவுளென                                                                  70
   மனத்தே மகிழ்ந்திருப்போம்
நூல்போல்  பயனீ ந்து
    நூறாண்டு வாழியரோ!
என்றவர் பாடினர் இல்லந் தன்னில்
இருந்தவர்  கூடி இனியதம் வாழ்வில்
கருணையை  நெஞ்சில்  காத்திடு மேலோர்

பெயரிடல்

வருநிதி  பிற்ர்க்கு வழங்குதல்  கடனெனக்                               75
கொண்டவான்  செல்வக் குடியுறை கோவலர்
தொண்டிவ் வுலகினில்  தூயதொண்  டாகும்
அந்தக்  குடிக்கோர்  அருட்கொடை யாக
வந்தவிக்  குழவியை எல்லிரும் வாழ்த்தி
மாதவன் என்பீர் என்ற்லும் மற்றோர்                                        80

மாதவன் என அழைத்தல்

போதுகள் அறுகொடு பொற்புற்த் தூவி
மாதவன் மாதவன் என்றலும் பெற்றோர்
வளரிளந் திங்கட்  கொழுந்தென  வாய்த்த
குழவியை ஏந்திக்  குளிர்ந்தனர் உள்மென்.                              85

7.பெயர் சூட்டு காதை நிறைவுற்றது.


தொடரும் - மீனவன்


Meenavan M

unread,
Jul 14, 2014, 2:43:16 AM7/14/14
to mint...@googlegroups.com
மாதவ மேகலை (தொடர்ச்சி) மீனவன்

8.நலமுறு கல்வி  நாடிய  காதை

[வறட்சி  மாற்றிட  வந்த  ம்ழையைப் போல வில்லவனும் கோதையும்
இன்பமுறம் மாதவன் ஏற்றமுடன்  வளர்ந்தான்.ஐந்து  வயதான பொழுது
அவனுக்குக் கல்வி உண்ர்த்த எண்ணிய  வில்லவன் ஓங்கிய கல்வி முழுது
ணர்ந்த செந்தமிழ்க்  குமரனார்பால் மாதவனுடன் சென்(று) அவ்னுக்குக் கல்வி
கற்றுத் தர வேண்டினான்.மணிமேகலை மாதவனைத் தந்த வரலாற்றைக்
குமரனாரிடம் வில்லவன் கூறினான்.அவரும் மாதவனுக்குக் கல்வி கற்றுத் தர
மகிழ்வுடன் ஒப்பினார்.]

நிலைமண்டில ஆசிரியப்பா

மாதவன்  வள்ர்ச்சி

அறம்புரி  கொள்கையன்  அளித்த  குழவியும்
வறட்சி  மாற்றிட  வந்தவோர்  மழையென
இடையறா உவகைசேர்ந்  தின்பமீக்  கூர
வில்லவன் கோதை  விளங்குநாள்  மகனும்
எல்லிருள்  அகற்ற  எழுகதிர் போல                                                 5
வல்லான் வில்லவன்  வளமனை  ஒளிபெற
எழுந்து  தவழ்ந்துதன் இடைமணி  புலமபக்
கொழுந்துக்  கூன்பிறை கூடிய  நெற்றியில்
இட்டிடு  சுட்டி  இளநில  வெறிப்பக்
கட்டிய  குடுமி கவின்பெற் றிலங்கச்                                               10
சந்தம்  இடுகாற் சலங்கைகள்  கொஞ்சத்
தளர்நடை  பயின்று  தாயுளம்  மகிழ
இளம்பயிர் என்ன  எழுந்தசைந் தாடிக்
காமரப்  பண்நிகர்  கனிவாய்க்  குதலை
பூமலர்  இதழிடைப்  போந்து  வெளிப்பட                                        15
இருகால்  தாமரை  எழுந்தென  நடந்தே
வருநாள்  அகவை  வளரைந் தாக

கல்வி  உணர்த்த  எண்ணுதல்

உருத்திகழ்  கல்வி  உணர்த்துதற்  கெண்ணித்
திருத்திகழ்  செல்வ்த் திகழ்சீ  ருடைய
வில்லவன்  ஆங்கே  விளை ந்தனன்  பெரிதே                              20


--

meenavan2

unread,
Jul 21, 2014, 2:06:57 AM7/21/14
to mint...@googlegroups.com

8.நலமுறு கல்வி நாடிய காதை

வில்லவன்  ஏவலரைப் பணித்தல்

உவந்தனன்  உள்ளத் துன்னிய  வண்ணம்
ஏவலர்க் கூவி  இன்னே  ஏகி

செந்தமிழ்க் குமரனார்  சிறப்பு

ஓவிலாக்  கல்வியின்  உயர்பே  ரறிஞர்
தேடரும்  ஞாந்த் திறன்மிக்  குடையார்
நாட்டும்  ஒழுக்கின்  நன்னயம்  உணர்ந்ததோர்                                                25
செந்தமிழ்க் குமரனார்  செவ்வி அறிந்தே
வருதிர்  என்றலும்  வணங்கி  ஏவலர்
விரைந்தனர்  சென்று  விதித்தது  நோக்கித்
திரும்பினர்  அங்குத் தேர்ந்தது  செப்பவே
விரைந்த  ஏவலர்  விழைவுடன்  தலைவனைத்                                                30
தொழுதகை  யினராய்த் தோன்றலே !  வணக்கம் 
கொழிதமிழ்க்  குன்றக்  குமரனார் தம்மில்
விண்மீன்  இடைத்திகழ்   வெண்மதி  ஒப்பக்
கண்ணொளி  கல்விக  கலையொளி  கால
இன்றுளர்  ஏகலாம் என்றலும் ஆங்கே                                                               35

வில்லவன்  குமரனார்  இல்லம் செல்லல்

வெண்பட்  டுடுத்து  விள்ங்குதன்  மகனொடு
பண்பட்டுயர் ந்த  பன்னூற்  புலமையின்
செந்தமிழ்க்  குமரனார்  சீர்ம்னை  நோக்கித்
தன்மனை  உடன்வரத் தான்வழிக் கொண்டனன்

வில்லவனின் வேண்டுகோள்

செந்தமிழ்க்  குமரர்தம் திருமுன் சேர்ந்தே                                                         40
வந்தனை   செய்தவர்  வந்ததும்  என்எனப்
பன்னரும்  கல்வி  பாற்பட  உணர்ந்தே
நனனரின்  ஞானம்  நனிநின்  றோங்கிய
நுண்மாண்  நுழைபுலக் குரிசிலே உங்கள்
திருவடி  சார்ந்தோம் திருமகன் தனக்கும்                                                         45
பெருகநற்  கல்வி  பெரிதளித்  தருளென

குமரனார்  மறுமொழி

நன்றாம்  தீம்பால்  ந்னிபசு  பொழியக்
குன்றென்  உயர்ந்த  குலப்பிறப்  பாள
வெண்ணெய்  போல்நின் விளங்கிய அருளால்.
உண்ணெகிழ்ந்  துற்றோர்க்  குதவும்  பான்மைய                                             50
சீர்தமிழ் அறநூல்  செப்பிய  வாறே
ஊருணி  நீரென  உதவிக்  காக்கும்
பல்வள  முடையாய்  பண்பின்  மிக்கநின்
நலனெலாம்  கண்டே நயந்த  உள்மொடு
வாழ்த்துவன்  விரும்பிய  வ்கட்யில் நின்மகன்                                                 55
தனக்கும்  கல்வி  சாற்றுவன் அவன்தன்
மனக்குறை  மாற்றுவன்  ம்கிழ் !என  வணங்கிக்

வில்லவன்  மறுமொழி

கந்திலா  வாழ்க்கைக்  கடலினில் மூழ்கி
இன்பமுத் தெடுக்கும்  இயல்பினில்  வாழுமென்
குடிவ்ழி  ஓங்கவோர்  குழவியும்  இன்றிப்                                                         60
படிமிசைத்  துயருறும்  பாடுபார்த்  திருந்த
தெய்வம் துள்ளம்  தேர்ந்தருள்  எமக்கே
செய்திடற்  கெண்ணிஸ் செந்நெறி  ஒழுகும்
மாதருக்  கரசி  மாண்பமை  அறவோன்
போதி  மாதவன்  புண்ணியம்  போல                                                                 65
உலகிடை  எழுந்த  ஒளிசேர்  மணிஎன
இலகும்  மேகலை  எனுமறப் பாவை
அலகிலா  அன்பின்  அன்றெனக்  களித்த
குழ்விதான் இவன்என்  குலக்கான்  முளையாம்
உழுவல்  அன்பின்  உவகைமீக்  கூர                                                                  70
வளர்ந்தனன்  அகவை  வள்ர்ந்தைந்  தானதால்
தெளிப்புறு  கல்வித்  திறந்தேர்  தற்காய்
உம்மிடைச்  சேர்க்கும்  உள்த்தினன்  வந்தேன்
நும்மருட்  கென்றும்  நன்றியன் இவனும்
அடைக்கலம்  என்ன  அளித்தனன்  ஈங்கிவன்                                                75
தனக்குநல்  ஞானம்  தந்தருள்  செய்கெனப்
பணிந்தனன்  மீண்டும்  பகர்ந்த  வில்லவன்

குமரனார் கூற்று

உரைசெவி  மடுத்தவா றுறுதிசேர்  கல்வி
இற்றைநாள்  முதலாத்  தொடங்குவன்  இவனும்
கற்றவர் முதல்மணி  காண்மெனக் க்ற்றோர்                                                80
உரைசெய  உண்ர்த்துவன்  உயர்வெலாம்  பெறயான்
செய்குவன்  வில்லவ ! என்றுரை  செப்பலும்

வில்லவன் மீளல்

பல்லான்  கோவலன்  பண்டுசெய்  தவமென
வில்லவன்  புதல்வனை  விடுத்தனன் ஆங்கென்.

எட்டாம் காதை  நிறைவுற்றது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

meenavan2

unread,
Jul 29, 2014, 6:43:14 AM7/29/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (தொடர்ச்சி)

9.உயர்நல ஞானம் உணர்த்திய  காதை

[செந்தமிழ்க் குமரனார் மாதவனுக்கு ஞானச்சிறப்பு,கற்றோர் சிறப்பு,
ஞானம் பெறுதற்குரிய வழிகள்,மொழியின் சீர்மை,தமிழ்மொழியின்
தன்னேரில்லாச் சிறப்பு,தமிழ்மொழி தோன்றி வந்த வரலாறு,தமிழ்
நாட்டின் தனிச்சிறப்பு,தமிழர்களின் ஒப்புயர்வற்ற பண்பு ஆகியவற்றை
எல்லாம் கூறி ஐயமறக் கற்றுக் கொடுத்தனர்.மாதவனின் கல்வி வளர்ச்சி
கண்டு செந்தமிழ்க் குமரனார் மனமிக மகிழ்ந்தார்.மாதவனும் கற்பவை
கசடறக் கற்று எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்கினான்]

நிலைமண்டில ஆசிரியப்பா

கற்றோர் சிறப்பு

பழுதிலா ஞானம்  படைத்தவர்  உலகில்
தொழத்தகு  பெருமை துலங்கிட  வாழ்வர்
நன்றும்  தீதும்  நவையற  உணர்ந்தோர்
குன்றென அசையாக் கொள்கையில்  நிற்போர்
நுண்ணிய  கேள்வி  நுழைபுலம்  உணர்ந்தோர்                                  5
எண்ணியாங்  கெய்தியே  ஏற்றம்  பெறுவர்
ஊனுடம்  பெடுத்திவ் வுலகிற்  பிறந்தோர்
தானுயர்  வெய்தும் தகைமையிற்  சிறந்தே
வினைத்தொடக்  கறுத்திட விழைந்தே  தம்முளம்
தனைத்தெளி வுடைத்தாய்த்  தக்கவா  றமைத்துச்                           10
சிறந்திட  முயலுதல் சிறந்தநற்  பிறப்பில்
பிறந்ததன்  பயனெனப் பெரியோர்  சாற்றுவர்
மெய்யும்  வாயும் கண்ணும் மூக்கும்
எய்யாக்  கேள்வியில் இன்புறக் காதும்
கொள்ளும் இன்பினிற் கூடிடா மனத்தால்                                          15
தள்ளுமென் றறநூல்  தடுத்தவை  எல்லாம்
முற்றக் கடிந்தே  முனிவொடு  வெஞ்சினம்
அற்றுச்  சால்பில்  அன்பில் தோய்ந்தே
மனத்தை ஒருநிலை நிறுத்தி  மாண்புறு
குணத்தை  வாழ்வின்  கோளென   நாட்டி                                            20
உள்ளே உயிரின் ஒளியைக் கூட்டித்
தன்னிலை ஞானத் தண்ணிலை  என்றே
மின்னிடும்  ஒளியுடன்  மேற்பிறப் பில்லா
நன்னிலை உறுதலே நன்றாம் ஞானம்
ஈங்கதன் நெறியில் நீசென்  றெல்லாம்                                                25
பாங்குடன்  உணரப்  பற்றிலா மேலோர்
சொல்லிய  ஞானத்  துகளறு  வாக்கெலாம்
அல்லும்  பகலும்  அறிந்தே உணர்வைக்
காட்டி  நடத்திக்  கதிபெறு நிலையினை
எட்டிட  முயல்வாய்  என்றும் இஃதே                                                   30
கற்றதன் பயன்காண் ! கரையிலா ஞானம்
உற்றலால் அறிவான் தாள்தொழ வென்ற
வள்ளுவ  னார்சொல்  வாக்கது  தேர்வாய்
பழுதிலா ஞானம்  படைத்தவர் உலகில்
தொழத்தகு பெருமை  துலங்கிட வாழ்வர்                                          35
ஒருபிறப் புற்ற உயர்தனி  ஞானம்
வருபிறப் பெல்லாம்  வாய்த்திடும்  என்பது
பெரும்பே  றறநூல்  பேசும்  மெய்ந்நெறி
அறநெறிச் சென்றே  அழியா இன்பச்
செந்நெறி  பெறுகெனச் செப்பினர் குமரன்                                          40
சித்திரப்  பாவையின்  அத்தக வடங்கி
நற்றிறக்  கல்வியில் நாட்டம் மிக்கு
மாண்வச் செல்வன்  மாதவன்  தனக்குச்
செந்தமிழ்க்  குமரனும்  சிந்தை  மகிழ்ந்து
மொழியின் சீர்மையும் முன்னிய கல்வி                                            45
விழியின்  சீர்மையும் வேண்டிய ஞான
வழியின் சீர்மையும் வகுத்துரைத் தனரால்
நெஞ்சத் துண்ர்வை  நிக்ழ்த்தும் மொழிபோல்
எஞ்சாக்  கருவி  ஏதுமீங்  கில்லை
மொழிவளம்  அறியா மூடர்க் கென்றும்                                             50

மீனவன்

Meenavan M

unread,
Aug 23, 2014, 2:34:36 AM8/23/14
to mint...@googlegroups.com
மாதவ மேகலை (தொடர்ச்சி)

உயர்நல ஞானம் உண்ர்த்திய காதை

பழியே  ஆதல் பற்பலர் அறிவர்
விலங்கின்  மனிதன் வேறுபட் டமைதல்
நலங்கெழு  மொழியே  நன்கனம்  காட்டும்
படைத்த  மொழிகள்  பற்பல வாகி
அடுத்த மொழிகள் அள்வில வாயினும்                                    55
இன்றமிழ்  மொழிக்கோர் இணைமொழி இல்லை
என்றும் இளையதாய்  இசைக்க  இனியதாய்
ஊனிற்  கலந்த  உயர்மொழி தமிழே
உயிரிற் கலந்துநம்  உண்ர்வுடன்  ஒன்றி
இயலிசை  கலந்த  இன்கவி  அலங்கல்                                    60
பயில்தமிழ்ப்  பாவை  பாவலர் செந்நா
அருங்கலச்  செப்பே  அதுவென  எண்ணி
உறைபவள்  பொதியத் துறுமுனி  அந்நாள்
சொல்லணி  சூட்ட  வளர்ந்த  சுடர்க்கொடி
நல்லான்  பாலிடை நறு நெய் என்ன                                         65
நெஞ்சொடு கலந்து  நிற்பவள்  வண்ண்ச்
செஞ்சொற் புலவ்ர் சிந்து  கவிக்கே
பொருளெனச் சிறந்து பொலிந்தவள்  உணர்வார்க்
கருள்தினம்  வழ்ங்கும் அம்புயப் பாவை
எண்ணும் எழுத்தும் இருவிழி யாகப்                                        70
பண்ணார் கவிதைப்  பாவுடை  பூண்டே
எழுத்தொடு சொல்லும் இயன்றநற்  பொருளும்
விழுத்தகு  யாப்பும்  விளைசுவை  அணியும்
ஐம்பொறி  யாக  அமைந்தசீர்ச் செல்வி
தம்புலம் காண்போர்  தாயென  வாக                                       75
காப்பொடு  தாலும்  கனிந்தசெங்  கீரையும்
வாய்ப்பொடு  முத்தமும் வருகையும் பிற்வா
ஈரைந்  தாக்  இயலும்  பருவ்ச்
சீரமைந் திலகிச்  செந்நாப்  போதார்
முப்பா லூட்ட  மூதறி  வாளர்                                                    80
அப்பால்  நறுங்கவி  அமுதம் ஊட்ட
ஒப்பிலாள்  என்ன  உலகுரை  செய்ய
இப்பால்  வளர்ந்திங்  கிமயம் தவழ்ந்த
நற்பால்  வைகை நதிபாய்  கடலில்
பொற்புறு  சங்கப்  பூவணை  வளர்ந்தே                                  85
ஈரடி  காட்டி  இவள்நடை  எல்லாம்
சீரடி  என்ன  நாலடி  நடந்தே
பாவடி  கொஞ்சப்  பரதம் நடத்திச்
சேவடி புல்வோர் சென்னியிற் சூடப்
பண்டைச்  சொல்வளம் பயின்றிடு  நாவன்                          90
மண்டிய  தவ்த்து மாமுனி தாளில்
சிந்தை  வைத்த  சீர்தொல்  காப்பியன்
தந்தபேர்  இலக்கணத் தனிமுடி சூடி
இயலும் இவள்தனை இதயம் கொண்டார்
உயர்மலைப்  பிறந்த  ஒண்செங் கதிரென                            95
நல்லறி வுறுவர் ஆதலின் நயந்து
சொல்லிய  தமிழின் சுவையுணர்ந் திடுவாய்

நாட்டுச் சிறப்பு

பெற்ற  தயினும் பிறந்த பொன்  னாடு
கற்றவர்க  கென்றும் கண்மணி  ஆதலின்
நாட்டின்  பெருமையும்  நாட்டுவேன்  கேள்நீ                    100
கொடைமர  பாளர் கூடிய் நாடு
ப்டைமறம் காட்டிப்  பகைவனை ஓட்டி
வாழ்வது  பிறர்க்கென வகுத்த கொள்கையில்
தாழ்ந்திடல்  இன்றித் தன்செயல் பிறர்க்கென
ஆக்கிய  திறத்தோர் அணிதிரள் நாடு                                   105
தேக்கிய புகழ்க்கொரு  தீவழி காணார்
சொன்னசொற் பிழையார் சூழ்ந்திடு  நாடு
தன்மனை  அன்றிப் பிறன்மனை  நோக்காப்
பொன்மனக் காளைகள் பொலிதரு நாடு
பொறைமனம் வாய்மை புங்கவர்ப் பணிதல்                     110
இறைதனக் கின்னல் இயற்றாக்  கொள்கை
உயிர்க்கொலை  புரியா ஊற்ற  முடைமை
மயக்கும்  கள்ளை  மனத்தினும் தொடாமை
தங்குடி  காக்கும்  தறுகண் ஆண்மை
மன்னிலை மதிக்கும் மனமிடுக் குடைமை                      115
நடுநிலை   பிறழ்தலும்  நாநயம்  தவிர்தலும்
கடுவென  வெறுத்துக்  காத்திடு மாட்சி
உழவும்  தொழிலும்  உயிரெனக் கருதி
அழகுறப்  பேணும் ஆற்ற  லுடைமை
பொய்யுரை  தவிர்த்துப் புறஞ்சொலாப்  பண்புடன்          120
எய்த்தவர்க் குதவும் இங்குண முடைமை
குஞ்சரம்  என்னத் துயர்பல வரினும்
கொஞ்சமும் அஞ்சார் குன்றென நிமிர்வோர்
உலப்பிலா நிலமென உள்ளம் விளைக்கும்
அலகில் பேரன்பால் அவனியை  ஆள்வோர்                    125
பெருகிய நாட்டின்  பீடறிந்  துலகில்
பொறுப்புடன்  செல்கெனப் புகன்றனர் குமரன்
அருத்தியன் ஆகி  ஆசான் உரைத்தவை
முறைமுறை கற்று  முதிர்ந்திடக்  கல்விக்

ஆசான் மகிழ்ச்சி

கிறைஎனும் குமரன் இன்பமீக் கூர                                     130
மலர்முகச் செல்வன் மதிதனை வியந்து
நலந்தரு மொழியின் நனிவரம் புண்ர்த்தி
மொழிக்குல  விளக்கின்  முதல்விளக் காகி
எழில்தரு தமிழின் இயல்பெலாம் உரைத்துக்
காலம் கடந்தும்  கன்னியாய்  விளங்கும்                          135
கோலம் உணர்த்திக் கோதறு சான்றோர்
மதியாற் செதுக்கி  மலர்த்திய சிற்பம்
இதுவெனத் திகழும் இலக்கியம் காட்டி
மனமா சகற்றும் மரபும் செயலும்
நனியுற விளக்கி  நலஞ்சால் புலவோர்                              140
ஓவியம்  என்ன உரைத்திடு நூலாம்
காவிய  வாயில்  காட்டிச் செலுத்திட

மாதவன் கற்றுச் சிறத்தல்

ஆசான் குமரன் உணத்திய  அறிவின்
எல்லைகள் முற்றும் இனிதின்  உணர்ந்து
தொல்லைகள்  நீக்குமத் தூயபேர்  அறிவை                      145
முற்றும் உணர்ந்து  முதிர்ந்தநல் ஞானம்
உற்றமா ந்லனும் உள்ளச் சிமிழில்
அறமும்  அன்பும் அருளும் நிறைத்து
மறவழி போக்கிட  ம்க்கட்  குதவும்
அறவழி  ஒன்றே  அருள்வழி என்று                                      150
கொண்ட  கொள்கையின் குன்றென ஓங்கி 
உணர்ந்த அறிவெலாம் உணரக்  காட்டிய
ஆசான் குமரன்  அடிபணிந் தேத்தினன்
மாசிலாக்  குமரனும்  மனமகிழ்ந்  தினிதாய்
விடைதர இல்லம் விரைந்தனன்  ஆங்கே                          155
தந்தையும்  தாயும்  தம்மகற் கண்டனர்
அந்தமில்  இன்ப ஆழியுள் மூழ்கினர்
பெற்றனம் பேறெனப் பெரிதும் களித்தனர்
உற்றவர்  தம்மொடு  உவந்துறை  காலை
அறப்பெருங்  குண்த்தின் அன்னை மேகலை                     160
திறம்பா  ஞானச் செல்வனை  நாடி
வில்லவன் இல்லம் நண்ணினள் விழைந்தென்.

ஒன்பதாம் காதை நிறைவுற்றது
  




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

meenavan2

unread,
Aug 24, 2014, 7:01:55 AM8/24/14
to mint...@googlegroups.com

மாதவமேகலை (தொடர்ச்சி)

10.புத்தரின் நல்லறம் புகட்டிய காதை

[பசியைப் போக்கும் மேகலையைக் கண்ட வில்லவன்"மணி
மலர்ச் சேவடி என்னகம்படப் பெருவாழ்வுற்றேன்" எனப் போற்
றினான்.மணிமேகலை அவனை நோக்கி,"வசியும்,வளனும்
சுரக்க" என வாழ்த்தி,மாதவனை அழைக்கப் பணித்தாள்.உடன்
மாதவன் வந்து பணிந்ததும்,அவனுக்குத் துக்கத்திற்கு ஏதுவான
ஆசை,துக்கமேற்றல்,ஆசை அவித்தல்,துக்க நிவர்த்தி என்ற
நாங்கு உண்மைகளையும் கூறிப் புத்தம்,சங்கம்,த்ம்மம் என்னும்
முத்திற மணியின் சிறப்பினையும் விள்க்கினாள்.இவற்றை மனம்
கொண்டு பசித்தோர்க்கு உதவுதல் பேரறம் என்றும்,அதுவே தருமச்
செவ்வழி என்றும் எடுத்துரைத்து,இவற்றை நெஞ்சிற் கொண்டு
இனிது வாழ்வாய் !என்று வாழ்த்தினாள். ]


நிலைமண்டில ஆசிரியப்பா

மணிமேகலையை வில்லவன் வரவேற்றல்

நன்மணிப் பீடிகை  நவையறச் சுற்றித்
தன்பிறப் புணர்ந்த  தகைசால் பூங்கொடி
கோமுகிப் பொய்கை குறைவற  வீன்ற
ஆபுத்  திரங்கை  அமுத சுரபியால்
நல்லறம் நாட்டிய நங்கை  உலகில்                                         5
பல்லறம் தழைக்கப்  பகவான் புத்தன்
அன்பு நெறியை  அகங்கொண்  டேத்தி
இன்பம் விழையா இயல்பின  ளாகி
மன்பதை போற்றவாழ் மணிமே  கலையைப்
பால்வள்ம்  பெருக்கிப்  பல்லான் போற்றி                            10
நூல்வழி  அறஞ்செய்  வில்லவன் நோக்கி
எண்பெரும் உலகில் இல்லார்க் களிக்கும்
பண்பொடு  நலிந்தார்  பரிவுகண்  டுதவும்
அறப்பெருங்  குணத்தெம்  அன்னையே  வருக!
மறப்பெரு  மன்னர் மதிக்குடை  வாழும்                              15
உடைப்பெருஞ் செல்வ  உடைய ராயினும்
பூண்டஉம்  தவத்தைப் போற்றி  மதிக்க
மாண்ட கொள்கையால்  மாநில மெங்கும்
தனிப்புகழ்  பெற்ற  தவத்தோர்  வாழ்வே!
பனிமலர்ச்  சேவடி  என்னகம்  படரப்                                     20
பெருவாழ் வுற்ற  பெற்றியன் ஆயினேன்
திருவே! என்றலும் தெய்வத் தையல்

மணிமேகலை மறுமொழி

அறத்தா  றிதுவென  அறிந்த வில்லவ!
மறத்தா றகற்றி  மன்பதை அன்பில்
திகழும்  நெறியைத் தேடிய  சான்றோர்                                 25
புகழை  விரும்பாப் புனித்ராய் இலங்கிச்
செந்நெறி  வளர்த்த  சிறப்பினை  அறிவாய்
அந்நெறி  பற்றி  ஆன்குலம் ஓம்பி
முசியாச்  சுற்றம் முற்படத்  திகழ
வசியும்  வளனும்  சுரந்திட  வாழ்வோய்!                              30

மாதவனை அழைக்கப்  பணித்தல்

போதி  மாதவன் புண்ணியன்  அருளால்
மாதவன்  என்னும்  மகன்தனைப்  பெற்றாய்!
இவ்வண்  அழைப்பாய்  என்றலும்  மாதவன்

மாதவன் பணிதல்

தெய்வத் தையலின் திருவடி பணியக்
கண்ட மேகலை கருணைமீக் கூர                                         35
மண்டுபே ரன்பால் மனமுற வாழ்த்தி
எழுவாய் என்றிட எழுந்தனன்  அதன்பின்

மணிமேகலை கூற்று

தொழத்தகும்  அவளவன் தூய்முகம்  நோக்கி
வில்லவன் குலத்து  விளக்கே! கேளாய்
பல்லோர் பொதுளிய  பாரக மிதன்கண்                                40
உற்றபே ருயிரகள்  உயர்நெறி  எய்த
நற்றவர் பற்பலர் நானிலந் தோன்றி
வெந்துயர்ப்  பிறவி விளைத்திடு கொடுநோய்
தந்துயர்  அறுக்கும்  தகுதியர் ஆகித்
துக்கம தறுக்கும்  துகளறு ஞானம்                                        45
தக்காங்  குரைத்தோர் தருமச் செய்கை
நல்வரம் பாக  நானில  வரைப்பில்
அவ்வழி யகற்றும் அருள்வரம் பாயினர்

புத்தர் நெறி எதுவெனக் கூறல்

அன்னோர்  தம்முள் அமைந்திடு  வேள்விப்
பன்னூல் ஆய்ந்த  பகவன்  போதிஸ்                                      50 
சாகை  நிழலில் சத்திய முணர்ந்தோன்
ஆகமம்  உரைத்த  அறத்தின்  தோன்றல்
பிறவிக் கொடும்பிணிக் குறுபொருள்  குற்றம்
துறக்கும் வழிநான்  குண்மைகள்  என்பன
மாசிலா இன்பம் ம்லர்ந்துள  உலகில்                                    55
ஆசையே துக்க  அடிப்படை வதுமுதல்
உலகம்  புலன்வழி உண்ர்ச்சிமேற்  கொண்டு
புலன்தரு  கலகப் பொறித்னில்  மயங்கி
இதனால்  துக்கம்  ஏற்றிடல் இரண்டாம்
மதிபெறும் அறிவால் மர்க்கம்  தேர்ந்து                                60
தான்வரு  மாசை  தறித்தல் மூன்றாம்
பண்படு வாழ்க்கையில் பற்றிய துக்கம்
எண்வழி மார்க்கம்  ஏற்பத  னாலே
நலிவது  நான்காம்  இந்நான்  கதனை
உள்ளங்  கொண்டோர்  உயர்நிலை  பெறுவர்                     65
புத்தம்  சங்கம்  தம்மம்  என்னும்
முத்திற மணின்  அத்திறம் போற்றல்
மக்கட் பிறப்பின் மாண்பென  உணர்வாய்!
அற்றவர்க் குதவுதல்  அழிபசி தீர்த்தல்
என்னு மிவற்றை  இதயங்  கொண்டு                                    70
பொன்றா  நலஞ்சேர் புண்ணியம்  பெறுதலே
மண்ணிற்  பிறந்த  மாந்தர்க்  குறுபயன்
கண்ணிலா  தார்க்கொரு  கைக்கோல் போல
உலகப் பற்றிடை  உழலும்  உயிர்க்கு
நலந்தரும்  அறத்தை  நாளெலாம்  செய்தல்                       75
வானவர்  உவக்கும்  வழிநம  காக்கும்
தானதை  உணர்ந்து  த்ருமச் செவ்வழி
நெஞசம்  நிறுத்தி நீள்புகழ்  எய்தி
எஞ்சா  வாழ்வில் இறைபே  ரின்பம்
எய்துவாய்! என்றவள்  இனிதே  வாழ்த்தலும்                     80
பொய்வழி  அகற்றிடப் பூத்த  மாதவன்
செய்யவள் ம்லரடி  சேர்த்தினன் சிரமென்.

புத்தரின் நல்லறம் புகட்டிய காதை நிறைவுற்றது

தேமொழி

unread,
Aug 24, 2014, 11:28:38 PM8/24/14
to mint...@googlegroups.com



நல்ல அறிவுரைகள்தானே இவை...
ஏன் நம் மக்களுக்கு புத்தமதம் பிடிக்காமல் போயிற்றோ தெரியவில்லை.

meenavan2

unread,
Aug 25, 2014, 7:46:32 AM8/25/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை (தொடர்ச்சி)

11.கன்னிதன் துயரம் களைந்த காதை

[எல்லா நலங்களும் வாழ்வில் எய்திய வில்லவன் வ்றுமைப் பட்டார்க்கு
உதவுதல்,கோதையர் மணங்கொள்ளச் செய்தல்,மாதவ்ர்க்கு உரிய மாண்
பொருள் அளித்தல்,முதியோர்க்குதவுதல்,கைம்பெண்கள் வாழப் பொருள்
த்ருதல்,கல்வி கற்க இய்லாச் சிறார்கள் கல்வி பெறப் பொருள் அளித்த்ல்,
ஆகிய் அற்ங்களைச் ச்ய்து வந்தான்.அதுகண்ட் மாதவ்னின் மனமும் அவ்வ
றங்களிலேயே படிந்து நின்றது.இந்நிலையில்  அமைதியுடன் வாழும் மாத
வனின் ஆற்றலும்,வ்லிமையும் அற்றவன் எனச் சில கயவர்கள் இழித்துரை
யாடினர்.அது கேட்ட மாதவன் அவற்றிற்கெல்லாம் வருந்தாம்ல் அற்மே
குறிக்கோளாய் வாழ்ந்தான்.அப்போது ஆடற் கூடம் சென்று நாள்தோறும்
ஆடல் பழகி மீளும் அழகிய் நங்கை ஒருத்தியைக் கண்ட அக்கயவர்கள்
அவ்ளுக்குக் கேடு சூழக் கருதி அவளைப் ப்ற்றி ம்றைவிடம் கொண்டு சென்
றனர்.அந்நிலையில்  அவ்வழி வந்த மாதவன் அலறித் துடித்த கன்னியின்
அழுகுரல் கேட்டு விரைந்தோடி அக்கயவரை நையப் புடைத்தோட்டிக் கன்னியை
அவளில்லம் சேர்த்தான்.பலரும் பாராட்டினர்.அக்கீழ்ம்க்களும் அவனது ஆற்றல்
உணர்ந்து அடங்கினர்.]

நிலைமண்டில ஆசிரியப்பா

வில்லவன் பெருமை

நூல்வாய்  வந்த  நுண்பயன் போலப்
பால்வாய்  வந்த  பகரரு  செலவத்
துறுபயன்  கொண்டே ஓங்கிய  வாழ்க்கை
முறைவழி  நற்பால்  முளைத்தவை எல்லாம்
வையத் தெய்தி  வாழும்  வில்லவன்                                                 5

வில்லவன் செய் அறங்கள்

தெய்வக் கோட்டம்  சீர்பெற  உதவியும்
பற்றிய  வறுமைப் பாயெரி மூழ்கிச்
சுற்றமும் துணையும் சூழ்பயன் காணார்
இல்லொடும் இனிதின் இருந்திடச்  செய்தும்
பொல்லா வறுமை புழுக்கிய தாலே                                                 10
மங்கல வேலி  எனுமணித் தாலி
தங்கழுத் தேறும் தனிமகிழ் காணாக்
கோதையர் வாழ்விற் கொழுமணம் சேர்த்தும்
மாதவர் மகிழ மாண்பொருள்  அளித்தும்
வல்லகான் முளைகள்  வாய்த்திடல் இன்றி                                  15
இல்லச் சுமையென இருந்திடு  முதியோர்
உள்ளப் பாலையில் உயர்நீர்  பெய்தும்
கொண்ட கொழுநன்  குறைவா ணாளில்
உயிருலந் தேக  உறுதுணை இழந்தே
துயர்ப்பட்  டாற்றும்  தோகையர்க்  குதவியும்                               20
அள்ளக் குறையா அமுதென இலங்கி
வெள்ளத் துறினும் வீழ்ந்திடல்  இன்றிக்
கள்வர் வரினும்  கையகப் படாமல்
உள்ளத் திருளை  ஓட்டிடும் ஞானப்
பேரொளி  விரும்பியும் பெரும்பொருள் இல்லாக்                       25
காரணத் தால்வரு கவலைகொள் சிறார்தம்
அறியாப் பிணியாங் ககலப்  பொருளவர்
திற்முறக்  கொடுத்தும் திகழ்வோன் ஆதலின்
எல்முகம் பார்த்தே எழுபயிர் போல
அல்லற் பட்டோர் அகமகிழ்ந் தனரால்                                              30
இசைபெறு  வில்லவன்  இல்லத் துறையும்
மெய்வழி கொளுத்த மேவிய மாதவன்
எண்ணமும் அறத்தில் இயைந்தத  னாலே
மன்னவர் வாழ்த்தும்  தன்மனை தேடி
நடக்கும்  வறியவர் நல்முகம்  நோக்கிக்
கொடுக்கும்  இயல்பொரு கொள்கையாக் கொண்டே
அறம்புரி  நெஞ்சோ டவன்வாழ் நாளில்

மாதவனை வீரமிலான் எனச்சிலர் எண்ணல்

திறம்புரி  கொள்கை தேறா இளைஞர்
வருநூற்  கல்விப்  பயன்பல வாய்த்தும்
ஒருவழி காட்டி உயர்த்தும்  அறத்துப்                                                40
பெருவழி உண்ராப் பேதைமை யாலே
உடல்மதஞ்  சேர உள்ளந் திறம்பி
நடைமுறை மாறி நடப்பதே தொழிலாய்க்
கெடுவழி தேடும் கீழ்மைய  ராகிக்
கைதவம் புரியும் கயவர்கள்  என்ன                                                  45
மெய்த்தவ மேன்மை மிளிரும் மாதவன்
தனைகாண் தோறும்  தான்நகை  யாடி
இனையப் பலசொல் இயம்பித் திரியக்
கண்டும் அன்னார் கட்டுரை தம்செவிக்
கொண்டு  வருந்தும்  கொள்கையை விடுத்தே                               50
ஊரினர்க் குற்றுழி உதவும் பான்மையில்
நேரிய நெஞ்சுடன் நிகழ்நாட் காலை

கன்னி ஒருத்திக்குக் கயவர் கேடு சூழல்

மைபடிந்  திலகிய மாவடு விழியும்
நெய்படிந் தொளிரும்  நீளிருங்  கூந்தலும்
மாமதிக் கழகு மாற்றிய வதனமும்                                                  55
பூமலர் இதழெனப்  பொருந்திய  மேனியும்
கொண்ட்தோர் பருவக் கோதையாள் தொல்சீர்
மண்ட்லம்  துதிக்கும்  மாண்பெழில் வாய்ந்த             
பூங்கொடி  என்னும் பூஞ்சிலை ஒருத்தி
ஆங்கொரு மன்றில் ஆடலும்  இசையும்                                        60
பயிலும்  பண்பினள் அவ்வண் பயின்றதும்
அயலே  உள்ளதன்  அணிதிகழ் இல்லம்
சேர்தல் உன்னிச் செல்வதை  நாள்தொறும்
பார்த்தவக்  கயவர்கள் பக்கம் நோக்கி
உடல்பின் செல்லும் ஒழியா நிழலென                                             65
மடவரல் பின்செலும் மயக்கி னராகிப்                                      
தொடர்பவர் அன்றும்  தொடர்பவ  ராகிப்
படர்கான்  சோலைப் பாங்கர் வருங்கால்
புதுமலர் மானப் பொலிபூங்  கொடியாம்
பதுமையைப் பற்றிப் பக்கமோர் செறிவில்                                     70
நலனுகர் விருப்பொடு நலித்திடு போழ்தில்

கன்னியின் கதறல்

சிலைவாய் அரற்றிய தீங்குரல் சேய்மை
நெறிவரு மாதவன் செவியுறத் துடித்தே
பொறியழு  கல்லென்ப் புலியெனக் குரல்வழி

மாதவன் கயவரைத் தாக்கல்

விசைநாண்  பகழி விரைந்தெனப் போந்தே                                    75
இசையாக்  கன்னிக் கிடர்சூழ் வோரின்
மெய்பொடி யாகி  மேல்லார்  வருந்தக்
கைக்கோல் கொண்டவன் கதுமெனத்  தாக்க
இடிபடு தருவென இரிந்தவ்ர்  வீழப்
பொடிபடக் கிடந்தபூங்  கொடியினை  அவள்தன்                           80
இல்லம் சேர்த்ததை  இருந்தோர்  அறிந்து

மாதவன் ஆற்றலை உணரல்

வில்லவன் செல்வன் வீரமும் உணர்ந்து
பலபடப் போற்றினர்  பாலவண்  அடைந்த
கயவரும் அவனைக் காண்குறு போழ்தெலாம்
புயவலி உண்ர்ந்தும் புன்சொல் கூறா                                              85
திருந்தனர்  போற்றியும் நின்றனர்  தொடர்ந்தென.

க்ன்னிதன் துயரம்  களைந்த  காதை  நிறைவுற்றது.

Suba.T.

unread,
Aug 25, 2014, 8:39:30 AM8/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-25 5:28 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:



நல்ல அறிவுரைகள்தானே இவை...
ஏன் நம் மக்களுக்கு புத்தமதம் பிடிக்காமல் போயிற்றோ தெரியவில்லை.

​அரசு மாற்றம்.. அரசியல்...

சுபா

meenavan2

unread,
Aug 26, 2014, 12:51:04 AM8/26/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை(தொடர்ச்சி)

12.அன்பினை மதத்தார்க்கு  அறிவித்த காதை

            [தருமச் செவ்வழியில் தலை நின்றொழுகும் மெய்த்தவ மாந்தர்
வாழ்கின்ற காஞ்சியில் பொய்த்தவம் பூண்ட சிலரும் வாழ்ந்தனர்.கலக
வழியிலே மன்ங்கொண்டு கண்டன பேசித் திரிந்திடுவோர் பற்பலரும்
கூடிப் பசித்தோர்க்குச் சோறளிக்கும் பாவை மேகலையைப் பழித்துரைத்
தனர்.மக்களை ஏமாற்றிப் பொருள் பறிக்கும் அவர்கள்,இவள் மகப்பெற்ற
தாய் எனவும் மாயத் திறமுளாள் எனவும் தூற்றினர்.அவற்றை எல்லாம்
மனங்கொள்ளாத மேகலை புண்ணியம் செய்தலே புத்தன் விளைத்த நெறி
எனப் போற்றி அவ்ர்களையும் ந்ல்லாற்றுப் படுத்தினாள்]


நிலைமண்டில ஆசிரியப்பா

காஞ்சிவாழ் மெய்த்தவர் சிறப்பு

கருமப் பிறப்பிதைக் கழிக்கும் நினைவொடு
பருப்பொருள் முதலா நுண்பொருள் ஈறாப்
படைத்துல கதனைப் பாற்படப் பகுத்து
கடைநாள்  வரினும் கட்டழி வின்றித்
தருமச்  செவ்வழி தலைப்பட  வைத்தே                               5
ஒருமதி யலே உண்ரினும் உணராத்
தத்துவ நிலையிலும்  த்லைமுடி யான
வித்தகன் திருத்தாள்  விருப்புடன் பரவும்
மெய்த்தவ மாந்தர் மேவிய காஞ்சியில்

பொய்மதத்தாரின் புல்லிய நிலை

பொய்த்தவம்  பூண்ட புல்லர்கள் நாளும்                           10
கைதவம் புரியும் கடுவினை யாளர்
உய்வழி அறியா உலுத்தர்கள் வாழும்
கலகத் தீநெறிக்  கடுநோய்  பற்றி
நலத்தகு சான்றோர் நலிவுறு  மாறு
நாப்பறை  கொண்டு நாற்றிசை சுற்றிஸ்                            15
சாப்பறை முழக்கிச் சத்தியம் தீய்ப்பார்
பற்பலர் கூடிப் பசித்தோர்  வயிற்றில்
நற்பதம் விளைக்கும்  நன்மருந்  தூட்டி
ஆனா  அறஞ்செய்  அருள்முகச் செல்வி
கற்புடை  யாளர்  கண்ணகி மகளெனப்                               20
பொற்புடை மாதவி புகழ்ந்து  போற்றும்

மேகலையின் நல்லறம் பழித்தல்

நங்கை  மேகலை நல்லறம் பழித்துப்
பொங்குறு  மவள்புகழ் போற்றாப்  புன்யால்
குற்றக் கடலில் குமைவுற் றழுந்திப்
பற்றினைத் தீநெறிப்  படரவே  வைத்துக்                            25
கற்றவர்  உரைக்கும் கருத்தெலாம்   மறுத்து
நெல்லெனப் பதர்களை நிறைத்தளப் பவர்போல்
சொல்லினைப் பெருக்கித் தொடர்ந்திடும்  தீய
புன்னெறிச் சென்று  புண்ணியம் சிதைப்பார்
எலியைப் புலியென இயம்பிக் காட்டுவார்                         30
ஒலிகடல் உலகில் உள்ளவர் எல்லாம்
அறியா இருளில் ஆழ்ந்திடச்  செய்வார்
நெறிவ்ழி மாற்றி நின்றபேர் இருளை
ஏற்றிப் புவியை  ஏய்த்தே வாழ்வார்
சாற்றுவீர்! உங்கள் சங்கடம் களைய                                   35
எல்லாம் வல்லவன் எந்தமைப்  படைத்தான்
பொல்லா நெறிகளிற்  போயொழிந்  திடுவீர்
நல்லாறு  ரைப்பது  நம்கட  னாகும்
நல்லீர்  வம்மின்! நாளெலாம் என்பர்!
செல்வம்  உங்கள்  சிந்தையில்  என்றும்                             40
பாசம் வளர்த்துப்  பழிபல சேர்க்கும்
மாசுறு செல்வம்  அனைத்தையும் உங்கள்
ஆசையை  அறுக்கும் ஆண்டவன் அடியிற்
சேர்த்திட முயல்வீர் என்றுரை பலவும்
ஆர்த்தவர் செல்வம் அடிக்கீழ் வைப்பின்                             45
சேர்த்துக் களிக்கும் சிந்தைய  ராவார்
சுவைப்பால்  இடைவீழ்  சொட்டுத் தயிர்போல்
நவையிலாக் கொள்கை நவிற்றிய ஞானம்
நவைபட  வாற்றி  ந்ல்லா  றழிப்பார்
பற்பலர் கூடிப் பாழ்மனச்  செருக்கில்                                   50
பொற்புறு  செல்வி புண்ணிய  வடிவென்று
உலகோர் சொல்லும்  உரைக்கிலக் கணமாய்
நிலைபெறு பசிநோய்  நின்றகம் வருத்த
உலைவுறு  நெஞ்சினார்க்  குறுமகப்  பெற்றுத்
தன்பால் ஊட்டும்  தாயென  அருளால்                                 55
நல்லறம் புரியும் நங்கையைப்  பழிப்பார்
மாதவத் தரசி மணிமே கலையிவள்
தீதினள்  மாயத்  திறமுளாள்  பொய்வழி
செல்லும் தவத்தள் எனப்பல பொய்யுரை
சொல்லிக் களிப்பார் சொன்னவர் சொற்கெதிர்                  60

மணிமேகலை நன்னெறிப் படுத்தல்

மானிடர்க் கன்பின் மாநெறி  உணர்த்தித்
தானுறு  பயனித்  தரணியும் பெறுதற்
கவாவுற் றறவழி  அன்னவர்ச் செலுத்திப்
புண்ணியம்  ஒன்றே புத்தன் விழைந்த
நன்னெறி  என்றவள் நாட்டினள்  பலவென்.                        65

அன்பினை மதத்தார்க்கு  அறிவித்த  காதை நிறைவுற்றது  

meenavan2

unread,
Oct 11, 2014, 3:24:45 AM10/11/14
to mint...@googlegroups.com

(மாதவ மேகலை -தொடர்ச்சி - மீனவன்)

13.அமுத சுரபியை அகற்றிய காதை

    [காஞ்சியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் பசியால் கவலுற்ற
மக்களுக்குக் கடிகை உணவளித்துக் கருணை செய்துவரும்
மேகலையின் வனெறியைப் பழித்து வந்த தருக்கர் வஞ்சக
எண்ணம் கொண்டு மணிமேகலையோடு வாதிட்டனர்.வாதிட்
டவர்க்கு மேகலை அறிவுரை வழங்கினாள்.அதனை ஏலாத
அக்கயவர்கள் அவள்தன் அமுத சுரபியைக் கவர எண்ணிச்
சூழ்ச்சி செய்து கள்வர் மூலம் இரவிடை அவள் அறியாதவாறு
அதனைக் கவர்ந்து வரச் செய்தனர்.பாத்திரம் காணாத மேகலை
வருந்திப் பாத்திரம் மறைந்த மாயம் அறியாது பசித்தோர்க்கு
உதவ  முடியாத நிலை எண்ணி மயங்கினாள்.]


நிலைமண்டில் ஆசிரியப்பா

மணிமேகலையின் அறப்பணி தொடர்தல்

துறவின் வடிவிவள்  என்னத் துலங்கிய
அறவோன் திருவ்டி அகஞ்சுமந் தியங்கும்
தெய்வச் சேயிழை திருத்தவ மேகலை
கையா றகற்றிக் காண்குறு மாந்தர்
படுதுயர் போக்கும் பான்மையில் மாமழை                              5
நெடுகிலும் நிரப்ப நெல்மகள் சிலிர்க்கும்
கன்னித் த்கிழகக் காஞ்சியின்  நாப்பண்
மன்னுயிர்க்(கு) உண்டி மாறா தளித்தே
உண்டவர் தங்கள் உவகையைக் கண்டு
கொண்டல்போல் உள்ளம் குளிர்ந்திடு களமர்                       10
தம்மை நைகர்த்துத்  தன்பணி தொடர
வன்னம் வனப்பெழில் வாஞ்சைகள் வெறுத்தே
அவலம் போக்கும் அருட்பணி தொடர்வாள்
பவநோய்  அகற்றிப் பாசங்  களையும்
தவநெறி  பழித்தே தாழ்மொழி பிதற்றும்                                   15

தருக்கரின் தகாச்செயல்

தருக்கர் பற்பலர் தம்மதம் மீறி
இருள்பழி நெஞ்சால் இவட்பழித் துரைப்பர்
தடுமா  றுளத்தொடு  தகைநாண் இழந்து
படுபொருட் காசைப் பட்டுமே  திரிவார்
உவர்சுமந்  துழவுக் குதவா நிலம்போல்                                   20
கவர்படு நெஞ்சிற் கைதவம் பூண்பார்
கன்றும் சுடரினைக் கையாற் பற்ற
நினைக்கும் பேதைமை தன்னில் திளைப்பார்
கடலினைக் கைக்குள் அடக்கக் கருதும்
மடவர் போன்றே மயக்கினில் ஆழ்வார்                                  25
கானக் கோழியைக் கவின்மயில் ஆக்குவார்
பானையுள் யானையைப் படுக்க வைக்கும்
மூடரை நிகர்த்தே முழுப்பொய்  பேணுவார்
மாடெனத் தங்கள் மன்வழி ஏகுவார்
மக்கள் உளத்தில் மயக்கமே ஏற்றித்                                        30
தக்க துரையாத் த்ருக்கரே யாவர்
மெய்ந்நெறி காணா மேட்டிமை யாளர்
கைப்பொருள் பிறபால் கதுவும் மனத்தொடு
தீநெறி  யாளர்  திரண்டிருந்  தனரே
தூநெறி  மறந்தே  துணிபொருள் மயக்கில்                            35
துயருறு மாக்கள் துன்பினைக் கண்டுளம்

மணிமேகலை அறிவுரை

வருந்திய  மேகலை வாதிட வந்தோர்
திருந்திடப்  பற்பல தெளிவுரை கூறினள்
உறுகண் உற்றார்க் குதவுதல் ஒன்றே
மறுமைக் குதவும் மாமணி என்றனள்                                    40      
உறுதியை நமக்கிங்  குதவுவ   தென்றும்
பொருள்படு புத்தன்சொல் போற்றுக  என்றனள்

கயவர் அறிவுரையை ஏலாமை

அங்கணம்  வீழ்த்த அமுதினைப் போலவும்
வன்னிலம் வித்திய செந்நெல்  போலவும்
கேளார்க் கிசைத்த கிளரிசை போலவும்                                 45
காணார்க் காட்டிய கவினிசை போலவும்
மேகலை அறிவுரை மேன்மை இழந்தது  
இழிகுணக் கயவர் இன்னுரை ஏற்றிலர்
செவிடன் காதில் செவ்வழி ஏறுமா !
கழுதை அறியுமா கற்பூர மணத்தை                                         50
மாதவச் செல்வி மனமிக வருந்தினள்
யாதிவர் திறமென் அறியா  தயிர்த்தனள்

கயவரின் சூழ்ச்சி

ஆயினும் தன்கடன்  அயர்ந்திலள் செய்தனள்
வஞ்சம் போற்றும் வன்கணா ளர்கள்
நஞ்சம் மனத்தில்  நாள்நாள்  முற்றத்                                      55
தொலைய அடிசில் தோன்றியே நல்கும்
கலையாள் கையின் கடிகையைப் பற்றிக்
கவர்ந்தே யப்பணிக் காகுலந்  தேடத்
துணிந்தனர்  பிறரின் துயர்கண் டுள்ளம்
களித்திடு புன்மைக் கயவர்தம் கூட்டம்                                  60

பாத்திரம் கவர்தல்

மையெனச் செறிந்த மாவிருட் போதில்
பையெனச் சென்றே பாவை துயில்கொளும்
சமயம் அறிந்தவள்  பள்ளியைச் சார்ந்தே
உற்றார் அறியா துயிர்கவ்ர்ந்  திடல்போல்
பற்றியே யந்தப் பாத்திரம் கவர்ந்து                                           65
தங்கள் இருப்பிடம் தான்வந் தெய்திப்
பங்கப் படுமவள் பணியென் மகிழ்ந்து
பொங்கிய உவகை பூத்த்வர் ஆயினர்

பாத்திரம் காணாது மேகலை வருந்தல்

விளங்கும் விடியலில் விழித்துயில் நீத்த
களங்கமில் தவக்கொடி கையகப் பாத்திரம்                           70
தன்மருங் கில்லாத் தகைமைய நோக்கி
என்னிது மறைந்த(து)  எவர்செயல் ஈதோ
என்றுளங்  கலங்கி  ஏக்கத் த்ழுந்திக்
கன்றினை இழந்த காரான் போலவும்
கைக்கோல் இழந்த கண்ணிலான் போலவும்                       75
மெய்ப்பொருள் இழந்த  மேலோன் போலவும்
குளிர்நீர்  அற்ற கூவலைப் போலவும்
ஒளிஉயிர் இழந்த  உடலது போலவும்
கலங்கித் தவித்துக் கவலைக் கட்லிடைப்
புலம்பிப் புலம்பிப் பொழுதெலாம் வருந்திப்                          80       
பசித்தோர்க் குதவும் பாத்திரம் இல்என
மாயம் உணராள் மயங்கினள்  பெரிதென்.

13.அமுதசுரபியை அகற்றிய காதை நிறைவுற்றது

meenavan2

unread,
Oct 12, 2014, 7:52:12 AM10/12/14
to mint...@googlegroups.com

கோயிலூர்ப் புராணம்(தொடர்ச்சி

14.பாவை அறவணர்பாற் செல்காதை

பாத்திரம் கவர்ந்தோர் மகிழல்

மங்கை மேகலை மலர்க்கரத்(து)  அமர்ந்து
பொங்குநல்  அமுதம் புவியோர்க்  களித்த
பாத்திரம் கவர்ந்த  பவியர் தமக்காக்
காத்திருந்  தோர்உறை  கானிடைப் போந்து
பொல்லார் அந்தப் புல்லர்கைக் கொடுத்தனர்                        5
கல்லா மாந்தர் கள்வர்க் காம்பொருள்
தந்தபின் அன்னார் தம்மிடம் ஏகினர்
வல்வினைக் கொடியோர் வழிச்செல் வார்தமைக்
கொலைவினை யாற்றிக் கொள்பொருள் தன்னால்
உளங்களி கொள்ள ஒன்றாய்க் கூடிக்                                    10
களங்கொண் டாடிக் களித்ததே போலவக்
கயவரும் பாத்திரம் கைப்பெற் றோம்என
வியந்துதன் செயலினை வீணுரை ஆற்றிக்
களித்துரை ஆடியும் கள்ளினைப் பருகியும்
உளத்தினில் தீமை ஓச்சிட இருந்தனர்                                   15
 
மணிமேகலை துயர்கொளல்

அப்போ தறவோர் அறப்பெருஞ் சேரியில்
மூள்துயர் எழுந்து  முகத்தினைக் காட்ட
ஊரார்க் குதவும் ஒப்பிலாக் கடிகை
யார்கைப் பட்டதோ அறியேன் மக்கள்
ஆர்பசி போக்குமிவ் வறமே  தொடர்ந்து                               20
சீருடன் வளர்கெனச் செப்பிய நல்லோர்
அடுக்கிய தவத்தார் அவருரை பொய்த்ததோ
பன்னலம் சிதைக்கும் பசிகொண் டலைவார்
வருத்தம் களையவோர் வழியே இல்லையோ
திருந்திழை இங்ஙனம் சிந்திதித் தேங்கி                                 25
அறத்துரை மாறா அருந்தவ முனிவர்
திருத்தகு சேவடி செவ்விதின் தொழுதே
அமுது சுரந்தே அரும்பசி களையும்
அமுத சுரபியும் அகன்ற திந்நாள்
எவரெடுத் தனரோ?ஏது செய்தாரோ?                                     30
தவறோ?என்பால்? சாற்றுவீ ரிங்கென

Meenavan M

unread,
Oct 14, 2014, 12:45:37 AM10/14/14
to mint...@googlegroups.com
கோயிலூர்ப் புராணம்(பாவை அறவணர்பாற் செல் காதை - தொடர்ச்சி)

வருந்தேல் நங்காய் ! வான்பொருள் அதுதான்
வருவதும் போவதும் வசம் நமக்(கு)இல்லை
உறுதுயர் வருங்கால் உள்ளம் தேறிப்
பெறுபயன் வ்ருங்கால்  பேசா தேற்று                                 35
வாழ்தல் என்ப்தே வ்ல்லோர் கொள்கை
ஊழ்வினைச் செயலென உள்ளந் தெளிந்தினித்
தவச்செய லாற்றல் தகுமுனக் கெனவே


மணிமேகலை மறுமொழி

அவலக் கட்லுற் றழுந்திய மேகலை
தவத்தோர் தங்கள் தண்முகம்  நோக்கி                              40
உலகோர் இன்புற உயர்தவ்ம் இயற்றும்
நலந்தரு பெரியீர் நல்லுரை செய்தீர்
புலம்தரும் உம்முரைப் போக்கினை உணர்ந்தேன்
என்பெருங் கவலை இருந்ததை இழந்த
துன்பத் தாலிவண் தோன்றிய தன்று                                   45
தாங்காப் பசித்தீத் தாங்கிய  மாக்கள்
ஏங்கித் துடிப்பார் என்கை  அடிசில்
வாங்கி யப்பசி வளரா தவிப்பர்
நினைவில் படர்ந்திது  நெஞ்சம் வருத்த
இனைய லுற்றேன் இஃதறிந் தருள்க                                   50
போதியின் நீழ்லிற் போந்த மாதவன்
ஆதி நாயகன் அருளிது வெனில்யான்
என்செய் தாற்ற ஏலுவேன் அறியேன்
என்னுயிர்க் குதவி மாப்பசி தீர்க்கும்
நன்னலப் பெரும்பணி நாட்டகத் தினியும்                         55
தொடரும் வகையினித் தொலைந்ததென் பதனால்
இடர்க்கடல் வீழ்ந்தேன் இனியும் கவலேன்

அறவணர்பாற் செல்வேன் எனல்

அரசினைத் துறந்தவன்  அகிலத் தார்க்கே
உயரறம் நல்க உயர்கிளைப் போதி
அமர்ந்த  மாதவன் அடிமலர் மறவா                                  60
நமதுயிர் அனைய நற்றவ மேலோன்
அறவணற் சார்ந்தவர் அடியிணை தாழ்ந்து
திறமினித் தெளிவேன் என்றுளந் தேறி
நற்பெருந் தவ்த்தின் நலஞ்சேர் அறவணர்
பொற்புறு பள்ளியிற் போந்தனன ஆங்கென்                    65

14-பாவை அறவணர்பாற் செல் காதை நிறைவுற்றது


--

meenavan2

unread,
Oct 15, 2014, 6:33:39 AM10/15/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை( தொடர்ச்சி - 15-பாத்திரம் வருமெனப் பகர்ந்த காதை)

    [ காலைக் காட்சிகளைப் பார்த்தவாறு மணிமேகலை அறவணர் பள்ளி
சென்று அரசின் கீழ் வீற்றிருந்த அறவணரைக் கண்டாள்.அவர் பாதம்
பணிந்தாள்.அறவணர் அவளை வாழ்த்தினார்.அவளின் துன்பத்தை நோக்கி
அதற்கான காரணம் யாதென வினவினார்.பசித்தார்க்குதவும் பாத்திரம்
காணாத தன்மையெலாம் மேகலை கூறினாள்.வருந்த வேண்டாம் அப்பாத்
திரம் அறநெஞ்சுடையார் கையில் இருந்தால்தான் உணவு தரும்.கயவர்
கைப்படின் ஏதும் ஈந்திடாத் தன்மையதாகும்.இரண்டொரு நாளில் அப்பாத்
திரம் நின்கை மீளும்.கவலற்க! என அறவணர் ஆறுதல் கூறினார்.வருத்தம்
நீங்கிய மேகலை ம்கிழ்வுடன் தன் தவப்பள்ளி சேர்ந்தாள் ]


நிலைமண்டில ஆசிரியப்பா

காலைக் காட்சி

ஐங்கணை மறவனை வென்றிகொள் தவத்தாள்
செங்கதிர் வானெழச் செலவினைக் கொண்டாள்
பங்கயன் உலகிடைப் பரப்பிய ஒளிக்கதிர்
எனுங்கரத் தாலே எழில்மலர் இதழ்கள்
எனுங்கடை திறக்க இன்னிசை வண்டுகள்                      5
வந்துதேன் உண்டே வளரிசை பரப்பிடும்
முந்தை விதிப்படி முடிந்திட  வாழ்க்கை
வீழும் உயிரென வீழ்ந்த  பழமலர்
சூழும் சோலைச் சுற்றெலாம் பரவும்
பசித்தோர் வருங்கால் செல்வம் படைத்தோர்              10
புசியெனக் கொடுத்த பொங்குநல் உணவை
ஏற்றோர் வதனம் இயைந்த  மலர்ச்சிபோல்
தோற்றிய  தாமரை துலங்குநல் வாவியில்
உள்ளத் தூய்மையை உடலிற் காட்டிக்
கள்ளம் அறுத்துக் கடந்தவர் போல                                 15
வெள்ளை அன்னம் விள்ங்கிட ஆங்கண்
உலையும் வருத்தம் ஓங்கிய மனத்தாள்
அலைவோர் போல அணிசேல் நீந்த
நில்லா தோடும் கல்லா இளைஞர்போல்
பொல்லாக் கடுவன் புறம்புறந் திரிய                               20

meenavan2

unread,
Oct 16, 2014, 1:58:28 AM10/16/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை(தொடர்ச்சி - 15 -பாத்திரம் வருமெனப் பகர்ந்த காதை)

நீலச் சேலை நெறிப்பட  உடுத்த
வாலைக் குமரிபோல் வான்மயிற் கூட்டம்
உதிரா இலைகொள் உயர்மரக் கொம்பரில்
அதிரா வண்ணம் அடியெடுத் தால
செவ்வேட் குமரன் செங்கரத் தேந்தும்                               25
அவ்வேல் போல அரசிலை தோன்ற

அறவணர் தோற்றம்

திகழும் சோலைத் திருவர சின்கீழ்
அகத்திருள் அகற்றி ஆங்கொளி யூட்டும்
புத்த ஞாயிறு பொன்னுல கிடையே
முத்துச் சுடரெரி முகவொளி காட்டி                                  30
வந்ததே  யன்ன வளரருள் வதனம்
இருந்தமை போல் இனிதுவீற் றிருந்த
பெரு ந்தவப் பெரியோன் பேரருட் கடலான்
புனிதநல்  அறவணப் பூரணன் பொன்னடி
இனியபே ரறத்தின் உயிரென இலங்கும்                         35
மேகலை பணிய மென்கர மெடுத்தே

அறவணர் வழ்த்துரை

ஓகைமீக் கூர உயர்முனி வாழ்த்தினன்
மாறாக் கற்பின் மாதவி மகளே
சீராள் தவத்துநீ  செல்லிடம் எல்லாம்
மறத்துறை யாற்றி மலர்தலை உலகில்                          40
அறத்துறை நாட்டி அனைபோல் யார்க்கும்
உண்டி யளிக்கும் உயர்தவச் செல்வி

வருந்துவதின் காரணம் கேட்டல்

meenavan2

unread,
Oct 20, 2014, 2:00:52 AM10/20/14
to mint...@googlegroups.com

கோயிலூர்ப் புராணம்(தொடர்ச்சி - பாத்திரம் வருமெனப் பகர்ந்த காதை)

மண்திணி  உலகின் மாந்தர் போற்றத்
திகழும் மகள்நின் திருநிறை வதனம்
அகத்துயர் காட்டி அல்லல் உரைப்பதேன்                            45
பூந்துணர் இழந்த  பொலங்கொடி போலப்
பாத்திரம் இழந்த பாவையாள் நிற்கும்
நிலையென்? அன்னாய் நிகழ்ந்ததெற் குரையாய்
உலவா அமுதம் உதவும் பாத்திரம்
மெய்வழி போற்றும் மேன்மை  படைத்தவுன்                    50
கைவழி காணாக் காரணம் என்கொல்
என்னக் கேட்க இறைஞ்சி நின்றே
வன்னக் கிளிமொழி மேகலை நவில்வாள்

மணிமேகலை கூற்று

வையத் திருப்பார் வளர்பசி போக்கும்
என்கைப்  பாத்திரம் இருள்செறி இரவில்                             55
கள்வர் கவர்ந்தனர் கண்டிலேன் ஆதலின்
உள்ளம் வருந்தியும்  உயரடி வீழ்ந்தேன்
வெள்ளத் திடையில் விழுப்பொருள் இழந்தோர்
கலங்கவிழ்ந்  துடையக் கலங்கஞர் உற்றோர்
எரியினில் உடைமை எல்லாம் நீத்தோர்                             60
புலம்புதல் போல்மனம் புலம்புற வாடி
வருந்தினேன்  என்றலும்அவ் வான்தவ  முனிவன்

அறவணர் நல்லுரை

திருந்திழாய்  வருந்தேல் தெய்வதப் பாத்திரம்
அறநெஞ் சுடையார் அருட்கரம் ஏறின்
குறையா அமுதம் கொடுக்கும் இயல்பில்                          65
மாறா தியங்கும் மயங்கேல் யார்க்கும்
ஊறு புரிவதே உள்மெனக் கொண்டோர்
கைப்படின் வற்றிக் கஞ்சர் மனம்போல்
எய்ப்புற் றதன்பின் ஈந்திடா தாகும்
என்னுரை கொள்நீ  இரண்டோர் நாளில்                             70
மன்னிய கடிகையுன் மலர்க்கை சேரும்
ஆதலின் செல்க அயர்வுறா திருக்க
மாதவத் துறவிநின் மனக்கவல் தீர்க
என்றுரை செய்ய இருந்தவப் பெரியோன்
நன்றுரை மொழியால் ந்லிவின் நீங்கிய
மேகலை பள்ளி மேவினள் மகிழ்ந்தென்.

15- பாத்திரம் வருமெனப் பகர்ந்த காதை நிறைவுற்றது

meenavan2

unread,
Oct 23, 2014, 2:54:25 AM10/23/14
to mint...@googlegroups.com

கோயிலூரப் புராணம்(தொடர்ச்சி -16-இல்லாப் பழியை இயம்பிய காதை)

16-இல்லாப் பழியை  இயம்பிய காதை

 [அறவணர் அருளுரை கேட்ட மேகலை எவ்வணம் விதியோ
அவ்வணம்  ஆகுக என நினைத்தவாறு ஆயர்பாடி வந்தாள்.வில்
வலனைக் கண்டாள்.மாதவனுக்கு அருளாசி வழங்கினாள்.பாத்
திரம் மறைந்த நிலையைக் கூறினாள்.பின் அங்கிருந்து சென்ற
மேகலையை முன்போல் கயவர் இழித்தும் பழித்தும் இவள்,தான்
பெற்ற குழந்தயை வில்லவனிடம் வளர விடுத்த செய்தி அறிவோம்
எனச் சாற்றினர்.பாத்திரம் போன பரிபவத்தோடு இவர்கள் பழியும்
இன்று சேர்ந்ததே என்றவள் சிந்தை மெலிந்தாள்.பின் தெளிந்து
இவர் பொய் மாறி என்று புனிதராவாரோ எனப்புததர் அற்த்தை
நெஞ்சில் போற்றித் தவப்பள்ளி நோக்கி நடந்தாள்.]

நிலைமண்டில ஆசிரியப்பா

மணிமேகலை மீளல்

தொழுதகை மாதவன் தூயநல் வாயாற்
பழுதில் மொழிகள் பகரக் கேட்டபின்
அவ்வனம் நீங்கிய அருந்தவ மேகலை
எவ்வணம் விதியோ? அவ்வழி ஆகெனச்
செவ்வுளம் பெற்றுச் செலவுற் றனளே                        5

இயற்கைக் காட்சிகள்

பல்பூ மிடைந்த பாங்குடைத் தாகி
நல்லெழில் மாறா நயம்பல காட்டித்
தொல்கவின் மாதர் தூநகை போலப்
பல்லிதழ் காட்டிப் பசுங்கொடி அசையும்
சோலை கடந்து சூலுடைந் தாங்கண்                          10

meenavan2

unread,
Oct 24, 2014, 7:41:39 AM10/24/14
to mint...@googlegroups.com

மாதவ மேகலை(தொடர்ச்சி - இல்லாப்பழியை இயம்பிய காதை)

காலொளி  முத்தம் கக்குமா  றுழுத
சால்வழிச் சாலிகள் தழைத்துச் செழித்து
நிறைமொழி மாந்தர் நிகரிலாத் தவத்து
முறையறிந் தியங்கும் முதன்மைப் பாங்கொடு
பலரறி சபையில் பண்போ டிருக்கும்                                          15
நலமது  போல நற்கவின் காட்டும்
கழனிகள் பிற்படக் கடந்துசென் றேகி
ம்ழைக்குழல் அலைய மகிழ்ந்துநீ ராடும்
கலைமதி முகத்துக் காரிகை யார்தம்
சிலைநிகர்  மேனித் திகழ்நலம் காணத்                                      20
தன்னலைக் கரங்களால் தழுவிய நீத்தம்
புலவ்ர் வாய்த்தமிழ் பொங்குதல்  என்ன
மலிபுனல் வழங்கும் மதகுவாய்த் தாண்டிக்

ஆயர்பாடிக் காட்சி

கரும்புனல் யமுனைக் கரையினில் முல்லை
அரும்புகள் என்ன அவர்நகை காட்டிக்                                       25
குழல்வழி பொங்கும் குளிர்தேன் இசையின்
எழில்வழி  மயங்கியே இருந்தநல் ஆய்ச்சியர்
உயிர்த்துணை ஆகி உலவிய கண்ணன்
உயர்வினைப் போற்றும் உள்ளம் படைத்த
ஆயர் சேரியின் அணித்தே சென்றனள்                                     30
பாயாப் பசுக்களின் பால்வழிந் தோடக்
கண்ட கன்றுகள் கதுமெனத் தாவி
மண்டும் ஆசையில் மடிவாய் வைத்திடச்
சிந்திய பால்படும் இடத்தினிற் சிற்சிலர்
வீழ்ந்தமை கண்டு வேல்விழி மாதர்                                            35 
சூழ் ந்து நகைக்கச் சுற்றமோ டிருந்து

மேகலை வில்லவன் மனை வருதல்

மகிழும்  மனைக்கண் மகிழ்வுடன்  வந்தனள்

Meenavan M

unread,
Apr 7, 2015, 2:23:39 AM4/7/15
to mint...@googlegroups.com
மாதவ மேகலை(தொடர்ச்சி - இல்லாப்பழியை இயம்பிய காதை)

பகரான் செல்வம் ப்டைத்தகோ பாலன்
பொல்லாங் ககற்றப் போந்தவத் தவ்த்தின்
நல்லோன் திருவடி நயப்புடன் பணிய                                    40
வாழ்த்திய மேகலை வந்துதன் அடிதலை
தாழ்த்திய மாதவன் தன்னையும் நோக்கி
உரைபெறு கருணை உள்மீக் கூரத்
திருவாய் திறந்தனள் சேர்ந்தங் கிருப்போர்
அமுதுண் பவர்போல் அகமகிழ்ந் திடவே                               45

மணிமேகலை மாதவனிடம் கூறுதல்

மலர்முகம் நோக்கி மாபெரும் வளஞ்சேர்
உலகிடைத் தோன்றி உய்ரற நெறியின்
பல்வகைத் திறனும் பாங்குடன் கற்றே
செவ்வயின் இலங்கும் சீர்சால் மாதவ
அவ்வயின் வாழ்க அறம்திறம் பாதே                                      50

பாத்திரம் மறைந்தமை கூறுதல்

இனியபே ருலகில் இரும்பசி யாலே
துன்புறு வார்தம் துயரெலாம் தீர்க்கும்
வகையில் அமுதம் வழ்ங்கிய என்பணி
தகையிலாச் சிலரால் தடைப்பா டுற்றது
பேரறம் தொடங்கும் பெற்றியன் நீயெனும்                           55       
ஓர்துணி வாலே உளமகிழ்ந் திடுவேன்
அறத்தின் வளர்ச்சிக்  கடிமுத லான
திறத்தின் பாத்திரம் தீயவர் கவர
வருந்திய யான்தவ வனத்திடை வாழும்
அருந்தவப் பெரியோன் அறவணற் சார்ந்து                          60
பொருந்திய விளக்கம் புகன்றிடக் கேட்டபின்
உயர்பே ரறத்தின் உறுதுணை யாக
விளங்குமுன் வளர்ச்சியின் விருப்பமும் நோக்கக்
கருதியே நின்னைக் காணவந் துற்றேன்
வருவேன் வாழ்கென வாழ்த்தினள் ஆகி                               65
முகில்கிழித் தெழுந்துலா முழுமதி போல
அகமிருந் தெழுந்துசெல் அனைமே கலையைத்

தீயவர் கூறிய பழி

தொடர்ந்தனர் தீயோர் தூயநல் நெறிபோல்
படர்தவ வாழ்க்கைப் பாவைதான் இவ்வண்
உறையும் மாதவன் ஒளிமுகம் காண                                   70
உறுமகிழ் வோடு வருதல்நாம் கண்டோம்
மாரன் கணைக்கோர் மாப்பகை என்றும்
பேராத் தவத்தின் பேரொளி என்றும்
ஊரார் உரைக்கும் உயர்புகழ்க் குரியாள்
கொடுத்த குழவிதன் குலதனம் என்றே                                 75
எடுத்தபேர் அவாவில் ஏற்றதை வளர்க்கும்
வில்லவன் செயல்தன் விளக்கமும் அறிவோம்
பொல்லா நெறியினைப் போக்கப் பிறந்தவன்
நல்லிளங்  குழவிதான் நல்கிய தெங்ஙன்
போற்றா ஒழுக்கம் புரிந்தனள் ஆதலின்                                 80
ஆற்றாப் பழிதனை அடுக்குமென் றெண்ணி
எவரும் அறியா தீன்றதன் குழவியை
இவனிடம் தந்துமுன் ஏகினள் போலும்
முற்றிய பாசம் முகிழ்த்திட லாலே
உற்றிவண் போந்தவன் ஒளிமுகம் காணும்                          85
இயல்பினள் இழிமகள் எனப்பழி ஏற்றி
மயக்கும் கணிகை மரபினள் இவள்தான்
பொய்த்தவ ஒழுக்கம் புரிந்தனள் என்றே
மெய்த்தவ மேகலை மீதுபல் பழியுரை
சாற்றினர் தருக்கினர் சழக்கர் அவ்வுரை                                90

மணிமேகலையின் உள்ள உறுதி

கேட்டவர் கலங்கினர் கேடுசொல் வாயால்
தூற்றிய செய்தியைத் தோகையாள் கேட்டும்
பாத்திரம் இழ்ந்த பரிபவத் தோடு
நாத்தழும் பேறினர் நாட்டுமிப் பழியும்
சேர்ந்ததே என்றவள் சிந்தை மெலிந்தே                                 95
அலைகடல் நீர்தம் அங்கையால் அளப்பார்
கைகொண் டாதவன் கதிர்மறைத் திடுவார்
கோவலன் மேற்பழி குறித்தே உரைத்தார்
நிலைபோல் என்றுதன் நெஞ்சம் தெளிந்து
மெய்மறுத் துரைக்கும் மேவுஞ் சகத்தார்
பொய்மறந் தென்றுதான் புனிதரா வாரென
நாயகன் புத்தன் ந்ல்லறம் நெஞ்சில்
தான்நினைந் தேற்றித் தானடந் தாளென்

16.இல்லாப்பழியை இயம்பிய காதை நிறைவுற்றது




--

Meenavan M

unread,
Apr 26, 2015, 4:41:17 AM4/26/15
to mint...@googlegroups.com
17.கவலுறு மாந்தரைக் கண்ட காதை (மாதவ மேகலை - தொடர்ச்சி)

     தவத்தின் தாயென் விளங்கிய மேகலை ஊரார் பசியை எங்ஙனம் போக்குவேன்? என
வருந்;தினாள்.வினைப்பயனை எண்ணி உள்ளம் தெளிந்தாள்.அப்போது,வயிற்றுப்பசி
வாட்டிட வருந்தியவர், அன்னை மேகலை அப்பசி ஆற்றுவாள் என எண்ணி அவளிடம்
வந்தனர்.பசி போக்குக! என்று வேண்டினர்.அவர்களின் அவலக்குரல் மேகலை மனத்தைத்
தீபோல் சுட்டது.தாங்காது க்ண்ணீர்; பெருக்கிய அவள் அவர்களிடம்,” உக்பசி போக்கும்
என் கைப் பாத்திரம் எங்குற்றதோ? அறியேன்: ஆதலின் அருள்வாரைத் தேடி அங்கண்
செல்க!” என்று அயர்ந்து கூறினாள்.இந்நிலையில் மேகலைபால் வசைபல் கூறி அங்கு
வந்த கயவரை மக்கள் எதிர்த்திட, அவ்ர்கள் அஞ்சி ஓடினர்.மக்கள் மேகலையை வண்ங்கிச்
சென்றனர்.

நிலைமண்டில ஆசிரியப்பா

மேகலை சிறப்பு

உள்மனம் ஒடுங்கி ஒளிர்நுதல் ந்டுவுள்
தன்மனம் நிலைக்கத் தன்கண் தெளிந்தே
உண்ர்ந்;த ஞானம் உலகினர்க் குணர்த்தும்
பணிகொளல் ஒன்றே ப்ண்பதாம் என்று
நீளிடை உலகில் நின்றோர்க்; கெல்லாம்                           5
தாளிணை காட்டும் தனிப்பெருந் தலைவன்
அடியிணை பரவும் அறநெறி யாளர்
முடிபின் வழியில் முனைந்திடு தவத்தின்
தாய்தான் இவ்ளெனத் தரணியோர் போற்றும்
தூயவள் எனஒளி துலங்கும் மேகலை                             10

மணிமேகலையின்   வருத்தம்

ஆர்ப்பெடுத் தவலத் தீக்குழி வீழ்ந்தோர்
ஊர்ப்பழி மிக்கினும் உளமயங் காதே
சிந்தையைப் பகவன் சேவடி சேர்த்து
நொந்திடு மாக்கள் நுவ்லொணாப் பசிநோய்
எங்ஙனம் போக்குவன் என்றினைந் தேங்கித்                    15
தன்வினைப் பயன்எனத் தான்தெளிந் துள்ளம்
புண்ணுற வருந்;தியோர் புறமவள் இரக்க

பசித்தோர் வருத்தம்

வயிற்றெழு தீதான் வாட்டிட் அன்னை
அயிற்றுவள் எனப்பல் நாட்டினர் கூடி
அவள்வரக் காணா அவலம் மீதுற                                     20  
அவளுறை ப்ள்ளி யதன்முன் ஓடி
பசிபசி அன்னையே பார்த்தருள் என்னத்
திசைதிசை எழுகுரல் தீபோல் வாட்டிடக்

மணிமேகலை மனத்துயர்

கலக்கமுற் றுள்ளம்  கண்கள்நீர் பொங்க
என்னுயி ரனையீர் ! ஈங்குள மக்காள்!                                25
துன்னிய பசிநோய்த் துயர்ப்பட் டீர்உம்
கவலை மாற்றும் கைசேர் கடிகை
கவர்ந்துசெல் கொடியர் கைபட் டதனால்
உண்ணீர் துறந்த ஊருணி போன்றேன்
கண்ணீர் அன்றிக் காட்டுதல் அறியேன்                              30
மன்பதைப் பிற்ந்த ம்க்காள் கேளீர் !
உம்கொடும் பசியை ஓட்டுதற் குதவும்
என்கைக் கடிகை எங்கென அறியேன்
என்பணி நின்றதற் கிதுகா ரண்மே
ஆதலின் செல்வீர் அருள்வார்க் கண்டே                            35
வாதனை தீர்ந்து வாழ்வீர் என்ன
வாதனை மிக்கு வருந்திய   மாக்கள்
பணிந்தனர் வருந்;திப் படர்வினை தன்னின்
இனைபடும் போக்கின்னை இதயத் தெண்ணி
அகன்றிட மெலிந்தனள் மேகலை ஆங்கண்                     40

கயவர் கூற்று

பொய்த்தவ வேடம் பூண்டிப் பூமியில்
மெய்த்தவ மாக்கும் மெல்லியல் எனவும்
கள்ள நட்புறு  கர்மப் போக்கு தன்னால் 
பிள்ளைபெற் றதனைப் பேணியே வளர்க்கப்
பிற்ர்கைக் கொடுத்த பேயிவள் எனவும்                           45 
திறத்தை மறந்து தெய்வ்ச் செந்நெறி
மாய்த்து மயக்கும் மங்கையாள் எனவும் 
வாய்க்கே வந்த வசைபல கூறி
எள்ளுதல் கேட்டுலம் எரிந்திட ந்ல்லோர்

மக்களின் எதிர்பார்ப்பு

வாய்மதம் உரைத்த வஞ்சரை நோக்கிப்
பாய்ந்திடச் சினத்தால் பகைத்தவர் அஞ்சிக்
காலெடுத் தோடிக் கடிதினின் மறைய
வருந்தேல் தாயென வந்தவர் தொழுதிடப்
பெருந்தவ நெறியாம் பெற்றியின் நிற்கும்
அருந்தவ நோன்பின் மேகலை தானும்
தந்தவ நெறியைத் தாங்கினள் ஆங்கென்.

பதினேழாம் காதை நிறைவுற்றது.

Meenavan M

unread,
Apr 29, 2015, 9:55:57 AM4/29/15
to mint...@googlegroups.com
18.பாத்திரம் மீளப்பார்த்த காதை (மாதவ மேகலை -தொடர்ச்சி)

      சிந்தாதேவியால் பசிநோய் தீர்க்க அளிக்கப்பட்ட அப்பாத்திரம் கவர்ந்த கயவ்ர்,அதனுள்
கைவிட்டு அள்ளக் கருதினர்.ஆனால் அதனுள் ஒன்றும் தோன்றாநிலைகண்டு களிப்பு மாறி
இன்னலுற்றனர்.அப்பாத்திரத்தை அவள் அறியாவாறு அவள் துயில் கொள்ளும் இரவில்
அவள்பால் வைத்து மீண்ட்னர்.மறுநாள் எழுந்;த மேகலை தன்பக்கத்தில் பாத்திரம் இருக்கக்
கண்டு மகிழ்ந்தாள்.பாத்திரம் மீளுமெனப் பகர்ந்த அறவண்ரின் அருளுரை எண்ணி அகங்களித்தாள்.
பசித்தோர்க்குதவும் பேரறம் இனித்தொடரும் என மகிழ்ந்தாள்.

நிலைமண்டில ஆசிரியப்பா

பாத்திரமும் கயவ்ர் செயலும்

சிந்தா தேவி செழுங்கரத் திருந்தே
இந்;த வையத் திருப்பார் தங்கள்
கடிபசி என்னும் கடுந்தீ களையப்
பிடிசோ றளிக்கப் போந்த பாத்திரம்
கவர்ந்த கயவர் களிமீக் கூர்ந்து                                   5
தவலரும் மகிழ்ச்சி தன்முகம் பூப்பக்
களித்துரை யாடிக் கடல்சூழ் உலகம்
ஒளித்திரள் காண உற்றநல் தவத்துக்
கன்னி மேகலை கடைகழி மகளெனப்
பன்னி யுரைத்துப் பலவா றிழித்துக்                             10
கவர்ந்த கடிகையின் பயன்காண் விருப்பொடு

பாத்திரத்தைப் பயன்படுத்த எண்ணல்

பாத்திரத் துள்ளுறு பருக்கையைக் காணும்
ஆத்திர்த் தோடதை அள்ளக் கருதினர்
கையினால் அந்தக் கடிகையைத் தடவ
மைபடர் மனத்தார்க் குதவா அறிவுபோல்                  15
ஊர்வளைத் திருக்கும் உதவாக் கடல்போல்
நீர்சுமந் திருப்பினும் பெய்யா முகில்போல்
ஓங்கி வலரினும் உதவாச் சாலிபோல்
ஆங்கப் பாத்திரம் அவர்க்குத வாது
வெற்றென இருக்க வியப்புடன் நோக்கி                      20
மற்றவர் அதனை மாற்றியும் கவிழ்த்தும்
கொட்டியும் நிமிர்த்தியும் குலுக்கி யசைத்தும்
தட்டியும் கடிகை தாரா நிலையைக்
கண்டவர் தங்கள் களிப்பகன் றின்னல்
கொண்டவ ராகிக் குழிவீழ் கரிபோல்                            25
மயங்கித் தவித்தனர், மற்றக் கடிகையை

பாத்திரத்தை மீள வைத்தல்

அயரும் மேகலை அற்றம் நோக்கி
வைக்கக் கருதி வளர்மதி  அவிந்த
மைக்கருக் கிருட்டில் மாற்றார் எவரும்
அறியா வண்ணம் அறப்பெரு மாட்டி                         30
உறையும் காவிடை நுழைந்துள் புக்கு
மாதவச் செல்வி மருங்கு வைத்தனர்
தீதறு மனத்தர் திரும்பியே தம்வழிச்
சென்றபின் காலைச் செங்கதிர்ப் புலரி
நன்றறம் செய்ய நாடிய தவத்தோர்                           35
Reply all
Reply to author
Forward
0 new messages