சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சியும் ஆட்டிறைச்சியும் பற்றி ... (meat consumption in cankam texts)

1,078 views
Skip to first unread message

rajam

unread,
Mar 21, 2015, 8:22:50 AM3/21/15
to mintamil, Themozhi, hol...@gmail.com
நண்பர்களே, வணக்கம்.

மாட்டிறைச்சி பற்றி இன்னோர் இழை 


இடியப்பக்குழலாகிப் பின்னிவருகிறது!! யான் சொல்ல நினைக்கும் கருத்துகள் அங்கே புலப்படாமல் பின்னிவிடும் என்பதால் இந்தத் தனியிழை. 

சங்க இலக்கியம் தரும் தகவல்களை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 

++++++++++++

அந்த இழையில் நான் சொன்னது:

///அதற்காக ... குறிப்பிட்ட மக்களை இன்றளவும் புறப்படுத்துதல் அசிங்கம், மகா அசிங்கம். உமக்குக் கேவலம். 
/// 


என் கருத்தைத் தவறான இடத்தில் பதிந்திருக்கிறேன். அது செல்வனைக் குறிப்பதாக அமைந்துவிட்டமைக்கு வருந்துகிறேன். செல்வன் என்னை மன்னிக்கவும். என்னைக் காயப்படுத்தாத ஒரு நல்ல உள்ளத்தைத் தெரியாமல் காயப்படுத்திவிட்டது என் தவறு

[நானாக, காரணமில்லாமல், ஒருவரையும் காயப்படுத்த மாட்டேன். ஆனால், என்னைக் காயப்படுத்துகிறவர்களைக் காயப்படுத்தத் தயங்கமாட்டேன். அது அமெரிக்க நாட்டு வாழ்க்கை எனக்குத் தந்த பட்டறிவு. மதுரையில் இருந்த “சாது” இங்கே மிரண்டுவிட்டாள்.]

உமக்குக் கேவலம்” என்பதை ஆங்கிலத்தில் நான் எழுதியிருந்தால் சரியாக வெளிப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். “universal you” என்பார்களே அந்த மாதிரி நினைத்தது தமிழில் தவறாக எடுத்துக்கொள்ளும் நிலையைத் தந்திருக்கிறது. வருந்துகிறேன்.

++++++++++++

சரி, குறிப்பாக … சங்க இலக்கியம் காட்டும் சமுதாயத்தில் ...

1. மாட்டிறைச்சி தின்னவர்கள் யார் யார்? 

2. ஆட்டிறைச்சி தின்னவர்கள் யார் யார்?

3. இறைச்சி தின்னவர் “தீண்டத்தகாதவர்களாக”க் கருதப்பட்டார்களா? [இது மிக முக்கியம்.]

என்று இலக்கியச் சான்றுகளுடன் விளக்குங்களேன். 

நான் கேட்பதை விளையாட்டாக நினைக்கவேண்டாம். இந்த மாதிரி அலசிப்பார்ப்பது சங்கப் பாடல்கள் காட்டும் சமுதாயத்தை நடுநிலையிலிருந்து பார்க்க உதவும். இலக்கியத்தை அப்படி விளங்கிக்கொள்வது இன்றியமையாதது. 

நன்றியுடன்,
ராஜம்




Nagarajan Vadivel

unread,
Mar 21, 2015, 11:22:05 AM3/21/15
to மின்தமிழ்

2015-03-21 17:52 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
1. மாட்டிறைச்சி தின்னவர்கள் யார் யார்? 

2. ஆட்டிறைச்சி தின்னவர்கள் யார் யார்?

3. இறைச்சி தின்னவர் “தீண்டத்தகாதவர்களாக”க் கருதப்பட்டார்களா? [இது மிக முக்கியம்.]

​என்னால் இப்போது முதல்நிலை ஆவண ஆதாரங்கள் அளிக்கவியலது.  முதல்கேள்விக்கு நீங்கள் ஒரு தெளிவான விளக்கம் அளிக்கவேண்டியது அவசியம்.   மாட்டிறைச்சி என்று நீங்கள் குறிப்பிடும்போது அது பசுவை மட்டும் குறிப்பதா அல்லது எருமையையும் குறிக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்

இறைச்சி தின்ன்வர்கள் யார் என்ற கேள்விக்கு ஆட்படபவர்கள் இரு பிரிவினர் 
ஒரு பிரிவினர் வேளாளர்கள்
மற்றொரு பிரிவினர் பிராமணர்கள்

வேளாளர்கள் உழவை அறிமுகப்படுத்துவதற்குமுன் குமுகம் விலங்குகளைக் கொன்று அதையே உஅணவாக உண்பது தவிர்க்கவியலாதிருந்ததால் அனைவரும் இறைச்சி உண்டவர்கள் என்றே கருத வேண்டும்

வேளாளர்கள் வெள்ளாமை செய்து அதிக உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தபின் உண்ணும் உணவில் விலங்கு தவிர னரக்கறி உணவுவகைகள் கிடைக்கும் சூழல் உருவாகியிருந்தது

இங்கிருந்து படித்ததை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்











​மறைமலையடிகளும் சுவாமி விவேகானந்தரும் ​அம்பேத்காரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.  அவர்களின் கருத்துக்க்ள் இனம், உயர்வு போன்ற பேதங்கள் இறைச்சி மரக்கறு உணவு உண்பதை வைத்து எடைபோடப்படுவதும் அதையே அடிப்படையாகக் கொண்டு இறைசி உண்ட குழு தங்களின் கடந்த காலத்தை மறைத்துத் தங்களை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தினர் என்ற பின்புலத்தில் மேலே எழுப்பிய கேள்விகளுக்கு எளிதில் விடை காண இயலும்

சர்க்கரைச்சீமான்

செல்வன்

unread,
Mar 21, 2015, 1:12:58 PM3/21/15
to mintamil
வணக்கம் அம்மா.

சங்கப்பாடல்களில் இறைச்சி உண்ணும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்ததாக தெரிகிறது. பலவகை மிருகங்கள் பன்றி, மான், ஆடு உட்பட மக்களால் உண்ணபட்டுள்ளன .அவ்வையார் போன்ற தமிழ்புலவர்கள் புலால் உணவு உண்டுள்ளதை சங்கபாடல்கள் சுட்டுகின்றன.

புலவர்களுக்கு மன்னர்கள் புலால் உனவை வயிராற உண்ணகொடுத்துள்லார்கள். அவ்வைக்கு அதியமான் புலால் உணவளித்தார். கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியை வயிராற பரிமாறினார்

இழுதினன்ன வானினக் கொழுங்குறை

அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி (புறநானூறு 150)

புலால் உணவை பிராமணர்களும் உண்டார்கள் என ஒரு சங்கபாடல் கூறுகிறது

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

இறைச்சிகளில் சுவையுள்ள இறைச்சியான உடும்பின்கறியை அதன் உயர்வைப்பொருட்டு அதை நாய்கவ்வியிருந்தாலும் அதைப்பொருட்படுத்தாது பார்ப்பனரும் உடும்பு உண்பார்கள் என்கிறது இப்பாடல்

அதுபோக சங்ககால தமிழகத்தில் யாகங்கள், வேள்விகள் நடந்தன. வேள்விகளில் பசுவைப்பலியிடுதலும், அப்பசுவின் இறைச்சியை யாகங்கள் நடத்தும் பிராமனர்கள் உண்பது மரபு. சங்க இலக்கியங்களில் அப்படி அவர்கள் உண்டார்கள் எனக்குறிப்பு இல்லை. ஆனால் வேள்விகளை நடத்தும் மரபு அதுவே. பசுவை வேள்விகளில் பலியிடம் நின்றது எக்காலம், சங்ககாலம் என்பது எக்காலம் என்பது போன்ற ஆராய்ச்சிகளில் பலனில்லை. 

பாணர், மழவர் போன்றோர் பீஃப் உண்டதை காட்டும் பாடல்களைக்கண்டோம். அது தவிர்த்து ஏறுதழுவுதலில் இறங்கின மாடுகளும் கொல்லபட்டு அவற்றின் தோல் முரசடிக்க பயன்பட்டதை புறநானூறு சுட்டிகாட்டுகிறது

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (288)

ஆக பண்டைய தமிழகத்தில் புலால் உணவு பிரதான உனவாக இருந்தது, புலவர்கள், மன்னர்களும், பிராமணர்கள், பாணர்கள், மழவர்கள், பொதுமக்கள் என அனைவரும் விரும்பி உன்ட உணவாக புலால் இருந்தது. பசுவின் இறைச்சியும் யாகங்களிலும், பொதுவாக (ஆனால் அரிதாக) உண்னபட்டது. தெய்வங்களுக்கு மழவர்களால் பசு பலியிடபட்டது. முரசடிக்க, தோலுக்கு என பசுக்கள் கொல்லபட்டுகொண்டுதான் இருந்தன. அப்பசுக்களின் இறைச்சியை பாணர்கள் உண்பதும் வழக்கம்.இறைச்சி உன்ட புலவர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் தீன்டதகாதவர்களாக எப்படி கருதபட்டிருக்க முடியும்? பொதுவான சமூகமே இறைச்சியை விரும்பி உண்டது. ஆக இரைச்சி அன்று தீன்டாமையை தீர்மானிக்கவில்லை


இது நான் படித்தவரை புரிந்துகொன்டது. என் தமிழறிவு மிக குறைவு என்பதால் இதில் தவறிருந்தால் சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

rajam

unread,
Mar 21, 2015, 1:17:28 PM3/21/15
to mint...@googlegroups.com
மறுமொழி மடலுக்கு மிக்க நன்றி!

நான் ஒரு கேள்வி கேட்டா என்னையே திருப்பிக் கேள்வி கேக்கறதா! சரி சரி, "வினாவும் செப்பல் வினா எதிர் வரினே" என்று தொல்காப்பியரே சொன்னப்புறம் வினாவை எதிர்கொள்ளலும் எமது வினையே!

என் முதல் கேள்விக்குக் காரணமே நம் செல்வன் விலாவாரியாகச் சொன்னதுதான்:

///சங்கப்பாடல்களில் பாணர்கள் அப்படி மாடுகளை ஓட்டிச்சென்று தோலை எடுத்து வாத்தியகருவி செய்ததாகவும், இரைச்சியை உன்டதாகவும் குறிப்புள்ளது///

///சங்க இலக்கியங்களில் மழவர்கள், பாணர்கள் மாடுகளை உண்டதற்கான பாடல்கள் உள்ளன.///

செல்வன் சொன்ன கருத்து எங்கேயிருந்து வந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது. எந்தப் பாடல்களில் என்னென்ன சொல்லியிருக்காங்க என்பதும் எனக்கு(ம்) தெரியும். ஆனாலும் மற்றவர்கள் எதெயெத எப்படியெப்படிப் புரிஞ்சிக்கிட்டிருக்காங்க-னு தெரிந்துகொள்ள விருப்பம். 

+++++++++++++++++++

Do we accept a doctoral thesis without substantiating one’s claims? In your (in the universal sense of the word 'you') field, which is not Tamil, do you accept flippant statements in a student’s term paper or thesis? Why is it different for Tamil?

இணையக்குழுமங்களில் பல கருத்துகள் துல்லியமாகப் பதிவுபெறுவதில்லை. ஆங்கிலத்தில் சொல்லப்போனால் Many statements are flippant and are not true to the original literature. 

இந்த வழியில், சும்மா ஒரு வாதத்துக்காக செல்வனும் போகத்தொடங்கிவிட்டாரோ என்று எனக்குத் திகிலாக இருந்தது. 

இளைய தலைமுறைக்கு மின்தமிழ் உதவவேண்டும் என்று சுபா அடிக்கடி நினைவுபடுத்திவருகிறார்கள். ஆனால் அதே சமயம் பலரும் தங்கள் பதிவுகள் அந்த இளைதலைமுறைக்கு உதவுமா என்று நினைத்துப் பதிவதில்லை.

அதுவும் சங்க இலக்கியத்தைப் பற்றி நாம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். Secondary, tertiary sources-ஐ வைத்துக்கொண்டு தனக்கு வேண்டுகிறபடியெல்லாம் கருத்துகளை வளைத்து வழவழா கொழகொழாவென்று கவனத்தைத் திருப்பிப் பேசுவது நல்லதில்லை.

++++++++++++++++++

தயவுசெய்து என் கேள்விக்கான விளக்கத்தைக் கொடுக்க நண்பர்களுக்குத் தயக்கமிருக்காது என்று நம்புகிறேன். எனக்குத் தெரியாத புதிய செய்தியாக இருந்தால் நானும் கற்றுக்கொள்வேன்.

செல்வன் சொன்னதும் என் கேள்விகளும்  ... 

///சங்கப்பாடல்களில் பாணர்கள் அப்படி மாடுகளை ஓட்டிச்சென்று தோலை எடுத்து வாத்தியகருவி செய்ததாகவும், இரைச்சியை உன்டதாகவும் குறிப்புள்ளது///

1. பாணர்கள் மாடுகளை ஓட்டிச்சென்று  (எந்தப் பாடல்களில்?)

2. தோலை உரித்து (எந்தப் பாடல்களில்?)

3. வாத்தியக்கருவி செய்ததாகவும் (எந்தப் பாடல்களில்?)

4. இறைச்சியை உண்டதாகவும் … (எந்தப் பாடல்களில்?)

ஆகிய கூற்றுகளுக்குச் சங்க இலக்கியச் சான்று கொடுத்தால் கற்றுக்கொள்வேன்

எந்தெந்த உரையாசிரியர் என்னென்ன சொல்லியிருக்கார் என்பதும் அறிவேன். நான் வேண்டுவது, மூலநூலைப் படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்உரையாசிரியர்களின் உரை தேவையில்லை. [யானும் 'பழம் தின்னு கொட்டை போட்ட'வளே! என்னிடம் அகராதிகளையும் நிகண்டுகளையும் உரையாசிரியர்களையும் பற்றிக் கதைக்கவேணாம்.]

எடுத்துக்காட்டாக ... 

1. பாணர்கள் 'மாடுகளை ஓட்டிச்சென்றதுக்கு' எந்தப் பாடலில் சான்று இருக்கு? 

2. 'தோலை உரித்ததுக்கு' எந்தப் பாடலில் சான்று இருக்கு?

3. 'வாத்தியக்கருவி செய்தது'க்கு எந்தப் பாடலில் சான்று இருக்கு?

4. 'இறைச்சியை உண்டது'க்கு எந்தப் பாடலில் சான்று இருக்கு?

இந்த மாதிரிக் கேள்விகளைத்தானே அவரவர் துறையில் அவரவர் படிக்கும் பாடத்தில் கேட்பார்கள்? இணையத்தமிழ் என்று வரும்போது மட்டும் துல்லியம் வேணாமா? 

+++++++++++++++

அடுத்து ... 

மறைமலையடிகள், சுவாமி விவேகானந்தர், அம்பேத்கர் ஆகியவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. ஆனால், அந்தக் கருத்துகளைப் பண்டை இலக்கியத்தின்மேல் பொருத்திப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் ஆய்வு அணுகுமுறை வேறுபட்டது. 

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... my approach is from left-to-right just as we write; that is, from 'nothing to temporal development relating to time.'

+++++++++++++++

மிகவும் முக்கியமானது என் மூன்றாம் கேள்வி: இறைச்சி தின்னவர் “தீண்டத்தகாதவர்களாக”க் கருதப்பட்டார்களா?

இதை எத்தனை முறை கேட்டாலும் விடை வருவதில்லை!!!

+++++++++++++++

சார்சு ஆர்த்து (கிரந்தமில்லாமல் எழுதப்பட்ட பெயர்) என் நெருங்கிய நண்பர். ஆனால் அவர் சொல்லிவைத்த சில கூற்றுகளில் எனக்குக் கருத்து வேறுபாடு: 

1. Panans (பாணர்) are untouchables (that is, in சங்கப் பாடல்களில்).

2. "PaaNan who is so low they give him a calf to eat" 

பாணர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றோ பாணர்கள் இழிந்தவர்கள் என்றோ சங்கப் பாடல்களில் சான்று இல்லை. உங்களுக்குக் கிடைத்தால் எனக்குத் தெரிவிக்கவும். புதிதாக அறிந்துகொள்ளுவேன். 

மேலும் "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்" என்று அமைந்த குழுக்கள் வள்ளல்களை நாடித் திரிந்த காரணத்தால் அவர்களைத் "தாழ்ந்தவர்கள்/தீண்டத்தகாதவர்கள்" என்று பட்டம் கட்டும் நிலையும் நேரியதாகத் தோன்றவில்லை.

அந்தப் பண்டைத் தமிழ்க் குழுக்கள் -- கூத்தர், பாணர், பொருநர், விறலிய்ர், அகவர், கிணைஞர் ... -- இன்றேல் ... இன்று 'மேட்டுக்குடி மக்கள்' என்று பெயர்பெற்ற நிலையில் அந்தப் பண்டைத் தமிழ்க் குழுக்களின் படைப்பை விலைப்படுத்த முடியாது. 

பாவம் அவர்கள் பண்டைத்தமிழகத்தில் தம் பிழைப்புக்காகத் தம் கலையை 'விற்றார்கள்.' இன்று நாம் அவர்களுடைய படைப்பை "இயல், இசை, நாடகம்" என்ற பொட்டலத்தில் விற்கிறோம்.

சற்றே நினைத்துப் பார்க்கவும்.

வருத்தத்துடன்,
ராஜம்

rajam

unread,
Mar 21, 2015, 7:23:17 PM3/21/15
to mint...@googlegroups.com
வணக்கம் செல்வன். மடலுக்கு மிக்க நன்றி. 

என் குறிப்புகள் கீழே இடைச்செருகலாக.



On Saturday, March 21, 2015 at 10:12:58 AM UTC-7, செல்வன் wrote:
வணக்கம் அம்மா.

சங்கப்பாடல்களில் இறைச்சி உண்ணும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்ததாக தெரிகிறது. பலவகை மிருகங்கள் பன்றி, மான், ஆடு உட்பட மக்களால் உண்ணபட்டுள்ளன .


ஈசல், நண்டு, மீன் ... எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளவும். 

 
அவ்வையார் போன்ற தமிழ்புலவர்கள் புலால் உணவு உண்டுள்ளதை சங்கபாடல்கள் சுட்டுகின்றன. 

பாடல் வரிகளைச் சுட்டவும்.

புலவர்களுக்கு மன்னர்கள் புலால் உனவை வயிராற உண்ணகொடுத்துள்லார்கள். அவ்வைக்கு அதியமான் புலால் உணவளித்தார். கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியை வயிராற பரிமாறினார்

இழுதினன்ன வானினக் கொழுங்குறை

அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி (புறநானூறு 150)

புலால் உணவை பிராமணர்களும் உண்டார்கள் என ஒரு சங்கபாடல் கூறுகிறது

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

மேற்காட்டிய பாடல் சங்கப்பாடல் இல்லை. சங்க மருவிய காலத்துப் பாடல். அதைத் தெளிவாகச் சொல்லவும்.


இறைச்சிகளில் சுவையுள்ள இறைச்சியான உடும்பின்கறியை அதன் உயர்வைப்பொருட்டு அதை நாய்கவ்வியிருந்தாலும் அதைப்பொருட்படுத்தாது பார்ப்பனரும் உடும்பு உண்பார்கள் என்கிறது இப்பாடல்

அதுபோக சங்ககால தமிழகத்தில் யாகங்கள், வேள்விகள் நடந்தன.

இதுக்கும் பாடல் சான்றுகள் கொடுப்பது நல்லது.

வேள்விகளில் பசுவைப்பலியிடுதலும், அப்பசுவின் இறைச்சியை யாகங்கள் நடத்தும் பிராமனர்கள் உண்பது மரபு.

எந்த மரபு என்பதையும் விளக்கவும்.


சங்க இலக்கியங்களில் அப்படி அவர்கள் உண்டார்கள் எனக்குறிப்பு இல்லை.

தெளிவுக்கு மிக்க நன்றி!

 
ஆனால் வேள்விகளை நடத்தும் மரபு அதுவே. பசுவை வேள்விகளில் பலியிடம் நின்றது எக்காலம், சங்ககாலம் என்பது எக்காலம் என்பது போன்ற ஆராய்ச்சிகளில் பலனில்லை. 

சரி, அது போகட்டும். எனக்கும் எது எக்காலம் என்ற ஆய்வுகளில் என்னைத்தொலைக்க விருப்பமில்லைதான். 
 

பாணர், மழவர் போன்றோர் பீஃப் உண்டதை காட்டும் பாடல்களைக்கண்டோம்.

மழவர் "பீஃப்" உண்டது தெளிவு. பாணர் உண்டது என்ற கூற்றைப் பற்றி எனக்குக் குழப்பம்.


அது தவிர்த்து ஏறுதழுவுதலில் இறங்கின மாடுகளும் கொல்லபட்டு அவற்றின் தோல் முரசடிக்க பயன்பட்டதை புறநானூறு சுட்டிகாட்டுகிறது

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (288)

இந்தப் பாடலில் "ஏறுதழுவுதலில் இறங்கின மாடுகள்" பற்றி எங்கே குறிப்பு?
 

ஆக பண்டைய தமிழகத்தில் புலால் உணவு பிரதான உனவாக இருந்தது, புலவர்கள், மன்னர்களும், பிராமணர்கள், பாணர்கள், மழவர்கள், பொதுமக்கள் என அனைவரும் விரும்பி உன்ட உணவாக புலால் இருந்தது.

இது சரியே.

பசுவின் இறைச்சியும் யாகங்களிலும், பொதுவாக (ஆனால் அரிதாக) உண்னபட்டது.

அட, இதென்ன திடீர்ச்செய்தி!!
 
தெய்வங்களுக்கு மழவர்களால் பசு பலியிடபட்டது.

அட, இதென்ன திடீர்ச்செய்தி!!

முரசடிக்க, தோலுக்கு என பசுக்கள் கொல்லபட்டுகொண்டுதான் இருந்தன. அப்பசுக்களின் இறைச்சியை பாணர்கள் உண்பதும் வழக்கம்.

I see!! உங்க கிட்ட யாராச்சும் சங்கத்திலெர்ந்து வந்து இந்தப் பாணர்களின் 'வழக்கம்' பற்றிய செய்தியை நேரடியாச் சொன்னாங்களா, இல்லெ எங்கேயோ கேட்டதெ இங்கெ சொல்றீங்களா? 

 
இறைச்சி உன்ட புலவர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் தீன்டதகாதவர்களாக எப்படி கருதபட்டிருக்க முடியும்?
 
பொதுவான சமூகமே இறைச்சியை விரும்பி உண்டது. ஆக இரைச்சி அன்று தீன்டாமையை தீர்மானிக்கவில்லை

அதானே!!! செல்வனே, அப்படியே போய் மத்த மக்களுக்கும் ஒங்க கருத்தெச் சொல்லுங்க, மகராசனா இருப்பீங்க!!!  


இது நான் படித்தவரை புரிந்துகொன்டது. என் தமிழறிவு மிக குறைவு என்பதால் இதில் தவறிருந்தால் சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்


இப்போதைக்கு நான் சொல்ல விரும்புவதில் கொஞ்சம் சொல்லிவிட்டேன். பிற பின்னர்.

கருத்துடன்,
ராஜம் 

செல்வன்

unread,
Mar 21, 2015, 9:03:30 PM3/21/15
to mintamil

2015-03-21 18:23 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
பாடல் வரிகளைச் சுட்டவும்.

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,


இதுக்கும் பாடல் சான்றுகள் கொடுப்பது நல்லது.

சங்ககால மன்னர்களின் பெயர்களே பல்யாகசாலை முதுகுடுமிபெருவழிதி என்றுள்ளது


காடு என்றா நாடு என்று ஆங்கு
நீர்-ஏழின இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாணப் பலவேட்டும்
மண் நாணப் புகழ் பரப்பியும்…புறநானூறு (384: 15)

தமிழ்பல்கலைகழக விரிவிருரை

காட்டுள் எழுவகைப்பட்டபசுவானும் நாட்டுள் எழுவகைப்பட்ட பசுவானும் முட்டாதுநீர் நாணும் பரிசு நெய்யை வழங்கியும் எண்ணிறப்பப்பலவேள்விகளை வேட்டும் மண்பொறாமற் புகழைப் பரப்பியும்அவ்வாறு பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்விமுடிபாகியபெரிய காலத்து விருந்தினரைப் பொருந்திய நினதுதிருந்திய மேம்பட்ட நிலைமையை எந்நாளும் காண்பேமாக,யாங்கள்

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன் (புறம் 397:20-21)


வேதங்களில் கூறப்படும் வேள்விகளில் மூன்றுவகை தீக்கள் உண்டு (ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி). மூவேந்தரும் கூடியிருப்பதை கண்டு மகிழ்ந்த அவ்வையார் அவர்களை அந்த மூன்று வேள்வித்தீக்கு ஒப்பிட்டுப்பாடுகிறார்

ஒன்றுபுரிந்தடங்கிய விருபிறப்பாளர்
முத்தீப்புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் (புறம்: 367: 12-14)


அட, இதென்ன திடீர்ச்செய்தி!! (தெய்வத்துக்கு பசுவைப்பலியிடல்)

வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயநிரை தழீஇய கடுங்கண் 1மழவர்
அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்

5.    கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்

தமிழ் பல்கலைகழக உரை

தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் - தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து - கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் - உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட - அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய


see!! உங்க கிட்ட யாராச்சும் சங்கத்திலெர்ந்து வந்து இந்தப் பாணர்களின் 'வழக்கம்' பற்றிய செய்தியை நேரடியாச் சொன்னாங்களா, இல்லெ எங்கேயோ கேட்டதெ இங்கெ சொல்றீங்களா?

தமிழ்பல்கலைகழக தளத்தில் கொடுத்துள்ள உரையின்படி அத்தகவலைகூறினேன். அவர்கள் தவறாக விளக்கம் அளித்திருந்தால் நான் பொறுப்பல்ல.


என்னால் இப்போது முதல்நிலை ஆவண ஆதாரங்கள் அளிக்கவியலது.  முதல்கேள்விக்கு நீங்கள் ஒரு தெளிவான விளக்கம் அளிக்கவேண்டியது அவசியம்.   மாட்டிறைச்சி என்று நீங்கள் குறிப்பிடும்போது அது பசுவை மட்டும் குறிப்பதா அல்லது எருமையையும் குறிக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்

தமிழ்பல்கலைகழக உரையில் இப்பாடல்களில் வரும் "ஆ" என்பதன் விளக்கமாக "பசு" எனத்தான் கொடுத்துள்ளார்கள். ஆக இது பசுவைத்தான் குறிக்கும் என்றே கருதுகிறேன்


பயம் நிரை தழீஇய கடுகண் மழவர் - பாலினையுடைய பசுவினத்தைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர்

மகாபாரதத்திலும் ஆநிரை கவர்தல் கூறபடுகிறது. எதிரிநாட்டு மன்னனுடன் போர் புரிவதெனில் அவன் நாட்டில் புகுந்து பால் தரும் பசுக்களை கைப்பற்றுதலே போர் அறிவிப்பாகும். விராடனுடன் போரிட முனைந்த துரியோதனாதியர் ஆநிரை கவர்தல் செய்தே அவனைப்போருக்கு இழுத்தார்கள். அதே போல் வெட்சிப்பூக்களை அணிந்த மழவர் பால்தரும் பசுக்களைக்கைப்பற்றி செல்லும் வழியில் வேப்பமரத்தடியில் அமர்ந்த தெய்வத்துக்கு கொழுப்பு மாடு ஒன்றைப்பலியிட்டு இரத்தத்தை படையலிட்டு தாமும் அந்த இறைச்சியை உண்டார்கள் என்பதே நான் இதில் புரிந்துகொள்வது.ஆக இதில் வரும் ஆவென்பது எருமையாக இருக்கும் வாய்ப்புக்குறைவே

--

Nagarajan Vadivel

unread,
Mar 21, 2015, 9:21:07 PM3/21/15
to மின்தமிழ்
நான் கேட்பது யாதெனில் மானுடவியல் அடிப்படையில் மக்களின் உணவுப்பழக்கத்துக்கு இறைச்சி உணவாகக் கொள்ளும்போது எருமையின் நிலை  என்ன?  பசுவைமட்டும் உயர்த்திப் பேசுவது ஒரு நடுநிலை நோக்கைத் தொலைத்துவிடுகிறதே
பசு பாலுக்காக வளர்க்கப்படதல்ல அது கன்றுகளுக்குப் பால்கொடுக்கவும் காளைகளை ஈனுவதற்கு மட்டுமே வளர்க்கப்பட்டது எனக் கருதலாமா?
எருமையின் நிலை பழந்தமிழகத்தின் எவ்வாறு இருந்தது.  தோடர்கள் எருமையைப் போற்றிப்பாதுகாத்தனர்.  எருமையே மாடு அல்லது செல்வம் என்றும் திருமணங்களில் எருமைகள் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் மரணமடைந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் எருமைச் சின்னம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதில் வைத்து எரியூட்டும் வழக்கும் இருந்ததாகக் குறிப்புள்ளதே
பசு மட்டும் கொன்றால் பாவம் எருமையைக் கொன்றால் பாவம் இல்லை என்று சான்றுள்ளதா?
எருமைகள்பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்புக்ளே இல்லையா?
சர்க்கரைச்சீமான்

--

rajam

unread,
Mar 21, 2015, 9:54:03 PM3/21/15
to mint...@googlegroups.com
///பசு மட்டும் கொன்றால் பாவம் எருமையைக் கொன்றால் பாவம் இல்லை என்று சான்றுள்ளதா?//

எனக்கும் தெரியணும்.


///நான் கேட்பது யாதெனில் மானுடவியல் அடிப்படையில் மக்களின் உணவுப்பழக்கத்துக்கு இறைச்சி உணவாகக் கொள்ளும்போது எருமையின் நிலை  என்ன? ///

நும் கேள்விக்கு நன்றி, நன்றி! எனக்கு விடை தெரியாது. 


///எருமைகள்பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்புக்ளே இல்லையா?///

உண்டே உண்டு!!! நம் செல்வியர் தேமொழி, மேகலை, பார்வதி, மலர்விழி மங்கை + பிறர் கூடிவந்து விளக்கம் சொல்லுவார்கள்.

ஆனாலும் … ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் “தீண்டத்தகாதவர்கள்” என்று யார் எப்போது குறிப்பிடத் தொடங்கினார்கள் என்று தெளிவாகத் தெரிவிப்பது இளைய தலைமுறைக்கு உதவும்!

நன்றியும் கருத்தும் தொடரும்,
ராஜம்

தேமொழி

unread,
Mar 21, 2015, 11:34:31 PM3/21/15
to mint...@googlegroups.com


On Saturday, March 21, 2015 at 6:54:03 PM UTC-7, rajam wrote:

ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் “தீண்டத்தகாதவர்கள்” என்று யார் எப்போது குறிப்பிடத் தொடங்கினார்கள் என்று தெளிவாகத் தெரிவிப்பது இளைய தலைமுறைக்கு உதவும்!


எனக்கும் இக்கேள்விக்கு விடை வேண்டும்.... 

.... தேமொழி 
 

Malarvizhi Mangay

unread,
Mar 22, 2015, 12:32:44 AM3/22/15
to mint...@googlegroups.com

ராஜம் அம்மா வந்து விட்டேன். சங்கஇலக்கியத்தில் எருமை எனத்
தேடினால் கிடைக்காது.மேதி எனத் தான் குறிப்புகள் கிடைக்கும்.இப்போது திருப்பரங்குன்றத்தில் திருமணவீட்டில் இருக்கிறேன்.
செம்மொழி கருத்தரங்கம் ஒன்றிற்காகத் தயார் செய்த கட்டுரையில் குறிப்பு உள்ளது  .
பின்னர் அனுப்பிகிறேன்.

--

S NEELAKANTAN

unread,
Mar 22, 2015, 12:39:55 AM3/22/15
to mintamil
இளைய தலைமுறையினருக்கு இந்த வார்த்தையின் பொருள் புரியாமலி ருப்பது தான் நல்லது பழைய குப்பையை கிளறி கிளறி  என்ன கிடைக்கப்போகிறது . ஒன்று புரிய வையுங்கள் இந்த கால இளைய தலைமுறையினர் ஜாதி மதம் இவைகளை பற்றி கவலைப்படுவதில்லை . அவர்களுடை ய நோக்கம் குறிக்கோள்  எல்லாம் வாழ்க்கையில் எப்படி சீக்கிர ம் முன்னேறுவது அவ்வளவு தான் . அவர்கள்  ஜாதியை யோ யோ மதத்தையோ பார்த்து காதலிப்பதில்லை நண்பர்களின் ஜாதியை / மதத்தைப்பற்றி கூட கவலைப்படுவதில்லை . அந்த நல்ல மனத்தை விவாதம் என்ற பேரில் குழ ப்பிவிடாதீர்கள் .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Suba.T.

unread,
Mar 22, 2015, 6:46:23 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-22 2:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நான் கேட்பது யாதெனில் மானுடவியல் அடிப்படையில் மக்களின் உணவுப்பழக்கத்துக்கு இறைச்சி உணவாகக் கொள்ளும்போது எருமையின் நிலை  என்ன?  பசுவைமட்டும் உயர்த்திப் பேசுவது ஒரு நடுநிலை நோக்கைத் தொலைத்துவிடுகிறதே
பசு பாலுக்காக வளர்க்கப்படதல்ல அது கன்றுகளுக்குப் பால்கொடுக்கவும் காளைகளை ஈனுவதற்கு மட்டுமே வளர்க்கப்பட்டது எனக் கருதலாமா?
​உண்மையிலேயே இந்தp பகுதியை வாசித்து சிரித்து விட்டேன். அதன் உட்பொருளை நினைத்து :-)​

 
எருமையின் நிலை பழந்தமிழகத்தின் எவ்வாறு இருந்தது.  தோடர்கள் எருமையைப் போற்றிப்பாதுகாத்தனர்.  எருமையே மாடு அல்லது செல்வம் என்றும் திருமணங்களில் எருமைகள் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் மரணமடைந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் எருமைச் சின்னம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதில் வைத்து எரியூட்டும் வழக்கும் இருந்ததாகக் குறிப்புள்ளதே
பசு மட்டும் கொன்றால் பாவம் எருமையைக் கொன்றால் பாவம் இல்லை என்று சான்றுள்ளதா?
எருமைகள்பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்புக்ளே இல்லையா?
​நல்ல நல்ல கேள்விகள்.
இப்படி யோசிப்பதும் சாமான்யமல்ல.:-)

சுபா

Pandiyaraja

unread,
Mar 22, 2015, 9:52:01 AM3/22/15
to mint...@googlegroups.com
>>
 சங்கஇலக்கியத்தில் எருமை எனத்
தேடினால் கிடைக்காது
>>

சங்க இலக்கியங்களில் 41 முறை எருமை என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

எருமை (39)
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை/பைம் கறி நிவந்த பலவின் நீழல் - சிறு 42,43
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் - பெரும் 165
மோட்டு எருமை முழு_குழவி - பட் 14
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் - மலை 472
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் - மலை 523
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ - நற் 60/2
மன்ற எருமை மலர் தலை காரான் - நற் 80/1
தட மருப்பு எருமை மட நடை குழவி - நற் 120/1
கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை/பழன தாமரை பனி மலர் முணைஇ - நற் 260/1,2
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி - நற் 271/1
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து - நற் 330/1
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் - குறு 181/3
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் - குறு 279/1
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து - ஐங் 91/1
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ - ஐங் 92/1
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என - ஐங் 93/1
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை/மகளிர் அன்ன துணையோடு வதியும் - ஐங் 94/1,2
கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ - ஐங் 95/1
அணி நடை எருமை ஆடிய அள்ளல் - ஐங் 96/1
கரும் தாள் எருமை கன்று வெரூஉம் - ஐங் 97/2
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை/திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர - ஐங் 98/1,2
கழனி எருமை கதிரொடு மயக்கும் - ஐங் 99/2
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் - ஐங் 100/2
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் - பதி 13/4
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை - பரி 8/86
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு - கலி 101/25
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு - கலி 103/43
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் - கலி 114/13
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை/ஆம்பல் மெல் அடை கிழிய குவளை - அகம் 56/3,4
தட மருப்பு எருமை தாமரை முனையின் - அகம் 91/15
வைகுறு விடியல் போகிய எருமை/நெய்தல் அம் புது மலர் மாந்தும் - அகம் 100/16,17
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் - அகம் 115/5
மட கண் எருமை மாண் நாகு தழீஇ - அகம் 146/3
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் - அகம் 165/5
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை/மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம் - அகம் 206/3,4
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை - அகம் 253/19
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து - அகம் 316/3
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு - புறம் 5/1
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை/இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் - புறம் 297/1,2

  
    எருமைய (1)
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ - கலி 147/38

 
    எருமையூரன் (1)
நார் அரி நறவின் எருமையூரன்/தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் - அகம் 36/17,18

ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Mar 22, 2015, 10:13:54 AM3/22/15
to mint...@googlegroups.com


On Sunday, March 22, 2015 at 6:52:01 AM UTC-7, Pandiyaraja wrote:
>>
 சங்கஇலக்கியத்தில் எருமை எனத்
தேடினால் கிடைக்காது
>>


காரான் (அ) காரா என்றாலும் எருமை.

Malarvizhi Mangay

unread,
Mar 22, 2015, 10:41:33 AM3/22/15
to mint...@googlegroups.com

திரு.பாண்டியராசன் அவர்களுக்கு நன்றி.சங்கஇலக்கியத்தில் மருதநிலத்தலைவன் பற்றிய உள்ளுறைப் பாடல்களின் நினைவில் அவ்வாறு கூறிவிட்டேன்.தங்களின் தரவுகள் அபாரம்.

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 22, 2015, 11:08:14 AM3/22/15
to mint...@googlegroups.com
இப்படி ஒரு ஆய்வு பூர்வமான ............. அணுவளவும் இம்மி பிசகாத ............ ஆழ்ந்த ஒரு உரையாடலைத் தொடர்வதில் மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது. அப்படி ஒரு உரையாடலைக் கட்டுக்குள் வைத்து ............. ஒரு வாசகத்தில் இருந்து நாலு வினாக்களை எழுப்பும் ............... கருமமே கண்ணாயினார்......... என்ற படிக்கான விவாதத்தைத் தொடரும்........ ராஜம் அம்மாவுக்கு உளமார்ந்த நன்றிகள். மிகுந்த ஆவலுடன் இந்த உரையாடலை வாசித்து வருகிறேன்.

பெருமதிப்பிற்குரிய அன்பின் பாண்டியராஜா ஐயா எள் என்பதற்குள் எண்ணையாக விபரங்களைப் பகிர்தல் அருமையிலும் அருமை.

மலர்மங்கை அம்மை, தாங்கள் *மேதி* என்ற சொல் பற்றியும்.......... ராஜம் அம்மா குறிப்பாக வினவிய வினாக்களுக்கு தாங்கள் தொகுத்துள்ள பதில்களை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.


Suba.T.

unread,
Mar 22, 2015, 12:03:34 PM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-22 5:39 GMT+01:00 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
இளைய தலைமுறையினருக்கு இந்த வார்த்தையின் பொருள் புரியாமலி ருப்பது தான் நல்லது பழைய குப்பையை கிளறி கிளறி  என்ன கிடைக்கப்போகிறது . ஒன்று புரிய வையுங்கள் இந்த கால இளைய தலைமுறையினர் ஜாதி மதம் இவைகளை பற்றி கவலைப்படுவதில்லை . அவர்களுடை ய நோக்கம் குறிக்கோள்  எல்லாம் வாழ்க்கையில் எப்படி சீக்கிர ம் முன்னேறுவது அவ்வளவு தான் . அவர்கள்  ஜாதியை யோ யோ மதத்தையோ பார்த்து காதலிப்பதில்லை நண்பர்களின் ஜாதியை / மதத்தைப்பற்றி கூட கவலைப்படுவதில்லை . அந்த நல்ல மனத்தை விவாதம் என்ற பேரில் குழ ப்பிவிடாதீர்கள் .

​தமிழகத்தை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் எனக்கே அடிக்கடி சாதி உயர்வு தாழ்வுகளை வைத்து மனிதர்கள் பேசிக் கொள்ளும் தீண்டத்தகாதோர் என்ற சொல் பற்றிய பயன்பாடு.. அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் மிகப்  பரவலாக வரும் இந்த சொற்கள்.. அதன் பின்னனியில் இருக்கும் தீண்டாமை பற்றிய பல விஷயங்கள் தெரிகின்றன. தமிழகத்திலே தினம் தினம் இதனை ஏதாவது ஒரு வகையில் அறிந்தும் அனுபவித்தும் வரும் இளைய தலைமுறையினருக்கு இந்தச் சொல்லும் அதன் பின்னனியில் இருக்கும் கருத்தும் புதிது அல்லவே. 

இதன் தோற்றம் அறிந்து கொள்வதில் தவறேதும் இல்லை. தெரிந்து கொண்டால் தான் பிரச்சனை எங்கு எப்படி, எதனல ஆரம்பித்தது என அறிந்து கொள்ள முடியும். அதற்கு ஒரு தீர்வையும் கருத்தளவிலாவது இங்கே தேடித்தர முடியும்.

சுபா

rajam

unread,
Mar 22, 2015, 12:55:59 PM3/22/15
to mint...@googlegroups.com
அன்புள்ள திரு செம்பூர் நீலு அவர்களுக்கு, வணக்கம்.

"விவாதம்" என்ற பேரில் யாரையும் குழப்புவது என் நோக்கமில்லை, வழக்கமுமில்லை. அதைத் தயவு செய்து புரிந்துகொள்ளவும்.

இந்த இழைக்கான பின்னணியைச் சொல்ல விரும்புகிறேன். மக்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் நாட்டு நடப்பை மட்டும் சுட்டிச் சொல்கிறேன். 

எனக்கு 3 நண்பர்கள். A, B, C என்று வைத்துக்கொள்ளவும். அவர்களில் யார்மேலும் எனக்குத் தனிப்பட்ட பகையில்லை, ஆனால் சிலருடைய செயலால்/பேச்சால் அவ்வப்போது கோவம் வருவதுண்டு. அந்த நண்பர்களுள் A-க்கு உயர்ந்த பதவியும் செல்வாக்கும். அதனால் அவர் சொன்னதே வேதவாக்கு என்று உலக மக்கள் எடுத்துக்கொள்வதும் அவரைப் போற்றுவதும் ... உண்மையும் உலக இயல்பும்.

அந்த A சொன்ன சில கருத்துகள், குறிப்பாகச் 'சாதி, தீண்டாமை' பற்றியவை, எனக்குச் சரியாகப்படவில்லை. என்னால் முடிந்த அளவு அந்தக் கருத்துகளுக்கு என் கோணத்திலிருந்து மாற்றுக்கருத்துகளை முன்வைத்தேன். ஆனால் எனக்குப் பெரிய பதவியும் செல்வாக்கும் இல்லாத நிலையில் என் கருத்துகளைப் பலரும் புறக்கணித்துவிட்டார்கள். 

அதாவது பரவாயில்லை, கொடுமை என்னவென்றால் A சொன்னது C-ஐ மறைமுகமாகக் குறைப்படுத்தியது; அதையே சாக்காக வைத்துக்கொண்டு என்பவர் C -ஐ மறைமுகமாக, இணைய இண்டு இடுக்குகளிலெல்லாம் பகடி செய்து வருவதும் A சொன்னதை நிலைப்படுத்திவருவதும் வழக்கமாகிப் போகி, இணையத்தில் ஆவணமாகியும் வருகிறது.

இந்த நிலை எனக்கு வருத்தம் தருகிறது. 40 ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்திலும் 20+ ஆண்டுகளாக இணையத்திலும் பதிவாகிவரும் கருத்துகளை இளையதலைமுறையினர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. 

ஆனால் 'தடியெடுத்தவன் தண்டல்காரன்' என்ற முறையில் ஓங்கிக் கூச்சலிடும் மக்களுடைய பேச்சுக்கே ஆதரவு, பிறருடைய கருத்துக்களுக்குப் புறக்கணிப்பு என்ற நிலை மாறவேண்டாமா? நடுநிலை ஆய்வு முறையை இளையதலைமுறைக்கு நாம் காட்டவேண்டாமா?

எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், பழைய குப்பையைக் கிளறுவதுதானே ஆய்வுமுறை? மூடிமறைப்பதால் தெளிவு கிடைக்காது; மூடநம்பிக்கைதான் உறுதிப்படும்.

ஆகவே தெளிவுக்காக மட்டுமே இந்த இழையைத் தொடங்கினேன். 

இப்போது பாருங்கள் ... எத்தனைப்பேர் சங்க இலக்கியம் படிக்கத்தொடங்கிவிட்டார்கள் -- சந்தையியலார் உட்பட!!!

அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Mar 22, 2015, 1:50:52 PM3/22/15
to mint...@googlegroups.com
அன்புள்ள திரு க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு, வணக்கம்.

ஊக்கப்படுத்தும் தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு மிக்க நன்றி. நான் தூங்கப்போன நேரத்தில் அருமையான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.

முனைவர் பாண்டியராஜா அவர்கள் தன்னைப் பற்றித் 'தண்டோரா போட'த் தெரியாத இனிய எளியவர். எல்லாரும் அவருடைய http://sangamconcordance.in என்ற வலைத்தளத்தில் உங்களுக்கு வேண்டிய சொல்லைத் தேடிக்கொள்ளலாம்.

ஐயா, இன்னும் என் கேள்விகளுக்குத் தேவையான புதிய கருத்துகள் முன்வைக்கப்படவில்லை; அரைத்த மாவே அரைபட்டுக்கொண்டிருக்கிறது. 

பார்ப்போம்.

நன்றி கலந்த அன்புடன்,
ராஜம்

Oru Arizonan

unread,
Mar 22, 2015, 2:10:04 PM3/22/15
to mintamil
"எருமை" என்ற சொல் எங்கெங்கு வருகிறது என்று அருமையாகப் பதிலளித்த பாண்டியராஜா அவர்களுக்கும், சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சியும் ஆட்டிறைச்சியும் பற்றி என்று தலைப்புக்கொடுத்து, கருத்தாடலை, மிகவும் நயமான முறையில் நடத்திசெல்லும் ராஜம் அவர்களுக்கும் எனது நன்றி பல.  

இவ்விதமான கருத்தாடல்கள், தமிழின் மேன்மையை உள்நோக்கு இல்லாமல் ஆயும் இழைகள், மனதிற்கு மிகவும் நிறைவளிக்கின்றன.

தொடரட்டும் இத்தமிழ்பணி!

தமிழ் அறியாச் சிறுவனாகிய நான் இம்மாதிரி இழைகளிளிருந்துதான் தமிழைக் கற்றுக்கொள்கிறேன்.  எப்பொழுதோ படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.

"நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்..."

'வாங்கும் கவளத்தொரு பிடிதப்பின் தூங்கும் களிறோ துயருறா 
ஆங்கது கொண்டூரும் எறும்பினமொரு கோடி..."

தமிழறிவில் நெற்கதிர்களாகவும்,களிறாகவும் இருக்கும் தமிழறிஞர்களிடையில் நடக்கும் இக்கருத்துப்பதிவுகளில், புல்லாகவும், எறும்பாகவும் இருக்கும் நான் மிகவும் பயனடைகிறேன்.  தமிழை அறிகிறேன்.

நன்றி கலந்த வணக்கங்கள்!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2015, 8:32:20 PM3/22/15
to மின்தமிழ்
இதுவரை பதிப்பிட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கும் செய்தி கொஞ்சம் வில்லங்கமாகவே உள்ளது.  பழந்தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டபோது ஆண் காளைகளை அடித்து உண்டனரா அல்லது பெண்பசுவை உண்டனரா என்ற கேள்வியை எழுப்பினால் அதிகம் இறைச்சியாகப் பயன்பட்டது ஆண்விலங்குகலே என்று தெரியவருகிறது.  மனிதன் இறைச்சிக்கு அதிகம் விரும்பியது ஆண்விலங்கினமே.  சுவை அதிகம் என்பதாலும் பெண் விலங்கிலிருந்து ஆண்விலங்குகளை உருவாக்கப் பல பெண் விலங்குகளுக்கு ஒரு ஆண்விலங்குபோதுமென்ற அடிப்படையிலும் அடிவாங்கி இறப்பது சங்ககாலத்தில் இருந்து இன்றுவரை ஆண்களே என்ற உண்மை தெளிவாகும்
சர்க்கரைச்சீமான்

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2015, 9:26:43 PM3/22/15
to மின்தமிழ்

2015-03-22 22:25 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
எனக்கு 3 நண்பர்கள். A, B, C என்று வைத்துக்கொள்ளவும்.

எனக்கு 3 நண்பர்கள். A, B, C என்று வைத்துக்கொள்ளவும்.
இந்த மாதிரிக்கணக்கு அலர்ஜி என்பதால் ஒன்தாப்பிலேயே ஓடி ஒளிந்து புகுமுகவகுப்பில் பொருளாதாரத்தில் ஆரமிச்சுட்டாங்கய்யா என்று ஓடி ஒளிந்தவன்.  இருந்தாலும் நாட்டமை தீர்ப்பை மாத்துங்க என்று யாராவது கேட்டால் (கேக்கமாட்டீங்களா)
சில ஆண்டுகளுக்குமுன்னால் அனைத்துகல சுமோ போட்டியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்கா வாழ் ஜப்பானிய சுமோவீரர் தாய்நாட்டு ஜப்பானிய வீரர் தோற்கடித்து கோப்பையை வென்றார்.  ஜப்பானிய சுமோ போட்டியாளர்கள் தாய் மண்ணில் பிறந்த சுமோ வீரர்களுக்கு மட்டுமே அதன் நுட்பம் புனிதன் நோக்கம் தெரியும் என்று அறிவித்து வெளிநாட்டினர் போட்டியில் பங்குகொள்வதைத் தடை செய்தனர்.
தமிழ் இலக்கியத்தில் அகம் என்றும் புறம் என்று பதிவாகியுள்ளவை தரவுகள் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் எழுதமுடியும் என்று நம்புவது பொருத்தமுடையதல்ல.  ஒரே கண்ணுக்ஞுத் தெரியாத கடவுள் ஒரே சாதி அதில் ஆண் உயர்வு லெண் என்றால் மட்டம் என்று குழந்தைப்பருவத்திலிருந்து தயார்படுத்தப்பட்டவர்களின் பார்வையில் தமிழனின் பெண்வழிக் குமுகம் ஈகை விருந்தோம்பல் சரியாகப் புரிந்து எழுதுவது இயலாது

தமிழ்நாட்டில் ஐந்திணைகளுக்கும் ஐவகைப்பிரிவில் அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்ததையும், தொழில் அடிப்படையில் அமைந்த பிரிவுகளில் ஏற்ற தாழ்வு இருந்ததில்லை என்பதையும் பாணர்கள் என்று சாதி அடிப்படையிலும் விறலியர் என்று விள்ம்புநிலைப் பெண்டிராகவும் அழைக்கப்படாத நிலையில் சூத்திரர்கள் என்று இல்லாத ஒரு பிரிவை வலியுறுத்தி புலையர் என்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கோணத்தில் பார்ப்பது காமாலைக் கண்ணோடு பார்ப்பவனுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிவதுபோல் தெரியும்.
பாணர்கள் என்போர் பேரரசர் குறுநில மன்னர்களுடன் அனுக்காமக இருந்து அவர்களின் விருந்தோம்பலில் கள்ளும் இறைச்சியும் உண்பது தமிழர்களின் உயர் பண்பான விருந்தோம்பலின் வெளிப்பாடு.  இந்நிலையில் பாணர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று எடைபோடுவது நகைமுரண்
இசைக்கருவிகளுக்கான தோல் மட்டுமன்றி இறந்த மாடுகளின் தோலை எடுத்து வணிகம் செய்வதும் ஒரு வாழ்வியல் மரபு.  அந்த மரபின் அடிப்படையில் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயன்படுத்த ஏற்றுக்கொண்ட வாழ்வு தாழ்வானது என்று பழந்தமிழர்கள் கருதவில்லை
புலையர்கள் என்ற பிரிவு தமிழகத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த பிரிவு.  பானர்கள் என்போர் தங்களின் கல்வி மற்றும் கவித்திறனால் அரசர்களால் அரசவையில் போற்றப்பட்டவர்கள்.  இதில் புலையர்கள் என்பவர் தீண்டத்தகாதவர் என்று மொழிவது இட்டுக்கட்டுவதன்றோ
நாட்டாமை தீர்ப்புச் சொல்லிவிட்டு நொங்கிப்போன செம்பில்லிருந்து தண்ணீர் (ஐய அசல் செம்புலப்பெயல்நீர்) அருந்தி விடைபெற்றுக்கொண்டார்

rajam

unread,
Mar 22, 2015, 9:57:19 PM3/22/15
to mint...@googlegroups.com
///தமிழ்நாட்டில் ஐந்திணைகளுக்கும் ஐவகைப்பிரிவில் அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்ததையும், தொழில் அடிப்படையில் அமைந்த பிரிவுகளில் ஏற்ற தாழ்வு இருந்ததில்லை என்பதையும் பாணர்கள் என்று சாதி அடிப்படையிலும் விறலியர் என்று விளிம்புநிலைப் பெண்டிராகவும் அழைக்கப்படாத நிலையில் சூத்திரர்கள் என்று இல்லாத ஒரு பிரிவை வலியுறுத்தி புலையர் என்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கோணத்தில் பார்ப்பது காமாலைக் கண்ணோடு பார்ப்பவனுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிவதுபோல் தெரியும்.///


///புலையர்கள் என்ற பிரிவு தமிழகத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த பிரிவு.  பானர்கள் என்போர் தங்களின் கல்வி மற்றும் கவித்திறனால் அரசர்களால் அரசவையில் போற்றப்பட்டவர்கள்.  இதில் புலையர்கள் என்பவர் தீண்டத்தகாதவர் என்று மொழிவது இட்டுக்கட்டுவதன்றோ///


மிக்க நன்றி, ஐயா! இதைச் சொன்னதுக்காகவே சிறந்த விருது ஒன்று உங்களுக்கு அளிக்கப்படவேண்டும்!!

புலையனும் பாணனும் ஒருவரல்ல என்று எத்தனையோ முறை சொல்லியாச்சு. ஆனால், தொடக்கத்திலேயே PaaNan who is so low என்று தொடங்கும் "ஆய்வு"க்கட்டுரைகளை என்ன செய்ய?

ஒரு குறிப்பிட்ட மரத்தில் 'பேய் இருக்கா?' என்று ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதச்சொல்லி மாணவர்களைக் கேட்கிறார் ஓர் ஆசிரியர் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணக்காரப் பள்ளிக்கூடத்தில் ஓங்கி இரைச்சல் போடும் மாணவனின் கட்டுரை இப்படித் தொடங்குகிறது: "பேய் இருக்கும் அந்த மரத்தில் ... ." 

என்ன செய்ய!

நன்றியுடன்,
ராஜம்

Pandiyaraja

unread,
Mar 23, 2015, 12:49:59 AM3/23/15
to mint...@googlegroups.com

என்ன அம்மையாரே! ஒரு நீள் பெருந்தேரில் தூக்கி நிறுத்தி (மின்தமிழ்), கழுத்து நிறைய மாலைகளைப் போட்டு (இனிய எளியவர் என்ற புகழுரைகள்), இவருக்குத் தண்டோரா போடத்தெரியாது என்று மைக் வைத்துச் (உங்கள் இழை) சாற்றியிருக்கிறீர்கள். இனிப்புத் தின்றும் மனம் கூசுகிறது. இது தங்கள் பெருந்தன்மை. அதற்குத் தகுதியுடைவனாக்கிக்கொள்ள முயல்வேன்.

ஏதோ சந்தடி சாக்கில் என்னுடைய sangamconcordance.in பற்றி இன்னுமொரு செய்தி வந்ததற்கு நன்றி. இதனால் தமிழ் கூறு நல்லுலகத்தின் ஆய்வுப்பணிகள் எளிமையாக்கப்பட்டுச் சிறப்படைவதே எனக்குப் பிறவிப் பெரும்பயன்.

தங்களுக்கு மீண்டும் நன்றி,

ப.பாண்டியராஜா



Pandiyaraja

unread,
Mar 23, 2015, 12:52:55 AM3/23/15
to mint...@googlegroups.com
சங்க கால மக்கள் மாட்டிறைச்சி உண்டதைப் பற்றிய மற்றுமொரு செய்தி. அவ்வளவுதான்.

ஒரு காளையை அடித்து ஊர்முழுக்கக் கூடிக் கூட்டாஞ்சோறாக்கி உண்ட கதையைப் பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது.

வாள் குடியில் பிறந்த ஒரு மறவர் குடியிருப்பில், பகைவன் நாட்டு மன்னனின் ஆநிரை கவர்ந்து, அவற்றில் வலிமையான ஒரு காளையை மன்றத்தில் அடித்துத் துண்டாக்கி கூட்டுணவு ஆக்கி உண்ட செய்தி இது.

யானை தாக்கினும் அரவு மேல் செலினும்

135   நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்

      சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை                 

      வலிக் கூட்டுணவின் வாள் குடிப் பிறந்த                 

      புலிப் போத்து அன்ன புல் அணல் காளை

      செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு

140   கேளா மன்னர் கடி புலம் புக்கு

      நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி

      இல் அடு கள் இன் தோப்பி பருகி

      மல்லல் மன்றத்து மத விடை கெண்டி

      மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப

145   சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ

      பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை

இதன் பொருள்:

யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,

நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,                          135

சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும்,

(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,

புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்,

வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,

(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,            140

விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,

(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,

வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்ற

(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க,

வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைத்து,    145

பகலில் மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற தூங்காத குடியிருப்பினையுடைய

இது மட்டுமல்ல, அன்றைய மக்கள் துருவை என்ற செம்மறியாடு, மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, வீட்டில் வளர்த்த பன்றி, உடும்பு, மனை வாழ் கோழி, நண்டு, இறால், ஆமை, வாளைமீன், விரால் மீன் ஆகியவற்றின் இறைச்சியையும் விரும்பி உண்டார்கள். அரசன் தந்த உணவில் சோற்றைத் தொட்டுக்கொண்டு, இறைச்சியாக எடுத்தெடுத்துத் தின்று பல்லே மழுங்கிப்போய்விட்டதாகப் பாணன் ஒருவன் கூறுகிறான்.

ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Mar 23, 2015, 1:14:16 AM3/23/15
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, March 22, 2015 at 9:52:55 PM UTC-7, Pandiyaraja wrote:
சங்க கால மக்கள் மாட்டிறைச்சி உண்டதைப் பற்றிய மற்றுமொரு செய்தி. அவ்வளவுதான்.

ஐயா, இப்பாடல் ஊர் முழுக்கக் கூடி மாடு அடித்து உண்டதாகக் கூறவில்லை.
இன்றும் நடக்கும் ஆட்டுக் கிடாவெட்டு திருவிழாவில் நடப்பதைப் பாடியுள்ளனர்.

வெட்சித் திணை, உண்டாட்டுத் துறையிலும் இதேபோல் புறநானூற்றுப் பாடல் பார்க்கவும்:

262

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
5நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

(பி - ம்.) 2 ‘பைங்கால்’

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.

............................மதுரைப் பேராலவாயார் பாடியது.

தலைத்தோற்றமாவது:-

‘’உரவெய்யோ னினந்தழீஇ

வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று” (பு. வெ.12)

(இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடையையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண் நீர் கொழித்து (பி - ம். கழித்து) க் கொடுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப் பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர் அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று.

சாயல் - விடாயாலுண்டான மென்மை.

என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக.

(கு - ரை.) 1. "மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை” (முருகு. 232) ; "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி” (பெரும்பாண். 143) ,

Pandiyaraja

unread,
Mar 23, 2015, 3:01:07 AM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Tamil Lexicon கூறுவது:
விடை 7 viṭai
n. <vrṣa.
1. Bull;
எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2).

2. Taurus of the zodiac;
இடபவிராசி. (பிங்.)

3. Buffalo bull;
எருமைக்கடா. மதர்விடையிற் சீறி (பு. வெ. 7, 14).

4. Male of the bison;
மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331).

5. Ram;
ஆட்டுக்கடா. விடையும் வீழ்மின் (புறநா. 262).

6. Tom-cat;
வெருகு. (தொல். பொ. 623, உரை.)

7. Horse;
குதிரை. (யாழ். அக.)



விடை என்றால் ஆடுதான் என்று பொருளில்லை. உ.வே.சா பதிப்பில் இவ்விடத்தில் உடுக்குறியிட்டு, கிடாயென்று முன் எழுதினர் என்ற குறிப்பு உள்ளது. எனவே அதனை மாற்றி விடை என்றே அவர் கொண்டார். இதற்கு நச். உரை வளப்பத்தினையுடைய மன்றிலே வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று என்று பொருள்கொள்கிறார். மன்றத்தில் அறுத்து(சமைத்துத்)தின்பதுதான் கூட்டுணவு. இதற்கு முந்தைய ஒரு அடியில் வலிக் கூட்டுணவின் வாள்குடிப் பிறந்த என்று புலவர் சொல்கிறார். பகைவர் நிலத்து ஆநிரைகளை இவர்கள் ஓட்டிவந்து மத விடை அறுத்துத் தின்கிறார்கள்.
இங்குள்ள எல்லாவற்றையும் பார்த்துத்தான் சொன்னேன். புறநானூற்றுப்பாடலில் அவர்கள் ஆட்டுக்கறி உண்டிருந்தால் அது அவர்கள் பாடு.
அங்கும் மைவிடை என்பது ஆடு என்பதற்குச் சான்றுகள் இல்லை. விடை என்பது விலங்குகளில் ஆண்.
வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப. (அகநா. 41 என்பதில், மை என்பது எருமை.
ப.பாண்டியராஜா
.
விடை 7 viṭai
n. <vrṣa.
1. Bull;
எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2).

2. Taurus of the zodiac;
இடபவிராசி. (பிங்.)

3. Buffalo bull;
எருமைக்கடா. மதர்விடையிற் சீறி (பு. வெ. 7, 14).

4. Male of the bison;
மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331).

5. Ram;
ஆட்டுக்கடா. விடையும் வீழ்மின் (புறநா. 262).

6. Tom-cat;
வெருகு. (தொல். பொ. 623, உரை.)

7. Horse;
குதிரை. (யாழ். அக.)

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 23, 2015, 3:29:12 AM3/23/15
to mint...@googlegroups.com

\\ விடை என்றால் ஆடுதான் என்று பொருளில்லை. \\

அன்பின் பாண்டியராஜா ஐயா,

உடன் நினைவுக்கு வரும் ஒரு தேவாரப்பனுவல்............

தோடுடைய செவியன் விடையேறிய தூவெண்மதிசூடி..........

இங்கு *விடை* குறிப்பது *எருது* ............ என் புரிதல் சரிதானே ஐயன்மீர்


Pandiyaraja

unread,
Mar 23, 2015, 3:38:00 AM3/23/15
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. இங்கே விடை என்பது காளை என்று எல்லாரும் அறிவர். நான் பொதுவாகச் சங்க காலத்தை விட்டுக் கீழிறங்குவதில்லை. காரணம் அதில் எனக்குப் பரிச்சயம் இல்லை.
சங்கப் பனுவல்களில் விடை என்பது ஆடுதான் என்று தெள்ளத் தெளிவாகப் பொருள்கொள்ளத்தக்கவகையில் நிகழ்விடங்கள் உண்டா என்பதுதான் இப்பொழுது எனது ஐயம். உரை பற்றிக் கவலையில்லை.
மீண்டும் தங்களுக்கு மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Mar 23, 2015, 10:07:16 AM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தேவாரத்தில் உங்கள் புரிதல் சரிதான். சிவன் வாகனம் எருது. சிவன் வழிபாடுக்காகவும்,
சமண, பௌத்த சமயங்களும் மாடு வெட்டுதலை இந்தியாவில் ஊரே
சேர்ந்து கொண்டாடுதலை வேளாண் சமுதாயம் கி.மு/ 600, 700 வாக்கில் நீக்கிவிட்டன.

ஆனால், சங்க காலத்தில் திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு
அறுக்கும் விடை = ஆட்டுக்கிடாய்
"மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை” (முருகு. 232)

பேரா. பாண்டியராஜா கொடுத்துள்ள பெரும்பாணாற்றுப்படை
வரிகளைப் பாருங்கள். ஆநிரை கவர்ந்து வந்து அவற்றை விவசாயிகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.
ஊரே அந்தக் கொடையைப் பாராட்டுகிறது. ஊரார் எல்லோரும் மன்றத்தில் கூடுகிறார்கள்.
அந்தப் போர்வெற்றியை ஊரில் திருவிழாவாக மன்றத்தில் கொண்டாடுகின்றனர்.
ஆட்டுக் கிடாய் வெட்டிப், பொங்கல் வைத்து. இன்றைக்கும் இதனை ஊர்த் திருவிழாக்களில்
பார்க்கிறோம்.

புறம் 262-ல் மாடு வெட்டுதல் இல்லை.

262

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்

            கேளா மன்னர் கடி புலம் புக்கு

      நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி

      இல் அடு கள் இன் தோப்பி பருகி

      மல்லல் மன்றத்து மத விடை கெண்டி (பெரும்பாண்.)


ஊர் முழுதும் கூடி உண்ணும் திருவிழாவில் ஆட்டுக்கிடாய் பற்றிப் பாடிச் செல்கிறார் புலவர்.

பெரும்பாணாற்றுப்படை சங்க இலக்கியத்தில் பிற்காலம். கி.பி. 300-400 வாக்கில்.

அப்போது பசுவதை செய்ய ஊரார் வேளாளர்களும், சமண சமயத்தவர்களும்

வேளாண்மைக்கான காரணங்களால் ஊர்த் திருவிழாக்களில் இல்லாது ஒழிந்துவிட்ட காலம் அது.


திருமுருகாற்றுப்படை, புறநானூறு, அவற்றின் பின் உருவான பெரும்பாணாற்றுப்படை

போன்றவற்றில் ஊர் மன்றங்களில், அரச சபைகளில் விடை வீழ்த்துதல், இறைவர்களுக்குப்

பொலி (> பலி என்னும் வடசொல்) கொடுத்தல் எல்லாம் ஆட்டுக் கிடாய். இன்றும் பார்க்கலாம்.


நா. கணேசன்


Pandiyaraja

unread,
Mar 23, 2015, 12:36:19 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கணேசன் ஐயா அவர்களே!
 
தாங்கள் கூறியவற்றையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறீர்கள். அதனால் அது உண்மையாகிவிடாது.
முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விடை ஆடுதான் என்பதற்கு அகச் சான்றுகள் உள்ளனவா? ஆம்/இல்லை - பதில் தேவை. 
ஆம் எனில் அகச்சான்று தேவை.
இல்லை எனில் தயைகூர்ந்து இதுபற்றி மேலும் பேசவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பண்டைய மக்கள் காளையைக் கொன்று தின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள இத்தனை சிரமப்படுகிறீர்களே, அவர்கள் பசுமாடுகளையே அடித்துத் தின்றிருக்கிறார்கள்.

(1)கலங்கு முனைச் சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மழவர் - அகம் 129:11,12

கழக உரை: சீறூரிலுள்ளோர் கையைத் தலைமீது வைத்து அலற, அவர்களுடைய கொழுத்த ஆக்களைக் கவர்ந்து சென்று கொன்று தின்ற கூரிய படைகளையுடைய மழவர்கள்.

(2) பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
--------------------------------
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்கு உண்ட வன்கண் அகலறை - அகம் 309/2-6

கழக உரை: பாலினையுடைய பசுவினத்தைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர், .............., தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில் கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய்,

இப்பொழுது உங்கள் வாதம் ஆ என்றால் பசுவே அல்ல, இந்த மழவர் தமிழரே அல்ல என்று பக்கவாட்டில் பிய்த்துக்கொண்டு போகாமல் இருந்தால் சரி.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Mar 23, 2015, 1:20:43 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, March 23, 2015 at 9:36:19 AM UTC-7, Pandiyaraja wrote:
கணேசன் ஐயா அவர்களே!
 
தாங்கள் கூறியவற்றையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறீர்கள். அதனால் அது உண்மையாகிவிடாது.
முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விடை ஆடுதான் என்பதற்கு அகச் சான்றுகள் உள்ளனவா? ஆம்/இல்லை - பதில் தேவை. 
ஆம் எனில் அகச்சான்று தேவை.
இல்லை எனில் தயைகூர்ந்து இதுபற்றி மேலும் பேசவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பண்டைய மக்கள் காளையைக் கொன்று தின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள இத்தனை சிரமப்படுகிறீர்களே, அவர்கள் பசுமாடுகளையே அடித்துத் தின்றிருக்கிறார்கள்.

(1)கலங்கு முனைச் சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மழவர் - அகம் 129:11,12

கழக உரை: சீறூரிலுள்ளோர் கையைத் தலைமீது வைத்து அலற, அவர்களுடைய கொழுத்த ஆக்களைக் கவர்ந்து சென்று கொன்று தின்ற கூரிய படைகளையுடைய மழவர்கள்.

(2) பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
--------------------------------
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்கு உண்ட வன்கண் அகலறை - அகம் 309/2-6

கழக உரை: பாலினையுடைய பசுவினத்தைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர், .............., தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில் கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய்,

இப்பொழுது உங்கள் வாதம் ஆ என்றால் பசுவே அல்ல, இந்த மழவர் தமிழரே அல்ல என்று பக்கவாட்டில் பிய்த்துக்கொண்டு போகாமல் இருந்தால் சரி.

Prof. Pandiaraja AIya,

Your arguments for changing village festivals' sacrifice of sheep and goats and enjoying the Pulao food cooked reminds
of Tolkappiyam's nizaRRiya/nizattiya suutra. I was clearly explained by Tamil professors and linguists that both alternates
in Tamil, and fundamentally bot nizaRRiya and nizattiya are the same.

If villagers like Velalas and Saivaites were cutting cows and eating beef in Village festivals in 3rd or 4th century CE,
when did Saivas of Tamizakam stop eating beef? In 10th century?

N. Ganesan
 

Pandiyaraja

unread,
Mar 23, 2015, 1:52:31 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மதிப்புக்குரிய ஐயா!
தயவுசெய்து நான் கேட்ட முதல் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

அடுத்து நான் குறிப்பிட்டுள்ள இரண்டு எடுத்துக்காட்டுகளுக்கும் உங்கள் பொருள் என்ன என்று சொல்லுங்கள். இப்போது மூன்றாவதாக இன்னொன்றும் தருகிறேன்.

நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற - அகம் 249: 13

கழக உரை: இளைய பசுவினைக் கொன்று அதன் ஊனைத் தின்ற ---

இந்த மூன்றுக்கும் உங்கள் விளக்கம் என்ன? தயவுசெய்து வேறுவகையில் திசை திருப்பவேண்டாம்.

அன்புடன்,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Mar 23, 2015, 4:38:56 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, March 23, 2015 at 10:52:31 AM UTC-7, Pandiyaraja wrote:
மதிப்புக்குரிய ஐயா!
தயவுசெய்து நான் கேட்ட முதல் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

அடுத்து நான் குறிப்பிட்டுள்ள இரண்டு எடுத்துக்காட்டுகளுக்கும் உங்கள் பொருள் என்ன என்று சொல்லுங்கள். இப்போது மூன்றாவதாக இன்னொன்றும் தருகிறேன்.

நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற - அகம் 249: 13

கழக உரை: இளைய பசுவினைக் கொன்று அதன் ஊனைத் தின்ற ---

இந்த மூன்றுக்கும் உங்கள் விளக்கம் என்ன? தயவுசெய்து வேறுவகையில் திசை திருப்பவேண்டாம்.

அன்புடன்,
ப.பாண்டியராஜா


Prof. Pandiaraja Aiya,

I already mentioned. These are not beef consumption parties
for the entire village. In India, only tribals in fringes of
settled Agriculture society consumed beef  in early centuries,
CE. Settled Agriculturists avoided beef food except those
in the bottom layers. Cow slaughter was allowed and getting
narrated as instances of tribes.

But Agriculturists did not eat beef nor the village festivals
involved cow slaughter. (1) Village celebrating together there
was only goat Pulao, biriyani in Perumbanarruppadai times
and (2) in royal courts and (3) in Murukan's temples. To say that
these 3 spots were having beef instead of mutton and widespread
cow slaughter among Vellalas in Sangam times will be wrong. And, there
is no evidence of widespread beef consumption in Sangam texts.
OTOH. there was plenty of mutton, poultry and liquor.

If there was widespread beef consumption in Sangam, why then
they switch to not eating cows? when did this important dietary change
happen and why? Any evidence of this shift?

N. Ganesan
 

Pandiyaraja

unread,
Mar 23, 2015, 11:11:15 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அன்புள்ள கணேசன் ஐயா அவர்களுக்கு,
நான் ஒவ்வொருமுறையும் புதுப்புதுக்கேல்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். பதில் தெரிந்தால் சொல்லுங்கள். அதைவிடுத்து, முதலில் தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களின் கூற்றுக்கு ஆதாரமாக எதனையும் கூறவில்லை. நான் கூறிய எதற்கும் மறுமொழி தரவுமில்லை. இப்படித் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருபவரை எந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்வது எனத் தெரியவில்லை. தங்கப்பதுமை பத்மினி போல, "வானகமே, வையகமே, வளர்ந்து வரும் தாயகமே" என்று வானத்தை நோக்கிக் கையை உயர்த்திக் கழிவிறக்கம் பாடுவதைத் தவிர வேறு வழியில்லை. சொன்னதையே திரும்பச் சொல்லும் வடிவேலுவின் பேச்சைக் கேட்டவருக்குக் கிறுக்குப் பிடித்ததைப் போல் எனக்குக் கிறுக்குப்பிடிக்கும் முன்னர் கீழிறங்கிவிடுகிறேன். நீங்கள் உங்கள் வழியே செல்லுங்கள்.
.....................
யப்பா! What a relief!!!
இது அம்மையாரின் இழை. அம்மையார் தயைகூர்ந்து என்னை மன்னியுங்கள்.
ப.பாண்டியராஜா


Geetha Sambasivam

unread,
Mar 24, 2015, 4:43:53 AM3/24/15
to மின்தமிழ்
ராஜம் அம்மாவால் சங்கத் தமிழைப் புதிய கோணத்தில் அறிய முடிந்தது. இதில் மேல் அதிக விளக்கங்கள் அளித்து வரும் திரு பாண்டியராஜா அவர்களுக்கும், மலர்விழி மங்கைக்கும் நன்றி. தொடரக் காத்திருக்கிறேன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 24, 2015, 8:40:55 AM3/24/15
to மின்தமிழ்
சங்கத் தமிழ் குறித்து நிறைய அறிந்து கொள்ள முடிந்தது..ராஜம் அம்மா, மிக அருமையாக இழையைக் கொண்டு செல்கிறார். திரு.பாண்டியராஜா அவர்களது பணி, போற்றப்பட வேண்டிய ஒன்று. மலர்விழி அவர்களது ஆய்வு, சிறப்பான ஒன்று என்று தெரிகிறது..இன்னும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன்.. தொடரக் காத்திருக்கிறேன்!.


பார்வதி இராமச்சந்திரன்.


2015-03-24 14:13 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
​ 
​  
​   
Reply all
Reply to author
Forward
0 new messages