மணிமேகலைக் காப்பியக் கதைகள் -- பெண்கள் -- மணிமேகலை

155 views
Skip to first unread message

rajam

unread,
Feb 25, 2012, 12:29:06 AM2/25/12
to மின்தமிழ், Subashini Tremmel
இது ஒரு முன்னுரை மட்டுமே. பிறகு (நேரம் கிடைக்கும்போது) விரிவாக எழுதுகிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை ... யார் அவள்?   

"மணிமேகலை" என்ற பெயரைக் கேட்டவுடன் நம் ஒவ்வொருவரின் மனதிலும்/கருத்திலும் என்ன மாதிரி வடிவம் தோன்றுகிறது? ஒரு பூங்கொடி போன்ற அழகிய இளம் பெண்ணா? தலைமுடியை மொட்டையடித்த துறவியா? தலைமுடியை மொட்டையடிக்காத தவப் பெண்ணா? ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரியும் எவளோ ஒருத்தியா? இல்லை வேறு யாருமா?  
மணிமேகலைக் காப்பியத்தில் காப்பியத் தலைவி மணிமேகலை எத்தனை வடிவங்களை எதற்காக மேற்கொள்ளுகிறாள்? எத்தனை வகையான மக்களை/தெய்வங்களைச் சந்திக்கிறாள்? அவள் பார்க்கும் ஒவ்வொருவரும் அவளுடைய வாழ்க்கைப் பாதையை எப்படி மாற்றுகிறார்கள்? இதெல்லாம் பற்றி நாம் நினைத்துப் பார்க்கிறோமா?
இப்போதைக்கு உங்கள் கருத்துக்காக ...
1. மணிமேகலைக் காப்பியம் என்பது ஒரு துறவிப் பெண்ணின் கதையைச் சொல்வது அன்று.
2. காப்பியத்தின் கடைசி வரியில்தான் அந்தப் பெண் (மணிமேகலை) "பவத்திறம் அறுக" என்று நோற்றதாகப் படிக்கிறோம். கதை முழுவதிலும் அவள் துறவறம் ஏற்காத பெண்ணாகவே காட்டப்படுகிறாள்.
3. தெய்வங்களின் குறுக்கீடு இல்லாவிட்டால் மணிமேகலையின் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கலாம்!
4. சுமார் ~30 பேர் (தனியாகவோ கூட்டாகவோ) அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர்!
5. அவள் வாழக்கையில் வந்து போகும் ஒவ்வொருவரும் அவளை அவளுடைய "தவ" நிலைக்கு எப்படிக் கொண்டு போகிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.
இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். முடிந்தபோது என் கருத்துக்களை விவரமாக எழுதுகிறேன்.
அன்புடன்,
ராஜம்


Santhanam Swaminathan

unread,
Feb 25, 2012, 12:59:52 AM2/25/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மணிமேகலை பற்றிய உங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் அவசியமான தேவை. ஏனோ தானோ என்று ஒதுக்கிவிடப்பட்ட ஒரு காவியம் அது. உங்கள் எழுத்துப் பணி தமிழ் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும்  ஒரு பெரிய, முக்கியமான சேவையாகும்.
 தயவு செய்து எழுதுங்கள். என்னைப் போல பலரும் ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 

சிலப்பதிகாரத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ம.பொ.சி .யைச் சிலம்புச் செல்வர் என்று அழைத்தது போல தமிழ் கூறு நல்லுலகம் உங்களுக்கும் சிறப்புப் பட்டத்தை வழங்கும்.
Swami
020 8904 2879
07951 370 697



From: rajam <ra...@earthlink.net>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Saturday, February 25, 2012 5:29 AM
Subject: [MinTamil] மணிமேகலைக் காப்பியக் கதைகள் -- பெண்கள் -- மணிமேகலை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


Innamburan Innamburan

unread,
Feb 25, 2012, 1:02:23 AM2/25/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜம்,
சிந்திக்க வைக்கும் முன்னுரை இது. மணிமேகலையை பற்றி உங்களுடைய தொடர் வருமுன், என் மனசித்திரத்தில் இருந்த மணிமேகலை மகாலட்சுமி போல் இருந்தாள்: ரவி வர்மா சித்திரம். எப்படியோ அதில் துறவறத்தின் களை இருந்தது. அதை படித்த பின்னும் ரவி வர்மா சித்திரம் தான்: சரஸ்வதி. சாந்தமும், கருணையும் தழுவிய முகம். இரு படங்களிலும் என்னை கவர்ந்தது, அமுதசுரபி.
காலையில் எழுந்தவுடன் ஒரு தெய்வீக தரிசனம்.
அன்புடன், இன்னம்பூரான்

2012/2/25 rajam <ra...@earthlink.net>

Dhivakar

unread,
Feb 25, 2012, 1:14:30 AM2/25/12
to mint...@googlegroups.com, rajam
மணிமேகலையைப் பற்றி உங்களிடம் படித்தபிறகு பெண்ணைப் பற்றி எனக்குக் கிடைத்த விடைகள்:

1. பெண் என்றால் அழகும் அறிவும் இருக்கும்போதுதான் எப்போதுமே உலகம் கவனிக்கும். வெறும் அழகோ, அல்லது வெறும் அறிவோ இருந்தால் உலகத்தாருக்குத். தேவைப்படும்போது மட்டுமே இவர்கள் கவனிக்கப்படுவார்கள். (உதாரணத்துக்கு மணிமேகலையில் வரும் மணிமேகலை தவிர அனைத்துப் பெண் பாத்திரதாரிகள்)

2. அழகு, அறிவு இத்துடன் ஞானம் வரப்பெற்றல் அதைப் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் மற்றவருக்கு நன்மை விளைகிறதோ இல்லையோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒருவிதமான வீரம் தானாகவே அந்தப் பெண்ணுக்கு வந்துவிடும்.

3.அழகு, அறிவு, ஞானத்துடன் தெய்வத்தின் துணையும் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்துவிட்டால் அவளும், அவளோடு அவளால் இந்த ஞாலமும் பயனடையும். மணிமேகலைதான் இந்தப் பெண்.

தவறோ சரியோ...

அன்புடன்’திவாகர்

2012/2/25 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree

unread,
Feb 25, 2012, 1:32:48 AM2/25/12
to mint...@googlegroups.com
அன்பின் அம்மா,

ஆகா, சிந்திக்க வைக்கும் அருமையானதொரு முன்னுரை... அதிகம் காக்க வைக்காதீர்கள்.. ஆவலைத் தூண்டிவிட்டு! காத்திருக்கிறோம்.

அன்புடன்

பவளா.

2012/2/25 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Subashini Tremmel

unread,
Feb 25, 2012, 4:14:30 AM2/25/12
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மணிமேகலைச் சிந்தனையை மீண்டும் கொண்டு வந்தமைக்கு நன்றி. 

சுபா

2012/2/25 rajam <ra...@earthlink.net>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Geetha Sambasivam

unread,
Feb 25, 2012, 10:54:15 AM2/25/12
to mint...@googlegroups.com
இத்தனை ஆழமாக எண்ணிப்பார்த்தது இல்லை என்பது தான் உண்மை. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கையில் எழுதுங்கள்.  காத்திருக்கோம்.

Reply all
Reply to author
Forward
0 new messages