"ஆவ்சம் ஆவசம் தமிழ்நாடு என்று சொல்வது?"

37 views
Skip to first unread message

rajam

unread,
Oct 8, 2011, 2:59:12 AM10/8/11
to மின்தமிழ், Nagarajan Vadivel, செல்வன், Subashini Kanagasundaram, Narayanan Kannan
இன்னோர் இழையில் ...

எவ்வளவு நாள் ஆவ்சம் அமெரிக்கா சொல்லிக்கொண்டிருப்பது
ஆவ்சம்  ஆவசம் தமிழ்நாடு என்று சொல்வது
நாகராசன்
சிந்தனையைத் தூண்டும் ஒரு நல்ல கேள்வியை நம் பேராசிரியர் ஐயா இந்தக் குழுமத்தின் முன் வைத்திருக்கிறார்.
விருப்பமுள்ளவர்கள் பங்குபெறலாமே. எல்லாருக்கும் பயன் கிடைக்கும்.
நன்றி.
அன்புடன்,
ராஜம் 

Subashini Tremmel

unread,
Oct 8, 2011, 3:03:33 AM10/8/11
to rajam, மின்தமிழ், Nagarajan Vadivel, செல்வன், Narayanan Kannan, Subashini Kanagasundaram
ஆமாம். நல்ல யோசனை. சிந்தனையைத் தூண்டும் கேள்வி.
இந்த இழையில் இதனைத் தொடர்வோம்.

சுபா

2011/10/8 rajam <ra...@earthlink.net>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

விஜயராகவன்

unread,
Oct 8, 2011, 3:46:07 AM10/8/11
to மின்தமிழ்
ஆவ்ஸம் தமிழ்நாடு - ஆவேசம் தமிழ்நாடு

1. வேறு எந்த நாட்டில் ஜாதி அடிப்படையில் கல்வி, வேலை இடங்களில் தேர்வு
செய்யப்படுகிரது, ஆனால் ஜாதி என்றாலே பெரும் தீது என பார்க்கப்
படுகிறது.

2. ஜாதி அடிப்படையில் சிறு குழந்தகளுக்கு அரசாங்கம் சர்டிபிகேட்
கொடுக்கிறது, அதே சமயம் தெருப் பெயர்களில் நபர்களின் ஜாதிப் பெயர்களை
அழிக்கிரது

3. வேறு எந்த நாட்டில் தன் தாய்மொழி 50,000 ஆண்டுகளுக்கு முன்
லெமூரியாவில் பிறந்து, சமஸ்கிருதம், ஹீப்ரூ, அசீரியன், கிரேக்கம், லத்தீன
போன்ற உலக் மொழிகளுக்கும் , தெலுங்கு போன்ர இந்திய மொழிகளுக்கும் `தாய்`
என கணிசமான நபர்களால் நம்பப் படுகிறது..


4. வேறு எந்த நாட்டில் சொல், செயல், உணர்வு ஆகியவற்றிற்க்கு இடையே
தொடர்பே இல்லை. மொழி அளவில் இது எழுத்து, பேச்சு, படிப்பு இவற்றிற்க்கு
இடையே பெரும் இடை வெளியை காண்பிக்கின்றது

5. வேறு எந்த நாட்டில் இனமானத் தலைவர்களில் முதல் வேலையான தன் சொத்து,
தன் குடும்ப நலன் அபிவிருத்தி இன அழிவை மறக்கச் செய்கிறன.

6. வேறு எந்த நாட்டில் தனிமனித வாழ்கை அளவில் சுய நலனும், பொது மேடையில்
மற்றவர்களுக்கு உபயோகமாகாத உபதேசங்களும் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறது


அமெரிக்கா மட்டும்தான் ஆவ்சம் இல்லை, தமிழ்நாடும் கூட - வேறு விதங்களில்

தமிழ்நாடு ஆவ்சம்தான


வகொவி

Nagarajan Vadivel

unread,
Oct 8, 2011, 4:09:06 AM10/8/11
to mint...@googlegroups.com
தமிழ் நாட்டைவிடச் சீனா மட்டம்   மோசமானது சுதந்திரம் என்ற பேச்சே கூடாது.  இன்று ஆய்வில் விஞ்ஞான முனேற்றத்தில் இரண்டாம் நிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது
தமிழகத்திலிருந்து அறிஞர்கள் மேற்படிப்புக்கு ஆய்வுக்கு என்று அமெரிக்கா செல்கிறார்கள்.  அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த தமிழ் நாட்டு அறிஞர்கள் குறுகிய காலஅளவில் தமிழகம் வந்து கல்லூரிகளில் (அவர்கள் ஊருக்கருகில் உள்ள கல்லூரிகள்) தங்கள் அறிவு ஆய்வு  வளர்ச்சியைத் தானம் தரலாமே 
தடுப்பது எதுவோ்? நீங்கள் சுட்டும் ஆறு காரணங்களா அல்லது தான் பிறந்த மண்ணுக்குச் செய்யவேண்டுயது எதுவுமில்லை என்ற எண்ணமா?
நாகராசன் 
2011/10/8 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Oct 8, 2011, 4:34:02 AM10/8/11
to மின்தமிழ்
On Oct 8, 10:09 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

>நீங்கள் சுட்டும் ஆறு காரணங்களா

நான் சுட்டியது “காரனங்கள்” அல்ல, நான் எதையும் எக்ஸ்ப்ளைய்ன்
செய்யவில்லை

>அல்லது தான் பிறந்த
> மண்ணுக்குச் செய்யவேண்டுயது எதுவுமில்லை என்ற எண்ணமா?
> நாகராசன்

“பிறந்த மண்” ஒரு செண்டிமெண்டல் கருத்து. அப்படி வைத்துக் கொண்டாலும்
உங்கள் வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

what you say is incomprehensible


விஜயராகவன்

N. Kannan

unread,
Oct 8, 2011, 5:43:03 AM10/8/11
to mint...@googlegroups.com
வந்தோரை வாழ வைப்பதில் தமிழகம் தொன்று தொட்டு முன் நிற்கிறது. களப்பிர,
சோழ, நாயக்க, சரபோஜி அரசாட்சிகளில் இந்தியாவின் பல்வேறு திக்குகளிலும்
இருந்து பெருவாரியாக மக்கள் வந்து குடிபெயர்ந்து இருக்கின்றனர். தற்போது
கணிசமான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் எல்லோரும்
அவரவர் தாய் மொழியில் பேசவும், அவரவர் விருப்பு வெறுப்புகளை வளர்க்கவும்
தமிழகம் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்களில்
ஆகப்பெரும்பான்மை புகழ்பெற்ற தலைவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர்
அல்ல.

கோலிவுட்டின் இயக்கமே தெலுங்கர், மலையாளிகளிடம் உள்ளது. தமிழகத்தின்
”சூப்பர்” நடிகர்கள் யாரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் அல்ல.

தமிழ் மண்ணின் வாசம் பேசும் சமயங்கள் கூட வந்தோரால் புறம் தள்ளப்பட்ட
நிலையைக் காண்கிறோம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!

ஆவ்சம் தமிழ்நாடு!

நா.கண்ணன்

2011/10/8 rajam <ra...@earthlink.net>:

coral shree

unread,
Oct 8, 2011, 7:07:31 AM10/8/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, செல்வன், Subashini Kanagasundaram, Narayanan Kannan
ஆவ்சம் தமிழ்நாடு! ஆவ்சம் தமிழ்நாடு!

தாய்மையைப் போற்றும் பண்பு, விருந்தோம்பல், ஈகை, இரக்க சுபாவம் இன்னும் இப்படி எத்தனையோ சொல்லலாம். நம் தமிழர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்நாட்டினரே பொறாமைப்படும் அளவிற்கு வானளவு உயர்ந்து நிற்கும் வல்லமை. அதற்கு நம் கண் முன் சாட்சியாக எத்தனை மின்தமிழர்கள்! பிழைப்பை நாடி பிறந்த மண்ணை விட்டு எந்த நாடு சென்றாலும், சொந்த நாட்டை மறவாமல், அதன் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு ஏதேனும் செய்து நம் நாட்டைமென்மேலும் உயர்த்த பாடுபடும் நாட்டுப்பற்று! தாய்மொழிப் பற்று .... இப்படி எத்தனையோ. ஆம் ஆவ்சம் தமிழ்நாடுதான். 

2011/10/8 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Jean-Luc Chevillard

unread,
Oct 8, 2011, 7:18:07 AM10/8/11
to mint...@googlegroups.com, rajam, செல்வன், Narayanan Kannan, Innamburan Innamburan
அன்பின் வீ.சு. இரா,

How about calling the thread "அணங்குடை தமிழ்நாடு" ?
(or "அணங்குடை தமிழ்மண்"?

I remember writing once to George Hart,
in a discussion concerning your JAOS article
that maybe "AWE" was what came closer to அணங்கு
but that I was not aware of any article written on the concept of "AWE"
(as in "awesome", "aweful", "awe-inspiring")
probably because the psyche of old anglo-saxon speakers
is not frequently discussed
(but I suppose this is simply because I have not read enough).

How to capture the mixture of attraction, fascination and reverential terror ?

அன்புடன்

-- ழான் (Paris)

seshadri sridharan

unread,
Oct 8, 2011, 7:31:14 AM10/8/11
to mint...@googlegroups.com
ஆவ்ஸம் தமிழ்நாடு - ஆவேசம் தமிழ்நாடு

1. வேறு எந்த நாட்டில் ஜாதி அடிப்படையில் கல்வி, வேலை இடங்களில் தேர்வுசெய்யப்படுகிரது, ஆனால் ஜாதி என்றாலே பெரும் தீது என பார்க்கப்படுகிறது.
வேறு எந்த நாட்டில் சாதி உள்ளது. இருந்தால் அங்கும் இட ஒதுக்கீடு இருந்திருக்கும். ஆம்  ஐயா தீது தான். 

2. ஜாதி அடிப்படையில் சிறு குழந்தகளுக்கு அரசாங்கம் சர்டிபிகேட்
கொடுக்கிறது, அதே சமயம் தெருப் பெயர்களில் நபர்களின் ஜாதிப் பெயர்களை அழிக்கிரது
மறுக்கப்பட்ட சம வாய்ப்பைப் பெறுவதற்காக கொடுக்கின்றது. சாதி ஒழிக என்ற சொல்லிக் கொண்டே தெருப்பெயர்களில் சாதி இருந்தால் எள்ளமாட்டார்களா. அதற்கு எடுத்துக்காட்டு தான் தெருப் பெயரில் சாதி ஒழிப்பு. ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறுவோர் சாதி பெயர்களை அவர்களாகவே இடுவதில்லை.

3. வேறு எந்த நாட்டில் தன் தாய்மொழி 50,000 ஆண்டுகளுக்கு முன்
லெமூரியாவில் பிறந்து, சமஸ்கிருதம், ஹீப்ரூ, அசீரியன், கிரேக்கம், லத்தீன போன்ற உலக் மொழிகளுக்கும் , தெலுங்கு போன்ர இந்திய மொழிகளுக்கும் `தாய்` என கணிசமான நபர்களால் நம்பப் படுகிறது..
உண்மையிலேயே இருந்தால் சொல்லிக் கொள்வதில் தவறு ஏது இராது. சமற்கிருதமே  உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற அணியிலா கோமாண்டூரார். அதைச் மட்டும் சாடுவதில்லையே.


4. வேறு எந்த நாட்டில் சொல், செயல், உணர்வு ஆகியவற்றிற்க்கு இடையேதொடர்பே இல்லை. மொழி அளவில் இது எழுத்து, பேச்சு, படிப்பு இவற்றிற்க்கு இடையே பெரும் இடை வெளியை காண்பிக்கின்றது
எல்லா நாட்டிலும் அது வாழ்வோடு கலந்துள்ளது தமிழ்நாட்டில் தான் என்பதல்ல.

5. வேறு எந்த நாட்டில் இனமானத் தலைவர்களில் முதல் வேலையான  தன் சொத்து, தன் குடும்ப நலன் அபிவிருத்தி  இன அழிவை மறக்கச் செய்கிறன.
   நாடு, மதம் என்றில்லாமல் தன்னலமே பெரிதென எண்ணும் எல்லாரிடத்தும் உள்ளது

6. வேறு எந்த நாட்டில் தனிமனித வாழ்கை அளவில் சுய நலனும், பொது மேடையில் மற்றவர்களுக்கு உபயோகமாகாத உபதேசங்களும் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறது
அண்டை மாநிலங்களே உள்ளன. காட்டாக, கருநாடகம்.


அமெரிக்கா மட்டும்தான் ஆவ்சம் இல்லை, தமிழ்நாடும் கூட - வேறு விதங்களில்

தமிழ்நாடு ஆவ்சம்தான
அவரவர் நோக்கில் இது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது.

வகொவி

Jean-Luc Chevillard

unread,
Oct 8, 2011, 8:31:23 AM10/8/11
to mint...@googlegroups.com
Dear list,

As a post-scriptum,
I must add that it was simply
because I had not searched enough.

There are indeed articles written on "the concept of AWE".

See for instance:
"http://www.huji.ac.il/dataj/controller/ihoker/MOP-PUB_LINK?pub_id=069054&Save_t="
"On the concept of awe in Maimonides."

and other items found
by googling for "concept of AWE"
(including the quotation mark).

However, this probably does not fit within the discussion which has already started.

My suggestion is, therefore, probably TOO ACADEMIC :-)

Cheers

-- jlc (Paris)


************************************



அன்பின் வீ.சு. இரா,

How about calling the thread "அணங்குடை தமிழ்நாடு" ?
(or "அணங்குடை தமிழ்மண்"?°

I remember writing once to George Hart,
in a discussion concerning your JAOS article
that maybe "AWE" was what came closer to அணங்கு
but that I was not aware of any article written on the concept of "AWE"
(as in "awesome", "aweful", "awe-inspiring")
probably because the psyche of old anglo-saxon speakers
is not frequently discussed
(but I suppose this is simply because I have not read enough).

How to capture the mixture of attraction, fascination and reverential terror ?

அன்புடன்

-- ழான் (Paris)



On 08/10/2011 08:59, rajam wrote:

N. Ganesan

unread,
Oct 8, 2011, 9:20:25 AM10/8/11
to மின்தமிழ்

On Oct 8, 7:31 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear list,
>
> As a post-scriptum,
> I must add that it was simply
> because I had not searched enough.
>
> There are indeed articles written on "the concept of AWE".
>
> See for instance:

> "http://www.huji.ac.il/dataj/controller/ihoker/MOP-PUB_LINK?pub_id=069..."


> "On the concept of awe in Maimonides."
>
> and other items found
> by googling for "concept of AWE"
> (including the quotation mark).
>
> However, this probably does not fit within the discussion which has
> already started.
>
> My suggestion is, therefore, probably TOO ACADEMIC :-)
>
> Cheers
>
> -- jlc (Paris)
>
> ************************************
>

ழான் - லூக்,

அணங்கு¹-தல் aṇaṅku-
, 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல்.
நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல்.
நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as
bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு.
223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன்
(இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ
னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).

அணங்கு² aṇaṅku
, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.)
2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய்.
(திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.)
7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away
one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந்
தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as
resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10.
Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண்.
459). 11. Dancing under religious excitement, esp. possession by
Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13.
Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
(சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின்
குருளையும் (சிலப். 25, 48).

அணங்குதல் என்பதன் முதற்பொருள் வருத்துதல். affilction, suffering.
தமிழ் (திராவிட ஸப்ஸ்ட்ரேற்றம் உள்ள இந்தியா) கிராமங்களில் நாம் காணும்
பேய்ச்சி, பிடாரி, மாரி, காளி, குடலுருவி அம்மன் (ஒரு போட்டோ சுபா
தந்திருந்தார்)
இவை அணங்குகள்.

அணங்குடை தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu என்பது
awesome Tamil Nadu, செல்வன் சொல்லும் ஆவ்சம் அமெரிக்கா என்ற
பொருள் ஆகுமா? எனக்குத் தெரியலை.

நா. கணேசன்

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this

Nagarajan Vadivel

unread,
Oct 8, 2011, 9:40:01 AM10/8/11
to mint...@googlegroups.com
செல்வன் ஐயா அவர்கள் குறிப்பிடும் ஆவ்சம் அமெரிக்கா என்பதில் உள்ள ஆவ்சம் என்ற சொல் வியத்தலின் வெளிப்பாடாக எழுப்பப்படும் ஒலி.  ஆங்கிலத்தில் AWE WOW என்று எழும் ஒலியனாக இருக்கக்கூடும்.
தமிழில் ஆவென்று ஒலியெழுப்புவதும் வியத்தலுக்கும் இன்பத்தின் உச்சத்தை அடைவதைக் குறிப்பிடுவதாக் கூறலாம்
திரிகூடராசப்பர் குறத்தி இன்பத்தின் உச்சத்தில் ஆவென்றொருகால் இருகால் உதைப்பாள் என்று கூவியது எனக்கு நினைவுக்கு வருகிறது
(பேருக்கு ஆசிரியரின் கிழ மனதில் அடியில் மண்டியிருக்கும் நினைவில் வருவது இதுவே)
எனவே ஆவ்சம் அமெரிக்காபோல் ஆவென்றிருக்கும் தமிழகம் என்று பொருள் கொள்ளலாமா
நாகராசன்

2011/10/8 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Jean-Luc Chevillard

unread,
Oct 8, 2011, 10:07:00 AM10/8/11
to mint...@googlegroups.com, N. Ganesan
Dear NG,

thanks for the data, BUT ....

My suggestion that Tamil "அணங்குடை" might be a possible rendering for
English "awsome"
was based on the following facts.

அணங்கு is not included in the Cre-A dictionary (2nd edition), which
possibly means that it is considered as belonging to the Classical
resources of Tamil,
rather than to the immediately usable vocabulary (it is a word which
DOES inspire AWE to its potential users :-)

Besides,
அணங்கு occurs 3 times in the குறள், which is the item from Tamil literature
which seems to be the first Classical vocabulary fountain to which
people go when they are thirsty for words...

K1081: அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு
K1082: நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து
K918: ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப மாய மகளிர் முயக்கு

(the combination of those 3 examples nicely seems to show the inherent
AMBIVALENCE of the word அணங்கு
[kindly correct me if I am wrong]

ADDITIONALLY,
when we read the beginning of பரிபாடல் 1,

namely

ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை //
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர //
......................

"அணங்கு உடை" REALLY seems to mean "awe inspiring"
(whatever its connotation might have been in the eyes of Tamil villagers
...)

Does any of those arguments make sense?

The பரிபாடல் also can be used for enriching Modern எழுத்துத் தமிழ் ...

Let us wait for the 3rd or the 4th edition of the Cre-A dictionary ;-)

அன்புடன்

-- Jean-Luc Chevillard (Paris)

Nagarajan Vadivel

unread,
Oct 8, 2011, 10:08:40 AM10/8/11
to mint...@googlegroups.com
ஆவென்றழைக்ககும் தமிழகத்தை வரையறுப்பது எப்படி?
1. தமிழன் தன்னுடைய பழம்பெருமை பேசிப்பேசியே ஆவியைச் செலவழித்துவிட்டுச் சிலையாக நின்றுகொண்டிருக்கிறான்
2. என் முன்னோர்கள் யானையேற்றம் குதிரை ஏற்றம் என்று ஏறி ஏறி பின்புறம் காய்த்துவிட்டது என்று வியப்பவர்கள் அதனால் உனக்கென்ன படிப்பினை என்ன லாபம் என்ற கேள்வியைக் கேட்பதில்லை
3. எத்னோசெண்ட்ரிக் மனக்கட்டுக்குள் முடங்கிக்கொண்டு எதைச் சொன்னாலும் அது எங்கள் தமிழன் செய்ததுதானே என்று பழம் பெருமை பேசுவது முழு நேரத்தொழிலாகக் கொண்டிருக்கிறான்
4. தன் மொழி மரபு பற்றிய இருவேறு கருத்துக்களையும் விமரிசனத்தையும் ஏற்றூக்கொள்ள அவன் மனம் மறுக்கிறது
5. தான் இழப்பதையும் வீழ்வதையும் அறியாமல் மற்ற மொழி மரபு பண்புக்கூறுகள் தன்னைத்தாக்குவதை ஏறுக்கொள்வது உலகத்தமிழனுக்குள்ள பண்பு என்று கருதி இருப்பதையும் இழந்துகொண்டிருக்கிறான்
இந்த மாயப் பிசாசிடமிருந்து வெளிவந்து ஆவென்றலைக்கும் தமிழகத்தை உருவாக்க இன்றைய தமிழ்க் குமுகம் செய்யவேண்டியதென்ன?
சிந்திப்பீர்
நாகராசன்


2011/10/8 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Ganesan, N.

unread,
Oct 8, 2011, 10:33:45 AM10/8/11
to தமிழாயம், mintamil, Santhavasantham, tamizh...@googlegroups.com
விளக்கத்தைத் தமிழ்ப்புலவர் குழுவில் எழுதியதற்கு நன்றி, வேந்தர் ஐயா.

அணங்கு அணங்குதல்/அணுங்குதல் என்னும் சொற்கள் திராவிட மொழிகளில்
உள்ள அடிப்படையான சொல். அதன் அடிப்படையான பொருள் வருத்துதல்,
அச்சுறுத்துதல். சம்ஸ்க்ருதத்துக்கு தமிழ் தந்த சொல் காமம்.
காமன் தமிழ்க் கடவுள். இந்தியா முழுமைக்கும் த்ராவிட ஸப்ஸ்ட்ரேற்றத்தால்
common ஆகிவிட்டான். காமனின் ஒரு பெயர் அனங்கன். அன் + அங்கம் என்று
பிரித்தால் உடல் உறுப்பு தான். காமன் உண்மையிலே சிவன் உடலை எரித்து
உருவமே இல்லாதவன் என்றால் தேஹம் இல்லாதவன் என்றல்லவா
வடசொல் அமையும். காமம் (தமிழ் வடமொழிக்குக் கொடுத்த கடன்)
மிக்கு வருத்துபவன் அணங்கன். இந்த தமிழ்/த்ராவிட கடவுட்கோட்பாடு
அனங்கன் என்று வடமொழி ஆக்கியுள்ளது. அன் + அங்கன் என்ற கதை
சிருஷ்டிப்புகள் கட்டப்பட்டன. இதனை ஜி. யு. போப்பையர் முதலில்
விளக்கி எழுதியுள்ளார்கள்.

வாழ்க நலமுடன்,
நா. கணேசன்

On Oct 8, 9:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

NGanesan> > அணங்குடை தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu


என்பது
> > awesome Tamil Nadu,  செல்வன் சொல்லும் ஆவ்சம் அமெரிக்கா என்ற
> > பொருள் ஆகுமா? எனக்குத் தெரியலை.
>

Venthan> ஆகாது
>
> அது வியப்பு வெளிப்பாடு
> அணங்கு  அச்சம்தரும் சொல்
>
> ஆய்மயில்கொல்? அணங்குகொல்?


>
> மாலும் என் நெஞ்சு
>
>

> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Oct 8, 2011, 10:45:52 AM10/8/11
to மின்தமிழ்

On Oct 8, 9:07 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

Unfortunately not.

Sincerely Yours,
N. Ganesan

piRa pin2n2ar.

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this

Jean-Luc Chevillard

unread,
Oct 8, 2011, 10:59:03 AM10/8/11
to mintamil, Ganesan, N.
Dear NG,

you write:

<QUOTE>

அன் + அங்கன் என்ற கதை
சிருஷ்டிப்புகள் கட்டப்பட்டன. இதனை ஜி. யு. போப்பையர் முதலில்
விளக்கி எழுதியுள்ளார்கள்.

<QUOTE>

Can you substantiate that assertion
by providing quotations from G.U. Pope
(with precise bibliography)?

According to what I remember myself,
I mentionned to you
during one of our exchanges
(which I could trace , if necessary)
that I HAD READ in a book
written by my friend professor Alexander Dubiansky (from MOSCOW university)
that the late professor Thomas Burrow (one of the two authors of the DED)
had proposed that அணங்கு
was ultimately rooted in அநங்கன் (= காமன்)

When I made that remark,
you IMMEDIATELY said you thought that it was a very good suggestion
but George Hart said he did not believe that this was the correct
explanation.

Is this not what happened?

Did G.U. Pope (rather than Thomas Burrow) really write about this?

Please kindly clarify

Best wishes

-- Jean-Luc Chevillard (Paris)

P.S. I do not ccopy this to the other lists
because it DOES create confusion
to do TOO MUCH cross posting.
(the members of the other lists lack the context)

N. Ganesan

unread,
Oct 8, 2011, 11:11:40 AM10/8/11
to மின்தமிழ்

On Oct 8, 9:59 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear NG,
>
> you write:
>
> <QUOTE>
>
> அன் + அங்கன் என்ற கதை
> சிருஷ்டிப்புகள் கட்டப்பட்டன. இதனை ஜி. யு. போப்பையர் முதலில்
> விளக்கி எழுதியுள்ளார்கள்.
>

Dear JLC,

The suggestion for ananga from Dravidian aNaGku was not
done by Th. Burrow first. Even though prof. Burrow said
in 1979 that it is correct. This ananga derivation was first
done by G. U. Pope, made first in his Naladiyar translation.
I've Dubianski's book, and I remember he also mentioning
G. U. Pope as the author of this derivation.

You can check G. U. Pope, then T. Burrow, Dubianski.

anbudan
N. Ganesan

செல்வன்

unread,
Oct 8, 2011, 11:54:43 AM10/8/11
to mint...@googlegroups.com


2011/10/8 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

hat I HAD READ in a book
written by my friend professor Alexander Dubiansky (from MOSCOW university)
that the late professor Thomas Burrow (one of the two authors of the DED)
had proposed that அணங்கு
was ultimately rooted in அநங்கன் (= காமன்)


An old tamil movie song By Papanasam sivan has the words

"அணங்கனே உன் அழகுக்கு உவமையும் ஏது?"

Song: உன் அழகை காண இரு கண்கள் போதாதே MKT bhagavathar


--
செல்வன்

"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்


Jean-Luc Chevillard

unread,
Oct 8, 2011, 11:57:55 AM10/8/11
to mint...@googlegroups.com, N. Ganesan
Dear NG,

I am unable to locate the நாலடியார் translation at the moment
but I have found A.Dubianski's book.

He does write, indeed,
on page 22, fn 39

<QUOTE>
Considering the abundance of erotic motifs in Murukaṉ's mythology and
cult, there are
sufficient grounds to view him as the ancient Tamil god of love. [...]
the obvious similarity between the words /aṇaṅku/ and
/anaṅka/ "the bodiless", an epithet of Kāma, is quite interesting.
G.U. Pope in his commetary to the /nālaṭiyār/ noted the similarity
and suggested, albeit cautiously, that the epithet might have been a
dravidian loanword.
[....] T. Burrow hods that such an interpretation "should be adopted"
</QUOTE>

Has George Hart also adopted the intepretation?

-- jlc

rajam

unread,
Oct 8, 2011, 11:59:00 AM10/8/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, Narayanan Kannan, Innamburan Innamburan
அன்பின் பேராசிரியர் ஐயா,
தமிழகத்திலிருந்து அறிஞர்கள் மேற்படிப்புக்கு ஆய்வுக்கு என்று அமெரிக்கா செல்கிறார்கள்.  

ஆம், நான் அப்படிப் போனவளே.


அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த தமிழ் நாட்டு அறிஞர்கள் குறுகிய காலஅளவில் தமிழகம் வந்து கல்லூரிகளில் (அவர்கள் ஊருக்கருகில் உள்ள கல்லூரிகள்) தங்கள் அறிவு ஆய்வு  வளர்ச்சியைத் தானம் தரலாமே 
தடுப்பது எதுவோ்?


"தலை சிறந்த" என்ற அடைமொழி எனக்குப் பொருத்தமில்லை. ஆனாலும் தமிழுக்காக என் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டவள், செலவிடுபவள் என்ற முறையில் உங்கள் கேள்விக்கு என் கருத்தைப்  பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. எந்தத் தமிழகக் கல்லூரியும் என்னை "வா, வா, இங்கே" என்று என்னை அழைக்கவில்லை.
2. தமிழக அரசு என்னைப் புறக்கணித்தது. அது வெளிநாட்டு அறிஞர்களுக்கும் தெரியும். 
3. புதுவைக்காரர்கள் (நண்பர் ழான் ஆய்வுக்குச் செல்லும் இடம்; EFEO) என்னை மதித்து, விரும்பிச் சில ஆண்டுகளாகவே அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு (2012) செல்ல விருப்பம்.
4. இப்போதைய என் உடல் நிலையில் ... தமிழகம்/புதுச்சேரி போய் இருக்க நடைமுறைச் சிக்கல்கள் நிறைய:
4a. தேவையான வருவாய் இருக்காது. 

4b. காலை 8.30 முதல் மாலை 5.30 வரை ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போய் வர என் உடல் நிலை இடம் தாராது.
4c. புதுவையில் தவிர, தமிழகத்தில் என் எழுத்துக்குத் தேவையான அமைதியான சூழல் கிடைக்கவில்லை.  
4d. அடிக்கடி மின்வெட்டு; கணினியைப் பயன்படுத்த முடியவில்லை.

4e. என் நடையுதவியுடன் (walker) தெருக்களில் நடக்க முடிவதில்லை -- மேடு பள்ளங்கள் நிறைய; அதோடு ... ஆட்டோவும் பிற வண்டிகளும் மக்களும் எனக்காக ஒதுங்கியோ, நிறுத்தியோ வழிவிடுவதில்லை. (இங்கே அமெரிக்காவில் அப்படியில்லை. இன்னும் தனியாக வண்டி ஓட்டுகிறேன், குறிப்பிட்ட கடைகளுக்கும், மருத்துவரிடமும் தனியாகப் போய்வர முடிகிறது.)

4f. தமிழக/புதுச்சேரியில் ... காய்கறிக் கடைக்குப் போனாலும் இடித்துத் தள்ளுகிறார்கள், கீழே விழுந்துவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது. (நான் கீழே விழுந்தால் எனக்கும் தொல்லை, என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தொல்லை.)

4g. நான் இங்கே பச்சைக் காய்கள்/பழச்சாறு வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். அங்கே எனக்கு வேண்டிய பச்சைக் காய்கள், நார்ச்சத்துள்ள நல்ல பழங்கள் கிடைக்கவில்லை. வாங்கிய பழங்களும் விரைவில்  கெட்டுவிடுகின்றன. 

4h. இங்கேயிருந்து போய்வரும் செலவை யார்  தருவார்கள்? 

... ... ...
இப்படி இன்னும் பல நடைமுறைச் சிக்கல்கள். எல்லாவற்றையும் நேர்மையான முறையில் பார்த்து ... இவள் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போகிறாளோ, இருக்கும் காலத்திற்குள் இவளுக்குத் தெரிந்த தமிழைப் பற்றி நாமும் தெரிந்துகொள்ளுவோம் என்று யாராவது நினைத்து, "வா, வா" என்று அழைத்தால் வர முயல்வேன். :-) :-) :-)
தங்களுக்குப் புரியுமோ என்னவோ தெரியவில்லை.
அன்புடன்,
ராஜம்


N. Ganesan

unread,
Oct 8, 2011, 12:17:01 PM10/8/11
to மின்தமிழ்

On Oct 8, 10:54 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/10/8 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>


>
> > hat I HAD READ in a book
> > written by my friend professor Alexander Dubiansky (from MOSCOW university)
> > that the late professor Thomas Burrow (one of the two authors of the DED)
> > had proposed that அணங்கு
> > was ultimately rooted in அநங்கன் (= காமன்)
>
> An old tamil movie song By Papanasam sivan has the words
>
> "அணங்கனே உன் அழகுக்கு உவமையும் ஏது?"
>
> Song: உன் அழகை காண இரு கண்கள் போதாதே MKT bhagavathar
>

Selvan,

It was not T. Burrow who proposed anangan from aNaGku,
it was G. U. Pope. See JLC quoting from Dubianski book.
Also, T. Burrow in his orig. paper gives credit to Pope.

காமவேளை (அனங்கன்) அழகானவன் என்பது
தமிழ் இலக்கியம். பாபனாசம் சிவன் பாட்டில்
“அனங்கனே உன் அழகுக்கு உவமையும் ஏது?”
என்றிருக்கும் என நினைக்கிறேன். பாட்டு
யுட்யூப் (அ) பாட்டுவரிகள் கிடைத்தால் தாருங்கள்.
போப்பையரும், பர்ரோவும் அனங்கன் என்ற
சொல்லை வடமொழி படைத்த வரலாற்றைக்
காட்டியுள்ளனர்.

நா. கணேசன்

> --

rajam

unread,
Oct 8, 2011, 12:32:51 PM10/8/11
to mint...@googlegroups.com, செல்வன்
இது பழைய போராட்டம். ஈடுபட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் விட்டாலும் தவறு அல்லவா?
"அணங்கு" பற்றிய என் ஆய்வுக் கட்டுரையை இணைத்து அனுப்புகிறேன். அது சரியாக உங்கள் கணினியில்  இறங்கவில்லை என்றால் ... இங்கே என் தளத்திற்கு ( http://letsgrammar.org/occasionals.html ) போய், 'On "aNanku" ' என்ற சுட்டியைச் சொடுக்கித் தரவிறக்கிக்கொள்ளவும்.
என் கருத்தை யார்மேலும் திணிக்க விரும்பவில்லை. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அறிவு, ேர்மை, சால்பு ... இவற்றின் துணையுடன் சிந்தித்து ... தயவுசெய்து "அணங்கு" என்ற சொல்லைப் பெண்ணுடன் மட்டும் தொடர்புபடுத்தாதீர்கள். இது என் வேண்டுகோள். அவ்வளவே.
மற்றபடி ... உங்கள் ஆய்வு பன்மடங்கு சிறக்க என் வாழ்த்துக்கள்! !
அன்புடன்,
ராஜம்

Anangku-Rajam.pdf

செல்வன்

unread,
Oct 8, 2011, 1:08:12 PM10/8/11
to mintamil
பாகவதர்: உன் அழகை காண இரு கண்கள் போதாதே..
என் கண்கள் போதாதே
உனதெழிலில் ரதி மங்கையும் நிகரோ நாணமுறாளோ?

பெண்: அணங்கனே உன் அழகிற் உவமையும் ஏது?
இனி உவமையும் ஏது?
அமரர் நிலை உலகமதை, அமரர் நிலை உலகமதை
நான் விரும்பேனே, இனி நான் விரும்பேனே

பாகவதர்: செவியில் அமுதை பிழிந்திட்ட குயில்மொழி அணங்கே
எம் குயில்மொழி அணங்கே
சிந்தை கவர் பூங்கோதாய்..தன்னை மறந்தேன்
ஜெகம் தன்னை மறந்தேன்

http://www.geetham.net/forums/showthread.php?31392-M.K.Thyagaraja-Bhagavathar-83-songs

N. Ganesan

unread,
Oct 8, 2011, 3:02:19 PM10/8/11
to மின்தமிழ்

On Oct 8, 12:08 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> பாகவதர்: உன் அழகை காண இரு கண்கள் போதாதே..
> என் கண்கள் போதாதே
> உனதெழிலில் ரதி மங்கையும் நிகரோ நாணமுறாளோ?
>
> பெண்: அணங்கனே உன் அழகிற் உவமையும் ஏது?

ஆண் பெண்ணை ‘ரதி மங்கையும் நிகரோ உனதெழிலில்’ என
பெண் ‘அனங்கனே உன் அழகிற்குவமையுண்டோ’ என தூக்குகிறாள்.

ரதி - பெண், அவள் கணவன் அனங்கன் (மன்மதன், மாரன் “மரணம்” என்ற சொல்லோடு
தொடருடையது).

நல்ல பாட்டு. கேட்டேன். நன்றி.

கணேசன்

> இனி உவமையும் ஏது?
> அமரர் நிலை உலகமதை, அமரர் நிலை உலகமதை
> நான் விரும்பேனே, இனி நான் விரும்பேனே
>
> பாகவதர்: செவியில் அமுதை பிழிந்திட்ட குயில்மொழி அணங்கே
> எம் குயில்மொழி அணங்கே
> சிந்தை கவர் பூங்கோதாய்..தன்னை மறந்தேன்
> ஜெகம் தன்னை மறந்தேன்
>

> http://www.geetham.net/forums/showthread.php?31392-M.K.Thyagaraja-Bha...

செல்வன்

unread,
Oct 8, 2011, 5:49:23 PM10/8/11
to mintamil


2011/10/8 rajam <ra...@earthlink.net>

இது பழைய போராட்டம். ஈடுபட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் விட்டாலும் தவறு அல்லவா?
"அணங்கு" பற்றிய என் ஆய்வுக் கட்டுரையை இணைத்து அனுப்புகிறேன். அது சரியாக உங்கள் கணினியில்  இறங்கவில்லை என்றால் ... இங்கே என் தளத்திற்கு ( http://letsgrammar.org/occasionals.html ) போய், 'On "aNanku" ' என்ற சுட்டியைச் சொடுக்கித் தரவிறக்கிக்கொள்ளவும்.
என் கருத்தை யார்மேலும் திணிக்க விரும்பவில்லை. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அறிவு, ேர்மை, சால்பு ... இவற்றின் துணையுடன் சிந்தித்து ... தயவுசெய்து "அணங்கு" என்ற சொல்லைப் பெண்ணுடன் மட்டும் தொடர்புபடுத்தாதீர்கள். இது என் வேண்டுகோள். அவ்வளவே.


கட்டுரைக்கு நன்றி அம்மா..முழுக்க படித்து முடித்தேன்.அணங்கு எனும் சொல்லின் முழு பரிமாணத்தையும் விளக்கும் கட்டுரை.

rajam

unread,
Oct 8, 2011, 8:18:32 PM10/8/11
to mint...@googlegroups.com, செல்வன்
அதுக்கென நேரம் ஒதுக்கி, கட்டுரையைப் படித்துக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி செல்வன்!
ஒவ்வொரு சொல்லையும் கால வாரியாக அதன் வரவு, ஆட்சி இவற்றின்படி ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே அகராதிகளைப் புரட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு செய்யுள்களை உரைகாரர்களின் உதவி மட்டுமே கொண்டு படித்து ... "அமோகமான ஆய்வு முடிவுகள்" வெளியியிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; மதிப்பும் இல்லை!
:-) :-) :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

செல்வன்

unread,
Oct 8, 2011, 10:23:23 PM10/8/11
to mintamil


2011/10/8 rajam <ra...@earthlink.net>

அதுக்கென நேரம் ஒதுக்கி, கட்டுரையைப் படித்துக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி செல்வன்!
ஒவ்வொரு சொல்லையும் கால வாரியாக அதன் வரவு, ஆட்சி இவற்றின்படி ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே அகராதிகளைப் புரட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு செய்யுள்களை உரைகாரர்களின் உதவி மட்டுமே கொண்டு படித்து ... "அமோகமான ஆய்வு முடிவுகள்" வெளியியிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; மதிப்பும் இல்லை!
:-) :-) :-)


அம்மா,

இந்த கட்டுரை தமிழ் இலக்கியம் பற்றி அறியாத என்னை போன்ற பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையான நடையில் உள்ளது.சர்வதேச அளவில் பல நாடுகளுக்கும் சென்று சேரும் கட்டுரை என்பதால் இருக்கலாம் என கருதுகிறேன்.கட்டுரையில் உங்கள் திறனாய்வு ஆற்றல் முழுவீச்சில் வெளிப்படுகிறது. அணங்கு எனும் சொல்லின் முப்பரிமாணங்களை கட்டுரை விளக்குகிறது. கட்டுரையை முதலில் படிக்கையில் "ஒரு சொல்லுக்கு இத்தனை மாறுபட்ட பொருள் ஏன்?" என குழப்பம் வந்தது.ஆனால் அதன்பின் ஆயிரகணக்கான ஆண்டுக்கால இடைவெளிகளில் சொற்களுக்கான பொருள் இப்படி மாறுவது இயற்கையே என தெளிவு பெற்றேன்.

இதில் உங்கள் லிடெரேச்சர் ரிவ்யூ, மற்றும் அதை நீங்கள் விளக்கும் விதம் இரண்டும் மிகவும் பாராட்டுகுரியவை.இதுபோன்ற ஜர்னல்களை தமிழ்நாட்டு பல்கலைகழகங்களில் வகுப்பெடுக்க பயன்படுத்தினால் மாணவர்களுக்கு எத்தனை பலன் கிடைக்கும்,ஏன் அதை செய்யாமல் இருக்கிறார்கள் என நினைத்தால் வருத்தமாக உள்ளது

இழையில் ழான் குறிப்பிட்டது போல ஆவ் என்ற பொருளும் அணங்கு என்பதற்கு வருகிறது என கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதனால் அணங்குடை அமெரிக்கா என சொல்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா? (ஆனால் அந்த இழையின் தலைப்பு ஆவ்சம் அமெரிக்கா என தான் எழுதுவேன் என்பது வேறு விஷயம்:-)

N. Ganesan

unread,
Oct 8, 2011, 10:33:47 PM10/8/11
to மின்தமிழ்
On Oct 8, 9:23 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> இழையில் ழான் குறிப்பிட்டது போல ஆவ் என்ற பொருளும் அணங்கு என்பதற்கு வருகிறது
> என கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதனால் அணங்குடை அமெரிக்கா என சொல்வது
> பொருத்தமாக இருக்கும் அல்லவா? (ஆனால் அந்த இழையின் தலைப்பு ஆவ்சம் அமெரிக்கா என
> தான் எழுதுவேன் என்பது வேறு விஷயம்:-)
> --
> செல்வன்
>

அணங்குடை அமெரிக்கா என்று எழுதினால்
fear/distress/suffering causing America என்று பொருள் வரும்.
மிடில் ஈஸ்ட்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

அணங்குடை தமிழ்மண் = Tamil country causing distress/suffering.

3 குறளில் அணங்கு வருகிறது. என்ன பொருள் என்று படித்துப்
பாருங்கள்:
அணங்குதாக்கு aṇaṅku-tākku, n. < id. +. Possession by a demoness of
lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)

அணங்கு பொருள்கள் என்ன?

DEDR 112

112 Ta. aṇaṅku (aṇaṅki-) to suffer, be distressed, be slain; to
afflict; n. pain, affliction, killing; aṉuṅku (aṉuṅki-) to suffer
pain, be in distress, fade, droop; aṉukku (aṉukki-) to distress, cause
to suffer, ruin; aṉukkamsuffering, distress, pain, weakness. Ka. aṇaku
to press into a narrower compass, subdue, control; aṇacu to depress,
humble; aṇaka closeness, compactness, firmness, state of being in good
repair; aṇakuve humbleness, modesty; aṇagu to hide, disappear, be
humbled, crouch; aṇuṅku to depress, humble, abate, ruin, destroy;
aṇuṅgu to be depressed, etc. Tu. aṇaka narrowness, closeness; narrow,
small. Te. aṇãgu to yield, submit, be humbled; aṇãcu to suppress,
humble, subject; aṇãkuva humility, modesty, submissiveness. Go. (Tr.)
ancānā to press (Voc. 21). DED(S) 56(b).

நா. கணேசன்

செல்வன்

unread,
Oct 8, 2011, 10:38:15 PM10/8/11
to mint...@googlegroups.com


2011/10/8 N. Ganesan <naa.g...@gmail.com>

அணங்குடை அமெரிக்கா என்று எழுதினால்
fear/distress/suffering causing America என்று பொருள் வரும்.
மிடில் ஈஸ்ட்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

ராஜம் அம்மா சொல்வதை பாருங்கள்

If one synthesizes this material, one sees that ananku
can be understood as signifying a bundle of diverse
qualities:
charming, stunning, sexually appealing, overwhelming,
captivating, persisting .....
awe-inspiring, reverential, frightening .....
inexplicable, mysterious, phenomenal .....
spectacular, panoramic, picturesque .....
afflicting, dangerous, gruesome, .....
and undefeatably strong.

When one or more of the qualities given above were
present in an entity, it was perceived to "have" some
quality which the ancient Tamils chose to call ananku

N. Ganesan

unread,
Oct 8, 2011, 10:46:06 PM10/8/11
to மின்தமிழ்

On Oct 8, 9:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/10/8 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > அணங்குடை அமெரிக்கா என்று எழுதினால்
> > fear/distress/suffering causing America என்று பொருள் வரும்.
> > மிடில் ஈஸ்ட்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
>

அணங்கு போல அமெரிக்கா வருத்தினால்/நெருக்கினால்
மற்ற எல்லாமும் வரும். affliction/compression causes
all these. Did you see what Dravidian Etymological Dictionary
gives as the root meanings?

அணங்கியோன் aṇaṅḳiyōṉ
, n. < அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ
ளணங்கி யோனே (ஐங்குறுநூறு 182).

வியட்னாமை அணங்கியோன் அமெரிக்கன்.

N. Ganesan

N. Ganesan

unread,
Oct 8, 2011, 10:50:14 PM10/8/11
to மின்தமிழ்

செல்வன்,

அணங்குடை அமெரிக்கா = fearsome or afflicting America.

அன்புடன்
நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Oct 8, 2011, 11:41:11 PM10/8/11
to mint...@googlegroups.com
இப்பவே கண்ணைக்கட்டுதே
செல்வன் அவர்கள் அகலப்பாதையில் பயணிக்க விரும்புகிறார்.  அவர் அமெரிக்காவின் சிறப்பை விளக்க அமெரிக்கர் பயன்படுத்தும் ஆவ்சம் என்ற சொல் பொருத்தமானது என்று கருதுகிறார்.  அவர் நோக்கம் தன் கருத்தைக் குழப்பமில்லாமல் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  அதற்காக அங்கிலச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவது உகந்தது என்று கருதுகிறார்
ராஜம் அம்மா அவர்கள் காட்டும்பாதை குறுகலானது.  ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பல்வேறு பொருள் பேச்சுக்குழுவின் கால இடம் சார்ந்த பயன்பாட்டின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியடைகிறது.  எனவே ஒரு சொல் பற்றீய பயன்பாட்டு வரலாறை இலக்கியம் சமூகவியல் பரபியல் மானிடவியல் என்று பலகோணங்களிலும் ஆய்வுசெய்து தொகுக்கப்படவேண்டும்.  அதுபோன்ற முயற்சி ஒரு சொல்லைப் பயன்படுத்தும்முன் அதுபற்றிய தரவு தகவல் தெரிந்து எழுதினால் கருத்துப் பரிமாற்றத்தில் குழப்பம் நேரிடுவதைக் குறைக்கமுடியும் என்று கூறுகிறார்
திரு கணேசனார் அவருடைய அரவை மில்லில் இருந்து இம்மென்னும் முன்னே ஒரு முழுநீளப் பட்டியலை வெளியிட்டு அதில் எதுவேண்டும் மனமே எதுவேணும்னாலும் எடுத்துக்கோ என்று சொல்லுகிறார்
மடலாடற்குழுவில் மடலாடும்பொது கேட்காமலே கிடைப்பது பொருள் அறிவதில் ஏற்படும் மயக்கம்.  ஹரிகி அவர்கள் பாலாஜி பற்றி பாலை என்று சொன்னால் என் பாலைவன மனம் பாலை நிலத்தை நினைக்கிறது.  மொழிக் கருத்துப்பரிமாற்றத்தில் இதுபோன்ற மயக்கத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை உண்டு என்றாலும் ஒருசொல் ஒருபொருள் என்ற பயன்பாட்டில் இருக்கும்வரை சொல்லுபவர் கருத்தை மற்றவர்கள் ஐயம் திரிபின்றிப் புரிந்துகொள்ள முடியும்.  இது என் போன்ற பாமரர்களுக்கு உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள உதவும்
தமிழ் என்றாலே கொஞ்சம் வார்த்தைச் சிலம்பம் சலாம் வரிசையுடன் நடப்பது இயல்புதானே.  தங்களுடைய வார்த்தைஜாலங்களில் கோலம்போடுவதை விரும்பும் அறிஞர்கள் இந்த அகலப் பாதையையும் குறுகலான பாதையும் கணக்கில் கருத்தில் கொள்ளவேண்டும்.  ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தயைத் தெரிந்து பயன்படுத்தவேண்டும்
ஒருமுறை அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் ஒரு பெண்ணுக்கு எத்தனைபற்கள் என்ற விவாதத்தை ஆரம்பித்துப் பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி விவாதிக்கொண்டிருந்தாராம்.  அவருக்கு இரண்டு மனைவிகள்.  யாராவது ஒருவரின் வாயைத் திறக்கச் சொல்லி பற்களை உடனே எண்ணியிருக்கலாமே என்று கூறுவதுண்டு.  இன்றைய நிலையில் இரண்டு அணுகுமுறைகளும்ம் தேவை.
ஆங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கவும் சரியான சொல்லைப் பயன்படுத்தவும் ராஜம் அம்மா போன்ற அறிஞர்கள் தமிழ் மொழிப்பயன்பாட்டுக்கு கையேடும் வழிகாட்டியும் உருவாக்கித்த்ருவது கலப்புத்தமிழ் குழப்பத்தமிழ் என்ற தமிழ்ப் பயன்பாட்டில் இருந்து ஒரு்படி முன்னேற உதவக்கூடும்
நாகராசன்

2011/10/9 N. Ganesan <naa.g...@gmail.com>

rajam

unread,
Oct 9, 2011, 12:33:35 AM10/9/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
பேராசிரியர் ஐயா,
நான் இரண்டு மனைவிகள் இல்லாத அரிஸ்டாட்டில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!
:-) :-) :-)

seshadri sridharan

unread,
Oct 9, 2011, 12:42:05 AM10/9/11
to mint...@googlegroups.com
அணங்கு அணங்குதல்/அணுங்குதல் என்னும் சொற்கள் திராவிட மொழிகளில்  உள்ள அடிப்படையான சொல். அதன் அடிப்படையான பொருள் வருத்துதல், அச்சுறுத்துதல். சம்ஸ்க்ருதத்துக்கு தமிழ் தந்த சொல் காமம்.காமன் தமிழ்க் கடவுள். இந்தியா முழுமைக்கும் த்ராவிட ஸப்ஸ்ட்ரேற்றத்தால் common ஆகிவிட்டான். காமனின் ஒரு பெயர் அனங்கன். அன் + அங்கம் என்று பிரித்தால் உடல் உறுப்பு தான். காமன் உண்மையிலே சிவன் உடலை எரித்து  உருவமே இல்லாதவன் என்றால் தேஹம் இல்லாதவன் என்றல்லவா வடசொல் அமையும். காமம் (தமிழ் வடமொழிக்குக் கொடுத்த கடன்) மிக்கு வருத்துபவன் அணங்கன்.
அணங்கன்,  காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால் அவை தமிழ் வேர் உணையன் என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில் கிட்டிய பானை ஓட்டில் சிந்து எழுத்தில் அணன்க என னகர மெய் இன்றி  எழுதப்பட்டுள்ளது. ணைமையில் பிரகாச் சுகுமாறன் அனுப்பிய பாறை எழுத்து படத்திலும இநத பெயர் அணங்(க) என உள்ளது அதை இங்கு ஒட்டுகிறேன்
 
 
03.jpg
   இநத படத்தின் நடுவில் மேலே ஒரு ஆள் சர்க்கஸ் வளையத்தைப் பிடித்து இரு கால்களையும் மேலே தூகுவது கோல் உள்ளதே அதன் ஒலி- அ, வட்டத்ததுள் சூலம் -  ண ஒலி.  அடுத்து வரும நாமம் -  ங  (ன்க) ஒலி. இதை அணங்க என படிக்கலாம். இதே போன்ற ஒரு ஆள் படமும்,  தன் இருபுறமும் ஒரு கோடுகளும் தலை மேல் ஒரு கோடும் ஒரு ஆஙகில U வடிவும்  சானூர் பானை ஒட்டில் எழுதப்பட்டுள்ளது. எனவே அணங்கன் எனற பெயர் சங்க  காலத்தில்  பரவலாக வழங்கிய தமிழ்ப்பெயர்.
 
சேசாத்திரி 
 
வாழ்க நலமுடன்,
நா. கணேசன்

On Oct 8, 9:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

NGanesan> > அணங்குடை தமிழ்நாடு = suffering or afflicted Tamil Nadu
என்பது
> > awesome Tamil Nadu,  செல்வன் சொல்லும் ஆவ்சம் அமெரிக்கா என்ற
> > பொருள் ஆகுமா? எனக்குத் தெரியலை.
>
Venthan>  ஆகாது
>
> அது வியப்பு வெளிப்பாடு
> அணங்கு  அச்சம்தரும் சொல்
>
> ஆய்மயில்கொல்? அணங்குகொல்?
>
> மாலும் என் நெஞ்சு
>
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
03.jpg

seshadri sridharan

unread,
Oct 9, 2011, 12:46:48 AM10/9/11
to mint...@googlegroups.com


பிழை திருத்தம்.
அணங்கன்,  காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால் அவை தமிழ் வேர் உடையன என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில் கிட்டிய பானை ஓட்டில் சிந்து எழுத்தில் அணன்க என னகர மெய் இன்றி  எழுதப்பட்டுள்ளது. அண்மையில் பிரகாசு சுகுமாறன் அனுப்பிய பாறை எழுத்து படத்திலும் இநத பெயர் அணங்(க) என உள்ளது அதை இங்கு ஒட்டுகிறேன்

N. Ganesan

unread,
Oct 9, 2011, 9:32:09 AM10/9/11
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com
அரிய செய்திகள், சேசாத்திரி ஐயா. நன்றி. தமிழறியாத இங்கிலீஷ்காரங்களிடம்
குழப்பம் இருக்கலாம்.

அணங்குதல்/அணுங்குதல் என்றால் அடிப்படைப் பொருள் வருத்துதல்.
எல்லா இடங்களிலும் இப்பொருள் - அச்சம் தரும், வருத்தம் ஊட்டும் -
சங்க இலக்க்கியத்தில் உள்ளது. பெரும்பான்மையும் தலித், சீர்மரபினர்
இனத்தாரை
பூசகராய்க் கொண்ட கிராம சிறுதேவதை வழிபாட்டில் அணங்கு பிரதான
இடம் வகிக்கிறது. ஒன்றை நெருக்கி சிறிதாக்கல் அணுக்குதல். இதில் இருந்து
பிறக்கும் சொல்: அணு. *அணு* என்ற தமிழ்ச் சொல் சம்ஸ்கிருதத்தில்
கடனாகச் சென்ற சொல் ஆகும்.

முனைவர் செல்வன் அநங்கன் (=ரதி புருஷன்) என்னும் வார்த்தையை பழைய
சினிமாப்பாட்டை எழுதுங்கால் அணங்கன் என்று எழுதினார்.
திரு. போப்பையர் அனங்கன் < அணங்கன் என்று முதலில் சொல்லியவர்
(நாலடியார்). அவர்தரும் ஜீவக சிந்தாமணிப் பாடலைக் கண்டுபிடித்து
எழுதவேண்டும். அணங்கு/அணுங்கு- அனுங்கு-/அனங்கு- என்ரும்
ஆகும். “பல்லவம் அனுங்க” (கம்பர்). கொற்றவையை (< கொல்- ) கொல்லிப்பாவை
என்போம். கொல்லுதல் அடியாகக் கொண்ட கொல்லி கொற்றவை.
அவளாக தமிழைப் பார்ப்பதும் துறைமங்கலம் வீரசைவர்கள்
துவக்கிவைத்தது. (அதற்குமுன் வில்லிபுத்தூர் பாரதத்தில்
பூதேவியாகத் தவழ்ந்தவள்). எல்லிஸ், கால்ட்வெல் திராவிட
மொழிக்குடும்பத்தின் தலைவியாய் செந்தமிழ் அணங்கு
ஆக்கியதன் தாக்கம் தமிழ்த்தாய்வாழ்த்து. அதில் கொற்றவையாய்
(< கொல்- ) மாற்றாருக்கு துர்க்கையாய் இருப்பவள் தமிழணங்கு.
தமிழின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று மனோன்மணீயப்
பாயிரம்.

அணங்குடை அமெரிக்கா = Fearsome or distressing America.

பிற பின்னர்
நா. கணேசன்

On Oct 8, 11:42 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > அணங்கு அணங்குதல்/அணுங்குதல் என்னும் சொற்கள் திராவிட மொழிகளில்  உள்ள
> > அடிப்படையான சொல். அதன் அடிப்படையான பொருள் வருத்துதல், அச்சுறுத்துதல்.
> > சம்ஸ்க்ருதத்துக்கு தமிழ் தந்த சொல் காமம்.காமன் தமிழ்க் கடவுள். இந்தியா
> > முழுமைக்கும் த்ராவிட ஸப்ஸ்ட்ரேற்றத்தால் common ஆகிவிட்டான். காமனின் ஒரு
> > பெயர் அனங்கன். அன் + அங்கம் என்று பிரித்தால் உடல் உறுப்பு தான். காமன்
> > உண்மையிலே சிவன் உடலை எரித்து  உருவமே இல்லாதவன் என்றால் தேஹம் இல்லாதவன்
> > என்றல்லவா வடசொல் அமையும். காமம் (தமிழ் வடமொழிக்குக் கொடுத்த கடன்) மிக்கு
> > வருத்துபவன் அணங்கன்.
>
> அணங்கன்,  காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால்

> அவை தமிழ் வேர் உடையன என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில்

வேந்தன் அரசு

unread,
Oct 9, 2011, 11:36:46 AM10/9/11
to thami...@googlegroups.com, மின்தமிழ்
”இருந்த பெரும் தமிழ் அணங்கே”

தமிழை அணங்காக்கியது என்னோ?

9 அக்டோபர், 2011 9:32 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


--

Nagarajan Vadivel

unread,
Oct 9, 2011, 1:10:18 PM10/9/11
to மின்தமிழ்


---------- Forwarded message ----------
From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Date: 2011/10/9
Subject: Re: [MinTamil] Re: "ஆவ்சம் ஆவசம் தமிழ்நாடு என்று சொல்வது?"
To: rajam <ra...@earthlink.net>


அன்புடை ராஜம் அம்மா அவர்களுக்கு
தமிழகக் கல்லூரிகளில் நிலவும் நிலை வெளியில் உள்ள உங்களைப் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் பார்வைக்குப் படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 900-க்கு மேற்பட்ட கல்லூரிகள் 500-க்கு மேற்பட்ட பொறியியற் கல்லூரிகளும் அடக்கம்
தக்தியான ஆசிரியர்கள் பற்றாக்குறையை வெளியில் இருந்து அழைக்கப்படும் பேராசிரியர்களைக்கொண்டே ஒவ்வொரு ஆண்டும் சமாளிக்கப் படுகிறது
தமிழகக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர்கள்
 தெரிந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாநாடு கருத்தரங்கம் என்று கல்வித் திருவிழாக்கள்
மொத்தத்தில் ஆள்பற்றாக்குறை
உங்களைப்போன்ற மூத்தவர்கள் என்னைப்போன்ற இளையவர்களைப் பார்த்து உடலை வருத்தாது பணிபுரியும்
 
அரூப சொரூப நாம ரூப சங்கீர்த்தனம்
 
செய்யலாம்
இணையத்தின் மூலம் மின் அஞ்சல் மூலம் மின் தமிழில் சில பாடங்களைத் தொகுத்து ஒரு வகுப்பாகக் கொடுக்கலாம்
அதுபோன்றே இணையத்தில் ஆன்லைன் வகுப்புகளையும் நீங்கள் திட்டமிடலாமே
நீங்கள் குறிப்பிடும் காரணங்கள் முதுமையில் கவனமாக இருக்கவேண்டுயதை வலியுறுத்தும் அடிப்படைக் காரணங்கள்
சுவரை வைத்துத்தானே சித்திரம் தீட்டமுடியும்
நாகராசன்

2011/10/8 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Oct 9, 2011, 2:12:35 PM10/9/11
to mint...@googlegroups.com

ஐயா! பேராசிரியரே,

செய்யலாம்...இணையத்தின் மூலம் மின் அஞ்சல் மூலம் மின் தமிழில் சில பாடங்களைத் தொகுத்து ஒரு வகுப்பாகக் கொடுக்கலாம்... ஆன்லைன் வகுப்புகளையும் நீங்கள் திட்டமிடலாமே... ஆனால், ஸர்.பி.ராஜகோபாலாச்சரியார் சொன்னாற்போல, ‘அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். பாடம் வந்தது. படித்தோம்/படிக்கவில்லை என்று கூட சொல்லாதவர்களை என்னத்தை செய்யலாம்??


சுவரை வைத்துத்தானே சித்திரம் தீட்டமுடியும்!

இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Oct 9, 2011, 2:24:21 PM10/9/11
to mint...@googlegroups.com
//‘அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். பாடம் வந்தது. படித்தோம்/படிக்கவில்லை என்று கூட சொல்லாதவர்களை என்னத்தை செய்யலாம்??//
 
அவர்கள் பரிபூரணர்கள். நீங்கள் இன்னம் பூரணம் அடையாதவர் என்ற நிலையைக் கடந்து பரிபூரண நிலையை அடைந்துவிட்ட நிலையை உணர்ந்தவர்கள் அவர்களை ஒன்றும் செய்ய இயலாது.  அவர்கள் போக்கிலே போக விட்டுவிட வேண்டும்
நாகராசன்

2011/10/9 Innamburan Innamburan <innam...@gmail.com>

--

rajam

unread,
Oct 9, 2011, 2:44:56 PM10/9/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan, Nagarajan Vadivel
நாயாய் ... பேயாய் உழைத்தாலும் ... வாசி தீரவே ... காசு வேண்டுமே, அதற்கென்ன வழி?

N. Kannan

unread,
Oct 9, 2011, 7:00:01 PM10/9/11
to mint...@googlegroups.com
2011/10/9 N. Ganesan <naa.g...@gmail.com>

> > அணங்கன்,  காமன் ஆகிய இரு பெயர் சொற்களும் சிந்து முத்திரையில் காணப்படுதலால்
> > அவை தமிழ் வேர் உடையன என்பதில் ஐயம் இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள சானூரில்
> > கிட்டிய பானை ஓட்டில் சிந்து எழுத்தில் அணன்க என னகர மெய்
> > இன்றி  எழுதப்பட்டுள்ளது. ணைமையில் பிரகாச் சுகுமாறன் அனுப்பிய பாறை எழுத்து
> > படத்திலும இநத பெயர் அணங்(க) என உள்ளது அதை இங்கு ஒட்டுகிறேன்
> >

இது பற்றி நான் அஸ்கோ பர்ப்போலாவிடம் சொன்னபோது சிந்து முத்திரை
தமிழகத்தில் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். தென்னகத்தில்
உள்ளவை சிந்து முத்திரைகளென்று அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?

நா.கண்ணன்

Jean-Luc Chevillard

unread,
Oct 9, 2011, 7:16:07 PM10/9/11
to mint...@googlegroups.com, N. Kannan
Dear Kannan,

you ask

<QUOTE>


தென்னகத்தில் உள்ளவை சிந்து முத்திரைகளென்று அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?

</QUOTE>

I am not sure what you mean when you say


"அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?"

because Tamil Nadu has often been governed by people who thought
they could OFFICIALLY decide what was the scientific TRUTH
by passing a G.O. (Government Order).
;-)

HOWEVER,
most importantly,
I do not think that the very good scientific journal
called ஆவணம்
(edited by the Tamil Nadu Archaeological Society)
has ever considered that serious discoveries
had been made in that domain.

The latest issue of
ஆவணம் is number 22
and it came out in july 2011


Best wishes

-- jlc (Paris)

செல்வன்

unread,
Oct 9, 2011, 7:44:24 PM10/9/11
to mint...@googlegroups.com


2011/10/8 N. Ganesan <naa.g...@gmail.com>

அணங்கு போல அமெரிக்கா வருத்தினால்/நெருக்கினால்
மற்ற எல்லாமும் வரும். affliction/compression causes
all these. Did you see what Dravidian Etymological Dictionary
gives as the root meanings?


டிக்சனரியை விட பியர் ரிவ்யு ஜர்னல் கட்டுரையில் வருவது பன்மடங்கு நம்பகமானது,ஆழமானது

ராஜம் அம்மாவின் கட்டுரையில் அணங்கின் பன்முகதன்மை அழகாக விளக்கக்கபட்டுள்ளது.

N. Ganesan

unread,
Oct 10, 2011, 12:14:30 AM10/10/11
to மின்தமிழ்
செல்வன்,

உங்கள் ஆய்வுக்கு:

"ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி"
(பொருநராற்றுப்படை)

"மானினது வருத்துதலையுடைய குருளை"
- நச்சினார்க்கினியர்

N. Ganesan

N. Ganesan

unread,
Oct 10, 2011, 8:40:28 AM10/10/11
to மின்தமிழ்

On Oct 9, 6:00 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/10/9 N. Ganesan <naa.gane...@gmail.com>

அன்பின் நா.கண்ணன்

(a) என் பெயர் இதில் ஏன் குறிப்பிடுகிறீர்கள்?
என் மடல் இல்லையே.

(b) தமிழ் நாட்டில் வேளிர் துவரையில் இருந்து
வலசை வந்து அங்கே இருந்த மக்களுடன்
சேர்ந்து வேளாண் நாகரிகம் தொடங்கி
சுமார் 2800 - 3000 ஆண்டுகளே ஆனது.
எனவே, சிந்து முத்திரை அங்கே கிடைக்க
வாய்ப்பே இல்லை.

(c) ஆனால் 2500 ஆண்டுகளில் கிடைக்கும்
செராமிக் ஓடுகளில் சிந்து குறியீடுகள்
கிடைக்கின்றன. உ-ம்: கோவை சூலூர்
அருகே கிடைத்த மட்கிண்ணம். பிரிட்டிஷ்
ம்யூசியத்தில் உள்ளது. ஐராவதம் கட்டுரை
போட்டோக்களுடன் உள்ளது. ஏராளமான
சிந்து குறிகலுடன் கிட்டிய ஓடுகளின்
ஊர், எந்த நூற்றாண்டு என பட்டியலிட்டு
பேரா. குருமூர்த்தி (ஆர்க்கியாலஜி)
சென்னை பல்கலைக் கழக நூல்.
சேசாத்திரி அவர்கள் குறிப்பிடும்
சானூர் ஓடு காலம் - 2200 -2300 வருடம் இருக்கலாம்.
சிந்து கரையில் 4000 வருஷம் ஆச்சு.

(d) சிந்து எழுத்துக்களை கணேசன் வரி,வரியாய்
படிக்கிறார் என்று சொல்லலையே.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Oct 10, 2011, 9:04:15 AM10/10/11
to mint...@googlegroups.com
இது பற்றி நான் அஸ்கோ பர்ப்போலாவிடம் சொன்னபோது சிந்து முத்திரை தமிழகத்தில் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். தென்னகத்தில் உள்ளவை சிந்து முத்திரைகளென்று அதிகாரபூர்வமாக அறியப்பட்டுள்ளதா?

சென்னைப் பல்கலைக்கழக மேனாள் வரலாற்றியல் துறைத் தலைவர் பேரா. ச. குருமூர்த்தி தென்னகத்தில் கிடைதத பானை ஓட்டு கீறல் எழுத்துகள் சிந்து எழுத்துகளே என  உறுதி செய்து நூல் ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் சுருங்கிய கட்டுரையின் தமிழாக்கம்  ஒன்றை நான் மின்தமிழுக்கு வழங்கி உள்ளேன். சுபா இது தொடர்பாக  உங்களுக்கு உதவக்கூடும் என எண்ணுகிறேன். இவருடைய நேர்காணல் ஒன்று கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் இடம் பெற  நான் ஏற்பாடு செய்து அது கடந்த  மார்ச்சு மாதத்தில் ஒளிபரப்பானது.
  
    சேசாத்திரி
 
நா.கண்ணன்

N. Kannan

unread,
Oct 10, 2011, 9:27:50 AM10/10/11
to mint...@googlegroups.com
புரிகிறது ஐயா!
அஸ்கோவிற்கு இது தெரியாமல் இருக்குமா?
நான் கேட்டபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னார்.
தாங்கள் அவரிடம் மேல்விளக்கம் கேட்கலாம். உங்கள் நண்பரும்தானே அவர்.

நா.கண்ணன்

2011/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 10, 2011, 9:30:57 AM10/10/11
to மின்தமிழ்

On Oct 10, 8:27 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> புரிகிறது ஐயா!
> அஸ்கோவிற்கு இது தெரியாமல் இருக்குமா?
> நான் கேட்டபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னார்.
> தாங்கள் அவரிடம் மேல்விளக்கம் கேட்கலாம். உங்கள் நண்பரும்தானே அவர்.
>
> நா.கண்ணன்
>

என் பெயர் இருக்கவே திடுக்கிட்டேன்.
கிடக்கட்டும். கொரியா - தமிழ் ஆராய்ச்சிகள் எப்படி உள்ளன?

அன்புடன்
நா. கணேசன்

> 2011/10/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Oct 10, 2011, 2:38:34 PM10/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ராஜம் அம்மா போன்ரவர்களின் அனுபவங்களுக்கு விலை பேச முடியாது என்றாலும் அடிப்படை பொருளாதார நிலை சரியாக இருக்கும் போது பொது நலச் சேவை செய்ய மேலும் ஊக்கம் பெறுகும். இவ்வகை அனுபவசாலிகளை, துறை சார்ந்த அறிஞர்களை பயன்படுத்திக் கொள்ளும் விவேகம் தமிழக் கல்லூரிகளில் தோன்றினால் நிச்சயம் இவர்களைப் போன்றவர்கள் தமிழகத்திலேயே நிரந்தரமாக இருந்து சேவையாற்றுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

சுபா. 

2011/10/9 rajam <ra...@earthlink.net>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

seshadri sridharan

unread,
Oct 11, 2011, 5:53:03 AM10/11/11
to mint...@googlegroups.com
சானூர் செங்கல்பட்டு  >  மதுராந்தகத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் கள்ளபிரான்புரம் ஜானகிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடைய உள்ள ஒரு கிராமம் இங்கு உள்ள மலைபுரத் அணிவாரத்தில் 250 மேற்பட்ட கள்பதுகைகள் உள்ளன் அவறறுள் ஐந்தினை மட்டும் 1950 மற்றும் 1952 இல் அகழாய்விற்கு உட்படுததிய போது பல இரும்புப் போர்க கருவிகள் கிட்டின..  அங்கு கிட்டிய பானை ஓடுகளில் கீற்ல் எழுத்துகள் (Graffiti) அறியபபட்டன. சிந்து எழுத்தை ஆய்வோர் எவரும் இந்த கீறல் எழுத்துகள் சிந்து எழுத்துகளே என்பர்.  அந்த கீறல் எழுத்துகள் அடங்கிய படத்தை இணைத்துள்ளேன் ஆர்வர் பார்வைக்கு.

இந்த அகழாய்வு குறித்த விரிவான அறிக்கை  Ancient India (Bulletin of the archaeological survey of India) number 15, 1959 இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்பு 1986 வெளியானது. அதில் 30 ஆம் பக்கத்தில்  சிந்து எழுத்துகளான கீறல் எழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பேரா. சா. குருமூர்த்தி தமது ஆய்வில் கணக்கில் கொண்டுள்ளார். மொத்தம் 39 பானை ஒடுகளில் கீறல் எழுத்துகள் உள்ளன.

சேசாத்திரி

2011/10/10 seshadri sridharan <ssesh...@gmail.com>
sanur graffiti - Indus script.jpg

N. Kannan

unread,
Oct 11, 2011, 9:07:58 AM10/11/11
to mint...@googlegroups.com
சுபா:

ழான் சொல்வது போல் ‘தரம்’ என்பது அங்கு நிரந்தரப்பட பன்னாட்டு
அறிஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். சீனா இவ்விஷயத்தில்
மிகக்குறியாக இருக்கிறது. திறமை வாய்ந்தோர் உலகில் எங்கிருந்தாலும் உடனே
வேலை கொடுத்து அழைக்கிறது. என் துறை சார்ந்த ஒரு மூத்த விஞ்ஞானிக்கு,
சீனாவின் ஐன்ஸ்டைன் விருது வழங்கி கௌரவித்தது. அவர் இரண்டுமுறை ஓய்வு
பெற்றும் அவரை விடுவதாயில்லை. முன்னேறும் நாட்டின் வெறி அது! நம்மவரிடம்
அம்மாதிரி திறமைக்கு ஏங்கும் நோக்கு வர வேண்டும். ராஜம் போன்றோரை என்ன
கொடுத்தாலும் அள்ளிக்கொண்டு போகும் போக்கு வர வேண்டும். நாம்
வாழ்த்துவோம்.

நா.கண்ணன்

2011/10/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Hari Krishnan

unread,
Oct 16, 2011, 1:01:48 AM10/16/11
to santhav...@googlegroups.com, mintamil


2011/10/9 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Please take a look at the commentary on ParipATal 1, by P. V. Somasunadaranar, SISS Kazakam edition. I would translate this way into any language. உரை

Dear Monsieur Jean,

The word அணங்கு has collected complex shades down the centuries that it is not possible to channel and wash it down the only drain that the "inventor" of the meaning imagines.  There is no doubt and indeed no questioning of the fact that the word அணங்கு in the olden days meant a simple La Belle Dame Sans Merci.  This is the shade of meaning that we get in the three couplets of Thirukkural, namely,

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918

Here, the couplet occurs in வரைவின் மகளிர் and is employed to mean such women who are paid for a 'particular kind of service'.  There cannot be a second opinion that the அணங்கு employed here can mean fearsome, dreadful, horrific, etc.  There is not even a trace of divinity associated in this particular instance, whereas 'awe inspiring' carries a certain amount of divinity along with it.

Now, let us take the second example of Kural:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081

Is she something out of this world, an angel perhaps, or perhaps the so-called 'awe inspiring' 'heavenly spirit' is the wonderment that comes out of the man who is taken aback at the 'jaw dropping' beauty that stands before him.  Now, this அணங்கு is diagonally opposite to that which Kural 918 speaks about.  It has acquired divinity, awe, and (may be due to the face that this is the first time that the man is seeing this woman) the budding of love.  

In the third instance,

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. 1082

தாக்கணங்கு seems to be the female form of Cupid.  This couplet wonders, 'Is it not sufficient if a தாக்கணங்கு appears unarmed, without bearing any kind of weapons!  Would the mere sight be not sufficient to 'kill' a person!  And lo!  She looks back into my eyes as I cast a glance!  This அணங்கு has the most potent of all weapons, namely, her looking back into my eyes, in response!  தாக்கணங்கு தானை கொண்டு அனைத்து.

I had mentioned in CTamil the following quartet from Kamban, when Rama and Sita see each other for he first time:

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை

ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;

வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்

தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.

 

This தாக்கணங்கு அனையவள் refers to Sita herself.  And therefore it would not be anything less than blasphemy to read a meaning that is contained in Kural 918.  Here, it is more associated with Kural 1082 than anything else.  


I had mentioned these அணங்குகள் in CTamil:


வல்லணங்கு (mostly associated with காளி)
மூதணங்கு (mainly associated with துர்கை)
வடிவணங்கு (a beautiful woman)
கெடலணங்கு (மூதேவி)

Then I had quoted the அணங்குகள் from அபிராமி அந்தாதி: 

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்ஆடகத் தாமரை ஆரணங்கே

And then:

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? 

ஆரணங்கு here is attributed to none other than அபிராமி herself.
 

While this being so, the very same அபிராமி பட்டர் employs the term அணங்கு to refer to அபிராமி herself in verse 26

ஏத்து மடியவ ரீரே ழுலகினை யும்படைத்தும்

காத்து மழித்துந் திரிபவ ராங்கமழ் பூங்கடம்பு

சாத்துங் குழலணங் கேமணம் நாறுநின் தாளிணைக்கென்

நாத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே. 

கடம்பு சாத்தும் குழல் அணங்கு can mean none other than அபிராமி herself.  

I would like to draw attention to the beauty of expression in verse 81, especially:

அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே. 

The அணங்கு of first cIr is not the same அணங்கு of the second cIr.  They obviously have contrasting shades of meaning.  The அணங்கு of first சீர் is அபிராமி Herself and the அணங்குகள் of the second சீர் refer to her Coterie Divine, though, not in any sense of the word, come anywhere near the அணங்கு of the first சீர், which is அபிராமி Herself. I challenge the inventor of this theory to translate the first two lines of Verse 81 of அபிராமி அந்தாதி, convincingly.  

Expressions like ஆரணங்கு, பூங்கடம்பு சாத்தும் குழலணங்கு etc., have carried the shades of meaning associated with the word அணங்கு as employed in Kural 918 or 1082.  (Incidentally, the OTL defines தாக்கணங்கு as 

 n. < id. + அணங்கு. 1. A goddess who smites men with love; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம். தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள், 1082). 2. Lakṣmī; இலக்குமி. தாக்கணங் குறையுந் தடந்தாமரை (சீவக. 871).


And I would ponder for a long time to translate Kamban's தாக்கணங்கு to anywhere near the definition 'A goddess who smites men with love', though it cannot be denied that Sita was in all respects simply that to her own Rama.  (The same way the word தவம் which is translated into English as penannce.  When I was writing my Ramayana series, I could employ the word penance when translating 

விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்.  

The Catholic term Penance is a sacrament, a self-inflicted punishment in order to nullify, or purge oneself of a wrong committed sometime in the past. And it is the general meaning that is conveyed by the word to the non-Hindu and especially European mind.  But I had to do it, because I had no alternative or equivalent for தவம் in English.  I did so with a footnote.

When we are translating, we are not simply translating a word.  We are translating a tradition; heritage; faith and a whole lot of so many other factors associated with that particular human society where the language that is translated is spoken.  

And associating அணங்கு, a female form, with அநங்க, a male form, and claiming the former was the mother of the latter is not less than.... (I better do not write the rest of the sentence.)

Though you are not connected directly with this discussion, I addressed this mail to you, for the sake of decency, and since you happen to be a person who still remains with a open heart and ears.  Thank you.  
--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Oct 16, 2011, 1:05:26 AM10/16/11
to mintamil


---------- Forwarded message ----------
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
Date: 2011/10/16
Subject: Re: "அணங்குடை தமிழ்மண்"? (Re: [MinTamil] "ஆவ்சம் ஆவசம் தமிழ்நாடு என்று சொல்வது?"
To: santhav...@googlegroups.com




2011/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

Expressions like ஆரணங்கு, பூங்கடம்பு சாத்தும் குழலணங்கு etc., have carried the shades of meaning associated with the word அணங்கு as employed in Kural 918 or 1082.  (Incidentally, the OTL defines தாக்கணங்கு as 

Read this line as:

Expressions like ஆரணங்கு, பூங்கடம்பு சாத்தும் குழலணங்கு etc., have carried the shades of meaning associated with the word அணங்கு far, far away from the one employed in Kural 918 or 1082.  (Incidentally, the OTL defines தாக்கணங்கு as 



--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Oct 16, 2011, 4:05:41 AM10/16/11
to mint...@googlegroups.com
2011/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>
> We are translating a tradition; heritage; faith and a whole lot of so many other
> factors associated with that particular human society where the language
> that is translated is spoken.

மிகவும் ரசமான இடுகை ஹரிகி.

நெடு நெடு என்ற வளர்ந்து நெடுமால் போல் தோற்றமளிக்கும் என் தமிழாசிரியர்
ஸ்ரீநிவாசன், “அணங்கு என்றால் பெண் என்றும் பொருள்” என்று எங்களைப்
பார்த்து சொல்லிவிட்டு, “பேயென்றும் பொருள்” என்று பெண் பிள்ளைகளைப்
பார்த்துச் சொன்ன போது, சும்மா சிரிக்கத்தான் தெரிந்தது. உங்கள்
உதாரணங்கள் மிகத்தெளிவாக ‘அணங்கு’ என்ற சொல்லின் பல்வேறு வண்ணங்களைக்
காட்டியது. இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டுமென்பதை அழகாகச்
சுட்டியுள்ளீர்கள்.

மொழி என்பதே ஒரு குழுமக் குறியீடுதானே! தவம் எனும் அருமையான சொல்லை
செமத்திய சமயப்பின்னணியுள்ள சொல்லோடு பொருத்தும் போது இழக்கும் நயத்தைச்
சொல்லவும் வேண்டுமோ?

நா.கண்ணன்

பிகு:

Jean-Luc Chevillard

unread,
Oct 16, 2011, 6:11:59 AM10/16/11
to santhav...@googlegroups.com, Hari Krishnan, mintamil
Dear Hariki,

thanks for sharing you broad knowledge
and your vast reading experience

Yours with every good wish

-- Jean-Luc Chevillard (Pondichéry/புதுவை)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Reply all
Reply to author
Forward
0 new messages