Re: [MinTamil] Re: நாச்சியார் சொல் >>> சரியான பொருள்

1,485 views
Skip to first unread message

N D Llogasundaram

unread,
Dec 28, 2010, 6:55:09 AM12/28/10
to mint...@googlegroups.com
திருவாளர் கணேசன் அவர்களே,
நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
 
மேலும்  எந்தவிதமான அசைதலையும் ஆட்டத்தையும் காட்டும்
எடுத்துக்காடாக ஒலிக்கும் மணியில் நடுவில் நா ஆடுவதும் நாச்நா   தான்    
 
சிவபெருமானுக்கு நாச்சியப்பன் என்றொரு பெயருண்டு 
அதாவது  நடனம் ஆடுபவன்  >>> நடராஜன்
 
பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய
கணிகையருக்குத்தான் நாச்சியார் என்று பெயர்
 
தசரதன் முதல் பழங்கால மன்னர்கள் பலப்பல மனைவியர் களை உடையவர்களே
மிகவும் பிற்கால சேதுபதி சமஸ்தான மன்னர்களின் மனைவியருக்கும்   நாச்சியார்
என பெயர் உள்ளது அறிவீர்கள் இவை யாவும் மேற்சொன்ன அடிப்படை உடையவையே
என்பதில் ஐயம் ஏதும் இல்லை
 
மேலும் ஒரு கருத்து தனைக் குறித்தால் விவகம் மிக்க  இந்த மடலாடல்
குழுவினர் தவறாகக் கருதார் என நினைக் கிறேன்
 
ஆண்டாளுக்கும் நாச்சியார் என பெயர்த் துணை உள்ளது
அப்பெருமகளாரும் கணிகைக் குலத்து வந்த வரே ஆகும்
 
இதற்கு அகச் சான்றுகள் உள்ளது
 
#  ஆண்டாள் திருமாலை திருமணம்  செய்து கொள்ள விரும்பி
    சூடிக்கொடுத்த சுடர்கொடியாக விளங்கினார் என்பது
  
          தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே 545
           புணர்வதோ ராசயி னால்என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் 551
            என்னாகத்து யிளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன்னாகம் புல்குத 581
             கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 583
               கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் 620
                 முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு 633
                    இன்னும் பற்பல காட்டலாம்
 
நீங்கள் அறிவீர்கள் தமிழ் நூல் மரபில் உலா என்னும் ஓர்வகை பிரபந்தத் தில் 
எழுவகை வயதுடைய  கணிகையர்   தலைவன் பால் காதல் கொள்ளுமாறு
இயற்றப் படும் நூல்வகை   என்று   இஃது குலப்பெண்கள் கூற்றாகாது என்பதும் அறிவீர்கள்
 
  அன்புடன்
நு த லோ சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
2010/12/24 N. Ganesan <naa.g...@gmail.com>


On Dec 24, 2:48 am, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> அன்புக்குரிய தேவ்
> மிகவும்  வேலைப்பாடான காதணி .ஆனால் வலிக்காதா?
> ஆச்சரியமாக இருக்கிறது.
> .ஆனால் ஒரே ஒரு சம்சயம்.
> ஏன் இவர்களை ஆச்சி என்கிறீர்கள்? ஆச்சி என்றால் செட்டிநாட்டு பெண்மக்களைத்தானே
> அப்படி விளிப்போம்/ அப்படி என்றால் இப்படத்தில் காணும் அத்தனை அம்மாக்களும்
> செட்டிநாட்டு அம்மாக்களா?
> க.> 
ஆச்சி என்பது நாச்சி (நாய்ச்சியார்) என்ற சொல்.
நுண்ணி > உண்ணி, நீர்(அம்) > ஈரம், ... என்பதுபோல.

பாரதம் முழுமையும் உள்ள நாயக்(கர்), நாயுடு, நாயர், ....
போன்ற பட்டங்களின் பெண்பாற்பெயர் - நாச்சி.

நா. கணேசன்


>  http://www.kamalagaanam.blogspot.com
>
>
>
> ----- Original Message ----
> From: devoo <rde...@gmail.com>
> To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
> Sent: Friday, 24 December 2010 16:41:00
> Subject: [MinTamil] Re: தோடுடைய செவியன்
>
> பாம்படம் போட்ட ஆச்சிகளையும், பாம்படத்தையும் பார்க்க -
>
> http://www.google.co.in/images?q=paambadam&oe=utf-8&rls=org.mozilla:e...
>
> பாதுகாப்புப் பெட்டக வசதியில்லாத அந்நாளில் பலர் இவற்றை எம் தந்தையாரிடம்
> கொடுத்து வைத்திருப்பர்; விசேட நாளில் வேண்டும்போது வாங்கிச் சென்று
> மீண்டும் கொணர்வர். பெரியதாக இருக்குமே தவிர உள்ளே மெழுகுதான்
>
> தேவ்
>
> On Dec 23, 5:11 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> > அன்பர்களே:
>
> > தோடுடைய செவியன் என்று சிவனுக்குப் பெயர். பெரிய காதுகள் அழகு என்று
> > கண்டனர் தமிழர். மதுரைப் பக்கம் பெரிய ‘தொங்கட்டான்’ போட்ட பெண்களைக்
> > காணமுடியும்.
>
> > எனக்கு பெரிய காதுடைய (அதாவது அணிகலன் போட்டு தொங்கிய காது, பெரிய
> > ஓட்டையுடன்) போட்டோ வேண்டியிருக்கிறது. கண்டவர் அனுப்பி வைக்க முடியுமா?
>
> > உம்.http://senthilvayal.files.wordpress.com/2009/06/god2.jpg
>
> > ஆனால் இந்த ஓவியம் சரியாக வரவில்லை. பெரிய தோடுடைய, நீண்ட காதுடைய
> > சிற்பம், சிலைகள் (புனிதவதியார்) பார்த்ததுண்டு.
>
> > நன்றி.
>
> > கண்ணன்
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to
> this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Dec 28, 2010, 7:55:38 AM12/28/10
to mint...@googlegroups.com


2010/12/28 N D Llogasundaram <selvi...@gmail.com>

திருவாளர் கணேசன் அவர்களே,
நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
 
மேலும்  எந்தவிதமான அசைதலையும் ஆட்டத்தையும் காட்டும்
எடுத்துக்காடாக ஒலிக்கும் மணியில் நடுவில் நா ஆடுவதும் நாச்நா   தான்    
 
சிவபெருமானுக்கு நாச்சியப்பன் என்றொரு பெயருண்டு 
அதாவது  நடனம் ஆடுபவன்  >>> நடராஜன்
 
பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய
கணிகையருக்குத்தான் நாச்சியார் என்று பெயர்
 

அய்யிய்யோ..... அய்யா ரொம்ப அப்பாவியா இருப்பீக போலருக்கே!  எல்லாம் இங்க இருந்துல்லா அங்கன போச்சு?  அங்கிட்டாலேந்து இங்கிட்டு வந்ததுன்னு சொல்றவங்க எல்லோரும் தமிழ், தமிழின துரோகிகள் ஆச்சே!  நீங்களும் அந்த முத்திரையை ஏற்கத் துணிஞ்சிட்டீங்களா!   வேணாஞ்சாமி!  உண்மையைப் பேசக்கூடாது.  மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  அப்பத்தான் தமிழ்ப் பற்றாளர்.  தமிழ் வாழும்.  அக்காங்.  நடனம் என்பதே சிலப்பதிகாரத்தில் இலக்கணம் வகுக்கப்பட்டதன் பின்னல்லவா வடக்கே சென்றது!  அப்படிப்பட்ட நாச்சியப்பனுக்கு வடசொல் விளக்கமா!  அய்யகோ!  தமிழே!  இனி யாம் யாண்டுப் புக்கு எங்ஙண் வாழ்கேம்!  இது தரிக்கிலோமே!  



--
அன்புடன்,
ஹரிகி.

karuannam annam

unread,
Dec 28, 2010, 9:04:15 AM12/28/10
to mint...@googlegroups.com
செட்டி நாடு இராமநாதபுரம் பகுதிகளில் நாச்சி கோவில்கள் ஊருக்கு ஒன்று  உண்டு . பெரிய  நாச்சி , வயல்  நாச்சி, காட்டு நாச்சி, மாணிக்க நாச்சி அனைத்தும் காவல் தெய்வங்கள். மகிஷாஅசுர மர்த்தினி வடிவம். அதையொட்டி நாச்சியப்பன், நாச்சம்மை என்று பெயர் இடப்படுகிறது.
தாங்கள் பல தகவல்கள் தந்துள்ளீர்கள். ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வார் வளர்த்தவர் எனப் படிக்கிறோம். கணிகையர் குலம் என்பது தாங்கள் எழுதித்தான் தெரியவருகிறது. பல அறிஞர் உள்ள குழுமம். அவர்கள் தெளிவிப்பார்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2010/12/28 N D Llogasundaram <selvi...@gmail.com>
திருவாளர் கணேசன் அவர்களே,

Hari Krishnan

unread,
Dec 28, 2010, 9:58:15 AM12/28/10
to mint...@googlegroups.com


2010/12/28 karuannam annam <karu...@gmail.com>

ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வார் வளர்த்தவர் எனப் படிக்கிறோம். கணிகையர் குலம் என்பது தாங்கள் எழுதித்தான் தெரியவருகிறது.

All statistics is collection of data; but not all collection of data is statistics.  :) 

karuannam annam

unread,
Dec 28, 2010, 10:28:26 AM12/28/10
to mint...@googlegroups.com
ஹரிகி ஐயா சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2010/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

N. Kannan

unread,
Dec 28, 2010, 10:33:01 AM12/28/10
to mint...@googlegroups.com
2010/12/28 karuannam annam <karu...@gmail.com>.

> தாங்கள் பல தகவல்கள் தந்துள்ளீர்கள். ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வார் வளர்த்தவர் எனப் படிக்கிறோம். கணிகையர் குலம் என்பது தாங்கள் எழுதித்தான் தெரியவருகிறது. பல அறிஞர் உள்ள குழுமம். அவர்கள் தெளிவிப்பார்கள்.

நானுமே இப்போதுதான் இம்மாதிரி ஒரு வழக்கு இருப்பதை அறிகிறேன்.

நாயகி பாவத்தை ஏற்றிக்கொண்டு பாடும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லோருமே
கணிகையர் குலம் என்றாகிவிடுமா? என்று தெரியவில்லை.

கோதை நாச்சியார் அவதாரம் குறித்த தரவுகள்தான் ஏகப்பட்டது உள்ளதே!
எங்கிருந்து வந்தது இப்புதுக்கோணம்?

நாயகியர்களாக கோபியர் இருந்த போது கண்ணனுக்கு வயது 13. யாராவது 13 வயது
சிறுவனுடன் காதல் செய்வரோ? அவையெல்லாமே உருகப்பேச்சு. கொங்கை என்பதற்கான
பூடகக்குறியீடு என்னவென்று உரையாசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.
ஆண்டாள் இப்பாடல்களை எழுதும் போது சிறுமி. தன்னை கோபிகையாக நினைத்து
எழுதுகிறாள். நாயகி பாவத்தின் குறியீடுகளை முழுமையாக அறிந்துதான் கவி
செய்கிறாள் ஆண்டாள்.

அவர் பாவத்தை இப்படிக்கூடப் பொருள் கொள்ள முடியும் என்பது புதுச்சேதி!

க.>

Hari Krishnan

unread,
Dec 28, 2010, 10:50:27 AM12/28/10
to mint...@googlegroups.com


2010/12/28 karuannam annam <karu...@gmail.com>
புள்ளியியலின் பால பாடம் ஐயா அது.  புள்ளி விவரம் என்பது தகவல் தொகுப்பு; ஆனால் தகவல் தொகுப்பெல்லாம் புள்ளிவிவரமாகாது.  அப்படித்தான் நாச்சியார்.  ஓடிஎல்லில் உள்ள நாச்சியார் பொருள் வரையறைகள்: 


=================================
2. நாச்சி nācci : (page 2201)
+ உளு. Earthworm; நாக்குப்பூச்சி. எறும்பிடை நாங்கூ ழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச. 6, 25).
நாச்சி nācci
, n. < நாய்ச்சி. Fem. of நாயன். Lady, mistress; தலைவி. (நாமதீப. 183.)

நாச்சிமார்
3. நாச்சிமார் nāccimār : (page 2201)
நாச்சி nācci
, n. < நாய்ச்சி. Fem. of நாயன். Lady, mistress; தலைவி. (நாமதீப. 183.)

நாச்சிமார் nāccimār
, n. < id. 1. The two consorts of Viṣṇu; திருமாலின் தேவிமார். Vaiṣṇ. 2. The seven divine mothers. See சத்தமாதர். (W.)

4. நாச்சியார் nācciyār : (page 2201)
id. 1. The two consorts of Viṣṇu; திருமாலின் தேவிமார். Vaiṣṇ. 2. The seven divine mothers. See சத்தமாதர். (W.)
நாச்சியார் nācciyār
, n. < id. [T. nāñcāru.] 1. Lady; queen; mistress; அரசி அல்லது தலைவி. ராணி மங்களேசுவரி நாச்சியார். Rd. 2. Goddess;

5. நாச்சியார் nācciyār : (page 2201)
நாச்சியார் nācciyār
, n. < id. [T. nāñcāru.] 1. Lady; queen; mistress; அரசி அல்லது தலைவி. ராணி மங்களேசுவரி நாச்சியார். Rd. 2. Goddess; பெண்தெய்வம். நாச்சியார்க்கு வைத்த சந்தி விளக் கொன்றும் (S. I. I. iii, 123). 3. The Vaiṣṇava female saint of Šrīvilliputtūr. See

6. நாச்சியார் nācciyār : (page 2201)
nācciyār
, n. < id. [T. nāñcāru.] 1. Lady; queen; mistress; அரசி அல்லது தலைவி. ராணி மங்களேசுவரி நாச்சியார். Rd. 2. Goddess; பெண்தெய்வம். நாச்சியார்க்கு வைத்த சந்தி விளக் கொன்றும் (S. I. I. iii, 123). 3. The Vaiṣṇava female saint of Šrīvilliputtūr. See ஆண்டாள். நாச்சியார் திருமொழி.

7. நாச்சியார் nācciyār : (page 2201)
Rd. 2. Goddess; பெண்தெய்வம். நாச்சியார்க்கு வைத்த சந்தி விளக் கொன்றும் (S. I. I. iii, 123). 3. The Vaiṣṇava female saint of Šrīvilliputtūr. See ஆண்டாள். நாச்சியார் திருமொழி. (திவ்.)
நாச்சு nāccu
, n. < U. nāchnach- chanāṭya. Nautch;

8. நாய்ச்சிமார் nāyccimār : (page 2220)
, n. Fem. of நாயன். Lady, mistress; தலைவி.

நாய்ச்சிமார் nāyccimār
, n. < நாய்ச்சி. See நாச்சிமார், 1. தேவரீரையும் நாய்ச்சிமாரையும் வஹித்தேன் (ஈடு, 1, 3, 10).
==============================================

நாச்சிக்கு இவ்வளவு பொருள் இருக்கிறது.  இது வேற அது வேற.  சிவப்பு வண்ணத்தில் தீற்றப்பட்ட பொருளைக் காணவும்.  (நல்லவேள....ஆண்டாள்னா நாக்குப்பூச்சின்னு அர்த்தம்னு சொல்லாத விட்டாங்களே... அதுவரைக்கும் பொழச்சது....)

அதான் சொன்னேன்.  All statistics is collection of data but not all collection of data is statistics.  If one wants to judge which can fall under the category of statistics, and which will not, one need to use the soft fluffy stuff that is usually protected by the human skull.  If one has. 

(அதுக்குள்ள கண்ணருக்கு சந்தேகம் வந்துவிட்டது.  நாச்சியாருக்கு இப்படியும் பொருளுண்டா என்று.  வேணாம்.  நா எதுனா சொல்வேன்....எதிர்ல இருக்கற காரணத்தால எதிர்வூட்டுக்காரன் எதிரி அப்படிங்கற மாதிரி விஷயம் கோணக்க மாணக்க போய்த் தொலைக்கும். வேணா.  எனக்கு toungeல Saturday.)

N. Kannan

unread,
Dec 28, 2010, 10:54:29 AM12/28/10
to mint...@googlegroups.com
2010/12/29 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> (அதுக்குள்ள கண்ணருக்கு சந்தேகம் வந்துவிட்டது.  நாச்சியாருக்கு இப்படியும்
> பொருளுண்டா என்று.  வேணாம்.  நா எதுனா சொல்வேன்....எதிர்ல இருக்கற காரணத்தால
> எதிர்வூட்டுக்காரன் எதிரி அப்படிங்கற மாதிரி விஷயம் கோணக்க மாணக்க போய்த்
> தொலைக்கும். வேணா.  எனக்கு toungeல Saturday.)
>

சந்தேகம் வரலை :-) என்னால் இவ்வளவுதான் எள்ளல் தொணி கொடுக்க முடியும் :-))

அதெல்லாம் பெரியவர்கள் பார்த்துக்கட்டுமென்று விட்டுவிட்டேன்.
ஆண்டாளுக்கு இல்லாத அரணா ;-)?

க.>

Raja sankar

unread,
Dec 28, 2010, 11:07:54 AM12/28/10
to mint...@googlegroups.com
//ஆண்டாளுக்கும் நாச்சியார் என பெயர்த் துணை உள்ளது
அப்பெருமகளாரும் கணிகைக் குலத்து வந்த வரே ஆகும்
 //

ஆண்டாள் தோட்டத்தில் கிடந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டவர். பெரியாழ்வார் கணிகை குலத்தில் வந்தவரா இல்லை ஆண்டாளுக்கு தாய்,தந்தை யார் என ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விட்டார்களா?

:-)))))))))))))))))))

ராஜசங்கர்



2010/12/28 N D Llogasundaram <selvi...@gmail.com>
ஆண்டாளுக்கும் நாச்சியார் என பெயர்த் துணை உள்ளது

devoo

unread,
Dec 28, 2010, 11:15:44 AM12/28/10
to மின்தமிழ்
>>பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய
*கணிகை*யருக்குத்தான் நாச்சியார் என்று பெயர் <<

'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்’ என்றும்
பாடியுள்ளமை காண்க.

'நட்’ நாட்டியத்துக்கான வேர். ஹிந்தி ‘நாச்நா’ தமிழோடும், வடமொழியோடும்
ஒட்டாதது.

’பட்டர் பிரான் கோதை’, ’வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை’ போன்ற
வலிமையான அகச்சான்றுகளைப் புறந்தள்ளிவிட்டு அதீதமான கற்பனை வளத்துடன்
ஓர் ஆராய்ச்சி.துலுக்க நாச்சியார், மீரா பாய், கான்ஹோபாத்ரா போன்ற
பெண்பால் அடியவர்களுக்கும் இந்த ஆராய்ச்சியைப் பொருத்த வேண்டுமோ !?

நாச்சியார் என்ற பட்டம் அரச குல மகளிருக்கும் இருந்துள்ளது.

’பாயல்’ ஹிந்தியிலும், தமிழிலும் உள்ள சொல். அதை எப்படி விளக்குவர் ?
தமிழ் இணையம் தோன்றியபின் மொழிஇயல் குடிசைத் தொழிலாகவே ஆகிவிட்டது

தேவ்


On Dec 28, 5:55 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> திருவாளர் கணேசன் அவர்களே,
> நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
> இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
>
> மேலும்  எந்தவிதமான அசைதலையும் ஆட்டத்தையும் காட்டும்
> எடுத்துக்காடாக ஒலிக்கும் மணியில் நடுவில் நா ஆடுவதும் நாச்நா   தான்
>

> சிவபெருமானுக்கு *நாச்சியப்பன்* என்றொரு பெயருண்டு


> அதாவது  நடனம் ஆடுபவன்  >>> நடராஜன்
>
> பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய

> *கணிகை*யருக்குத்தான் நாச்சியார் என்று பெயர்


>
> தசரதன் முதல் பழங்கால மன்னர்கள் பலப்பல மனைவியர் களை உடையவர்களே
> மிகவும் பிற்கால சேதுபதி சமஸ்தான மன்னர்களின் மனைவியருக்கும்   நாச்சியார்
> என பெயர் உள்ளது அறிவீர்கள் இவை யாவும் மேற்சொன்ன அடிப்படை உடையவையே
> என்பதில் ஐயம் ஏதும் இல்லை
>
> மேலும் ஒரு கருத்து தனைக் குறித்தால் விவகம் மிக்க  இந்த மடலாடல்
> குழுவினர் தவறாகக் கருதார் என நினைக் கிறேன்
>

> ஆண்டாளுக்கும் *நாச்சியார்* என பெயர்த் துணை உள்ளது


> அப்பெருமகளாரும் கணிகைக் குலத்து வந்த வரே ஆகும்
>
> இதற்கு அகச் சான்றுகள் உள்ளது
>
> #  ஆண்டாள் திருமாலை திருமணம்  செய்து கொள்ள விரும்பி
>     சூடிக்கொடுத்த சுடர்கொடியாக விளங்கினார் என்பது
>
>           தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே 545
>            புணர்வதோ ராசயி னால்என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் 551
>             என்னாகத்து யிளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன்னாகம் புல்குத
> 581
>              கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 583
>                கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் 620
>                  முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு 633
>                     இன்னும் பற்பல காட்டலாம்
>
> நீங்கள் அறிவீர்கள் தமிழ் நூல் மரபில் உலா என்னும் ஓர்வகை பிரபந்தத் தில்
> எழுவகை வயதுடைய  கணிகையர்   தலைவன் பால் காதல் கொள்ளுமாறு
> இயற்றப் படும் நூல்வகை   என்று
> இஃது குலப்பெண்கள் கூற்றாகாது என்பதும் அறிவீர்கள்
>
>   அன்புடன்
> நு த லோ சு
>

> 2010/12/24 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our

விஜயராகவன்

unread,
Dec 28, 2010, 11:21:29 AM12/28/10
to மின்தமிழ்
On Dec 28, 4:15 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய
>
> *கணிகை*யருக்குத்தான் நாச்சியார் என்று பெயர் <<
>
> 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்’ என்றும்
> பாடியுள்ளமை காண்க.
>
> 'நட்’ நாட்டியத்துக்கான வேர்.  ஹிந்தி ‘நாச்நா’ தமிழோடும், வடமொழியோடும்
> ஒட்டாதது.

Etymology of 'nautch' is

http://en.wikipedia.org/wiki/Nautch

In North India, Nautch (English pronunciation: /ˈnɔːtʃ/) is one of
several styles of popular dance, performed by young girls known as
"Nautch girls".

The word Nautch is an anglicized version of नाच (nāc), a word found in
Hindi and Urdu (where it is spelled ناچ), and several other languages
of North India, derived from the Sanskrit, Nritya, via the Prakrit,
Nachcha. A simple and literal translation of Nautch is "dance" or
"dancing".

rajam

unread,
Dec 28, 2010, 11:25:40 AM12/28/10
to mint...@googlegroups.com
திரு நு த லோ சு ஐயா,

நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
 

"எங்கேருந்து எந்தச்  சொல் வந்தது" என்ற ஆராய்ச்சி எனக்குத் தலைசுற்றல் தருவது; அதனால் உள்ளே நுழையப் போவதில்லை. ஆனாலும் ஒரு மண்டைக் குடைச்சல் -- எப்படி ஒரே ஒரு சொல்லை ("நாச்நா") வைத்து இவ்வளவு துணிவாக முடிவு செய்யலாம்? எங்கள் வரலாற்று மொழியியல் ஆசிரியரிடம் (Henry Hoenigswald) இந்த மாதிரி வழிமுறை செல்லுபடி ஆயிருந்திருக்காது! 
சர் போகட்டும். யார் "கடங்காரனா" (loaner) இருந்தாலும் எனக்கொண்ணும் குறையில்லை!

கலிங்கத்துப் பரணியில் கண்ட ஒரு வரியை முன்பு ஒரு முறை சொல்லி விளக்கம் கேட்டிருந்தேன். யாரும் அதைக் கண்டுக்கலெ:
"பேய் தரும் நாச்சியைப் பாடீரே"
இதற்குத் தாங்கள் தரும் விளக்கம் அறிய ஆவல்.
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Dec 28, 2010, 11:47:00 AM12/28/10
to mint...@googlegroups.com
கலிங்கத்துப் பரணி வரியை ... "பிணம் தரு நாச்சியைப் பாடீரே" என்று திருத்திப் படிக்கவும்! நன்றி!
அன்புடன்,
ராஜம்
++++++++++++++++++++++ 


திரு நு த லோ சு ஐயா,

நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
 

"எங்கேருந்து எந்தச்  சொல் வந்தது" என்ற ஆராய்ச்சி எனக்குத் தலைசுற்றல் தருவது; அதனால் உள்ளே நுழையப் போவதில்லை. ஆனாலும் ஒரு மண்டைக் குடைச்சல் -- எப்படி ஒரே ஒரு சொல்லை ("நாச்நா") வைத்து இவ்வளவு துணிவாக முடிவு செய்யலாம்? எங்கள் வரலாற்று மொழியியல் ஆசிரியரிடம் (Henry Hoenigswald) இந்த மாதிரி வழிமுறை செல்லுபடி ஆயிருந்திருக்காது! 
சர் போகட்டும். யார் "கடங்காரனா" (loaner) இருந்தாலும் எனக்கொண்ணும் குறையில்லை!

கலிங்கத்துப் பரணியில் கண்ட ஒரு வரியை முன்பு ஒரு முறை சொல்லி விளக்கம் கேட்டிருந்தேன். யாரும் அதைக் கண்டுக்கலெ:
"பேய் தரும் நாச்சியைப் பாடீரே"
இதற்குத் தாங்கள் தரும் விளக்கம் அறிய ஆவல்.
அன்புடன்,
ராஜம்



On Dec 28, 2010, at 3:55 AM, N D Llogasundaram wrote:

devoo

unread,
Dec 28, 2010, 11:51:34 AM12/28/10
to மின்தமிழ்
>>The word Nautch is an anglicized version of नाच (nāc), a word found in
Hindi and Urdu (where it is spelled ناچ), and several other languages
of North India, derived from the Sanskrit, Nritya, via the Prakrit,
Nachcha. A simple and literal translation of Nautch is "dance" or
"dancing".<<


முத்தமிழின் இயல்,இசை,நாடகம் என்பதில் நாடகம் என்னும்
வடமொழிப்பயன்பாட்டை அப்படியே ஏற்றுள்ளனர். அப்போது
பாகத வழக்கு ஏன் உட்புகவில்லை ? ‘நடம் பயிலுதல்’ என்பதையே பக்தி
இலக்கியங்களில் பல இடங்களில் பார்க்கிறோம். பிற்காலத்தில் பாகதம்
புகுந்தது என்றால் ’நடிப்பு’ இன்றளவும் வழக்கத்தில் உள்ளதைக்
காண்கிறோம். நடிகர்களையோ, நடனம் ஆடுவோரையோ நாச்சியார், நாச்சியப்பன்
என்று சொல்வதில்லை

தேவ்

Kandavel Rajan

unread,
Dec 28, 2010, 11:51:36 AM12/28/10
to mint...@googlegroups.com
யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்துவரும் வழிபாடுகளுள் நாய்ச்சிமார் வழிபாடுமொன்று. அங்கு பலப்பல ஊர்களிலும் நாய்ச்சிமார் கோயில் உண்டு. அக்கோயில்களில் மங்கலமான நாட்களில் மக்கள் பொங்கல் பொங்கியும் விளக்கு வைத்தும் வழிபாடாற்றுவார்கள். இவ்வழிபாடு யாழ்ப்பாணத்திற்கு எந்தக்காலம் வந்தது என்பது ஆராயத்தக்கது. அதனோடு நாய்ச்சிமார் என்ற கடவுள் வைதிக சைவ சமயத்தில் இல்லை. ஆகவே, இது தமிழ் மக்களுக்குள் வைதிக சமயத்திற்குப் புறம்பே எழுந்த வழிபாடாகும்.

எனவே, இவ்வழிபாட்டுமுறையை ஆராயுமுன்னர் நாய்ச்சிமார் என்னும் சொல்லைச் சிறிது ஆராய்வோம். நாச்சி என்னும் பெயர்ச் சொல்லுக்கு மார் என்னும் உயர்திணைப் பன்மை விகுதியைச் சேர்த்து வந்ததே நாய்ச்சிமார் என்னும் சொல்லாகும். நாச்சி என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். நாச்சி என்னும் சொல் எட்டாவது நூற்றாண்டுவரையில் தமிழ் மக்கள் வழக்கிலிருந்தது. பெரியாழ்வாருடைய மகள் ஆண்டாளைச் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைத்தல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

நாச்சி என்னும் சொல் “நீ” என்னும் சங்கத (சமஸ்கிருதம்) வினையடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர். “நீ” என்பதற்கு வழிகாட்டுதல் என்பது பொருள். எனவே, நாச்சி என்பதற்கு வழிகாட்டுபவள் அல்லது தலைவி என்பது பொருள். நாச்சி என்பதற்கு ஆண்பால் நாயன்.(1) ஆனால், இலங்கை வன்னி நாட்டிலே வன்னியர் ஆதிக்கஞ் செறிந்திருந்தபோது, வன்னியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நாச்சிமார் என அழைத்தல் மரபுபோலத் தோன்றுகின்றது.


--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Hari Krishnan

unread,
Dec 28, 2010, 9:26:54 PM12/28/10
to mint...@googlegroups.com


2010/12/28 Raja sankar <errajasa...@gmail.com>

ஆண்டாள் தோட்டத்தில் கிடந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டவர். பெரியாழ்வார் கணிகை குலத்தில் வந்தவரா இல்லை ஆண்டாளுக்கு தாய்,தந்தை யார் என ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விட்டார்களா?

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும் அப்படின்னு கபிலர் பாடியிருக்கார். புறநானூற்றில்.  பாடல் எண் 113 என்பது மட்டும்தான் சைடேஷன்.  பக்க எண்ணெல்லாம் தெரியாது.  

இன்னிக்கு கோதை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதனால் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள் என்பதற்கு மட்டு வாய் திறக்கக் காணோம்.  இப்படியே போனா, ஏர்க்காலில் கண்டெடுக்கப்பட்ட சீதைக்கும் இந்தப் பட்டம் வந்து சேரும்.  

மட்டு வாய் திறக்குதோ இல்லையோ, வரிசையா மைவிடை வீழ்ந்துகொண்டே இருக்கிறது.  மட்டு வாய் திறந்தாலும் திறக்காட்டாலும் எதிராளி வாயில எள். எள்தான் தெரியுதுங்கறேன்.  

N. Kannan

unread,
Dec 28, 2010, 10:20:50 PM12/28/10
to mint...@googlegroups.com
அடக்கடவுளே! இப்பழியும் என் மீதுதானோ?
 
அகலிகைக்குத்துணை போனவர் ஆண்டாளுக்கு துணை போகாரோ? :-))
 
ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஏதாவது தலையிடி கொடுத்துக் கொண்டே இருந்தால் எப்படி? ஒரு அலை ஓய்ந்து அடுத்த அலையா இது?
 
சொன்னவர் இந்து. நமது தலபுராணம் தொகுதியை தொகுத்து அளித்தவர். வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்.
 
சபையே தீர்மானிக்கட்டும்! தமிழ் மரபு என் சொத்து மட்டுமா? இல்லை நான் தான் அதன் காவலனா?
 
சிவ, சிவா!
 
க.>
 
//இன்னிக்கு கோதை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதனால் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள் என்பதற்கு மட்டு வாய் திறக்கக் காணோம்.  இப்படியே போனா, ஏர்க்காலில் கண்டெடுக்கப்பட்ட சீதைக்கும் இந்தப் பட்டம் வந்து சேரும்.  //
 
நான் சொன்னாலும் அதில் காதில் விழவில்லை என்றால் எப்படி? கோபம் எல்லாம் என் மீதுதான் போலும். அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருக்கிறேன்!! :-(
 
(இவர் மட்டுறுத்தலில்தான் இருந்தார். நல்ல விஷயங்கள் பேசுகிறாரே என்று விட்டால்..நம் மீது பழி போட என்றே வருகிறார்கள் அப்பா! காலம்!)

Hari Krishnan

unread,
Dec 28, 2010, 10:40:33 PM12/28/10
to mint...@googlegroups.com


2010/12/29 N. Kannan <navan...@gmail.com>

அகலிகைக்குத்துணை போனவர் ஆண்டாளுக்கு துணை போகாரோ? :-))
 
ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஏதாவது தலையிடி கொடுத்துக் கொண்டே இருந்தால் எப்படி? ஒரு அலை ஓய்ந்து அடுத்த அலையா இது?
 

நான் அலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கான முதல்படியைச் சொன்னால், இவர், தன்னைக் குறைசொல்வதாகக் காண்கிறார்.  அங்கே, வேறொரு இழையில், in perspective reading பற்றிப் பேசத்தொடங்கினால் நான் ஆன்மீகக் கூட்டம்.  எம்ஆர் ராதா குரலில் கால்ணா மொட்ட நால்ணா கொட்ட என்று சொல்லாததுதான் குறை.  திருவோடு வாழ்க என்று வாழ்த்தினார்கள்.  இப்போதுதான் புரிகிறது, திருவோடு ஏந்தி வாழ் என்று வழிகாட்டியிருக்கிறார்கள் என்று.

எனக்கு அறிவிலே தெளிவு தேவைப்படுகிறது.  என்று அது ஏற்படுகிறதோ அன்று திரும்பி வருகிறேன்.  அதுவரையில் குழுவிலிருந்து விடை பெறுகிறேன்.  யாரையும் புண்படுத்த விருப்பமில்லை.  எனக்கு உள்நோக்கமும் எதிரியா நண்பனா என்ற ஐயமும் ஏற்படக் கூடாத இடத்தில் ஏற்பட்டுவிட்ட பிறகு இங்கே தொடர்வதில் யாதொரு பயனும் இல்லை என்று உணர்கிறேன்.

குழுவினருக்கும், மட்டுறுத்துநர்களுக்கும் என் நன்றி.  புத்தாண்டு வாழ்த்துகள்.  

Raja sankar

unread,
Dec 28, 2010, 11:18:11 PM12/28/10
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்,

சபையில் நடுவரை எல்லாரும் கூப்பிடத்தான் செய்வார்கள். நாடாளுமன்றத்தில் மீராகுமாரும், அன்சாரியும் படும் அவஸ்தைகளை பார்க்கவில்லையா? மட்டுறுத்துனராக இருப்பதில் வரும் சிக்கல்கள் அவை. :-))))))

இது கூட பொது சபை பரவாயில்லை. அலுவலக மடலாடற்குழுக்களில் மட்டுறுத்துனராக இருந்தால் தெரியும் :-))) பதில் சொல்லி மாளாது :-)))))

மட்டுறுத்துனரின் தீர்ப்பே இறுதியானது என சொல்லி இந்த மாதிரி மடல்கள் வந்தால் அனுப்பும் நபரை மட்டுறுத்தலில் வைத்து விடலாம் அவ்வளவு தான். வேறு பேச்சு கிடையாது. 

முன்பே சொல்லவேண்டும் என எண்ணியிருந்தேன். எல்லோருக்கும் சாம தான பேத தண்டம் என்றிலில்லாமல் தேவைப்படும் போது எதையும் உபயோகிக்கலாம். 

சாதாரண மொக்கை தமிழ் மடலாடற் குழுக்களே கடுமையாக மட்டுறுத்துதல் செய்யப்படும் போது இங்கு செய்யவேண்டாம் என்பதற்கு ஏது காரணமும் இருக்காது என நினைக்கிறேன். 


ராஜசங்கர்

2010/12/29 N. Kannan <navan...@gmail.com>

--

N. Kannan

unread,
Dec 29, 2010, 1:14:40 AM12/29/10
to mint...@googlegroups.com
இந்தியாவின் பிரதமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று இப்போது தெரிகிறது :-))))
 
க.

2010/12/29 Raja sankar <errajasa...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Dec 29, 2010, 7:35:20 AM12/29/10
to mint...@googlegroups.com



இந்தியாவில் எதிலிருந்து வடபுலம் தென்புலம் எனப்பிரிகிறது என்பதே கேள்விக்குரியது. (நிலத்தின் அடிப்படையில்) மேலும்  நாச்சியப்பனான சிவன் வடக்கத்தானா அல்லது தென்னாட்டுடையவனா என்பதும் சிந்திக்க வேண்டியது.


நாச்சியப்பன் என்ற பேரை வேணும்னா எடுத்துக்கோங்க, சிவனையாவது  விட்டுவைங்க. நாங்க வேற பேரு போட்டுக்கிறோம்


நான் எந்த பக்கம்னு எனக்கே புரியல :)




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

devoo

unread,
Dec 29, 2010, 8:18:22 AM12/29/10
to மின்தமிழ்
>>>The word Nautch is an anglicized version of नाच (nāc), a word found in
Hindi and Urdu (where it is spelled ناچ), and several other languages
of North India, derived from the Sanskrit, Nritya, via the Prakrit,
Nachcha. A simple and literal translation of Nautch is "dance" or
"dancing"<<<

>>>நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்


இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும் <<<

’நாச்’ ஆட்டத்துடன் தொடர்புடையது என்றால் ’ஆட்டன் அத்தி’ எதற்கு ?
நாச்சன் அத்தி என்று இருந்திருக்க வேண்டுமே


தேவ்

On Dec 28, 5:55 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> திருவாளர் கணேசன் அவர்களே,
> நாச்சியார் எனும் சொல் 'நாச்' எனும் வடமொழி வேரிலிருந்து வந்தது ஆகும்
> இன்று இந்தியில் நாச்நா என்றால் நடனம் ஆடுவதைத் தான் குறிக்கும்
>
> மேலும்  எந்தவிதமான அசைதலையும் ஆட்டத்தையும் காட்டும்
> எடுத்துக்காடாக ஒலிக்கும் மணியில் நடுவில் நா ஆடுவதும் நாச்நா   தான்
>

> சிவபெருமானுக்கு *நாச்சியப்பன்* என்றொரு பெயருண்டு


> அதாவது  நடனம் ஆடுபவன்  >>> நடராஜன்
>
> பெண்களில் நடனம் ஆடுவதையே தொழிலாக உடைய

> *கணிகை*யருக்குத்தான் நாச்சியார் என்று பெயர்


>
> தசரதன் முதல் பழங்கால மன்னர்கள் பலப்பல மனைவியர் களை உடையவர்களே
> மிகவும் பிற்கால சேதுபதி சமஸ்தான மன்னர்களின் மனைவியருக்கும்   நாச்சியார்
> என பெயர் உள்ளது அறிவீர்கள் இவை யாவும் மேற்சொன்ன அடிப்படை உடையவையே
> என்பதில் ஐயம் ஏதும் இல்லை
>
> மேலும் ஒரு கருத்து தனைக் குறித்தால் விவகம் மிக்க  இந்த மடலாடல்
> குழுவினர் தவறாகக் கருதார் என நினைக் கிறேன்
>

> ஆண்டாளுக்கும் *நாச்சியார்* என பெயர்த் துணை உள்ளது


> அப்பெருமகளாரும் கணிகைக் குலத்து வந்த வரே ஆகும்
>
> இதற்கு அகச் சான்றுகள் உள்ளது
>
> #  ஆண்டாள் திருமாலை திருமணம்  செய்து கொள்ள விரும்பி
>     சூடிக்கொடுத்த சுடர்கொடியாக விளங்கினார் என்பது
>
>           தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே 545
>            புணர்வதோ ராசயி னால்என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் 551
>             என்னாகத்து யிளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன்னாகம் புல்குத
> 581
>              கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 583
>                கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் 620
>                  முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு 633
>                     இன்னும் பற்பல காட்டலாம்
>
> நீங்கள் அறிவீர்கள் தமிழ் நூல் மரபில் உலா என்னும் ஓர்வகை பிரபந்தத் தில்
> எழுவகை வயதுடைய  கணிகையர்   தலைவன் பால் காதல் கொள்ளுமாறு
> இயற்றப் படும் நூல்வகை   என்று
> இஃது குலப்பெண்கள் கூற்றாகாது என்பதும் அறிவீர்கள்
>
>   அன்புடன்
> நு த லோ சு
>

> 2010/12/24 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our

Reply all
Reply to author
Forward
0 new messages