08 02 2010
"...நீயிரும் வம்மின்..."
கடும்பசியாயினும், காகம் தனித்து உண்ணாது; கரகரவென கரைத்து, சுற்றம் கூட்டும். மின் தமிழ் குழுமம் என் சுற்றம். வருக. வந்து பரிசில் பெறுக; பரிசில் தருக.
சங்க நூல் சார்ந்த பொன் மொழியாக இருந்தால்
சிறப்பாக இருக்கும்
தேவ்
On Feb 8, 12:34 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 08 02 2010
>
> *"...நீயிரும் வம்மின்..."*
ஆ
னையிடுவதற்கு எனக்கு அறுகதை இல்லை. கெஞ்சி கேட்கிறேன். தயவு செய்து தாருங்கள்.உங்கள் திறமையால் இங்கே இந்த
Forum பெறுமை அடையட்டும்கே
.வீ.விக்னேஷ்சென்னை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவராஜன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
"...The violinist, wrapped in the stream of sound she helps to create, feels as if she is part
சற்றே திருவாசகத்தில் இதே ஆழ்ந்த அனுபவத்தை காண்போம்.




சிவபுராணத்தில் ஆரம்பித்து அச்சோப் பதிகம் வரையிலும் அடக்கம். --
ஒரு கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறானா, அல்லது சொற்கள் தாமாகவே வந்து விழுகின்றனவா? இதைக் குறிந்த அண்மைக் காலக் கருத்தாங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என் பதில்:
கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறானா, சொற்கள் அவற்றைத் தாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? புனைவு எழுதும்போது சுரப்பிகளின் சாகசத்தினால் திட்டமிடப்படாத சொற்கள், சொற்றொடர்கள், கற்பனை வந்து நிகழ்வதை மேலே சொன்னேன். அது கவிதைக்கு இன்னும் பொருத்தம் அல்லவா? இது மூளையின் கற்பனா பகுதி நிகழ்த்தும் ரசவாதம். அறிவுப் பகுதி வேடிக்கை மட்டும் பார்க்கும் வேளைகள்.
இப்போது பேராசிரியர் சிக்கன்ஸென்ட்மீஹை (ஆங்கிலத்தில் பெயரைக் கொடுங்களேன்) சொன்னது அதில் மேலும் ஒளி பாய்ச்சுகிறது.
ரெ.கா.
தனிமரம் நாடி காட்டை இழக்கலாமோ?
தனிமரங்கள் எல்லாம் கூடி நின்றால், காடு தானாகவே அமைவதில்லையா?
சிந்தனைவளங்கள் நிரம்பிய தனிமரங்கள், ஒருமைப்பாட்டுடுன் இயங்கினால், அது
பெரும்பேறு அல்லவோ?
இதைத்தானே காலம் காலமாய் வற்புறுத்தி வருகிறார்கள்இன்று வரை இந்த
ஒருமைப்பட்டைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை
10-2-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:
> “A human being is part of the whole, called by us “Universe,” a part limited
> in time and space. He experiences himself, his thoughts and feelings as
> something separated from the rest – a kind of optical delusion of his
> consciousness. This delusion is a kind of prison for us, restricting us to
> our personal desires and to affection for a few persons nearest to us. Our
> task must be to free ourselves from this prison by widening our circle of
> compassion to embrace all living creatures and the whole of nature in its
> beauty.
> - Albert Einstein
> ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் உலகம் புகழும் விஞ்ஞானி; தத்துவஞானி; திறந்த மனதும்.ஆழ்ந்த
> சிந்தனையும், எளியவாழ்க்கையும் அவரது பண்புகள். மேற்க்கூறிய அவரது வாக்கின்
> பொருள்:
>
> 'மனிதன் தன் இனத்தைச் சார்ந்தவன்; உலகளாவிய அவனது இனம்,,காலத்தாலும், தனது
> பரந்து, விரிந்த நிலையாலும், ஓரளவு கட்டுக்குள் இருக்கும். தனி மனிதன், தன்
> சிந்தனைத்திறனும், உணர்ச்சிகளும், மற்றதை விட்டு விலகி தனித்து இயங்குவதாக
> நினைப்பது ஒரு மாயமே, கண்கட்டு வித்தையே எனலாம். அவனது நினைவாற்றலே [stream of
> conciousness] அவனை ஏமாற்றுகிறது; அவனை இற்செறிக்கிறது. அவனை
> கிணற்றுத்தவளையாக்கி விடுகிறது. இந்த தளையிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்
> கொள்ளவேண்டும். அதற்கு ஒரே வழி. நாம் யாவரும் அவரவது கருணை வளையத்துள் எல்லா
> உயிரினங்களையும், எழிலே உருவான இயற்கைத்தளத்தையும், உள்ளமைப்பாக
> நிறுவிக்கொள்ளவேண்டும்.'
>
> *விடை தரும் வினாக்கள்*:
> ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தை விஞ்ஞானரீதியில் ஆய்வு செய்து,அறிந்து
> விளக்கியவர். அவரது தத்துவசிந்தனைகள், அதன் பயனாகவும், அவரது மன நீரோட்டத்தின்
> வெளிப்பாடாக அமைந்தன.
>
> சுருங்கச்சொல்லின், அவரது கூற்று:
>
> 'தனிமரத்தை காடு எனலாமோ?
>
> தனிமரம் நாடி காட்டை இழக்கலாமோ?
>
> தனிமரங்கள் எல்லாம் கூடி நின்றால், காடு தானாகவே அமைவதில்லையா?
>
> சிந்தனைவளங்கள் நிரம்பிய தனிமரங்கள், ஒருமைப்பாட்டுடுன் இயங்கினால், அது
> பெரும்பேறு அல்லவோ?
>
> இன்னம்பூரான்
>
> 2010/2/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>
>
>> திரு.ரெ.கா.
>> மிக்க நன்றி. அவரது பெயர் *- Mihaly Csikszentmihalyi*
>> * சிக்காகோ பொன்மொழியும் பெயரும் இவ்விழையின் முதல் இடுகையில் உள்ளன.*
>> **இன்னம்பூரான்
>>
>> 2010/2/10 karthi <karth...@gmail.com>
>>
>> இன்னம்புரான்,
>>>
>>> இந்த 'நீரோட்டம்' மிக உண்மை.
>>> முன்னர் என் கேள்வி பதில் பகுதியில்
>>> ஹரி இப்படிக் கேட்டார்:
>>>
>>> ஹரிகி:
>>>
>>>
>>>
>>> ஒரு கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறானா, அல்லது சொற்கள்
>>> தாமாகவே வந்து விழுகின்றனவா? இதைக் குறிந்த அண்மைக் காலக் கருத்தாங்களைப்
>>> பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
>>>
>>>
>>>
>>> என் பதில்:
>>>
>>> கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறானா, சொற்கள் அவற்றைத் தாமாகத்
>>> தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? புனைவு எழுதும்போது சுரப்பிகளின்
>>> சாகசத்தினால் திட்டமிடப்படாத சொற்கள், சொற்றொடர்கள், கற்பனை வந்து நிகழ்வதை
>>> மேலே சொன்னேன். அது கவிதைக்கு இன்னும் பொருத்தம் அல்லவா? இது மூளையின்
>>> கற்பனா பகுதி நிகழ்த்தும் ரசவாதம். அறிவுப் பகுதி வேடிக்கை மட்டும்
>>> பார்க்கும்
>>> வேளைகள்.
>>>
>>>
>>>
>>> இப்போது பேராசிரியர் சிக்கன்ஸென்ட்மீஹை (ஆங்கிலத்தில் பெயரைக் கொடுங்களேன்)
>>> சொன்னது
>>> அதில் மேலும் ஒளி பாய்ச்சுகிறது.
>>>
>>> ரெ.கா.
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>> ----- Original Message -----
>>> *From:* Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>> *To:* mint...@googlegroups.com
>>> *Cc:* Innamburan Innamburan <innam...@googlemail.com>
>>> *Sent:* Wednesday, February 10, 2010 9:02 AM
>>> *Subject:* Re: [MinTamil] Re: "...நீயிரும் வம்மின்..."
>>>> *சற்றே திருவாசகத்தில் இதே ஆழ்ந்த அனுபவத்தை காண்போம்.*
>>>>
>>>> இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
>>>> இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
>>>> துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
>>>> தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
>>>> சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
>>>> திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
>>>> என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
>>>> எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே
>>>>
>>>> திருவாசகம். 371
>>>>
>>>> *அடுத்தது*
>>>>
>>>> “A human being is part of the whole, called by us “Universe,” a part
>>>> limited in time and space. He experiences himself, his thoughts and
>>>> feelings as something separated from the rest – a kind of optical
>>>> delusion of his consciousness. This delusion is a kind of prison for us,
>>>> restricting us to our personal desires and to affection for a few
>>>> persons nearest to us. Our task must be to free ourselves from this
>>>> prison by widening our circle of compassion to embrace all living
>>>> creatures and
>>>> the whole of nature in its beauty.
>>>> - Albert Einstein
>>>>
>>>> இன்னம்பூரான்
>>>>
>>>> 2010/2/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
>>>>
>>>>> 09 02 2010
>>>>> 'ஓங்கு பரிபாடல்' என்றும், 'சங்கம் என்னும் துங்கமலி கடலுள்/ அருதின்
>>>>> எழுந்த பரிபாட்டு அமுதம்...' என்றும் போற்றப்படும் சங்கநூல், 'பரிபாடல்'.
>>>>> அறுவகைப்பாக்களும் அதன் பொன்னாரம். இசையும் பண்ணும் இனிமையூட்டும் ஒரே
>>>>> சங்கநூல் என்று சான்றோர் சிலர் கருதுகின்றனர்.
>>>>>
>>>>> தேவராஜன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
>>>>> 'சங்கத்திலிருந்து ' முக்கூடல் 'சங்கமம் செல்வோம், ஒரே சொல், இருமுறை
>>>>> ஒலிக்க. 'மாஅ யோயே! மாஅ யோயே!..' என்று அளபெடுத்து, திருமாலை வணங்கி,
>>>>> விளித்து,தொழுது தொடங்கியாயிற்று. பாடலாசிரியர் கடுவன்
>>>>> இளம்வெயின்னாருக்கும்,
>>>>> இசை அமைத்த பெட்டனாகனாருக்கும், மாயக்கூத்தன் 'மாயா வாய்மொழி'
>>>>> (வேதங்கள்)உரைத்தானோ? 'மாயோய்
>>>>> நின்வயின் பரந்தவை உரைத்தேம்.,,' என்கிறாரே, புலவர்.
>>>>>
>>>>> இன்றைய பொன் மொழி.
>>>>>
>>>>>
>>>>> *"...The violinist, wrapped in the stream of sound she helps to create,
>>>>> feels as if she is part *
>>>>> *of the ‘harmony of the spheres...”.*
>>>>> *- Mihaly Csikszentmihalyi*
>>>>> *இன்னம்பூரான்*
15 02 2010
ஆங்கிலத்திலே, 'It was on the tip of my tongue. ’என்பார்கள், தன் சொல்ல வந்ததை மற்றொருவர் கூறிவிட்டால். இந்த இடுகைக்கு முன்பே, டா. டேவிட் போஹ்ம் அவர்களை சுட்டி, 25 08 09 அன்று மின் தமிழில் நா. கண்ணன் எழுதியது,
'...நமது தளைகளிலிருந்து விடுபட்டு உயர் நிலைக்கு
இட்டுச்
செல்ல
வேண்டும்...'
டா. டேவிட் போஹ்ம் புகழ்வாய்ந்த அணுச்கதி விஞ்ஞானி,சமூக/அரசியல் சிந்தனையாளர், [அமெரிக்காவிலிருந்து விரட்டப்பட்டவர். அவரது ஆய்வே அவருக்கு மறுக்கப்பட்டது.] டா. ராபெர்ட் ஆப்பாந்ஹீமரின் மாணவர், ஐன்ஸ்டீனால் போற்றப்பட்டவர். அவருக்கு தத்துவத்தில் ஆர்வம் மிகுந்ததும் வியப்புக்குரியது அல்ல.அவரது பொன்வாக்கு:
“…the widespread and pervasive distinctions between people (race, nation, family, profession, etc. etc.), which are now preventing mankind from working together for the common good, and indeed, even for survival, have one of the key factors of their origin in a kind of thought that treats things as inherently divided, disconnected, and ‘broken up’ into yet smaller constituent parts. Each part is considered to be essentially independent and self-existent. When man thinks of himself in this way, he will inevitably tend to or defend the needs of his own ‘Ego’ against those of others; or, if he identifies with a group of people of the same kind, he will defend this group in a similar way. He cannot seriously think of mankind as the basic reality, whose claims come first. Even if he does try to consider the needs of mankind he tends to regard humanity as separate from nature, and so on. What I am proposing here is that man’s general world view, is crucial for overall order of the human mind itself. If he thinks of the totality as constituted of independent fragments, then that is how his how his mind will tend to operate, but if we can include everything coherently and harmoniously in an overall whole that is undivided, unbroken, and without a border (for every border is a division or break) then his mind will tend to move in a similar way, and from this will flow an orderly action within the whole.”
- Introduction to “Wholeness & the Implicate Order”
“இனம், நாடு குடும்பம், தொழில் என்றெல்லாம் பாகுபாடுகள், சமூகத்தில் இருப்பதால். மனித இனம், பொது நலம் நாடுவதில்லை. ; மனிதனின் நீடுழிவாழும் இயலுக்கும் பயன்படுவதில்லை. பிரச்னையே, நாம் யாவரும், வெள்ளத்தை நோக்காமால், சிறுதுளிகளின் மீது ஆர்வம் காட்டுவது தான். தன்னையும், நெருங்கியவர்களை தனித்து போற்றிக்கொள்வது தான். அவாவர் அவரவர்களை தனி கிரகங்களாகவல்லவோ கருதுகிறார். இதனால், தலை தூக்குவது அகம்பாவமே என்பது தெளிவு. அது தனி மனிதனின் அகம்பாவமாக இருந்தால் என்ன? ஒரு சிறிய சமூகத்தின் அகம்பாவமாக இருந்தால் என்ன? அந்த மன்ப்பான்மை மனித இனத்தின் பொது நலனை நாடாது. உலகு எனதே, யானும் அதற்காகவே என்ற மன்ப்பான்மை நாம் யாவரிடமும் ஆழ்ந்திருக்கவேண்டும் என்பதே, இந்த பிரச்னைக்கு, எனது விடை. வேற்றுமைகளை களைந்து, ஒருமைப்பாட்டுடன் இயங்குவோமானால், ஒரு மாபெரும் சக்தி உருவாகும் என்பதில் ஐயமில்லை. அது சீரான போக்குடையதாகவும் அமையும்.”
நான் முனைந்து, பிரயாசையுடன் மொழித்தழுவலுடன்ம் இந்த வாக்குக்களை பதிவு செய்வதின் காரணம், முன்பே கூறப்பட்டது.
சரி. இனி உபனிஷத் சொலவதை சுருக்கமாக பார்ப்போம்.
"…As the rivers flowing east and west
Merge in the sea and become one with it,
Forgetting they were ever separate rivers,
So do all creatures lose their separateness
When they merge at last into pure Being...”
-The Upanishads: cited in a western novel


“‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010
2010/9/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


“‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010
2010/9/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அந்த ரோஸ் கலர் டானிக் வாங்கி, ஐலசா,குடிக்கவச்சுக் குணப்படுத்தி, ஐலசா
சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோசரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சந்தனத்தேவன் கதையை தாம் தீம் ன்னு இப்படி வர்ணிக்க திரு இ்ன்னம்பூரார் அவர்களால் மட்டுமே முடியும் அலாதி பாணி, நானும் கற்றுக்கொள்ள வேண்டும்அன்புடன்தமிழ்த்தேனீ
--
பெரு மழை பெய்யும்போது வாழை மரத்தில் இடிதாக்கும்போது அந்த இடியானது வாழை மரத்தில் இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால் மாறுமாம்அந்தக் கம்பியை எடுத்து வந்து அதனால் ஒரு வட்டம் வரைவார்களாம் சுவற்றில்வட்டம் வரைந்து அந்தப் பகுதியை ஒரு எத்து எத்தினால் சுவறின் அந்தப் பகுதி எளிதாக உடையுமாம் ‘அதன் வழியே திருடர்கள் உள்ளே புகுவார்களாம்சொல்லக் கேள்விஇதைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்அன்புடன்தமிழ்த்தேனீ
--
--
Mistura Carminativa, B.P.C. Carminative Mixture.
Sodium Bicarbonate 2.28 | 200 grains
Aromatic Spirit of Ammonia 2.50 | 1/2 fl. ounce
Compound Tincture of Cardamoms 5.00 | 1 fl. ounce
Glycerin 7.50 | 1 1/2 fl. ounce
Dill Water to 100.00 | to 20 fl. ounces
Dissolve the sodium bicarbonate in the liquids.
Dose.—15 to 30 mils (1/2 to 1 fluid ounce).
இதில் இல்லாதது , ஆனால் பின் நாட்களில் சேர்க்கப்பட்டது . 15 சொட்டு
Tr. Zingiberris என்னும் அல்கஹால் கலவை.
கோபாலன்
.
> rkc1...@gmail.comhttp://www.peopleofindia.net
பெரு மழை பெய்யும்போது வாழை மரத்தில் இடிதாக்கும்போது அந்த இடியானது வாழை மரத்தில் இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால் மாறுமாம்அந்தக் கம்பியை எடுத்து வந்து அதனால் ஒரு வட்டம் வரைவார்களாம் சுவற்றில்வட்டம் வரைந்து அந்தப் பகுதியை ஒரு எத்து எத்தினால் சுவறின் அந்தப் பகுதி எளிதாக உடையுமாம் ‘அதன் வழியே திருடர்கள் உள்ளே புகுவார்களாம்சொல்லக் கேள்விஇதைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்அன்புடன்தமிழ்த்தேனீ
வ்ண்க்கம் சிறுபிராய்த்தில் என் தாயார் கூற்க்கேட்டிருகிரேன் வாழைத்த்ண்டின் மடடைக்ளை இரும்புவலைக்கம்பிக்ளின் மேல் வைக்க அவை பட் ப்ட் என் துண்டாகிவிடுமாம்திருடர்கள் ஜன்னல் வலைக் கம்பியை இப்ப்டித்தான் எடுப்பார்களாம்
--
--
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
'தாம் தீம் தூம்’ ன சந்தனத்தேவன் பாட்டுக்கு அமர்க்களமான வரவேற்பு. நன்றி: ஆராதி, ராஜம், பவளசங்கரி, தேனி, கீதா, ரங்கன்,மாயாகுமார், (டாக்டர்! நீங்க நிறைய எழுதணும்.), சாரதா (மெளனம் கலையவேண்டுமம்மா.) எஞ்சாய்! என் இழைகளில், ‘திரு’, ‘திருமிகு’ ‘திருமதி’ போன்ற ‘திருகுகளை கழற்றிவிட்டேன். அவை இனி வாரா. நண்பர்களுக்குள் ஒரு பற்று வர, இது ஒரு உத்தி என்க, ராஜம் சொன்னது போல்.
இன்னம்பூரான்18 10 2010
பெரு மழை பெய்யும்போது வாழை மரத்தில் இடிதாக்கும்போது அந்த இடியானது வாழை மரத்தில் இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால் மாறுமாம்
> அறுபதுகள் வரை மருத்துவ மனைகளில் கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கும்
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது திருப்பூவணம் அரசு
மருத்துவமனையில் எனக்கும் கொடுத்துள்ளார்கள், சாப்பிட்டுள்ளேன்,
> மருந்து "மிக்சர் " ரூபத்லேயே கொடுக்கப்பட்டது
> . மருத்துவமனைக்கு செல்வோர் கட்டாயம் கண்ணாடி பாட்டில் கொண்டு செல்ல
> வேண்டும் . இல்லையேல் திருப்பி அனுப்பபடுவர் .மருந்தாளுனர்களின் முதல்
> வேலையே காலையில் இந்த"மிச்சர் " தயாரிப்புதான் . மிச்சர்களில் அதிகம்
> செல்லுபடி ஆவது 'Carminative mixture' என்று சொல்லப்பட்ட சிவப்பு கலர்
ஆனால் சிவப்பு கலர், பச்சை கலர் என பெரிய பாட்டில்களில் வைத்திருப்பார்கள்,
தாங்கள் கூறியது போல் அனைவரும் பாட்டிலைக் கையில் எடுத்துச் செல்லவேண்டும்,
பழமையை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்,
நன்றி ஐயா,
அன்பன்
கி. காளைராசன்
--
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும்
சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார்,
சங்க காலத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை பெண்களுக்கு பெண்களே எதிரிகள்,
இன்றும் எத்தனையோ கண்ணகிகள், எத்தனையோ மாதவிகள்,
திருமணம் ஆகாமலே துறவு பூணாமலே கட்டாயத் துறவியாக இருக்கும்
எத்தனையோ மணிமேகலைகள்
ஒரே ஒரு வித்யாசம் இளங்கோ அடிகள் இப்போது காணவில்லை
இது வரை எந்த இலக்கியமும், நடைமுறைகளும் பெண்ணியம் கூத்தாடும்
மனநிலையை ஏற்படுத்தவே இல்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> ப்ரத்தையான மாத்வியும் வாழாவெட்டியான கண்ணகியும் இளம் வயதில் துறவு பூண்ட
> மணிமேகலையும்
> சிற்றின்பத்தை முழுதாகக் கற்றுணர்ந்த்து குடுமப வாழ்வில் முழுமை பெற்றே
> பேரின்பத்தை அடையமுடியும் என்ற தமிழர் கருத்துக்கு முரணாக பெண்கள் சிற்றின்பப்
> பேய்கள் அவர்கள் பேரின்பத்துக்குப் பெறும் இடையூறு என்ற கருத்து நிலவி
> சங்க்மும் பிற்கால இலக்கியமும் பெண்னியம் கூத்தாடும் மனத்தாக்கத்தை
> ஏற்ப்டுத்தவில்லை
>
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
யதார்த்தம் உணரமல்
இப்படிச் சொன்னால் எப்படி
இப்போது அடிவாங்கும் ஆண்களே அதிகம் பெண்களிடம் (நான் இந்த பட்டியலில் இல்லை)
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஆண்கள் பெண்களை கை நீட்டி அடிப்பது உண்டு. பெண்கள் அப்படியல்ல.
>
--
என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்க அவலுடன்,
நான் பொதுவாக உலகம் முழுமைக்கும் சொன்னேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> 'யதார்த்தம் உணரமல் இப்படிச் சொன்னால் எப்படி
> http://www.nytimes.com/2010/11/08/world/asia/08burn.html?_r=1&hp=&pagewanted=print
> இன்னம்பூரான்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இ ஐயா,
இன்புறச் செய்த கருத்து. இலக்கியம் பற்றி இன்னும் இதுபோல் எழுதினால்
நன்றாக இருக்கும்
தேவ்
On Nov 8, 9:20 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
'நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.' என்பது மட்டுமல்ல. இலக்கியம் ஒரு கண்ணாடி. வரலாற்றுக்கும், அனுபவத்துக்கும் நன்கு அலங்கரிக்கப்பட்ட வடிகால். அது நற்பண்புகளை மட்டும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. சுயகருத்து என்ற ஓடையில் மிதக்கும் படகைப்போய் 'நீ மாயக்கம்பளத்தில் அமர்ந்து ஆகாயத்தில் ஊர்ந்து வா' என்று வற்புருத்தினால், உயிரை விடும். இது நிற்க.'பேரெழில்' .....?
இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆஹா என்ன ஒரு தீர்க்க தரிசனம்
அவியல் இருக்கும் பாத்திரத்தில் அகப்பையை விட்டு சர்க்கரைப் பொங்கல்
கொண்டு வா என்பதை போலத்தான்
தொடருங்கள் இவை போன்ற கருத்துக்களை உங்களைப் போன்ற அனுபவம்
மிகுந்தவர்களே கூறமுடியும்
அன்புடன்
தமிழ்த்டேனீ
2010/11/9 coral shree <cor...@gmail.com>:
> இலக்கியம் ஒரு கண்ணாடி. வரலாற்றுக்கும், அனுபவத்துக்கும் நன்கு
> அலங்கரிக்கப்பட்ட வடிகால். அது நற்பண்புகளை மட்டும் பிரதிபலிக்க வேண்டும் என்று
> எதிர்பார்ப்பதும் தவறு.
--
2010/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
இவை போன்ற பல அடிகளை வாங்கும் ஆண்கள் வெளியே சொல்ல வெட்கப்படுகிறார்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
என்னதான் ஜகா வாங்கினாலும் ஜட்கா வண்டிக் குதிரை போல் பழைய நினைவுகள்
எத்தனை பேரை இன்னமும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது
என்பதைக் காணும்போது
ஆளுமையால் அடித்த பெண்கள் என்னும் தலைப்பில் பல கட்டுரைகளே எழுதும்
அளவுக்கு செய்திகள் உள்ளன என்பதே உணமை
மனம் நெகிழும் ஆளுமைகள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஜகா!
> இ
ஆளுமை என்றதும் நினைவுக்கு வருகிறது
என்னதான் ஜகா வாங்கினாலும் ஜட்கா வண்டிக் குதிரை போல் பழைய நினைவுகள்
எத்தனை பேரை இன்னமும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது
என்பதைக் காணும்போது
ஆளுமையால் அடித்த பெண்கள் என்னும் தலைப்பில் பல கட்டுரைகளே எழுதும்
அளவுக்கு செய்திகள் உள்ளன என்பதே உணமை
மனம் நெகிழும் ஆளுமைகள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
2010/11/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>
வாழ்க்கை அமைந்து விடுகிறது. பெற்றோரும், ஆசிரிய பெருமக்களும், மற்றோரும்
உரம் இடுகிறார்காள்; சில சமயம் ரசாயன உரம் வாழ்க்கை பூமியை தரிசாகவும்
செய்து விடுகிறது. தனி மனிதராக வாழ இயலாது. அது உகந்ததும் அன்று.
விதியும் விளையாடுகிறது. இந்த சூழ்நிலை, மானிடராகப் பிறந்த யாவருக்கும்.
என் செய்வது?
வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளவேண்டும். நெறிகள் பல கற்று, ஆன்றோர்களின்
வரலாறு கண்டு, ஐம்புலன்களால் அறிந்ததை எடை போட்டு, வடி கட்டி, அறிவுரைகள்
நாடி, ஆய்வுகள் பல செய்து, மனசாட்சியுடன் பேசும் திறன் பயின்று,
செயல்பட்டாலே, நல் வாழ்வு அமையும் வாய்ப்பு உத்தரவாதம். வினாக்கள் பல
எழும். அன்றாட பிரச்னைகளே பாடாய் படுத்துகின்றனவே. குடும்பத்தின் உள்ளே
எத்தனை கருத்து வேறுபாடுகள்? சுற்றம் என்றாலே குற்றம் உறுதுணையாக
வருகிறதே. சமூகம் தவறுகளை நியாயப்படுத்துகிறதே. ஊர்க்கட்டுப்பாடு
அதர்மமாக பயணிக்கிறதே. குறைந்தது ஆயிரம் வினாக்கள் எழும். எழட்டுமே.
பாமரனாயினும், பாவலராயினும், உகந்தது எது? தகாதது எது? என்பதை மனசாக்ஷியை
கேட்டு அறிந்து கொள்ள முடியுமே. சட்டமும், நீதியும் இந்த அணுகுமுறையை
போற்றுகின்றன என்பதும் தெளிவு.
இப்படி சிந்திக்கும் போது, சங்கப்பாடல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து பாடல்
48ல்'...பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை...'என் மனதை முழுதுமாக
ஆக்ரமித்துக்கொண்டது; இழையும் தொடங்கியது. என்னிடம் சூத்திரம்
ஒன்றுமில்லை. 60 வருடங்களாக, என் கவலை ஒன்று நீங்கவேயில்லை. சொன்னால்
சிரிப்பார்கள். சாக்ரட்டீஸ்ஸின் உயிர் பிரிந்த விதம் இன்னும் எனக்கு
சமாதானம் ஆகவில்லை. அது என் மனவலி. இருக்கட்டும். பேரெழில் தேடுவோம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
02 12 2010
சிறு கதை எழுத வேண்டும்; பெயரும் புகழு கூட வேண்டும் என்ற ஆவல் யாருக்குத்தான் இல்லை. யானும் அதற்கு விதி விலக்கல்ல. ஒரு நாள் மேஜையையும் நாற்காலியையும் ஒழுங்கு படுத்தி, மனநிலையை ஏகாக்ரஹ சித்தம் கொண்டு ஒரு நிலையில் அமர்த்தி, நிகழ்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் உடன்போக்கில் அலையவிட்டு, நீண்ட நேரம் ஆயிற்று. கதையை காணவில்லை. ஆம். சொல்லும் எழுத்தும் கட்டளையிட்டால் வாரா. கெஞ்சினால் கூட திசை மாறி பயணிக்கலாம். மாறிய திசை ‘நீயுரும் வம்மின்’ நோக்கி. ஆரோகணித்தாய் விட்டது. புரவி பறந்தது. ‘டக்’ ‘டக்’ என்று குளம்பொலி கேட்கிறதோ?
படித்த ஞாபகம். மறந்ததாக நினைவு. சங்க இலக்கியத்திலே காதல் ஒரு பக்கம்; வீரம் மறுபக்கம். அநேகமாக, இக்காலம் போல் பேசப்படாதது பெற்றோர் தவிப்பு என்று ஒரு சாரார் கூறினாலும், நானும் ஒரு பொண்ணை பெத்தவன் என்பதால், ஒரு நற்றாயின் தவிப்பு, குமுறல், கவலை, எதிர்பார்ப்பு எல்லாம் புரிகிறது.
கதாபாத்திரங்கள்: தலைவன், தலைவி, நற்றாய். நூல்: அகநானூறு.
தலைவியை ஒரு நாள் காணவில்லை. நற்றாயின் நெற்றியில் கவலை ரேகைகள். தலைவி ‘குறுமகள்’ தானே. செல்லம். அவள் தனிமை நாடுகிறாள். உற்ற தோழியை கூட ஒதுக்குகிறாள். ஊன் மறுக்கிறாள். உறக்கமும் இல்லை. எரிந்து விழுகிறாள். அவளிடம் பேச அச்சம், அன்னைக்கு. செவிலியை வினவுகிறாள். தோழியை குறுக்கு விசாரணை செய்தும் பயனில்லை. இந்த அழகில், தலைவியை ஒரு நாள் காணவில்லை. அவள் தந்தைக்கோ, அண்ணன்மார்களுக்கோ தெரிந்தால், சினம் மிகக்கொண்டு, தலைவனை தேடிப்பிடித்து...? அன்னைக்கு கவலை, ஏடாகூடமாக, ஏதாவது நடந்துவிட்டால்? இங்கு ஒரு மென்மையான செய்தி. இதெல்லாம் என் கற்பனை தான். ஆனால், சங்கப்பாடல்களில் இலை மறைவாக, காய் மறைவாக, ஒன்றும் மறைக்காமலும் இருப்பது தான்.
நிகழ்வு தலைவி ஓடிப்போனது, இன்றைய வழக்கில். அக்காலம், அதற்கு உடன்போக்கு என்று பெயர். நான் எழுதாத சிறுகதையின் நிகழ்வுகளும், உணர்ச்சியும் கூடியது போல. ஆனால், இந்த பாடலில் நிகழ்வு முக்கியமில்லை. நற்றாயின் உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள், இயற்கையின் வரன் ஆகிய காதலை புரிந்து கொண்டது.
அன்னையின் கூற்று: என் செல்லமகள் அழகி. கவர்ச்சியின் மறு உருவம். அவளின் மனதை கொள்ளை கொண்ட விடலைப்பையனோடு கல்லும், முள்ளும் நிறைந்த உலர்பூமியை கடந்து விட்டாள். (இனி, அவனை சார்ந்தவள்.) எனினும் இருவரும் திரும்பி வருவார்கள். இது மனம் நாடும் எதிர்பார்ப்பு.
"...அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோள் குறுமகள்
திருந்து வேல் விடலை யொடு வருமெனத் தாயே..."
இருந்தாலும் திடீரன்று ஒரு கவலை எழுகிறது. யுவனும் யவதியும் தனித்து இருக்கப்போவதில்லை. நாளாவட்டத்தில் அந்த திவ்யதம்பதிகள் நம் வீட்டுக்கு வரவேண்டும். அல்லது அவனுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும். அந்த விடலை என் செய்வானோ, தெரியவில்லையே. (என் தனிமொழி: இந்தக்காலத்து பசங்க போல தான் அக்காலத்திலும். என்ன செய்வார்கள் சொல்லமுடியாது.) இந்த பெண்ணை எத்தனை ஆசையாக வளர்த்தேன்! சீவி, சிங்காரிச்சு அழகு பார்த்தேன். அவளுடைய அவயவங்களின் மெருகு கூடும்போது, கண் பட்டு விடுமோ என்று திருஷ்டி கழித்தேன். பெண்ணை பெத்தவ ஆசையை கண்டுகொள்ளாவிடினும் பாதகம் இல்லை. கண்ணும், கருத்துமாக வைத்துக்கொண்டால் போதும். அடி பெண்ணே! புகுந்த வீட்டில் நற்பெயர் எடுக்கவேண்டுமம்மா! அது போதும்.
இருந்தாலும், இங்கு வந்தால், மனம் மகிழ்ந்து, மணவாளனுக்கு விருந்தோம்பி, அவர்கள் துய்க்கும் இன்பம் நான் காணவேண்டுமே.
“...எம்மனை முந்துறத் தருமோ
தம்மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே...”
இந்த அன்னையின் அங்கலாய்ப்பு ஒரு உணர்ச்சி வெள்ளமே.
இன்னம்பூரான்
20 04 2011
பி.கு. இதை ஒரு சிறுகதையாக பாவித்துக்கொள்ளுங்களேன்.
படித்தது: திரு வ. ஞானசுந்தரம்: இதழ்: நடை ஜனவரி 1969:
உபயம்: பொள்ளாச்சி நசன்: சரடு: எனது.
‘தோ ரஹா’ பாபா பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களோ? மதுராபுரியில் அவருடைய தரிசனம் கிட்டியது. வட இந்தியாவில் ரொம்ப பிரபலமான சாது. ஒரு மச்சு மேல் அமர்ந்திருப்பார். எப்பவாவது காலால் பக்தனின் தலையை தொட்டுத்தான் ஆசீர்வாதம். அவருக்கு பிடித்த மந்திரம், ‘வஸுதேவ குடும்பகம்’. எல்லாரையும் அடிக்கடி சொல்லச் சொல்வார். மஹோபனிஷத்தின் ஆறாவது பகுதியில் வரும் 72வது ஸ்லோகம், “ ‘இது சுற்றம்; அது அன்னியம்’ என்று அற்பர்கள் தான் கூறுவர். இவ்வுலகமே, நிறைவுடன் வாழ்பவர்களுக்கு, குடும்பம்.” என்கிறது.
" अयं बन्धुरयं नेति गणना लघुचेतसां
उदारचरितानां तु वसुधैव कुटुम्बकं "
'ayam bandhurayam neti ganana laghuchetasam
udaracharitanam tu vasudhaiva kutumbakam'
ஹிதோபதேசத்திலும் (1.3.7.1) அதே கருத்து. பஞ்சதந்திரத்திலும் (5.3.37) அதே கருத்து. தமிழகத்திலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்.’ என்பார்கள்.
இத்தருணம் 1906ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்து ஒன்று இங்கு பதிவு செய்கிறேன்.
"To us all towns are one, all men our
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."
இது ஒரு புகழ் வாய்ந்த சங்கப்பாடலின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கு இலக்கணம் எழுதிய, திருக்குறளையும், தனது எண்பதாவது வயதில், உணர்ச்சியும், உவகையும் உந்த, திருவாசகத்தை மொழிபெயர்த்தவரும், என் ஆசான் திரு.வி.க. அவர்களின் தமிழார்வத்துக்கு வித்திட்டவருமான, ஆங்கிலேய பாதிரியான ஜார்ஜ் உக்லொவ் போப் அவர்கள் (1820–1908) மேற்படி மொழியாக்கம் செய்தவர்:
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு)
English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems:
‘யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;தீதும் நன்றும் பிறர்தர வாரா..’ என்று முதல் இரு வரிகளை தன் ஆஸ்தான சொத்தாக வைத்துக்கொண்டு, சொற்மாரியும், எழுத்துப்பொழிவுமாக, காலம் கடத்தினோர் பலர் எனினும், புலவன் கணியன் பூங்குன்றனாரின் புகழ் என்றும் மங்காதது. இறவா வரமும், மறையா அறிவுரையும், உலகெங்கும் பரவிய நற்செய்தியும் ஆன இந்த பாடலையும், உபநிஷத், நம்மை பாதாரவிந்தங்க்அளில் அமர்த்தி செய்த போதனையையும், சென்னை கடற்கரையில் சிலையாகி நிற்கும் போப்பையரின் உலகளாவிய தமிழ்த்தொண்டையும் உள்மனதில் தரித்தோமானால், அதை விட பெரிய பரிசில் கணியன் பூங்குன்றனாருக்கு, கிடைத்திருக்கப்போவதில்லை.
முத்தாய்ப்பாக,
மஹாகவி பாரதியாரோடு சேர்ந்து
‘...“பறையருக்கும் இங்கு- தீய
புலையருக்கும் விடுதலை
பரவரோடு மறவருக்கும்
குறவருக்கும் விடுதலை”...’
என்று பள்ளுப் பாடுவோம். கூடி மகிழ்வோம். உலகத்தை உய்விக்க வந்த உத்தமன் கணியன் பூங்குன்றன் என்று அவரை வாழ்த்தி வணங்குவோம்.
1908 பிப்ரவரி 11 ஆம் திகதி இயற்கை எய்தினார், ஜி.யூ. போப் அவர்கள். உயிர் நீக்கும் தருவாயில் எனது கல்லறைக் கென்று செலவாகும் தொகையில் ஒரு சிறு பகுதியாதல் தமிழ் மக்களுடையதா யிருத்தல் வேண்டும் என்று வாய்மலர்ந்த செய்தி சென்னைக்கு எட்டியது. அதை முன்னிட்டு, அது போழ்து பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த செல்வகேசவராய முதலியார் ஒரு சிறு தொகை திரட்டி அனுப்பியது எனக்குத் தெரியும்.(1944 : திரு.வி.க அணிந்துரை)எனக் கூறுவதிலிருந்து இறுதி சடங்குக்குத் தமிழர்களின் பங்களிப்பு இருக்கவேண்டுமென போப் விரும்பியுள்ளதை அறிய முடிகின்றது.
இன்னம்பூரான்
25 04 2011
நான் படித்தவை:
திரு.வித்யா ராஜகோபாலன்:http://in.answers.yahoo.com/question/index?qid=20090402042041AAAwWXD
Retrieved on 25 04 2011 from: http://madaimattru.com/home/34-siteeditor/49-bobe.html
‘திவ்ய நாமங்களில் இது உசத்தி என்று சொல்ல நமக்கு தகுதியில்லை. இருந்தாலும் பாருங்கோ!...'அநிர் தேஸ்யவபு :' என்றால் பரிபாடலின் எல்லை கடந்த பெருமாள், சொல்லவண்ணம் வந்து நிற்கிறார்.’
‘ஐயா, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது பற்றி விளக்கமாக எழுதி, நாமத்தின் பொருளை எங்களுக்கு அருளிச் செய்யுமாறு வேண்டுகிறேன்.’
அன்பின் காளை ராஜன்,
சில பகவத் விஷயங்கள் எப்படி பேசப்படக்கூடும் என்று முன்கூட்டி உரைக்க இயலாது, ஆத்ம சம்பாஷணைகள் நடக்கும் போது. உமது ‘திவ்யநாமம்’ இழையில்
பரிபாடலின் எல்லை கடந்த பெருமாள், சொல்லவண்ணம் வந்து நின்றது, அவன் செயல். என்னை கருவியாக அந்த மாயேயோன் பாவித்தது ஒரு வாய்ப்பு. அதுவும், தன்னுடைய திருவிழாவுக்கு, அவன் என்னை அழைத்த மஹாபாக்கிய்ம். போதும் பீடிகை என்கிறான்.
மின் தமிழில் பக்தி இலக்கியம், ஆன்மீகம் ஆகியவை பற்றி எழுத எனக்கு சங்கோஜம். நான் சபைக்கோழை. ஏனெனில், புலவர்களும், வல்லுனர்களும் வலம் வரும் அவையில் குரலெழுப்ப உன் தகுதி யாது? என்று யாரேனும் கேட்டுவிட்டால், ‘யாதுமாகி நின்றாய்!’ என அந்த ‘அநிர் தேஸ்யவபுவை’ தெண்டன் சமர்ப்பிவித்து விஞ்ஞாபனம் செய்துவிட்டு, அவனுடைய சரணாரவிந்தங்களின் அடிப்பொடியாக, ஒளிந்து கொள்வது தான் ஒரே மார்க்கம். எனினும், திரு.காளைராஜனுக்கு உரிய பதில் அளிப்பது தான் பண்பு என்று ஒரு குறளி சொல்கிறது. ஐயா! பக்தி இலக்கியங்கள் அறியேன். மனது சொல்வதை எழுதுகிறேன்.
இறை வணக்கம் ஒரு மனித சமாதானம்.
|
|
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! |
|
|
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, |
|
|
முன்னை மரபின் முதுமொழி முதல்வ? |
என்ற பரிபாடல் உணர்த்தும் ‘அநிர் தேஸ்யவபுவை’ ( சாமுத்திரிகா லக்ஷணங்களுக்கு மேற்பட்ட முதுமொழி முதல்வனை -சொல்லாக்கத்தின்,சிந்தனாசக்தியின், மனதின் பிரஞ்க்கையின் வரம்புகள் அறியா யாக்கையை, ஆயிரம் நாமங்களுக்குள் அடக்கி, முன்னும்,பின்னும் வரம்புகள் கற்பித்து உணரமுடியுமோ? அறியமுடியுமோ?, அடைக்கலம் தான் நாடமுடியுமோ? என்று வினவினால், தர்க்கமும் வாதமும் தசாவதாரங்கள் எடுத்து, ஸஹஸ்ரநாமங்களுக்கும் படியெடுத்து, சர்ச்சைகள் பெருத்து, ஶ்ரீராமனின் பெயர் ஒன்று போதுமே! என்ற ஸகஜ நிலைக்கு (மனுஷ்ய யத்தனத்திலே, அவ்வளவு தாண்டா முடியறது!’) வரும்போது,
=>அந்த ‘மாயேயோன்’ சொல்லவண்ணம் வந்து நிற்கிறான்.
எப்படி என்று கேட்டால், விஷ்ணுபுராணம் (1.2.10 -1.2.12): சொல்கிறது: ‘...உமது இந்திரியங்களுக்கு புலப்படாதது; உருவம், நிறம் போன்ற சின்னங்களற்றவன்;பிறந்து, வளர்ந்து, கிழண்டு, கழண்டு, அழிந்து போகும் நிலைகளற்றவன், யாதுமாகி நின்றவன்...வர்ணிக்க இயலாதவன் என்று மனம் அலை பாயும் போது, அந்த கருநீல வண்ணன் (நிறம் வந்தாச்சு!) அந்த செங்கண்ண வண்ணன் (உருவமாகி வந்தாயே! அப்பனே!),
=> சொல்லவண்ணம் வந்து நிற்கிறான்.
உபயதாரர்: திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்: 3
‘திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா
ஊழிதோ று-ழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்
கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே?’
சரி. இது எல்லாம் மனிதர்கள் இயற்றிய பிரயோகங்கள் தானே: ஆமாம்! தெய்வீக ஈடுபாட்டில், ஆத்மார்த்தமாக ஒரு நாமமோ, ஆயிரம் நாமமோ, பல்லாயிரம் நாமமோ, கோடிக்கணக்கான நாமங்களோ, அநாமதேயமாகவோ, திரெளபதி போல் கூவியும், மெளனமாகவும் அழைத்தாலும், விரைந்தோடி வந்து,
=>அந்த ‘மாயேயோன்’ சொல்லவண்ணம் வந்து நிற்கிறான், காளைராஜன். இதற்கடியில் காணும் பகுதியை இங்கு பதிவு செய்வதாக இல்லை. பகவத் சங்கல்பமோ!
ஹரி: ஹரி:
***************************************************************************************
அற்புதம்!அற்புதம்! அற்புதமே!:அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009
உ
ஸ்ரீ:
எல்லாம் அவன் செயல்
கதை சுருக்கம்
எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள்.அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்ரு அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும். ஆனால் பகவானை வந்து நினைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எப்பவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ காரியம் என் கண் முன்னே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு. அது போல் எனக்கு(ம்), ஆழ்வார்களுக்கு(ம்) பகவான் தெரிசனம் தருகிறான். அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற்றையும் காப்பாத்துகிறேன் என்கிற மாதுரி கையை காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில் சிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல் பட்டு பலன் இரு(க்)கிறது. நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன். யார் அழைத்துப்போவார்கள். எனக்கோ வயதாகி விட்டது. கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும். இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால், நான் சனிக்கிழமை
தோறும் வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வந்தேன். எதற்கு என்றால், என் பேரன் பேத்திகளுக்கு நல்ல ரோஜாப்பூ மாலை போடு என்றும், கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டே, துளஸி மாலையை சனிக்கிழமையில் சாத்தி வருகிறேன். அதனுடைய பலன் எனக்கு கிடைத்து, பேரனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பிள்ளையோட பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. நான் வந்து என் பெண், பிள்ளை, பேரன், பேத்தி உள்பட நன்றாக இருக்கவேண்டும் என்று திருவேங்கடமுடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு கனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது. மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார். அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு மூன்று பிள்ளை. அவர்களில் இரண்டாவது பிள்ளைக்கு கிட்னி ட்(ர)பில் வந்து ரொம்பவும் 2 வருஷம் கஷ்டப்பட்டான். டாக்டர்கள் பார்த்து ஆப்ரேஷன் செய்யவேண்டும். இல்லாத போனால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி விட்டார். நாங்கள் ரொம்ப பயந்து போனோம். அவனுக்கு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறார்கள். என்ன செய்வது. கடவுள் தான் துணை என்று இருந்தோம். அப்படியிருக்கும் போது டாக்டர் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நாலு பெண்கள். அதனால் நான் பெண்கள் எல்லாரையும் டெஸ்ட் செய்து ஒருவருதும் சரியில்லாமல் இருந்து, என் பெரிய பிள்ளையுடைய க்ர்னி(கிட்னி) சரியாக இருக்கிறது என்று சொல்லி, அவன் தான் தம்பிக்குக் கொடுத்தான். என்ன செய்வது. என் பெரிய மாட்டுப்பெண்ணுக்கும் உடம்பு சரியில்லாதவள். அவளும் சம்மதப்பட்டுத்தான் க்ர்னி தம்பிக்குக் கொடுத்தான். க்ர்ணி கொடுத்து மூன்று வருஷம் ஆகிறது. இருவரும் செளக்யமாக இருக்கிறார்கள். நானும் என் குலதெய்வத்தை வேண்டி வெளக்கு ஏத்தி வைத்தேன். இரண்டாவது பிள்ளை க்ர்ணி அண்ணாவிடம் வாங்கிக்கொண்டு நல்லபடியாக இருக்கிறான். அவன் இருப்பது நெய்வேலியில் இருக்கிறான். நானும் நெய்வேலி ஸ்ரீனிவாஸப்பெருமாளுக்கு வெளக்கு ஏத்தி வைத்தேன். ஆனால் சின்னப்பிள்ளை நெய்வேலுக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல் ஆகிறது. இப்படி என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் பகவானுக்கு மனம் இறங்கி, இரண்டு பிள்ளையையும் நல்லபடியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறான். அவன் செயலில் தான் எல்லாம் நடக்கிறது. அதை நான் என் வயதுக்கு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இரண்டாவது பிள்ளையும் இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து விட்டான். பெரிய பிள்ளையும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து விட்டான். எல்லாரும் நல்லபடியாக இருப்பதை அவன் செயலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
****************************************************************************
நன்றி,
இன்னம்பூரான்
12 07 2011
பி.கு. இது திரு காளைராஜனுக்கு யான் அனுப்பிய பதில். அவருடைய திவ்யநாமம் இழையின் அரவணைப்பு தடைபடக்கூடாது என்றும், இதை வேறு ஒரு இழையில் இடலாம் என்றார்கள். எனவே, இது, ‘நீயிரும் வம்மின்’ இழையில்.
இன்னம்பூரான்14 07 2011
‘திவ்ய நாமங்களில் இது உசத்தி என்று சொல்ல நமக்கு தகுதியில்லை. இருந்தாலும் பாருங்கோ!...'அநிர் தேஸ்யவபு :' என்றால் பரிபாடலின் எல்லை கடந்த பெருமாள், சொல்லவண்ணம் வந்து நிற்கிறார்.’
‘ஐயா, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது பற்றி விளக்கமாக எழுதி, நாமத்தின் பொருளை எங்களுக்கு அருளிச் செய்யுமாறு வேண்டுகிறேன்.’
நன்றி,
இன்னம்பூரான்
12 07 2011
பி.கு. இது திரு காளைராஜனுக்கு யான் அனுப்பிய பதில். அவருடைய திவ்யநாமம் இழையின் அரவணைப்பு தடைபடக்கூடாது என்றும், இதை வேறு ஒரு இழையில் இடலாம் என்றார்கள். எனவே, இது, ‘நீயிரும் வம்மின்’ இழையில்.
இன்னம்பூரான்14 07 2011
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." என்று கனிவான அழைப்பு விட்டு மாதம் இருபத்திரண்டு கழிந்ததால்,
நற்றிணைக்கு கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவனார், அருமையான உவமைகளை உகந்த வரிசையில் அடுக்கி, பூமியே உன் திருவடி, ஆடையோ கடல், ககனமே உன்னுடல், அதுவும் நீலமேனி, திசை காட்ட நான்கு கைகள், கதிரும்,மதியுமான கண்களிரண்டும், எங்கெங்கும் வியாபித்திருக்கும் ஆத்மஸ்வரூபன் நீ, உள்ளுறைந்து அந்தர்யாமியாக ஆட்டிப்படைப்பவனும் நீ என்றும், மாயக்கூத்தனும் நீ என்று வைணவ மந்திராக்ஷதையை ‘தூ நீராக’ தெளித்து நம்மையெல்லாம் ஆசீர்வதிக்கும் போது, வேத முதல்வனே என்று விளிக்கும் போது, திகிரியை விஷ்ணுச்சக்கரமாக சுழற்றி, மாசு கழட்டும் போது, (“ஆழிபோல் மின்னி... தீயினில் தூசுஆகும்...” என்றாள், ஆண்டாள் பிற்காலம்.) நாம் மயங்கிக்கிடக்கிறோம்.
பாடாண் திணையில், ‘கடவுள் வாழ்த்து’ என்ற துறையில் நேரிசையாசிரியப்பாவில் உவகையான வருகை தந்துள்ள
‘மா நிலம் சேவடி ஆக தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே’
என்று கடவுள் வாழ்த்துடன் புனருத்தாரணம் செய்ய விழைகிறேன். நானோ மாணவன். முடிந்தவரை சொந்த சாஹித்யம் செய்யும் தோஷம். மேதைகள், ‘"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." என்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு, இவ்விழையை மேன்மை படுத்தினால், நன்மைகள் பல. எனக்கு பாடம். மடலாடலின் சுவை கூடும். த.ம.அ. வரவேற்கும். ஏதோ இது என்னுடைய படைப்பாற்றல் என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. படித்து பெற்ற பயனிது. மாயோனும், சீயோனும், நற்றிணையும், பரிபாடலும், திருவாய்மொழியும், பாரதம் பாடிய பெருந்தேவனாரின் சமயம், பின்னத்தூர்.அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும் என்றெல்லாம் பல விஷயங்கள் எழுதலாம். காலம் வரட்டும்.
இன்னம்பூரான்
04 12 2011
http://2.bp.blogspot.com/_k67lBiljAPY/TRf4in_YRoI/AAAAAAAAAL4/LFQU4OE2kvg/s1600/IMG_0744.JPG
கனிவான கனமான அழைப்பு;
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப்
பாடுவதற்கு 'வம்மின் புலவீர்' என
ஆழ்வார் அழைத்தார்.
>>> the Natrinai Prayer song is a Translation of
VISHNU SAHASRANAMA DHYANA SLOKAM
beginning with Bhu Padau Yasya Nabhir.............<<<
திரு சந்தானம் அவர்கள் சுட்டும் ஒப்பீடும்
சரியாகவே உள்ளது பெரும்பாலும் ;
மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது.
"மா நிலம் சேவடி ஆக
தூநீர்வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே"
பூ⁴: பாதௌ³ யஸ்ய நாபி⁴: வியத³ஸுரநில: சந்த்³ர-ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாஶா ஶிரோ த்³யௌ: முக²மபி த³ஹநோ யஸ்ய வாஸ்தேயம் அப்³தி⁴: |
அந்தஸ்த²ம் யஸ்ய விஶ்வம் ஸுர-நர-க²க³-கோ³-போ⁴கி³-க³ந்த⁴ர்வ-தை³த்யை:
சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபு⁴வந வபுஷம் விஷ்ணும் ஈஶம் நமாமி ||
மா நிலம் சேவடி ஆக - யஸ்ய பாதௌ³ பூ⁴:
தூநீர்வளை நரல் பௌவம் உடுக்கை ஆக - (யஸ்ய) வாஸ்தேயம் அப்³தி⁴:
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக - (யஸ்ய) நேத்ரே ச சந்த்³ர-ஸூர்யௌ
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய -
யஸ்ய அந்தஸ்த²ம் விஶ்வம் ஸுர - நர- க²க³-கோ³- போ⁴கி³- க³ந்த⁴ர்வ -
தை³த்யை:
இதைப்போலவே மூன்று பதிகம் கொண்ட
ஆண்டாளின் சங்கத் தமிழ்மாலை
அச்சுதனிடம் அரிவையரை ஆற்றுப்படுத்துவதையும்,
'நீயிரும் வம்மின்' எனும் பதிற்றுப்பத்தையும்
ஒப்பிடத் தோன்றுகிறது
தேவ்
--
நீயிரும் வம்மின்
‘ இது சொல்லப்பட்டது தான்’
அம்பர்ட்டோ ஈக்கோ என்ற பிரபல இத்தாலிய இலக்கிய கர்த்தா ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, தற்கால படைப்பாளிகளுக்கு ‘இது சொல்லப்பட்டது தான்’ பிரச்னை அதிகரித்து விட்டதாகச் சொன்னார். ‘தேறலை போல கலங்கிய கடல்’, ‘இளஞ்சிவப்பு பரிதி’ போன்ற ஆயிரக்கணக்கான சொற்றொடர்களை மூவாயிரம் வருடங்கள் முன்னால், ஹோமரே, தனது அமரகாவியங்களில் பதித்து விட்டதால், அவை பஹுவேஷதாரிகளாக, பல சுற்றுக்கள் வலம் வந்து விட்டதால், இந்த பிரச்னை வலுத்து விட்டது என்றார்.
அதனால் என்ன? படைப்பு என்று பார்க்கப்போனால், ஹோமருக்கே, இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அவருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்தில் இலக்கியம் படைத்த காகெபெரன்சென்ப் என்பவர், ‘அலுத்து, சலித்துப்போன இலக்கிய சொற்றொடர்கள் தானே எனக்கும் கிடைக்கிறது’ என்று தன்னையே வருத்திக்கொண்டார் என்று, ‘அலுத்ததும், சலித்ததும்’ என்ற தன்னுடைய 1967 வருட கட்டுரையில் பேராசிரியர் டேவிட் பார்த் சொன்னது சிந்தனையை தூண்டுகிறது.
எனக்கென்னம்மோ, இலக்கியம், கற்பனை, படைப்பாற்றல், இவற்றிற்கான கொடுப்பினைகள், வற்றாத ஊற்றுக்கள், என்றும் பொழியும் நீர்வீழ்ச்சிகள், ஜீவநதிகள் என்று தான் தோன்றுகிறது. இல்லாவிடின், இத்தனை ராமாயணங்களா? வால்மீகியும், கம்பனும், காளிதாசனும், துளசிதாசரும், அருணச்சால கவிராயரும், இத்தனை அற்புதமான இலக்கியங்களை நமக்கு அருளியிருக்க முடியுமா? பிரபல ஆங்கிலக்கவி எஸ்ரா பவுண்டு சொல்வதைப் போல்,‘புதியவை வந்த வண்ணம்’ உளன. ஹோமர், விர்ஜில், தாந்தே, கில்பர்ட் முர்ரே என்ற வரிசையில் கிரேக்க இலக்கியங்களின் மாறுவேடங்களை உற்று கவனித்தால், நீரோட்டங்களின் வகை தொகை நம்மை அதிசயிக்க வைக்கும். சுருங்க சொல்லின், இந்த நாடகமேடையில் நடை உடை பாவனைகள் மாறினாலும், காட்சி மாறுவதில்லை. கதை திண்ணம்.
நான் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை என்று அலுத்துக்கொள்கிறீர்களா? கதை கேளுங்கள். கதா சரித் சாகரம் என்றதொரு அருமையான கற்பனை நீரோட்டங்களின் சங்கமம், கிரேக்க இலக்கியங்களையெல்லாம் விட நீண்டதொரு இலக்கியம். சுவாரஸ்யமான பின்னணி. சிவனும், பார்வதியும் பாசத்துடன், அன்யோன்யமாக ஒரு சமயம் கழித்ததும், யாரும் இது வரை கேட்டிருக்காத கதை ஒன்று சொல்லவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டாள், பார்வதி. எத்தனை நாட்களை, கதை சொல்லியே இன்பமாக, இறைவன் பொழுதை போக்கினார் என்று தெரியாது. அத்தனை நீளம். ஆனால், ஏற்கனவே புழக்கத்திலிருந்த பஞ்சதந்திரம், விக்ரமாதித்யன் பெரிய எழுத்துக்கதை (வேதாளபஞ்சவிம்சதி) எல்லாவற்றையும் நைசாக ‘கட்’ & ‘ஒட்’! போதாக்குறையாக, ஒரு சிவகணத்தின் காதில் ஒரு அரைகுறை கதை விழ, அது கணாத்தியிடம் கிசுகிசுக்க, அவளும் பெண்புத்தியாலே, பார்வதியிடம் ‘கதை விட’, அம்பாளுக்கு சினம் பொங்கியது. காலாகாலத்தில் எல்லாரிடமும் சொல்லுங்கள்; ஓலை எழுதுங்கள்; அச்சடிக்கவும்; ‘கட்’ & ‘ஒட்’, என்று, இந்த பூலோகமானிடர்கள் உய்விக்க வேண்டி, ஆஞ்ஞை பிறப்பித்தாளாம். இது கூட டேவிட் பார்த் கண்டு கொண்டபின், எம்மிடம் நல்வரவு.
பரமேஸ்வரனையே ஏன் துணைக்குக் கூப்பிட்டேன்? நற்றிணை கடவுள் வாழ்த்தும், விஷ்ணு சகஸ்ரநாம தியான ஸ்லோகமும், ‘ஈயடிச்சான் காப்பி’ போல் இருந்தாலும், நீரோட்டங்கள் வெவ்வேறாக இருக்கலாம், என்பதால்.
சில சான்றோர் கருத்துக்கள்:
‘சொல்லவேண்டியது எல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு. யார் காது கொடுத்துக் கேட்கிறார்கள்? சொல்லுங்கோ? அதான் மறுபடியும், மறுபடியும், கருத்தடையும் செவியில் தள்ளி...’ (ஆண்ட் ரே கைட்) ( பாருங்கோ! எப்படி ஆண்ட் ரே கைட் என்ற பிரபல ஃப்ரென்ச் இலக்கிய கர்த்தாவையும், செம்பை பாகவதரையும் இணைத்து விட்டேன்! ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் பார்த்தால் இலக்கிய செருக்கு என்பார். அவரை தான் ஆளையேக்காணோமே.)
‘சட்புட்’ என்று விரட்டினால், வால்ட் விட்மன்: “ஓ! நான் சொன்னதையே சொல்றேனா? நல்லது. நான் சொன்னதையே சொல்வேன்.’
வரேன்.
இன்னம்பூரான்
20 01 2012
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil