1. நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்

10 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 20, 2025, 4:50:20 PMMar 20
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்

 

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு  21 : வருணங்கள்

ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்      21 March 2025      கரமுதல


(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20 – பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்- தொடர்ச்சி)

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
வருணங்கள்

தென்னிந்தியச் சூத்திரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரியப் பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ அளவினவே ஆம். ஆரியர்களின் நால்சாதி அமைப்பு (சாதுர் வருணயம்) வேதகாலத்தில், ஆரிய வருத்தத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்று. மகாபாரதப் போருக்குப் பின்னர் அருசுனன் எதிர்பார்த்தது போல், வட இந்தியாவில் பெரும் சாதிக்குழப்பம் (வருணசங்கரம்) நிலை கொண்டுவிட்டது. (பகவத்து கீதை 7.47 – 43). தென் இந்தியாவில் சாதுர்வருணயம் , எக்காலத்தும் கொள்கை அளவில் இருந்ததே அல்லது என்றும் நடைமுறையில் இருந்தது இல்லை. காரணம், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் பிராமணர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முழுமையாக வேறுபட்டே இருந்தது. ஆரியச் சமய நெறிகள், தமிழ்நாட்டில் பரவுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னர், தமிழ்நாட்டு மக்கள் கற்கால அளவில், பாலை, மலை, கடல், காடு ஆறு ஆகிய நிலங்களில் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, முறையே, நாடோடும் மறவர், வேட்டுவர், மீனவர், ஆயர், உழவர் என ஐவகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இப்பழங்குடியினர் ஐவரும், ஆரியப் பழக்கவழக்கங்கள் பண்பாடுகளிலிருந்து, பல நிலைகளிலும் வேறுபட்ட, தங்களுக்கே உரிய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் வளர்த்துக் கொண் டனர். ஆரிய வாழ்க்கை நெறிகள், தமிழர் வாழ்க்கை நெறிகளைப் பாதிக்க இயலவில்லை . ஆகவே, தமிழரின், அம்மண்ணுக்கே உரிய நாகரீகப் பெருவெள்ளமும், வந்து புகுந்த ஆரிய நாகரீகச் சிற்றருவியும், யமுனையும், கங்கையும், பிரயாகை தொடங்கி, பலகாவதம் இரண்டின் வெள்ளமும், ஒன்றொடொன்று கலக்கப் பெறாமலே, ஓடி வருவது போல், அடுத்தடுத்து ஓடுவவாயின. நமக்கு இப்போது கிடைத்துள்ள தமிழ்ப்பாக்களில், நன்மிகப் பழைய பாக்கள், பலநூறு ஆண்டுக்காலம் வரையும், தமிழ்ப் பிராமணர்கள், தமிழரின் தேசீயப் பெருவாழ்வாம், வெள்ளப் பெருக்கிலிருந்து பெருந் தொலைவு ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர். தமிழ்ப்பாக்களின் போக்கை ஆட்கொண்டிலர் என்பதை உணர்த்துகின்றன.

பாணினியும்தென் இந்தியாவும்

மகாபாரதப் போர் முடிவிற்கும், இந்த அரசு இனம் ஆட்சியமைப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரு – பாஞ்சாலம், மகதம், அவந்தி மற்றும் பிற வட இந்திய நாடுகளில், அரச இனங்கள், வண்ணம் மாற்றிக் காட்டும் கண்காட்சி போல், மாறிமாறி ஆட்சி ஏறிய நிகழ்ச்சியில் தமிழரசர் பங்கு சிறிதே அல்லது அறவே இல்லை எனலாம். ஆகவே, பாணினி போலும், முதலாம் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த, வட இந்திய சமற்கிருத நூலாசிரியர்கள், தென்னாட்டவரை, அறவே குறிப்பிடவில்லை , நான் எண்ணுவது போல், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கிய பாணினி, அசுமகம்” ஒன்று தவிர்த்து, நருமதை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டாரல்லர். “ இதிலிருந்து, திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள் தென்னிந்திய நாடுகளின் பெயர்களே பாணினிக்குத் தெரியாது எனஉய்த்துணர்கிறார். அசுடாத்தியாயி’ யைக் கற்ற, அறிவார்ந்த ஆசிரியன் எவனும், பாணினி, ஒரு பொறுப்பற்ற, அல்லது ஏதும் அறியாத இலக்கண ஆசிரியன் ஆவன் எனக் கூறுமளவு துணிவு பெற்றவனாக மாட்டான்,

ஆனால் நாம் பெற்றிருப்பது ஒரு சொல் அன்று. பாண்டியா, சோழா, கேரளா என்று மூன்று சொற்கள். ஆழமாகவும், முழுமையாகவும் ஆய்ந்து காணும் இலக்கண ஆசிரியன் எவனும் அச்சொற்களை அவன் அறிந்திருந்தால், தவறாமல் செய்திருக்க வேண்டிய, அச்சொற்களின் அமைப்பு பற்றிய விளக்கம் பாணினியால் அளிக்கப்படவில்லை. ஆகவே, தென்னிந்திய நாடுகளின் பெயர்கள் பாணினிக்குத் தெரிந்திருக்கவில்லை. அல்லது, வேறு வகையில் கூறுவதாயின், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒன்றே முறையான முடிவு ஆகும்” எனக் கூறுகிறார்.

பந்தர்க்கார் (Carmichael Lectures: 1918. page :4-7) இக்காரணகாரியங்களின் பொருத்தத்தை என்னால் ஏற்றுப் பாராட்ட இயலாமைக்கு வருந்துகின்றேன். பாணினி, அச்சொற்களை அறிந்திருக்க முடியும்; ஆனால், அவற்றைச் சமற்கிருதச் சொற்களாக மதித்திருக்க முடியாது. (உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள்) நாம், இப்போது பஞ்சாப் என்றும், ஆப்கானித்தான் என்றும் பெயரிட்டு அழைப்பனவும், அவற்றிற்குத் தெற்கில் உள்ள மேலும் சிலவுமான, அவர் நேரிடையாகத் தெரிந்திருந்த அண்டை மாவட்டங்களில் உள்ள இடங்கள், ஆறுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டு ஆய்வு செய்திருப்பது நடைபெற்றுளது. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய அசுடாத்தியாயியை, அவருக்குத் தெரிந்திருந்த இந்திய நிலப்பரப்பில், முழுமையான நில இயல் நூலாக மதிப்பது சரியாகாது. தம்முடைய இலக்கண நூலில் குறிப்பிடாத நாடுகளின் பெயர்கள் அவருக்குத் தெரியாது என்று கூறுவதும், மேலும் ஒரு படி சென்று அவர் காலத்து ஆரியர்கள், அப்பெயர்களை அறிந்திருக்கவில்லை என நிலைநாட்டுவதும், அதைப் பெரும் நகைப்பிற்குரிய ஒன்றாகத் தள்ளிவிடுவனவாம்.

“இந்தியாவின் நனிமிகச் சிறப்பியல்பு வாய்ந்த மரமாம் ஆல், இரிக்கு வேத்தில் குறிப்பிடப்படவில்லை . ஆகவே, இரிக்கு வேதப் பாராயணப் பாடல்கள் பாடப் பெற்றபோது, ஆல் போலும் ஒரு மரம் இந்தியாவில் இல்லை என ஒருவன் மிகவும் ஆணித்தரமாக வாதிடவும் கூடும்” எனக் கூறுவதன் மூலம், இவ்வாதத்தை எள்ளி நகையாடியுள்ளார் திருவாளர் பருகிதர் அவர்கள் (Pargiter’s Ancient Indian Historical Tradition: Page: 625) “அது, ஆல் குறித்தும் உப்பு குறித்தும், இன்றைய ஆய்வாளர் முடிவுப்படி, ஆரியர்கள் சென்று தங்கியிருந்த பாரியாத்திரா . மலைக்குன்றுகள் (ஆரவல்லி மலைத் தொடர்) குறித்தும் ரிக்வேதம் ஊமையாகவே இருப்பதை ஒருவன் கருத்தில் கொண்டவழி , விந்தியமலை, மற்றும் பிற நில இயல் கூறுகள் குறித்து அவை ஏதும் கூறாதிருப்பது, அது, அவற்றை ரிக்வேதம் அறிந்திலது என்பதை உணர்த்துவதாகாது என்று, மேலும் அவர் கூறியுள்ளார். (Pargisers Ancient Indian Historical Traditions – Page : 299). இருவரில், ஒருவர், பெரும்பாலும், பாணினியின் சமகாலத்தவரும், பிறிதொருவர், அவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் சிறப்புற வாழ்ந்தவரும் ஆகிய பௌதாயனரும், ஆபசுதம்பரும் தென்னிந்தியாவில் வாழ்ந்து, வாழ்க்கைச் சட்ட திட்டங்களை வரைந்தனர். அவர்கள், ஆரியர்கள் தாம் உறுதியாக, மேலும் பாணினி எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல பெருமை சார்ந்த, முழுமை யான பல்பொருள் அறிவு நிரம்பியவராயின், தங்களுடைய வார்த்திகத்திலும், மகாபாசுயத்திலும், பாணினியின் இலக்கணக் கொள்கைகளை, மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை, முறையே காத்தியா யனர்க்கும், பதஞ்சலிக்கும் நேர்ந்திருக்காது.

(தொடரும்)

புலவர் கா.கோவிந்தன்

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

++

நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன்

 

நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன்

ஃஃஃஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      21 March 2025      கரமுதல


நிற வகைகள்

புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST

பால் போல் வெண்ணிறம் கொண்டவனைப் பால்வண்ணன் என்றும் முத்துபோல் வெண்ணிறம் கொண்டவனை முத்து வண்ணன் என்றும் சொல்வது பழந்தமிழர் வழக்கம்.  மலர்களின்,  விலங்குகளின்   வண்ண அடிப்படையிலும் நிறங்களைக் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.  நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக  நிறங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.  வணிக நோக்கில் ஒரே வகையைச் சேர்ந்த அழுத்தமான அல்லது மங்கலான நிறங்களை எல்லாம்  சிவப்பு 1, சிவப்பு 2 என்பன போன்று எண்களிட்டு  அழைப்பது வழக்கம். தேவைப்படும் இடங்களில் நாமும் அவ்வாறே குறிக்கலாம். இனி,  பட்டியலைப் பார்ப்போம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(நிறம் / colour எனக் குறிப்பிடாத இடங்களிலும் அவை உட் பொருளாக உள்ளன.)


  1. அடர் சிவப்பு  cramoisy
  2. அடர் நீலம் – perse / smalt
  3. அடர் மஞ்சள் – gamboge
  4. அயிரைஅசரை  – sandy colour
  5. அரத்த(ம்) (நிறம்) – heliotrope  / haematic
  6. அருணம்  – bright red, colour of the dawn;
  7. அவுரி(நிறம்) – indigo
  8. அழல் நிறம்  reddish colour of fire
  9. ஆழ் சிவப்பு – cinnabar
  10. ஆழ் செந்நீலம் (ஊதா) – claret
  11. ஆழ் பழுப்பு – brunneous
  12. ஆழ் பைம்மஞ்சள் – citrine
  13. ஆழ்சிவப்பு  – cramoisy 
  14. ஆழ்நீலச் சிவப்பு  aubergine
  15. இடலை (ஆலிவ்வு) (நிறம் olivaceous
  16. இருள் சிவப்பு – puccoon
  17. இருள்சாம்பல் – slate
  18. இள மஞ்சள் –  flavescent / primrose
  19. ஈய(ம்) (நிறம்) – plumbeous
  20. ஈரல்நிறம் – Dark red colour, purple colour
  21. உறைபால்(நிறம் whey
  22. எண்ணெய்க்கறுப்பு  dark black colour
  23. எலுமிச்சை ம் – citreous
  24. ஒண்சிவப்பு – cardinal
  25. ஒளிர் செஞ்சிவப்பு – phoeniceous
  26. ஒளிர் செம்மை – coccineous
  27. ஒளிர் வெண்கலம்  aeneous
  28. ஒளிர் வெண்கலம் (நிறம்) – aeneous
  29. ஒளிர்சிவப்பு – puniceous
  30. ஒளிர்மஞ்சள் – sulphureous / vitellary
  31. கசகசாச் சிவப்பு – ponceau
  32. கடல்(நிறம் sea blue colour
  33. கடல்நீல  (நிறம்) – ultramarine
  34. கடற்பச்சை – cerulean  
  35. கத்தரிநீலம் – periwinkle நித்திய கல்யாணி
  36. கபிலை  புகர்நிறம் –  Tawny, brown or swarthy colour;
  37. கரு (நிறம்) – sable
  38. கருஞ்சிவப்பு – porphyrous/purpureal
  39. கரும்பச்சை  corbeau
  40. கருமை – nigricant / nigrine
  41. காயாம்பூ (நிறம் – purple colour
  42. காளிமம் –  black colour
  43. கிளிச்சிறை – Gold resembling the parrot’s wing in colour
  44. குங்குமச் சிவப்பு– vermeil
  45. குங்குமப்பூ(நிறம்) – croceate / saffron 
  46. குரால்  – Dim, tawny colour;
  47. குருதிச்சிவப்பு – erythraean / sanguineous / incarnadine
  48. குருதிச்செம்மை – vermilion
  49. கோதுமை (நிறம்) – wheaten
  50. கொடிமுந்திரி(நிறம்) – vinous
  51. கோமேதக(நிறம்) -topaz
  52. சருகிலை (நிறம்) – filemot   
  53. சாம்பல்  cinerious
  54. சாம்பல் பச்சை – caesious / sage
  55. சாம்பல் மஞ்சள – isabelline
  56. சுடர் (நிறம் flammeous
  57. சுடுமண்(நிறம்) – terracotta 
  58. சுதை வெண்மை – cretaceous
  59. செக்கர்  reddish sky
  60. செங் கருநீல(நிறம் – violet /  violaceous
  61. செங்கருப்பு – piceous
  62. செங்கல்மங்கல் – Dim red colour
  63. செங்கற்சிவப்பு – lateritious / testaceous
  64. செந்தீவண்ணம் – colour of glowing fire
  65. செந்தூரச்சிவப்பு  minium
  66. செப்புநிறம் – Dark-red colour  
  67. செம்பட்டை – Brown colour of hair
  68. செம்பவளம் – deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு
  69. செம்பழுப்பு – sinopia/ sorrel
  70. செம்பு  – Copper colour;.
  71. செம்பூச்சி – kermes
  72. செம்பொன் – titian
  73. செம்மஞ்சள் -jacinthe
  74. செவ்வல் (செந்நிறம்) – Redness;
  75. சோணம் – Red colour, crimson colour
  76. தசை (நிறம்) – sarcoline
  77. தவிட்டுநிறம் – Brown, dun colour
  78. திமிரம்  Colour ofDarkness
  79. தும்பை நிறம் –  pure white colour
  80. துமிரம்  –  Deep red colour  .
  81. துரு (நிறம் ferruginous
  82. துருச் சிவப்பு – rubiginous
  83. துவர் (சிவப்பு – Scarlet Red colour,
  84. துவரி (காவிநிறம்) – Salmon colour
  85. தூயபழுப்பு – sepia
  86. தெள்ளுப்பூச்சி (நிறம் – puce
  87. நட்டுச்சினைமண்  – A kind of earth of the colour of crab’s spawn
  88. நல்சிவப்பு  coquelicot
  89. நறுமஞ்சள் – lutescent
  90. நன்மஞ்சள் – luteolous
  91. நன்னிறம் – White colour
  92. நீல (நிறம் azuline
  93. நீல மணி – sapphire
  94. நீலச்சாம்பல் – glaucous / cesious / gridelin / lovat 
  95. நீலச்சிவப்பு  amaranthine / solferino
  96. நீலப்பச்சை  turquoise / viridian
  97. பச்சை  chlorochrous
  98. பசுமை – virid
  99. பழுக்காய் – Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
  100. பழுப்பு மஞ்சள் – fulvous
  101. பழுப்புச் சிவப்பு – castaneous / rufous / russet / umber 
  102. பழுப்புச்சாம்பல் – greige /  taupe
  103. பளீர்சிவப்பு – stammel
  104. பனிவெண்மை – niveous
  105. பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) –  Colour of a class of pearls, resembling that of toddy  
  106. பால்வண்ணம்  – white colour
  107. புகர் நிறம் – tawny / tan
  108. புகைக்கரி  fuliginous
  109. புள்ளிச் சாம்பல் – liard  grey
  110. புற்பச்சை – prasinous
  111. புறவு (நிற) – columbine
  112. பூஞ்சல் – Brown- ish colour; மங்கனிறம்
  113. பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) – Deep, ruddy colour;  
  114. பூவல்–  Red colour
  115. பைந்நீல(நிறம் – teal
  116. பைம்பொன் – chrysochlorous
  117. பொன் மஞ்சள் – goldenrod
  118. பொன்மஞ்சள் luteous
  119. பொன்மை  aurulent
  120. மகரம் – Pink colour
  121. மங்கல் பழுப்பு – fuscous
  122. மங்கல் பழுப்பு  khaki
  123. மங்கல்பச்சை – eau-de-nil
  124. மஞ்சள்  xanthic / icterine / icteritious
  125. மஞ்சள் பச்சை  chartreuse / zinnober
  126. மஞ்சள் பழுப்பு – lurid / ochre
  127. மஞ்சள்சிவப்பு – wallflower 
  128. மணிச்சிவப்பு – rubious
  129. மணிநிறம் – Dark blue colour, as of sapphire;
  130. மயில்நீலம் – pavonated
  131. மரகதப்பச்சை – smaragdine
  132. மருப்பு (தந்தம்) – eburnean 
  133. மல்லிகை மஞ்சள்  jessamy
  134. மாமை– dark-brown colour
  135. முக்கூட்டரத்தம் – Red colour produced by chewing betel, arecanut and lime
  136. முத்துச்சாம்பல் – griseous
  137. வளர்பச்சை – virescent
  138. வாதுமை (நிறம்) – ibis
  139. வான் நீலம் – cyaneous
  140. விண் நீலம் – celeste
  141. விழி வெண்மை  albugineous
  142. வெங்காயப் பச்சை – porraceous  
  143. வெண்சாம்பல் – hoary
  144. வெண்மங்கல் – leucochroic
  145. வெண்மஞ்சள் – ochroleucous 
  146. வெளிர் நீலம் – azure
  147. வெளிர் பச்சை – celado
  148. வெளிர் மஞ்சள் – nankeen
  149. வெளிர் மஞ்சள் பச்சை – tilleul 
  150. வெளிர்நீலம் – watchet
  151. வெளிர்பழுப்பு – suede
  152. வெளுப்பு  albicant
  153. வைக்கோல் (நிறம் stramineous

தமிழ்நாட்டில் உள்ள இலை, மலர்களின் வண்ணங்களின் அடிப்படையில் தமிழ் மரபிற்கேற்ற வண்ணப் பட்டியலை வெளியிட்டு அதனைக்  கல்வித்துறையினரும் வணிகர்களும் மக்களும் பின்பற்ற வேண்டும்.

http://www.newscience.in/articles/nira-vakaikal

https://thiru-science.blogspot.com/2012/09/colours.html

– இலக்குவனார் திருவள்ளுவன்



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages