''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை;
குவிக்கும் கவிதைக் குயில்; இந்நாட்டைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
திறம்பாடி வந்த மறவன்; புதிய
அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்! ''
-- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
நிலை எல்லோரும் ஓர் நிறை' ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்.
எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாளில் தோன்றிய பாரதியார், ஏழாம் அகவையிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். படிபடிப்படியாகப் பாட்டெழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
''திறமை கொண்ட, தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்,
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே'' என்று முழக்கமிட்டவர்
ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன் முதலாய்
தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!
பேசுந் தமிழில் பெரும் பொருளைக் கூறிவிட்ட
வாசத் தமிழ் மலரே வாரிதியே, நீ வாழ்க!
தொட்ட தெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே
பட்ட மரம் தழைக்கப் பாட்டெடுத்தோய், நீ வாழ்க !
எங்கே தமிழென்று என் தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென்று எடுத்து வந்தோய் நீ வாழ்க!
என்று கவிஞர் கண்ணதாசன் வாழ்த்தியதில் வியப்பொன்றுமில்லை.
''சுவை புதிது; பொருள்புதிது; வளம்புதிது;
சொற்புதிது;சோதி மிக்க நவகவிதை;
எந்நாளும் அழியாத மாக்கவிதை.
என்று பூரிப்போடும் பெருமித்ததோடும் கூறியுள்ளார்.
2008/12/7 Krishnan S <krishna...@gmail.com>:
> மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் திங்கள், 11-ம் நாள்.
> அவரை நினைவு கூறும் முகமாக சில சிந்தைகள்
>
சிந்தனைகள் என்று இருக்க வேண்டுமோ?
க.>
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" என்ற சிறு பாடல்
இப்படித் தனியாக நிற்பது பற்றி நான் வியந்ததுண்டு.
அண்மையில் "மக்கள் தொலைக்காட்சியில்" ஓர் அரிய
செய்தி கேட்டேன். இந்தப் பாடல் பாரதியார் எழுதிய பெண்விடுதலை
பற்றிய சிறுகதையில் "பெண் விடுதலை பரவுமா?" என்ற
கேள்விக்கு ஒரு பதிலாக இதைச் சொல்லியிருக்கிறார் என்பது
செய்தி. பொருத்தமாக இருக்கிறது.
மின் தமிழ் அறிஞர்கள் மேலதிகத் தகவல் இருந்தால்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரெ.கா.
On Dec 7, 11:22 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> எளிய, பொருள் செறிந்த கட்டுரை...பாரதி வழியிலேயே!
> வாழ்த்துக்கள் கிருஷ்ணன்!!
>
> 2008/12/7 Krishnan S <krishnan.sin...@gmail.com>:
அக்னி என்பது இந்திய உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கிய
கருபொருள். என்று மனிதன் தீ எனும் பெரும்பூதத்தை கையாளத் தொடங்கினானோ
அன்றே 'தொழிற்புரட்சி' தொடங்கிவிட்டது! விவசாயத்தை நம்பி மானுடம்
திரும்பியபோது நெருப்பு என்பதே அவன் வாழ்வின் கதியைத் தீர்மானிப்பதாய்
இருந்தது. உதாரணமாக நெல் போன்ற கடின தானியங்களை சமைப்பதற்கு தீ அவசியமாக
இருந்தது. எனவேதான் அக்னியை பொன்போல் பாதுகாக்கும் ஓர் ஆன்மீக வழக்கம்
தோன்றியது (அக்னிஹோத்ரி). அக்னியைப் பற்றிப்பேசும் வேதம், ருத்ரன்
என்பவன் அக்னியே என்று சொல்கிறது. கொடுத்தால் அள்ளிக்கொடுப்பவன்.
அழித்தால் முற்றும் அழிப்பவன் என்று (சிவபெருமான் நடராஜ சிலையில் அவர்
அக்னியை கையில் வைத்திருப்பது மட்டுமல்ல, அவரைச் சூழ்ந்து அக்னியே
உள்ளது. அவர் திரிபுரம் எரித்தவர்). அக்னியே 7 சக்கரங்களின் இயங்கு
சக்கரம் போலிருக்கும் வயிறுக்கு உருவகமாக வருகிறது. எல்லா உயிர்வேதியல்
மாற்றத்திற்கும் எரியூட்டு சக்தி அவசியமாகப்படுகிறது (இந்த சக்தி எரிவளி
எனப்படும் ஆக்சிஜன் வழியாக நடைபெறுகிறது). அக்னி வயிற்றில் தங்கிறது
என்றால் குழந்தையிலிருந்து மூப்புவரை இச்செயல் நடைபெறுகிறது. உடல்
வெப்பம் தணிந்தவுடன் உயிர் போய்விடுகிறது. இந்தப்பின்னணியில் பாரதி
அக்னியின் தோற்றம், வளர்ச்சி, உபயோகம் போன்றவற்றை வேதவியல் பார்வையில்
பார்க்கிறான் என்று கொள்ளமுடியும்.
இப்பாடலை நான் வாசித்தவுடன் எனக்குச் சட்டென வந்த எண்ணம் அக்னி என்பது
ஞானச்சுடர் என்பதே! முருகனைப்பற்றிப்பாடும் போது இதை குகையில் வளர்
சுடரே! என்பான். எனவே உள்ளமெனும் பொந்தில் அக்னியை வைக்கும் போது மடமை
எனும் அறிவீனம் வெந்து தணிகிறது. இதே சொல்லாட்சியை ஆண்டாள்
பயன்படுத்துவதை கவனிக்க "தீயினுள் தூசாகும் செப்பேலோ எம்பாவாய்" என்று.
அறிவுச் சுடர் உள்ளவனை சிறியோன், பெரியோன் எனப்பார்க்காது உலகம்
மதிக்கிறது, எனவே அறிவின் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
இதை பெண்ணியத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதும் சுவையாக உள்ளது. என்
அன்னை அடுப்படியை விட்டு வெளியே வந்ததே இல்லை. அவளைத் தமிழ் சமூகம் "அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்" என்று வைத்திருந்தது. ஆனால் அவளது
சுயஞானம் (native intelligence) கருதி பலரும் ஆலோசனை கேட்க (என்
தந்தையும் சேர்த்து) வருவது ஊரில் வழக்கம். இந்த அக்னி என்ன செய்தது? தன்
வயிற்றில் ஈன்ற எங்கள் அனைவரையும் படிக்க வைத்தது. அப்போது வெந்து
தணிந்தது காடு! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!
கண்ணன்
கண்ணன்,
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" என்ற சிறு பாடல்
இப்படித் தனியாக நிற்பது பற்றி நான் வியந்ததுண்டு.
அண்மையில் "மக்கள் தொலைக்காட்சியில்" ஓர் அரிய
செய்தி கேட்டேன். இந்தப் பாடல் பாரதியார் எழுதிய பெண்விடுதலை
பற்றிய சிறுகதையில் "பெண் விடுதலை பரவுமா?" என்ற
கேள்விக்கு ஒரு பதிலாக இதைச் சொல்லியிருக்கிறார் என்பது
செய்தி. பொருத்தமாக இருக்கிறது.
சரிதான். இராமாயணச் சுருக்கம் என்று சொல்ல வருகிறீர்கள்!
எப்படியும் இது பெண்ணியம்தான் :-)
க.>
இதைச் சொன்னவர் மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும்
பேசுகின்ற ஒரு அன்பர். பெங்களூருவில் என்ன நேரம் என்று
தெரியவில்லை. எங்களூருவில் காலை 7 மணி. (உங்களூருவில்
காலை 9.30 -10 என இருக்கலாம்.) ஆள் பேரை நாளை பார்த்துச்
சொல்லுகிறேன். பிரபஞ்சன், பிரளயன் ஆகியோரின் பேச்சுக்கு
முன் இவர் பேச்சு வரும்.
அக்கினிக் குஞ்சு பாடலுக்கான பல்வேறு ஹேஷ்யங்கள் இருப்பதைச்
சொல்லிவிட்டு (இதில் சி.சு.செல்லப்பாவின் ஊகம் ஒன்றையும்
சொன்னார்) அதன் உண்மை இப்படி என்றார்.
எனக்கு மெய் எனத் தோன்றியது. உங்களுக்கு "மெய் போலும்மே"
எனத் தோன்றியிருக்கிறது.
சென்னை சித்தன் கொஞ்சம் கேட்டுச் சொல்லலாமா? பாரதி நினைவு
நாள் அன்று ஒலிபரப்பப்பட்டது.
"ஹரிகிருஷ்ணன் என்னைப் பற்றி எழுதுவான்" என பாரதி சொல்லியிருப்பதாக
யாராகிலும் சொன்னால் நான் நம்புவேன். பாலில் நெய் இருக்கிறது என்றால்
ஏன் நம்பக் கூடாது?
ரெ.கா.
On Dec 8, 10:44 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/12/7 karthige...@gmail.com <karthige...@gmail.com>
பாரதி பற்றி இப்படி நிறையக் கதைகள் உண்டே (படித்தவர்களிடம்).
மதுரைப் பல்கலைக்கழகத்தில் நிஜநாடக இயக்கத்தில் (இராமசாமி) அவ்வப்போது
பங்குகொள்வதுண்டு. ஒருமுறை ராமசாமி சொன்னார், வயக்காட்டில் நடை போடும்
பெண்களைக் கண்டு "செந்தமிழ் நாடெனும் போதினிலே" (இடுப்பு வெட்டுவது போல்
சந்தம் அமையும்) பாடினார் என்று. மின்தமிழ் இடுகை ஒன்று பாரதிதாசன்
போன்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் போட்டிக்கவிதையாக அவர் எழுதினார்
என்று!! அவர் பரிசு பெற்றாரா இல்லையா என்று சொல்லாதால் அதற்கொரு
புதுக்கதை கிளம்பும்!
பாரதி ஹரி பற்றியும், கிருஷ்ணன் பற்றியும் நிறையப்பாடுகிறார். உண்மைதான் ;-)
க.>
அக்கினிக் குஞ்சு பாடலுக்கான பல்வேறு ஹேஷ்யங்கள் இருப்பதைச்
சொல்லிவிட்டு (இதில் சி.சு.செல்லப்பாவின் ஊகம் ஒன்றையும்
சொன்னார்) அதன் உண்மை இப்படி என்றார்.
எனக்கு மெய் எனத் தோன்றியது. உங்களுக்கு "மெய் போலும்மே"
எனத் தோன்றியிருக்கிறது.
"ஹரிகிருஷ்ணன் என்னைப் பற்றி எழுதுவான்" என பாரதி சொல்லியிருப்பதாக
யாராகிலும் சொன்னால் நான் நம்புவேன். பாலில் நெய் இருக்கிறது என்றால்
ஏன் நம்பக் கூடாது?
> இதைச் சொன்னவர் மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும்
> பேசுகின்ற ஒரு அன்பர். பெங்களூருவில் என்ன நேரம் என்று
> தெரியவில்லை. எங்களூருவில் காலை 7 மணி. (உங்களூருவில்
> காலை 9.30 -10 என இருக்கலாம்.) ஆள் பேரை நாளை பார்த்துச்
> சொல்லுகிறேன். பிரபஞ்சன், பிரளயன் ஆகியோரின் பேச்சுக்கு
> முன் இவர் பேச்சு வரும்.
> ரெ.கா.//
இது குறித்துப் பேசியது திரு.கஜேந்திரன் அவர்கள்.
மக்கள் தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சிகளில்
இவர் பங்கு கொள்வார். இவரது கைபேசி எண் கிடைத்திலது.
மக்கள் தொ.கா திரு. விஜய்தெரிவித்த தகவல் இது.
இந்நிகழ்ச்சி ஒரு பழைய பதிவின் மறு ஒளிபரப்பு.
தேவ்
தயவுசெய்து இந்தப் பதிவின் தலைப்பை மாற்றுங்களேன்...
தி
க.>
2008/12/9 V, Dhivakar <venkdh...@gmail.com>: