பரந்த வடக்கும் குறுகிய தெற்கும்

58 views
Skip to first unread message

இணையப் பரிமேலழகன்

unread,
Oct 10, 2014, 1:33:45 PM10/10/14
to mint...@googlegroups.com



பரந்த வடக்கும் குறுகிய தெற்கும்






கபிலர் அகவல்.  கபிலர் ஒரு அந்தணர் என்றறிக.  வடக்கே போனால் ஞானம் தெற்கே வந்தால் கோணல்

இனா பனா கனா


Tthamizth Tthenee

unread,
Oct 11, 2014, 1:06:08 AM10/11/14
to mint...@googlegroups.com
​தென் திசையில் இருக்கும்   புலையனாயினும்   அவர்கள் வடதிசையிற்கேகினால்
 இமைய மலைப்  பக்கம்  ஏகினால் அங்கே  பிழைப்புக்காகவாவது​ சற்றே  படித்து  தெளிதல் வேண்டும்  இல்லையெனில்  பிழைப்பு ஓடாது  என்று புரிந்து கொண்டு 
கற்கத் தொடங்கி    பழுதற       ஓதிப் பார்ப்பான்  ( அதாவது   தான் கற்றதை ஓதிப் பார்த்து   சரி தவறு இரண்டையும் பிரித்தறிந்து கொள்வான்


அதுதான்  பழுதற ஓதிப் பார்ப்பானாவான்  என்பதன் பொருள்


தூரத்திலிருந்து  வடதிசையைப் பார்த்து  பார்த்து  பெருமூச்செறிந்து  அங்கே போக முடியவில்லையே என ஏங்கி வட  திசையைப் பார்ப்பான்  (வடதிசையை  பார்ப்பவன், பார்த்துக் கொண்டே  இருப்பவன்

கற்றறிந்து அதை ஓதிப் பார்க்கும்   நடையது  திரிந்து  மொழியை ஓதும் நடையை மறந்து   (கோணி) புலையனாவான்

என்பதே  சரியான கருத்து  என்று உணர்கிறேன்

எந்த மொழியானாலும் அதை  ஓதும்  புலமை உள்ளவன்  ஓதிப் பார்ப்பான்  
அந்தப் புலமை இல்லாதவன் எந்த ஜாதியை  இனத்தை  மதத்தை, சேர்ந்தவன் ஆனாலும்       ஓதும்  புலமை இல்லாதவனாகையால்   புலையன்  என்பதே 

கபிலரின்  கூற்றாக இருக்கும்  என்று நம்புகிறேன்

கபிலர்   அந்தணரா   என்பது முக்கியமல்ல

எத்தனையோ  அந்தணர்கள் தம் குலத்தை மறந்து நற் கருத்துக்களை பாடலாக வடித்துள்ளனர்.

பழங்காலத்தில்  பல அந்தணப் புலவர்களும் முறையே  இதைத்தான் வற்புறுத்தினர்

(நம் காலத்தில்  உவே சுவாமிநாதையர்)

ஆகவே  கற்றதை முறையாக ஓதத் தெரியாதவன்  புலையன் 

ஓதத் தெரிந்தவர்    மேன்மக்கள்   என்பதே   தீர்வு

இங்கே  ஜாதிகளோ  அல்லது மற்ற எதுவுமே  பெரிதல்ல கற்றலே  பெரிது
​​
கற்றவறை ஓதத் தெரிந்துகொள்ளுதலே  பெரிது


அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Oct 11, 2014, 1:10:38 AM10/11/14
to mint...@googlegroups.com

2014-10-11 10:35 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
கற்றவறை ஓதத் தெரிந்துகொள்ளுதலே  பெரிது


கற்றதை  ஓதத் தெரிந்துகொள்ளுதலே  பெரிது    என்று  படிக்கவும்

தேமொழி

unread,
Oct 11, 2014, 2:15:30 AM10/11/14
to mint...@googlegroups.com

பாடலுக்குப் பொருள் கொள்ளும்பொழுது முழுப்பாடலும் இருந்தால் தெளிவாகப் பொருள் கொள்ளலாம்...


இல்லாவிட்டால் "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்பது போல தவறான பொருள் கொள்ள ஏதுவாகும்....

முழுப்பாடலும் இங்கே.....




..... தேமொழி


Tthamizth Tthenee

unread,
Oct 11, 2014, 2:23:23 AM10/11/14
to mint...@googlegroups.com
உண்மை  தேமொழி  அவர்களே

முழுப்பாடலும்   படித்தேன்


மிக்க நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Oru Arizonan

unread,
Oct 11, 2014, 2:34:57 AM10/11/14
to mint...@googlegroups.com
//எந்த மொழியானாலும் அதை  ஓதும்  புலமை உள்ளவன்  ஓதிப் பார்ப்பான்  
அந்தப் புலமை இல்லாதவன் எந்த ஜாதியை  இனத்தை  மதத்தை, சேர்ந்தவன் ஆனாலும்       ஓதும்  புலமை இல்லாதவனாகையால்   புலையன்  என்பதே //

அருமையான விளக்கம், தமிழ்த்தேனீ அவர்களே!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 11, 2014, 2:38:18 AM10/11/14
to mint...@googlegroups.com
அன்பின் தேமொழி,

முழு அகவலையும் நான் படிக்கும் புண்ணியத்தை நீங்கள் கட்டிக்கொண்டீர்கள்.  என்ன அருமையான கருத்து!

வாழ்க வளமுடன்,
ஒரு அரிசோனன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 11, 2014, 3:35:18 AM10/11/14
to mintamil
திருமிகு தேமொழி குறிப்பிடுவது போல நூல் முழுமையும் பார்ப்பது சிறப்பானது. இரண்டு வரியை மட்டும் வைத்துக் முடிவுக்கு வந்தால் சில நேரங்களில் யானையின் ஒரு அவயத்தைத் தொட்டுணர்ந்தவன் ஒரு முடிவுக்கு வருவதைப் போலாகிவிடுகிறது.

கபிலரகவல் குறித்து நான் முன்பு இட்டிருந்த பதிவு.

  கபிலரகவல்
காரைக்குடியில் த.மு.ச. இலக்கியணி ஏற்பாடு செய்திருந்த சங்க இலக்கியத் தொடர் வரிசையில் இன்னாநாற்பது பற்றி உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது.தொய்வு இல்லாமல் இரண்டாவது சனிக்கிழமைகளில் மகரிஷி பள்ளியில் கூட்டம் நடைபெறுகிறது.சென்றமாதம் இனியவை நாற்பது பற்றிக் கூட்டம் நடந்தது. இன்னாநாற்பது, இனியவை நாற்பதெற்கெல்லாம் தனித்தனிக் கூட்டம் நடத்துவது வேறெங்கும் கேள்விப்படாதது. கூட்டத்திற்கு இணைய நண்பர் முனைவர் காளைராசன். முனைவர் மோகன், பேராசிரியர்கள் கார்மேகம்,ஆவுடையம்மாள்,சீனிவாசன், எச்.சுப்பிரமணியன் மற்றும் அறிஞர்கள் வந்திருந்தனர்.

சான்றோர் சபையில் உரையாற்றுவது பேறு. 
இன்னாதம்ம இவ்வுலகு இனியகாண்ப அதன் இயல்பு உணர்ந்தோரே என்பதற்கு இணங்க உலகின் இயல்புணர்த்த இன்னாதவை இவை என்று கூறி அவற்றைத் தவிர்த்துப் பெரு வாழ்வு வாழ நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது இன்னானாற்பது. இணையப்பல்கலை தளம் அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, மதுரைத் திட்ட உதவியுடன் நான் ஆற்றிய உரையின் பகுதியைப் பிறகு எழுதுகிறேன்.

இந்த இழையில் நான் பகிர்ந்துகொள்ள விழைவது கபிலர் அகவல் பற்றியதாகும். கபிலர் என்று இணையத்தில் பார்க்கையில் கபிலர் என்ற பெயரில் ஔவை போல பலர் இருந்திருக்கிறார்கள். குறிஞ்சிக் கபிலன், கபிலபரணர் எனப் பரணரோடு, பாரிமகளிருக்கு உதவியவர், தென்பெண்ணை ஆற்றிடைக்குறை வடக்கிருந்தவர், புலனழுக்க்கற்ற அந்தணாளன், பொய்யில்புலவன்,கபிலச் சித்தர் என்று ஒருவரோ, பலரோ இருந்துள்ளார்கள்.
 கபிலரகவலென்ற நூலை கபில தேவர் எழுதியுள்ளார் என அறிகிறோம். 
கபிலரகவல் கருத்துக்கள் என்னை மிகவும் கவந்ததால் நண்பர்கள் பார்வைக்கும் கருத்துக்கும் பகிர்ந்து கொள்கிறேன்.


உலகில் சிறப்பானது எது என்பதை 138 வரிகளில் நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து இருமுறை சாற்றக்கேண்மீன் என்கிறார்.
பல கேள்விகள் - உலகம் தோற்றமா அன்றிப் படைப்பா, வினை துஞ்சுமா,ஐம்புனறிவும் எங்கு செல்லும, காணுவது கண்ணா கருத்தா

    நான்முகன் படைத்த நானா வகையுலகில்
    ஆன்றசிறப்பி னரும்பொருள் கூறுங்கால்
    ஆண்முதிதோ? பெண்முதிதோ? வன்றியலிமுதிதோ
    நாண்முதிதோ? கோண்முதிதோ? நல்வினைமுதிதோ?
          தீவினைமுதிதோ?
    செல்வஞ்சிறப்போ? கல்விசிறப்போ? அல்லதுலகின்
          அறிவுசிறப்போ?
    5
    தொல்லைமாஞாலந் தோற்றமோ? படைப்போ?
    எல்லாப்பிறப்பு மியற்கையோ? செயற்கையோ?
    காலத்தாற்சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?
    நஞ்சுறுதீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
    துஞ்சும்போதந்தப் பஞ்சேந்திரியம்
    10
    என்செயா நிற்குமோ? எவ்விடத்தேகுமோ?

    உண்டியை யுண்குவது உடலோ? உயிரோ?
    கண்டின் புறுவது கண்ணோ கருத்தோ?
    15
    உலகத்தீரே யுலகத்தீரே !
    நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து
    சாற்றக்கேண்மின் சாற்றக்கேண்மின்

    மனிதர் வயது பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க்கோதை மார்பின் மேலனாய்க் கழிந்த நாளும் பிணிமூப்பு வந்து கையில் கோலனாய்க் கழித்த நாளும் போக மிஞ்சப்போவது யாது. பேராற்றின் இடிகரையில் வாழ்மரம் போன்று நிலையற்ற வாழ்க்கையில் நன்றான ஒவ்வொன்றை இக்கணமே செய்யச்சொல்கிறார்.
     

    மனிதர்க்கு வயது நூறல்லதில்லை
    ஐம்பது இரவில் அகலும் துயிலினால்
    20
    ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும்
    ஆக்கை யிளமையி ல் ஐம்மூன்று நீங்கும்
    எழுபது போகநீக்கி இருப்பனமுப்பதே
    (அவற்றுள்) இன்புறுநாளும் சிலவே அதாஅன்று
    துன்புறுநாளுஞ் சிலவேயாதலால்
    25
    பெருக்காறு ஒத்தது செல்வம்பெருக்காற்று
    இடிகரையொத்தது இளமை இடிகரை
    வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
    ஒன்றேசெய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
    நன்றேசெய்யவும் வேண்டும் அந்நன்றும்
    30
    இன்றேசெய்யவும் வேண்டும் அவ்வின்றும்
    இன்னேசெய்யவும் வேண்டும் அவ்வின்னும்
    நாளைநாளை யென்பீ ராகில்
    நம்னுடை முறைநாள் ஆவதுமறியீர்
    நமமுடை முறைநாள் ஆவதுமறியீர்

    உயிர் அன்றும் பார்க்க முடியவில்லை இன்றும் போய்விட்டது, உடல் அன்றும் இருந்தது. இன்றும் இங்கேதான் கிடக்கிறது. உடலைக் கள்வர்போல கோமணத்தைக் கூட உருவிவிட்டுக் கொளுத்துபவர் உறவினரே
     

    உயிர் கொடுபோவான் உடல்கொடுபோகான்
    ஏதுக் கழுவீர் ஏழை மாந்தார்காள்
    உயிரினை யிழந்தோ உடலினையிழந்தோ?
    45
    உயிரிழந்து அழுதும் என்றோது வீராகில்
    உயிரினை அன்றுங் காணீர் இன்றுங்காணீர் 
    உடலினை அன்றுங் கண்டீர் இன்றுங்கண்டீர்
    உயிரினையிழந்த உடலதுதன்னைக்
    களவுகொண்ட கள்வனைப்போலக்
    50
    காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
    கூறைகளைந்து கோவணங்கொளுவி
    ஈமத்தீயை எரியெழ மூட்டிப்
    பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
    போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது
    55
    சலமெனப் படுமோ? சதுரெனப்படுமோ?


    பசுவும் எருமையும் தான் சாதியில் வேறானவை. மனிதர் வேறானவர் அல்லர்.
    ---- மாந்தர்காள் பகர்வது கேண்மின்
    இறந்தவரா யுமை யிவ்விடை யிருத்திப்
    பாவனை மந்திரம் பலபடவுரைத்தே
    உமக்கவர்புத்திரர் ஊட்டினபோது
    60
    அடுபசியால் குலைந்து ஆங்கவர் மீண்டு
    கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர்
    அருந்தியவுண்டியால் ஆர்பசி கழிந்தது
    ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர்
    இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்
    65
    பற்பலர்நாட்டிலும் பார்ப்பார் இலையால்
    முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல்
    நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டி நீர்
    மேல்வகை கீழ்வகை விளங்குவது ஓழுக்கால்
    பெற்றமும் எருமையும் பிறப்பினில்வேறே
    70

    ஒருவகைச் சாதியா மக்கட்பிறப்பிலீர்
    இருவகையாகநீர் இயம்பிய குலத்துள்
    75
    ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின்
    கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின்றிலீரோ?
    எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ
    அந்நிலத்து அந்த வித்து அங்குரித்திடுமலால்
    மாறி வேறாகும் வழக்கமொன்றிலையே


    மேலும் பல வரிகளில் பிறப்பு வளர்ப்புக்கு எடுத்துக்காட்டாக கபிலர் பிறப்பும் அந்தணச்சேரி வளர்ப்பும் உப்பை,உறுவை,ஒள்வை,வள்ளி,வள்ளுவன்,அதிகமான் பிறப்பும் வளர்ப்பும் கூறப்படுகின்றன, எழுவரும் சகோதர சகோதரிகள் என்ற குறிப்பும் உள்ளதால் ஆசிரியரே எழுதியதா அல்லது அவர் கூற்றில் வழிவந்தோர் எழுதியதா என்பது எண்ணுதற்குரியது.



    வேற்றுமை இல்லை என்பதற்கு இயற்கையை மிக அருமையாகத் துணைக்கு அழைக்கிறார். மழை சிலருக்கு மட்டும் பெய்யுமா. காற்று சிலரை நீக்கிவிட்டு வீசுமா-- அடடா

    மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ
    காற்றுஞ் சிலரை நீக்கிவீசுமோ
    120
    மானிலஞ் சுமக்க மாட்டேன் என்னுமோ?
    கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?
    வாழ்நான்கு சாதிக் குணவுநாட்டிலும்
    கீழ்நான்கு சாதிக் குணவுநாட்டிலுமோ?
    திருவும் வறுமையுஞ் செய்தவப் பேறும்
    125
    சாவதும் வேறிலை தீரரணி யோர்க்கே
    குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
    இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே


    கபிலரகவல் ஓங்கிச் சொல்லும் உயர் கருத்து.

    முன்னோருரைத்த மொழிதவறாமல்
    130
    எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
    புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து
    நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து
    ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து 
    பேணியுரைப்பது பிழையெனப் படாது
    135
    சிறப்புஞ்சீலமும் அல்லது
    பிறப்பு நலந்தருமோ பேதையீரே.


     நண்பர்கள் தங்கள் பார்வையைப் பதிய வேண்டுகிறேன்.
    மிக்க அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

Swaminathan Venkat

unread,
Oct 11, 2014, 9:00:34 AM10/11/14
to all friends of
அன்புள்ள தேனீ அவர்களுக்கு,

வணக்கத்துடன் ஒரு  கேள்வி. உங்கள் வரிகளில் ஒன்று.

“எத்தனையோ பார்ப்பனர்கள் தம் குலத்தை மறந்து நற்கருத்துக்களை பாடல்களாக வடித்துள்ளனர்.”

தம் குலத்தை மற்ந்ததால் தான் நற்கருத்துக்கள் அவர்களிடம் பிறந்ததா என்ன?

குலத்துக்கும் நற்கருத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்.? தமிழ் நாட்டில் சாதியை ஒழிக்கப் பிறந்ததாகச் சொல்லும் உரக்க பிரச்சாரம் செய்யும் எவன் தன் சாதியை மறந்தான்.? 

“ஊதி ஊதிப் பெருக்குவதில் வல்லவர் இவர்” என்று கருணாநிதியைக்குறித்து ஈ வி கே எஸ் இளங்கோவன் சொன்னதும், “என் சாதியைச் சொல்லி என்னைத் திட்டுகிறார்கள்” என்று ஒப்பாரி வைத்த மனிதர் கருணாநிதி.  அங்கேயே இவ்வளவு கோளாறு இருக்கிறதென்றால், மற்ற எந்தத் தலைவரிடம் எவ்வளவு இருக்கும். சாதியை ஒழிக்க வந்தவர்கள் இல்லை இவர்கள். சாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாதி வெறியர்கள் இவர்கள் தான். 

கொஞ்சம் கவனக் குறைவாக எழுதி விட்டீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.

2014-10-11 10:35 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Oct 11, 2014, 9:32:50 AM10/11/14
to mint...@googlegroups.com
பெரு மதிப்பிற்குரிய  திரு வெங்கட் ஸ்வாமிநாதன் அவர்களுக்கு  வணக்கம்


நான் 

எத்தனையோ  அந்தணர்கள் தம் குலத்தை மறந்து நற் கருத்துக்களை பாடலாக வடித்துள்ளனர்.

என்று எழுதிய நோக்கம்

அந்தணர்கள்   தம் குலத் தொழிலான  (உலக மக்களின்  நலத்துக்காக  யாகம் வளர்த்தல் , தவம் ) போன்றவைகளை கூட விடுத்து   மக்களுக்கு தொண்டாற்ற       நற் கருத்துக்களால் பாடல் புனைந்துள்ளனர்  என்னு கருத்திலே  கூறினேன்

நீங்கள்  சுட்டிக் காட்டியதும் புரிந்து கொண்டேன்

இனி  ஒரு  முறைக்கு இரு முறை படித்துவிட்டு  எழுதுகிறேன்


நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Nagarajan Vadivel

unread,
Oct 11, 2014, 11:16:57 AM10/11/14
to மின்தமிழ்
2014-10-11 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பாடலுக்குப் பொருள் கொள்ளும்பொழுது முழுப்பாடலும் இருந்தால் தெளிவாகப் பொருள் கொள்ளலாம்...


இல்லாவிட்டால் "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்பது போல தவறான பொருள் கொள்ள ஏதுவாகும்....

மேற்கோள்
​ காட்டும்போது அந்த இடத்துக்குப் பொருத்தமான கருத்தை மட்டும் வைப்பது வழக்கம்.  எப்போதும்போல நன் என் சொந்தக்கருத்தை வலியுறுத்த இந்த நூற்றாண்டின் தலை சிறந்த வரலாற்றாசிரியர் அவருக்கு முற்பட்டவர்களின் கருத்தை வெளியிட்டிருந்த பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டேன்

என் நோக்கம் கபிலரகவலுக்குப் பொருள் விளக்கம் கொடுப்பதோ அல்லது அதைத் திறனாய்வு செய்வதோ அல்ல.  அந்த வரலாற்றாசிரியர் என்ன சொன்னார் என்பதைக் கூறினேன்

முழுப்பாடலையும் எடுத்துக்கொண்டால் இந்தக் கபிலரகவல் பாடிய கபிலரும் சங்கப்புலவர் கபிலரும் ஒருவரா என்பது போன்ற் ஆய்வைத் தொடங்க உதவியாக இருக்கும்.  எனவே முழுப்பாடலையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆய்வு முயற்சிகள் உங்களைப்போன்றோரின் ஊக்கத்தால் செயலுக்கு வர வேண்டும்.  எங்களைப்போன்றோர் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கூறுவது எங்கள் கருத்தன்று எனவே நாங்கள் குறிந்த வரிகளைக் கொடுத்துக் குழப்பத்தையும் திசை திருப்புதலும் செய்ய வாய்ப்புள்ளதாக எண்ண வேண்டாம். 

முழுப்பாடலையும் இணையத்தில் தேர்ந்தெடுத்துப் படிக்கக் கொடுப்பது வரவேற்கக்கூடிய செயல் என்பதில் ஐயம் இல்லை.  அதே நேரம் குறைந்த வரிக்ளை மட்டும் குறிப்பிடுவது குழப்பத்துக்கு வழிவ்குக்கும்  என்று கருதுவது ஏற்புடைத்தல்ல.  இரண்டும் வேண்டும் ஆனால் அதற்கான அடிப்படை நோக்கங்கள் வேறு

இனா பனா அனா

தேமொழி

unread,
Oct 11, 2014, 1:33:55 PM10/11/14
to mint...@googlegroups.com
புரிகிறது பேராசிரியரே...

///
எங்களைப்போன்றோர் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கூறுவது எங்கள் கருத்தன்று எனவே நாங்கள் குறிந்த வரிகளைக் கொடுத்துக் குழப்பத்தையும் திசை திருப்புதலும் செய்ய வாய்ப்புள்ளதாக எண்ண வேண்டாம்.  
///

நான் அவ்வாறு நினைத்ததில்லை.  out of context நிலை வருமோ என்று தோன்றியதும் அவ்வாறு முழுபாடலின் சுட்டி கொடுத்தேன்.

..... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages