ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்

144 views
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Nov 1, 2011, 4:43:02 AM11/1/11
to mintamil, thiruppuvanam
வணக்கம்.

பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னர் பெயர்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

எத்தனையாவது திருவிளையாடற்புராணத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எளிதில் அறிந்து கொள்ள வசதியாக பாடல எண்ணும் கொடுத்துள்ளேன்.


ஆழிப்பேரலை(சுனாமி)யும் 
மதுரையை ஆண்ட
பாண்டிய மன்னரும்

(படலம் 3) குலசேகர பாண்டியன் / மதுரை நகரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்த பாண்டிய மன்னன்.

(படலம் 4) மலையத்துவசன் / பாண்டி மன்னன் 
காஞ்சனமாலை / மலையத்துவசனின் மனைவி/அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மாமியார்/இவள் நீராடும்பொருட்டு சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன.
தடாதகை / மலையத்துவனின் மகள்/ அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மனைவியான அன்னை மீனாட்சி.
சுந்தர பாண்டியன் / அருள்மிகு சோமசுந்தரேசுவரர்

(படலம் 11) உக்கிர குமாரன் / சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன்/மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”)யை வேல் எறிந்து தடுத்து நிறுத்திய மன்னன்.
காந்திமதி / உக்கிர குமாரன் என்ற சுந்தர பாண்டியனின் மனைவி

(படலம் 17)வீரபாண்டியன் / உக்கிர பாண்டியனின் மகன்
அபிடேக பாண்டியன் / வீரபாண்டியனின் மகன்/ பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை அழிக்க வந்ததது. அதனை வற்றச் செய்த மன்னன்.

விக்கிரம பாண்டியன் / அபிடேக பாண்டியனின் மகன்

(படல்ம் 24)இராச சேகரன் /விக்கிரம பாண்டியனின் மகன்

(படலம் 25) குலோத்துங்கன் / இராசசேகர பாண்டியனின் மகன்

(படலம் 28)அனந்தகுணன்/ குலோத்துங்கனின் மகன்/பசுமலை, இடபமலைகள் இவன் காலத்தில் உண்டாகின. இராமபிரான் இம்மலைகளில் தங்கி அகத்தியரிடம் உபதேசம் பெற்றார்.

(படலம் 30) குலபூடணன் / அனந்தகுணனின் மகன்

(படலம் 34) இராசேந்திரன் / குலபூடணனின் மகன்

(படலம் 37) இராசேசன் / இராசேந்திரனின் மகன்
இராசகம்பீரன் / இராசேசனின் மகன்
பாண்டி வமிச தீபன் / இராசகம்பீரனின் மகன்
புரந்தரசித்து / பாண்டி வமிச தீபனின் மகன்
பாண்டிவமிச பதாகன் / புரந்தரசித்துவின் மகன்
சுந்தரேசபாத சேகரன் / பாண்டி வமிச பாதகனின் மகன்

(படலம் 40) வரகுணன் / சுந்தரேசபாத சேகரனின் மகன்

(படலம் 44) இராசராச பாண்டியன் / வரகுணனின் மகன்/பன்றிமலை இனது ஆட்சிக்காலத்தில் உருவானது

(படலம் 49) சுகுணன் / இராச இராச பாண்டியனின் மகன்/ 
சுகுணனுக்குப் பிறகு சித்திரரதன் முதல் அதுலகீர்த்திவரை 22 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.

1) சித்திரரதன்
2) சித்திரபூடணன்
3) சித்திரத்துவசன்
4) சித்திரவருமன்
5) சித்திரசேனன்
6) சித்திரவிக்கிரமன்
7) இராசமார்த்தாண்டன்
8) இராச சூடாமணி
9) இராச சார்த்தூலன்
10) துவிசராச குலோத்தமன்
11) ஆயோதனப் பிரவீணன்
12) இராச குஞ்சரன்
13) பரவிராச பயங்கரன்
14) உக்கிரசேனன்
15) சத்ருஞ்சயன் வீமரதன்
16) வீம பராக்கிரமன்
17) பிரதாப மார்த்தாண்டன்
18) விக்கிரம கஞ்சனன்
19) சமர கோலாகலன்
(20, 21.....??)
22) அதுல கீர்த்தி


கீர்த்திவீடணன்/அதுல கீர்த்தியின் மகன்/இவனது ஆட்சிக் காலத்தில் பிரளயம்  ஏற்பட்டு ஏழுகடல்களும் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை, “சுனாமி”) உலகை அழித்தன.
பிரளயத்திற்கு (ஆழிப்பேரலை,,“சுனாமி“)க்குப் பின்னர்.
சந்திர குலத்தில் பாண்டியர் தோன்றினர்.
சூரியன் மற்றம் அக்னி குலத்தில் மற்ற இரு தமிழ் மன்னர் (சோழ சேரர்) தோன்றினர்.

வங்கியசேகர பாண்டியன் / சந்திரகுலத்தில் தோன்றி பாண்டிய மன்னன்/இன்றைய மதுரை நகரை பண்டைப் பெருமை விளங்கம் வகையில் உருவாக்கியவன்

(படலம் 51) வங்கிய சூடாமணி (சண்பக பாண்டியன்) /வங்கிய சேகரனின் மகன்.

(படலம் 58) சண்பக பாண்டியனுக்குப் பின் குலேச பாண்டியன் வரை  15 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.
1) பிரதாப சூரியன்
2) வங்கிசத் துவசன்
3) இரிபுமருத்தனன்
4) சேரவங்கி சாந்தகன்
5) பாண்டி வங்கி சேசன்
6) வங்கிச்சிரோன்மணி
7) பாண்டீச்சுரன்
8) குலத்துவசன்
9) வங்கிச வீபூடணன்
10)சோம சூடாமணி
11) குல சூடாமணி
12) இராச சூடாமணி
13) பூப சூடாமணி
14)....?
15) குலேசன்

(படலம் 58) அரிமர்த்தன பாண்டியன் / மாணிக்கவாசகரை அமைச்சராகக் கொண்ட மன்னன்

(படலம் 62) அரிமர்த்த்ன பாண்டியனுக்குப் பின் பல மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர்.
கூன்பாண்டியன் (சுந்தர பாண்டியன்) /சோழன் மகள் மங்கையர்க்கரசியாரை மணந்தவன்/திருஞானசம்பந்தரால் சைவத்திற்குத் திரும்பியவர்.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கம் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஒங்கி
புல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க

திருச்சிற்றம்பலம்

--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,




R.M. Paulraj

unread,
Nov 1, 2011, 6:28:34 AM11/1/11
to mint...@googlegroups.com
பாண்டிய நாட்டின் நிலப்பரப்பு, இன்றைய திண்டுக்கல்லிலிருந்து
தெற்கில் அமைந்துள்ள தமிழ் நாடு முழுவதும் எனக்கொள்ளலாம்.
அதாவது வேதாரண்யத்திலிருந்து, இன்றைய குமரி மாவட்டத்தின்
நெய்யாற்றின்கரை என்ற ஊர் வரையிலுள்ள கடற்கரைப் பகுதி
அவர்கள் ஆட்சிக்குட்பட்டது.
 
Map-இல் பார்க்கும்போது மிழத்தின் இந்தப்பகுதிக்குக் கிழக்கிலும்
தென்கிழக்கிலும் இலங்கை இருப்பது தெரியும். அதாவது, பாண்டிய
நாட்டின் லோரம் முழுவதும் இந்தியப் பெருங்கடலிலிருந்து வரும்
சுனாமி அலைகளால் தாக்காமல் இலங்கையால் காக்கப்படும் குதியாகத்
தோன்றும்.
 
இப்படி map- ட்டும் பார்த்துவிட்டு ண்பர் ஒருவர் நெல்லை, குமரி மாவட்டக்
லோரப் குதிகள் சுனாமியிலிருந்து இலங்கையால் காக்கப்படும் குதிகள்;
இங்கு சுனாமி வே ராது என்று எழுதினார்.
 
இங்கே நண்பர் காளைராசன் கொடுத்துள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 4 சுனாமிகள் புலவரால் record பண்ணப்
பட்டுள்ளன. எழுத்தில் ஏறாமல் சென்ற சுனாமிகள் சிலவும் இருக்கக் கூடும்.
 
அதுவும் விர, சுனாமி-றைவுப் குதிபோல் map-இல் தோன்றும்
பாண்டியநாடுதான் அதிகமாகசுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
தோன்றுகிறது. தென்குமரியைக் ல் கொண்டது என்று கூறுவதும்,
தென் மதுரையைக் கடல் கொண்டது என்று கூறுவதும்கூடசுனாமிப்
பேரழிவைதான் குறிப்பிடுகிறது அல்லவா?
 
ண்டையபாண்டியநாடு பிற்காலப் பாண்டியநாட்டைவிடதெற்கில்
அமைந்திருந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
ழையதலைநரானகொற்கை, இன்றையகாயல்பட்டினத்திற்கு
அருகில் உள்ளது (தூத்துக்குடி அருகில்).
 
ஆகவே, பாண்டியநாட்டிற்கும் சுனாமிக்கும் ஆகாது என்பது ரித்திரத்தில்
கிடைக்கப் பெறும் உண்மை. பாண்டியநாட்டின் தென்கோடிப் பகுதியில்
உள்ளகூடங்குளத்தில் அமையும் அணுமின் நிலையம் சுனாமி-proof அல்ல
என்பதுதான் இதிலிருந்து கிடைக்கப்பெறும் உண்மை.
 
அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj


From: கி.காளைராசன் <kalair...@gmail.com>
To: mintamil <mint...@googlegroups.com>; thiruppuvanam <thirup...@googlegroups.com>
Sent: Tuesday, 1 November 2011 2:13 PM
Subject: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


Nagarajan Vadivel

unread,
Nov 1, 2011, 6:44:29 AM11/1/11
to mint...@googlegroups.com
சுனாமி கடலின் அடிமட்டத்தில் நிகழும் புவி அதிர்ச்சியால் எழும் ஆழிப்பேரலையால் நேரும் அழிவு.  இந்துமாக்கடலிலும் வங்காள விரிகுடாவிலும் சுனாமி அடிக்கடி நிகழும் நிகழ்வன்று.  2004க்கு முன் ஒரு நூற்றாண்டுக்காலம் சுனாமி நிகழ்ந்ததாகப் பதிவில்லை.
பாண்டியர் நிலப்பகுதி ஒவ்வொரு ஆண்டும் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் காரண்மாக் நிகழும் புயல் மற்றும் சூறாவளியில் கடல்கோளுக்கு ஆளானதற்கு ஆதாரங்கள் உள்ளன
தணுஷ்கோடி நிகழ்வு சுனாமியால் நிகழ்ந்த நிகழ்வல்ல.  சூறாவளியால் தாக்கப்பட்டு தணுஷ்கோடி அழிந்தது
சுறாவளியால் உருவாகும் அலைகள் நிலப்பகுதியை கடும் சேதத்துக்குள்ளாக்கும் வலிமை கொண்டது
பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுனாமியைவிட சூறாவளியே அதிகம் அந்நிலப் பகுதியைத் தாக்கியிருக்கலாம்
நாகராசன்

2011/11/1 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>

R.M. Paulraj

unread,
Nov 1, 2011, 6:49:25 AM11/1/11
to mint...@googlegroups.com
> தாக்கியிருக்கலாம்

லாம்.

அன்புடன்,

ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj


From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 1 November 2011 4:14 PM
Subject: Re: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்

Geetha Sambasivam

unread,
Nov 1, 2011, 8:12:08 AM11/1/11
to mint...@googlegroups.com
எங்கிருந்து எங்கே போய்விட்டீர்கள்???

2011/11/1 R.M. Paulraj rmp...@yahoo.co.uk

R.M. Paulraj

unread,
Nov 1, 2011, 9:39:32 AM11/1/11
to mint...@googlegroups.com
> எங்கிருந்து எங்கே போய்விட்டீர்கள்???

அம்மா.........,

நண்பர் காளைராசனின் மடல் உண்மையில் "கூடங்குளம் அணுமின்நிலைய திட்டம் - மாற்றுத்
தீர்வு" இழையில் நடந்த‌ மடல் பரிவர்த்தனையால் inspire பண்ணப்பட்டதாக்கும். சம்பந்தப்
பட்ட அந்த மடல்களை அந்த இழையில் இருந்து கீழே காபி/பேஸ்ட் செய்திருக்கிறேன், பாத்துக்குங்க‌.

அவர், அங்கே தொடரும் வாதத்தை சகிக்க முடியாமல் தொடர்புள்ள செய்தியைப் புது இழையில்
கொடுத்துள்ளார். அங்கிருந்து அவர் இங்கே வந்ததினால், நான் இங்கிருந்து அங்கே பாய வேண்டிய
தாயிற்று, அம்புட்டுத்தேய்ன்.

அன்புடன்,

ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj

------------------------காபி/பேஸ்ட் செய்யப்பட்ட பகுதி துவ‌க்கம்----------------------
----- Original Message -----
From: ஞானபாரதி <dgbha...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc:
Sent: Monday, 31 October 2011 11:14 PM
Subject: [MinTamil] Re: கூடங்குளம் அணுமின்நிலைய திட்டம் - மாற்றுத் தீர்வு

ஒரு மண்ணியலாளர் என்ற நிலையில், கூடங்குளம் என்றல்ல தமிழகத்தில் கூட
மற்றொரு சுனாமி இன்னும் நூறாண்டுக்குள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றே
நானும் கூறுவேன்.  ஆனால் அது 95% உத்தரவாதத்தில் தான். நூறு சதவீதத்தில்
அல்ல. ஏனெனில் புவியின் அமைப்பு எப்படி இருக்கிறது, புவித்தட்டுக்களின்
தற்போதைய மற்றும் நாளைய செயல்பாடுகள் பற்றி யாராலும் துல்லியமாகக் கணிக்க
முடியாது.  விண்வெளி தாக்கங்கள், புவிக் காந்தவியல் சுழற்சி, என மேலும்
பல காரணிகள் எதிர்பாரா நிகழ்வுகளை ஏற்படுத்தலாம். 

இதை எதிகொண்டு வாழ்வது எப்படி என்பதில் தான் தீர்வு இருக்கிறது.- வரும்
போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பது -  இமையமலை பகுதிகளிலுள்ள
நாடுகள், இரான், கெய்ட்டி என்பனவற்றில் இதுவே நிலைமை. கட்டிடங்களுக்குள்
இருந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் 

- முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவது - ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது
கட்டடங்கள் அசைந்தாடினவேயோழிய விழுந்து நொறுங்கவில்லை. 
மற்றொன்றுதகவமைத்துக்கொள்வது - தமிழ் நாட்டின் பெரும்பகுதிகள் நிலநடுக்க
இரண்டாம் நிலையில் இருந்தன. ஆனால் 2001 ல் தமிழகம் குலுங்கியது.  எனவே
இயற்கையின் நிலைக்கு, அல்லது அடுத்த முறை தாங்கள் குற்றம்
சாட்டாபடாதிருக்க, கிட்டத்தட்ட மொத்த தமிழகமும் தற்பொழுது நிலநடுக்க
மூன்றாம் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. 
எது நல்லது?

On Oct 31, 9:17 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நிலத்தை பிடுங்கி 20 வருசம் ஆச்சு.இனி புதுசா வேண்டாம் என சொல்ல என்ன இருக்கு?
>
> கூடங்குளத்தில் சுனாமி வரும் வாய்ப்பே இல்லை.இலங்கை தீவு அணை கட்டியது போல
> தடுத்துவிடும்.மேப்பை பாருங்கள்
>
> என் ஊரில் அணு உலை வேண்டாம்..அடுத்த ஊரில் கட்டி மின்சாரத்தை எனக்கு கொடு என
> எல்லா ஊரும் சொன்னால் யாருக்கும் மின்சாரம் கிடைக்காது:-)..இந்த என் ஊரில்
> வேண்டாம், உன் ஊரில் வேண்டும் கதை எல்லாம் செல்லாது.விஞ்ஞானிகள்,பாதுகாப்பு
> அதிகாரிகள் கூடி எந்த ஊரில் கட்டினால் நல்லது என பரிந்துரிக்கிறார்களோ அந்த
> ஊரில் கட்டவேண்டியதுதான்.வேறு எந்த வழியும் இல்லை.
>
> --
> செல்வன்

------------------------காபி/பேஸ்ட் செய்யப்பட்ட பகுதி முடிவு----------------------


From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 1 November 2011 5:42 PM
Subject: Re: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்

க.இராமச்சந்திரன்

unread,
Nov 1, 2011, 10:48:38 AM11/1/11
to mint...@googlegroups.com


2011/11/1 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>



--
காளைராசன்  அய்யா வணக்கம் ,
ஒரு சின்ன சந்தேகம் .....


சந்திர குலத்தில் பாண்டியர் தோன்றினர்.
சூரியன் மற்றம் அக்னி குலத்தில் மற்ற இரு தமிழ் மன்னர் (சோழ சேரர்) தோன்றினர்.

வங்கியசேகர பாண்டியன் / சந்திரகுலத்தில் தோன்றி பாண்டிய மன்னன்/இன்றைய மதுரை நகரை பண்டைப் பெருமை விளங்கம் வகையில் உருவாக்கியவன்

 
மதுரை என்பது சரியா?   ....மதிரை என்பது சரியா?

 "மதிரை "என்று நிறைய கல்வெட்டுகளில் காணப்படுகிறதே ....

மதி=சந்திரன்
மதிரை = மதிஉறையுமிடம் /மதிவம்சத்தார் உறையும் இடம்
                           அல்லது
நிலவு போன்ற குளிர்ச்சியான  மொழி  உறையுமிடம்

என்று இருக்கலாமோ?...
 
 ன்றி 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

கி.காளைராசன்

unread,
Nov 2, 2011, 1:39:52 AM11/2/11
to mint...@googlegroups.com
வணக்கம்

2011/11/1 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>

> தாக்கியிருக்கலாம்

லாம்.

எனது பதிவுகள் திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டவை.
இதில் குறிப்பிடப்பெற்றுள்ள முதல் மற்றும் இரண்டாம் “சுனாமிகள்“ முதலாம் யுகத்திலே நடந்துள்ளன.  அதாவது சுமார் 8,00,000 (எட்டு லட்சம்) வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளன.

மூன்றாவது “சுனாமி“ மூன்றாம் யுகத்திலே நடந்துள்ளன.  அதாவது சுமார் 5100 ஆண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.

கி.காளைராசன்

unread,
Nov 2, 2011, 2:15:15 AM11/2/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.

2011/11/1 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>


ஒரு சின்ன சந்தேகம் .....
 
மதுரை என்பது சரியா?   ....மதிரை என்பது சரியா?
 "மதிரை "என்று நிறைய கல்வெட்டுகளில் காணப்படுகிறதே ....
மதி=சந்திரன்
மதிரை = மதிஉறையுமிடம் /மதிவம்சத்தார் உறையும் இடம்
                           அல்லது
நிலவு போன்ற குளிர்ச்சியான  மொழி  உறையுமிடம்

என்று இருக்கலாமோ?...
 
ஐயா, புராணங்களில் எல்லாம் “மதுரை“ என்றே உள்ளது.

பாண்டிய மன்னன் அதுலகீர்த்தியின் மகன் கீர்த்தி வீடணன் காலத்தில் பாண்டிய நாடு முழுமையையும் கடல் கொண்டுள்ளது.  
அவரது காலம் சுமார் 5100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
அதன்பின் பாண்டிய நாட்டின் வரலாறுகள் அனைத்தும் வடநூல்களிலிருந்தே தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

தமிழில் உள்ள புராணங்களில் எல்லாம் “மதுரை“ என்றே உள்ளது.  எனவே
தாங்கள் குறிப்பிடும் கல்வெட்டின் காலம் சுமார் 5100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தால், தாங்கள் குறிப்பிடும் காரணங்களின் அடிப்படையில் “மதிரை“ என்பதே சரியானதாக இருக்கலாம்.

தாங்கள் குறிப்பிடும் கல்வெட்டின் படம் கிடைக்குமா?

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2011, 2:41:20 AM11/2/11
to mint...@googlegroups.com
நன் இந்த இடுகையைத் தவறாகப் புரிந்டு கொண்டேன்.  இது புராண்க் கூற்றின்படி சூரிய சந்திரத் தொன்மம் பற்றிக்கூறும் புனைவில் வரும் சுனாமி என்பதைப் புரிந்துகொள்ளாதது என் தவறு
இன்றைய புவியியல் அகழ்வாரய்ச்சி குறிப்பாகத் தாய்லாந்தில் சுனாமி பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுனாமி நேர்ந்த காலத்தைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறது. ஆயினும் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிவியல் மூலம் நிறுவுவது இயலாத ஒன்று
கடல்கோள் என்பது கடலுக்கடியில் நிகழும் நில அதிர்வால் நூற்றாண்டுக்கொரு முறையும் புயல் அல்லது சூறாவளியால் பாண்டிய மண்ணைப் பல நூறுமுறை தாக்கியிருக்கும். புராணங்கள் செவிவழிச் செய்தியாகப் பரவியிருந்த தகவலைப் பட்டியலிட்டிருக்கும்
நிகழ்வுகள் நடந்திருக்கலாம் என்றாலும் கால அளவு லட்சக்கணக்கான ஆண்டு என்பது நம்பமுடியாத ஒன்று என்றே கருத்தில் கொள்ளவேண்டும்
நிகழ்வுகள் கற்பனை கலந்துள்ளபோது நம்புவது எளிதல்ல என்றே தோன்றுகிறது
நாகராசன்

2011/11/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 2, 2011, 8:19:20 AM11/2/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.

2011/11/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கால அளவு லட்சக்கணக்கான ஆண்டு என்பது நம்பமுடியாத ஒன்று என்றே கருத்தில் கொள்ளவேண்டும்
நிகழ்வுகள் கற்பனை கலந்துள்ளபோது நம்புவது எளிதல்ல என்றே தோன்றுகிறது
 நம்புவது எளிது இல்லை.
ஆனால் நம்புவதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஐயா, நான் திருப்பூவணப்புராணம் திருவிளையாடற் புராணம் இரண்டும் படித்துள்ளேன்.  
இவற்றில் கூறப்பட்டுள்ள கதைகளில் உண்மை நிகழ்வுகள் கடவுளுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளன என்பதே எனது கருத்து.
அதாவது,
தேர்வில் வெற்றி பெற்ற மாணவரிடம் நீ,100%மார்க் வாங்கி விட்டாயே, very good என்று சொன்னால், 
 “எனது வெற்றிக்கு எனது ஆசிரியரும் மற்றும் பெற்றோரும் தான் காரணம்” என்று சொல்கின்றனர்.
இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இதைப்போல்தான், திருவிளையாடற் புராணக்கதைகளும் உள்ளன.
நடந்த உண்மை நிகழ்வுகளைக் கடவுளின் செயலாகக் கூறியுள்ளனர்.
மற்றபடி கற்பனை ஏதும் இல்லை என்பது கருத்து.
தாங்கள் ஏதாவது ஒருதிருவிளையாடற் புராணக்கதையைக் கூறி அதில் என்ன கற்பனை கலந்துள்ளது எனத் தாங்கள் கருதுகின்றீர்கள் எனக் குறிப்பிட்டுக் கூறினால் உதவியாக இருக்கும்.

N. Ganesan

unread,
Nov 2, 2011, 8:21:21 AM11/2/11
to மின்தமிழ்

On Nov 2, 12:39 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம்
>
> 2011/11/1 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
>
> > > தாக்கியிருக்கலாம்
>
> > லாம்.
>
> > எனது பதிவுகள் திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டவை.
>
> இதில் குறிப்பிடப்பெற்றுள்ள முதல் மற்றும் இரண்டாம் “சுனாமிகள்“ முதலாம்
> யுகத்திலே நடந்துள்ளன.  அதாவது சுமார் 8,00,000 (எட்டு லட்சம்) வருடங்களுக்கு
> முன்பு நடந்துள்ளன.
>

17-ஆம் நூற்றாண்டில் புராணம் எழுதியவருக்கு
8,00,000 வருஷம் முன் நடந்த சுனாமி எப்படி
தெரியலாயிற்று, ஐயா?

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 2, 2011, 8:26:41 AM11/2/11
to மின்தமிழ்
On Nov 1, 8:39 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> > எங்கிருந்து எங்கே போய்விட்டீர்கள்???
>
> அம்மா.........,
>
> நண்பர் காளைராசனின் மடல் உண்மையில் "கூடங்குளம் அணுமின்நிலைய திட்டம் - மாற்றுத்
> தீர்வு" இழையில் நடந்த‌ மடல் பரிவர்த்தனையால் inspire பண்ணப்பட்டதாக்கும். சம்பந்தப்
> பட்ட அந்த மடல்களை அந்த இழையில் இருந்து கீழே காபி/பேஸ்ட் செய்திருக்கிறேன், பாத்துக்குங்க‌.
>
> அவர், அங்கே தொடரும் வாதத்தை சகிக்க முடியாமல் தொடர்புள்ள செய்தியைப் புது இழையில்
> கொடுத்துள்ளார். அங்கிருந்து அவர் இங்கே வந்ததினால், நான் இங்கிருந்து அங்கே பாய வேண்டிய
> தாயிற்று, அம்புட்டுத்தேய்ன்.
>
> அன்புடன்,
> ஆர்.எம்.பால்ராஜ்
> R.M.Paulraj
>

புராணங்களில் சுனாமி பேசப்படுகிறதா?
மதுரைக்குள் சுனாமியால் தண்ணீர் புகுந்ததா?
சம்ஸ்க்ருத இலக்கியங்களில், பின்னர் தேவாரத்தில்
மஹாப்ரலய காலம், மிதக்கும் தோணிபுரம் எல்லாம்
வருகிறது. அவை சுனாமியா?

காளைராசன் சம்ஸ்க்ருதத்தில் இருந்த திருவிளையாடல்
புராணம் தமிழில் தந்தார்கள் என்று தமிழ் புராணத்தில்
இருப்பதை சொல்கிறார். அதன் பொருள் என்ன?

அன்புடன்
நா. கணேசன்

> ------------------------காபி/பேஸ்ட் செய்யப்பட்ட பகுதி துவ‌க்கம்----------------------

> From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


> To: mint...@googlegroups.com
> Sent: Tuesday, 1 November 2011 5:42 PM
> Subject: Re: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்
>
> எங்கிருந்து எங்கே போய்விட்டீர்கள்???
>
> 2011/11/1 R.M. Paulraj rmp...@yahoo.co.uk
>
>
> >ஆக‌வே, பாண்டிய‌ நாட்டிற்கும்சுனாமிக்கும்ஆகாதுஎன்ப‌துச‌ரித்திரத்தில்
> >கிடைக்க‌ப்பெறும்உண்மை. பாண்டிய‌ நாட்டின்தென்கோடிப் ப‌குதியில்
> >உள்ள‌ கூட‌ங்குள‌த்தில்அமையும்அணுமின்நிலைய‌ம் சுனாமி-proof அல்ல
> >என்ப‌துதான்இதிலிருந்துகிடைக்க‌ப்பெறும்உண்மை.
> >
> >அன்புட‌ன்,
> >ஆர்.எம்.பால்ராஜ்
> >R.M.Paulraj
>
> >________________________________

> > From: கி.காளைராசன் <kalairaja...@gmail.com>


> >To: mintamil <mint...@googlegroups.com>; thiruppuvanam <thirup...@googlegroups.com>
> >Sent: Tuesday, 1 November 2011 2:13 PM
> >Subject: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்
>
> >வணக்கம்.
>
> >பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னர் பெயர்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
>
> >எத்தனையாவது திருவிளையாடற்புராணத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எளிதில் அறிந்து கொள்ள வசதியாக பாடல எண்ணும் கொடுத்துள்ளேன்.
>
> >ஆழிப்பேரலை(சுனாமி)யும்
> >மதுரையை ஆண்ட
> >பாண்டிய மன்னரும்
>
> >(படலம் 3) குலசேகர பாண்டியன் / மதுரை நகரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்த பாண்டிய மன்னன்.
>
> >(படலம் 4) மலையத்துவசன் / பாண்டி மன்னன்
> >காஞ்சனமாலை / மலையத்துவசனின் மனைவி/அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மாமியார்/இவள் நீராடும்பொருட்டு சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன.
> >தடாதகை /
>

> ...
>
> read more »

கி.காளைராசன்

unread,
Nov 3, 2011, 7:37:07 AM11/3/11
to mint...@googlegroups.com
ஐயா கணேசன் அவர்களுக்கு வணக்கம்.



> இதில் குறிப்பிடப்பெற்றுள்ள முதல் மற்றும் இரண்டாம் “சுனாமிகள்“ முதலாம்
> யுகத்திலே நடந்துள்ளன.  அதாவது சுமார் 8,00,000 (எட்டு லட்சம்) வருடங்களுக்கு
> முன்பு நடந்துள்ளன.
>

17-ஆம் நூற்றாண்டில் புராணம் எழுதியவருக்கு
8,00,000 வருஷம் முன் நடந்த சுனாமி எப்படி
தெரியலாயிற்று, ஐயா?

ஐயா, 
தங்களது ஐயம் நியாயமானதே.
திருவிளையாடற் புராணம் மூலம் முழுவதையும் படித்துப் பார்த்து விட்டுப் பதில் எழுதுகிறேன். சிறிது காலஅவகாசம் கொடுங்கள்.

ஆனால் திருப்பூவணப்புராணத்தில் இதற்கான பதில் உள்ளது.
புராண ஆசிரியர்கள், புராணவரலாற்றைச் சொன்னவர் பெயர், அதைக் கேட்டவர் பெயர், அதைக் கேட்டவர் பெயர் என்று அடுக்கிக் கூறுகின்றனர்.  
ஒவ்வொரு யுகமாகக் குறிப்பிட்டு அந்த யுகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறுகின்றனர்.  (நான் இங்கே எட்டு இலட்சம் வருடம் என்பது   இரண்டாம் யுகத்திற்கான தோராயமான கால அளவு, முனிவர்கள் யுகங்களை மட்டுமே குறிப்பிடுகின்றனர்)

எனவே 
குருகுலத்தில் பயின்ற முனிவர்களின் வழி வழியாக நடைபெற்ற பாடங்களில் இருந்து எழுதப்பெற்றுள்ளது என்பது தெளிவு.

கி.காளைராசன்

unread,
Nov 3, 2011, 7:49:33 AM11/3/11
to mint...@googlegroups.com
ஐயா கணேசன் அவர்களுக்கு வணக்கம்.

புராணங்களில் சுனாமி பேசப்படுகிறதா?
திருவிளையாடற் புராணத்தில் பேசப்படுகிறது.
திருப்பூவணப் புராணத்தில் பேசப்படுகிறது.
மற்றைய புராணங்களில் எனக்கு போதிய கல்வியறிவு இல்லை ஐயா.
 
மதுரைக்குள் சுனாமியால் தண்ணீர் புகுந்ததா?
ஆமாம் ஐயா,  எல்லாம் அழிந்துவிட்டன.
இதுபற்றி
என்ற இழையில் முன்பு எழுதியுள்ளேன்.

சம்ஸ்க்ருத இலக்கியங்களில், பின்னர் தேவாரத்தில்
மஹாப்ரலய காலம், மிதக்கும் தோணிபுரம் எல்லாம்
வருகிறது. அவை சுனாமியா?
இதுபற்றிய கல்வியறிவு எனக்குக் குறைவு.  படித்தவர்கள் யாரேனும் இருந்தால் பதில் அளித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

காளைராசன் சம்ஸ்க்ருதத்தில் இருந்த திருவிளையாடல்
புராணம் தமிழில் தந்தார்கள் என்று தமிழ் புராணத்தில்
இருப்பதை சொல்கிறார். அதன் பொருள் என்ன?
ஆமாம் ஐயா,
திருவிளையாடற் புராணம் வடநூலில் இருந்தே மொழிபெயர்த்து தமிழில் எழுதப்பட்டது.  மூலம் வடநூல்தான்.

அன்பன்

Geetha Sambasivam

unread,
Nov 3, 2011, 8:14:50 AM11/3/11
to mint...@googlegroups.com
ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் ஈசனின் திருவிளையாடல்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்பதை கணேசனாரும் அறிந்திருப்பார், காளைராஜன் ஐயா.
 
புராணங்களில் குறிப்பிடப் படும் பல செய்திகளை நாம் தேவாரங்களிலும், திவ்யப் பிரபந்தங்களிலும் கூட காணமுடியும்.  இது குறித்தும் அனைவரும் அறிந்ததே. 

2011/11/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>

துரை.ந.உ

unread,
Nov 3, 2011, 8:38:00 AM11/3/11
to mint...@googlegroups.com


2011/11/1 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
 இந்தியப் பெருங்கடலிலிருந்து வரும்
சுனாமி அலைகளால் தாக்காமல் இலங்கையால் காக்கப்படும் குதியாகத்
தோன்றும்.

வங்காளவிரிகுடாவிலிருந்து ( இந்தோனேசியாவிலிருந்து ) வரும் சுனாமிக்குத்தான் இலங்கை கரையாக இருக்கும் . இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து (ஆஸ்திரேலியா / நியூசிலாந்து ) சுனாமி வருமென்றால் பாண்டியக் கடற்கரைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் ....

அவ்வாறு வருமாயின் சுனாமிஅலைகள் உள்நுழையும் பகுதி
(குமரிப்பகுதிக்கும்- இலங்கைக்கு இடையே உள்ளதூரம்) ....வடக்கே வரவர குறுகலாவாதால் ......
அங்கே நுழையும் நீர் ... வடக்கே ராமேசுவரம் பகுதியில் முட்டி கரையைத்தாண்டி எழும்பி நிலப்பகுதிக்குள்தான் பாய்ந்துவரும் ..(மதுரை வரையிலும்)



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

R.M. Paulraj

unread,
Nov 3, 2011, 12:35:46 PM11/3/11
to mint...@googlegroups.com
டிசம்பர் 2004 சுனாமி, இந்தோனேஷியாவிலுள்ள Phuket-ஐ epicentre-ஆகக் கொண்டு
தோன்றியது. இந்த இடம் பாண்டிய நாட்டிற்கும் இலங்கைக்கும் நேர் கிழக்கில் (across
the Bay of Bengal) அமைந்துள்ளது. அங்கு தோன்றிய சுனாமியில் இலங்கையால்
மறைக்கப்படுவதாகத் தோன்றும் தென்பாண்டி நாட்டின் பகுதிகள் மட்டுமல்ல,  தமிழ்
நாட்டையும் தாண்டி மேலைக்கடற்கரையிலுள்ள கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம்
போன்ற இடங்கள் தாக்குண்டன. அங்கெல்லாமும் கூட பெரிய எண்ணிக்கையில் உயிர்ச்
சேதமும் ஏற்பட்டது.

அன்புடன்,

ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj


From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 3 November 2011 6:08 PM
Subject: Re: [MinTamil] ஆழிப்பேரலை(சுனாமி)யும் ஆண்ட பாண்டிய மன்னரும்

துரை.ந.உ

unread,
Nov 3, 2011, 12:43:20 PM11/3/11
to mint...@googlegroups.com


2011/11/3 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>

டிசம்பர் 2004 சுனாமி, இந்தோனேஷியாவிலுள்ள Phuket-ஐ epicentre-ஆகக் கொண்டு
தோன்றியது. இந்த இடம் பாண்டிய நாட்டிற்கும் இலங்கைக்கும் நேர் கிழக்கில் (across
the Bay of Bengal) அமைந்துள்ளது. அங்கு தோன்றிய சுனாமியில் இலங்கையால்
மறைக்கப்படுவதாகத் தோன்றும் தென்பாண்டி நாட்டின் பகுதிகள் மட்டுமல்ல,  தமிழ்
நாட்டையும் தாண்டி மேலைக்கடற்கரையிலுள்ள கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம்
போன்ற இடங்கள் தாக்குண்டன. அங்கெல்லாமும் கூட பெரிய எண்ணிக்கையில் உயிர்ச்
சேதமும் ஏற்பட்டது.

ஆமாம் ஐயா ..அவையெல்லாம் இலங்கையின் அடிப்பகுதி(தெற்கே)யைத்தாண்டித் தொடர்ந்த அலை குமரியத்தாண்டி பக்கவாட்டில் ( நேரடியாக) தாக்கியதால் உண்டானது ... அவற்றைவிட மன்னார்குடாப் பகுதிக்கு பாதிப்புகள் குறைவு... கிழக்கிலிருந்து கிளம்பும் சுனாமிக்கு இந்த மன்னார்குடாவின் முக்கோணப் பகுதி அலைமறைவுப் பிரதேசமாகும் 

Nagarajan Vadivel

unread,
Nov 3, 2011, 1:24:37 PM11/3/11
to mint...@googlegroups.com
//டிசம்பர் 2004 சுனாமி, இந்தோனேஷியாவிலுள்ள Phuket-ஐ epicentre-ஆகக் கொண்டு தோன்றியது.//
நீங்கள் குறிப்பிடும் இdaம் தாய்லாந்தில் உள்ளது.  சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி.  சுனாமி ஆரம்பித்த இடம் இந்தொனீசிய சுமத்ராவில் உள்ள பன்டே அச்சன் என்ற இடம்
2004 சுனாமி அலைகள் இந்தியாவையும் தாண்டி ஆஃரிக்காவின் கிழக்குக் கடற்கரைவரை சென்றுள்ளது

sunami.jpg

நாகராசன்

2011/11/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
sunami.jpg

R.M. Paulraj

unread,
Nov 3, 2011, 9:45:11 PM11/3/11
to mint...@googlegroups.com
> அவையெல்லாம் இலங்கையின் அடிப்பகுதி(தெற்கே)யைத்தாண்டித் தொடர்ந்த அலை
> குமரியத்தாண்டி பக்கவாட்டில் ( நேரடியாக) தாக்கியதால் உண்டானது ... அவற்றைவிட
> மன்னார்குடாப் பகுதிக்கு பாதிப்புகள் குறைவு... கிழக்கிலிருந்து கிளம்பும் சுனாமிக்கு இந்த
> மன்னார்குடாவின் முக்கோணப் பகுதி அலைமறைவுப் பிரதேசமாகும் .

ஐயா,

சுனாமி கிழக்கில் தோன்றினாலும், இலங்கையின் தடுப்பையும் தமிழ் நாட்டின் தடுப்பையும்
தாண்டி மேற்குக் கடற்கரையில் வடக்கே தள்ளி அமைந்துள்ள எர்ணாகுளம் வரையிலும் கூட
தாக்கப்பட்டுள்ளது என்பதை கவன‌த்தில் கொள்ள வேண்டும். அலைமறைவுப் பிரதேசம் என்று
எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள், கேரளா உட்பட:
http://www.sc99ews.com/Tsunami/Impact.htm

(இப்போது தூத்துக்குடி நகரத்திற்கு ஆறு/ஏழு கிலோமீட்டர் மேற்கில் இருக்கின்ற
கோரம்பள்ளம் ஊர் வரையிலும் முன்பு கடல் இருந்ததாக சான்றுகள் உண்டு. அது பல
இலட்சம் ஆண்டுகளுக்கு முன் என்று geologists கூறக்கூடும். இதுபோன்ற விஷயங்களில்
காலக்கணக்கை நிர்ணயிப்பதில் தவறான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது என்
தாழ்மையான கருத்து.)


அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj


From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 3 November 2011 10:13 PM

R.M. Paulraj

unread,
Nov 3, 2011, 9:53:02 PM11/3/11
to mint...@googlegroups.com

> நீங்கள் குறிப்பிடும் இdaம் தாய்லாந்தில் உள்ளது.

ஐயா,

தவறைத் திருத்தியதற்காக மிக்க நன்றி. ஞாபகப் பிசகு. வயதைக் காரணம் கூறுவதும்
அத்தனை பொருத்தமாகாது. :)


அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj


From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 3 November 2011 10:54 PM
sunami.jpg

துரை.ந.உ

unread,
Nov 4, 2011, 1:44:09 AM11/4/11
to mint...@googlegroups.com


2011/11/4 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>

> அவையெல்லாம் இலங்கையின் அடிப்பகுதி(தெற்கே)யைத்தாண்டித் தொடர்ந்த அலை
> குமரியத்தாண்டி பக்கவாட்டில் ( நேரடியாக) தாக்கியதால் உண்டானது ... அவற்றைவிட
> மன்னார்குடாப் பகுதிக்கு பாதிப்புகள் குறைவு... கிழக்கிலிருந்து கிளம்பும் சுனாமிக்கு இந்த
> மன்னார்குடாவின் முக்கோணப் பகுதி அலைமறைவுப் பிரதேசமாகும் .

ஐயா,

சுனாமி கிழக்கில் தோன்றினாலும், இலங்கையின் தடுப்பையும்

இது சரி  
தமிழ் நாட்டின் தடுப்பையும்

இதுசரியல்ல.. தமிழ் நாட்டைச் சுற்றிக்கொண்டு கடற்கரைப் பகுதியின் வழியாக என்பதுதான் சரி  

 அலைமறைவுப் பிரதேசம் என்றுஎதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இது ஒரு புரிதலுக்காகச் சொன்னது :))

 
சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள், கேரளா உட்பட:
http://www.sc99ews.com/Tsunami/Impact.htm

(இப்போது தூத்துக்குடி நகரத்திற்கு ஆறு/ஏழு கிலோமீட்டர் மேற்கில் இருக்கின்ற
கோரம்பள்ளம் ஊர் வரையிலும் முன்பு கடல் இருந்ததாக சான்றுகள் உண்டு.

அதையும்தாண்டி வாகைக்குளம் என்ற ஊரின் எல்லையில் இன்றும் கண்கூடாகாப் பார்க்கலாம் ஒரு கடற்கரையின் அமைப்பை . முடிந்தால் படமெடுத்து அனுப்புகிறேன் 

 
அது பல
இலட்சம் ஆண்டுகளுக்கு முன் என்று geologists கூறக்கூடும். இதுபோன்ற விஷயங்களில்
காலக்கணக்கை நிர்ணயிப்பதில் தவறான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது என்
தாழ்மையான கருத்து.)


கி.காளைராசன்

unread,
Nov 4, 2011, 1:49:12 AM11/4/11
to mint...@googlegroups.com
அம்மையார் கீதா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் ஈசனின் திருவிளையாடல்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன
நன்றி,
ஹாலாஸ்ய மஹாத்மியம் என்பதைத் தமிழில் ஆலாசிய மகாத்மியம் என்று எழுதியுள்ளனர். “ஹாலாஸ்ய“ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்று அறிந்திருந்தால் அதனைக் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

புராணங்களில் குறிப்பிடப் படும் பல செய்திகளை நாம் தேவாரங்களிலும், திவ்யப் பிரபந்தங்களிலும் கூட காணமுடியும்.  இது குறித்தும் அனைவரும் அறிந்ததே.  
“கல்லாடம்“ பல புராணத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்று எனது ஆசிரியர் கூறினார்.

திருவிளையாடற் புராணம் 29ஆவது படலத்தில் மதுரைக்கு அருகில் பசுமலை தோன்றிய வரலாறு கூறப்படுகிறது.  அதில் ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும் முன் அநுமன் சுக்ரீவன் முதலானோருடன் இந்த மலையில் வந்து தங்கியிருந்து அகத்திய முனிவரிடம் உபதேசம் பெற்றதாக ஒரு குறிப்பு உள்ளது,

திருப்பூவணப் புராணத்திலும் திருமாலைக் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் ஸ்ரீராமன் குறிப்பிடப்படுகிறார்.    புராணங்களில் ஸ்ரீராமன் குறிப்பிடப்படுவது பற்றி காரைக்குடியில் உள்ள ஒரு சமசுக்கிருதப் பண்டிட் அவர்களிடம் கேட்டேன்.  “ எல்லாப் புராணங்களும் ஸ்ரீராமன் ஆட்சிக்காலத்தில்தான் தொகுக்கப் பட்டன”  அதனால்தான் எல்லா புராணங்களிலும் ஸ்ரீராமன் குறிப்பு உள்ளது என்றார்.

நன்றி கலந்த வணக்கத்துடன்
Reply all
Reply to author
Forward
0 new messages