--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நல்ல கருத்துப்பகிர்வு நண்பரே!
தாங்கள் சுபா சமீபத்தில் சுட்டிக்காட்டிய பேரா.பா.ரா.சுப்பிரமணியத்தின்
பேட்டியைக் கேட்டீர்களா? வேர்ச்சொல் வளமிக்க தமிழ் பற்றி நிறையப்
பேசுகிறோம்
http://voiceofthf.blogspot.de/2012/06/blog-post.html
கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா? எனும் கேள்வி
வருகிறது. அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
இதுவுமொன்று.
நா.கண்ணன்
அன்பரே:
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நா.கந்தசாமி முன்பு ‘சுபமங்களா’ பேட்டிய்ல்
சொன்னார், ‘நான் அறிந்தது 100 சொற்கள்தான். அதைக்கொண்டு வாழ்கிறேன்’
என்று. யோசித்துப்பார்த்தால் ஒரு தமிழனக்குத் தேவையான சொல்வளம் 100
போதும். ஆயினும் அறிவியல் வளரும் வேகத்தில் 100 சொல்லோடு இருந்துவிட
முடியாது. புதிது, புதிதாகக் கற்க வேண்டும்.
ஆழமான வேர்வளமுள்ள தமிழ்ச் சொற்களை நிறையப் பரவலாக்குங்கள்.
பழகிக்கொள்கிறோம். இது தொடர்ந்து நடைபெற வேண்டியது.
என்னைப் பொறுத்தவரை மாற்றுத்தமிழ்ச் சொல் தெரியாத போதுதான்
ஆங்கிலத்திற்குத் தாவுகிறேன். பெரும்பாலும் ‘வேறுவகையில்’
சொல்லிப்பார்க்கிறேன் (அதாவது கூர் சொல் கிடைக்காத போது).
> பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க்
> கேடானது.
>
என்ன இப்படி ஒரே போடாகப்போட்டுவிட்டீர்கள்!! அவர் அப்படி என்ன தவறாகச் சொல்கிறார்?
நா.கண்ணன்
வகொவி
On Aug 2, 1:07 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நல்ல புரிதல் ஐயா ! உமக்கு....
>
> 2012/8/2 N. Kannan <navannak...@gmail.com>
>
> //கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
> யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா?//
>
> கலைச் சொல்லாக்கம் ஆனாலும், அறிவியல் சொல்லாக்கமானாலும் தமிழ் இலக்கிய இலக்கண
> அறிவு உள்ளோர் அதில் ஈடுபடுதலே சாலவும் சிறப்பு. அஃதல்லாதாருக்கு சொல் வள
> அறிவு குறைவு என்பதே காரணமாம். வேர் சொல் ஆய்வு என்பது ஞானப்பிரகாசர் தொடங்கி
> பாவாணரால் நன்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பலரால் மேற் கொள்ளப்படும்
> தமிழுக்கு புதிய துறை. பேராசிரியர். ப. அருளி என்பவர் பாவாணருக்குப் பின்
> தோன்றிய வேர் சொல் ஆய்வாளருள் தலைமையானவர். பாவாணருடைய வேர் ஆய்விலேயே பல
> தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர். அவர் தலைமையில் தஞ்சைத் தமிழ்ப்
> பல்கலைக் கழகத்தில் கலைச் சொல்லாக்கத்திற்கு என ஒரு குழு இயங்குகின்றது.
> அவர்களால் உருவாக்கப்பட்டதே *அருங்கலைச் சொல் அகரமுதலி.* இதில் 1,20,000
> சொற்கள் உருவாக்கப்பட்டு 1216 பக்கங்களில் பயனுக்கு வந்துள்ளது. எனினும் இதைப்
> பயன்படுத்துவோர் அதிலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஆளுவோர் மிகக்
> குறைவு. நான் இந்த அகராதியைப் பயன்படுத்துகிறேன். மற்ற பிறரும்
> பயன்படுத்தினால் தானே அத்துறைச் சொற்கள் பரவலுறும். மிகப் பலருக்கு இப்படி ஒரு
> அகராதி இருப்பதே தெரியாது. ஆக அகராதியை உருவாக்கினால் மட்டும் போதாது அது அது
> பரவலுற வேண்டும்.
>
> //அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
> அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
> இதுவுமொன்று.- நா.கண்ணன்//
>
> அறிவியல் அறிந்தோர் கூட ஆங்கிலத்தில் அச் சொல்பிறப்பு எப்படி ஏற்பட்டது என்று
> அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகையோரால் மொழிபெயர்ப்பும் புதுச்
> சொல்லாக்கமும்ம இயலவே இயலாது. தமிழறிந்தோரைக் கேட்கவே வேண்டாம். தம்
> சம்பளத்தில் தமிழ் நூல்களை வாங்க்க் கூட காசு ஒதுக்காதவர்கள், இவறிகள்
> (கஞ்சர்கள்). அகராதி ஆக்கத்திற்கு இவர்களை எதிர்பார்க்க்க் கூடாது. அரசு தான்
> இவ் அருங்கலைச் சொற்கள் பாட நூல்களில் பயிலப் பட ஏதேனும் செய்ய வேண்டும்.
>
> பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க்
> கேடானது.
>
> "நம் செம்மொழி" எனும் நூலூள், 2005, பேரா. ப. அருளி தமிழைப் பற்றி கூறுவது
> யாதெனில், அது பின்வருமாறு: (பக்கம் 45 - 46)
>
> *கடந்தியன்ற ஈராயிரம் ஆண்டுகால அளவிடையில் இருபத்தேழு மொழிகள் த்த்தம்
> சொற்களைக் கொண்டு தபிழைத் தாக்கியுள்ளன; தழுவியள்ளன! சற்றேறக்குறைய ஓர்
> இருபதினாயிரம் சொற்கள், நம் தமிழரின் நாக்களிடையே புரண்டெழுந்துள்ளன!
> பல்லாயிரம் நூல்களிடையே பரவலுறப் பதிவுற்றுள்ளன! ஈராயிரமாண்டுகளாக இத்
> தாக்குதல் ஒரு தொடர்வினையாகவே நம் மொழிக்கண் இடைவிடாது மேற்கொள்ளப் பெற்று
> வருகின்றது ஆங்கிலமொழி மிகப் பேரளவிலான கடுந்தாக்குதலொன்றை இன்று நிகழ்த்தி
> வருகின்றது.*
> *
> *
> *அயற்பொருளை துப்பியெறியும் நுரையீரலைப் போல! - -*
> *
> *
> *ஆயினும் - ந்ம் தமிழ் மொழியோ - எற்றுக்கும் சற்றும் அசைந்து கொடாது -
> அவையாவற்றையும் அதன் மேலோட்டுப் பகுதி எல்லையிலேயே படர்ந்து கிடக்குமாறும்-
> ஒட்டவிடாதும் தொடர்ந்து உயிர்த்து வருகின்றது! நம்மூக்குத் துளைகளின் வழியாக
> மூச்சுக் குழல் ஊடாக்க் காற்றுடனே கலந்தியைந்து நுரையீரலுள் நுழையும் ஓர்
> அயற்பொருள் 9அது இம்மிளவிருப்பினும் இம்மியினுஞ் சின்னஞ்சிறிய
> நுண்மியளவிருப்பினும்) எதுவாயினும் - அதனை அறுநூறு அயிரிமாத்திரி (kilometer)
> வேகத்தில்மையும் வீச்சொடு தும்மலெழுப்பி விரைவாரப் புறந்துப்பியெறியும்
> வினைவகைமையைப் போன்றதே - ந்ம் மொழியும் வினையாற்றுகின்றது! ஆயிரக் கணக்கான
> அயற்பொருள்களாகிய பிறமொழிச் சொற்களை உளவாங்கியவாறிருந்துங் கூட- உரிய
> காலங்களில் ந்ம்தமிழ் மொழி அவற்றைத் துப்பியெறிந்தெற்றுவது என்பது ஓர் இயற்கை
> தொடர்வினையாகவே உள்ளது!*
> *
> *
> *
> *
> *பக்கம் 63 - 64*
> *
> *
> *சமறகிருதத்தையே ஏணியிலேற்றும் அகராதியியலர் ! . . . *
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகளுக்குரிய பெரிய பெரிய அகராதிகளைத் தொகுத்துள்ள
> அகராதியிலரிற் பெரும்பாலரும் - அவ்வம் மொழிகளின் சொற்களுக்குரிய மூலவேர்
> காட்டுகையில் சமற்கிருதத்தையே எக்கி - எம்பி - எகிறி ஏணியிலேற்றி வைக்கும்
> வழக்கத்தினராக உள்ளமையை - அவற்றைப் படிக்கும் போதும் ஆயும்போதும் கண்டு
> நோக்காடே கொள்ள வேண்டியுள்ளது!*
> *
> *
> *அப் படிவுகட்டு மூலச் சொந்தக்காரர்கள் - நம் தமிழர்கள்*
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகள் தோற்றத்திற்குரிய அடிப்படைத் தாய்மொழியாகத்
> தமிழ்மொழியே
>
> read more »
உண்மையிலேயே தமிழ் அறிந்தோர் யார்? யார் சொல்லும் வேர்ச்சொல் தமிழ்?
உண்மை? என்று எப்படிக் காண்பது? தமிழ் என்பதில் மறைந்திருக்கும் சாதீயம்,
அரசியல் வலுவானது? எதிர், எதிர் அணிகளையே நான் கண்ணுறுகிறேன்.
ஒரு காலத்தில் சங்கம் வைத்து தமிழைச் செந்தரத்துடன் வைத்திருந்தனர்.
மிகக்கடுமையான நிபந்தனைகள் இருந்தன. 21ம் நூற்றாண்டுத் தமிழகத்தில் ஏன்
சங்கம் (அகாதமி) உருவாகவில்லை?
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இப்படி பொதுவாக சொல்வதும், கையை பிசைப்பதும் உதவுவதில்லை. தமிழில்
நுரையீரலில் உள்ள வெளிமொழி சொற்களை துப்பி, துப்பி தமிழை “காப்பது”
என்பது Pathological statements, psychological problems. அப்படிப்பட்ட
உருவகமே அப்படி சொல்பவர்கள் சாதாரண , காமன் சென்ஸ் உலகத்தில் இல்லை என
சொல்லலாம். (தமிழ்) ப்யூரிடாசினத்தின் உச்ச கொம்புகள் அருளி, மதிவாணன்,
ஞா.தேவநேயன் போன்றோர்.
இதைப்போல் “சலவை பட்டாளங்கள்’ தமிழை உலக அறிவுலிருந்து தனியாக ஒரு
சுவரெழுப்பி வைப்பர், அவர்கள் கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில்
சிரிப்பைதான் கொடுக்கும்.அதற்கு மேல் சமஸ்கிருதத்தின் மேல் ஒரு பொறாமை,
வயத்தெரிச்சல், உலக மொழிகளுக்கு தமிழ்தான் “வேர்”, “தாய்” போன்ற
முட்டாள்தனங்களையும் பார்க்கலாம்.
முட்டாள்தனமான அடிப்படையிலிருந்து எப்படி உபயோகமான கருத்துகள் வரும்??
உலக அளவில் தமிழ் அகாடமிக்குகள் ஜோக்கர்களாக ஆகி வருகின்றனர்
வகொவி
அன்புள்ள சரவணன்:
கேட்கவே ஆறுதலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, தமிழில் சிந்தித்து,
தமிழில் எழுதி, தமிழால் செயல்படவே ஆசைப்படுகிறேன். என் கொரிய, ஜப்பானிய,
ஜெர்மன் நண்பர்கள் அவ்வாறே தத்தம் தாய்மொழியிலேயே செயல்படுகின்றனர்.
பயன்பாட்டில் இல்லையெனில் தாய்மொழி கூட அந்நியப்பட்டுப் போகும்! அதுதான்
நமக்கு நடந்திருக்கிறது.
சங்கம் கண்ட காலத்தில் மிகவும் கறாராக இருந்திருக்கின்றனர். நக்கீரன்
சிவனுடன் சண்டை போட்டு இருக்கிறான். திருமங்கை ஆழ்வார் திருமாலைக்
கூப்பிட்டு நீ! வா! தமிழ் சொல்லித்தருகிறேன்! என்று சொல்லியிருக்கிறார்.
நம்மாழ்வாரின் தமிழுக்கு தமிழுலகம் சிரம் தாழ்த்தினாலும் அவரது கவிதையும்
சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே புலவர்கள் புழக்கத்திற்கு
வந்திருக்கிறது. இப்படியொரு மொழிப்பற்று மிகுந்த ஒரு கலாச்சாரம் இன்று
அடிவருடிகளாக, மேடையில் மல்லாக்க விழுவதைக் காணும் போது வருத்தமாக
இருக்கிறது. பாரதி உறுமினான். பின்னால் திருலோகு உறுமியிருக்கிறார்.
பாரதிதாசனின் தமிழ் பற்று சாதீயத்தால் அழுக்குற்றது. அதன் பின் வந்தோர்
அரசியல் காரணங்களுக்காக பற்றை அடமானம் வைத்துவிட்டனர்.
நாம் எப்படியொரு செந்தரக்குழுவை உருவாக்குவது? நிர்வகிப்பது? புலமைசார்
பெருந்தகைகள் தோள் கொடுப்பரோ?
நா.கண்ணன்
உங்களுக்கோ, உங்கள் குருவாகிய அருளி அல்லது மதிவாணருக்கோ இன வாதம்,தாய்
மொழி மைய வாதத்துக்கு அப்பால் சிந்தனை செய்ய முடியவில்லை.
தற்கால மொழியியல், அறிவியல் அடிப்படைகள் கொஞ்சம்கூட உங்களுக்கு அதாவது
தனித்தமிழர்களுக்கு ஏறவில்லை.
On Aug 2, 5:35 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> //இதெல்லாம் அறிவியல் தமிழுக்கோ, எந்த வித தமிழுக்கோ ஒரு இம்மி கூட
> உதவியாக இருக்கப்
> போவதில்லை//
> இதை தமிழர் சொல்ல வேண்டும். தமிழே வேண்டாம் என்போர் இதில் எத்தனை கருத்து
> சொன்னாலும் அது எடுபடாது.
ஏன் இந்த போலியான இனமைய வாதம்? ஒரு ஆங்கிலேயர் சொன்னா தப்பா? ஒரு மலையாளி
சொன்னால் தப்பா? தெலுங்கர் சொன்னா உங்களுக்கு ஏறாதா ? யார் தமிழர் என
உங்ககிட்ட சர்டிபிகேட் வாங்கணுமா? நான் சொன்ன குற்றச்சாற்றுகளை உடனே
அப்பட்டமாக நிரூபித்து விட்டீர்களே !!!
>
> //மதிவாணன், அருளி போன்றோர், மக்கள் வரிப்பணத்தில் இதைப்போல் வெறியை
> உண்டாக்குவது ஜனநாயகத்திற்க்கு உபகாரம் அல்ல. தமிழில்அறிவு சார்ந்த முறை
> இவர்களால் நன்றாக மூழ்கடிக்கப்படுகிறது. மொழி வெறி அல்லது மொழி துதி
> ஒன்றுக்கும் உபயோகம் இல்லை//
>
> பிற மொழிச் சொல் இருக்கலாம் என்றால் தனியே தமிழில் கலைச் சொல்லாக்கம் என்ற
> துறையே தேவை இல்லை.. விசைய ராகவரால் இந்தி வளர்ச்சித் துறைக்கு
> சென்று ஆங்கிலச் சொல் பயன்படுத்துங்கள் என்று சொல்ல முடியுமா? இந்தி வளர்ச்சி
> இந்தி வெறியை வளர்க்கிறது என்று சொல்ல முடியுமா ? இந்திச் சொல்லாக்குனர்
> அறிவியல் அறிவை மூழ்க்கடிக்கின்றனரா? இல்லை என்பது தானே விடை! தமிழும்
> அப்படித் தான்.
ஹிந்தி பேச்சுகளையும், எழுத்துகளையும் பாருங்கள், இன்னும் ஆங்கிலம்
இருக்கும். தற்கால ஜெர்மன் மொழியை பாருங்கள், கேளுங்கள் , பல ஆங்கில
வார்த்தைகள் இருக்கும்
>
> //இதைப்போல் “சலவை பட்டாளங்கள்’ தமிழை உலக அறிவுலிருந்து தனியாக ஒரு சுவரெழுப்பி
> வைப்பர்,//
>
> தமிழைத் தமிழ் ஆக்குவது எப்படி தனிமைப்படுத்துவதாகும்
>
> //.அதற்கு மேல் சமஸ்கிருதத்தின் மேல் ஒரு பொறாமை,வயத்தெரிச்சல், உலக
> மொழிகளுக்கு தமிழ்தான் “வேர்”, “தாய்” போன்ற முட்டாள்தனங்களையும்
> பார்க்கலாம்.//
>
> யம்மாடியோவ்!! இதில் வகொவியின் உண்மையான தன்மொழி இன உணர்வு பளிச்சிடுகிறது.
> அது தான் சமற்கிருதத்திற்கு தமிழ் ஈடா! என்று சினம் பொத்துக்கொண்டு
> வருகிறது. அவர் உண்மையான ஆரியர் அல்லவா? இவருக்கு உள்ள குணங்களை எல்லாம்
> தமிழர் மேல் அப்படியே சாற்றுகிறார்.
தமிழ் (தற்கால தமிழ்) வேறு எந்த மொழிக்கும் “தாய்” இல்லை, மலையாளத்துக்கு
‘தாய்’ இல்லை, தெலுங்குக்கு ‘தாய்’ இல்லை, உருதுக்கு ‘தாய்’ இல்லை,
பிரெஞ்சுக்கு ‘தாய்’ இல்லை , சம்ச்கிருதம் , கிரேக்கம், எதற்க்கும்
‘தாய்’ இல்லை.
இது தனித்தமிழர்களின் கிணற்றுத்தவளை மனப்பான்மை.
>
> //முட்டாள்தனமான அடிப்படையிலிருந்து எப்படி உபயோகமான கருத்துகள் வரும்??//
>
> அப்படியானால் சமற்கிருதம் உலக மொழிகளின் தாய் என்பது முட்டாள்தனமென்று
> ஒப்புக்கொள்கிறீரா ?
>
> சேசாத்திரி
சமஸ்கிருதம் ஏன் இந்த அப்செஷ்ஷன் ; சம்ஸ்கிருதத்தை இழுக்காமல் தமிழ்
பற்றி பேச முடியாதா??
சம்ஸ்கிருதம் உலக மொழிகளின் தாய் என யாரும் சொல்லவில்லை; நீங்களே உங்கள்
பூச்சாண்டிகளுடன் பேசுகிறீர்கள்.
இந்த குறுகிய பார்வையுடன் உங்கள் குருக்களல் ஒரு ஆக்கபூர்வமான செயலும்
செய்யமுடியாது
நீங்கள் ஞா.தேவநேயன் /அருளி/ மதிவாணனின் நேரடி வாரிசு என
நிரூபிக்கிறீர்கள்.
மெட்ராஸ் டமில் லெக்சிகான் இன்றும் உலக அளவில் ஆய்வாளர்களல் பார்த்து ,
கன்சல்ட் செய்யப்படுகிறது, இன்றும் மெச்சப்படுகிறது.
ஆத்திரத்தின் பயிரான மதிவாணரின் வேற்சொல் “ஆராய்ச்சிகளை” யாரும் அறுவடை
செய்யமாட்டார்கள்
“விசை”ராகவன் , உண்மையான ஆரியன்
2012/8/2 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
..
நாம் எப்படியொரு செந்தரக்குழுவை உருவாக்குவது? நிர்வகிப்பது? புலமைசார்
பெருந்தகைகள் தோள் கொடுப்பரோ?
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2012/8/3 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இதில் பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை சுபா.
ஆரவமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்தோம் தொடங்கினோம் என்று ஆரம்பித்து
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த வாக்கியத்தின் முதற்சொல் என்ன சொல்ல வருகிறது? ஆர்வமுள்ளவர்களா, ஆரவாரமுள்ளவர்களா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. :)2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>ஆரவமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்தோம் தொடங்கினோம் என்று ஆரம்பித்து
ஹரிகி.
--
அன்புடன்,
> ஒரே கும்மாங்குத்தா இருக்கே.
>
> அதனால தான் நம்ம கண்ணன் ஐயா ஒரு கமிட்டி அமைக்கலாம்கிறார்.
>
> அதுக்கும் விடமாட்டிங்களா? :))
>
ஐயா!
நான் எந்தக்கமிட்டியும் போடச்சொல்லலே!
சொன்னது நீங்க!
பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க மின்தமிழின் கும்மாங்குத்துகளை! புதுசா வேற வேணுமா?
உத்தமம் அமைப்பில் நீங்கள் சொல்லியவாறே தனித்தனிக்குழுக்கள் இயங்கி
சொற்களைப் பரிந்துரை செய்கின்றன. பிற மொழிகளில் செந்தரப்படுத்தும்
குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. தமிழ்மொழி என்று வரும் போது தேர்
நிலைக்கு வருமா? என்றே இருக்கிறது! மேலும் அந்தக்காலத்து சங்கம் என்பது
வேறொரு தளத்தில் செயல்பட்டது என்று தோன்றுகிறது. அந்த அளவு புலவோர்
ஒற்றுமை இக்காலத்தில் இருப்பதாகத்தெரியவில்லை. இராஜாஜி சொல்வது சரியென்றே
படுகிறது ;-)
க.>
உலகம் பூராம் சுற்றி வந்தேன்
நகரங்களில் தெருவெல்லாம் சுற்றிவந்தேன்
பூங்காக்களில் புகுந்துவந்தேன்
எங்குமே கமிட்டிக்குச் சிலை இல்லையே
இது ஒரு மேல்நாட்டில் கமிட்டியால் நொந்து போனவனின் சோக கீதம்
நாகராசன்
2012/8/3 N. Kannan <navan...@gmail.com>:
--
பசுந்தோல் போற்றிய புலி
போற்றுதல்--வேர்ச்சொல் ஆராய்சி தொடங்கலாமா? குளிருக்கு இதமா போற்றிக்கொள்ள போற்வை (போட்ர்வைனு உச்சரிக்கணும்) எந்த ஊருல வாங்கறது?
எழுத்துப் பிழைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். போர்த்திய என்பதே சரி
பாவாணரின் ஆக்கத்தில் பேரா.அருளி தவறு
கண்டதுபோல் வருங்காலத்தில் இவரது
ஆக்கத்தில் வேறு யாராவது தவறு காணும்
வாய்ப்பு இருக்கிறது இல்லையா ?
அவ்வாறு ஒருவர் தவறு கண்டால்
அது ஏற்கப்படுமா ?
வேர்ச்சொல் தொகுதி மாற்றங்களுக்கு
உட்பட்டதா ?
ஒருவர் வரையறுக்கும் வேர்ப்பொருளை
மற்றொருவர் நிராகரித்தால், அந்த
வேரின் அடிப்படையில் ஏற்கெனவே உருவான
பல சொற்களும் தவறு என்றாகுமல்லவா ?
மணவை முஸ்தஃபா அவர்கள் தொகுத்த
எண்ணற்ற கலைச் சொற்களுக்கு இன்றைய
தமிழ் அறிஞர்கள் / அறிவியலார் கொடுத்துள்ள
இடம் என்ன ?
தேவ்
On Aug 2, 4:07 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நல்ல புரிதல் ஐயா ! உமக்கு.
>
> 2012/8/2 N. Kannan <navannak...@gmail.com>
>
> //கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
> யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா?//
>
> கலைச் சொல்லாக்கம் ஆனாலும், அறிவியல் சொல்லாக்கமானாலும் தமிழ் இலக்கிய இலக்கண
> அறிவு உள்ளோர் அதில் ஈடுபடுதலே சாலவும் சிறப்பு. அஃதல்லாதாருக்கு சொல் வள
> அறிவு குறைவு என்பதே காரணமாம். வேர் சொல் ஆய்வு என்பது ஞானப்பிரகாசர் தொடங்கி
> பாவாணரால் நன்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பலரால் மேற் கொள்ளப்படும்
> தமிழுக்கு புதிய துறை. பேராசிரியர். ப. அருளி என்பவர் பாவாணருக்குப் பின்
> தோன்றிய வேர் சொல் ஆய்வாளருள் தலைமையானவர். பாவாணருடைய வேர் ஆய்விலேயே பல
> தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர். அவர் தலைமையில் தஞ்சைத் தமிழ்ப்
> பல்கலைக் கழகத்தில் கலைச் சொல்லாக்கத்திற்கு என ஒரு குழு இயங்குகின்றது.
> அவர்களால் உருவாக்கப்பட்டதே *அருங்கலைச் சொல் அகரமுதலி.* இதில் 1,20,000
> சொற்கள் உருவாக்கப்பட்டு 1216 பக்கங்களில் பயனுக்கு வந்துள்ளது. எனினும் இதைப்
> பயன்படுத்துவோர் அதிலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஆளுவோர் மிகக்
> குறைவு. நான் இந்த அகராதியைப் பயன்படுத்துகிறேன். மற்ற பிறரும்
> பயன்படுத்தினால் தானே அத்துறைச் சொற்கள் பரவலுறும். மிகப் பலருக்கு இப்படி ஒரு
> அகராதி இருப்பதே தெரியாது. ஆக அகராதியை உருவாக்கினால் மட்டும் போதாது அது அது
> பரவலுற வேண்டும்.
>
> //அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
> அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
> இதுவுமொன்று.- நா.கண்ணன்//
>
> அறிவியல் அறிந்தோர் கூட ஆங்கிலத்தில் அச் சொல்பிறப்பு எப்படி ஏற்பட்டது என்று
> அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகையோரால் மொழிபெயர்ப்பும் புதுச்
> சொல்லாக்கமும்ம இயலவே இயலாது. தமிழறிந்தோரைக் கேட்கவே வேண்டாம். தம்
> சம்பளத்தில் தமிழ் நூல்களை வாங்க்க் கூட காசு ஒதுக்காதவர்கள், இவறிகள்
> (கஞ்சர்கள்). அகராதி ஆக்கத்திற்கு இவர்களை எதிர்பார்க்க்க் கூடாது. அரசு தான்
> இவ் அருங்கலைச் சொற்கள் பாட நூல்களில் பயிலப் பட ஏதேனும் செய்ய வேண்டும்.
>
> பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க்
> கேடானது.
>
> "நம் செம்மொழி" எனும் நூலூள், 2005, பேரா. ப. அருளி தமிழைப் பற்றி கூறுவது
> யாதெனில், அது பின்வருமாறு: (பக்கம் 45 - 46)
>
> *கடந்தியன்ற ஈராயிரம் ஆண்டுகால அளவிடையில் இருபத்தேழு மொழிகள் த்த்தம்
> சொற்களைக் கொண்டு தபிழைத் தாக்கியுள்ளன; தழுவியள்ளன! சற்றேறக்குறைய ஓர்
> இருபதினாயிரம் சொற்கள், நம் தமிழரின் நாக்களிடையே புரண்டெழுந்துள்ளன!
> பல்லாயிரம் நூல்களிடையே பரவலுறப் பதிவுற்றுள்ளன! ஈராயிரமாண்டுகளாக இத்
> தாக்குதல் ஒரு தொடர்வினையாகவே நம் மொழிக்கண் இடைவிடாது மேற்கொள்ளப் பெற்று
> வருகின்றது ஆங்கிலமொழி மிகப் பேரளவிலான கடுந்தாக்குதலொன்றை இன்று நிகழ்த்தி
> வருகின்றது.*
> *
> *
> *அயற்பொருளை துப்பியெறியும் நுரையீரலைப் போல! - -*
> *
> *
> *ஆயினும் - ந்ம் தமிழ் மொழியோ - எற்றுக்கும் சற்றும் அசைந்து கொடாது -
> அவையாவற்றையும் அதன் மேலோட்டுப் பகுதி எல்லையிலேயே படர்ந்து கிடக்குமாறும்-
> ஒட்டவிடாதும் தொடர்ந்து உயிர்த்து வருகின்றது! நம்மூக்குத் துளைகளின் வழியாக
> மூச்சுக் குழல் ஊடாக்க் காற்றுடனே கலந்தியைந்து நுரையீரலுள் நுழையும் ஓர்
> அயற்பொருள் 9அது இம்மிளவிருப்பினும் இம்மியினுஞ் சின்னஞ்சிறிய
> நுண்மியளவிருப்பினும்) எதுவாயினும் - அதனை அறுநூறு அயிரிமாத்திரி (kilometer)
> வேகத்தில்மையும் வீச்சொடு தும்மலெழுப்பி விரைவாரப் புறந்துப்பியெறியும்
> வினைவகைமையைப் போன்றதே - ந்ம் மொழியும் வினையாற்றுகின்றது! ஆயிரக் கணக்கான
> அயற்பொருள்களாகிய பிறமொழிச் சொற்களை உளவாங்கியவாறிருந்துங் கூட- உரிய
> காலங்களில் ந்ம்தமிழ் மொழி அவற்றைத் துப்பியெறிந்தெற்றுவது என்பது ஓர் இயற்கை
> தொடர்வினையாகவே உள்ளது!*
> *
> *
> *
> *
> *பக்கம் 63 - 64*
> *
> *
> *சமறகிருதத்தையே ஏணியிலேற்றும் அகராதியியலர் ! . . . *
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகளுக்குரிய பெரிய பெரிய அகராதிகளைத் தொகுத்துள்ள
> அகராதியிலரிற் பெரும்பாலரும் - அவ்வம் மொழிகளின் சொற்களுக்குரிய மூலவேர்
> காட்டுகையில் சமற்கிருதத்தையே எக்கி - எம்பி - எகிறி ஏணியிலேற்றி வைக்கும்
> வழக்கத்தினராக உள்ளமையை - அவற்றைப் படிக்கும் போதும் ஆயும்போதும் கண்டு
> நோக்காடே கொள்ள வேண்டியுள்ளது!*
> *
> *
> *அப் படிவுகட்டு மூலச் சொந்தக்காரர்கள் - நம் தமிழர்கள்*
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகள் தோற்றத்திற்குரிய அடிப்படைத் தாய்மொழியாகத்
> தமிழ்மொழியே ...
>
> read more »
// நான் அவருடைய கூரியர் இழதை தவறாமல் படிப்பவர் என்ற முறையில் அவருடைய தனித் தமிழ் நடையில் ஈர்ப்புள்ளவன்.//
சட்டியை உலகில் யார் தட்டினாலும் ‘சட் சட்’ என்றுதானே ஒலி எழும்புகிறது ?
உலகின் எல்லா மொழிகளிலும் ’சட்டி’ என்றோ, அதை
அடிப்படையாகக் கொண்டோதானே பெயர்
அமையவேண்டும் ?
முன்மிகை தமிழுக்கு மட்டும்தானா ?
முன்மிகைக்கு வேறு மாதிரிகள் உள்ளனவா ?
தேவ்