உடம்பைக் கடம்பால் அடி

375 views
Skip to first unread message

Santhanam Swaminathan

unread,
May 24, 2012, 1:03:36 AM5/24/12
to mint...@googlegroups.com
உடம்பைக் கடம்பால் அடி

கடம்ப மரம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. உடம்பைக் கடம்பால அடி என்ற பழமொழி இதற்குச் சான்று. மதுரை நகரத்தைக் கட்டுவதற்கு முன் அந்த இடம் ஒரு பெரிய கடம்பவனக் காடாக இருந்தது. ஒரு நாள் இரவில் தனஞ்செயன் என்ற வணிகன் அக்காட்டு வழியே செல்கையில் இரவு நேரத்தில் அதிசய ஒளியைக் கண்டான். இந்திராதி தேவர்கள் காட்டின் நடுவே இருந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வதைப் பார்த்து மறுநாள் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கவே அங்கே கோவில் கட்டினான் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் காய்ந்து போன ஒரு கடம்ப மரத்தை வேலி கட்டி பாதுகாத்து வருகின்றனர்.
(என் பாட்டி கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவாள். அவள் இறுதி மூச்சு வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தாள். நாங்கள் "எனக்குத்தான இறுதிக் காலத்தில் இந்த கட்டில் சொந்தம்" என்று சகோதரர்களுக்குள் “ஜோக்” அடித்துக் கொள்வோம்! அக்கட்டில் இன்னும் மதுரையில் இருக்கிறது.) இந்தப் பழமொழிக்கு வேறு பொருள் இருந்தாலும் இருக்கலாம்.

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
(தினமணி, 29-11-1977)
தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை பொது மக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கலெக்டர் அறிவித்தார். உடனே ஏழை எளிய மக்கள் அவைகளை வெட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றனர். சில அரசு ஊழியர்கள் பணி முடிந்த்ததும் ஒரே வெட்டில் வெட்டக் கூடிய உதிய மரங்களை வெட்டி, சைக்கிளின் பின்னால் பெரிய மரங்களாக வைத்துச் சென்றனர். அவர்களை சட்ட மன்ற கொறடா துரை கோவிந்தராஜன் வழிமறித்து ஏன் பெரிய மரங்களை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் ,”கலெக்டர் அறிவித்ததால் நாங்கள் எடுத்துச் செல்கிறோம்” என்று பதில் சொன்னார்கள். உடனே கொறடா, புளிய மரக் கிளைகளை எடுத்துச் சென்றாலும் அடுப்பு எரிக்க உதவும். இவைகள் உதிய மரங்கள். அடுப்பில் வைதாலும் எரியாது, புகை தான் வரும், ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவர்களை “ ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே” என்று கிராமங்களில் சொல்லுவதை நீங்கள் கேட்டதில்லையா என்றவுடன் அவர்கள் வெட்கமடைந்து அந்த பெரிய மரங்களை சாலை ஓரமாக போட்டுவிட்டுச் சென்றனர். (தினமணி செய்தியின் சுருக்கம்).

உதிய மரமும் ஒதிய மரமும் ஒன்றும் என்று சொல்லுவார்கள். ஆனால் இரண்டுக்கும் வெவ்வேறு தாவரவியல் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் அது சரியா என்று சொல்ல முடியவில்லை.
உதிய மரம் உத்தரம் செய்யக்கூட பயன்படாது என்று கிராமப்புறத்தில் பழமொழி உள்ளTHu எதற்கும் ஆகாத ஆட்களை, ஆள் உதியயமரம் போல வளந்திருக்கானே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அப்பா, அம்மாக்கள் அலுத்துக்கொள்வதையும் பார்க்கலாம்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? (பழமொழி)

(இது தொடர்பாக மடலாடல் குழுவில் ஏற்கனவே நடந்த கலந்துரையாடலில் வந்த கருத்துகளையும் நினைவிற் கொள்க. பழைய பேப்பர் கட்டிங்கு--களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குப்பைத்தொட்டியில் போட்டு வருகிறேன். சில விஷயங்கள் பயன் பெறுமோ என்று எண்ணி இதையும் எழுதினேன்)
 
 
Swami
020 8904 2879
07951 370 697

S.Krishnamoorthy

unread,
May 24, 2012, 1:18:49 AM5/24/12
to mint...@googlegroups.com
நான் படித்த செட்டிநாட்டைச் சேர்ந்த கோனாபட்டு ஸ்ரீ சரஸ்வதி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த திரு ஆராவமுது அய்யங்காருர்க்குக் கோபம் வந்தால் படிக்காமல் மக்கர் செய்யும் மாணவனை “டேய், உதியம் போத்து” என்றுதான் திட்டுவார்.

2012/5/24 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

N. Kannan

unread,
May 24, 2012, 6:13:24 AM5/24/12
to mint...@googlegroups.com
2012/5/24 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

> கடம்ப மரம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. உடம்பைக் கடம்பால
> அடி என்ற பழமொழி இதற்குச் சான்று. மதுரை நகரத்தைக் கட்டுவதற்கு முன் அந்த இடம்
> ஒரு பெரிய கடம்பவனக் காடாக இருந்தது.

சில வருடங்களுக்கு முன் நான் ஆஸ்திரேலியா, சிட்ணி சென்ற போது அங்குள்ள
நீலமலைக்குச் சென்றேன். அங்குள்ள பழங்குடிகளுக்குப் பெயர் ‘கடம்பா’ என
அறிந்தேன். இப்பழங்குடிகள், தமிழ்க் குடிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது
தாங்கள் அறிந்ததே!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
May 24, 2012, 4:30:42 PM5/24/12
to மின்தமிழ்

On May 24, 3:13 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/5/24 Santhanam Swaminathan <swami...@yahoo.com>:

From Korea and Japan, did Pandyas go to Sidney?

N. Ganesan

N. Kannan

unread,
May 25, 2012, 10:15:48 AM5/25/12
to mint...@googlegroups.com
2012/5/24 N. Ganesan <naa.g...@gmail.com>:

> From Korea and Japan, did Pandyas go to Sidney?
>

இது என்ன நக்கலா? :-)

தமிழக மலைவாழ் மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கும் தொடர்பு உண்டுதானே!

க.>

seshadri sridharan

unread,
May 25, 2012, 10:54:53 AM5/25/12
to mint...@googlegroups.com
On Fri, May 25, 2012 at 7:45 PM, N. Kannan <navan...@gmail.com> wrote:

> From Korea and Japan, did Pandyas go to Sidney?

இது என்ன நக்கலா? :-)

தமிழக மலைவாழ் மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கும் தொடர்பு உண்டுதானே!

ஐயா இதற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் அதை இங்கு தரலாமே.

சேசாததிரி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 25, 2012, 11:12:16 AM5/25/12
to mint...@googlegroups.com
ஒரு இழை துவங்கி சரியாக வழி நடாத்தி செல்வது என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது என்கிறார்கள்.

ஆனால் இக் கூற்று இழை துவங்கிய சற்று நேரம் வரையிலும் தான் உண்மையாக் இருக்கிறது. ஆரம்பத்தில் ஓரிருவர் தேரைத் தான் பிடித்து இழுக்கிறார்கள். கூட்டம் சேர சேர சில பேர், தேரை இழுக்காமல் தேரை இழுப்போரின் காலைப் பிடித்து இழுக்கத் துவங்குகின்றனர். :)))

இந்த இழை மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

அப்பனே கணேசா, இந்த இழையையாவது காப்பாத்து!

அன்புடன்,

தி.பொ.ச.

2012/5/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

N. Kannan

unread,
May 25, 2012, 11:27:29 AM5/25/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி:

பல நாடுகள் சுற்றிக்கொண்டிருப்பவன் எனும் கோதாவில் முதலில் இவர்களைப் பார்த்தாலே நம்ம ஊர் வலையன், தோடர் போன்றோர் முகச்சாயல் தெரியும்.

இரண்டாவது நமது சமயச்சின்னங்களான நெற்றியில் பட்டை, திருமண் போன்றவை பழங்குடிச் சின்னங்களாக இருக்க வாய்ப்புண்டு. கீழேயுள்ள படத்தைப் பாருங்கள். நம்புங்கள் :-)

Inline image 1

மேலும் ஆப்பிரிக்க முகச்சாயல் என்பது இன்றளவும் எவ்வளவுதூரம் நம்மிடையே உள்ளது என்பது தெளிவு!

கொரியாவில் பப்புவா நியூகினி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் போது ஏதேவொரு தோழமை தோன்றும். நம்ம ஊர்க்காரன் எனும் உறவாக இருக்கலாம் :-)

மொழி ஒற்றுமை குறித்து கட்டுரைகள் உள்ளன. தேட வேண்டும்!

நா.கண்ணன்



2012/5/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:
Abori_Tamil.jpg

N. Kannan

unread,
May 25, 2012, 11:37:43 AM5/25/12
to mint...@googlegroups.com
சேசாத்திரியாரே

கண்கள் மனிதனை எப்படி ஏமாற்றும் என்பதற்கு ஒரு படம். 

கீழேயுள்ள படம் யாரை, எங்கு எடுத்தது? 

மின்தமிழர்களை யூகிக்க விடுவோம்! :-)

Inline image 1

நா.கண்ணன்
India_white.jpg

Santhanam Swaminathan

unread,
May 25, 2012, 2:31:25 PM5/25/12
to mint...@googlegroups.com
கண்ணன் அனுப்பியுள்ள படங்களில் ஒன்று பற்றி காஞ்சி மகா சுவாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னை சொற்பொழிவுகளில் பேசியிருக்கிறார். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆடும் நடனத்துக்கு சிவா டான்ஸ் என்று பெயர் என்றும் அவர்கள் விபூதி போல உடலில் சாம்பல் பூசி இப்படி ஆடுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். 

கலிபோர்னியா என்பது கபில ஆரண்ய என்பதின் மருவாக இருக்கலாம் என்றும் எகிப்தில் ராம்செஸ் என்ற மன்னர்களின் பெயர்களில் ராமன் பெயர் இருப்பதையும் இன்னும் மடகாஸ்கர் இந்திய தொடர்பு பற்றியும் பேசிவிட்டு ஒரு அற்புதமான கருத்தை சொல்லி முடிக்கிறார். இதை எல்லாம் கேட்டுவிட்டு நாம் அங்கேயெல்லாம் குடி ஏறினோம் என்று நினைக்காதீர்கள். உலகில் ஆதியில் இந்து மதம் ஒன்றே இருந்தது, அதனுடைய மிச்சம் மீதிதான் இவை என்றும் கூறுகிறார். சிந்திக்க வேண்டிய கருத்து. 

பத்மா சுப்பிரமண்யம் ஆஸ்திரேலியா சென்றபோது ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள் நடனத்தைப் பார்க்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது. அதில் ஒரு மணீ நேரத்துக்குள் அவர் இருபதுக்கும் மேலான தமிழ் சொற்களைக் கண்டுபிடித்தார் என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆக கண்ணன் சொன்னதில் பொருள் உண்டு.
Swami
020 8904 2879
07951 370 697



From: seshadri sridharan <ssesh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, May 25, 2012 3:54 PM
Subject: Re: [MinTamil] Re: உடம்பைக் கடம்பால் அடி

seshadri sridharan

unread,
May 25, 2012, 10:27:57 PM5/25/12
to mint...@googlegroups.com
இவர்கள் ஏதோ வெள்ளை நோயால் பாதிக்கப்பட்ட தமிழர் போல் தெரிகின்றது. பின்னணியில் உள்ள புகைப்படத்தில் புடவை கட்டிய பெண் உள்ளார். பரண் மீது நம்மூர் கலன்கள் அடுக்கப்படுடள்ளன.

சேசாத்திரி

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>
India_white.jpg

seshadri sridharan

unread,
May 26, 2012, 2:35:07 AM5/26/12
to mint...@googlegroups.com
ஐயா,
நான் உலக நாகரிக மன்னர் பெயர்களை தேடும் போது ஆத்திரேலிய மக்கள் பெயரையும் இடப்பெயரையும் தேடினேன். அதில் சில ஊர் என்று முடிவனவாய் இருந்தன. அதற்கு மேல் தரவு கிட்டாததால் ஆத்திரேலியாவை விட்டுவிட்டேன். உங்களிடம் வேறு ஏதேனும் தரவுகள் இருக்குமா என்பதற்காக சுட்டி இருந்தால் தரும்படி சொன்னேன்.

சேசாத்திரி .
2012/5/25 N. Kannan <navan...@gmail.com>
Abori_Tamil.jpg

Subashini Tremmel

unread,
May 26, 2012, 3:57:07 AM5/26/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/5/25 N. Kannan <navan...@gmail.com>

அன்பின் சேசாத்திரி:

பல நாடுகள் சுற்றிக்கொண்டிருப்பவன் எனும் கோதாவில் முதலில் இவர்களைப் பார்த்தாலே நம்ம ஊர் வலையன், தோடர் போன்றோர் முகச்சாயல் தெரியும்.

இரண்டாவது நமது சமயச்சின்னங்களான நெற்றியில் பட்டை, திருமண் போன்றவை பழங்குடிச் சின்னங்களாக இருக்க வாய்ப்புண்டு. கீழேயுள்ள படத்தைப் பாருங்கள். நம்புங்கள் :-)

Inline image 1


கண்ணன் - வலது புறத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளின் படத்தையும் பார்க்கும் போது ஆப்பிரிக்க குழந்தையா தமிழ் குழந்தையா என பிரிக்கவே முடியாது. 
சுபா

மேலும் ஆப்பிரிக்க முகச்சாயல் என்பது இன்றளவும் எவ்வளவுதூரம் நம்மிடையே உள்ளது என்பது தெளிவு!

கொரியாவில் பப்புவா நியூகினி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் போது ஏதேவொரு தோழமை தோன்றும். நம்ம ஊர்க்காரன் எனும் உறவாக இருக்கலாம் :-)

மொழி ஒற்றுமை குறித்து கட்டுரைகள் உள்ளன. தேட வேண்டும்!

நா.கண்ணன்



2012/5/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:


>> ஐயா இதற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் அதை இங்கு தரலாமே.
>
>
> சேசாததிரி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Abori_Tamil.jpg

Subashini Tremmel

unread,
May 26, 2012, 4:03:14 AM5/26/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இந்தப் படத்தில் சால்வை போர்த்தி பொட்டு வைத்துள்ள பெண்மனி தமிழ் முகச் சாயல் மாறாமல் இருக்கின்றார் வெள்ளையர் நிறத்திலிருந்தாலும் .  பின்னால் நிற்கும் இளம் ஆண்கள் மூவருமே ஐரோப்பிய முக வடிவம் அதிலும் குறிப்பாக ஸ்கேண்டினேவியா வடிவ உருவ ஒற்றுமை தெரிகின்றது.
நான் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.. கலப்பில்லாத ஒரு மனிதராவது இந்த உலகத்தில் பார்க்க முடியுமா என்று.. அதிலும் தமிழகத்தில் தான் எத்தனை விதம் விதமான முகங்கள், வடிவங்கள், நிறங்கள்.. 
நீங்கள் கூட மங்கோலிய அல்லது மலாய்க்காரர் போலத்தான் இருக்கின்றீர்கள் ..இல்லையா.. :-)

சுபா

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
India_white.jpg

N. Kannan

unread,
May 26, 2012, 6:47:27 AM5/26/12
to mint...@googlegroups.com
சுபா:

மிகச்சரி! Humans are essentially visual. அதனால்தான் ஆ.மார்க்ஸ்
‘நிறப்பிரிகை’ என்று பத்திரிக்கை நடத்தினார். இவர்கள் எல்லாம்
தமிழர்கள்தான். வெள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பலர் ஸ்கேண்டிநேவியர்
போல் உள்ளனர். நான் பின்லாந்து போகும் போதெல்லாம் நினைப்பேன். எங்க ஊர்
கட்டாரி வெள்ளையாய் இருந்தால் இப்படித்தான் தோற்றமளிப்பான் என்று.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது 100% உண்மை.

நம்ம ஊரில் ஆப்பிரிக்கர் போல் நிறைய உள்ளனர். ஆஸ்திரேலியப் பழங்குடியினர்
போல் உள்ளனர். வெள்ளைக்காரன் போலவும் உள்ளனர். இந்த அழகில் ஒரு சாராரை
ஆரியன், இன்னொருவனை திராவிடன் என்பது கேலிக்கூத்து. :-)

நா.கண்ணன்

2012/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>


>
> இந்தப் படத்தில் சால்வை போர்த்தி பொட்டு வைத்துள்ள பெண்மனி தமிழ் முகச் சாயல்
> மாறாமல் இருக்கின்றார் வெள்ளையர் நிறத்திலிருந்தாலும் .  பின்னால் நிற்கும்
> இளம் ஆண்கள் மூவருமே ஐரோப்பிய முக வடிவம் அதிலும் குறிப்பாக ஸ்கேண்டினேவியா
> வடிவ உருவ ஒற்றுமை தெரிகின்றது.
> நான் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.. கலப்பில்லாத ஒரு மனிதராவது இந்த
> உலகத்தில் பார்க்க முடியுமா என்று.. அதிலும் தமிழகத்தில் தான் எத்தனை விதம்
> விதமான முகங்கள், வடிவங்கள், நிறங்கள்..
> நீங்கள் கூட மங்கோலிய அல்லது மலாய்க்காரர் போலத்தான் இருக்கின்றீர்கள்
> ..இல்லையா.. :-)
>
> சுபா
>
> 2012/5/25 N. Kannan <navan...@gmail.com>
>>
>> சேசாத்திரியாரே
>>
>> கண்கள் மனிதனை எப்படி ஏமாற்றும் என்பதற்கு ஒரு படம்.
>>
>> கீழேயுள்ள படம் யாரை, எங்கு எடுத்தது?
>>
>> மின்தமிழர்களை யூகிக்க விடுவோம்! :-)
>>
>>
>>


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Reply all
Reply to author
Forward
0 new messages