முக்கட்பிரானும் மூவா நான்மறையும்

244 views
Skip to first unread message

Dev Raj

unread,
Sep 12, 2014, 11:48:27 PM9/12/14
to mint...@googlegroups.com
மூவிலைவேல் முக்கட்பிரானைத் தண்டமிழ் இலக்கியங்கள் 
சிறப்பித்துப் பேசும்; திருமுறைகளும் பல இடங்களில் சொல்கின்றன -

எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் 
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் ...... 

எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான் 
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை..... 

மை சேர் கண்டத்து எண்டோள் முக்கண் மறையோனே...... 

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் 
பண்னார் நான்மறை பாடும் பரமயோகி..... 

மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவித் தொண்டீர் 
எண்டோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில்.... 

த்ர்யம்பகரான முக்கட்பிரானுக்குரிய மந்திரத்தை ரிக் வேதம் 7.59.12,,
யஜுர்வேதம் 3.60, அதர்வம் 14.1.17. ஆகிய இடங்களில் காணலாம் -

                                        ௐ 
த்ர்யம்ப₃கம் யஜாமஹே ஸுக₃ந்தி₄ம் புஷ்டிவர்த₄நம் | 
உர்வாருகமிவ ப₃ந்த₄நாந் ம்ருʼத்யோர்முக்ஷீய மாம்ருதாத் ||

பிறவா யாக்கைப் பெரியோன் எனத் தமிழிலக்கியம்
சொல்கிறது; மறை ’ம்ருத்யுஞ்ஜய’ -  இறவா யாக்கை
உடையவனாகக் காட்டுகிறது.       
               

                              ||ஸ்ரீ ருத்ரம்||

ஓம் நமஸ்தே ருத்₃ர மந்யவ உதோத இஷவே நம​: |
நமஸ்தே அஸ்து த₄ந்வநே பா₃ஹுப்₄யாம் உததே நம​: ||1.1||


நமஸ்தே அஸ்து த₄ந்வநே.....

ஆலவாய் அண்ணலை வில்லேந்தியவராக
வேதம் காட்டுகிறது; புராணம் அவ்வில்லுக்கு
‘பிநாகம்’ என்று பெயர் சூட்டுகிறது

பக்தி இலக்கியம் சிவஞானம் தரும் பரம்பொருளை 
நெடுஞ்சிலையுடைய பரம்பொருளாகக் காட்டுகிறது -

சிமையநெ டுஞ்சிலை யுடையப ரம்பொருள் சிவஞானம் 
அமையநி ரம்பிய வெளியொளி மன்றினுள் அகலாதே......


சிவ, ருத்ர நாமங்கள் ஒன்றாகவே ஓதப்படுவதையும் 
காண்கிறோம் -

யாத இஷு​: ஶிவதமா ஶிவம் ப₃பூ₄வ தே த₄நு​: |
ஶிவா ஶரவ்யா யாதவ தயாநோ ருத்₃ர ம்ருʼட₃ய ||1.2||

இறைமை அளிப்பதாயும், அழிப்பதாயும் திகழ்கிறது. 
மங்கலம், அன்பு, அருள் நிறைந்த சிவம்,
சங்கார காலத்தில் உருத்திரனாக கோர வடிவம் பெறுகிறது 

நம: ஶாந்தாய  கோராய.........  [புராணம்]


நம​: ஶிவாய ச ஶிவதராய ச -
நற்றுணையாவது    நமச்சிவாயவே!


நமோ ப₄வாய ச ருத்₃ராய ச நம: ஶர்வாய ச பஶுபதயே ச
நமோ நீலக்₃ரீவாய ச ஶிதிகண்டா₂ய ச நம: கபர்தி₃நே......



நமோ  ருத்₃ராய  -
உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும் 
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே. 


நம: கபர்தி₃நே -
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை......
[கபர்தி₃ - செஞ்சடை]


பஶுபதயே ச நமோ நீலக்₃ரீவாய ச -
ஆலமுண்ட கண்டனைப் பாசுபதா பரஞ்சுடரே
என்று அடியார் ஏத்திப் பணிவர்


நமோ நிஷங்கி₃ணே  - புரங்கள் மூன்றும் எரித்திடு சிலையர் 
[நிஷங்க₃ - அம்பறாத் தூணியையும் குறிக்கும்]

தஸ்கராணாம் பதயே நம​: - உள்ளங்கவர் கள்வன்
[தஸ்கர: - திருடன்]


சுக்ல யஜுஸ்சாகையின் சதருத்ரீயத்திலும்
சைவ சமயத்தின் கூறுகளைக் காண இயலும். 


தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்              
                         - திருமந்திரம்


அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
                 - திருமந்திரம்


அரன் துடி தோற்றம் அமைத்தல் திதி ஆம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
                                                          - திருமந்திரம்


தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம்...............


உருத்திர பசுபதி நாயனார்  திரு உருத்திரம் ஓதி
உய்ந்தது -
 
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு    
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்    
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி    
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார்.


நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்    
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்    
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்    
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
                                                 - திருமுறை 


கபர்தி, வ்யோம கேச போன்ற பதங்கள் அண்ணலின்
விரிந்த சடையைக் குறிப்பன. சமணம் தந்த கொடை
என்பது ஏற்கவொண்ணாதது. உபநிஷத் பகுதி, 
பிற்காலம் என்றெல்லாம் ஓரங்கட்டவும் ஆராய்ச்சி
யாளர்க்கு வசதி இல்லை.

பஞ்சாக்கரம் - மறையின் கொடை.

சிவகதி -  முதலில் சமணர் கையாண்ட சொல்
என்றே தெரிகிறது



தேவ்

Dev Raj

unread,
Sep 13, 2014, 3:19:24 AM9/13/14
to mint...@googlegroups.com
                                முக்கட்பிரானும்,  முந்துதமிழ் இலக்கியமும்


முது முதல்வன், முக்கண்ணான், ஈர்ஞ்சடை அந்தணன்,
காரியுண்டிக் கடவுள், கறை மிடற்றண்ணல், ஆலமர் செல்வன், 
ஆல்கெழு கடவுள் - இலக்கியம் சொல்லும்
இறைவனின் பெயர்கள்


தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் 
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்.....
                              (கலித்தொகை 2)


ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல 
                            (புறம் 55)


ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனும்...
                                 (புறம் 56)


பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன்......
                                 (புறம் :91)


நன்றாய்ந்த நீணிமிர்சடை 
முது முதல்வன் .....
                    (புறம் :166)


நீலநாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
         (சிறுபாணாற்றுப்படை, 96-97)


நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கடவுள தியற்கையும்.......
                       ( மலைபடுகடாம்)

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 
                        (கலித்தொகை 6)

இக்கலித்தொகைப் பாடல் சிவபிரான் உமாதேவியாரோடு 
இமயத்தில் வீற்றிருந்ததையும், மலை பெயர்த்த 
இராவணனின் கரங்கள் சிக்குண்டதையும்
தெரிவிக்கிறது.

ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் ...... (அகம் 181) 

உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான 
பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! -  பரணர்

ஆதி தீர்த்தங்கரரின் இமயத் தொடர்பு, ஆல மரத்தொடர்பு
இவற்றைச் சொல்லும் பாக்கள் சங்க இலக்கியத்தில் இல்லை


தேவ்

Dev Raj

unread,
Sep 14, 2014, 12:11:14 PM9/14/14
to mint...@googlegroups.com
மணிமேகலையில் சைவம் -

சைவ சமயம் சமணத்துக்கு மாற்றாக 10ம் நூற்றாண்டில்
வலிந்து உருவாக்கப்பட்ட புதிய கலந்தாங்கட்டி மதமன்று.
மணிமேகலை சைவ வாதியரை எதிர்கொள்வதை
சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை சொல்கிறது :


............................. இறைவன் ஈசன்என
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் தெய்வம் எப்படித்து என்ன
இருசுட ரோடுஇய மானன்ஐம் பூதம்என்று
எட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும் கலைஉருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தான்ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்என்று உரைத்தனன்

இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர் படுதலும் - 
எங்கட்கு இறைவனவான் ஈசன் என்று கொண்டொழுகிய
சைவவாதி எதிர்ப்பட்டானாக அவனைக் கண்டு, 

பரசம் நின் தெய்வம் எப்படித்து என்ன - 
நீ வழிபடும் நின் தெய்வம் எவ்வியல்பிற்று 
என மணிமேகலை கேட்க,
 
இரு சுடரொடு இயமானன் ஐம்பூதம் என்று எட்டு 
வகையும் யாக்கையும் உயிருமாய்க் கட்டி நிற்போனும் - 
ஞாயிறு திங்கள் இயமானன் மண் நீர் தீ காற்று வான்
என்ற எட்டினையும் தனக்கு உடம்பாய்த் தான் அவற்றிற்கு உயிராய் அமைந்து நிற்பவனும், 

கலையுருவினோனும் - பல்வகைக் கலைகளையும் தனக்கு உருவாகவுடையவனும், 

படைத்து விளையாடும் பண்பினோனும் -
யாவற்றையும் படைத்து அப்படைத்தவை நின்ற நிலவச் 
செய்யும் தன்மை யுடையவனும், 

துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும் -
படைப்புற்று நிற்பவற்றை யொடுக்குமாற்றால் அவற்றின் 
இளைப்பைப் போக்கியருளும் சிறப்புடையவனும், 

தன்னில் வேறு ஒன்று இல்லோனும் -
தன்னின் வேறாய்த் தனக்கு ஒப்பதும் மிக்கதுமாகிய 
தெய்வமொன்றுமில்லாதவனுமாகிய, 

அன்னோன் -
அத்தன்மையையுடைய முதல்வனே, 

இறைவனாகும் என்று உரைத்தனன் - 
எங்கட்கு இறைவனாவான் என்று சொன்னான். 

ஐம்பூதங்கள், திங்கள், கதிரவன் , யஜமாநன் - இவ்வெட்டின் உருக்கொண்டு,
முத்தொழில் ஆற்றும் தன்னிகரில்லாத் தத்துவம் சிவம் என்னும் கருத்தியல்
மணிமேகலை காலத்திலேயே இருந்துள்ளது. 

ஒருகால் மணிமேகலையும் 10ம் நூற்றாண்டுக்குப்பின் எழுதப்பட்டது 
என வாதிட்டலும் மறுப்பில்லை.

பிரகிருதி தத்துவத்தை எட்டு விதமாகப் பகுக்கும் முறையை கீதையும்
சொல்கிறது


தேவ்

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 5:51:08 PM9/14/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேவ ராஜ் அவர்களே,

அருமையான மேற்கோள்!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Sep 14, 2014, 11:01:12 PM9/14/14
to mint...@googlegroups.com
அரிசோனர் ஐயா காட்டும் ஆர்வத்துக்கு நன்றி.

சிலம்பும் சைவமும் :

இந்திரவிழவூர் எடுத்தகாதை அரனாரை ”பிறவா யாக்கைப் பெரியோன்” என்கிறது.

இதற்கான அரும்பதவுரை :
பிறவா யாக்கை – ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. 

பிறவா யாக்கை என்பது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. 
இதனைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர் -

குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே
                                                                            - சிவஞானசித்தியார்

சிலம்பு இறைவனைச் செஞ்சடை வானவனாகவும் சொல்கிறது -

செஞ்சடை வானவன் அருளின் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்.....
                                 - கால்கோள்காதை


தேவ்

 

கோதண்டராமன்

unread,
Sep 15, 2014, 2:15:43 AM9/15/14
to mint...@googlegroups.com
சிவன் எனபவரும் வேதம் கூறும் ருத்ரனும் ஒன்றல்ல. ருத்ரனின் பரிணாம வளர்ச்சி சிவன் என்று கூறலாம்.

1-த்ரயம்பகம் என்ற மந்திரம் ரிக் வேதத்தில் 7.59.12 இல் காணப்படுகிறது. அந்த சூக்தம் முழுவதும் மருத்துகளைப் பற்றியது. கடைசி மந்திரமான இது மட்டும் தனியாக, ருத்ரனைக் குறித்ததாகக் கூறப்படுவது ஏன் எனப் புரியவில்லை. ஒரே சூக்தத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் போற்றப்படுவது ரிக் வேதத்தில் சகஜம் தான். என்றாலு்ம் இந்த குறிப்பிட்ட மந்திரம் பிற்கால இடைச் செருகலாக இருக்கக் கூடும் என்று ஐயுற இடம் அளிக்கிறது.   

நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக. என்று பொருள்படும் அந்த மந்திரத்தில் ருத்ரனின் தனிப் பண்புகள் எதுவும் குறிப்பிடப்படாததால் அது ருத்ரனைத் தான் குறிக்கிறது என்று கூற முடியவில்லை.

ரிக் வேதத்தில் ருத்ரனைப் பற்றிய பிற மந்திரங்களில் ருத்ரன் முக்கண் உடையவர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 
த்ரயம்பகம் என்ற சொல் ரிக் வேதத்தில் வருவது இந்த ஒரு இடத்தில் தான்.  

2- ரிக் வேதத்தில் சிவ என்ற சொல் 62 முறைகள் வருகிறது. எல்லாமே மங்கலமான என்ற பொருளில் பல  தேவர்களுக்கும் அடைமொழியாக வருகிறதே அன்றி இது ஒரு தெய்வத்தின் பெயராக ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடப்படவில்லை. 

சிவன் தெய்வமாக ஆக்கப்பட்டபோது ருத்ரனின் மந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். ருத்ரனின் எல்லாப் பண்புகளும் சிவனுடைய பண்புகளுடன் ஒத்துப் போகவில்லை. 

உதாரணமாக, யஜுர் வேதத்தில் ஸ்ரீருத்ரத்தில் சிவன் நீலக்ரீவ என்றும் சிதிகண்ட என்றும் (கருத்த கழுத்து உடையவர், வெளுத்த கழுத்து உடையவர்) கூறப்படுகிறார். சிவனை வெளுத்த கழுத்து உடையவராகக் கூறும் மரபு இல்லை. 

யஜுர்வேதம் கூறும் ருத்ரன் வ்யுப்தகேசர், கபர்தின் என்று (மொட்டைத்தலையர், சடைமுடி உடையவர்) இருவகையான அடைமொழிகளும் பெற்றவர்.  
சிவனை மொட்டைத் தலையராகக் கூறுவது வழக்கில் இல்லை. 

ருத்ரத்தில் வரும் பப்லுசாய என்பதற்கு காளை மீட்டின் மீது படுப்பவர் என்று பொருள் கூறி ருத்ரனைச் சிவனோடு ஒன்றுபடுத்துகின்றன இன்றைய உரைகள். ஆனால் சாயணர் பப்லுசாய என்பதற்கு பழுப்பு நிறமுடையவர் என்று பொருள் தருகிறார். 

ருத்ரனை மயான வாசியாகக் கூறவில்லை எந்த வேதமும்.

மாதொரு பாகன் என்ற கருத்தை எந்த வேதத்திலும் காணமுடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார்.    [யஜுர் 1.8.6.6]


3 தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படாத ஆலமர் செல்வன் என்ற தெய்வம் உருவானதை சங்க இலக்கியங்களில் தான் காண முடிகிறது. அம்மையார் காலம் வரை அவருக்குச் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்ற பெயர் முதன் முதலாகத் தென்படுவது தேவாரத்திலும் திருமந்திரத்திலும் தான். இவற்றுள் எது காலத்தால் முந்தையது என்ற விஷயத்துக்குள் இப்போது போகவில்லை.

 4 வேதத்தில் குறிப்பிடப்படாததால் சிவன் அவைதிக தெய்வம் ஆகிவிடமாட்டார். காலம் தோறும் புதிய புதிய தெய்வங்கள் உருவாவதற்கு ரிக் வேதம் அடித்தளம் இட்டிருக்கிறது.  

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

       நாராயணனாய் நதிச் சடை முடியனாய்

       பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி

       அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்

       தேவரும் தானாய் திருமகள் பாரதி

       உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்

       உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

என்று பாரதி கூறியது வேதத்துக்கு இணக்கமான கருத்தே.

கோதண்டராமன். 

Banukumar Rajendran

unread,
Sep 15, 2014, 4:38:37 AM9/15/14
to மின்தமிழ்
நன்றி கோதண்டராமன் ஐயா,

தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி!


இரா.பானுகுமார்,
பெங்களூர்



Dev Raj

unread,
Sep 15, 2014, 5:38:36 AM9/15/14
to mint...@googlegroups.com
நம: ஶம்ப₄வாய ச மயோப₄வாய ச நம ஶங்கராய ச 
                மயஸ்கராய ச நம: ஶிவாயஶிவதராய ச | 

யா தே ருத்₃ர ஶிவா தநூ​: ஶிவா விஶ்வாஹபே₄ஷஜீ | 
ஶிவா ருத்₃ரஸ்ய பே₄ஷஜீ தயா நோ ம்ருʼட₃ ஜீவஸே || 

தாஸாம் ஈஶாநோ ப₄க₃வ​: பராசீநா முகா₂க்ருʼதி₄ ||

இமாம் ̐ ருத்₃ராய தவஸே கபர்தி₃நே,

9ம் அநுவாகம்

கபர்தி,சம்பு, ஈசாந, சங்கர,ருத்ர ,ம்ருட,சிவ நாமங்கள்
ஒரே அநுவாகத்திலேயே கிடைக்கின்றன.

பிறவிப்பிணி அகற்றும் வைத்யநாதராக வழிபடும்
மரபும் பிற்பாடு தோன்றியிருக்கலாம்


தேவ்


Dev Raj

unread,
Sep 15, 2014, 7:06:58 AM9/15/14
to mint...@googlegroups.com
வைணவ நூலின்கண் சைவம் பற்றிய சான்று :

களவழி நாற்பது கோச்செங்கட் சோழனின் வீரத்தைப் புகழ்கிறது.
அழுந்தை, வெண்ணி, கழுமலம் ஆகிய ஊர்களில் இம்மன்னன் 
போர் நிகழ்த்தியதாக வரலாறு சொல்கிறது.

சம்பந்தர் பெருமான் கோச்செங்கணானைப் போற்றுவார்.
சுந்தரர்  ”கோச்செங்கணான் செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில்”
என்று பாடுகிறார். மங்கை மன்னரும் ”பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற 
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச்சோழன்” எனப் 
பாராட்டுகிறார். 

மங்கை மன்னர் மற்றொரு பாடலில் கோச்செங்கணான் ஈசனுக்கு எடுப்பித்த எழுபது 
மாடக்கோயில்களையும் சேர்த்தே சொல்வார் -
”செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர் 
 இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
 திருக்குலத்து வளச்சோழன்... ”

கோச்செங்கணானின் காலம் 6ம் நூற்றாண்டுக்கு முன் என்பதில் அறிஞரிடையே
கருத்து வேறுபாடு கிடையாது. ஆக 10ம் நூற்றாண்டுக்கு முன் சிவாலயங்கள்
இருந்தன என்பதற்கும், சமய குரவர் சிவத்தல வழிபாட்டையே முக்கிய நோக்கமாகக்
கொண்டு தல யாத்திரை செய்வதும், ஈசனை இசைத்தமிழால் பாடி வழிபடுவதுமாக
இருந்துள்ளனர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன


தேவ்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 15, 2014, 7:39:16 AM9/15/14
to மின்தமிழ்
எத்தனை தகவல்கள் தேவ்ஜி!.. அரிய பொக்கிஷம் இந்த இழை!.. மிக்க நன்றி தங்களுக்கு!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-15 16:36 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
​ 
​      

Dev Raj

unread,
Sep 15, 2014, 7:57:07 AM9/15/14
to mint...@googlegroups.com
On Monday, 15 September 2014 04:39:16 UTC-7, tsparu2001 wrote:
எத்தனை தகவல்கள் தேவ்ஜி!.. அரிய பொக்கிஷம் இந்த இழை!.. மிக்க நன்றி தங்களுக்கு!..

பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா.
இந்த இழை தொடங்கக் காரணமாக இருந்தது எனது கவனத்துக்கு வந்த ஒரு கருத்து;

6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை - தேவார காலம் என்பது தவறு;தேவாரப் பாடல்கள் - முன் தேதியிட்ட பிற்காலத் தொகுப்பு நூல். சைவம் , ஒரு சமயமாகப் பரிணமித்ததே கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். அப்படி உருவான சமயத்திற்கு வரலாற்றுத் தேவையைப் பூர்த்திச் செய்யக் கற்பனையாக ஏற்பட்டதுதான் தேவாரம் போன்ற நூல்கள் எல்லாம். 

இதே கருத்தை மற்றொரு விதமாகவும் இணையத்தில் வாசித்துள்ளேன்.மிகவும் வியப்பைத் தோற்றுவித்தது இக்கருத்து; இதற்கு மறுப்பாகச் சில செய்திகளை இங்கு முன் வைத்தேன். மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கம் உண்டு. சோழர் வரலாற்றை நன்கறிந்த அன்பர்களும் இணைந்து கொள்ளலாம். காரணம் சோழ வளநாட்டில்தான் பாடல் பெற்ற தலங்கள் மிகுதி


தேவ்

Dev Raj

unread,
Sep 15, 2014, 8:39:02 AM9/15/14
to mint...@googlegroups.com

கோச்செங்கணான் யார் ?

 

இராசமாணிக்கனாரும்கலைக்கோவன் அவர்களும் சொல்வது -

 

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=16

 

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=37

 

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=59

 

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=73

 

செப்பேடுகளில் செங்கணான் -

கலைக்கோவன் அவர்கள் அன்பில் செப்பேடு இம்மன்னரைச் சொல்வதாகத் தெரிவிக்கிறார்.

 

டாக்டர்.ஜி.சங்கரநாராயணன் அவர்கள் பராந்தக சோழரின் வேளஞ்சேரிச் செப்பேடும்திருவாலங்காட்டுச் 

செப்பேடும்புதிதாதக் கிடைத்த திருவிந்தளூர்ச் செப்பேடும் கோச்செங்கணானைச் சொல்வதாகத் தெரிவிக்கிறார்.

 


 

தேவ்

N. Ganesan

unread,
Sep 15, 2014, 8:58:04 AM9/15/14
to mint...@googlegroups.com


On Monday, September 15, 2014 4:57:07 AM UTC-7, Dev Raj wrote:
On Monday, 15 September 2014 04:39:16 UTC-7, tsparu2001 wrote:
எத்தனை தகவல்கள் தேவ்ஜி!.. அரிய பொக்கிஷம் இந்த இழை!.. மிக்க நன்றி தங்களுக்கு!..

பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா.
இந்த இழை தொடங்கக் காரணமாக இருந்தது எனது கவனத்துக்கு வந்த ஒரு கருத்து;

6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை - தேவார காலம் என்பது தவறு;தேவாரப் பாடல்கள் - முன் தேதியிட்ட பிற்காலத் தொகுப்பு நூல். சைவம் , ஒரு சமயமாகப் பரிணமித்ததே கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். அப்படி உருவான சமயத்திற்கு வரலாற்றுத் தேவையைப் பூர்த்திச் செய்யக் கற்பனையாக ஏற்பட்டதுதான் தேவாரம் போன்ற நூல்கள் எல்லாம். 

யாராவது நூலாசிரியர் எழுதியுள்ளனரா?

நா. கணேசன்

Dev Raj

unread,
Sep 15, 2014, 1:59:50 PM9/15/14
to mint...@googlegroups.com
தேவாரம் - ஆலயங்களில் :

ஆலயங்களில் தேவாரம் பாடும் வழக்கம் எப்போது எப்படி 
ஏற்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் 
அவ்வழக்கம் மிகவும் பழமையானது என்பது மட்டும் கல்வெட்டுக்களால் 
கண்டறியப்படுகின்றது.
                                                                                       - டாக்டர் எஸ் ஜெயபாரதி  

ராஜராஜ சோழர் காலத்துக்குமுன் தேவாரம் பாடப்பட்ட தலங்கள் -
வல்லம், பழுவூர், ஆவடுதுறை , ஆண்டா நல்லூர், திருத்தவத்துறை, திருவாலந்துறை, செந்துறை. 
திருப்பதியம் விண்னப்பம் செய்வோர் பிடாரர் என அழைக்கப்பட்டனர்.

ராஜராஜன் காலத்துக்கு முன்னரே தேவார முதலிகளுக்குத் திருவிடை
மருதூரில் சிலைகள் அமைத்து வழிபாடு நடந்துள்ளது, பராந்தக சோழரின்
ஏற்பாட்டின்படி. டாக்டர் நாகசாமி அவர்கள் தந்த தகவல்.

நன்றி : திரு திவாகர்

நூல்:  தமிழ்க்கவி சரிதம்  2ம் பதிப்பு
ஆசிரியர்: ராவ் ஸாஹிப் மு. இராகவையங்கார், தலைமைப் பண்டிதர், யூனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ்

இந்நூலின் 15ம் பக்கம் ராஜராஜ சோழர் காலத்துக்கும் முன்பே திருப்பதிக விண்ணப்பம் 
நடைமுறையில் நிலவிய சில ஆலயங்களின் பெயரைத் தெரிவிக்கிறது; மாமன்னர் ராஜராஜர் 
எல்லா ஆலயங்களிலும் அதைப் பரவலாக்கினார்


தேவ்

Dev Raj

unread,
Sep 16, 2014, 1:52:55 AM9/16/14
to mint...@googlegroups.com
தமிழ்ச் சைவப் பனுவல்கள், அடியார் வரலாறுகள்
10ம் நூற்றாண்டுக் கட்டமைப்பா ?

நமக்குக் கிடைத்திருக்கும் சில தகவல்களின் அடிப்படையை
மையமாகக் கொண்டு இதை ஆராயலாம்.

சோழர் வரலாற்றில் சமண மத்தைச் சார்ந்த மன்னர்கள்
இருந்ததாகத் திரியவில்லை, விஜயாலய சோழருக்கு
முன்னும், பின்னும். பள்ளிச் சந்தம் வழங்கிச் சோழர் 
சமணத்துக்கு ஆதரவளித்ததற்கான சான்றுகள் உள.

பன்னிரு திருமுறைகளில் சைவ அடியார்கள் வெவ்வேறு பாடல் அமைதிகளில்
வெவ்வேறு கால கட்டங்களில்  பாடியவற்றுள் மொத்தம் 18,280 பாடல்கள் 
தற்போது கிடைத்திருப்பவை. இவை தவிரப் பிற்காலத்தில் கோயில் கல்வெட்டுகளிலும் 
ஒரு சில பாடல்கள் கிடைத்துள்ளதாக அறிஞர் கூறுவர்.

தேவார முதலிகள் தம் காலத்துக்கு முந்தைய அடியார்களையும்
போற்றியுள்ளனர்.

நாயன்மார்களில் முக்கியமான கண்ணப்ப நாயனார் வரலாறு
தமிழக எல்லையையும் கடந்து மிகவும் புகழ் பெற்றது. சங்கதத் துதி 
நூலான‘சிவாநந்த லஹரி’கண்ணப்ப நாயனாரைப் போற்றுகிறது.

அடியார் பாடல் தொகுப்பின் பாடல்கள் ஒரே நடையில்
அமையவில்லை. வெவ்வேறான பண் அமைதியுடன்
அவை விண்ணப்பம் செய்யப்பட்டன; அடியார்கள்
பல்வேறு இனம், பிராந்தியம் சேர்ந்தவர்கள்.

திருவிசைப்பா அருளிய சிவஞான கண்டராதித்தர், செப்பேடுகள்
போற்றும் லோஹிதாக்ஷ சோழர் ஆகியோரைச் சைவ
வரலாற்றுக் கட்டமைப்புக்கான புனைவுப் பாத்திரங்களாகக் கருத
இடமில்லை. 

காவிரியின் இரு கரைகளிலும் பல சிவத்தலங்கள் வெளியுலகோர் 
அறியாமல் இருந்தன.  கோச்செங்கட் சோழர் திருப்பணி செய்த
ஆலயங்களும் அவற்றுள் அடக்கம். அவற்றை தரிசிப்பதுடன் 
தம் சமய வாழ்க்கையைத் தொடங்குகிறார், சம்பந்தர் பெருமான்.

தேவார காலத்துக்கு முன்னரே தமிழகத்தில் சைவ மையங்கள்
இருந்துள்ளன,”கொன்றையம் சடைமுடி மன்றப் பொதியிலில் 
வெள்ளியம்பலம்” சிலம்பு சொல்லும் சிவத்தலம். இதை நோக்கியே
ஆளுடைய பிள்ளையாரின் தென்திசை யாத்திரை இருந்திருக்க
வேண்டும். சமய குரவர் தமிழக எல்லைக்கு வெளியிலிருந்த
தலங்களையும் பாடியுள்ளனர்.

தேவாரத்தில் முழுமையாகக் கிடைக்காத பதிகங்களும் உள்ளன; 
யாரும் அவற்றை இட்டுக்கட்டி முழுமை செய்யவில்லை
இதுவரை. இந்த முழுமையாகாத பதிகங்கள் தேவாரம்
பிற்காலக் கட்டமைப்பு எனும் கருத்தைத் தகர்க்கின்றன.


தேவ்

K. Loganathan

unread,
Sep 16, 2014, 3:03:22 AM9/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு தேவ் அவர்களே

 நல்ல ஆராய்ச்சி. தமிழர்களின் சமயங்கள் -சைவம் வைணவம் சாக்தம் போன்ற்வை மிக்த் தொன்மையானவை என்பதொடு அவை யாரும் தமிழர்கள் சிந்தையில் புகுதத வில்லை, வேதங்களும் தொல் தமிழர்களின் படைப்புக்களே யாகும்  சிவனும் திருமாலும் கொற்றவையும் திருமுருகனும் சுமேருத் தமிழ் இலக்கியத்தில் தெளிவாக இருக்கின்றனர்.

சமீபத்தில் நான் எழுதிய "சுமேரிய நிடபையும், வேத சரஸ்வதியும் தமிழர்களின் கலைவாணியும்"   எனும் கட்டுரை இந்தப் பழமைக்கும் தொடர்பிற்கும் நல்லவோர் சான்றாக அமையும்.

ஆயினூம் நான் இங்கு சொல்ல வந்தது இன்னொரு விசயம். நான் இந்த நூற்களைப் படுத்து வரும் போது சில சொற்றொடர்கள் கண்களை உறுத்துகின்றன. இவையும் நூற்களின் கால நிரணயம் செய்ய உதவலாம்,

காட்டாக நான் இப்பொழுது எழுதி வரும் "பெருந்திரட்டும் பூரண சைவமும்" என்ற தொடரிம் மணிமேகலை சமயக் கணக்கர் திறன் கேட்ட காதை முடிவில் " மெய்யுணர்வின்றி மெய்ப்பொருள் உணர்வு அரிய" என்றோர் தொடர் வருகின்றது.

உடன் இது எனக்கு திருக்குறளை நினைவூட்டியது இது மணிமேகலைக்கு முறபட்ட காலத்தில் எழுந்த நூல் திருக்குறள் என்று எனக்கு உணர்த்தியது.

இப்படி பல சொற்களைக்  கண்டிருக்கின்றேன்


மேலே குறிப்பிட்டது மிகச் சாதாரணமான் ஒன்றாக் இருக்கலாம். ஆனால் இன்னும் தீவிரமாக இப்படிப்பட்ட கலைச்சொல் ஆய்வுகள மேற்கொண்டால்;  relative chronology   என்ற முறையைல் எவ்வாறு நூற்கள் தொடர்பு கொண்டிருக்கின்றன என்று ஓரளவு கணிக்க முடியும் என்றே நினைக்கின்றேன்

துல்லியமாக் அல்ல, ஓரளவு.

உலகன் .

--

Dev Raj

unread,
Sep 16, 2014, 4:30:09 AM9/16/14
to mint...@googlegroups.com
On Tuesday, 16 September 2014 00:03:22 UTC-7, K.Loganathan wrote:
  நல்ல ஆராய்ச்சி. 

நன்றி ஐயா


தேவ் 

Dev Raj

unread,
Sep 16, 2014, 4:49:35 AM9/16/14
to mint...@googlegroups.com
சமய குரவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்
வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில். 
இவர்தம் பாடல்கள் 7ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 
இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை நாயன்மார் பற்றிய குறிப்புகளைத் தருகிறது.
இதனால் நாயன்மார்களின் வரலாறு 10ம் நூற்றாண்டில் கட்டமைக்கப் பட்டது
எனும் கருத்து ஆதாரமற்றது என்றாகிறது. 

தேவார மூவர் காலம் கடந்தபின் 9ம் நூற்றாண்டிலிருந்து ஆலயங்களில்
தேவாரம் ஓதும் மரபு உருப்பெறத் தொடங்கியிருக்க வேண்டும் -

திருப்பதியம் (தேவாரம்) விண்ணப்பம் செய்தல்

மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கி.பி. 825ல் திருப்பதியம் விண்ணப்பம் செய்வோர்க்கு 
நிவந்தங்கள் வழங்கப் பெற்றதைக் கல்வெட்டால் அறிகிறோம். 

நந்திவர்மனைச், `சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக் கலம்பகம் நவிலும். 
சிவனது அடையாளமாகிய `திருநீறு நெற்றியில் கொண்ட நந்திவர்மன்' என்று வேலூர்ப் 
பாளையம் செப்பேடு செப்பும்.

கி.பி. 943இல் திருத்தவத்துறையாகிய இலால்குடியில் உள்ள மகாதேவர் திருமுன் நாள்தோறும் 
மூன்று சந்திகளிலும் இருவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்தனர். அதற்காகச் சிவகோசரி பிடாரன் 
தேசவிடங்கன் என்பார் நிலத்தானம் செய்தார் என்று முதற்பராந்தகனின் 37-ஆம் 
ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்றும் காட்டுகின்றது. 

இந்நிவந்தம் போதாமையால், 16 ஆண்டுகள் சென்ற கி.பி. 959இல் மேலும் சில நிலங்களை அவனே 
அறக்கொடையாக நல்கினான். 

திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்வதற்காகவும், பாடியும் 
நடித்தும் தொண்டு செய்து வந்த 22 தளிச் சேரிப் பெண்டிர்க்கும் ஆடலரசன் ஒருவனுக்கும், 
அகமார்க்கத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யவும் 16 தேவரடியார்களுக்கும் 
நில அறக் கொடையளித்தனர். தேவாரம் பாடும்போது அபிநயத்தோடு பாடினர் என்பது தெரிகிறது. 

திருவரம்பூர் ஆதித்தீசுவரர் சந்நிதியில் நான்கு வேளையும் திருப்பதியம் விண்ணப்பித்தனர். 

திருவாடுதுறை, அந்தநல்லூர் கோயில்களிலும் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர்.



திருப்பதியம் - தேவாரம் ஆய்வுகள் :


தேவ்

Dev Raj

unread,
Sep 16, 2014, 1:40:13 PM9/16/14
to mint...@googlegroups.com
கண்ணப்ப நாயனார் :

செருப்புக்காலால் மிதித்தது பரமனது மேனி சிலிர்க்கச் செய்தது;
மேனிமீது உமிழ்ந்த நீர் பரமனை இன்முழுக்காட்டியதாயிற்று;
சுவைத்துக் கொடுத்த ஊன் துண்டு பசுபதிக்கு நல்விருந்தாயிற்று;
என்னே அந்த வன வேடன் செய்த பக்தி !

மார்கா₃வர்திதபாது₃கா பஶுபதேரங்க₃ஸ்ய கூர்ச்சாயதே
க₃ண்டூ₃ஷாம்பு₃நிஷேசநம் புரரிபோ: தி₃வ்யாபி₄ஷேகாயதே | 
கிஞ்சித்ப₄க்ஷிதமாம்ஸஶேஷகப₃லம் நவ்யோபஹாராயதே
ப₄க்தி​: கிம் ந கரோத்யஹோ வநசரோ ப₄க்தாவதம்ஸாயதே ||
                                                                                              - சிவாநந்த லஹரி 

காளஹஸ்தியில் மலை மீது மணிகண்டேச்வரர் கோயில் நுழைவாயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. வடமொழியில் அமைந்த இந்தக் கல்வெட்டு க்ரந்த எழுத்துக்களில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு கண்ணப்ப நாயனாரின் சரிதத்தைச் சுருக்கமாகவும் அற்புதமாகவும் விளக்குவது.
                                                                                                                                                                                                                                 - Dr.G.சங்கர நாராயணன்   

Dev Raj

unread,
Sep 16, 2014, 2:19:18 PM9/16/14
to mint...@googlegroups.com
கண்ணப்ப நாயனார் பற்றி எழுதக் காரணம் காளத்தி
ஆலயக் கற்றளி முதலில் பல்லவர் காலத்தியது;
10ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. சோழர்கள்
பிற்காலத்தில் விரிவு படுத்தினர்


தேவ்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 16, 2014, 7:39:37 PM9/16/14
to மின்தமிழ்
தொடர்ந்து படித்து வருகிறேன் ஐயா!.. மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்.. மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-16 23:49 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
​  

Dev Raj

unread,
Sep 18, 2014, 5:27:34 AM9/18/14
to mint...@googlegroups.com
இந்தியப் பண்பாடு / சமயங்கள் / மொழிகள் இவற்றில்
ஆழ்ந்த கவனம் செலுத்துமுன் பொதுவாக
ஒரு புரிதல் இருப்பது அவசியம்.

Common cultural complex / common cultural zone எனும் புலத்தில்
அவற்றை உற்று நோக்க வேண்டும். இது காரணமாக
அவற்றிடையே ஊடாடல்கள் மிகுதி. இவை தம்முள் 
இணங்குவதும் உண்டு; பிணங்குவதும் உண்டு.

காசிவரை நடை பயணம் செய்த டாக்டர் காளைராஜன் அவர்கள்
வழி நெடுகிலும் தாம் கண்ட ஒருபடிப்பட்ட தன்மையைக்
கூறுகிறார். விடாப்பிடியாகப் பிரிவினை கோரிவரும்
மாநிலங்களும் உள்ளன.

சமண சிராவக நெறியினர் கடைப்பிடிக்கும் சமய 
நெறிகள் பிறரிலும் வேறானவை;
ஆனால் அவர்கள் உண்பதிலும், உடுப்பதிலும்
பிறரைக் காட்டிலும் மாறுபாடில்லை. ஆடவர் 
தூய்மையாகக் கச்சம் உடுத்தித் மேல் சட்டை 
அணியாமல் ஆலயம் செல்வர். 
பிரணவமும், தோத்திரங்களும், பாடல்களும் 
அவர்களுக்கும் உண்டு.

சிவ கவசம், ஷண்முக கவசம் போல்
புத்தரை மையப்படுத்தும் கவசங்கள்
பவுத்தருக்கும் உண்டு; தாரணி என்பர்.


முற்காலத்தில் இந்துக்கள் ப்ராயோபவேசம்
எனும் பெயரில் வடக்கிருப்பர்; சமணத் துறவியர்
சல்லேகனை எனும் பெயரில் உண்ணா நோன்பிருந்து
உயிர் துறப்பர். இவ்வழக்கம் சமணரிடையே இன்றும்
நீடிக்கிறது.

சாதுர்மாஸ்யம் எனும் மாரிக்கால நோன்பு
இந்தியத் துறவியர்க்குப் பொதுவானது.
இருவினை இந்தியச் சமயங்களுக்குப் பொதுவானது.

புண்ய பாபம் விதூய.......[மறை]
அவற்றிலும் ஸஞ்சிதம், ஆகாமி, ப்ராரப்தம்
எனும் பகுப்புகள்.அதையே வேறுவகையாக பிற 
சமய மரபுகள் கையாளும். கர்மத்தின் துகள்கள் அண்ட 
வெளியில் பரவியுள்ளன, அவை ஆசை
கொண்ட மாந்தரைப் பாதிக்கும் என்பது
சமண நம்பிக்கை. கர்மத்தின் நுட்பமான
பதிவுகள் [ஸம்ஸ்காரம்] உட்புலன்களில்
தோய்ந்து பிறவிக்குக் காரணமாகும்
என்பது மறை நூலார் நம்பிக்கை.

இருவினையொப்பு - முக்தி நிலையில்
ஒருவருக்கு வாய்ப்பது என சித்தாந்த சைவம்
பகரும்.

கடவுட் கொள்கையும் இந்தியச் சமய மரபுகளில்
வேறு வேறு; படைப்பவன் இல்லை;
உலகம் தானே தோன்றுவது,தன்படியே இயங்குவது,
முக்தி பெற்றவர் எல்லாருமே கடவுளர்கள் என்கிறது சமணம்.
படைப்பவன் உண்டு என முத்தொழில்
புரியும் பல கடவுளரை ஒப்புக்கொள்வன
பிற சமயங்கள், பவுத்தரின் கடவுட் கொள்கையைத்
தனியாகப் பேச வேண்டும்.

உருவ வழிபாட்டைச் சமணத்தின் உட்பிரிவுகள்
அனைத்தும் ஒப்புக்கொள்ளவில்லை;
தியான - யோக நெறிகளை மேற்கொள்ளும் 
இந்துக்களும் உருவ வழிபாட்டுக்கு முக்கியத்துவம்
கொடுப்பதில்லை.

அண்டவியலிலும் இந்தியச் சமயங்கள்
முரண்படுகின்றன.

சமணத்துக்கென நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி;
காரணம் அரச - வணிகரின் நீடித்த ஆதரவு. மௌரியர் தொடங்கி 
குப்த,சளுக்க, ஹொய்சல,கதம்ப, ராஷ்ட்ரகூட, மஹா
மேகவாஹந, கங்க,பாண்டிய, சோழ,களப்பிர, விஜயநகர 
மன்னர்கள் சமணத்தை ஆதரித்துள்ளனர். 
வட மதுரை, உஜ்ஜயினி, கந்யாகுப்ஜம் - 6ம் நூற்றாண்டு 
வரை சமண மையங்களாக விளங்கியவை.

மொழி என வரும்போது  காழ்ப்புணர்ச்சி
இச்சமயத்தாருள் இல்லை என்றே தெரிகிறது.
சங்கத இலக்கணம் வழங்கியவரில் நிகந்தரும்
இருந்தனர். வைதிகர் பால் மாறாமல் போற்றும்
சங்கத அகராதி அமர கோசம், நிகந்தரின் கொடை.
காதா ஸப்தசதி, கர்ப்பூர மஞ்ஜரி, ராவண வஹோ
போன்ற பாகத நூல்கள் சமணர் செய்தவையல்ல.

ஜைநேந்த்ர வ்யாகரணம், தேவநந்தி செய்த
பழமையான சங்கத இலக்கணம்; சாகடாயநரும்
செய்துள்ளார். சாகடாயநர் இருவர் எனவும்
கருத்து நிலவுகிறது.

இன்றைய கர்நாடகத்தில் தர்ம ஸ்தலா
ஒரு முக்கியமான தலம். ஆலயத்தினுள்
இலிங்கத் திருமேனி மஞ்சுநாதர் எனும்
பெயரில்; பூசகர் ஒரு மாத்துவ வைணவர்;
வருவோர்க்கெல்லாம் நல்விருந்தளித்து
நிர்வகித்து வருவது சமணப் பரம்பரையினர்


இதுதான் இந்தியா !

ஸ்ரீ மஞ்ஜுநாத ! நிதராம் குரு மங்கலம் ந: !!


தேவ்

Oru Arizonan

unread,
Sep 18, 2014, 11:18:40 PM9/18/14
to mint...@googlegroups.com
நல்ல தகவல்.  இந்திய சமயங்களின் நல்லிணக்கத்தை பெருக்குவதாக அமைத்துள்ளது இக்கட்டுரை.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Sep 19, 2014, 12:59:50 AM9/19/14
to mint...@googlegroups.com
On Thursday, 18 September 2014 20:18:40 UTC-7, oruarizonan wrote:
நல்ல தகவல்.  இந்திய சமயங்களின் நல்லிணக்கத்தை பெருக்குவதாக அமைத்துள்ளது இக்கட்டுரை.

நன்றி, ஐயா.
நல்லிணக்கம் பல்லாண்டுகாலமாக நிலவி வருவதுதான்.
சார்வாக, லோகாயதக் கொள்கைகளும் பூர்வபக்ஷமாக
ஏற்கப்பட்டு தகுந்த சாமாதானம் தரப்பெற்றன.
சார்வாக - லோகாயதக் கருத்தியல்களை மூடி
மறைத்து இருட்டடிப்புச் செய்யவில்லை.
பவுத்த - சமண சமயங்களின் செல்வாக்கு
மங்கிய பிறகும் பௌத்தாகமம், ஜைநாகமம்
எனும் மரியாதையுடன்தான் அச்சமயங்களை
அணுகுகிறோம். 


தேவ்

Dev Raj

unread,
Sep 19, 2014, 12:30:11 PM9/19/14
to mint...@googlegroups.com
                                    தென்முகக் கடவுள் 




”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”
எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.
இதனடிப்படையில் சிவ ஆகமம் தென்முகக் கடவுளைக் கூறுகிறது;
சைவ ஆகம நூல்களின் அடிப்படையில் அமைந்தவை 
தமிழகத்தின் சிவாலயங்கள். அவற்றில் பிரிக்க முடியாத 
அம்சம் தென்முகக் கடவுள்.

இந்த சிவ மூர்த்த வர்ணனையை வைணவ நூலான
அருளிச் செயலிலும் காண்கிறோம் -

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்.....

நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த
ஆலமமர் கண்டத் தரன்.


உஜ்ஜயிநி மஹாகாலரை தக்ஷிணாமூர்த்தியாகக் கருதுவர் -


http://ujjain.nic.in/mahakaleshwar/mahakaleshwar.htm

The idol of Mahakaleshwar is known to be Dakshinamurti, 
which means that it is facing the south. 
This is a unique feature, upheld by the tantric 
shivnetra tradition to be found only in 
Mahakaleshwar among the 12 Jyotirlingas.

http://creative.sulekha.com/sri-dakshinamurthy-iconography-and-some-other-questions-part-two_451398_blog 

இறையனாரின் தென்திசை நோக்கிய முகம்
அகோரம் - கோரமற்றது

The South face of Shiva is Aghora .
Aghora (that which is not dreadful) is the benevolent, 
benign face of Shiva; and it is directly related to 
Vidya (the knowledge that liberates) and 
then to fire (illumination) according to Vatulagama (1.67-69).

’யாம்யம் த்வாரம் து மோக்ஷதம்’ எனும் வசனமும் உள்ளது.
யாம்யம்  - யமனுக்குரிய தென்திசையை நோக்கியவராக
ஆடவல்லானும், அரங்கநாதனும் திகழ்கின்றனர்.

தக்ஷிணா மூர்த்தியின் மீது செய்யப்பட்ட துதிநூலுக்கு வடநாட்டைச் 
சேர்ந்த சுரேசுவரர் செய்தது மாநஸோல்லாஸ வார்த்திகம் 
பாரதம் நெடுகிலும் வேதாந்தம் பயிலும் மாணவர்கள் 
அனைவரும் நன்கு அறிந்தது.

ஆகம அடிப்படையில் நம் ஆலயங்கள் அமைந்துள்ளதால்
தென்முகக் கடவுளை அதிகமாக இங்கு காண முடிகிறது;
வடபுலத்தில் காண முடிவதில்லை. 

அவலோகிதருக்கும் தெக்கிணா மூர்த்திக்கும் தொடர்பு -
அவலோகிதரைச் சொல்லும் நீலகண்ட தாரணியின் 
பெயர் அவலோகிதரின் சைவத் தொடர்பைக் கோடி
காட்டுகிறது.

பவுத்த உட்பிரிவுகளுக்கிடையே அவலோகிதர் குறித்த
பலவிதமான கோட்பாடுகள்; புத்தர் அவலோகிதரைச்
சொன்னதாகத் தகவல் இல்லை. பின்னால் புகுந்த
வழிபாடு

தேவ்


N. Ganesan

unread,
Sep 20, 2014, 1:13:31 AM9/20/14
to mint...@googlegroups.com


On Friday, September 19, 2014 9:30:11 AM UTC-7, Dev Raj wrote:
                                    தென்முகக் கடவுள் 




”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”
எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.

இந்த உபனிஷத் பகுதி தென்னவன் வழிபாட்டையா குறிக்கிறது??

மதுரைக் காஞ்சி, சிலம்பு, பிற்கால நூல்கள் - இவை
அவலோகிதர் வடிவத்தில் இருந்து தமிழர்கள்
வடித்த தட்சிணாமூர்த்தி வடிவ வரலாற்றுக்கு ஆதாரம்.

வட நாட்டு நூல்களிலோ, கோயில்களிலோ
தட்சிணாமூர்த்தி இல்லை. அங்கே தென்னன் இடத்தில்
லகுளீசர் இருப்பார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 20, 2014, 1:26:11 AM9/20/14
to mint...@googlegroups.com


On Friday, September 19, 2014 10:13:31 PM UTC-7, N. Ganesan wrote:


On Friday, September 19, 2014 9:30:11 AM UTC-7, Dev Raj wrote:
                                    தென்முகக் கடவுள் 




”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”
எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.

Dev Raj

unread,
Sep 20, 2014, 8:55:00 AM9/20/14
to mint...@googlegroups.com
On Friday, 19 September 2014 22:26:11 UTC-7, N. Ganesan wrote:
”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”
எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.

Here is the translation, Note that there is no Thenmukak KaTavuL in this line:


தக்ஷிண

दक्षिण [ dakṣiṇa ] able , clever , dexterous ,  south , southern (as being on the right side of a person looking eastward) , situated to the south , turned or directed southward,coming from south ,  straightforward , candid , sincere , pleasing 

ப்ரகரணத்துக்குப் பொருத்தமான சொற்கள்  -
turned or directed southward, straightforward , candid , sincere , pleasing 

ஆகமங்கள் தன்னியல்வானவை அல்ல; மறைச் சார்புள்ளவை.
தெற்கு என்பதன் முக்கியத்துவத்தை ஒட்டி அமைந்த ஆலய 
அமைப்புகளையும் நோக்க வேண்டும்.

தெற்கும் வடக்கும் மாறுபடும் இடங்கள் பல;
அம்பிகை கருவறைக்குள்ளாகவே இலிங்கத்
திருமேனிக்குப்பின் காட்சி தருவாள் வடபுலத்தில்.

இலிங்கத்துக்கு மேல் கோபுரம் அமையும் வடபுலத்தில்;
தஞ்சைப் பெரியகோயில் அவ்வகை சேர்ந்தது. தென்னகத்தில்
நுழைவாயிலில் ராஜகோபுரம்.

வடபுலத்தில் ஆகம வழிபாடு இல்லை. 

அவலோகிதருக்கு எதற்காக நீலகண்ட தாரணி ?
அதில் ஏன் நீலகண்ட எனும் பெயர் ?

Om sarva-bhaya-śodhanāya tasya namaskrtvā imu Ārya-valokite-śvarā tava namo Nīlakantha
Namo ratna-trayāya Nama āryāvalokiteśvarāya bodhisattvāya svāhā

ஊடாடல்களுக்குக் கணக்கே இல்லை; வஜ்ரயாநம் மிகவும் பிற்பட்டது
என்றே அனைவரும் சொல்வர்


தேவ் 
Reply all
Reply to author
Forward
0 new messages