தினம் ஒரு பாடல் - கண்ணதாசன் எனும் தேன்

354 views
Skip to first unread message

AKR

unread,
Sep 5, 2009, 6:26:55 AM9/5/09
to minT...@googlegroups.com
கவிஞர் கண்ணதாசன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளருமாவார்.
 
 
கண்ணதாசன் வாழ்க்கைக் குறிப்பு
 
பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
 
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ் கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 - முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம், புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம், தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷ்யப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது - மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா)
 
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களiன் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
 
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இரு மனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
(தொகுப்பு - இராம. கண்ணப்பன் )
 
நாவல்கள்
 
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
அத்வைத ரகசியம்
பிருந்தாவனம்
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
எனது சுயசரிதம்
வனவாசம்
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
தாயகங்கள்
கட்டுரைகள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
போய் வருகிறேன்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
கவிதை நூல்கள்
கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில்
பாடிக்கொடுத்த மங்களங்கள்
கவிதாஞ்சலி
தாய்ப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
அவளுக்கு ஒரு பாடல்
சுருதி சேராத ராகங்கள்
முற்றுப்பெறாத காவியங்கள்
பஜகோவிந்தம்
கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
 
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
 
 
அபிராமி அந்தாதியில் வரும் பாடல்களான,
 
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மரிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
 
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
 
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மரித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
 
என்ற பாடல்களின் தாக்கமும் அவருடைய கவியுள்ளத்தில் இருந்திருக்கிறது என்பது அவர் இயற்றிய திரைப்பாடல் ஒன்றில் தெரிய வருகிறது. 
 
 
திரைப் படம்: வீர அபிமன்யு
பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு: 1965
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
 
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
 
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
 
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

N. Ganesan

unread,
Sep 5, 2009, 9:29:47 AM9/5/09
to மின்தமிழ், Santhavasantham

பழைய வடமொழியில், தமிழில் பந்தாடல் ஒரு பெண்கள் விளையாட்டு.
ஆண்கள் ஆடமாட்டார்கள். கொட்டையூர் என்று ஒரு சிவஸ்தலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. கொட்டை கொட்டையாக
சிவலிங்கத் திருமேனி. பந்துகளால் செய்யப்பட்டது போல.
அம்பாள் பெயர்: பந்தாடு நாயகி - கந்துககிரீடாம்பாள்!

http://www.youtube.com/watch?v=eYNXu_aPIAc
சீன juggling போல. இது தமிழில் 21 பந்தை வைத்து
ஆடுவதாக சீவக சிந்தாமணியில் விளக்கியுள்ளார்
திருத்தக்கதேவர் (சமணர். கொங்குச் சோழ மரபினர்.
ஊர்: தாராபுரம் அருகே வீராச்சிமங்கலம். அவர் அங்கே
சிந்தாமாணி பாடியதால் பிற்கால இலக்கியங்கள்
சிந்தாமணியூர் என்கிறது. சிந்தாமணியும், சூளாமணியும்
கொங்குநாட்டு நூல்கள் என்று ஆய்ந்து தெரிவித்தார் உவேசா.
வளையாபதி கொங்குநாட்டில் கிடைக்கும் என்று
சாகும்வரை உறுதியுடன் இருந்தவர் உவேசா.)

ஆகிரா (பொள்ள்ளாச்சி/காஞ்சி :) ) அவர்களுக்காக
“பறக்கும் பந்து பறக்கும்” - கண்ணதாசன் பாடல்.
(ஆண்-பெண் பந்தாடல் 20-ஆம் நூற்றாண்டுதான்.)

நா. கணேசன்


On Sep 2, 10:00 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

> திரு. கணேசனின் இடுகையைக் கண்டதும் தோன்றிய பாடல். இது சிலப்பதிகாரக்
> கந்துகவரிப் பாடலை* ஒட்டிய ஓசை கொண்டது:

> இங்கு மங்கு மாக ஏகும் இறகுப் பந்தை மாதரார்
> தங்கை மட்டை கொண்டு தாங்கித் தட்டி ஆடும் போதிலே
> தொங்கு கூந்தல் துள்ளி யாடத் தோடு மாடக் காண்கையில்
> பொங்கி ஆடும் காளை நெஞ்சில் பூத்த காதல் பூவுமே!

http://www.youtube.com/watch?v=QaV6gsyGfYI
http://www.raaga.com/play/?id=28178

பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
திரைப் படம்: பணக்காரக் குடும்பம் (1964)
பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்தர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
நடிப்பு: எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி

டி.எம்.எஸ்: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் -அது
சிரித்தோடி வரும் மாது

சுசீலா: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
டி.எம்.எஸ்: சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது

சுசீலா: ஓடும் உனை நாடும் - எனை
உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும் - உந்தன்
பதில் கொண்டு வந்து போடும்

டி.எம்.எஸ்: பறக்கும்
இருவரும்: பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது

டி.எம்.எஸ்: இது தான் இந்த நிலவோ என்று
முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை என்று
போராடும் கண்ணில் வண்டு

சுசீலா: வருவார் இன்று வருவார் என்று
மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும் என்று
வழி பார்க்கும் காதல் செண்டு

டி.எம்.எஸ்: பறக்கும்
இருவரும்: பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது

சுசீலா: முதல் நாள் இரவில் தனியே என்னை
அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி என்று
இழுத்தோடி வரும் கண்கள்

டி.எம்.எஸ்: அருகில் மிக அருகில் கண்டு
அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும் இன்று
அலை பாய்ந்து வரும் உள்ளம்

இருவரும்: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது

~ கவிஞர் கண்ணதாசன்
> அனந்த்
> 2-9-2009
> * கந்துக வரியின் முதல் பாடல்
> பொன்னி லங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட
> மின்னி லங்கு மேக லைக ளார்ப்ப ஆர்ப்ப எங்கணும்
> தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த டித்துமே
> தேவார மார்பன் வாழ்க வென்று பந்த டித்துமே

> இதுபோன்ற சந்தத்தில் நானும் பசுபதியும் முன்பு போரம்ஹப் தளத்தில் கந்துகவரி
> பற்றிய இடுகைகளில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

akr

unread,
Sep 6, 2009, 12:21:57 AM9/6/09
to மின்தமிழ்
ஜப்பானியர்களில் லாவகம் வியக்க வைக்கிறது. ஜப்பானியர்கள் கடின
உழைப்பாளிகள். அதனாலேயே அவர்கள் பல துறைகளிலும் உலகில் முன்னணியில்
உள்ளனர்.

என்.ஜி.ஆர். பந்து விளையாடுவதும் குஸ்தி போடுவது போலவே உள்ளது. நான்
ஆணையிட்டால்!

> http://www.youtube.com/watch?v=QaV6gsyGfYIhttp://www.raaga.com/play/?id=28178

Kamala Devi

unread,
Sep 6, 2009, 1:21:00 AM9/6/09
to mint...@googlegroups.com
நீண்ட இடைவெளிக்குப்பிறகு அருமையான ஒரு பாடல்,

ஞானும் கணேசன் சார் போல் நேயர் விருப்பம் கேட்கப்போகிறேன்.
கமலம்

-


On Sep 5, 6:29 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> பழைய வடமொழியில், தமிழில் பந்தாடல் ஒரு பெண்கள் விளையாட்டு.
> ஆண்கள் ஆடமாட்டார்கள். கொட்டையூர் என்று ஒரு சிவஸ்தலம்
> தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.


______________________________________________________________________
Search, browse and book your hotels and flights through Yahoo! Travel.
http://sg.travel.yahoo.com

Reply all
Reply to author
Forward
0 new messages