குழுவில் "பாபாசாகேப்
#அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5" என்ற தலைப்பில் குழுவின் 206 ஆவது
#புத்தக #திறனாய்வு நடைபெற்றது. நூல் திறனாய்வு செய்தவர் முனைவர்
#சுபாஷிணி , மலேசிய தமிழறிஞர், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
தன்னுடைய நூல் விமர்சனத்தில் அவர் பேசும்போது: "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய தலைவர் என்ற பார்வைதான் அதிகமாக உள்ளது. ஆனால், அவர் ஒரு தலைசிறந்த பொருளாதார மேதை. "இந்திய பொருளாதாரத்தின் தந்தை" என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார். நான்
அம்பேத்கர் எழுத்துக்கள் பற்றிய ஒரு ஆய்வில் நான் ஈடுபட்டேன். அவரது நூல்கள் 53 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நூலாக சூத்திரர்கள், வட்ட மேசை மாநாடு போன்ற 53 தலைப்புகளில் உள்ள நூல்களில் 12 பற்றி மட்டும் நான் ப்ரூஃப் ரீடிங் செய்தேன்.
வட்ட மேசை மாநாடு நடக்கும் முன்பு
#சைமன் #கமிஷன் வந்தது. இந்தியாவை எப்படி உருவாக்குவது என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.
#ராயல் #கமிஷன் இந்தியா வந்தது. இந்தியாவில்
#பண #மேலாண்மை எப்படி உருவாக்கலாம் என்று அந்த கமிஷனில் பொருளாதார நிபுணர் என்ற வகையில் டாக்டர் அம்பேத்கர் ஆலோசனை அளித்தார். அப்போது
#ரிசர்வ் #பேங்க் என்ற அமைப்பை உருவாக்கலாம் என்ற திட்டம் ஒன்றை அவர் அளித்தார். அவரது திட்டப்படி உருவானதுதான்
#ReserveBankofIndia . இது பலருக்கு தெரியாத உண்மை.
வட்ட மேசை மாநாடு என்ற நூல் மிகப்பெரியது. 456 பக்கங்கள். இந்த நேரத்தில் அவருடைய நூல்கள் வெளிவரக்கூடாது என்று அந்த காலத்தில் அவற்றை பூட்டி வைத்திருந்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நம்ப முடியாத உண்மையாக இருக்கின்றது. ராம் விலாஸ்
#பஸ்வான் முயற்சியால் அன்றைய
#பிரதமர் #வி_பி_சிங் ஆதரவில் அவருடைய நூல்கள் ஒவ்வொன்றாக வெளி வந்தன. முதலில், ஆங்கிலம் பிறகு மற்ற மொழிகளில் வெளி வந்தன.
அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொத்தம் 37 தொகுதிகள் வெளி வந்தன. "
#அம்பேத்கரியம்" என்ற அமைப்பின் மூலம் 50 தொகுதிகள் கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த அத்தனை தொகுதிகளையும் ஒருவர் படிக்க முடியாவிட்டாலும்
#எழிலினி #பதிப்பகம் வெளியிட்டு உள்ள
ரூ.100/- மட்டும் விலை உள்ள அம்பேத்கர் என்ற ஒரு நூலை மட்டும் படித்தால் போதும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
விமர்சகர் தன் பேச்சில் மூன்று வட்ட மேசை மாநாடுகள் பற்றியும் அவற்றில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்றும் விரிவாக கூறினார்.
மேலும், இந்த 5ஆவது தொகுதி நூலில் அம்பேத்கர் பதிவு செய்து இருக்கிறார், "இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 4.5 கோடி மக்கள் இருக்கிறோம்!" ஆனால், இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மட்டும்தான் இருக்கின்றனர் என்ற கருத்துதான் அப்போது நிலவி வந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் அல்ல பொருளாதார முன்னேற்றம் பற்றியும் அந்த வட்டமேசை மாநாடுகளில் அம்பேத்கர் பேசினார். மேலும், முக்கியமாக
#வாக்குரிமை யானது பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அம்பேத்கர் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.
நான் மும்பை சென்று அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தை பார்த்தேன்.
அங்கே பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருபவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த தமிழர் என்பதை அறிந்து வியப்பு அடைந்தேன்.
தமிழகத்திலும் ஏன் ஆந்திராவில் கூட அம்பேத்கர் சிலைக்கு சில இடங்களில் எதிர்ப்பு. சிலையின் பகுதிகளை உடைப்பது, சிகப்பு மை கொட்டுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்.
ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரை, பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசியவரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக மட்டும் அடையாளம் காணப்படுவது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சாதிய உணர்வு இந்திய மண்ணில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் சாதி என்ற சொல்லுக்கு பொருள் எதுவும் இல்லை. இதை இந்தியர்கள் உணர வேண்டும்.
அம்பேத்கர் பற்றிய பாடம் பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் பற்றிய ஆராய்ச்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஆராய்ச்சிகளை செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினராக, தலித் மக்களாக, மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லா பிரிவினர்களும் இந்த ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்."
அவரது பேச்சின் இறுதியில் பரபரப்பான, விறுவிறுப்பான விவாதம் நடைபெற்றது. பல பெரிய ஆளுமைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்து பேசினார்கள். 40க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இந்த இணைய வழி கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் ஒரு மாணவன் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.
விவாத நேரத்தில் ஒளிவண்ணன் அவர்கள் கேட்ட கேள்வி பொருள் பொதிந்ததாக இருந்தது.
Olivannan Gopalakrishnan கேள்வி: " இப்போது சிலர் டாக்டர் அம்பேத்கர் செய்த சேவைகளையும்,
#பெரியார் செய்த சேவைகளையும் ஒப்பிட்டு இவர் உயர்ந்தவரா, அவர் உயர்ந்தவரா என்று விவாதம் செய்கிறார்களே! அதைப்பற்றி உங்கள் கருத்து?"
இந்த கேள்விக்கு மிகவும் சிறந்த, அற்புதமான பதிலை கூறினார் பேச்சாளர் சுபாஷினி: "ஆராய்ச்சி நோக்கில் பார்ப்பவர்கள் யாரையும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று சொல்லவே மாட்டார்கள். ஒரு சிலர் சில தலைவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டு அந்த இமேஜை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். இது ஆராய்ச்சிப் பார்வையே அல்ல. இதை நான் ஏற்கவில்லை".
M.A.,வரலாற்று ஆய்வுகள் படிப்பை சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி முறையில் படித்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் இந்த நிகழ்ச்சி ஒரு பயனுள்ள, பல புதிய, இதுவரை எனக்கு தெரியாத, அறியாத தகவல்களையும், பார்வைகளையும் அளித்தது. பங்கேற்று பங்களிப்பு செய்த அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்ச்சியை யூடியூப்பில் பார்க்க விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்பில் பார்க்கவும்.