random n. தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற. |
தெரிவித்திருந்தார் ஆழ்வார்கள் பன்னிருவரா அல்லது பதின்மரா என்ற கேள்விக்கும் தெளிவான விடை கிட்டல்லை சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய ஒரு சரித்திர ஆசிரியர் ஆழ்வார்கள் பன்னிரண்டுபேர் இருந்த பட்டியலில் இருந்து ஆண்டாளையும் மதுரகவியையும் நீக்கியதாகக் குறிப்பிடுகிறார்
ஆழ்வார்கள் விஷ்ணுவை வணங்கும் பக்தர்கள் இறைவனை அடைய வழிகாட்டும் ஆற்றுப்படுத்தும் விஷ்ணுவுக்கும் பக்தர்களுக்கும் இடையே நின்று செயல்படுபவர்கள் என்று குறிப்பிடுகிறார்
ஆண்டாள் நீக்கப்பட்டாரா அல்லது சேர்க்கப்பட்டாரா
ஊர்சுத்தி

மதுரை மாவட்டத்தில் ‘குமரலிங்கம்’ எங்கே உள்ளது ?

கண்ணன் ஆழ்வார்கள் ஆச்சாரியார் இழையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஒரு சங்கிலித் திடர்போல் குருபரம்பரை ர்ன்ற சீரொழுக்கை ஒட்டி அமைந்தது ஆனால் சைவசமயக் குரவர்களின் படைப்பு அதுபோன்று அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததைத் தொகுத்தனர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்
ஏதோ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை என்றால் அதற்கு விசேஷமான authenticity வந்துவிடுமாக்கும்? :-))
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மதுரை மாவட்டத்தில் ‘குமரலிங்கம்’ எங்கே உள்ளது ?
--

கண்ணன் ஆழ்வார்கள் ஆச்சாரியார் இழையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஒரு சங்கிலித் திடர்போல் குருபரம்பரை ர்ன்ற சீரொழுக்கை ஒட்டி அமைந்தது ஆனால் சைவசமயக் குரவர்களின் படைப்பு அதுபோன்று அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததைத் தொகுத்தனர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்
பழந்தமிழனுக்குப் பக்தி என்ற ஒன்று இருந்தாதா என்பதே அடிப்படைக் கேள்வி அவனுக்குத் தெரிந்ததெல்லாம் வீரவணக்கம் ஒன்றுதான்காதலில் களவென்றும் கற்பென்றும் வாழ்ந்ததைத் தவிர அதில் பக்தியைக் கலந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் பிற்காலத்தில் தமிழில் உருவான கலப்பு அது வெளியில் இருந்து வந்தததா அல்லது வடக்கில் இருந்து வந்ததா என்றுகூட முடிவுகட்ட இயலாத சூழலில் பின்னதை எடுத்து முன்னதில் பொருத்தி நாவன்மையால் எழுத்துத் திறத்தால் ஒரு தோற்றப்பிழையை உருவாக்குவது என்போன்ற பாமரனுக்கு வியப்பாகவும் திகைப்பாகவும் இருக்கிறது
ஊர்சுத்தி
அஃது இவர்கள் காலத்துக்கு முந்தியே நிகழ்ந்திருக்கும். அஃதெப்போ? எவரால்?.
ஆழ்வார்களைப்பொறுத்தவரை, ஆண்டால் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு மட்டும் வந்தவர். பெண் என்பதால் வெளியில் செல்ல முடியாது. திருப்பாணர் உறையூர் சேரியை விட்டு அகலவே இல்லை. அவர் பாடியதும் ஒரேயொரு கோயிலைததான் அதையும் தூரத்திலுருந்து பார்த்தே. தொண்ட்ரடிப்பொடியாழ்வாரும் அப்படியே ஒரேயொரு ஊரில் நிலையாக இருந்துவிட்டார். முதலாழ்வார்கள் தொண்டைமண்டலத்துக்குள்ளேயே சுற்றினர். அவர்காலத்தைச்சேர்ந்த திருமழிசையாழ்வாரும் அப்படியே. தொண்டை மண்டலம் திருப்பதியையும் சேர்த்துவரும். திருவரங்கத்து வந்தார். தமிழகம் முழுக்கச்செல்லவில்லை. நம்மாழ்வார் தூத்துக்குடி, நெல்லை,மதுரை, கேரளாக்கோயில்கள்; மதுரகவி ஆழ்வார் கோயில்களுக்குப் பாடவில்லை. குலசேகரர் கேரளா, மதுரை, தஞ்சைமாவட்டங்கள், திருவரங்கம், திருப்பதி, திருமங்கையாழ்வார் மட்டுமே தமிழ்நாட்டைகடந்து சென்றவர். அஹோபிலம், நேமிசாரம் என்று.

No Christianity on Tamil soil when Alwars lived. Alwars didn't consciously propagate any ism. it was Ramanujar who extracted an ism from their songs. All that Alwars did was to just live the ideal of Perumal bhakti which became a template for common people to know and aspire for. Thus, one can say, they propogated perumal bhakti.
........ திருமங்கையாழ்வார் மட்டுமே தமிழ்நாட்டைகடந்து சென்றவர். அஹோபிலம், நேமிசாரம் என்று.
என்னுடைய கேள்வி இந்த பக்திமார்க்கம் எங்கிருந்து வந்தது என்பதே. ஆதாரத்துடன் தரவுகள் அடிப்படையில் விடைகிடைத்தால் மகிழ்வேன். கி.பி ஒன்றாம் நூறாண்டிலேயே தமிழகத்தில் கிறித்துவம் நுழைந்துவிட்டது. அவர்களே பக்தியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாக பெருமைப்படுகிறார்கள்
:(
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
On 6/30/15, Bala Sundara Vinayagam <balasundaravinayagam@gmail.com> wrote:
பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து
:(
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
On Tuesday, June 30, 2015 at 11:06:31 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
On 6/30/15, Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com> wrote:
பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து
:(
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
திரு. பாலசுந்தரவினாயகத்தின் வார்த்தை தேர்வுகள் வைணவத்தை உயர்த்தும், பிற மதங்களை தாழ்த்தும் வகையில் அமைகின்றன.ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது இருக்குமாறு எழுத முயல்கிறார்... அதுதானே வரலாறு...என்பது போன்ற நோக்கத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்பது தெளிவு.ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள். ....உதாரணத்திற்கு .... அந்த அரசி வைணவராக இருந்து அவரை சமணத்திற்கு மாற்ற முயன்று அவர் இறுதி வரையில் வைணவராகவே வாழ்ந்திருந்தால் அவரது வார்த்தைத் தேர்வுகள் வேறு போல இருக்கும்.ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள். ...>>>என்பதை ...ராணி இறுதிவரை உறுதியாக வைணவத்தில் பற்று கொண்டே வாழ்ந்திருந்தாள் <<< என்பது போல எழுதியிருப்பார்.இது ஒரு உதாரணம் மட்டுமே. அவர் அடிப்படையில் கூற விரும்புவது....ஆழ்வார்கள் அரசருக்குத் தலைவணங்காது வாழ்ந்தார்கள், அரசராக இருந்தாலும் அரசபதவியை துச்சமென மதித்தார்கள்அவர்கள் புகழைத் தேடிச் செல்லவில்லை, அவர்களைத்தேடியே புகழ் வந்தது,ஆனால், சைவர்களோ அதிகாரத்தைத் தேடி அலைந்தார்கள், தந்திரமாக அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு காரியம் சாதித்தார்கள்இதை அவர் பாணியில் அவர் விவரித்திருக்கிறார்.
....... பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து பாண்டிய நாட்டிலிருந்து சம்ணர்களை வெளியேற்றினார்......
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தலயாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்றுதொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திருஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்அமணர்களேதேவ்
On Tuesday, June 30, 2015 at 11:06:31 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம்.
அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார்.
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தலயாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்றுதொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திருஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்அமணர்களேதேவ்பாண்டியன் சமணர்களால் சமணத்துக்கு மாற்றப்பட்டான். மாறியவன் சைவர்களைத் தாக்கத் தொடங்கினான். சிவனடியாராக இருந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் செய்வதறியாது திகைத்தார். அவரை இவர் அழைக்கவில்லையென்று எடுத்துக்கொண்டாலும் ராணியும் குலச்சிறையாரும் சம்பந்தரைச் சந்தித்து என்ன பேசினார்கள்? மன்னனை எப்படி சமணர்களிடம் இருந்து மீட்பது? இச்சமணார்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது? என்றுதானே ?
இவ்வாலோசனையின் விளவுகளே பாண்டிய நாட்டு வரலாறு; சமணர்கள் கொல்லப்பட்டனர்.
நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
எஞசியோர் மலைகளுக்கோடி ஒழிந்து கொண்டு வாழ்ந்தனர்.
மதுரை மீனாட்சி கோயில் பொற்றாம்ரைக்குளத்து பிரஹாரச்சுவரில் இருக்கும் கல்வெட்டு இவ்வெற்றியைப்பாடுகிறது.
இவ்விளைவுகள் உண்மையென்றால், சம்பந்தர்+மங்கையர்க்கரசியார்ர்+குலச்சிறையார் கூட்டணி நடாத்திய ஆலோசனைக்குப் பெயரென்ன ?
ஒரு குறிப்பிட்ட மத இனத்தையே அழிக்கவேண்டும் எப்படி செய்யலாம் என்ற ஆலோசனைக்குப்பெயரென்ன?
இன்னொருவரை அழிக்க வேண்டுமென்று சிலர் கூடி ஆலோசனை செய்தால் அது சதியாலோசனையில்லையென்றால் வேறென்ன பெயரிடுவீர்கள்?
63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம். அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார். இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).சம்பந்தர் மத அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் பிறமத்தவரின் வாழ்க்கை முறைகளை எள்ளி நகையாடிவரென்பதும் சமணர்களைக் குண்டர்கள் என்று தகாச்சொற்களில் திட்டியவர் என்பதும் எழுத்துக்களிலேயே காணக்கிடைப்பவை. சாமியார்களில் ஏமாற்றுப்பேர்வழிகளைத்திட்டினால் சரி; ஆனால் இவரோ சமணர்களின் மதக்கொள்கைகளையே நையாண்டி பண்ணித்திட்டுவது, இன்றைய சமூகத்தைக் காட்டுகிறது: இன்று, ஒவ்வொரு மததத்வரும் இன்னொரு மதத்த்வரின் மதக்கொள்கைகளையே பொய், போலி, புரட்டு என்று இன்று பேசிப்பரப்புரை செய்கிறார்கள்.திகம்பர ஜயனர்களின் அம்மணம், அவர்கள் அழுக்குடம்பு (உடம்பை தேய்த்துக்கழுவும்போது பல்வுயிர்க்கொலைகள் நேரடும் எனவே அழக்குடம்பாக இருக்கவேண்டுமென்பது அவர்கள் கொள்கை. நடக்கும்பொது எறும்புகள் காலில் மிதிபட்டு செத்துவிடாதபடி, மயில்தோகையால் தரையைத் தூத்துக்கொண்டு போகவேண்டும். ஏன் மயில் தோகை. பிற பொருட்கள் எறும்புகளைக் கொல்லும்) இவற்றை அறியாதவர் நகைப்பர். ஆனால், சம்பந்தரோ தெரிந்தோ நகையாடினார் தம் பாடல்களில்.. இப்படி அவர்கள் வாழ்க்கையும் ஆசிவகர்கள் வாழ்க்கையையும் இகழ்ந்த இவரின் காவியுடையை அவர்கள் இகழ்ந்தார் தாங்குவாரா? சமணர்கள் உடம்பில் அழுக்கில்லை. அவர்கள் வாழ்க்கையை இகழ்வோர் மனங்களில்தான் அழுக்கு. கழுகுமலையும், சித்தன்ன வாசலும் கிடாரிப்பட்டி, யானைமலைகளும் - பாண்டடிய நாட்டு கருப்பு வரலாற்று பக்கங்களை ஓலமிட்டுக்காட்டிக்கொண்டேயிருக்கும்.
அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு.
இந்திய விடுதலை இயக்கத்தில் பல்லாயிரம் மக்கள் பங்கு கொண்டனர்.நீங்கள் அத்தனை பேர்களின் விவரமும் அறிவீர்களா ?நம் பாடபுத்தகங்கள் தரும் விடுதலை வீரர் பெயர்களைரேண்டம் செலக்ஷன் என்று சொல்ல முடியுமா ?Unsung Heroes எண்ணிக்கை உலகில் பெரிது;எல்லாம் ஒன்று விடாமல் ஆவணமாக வாய்ப்பில்லைதேவ்
............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).
இந்த அளவுகோல் என்னும்போது, செய்பவரின் தெரியும் range of knowledge and information பொறுத்துதான் அமையும். நம்பியாண்டார் நம்பியோ, சம்பந்தரோ கேரளாவுக்கு வந்ததாக வரலாறில்லை. கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்திலோ பேரூரிலிலோ ஒரு மாபெரும் சிவனடியார் இருந்திருப்பாரானால், அவர்கள் இந்த 63 பேரில் பலரைவிட மாபெரும் சிவன்டியாரெனறாலும் இருவருக்கும் தெரியவாய்ப்பில்லை. தெரிந்த மட்டுமே செய்ய முடியும். செய்தார்கள் என்றெடுக்கவேண்டும். There was no proper procedure to scout for suitable candidates to fill up the 63 vacancies. It was all done by the two persons, through hearsay, or by first hand experience in respect of some. The selection was therefore within the limited circumference of the knowledge of the above two. Mostly they picked up only from the areas that came within the range of their information. All of us have limited knowledge by virtue of being in the same place or going around it. The aforesaid two are no exceptions to the above limitation.விடுதலைப் போராட்ட வீரர்களைப்பற்றி சொன்னதால், அதையும் கொஞ்சம் சொல்லலாம். வடநாட்டில் உள்ளவர்களுக்கு வ உ சி யாரென்றே தெரியாது. வட நாட்டு வரலாற்றுப்பாடங்களில் வ உ சியைப்பற்றி குறிப்பே இருக்காது. சி பி எஸ் சி பாடத்திலும் கிடையாது. ஆனால் அவரை விட சிறியளவில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கத்திக்காரகள் பலரைப்பற்றிய குறிப்பிருக்கும். வ உ சி மட்டுமல்ல, அனேக தென்னிந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறார்கள். காரணம் செலக்சன் செய்தோருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்று மட்டுமன்று; தெரிந்தாலும் உதாசீனம் செய்தார்கள்.
வடக்கத்திக் காரர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழர்களையே எடுத்தாலும் தமிழ்நாட்டுப்பாடநூல்களில் கேரளாவில் விடுதலைப்போராட்ட வீரர்களைப்பற்றி குறிப்பே கிடையாது. அவ்வளவு சுத்தம்.
இதுதான் 63 பேர் செலகசனின் நடந்தது எனச் சொல்லலாம். முன்பு சொன்னது போல, பெரியளவில் பேசப்படடோரையும் பாடல்கள் எழுதியதால் தெரியப்பட்டோரும் போக மற்றவர்கள் அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்களை வைத்துதான் சம்பந்தரும் நம்பியாண்டாரும் தேர்வு செய்தனர். இதனால் மங்கையர்க்கரசியார் தெரியா பலரை விட மாபெரும சிவபக்தர் என்று சொல்லமுடியாது. அவர் மஹாராணி, சமபந்தருக்குத் தெரிந்தவர். சமணர்களைக்காய்ச்சியெடுத்து வெற்றிபெற்று சைவத்துக்குப் பெருந்தொண்டாற்றியவர் என்பதாலே 63 பேரில் ஒருவராக்கப்பட்டார். அரசியல் எங்கும் எப்போதும் உண்டு. ஆன்மிகத்திலும் உண்டு என்பது நன்கு அறியப்பட்டவொன்று.
நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு.ஆமாம்.நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம். அதுபோல்தான் இதுவும்.இதுவே எனது புரிதல்.அன்பன்கி.காளைராசன்
//There was no proper procedure to scout for suitable candidates to fill up the 63 vacancies. It was all done by the two persons, through hearsay, or by first hand experience in respect of some. The selection was therefore within the limited circumference of the knowledge of the above two. Mostly they picked up only from the areas that came within the range of their information. All of us have limited knowledge by virtue of being in the same place or going around it. The aforesaid two are no exceptions to the above limitation.//
//நாராயணண் என்பவர் இந்திய வரலாற்றுக் கழகத்தில் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் இக்குறையை நிவிர்த்தி செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவரை விடவில்லை. அவர் தன் பதவியை விட்டு விலகினார். கேரளாக்காரர். In his interview with the press, he said the great freedom fighters of South India are completely forgotten or neglected, and there is no interest to include at least the well knowon ones I resigned the post of the Chairman, Indian History Congress to register my protest.வடக்கத்திக் காரர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழர்களையே எடுத்தாலும் தமிழ்நாட்டுப்பாடநூல்களில் கேரளாவில் விடுதலைப்போராட்ட வீரர்களைப்பற்றி குறிப்பே கிடையாது. அவ்வளவு சுத்தம்.//
இதுதான் 63 பேர் செலகசனின் நடந்தது எனச் சொல்லலாம். முன்பு சொன்னது போல, பெரியளவில் பேசப்படடோரையும் பாடல்கள் எழுதியதால் தெரியப்பட்டோரும் போக மற்றவர்கள் அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்களை வைத்துதான் சம்பந்தரும் நம்பியாண்டாரும் தேர்வு செய்தனர்.
இதனால் மங்கையர்க்கரசியார் தெரியா பலரை விட மாபெரும சிவபக்தர் என்று சொல்லமுடியாது. அவர் மஹாராணி, சமபந்தருக்குத் தெரிந்தவர். சமணர்களைக்காய்ச்சியெடுத்து வெற்றிபெற்று சைவத்துக்குப் பெருந்தொண்டாற்றியவர் என்பதாலே 63 பேரில் ஒருவராக்கப்பட்டார். அரசியல் எங்கும் எப்போதும் உண்டு. ஆன்மிகத்திலும் உண்டு என்பது நன்கு அறியப்பட்டவொன்று. Just as IHC did, Tamil saivers did take no effort to search for glorious Sihivanadiars who existed beyond the purview of Nambiandaar and Sambandar.
//............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).//
இந்த அரசியல் எல்லாம் சைவ சமயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.தேவார முதலிகள் தமக்கு முன்பே வாழ்ந்த அடியார்களையும் போற்றினர்.காரைக்கால் அம்மையார் தொடர்புள்ள திருவாலங்காட்டுக்குள் காலடிஎடுத்து வைக்கவும் அஞ்சினர். ஒருவர் ஊர்ந்துவந்த பல்லக்கை மற்றவர்சுமந்தார்.பின்னர் தோன்றிய பெரியோர்கள் அடியார்களுள் விடுதல் இருக்கவாய்ப்பில்லாமல் தொகுக்க முயன்றுள்ளார்கள் என்றே தெரிகிறது.தொகையடியார் எனும் பட்டியலும் உள்ளது. அப்பாலும் அடி சார்ந்தார்எனும் தொகை கால - தேச எல்லைக்கு அப்பாற்பட்ட அடியார்களுக்கும் இடமளிக்கிறது.கண்ணப்ப நாயனார் சரிதம் சிவாநந்த லஹரியிலும் பதிவாகியுள்ளது. தொகையடியார் பட்டியல்மேஜர், மைனர் எனும் பாகுபாட்டுக்கு இடமளிக்காமல் எல்லோரையும் இணைத்து விடுகிறது॥ பா₃ந்த₄வா: ஶிவப₄க்தாஶ்ச ஸ்வதே₃ஶோ பு₄வநத்ரயம் ॥தேவ்
//தமிழக வரலாறு ஒய்யாரக்கொண்டை. உள்ளே இருப்பது ஈரும் பேனும்.//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).//
Please give proof. Mr. Dev Raj has called your bluff by giving a proper quote from Saivite Canon.
........குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர்.
வணக்கம்.படிப்பனவற்றை ஒவ்வொருவரும் ஒருவாராகப் புரிந்து கொள்கிறோம்.நான் புரிந்து கொண்ட வகையில்,2015-06-30 23:06 GMT-08:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தலயாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்றுதொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திருஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்அமணர்களேதேவ்பாண்டியன் சமணர்களால் சமணத்துக்கு மாற்றப்பட்டான். மாறியவன் சைவர்களைத் தாக்கத் தொடங்கினான். சிவனடியாராக இருந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் செய்வதறியாது திகைத்தார். அவரை இவர் அழைக்கவில்லையென்று எடுத்துக்கொண்டாலும் ராணியும் குலச்சிறையாரும் சம்பந்தரைச் சந்தித்து என்ன பேசினார்கள்? மன்னனை எப்படி சமணர்களிடம் இருந்து மீட்பது? இச்சமணார்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது? என்றுதானே ?சமணத்திலிருந்து பாண்டியனையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி என்பதுதான் அவர்களது சிந்தனையாக இருந்திருக்கும்.இவ்வாலோசனையின் விளவுகளே பாண்டிய நாட்டு வரலாறு; சமணர்கள் கொல்லப்பட்டனர்.சமணர்கள் வாதில் தோற்றதால்,
அவர்களாகவே முன்னம் முடிவு செய்தபடி, கழுவேறினர் என்றே குறிப்புகள் உள்ளன.சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றினர் என்பது தவறு.இதுபற்றி நிறையே மின்தமிழிலில் விவாதிக்கப் பெற்றுள்ளது.நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.எஞசியோர் மலைகளுக்கோடி ஒழிந்து கொண்டு வாழ்ந்தனர்.இதற்கு ஆதாரம் ஏதும்உண்டா என நான் அறிய விரும்புகிறேன்.இருப்பினும்,மன்னரையும் மக்களையும் மனம் மாற்றியோரை (brainwash) என்ன செய்திருக்க வேண்டும் என்று தாங்களே கூறுங்கள் ஐயா.மதுரை மீனாட்சி கோயில் பொற்றாம்ரைக்குளத்து பிரஹாரச்சுவரில் இருக்கும் கல்வெட்டு இவ்வெற்றியைப்பாடுகிறது.இதனுடைய நகல் கிடைத்தால் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்விளைவுகள் உண்மையென்றால், சம்பந்தர்+மங்கையர்க்கரசியார்ர்+குலச்சிறையார் கூட்டணி நடாத்திய ஆலோசனைக்குப் பெயரென்ன ?தங்களது மன்னனையும், மக்களையும் தங்களது வழிபாட்டு மரபுகளையும் காப்பாற்ற ஏற்பட்ட கூட்டணி, ஆலோசனை.ஒரு குறிப்பிட்ட மத இனத்தையே அழிக்கவேண்டும் எப்படி செய்யலாம் என்ற ஆலோசனைக்குப்பெயரென்ன?தற்காப்பு.தங்களது சுய சமயத்தை மீட்டெட்டுத்தல்.இன்னொருவரை அழிக்க வேண்டுமென்று சிலர் கூடி ஆலோசனை செய்தால் அது சதியாலோசனையில்லையென்றால் வேறென்ன பெயரிடுவீர்கள்?பிறரை அழிப்பது நோக்கமல்ல.தற்காத்துக் கொள்வது.நாம் அவர்களைத் தேடிச் சென்று அழிக்கவில்லை.அவர்கள்தான் நம்மைத்தேடி வந்து நமது மரபுகளை மாற்ற முயன்றனர்.
63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம். அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார். இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).சம்பந்தர் மத அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் பிறமத்தவரின் வாழ்க்கை முறைகளை எள்ளி நகையாடிவரென்பதும் சமணர்களைக் குண்டர்கள் என்று தகாச்சொற்களில் திட்டியவர் என்பதும் எழுத்துக்களிலேயே காணக்கிடைப்பவை. சாமியார்களில் ஏமாற்றுப்பேர்வழிகளைத்திட்டினால் சரி; ஆனால் இவரோ சமணர்களின் மதக்கொள்கைகளையே நையாண்டி பண்ணித்திட்டுவது, இன்றைய சமூகத்தைக் காட்டுகிறது: இன்று, ஒவ்வொரு மததத்வரும் இன்னொரு மதத்த்வரின் மதக்கொள்கைகளையே பொய், போலி, புரட்டு என்று இன்று பேசிப்பரப்புரை செய்கிறார்கள்.திகம்பர ஜயனர்களின் அம்மணம், அவர்கள் அழுக்குடம்பு (உடம்பை தேய்த்துக்கழுவும்போது பல்வுயிர்க்கொலைகள் நேரடும் எனவே அழக்குடம்பாக இருக்கவேண்டுமென்பது அவர்கள் கொள்கை. நடக்கும்பொது எறும்புகள் காலில் மிதிபட்டு செத்துவிடாதபடி, மயில்தோகையால் தரையைத் தூத்துக்கொண்டு போகவேண்டும். ஏன் மயில் தோகை. பிற பொருட்கள் எறும்புகளைக் கொல்லும்) இவற்றை அறியாதவர் நகைப்பர். ஆனால், சம்பந்தரோ தெரிந்தோ நகையாடினார் தம் பாடல்களில்.. இப்படி அவர்கள் வாழ்க்கையும் ஆசிவகர்கள் வாழ்க்கையையும் இகழ்ந்த இவரின் காவியுடையை அவர்கள் இகழ்ந்தார் தாங்குவாரா? சமணர்கள் உடம்பில் அழுக்கில்லை. அவர்கள் வாழ்க்கையை இகழ்வோர் மனங்களில்தான் அழுக்கு. கழுகுமலையும், சித்தன்ன வாசலும் கிடாரிப்பட்டி, யானைமலைகளும் - பாண்டடிய நாட்டு கருப்பு வரலாற்று பக்கங்களை ஓலமிட்டுக்காட்டிக்கொண்டேயிருக்கும்.இல்லை ஐயா.நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.
ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு.ஆமாம்.நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம். அதுபோல்தான் இதுவும்.இதுவே எனது புரிதல்.அன்பன்கி.காளைராசன்
--
“அல்லவை தேய அறம்பெருக நல்லவை நாடி இனியன எழுதுவோம்“
அன்பன்கி.காளைராசன்
--
எனினும், மறுமுறை தாங்கள் இவ்வாறு எழுதும்போது எதிர்தரப்புகள் சொல்லும் சமாதானத்தையும் கருத்தில்கொள்ளுங்கள்.
மாயம், தந்திரம் போன்றவைகளை வைத்து சமண முனிவர்கள் என்றுமே வாதம் செய்ய மாட்டார்கள்.
திரும்பவும் முதலில் இருந்தா!...😇நான் புரிந்து கொள்வது.pre loaded os பிறவற்றை வைரஸ் என்று காண்பிக்கும்.வைரஸ் pre loaded ஆகிவிட்டால் osஐ வைரஸ் என்று காண்பிக்கும்.
இதைப் பெருமையாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள், சிறுமையாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், பிரெஞ்சு காதலின் மொழி என்றால், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றால்…. என்று நீட்டிக்கொண்டே போய், தமிழ் பக்தியின் மொழி என்று முடிப்பவர்கள் உண்டு.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இதனை எப்படி எதிர் கொள்வது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் பக்தி இலக்கியம் என்ற ஒன்று இல்லவே இல்லை யாதலின் அவர்கள் இதனை இலக்கியம் என்ற வட்டத்திற்குள் சேர்க்காமலே விட்டுவிட்டார்கள். ஆனால் தமிழின் பக்திமணத்தில் அமிழ்ந்து பாராட்டியவர்களும் உண்டு. உதாரணமாக, திருவாசகத்தை மொழிபெயர்த்த ஜி. யூ. போப், அதற்கு இணையான உருக்கமான இலக்கியம் உலகில் இல்லை என்று பாராட்டுகிறார்.
இது ஒருபுறமிருக்க, நாம் பாடப்புத்தக கர்த்தாக்களுக்கு பக்தி இலக்கியம் ஒரு தலைவலி. அவர்களுக்கு சைவ இலக்கியத்தில் ஒரு பக்திப் பாடலைப் பாடமாக வைத்தால், வைணவ இலக்கியத்தில் ஒன்று வைக்க வேண்டும்; பிறகு முஸ்லிம் இலக்கியம், கிறித்துவ இலக்கியம் என்று அவ்வவற்றில் ஒவ்வொரு பாடலையாவது பாடமாக வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தம்மை மதச்சார்புள்ளவர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம். அதனால் தேவையோ இல்லையோ, மாணவர்கள் ஆண்டாண்டுதோறும் தேவாரத்தில் அல்லது திருவாசகத்தில் சில, ஆழ்வார் பாடலில் சில, சீறாப்புராணத்தில் சில, இரட்சணிய யாத்திரிகத்தில் சில என்று படித்தாக வேண்டும். நல்லவேளையாக சமண பௌத்த இலக்கியங்களுக்கு யாரும் பிரதிநிதித்துவம் கேட்டு வரவில்லை போலும்!
எவ்விதமாயினும், வாழ்க்கைக்காக, வாழ்க்கைக்குள்தான் சமயம், மதம் எல்லாம் இருக்கின்றன. மதத்திற்காக, மதத்திற்குள் வாழ்க்கை இல்லை. எனவே வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்லும் அனுபவங்களைக் கொண்ட இலக்கியம் என்றுதான் பக்தி இலக்கியத்தைப் பயில வேண்டும். பக்திக்காக அன்றி இலக்கியமாகப் பயில வேண்டும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். எத்தனையோ முஸ்லிம்களும் கிறித்துவர்களும் கம்பராமாயணத்தை இலக்கியமாகப் பயிலவில்லையா? எத்தனையோ சைவர்கள் சீறாப்புராணத்தை இலக்கியச் சிறப்பு கருதிப் படிக்க வில்லையா? அதுபோல மதத்தை ஒதுக்கிவிட்டு, இலக்கியமாக நோக்கும் பார்வை வேண்டும்.
பிற இலக்கியங்களைப் பண்பாட்டிற்கெனவும் வரலாற்றுச் சான்றுகளுக்கெனவும் படிப்பதுபோல, பக்தி இலக்கியங்களையும் படிக்கமுடியும். பக்தி இலக்கியத்திலும் அரசு ஆதிக்கமும் வர்க்கப் போராட்டமும் இயங்குவதைக் காணவே முடிகிறது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகள் பக்தியைப் பயன்படுத்துவதால்தான் மக்கள் பிளவுபடுகிறார்கள், மோதுகிறார்கள், சமயச் சண்டைகளில் ஈடுபடுகிறார்கள். எங்குமே வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ ஆதிக்கத்திற்கு மதத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. மதத்திற்கு ஆதிக் கத்தின் பலமும் பணமும் தேவைப்படுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம் திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள் சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத் திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால் குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?
பக்தி இலக்கியங்களில் இந்த மாதிரி அற்புதச் செயல்கள் இடம் பெறுவது ஒரு பெரிய பிரச்சினைதான். பாடம் நடத்தும் ஆசிரியர் பக்திமானாக இருந்தால் அவை அப்படியே நடந்தன என்று சொல்வார். அதிலும் மதவேறுபாடு உண்டு. கடவுள் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தால் இம்மாதிரி நடப்பது சாத்தியமில்லை என்பார். இவை காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் என மோதல்கள் ஏற்படுவதும் உண்டு.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, பக்திப்பாக்களில் காணும் அற்புதச் செயல்களை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? கவிதை உள்ளத் தோடு உலகத்தை நோக்குபவனுக்கு ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் அற்புதம்தான். நயாகரா நீர்வீழ்ச்சியும் ஆல்ப்ஸ் மலையும் தான் அற்புதங்கள் என்றில்லை, வானில் காணும் மாறிச் செல்லும் மேகங்களின் பல்வேறு வடிவங்களும், புல்லின் சிரிப்பும், பூவின் தலையாட்டலும் அற்புதங்கள்தான். ஆனால், நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பிற பக்திமான்களுக்கும் பற்பல அற்புதச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன. திருநாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இட்டார்களாம், அவர் அதில் உயிர்பிழைத்து வந்தாராம். கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டார்களாம், அதிலும் அவர் உயிர்பிழைத்தாராம். இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா? நடந்தன என்பார்கள் சிலர். நடந்திருக்காது, கட்டுக்கதை என்பார்கள் சிலர்.
நீற்றறையில் இட்டபோது நாவுக்கரசர் பாடிய பாடல் எது?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
என்பதை எடுத்துக்காட்டுவார்கள். இதில் இறைவனின் இணையடி நிழல் வீணையின் கானம் போலவும் முழுநிலவு போலவும் தென்றல்போலவும் இளவேனிற் காலம் போலவும் பொய்கை போலவும் இனிமையானது என்றிருக்கிறதே தவிர, வேறு என்ன இருக்கிறது? இதே போலத்தான், அவரைக் கடலில் இட்டபோது
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான் துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன் அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது? பூம்பாவை இறந்தபோது ஞானசம்பந்தரும் இவ்வுலக இன்பங்களையெல்லாம் இழந்து போகின்றாயே பூம்பாவாய் என்று பாடும் குரல் கேட்கிறதே தவிர, எலும்பைச் சாம்பலைப் பெண்ணாக்கினார் என்று எங்கிருக்கிறது?
கண்ணனைத் தன் காதலனாக, மணாளனாக வரித்த ஆண்டாளும், கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ என்றெல்லாம் பாடுவது கற்பனை தானே தவிர, இது உண்மையில் அனுபவித்தது என்று சொல்ல முடியுமா?
நல்ல பக்திமான்களின் பாக்கள் யாவும் இம்மாதிரி இறைவன் தரும் இன்பத்தைப் பாடுபவையே தவிர, அவற்றில் அற்புதச் செயல்கள் செய்த குறிப்பிருப்பதாகக் கொண்டது நமது தவறான பார்வை என்றே கருதுகிறேன். ஆனால் சிவபெருமானோ திருமாலோ செய்ததாகப் பல அற்புதச் செயல்கள் இப்பாக்களில் இடம் பெறுகின்றன. இறைவன் எதனையும் செய்ய வல்லவன் என்பதை உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். மாணிக்கவாசகரும் ஓரிடத்தில் இறைவன் கருதினால் நரியைப் பரியாக்க முடியும், பரியை நரியாக்க முடியும் என்று பாடுகிறாரே அன்றி, தம் வாழ்க்கையில் அவ்விதம் இறைவன் நடத்தியதாகக் குறிப்பினைத் தரவில்லை.
இன்னும் கேட்டால், திருமாலின் அவதாரங்களில், கண்ணன் அவதாரத்தில் எத்தனையோ துராக்ருதங்களையும் கூடக் காண்கிறோம். இறைவனின் நோக்கில் நன்மை-தீமை என்பவைகூடச் சார்புள்ளவை தான் என்று உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். ஆகவே இறைவனின் அருளாற்றலை மேம்படுத்திச் சொல்வதற்காகப் புனைந்த கதைகள் என்று இவற்றைக் கொள்ளவேண்டும்.
மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள் தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில் தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர் பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது. உண்மையில் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஏற்பட்ட உத்திமுறைகள் என்றே கருதவேண்டும். எவ்வளவு தூரம் இதில் அவை வெற்றி பெற்றிருக்கின்றன என்பதுதான் நாம் நோக்க வேண்டியது.
அற்புதச் செயல்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாற்றில் தான் என்றில்லை. நாம் இன்று நடைமுறையிலும் அவற்றை நம்பவே செய்கிறோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தமது கடையில் முதலில் சிவபெருமான் உருவப்படத்தை மாட்டிவைத்திருந்தார். பிறகு சிலகாலம் கழித்து அதை நீக்கிவிட்டுத் திரு வேங்கடப் பெருமாளின் படத்தை மாட்டினார். “என்னய்யா இது, ஏன் இந்த மாற்றம்? நீர் சைவர்தானே?” என்று அவரைக் கேட்டேன். அவர் சொன்னார்: “சிவபெருமான் படத்தை மாட்டியிருந்தபோது எனக்கு இலாபம் வரவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார்-’சிவபெருமான் ஆண்டி, பிச்சையெடுப்பவன். அவன் படத்தை மாட்டினால் நீயும் அப்படித்தான் ஆகவேண்டும். சீனிவாசப் பெருமாள்-ஏழுமலையான்தான் உலகத்திலேயே பணக்காரக் கடவுள். அவர் படத்தை மாட்டினால் நீயும் பணக்காரனாகி விடுவாய், இலாபம் வந்து கொட்டும்’ என்றார். அதனால் நான் படத்தை மாற்றிவிட்டேன்” என்றார். அவருக்குப் பணம் வந்து கொட்டியதோ இல்லையோ தெரியாது, இன்றும் அற்புதச் செயல்களை நம்புபவர்கள்-தங்களுக்கேற்ற கதைகளை உருவாக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.
பக்தி இலக்கியத்தை அதில் உள்ள அற்புதச் செயல்களுக்காக, கதைகளுக்காகப் படிக்காமல், அது தரும் வாழ்க்கை மதிப்புகளுக்காகப் படித்தால் நம் வாழ்க்கை எவ்வளவோ பயன் பெறும்.
------------------------------
இவ்விழைக்கு ஏற்றக் கட்டுரை!
இரா.பா
On Tuesday, 30 June 2015 10:19:30 UTC-7, Bala Sundara Vinayagam wrote:....... பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து பாண்டிய நாட்டிலிருந்து சம்ணர்களை வெளியேற்றினார்......விநாயக் ஜீசம்பந்தர் சதியாலோசனை செய்து ஒரு முடிவோடு மதுரை வந்திருந்தால் “வாதுசெயத் திருவுள்ளமே ! ”என இறைவன் திருமுன்னிலையில் பதிகம் பாடிக்கொண்டிருக்க மாட்டார் :)). மதுரைக்கு வந்த வேகத்தில்வேலையில் இறங்கியிருப்பார்தேவ்
.......அவரைக் கடலில் இட்டபோது
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான் துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன் அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது?
It is strange that the loud din of silence about this badmouthing is totally unnoticed by Mr. Kannan and other Vaishnavites. I agree that it is Mr.BS's privilege to write anything he likes. But this silence...If anyone wrote such nonsense about Azhwars, I would have strongly objected.May I propose that if we debate, let us have some civility.Having said that, I keep my peace.ஒரு அரிசோனன்
இராஜாஜி ஒரு பழுத்த வைணவர்.
தமிழகம் நன்கறிந்தவரும் அறிஞர்களின் பெரும் மதிப்புக்குமுள்ளானவருமான, தொல்லியர் அறிஞர் நாகலிங்கசாமி ஒரு நூலே எழுதிவிட்டார்;
சுற்றம் புடை சூழச் சோதியில் கலந்து மறைந்தார்தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ராணி ஜயினத்திலே இருந்து மடிந்தாள் - என்ற சொற்றொடரை நீங்கள் எடுத்ததற்குப் பெயர் mind reading.சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டும் படீத்து மாற்றுக்கருத்திருந்தால் சொல்லுங்கள்.
On Wednesday, 1 July 2015 00:06:27 UTC-7, Bala Sundara Vinayagam wrote://............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).//
Please give proof. Mr. Dev Raj has called your bluff by giving a proper quote from Saivite Canon.
What is your inner agenda?ஒரு அரிசோனன்
சார்பு நிலையோடு எழுதப்பட்டுள்ளது என்பதனை அவருடைய கடுமையான “சதியாலோசனை” போன்ற சொற்களின் பயன்பாடு புலப்படுத்துகிறது.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
ராணி ஜயினத்திலே இருந்து மடிந்தாள் - என்ற சொற்றொடரை நீங்கள் எடுத்ததற்குப் பெயர் mind reading.சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டும் படீத்து மாற்றுக்கருத்திருந்தால் சொல்லுங்கள்.
ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கென்றே வலைபதிவுகள் இருக்கின்றன: தீவிர இசுலாமியர், தீவிர இந்துக்கள், தீவிர கிருத்துவர்கள் போக மதமல்லா ரேசிஸ்டுகள் நடாத்தும் வலைபதிவுகள் என்று..
[...]
அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம் திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள் சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத் திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால் குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?
[...]
மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள் தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில் தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர் பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது.
2015-07-02 3:13 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>://தாங்கள் (சைவர்கள்) செய்த தவறுகளை மறைக்க, பின்னாளில் எழுதி வைத்ததை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உண்மையென்றுச் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ, அறியேன்? :-((-----------ஒரு உண்மையான சைவரைக் கொணர்மின் ஈங்கு!!இரண்டு விஷயங்கள் செய்ய சொல்லுமின்!1. பிதுக்கியப் பேஸ்ட்டை, மறுபடியும் தானாக ட்யூபில் ஏற்றச் செய்யுங்கள்!2. கறந்த பாலை மறுபடியும் முலைப் புகச்செய்யுங்கள்!(1. அன்று இதுபோன்றவைகள் நடந்திருந்தால், இன்றும் அதுபோல நடக்கவேண்டுமே, அதனால்தான் இவ்வாறு செய்ய சொல்கிறேன்.2. இன்னும் ஒன்றுக்கூட செய்ய சொல்லலாம். காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்! எதற்கு இந்த வம்பு என்றுதான் சின்ன சின்ன டெஸ்டை முன் வைத்திருக்கிறேன் - :-)))செய்துக் காட்டிவிட்டு, இங்கு எழுதுங்கள். யானும், பட்டையைத் தீட்டி விட்டு, அரகரசம்போ மகாதேவா என்று சைவம் புகுகிறேன்.உம் வழியாக சிவனார் என்னை ஆட்கொண்டார் என்று எடுத்துக் கொள்கிறேன். இச்சம்பவம், மீண்டும் சைவ மறுமலர்ச்சி எழ துணைப்புரியும். அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உமக்கும் வரலாற்றில் நற்பெயர் அமையும்.//உயர்திரு பானுகுமார் அவர்களே,
- எத்தனையோ சமயநூல்கள் எத்தனையோ செய்திகளை எழுதிவைத்திருக்கின்றன. இறந்தவரை உயிர்ப்பித்தது, தொழுநோயைக் குணப்படுத்தியது, நீரில் நடந்தது, காற்றில் பறந்தது போல பல.
- இதற்கு எந்த சமயமும் -- சமணம் உள்பட விலக்கல்ல. நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.
- இங்கு விவாதம் துவங்கியது சைவ நாயன்மார்கள் randomஆகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே.
- இது உங்களுக்கும் தெரியும்.
- இடையில் பா.சு.வி. அவர்கள் வழக்கம்பொல தவறான செய்திகளைப் பகிர்ந்து இழையை அவருக்கே உரித்தான பாணியில் திசை திருப்பினார்.
- அதுவும் உங்களுக்குத் தெரியும்.
- அதற்கு இயன்ற அளவு மற்றவர்கள் பதில் அளிக்கிறார்கள்.
- நான் அவருக்கு எழுதிய கருத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
- உங்கள் கருத்து என்ன என்பதை இந்த மின் தமிழே அறியும்.
- சமணம் முதல் - மற்ற எதுவும் பின்பு -- அதுதான் உங்கள் கூற்று.
- அதை யாவரும் அறிவர்.
- இங்கு அதல்ல விவாதம்.
- நீங்கள் தேவையின்றி காளைராஜன் அவர்களிடம் சவால் விடுத்திருக்கிறீர்கள்.
- //காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்!//
- இது என்னைப்போன்ற சிறியோன் செய்யவேண்டிய வாதம். தங்களைப்போன்ற சமணப்பெரியவர் செய்யவேண்டிய வாதம் அல்ல.
- தாங்கள் தங்களை சமணப் பெரியவர் என்று ஒப்புக்கொள்ளவிட்டாலும், சமணம் பற்றி நிறைய எழுதும் தாங்கள் எனக்குச் சமணப் பெரியவர்தான்.
- தாங்கள் எழுதுவது சிலவற்றை நான் ஒப்புக்கொள்ளவிட்டாலும், தங்கள்பால் மதிப்பு வைத்திருக்கிறேன்.
- அதன் அஸ்திவாரத்தை அசைக்க முற்படாதீர்கள்.
//1. ஆதி தமிழர்க்கு என்று இருந்த தொல் இயற்கை வழிபாடு. (இது அரசு உருவாக்கத்திற்கு முன். அஃதாவது, இனக் குழுக்களாகயிருந்தவரை.2. பிறகு அரசு உருவாக்கக் காலத்தில் முதலில் சிரமண மதங்கள்தான் தமிழகத்தில் நுழைந்தன.3. பின்னரே, பிராமண மதங்கள் நுழைந்தன.4. அதிலும் சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான். அதன் சைவ சிந்தாந்தக் கோட்பாடு முதற்கொண்டு. (அனுமதியிருந்தால், சமணக் கூறுகள் எவ்வாறு சைவத்தில் உள்வாங்கப்பட்டது என்று எழுதலாம்!)//
- தங்களது சமணப் பிரச்சாரத்தை வேறு இழையில் தாங்கள் துவங்கலாம்.
- சாதியை இழுக்கும் வகையில் [பிராமண மதம்] எழுதுவதைக் கைவிடுங்கள்.
- //சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான்// என்பது இவ்விழைக்குத் தேவையற்றது. சைவம் அறிந்தவர்களுடன் அந்த வாதத்தைக் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
- சமண சமய அடிப்படைக் கொள்கையான "ஆன்மா" என்பதையே ஒப்புக்கொள்ளாத நீங்கள்,
- சைவ-சமணப் பிரிவினை வாதங்களைக் தேவையின்றிக் கிளப்பாதீர்கள்.
- தேவையின்றி ஒருவர் சைவ-வைணவ வாதத்தைத் துவங்கியதே பொதுமானது.
- இது உங்களுக்கு ஒரு வேண்டுகோளே!
என் எழுத்துக்கள், உணர்ச்சி வசப்பட்டு சில இடங்களிலும், உணர்ச்சி வசப்படாமல் சில இடங்களிலும் எழுதப்பட்டவை.
- //(சார், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்)//
- உணர்ச்சிவசப்பட்டு எழுத இங்கு எதுவுமில்லை. உங்கள் எழுத்து எனக்கு அவ்வாறு தோன்றவும் இல்லை.
--
பாடல்கள் இவைஅத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்துமெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் 6.1.6762575பரவு காதலில் பாண்டிமா-அருளால்விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக்சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய 6.1.6772576வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர்பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்டகழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கிஇழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால் 6.1.6782577அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்ததுங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்தபொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய் 6.1.6792578மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச்சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகிவெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் 6.1.6802579வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கிஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்னஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார்பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் 6.1.681மிக நீளுவதால் நான் வைத்த கருத்திற்கு மேலும் பற்பல்டல்களும் உள்ளன வேண்டுமானல் தருகிறேன்நூ தா லோ சு
நூ த லோ சுமயிலை
2015-07-01 23:52 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு.ஆமாம்.நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம். அதுபோல்தான் இதுவும்.இதுவே எனது புரிதல்.அன்பன்கி.காளைராசன்எனக்கு நன்றாகத் தெரியும். இந்த சமணர்கள் கழுவிலேற்றிக்கொல்லப்பட்டார்களா இல்லையா என்ற பிரச்சினை பற்றி. சம்பந்தர் கட்சி ஒருபக்கம் இல்லையென்றும் மாற்றுக்கட்சி அப்படித்தான் என்றும் இணையத்தில் வெகுநாட்களாக சண்டை நடந்தே வருகிறது. அச்சண்டையில் புகவிரும்பாமல் அச்சொல்லைத் தவிர்த்திருக்கிறேன். கவனாமாக.எங்கு நடநதாலும் வரலாற்றுச்சண்டைகள் முடிவுக்கு வாரா. எனவே இங்கு நடந்து முடிந்துவிட்டது எப்போதோ என்பது பொருந்தாது. முடிந்தது போலத்தோன்றும் இன்னொருவர் ஒரு சான்றுடன் மீண்டும் வரும்வரை. வரலாறு வென்றவர்களால் எழுதப்படுகிறது. அவர்கள் நிலைதாழ்ந்ததும் தோற்றவர் நிலைபெற்றால் வரலாறு மாற்றப்படும். இதற்கு இன்றைய மாறி, மாறி ஆளும் மைய அரசுகள் சாட்சிகள். எனவே தயவு செய்து நடந்து முடிந்து விட்டது என்ற இறுமாப்பு வேண்டாம். மனித வாழ்க்கை ஒரு தொடர்கதை. தமிழரின் வரலாறு - சங்கத்து முந்திய காலம், சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பிற்காலம் என்று எல்லாக்கால வரலாறுகளும் புரட்டுக்காரர்களால் திரிக்கப்பட்டுதான் நமக்குக்கிடைத்திருக்கிறது. முழவதுமன்று. புரட்டுக்காரர்களின் கொடுங்கரங்கள் நீட்டப்படாமல் இல்லையென்பதுதான் என் வாதம். எனவே தமிழன் வரலாறு தொடர்கதையாகவாவது இருக்க விடுங்கள்..சமணர்கள் கொல்லப்படவில்லை; நாட்டை விட்டு விரப்படவில்லை. சம்பந்தரும் ம்ஹாராணியும் குலச்சிறையாரும் மன்னனை மட்டுமே சமணத்திலிருந்து சமண்ர்களுக்கு எத்தீங்கு வராமல் மீட்க ஆலோசனை செய்தார்கள் என்று சொல்லவருகிறீர்கள். சபாஷ்! நன்றி. உங்கள் இன்பத்தில் நான் குறுக்கிடவிரும்வில்லை. ஆனால்,. என்னைப்பொறுத்தவரை, ஒரு பெரும் சதியே சமணர்களுக்கு எதிராக நடந்தது பாண்டிய நாட்டில், பெருந்துறவிஒருவர் அதில் ஈடுபட்டார். சமணர்கள் மதமும் வாழ்க்கை முறையும் அத்துறவியால் பகடி செய்யப்பட்டு எழுதப்பட்டது. அவை அப்படியே இன்றும் அழிக்கப்படாமல் நிற்கின்றன. இவற்றை எவரும் மறுக்க முடியாது ஒருவேளை அச்சொற்களை அழிக்கலாம். அல்லது அவர அப்ப்டி நினைத்து எழுதவில்லையெனலாம். அப்படி ஒருவர் எழுதியதை இன்று படித்தேன். தெ பொ மீதான் அவர்.குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர். தெ பொ மீ, குண்டர்கள் என்றால் நாம் நினைக்கும்பொருளே இல்லை என்று சொல்லி சம்பந்தரைக்காப்பாற்று முயற்சியாக ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலில் பெயர்: சம்பந்தரும் சமணரும் (மணிவாசகர் பதிப்பகம்) குண்டர்கள் என்பது ஒரு பொருட்பன்மொழியன்று; பலபொருள் ஒரு மொழி என்று வாதிக்கிறார். எனினும் அவர் மனசாட்சி அவரைத்தட்டுகிறது. அந்நூலில் முடிவில் சம்பந்தர் சமணர்களை எள்ளிநகையாடிய இடங்கள் உண்டு என்று ஒத்துக்கொள்கிறார். நூலில் உள்ளே சமணர்களின் மததத்துவத்தை, வாழ்க்கை முறையை எங்கெங்கு எள்ளி நகையாடினார் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டு அதையும் நாம் படித்தவிடுகிறோம். (35 உருபா நூலது)பிறமத இன மக்களின் வாழ்க்கையை நகையாடுவது கற்றவர் பண்பல்ல என்று இராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கண்டிததார். மயிலாப்பூர் மடம் போட்ட சரிதையில் அது சொல்லப்படுகிறது. திபெத்தியப் பெண் பல ஆண்களை மணக்கும் கலாச்சாரத்தை விவேகானந்தர் நகையாடியதைத்தான் உடனே அவர் குரு கண்டித்தார். Narendra, don't laught at different cultures of people. A good lesson to the young man who came to study under him then.There are no superior or inferior cultures in the world: THERE ARE ONLY DIFFERENT CULTURES என்பதுதான் ஆந்த்ரோபாலஜியின் அடிப்படை. இஃதை ஒத்துககொள்ளாமல் வாழ்வோர் சமூகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வோர். சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை - அவர்கள் பல நூல்களை பாண்டியன்+மாதேவி+சம்பந்தர்+குலச்சிறையார் கூட்டணி வெற்றிகரமாக அழித்தாலும் (புலன் வாதமாம். ஓட்டைக்கவிதைகள் வைகையில் அடித்துச்செல்லப்படுமாம்!). ஓட்டையா? சமூகத்துக்குத் துரோஹமாக செய்தன திருக்குறளும் நாலடியாரும், திரிகடுகமும், ஏலாதியும்? எஞ்சி நிற்பவை தமிழன்னைக்கு அணிகலன்களாக இருந்து அவளை அழகு செய்துக்கொண்டேயிருக்கின்றன. இருக்கும்.நம் மரபுகள் என்றால் அவை அப்படியேவா இருந்தனவா சம்பந்தர் காலத்தில?. எவை நம் மரபுகள்? சம்பந்தரின் மதமா? ஏன் பவுத்தமில்லை? சமணமில்லை? நம் மதமெது? நம் மரபுகள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்? சங்ககாலமென்பதே கிபி 2லிருந்து என்று இரா.பி.சேதுப்பிள்ளையின் ஆங்கில நூல் சொல்கிறது. அவருடன் பலரும் ஒத்துவர, தமிழரின் ஆதிமரபுகள் எவையெவை? சங்கத்திலிருந்தா? இங்கொருவர் எழுதியது போல சங்கம் என்ற சொல்லே தமிழா? கி பி 2லிருந்துதான் நமக்கு ஒரு மரபுகள் கொண்ட வாழ்க்கை கிடைத்ததா?இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்: மிந்தமிழில் முன்னுரைதான். என்றோ எப்போதோ எல்லாம் கலந்த வாழ்க்கையை இப்போது நாம் கொண்டிருக்கிறோம். சம்பந்தர் காலத்தவரும் நான் எழுதியதை அன்று சொல்லியிருப்பர். இக்கலப்பு இன்றும் தொடர்கிறது. 1500 பீஹார் இளைஞர்கள் தென்னிந்திய இரயில்வேயில் ஒரே நாளில் சேர்ந்திருக்கின்றனர். நாடும் மனிதர்கள் செக்கு மாடுகளல்ல. சுற்றிசுற்றி ஓரேயிடத்தை வலம் வர. இன்றைய உலகில் எதுவும் நிலையன்று.சமணர்கள் அந்நிய மரபுகளைக்கொண்டுவந்தார்களாம். எனவே அவர்களை விரட்டினார்களாம். வடமொழி வந்ததே? வேதமுழக்கங்கள் விண்ணைப்பிளந்தனவே? அம்மரபுகளை ஏற்றவர்கள் சமணர்களின் மரபுகளை மட்டும் நுழையக்கூடாதென்பது என்ன வாதம்? புராணங்களங்களும் சமஸ்கிருதமும் தமிழ்நாட்டிலேயே பிறந்தன? வைதீக மரபுப்படி கண்ணகி கோவலன் மணம் செயதார்களே? ஒரு சமணமுனிதானே அதையும் தாராளமான மனதுடன் எழுதினார்? அவர் உங்களை ஏற்க அவரை நீங்களேன் மறுதலிக்கிறீர்கள்? போலிவாதமிது.மதம் மனத்தை விரிவுபடுததவேண்டும். குறுக்கினால் அது மதமன்று. ---மதம்--- (arrogance)
--
வணக்கம் ஐயா.
On 03-Jul-2015 9:42 pm, "Bala Sundara Vinayagam" <balasundar...@gmail.com> wrote:
>
> சம்பந்தரைப்பற்றிய பிரச்சினையில் சம்பந்தர் எழுதிவற்றையே சாட்சியா? அவரைக்கேட்டால் சமணர்கள் தீவைத்ததாகத்தானே சொல்வார்? சமணர்களைக்கேட்டால்? கட்சிக்காரரே நீதிபதியா? வேறு எவராவது எழுதியிருந்தால் காட்டுங்கள்.
இது போன்ற கேள்விகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை. பயனில் பாராட்ட விருப்பம் இல்லை ஐயா.
2015-07-02 12:03 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:On Wednesday, 1 July 2015 11:22:03 UTC-7, Bala Sundara Vinayagam wrote:........குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர்.சம்பந்தர் துறவு மேற்கொள்ளவில்லை; நிறைய எழுதுகிறீர்கள்.கூடவே தகவற்பிழையும்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !சம்பந்தர் நல்லூரில் மணம் புரிந்து கொண்டார்.விரிவான பல வகை தகவல்களைத் தரும் திரு. பால சுந்தர விநாயகம் இங்கு சம்பந்தரை மாபெறும் துறவி என்று குறிப்பிடுவது ஒரு வகை கிண்டலான பயன்பாடாக எனக்கு மனதில் படுகின்றது. காரணம் இளம் பிராயத்தில் சம்பந்தரும் திருமண பந்தத்தில் விருப்பம் கொண்டு திருமணமும் நடந்தது என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.ஆக ஒரு சமயத்தினர் நம்பிக்கை கொண்டு உயரத்தில் வைத்து போற்றும் பெரியோரை கிண்டலான வகையில் ஏளனம் செய்வது சரியான முறையல்ல என்பதையும் இது அச்சமயத்தைப் பேணுவோரை மிக வருத்தும் ஒரு செயல் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். புரிதலுக்கு நன்றி.சுபா
--