குமரிக்கண்டம் -? (பாகம்-11 )
2.ஈ .சிலம்பில் கடல்கோள்
குமரிக்கோடு என்பதற்கு “இமயமலை போன்ற பெரிய மலை என பாவாணர் பொருள் கொள்கிறார். இது சரியா என சிந்திக்க வேண்டும்.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
திருச்செங்கோடு தவிர வேறு எந்த மலையாவது “கோடு” என்று முடிகிறதா என அண்மையில் முகநூலில் அன்பர்களைக் கேட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் கொல்லங்கோடு, விளவங்கோடு, குருந்தக்கோடு, கோழிக்கோடு என ஏகப்பட்ட பதில்களை எழுதியிருந்தார்கள். எதுவுமே மலை இல்லை. எல்லாமே நீர்க் கரையில் அமைதுள்ளன. நண்பர் உதயன் எழுதியிருந்த சேரங்கோடு மட்டுமே, வயநாடு பகுதியில் வழித்திரிக்குக் கிழக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ளது.. மணவாளக்குறிச்சி- முட்டம் பகுதிகளில் பணியாற்றும் போது, குமரி மாவட்டத்தில் , குமரிக்கு வடமேற்கே உள்ள தமிழகப் பகுதியில் எத்தனையோ கிராமங்கள் “கோடு” எனும் பெயரில் முடிந்ததைக் கண்டேன். எங்கும் மலையில்லை. நீரோடைகள் அல்லது நீர்நிலைகள் இருந்தன. நீங்களும் கூகுள் எர்த் இல் பார்க்கலாம்.
கோடு என்பதற்கு நீர்க்கரை எனப் பொருள் கொள்வார் அரும்பத உரையாசிரியர். அடியார்க்கு நல்லார் இவரைத் தழுவியே சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அகரமுதலியும் கோடு எனும் சொல்லிற்கு, மலை, குன்று, நீர்க் கரை , வளைவு எனப் பொருள் கூறுகிறது. கோடு எனும் சொல் வளைவு எனும் பொருளில் எங்கெங்கே வருகிறது எனப் பார்க்கலாம். கம்ப இராமயணத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் வரும் பாடலைப் பாருங்கள்.
“ஆடவர் நகையுற ஆண்மை மாசுற
தாடகை எனும் பெயர் தையலாள் படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை, வாழ்வு இது “ எனச் சொல்லினாள் .
வளைந்த வில்லை ஏந்திய இராமன்......
கோடிய எனும் சொல் வளைந்த எனும் பொருளில் வருவதைக் காண்க.
இனி, இதே படலத்தில் இன்னுமொரு பாடல்
“ ‘நாடி உனக்கு ஒன்று உரை செய்வேன் நளிர்மணி நகையாய்
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேளை
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
கோடி’ என்றால் உள்ளமும் கோடிய கொடியாள்”
மந்தரை (கூனி) உடல் மட்டும் வளைந்தது அன்று....அவள் உள்ளமும் வளைந்த ஒன்று தான் என்று கம்பன் உரைக்கிறான்.
அடுத்து சிதம்பரத்தில் இருந்து தெற்கு நோக்கி நீளும் தமிழகக் கிழக்குக் கடற்கரை, ஓர் இடத்தில் 90 பாகை வளைந்து மேற்கு நோக்கித் திரும்புகிறது. . அந்த இடம் கோடியக் கரை , அதாவது வளைந்தகரை என்றே வழங்கப் படுகிறது. திருச்செங்கோடு, முற்காலத்தில் செங்குன்றம் என்றும் செங்கோட்டு மலை என்றும் அழைக்கப் பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல்
|
சாம்பல் நிற நைஸ் பாறைகளில் இளம்சிவப்பு நிற (POTASH RICH) கிரானைட் பாறை கோடு போல் ஊடுருவியுள்ளதாலேயே அது திருச்செங்கோடு எனப்படுகிறது..(காண்க :படம்). ஆதலின் குமரிக்கோடு எனும் தொடருக்கு குமரி மலை என பொருள் கொள்ளாமல் வளைந்த கரையை உடைய குமரி அடுக்கம் எனப் பொருள் கொள்வதே சரி என்று தோன்றுகிறது. |
கோடு என்பதற்குப் பல பொருள்கள் இருக்கின்றன. அரபிக்கடலில் உருவாகி, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியைத் தாண்டித் தமிழ்நாட்டுக்கு வரும் தென்கிழக்குப் பருவக்காற்றை முல்லைப்பாட்டு வருணிக்கிறது.
குமரிக்கண்டம் -? (பாகம்-11 )
2.ஈ .சிலம்பில் கடல்கோள்
குமரிக்கோடு என்பதற்கு “இமயமலை போன்ற பெரிய மலை என பாவாணர் பொருள் கொள்கிறார். இது சரியா என சிந்திக்க வேண்டும்.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
திருச்செங்கோடு தவிர வேறு எந்த மலையாவது “கோடு” என்று முடிகிறதா என அண்மையில் முகநூலில் அன்பர்களைக் கேட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் கொல்லங்கோடு, விளவங்கோடு, குருந்தக்கோடு, கோழிக்கோடு என ஏகப்பட்ட பதில்களை எழுதியிருந்தார்கள். எதுவுமே மலை இல்லை. எல்லாமே நீர்க் கரையில் அமைதுள்ளன. நண்பர் உதயன் எழுதியிருந்த சேரங்கோடு மட்டுமே, வயநாடு பகுதியில் வழித்திரிக்குக் கிழக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ளது.. மணவாளக்குறிச்சி- முட்டம் பகுதிகளில் பணியாற்றும் போது, குமரி மாவட்டத்தில் , குமரிக்கு வடமேற்கே உள்ள தமிழகப் பகுதியில் எத்தனையோ கிராமங்கள் “கோடு” எனும் பெயரில் முடிந்ததைக் கண்டேன். எங்கும் மலையில்லை. நீரோடைகள் அல்லது நீர்நிலைகள் இருந்தன. நீங்களும் கூகுள் எர்த் இல் பார்க்கலாம்.
On Saturday, June 25, 2016 at 8:42:39 AM UTC-7, singanenjan wrote:குமரிக்கண்டம் -? (பாகம்-11 )
2.ஈ .சிலம்பில் கடல்கோள்
குமரிக்கோடு என்பதற்கு “இமயமலை போன்ற பெரிய மலை என பாவாணர் பொருள் கொள்கிறார். இது சரியா என சிந்திக்க வேண்டும்.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
திருச்செங்கோடு தவிர வேறு எந்த மலையாவது “கோடு” என்று முடிகிறதா என அண்மையில் முகநூலில் அன்பர்களைக் கேட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் கொல்லங்கோடு, விளவங்கோடு, குருந்தக்கோடு, கோழிக்கோடு என ஏகப்பட்ட பதில்களை எழுதியிருந்தார்கள். எதுவுமே மலை இல்லை. எல்லாமே நீர்க் கரையில் அமைதுள்ளன. நண்பர் உதயன் எழுதியிருந்த சேரங்கோடு மட்டுமே, வயநாடு பகுதியில் வழித்திரிக்குக் கிழக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ளது.. மணவாளக்குறிச்சி- முட்டம் பகுதிகளில் பணியாற்றும் போது, குமரி மாவட்டத்தில் , குமரிக்கு வடமேற்கே உள்ள தமிழகப் பகுதியில் எத்தனையோ கிராமங்கள் “கோடு” எனும் பெயரில் முடிந்ததைக் கண்டேன். எங்கும் மலையில்லை. நீரோடைகள் அல்லது நீர்நிலைகள் இருந்தன. நீங்களும் கூகுள் எர்த் இல் பார்க்கலாம்.
நீர்க்கரைக்கு கோடு என்னும் பெயரை வேறுமுறையில் எழுத 4-5 ஆம் நூற்றாண்டில் முயற்சி செய்தனர். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம். வட்டெழுத்து தொடக்க காலம்.காசரகோடு (காஞ்சிரங்கோடு) அருகே கிடைத்த கல்வெட்டு.செங்கோடு, சேரங்கோடு, காஞ்சிரங்கோடு போல மலைக்கு -கோடு என்ற பெயரில் கொற்றிகோடு உள்ளது. கன்யாகுமரிக்கு மிக அருகே.கொற்றவை (கன்யாகுமரி) கொற்றி என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறாள். அதன் அருகே வேளிமலை உள்ளது. பிரசித்தமான முருகன் தலம் வேளிமலை.வேள் - வேளி எனவாகும். கொற்றி = குமரி (கன்யா குமரி), எனவே தன் தமிழ்தேசிய நாவலில் இளங்கோ அடிகள் கொற்றிகோடு, சற்றுமாற்றி குமரிக்கோடு என்றால்.கோற்றிகோடு மலையே கடல் சுனாமியின் போது மூழ்கியது என்கிறார். காலப்போக்கில் இக் கதை விசுவரூபம் எடுத்து, குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம்என வளர்ந்துவிட்டது.இக்கதைகளுக்கான அடிப்படையை இலக்கிய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. சமணர்களின் கொடையை மறைக்க அகத்தியர் தமிழ் இலக்கணம் எழுதினார்என்றும், முதல், இடை, கடை சங்கங்கள் என்றும் சைவர்கள் “இறையனார் அகப்பொருள்” நூலிலும், உரையிலும் கதைகள் கட்டினர்.
கொற்றிகோடு‘என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .’
கோடு என்பதற்கு மலை எனும் பொருளும் உண்டு என்று அன்பர்கள் எடுத்துக் கூறினர்.
சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதைக்கு முன்பு, புகார் காண்டத்தில் இறுதியாக வரும் , நாடுகாண் காதையில் 35 ஆவது பாடல் இதோ.
தாழ்
பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து.
‘கொழும் புனல் காவிரி வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து”., என்பதற்கு நீர் நிறைந்த காவிரியாற்றின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து என்பதே பொருள். ஆதலின் கோடு எனும் சொல் இங்கே கரை எனும் பொருளில் வந்துள்ளது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
‘கொழும் புனல் காவிரி வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து”., என்பதற்கு நீர் நிறைந்த காவிரியாற்றின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து என்பதே பொருள். ஆதலின் கோடு எனும் சொல் இங்கே கரை எனும் பொருளில் வந்துள்ளது.
--
அன்பின் பா.ரா. ஐயா அவர்களுக்கு வணக்கம் .அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் என்று நாட்டாரவர்கள் கூறுகிறார்கள். எனவே இங்கே கோடு என்பது உயரமான மேடு என்றாகிறது.அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் எனும் தொடரில் "உயரமான" என்று பொருள் கொள்ளும்படி எந்த சொல் இருக்கிறது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அருள் கூர்ந்து தெளிவு படுத்துமாறு வேண்டுகிறேன்.
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தங்கள் கற்பனை நன்றாகத்தான் உள்ளது.இந்தப் பாடல் 'நகர் காண் காதையில் வருவது.கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர் நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு நோக்கி, காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து " என்பதே இங்கு பொருள். இடம் பொருள் நோக்காமல் அவரவர் தனக்குத் தோன்றியவாறு பொருள் கொண்டால் அர்த்தம் -அனர்த்தம் ஆகி விடும். பாடலை முழுமையாகப் பார்த்து விட்டு, பின் பொருள் தெளிக. நன்றி
வட பெரும்கோடு = குடகு நாட்டு பெரிய மலைகள்." என்று நீங்கள் அளித்துள்ள விளக்கம் முழுக்க முழுக்க தவறு.
இதற்கு'கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர் நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு நோக்கி, காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து " என்பதே இங்கு பொருள். இடம் பொருள் நோக்காமல் அவரவர் தனக்குத் தோன்றியவாறு பொருள் கொண்டால் அர்த்தம் -அனர்த்தம் ஆகி விடும்.' என நான் கூறியதை ஏற்க தங்களுக்கு மனமில்லை போலும் .
குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது. (பாவாணர்)
--
ஐயா!தங்களின் வயது கருதி அல்ல. தாங்கள் வகிக்கும் பதவிக்குத் தான் இந்த ஐயா! மிகப் பெரும் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்திருக்கும் தங்களை ஐயா என்று அழைப்பதுதானே முறை.ப.பாண்டியராஜா
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு, வணக்கம்.