சங்கத்தமிழ் நாள்காட்டி : சங்க இலக்கியப்பாடல்கள் - விளக்கங்கள் ஓவியங்களுடன்

124 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 30, 2025, 6:12:27 PMSep 30
to மின்தமிழ்

Screenshot 2025-10-01.jpg
முள்ளம்பன்றி வேட்டையாடிய கானவர்

வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டுவலம் படுத்த உவகையன், காட்ட
நடுகால் குரம்பைத் தன் குடிவயின் பெயரும்! (நற். 285:3-7)
        மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

பொருள்:
வலிய கையையுடைய கானவன், தன் கொடிய வில்லை வளைத்து
அம்பைத் தொடுத்து ஆண் முள்ளம்பன்றியைக் கொன்றான்.
அதனை எடுத்துக்கொண்டு வேட்டையில் வெற்றியடைந்த மகிழ்ச்சியோடு
காட்டின் உள்பகுதியில் உள்ள தன் சிறிய குடிலுக்குள் சென்றான்.
மனையிலிருந்த நாய்கள் அவனைக் கண்டு சுற்றி விளையாடின.

A strong-handed forester splits the chest of a porcupine
With his dart and takes home its body,
His heart overflowing with the joy of triumph!
As he reaches his hut, all his pet-dogs
Gleefully bark and surround him.

*படத்தில் கூட முள்ளம்பன்றியைப் பார்த்திராதவர்களும் 
அது எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !!!!
🦔

தேமொழி

unread,
Oct 1, 2025, 5:08:29 PMOct 1
to மின்தமிழ்
Screenshot 2025-10-02.jpg

இறகினை அம்பில் கட்டும் வேட்டுவர்

கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன்
இடுமுடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முதுபாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன்தூவி
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்! (நற். 329:2-6)
          மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

பொருள்:
பாலை நிலத்தின் வழியில் கொலைசெய்யப்பெற்றவர்களின் பிணங்கள்
புதைக்கப்படாமல் நாற்றம் வீசியபடி, அங்கங்கே கிடந்தன. அவற்றின்
அருகில் இருந்த புள்ளிகளை உடைய, புதிதாகக் குஞ்சு பொரித்த பருந்து,
அந்தப் பிணங்களை உண்ணாமல் சிறகடித்துப் பறக்கும்.
அப்போது உதிர்ந்த அதன் இறகினை எடுத்த கானவன்,
தனது அம்பின் ஒரு பக்கத்தில் இறுகக் கட்டினான்.

Unable to feed upon the corpses of the wayfarers,
Killed and left unburied by the brigands;
An aged vulture sheds soft feathers as it flies away from the stink,
The brigands collect them and fasten to their blood-stained darts.

தேமொழி

unread,
Oct 2, 2025, 9:01:30 PMOct 2
to மின்தமிழ்
Screenshot 2025-10-03.jpg
தாயானாள் என் தலைவி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல்அம்சில் ஓதி? என,
பல்மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் என்கண்டு, மெல்ல
முகைநாண் முறுவல் தோற்றி,
தகைமலர் உண்கண் கை புதைத்ததுவே! (நற். 370: 5-11)
          உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

பொருள்:
புதல்வனைப் பெற்றுத் தந்ததனால் தாய் என்று பெயர் பெற்று, அழகிய வரிகளுடன்
வெண்புள்ளி போன்ற தேமலையும் உடைய அடிவயிற்றினைக் கொண்டவள் படுத்திருந்தாள்.
அப்போது அங்கே வந்த தலைவன், 'முதுமை அடைந்ததால்' இவ்வாறு தூங்குகிறாயோ?
என்று கூறியவாறே அவளது வயிற்றில் குவளை மலரால் ஒற்றினான்.  
அவள் கண் விழித்து,  முல்லையின் மொட்டுப்போல் புன்னகை பூத்து,
அழகிய மைபூசப்பெற்ற கண்களைக் கையால் மூடிக்கொண்டாள்.

My beloved blessed our clan with a son;
Praising her, I stroked her stomach with a bloom of kuvalai,
She smiled gently with her teeth shining, like the mullai buds.
And covered her kohl-rimmed eyes with her hands.

தேமொழி

unread,
Oct 3, 2025, 9:10:25 PMOct 3
to மின்தமிழ்
Screenshot 2025-10-04.jpg

ஆதரவு அற்றதாகியது அருள்

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயின் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே,
அருளே மன்ற ஆரும் இல்லதுவே! (குறுந். 174)
          வெண்பூதி

பொருள்:
மழை பெய்யாத பாலை நிலத்தில்
கள்ளிச் செடியின்  காய்வெடித்துச் சிதறும்போது
எழும் சத்தத்தால்  இணைப் புறாக்கள் அஞ்சி ஓடும்.
இத்தகைய கொடிய பாலை வழியில் தனியாகப்
போவது பாதுகாப்பற்றது என்று கருதாமல், நம்மை விட்டுப்
பொருள் தேடிச் சென்றான் தலைவன். அப்படியென்றால், இவ்வுலக வாழ்க்கைக்கு
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொருள்தான் உயர்வானதோ?
அருளை ஏற்பார் யாரும் இல்லையோ?

Irrespective of hardships faced on the parched way
Where a pigeon couple part away
On hearing the sound of the kalli fruit crack,
If he still goes away in search of wealth,
Then in this world wealth is all that matters;
Love doesn't matter at all.

தேமொழி

unread,
Oct 4, 2025, 8:10:42 PMOct 4
to மின்தமிழ்
Screenshot 2025-10-05.jpg
அதுதான் எங்கள் ஊர்

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று! ஞமலியும் இளைத்தன!
செல்லல் ஐஇய! உது எம் ஊரே! (குறுந். 179:1-3)
          குட்டுவன் கண்ணன்

பொருள்:
ஆரவாரமுடைய காட்டில் குறவர்கள், கடமாவை வேட்டையாடி
முடிக்கவே அன்றைய நாள் கழிந்தது. உடன்வந்த வேட்டை நாய்களும் சோர்ந்தன.
இவ்வேளையில் செல்ல வேண்டாம். ஐய! எம் ஊர் அதோ இருக்கிறது.

Having hunted bison in the noisy forest the whole day
The hunting dogs are tired; daylight too has dimmed;
My Lord! Our town is nearby.
(An invitation to stay at her town)

தேமொழி

unread,
Oct 5, 2025, 7:50:47 PMOct 5
to மின்தமிழ்
Screenshot 2025-10-06.jpg

காண்பார் அல்லவா தோழி!

சென்ற நாட்ட, கொன்றைஅம் பசுவீ
நம்போல் பசக்கும் காலை, தம்போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே! (குறுந். 183:1-4)
ஒளவையார்

பொருள்:
நம்மைப் பிரிந்து தலைவர் சென்ற நாட்டில், கார் காலத்தில்
நம்மைப் போல் பசலை படர்ந்த கொன்றை மரத்தின் மலர்களையும்,
சிறிய தலையையுடைய பெண்மானைப் பிரிந்த முறுக்கிய கொம்புகளைக் கொண்ட இரலை ஆண் மானையும் அவர் காண்பார் அல்லவோ, தோழி!

In the town he has gone to, yellow flowers bloom
Just like my freckles, during monsoon;
A blackbuck with gnarled horns stands
Separated from it's small headed doe.
Will my lover see them?

தேமொழி

unread,
Oct 6, 2025, 7:44:18 PMOct 6
to மின்தமிழ்
Screenshot 2025-10-07.jpg
கண் வலையில் அகப்பட்ட என் நெஞ்சம்

... மாண்தகை நெஞ்சம்
மயில்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மடமகள்
கண் வலைப் படூஉம் கானலானே! (குறுந். 184: 4-7)
          ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

பொருள்:
மயிலின் தோகையைப் போன்ற நீண்ட கூந்தலை உடையவளும்,
செம்மையாக உருவாக்கப்பெற்ற பாவை போன்றவளுமான அவள்,
நுண்ணிய வலைகளையுடைய பரதவரின் மகள். இளமை பொருந்திய அவளது
கண் வலையில் அகப்பட்டு அங்குள்ள கடற்கரைச்
சோலையிலேயே என்னுடைய நெஞ்சம் தங்கிவிட்டது.

She's the daughter of fisherfolk with fine nets;
My blessed heart has been snared
By the eyes of that beauty,
With hair that's dark like eyes in peacock feathers.

தேமொழி

unread,
Oct 7, 2025, 7:18:30 PMOct 7
to மின்தமிழ்
Screenshot 2025-10-08.jpg

இன்பநுகர்வும் துறவும்

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யுமோனே,
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! (புறம். 252)
          மாற்பித்தியார்

பொருள்:
வெண்மையான அருவி நீர் படுவதால்
தில்லை மரத்தின் இலையின் நிறம் பழுப்பு நிறமாக மாறும்.
அப்படிப் பழுப்பு நிறம் பெற்ற சடை முடியுடன் இப்போது
தாளி இலையைப் பறிக்கிறார் துறவி.
இவரே, முன்பு தன் மனைவியைக் கவரும் வகையில்
சொல்வலை வீசி வேட்டையாடுபவனாக விளங்கினார்.

The roaring white waterfalls dulled
His braided hair to the color of thillai leaves.
He who now gathers fresh leaves in a forest as an ascetic,
Once hunted his homebound naïve woman with his words.

தேமொழி

unread,
Oct 8, 2025, 8:28:52 PMOct 8
to மின்தமிழ்
Screenshot 2025-10-09.jpg

வென்று வந்தான்

யார்கொலோ, அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே! அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே! காலைப்
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பைஎன எண்ணி,
சிலையின் மாற்றியோனே! (புறம். 257:5-10)
          பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
யார் அவன்? இரங்கத்தக்கவன்! ஆராய்ந்து பார்த்தால் இவன் தன்
ஊரை விட்டுச் சென்றதும் இல்லை. காட்டிற்குச் சென்று
மறைந்துகொண்டதும் இல்லை. இன்று காலையில்
பகைவரின் ஆநிரைகள் செல்லும் வழியைப் பார்த்து
அவற்றைக் கவர்வது பற்றி எண்ணி, மீட்க வந்த கரந்தை வீரர்கள் அனைவரும்
நடுகல் ஆகும்படியாகப் போரிட்டு அழித்து வந்துள்ளான்.

He hadn't stepped out of his town
Nor camouflaged himself in the forest till now;
Yet, he watched and counted the enemy's cattle,
And seized them with the help of his bow.

தேமொழி

unread,
Oct 9, 2025, 7:43:27 PMOct 9
to மின்தமிழ்
Screenshot 2025-10-10.jpg

முன்னெச்சரிக்கையுடன் செல்க!

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தர, பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்!
செல்லல், செல்லல், சிறக்க நின் உள்ளம்! (புறம். 259:1-4)
          கோடை பாடிய பெரும்பூதனார்

பொருள்:
ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரர்கள் அந்த ஆநிரைகளின் பின்னால் செல்லாமல், மீட்க வரும்
கரந்தை வீரரை எதிர்கொள்வதற்காக இலை சூழ்ந்த காட்டில் தங்கள் தலையை
மறைத்துக்கொண்டு வில்லுடன் பதுங்கி இருப்பர். எனவே காவல்
புரிவோரைக் கருதாமல் செல்லற்க! உனது முயற்சி வெற்றி பெறட்டும்.

O' warrior, wait, don't rush forward;
Beware of skilled archers who stay back
Hiding in the leafy forest, as the herd
Of bulls and cows they stole move ahead.

தேமொழி

unread,
Oct 10, 2025, 8:38:15 PMOct 10
to மின்தமிழ்
Screenshot 2025-10-11.jpg


சூளுரைத்து வென்றான்

முன்ஊர்ப் பூசலின் தோன்றி, தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளியாளர்
விடுகணை நீத்தம் துடி புணை ஆக,
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்,
வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்,
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரையன்! (புறம். 260:12-19)
          வடமோதங்கிழார்

பொருள்:
போரில், தன் ஊரின் ஆநிரைகளைக் கவர்ந்த
வீரர்களால் தொடர்ந்து எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தை,
தன் உடுக்கையையே புணையாகக் கொண்டு தடுத்துக் கடந்தான்.
பகைவரைக் கொன்று, அவர்கள் கவர்ந்துசென்ற ஆநிரைகளை மீட்டான்.
உலகில் உள்ளோர் வருந்தும்படியாக விண்ணில் பாம்பிடம்
மாட்டிய நிலவு மீண்டதைப் போலக் கன்றையுடைய
ஆநிரைகளுடன் வருவேன் என்ற அவனுடைய சொல்
உண்மையாகும்படி மீட்டு வந்தான் அந்தக் கரந்தை வீரன்.

When the next towns people seized his town's cattle,
He went to battle, crossed their flood of arrows
With just his drum as a raft, felled their chief
And brought back the cattle as he promised.

தேமொழி

unread,
Oct 11, 2025, 10:23:32 PM (14 days ago) Oct 11
to மின்தமிழ்
Screenshot 2025-10-12.jpg

ஊர் விழாக்கோலம் பூணட்டும்

நறவும் தொடுமின்! விடையும் வீழ்மின்!
பாசுவல் இட்ட புன்கால் பந்தர்ப்
புனல்தரு இளமணல் நிறையப் பெய்ம்மின்!
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின்நின்று,
நிரையொடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னிலும் பெருஞ்சாயலரே! (புறம். 262)
          மதுரைப் பேராலவாயார்

பொருள்:
பகைவரின் தூசிப்படையை வீழ்த்தித் திரும்பும் போது தன் படைக்குப் பின்னால்
ஆநிரையுடன் வருகிறான் என் தலைவன்.
அவனுடன் வருவோர் அவனை விடவும் களைப்புடன் வருவர்.
எனவே மதுவைப் பிழிந்து வையுங்கள். ஆட்டுக் கடாயை வெட்டுங்கள்.
பசுமையான தழையினால் வேயப்பட்ட கால் நாட்டப்பட்ட பந்தலின்கீழ்
நீரால் அடித்துவரப்பெற்ற ஆற்றுமணலை நிறையப் பரப்புங்கள்.

Strain the toddy! Slaughter a male goat!
In a pavilion with pale columns, roofed over with green leaves,
Spread the fresh sand brought by streams.
My lord is approaching now with a herd.
But more tired than him are the men beside him
Who had ruined the enemy vanguard.

தேமொழி

unread,
Oct 12, 2025, 7:13:39 PM (13 days ago) Oct 12
to மின்தமிழ்
Screenshot 2025-10-13.jpg

ஆநிரைகளை மீட்ட மாவீரன் பண்ணன்

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,
ஓங்குநிலை வேங்கை ஒள் இணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல்ஆன் கோவலர் படலை சூட்ட
கல்ஆயினையே! (புறம். 265:1-5)
          சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

பொருள்:
உயர்ந்து வளர்ந்திருக்கும் வேங்கை மரத்தின் ஒளியும் மணமும் நிறைந்த மலர்களைப் பறித்து,
அதனைப் பனை நாரினால் பல ஆநிரைகளைக் கொண்ட ஆயர்கள் தொடுத்தனர்.
அவர்கள், அந்த மாலையை உனக்குச் சூட்டி வணங்குமாறு
ஊருக்கு வெளியே உள்ள வறண்ட நிலத்தில் நடுகல்லாக நிற்கிறாயே!

O' my lord! You have turned to a hero stone now,
In the wasteland faraway from town,
Worshipped by cattle herders who garland it
With bright fragrant flowers of vengai tree.

தேமொழி

unread,
Oct 13, 2025, 9:08:31 PM (12 days ago) Oct 13
to மின்தமிழ்
Screenshot 2025-10-14.jpg

அந்தோ! என் தலைவனின் குதிரை

மா வாராதே! மா வாராதே!
எல்லார் மாவும் வந்தன, எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே!
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல், அவன் மலைந்த மாவே! (புறம். 273)
        எருமை வெளியனார்

பொருள்:
என் தலைவனின் குதிரை வரவில்லை! என் தலைவனின் குதிரை வரவில்லை!
மற்றோர் சென்ற குதிரைகள் எல்லாம் திரும்பி விட்டன.
சிறிய குடுமியைக் கொண்ட என் மகனின் தந்தை
சென்ற  குதிரை மட்டும் வரவில்லை.
இரு ஆறுகள் ஒன்றுசேருமிடத்தில் அந்த நீரைத் தடுப்பதற்காகக் குறுக்கே
போடப்பட்ட பெரிய மரமானது நிலை குலைந்து வீழ்ந்ததைப் போல,
என் தலைவன் போருக்குச் சென்ற குதிரை இறந்து வீழ்ந்தது போலும்!

His horse is not coming back!
Everyone else's horses have come back! The one that belongs
To the man of wealth who fathered the son of our house,
Has not come back! Like a huge tree that might have been caught
At the meeting place of two rivers of great size,
Has the horse, that he was fighting on, fallen?

தேமொழி

unread,
Oct 14, 2025, 7:37:14 PM (11 days ago) Oct 14
to மின்தமிழ்
Screenshot 2025-10-15.jpg
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

ஆவும் ஆன்இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும்! நும்மரண் சேர்மின்! (புறம். 9:1-5)
                    நெட்டிமையார்

பொருள்:
பசுக்களும் பசுவின் இயல்புடையோரும்
பெண்களும் நோயுடையோரும் இறந்தோருக்கு
ஈமக்கடன் செய்யும் ஆண்மக்களைப் பெறாதோரும்
பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்.

Cows, honourable men with the nature of cows, women, diseased,
And those living with no sons to perform the precious last rites,
Take refuge! We are ready to shoot volleys of arrows!

தேமொழி

unread,
Oct 15, 2025, 11:04:18 PM (10 days ago) Oct 15
to மின்தமிழ்
Screenshot 2025-10-16.jpg
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பெறும் திறை

வென்று கலம் தரீஇயர் வேண்டுபுலத்து இறுத்து, அவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப,
நல்கினை ஆகுமதி, எம்என்று அருளிக்
கல்பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த! (பதிற்று, 53:1-4)
            காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
பகைவரிடம் செல்வங்களைத் திறையாகப் பெறுவதற்குத் தகுந்த இடமாக அவர்களின் நாட்டிற்கு அருகிலேயே போய்த் தங்குவாய்!  
அதனால் அப்பகைவர் உன்னை வெல்வது அரிது என்று எண்ணி, 'யாம் நுமக்குத் தரும் இந்த அணிகலன்களையும்
குறையாத வருவாயை உடைய எங்கள் நாடுகளையும் திறையாகப் பெற்று, அருள் புரியவேண்டும்' என்று பணிவாக வேண்டுவர்.
அவர்களின் நாட்டை நீ அவர்களுக்கே திருப்பி அளித்துவிட்டு,
மலைகளும் காடுகளும் நிறைந்த உன் பழமையான ஊருக்குத் திரும்புவாய்!

You invade enemy countries and stay put there
To seize their wealth; those Kings hand over
Their entire country as tribute and plead mercy;
Accepting it you return to your old town in the lofty hill.

தேமொழி

unread,
Oct 16, 2025, 7:41:42 PM (9 days ago) Oct 16
to மின்தமிழ்
Screenshot 2025-10-17.jpg

மிகச் சிறந்த போர் வீரன் அவன்

மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து, இனியே,
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர,
கையின் வாங்கி, தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண்டனனே! (புறம். 274:3-7)
            உலோச்சனார்

பொருள்:
தன்னைக் கொல்ல வந்த யானையின் நெற்றியில் வேலைப் பாய்ச்சினான்.
பகைவர்கள் குதிரைமீதமர்ந்து அவனை வேலால்
தாக்கும்போது அவ்வேலைப் பிடுங்கி அவர்களைத் தாக்கி,
குதிரையுடன் வீழ்த்தினான். பகைவரின் தலைவனைத்
தோளால் மோதி, கையினால் தூக்கிப்பிடித்தபடி நின்றான்.

He hurls his spear at the elephant charging at him,
Catches the spear thrown at him by the enemy
And hurls it back at them; He fights their chief,
Lifts him up and slams down, killing him.

தேமொழி

unread,
Oct 17, 2025, 8:59:38 PM (8 days ago) Oct 17
to மின்தமிழ்
Screenshot 2025-10-18.jpg

சூரர மகளிர் போன்றவள்!

கடல்கோடு செறிந்த, வளைவார் முன்கை,
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள் என்
நிறையரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே! (ஐங். 191)
          அம்மூவனார்

பொருள்:
கடற்கரையில் அலையினால் கரையில் சேர்க்கப்பட்ட சங்கினை
அறுத்து உருவாக்கப்பட்ட வளையல் அணிந்த முன் கையையும்,
கழியில் மலர்ந்த மலர்களால் ஆன மாலை அணிந்த கூந்தலையும்,
கடற்கரையில் நின்ற ஞாழலின் தழையால் செய்த உடையையும்
உடையவள். சூரர மகளிர் போல் பெறுவதற்கு அரிய அவள், என்
உள்ளத்தை எடுத்து எங்கோ மறைத்துக்கொண்டாள்.

The damsel, who has disappeared after taking my resolute heart,
Has tight bangles, made of sea-conch, on her long wrists.
She who wears the wreathed blooms of lagoon on her dark and manifold tresses
Has dressed in fine attire of gnaalal leaves from the littoral grove,
And is rare to attain like the nymphs residing in the hills.

தேமொழி

unread,
Oct 18, 2025, 8:41:51 PM (7 days ago) Oct 18
to மின்தமிழ்
Screenshot 2025-10-19.jpg

மலைநாடனைக் கருதி வாட்டம் ஏன்?

குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை,
நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்கு,
கொய்தரு தளிரின்வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்! (ஐங். 216)
            கபிலர்

பொருள்:
தோழியே! குறுகிய முன் கால்களையுடைய பெரிய ஆண் புலி,
பெரிய புதர்கள் நிறைந்த காட்டில், யானை ஈன்ற
கன்றைப் பற்றுவதற்காக, பழங்கள் தொங்கும் பலாமரத்தில்
பதுங்கியிருக்கும். அந்த மலை நாடனுக்காக, நீ
கொய்த தளிர்போல வாட்டம் அடைந்து காணப்படுவது ஏன்?

Oh mother! why is your body without luster,
Like a plucked tender sprout that has wilted?
Is it because of your lover
From the country where a big, murderous male tiger
With short front legs hides in the dense shade
Of a jackfruit tree bearing fruits,
And stalks a young tottering calf of a she-elephant
In the forest with tall bushes?

தேமொழி

unread,
Oct 19, 2025, 8:25:53 PM (6 days ago) Oct 19
to மின்தமிழ்
Screenshot 2025-10-20.jpg

அந்தோ! என்ன செய்துவிட்டேன்

கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ்அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறுபல் கூந்தல் போது பிடித்து அருளாது,
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம்,
எனக்கு உரித்து என்னாள், நின்றஎன்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே! (அகம். 145:17-22)
          கயமனார்

பொருள்:
நெல் முதலிய தானிய வளம் உடையவன் இவளுடைய தந்தை.
அவனது இல்லத்தில் மெல்ல நடந்தாலும் வருந்தும் இயல்புடைய தலைவி,
ஐந்து வகையாகப் பின்னி முடிக்கப்படும் கூந்தலை உடையவள்.
அக்கூந்தலைப் பற்றி, இரக்கம் இல்லாமல் கோலால் முதுகில் அடித்தேன்.
அவள், 'இது எனக்குரிய முதுகு. அடிக்காதே!' என்று கூறாமல் நின்றாள்.
அத்தகையவளைத் துன்புறுத்திய என் தீய கைகள் துன்பத்தை அடைக!

In her father's house, abounding in food-stuffs,
When my daughter walked but a few steps, felt pained;
(When once) I caught hold of her tresses and mercilessly beat her,
She stood unflinching, as though the beaten back was someone else's.
May those cruel hands of mine which beat her undergo sufferings.

தேமொழி

unread,
Oct 20, 2025, 10:12:26 PM (5 days ago) Oct 20
to மின்தமிழ்
Screenshot 2025-10-21.jpg

பறவைகள் விரும்பிய ஆய் எயினன்

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம்பட்டென,
காணிய செல்லாக் கூகை நாணி,
கடும்பகல் வழங்கா தாஅங்கு! (அகம். 148:7-10)
          பரணர்

பொருள்:
பறவைகளைக் காக்கும் ஆய் எயினன் குதிரையில் விரைந்து செல்லும் இயல்புடையவன்.
அவன், மிஞிலியோடு போர் செய்து போர்க்களத்தில் இறந்தான்.
அத்தகையவனைப் பறவைகள் பகல் வேளையில் போய்ப் பார்த்தன.
பகலில் பார்வை இல்லாத கூகையால் அவனைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்தியது.

Grieved the owl in its hole alone in broad day-light
As it could not attend the funeral (during day time)
When Ay Eyinan fell dead
When he fought with Minili of tall chariots.

தேமொழி

unread,
Oct 22, 2025, 2:32:56 AM (3 days ago) Oct 22
to மின்தமிழ்
Screenshot 2025-10-22.jpg

முசிறித் துறைமுகம்

... சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி! (அகம். 149:7-11)
          எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

பொருள்:
சேர மன்னரின் சுள்ளி என்ற பேரியாற்றின் நுரை சிதற,
யவனர் கொண்டு வந்த மரக்கலம்,
பொன்னுடன் வந்து மிளகுடன் மீண்டு செல்லும்.
இத்தகைய வளம் வாய்ந்தது முசிறித் துறைமுகம்.

Muciri is a prosperous city
To which the vessels of the Yavanas
Come laden with gold and return with pepper,
Agitating the foaming waters of the great Sulli river of the Chera kings.

தேமொழி

unread,
Oct 22, 2025, 8:23:50 PM (3 days ago) Oct 22
to மின்தமிழ்
Screenshot 2025-10-23.jpg

நீயும் நடுங்கினாயோ தோழி?

ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்
... கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே! (அகம். 160:1-2,15-18)
          குமுழிஞாழலார் நப்பசலையார்

பொருள்:
பாய்கிற குதிரை பூட்டப்பெற்ற தலைவனது தேர்,
ஊரில் உள்ள சிறுவர்கள் ஆரவாரம் செய்யும்படியும், வாயால்
பழித்துப் பேசும் பெண்கள் பார்க்கும் வகையிலும்
பகலிலே வந்தது. இதனைக் கண்டு இது நன்மையாக இருக்கலாம்
என்று எண்ணாமல், என் நெஞ்சம் நடுங்குகிறது.
கரிய கூந்தலையுடைய தோழியே! உன் நெஞ்சமும் நடுங்கியதோ?

The chariot of our lover now visits us by broad daylight.
This is witnessed by the gossipy folks of our small village.
At this, my agitated heart trembles;
O my friend of well-combed tresses! Is it so with you too?

தேமொழி

unread,
Oct 23, 2025, 10:33:58 PM (2 days ago) Oct 23
to மின்தமிழ்
Screenshot 2025-10-24.jpg

எருமையிடம் பால் உண்ணும் யானைக் கன்று

கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி,
தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல்ஆன் பெறுமுலை மாந்தும்! (அகம். 165:1-5)

          பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
மென்மையான தலையையும் இளமையையும் உடைய பெண் யானை
பள்ளத்தில் விழுந்தது. அதனைக் கண்ட ஆண் யானை வருந்திப் பிளிறியது.
அதன் பிளிறலைக் கேட்டு அஞ்சிய யானைக் கன்று,
பழமையான ஊருக்குள் மகரந்தம் சிதறியுள்ள தெருவில் புகுந்து,
எதிரே வந்த எருமையின் மடியில் பாலை உண்டது.

A tusker trumpets aloud on the sight of its mate
Slipping into a trench, and its red-mouthed calf
Dreads the shouts and flees away to be suckled by a buffalo
In a hoary hamlet with streets rich in pollen.

தேமொழி

unread,
Oct 24, 2025, 9:08:31 PM (15 hours ago) Oct 24
to மின்தமிழ்
Screenshot 2025-10-25.jpg

நனவிலும் காண்பேன்

கனவினால் கண்டேன் தோழி! காண் தகக்
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்,
நனவின் வருதலும் உண்டு என
அனைவரை நின்றது, என் அரும்பெறல் உயிரே! (கலி. 128: 23-26)
          நல்லந்துவனார்

பொருள்:
தோழியே! கடற்கரைச் சோலையை உடைய தலைவனை
நான் கனவில் கண்டேன். கனவில் முழுமையாக வந்த
அவன், நனவிலும் வருவான் என்னும் எண்ணத்தினாலேயே
என் உயிர் எதிர்பார்த்து இருக்கிறது.

All this I dreamt, O my confidante!
And my prized life abides on the verge,
The wish, the lord of the littoral tract,
Who appeared in dream, will be around
In the flesh too, sustaining that life.
Reply all
Reply to author
Forward
0 new messages