மணிமேகலையின் சிறப்புகள்

2,092 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
Apr 25, 2014, 5:58:31 AM4/25/14
to மின்தமிழ், vallamai
மணிமேகலை கருத்தரங்கத்தில் பேசுவதற்காக இந்நூலைப் படிக்கத் துவங்கினேன். சிலப்பதிகாரம் என்ற பெரும் மாயையில் இந்நூல் அவ்வளவாக தமிழ்அறிஞர்களால் போற்றப்படவில்லை என்று கூறுகிறார்கள். பெளத்த காப்பியம் என்ற அடையாளத்தால், படிப்பார் யாரும் இல்லாமையால் அவ்வாறான
நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

வேறெந்த மெய்யியலுக்கும் இல்லாத சிறப்பு பெளத்த தத்துவதிற்குண்டு. சற்றொப்ப, கி.மு.5ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்த மெய்யியல் கருத்தாக்கங்கள் நடைப்பெற்று வந்திருக்கின்றன. தெளிந்த நீரோட்டம் போல ஓடிக்கொண்டேயிருந்ததால், கிட்டதட்ட நூற்றிற்கு மேற்பட்ட பெளத்த பிரிவுகள் உள்ளன.

மணிமேகலையின் சிறப்பம்சமாக யான் கருதும் சில கருத்துக்களை இங்கு பகிர்கிறேன். தெரிந்தவர்கள் மேலதிக தகவல்கள் தரலாம்.



1. தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. இது ஒரு பெளத்த காப்பியம்.
2. இதன் காலம் - சரியாக சொல்ல முடியாவிட்டாலும், கிபி.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுவரை இடைப்பட்டகாலக்கட்டத்தில் எழுந்தது என்பதை யாரும் மறுப்பாரில்லை.
3. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்பது பல அறிஞர்கள் கருத்தாகவிருக்கிறது.
4. கணிகைக் குல பெண்ணொருத்தியை காப்பியத்தின் தலைமகளாகக் கொண்டிலங்கும் முதல் காப்பியமும் இதுவே.
4. இந்திய இலக்கியங்களில் முதன் முதற் சமய மெய்யியல்களை எடுத்தியம்பும் முதல் நூலும் இதுவே. (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்ற எடுகோளின் படி)
5. தானத்தின் (அன்னம்) சிறப்பை எடுத்தோதும் இலக்கியமும் இதுவே.
6. சுகபோக வாழ்க்கை கிடைப்பதையும் பொறுட்டாக எண்ணாமல், துறவு வாழ்க்கைக்கு போன இரு இளம் பெண்ணின் கதையும் இதுவாகத்தான் இருக்கும்.



இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar Rajendran

unread,
Apr 25, 2014, 6:02:32 AM4/25/14
to மின்தமிழ், vallamai
மன்னிக்கவும்.

இரு இளம்-> ஒரு இளம்

Innamburan S.Soundararajan

unread,
Apr 25, 2014, 6:08:46 AM4/25/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
7. காப்பியம் முழுதும் பெண்ணின் பெருமை சாற்றப்படுவதைக் காணலாம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Apr 25, 2014, 7:59:08 AM4/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
நல்ல முயற்சி.குறிப்புக்களின் வழி மணிமேகலை அலசுவதும் சிறப்பாக இருக்கின்றது. 

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Ram Chandrasekaran

unread,
Apr 25, 2014, 9:14:13 AM4/25/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel

புத்தம் கவுதமரிடம் இறங்கியதால் புத்தரானார். கவுதமர் அதற்காக பாடுபட்டார். புத்தர் ஆனவுடன் பலநாள் அவர் அக மகிழ்ந்தார் . பின் தனது பவுத்த கொள்கைகளை பலரும் அறிந்து இன்புற வேண்டும் என்ற நல்ல நோக்கோடு சங்கம் தொடங்கினார். 
இது ஏன் ஏற்பட்டது எனில், புத்தர் காலத்தில் கிருஷ்ணரின் கொள்கைகள் மேலோங்கி இருந்தன. அனைவரும் தங்களை கோபாலன் / அவதார புருஷனாக  கருத தொடங்கி இயற்கைக்கு மாறான செயல்களை செய்ய தொடங்கினர். ஒருவன் பல மனைவிகள். (கோபாலன் என்ற கோவலன், கண்ணனின் feminine  gender கண்ணகி ) என்று சமுதாயமே மாற தொடங்கும் போது ஏற்பட்ட குழப்ப நிலையை சரி செய்ய இயற்கையின் வரப்ரசாதமே பவுத்தம்.
Teekayseer

Dev Raj

unread,
Apr 25, 2014, 3:21:29 PM4/25/14
to mint...@googlegroups.com
உயர்வு நவிற்சியற்ற சிறந்த சுருக்கமான திறனாய்வு.

பவுத்தத்தின்பால் ஈர்ப்பும், மொழித்திறனும் வாய்ந்த
ராஜம் அம்மையார், அரங்கனார், ஜாவா குமார், வினோத்
ராஜன் போன்றோர் முனைந்து நூல் சிறப்பை விளக்கினால்
இலக்கிய உலகு பயன் பெறும்


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages