பெரியார் வழியில் பெண்கள் சமத்துவம் உடைமாற்றம் - போராட்டம்.

368 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 12:11:36 AM4/17/15
to mintamil, vallamai
பெரியார் கூறிய பெண்கள் சமத்துவக்கருத்துக்களில் பெண்களுக்கான உடைமாற்றம் என்னைக்கவர்ந்த கருத்து.
ஒரு கட்டுரையில் பெண்கள் சேலை போன்ற உடைகளை விடுத்து ஆண்களைப்போலவே உடை அணிய வேண்டும். நீண்ட கூந்தலகற்றி ஆண்களைப்போல கிராப் வெட்டிக்கொள்ளவேண்டும்
என்றும் எழுதியிருந்தார்.

இந்த வகைகளில் போராட்டம் நடத்தி உடைமாற்றம், தலைமுடியில் மாற்றம், அழகு சாதனப்பொருட்கள் அழிப்பு என்று மாற்றங்கள் ஏற்படுத்தினால் அர்த்தமுள்ளதாகத்திகழும்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

செல்வன்

unread,
Apr 17, 2015, 12:25:34 AM4/17/15
to mintamil, vallamai
இதில் என்ன சமத்துவம் இருக்கு ஐயா?

அப்ப புடவை என்பது வேட்டியை விட மோசமான உடையா?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 12:48:38 AM4/17/15
to vallamai, mintamil
சேலை பெண்களின் பிரத்யேகமான உடையாக இருக்கிறது. வேட்டியுடன் ஆண்கள் போல மேல்சட்டை அணிகிறபோது தனித்தன்மை உடைக்கப்படுகிறது.
நீண்ட கூந்தல், லிப்ஸ்டிக், கண்மை போன்றவை பெண்களுக்குப் பிரத்யேகமானவை. தோற்றத்தில் வேறுபடுத்தும் தனித்தன்மையை உடைக்கிறபோது மனதலவில் ஒருவகையில் சமத்துவம் நோக்கிச்செல்ல வழிவகுக்கும்.

தாலி அகற்றும் போராட்டத்தை விட இவ்வகைப்போராட்டங்கள் அர்த்தமுள்ளவையாகவும் வலுவானவையாகவும் திகழும். சிரமமிருப்பதால் இவ்வகையில் போராட முன்வரமாட்டார்கள்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Apr 17, 2015, 1:14:27 AM4/17/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
நல்ல கருத்து, என் மகளுக்கும் நான் இதைத்தான் சொல்லி வளர்த்தேன்.

எது வசதிப்படுகிறதோ அப்படி உடுத்த வேண்டும், பெண் என்பதால் இந்த உடை, இந்த நிறம், இந்த அலங்காரம் என்று வேண்டாம்.  தட்ப வெப்பத்திற்கும், செய்யும் வேலைக்கும்  ஏற்ற உடையாக இருக்க வேண்டும்

அரைகுறை ஆடை, இறுக்கமான ஆடை, பார்த்தால் மதிப்பைக் குறைக்கும்வகையில் உள்ள ஆடை அலங்காரங்கள், ஆபாச வார்த்தைகள் உள்ளவை  தவிர்க்கப்பட வேண்டும்

என்பது எனது அடிப்படை விதி, ஆனால் வயதிற்கேற்ற விருப்பங்களை தடை செய்ததில்லை.

அவள் சிறுவயதில் லிட்டில் மெர்மைட் படம் போட்ட டி ஷர்ட்  அணிந்து இந்தியா வந்த பொழுது, என் தம்பி என் மகளை என்ன ஆபாசப்படம் போட்ட உடை அணிந்திருக்கிறாய் என்று ஓட்டியதும் உண்டு.


நான் அணிவது பேண்ட் ஷர்ட்தான்.   

பெரும்பாலும் இந்தப் பெண்மணிகளைப் போல....

..... தேமொழி 

செல்வன்

unread,
Apr 17, 2015, 1:14:38 AM4/17/15
to vallamai, mintamil
மணியம்மையே கடைசிவரை வேட்டி, பேண்ட் எல்லாம் அணியவில்லையே?

பெரியாரின் மனைவியே பின்பற்றாத விதியை தமிழ்நாட்டு பெண்கள் எப்படி பின்பற்றுவார்கள்?

நாகரிக மாற்றத்தில் பெண்கள் அணியும்வண்ணம் பாண்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை பார்த்தாலே பெண்கள் உடை என தெரியும், ஸுடிதாரும் பேண்ட் மாதிரிதான்.

என்னைகேட்டால் இதற்கு பதில் ஆண்கள் புடவை, பாவாடை தாவ்ணி அணிந்து சமத்துவத்தை நிலைநாட்ட முன்வருவதுதான் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது.

செல்வன்

unread,
Apr 17, 2015, 1:20:38 AM4/17/15
to vallamai, mintamil
இந்த உடைகள் சேலையை விட உயர்வானவையா?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 17, 2015, 1:21:46 AM4/17/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஆமாம் 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 17, 2015, 1:23:54 AM4/17/15
to vallamai, mintamil
அப்ப சரி..:-)

தேமொழி

unread,
Apr 17, 2015, 1:29:47 AM4/17/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
மணியம்மையே கடைசிவரை வேட்டி, பேண்ட் எல்லாம் அணியவில்லையே?

பெரியாரின் மனைவியே பின்பற்றாத விதியை தமிழ்நாட்டு பெண்கள் எப்படி பின்பற்றுவார்கள்?
///


cut it out selvan 

திராவிடக் கழக கருத்து அடுத்தவர்கள் சொன்னார்கள் என்பதற்காக செய்யாதே, நீயே சரியா தவறா என்று முடிவு செய் என்பது.

அதனால்தான் நல்ல வழி என்று நினைப்பதை சொல்பவர்கள் சொல்லிச் செல்வார்கள் ....கேட்பவர்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள்.

சொல்வதை செய் என்பதற்கு அது மதமோ இராணுவமோ அல்ல...மனிதநேயத்தை ... சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது.

சிந்திக்கத் தெரியாத கூட்டத்தையும், அடிமைத்தனத்தில் உழல்பவர்களையும் சுயமரியாதை பெறுங்கள் என்று சொல்பவர்களா ...  அடக்குமுறை பாணியில் நான் சொல்வதை செய் வற்புறுத்துவார்கள்..

விரும்புபவர்கள் பங்கேற்கலாம் பிடிக்காதவர்கள் போய்க் கொண்டே இருக்கலாம்.

இதனால்தான் இந்த மக்களுடைய வீட்டில் மத நம்பிக்கை உள்ளவர்களும் இணைந்து வாழ முடிகிறது.

அவர்களது கருத்தும் மதிக்கப்படுகிறது.

விட்டால் ஏன் பெரியார் போல எல்லோரும் தாடி வைத்துக் கொள்ளவில்லை, கருப்பு சட்டை போடவில்லை என்றெல்லாம் கேட்பீர்கள் போலிருக்கிறதே!!

தன்னைபோலவெ ஒரு காப்பி கேட் உருவாக்கவா உனக்கு சரியெனப்பட்டதை செய் என்கிறார்கள்.

..... தேமொழி 

செல்வன்

unread,
Apr 17, 2015, 1:38:32 AM4/17/15
to vallamai, mintamil
புடவை மோசமான, கேவலமான உடை என கூறபட்டதால் அதை ஏன் தலைவரின் மனைவியே அணிந்துகொண்டிருந்தார் என்பதே என் வியப்புக்கு காரணம்.

மணியம்மையார் இதற்கும் ஒன்றூம் பழமைவாதி அல்ல. பெரியாருக்கு சமமான புரட்சியாளர் எனதான் கூறபடுகிறது.

திராவிடர் கழகத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் யாரும் பேண்டுசட்டை அணிவது போல தெரியவில்லை.

அவர்களே பின்பற்றாத அறிவுரையை மற்றவர்களுக்கு கொடுக்கலாமா?





துரை.ந.உ

unread,
Apr 17, 2015, 1:41:19 AM4/17/15
to வல்லமை, Groups
அதானே....உபதேசமுங்குறது ஊருக்குத்தானே!!!!!!!!!!!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 1:54:18 AM4/17/15
to vallamai, Groups
மணியம்மை அணிந்தாரா அல்லது கழகத்துக்காரார்கள் அணிகிறார்களா என்பதல்ல கருத்து திரு செல்வன், திரு துரை.

கீழ்க்கண்ட கருத்துக்கு உங்கள் மேலான கருத்தை எதிர்ப்பர்க்கிறேன். பெரியாரின் கீழ்க்கண்ட சிந்தனை என்னைக் கவர்ந்த்தது எனக்குறித்துள்ளேன்:-


சிரமமிருப்பதால் இவ்வகையில் போராட முன்வரமாட்டார்கள்!


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 1:56:24 AM4/17/15
to vallamai, Groups
2015-04-17 11:24 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
மணியம்மை அணிந்தாரா அல்லது கழகத்துக்காரார்கள் அணிகிறார்களா என்பதல்ல கருத்து திரு செல்வன், திரு துரை.

கீழ்க்கண்ட கருத்துக்கு உங்கள் மேலான கருத்தை எதிர்ப்பர்க்கிறேன். பெரியாரின் கீழ்க்கண்ட சிந்தனை என்னைக் கவர்ந்த்தது எனக்குறித்துள்ளேன்:-
 
சேலை பெண்களின் பிரத்யேகமான உடையாக இருக்கிறது. வேட்டியுடன் ஆண்கள் போல மேல்சட்டை அணிகிறபோது தனித்தன்மை உடைக்கப்படுகிறது.
நீண்ட கூந்தல், லிப்ஸ்டிக், கண்மை போன்றவை பெண்களுக்குப் பிரத்யேகமானவை. தோற்றத்தில் வேறுபடுத்தும் தனித்தன்மையை உடைக்கிறபோது மனதலவில் ஒருவகையில் சமத்துவம் நோக்கிச்செல்ல வழிவகுக்கும்.

தாலி அகற்றும் போராட்டத்தை விட இவ்வகைப்போராட்டங்கள் அர்த்தமுள்ளவையாகவும் வலுவானவையாகவும் திகழும்.
சிரமமிருப்பதால் இவ்வகையில் போராட முன்வரமாட்டார்கள்!

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 1:59:04 AM4/17/15
to vallamai, mintamil
மகிழ்ச்சி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-04-17 10:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நல்ல கருத்து, என் மகளுக்கும் நான் இதைத்தான் சொல்லி வளர்த்தேன்.

எது வசதிப்படுகிறதோ அப்படி உடுத்த வேண்டும், பெண் என்பதால் இந்த உடை, இந்த நிறம், இந்த அலங்காரம் என்று வேண்டாம்.  தட்ப வெப்பத்திற்கும், செய்யும் வேலைக்கும்  ஏற்ற உடையாக இருக்க வேண்டும்

அரைகுறை ஆடை, இறுக்கமான ஆடை, பார்த்தால் மதிப்பைக் குறைக்கும்வகையில் உள்ள ஆடை அலங்காரங்கள், ஆபாச வார்த்தைகள் உள்ளவை  தவிர்க்கப்பட வேண்டும்

செல்வன்

unread,
Apr 17, 2015, 2:00:38 AM4/17/15
to vallamai, Groups

2015-04-17 0:54 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
சிரமமிருப்பதால் இவ்வகையில் போராட முன்வரமாட்டார்கள்!

உண்மைதான் ஐயா...இதை அப்பவே கவனித்தேன் :-) ஆனால் இந்த கோணத்தில் எழுதியது என டக்கென படவில்லை



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 2:03:03 AM4/17/15
to vallamai, mintamil
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு உளவியல் மருத்துவர் ஆண் போல கிராப் தலை, மேல்சட்டையுடன் தோன்றுகிறார். பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அவரைப்பார்க்கும்போது கண்ணியமான உணர்வு மனதில் எழுகிறது.

செல்வன்

unread,
Apr 17, 2015, 2:07:56 AM4/17/15
to vallamai, mintamil
இந்திரா காந்தி கூட புடவை தான் கட்டினார். அவர் எதில் குறைந்துவிட்டார் என தெரியவில்லை.

புடவை, பேண்ட், ஸ்கர்ட்..எதை யார் போட்டாலும் எனக்கு கவலை கிடையாது. ஆனால் அதை புரட்சி என சொல்வதும், புடவை கட்டுபவர்கள் அடிமைகள் என கூறூவதிலும் காலனியகால ப்ரிட்டிஷ் பிரஜையின் மனபான்மை தான் தென்படுகிறது.

ஆளை உடையை வைத்து அளவிடவேண்டாம்...திறமையை வைத்து அளவிடுவோம்.

துரை.ந.உ

unread,
Apr 17, 2015, 2:35:36 AM4/17/15
to Groups, vallamai
இன்றைய காலக்கட்டத்தில் பொதுவாக எல்லாவற்றையும் வகைப் படுத்திவிட முடியாது ஐயா ....
தாலியகற்றும் போராட்டம் - பங்கேற்றோர் 21 பேர் , கலந்து கொண்டோர் அதிகம் போனால் ஒர் 200 பேர் 
பெரிய வரவேர்பில்லை 
ஆனால் ....
உடைமாற்றம் போராட்டம் -வச்சிப்பாருங்க --  பங்கேற்போர் ஒருத்தர் என்றாலும் .... சேப்பாக்கம் திடல் தாங்காது ...அவ்வளவுதான் 

இதுதான் இன்றைய ஊடகத்தின் பலன் .... பொதுவெளியின் மனநிலை 

 எனக்குத் தெரிந்த நீதி : எதை எதை எங்கே எங்கே செய்யவேண்டுமோ ...அதை அதை அங்கே அங்கே தான் செய்ய வேண்டும் :)))))


PRASATH

unread,
Apr 17, 2015, 2:55:21 AM4/17/15
to vallamai, Groups

எதனையார் செய்தாலும் வாய்பிளக்கும் கூட்டம்
எதற்கென் றறியா திங்கு.

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:09:52 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
​நல்ல கருத்து வரவேற்கின்றேன்.
தாங்கள் எழுதியிருப்பது மேலும் இக்கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றது.

சுபா

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:15:20 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 6:25 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
இதில் என்ன சமத்துவம் இருக்கு ஐயா?

அப்ப புடவை என்பது வேட்டியை விட மோசமான உடையா?

​திரு.சொ.வி.சொல்வதை திசை திருப்பும் வாதம் இது செல்வன்.

சமத்துவம் என்பது உடையின் உதவியால் ஒரு இலகுவாகும் தன்மையை இங்கே சுட்டிக் காட்டுகின்றது நீங்கள் சொலும் கோணத்தில் அல்ல. 

​சேலை வேட்டியை விட மோசமா சிறந்ததா என்பது இங்கு கேள்வியல்ல. பெண்கள் விரைவாக தனது காரியங்களை நிறைவேற்ற, சுலபமாக தனது பணிகளைச் செய்ய சேலை தகுந்த உடையல்ல. சேலை ஒரு அமைதியான சூழலுக்கு ஒரு விழாவிற்கு ஒரு பொடு நிகழ்வுக்கு என வரும் போது அணிந்து கொள்ள அழகான அருமையான் ஒரு உடை. இதனைப் பல பெண்கள் அறிந்திருக்கின்றனர். எண்டஹ் இடத்ஹ்டிற்கு எண்டஹ் உடை தீவை எது பொருந்தும் என்பதையும் அறிண்டஹ் பெண்களாக இக்கலப் பெண்கள் உள்ளனர். திரு.ஈ.வே.ரா போன்றொரின் ஊக்கம் தரும் சொற்கள் தான் அடிப்படையில் பல பெண்களுக்கு புது சிந்தனை மாற்றத்தை வழங்கியது. கட்டுப்பெட்டித்தந்த்திலிருந்து விடுபட்டு வெறு கூணத்தில் தன்னையும் தன சார்ந்த சமூகத்தையும் காண உதவியது.  

சு
​பா

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:23:06 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 7:38 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
புடவை மோசமான, கேவலமான உடை என கூறபட்டதால் அதை ஏன் தலைவரின் மனைவியே அணிந்துகொண்டிருந்தார் என்பதே என் வியப்புக்கு காரணம்.

மோசமான கேவலமான உடை என யார் குறிப்பிட்டிருக்கின்றார்கள்​
 
​?

மணியம்மையார் இதற்கும் ஒன்றூம் பழமைவாதி அல்ல. பெரியாருக்கு சமமான புரட்சியாளர் எனதான் கூறபடுகிறது.
பெரியாரின் கருத்தில் மிக முக்கியமான இன்னொரு கருத்து.. உனக்கு எது சரி என்று படுகின்றதோ அதனையே  நீ ​
 
​செய் என்பதுதான். 

மணியம்மை எதனை உடுத்த வேண்டும் எப்படி முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சொல்லவும் இல்லை. வற்புறுத்தவும் இல்லை. கணவ்ன் சொன்னால் உடனீ அதனைச் செய்ய வீண்டும் என்ற சிந்தனையும் அப்பெண்மணிக்கு இல்லை.  மணியம்மையின் விருப்பம் எதுவோ. தனது வேலைகளுக்கு எது தனக்கு மனதிற்கு திருப்தியாக இருந்ததோ அதனை அவர் செய்தார். அதோடு அக்கால கட்டச் சூழலில் முதலில் வெளியே வருவது மேடைகளில் பேசுவது என்பதே மிகப் பெரிய புரட்சி என்று நினைக்கப்பட்ட காலத்தில் படிப்படியாகத்தான் மாற்றங்கள் நிகழ்ந்தன. 

இக்கலத்தில் தமிழ்ப் பெண்கள் 50 60 வயதினரும் கூட பேண்ட ஷர்ட் போடுவது மிக இயல்பாகிவிட்டது. ​ அயல் நாடு செல்லும் பல கிராமத்து பாட்டிகள் கூட பாண்ட் ஷர்ட் போட்டுக் கொள்ளும் காலம் இது.. இது பயண வசதிக்காக!.
சு
​பா​

செல்வன்

unread,
Apr 17, 2015, 3:23:06 AM4/17/15
to mintamil
சுபா

ஜான்சிராணி சேலைகட்டி ஒரு விடுதலைபோராட்டத்தையே நடத்தினார். இந்திரா காந்தி, சந்திரிகா குமாரதுங்கா எல்லாரும் சேலைகட்டிக்கொண்டு ஒரு நாட்டின் அதிபராக இருந்தார்கள்.

புடவை அணிவது கட்டுபெட்டிதனம் கிடையாது. அது ஒரு பண்பாடு. மற்றபடி உடை தனிமனித விருப்பம். அதை வைத்து ஒருவரை மதிப்பிடுவதிலும் "இது முற்போக்கு உடை, அது பிற்போக்கு உடை" என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.



செல்வன்

unread,
Apr 17, 2015, 3:27:40 AM4/17/15
to mintamil

2015-04-17 2:23 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
மணியம்மை எதனை உடுத்த வேண்டும் எப்படி முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சொல்லவும் இல்லை. வற்புறுத்தவும் இல்லை. கணவ்ன் சொன்னால் உடனீ அதனைச் செய்ய வீண்டும் என்ற சிந்தனையும் அப்பெண்மணிக்கு இல்லை.

3. யாருடா இந்த தாசி..?- பெரியார் போட்ட நாடகம்.

ராமசாமி சொன்ன பெண் நாகம்மை. அவரின் மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள். சேலம் மாவட்டம் தம்மாப்பட்டியில் வசித்து வந்தவர். மாமா என்றால் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. சின்னத்தாயம்மையாரின் ஒன்று விட்ட சகோதரன் ரெங்கசாமி நாயக்கர். வெங்கட்டநாயக்கர் குடும்பம் ரெங்கசாமி நாயக்கர் வீட்டுக்கும், ரெங்கசாமி நாயக்கர் குடும்பம் இவர்கள் வீட்டுக்கும் போய் சில நாட்கள் தங்குவதும் உண்டு. அப்போதே ராமசாமிக்கு நாகம்மையை பிடித்துப் போனது.

இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ரெங்கசாமி நாயக்கரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வெங்கட்ட நாயக்கரின் குடும்பமோ செல்வச் செழிப்பான குடும்பம். மலை உச்சிக்கும் அடிவாரத்துக்குமான வித்தியாசம்.

வழக்கம் போல வெங்கட்ட நாயக்கர் கருத்து ஏதும் சொல்ல வில்லை. சின்னத்தாயம்மையாருக்குத் தான் சுத்தமாக இந்த யோசனை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நாகம்மையை அவருக்கு மிகவும் பிடிக்கும். அழகான பெண். புத்திசாலியும் கூட.., அதற்காக மருமகளாக்கிக் கொள்ள முடியுமா?, சமூக அந்தஸ்து என்று ஒன்று இருக்கிறதே.. அதை விட்டுக்கொடுக்க முடியுமா எனத் தயங்கினார். மகனிடம் பேசிப்பார்த்தார். பயனில்லை. கட்டினால் நாகம்மையைத் தான் கட்டுவேன். இல்லையெனில் ஆளை விடு என்பதாக இருந்தது ராமசாமியின் பதில்.

இதே சமயத்தில் தான் நாகம்மைக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கி இருந்தார் ரெங்கசாமி நாயக்கர். ஏழ்மையான நிலையில் இருந்தவர்களால் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத காலம் அது. இளம் மாப்பிள்ளைகள் யாரும் முன் வரவில்லை. இரண்டு மனைவிகளை இழந்து, தள்ளாடிக் கொண்டிருந்த வயசான பெரியவருக்கு மூன்றாம் தாரமாக நாகம்மையைக் கொடுக்க முடிவு செய்தார்.

நாகம்மைக்கு பெற்றோரின் முடிவில் சம்மதமில்லை. தலை பின்னாமல், குளிக்காமல், சாப்பிடாமல் இருந்து பெரிய அமளி செய்து விட்டார். “கட்டினால் மாமன் ராமசாமியைத்தான் கட்டுவேன். இல்லை என்றால் செத்துப் போய் விடுவேன்” என்று திடமாக சொல்லி விட்டார். இவரது உறுதி கண்டு பயந்து போனார்கள் அவரது குடும்பத்தினர்.

சகோதரி வீட்டு சம்பந்தம் நல்லதாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது அவர்கள் தான் வசதி படைத்தவர்களாயிற்றே.. சின்னத்தாயம்மை சம்மதிக்க மாட்டாரே.. என்ற கவலை ரெங்கசாமி-யாரின் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.

இதற்கிடையில் அம்மா ஒத்துக்கொள்ளாத காரணத்தால்.. ராமசாமியின் மைனர் விளையாட்டுக்கள் அதிகமாகிப்போனது. தொடர்ச்சியாக அவர் குறித்த புகார் செய்திகள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தது. சரி.. மகன் சொல்படியே கேட்போம் என்ற முடிவுக்கு ராமசாமியின் வீட்டார் வந்தார்கள்.

ராமசாமிக்கு பத்தொன்பது வயதும், நாகம்மைக்கு பதின்மூன்று வயதும் இருக்கும் போது, இருவீட்டார் சம்மததோடு 1898ம் ஆண்டு ராமசாமி நாயக்கர்-நாகம்மை திருமணம் நடந்தேறியது.

திருமணம் முடிந்த கையோடு எல்லாத் தாய்மார்களும் செய்வது போல, சின்னத்தாயம்மையாரும் ராமசாமியின் போக்கு குறித்து நாகம்மையின் காதில் ஓதினார். எல்லா விதத்திலும் அவனை திருத்தி, குடும்பத்திற்கு ஏற்ற மகனாக மாற்ற வேண்டியது நாகம்மையின் கடமை என்பது போல பேசி வைத்தார்.

ஒரே நாளில் இவர்கள் சொல்லும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நாகம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும் மாமனார், மாமியார் மணம் கோணாமல் முதலில் நடந்துகொள்ள வேண்டும். அதன் வழி மாமனை மாற்றி விட நினைத்தார்.

ஆச்சாரத்தை கடைபிடிக்கும் அவர்களுக்கு சேவை செய்யும் போது தானும் அப்படியே இருக்க முடிவு செய்தார் நாகம்மை. வீட்டில் எல்லோரும் ஒரு பாதையில் போகும் போது, ராமசாமி மாமன் மட்டும் வேறு வழியில் போய் விடுவாரா என்ன? அதிகாலையிலேயே எழுந்து, குளித்த பின் தான் வீட்டு வேலைகளில் ஈடுபடுவார். பூப்பறித்து கொடுப்பது முதல், பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது, சமையல் வேலைகள் என எல்லாவற்றிலும் மிகுந்த அக்கரையுடன் செய்யலானார். மாமியாருக்கு மிகுந்த நம்பிக்கை வந்தது. தன் மகன் ராமசாமியை எப்படியும் இவள் மாற்றி விடுவாள் என்று திடமாக நம்பத் தொடங்கினார்.

மனைவியின் இந்த போக்கு ராமசாமிக்கு அதிர்ச்சியை தந்தது. தன் காரியங்களுக்கு ஏற்றபடி நாகம்மை இருப்பார் என எதிர்பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. தம் மனைவி குடும்பத்தாரின் மூடச் செயல்களுக்கு எல்லாம் உதவி செய்கின்றவராக இருப்பது ராமசாமிக்கு உறுத்தியது. சில அதிரடி செயல்கள் மூலம் தான் மனைவியை மாற்ற முடியும் என்று சில திட்டங்களைப் யோசிக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவை நடைமுறை படுத்தப்பட்டன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகம்மை விரதம் இருந்து வந்தார். இது அத்தை சின்னத்தாய்யம்மையார் போட்ட உத்திரவு. சீக்கரம் குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை தொடங்கச்செய்தார்.

கிட்டத்தட்ட அம்மாவைப் போலவே மனைவியும் மாறி வருவதைக்கண்ட ராமசாமி, மனைவியின் ஆச்சாரங்களை முதலில் கலைப்பது என்று முடிவு செய்தார். அதற்காகவே குளிக்க மாட்டார். ஏற்கனவே குளிப்பதில் இருந்த சோம்பேறித்தனம் இப்போது நாகம்மையை வெறுப்பேற்ற உதவியது. மண்டியில் மட்டுமே அதிக பொழுதை கழிக்க வேண்டி இருந்ததால்.. ஒரே சட்டையை அதிக நாட்கள் போடுவார். சட்டையை யாராவது மாற்றச் சொன்னால், கடையில் தானே இருக்கேன். வெளியே எங்காவது போனால் மாற்றிக் கொண்டு போகிறேன் என்று பதில் வரும் அவரிடமிருந்து.

இவரின் தொல்லை தாங்காமல், ஏற்கனவே சமையல் கட்டு பக்கம் வரக்கூடாது என்று வீட்டில் எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்தது. ஏனெனில் குளித்து சுத்தமாக திருமண் இட்டுக்கொண்டுதான் சமையலறைக்குள் நுழைவார்கள் வீட்டினர். இவர் மட்டும் அடிக்கடி குளிக்காமலேயே உள்ளே புகுந்து விடுவார்.

ராமசாமிக்கு தினமும் அசைவம் வேண்டும். அதனால் விரதமிருக்கும் நாட்களின் போது ராமசாமிக்கு என தனி சாப்பாடும், மற்றவர்களுக்கு தனியான சைவ சாப்பாடும் தயாரிப்பார் நாகம்மை. முதலில் சைவ சாப்பாடு தயாரித்து விட்டு, பின் அசைவ சாப்பாடு தயாரிப்பார்.

ராமசாமிக்கு பரிமாறிய பின், குளித்துவிட்டு வந்து, மாமனார்,மாமியாருக்கு சாப்படு போட்டுவிட்டு தானும் சாப்பிடுவார். இது தொடர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் ராமசாமிக்கு சாப்பாடு போட்டு விட்டு, குளிக்கப் போய் விட்டார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமசாமி, யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் புகுந்தார். ஒரு சிக்கன் எலும்புத் துண்டை எடுத்து சோற்றுப் பானைக்குள் புதைத்து வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவராக வெளியே வந்து விட்டார்.

வீட்டில் பெரியவர்களுக்கு எல்லாம் உணவளித்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தார் நாகம்மை. சோற்றை இலையில் போடும் போது சோற்றுடன் எலும்பும் வெளியே வந்தது. அத்தையிடம் போய் முறையிட்டாள். குளித்து விட்டு வந்து மீண்டும் சமைத்து சாப்பிடுவது என்பது ஆகாத காரியம். அதனால் அன்றைய விரதம் முடிந்து போனது. தொடர்ந்து ராமசாமி இது போன்றே செய்து வர வெறுத்துப்போனார் சின்னதாயம்மையார். விரதமிருப்பதை நிறுத்தும்படி நாகம்மையை சொல்லிவிட்டார்.

நாகம்மைக்கான விரதம் தான் தடைபட்டது. சின்னதாய்யம்மையாரின் விரதம் தொடர்ந்தது. அதனால் நாகம்மை குளித்து மாமியாருக்கு சமைப்பார். சமையலறையில் வேலையாக இருக்கும் போது, உள்ளே புகுந்து ராமசாமி நாகம்மையை தொட்டு விடுவார். தீட்டு என்று மாமியார் சொல்லி விடுவார்களே என்று நாகம்மை போய் குளித்து விட்டு வருவார். இவர் மீண்டும் தொட்டு விடுவார். ஒரு வேளை சமையல் செய்து முடிக்கும் முன் பல முறை குளிக்க வேண்டிய நிலை.

நாகம்மை பார்த்தார் குளிக்காமல் இருந்தால் தானே இந்த பிரச்சனை என்று, கணவனை விரட்டிப் பிடித்து தண்ணீரை தலை வழியாக ஊற்றி விட்டு குளிக்க வைத்து விடுவார். அதன் பின், தானும் குளித்து சமையலறைக்கு போவார். காலையில் ராமசாமி தூங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு குடம் தண்ணீரை அவர் மீது ஊற்றி விட்டு தான் நாகம்மை குளிக்க கிளம்புவது வாடிக்கையானது.

மனைவியின் விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். அம்மாவைப் போலவே.. கோவிலுக்கு அடிக்கடி போகும் மனைவியை மாற்ற.., தன் மைனர் நண்பர்களின் உதவியோடு திட்டம் ஒன்றை தயாரித்தார்.

ஒரு சமயம் நாகம்மை கோவிலுக்கு போனார். அவரின் பின்னாலேயே வந்த ராமசாமி ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டு, தம் நண்பர்களை அனுப்பினார், “யாருடா இந்த தாசி.. அழகா இருக்காளே.. இவளை இதற்கு முன் பார்த்ததில்லையே.., புதுசா வேற தெரியிறா..” என்று நாகம்மையின் காதுகளில் விழும்படி அவர்களும் பேசினார்கள். இந்த காலிக்கூட்டத்தை கண்டு கோவிலில் இருந்த பிராமணப் பெண்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட இல்லாது போனது.

நாகம்மை நடுங்கிப் போனார். இப்படி கோவிலில் தனியாளாக மாட்டிக்கொண்டோமே.. அடுத்து என்ன நடக்குமோ.. என்று அவருக்கு கலக்கம் உண்டானது. பயந்து போய் வேகமாக வெளியில் வந்தவரை எதிர் கொண்டு ஆறுதல் சொல்லி அழைத்துப்போனார் ராமசாமி. இங்கு வந்ததால் தான் இந்த கதி ஏற்பட்டதென்றும் ஒரு போடு போட்டார். நாகம்மைக்கும் அது சரி என்றே பட்டது. தாசிகள் நிறைந்த காலகட்டம் அது. தாசிகள் கோவில்களில் அடிக்கடி தென்பட்டு வந்த காலம் அது. அதனால்.. இந்த காலிக்கூட்டம் தன்னையும் தாசியாக நினைத்து, தவறாக பார்க்கிறது. அதுவும் கோவிலுக்கு வந்ததால் தானே.. என்று நினைத்தவர் கோவிலுக்குப் போவதை நிறுத்தினார்.

உள்ளுக்குள் மகிழ்ந்து போன ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். இச்சமூகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பது அவரது சிறுவயது பழக்கம்.

அது போலவே பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதற்கு திருமணமும், அதிலும் அதை ஒட்டி பெண்களுக்கு மாட்டிவிடப்படும் தாலி என்ற பொருளும் மிக முக்கிய காரணமாக இருப்பதாக உணர்ந்திருந்தார். மிகவும் புனித பிம்பத்தை தாலிக்கு ஏற்படுத்தி வைக்கப் பட்டிருந்ததை பலரிடம் விமர்சித்து வந்தவர் ராமசாமி. தன்னுடைய மனைவியே இப்படியான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்கு என்னொவோ போலிருந்தது.

ஒருநாள் இரவில் நாகம்மையுடன் இருக்கும் போது தாலியை கழட்டி கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அவரோ மறுத்து முரண்டு பிடித்தார். சிரித்துக்கொண்டே ராமசாமி, “அம்மா, உன்னிடம் இது பற்றி ஏதும் சொல்லவே இல்லையா?” கேட்டார். நாகம்மையும் அப்பாவியாக “இல்லையே.., ஏங்க.. நீங்களே தான் சொல்லுங்களேன்” என்று ராமசாமியிடமே கேட்டார். இதைத்தானே எதிர்பார்த்தார்.

“கணவன் உடன் இருக்கும் போது தாலி தேவையில்லை. கணவன் வெளியூர் எங்காவது போகும் போது மட்டும் தாலி அணிந்தால் போடும்.” என்று ஒரு போடு போட்டார். நாகமையால் நம்ப முடியவில்லை. தாலியை கழட்டினால் கணவன் உடனே இறந்து விடுவான் என்று பயந்தார். ராமசாமி கட்டாயமாக அவர் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக்காட்டினார். தனக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்றும்… அப்படி சொல்லப்பட்டு வருவது பொய் என்றும்.. தான் ஊரில் இருக்கும் சமயத்தில் தாலி தேவை இல்லை என்றும் அறிவுருத்தினார். அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய நாகம்மையும் தாலியை கழட்டி கொடுத்துவிட்டார். இவரும் வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டவர். பொழுது புலர்ந்ததும் அதே சட்டையை மாட்டிக்கொண்டு, கடைக்கு போய் விட்டார். காலையில் குளிக்கும் போது தான் நகம்மைக்கு தாலியின் நினைவு வந்தது. இப்படியே அத்தை பார்த்தால் நல்லா இருக்காதே.., ஏதாவது சொல்லிவிட்டால்.. கொஞ்சம் பயந்து போன நாகம்மை சேலையின் தலைப்பால் உடலை மூடிக்கொண்டார்.



--

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:38:05 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 9:22 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
சுபா

ஜான்சிராணி சேலைகட்டி ஒரு விடுதலைபோராட்டத்தையே நடத்தினார். இந்திரா காந்தி, சந்திரிகா குமாரதுங்கா எல்லாரும் சேலைகட்டிக்கொண்டு ஒரு நாட்டின் அதிபராக இருந்தார்கள்.

புடவை அணிவது கட்டுபெட்டிதனம் கிடையாது.
மீண்டும் தெளிவாகக் குறிப்பிடுகின்றேன். முற்போக்கு பிற்போக்கு என்ற சொற்களைக் கொண்டு இதனை திசை திருப்ப வேண்டாம் செல்வன்.

தாங்கள் இணைத்திருக்கும் படத்தை ஒரு முறை பாருங்கள்.
சேலையை அந்தப் படத்தில் எவ்வாறு அவர் அணிந்திருக்கின்றார்? ஒரு பேண்ட் போல என்பதை நீங்க்கள் காணவில்லையா?

அக்காலத்தில்  இருந்த சேலையையே பேண்ட்  வடிவில் மாற்றிக் கட்டிக் கொண்டுதான் போர் செய்திருக்கின்றார். இக்காலத்தில் பேண்ட் சர்ட் இருக்கின்றது அதனை போட்டுக் கொள்கின்றார்கள் பெண்கள்.

இலங்கையில் தமிழ்ப் பெண் போராளிகள் சேலை கட்டிக் கொண்டுதான் போராட வேண்டும் என்று வாதிடுவீர்களா?

இந்திரா காந்தி கட்டியிருந்தார் என்றால் அவருடைய பணிக்கு மாநாடுகளில் கலந்து கொள்ள சட்டமன்றத்தில் பார்லிமெண்டில் பேச என சேலை அவருக்கு பிரச்சனையில்லை. அவர் பஸ் பிடித்து ஓடத்தேவையில்லை. தானே காரை ஓட்ட வேண்டியதில்லை.  

இந்திரா காந்தி அவர்களே குட்டை முடி உடையவர்.
இளமை கால படங்க்களில் சுடிதார், கவுன் என அணிந்த படங்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. 
பெரிய இடத்து வசதியான பெண் அவர். அவருக்கே வசதிக்காக குட்டை முடி, சுடுடிதார் பிடித்திருக்கின்றது. 

அவரை விட, நடுத்தர வர்க்க, ஏழை குடும்பத்து பெண்களுக்கு, உழைக்கும் வர்க்கத்துக்கும் பேண்ட் ஷர்ட் மிகப் பொருத்தமான ஒரு உடை.

உங்களையே கேட்டுக் கொள்ளுங்க்கள் .. எந்த நிகழ்ச்சிக்கு ஆண்கள் வேட்டி கட்டுகின்றனர்? எந்த நிகழ்ச்சிகளுக்கு பாண்ட் ஷர்ட் போடுகின்றனர்? தங்கள் வசதியை விரும்பும் ஆண் வர்க்கம் பெண்களின் வசதியை தடை போட கருத்து வாதம் செய்வது சரியானதல்ல!
சுபா


 
அது ஒரு பண்பாடு. மற்றபடி உடை தனிமனித விருப்பம். அதை வைத்து ஒருவரை மதிப்பிடுவதிலும் "இது முற்போக்கு உடை, அது பிற்போக்கு உடை" என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.



--

Shriviba Balamurugan

unread,
Apr 17, 2015, 3:41:58 AM4/17/15
to mint...@googlegroups.com


 

     ஆண்களை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு,
   " ஆண்களைப் போல் , ஆண்களைப் போல் "  என அனைத்திற்கும்
     அவர்களுடன் ஒப்பிடுவது எனக்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை.

     ஆண், பெண் வேறுபாடு அணியும் உடையில் இருந்தால்
     அது பார்க்க அழகாக இருக்கும். வேறுபாடு இல்லாமல்
     உடை அணிந்தால் என்ன அழகு இருக்கிறது. பெண்கள் நினைத்தாலும்
     முடியாதே  "ஆண்களைப் போல்" மீசை வளர்க்க .

     சில பெண்கள் ஏன் பெண்களுக்குரிய  இயல்பினை ஏற்றுக் கொள்ள
     மறுக்கிறார்கள்? அனைத்திலும் " ஆண்களைப் போல் " இருக்க வேண்டும்
     என்பதற்காக இரும்பு முகமூடி அணிந்து தங்களின் இயல்பினை மாற்ற
     முயற்சிக்கின்றார்கள். அத்தனை இழிவான பிறப்பா பெண் பிறப்பு?

     ஒரு பெண்.,  பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்
     இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.

     அன்புடன்
     ஸ்ரீவிபா.
  
  
    

   

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:45:07 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
அன்புள்ள ஸ்ரீவிபா

தாங்கள் எந்த ஊரில் இருக்கின்றீர்கள்?
என்ன தொழில் புரிகின்றீர்கள் என அறிந்து கொள்ள ஆவல்.
தெரிவிப்பீர்களா?

நன்றி
சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Oru Arizonan

unread,
Apr 17, 2015, 3:45:11 AM4/17/15
to mintamil
// ஒரு பெண்.,  பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்
     இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.//


இக்கருத்துடன் எனக்கு உடன்பாடே!
ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Apr 17, 2015, 3:45:23 AM4/17/15
to mintamil
முற்போக்கு, பிற்போக்கு எனக்கூறீயது நான் அல்ல சுபா

புடவை அணிவது மோசம், பேண்ட் அணிவது மேலானது எனதான் இழையில் கருத்து கூறபட்டது.

புடவை, வேட்டி எல்லாம் கட்டிக்கொண்டு மிகப்பெரும் போர்களை நடத்தி, நாடுநகரங்களை பிடித்தார்கள் தமிழ்மன்னர்கள். பேண்ட் அணிந்திருந்தால் இன்னமும் அதிக ஊர்களை பிடித்திருப்பார்களோ என்னவோ? :-)

புடவை அணிந்து, வேட்டி அணிந்து பலகோடி தமிழ்மக்கள் பஸ் பிடித்தும், நடந்தும், சைக்கிள் ஓட்டியும் தான் சென்றுவருகிறார்கள். கம்பனிகளில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். உயர்பதவிகளில் இருக்கிறார்கள். 

புடவையை அணிந்தவர்கள் முன்னேறமுடியாது, அது பணிக்கு பொருத்தமான உடை அல்ல என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் பெண்களை எந்த உடையும் அணியவேண்டாம் என கூறவில்லை. உடை அவரவர் விருப்பம் என்பதே என் கருத்தும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 17, 2015, 3:47:37 AM4/17/15
to mintamil
2015-04-17 2:41 GMT-05:00 Shriviba Balamurugan <shri...@gmail.com>:

இதன் பெயர்தான் பெண்ணியம்

வாழ்த்துக்கள் சகோதரி



--

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:51:48 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 9:45 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
முற்போக்கு, பிற்போக்கு எனக்கூறீயது நான் அல்ல சுபா

புடவை அணிவது மோசம், பேண்ட் அணிவது மேலானது எனதான் இழையில் கருத்து கூறபட்டது.

புடவை, வேட்டி எல்லாம் கட்டிக்கொண்டு மிகப்பெரும் போர்களை நடத்தி, நாடுநகரங்களை பிடித்தார்கள் தமிழ்மன்னர்கள். பேண்ட் அணிந்திருந்தால் இன்னமும் அதிக ஊர்களை பிடித்திருப்பார்களோ என்னவோ? :-)

புடவை அணிந்து, வேட்டி அணிந்து பலகோடி தமிழ்மக்கள் பஸ் பிடித்தும், நடந்தும், சைக்கிள் ஓட்டியும் தான் சென்றுவருகிறார்கள். கம்பனிகளில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். உயர்பதவிகளில் இருக்கிறார்கள். 

புடவையை அணிந்தவர்கள் முன்னேறமுடியாது, அது பணிக்கு பொருத்தமான உடை அல்ல என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் பெண்களை எந்த உடையும் அணியவேண்டாம் என கூறவில்லை. உடை அவரவர் விருப்பம் என்பதே என் கருத்தும்.


​புடவையை அணிந்தவர்கள் முன்நேற முடியாது என்றும் யாரும் குறிப்பிடவில்லை. புடவையை விட ஏனைய உடைகள் பணிகளுக்குப் பொருத்தமானவை, வசதியானவை என்பதையீ குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

காலத்துக்கு ஏற்​
 
ப மனித இனம் வாழ்வியல் வழிமுறைகளில் மாறிக் கொண்டெ பொருத்தமானதை வைத்துக் கொண்டு மேண்மை செய்யத்தேவையானதை ஏற்றுக் கொண்டு வளர்கின்றது. 10ம் நூற்றாண்டு கோயில் சிலைகளைப் பார்த்தால் அரச குல பெண்களும் கூட மேலாடை அணியாத நிலையில் இருந்தமையைக் காண்கின்றோம்.படிப்படியாக உடை மாற்றம் எனது தமிழகத்துக்கு மட்டுமல்ல உலக நாகரிகத்துக்கே அது முக்கிய விஷயமாக உள்ளது. 

சு
​பா​

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:52:25 AM4/17/15
to மின்தமிழ்

புரிந்தது ​:-)))))

சுபா

Shriviba Balamurugan

unread,
Apr 17, 2015, 3:55:06 AM4/17/15
to mint...@googlegroups.com

நான் ஒரு பெண்ணாக இருப்பதால்தான் என் கருத்தினை பதிவுசெய்தேன்.

சந்தேகம் வேண்டாம். நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக,இல்லத்தரசியாக

தமிழ்நாட்டில் ( வேளச்சேரி) உள்ளேன். இந்த தகவல் போதும் என்று நினைக்கின்றேன்.

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:55:15 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 9:45 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
// ஒரு பெண்.,  பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்
     இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.//


இக்கருத்துடன் எனக்கு உடன்பாடே!

​பேண்ட் அல்லது ஆடை அணிந்தால் பெண் பெண்ணாக இல்லாமல் போய் விடுவாரா?
ஆச்சரியமாக இருக்கின்றது .
அயல்னாட்டு பெண்களெல்லாம் பெண்கள் அல்லது பெண் தன்மை இல்லாதவர்களோ?

அப்படியென்றால் மிக எளிமையாக... சேலை கட்டினால் போதும் அவர் பெண் என சொல்லி விடலாம் போலிருக்கின்றதே. 

சுபா​

Suba.T.

unread,
Apr 17, 2015, 3:57:41 AM4/17/15
to மின்தமிழ்
​தகவல் வழங்கியமைக்கு நன்றி ஸ்ரீ விபா​
 
​சுபா​

செல்வன்

unread,
Apr 17, 2015, 3:57:44 AM4/17/15
to mintamil, Subashini Tremmel

2015-04-17 2:51 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​புடவையை அணிந்தவர்கள் முன்நேற முடியாது என்றும் யாரும் குறிப்பிடவில்லை. புடவையை விட ஏனைய உடைகள் பணிகளுக்குப் பொருத்தமானவை, வசதியானவை என்பதையீ குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

வசதி என்பது தனிமனிதரை பொறுத்த விஷயம் அல்லவா?


காலத்துக்கு ஏற்​
 
ப மனித இனம் வாழ்வியல் வழிமுறைகளில் மாறிக் கொண்டெ பொருத்தமானதை வைத்துக் கொண்டு மேண்மை செய்யத்தேவையானதை ஏற்றுக் கொண்டு வளர்கின்றது. 10ம் நூற்றாண்டு கோயில் சிலைகளைப் பார்த்தால் அரச குல பெண்களும் கூட மேலாடை அணியாத நிலையில் இருந்தமையைக் காண்கின்றோம்.படிப்படியாக உடை மாற்றம் எனது தமிழகத்துக்கு மட்டுமல்ல உலக நாகரிகத்துக்கே அது முக்கிய விஷயமாக உள்ளது. 


ஆமாம். ஆனால் புடவை பேண்டுக்கு எவ்விதத்திலும் குறைவான உடை அல்ல. உடை தனிமனிதரது விருப்பம். அது பர்தா, புடவை, பேன்ட் என எதாக இருப்பினும் சரி



--

Nagarajan Vadivel

unread,
Apr 17, 2015, 4:02:22 AM4/17/15
to மின்தமிழ்
பெரியாரின் சிந்தனைகளை இரண்டு நிலைகளில் வைத்துப் பார்ப்பது அவசியம்.  அவர் தன் தொண்டர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியது ஒரு நிலை.  தமிழ்ச் சமுதாயம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது இன்னொரு நிலை.

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தபோது தொன்டர்கள் சிவப்பு நிற ஆடை அணியச் சொன்னவர் நீதிக்கட்சியை தி.க வாக மாற்றியதும் கட்சியில் அனைவரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார்.  அண்ணா தலைவர்களைக் கருப்புச் சட்டை அணியவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது என்று சொல்லி கருப்புச் சட்டை அணிய மறுத்தார்.  இதுவே பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே பெரிய மோதலாக உருவெடுத்தது

பெரியார் அவர் கட்சியில் இருந்த பெண்களுக்கு உடை மாற்றம் பற்றி அவர் எதுவும் கூறாமைக்குக் காரணம் பெண்களின் ஆடையில் ஆரியக் கலப்பு இல்லாமல் இருந்ததே.

இணையவேள்

--

Suba.T.

unread,
Apr 17, 2015, 4:06:10 AM4/17/15
to செல்வன், mintamil, Subashini Tremmel
​ஆமாம். சேலை குறைவான உடையல்ல.​
 
​அப்படி நான் சொல்வதும் இல்லை. 
​அதனால் தான் சிறப்
​பா
வைபவங்
களுக்கு அயல்னாடுகளிலும் கூட நம் தமிழ் பெண்கள்
​சே
லை அணிகின்றனர்.
​ விரும்பி அணிகின்றனர்.​
எனது புகைப்படங்களைப் பார்த்தாலும் அதனை அறிந்திருப்பீர்கள்.

நான் எனது தமிழக களப்பணிகளில் ஒரு போதும் சேலை அணிவது கிடையாது. அது எனது பயணத்தை, எனது மின்ன்னாக்கப் பணிக்கு மிகச் சிரமம் தரும் ஒரு உடையாகக் கருதுகிறேன்.காடுகளில் ஏறி பாறை ஓவியங்களை, கல்வெட்டுக்களைப் பதிய சேலை சரியான உடையல்ல என்பதால் அதனை அணிவதைத் தவிர்ப்பேன். ஒரு கையில் வீடியோ காமெரா, மறு கையில் இன்னொரு கேமரா, நோட்டு புத்தகம் டெலிபோண் என இயங்க பேண்ட் ஷர்ட் தான் எனக்கு மிகப் பொருத்தமாக என் பணியை என்னை பற்றி நினைக்காமல் செய்ய வைக்க உதவும் ஒன்றாக இருக்கும் உடை.

​ஆனால் 
சொற்பொழிவுகளுக்கும் சிறப்பு நிகழ்வுகளுக்கும் செல்லும் போது சேலை அணிந்து செல்வேன். 

​எந்த இடத்திற்கு எது பொருத்த மன உடை என்பதை இக்காலப் பெண்கள் அறிந்தேயிருக்கின்றனர். அணிகின்றனர்.​

சுபா

செல்வன்

unread,
Apr 17, 2015, 4:16:23 AM4/17/15
to mintamil
நீங்கள் நகர்ப்புறத்தில் வளர்ந்தவர் :-) புடவை பான்டுக்கு கொஞ்சமும் சளைத்தது கிடையாது. புடவை அணிந்த பெண்கள் மலை மட்டுமல்ல, மரமும் ஏறுவார்கள்.





அனைத்துக்கும் பழக்கமே காரணம்...எனக்கு வேட்டி கட்டி பழக்கம் இல்லை. நீங்களாவது எதோ விசேசம் என்றால் கட்டுவதாக கூறினீர்கள். நான் அதுவும் கூட செய்யமாட்டேன். அதனால் பேண்ட் தான் வசதியான உடைபோல எனக்கு தோன்றும். அவரவர்க்கு என்ன உடை பிடிக்குமோ, வசதியோ அதை அணிவதில் எப்பிழையும் கிடையாது

Suba.T.

unread,
Apr 17, 2015, 4:25:01 AM4/17/15
to மின்தமிழ்
உடனுக்குடன் நல்ல படங்களாகத்தான் போடுகின்றீர்கள் செல்வன். 

படங்களைப் பாருங்க்கள்..

முதல் படத்து பெண் மிகச் சிரமப்பட்டு சேலையை வரிந்து கட்டிக் கொண்டு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கின்றார்.
ஒரு ஆணாக அப்பெண்ணின் மன  நிலையை உங்களால் உணர முடியாது. என்னால் முடியும்.
எங்கே தன் உடல் பிறருக்கு தெரிந்து விடுமோ, சேலை கிழிந்து விடுமோ, நம் வயிற்று பகுதி பிறருக்கு தெரிந்து விடுமோ என அவர் மனம் படும் பாடு போட்டோ எடுத்தவருக்கும் இருக்காது.. கருத்துசொல்லிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இருக்காது. பெண்களுக்கு மட்டும் தான் மனதில் இது தோன்றும்.

அடுத்த படத்தில் அப்பெண் சுடிதார் போட்டிருக்கின்றார். இது வசதியான ஒரு உடை அதனால் மரம் ஏற முடிகின்றது. 

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

unread,
Apr 17, 2015, 4:29:08 AM4/17/15
to mintamil
தமிழ் குறித்த பெரியாரின் கருத்துக்கள்

தமிழ்

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில் லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.–தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்..

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி 

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை (28.7.51)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு 

….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா ? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கி யம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை (28.3.60)யில் பெரியார்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக் கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ்வேண்டும்.’ இதுதானா? அய் யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர் க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல் களில் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந் த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க் கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டு பிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? 

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழி யை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலி ருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கு ம் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்ப தால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லா மல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

செல்வன்

unread,
Apr 17, 2015, 4:36:43 AM4/17/15
to mintamil

2015-04-17 3:24 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
முதல் படத்து பெண் மிகச் சிரமப்பட்டு சேலையை வரிந்து கட்டிக் கொண்டு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கின்றார்.
ஒரு ஆணாக அப்பெண்ணின் மன  நிலையை உங்களால் உணர முடியாது. என்னால் முடியும்.
எங்கே தன் உடல் பிறருக்கு தெரிந்து விடுமோ, சேலை கிழிந்து விடுமோ, நம் வயிற்று பகுதி பிறருக்கு தெரிந்து விடுமோ என அவர் மனம் படும் பாடு போட்டோ எடுத்தவருக்கும் இருக்காது.. கருத்துசொல்லிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இருக்காது. பெண்களுக்கு மட்டும் தான் மனதில் இது தோன்றும்.

அப்படி அல்ல.

தேங்காய் பறிக்க மரம் ஏறுகையில் வயிறு, கால் எதுவும் வெளியே தெரியாது. எங்கள் வீட்டில் நாலு தென்னை மரம் இருந்தது. லுங்கிகட்டிகொண்டு கால்களை மடித்துகயிறுகட்டிக்கொண்டுதான் மேலேறுவார்கள். இன்றும் அப்படித்தான் ஏறுகிறார்கள்.

இரண்டாம் புகைப்படத்தில் உள்ள பெண்ணும் புடவைதான் அணிந்துள்ளார். சுடிதார் அல்ல


--

Suba.T.

unread,
Apr 17, 2015, 5:11:07 AM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 10:36 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

2015-04-17 3:24 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
முதல் படத்து பெண் மிகச் சிரமப்பட்டு சேலையை வரிந்து கட்டிக் கொண்டு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கின்றார்.
ஒரு ஆணாக அப்பெண்ணின் மன  நிலையை உங்களால் உணர முடியாது. என்னால் முடியும்.
எங்கே தன் உடல் பிறருக்கு தெரிந்து விடுமோ, சேலை கிழிந்து விடுமோ, நம் வயிற்று பகுதி பிறருக்கு தெரிந்து விடுமோ என அவர் மனம் படும் பாடு போட்டோ எடுத்தவருக்கும் இருக்காது.. கருத்துசொல்லிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இருக்காது. பெண்களுக்கு மட்டும் தான் மனதில் இது தோன்றும்.

அப்படி அல்ல.

தேங்காய் பறிக்க மரம் ஏறுகையில் வயிறு, கால் எதுவும் வெளியே தெரியாது. எங்கள் வீட்டில் நாலு தென்னை மரம் இருந்தது. லுங்கிகட்டிகொண்டு கால்களை மடித்துகயிறுகட்டிக்கொண்டுதான் மேலேறுவார்கள். இன்றும் அப்படித்தான் ஏறுகிறார்கள்.

காலணி அணியாமல் முன்னர் ​மக்கள் இருந்தனர். காலணியின் முக்கியத்துவம் அறிந்து அதனை அணியும் நாகரிகத்தை மக்கள் இப்போது பின்பற்றுகின்றனர்.
லுங்கி கட்டி கொண்டும் சேலை கட்டிக் கொண்டும் வேலை செய்யும் சிரமத்தை அவர்கள் தான் அறிவர். அதனை நியாயப்படுத்தி ஏதோ அவர்கள் மகிழ்ச்சியாக அப்படி உடை அணிந்து பணி புரிகின்றனர் எனச் சொல்வது . .அதிலும் பாண்ட் ஷர்ட் பமாட்டிக் கொண்டு வசதியாக இருக்கும் ஒருவர் சொல்வது நியாயமாக இல்லை. :-))

வாழ்க்கைத்தரத்தின் உயர்வான நிலையை உடைகளின் வழி கிடைக்கும் வசதிகளை பாமர மக்களும் அனுபவிக்க வேண்டும்.

சுபா

Suba.T.

unread,
Apr 17, 2015, 5:13:14 AM4/17/15
to மின்தமிழ்
அன்பு செல்வன்,

இது தேவையா?

எந்த இடத்தில் எத்தகைய சுழலில் எந்த பின்னனியில் .. எந்த கேள்விக்கு பெரியார் இப்பதில்களைச் சொல்லியிருப்பார் என்பதை நமது மின் தமிழ் ஆர்க்கைவைத் தேடினால் கூட வாசகார்கள் அறிந்து கொள்வர்.
எதை நிலை நாட்ட இந்த முயற்சி?

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 5:47:59 AM4/17/15
to mint...@googlegroups.com, vallamai, holiape, தேமொழி, Subashini Tremmel, Oru Arizonan, வேந்தன் அரசு
நண்பர்களுக்கு நன்றி.

பெரியாரின் ஒரு கருத்தினை மட்டுமே இந்த இழையில் முன்நிறுத்தியுள்ளேன்.
அவருடைய மொழி குறித்த, பின்பற்றுபவர்கள் குறித்த எண்ணங்களைக் கூறி திசை
திருப்பவேண்டியதில்லை.

சேலை போன்ற உடைகள் பெண்ணுக்குப் பிரத்யேகமானவை. இன்று நீண்ட கூந்தல் சடை
போட்டுக்கொள்வது பெண்கள் மட்டுமே. லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்கள்
பெண்ணுக்குத் தனிப்பட்டவை. தோடு,மூக்குத்தி போன்ற அணிகலன்கள்
அவர்களுக்கானது. (ஆணும் போட்டுக்கொள்ளலாமே என்று ஒரு காதில் கடுக்கன்
அணிந்த ஆணின் படத்தை தயவுசெய்து பகிரவேண்டாம்)

எனவே பிரத்யேகமானவை என்பவை இயன்றவரை இல்லாதுபோகும்போது சமத்துவம் என்ற
வகையில் இருபாலருக்கும் சிந்தனையோட்டம் நகர வழியேற்படுமென்பதே முன்
வைக்கப்படுகிற கருத்து.

திருமிகு ஸ்ரீவிபா சொல்வதுபோல பெண் நினைத்தாலும் மீசை
வளர்க்கமுடியாதுதான். ஆண் பாலூட்ட இயலாது. அது இயற்கை. இயற்கை தன்னாலேயே
தாய்மையையும் ஆண்மையையும் அதன்போக்கில் காலங்காலமாகக்கொண்டு செலுத்தும்.
கவலைப்படவேண்டியதில்லை.

ஆனால் உடையால், ஒப்பனையால் பெண் பிரத்யேகமானவள் என்பது உடைக்கப்பட்டால்
சமத்துவ எண்ணப்போக்கு எழுவதற்கு வாய்ப்புண்டு.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

On 4/17/15, செல்வன் <hol...@gmail.com> wrote:

Geetha Sambasivam

unread,
Apr 17, 2015, 5:54:00 AM4/17/15
to மின்தமிழ்
நல்ல மறுமொழி. ஆதரிக்கிறேன்.

2015-04-17 13:11 GMT+05:30 Shriviba Balamurugan <shri...@gmail.com>:


   
 

     சில பெண்கள் ஏன் பெண்களுக்குரிய  இயல்பினை ஏற்றுக் கொள்ள
     மறுக்கிறார்கள்? அனைத்திலும் " ஆண்களைப் போல் " இருக்க வேண்டும்
     என்பதற்காக இரும்பு முகமூடி அணிந்து தங்களின் இயல்பினை மாற்ற
     முயற்சிக்கின்றார்கள். அத்தனை இழிவான பிறப்பா பெண் பிறப்பு?

     ஒரு பெண்.,  பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல்
     இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா.

     அன்புடன்
     ஸ்ரீவிபா.

Geetha Sambasivam

unread,
Apr 17, 2015, 5:56:47 AM4/17/15
to மின்தமிழ்
//அக்காலத்தில்  இருந்த சேலையையே பேண்ட்  வடிவில் மாற்றிக் கட்டிக் கொண்டுதான் போர் செய்திருக்கின்றார். இக்காலத்தில் பேண்ட் சர்ட் இருக்கின்றது அதனை போட்டுக் கொள்கின்றார்கள் பெண்கள்.//


அது உள் கச்சம் சுபா. அக்காலங்களில் எல்லாப் பெண்களுமே உள் கச்சம் வைத்துத் தான் சேலை கட்டுவார்கள் என என் தந்தை கூறி இருக்கிறார். இப்போதும் பல வீடுகளில் சிராத்தம், சமாராதனை போன்ற முக்கிய விசேஷங்களுக்குச் சமைக்கையிலோ, பரிமாறும்போதோ உள் கச்சம் வைத்துப் புடைவை கட்டிய பெண்கள் தான் வேலையில் பங்கு பெறலாம் என்று சொல்வதுண்டு. 

Suba.T.

unread,
Apr 17, 2015, 7:51:28 AM4/17/15
to மின்தமிழ்
2015-04-17 11:56 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
//அக்காலத்தில்  இருந்த சேலையையே பேண்ட்  வடிவில் மாற்றிக் கட்டிக் கொண்டுதான் போர் செய்திருக்கின்றார். இக்காலத்தில் பேண்ட் சர்ட் இருக்கின்றது அதனை போட்டுக் கொள்கின்றார்கள் பெண்கள்.//


அது உள் கச்சம் சுபா. அக்காலங்களில் எல்லாப் பெண்களுமே உள் கச்சம் வைத்துத் தான் சேலை கட்டுவார்கள் என என் தந்தை கூறி இருக்கிறார். இப்போதும் பல வீடுகளில் சிராத்தம், சமாராதனை போன்ற முக்கிய விசேஷங்களுக்குச் சமைக்கையிலோ, பரிமாறும்போதோ உள் கச்சம் வைத்துப் புடைவை கட்டிய பெண்கள் தான் வேலையில் பங்கு பெறலாம் என்று சொல்வதுண்டு. 

எனக்கு ​புதிய விசயம் கீதா.
இது இன்றும் பயன்பாட்டில் இருந்தால் நன அடுத்து வரும் போது பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். இது உடலின் மேல் பகுதியில் மட்டும் அணியப்படுவதா?​
 

​சுபா​

Geetha Sambasivam

unread,
Apr 17, 2015, 7:59:08 AM4/17/15
to மின்தமிழ்
இல்லை. உள்பக்கம் கச்சம் போட்டுக் கட்டும் முறை. இன்றும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் பல பழைய காலப் பெண்மணிகளும், இம்மாதிரிக் கலாசாரத்தில் பிடிப்புள்ள பெண்மணிகளும் இப்படிக் கட்டுவார்கள். குறைந்த பக்ஷம் பாரம்பரியப் பண்டிகைகளின் போதாவது இப்படிக் கட்டும் வழக்கம் உண்டு. தமிழ்நாட்டு பிராமணர்களிலும் ஐயரானாலும் சரி, ஐயங்காரானாலும் சரி இப்படி உள்கச்சம் போட்டுக் கட்டுவதைத் தான் "மடிசார்" என அழைக்கின்றனர். இப்போதும் முக்கியப் பண்டிகைகளில் உதாரணமாகப் பொங்கல், திருக்கார்த்திகை, நோன்பு, மாவிளக்குப் போடுதல்  போன்ற பண்டிகைகளில் திருமணமான பெண்கள் உள்கச்சம் போட்டுக் கட்டுவதே வழக்கம். சாதாரணமாக தமிழ்நாட்டு மடிசாருக்கு ஒன்பது கஜம் சேலை தேவை எனில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் ஏழு, எட்டு கஜம் சேலைகள் பயனாகும். கட்டும் முறையில் மாறுபாடு இருப்பதால் இப்படி!

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 9:10:36 AM4/17/15
to mintamil, vallamai

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 9:52:02 AM4/17/15
to mintamil, vallamai
மனநலமருத்துவர் டாக்டர் ஷாலினி அவர்களையே நான் முன்பு குறித்திருந்தேன்.

அவர் முன்பு ஒரு பேட்டியில் உடைமாற்றம், தலைமுடி திருத்தம், நகைகள் தவிர்ப்புபற்றிப் பேசினார். உடையால், ஒப்பனையால் பெண் தன்னை வேறுபடுத்தி வெளிஉலகுக்குகாட்டவேண்டுமென்பதில்லை என்பதைப் பெரியார் வழியில் எடுத்துரைத்தார். சமுதாயச் சமநோக்கிற்கு வழிவகுக்கும்; பாலியல் கவர்ச்சி கட்டுப்படுமென்பதும் முன்வைக்கப்பட்டது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
Image result for டாக்டர் ஷாலினி


Malarvizhi Mangay

unread,
Apr 17, 2015, 12:47:28 PM4/17/15
to mint...@googlegroups.com

திரு.சொ.வி ஐயா நானும் மருத்துவர்  ஷாலினி குறித்துத் தங்களைப் போலவே
எண்ணியிருந்தேன்.ஆனால்  நேற்று.இரவு
மக்கள் தொலைக்காட்சி யில் துப்பட்டா  அணிந்து வந்திருந்தார்.ஏன் என நெருடல்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 17, 2015, 1:31:52 PM4/17/15
to mintamil, Malarvizhi Mangay
2015-04-17 22:17 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

திரு.சொ.வி ஐயா நானும் மருத்துவர்  ஷாலினி குறித்துத் தங்களைப் போலவே
எண்ணியிருந்தேன்.ஆனால்  நேற்று.இரவு
மக்கள் தொலைக்காட்சி யில் துப்பட்டா  அணிந்து வந்திருந்தார்.ஏன் என நெருடல்.




ஒருவேளை ஆண்கள் அணியும் மேல்சட்டை அணியாதிருந்திருக்கலாம். அதனால் துப்பட்டா அணிந்திருக்கலாம்.

பெண்கள் உடையால், ஒப்பனையால், நகைகளால் தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்வதைத் தவிர்ப்பது ஆண் பெண் சமநோக்குக்கு ஒருவகையில் வழிவகுக்கும் என்ற கருத்துக்குறித்து தங்கள் அபிப்ராயம் அறிய ஆவல்.

நன்றி திருமிகு மலர்விழி மங்கை.

செல்வன்

unread,
Apr 17, 2015, 1:51:43 PM4/17/15
to mintamil

2015-04-17 4:11 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
காலணி அணியாமல் முன்னர் ​மக்கள் இருந்தனர். காலணியின் முக்கியத்துவம் அறிந்து அதனை அணியும் நாகரிகத்தை மக்கள் இப்போது பின்பற்றுகின்றனர்.
லுங்கி கட்டி கொண்டும் சேலை கட்டிக் கொண்டும் வேலை செய்யும் சிரமத்தை அவர்கள் தான் அறிவர். அதனை நியாயப்படுத்தி ஏதோ அவர்கள் மகிழ்ச்சியாக அப்படி உடை அணிந்து பணி புரிகின்றனர் எனச் சொல்வது . .அதிலும் பாண்ட் ஷர்ட் பமாட்டிக் கொண்டு வசதியாக இருக்கும் ஒருவர் சொல்வது நியாயமாக இல்லை. :-))


அந்த பெண்கள் இருக்கும் ஊரில் சுடிதார், பேண்ட் எல்லாம் இல்லாமலா இருக்கும்? அவர்கள் அதை அறியாமலா இருப்பார்கள்? அவர்கள் விருப்பபட்டு புடவை அணிந்தால் அதைத்தடுக்க நான் யார்? :-)

--

செல்வன்

unread,
Apr 17, 2015, 2:11:06 PM4/17/15
to mintamil
2015-04-17 4:13 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
எந்த இடத்தில் எத்தகைய சுழலில் எந்த பின்னனியில் .. எந்த கேள்விக்கு பெரியார் இப்பதில்களைச் சொல்லியிருப்பார் என்பதை நமது மின் தமிழ் ஆர்க்கைவைத் தேடினால் கூட வாசகார்கள் அறிந்து கொள்வர்.
எதை நிலை நாட்ட இந்த முயற்சி?

பெரியார் எல்லா புனிதங்களையும் உடைத்துபோட்டவர். ராமர் சிலையை உடைத்தார். கீதையை கொளுத்தினார். காந்திபடத்தை கொளுத்தினார். அதே போல் சிலம்பையும், குறளையும் திட்டினார்

அவர் பொதுவாக தமிழ்கலாசாரத்தில் நல்லது எதுவுமே கிடையாது எல்லாரும் ஆங்கில கலாசாரத்தை பின்பற்றவேணும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழருக்கு தம்மை ஆளவே தெரியாது, ஆங்கிலேயர் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும், இல்லாவிடால் கடைசிக்கு ரஷ்யாகாரன் வந்து ஆளவேண்டும் என்றெல்லாம் 1956 வரை பேசிக்கொண்டிருந்து கடைசியில் அது நடக்காது என தெரிந்தே அதைக்கைவிட்டார்.

ஜெர்மனிக்கு போய் லிவிங் டெகெதர் இருக்கும் தம்பத்யினரை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்

"..நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "proposed husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?" என்றார்

அதன்பின் ஒரு கட்டத்தில் "பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான்." என்றார்

முழுக்க முழுக்க காலனியத்துவ கால மனபான்மையிலேயே அவர் இருந்தார். அதனால் தான் அப்படியே வெள்ளைகாரர்களை காப்பி அடித்து அவர்கள் மொழி, கலாசாரம், ஏன் மதத்தை கூட நம்மைப்பின்பற்றக்கூறினார்.

இதன் அடிப்படையிலேயே

தமிழ் மொழி இழிவானது, ஆங்கிலமே உயர்ந்தமொழி
புடவை கேவலாமனது, பேண்டே நல்ல உடை
பெண்கள் நீளமானமுடி வளர்த்த கூடாது, ஆங்கிலேயரை போல கிராப்பு வெட்டிக்கொள்லவேண்டும்

கல்யானம் செய்துகொள்ளகூடாது, குழந்தைபெறகூடாது என்ற அளவுக்கு பேசினார். அதன் பின்னர் அவரே 72 வயதில் மணியம்மையை மணந்தார்.

ஆக தமிழர்கள் மேல் அவருக்கிருந்த இந்த தாழ்வுமனபான்மையின் அடிப்படையிலேயே இத்தகைய வாதங்கள் அவரால் எடுத்து வைக்கபட்டன. கல்யானம் வேண்டாம் என கூறியதை அவராலேயே பின்பற்ற முடியவில்லை...அதை மற்றவர்களால் எப்படி பின்பற்ற முடியும்?



--

Oru Arizonan

unread,
Apr 17, 2015, 3:08:37 PM4/17/15
to mintamil
//​பேண்ட் அல்லது ஆடை அணிந்தால் பெண் பெண்ணாக இல்லாமல் போய் விடுவாரா?
ஆச்சரியமாக இருக்கின்றது .
அயல்னாட்டு பெண்களெல்லாம் பெண்கள் அல்லது பெண் தன்மை இல்லாதவர்களோ?
அப்படியென்றால் மிக எளிமையாக... சேலை கட்டினால் போதும் அவர் பெண் என சொல்லி விடலாம் போலிருக்கின்றதே. //

நான் உண்மையான பெண்ணியத்தைப்  போற்றுகிறேன்.  

ஒரு பெண் எப்படி உடையணிய வேண்டும், அழகு படுத்திக்கொள்ளவேண்டும், நடை அணிந்துகொள்ளவேண்டும் என்பதை அவளே தீர்மானிக்கிறாள்.  அதன் விளைவுகளையும் அவளே ஏற்றுக்கொள்கிறாள்.  அதே சமயம் அவள் இருக்கும் நாட் டு சட்டதிட்டங்கள், சமூக கட்டுப்பாடுகளை அனுசரிக்கவேண்டி இருக்கிறது.  எந்த விஷயத்திலும் உண்மையான சுதந்திரம் என்பது யாருக்கும் இல்லை.

இது ஆண்களுக்கும் பொருந்தும். 

ஒரு பெண் பாரம்பரிய உடை அணிவதோ, இல்லை மேற்குநாட்டு உடைகளை அணிவதோ, இல்லை மற்றவர் மனத்தைக் கிளருவதுபோல் உடை அணிவதோ -- அவளது விருப்பம்.  அதைப் பொறுத்தே அதன் விளைவுகளையும் அவளே ஏற்றுக்கொள்கிறாள்.  

இவ்வகையில் //ஒரு பெண்,  பெண்ணாகவே இருந்து தன் இயல்பினை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது, தன் பெண் இனத்திற்கு கொடுக்கும் மரியாதை அல்லவா// என்று ஒரு பெண் தனது பெண்மையை நிலைநாட்டிக்கொள்கிறேன், ஆண்களைப்போல இருக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை என்று பதியும்போது, அக்கருத்துடன் எனக்கு உடன்பாடு இருக்கிறது என்பது உண்மையான  பெண்ணியத்தைப் போற்றுவது என்றே  நினைக்கிறேன்.

நான் பதிந்தது ஒரு பெண் நான் பெண்ணாகவே இருந்துவிட்டுப்போகிறேன் என்று  எழுப்பிய பெண்ணியக் குரலை ஆதரித்துத்தான்.  இதில், உடை அணிதல்,, அழகுபடுத்தல்,  நகை அணிதல் எதையும் நான் பார்க்கவில்லை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 17, 2015, 3:20:19 PM4/17/15
to mintamil
//பெண்களின் ஆடையில் ஆரியக் கலப்பு இல்லாமல் இருந்ததே.//

விளக்குங்கள், சித்தரே!  இந்தியா முழுக்க பெண்கள் புடவைதான் அணிந்துகொண்டிருந்தார்கள், ஆண்கள் வேட்டிதான் அணிந்துகொண்டிருந்தார்கள்  --  பஞ்சாப், காஷ்மீர் நீங்கலாக.

இதில் ஆரியக் கலப்பு எங்கிருந்து வந்தது?  நீங்கள் இன்னும் ஆரிய/திராவிட மாயையில் சிக்குண்டு இருக்கிறீர்களா?  எனக்குப் புரியவில்லை.

சித்தரின் சின்னத்தம்பி 

செல்வன்

unread,
Apr 17, 2015, 3:26:59 PM4/17/15
to mintamil
சுடிதாரை சொல்கிறாரோ என்னவோ?

ஆனால் அதுவும் முஸ்லிம் பெண்களை பார்த்து இந்துபெண்கள் அணிய ஆர்ம்பித்த உடையே. ஆரிய உடை அல்ல, இசுலாமிய உடை

Oru Arizonan

unread,
Apr 17, 2015, 3:28:17 PM4/17/15
to mintamil
//சுடிதாரை சொல்கிறாரோ என்னவோ?

ஆனால் அதுவும் முஸ்லிம் பெண்களை பார்த்து இந்துபெண்கள் அணிய ஆர்ம்பித்த உடையே. ஆரிய உடை அல்ல, இசுலாமிய உடை//

அதுதான் பஞ்சாப், காஷ்மீர் நீங்கலாக என்று சொல்லிவிட்டேனே!

Nagarajan Vadivel

unread,
Apr 17, 2015, 7:28:52 PM4/17/15
to மின்தமிழ்

2015-04-18 0:50 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
நீங்கள் இன்னும் ஆரிய/திராவிட மாயையில் சிக்குண்டு இருக்கிறீர்களா?  எனக்குப் புரியவில்லை.


இது
​ இதுதான் வேண்டாமென்று நான் வேண்டிவிரும்புவது.  நான் மாயையிலொன்றும் மூழ்குவதில்லை. போதைப் பழகத்திலிருந்தும் முற்றும் வெளிவந்துவிட்டேன். நிற்க.  காந்தியார் தென் ஆஃப்ரிக்கா போகும்போது தன் மனைவியிடம் மேலைநாட்டு உடைதான் அணியவேண்டும் என்றும் அவர் குழந்தைகள் மேல்நாட்டு உடையில்தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.  அதுபோன்றே அவர்கள் வாழ காந்தியார் வற்புறுத்தினார்.  காந்தி மனைவிக்கு குஜராத்திபாணி உடை அணியும் உரிமை பறிபோனது.  அக்காலத்தில் மடிசார் உடை பிராமணப் பெண்மணிகள் அணிந்தனர்.  எனவேஎ அ​து ஆங்கிலபாணி உடையல்ல.  பார்சிகள் அடையும் உடை ஒரளவுக்கு மேற்கத்தியபாணி என்று காந்தியார் மனைவி தென் ஆஃப்ரிக்காவிலிருந்து மீண்டும் இந்தியாவரும்வரை பார்சி உடைதான் அணிந்தார்.  இந்தியாவில் ஒவ்வொரு குமுகப்பிரிவுப் பெண்ணும் ஒருவித பாணியில் உடை அமைந்த எண்ணற்ற வண்ணக்கலவை உலகில் எங்கும்பார்க்கமுடியாத ஒன்று.  என் மகள் ஆடை ஆயத்தவியல் கற்றவர் என்பதால் எனக்குப் பெண்க்ளின் ஆடை வண்ணங்களிலும் அணியும் முறையிலும் எண்ணற்ற வேறுபாடுகளைக் கொண்டது என்பதை ஆவண அடிப்படையில் அறிவேன்.  ஆதாரம் கேட்டால் தருவேன்.  இங்கே இப்போது அதிகாலை நேரம்.  எந்த மாயையும் இல்லை

இணையவேள்

Seshadri Sridharan

unread,
Apr 17, 2015, 10:11:18 PM4/17/15
to mintamil
2015-04-17 23:40 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஜெர்மனிக்கு போய் லிவிங் டெகெதர் இருக்கும் தம்பத்யினரை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்
"..நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "proposed husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?" என்றார்

மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய முன்னேற்றம் வெறும் பொருள்நோக்கு (materialistic) முன்னேற்றம் தான். 
ஒரு நாட்டில் ஒரே பொதுவான பண்பாட்டில் ஒரே கல்வி முறையில் வளர்ந்த ஆண்  பெண் இப்படி live in முறையில் என்ன புரிந்து கொள்ளப் போகிறார்கள் புதிதாக. மொத்தத்தில் தமிழரை உலகிலேயே அதி  அநாகரீகராக மாற்றவேண்டும் எனபது தான் பெரியார்  திட்டம்.

அதன்பின் ஒரு கட்டத்தில் "பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான்." என்றார்
 
பெரியார் வெறுப்பாளர்  என்ற நிலையில் இருந்து பித்துபீடித்தவர் என்ற நிலைக்கே ஆட்பட்டதால் மனம்போனபடி உளறி வந்தார்.

 Úh

The meaning of the verbal root úh is “to marry”. Thus the meaning of the word úha is “marriage”. Long ago there used to be a popular and interesting folktale. In very ancient times, as with other animals, there was no custom of marriage among human beings. As far as it can be ascertained, this situation certainly continued until the middle of the Rgvedic age and likely until towards the end of that age. It was said during that time that there was once a five-year-old boy, the son of a certain sage, who became perplexed when he saw his mother going off with another man and asked his father why his mother was going off with that other fellow like that. The sage answered his son: “That's the rule. Any woman can stay with any man whenever she likes. She can also leave him whenever she likes. In the same way, any man can go off with any woman at any time.”

The sage's son asked: “Then what will I do?”

The sage replied: “Children who are breastfeeding will stay with their mother. Once they become too old for that they can stay wherever they like. Wherever they stay they have to make arrangements for their food in exchange for labour.”

“But that's no good!” the sage's young son exclaimed. “No good at all.”

In most cases, it was generally seen that the father did not bear the responsibility for the maintenance of their offspring or any other kind of responsibility towards them. All responsibility fell on the mother's shoulders. For this reason wicked men used to put straightforward-natured women into extreme difficulty. The womenfolk used to spend their time under great duress. If not all, at least most of the men did not shoulder any responsibility for their offspring. Most of them were libertine. This is not to say that there were not any libertine woman, but the number of such women was less. Moreover, the affection they felt towards their children was a very strong bond of attachment which they could not easily break. This situation among humans, which was similar to that of animals, had been going on for approximately one million years, that is, human beings appeared about one million years ago.

Then Shiva made his appearance. He helped human beings to flower and blossom and put forth new leaves of welfare, expression, sweetness, developed thinking, spiritual awakening, and humanity. He became the chief resource of the human soul, a necessary part of everyone's journey, regardless of their greatness or smallness, the luminous polestar of their life's progress. The same Shiva who applied a healing balm to human beings' external life by inventing medicine and the science of healing also regulated all levels of human life and gave humanity the top rung as the supreme and final achievement.

The women of that day stood at Shiva's door and said: “O Sadáshiva, save us from this beastly, distressful condition. There is no man or woman strong enough today to lay down rules in this matter and to put them into practice with a firm hand.” Shiva's heart melted; he understood their pain. He introduced the custom of marriage and firmly fixed the rights and responsibilities of the father. For the first time human beings felt the contact of a peaceful environment in social life.

Still some wicked-natured men remained and some libertine women as well. Then, with the help of his followers, Shiva obliged those wicked men to marry by punishing them with the rod and rope. Just as there were libertine men, there were also some libertine women. This libertine group became greatly frightened of Shiva. Seeing the terror of the anti-Shivaites, the devotees of Shiva added the portion dańd́apáshásipáńaye [“to Lord Shiva with the rod, rope and sword in hand”] to His prańama mantra [mantra of obeisance]. The followers of Shiva bound the sinners with rope and beat them with sticks.

These sinners used to make úh-úh sounds in pain and tried to flee. There were three kinds of u sounds – short, long, and extra-long. With the invention of script came letters for the short and long sounds, but not for the extra-long sound. The students used to learn from their Rgvedic or Sámavedic teachers when and where the extra-long pronunciation should be used (the extra-long u is virtually non-existent in the Atharvaveda and the Yajurveda). While writing, they would write ú. In olden times many sounds were pronounced as ú that with the passage of time became shortened to u. The prefix ut is one such sound; in olden times it was út. The followers of Shiva forced the makers of this úh-úh sound to marry and to accept the responsibility of caring for their offspring. Over time this úh came to mean “to marry”.

In today/s society also there are a few of these wicked-natured men. The leaders of the society or the state should make them utter this úh sound by creating the requisite circumstantial pressure. However, I must point out in unambiguous terms that making legal declarations against these rogues will not create the necessary circumstantial pressure to make wicked-natured men say úh.

by Prabhat Ranjan Sarkar on 17 November 1985, Calcutta, Published in: Shabda Cayaniká Part 2 chaptert: UkUk to Udha Discourse 10
 
முழுக்க முழுக்க காலனியத்துவ கால மனபான்மையிலேயே அவர் இருந்தார். அதனால் தான் அப்படியே வெள்ளைகாரர்களை காப்பி அடித்து அவர்கள் மொழி, கலாசாரம், ஏன் மதத்தை கூட நம்மைப் பின்பற்றக்கூறினார் 

 அவருக்கு சொந்த சிந்தனையே இருந்திருக்கவில்லை என்று மட்டும் தோன்றுகிறது.

கைத்தொழுவான் 

தேமொழி

unread,
Apr 18, 2015, 12:00:53 AM4/18/15
to mint...@googlegroups.com


On Friday, April 17, 2015 at 7:11:18 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:


2015-04-17 23:40 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஜெர்மனிக்கு போய் லிவிங் டெகெதர் இருக்கும் தம்பத்யினரை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்
"..நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "proposed husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?" என்றார்

மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய முன்னேற்றம் வெறும் பொருள்நோக்கு (materialistic) முன்னேற்றம் தான். 
ஒரு நாட்டில் ஒரே பொதுவான பண்பாட்டில் ஒரே கல்வி முறையில் வளர்ந்த ஆண்  பெண் இப்படி live in முறையில் என்ன புரிந்து கொள்ளப் போகிறார்கள் புதிதாக. மொத்தத்தில் தமிழரை உலகிலேயே அதி  அநாகரீகராக மாற்றவேண்டும் எனபது தான் பெரியார்  திட்டம்.

அதன்பின் ஒரு கட்டத்தில் "பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான்." என்றார்
 
பெரியார் வெறுப்பாளர்  என்ற நிலையில் இருந்து பித்துபீடித்தவர் என்ற நிலைக்கே ஆட்பட்டதால் மனம்போனபடி உளறி வந்தார்.

 Úh

The meaning of the verbal root úh is “to marry”. Thus the meaning of the word úha is “marriage”. Long ago there used to be a popular and interesting folktale. In very ancient times, as with other animals, there was no custom of marriage among human beings. As far as it can be ascertained, this situation certainly continued until the middle of the Rgvedic age and likely until towards the end of that age. It was said during that time that there was once a five-year-old boy, the son of a certain sage, who became perplexed when he saw his mother going off with another man and asked his father why his mother was going off with that other fellow like that. The sage answered his son: “That's the rule. Any woman can stay with any man whenever she likes. She can also leave him whenever she likes. In the same way, any man can go off with any woman at any time.”

The sage's son asked: “Then what will I do?”

The sage replied: “Children who are breastfeeding will stay with their mother. Once they become too old for that they can stay wherever they like. Wherever they stay they have to make arrangements for their food in exchange for labour.”

“But that's no good!” the sage's young son exclaimed. “No good at all.”

In most cases, it was generally seen that the father did not bear the responsibility for the maintenance of their offspring or any other kind of responsibility towards them. All responsibility fell on the mother's shoulders. For this reason wicked men used to put straightforward-natured women into extreme difficulty. The womenfolk used to spend their time under great duress. If not all, at least most of the men did not shoulder any responsibility for their offspring. Most of them were libertine. This is not to say that there were not any libertine woman, but the number of such women was less. Moreover, the affection they felt towards their children was a very strong bond of attachment which they could not easily break. This situation among humans, which was similar to that of animals, had been going on for approximately one million years, that is, human beings appeared about one million years ago.

Then Shiva made his appearance. He helped human beings to flower and blossom and put forth new leaves of welfare, expression, sweetness, developed thinking, spiritual awakening, and humanity. He became the chief resource of the human soul, a necessary part of everyone's journey, regardless of their greatness or smallness, the luminous polestar of their life's progress. The same Shiva who applied a healing balm to human beings' external life by inventing medicine and the science of healing also regulated all levels of human life and gave humanity the top rung as the supreme and final achievement.

The women of that day stood at Shiva's door and said: “O Sadáshiva, save us from this beastly, distressful condition. There is no man or woman strong enough today to lay down rules in this matter and to put them into practice with a firm hand.” Shiva's heart melted; he understood their pain. He introduced the custom of marriage and firmly fixed the rights and responsibilities of the father. For the first time human beings felt the contact of a peaceful environment in social life.

Still some wicked-natured men remained and some libertine women as well. Then, with the help of his followers, Shiva obliged those wicked men to marry by punishing them with the rod and rope. Just as there were libertine men, there were also some libertine women. This libertine group became greatly frightened of Shiva. Seeing the terror of the anti-Shivaites, the devotees of Shiva added the portion dańd́apáshásipáńaye [“to Lord Shiva with the rod, rope and sword in hand”] to His prańama mantra [mantra of obeisance]. The followers of Shiva bound the sinners with rope and beat them with sticks.


 \\\அவருக்கு சொந்த சிந்தனையே இருந்திருக்கவில்லை என்று மட்டும் தோன்றுகிறது.\\\  மேலே காட்டியுள்ளதுதான்  சொந்த சிந்தனை என்றால் அப்படி  ஒரு சொந்த சிந்தனையே யாருக்கும் தேவையில்லை சேசாத்திரி.  

நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் கற்பனை கலப்பு, அல்லது  கற்பனைகளையே ஆவணம் என்று அடித்துப் பேசும் கற்பனை ....

இவைகள்தான்  தனது எண்ணங்களை செயல்முறையாக்க; அடுத்தவர் மனதில் நுழைக்க வரலாற்றில் மக்கள்  எடுக்கும் முயற்சிக்கு  அடிப்படையாக இருந்து வருகிறது.

ஒவ்வொருவர் சொல்வதையும் அவரது உள்நோக்கத்தை ஆராய்வது நல்ல முயற்சி.  அதுதான் உண்மையைத் தெளிய வைக்கும், ஆனால் அந்த அளவுகோலை அனைவர் சொல்வதையும் ஆராய சமமாகப் பயன்படுத்த வேண்டும்.

தனக்குப் பிடித்தவருக்கு விதிவிலக்கு, மற்றவர் சொல்வதை குற்றம் சொல்வது; மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்பதை நினைவு படுத்துகிறது. 

ஒருவர் முன்வைக்கும் மதிப்புரைகளினால் அவர் அதிகம் வெறுக்கப்படுகிறார், controversial statements கொடுத்தார் என்றால்  அவர் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எந்தப் பக்கம் உள்ள நியாயத்தையும் சொல்கிறார் என்று பொருள்.  

யாராயிருந்தாலும் போட்டுத் தாக் கிவிடுவது, மனதில் பட்டது அடுத்தவருக்குப் பிடிக்காது என்பதைப் பொருட்படுத்தாமல்  சொல்வதில் subramanian swamy இக்காலத்தில் நல்லதொரு முன்னோடி.


..... தேமொழி 

N. Kannan

unread,
Apr 18, 2015, 12:42:52 AM4/18/15
to மின்தமிழ்
2015-04-17 13:14 GMT+08:00 செல்வன் <hol...@gmail.com>:
.என்னைகேட்டால் இதற்கு பதில் ஆண்கள் புடவை, பாவாடை தாவ்ணி அணிந்து சமத்துவத்தை நிலைநாட்ட முன்வருவதுதான் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது

நல்ல பாயிண்ட் செல்வன். அது என்ன, மீண்டும், மீண்டும் பெண்களே மாற வேண்டுமென அழுத்திச் சொல்வது. ஆண் பாவாடை அணிய வேண்டுமென்று பெரியார் சொல்லி அவராலேயே கடைபிடித்து இருக்க முடியாது. ஆண் மேலாண்மை என்பது பெண்ணியம் பேசினாலும் தூக்கலாகவே நிற்கிறது ;-)

நா.கண்ணன் 

தேமொழி

unread,
Apr 18, 2015, 12:50:01 AM4/18/15
to mint...@googlegroups.com


Now back to the topic 

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடை அணியப் பிடிக்கும், 

அது தாங்கள் யார் என்பதை முன்வைப்பதாகவும், அல்லது தங்கள் குணநலனைக் காட்டும் வகையில் அமைந்தோ இருக்கும். 

உளவியல்படி இது பதின்ம வயதில் உருவாகும், பெல்பாட்டம்ஸ், ஜீன்ஸ், பெர்முடாஸ், லுங்கி, வேட்டி என எதுஅணிந்தாலும் ஆண்களும் அந்த வழியில்தான் அந்த அடிப்படையில்தான் அணிகிறார்கள். 

கிழிந்த பேண்ட், வெளுத்துப் போன ஜீன்ஸ் ஆகியவை சொல்வதென்ன?  இது எனது தனித்துவம் என்ற கவன ஈர்ப்பு. 

வளர்ந்த பொழுது உடுத்தியது போன்ற வகையில் உடுத்தி அந்த வகையில் தொடர்வதில் சிலருக்கு மன அமைதிகிடைக்கும் 

அல்லது தனது மதம், தேசியம், போன்றவற்றைக் காட்ட உடை அணிவதும் சிலருக்குப் பிடிக்கும் 

அதனால்தான், காவியோ, கருப்போ, சிவப்போ, பச்சையோ, வெள்ளையோ உடுத்துகிறார்கள். 


சிலருக்கு வாழும் சூழ்நிலையை ஒத்து, வேறுபாடு தெரியாத வகையில் உடை அணிவது பிடிக்கும். 

சீருடை போன்றவகையில் கூட்டத்தில் ஒருவரை வேறுபடுத்திக் காட்ட உடைகளும் இருக்கிறது. 


இலக்கியம், திரைப்படம், உணவு, மலர்கள், விலங்குகள் என எங்கும் வேறுபாடு இருக்கும் பொழுது, உங்களுக்குத்தேவையானதை தேர்ந்தெடுத்துத் தொடர்வது போல விதம் விதவிதமாக உடையணிந்து வலம் வரும் பெண்களுடன்உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். பெண்களில் வேறுபாட்டை மதியுங்கள். 


ஆடை வகை, அதன் நிறம் என்பது ஒருவரது மனைநிலையின் வெளிப்பாடு என்று நான் பார்க்கிறேன். 

அதில் வேறுபாடு அவரது தனித்துவம். அதை வைத்து எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ...அதுவும் அந்தஆடைகளை அணிந்தே வாழ்ந்திராதவர்கள் வற்புறுத்த நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. 

சந்தேகமின்றி பேண்ட்/ஷர்ட் அணியும் பெண்களின் சுதந்திரச் சிந்தனை ஒருசிலருக்கு அச்சம் கொடுப்பது தெரிகிறது. 

பெண்கள் புடவையில் இயல்பாக வாழ்வதை மதியுங்கள் என்றால் பெண்கள் வேறு எந்த உடை அணிந்து வாழ்வதையும்இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொருவரின் இயல்பும் வேறுபடுகிறது. 

அவர்கள் என்ன அணிந்தாலும் அணிந்துகொள்ளட்டும் அதில் எனக்கு அக்கறையில்லை என்று சொல்லிக்கொண்டே புடவை என்ற உடைக்கு என்ன குறை என்று தொடர்ந்து வரும் கேள்வியைப் போல ஒரு முரணைப் பார்க்க இயலாது.  

சற்று திரும்பிப்பார்த்தால் வரலாற்றில் கைம்பெண்களுக்கு  என்று இருந்த சீருடை எப்படி கைவிடப்பட்டதோ அதை மனதில் கொண்டு 

அது போல காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். 

..... தேமொழி 









செல்வன்

unread,
Apr 18, 2015, 1:27:22 AM4/18/15
to mintamil

2015-04-17 23:50 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெண்கள் புடவையில் இயல்பாக வாழ்வதை மதியுங்கள் என்றால் பெண்கள் வேறு எந்த உடை அணிந்து வாழ்வதையும்இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவேண்டும். 

யார் வேண்டாம் என்றார்கள்?

ஜீன்ஸ் அணிந்த பெண்களை முந்தி குறைகூறியதை கண்டித்தோம்..நான் கண்டித்தேன். அதே போல புடவை அணிவதை குறைகூறுவதையும் கண்டிக்கிறேன்.


--

Malarvizhi Mangay

unread,
Apr 18, 2015, 3:02:45 AM4/18/15
to mint...@googlegroups.com

என்னைப்பொருத்தவரையில் உடை வகைகள் _சமத்துவம் இவற்றில் ஆடையைப்போலவே பேசிப்பேசி நிர்வாணப்படுத்துகிறோம் இல்லையென்றால் மூடி மூடிபுனிதப்படுத்துகிறோம் (கருத்துகளையும்)  என்றே எண்ணுகிறேன்.

--

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2015, 3:17:48 AM4/18/15
to மின்தமிழ்
ஆணாதிக்க உலகில் ஒரு பெண் தன்னிடத்தைத் தக்கவைக்கவும் முன்னேறவும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  அதிலும் ஆணைவிடப் பெண் அறிவிற்சிறந்திருந்தால் அவர் படும்பாடு சொல்லி மாளாது.  திரைப்படப் பெண் கலைஞர்களையும் உயர்கல்வி ஆய்வாளர்களையும் வணிக நிறுவன மேலண்மையாளர்களையும் உற்று நோக்கினால் அவர்கள் படும் வேதனையையும் மன அழுத்தத்தையும் சொல்லி மாளாது.  சேலைக்குப் பதிலாக ஆணுக்கு நிகராக கோட் போட்டால் மட்டும் போதாது அவர்களுக்கு நிகராக பார்ட்டிகளில் குடிக்கவும் வேண்டும்.  விமானத்தில் பறப்பதிலும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதிலுமிருக்கும் சமத்துவம் சம்பளத்திலும் திறமைகளை எடைபோடுவதிலும் செயல்படுத்துவதில்லை

பெண்ணுலகில் ஆண் தன் வலிமையை வைத்து எளிதாக நுழைவதுபோல் ஆணாதிக்க உலகில் பெண் அவ்வளவு எளிதில் ஊடறுத்து உள்நுழைய முடியாது. சரிநிகர் சமானம் என்று சவால்விட முடியாது

இணையவேள்

--

Seshadri Sridharan

unread,
Apr 18, 2015, 6:18:37 AM4/18/15
to mintamil
2015-04-18 9:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, April 17, 2015 at 7:11:18 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:


2015-04-17 23:40 GMT+05:30 செல்வன் <holyape 
 \\\அவருக்கு சொந்த சிந்தனையே இருந்திருக்கவில்லை என்று மட்டும் தோன்றுகிறது.\\\  மேலே காட்டியுள்ளதுதான்  சொந்த சிந்தனை என்றால் அப்படி  ஒரு சொந்த சிந்தனையே யாருக்கும் தேவையில்லை சேசாத்திரி.  

பெரியாரது பல கருத்துகள் கூட இருந்து சங்கு ஊதும் சில தனிநபர்களின் கருத்து என்று கருதுவாரும் 
 உண்டு. இராமசாமியார் எதையும் வரலாற்று அடிப்படையில் கூறியதாகத் தோன்றவில்லை. அவரது கருத்துகள் பலவும் இவராக முடிவு கொண் டவையாக உள்ளன. 
  
ஒருவர் முன்வைக்கும் மதிப்புரைகளினால் அவர் அதிகம் வெறுக்கப்படுகிறார், controversial statements கொடுத்தார் என்றால்  அவர் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எந்தப் பக்கம் உள்ள நியாயத்தையும் சொல்கிறார் என்று பொருள்.  - ..... தேமொழி 

இப்படி எந்த உணமைக்கும் பெரியார் முக்கியத்துவம் தந்ததில்லை மாறாக எவரையேனும் சுட்டி குற்றம்  சாட்டுகிறார். தம் வடுகர் இனம் பற்றி அவர் எந்த குற்றச்சாட்டையும் வைத்ததில்லை.

செல்வன்

unread,
Apr 18, 2015, 11:25:32 AM4/18/15
to mintamil
திருமணங்கள் மதத்தைப் பாதுகாக்கவே…

திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.
உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.
இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,
பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக
ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும்
மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள்.
இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள்
நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம்.
இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம்
மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.

-பெரியார்

இப்படிச்சொல்லிவிட்டு அதன்பின் இவர் திருமணம் செய்துகொண்டார். ஆக திருமணம் மதத்தை பாதுகாக்க அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா?

Seshadri Sridharan

unread,
Apr 18, 2015, 12:14:40 PM4/18/15
to mintamil
2015-04-18 20:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இப்படிச்சொல்லிவிட்டு அதன்பின் இவர் திருமணம் செய்துகொண்டார். ஆக திருமணம் மதத்தை பாதுகாக்க அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா?

மதத்தால் திருமண அமைப்பு ஏற்படவில்லை மதம்தான் அதைப் பின்னாளில் தன் பிடிக்குள் கொண்டு வந்தது என்பதே உண்மை. பெயர்  சூட்டுவது முதல் சாக்காடு ஏகும்வரை மதம் ஒரு மனிதனைத் தன் பிடியில் வைத்துள்ளது. நல்ல காலம் மனிதன் மதப்பிழைப்பிற்காக சாகிறான் என்று திருமணம் போல் பெரியார் உளறியிருக்கவில்லை.  அப்படி சொன்னாலும் அதையும் பகுத்தறிவின் வெளிப்பாடாக போற்றுவோர் இருக்கத் தானே செய்கிறார்கள்.

Suba.T.

unread,
Apr 18, 2015, 12:42:28 PM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
செல்வன் சேசாத்ரி இருவருமே இழைக்கு பொருத்தமில்லாத தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றீர்கள். பெரியார் பற்றி பேச ஏற்கனவே 2 தனி இழைகள் உள்ளன. அதனை இவ்வகை விசயங்களுக்குப் பயன்படுத்தவும்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 18, 2015, 12:46:20 PM4/18/15
to mint...@googlegroups.com
கருத்துக்குறித்து விமர்சனமாக இல்லாது பெரியார் குறித்த விமர்சனமாக இழை
திசை திரும்பிவிட்டது.

சேலை போன்ற உடைகள் பெண்ணுக்குப் பிரத்யேகமானவை. இன்று நீண்ட கூந்தல் சடை
போட்டுக்கொள்வது பெண்கள் மட்டுமே. லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்கள்
பெண்ணுக்குத் தனிப்பட்டவை. தோடு,மூக்குத்தி போன்ற அணிகலன்கள்
அவர்களுக்கானது. (ஆணும் போட்டுக்கொள்ளலாமே என்று ஒரு காதில் கடுக்கன்
அணிந்த ஆணின் படத்தை தயவுசெய்து பகிரவேண்டாம் :-)

எனவே பிரத்யேகமானவை என்பவை இயன்றவரை இல்லாதுபோகும்போது சமத்துவம் என்ற
வகையில் இருபாலருக்கும் சிந்தனையோட்டம் நகர வழியேற்படுமென்பதே
முன்வைக்கப்பட்ட கருத்து.

ஒரு நண்பர் கூறியதுபோல பெண் நினைத்தாலும் மீசை
வளர்க்கமுடியாதுதான். ஆண் பாலூட்ட இயலாது. அது இயற்கை. இயற்கை தன்னாலேயே
தாய்மையையும் ஆண்மையையும் அதன்போக்கில் காலங்காலமாகக்கொண்டு செலுத்தும்.
கவலைப்படவேண்டியதில்லை.

ஆனால் உடையால், ஒப்பனையால் பெண் பிரத்யேகமானவள் என்பது உடைக்கப்பட்டால்
சமத்துவ எண்ணப்போக்கு எழுவதற்கு வாய்ப்புண்டு.
மனவியல் மருத்துவர் ஷாலினி கூறியுள்ளதுபோல பாலுணர்வுக்கவர்ச்சி குறைந்து
கட்டப்படவும் வாய்ப்புண்டு.

நண்பர்கள் கருத்து பதிவிடவேண்டுகிறேன்.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 18, 2015, 12:51:14 PM4/18/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
On 4/18/15, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
> செல்வன் சேசாத்ரி இருவருமே இழைக்கு பொருத்தமில்லாத தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றீர்கள். பெரியார் பற்றி பேச ஏற்கனவே 2 தனி இழைகள் உள்ளன. அதனை இவ்வகை விசயங்களுக்குப் பயன்படுத்தவும்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி திருமிகு சுபா.

செல்வன்

unread,
Apr 18, 2015, 1:01:50 PM4/18/15
to mintamil

2015-04-18 11:46 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
ஆனால் உடையால், ஒப்பனையால் பெண் பிரத்யேகமானவள் என்பது உடைக்கப்பட்டால்
சமத்துவ எண்ணப்போக்கு எழுவதற்கு வாய்ப்புண்டு.
மனவியல் மருத்துவர் ஷாலினி கூறியுள்ளதுபோல பாலுணர்வுக்கவர்ச்சி குறைந்து
கட்டப்படவும் வாய்ப்புண்டு.

நண்பர்கள் கருத்து பதிவிடவேண்டுகிறேன்.

அலங்காரம் செய்துகொள்ளுதல், நகைகளை விரும்புதல், ஆடைகளை விரும்புதல் ஆகியவை உலகெங்கும் பழங்குடிகள் முதல் முன்னேறிய நாடுகள் வரை பெண்களிடம் இருக்கும் இயல்பான குணம்.

இப்படி நீளக்கழுத்து இருந்தால் அழகு என தோன்றுவதால் இந்த ஆபிரிக்க பழங்குடியில் பெண்கள் இப்படி கஷ்டபட்டு கழுத்தை நீளமாக்கி கொள்கிறார்கள்



தங்கம் என்றால் என்னவென்றே தெரியாத பழங்குடி சமூகத்திலும் மலர்கள், இறகுகள் மூலம் பெண்கள் தம்மை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். (அந்த ஆண் முகத்தில் இருப்பது போர்க்களம் செல்லுமுன் அணியும் பெயிண்ட்)




இயற்கைக்கு மாறாக பெண்களை நடக்க சொன்னால் அது சாத்தியமா? வெகுசில பெண்களே அப்படி நடக்க முன்வருவார்கள்.
--

செல்வன்

unread,
Apr 18, 2015, 1:09:44 PM4/18/15
to mintamil
ஆண்டவன் படைப்பில் காணப்படும் அம்சம் uniqueness/ diversity தவிர சமத்துவம் அல்ல.

ஆண்/பெண் இரு இனங்களும் இயற்கையில் மாறுபட்ட இயல்புகளை உடையவை. அவற்றை இணைக்கிறேன், வித்தியாசங்களை உடைக்கிறேன் என எடுக்கும் முயற்சிகள் அதனால் பலனளிப்பதில்லை.

தம் இயல்புப்படி பெண்களும், ஆண்களும் எப்படி இருக்கிறார்களோ அதை அப்படியே விடுவதே சிறந்தது.

Suba.T.

unread,
Apr 18, 2015, 2:08:15 PM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-18 19:01 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

2015-04-18 11:46 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
ஆனால் உடையால், ஒப்பனையால் பெண் பிரத்யேகமானவள் என்பது உடைக்கப்பட்டால்
சமத்துவ எண்ணப்போக்கு எழுவதற்கு வாய்ப்புண்டு.
மனவியல் மருத்துவர் ஷாலினி கூறியுள்ளதுபோல பாலுணர்வுக்கவர்ச்சி குறைந்து
கட்டப்படவும் வாய்ப்புண்டு.

நண்பர்கள் கருத்து பதிவிடவேண்டுகிறேன்.

அலங்காரம் செய்துகொள்ளுதல், நகைகளை விரும்புதல், ஆடைகளை விரும்புதல் ஆகியவை உலகெங்கும் பழங்குடிகள் முதல் முன்னேறிய நாடுகள் வரை பெண்களிடம் இருக்கும் இயல்பான குணம்.

இப்படி நீளக்கழுத்து இருந்தால் அழகு என தோன்றுவதால் இந்த ஆபிரிக்க பழங்குடியில் பெண்கள் இப்படி கஷ்டபட்டு கழுத்தை நீளமாக்கி கொள்கிறார்கள்



​இது ஆப்பிரிக்க பழங்குடி அல்ல. 
மியன்மார் தேசத்தில் தாய்லாந்தின் வடபகுதியில் இருக்கும் ஒரு தனி மியன்மார் இனக்குழுவினர் பெண்களுக்கு இது அழகு என நினைத்து இதனை நடைமுறை படுத்தினர். அதனால் அந்த இனக்குழு பெண்கள் அடைந்த வலி,துன்பம் என்பவை சொல்லி மாளாது. சரியான உரக்கம் இல்லாது ஆங்காங்கே கழுத்தில் ரத்தக்கசிவு என பல துன்பங்கள். அதோடு கணமான இரும்பு வளையத்தைத் தாங்கிக் கொண்டு மெலிந்த உடலோடு அவர்கள் நடக்க முடியாது விழுந்து எழுவர்.

இதனை கண்டறிந்த மனித உரிமைக்குழு இப்பகுதிக்குச் சென்று அப்பெண்களிடம் பேசி இந்த  நடைமுறையில் மாற்றம் செய்து பெண்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றது. நான் இப்பகுதிக்கு எனது தாய்லாந்து பயணத்தின் போது சென்றிருந்தேன். ஒரு சிறு சேவை மையம் ஒன்றில் படிப்படியாக பெண்கள் இந்த கொடுமையிலிருந்து மீள இந்த தொண்டூழிய  நிறுவனம் செய்த நடவடிக்கைகள் படங்களுடன் விளக்கமாக வழங்கப்பட்டிருந்தன.

சுபா

செல்வன்

unread,
Apr 18, 2015, 2:35:34 PM4/18/15
to mintamil
இது ஆப்பிரிக்காவிலும் காணப்படும் வழக்கம். காண்க

இம்மாதிரி ஆபத்தான வழக்கங்களை தடுத்து நிறுத்தலாம். ஆனால் பட்டுபுடவை, நகையை அவர்கள் நிறுத்தினால் அதை வேண்டாம் என சொல்லாத கணவர்கள் தமிழ்நாட்டில் கிடையாது :-)


Suba.T.

unread,
Apr 18, 2015, 2:41:51 PM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-18 20:35 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
இது ஆப்பிரிக்காவிலும் காணப்படும் வழக்கம். காண்க

இம்மாதிரி ஆபத்தான வழக்கங்களை தடுத்து நிறுத்தலாம். ஆனால் பட்டுபுடவை, நகையை அவர்கள் நிறுத்தினால் அதை வேண்டாம் என சொல்லாத கணவர்கள் தமிழ்நாட்டில் கிடையாது :-)

​:-))

ஒரு சில விதிவிலக்கு கணவன்மார்களும் உண்டு. எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தன் மனைவியிடம் குறிப்பிட்டுச் சொல்வார்.. ​
 
​வெளியே செல்லும் போது முன்னர் கட்டிய சேலையும் எப்போதும் போடும் நகையும் வேண்டாம்..புதிய பட்டுச் சேலையையும் புதிதாக வாங்கிய நகையையும் போட மறக்க வேண்டாம். அபோதுதானே பிறருக்கு எனது அந்தஸ்து என்ன என்று தெரியும் என்று.. 
நண்பர் மறைந்து விட்டார்​.. ஆனாலும் அவர் எப்போதும் சொல்வதும் அதற்கு அவர் மனைவி முறைத்து விட்டுச் செல்வதும் மனக்கண்ணில் வந்து செல்கின்றது.

சுபா

Shriviba Balamurugan

unread,
Apr 18, 2015, 2:45:20 PM4/18/15
to mint...@googlegroups.com

  


      காலம் காலமாக தமிழ் சமுகத்தில் ( வேறு நாட்டினை குறிப்பிடவில்லை) உடுத்திப் பழகிய,
      பார்த்துப் பழகிய பெண்களின் உடையான புடவையைவிடுத்து., பேண்ட் ஷர்ட்  அணிந்து
      ஆண், பெண் சமத்துவத்தை நிலை நாட்ட போராட வேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.
     
      மின்தமிழில் கருத்தினை பதிபவர்கள் ஆங்கிலம் மற்றும் வட மொழி வார்த்தைகளை தவிர்ப்பதன் மூலம்
      அது நம்  தமிழ் மொழியை வளர்க்கவும் பாதுகாக்கவும் உதவிட நாம் செய்யும் சிறு முயற்சியாக
      இருக்கும் என்பது போல,

       நம் கலாச்சார உடையாகிய சேலையை அணிவதன் மூலம் நம் சமூகத்தின் தனித்தன்மையை
       இழக்காமலும், பாதுகாக்கவும்  நாம் செய்யும் சிறு முயற்சியாக இருக்கும்
 
       ஒரு   பெண் , பெண்ணிற்குரிய உடையை உடுத்துவதன் மூலம் அவளின் தனித்தன்மையை
       இழக்காமல் இருக்க அவள் செய்யும் முயற்சியாக இருக்கும்.

       
       அன்புடன்
       ஸ்ரீவிபா.

    

     

 

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 18, 2015, 2:48:17 PM4/18/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
On 4/18/15, Suba.T. <ksuba...@gmail.com> wrote:

>> இப்படி நீளக்கழுத்து இருந்தால் அழகு என தோன்றுவதால் இந்த ஆபிரிக்க
>> பழங்குடியில் பெண்கள் இப்படி கஷ்டபட்டு கழுத்தை நீளமாக்கி கொள்கிறார்கள்
>>
>>
>>
> ​இது ஆப்பிரிக்க பழங்குடி அல்ல.மியன்மார் தேசத்தில் தாய்லாந்தின் வடபகுதியில் இருக்கும் ஒரு தனி மியன்மார் இனக்குழுவினர் பெண்களுக்கு இது அழகு என நினைத்து இதனை நடைமுறை படுத்தினர். அதனால் அந்த இனக்குழு பெண்கள் அடைந்த வலி,துன்பம் என்பவை சொல்லி மாளாது.
> சரியான உறக்கம் இல்லாது ஆங்காங்கே கழுத்தில் ரத்தக்கசிவு என பல துன்பங்கள். அதோடு கணமான இரும்பு வளையத்தைத் தாங்கிக் கொண்டு மெலிந்த உடலோடு அவர்கள் நடக்கமுடியாது விழுந்து எழுவர்.
>
> இதனை கண்டறிந்த மனித உரிமைக்குழு இப்பகுதிக்குச் சென்று அப்பெண்களிடம் பேசி இந்த நடைமுறையில் மாற்றம் செய்து பெண்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றது.
> கொடுமையிலிருந்து மீள இந்த தொண்டூழிய நிறுவனம் செய்த நடவடிக்கைகள் படங்களுடன் விளக்கமாக வழங்கப்பட்டிருந்தன.


படத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி திரு செல்வன், திருமிகு சுபா.

பெண் அழகாகத் தோன்ற வேண்டுமென்பதற்காக எவ்வளவு கொடுமை. அவர்களையே
இந்தச்சிரமத்தை மேற்கொள்ளவைத்துவிடுகிறதே சமுதாயம்!

நம் நாட்டிலும் புருவத்தை மழித்து முகத்தில் தெரட்டிங்
வலியைப்பொறுத்துக்கொண்டு செய்துகொள்ளும் பெண்களைப் பார்க்கும்போது எனக்கு
ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றுவதுண்டு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba.T.

unread,
Apr 18, 2015, 2:52:19 PM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-18 20:45 GMT+02:00 Shriviba Balamurugan <shri...@gmail.com>:


    


      காலம் காலமாக தமிழ் சமுகத்தில் ( வேறு நாட்டினை குறிப்பிடவில்லை) உடுத்திப் பழகிய,
      பார்த்துப் பழகிய பெண்களின் உடையான புடவையைவிடுத்து.,
இப்போது தமிழகப் பெண்கள் உடுத்தும் சேலை ​எந்த காலத்திலிருந்து நடப்பில் இருக்கின்றது?

'காலம் காலமாக'  நாம் பார்த்த பெண்களுக்கும் கடந்த 50 ஆண்டுகாலத்தில் நாம் காணும் பெண்களுக்கும் குடும்பத்திலும் சமூகத்திலும்  இருக்கும் பொறுப்பு, நடவடிக்கைகள் இவைகளிலான மாற்றம் பற்றி தங்கள் சிந்தனை என்ன?

சுபா


செல்வன்

unread,
Apr 18, 2015, 2:55:12 PM4/18/15
to mintamil
2015-04-18 13:45 GMT-05:00 Shriviba Balamurugan <shri...@gmail.com>:
காலம் காலமாக தமிழ் சமுகத்தில் ( வேறு நாட்டினை குறிப்பிடவில்லை) உடுத்திப் பழகிய,
      பார்த்துப் பழகிய பெண்களின் உடையான புடவையைவிடுத்து., பேண்ட் ஷர்ட்  அணிந்து
      ஆண், பெண் சமத்துவத்தை நிலை நாட்ட போராட வேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.நம் கலாச்சார உடையாகிய சேலையை அணிவதன் மூலம் நம் சமூகத்தின் தனித்தன்மையை

       இழக்காமலும், பாதுகாக்கவும்  நாம் செய்யும் சிறு முயற்சியாக இருக்கும்
 
       ஒரு   பெண் , பெண்ணிற்குரிய உடையை உடுத்துவதன் மூலம் அவளின் தனித்தன்மையை
       இழக்காமல் இருக்க அவள் செய்யும் முயற்சியாக இருக்கும்.


கரெக்ட். தமிழ் கலாசாரத்தை ஒழிப்பதன் மூலம் ஆங்கிலகலாசாரம் தான் வருமே ஒழிய சமத்துவம் வராது.
 




--

Shriviba Balamurugan

unread,
Apr 18, 2015, 2:59:53 PM4/18/15
to mint...@googlegroups.com

அந்த அளவு வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நம் சமுகத்தின், பெண்ணின் ( Identity) இழக்காமல் இருக்க வேண்டும்
என்பதே என்னுடைய கருத்து.

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2015, 5:13:08 PM4/18/15
to mint...@googlegroups.com

On Sat, Apr 18, 2015 at 11:59 AM, Shriviba Balamurugan <shri...@gmail.com> wrote:
நம் சமுகத்தின், பெண்ணின் ( Identity) இழக்காமல் இருக்க வேண்டும்
  என்பதே என்னுடைய கருத்து.

நம் சமுகத்தின், பெண்ணின் ( Identity) இழக்காமல் இருக்க வேண்டும்
  என்பதே என்னுடைய கருத்து.

​மிக ஆழமான  கருத்து

சுயம் இழக்காமை  எப்போதுமே  நல்லது

அன்புடன்
தமிழ்த்தேனீ​


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Oru Arizonan

unread,
Apr 18, 2015, 9:13:57 PM4/18/15
to mintamil
//இப்படிச்சொல்லிவிட்டு அதன்பின் இவர் திருமணம் செய்துகொண்டார். ஆக திருமணம் மதத்தை பாதுகாக்க அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா?//

நீங்கள் சொல்வது தவறு, செல்வன்!  தர்க்க வாத அடிப்படையில் இதை அணுகுவோம்.

1.  திருமணங்கள் எல்லாம் மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.
2.  corollary:  மதம் திருமணத்தால் பாதுகாக்கப்படுகிறது.
3.  பெரியார் திருமணம் செய்துகொண்டார்.
4.  எனவே, பெரியாரின் திருமணம் ஏதோ ஒரு மதத்தைப் பாதுகாத்தது.
5.  அது எந்தமதம்?
6.  பெரியார் கடவுள் மறுப்பை[மதத்தை]ப் போதித்தார்.
7.  எனவே, பெரியாரின் திருமணம் கடவுள் மறுப்பு மதத்தைப் பாதுகாத்தது.
corollary:  பெரியார் கடவுள் மறுப்பு மதத்தைப் பாதுகாக்க திருமணம் செய்துகொண்டார்.

மேலே நான் பதிந்ததை யாரும் controversial statement என்று  நினைத்தால்,  தேமொழி எழுதிய //controversial statements கொடுத்தார் என்றால்  அவர் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எந்தப் பக்கம் உள்ள நியாயத்தையும் சொல்கிறார் என்று பொருள்.// என்ற வரிகளைப் படித்துக்கொள்ளுங்கள்.

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2015, 9:36:16 PM4/18/15
to மின்தமிழ்
இது அவுட் ஆஃப் கான்டெக்சட். பெரியாரின் வாழக்கையில் பல காலகட்டங்களில் அவர் நிலை ஒன்றுக்கொன்று முரண்பட்டு மாறுபட்ட நிலையில் இருந்ததை அறிந்தால் டெக்ச்டும் கான்டெக்ச்ட்டும் பொருந்திவரும்.  அவர் திருமணவயதில் பிறப்பாலும் வளர்ப்பாலும் வைணவர்.  ஆழ்ந்த இறைபக்தி மிக்கவர்.  அவருடைய தாயும் மனைவியும் இறுதிவரை வைணவர்களாகவே வாழ்ந்து மறைந்தவர்கள்.  வீட்டைவிட்டு ஓடிப்போய் காசியில் பெற்ற கசப்பான அனுபவம் அவரை நாத்திகராக மாற்றியது அவரது 40 வயதுக்குமேல்.

இணையவேள்

Oru Arizonan

unread,
Apr 18, 2015, 9:39:58 PM4/18/15
to mintamil
//காசியில் பெற்ற கசப்பான அனுபவம் அவரை நாத்திகராக மாற்றியது அவரது 40 வயதுக்குமேல்.//

நான் சொன்னது அவரது இரண்டாம்திருமணத்தைப் பற்றி.  முதல் திருமணத்திற்கு முன்பு அவர் திருமணத்தைப் பற்றி இப்படிப்பட்ட கருத்தைப் பகிரவில்லையே!

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2015, 9:50:03 PM4/18/15
to மின்தமிழ்

2015-04-19 7:09 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
நான் சொன்னது அவரது இரண்டாம்திருமணத்தைப் பற்றி.


அவரது
​ இரண்டாம் திருமணம் மதம் அடிப்படையிலோ சுயமரியாதை அடிப்படையிலோ அமைந்ததல்ல.  யார் அவருடைய கட்சிக்கும் அதன் சொத்துக்கும் வாரிசு என்ற அரசியல் சிக்கலைத் தீர்க்க ராஜாஜி பெரியாருக்குச் சொன்ன வழிமுறை.  பெரியார் மணியம்மையைத் தத்து எடுக்கத்தான் விரும்பினார்.  மகளாகத் தத்து எடுத்தால் சொத்து பறிபோகும் ஆபத்து இன்னும் அதிகம்.  மகளைத் திருமணம் செய்துகொள்பவன் கைக்குச் சொத்து போய்விடும் எனவே மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வதே கட்சியையும் சொத்தையும் அண்ணாவின் கைக்குப் போகாமல் காப்பாற்ற முடியும் என்று ராஜாஜி சொன்னதால் நடந்து திருமணம்
இணையவேள்​

Oru Arizonan

unread,
Apr 18, 2015, 10:00:24 PM4/18/15
to mintamil
//மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வதே கட்சியையும் சொத்தையும் அண்ணாவின் கைக்குப் போகாமல் காப்பாற்ற முடியும் என்று ராஜாஜி சொன்னதால் நடந்து திருமணம்//

அது எனக்கும் தெரியும்.  ஆனால் தான் சொன்ன கொள்கையைத் தானே மீறுவது...

சொத்தை ஒரு அறநிலைய டிரஸ்ட்டாக மாற்றி, மணியம்மை அவர்களை ஒரே டிரஸ்டியாக நியமித்திருக்கலாமே!

எப்படியிருத்தாலும், இந்த இழையில் பெரியாரின் கொள்கைகளை விமர்சிப்பது என்றபடிதான் நான் எழுதுகிறேன்.  அவரை விமர்சனம் செய்ய அல்ல.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2015, 10:26:13 PM4/18/15
to மின்தமிழ்
ராமன் என்றால் சரி ராமசாமி என்றால் தவறா?
கொள்கைக்கு மாறாக நடப்பது காலத்தின் கட்டாயம். 
பெரியாரின் கொள்கை நாத்திகவாதம் என்ற ஒரு கொள்கை மட்டுமல்ல. 
இந்து சமயத்தை வெறுத்தவர் பெளத்தம் இஸ்லாம் கிறித்தும் என மற்ற சமயங்களைப் போற்றினார். 
பொதுவுடமைக் கொள்கையில் நாட்டம்கொண்டு ரஷ்யாவுக்குச் சென்று ஸ்டாலினைச் சந்தித்து பொதுவுடமை இயக்கத்தில் சேர முடிவெடுத்தவர். தொழிற்சங்கவாதி.
இந்தியை எதிர்த்து தமிழைப் பாதுகாத்த மொழிப்போராளி
இன்னும்பிற
இந்நிலையில் ஒரே ஒரு கொள்கையைமட்டும் வைத்து ஒரு ஆளுமையைத் தூற்றுவது சரியான அணுகுமுறையல்ல என்பதே என் காத்துட்டுக் கருத்து

இணையவேள்

Oru Arizonan

unread,
Apr 18, 2015, 10:39:38 PM4/18/15
to mintamil
நான் அவரைத் தூற்றவில்லை,. சித்தரே!  ஒரு கொள்கை விஷயத்தில் அவர் நடந்துகொண்டதைப் பற்றி மட்டும் என் ஒரு சென்ட்டுக் கருத்தை எழுதினேன், அவ்வளவே!  

பல நூறாயிரம் பேர் அவரைப் பின்பற்றும் விதத்தில்தானே அவர் இருந்தார்.  

ஒருசிலர் கூட ஒரு அரிசோனன் சொல்லை ஏற்கார்.  

எனவே, என் ஒரு சென்ட்டுக்  கருத்திற்கு இவ்வளவு மதிப்புக்கொடுத்து நீங்கள் எழுதுவது என் மனதில் நிறைவை ஏற்படுத்துகிறது.  இத்துடன் என் சொல்லாடலை நிறுத்துகிறேன், சித்தரே!

சித்தரின் சின்னத்தம்பி 

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2015, 10:58:33 PM4/18/15
to மின்தமிழ்

2015-04-19 8:09 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
ஒரு கொள்கை விஷயத்தில் அவர் நடந்துகொண்டதைப் பற்றி மட்டும் என் ஒரு சென்ட்டுக் கருத்தை எழுதினேன்

நீங்கள்
​ தூற்றியதாக நான் சொன்னதாகத் தவறுதலாகப் புரிந்துகொண்டீர்கள் ஐயா.  பெரியார் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.  அவரது இந்தத் திருமணம் சுயமரியாதைக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது என்று அவரது கட்ட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் எதிர்த்தனர்
அவரது ரகசியத் திருமணம் தி.நகரில் ஒரு பிராமணர் இல்லத்தி நடந்ததாகக் கேள்வி எனவே அது சீர்திருத்தத் திருமணமாக நடந்திருக்க வாய்ப்பே இல்லை.  சொத்துரிமைச் சிக்கலைத் தீர்க்க நடந்த திருமணம் கட்டாயம் இந்துமுறைப்பட்தான் நடந்திருக்கும். அவர் திருமண நாளன்று அவரது சொந்தப் பத்திரிக்கையான விடுதலையில் அவருக்குத் தெரியாமலேயே அரங்கண்ணல் அவர் முன்னர் வயதான தொண்டுக்கிழம் இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதை எதிர்த்து எழுதிய கட்டுரையை வெளியிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இந்தியா பிளவுபட்டு பாகிஸ்தான் பிரிந்ததிலும் திரவிடர் கழகம் பிளவுபட்டு தி.முக உருவானதிலும் ராஜாஜியின் கைவண்ணம் தெளிவாகத் தெரிகிறது

இணையவேள்​

Oru Arizonan

unread,
Apr 18, 2015, 11:34:08 PM4/18/15
to mintamil
அதே இராஜாஜிதானே, காங்கிரஸ் ஒழியவேண்டும் என்பதற்காக தி.மு.க பதவி ஏறக் காரணமாக இருந்தார்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 20, 2015, 2:00:44 PM4/20/15
to mintamil


பெண்ணியவாதிகள் ஐரோப்பாவில் இப்படி சொல்லிவிட்டு, இந்தியாவில் சேலை அணிவது ஆணாதிக்கம், பெண்கள் பேண்ட் போடவேண்டும் என சொல்லுவார்கள்.

முன்னுக்கு பின் முரணாக பேசுவதே முற்போக்கு என ஆகிவிட்டது :-)


செல்வன்

unread,
Apr 20, 2015, 2:39:56 PM4/20/15
to mintamil
ரொசெட்டி எனும் போர்துகிசிய மொழிக்கலைஞர் உருவாக்கிய இந்த படங்கள் பிரபலமானதால் பெண்ணியவாதிகளால் மொழிபெயர்க்கபட்டு பல நாடுகளில் பயன்படுத்தபடுகின்றன. 




புடவைக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது :-)

பெண்கள் விருப்பட்ட எந்த உடையையும் அணியலாம்..ஆனால் அது பேண்ட் ஆக தான் இருக்கணும் :-) 

Oru Arizonan

unread,
Apr 20, 2015, 3:35:31 PM4/20/15
to mintamil
செல்வன்,

படங்களும், கருத்துகளும் அருமை.  ஒருகண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணை வைத்துப்பெசும் முற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழித்திருக்கிறீர்கள்!

இவ்விஷயத்தில் இந்த அரிசோனக் கழுதை, விஸ்கான்சின் யானையின் பக்கமே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

MURUGAVEL S

unread,
Apr 20, 2015, 9:07:48 PM4/20/15
to mint...@googlegroups.com
ஒன்ரு மட்டும் புரிகிறது. என்னவென்றால் தமிழர் திராவிடம் என்றுச் சொல்லி
மக்களை எதாவது ஒன்றைக் கூறி கலாச்சரத்தையும் ஒழுக்கத்தையும் கெடுக்கவே
திராவிட:கழக, வீரமனி முடிவுச்செய்து உள்ளார்.பெரியார் வழி என்று மக்களின்
பாரம்பரியத்தை வீன் அடிக்கவும் மக்களிடத்து குழப்பம் விலைவிக்கவும்
திட்டம்மிட்டு இருக்கிறார். என்று, தான்சொல்லனும். பெரியார் இப்படி
எல்லாம் சொல்லலியே! தாளிக் கட்டிக் கூடாது என்றெல்லாம்ச் சொல்லலியே. ஆக
அரசியல் ஆதாயம் தேட வீரமனி தேடும் சதிச் செயல் தான். சு.மு. முருகவேல்

On 4/21/15, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
> செல்வன்,
>
> படங்களும், கருத்துகளும் அருமை. ஒருகண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணை
> வைத்துப்பெசும் முற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழித்திருக்கிறீர்கள்!
>
> இவ்விஷயத்தில் இந்த அரிசோனக் கழுதை, விஸ்கான்சின் யானையின் பக்கமே!
>
> ஒரு அரிசோனன்
>
> 2015-04-20 11:39 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
>
>> <http://holyox.blogspot.com>
>> ரொசெட்டி எனும் போர்துகிசிய மொழிக்கலைஞர் உருவாக்கிய இந்த படங்கள்
>> பிரபலமானதால் பெண்ணியவாதிகளால் மொழிபெயர்க்கபட்டு பல நாடுகளில்
>> பயன்படுத்தபடுகின்றன.
>>
>>
>>
>>
>> புடவைக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது :-)
>>
>> பெண்கள் விருப்பட்ட எந்த உடையையும் அணியலாம்..ஆனால் அது பேண்ட் ஆக தான்
>> இருக்கணும் :-)
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
>> to visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>
>
>
> --
> *பணிவன்புடன்,*
> *ஒரு அரிசோனன் *
>
>
> *https://tamizhtharakai.wordpress.com/
> <https://tamizhtharakai.wordpress.com/> -- தாரகை *
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
சு.மு. முருகவேல் கைப்பேசி 9047106966 எனது தனி மின்னஞ்சல்
s.muru...@gmail.com 8903127255 உழைப்பே உயர்வு. வாழு
ம் காலத்தில் எலிமை வளிமை மகிழ்ச்சி என்றே வழவேண்டும். அன்புடன் சு.முருகவேல்
என் மரபனு தமிழர் வழி இல்லைய எ
ன்றால் மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக......

தேமொழி

unread,
Apr 21, 2015, 5:19:40 PM4/21/15
to mint...@googlegroups.com


On Friday, April 17, 2015 at 9:50:01 PM UTC-7, தேமொழி wrote:


Now back to the topic 


நான் சொன்ன (கீழ்காணும்) கருத்துக்கு வலு சேர்க்கும் படங்களைத் தேடித் தந்தமைக்கு மிக்க நன்றி செல்வன்....
 

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடை அணியப் பிடிக்கும், 

அது தாங்கள் யார் என்பதை முன்வைப்பதாகவும், அல்லது தங்கள் குணநலனைக் காட்டும் வகையில் அமைந்தோ இருக்கும். 

உளவியல்படி இது பதின்ம வயதில் உருவாகும், பெல்பாட்டம்ஸ், ஜீன்ஸ், பெர்முடாஸ், லுங்கி, வேட்டி என எதுஅணிந்தாலும் ஆண்களும் அந்த வழியில்தான் அந்த அடிப்படையில்தான் அணிகிறார்கள். 

கிழிந்த பேண்ட், வெளுத்துப் போன ஜீன்ஸ் ஆகியவை சொல்வதென்ன?  இது எனது தனித்துவம் என்ற கவன ஈர்ப்பு. 

வளர்ந்த பொழுது உடுத்தியது போன்ற வகையில் உடுத்தி அந்த வகையில் தொடர்வதில் சிலருக்கு மன அமைதிகிடைக்கும் 

அல்லது தனது மதம், தேசியம், போன்றவற்றைக் காட்ட உடை அணிவதும் சிலருக்குப் பிடிக்கும் 

அதனால்தான், காவியோ, கருப்போ, சிவப்போ, பச்சையோ, வெள்ளையோ உடுத்துகிறார்கள். 


சிலருக்கு வாழும் சூழ்நிலையை ஒத்து, வேறுபாடு தெரியாத வகையில் உடை அணிவது பிடிக்கும். 

சீருடை போன்றவகையில் கூட்டத்தில் ஒருவரை வேறுபடுத்திக் காட்ட உடைகளும் இருக்கிறது. 


இலக்கியம், திரைப்படம், உணவு, மலர்கள், விலங்குகள் என எங்கும் வேறுபாடு இருக்கும் பொழுது, உங்களுக்குத்தேவையானதை தேர்ந்தெடுத்துத் தொடர்வது போல விதம் விதவிதமாக உடையணிந்து வலம் வரும் பெண்களுடன்உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். பெண்களில் வேறுபாட்டை மதியுங்கள். 


ஆடை வகை, அதன் நிறம் என்பது ஒருவரது மனைநிலையின் வெளிப்பாடு என்று நான் பார்க்கிறேன். 

அதில் வேறுபாடு அவரது தனித்துவம். அதை வைத்து எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ...அதுவும் அந்தஆடைகளை அணிந்தே வாழ்ந்திராதவர்கள் வற்புறுத்த நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. 

சந்தேகமின்றி பேண்ட்/ஷர்ட் அணியும் பெண்களின் சுதந்திரச் சிந்தனை ஒருசிலருக்கு அச்சம் கொடுப்பது தெரிகிறது. 

பெண்கள் புடவையில் இயல்பாக வாழ்வதை மதியுங்கள் என்றால் பெண்கள் வேறு எந்த உடை அணிந்து வாழ்வதையும்இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொருவரின் இயல்பும் வேறுபடுகிறது. 

அவர்கள் என்ன அணிந்தாலும் அணிந்துகொள்ளட்டும் அதில் எனக்கு அக்கறையில்லை என்று சொல்லிக்கொண்டே புடவை என்ற உடைக்கு என்ன குறை என்று தொடர்ந்து வரும் கேள்வியைப் போல ஒரு முரணைப் பார்க்க இயலாது.  

சற்று திரும்பிப்பார்த்தால் வரலாற்றில் கைம்பெண்களுக்கு  என்று இருந்த சீருடை எப்படி கைவிடப்பட்டதோ அதை மனதில் கொண்டு 

அது போல காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். 

..... தேமொழி 









Reply all
Reply to author
Forward
0 new messages