--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஒல் என்பது ஒலிக் கருத்து. இந்த ஒல் சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று (prothesis) ச்+ஒல் = சொல் என்று ஆகி இருக்கலாம். சொல்லுதல் என்றால் ஒலிபட விளம்புதல், இதாவது, காதில் கேட்கும்படி கூறல் என பொருள் கொள்ளலாம்.
சேசாத்திரி
2013/2/16 rajam <ra...@earthlink.net>இதைத் தனி இழையாகத் தொடங்குகிறேன். யார் வேண்டுமானாலும் (திரு கணேசன் உட்பட) பங்கு கொண்டு உரையாடலாம்.ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழுக்குள்ளேயே தேடவும். பிற மொழிகளுக்குப் போகவேண்டாம்."சொல்" என்பது பெயராகவும் வினையாகவும் புழங்குகிறது. இரண்டுக்கும் அடிப்படைப் பொருள் ஒன்றுதான்.எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன்.இப்படிக்கு,ராஜம்
மூத்தோர் சொல் வேதம் என்பார் , அமிர்தம் என்பார்அப்படியாயின் மூத்தோர் எழுத்து வேதமில்லையா? அமிர்தமில்லையாஎழுத்து , வரிவடிவம் போன்றவைகளுக்கு சொல் உருவான பின்னர்தான் பொருளே மாறு படுகிறதுசொல்லுக்கு முக்கியம் த்வனிஎழுத்தை , வரி வடிவத்தை சொல்லாக்கும் போதுசொல்லாக்குபவர் எப்படிப்பட்ட த்வனியில் சொல்லாக்குகிறார் என்பதைப் பொறுத்தே பொருள் மாறுபடுகிறதுஅன்புடன்தமிழ்த்தேனீ
--
கால் துட்டுக் கொடுத்து இழையைச் சிறப்பித்துப் பல நல்ல கருத்துரைத்த பேராசிரியர் ஐயா,"சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன? தங்களுடைய கருத்து என்ன?
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ நமது மூஊஊஊஊத்த பாட்டனார் தொல்காப்பியரைச் சொல் என்றால் என்ன என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார். சிந்தித்தேன். எனக்குக் கிடைத்த விடை.
தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில், முதல் இயலான நூன்மரபில், முதற்சூத்திரமே
எழுத்தெனப்படுப என்று தொடங்குகிறது.
ஆனால், அடுத்த சொல்லதிகாரத்தில் முதல் இயலில் சொல்லெனப்படுப என்று சொல்லப்படவில்லை!!!
இங்கு முதல் இயல் கிளவியாக்கம் (சொல்லாக்கம் அல்ல (கிளவி vs சொல் ??)), அடுத்தது வேற்றுமையியல். அப்புறம் வேற்றுமை மயங்கியல். அதன் பின் விளி மரபு. அதற்கும் அப்புறம், மிகவும் சாவதானமாகப் பெயரியல் என்று வைத்திருக்கிறார் (காரணம் என்ன?) அங்குதான் சொல்லைப்பற்றிப் பேசுகிறார் நமது தொல்ஸ்.
1.எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே – இன்னும் சொல் என்றால் என்ன என்று சொல்லவில்லை.
2. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்.
– சொல்லே தெரியாது! இதில் சொன்மை என்கிறார் தொல்ஸ்!!
3. அப்புறம் பொருண்மை பற்றிக் கூறுகிறார்.
4. அப்பாடா! சொல்லுக்கு வந்துவிட்டார் தொல்ஸ்!
சொல்லெனப்படுப பெயரே வினை என்று
ஆயிரண்டென்ப அறிந்திசினோரே
இப்போதாவது சொல் என்பதை define செய்கிறாரா? இல்லை. சொல்லின் வகையைப் பேசுகிறார்.
ஆக, சொல் என்றால் என்ன? நமக்குக் கூறப்படவில்லை. காரணம், சொல் என்றால் என்ன என்பதையே சில சொற்களின் மூலம்தானே சொல்லமுடியும்?
பவணந்தியார், எழுத்து என்றால் என்ன என்று கூறுகிறார்.
மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து
அது முதல் சார்பென இருவகைப்படுமே.
என்கிறார். அதாவது எழுத்து என்பது a collection of sound atoms. என்கிறார். How scientific? என்று சொல்லத் தோன்றுகிறதா? இல்லை. ஏனென்றால் இந்த வரையரை பல கேள்விகளை எழுப்புகிறது.
What is an atom?
Is sound in the form of atom?
Can you collect them?
Does a collection exist?
This is a question of existence.
கணிதத்தில் Take the set of all integers divisible by 3, 4 and 5. என்றால், அடுத்து வரும் கேள்வி, Does such a set exist? Then you have to prove it by showing an example.
அதனால்தான் தொல்ஸ் கூறுகிறார்:
எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப.
பின்னாஆஆஆஆஆல் கூறுகிறார்:
பொருட்குப் பொருள்தெரியின் அது வரம்பிலவே.
எழுத்து என்றால் அணுத்திரள். அணு என்றால்? திரள் என்றால்?
Define an unknown object through a known object : From known to unknown – Aristotle.
We cannot and should not define what is fundamental to a study. அது மரபு. எனவேதான் நூன்மரபு என்றும் மொழிமரபு என்றும் பெயர் கொடுத்துள்ளார் தொல்ஸ்.
அப்படிப்பட்ட அவர் ‘சொல்’ என்றால் என்ன என்று சொல்லி, பவணந்தியாரைப் போல சிக்கலில் மாட்டிக்கொள்வாரா? யார் கேட்டாலும் சொல்லமாட்டார் – அம்மையார் உட்பட!!!!
நிகழ்வை புரியத் தருவது சொல். சில + ஒலிகள் => சிலொலிகல் => சொல் !?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன்.
சூரிய ஒளி => சிவப்பு => சிவ => சிறப்பு => சிறப்பு (சிவ) + ஒலி + உணர்தல் => சலம்புதல் !*?*! சலம்புறது பிரிந்து சொல் ( தமிழ் ) சொப்பு ( தெலுகு ) பற(மலையாளம்) 


ஹரிகி ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்.. 'உள்' வைத்து நினைக்கவும், துடிக்கவும்,
தவிக்கவும் செய்யாமல் 'பின்' ஊட்டம் தடுக்க 'முன்' வாமிட் எடுக்கவும்.. 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஹரிகி ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்.. 'உள்' வைத்து நினைக்கவும், துடிக்கவும், தவிக்கவும் செய்யாமல் 'பின்' ஊட்டம் தடுக்க 'முன்' வாமிட் எடுக்கவும்..
இதற்கான முடிவுகள் எப்ப வரும்?
இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள்.
கீழ்க்காணும் குறிப்பு "சொல்" என்பது மனிதரின் பேச்சொலியோடு மட்டும் தொடர்புடையது அன்று என்று தெரிவிக்கிறது:(யானைப் பெரு நிரை) வருத்தம் சொலாது (புறநானூறு 333)
சரி, இனி "சொல்"லின் அடிப்படைப் பொருளுக்குத் திரும்புவோம்.
பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்தில் இருக்கிறதா? குறுந்தொகைலயோ எதுலயோ, பல்லியின் ‘சொல்லை’ அந்தப் பெண் கேக்கறாளா?
ஆக, மனிதன் பேசுவது மட்டும்தான் சொல் இல்லை என்றாகிறதா?அதான் நான் சொல்ல வந்தது.
http://naalumorusol.wordpress.com/about/
தமிழ் உலகம் நாளும் ஒரு சொல்
தமிழ் உலகுடன் தமிழ்ச் சொற்களைப் பொருள் உணர்ந்து பரப்புவோம்
வணக்கம்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; – கணியன் பூங்குன்றனார், புறநானூறு (192) தமிழ் உலக மடலாடற் குழு 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் இந்த இணையக் கருத்துப்பரிமாற்றக் குழு தொடங்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வாழ்கைமுறை, அரசியல் என எல்லாவற்றையும் பண்பட்ட வகையில் அலச அமைக்கப்பட்ட குழு.
தமிழ் உலகம் அறக்கட்டளை வழி தமிழுக்குச் சேவையாற்றியவர்களுக்கு அங்கீகாரம் அளித்து விருதும் வழங்குகிறது. அதோடு சாத்தியமான போது தமிழறிஞர்களின் வாரீசுதாரர் குடும்பங்களில் நலிவுற்றவர்களுக்குப் பொருளாதார உதவியும் வழங்குகிறோம்.
பாவாணர் அவர்களின் மகன் அடியார்க்கு நல்லான் அவர்களின் முழுப் பராமரிப்புக்கும் தமிழுலகம் அறக்கட்டளை ஆவண செய்துள்ளது.மற்றும் பாவாணர் அவர்களின் உறவுகளுக்கும் தமிழ் உலகம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நல உதவிகளுக்கு ஆவண செய்தது.
தமிழ் உலகம் மடலாடற் குழுவின் உறுப்பினர்களால் பங்களிப்புச் செய்யும் படைப்புகளை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் புத்தகமாக வெளியிட 2011ம் ஆண்டின் துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ் உலக மடலாடற் குழுவில் சேர
tamil-ulaga...@googlegroups.com
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்புங்கள்.
குளோபல் தமிழ் பிறகு தமிழ் உலக மடலாடற் குழுவில் நாளும் சில சொற்கள் என்ற தொடர் தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக தொடங்கப்பட்டது. அதனை இங்கு வெளியிடுவதோடு புதிய சொற்களையும் இங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பல சொற்களுக்குப் பல பின்னூட்டல்கள் கிடைத்துள்ளன அவற்றையும் அவ்வப்போது வெளியிட உள்ளோம். இனியும் வர உள்ள பின்னூட்டல்களையும் சேர்த்துக்கொள்வோம். இந்தத் தொடரை மேலும் மேம்படுத்த உங்களின் மேலான ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
அன்புடன்
ஆறு.பழனியப்பன்
ஆல்பர்ட்
மணியம்
மட்டுறுத்துனர்கள்
தமிழ் உலகம்
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” – பாரதியார்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” - பாரதி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Slang என்பதற்கு கீழ்கண்டவாறு விக்கியில் வரையறை தரப்பட்டு உள்ளதால்..
உஸ் + ஒல் => சொல்.. ஆனால் ஸ் என்பது தமிழுக்கு உட்பட்டதா..
இப்படி எல்லாம் நான் யோசிச்சா.. மத்தவங்க என்னைய பத்தி வேற மாதிரி யோசிப்பாங்களோ.. என சந்தேகம் வருவதால் சீக்கிரம் சீக்கிரம் முடிவை அறிவிக்குமாறு ராஜம் அம்மாவை கேட்டுக் கொள்கிறேன். ( விடை தெரியாத சோகத்தில் நான் இருப்பதால் சிரிக்கும் ஸ்மைலியை நீங்களே போட்டுக் கொள்ளவும் )
அடடே.. ராஜம் அம்மா பிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.
பெயரை வெளிப்படுத்த நிகழும் வினை = சொல். சரிதானே ??
பெயரை வெளிப்படுத்த நிகழ்ந்த வினையை குறிக்கும் பெயர்.. சொல்.
சீக்கிரம் வந்து முடிவை அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ( ஒரு சொல்லுக்கு அர்த்தம் புரிய ஒரு நா தூக்கம் போச்சு.. தாய்மொழி !! தப்புன்னு மட்டும் சொல்லி பல நாள் தூக்கத்த கெடுத்துப் புடாதீங்க )
ஒரு கருத்தையோ அல்லது ஒரு செய்தியையோ இன்னொருவருக்கு புரியும்படி உரைத்தலே சொல்லுதல் ஆகும். அதை ஒருவரை உரைக்குமாறு சொல்வது ஏவல் வினை. இந்த வரையறை போதுமா?சேசாத்திரி
..இப்போதைக்கு வேற வழி இல்லாததால விரதம் :)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++On Feb 16, 2013, at 9:46 AM, rajam wrote:இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள்.எல்லார் பெயருக்கும் முன்னால் திரு என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொள்ளவும். நன்றி.7. தேவ்8. துரை9. பாண்டியராஜா10. ப்ரகாஷ் சுகுமாரன்11. ஹரிகி++++++++++++++++++++++++++++++++++++++++++++++இன்னும் ஆர்வம் குறையாது பங்கெடுக்க விரும்புவோருக்கும், பிறருக்கும் ... ஒரு சின்ன மேலதிகக் குறிப்பும் கேள்வியும்:(i) 'சொல்' என்பது எப்போதும் ஒலியுடன் தொடர்புடையதா?(ii) 'சொல்' என்பதுக்கும் 'சொலி' என்பதுக்கும் தொடர்பு உண்டா?நன்றியுடன்,ராஜம்பி.கு: இந்த இழை யாரையும் சோதிக்கவோ, மட்டப்படுத்தவோ இல்லை, நம்புங்கள். அண்மையில் ஒரு நண்பர் கேட்டதுக்கு விளக்கம் சொன்னேன் -- என் பழைய கால அறிவிலிருந்து எடுத்து. அதை இங்கே புதிய தலைமுறையிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்த இழை.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++On Feb 15, 2013, at 8:01 PM, rajam wrote:இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயரும் வாத்திச்சி போட்ட மார்க்கும்:1. தேமொழி2. பேராசிரியர் நாகராசன்3. திரு சேசாத்திரி ஐயா4. தமிழ்த்தேனீயார்5. எல்லே அண்ணா சாமிநாதன்6. பழமைபேசிவாத்திச்சி போட்ட மார்க்கு அப்புறம் வரும்!;-) ;-) ;-)On Feb 15, 2013, at 6:05 PM, rajam wrote:இதைத் தனி இழையாகத் தொடங்குகிறேன். யார் வேண்டுமானாலும் (திரு கணேசன் உட்பட) பங்கு கொண்டு உரையாடலாம்.ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழுக்குள்ளேயே தேடவும். பிற மொழிகளுக்குப் போகவேண்டாம்."சொல்" என்பது பெயராகவும் வினையாகவும் புழங்குகிறது. இரண்டுக்கும் அடிப்படைப் பொருள் ஒன்றுதான்.எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன்.
இப்படிக்கு,ராஜம்
--
இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-)
On Tuesday, February 19, 2013 8:06:06 PM UTC-8, rajam wrote:இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-)ஆத்தா…. நான் பாஸாயிட்டேன் ....நான் பாஸாயிட்டேன்...எனக்கு மார்க் 200/100
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/2/20 தேமொழி <them...@yahoo.com>
On Tuesday, February 19, 2013 8:06:06 PM UTC-8, rajam wrote:இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-)ஆத்தா…. நான் பாஸாயிட்டேன் ....நான் பாஸாயிட்டேன்...எனக்கு மார்க் 200/100இன்றைய பெரிய ஜோக் இதுதான் . வாய்விட்டு சிரித்தேன் :-)சுபா