ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 June 2026
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: தொடர்ச்சி)
‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ்
பக்கா தட்டச்சுத் திறன் (Typing Speed) மற்றும் எம்எஸ் ஆபீஸ் நாலெட்ஜ்
தமிழில் பிற மொழிச்சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து இதனை வெளியிடுவது வேதனையாகத்தான் உள்ளது. எனினும் ஊடகத்தினர் புரியும் கொலைச்செய்திகளை உள்ளவாறே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் செய்திகளை எழுதி வெளியிடத் தெரியவில்லை என்றால் எதற்குத் தமிழ் இதழ் நடத்த வேண்டும்? எதற்குத் தமிழில் எழுதத் தெரியாதவர்களைச் செய்தியாளர்களாக அமர்த்த வேண்டும்.
தமிழைக் கொலை புரியும் மன நலங்குன்றியவர்களை மன நல மருத்துவமனையில் சேர்க்கலாமே! இல்லையேல் இவற்றைப் பார்க்கும் தமிழ்த்தாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டி யுள்ளது.