சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் கண்டதேவி, ஆராவயல் கோயில்கள் - சொ.வினைதீர்த்தான்

34 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 25, 2018, 2:33:07 AM10/25/18
to மின்தமிழ்


கண்ட தேவி, ஆராவயல் தரிசனம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆராவயல் உயர்நிலைப் பள்ளிக்கு 5.10.2018 பயிற்சிக்குச் சென்றபோது கண்டதேவி சிவன் கோவிலையும் ஆராவயல் கோவிலையும் கண்டு வழிபட்டுவந்தேன். தானுச்சாவூரணியில் நகரத்தாரால் கைவிடப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகள் வருத்தமளித்தன.

கண்டதேவி இராமாயணத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது. சீதையை இராவணன் தூக்கிச் சென்றபோது சடாயு தடுத்துப் போரிட்டுத் தன் சிறகுகளை இழந்தான். இராமன் வழிபட்ட லிங்கம் இராமநாதன் என்பதுபோல சிறகில்லாத சடாயு "சிறகிலி" வழிப்படட சிவன் "சிறகிலிநாதர்" என்று வழங்கப்படுகிறார். பின்னாளில் வணிகனொருவன் அங்கு பொன் புதையல் பெற்றதால் "சொர்ணமூர்த்தீசுவர்" என்ற பெயர் பெற்றார். மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக்கொண்டு நகரத்தார் தலபுராணம் எழுதச்செய்து பெற்றுள்ளார்கள்.

அருமையான கற்றளி. 200 ஆண்டுகள் நகரத்தார் திருப்பணி. தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா தனிக்கோட்டங்களில் அருள்பாலிக்கிறார்கள். ஒவ்வொரு கோட்டமும் ஒரு தனி அற்புதம். கீழிருந்து மேல் வரை ஒவ்வொரு அங்குலமும் எல்லாவிதத்திலும் முழுமைபெற்றது. தூண்களின் புடைப்பு டிசைன்கள் அழகு. கல்யாண மண்டபம் கவர்வது.

கண்டதேவி திருக்குளம் பிரம்மாண்டமானது. என்றும் வற்றாதது. அங்கு மகாலிங்கமூர்த்தி பலிபீடம் வணங்கப்படுகிறது. பல நூற்றாண்டு பழமையான அத்திமரம் தலவிருட்சம். அதன் மேலே ஒரு பெரிய அரசமரம் ஊடுருவி வளர்ந்துள்ளது.

கண்டதேவி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தேரோட்டமாகும். தேர் மேல்தட்டில் சுவாமியுடன் அர்ச்சகர். தண்ணீர்பந்தல், மண்டபங்கள் கட்டி வைத்துள்ள திருப்பணியாளர்கள் பகலிலேயே முன்னதாக வழிபட்டு அகன்று விடுகிறார்கள். பிறகு வடத்தைப் பிடித்து இழுப்பதில் தான் சச்சரவு. மேல்தட்டுக்குப் போட்டி இல்லை! சென்ற சில நூறு ஆண்டுகள் நாட்டார் மரபினர் கட்டுப்பாட்டில் இந்தப்பகுதி இருந்துள்ளது. தேர் வடத்தின்மீது ஏறி தேரை வழிநடத்திச் செலுத்துபவர் அம்மரபினர். சென்ற சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காலங்காலமாக இப்பகுதியில் வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட சாதியினரும் தேர் வடத்திற்கு உரிமை கோரியிருக்கிறார்கள். வெட்டுக் குத்து, கோர்ட் என்று தேரோட்டம் தேர் பராமரிப்புப் பணிசெய்யவேண்டும் என்ற பெயரில் நின்றுவிட்டது. சுயலாப அரசியல் கட்சி தலைவர்கள் ஊடுருவல் பிரச்சினையை அதிகரித்திருக்கிறது.

இப்பொழுது தேர் புதுப்பொலிவுடன் அழகுறப் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கூரையை அகற்றாமல் பணி நிறைவடையவில்லை என்ற நிலை சொல்லப்படுகிறது. இவ்வாண்டு தேரோட்டம் ஆண்டவன், ஆள்பவர் திருவுள்ளம்!

ஆராவயல் சண்முகநாதபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் சிவன்கோவில் குடமுழுக்கு அண்மையில் 1.7.2018 சிறப்பாக நடைவேறியுள்ளது. இராஜகோபுரத் திருப்பணி நீதியரசர் திரு சொக்கலிங்கம் பொருள் உதவி மற்றும் முயற்சியில் நகரத்தாரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கும்பாபிடேக மலர் தமிழறிஞர் சிறந்த ஆங்கிலக் கவி திரு ஆர்.எம்.சண்முகம் செட்டியார் முயற்சியில் வெகு சிறப்பாக உருவாகியுள்ளது.

ஆராவயல் உயர்நிலைப்பள்ளி மாணவர் பயிலரங்கம் குறித்து அடுத்து எழுதுகிறேன். கடந்த பதினைந்து நாளாக காய்ச்சல், கால் வீக்கம் உடல்நலம் இல்லை. தற்போது சிறிது நலம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

________________________________________

தேமொழி

unread,
Oct 25, 2018, 2:50:44 AM10/25/18
to மின்தமிழ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் கண்டதேவி தேர்ச் சிற்பங்கள்!
வாழ்த்துக்களுடன்


சொ.வினைதீர்த்தான்


_________________________

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 25, 2018, 11:07:18 AM10/25/18
to mint...@googlegroups.com, கி.கா​ளைராசன்
பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி திருமிகு தேமொழி.

என் வேண்டுகோளை ஏற்று முயற்சி எடுத்துக்கொண்டு பதிவினையும் படங்களையும் முகநூலில் இருந்து பகிர்ந்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடைய முந்தைய முகநூல் பதிவுகளைக்கொண்டு ஒரு Blog பதிய வேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். விவரம் அறிந்தோர் தொடர்பு கிடைத்தால் அவர் உதவியோடு பதியவேண்டும்.

நண்பர் திரு காளைராசன் உதவுபவர். அவரைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

மீண்டும் நன்றி திருமிகு தேமொழி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 25, 2018, 12:42:16 PM10/25/18
to mint...@googlegroups.com, karuannam annam
வணக்கம்.
On Thu, 25 Oct 2018 at 20:37, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி திருமிகு தேமொழி.

என் வேண்டுகோளை ஏற்று முயற்சி எடுத்துக்கொண்டு பதிவினையும் படங்களையும் முகநூலில் இருந்து பகிர்ந்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடைய முந்தைய முகநூல் பதிவுகளைக்கொண்டு ஒரு Blog பதிய வேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். விவரம் அறிந்தோர் தொடர்பு கிடைத்தால் அவர் உதவியோடு பதியவேண்டும்.

நண்பர் திரு காளைராசன் உதவுபவர். அவரைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
காளை நாளை காலை  பேசுகிறேன் ஐயா..
அன்பன்
கி.காளைராசன்

karuannam

unread,
Oct 26, 2018, 6:33:55 AM10/26/18
to மின்தமிழ்
இன்று காலை திரு காளராசன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்து பிளாக்ல எவ்வாறு பதிவு படத்துடன் இடுவது என்பதனை வெகு பொறுமையாகக் கற்றுக்கொடுத்தார். சொ.வினைதீர்த்தான் என்ற பிளாக் ஏற்கனவே 2010ல் ஆரம்பித்துள்ளேன். இதுவரை பதிவு இல்லை.

இன்று கண்டதேவி ஆலய வழிபாடு குறித்த பதிவு இட்டேன். தொடர்ந்து பதிய வேண்டும்.

நண்பர் திரு காளைராசனுக்கும், நண்பர் திருமிகு தேமொழிக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

On Thursday, 25 October 2018 22:12:16 UTC+5:30, கி. காளைராசன் wrote:


நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 26, 2018, 7:46:45 AM10/26/18
to mint...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages