Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

1. வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. அன்றே சொன்னார்கள் நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்

11 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 15, 2025, 5:26:28 PMMay 15
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

WhatsApp Image 2025-05-15 at 19.34.46_3af8251d.jpg

நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்
+++
அன்றே சொன்னார்கள்
நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்
                                                                                                               
natpu நாகரிக உலகிற்கேற்ற உடைகள் யாவும் 17ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டன. நீச்சல் உடைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டன. இன்றைக்கு வெவ்வேறு வகையான நீச்சல் உடைகள் இருப்பினும் ஈரணி உடைகள் (two piece dresses) என்பனவே அடிப்படையாகும்.
நாகரிக உலகில் தலசிறந்திருந்த தமிழ் மக்கள் நீச்சல் துறையிலும் உயர்ந்தோங்கி இருந்தனர். பிற வகை ஆடைகள் குறித்தும் குளிப்பதற்கேற்ற மணப் பொடி வகைகள் குறித்தும் பிறிதொரு நாள் பார்க்கலாம். இப்பொழுது நீச்சல் உடைகள் குறித்துப் பார்ப்போம்.
காவிரிப் பெருக்கின் பொழுது நீச்சல் ஆடையான ஈரணி அணிந்து பொலிவு பெற்ற பெண்களைப்பற்றி,

வதுவை ஈரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்தகாவிரி                                                    (அகநானூறு : 166 : 13-14)
என்கிறார் புலவர் இடையன் நெடுங்கீரனார்.

ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிகநவின்று                                           (பரிபாடல் : 6: 27-28)
வையை ஆற்றில் நீராட மகளிரும் மைந்தரும் நீச்சல் உடையை அணிந்து சென்றதாக ஆசிரியன் நல்லந்துவனார் இப் பரிபாடலில் பாடியுள்ளார்.

நீச்சலுடையுடன்  நறுமணப் பூச்சுகளையும் பூத்தொழில் மிக்க ஆடைகளையும் எடுத்துக்கொண்டு வையை ஆற்றிற்கு நீராடச் சென்றதை,
ஈரணிக்கு ஏற்ற
நறவுஅணி பூந் துகில் நன்பல ஏந்தி                                           (பரிபாடல் : 22: 18-19)
எனப் புலவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ,
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண்                      (அகநானூறு : 266 : 4-6)
என,  ஈரணி அணிந்து நீராடியதால் மிக அழகினையுடைய குளிர்ந்த கண்களும் நரந்தம் மணக்கின்ற திரண்ட கருங்கூந்தலும் உடைய இளம்பெண் குறித்துப் புலவர் பரணர் தெரிவிக்கிறார்.
நீரணி என்றும் (பரிபாடல் 11) புலவர்கள் கூறியுள்ளமையால் ஈரணி அல்லாத வேறு வகையான குளியல் உடைகளும் இருந்துள்ளன எனத் தெரிய வருகிறது.

கரும்பிள்ளைப் பூதனார் என்னும் புலவர்,
நீர்அணி காண்போர் நிரைமாடம் ஊர்குவோர்                             (பரிபாடல் : 10: 27)
என்று குறிப்பிட்டதற்கு, நிரல்பட்ட நீரணி மாடத்தில் ஏறி மெதுவாகச் சென்றதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

எனவே, இதன் மூலம் ஏறிச் சென்று உயரத்தில் இருந்து குதிப்பதற்குரிய நீரணி மாடம் (Diving platform) இருந்தது தெரிய வருகிறது. நீச்சல் உடையை அணிந்து கொள்ளவும் பின் அங்கிருந்து நீரில் குதிக்கவுமான மாடம் ஆகும் இது.
நீச்சல் 19 ஆம் நூற்றாண்டில் விளையாட்டாக மாறி, நீச்சலுக்கான குதி பலகை (Spring board) 1891 ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது; 1901 இல் ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டது. பின் நீச்சல் மேடைகளும் (Diving platforms) எழுப்பப்பெற்றன. ஆனால், பழந்தமிழகத்தில் நீச்சல், மக்களின் உற்சாக விளையாட்டாக இருந்துள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீச்சலுக்கான நீந்துநர் மேடை இருந்துள்ளது அன்றைய நய நாகரிகத்திற்கும் எடுத்துக்காட்டு அல்லவா?
-  இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  – 3

‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்:

“எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்;

கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு;

காடு பயம் எனக்கு; நாடு பயம் எனக்கு; கூடு பயம் எனக்கு;

குளம் பயம் எனக்கு; குளத்துக்குள் இருக்கும் நண்டு கண்டாலும் பயம் எனக்கு; பூச்செண்டு கண்டாலும் பயம் எனக்கு;

செண்டுக்குள் இருக்கும் வண்டு கண்டாலும் பயம் எனக்கு.

கடிக்கிற நாயும், பூனையும், பூனை தின்கிற எலியும் பயம் எனக்கு;

வெடித்துச் சிதறுகிற குண்டும் பயம் எனக்கு, குண்டுக்காகப் பதுங்கும் பதுங்குகுழியும் பயம் எனக்கு, பதுங்குகுழிக்குள் இருக்கிற பாம்பும் கடிக்குமோ என்ற பயம் எனக்கு.

மக்கள் கூட்டம் பயம் எனக்கு; தனிமை பயம் எனக்கு; தொங்கப் பயம், தாவப் பயம்;

இந்தக் காசு பயம்; மாசு பயம்; தூசு பயம்; அழுக்கு பயம்; குளிக்க பயம்; ஆடை பயம்; ஆடையில்லை என்றாலும் பயம்;

இந்த ஆங்கிலமும் பயம் எனக்கு;

செபிக்கப் பயம், சபிக்கப் பயம், எடுக்கப் பயம், கொடுக்கப் பயம், சகிக்கப் பயம், சுகிக்கப் பயம்.

எதையும் உயரத்தில் வைத்து அடுக்கப் பயம், யாரையும் கோவித்து அடிக்கப் பயம்.

அண்டை மனிதரை அணுகப் பயம், அணுகிய மனிதரை இழக்கப் பயம்.

உறவு பயம்; துறவு பயம்; இரவு பயம்; விடியலும் பயம்; புதியம் பார்க்க ஏனோ பயம்; மதியம் தூங்கி எழுந்தாலும் பயம்;

சோக பயம்; வேக பயம்; நோய்(உரோகப்) பயம்; நோக பயம், போக பயம், வருவதும் பயம் எனக்கு; வாழ பயம், சாகவும் பயம் ! இவ்வாறு பயங்கள்பற்றிக் கமல் அடுக்கிக் கொண்டே போவார். இடையில், பத்துப் ‘போபியோ’ பெயர்களைக் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் உள்ள எல்லா ‘போபியா’க்களும் தன்னிடம் இருப்பதாக மருத்துவர் பஞ்ச பூதம் சொன்னதாகக் கதை நாயகர் சொல்வார். இவற்றை அச்சநோய்பற்றி அறியாதவர்கள் அறிய உதவும் குறிப்புகளாகக் கொள்ளலாம்.

இத்தகைய பயங்களையும் மேலும் பலவற்றையும் குறிப்பிடும் வெருளி நோய் குறித்துத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.

வெருளிகளைத் தனித்தனியாகத்தான் குறிப்பிடுகின்றனர். எனினும் எளிதில் அறிவதற்காகப் பின்வரும் வகைப்பாடுகளை வரையறுத்துள்ளேன்.

 

அண்டம் சார் வெருளிகள்

அறம் சார் வெருளிகள்

ஆயுதம் சார் வெருளி 

இடவகை வெருளிகள்

இயற்கை சார் வெருளிகள்

இலக்கியம் சார் வெருளிகள்

உடலியக்க சார் வெருளிகள்

உடல்ஊட்டம் சார் வெருளிகள்

உணர்வு சார் வெருளிகள்

உயிரினம் சார் வெருளிகள்

உறவு சார் வெருளிகள் palvakai

உறுப்பு சார் வெருளிகள்

ஊர்தி சார் வெருளிகள்

எண் சார் வெருளிகள்

ஒலி, ஒளி சார் வெருளிகள்

ஒழுக்கம் சார் வெருளிகள்

கட்டடம் சார் வெருளிகள்

கருத்துசார் வெருளிகள்

கலை சார் வெருளிகள்

களவு சார் வெருளிகள்

கற்பிதம் சார் வெருளிகள்

கற்பிதம் சார் வெருளிகள்

கனவு சார் வெருளிகள்

காற்று வெருளிகள் 

கூர்மை தொடர்பான வெருளிகள்

சமயம் சார் வெருளிகள்

சுவை சார் வெருளிகள்

செயல்பாட்டு சார் வெருளிகள்

சொற்கள் சார் வெருளிகள்

தண்ணீர் சார் வெருளிகள்

தனிமைத் தொடர்பான வெருளிகள்

தன்மை வெருளிகள்

தீண்டல் சார் வெருளிகள்

தீர்வு சார் வெருளிகள்

தூய்மை வெருளிகள்

நாடு சார் வெருளிகள்

நிற்றல்சார் வெருளிகள்

நீர் சார் வெருளிகள்

நோய் சார் வெருளிகள்

பயிர் வெருளிகள்

பருவ வெருளிகள்

பாலியல் சார்ந்த வெருளிகள்

பொருள் வெருளிகள்

பேச்சு சார் வெருளிகள்

மக்கள் சார் வெருளிகள்

மருத்துவம் சார் வெருளிகள்

மாழை சார் வெருளிகள்

வண்ணம் சார் வெருளிகள்

வளம் சார் வெருளிகள்

வேலை சார் வெருளிகள்

இவற்றை இன்னும் சிலவற்றுடன் சேர்த்து இறுதியில் விளக்குவேன்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(காண்க – வெருளி அறிவியல் 4)


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages