Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

சங்கத்தமிழ் நாள்காட்டி: சங்க இலக்கியப் பாடல்கள் — விளக்கங்கள் ஓவியங்களுடன்

194 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 1, 2025, 1:04:54 AMMay 1
to மின்தமிழ்

Screenshot 2025-05-01.jpg

கள் குடித்து மகிழ்ந்திருக்கும் வேட்டுவன்

உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல்வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் ... (நற். 59:1-5)
      கபிலர்

பொருள்:
வேட்டுவன், காட்டில் உடும்பைக் கொன்று, வரியுள்ள தவளையைப் பிடித்து,
உயர்ந்த உச்சியையுடைய புற்றுகளிலிருந்து ஈசலைத் தோண்டியெடுத்து,
வளைதடியால் முயலை வேட்டையாடினான்.
அவற்றையெல்லாம் தன் தோளில் சுமந்து வந்து தன் இல்லத்தில் வைத்ததை மறந்து,
நன்கு புளித்த கள்ளை மிகுதியாகக் குடித்து, மகிழ்ந்திருப்பான்.

A hunter goes hunting the wild lizards,
Digs out striped toads, the winged termites,
And also hunts a hare during the day.
He makes a bundle of these and carries it home
Only to forget everything and sleep
After getting intoxicated with abundant toddy.

தேமொழி

unread,
May 1, 2025, 11:31:13 PMMay 1
to மின்தமிழ்
Screenshot 2025-05-02.jpg
விடியல் வேளை

மன்ற எருமை மலர் தலைக்காரான்
இன்தீம் பாற்பயம் கொண்மார் கன்று விட்டு
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து ... (நற். 80:1-4)
    பூதன் தேவனார்

பொருள்:
விடியற்காலைப் பொழுதில்
தொழுவத்திலுள்ள பெரிய தலையையுடைய எருமைகளின்
இனிமையான பாலைக் கறந்தனர். அதன் பிறகு, கன்றுகளை மட்டும் தொழுவத்தில் கட்டிவிட்டு,
இளம் சிறுவர்கள் எருமைகளை மேய்ப்பதற்காக அவற்றின் மேலே ஏறிக்கொண்டு புறப்படுவர்.

In the early dawn, the young village boys
Mount on the backs of the she-buffalos
And take them to the pastures for grazing,
Leaving behind their tender calves in the stalls
To secure the ideal quantity of their sweet milk.

தேமொழி

unread,
May 2, 2025, 9:41:46 PMMay 2
to மின்தமிழ்
Screenshot 2025-05-03.jpg
பன்றி வேட்டையாடும் கானவர்

போகிய நாகப் போக்கு அருங்கவலை,
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறு ஆடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
கோள்நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே! (நற். 82:6-11)
      அம்மள்ளனார்

பொருள்:
ஓங்கிய சுரபுன்னை மரங்களையுடைய செல்வதற்கரிய வழியில்,
சிறிய கண்ணும், பெருஞ் சினமும், சேற்றில் ஆடிய கரிய முதுகையும் உடைய ஆண்பன்றி,
பாறைப் பிளவில் வைக்கப்பட்டிருந்த கண்ணியில் பிடிபட்டது.
கண்ணியின்வாரைக் கடித்து அறுக்கும் வேட்டை நாய்கள்,
அப்பன்றியைப் பற்றிக்கொண்டன.  அந்தப் பன்றியின் தசைகளோடு
கானவர்கள் தங்கள் சிறுகுடிக்குத் திரும்புவர்.

In the forked forest of tall naakam trees,
A small-eyed boar got trapped and fell into an empty pit.
The hunting dogs, ruining the net straps, killed the bore
And the forest dwellers took its flesh for themselves.

தேமொழி

unread,
May 3, 2025, 10:54:31 PMMay 3
to மின்தமிழ்
Screenshot 2025-05-04.jpg
நட்பில் குறைவு ஏற்படாது

காமம் ஒழிவது ஆயினும், யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடர் அகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே! (குறுந். 42)

      கபிலர்

பொருள்:
நடுஇரவில், இடியுடன் கூடிய மின்னலுடன் பெரு
மழை பெய்து, மலையருவிகள் ஆர்ப்பரிக்கும் குறிஞ்சி
நிலத் தலைவனே! தலைவி மீது கொண்ட காதலுடன்
நீ இரவில் வரவில்லை என்றாலும், உன்னிடத்தில்
தலைவி கொண்டுள்ள நட்பில் குறைவு ஏற்படாது.

My lord! Clamor of waterfalls in your country
Tell of thunderous rains that fell earlier;
Even if you miss hanging out with us
Will our love for you ever wane!

தேமொழி

unread,
May 5, 2025, 12:18:57 AMMay 5
to மின்தமிழ்
Screenshot 2025-05-05.jpg

இருபேர் ஆண்மை செய்த பூசல்

'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே!
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இருபேர் ஆண்மை செய்த பூசல்,
நல் அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு உறுமே! (குறுந். 43)
      ஒளவையார்

பொருள்:
தலைவர் என்னைப் பிரிந்து செல்லமாட்டார் என்று நினைத்து, அவரைத் தடுக்காமல் இருந்தேன்.
அவரோ, என்னிடம் சொன்னால் இவள் உடன்படமாட்டாள் என்று நினைத்து, சொல்லாமலேயே சென்று விட்டார்.
எங்கள் இருவரின் ஆளுமையால் எங்களுக்குள் ஏற்பட்ட முரணில்
நான் இப்போது நல்ல பாம்பு
கடித்ததைப் போல் கலங்கியிருக்கிறேன்.

Thinking "he won't leave" I didn't forbid him;
Thinking "she won't agree", he left
Without telling us. Our big egos led us to bicker then.

தேமொழி

unread,
May 5, 2025, 11:56:24 PMMay 5
to மின்தமிழ்
Screenshot 2025-05-06.jpg
கண்கள் ஒளியிழந்துவிட்டன

காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே! (குறுந். 44)
      வெள்ளி வீதியார்

பொருள்:
நடந்து நடந்து என்னுடைய கால்கள் வருந்துகின்றன.
போவோர் வருவோரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி
இழந்துவிட்டன.
என்னுடைய மகளும் அவள் தலைவனும் மட்டும் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை.
அவர்கள் தவிர மீதம் உள்ளோர் அகன்ற பெரிய வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகமாய் உள்ளனர்.

My legs are faltering; eyes have dimmed
Looking out for them for so long;
There are as many people, other than them,
As there are stars in this universe!


Message has been deleted

தேமொழி

unread,
May 6, 2025, 7:50:21 PMMay 6
to மின்தமிழ்
Screenshot 2025-05-07.jpg
விரைந்து வருவார்

புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே! (குறுந். 46:6-7)
      மாமிலாடனார்

பொருள்:
தோழியே! தலைவர் சென்ற நாட்டில்
பிரிந்தோரைப் புலம்பி வருந்தச் செய்யும் மாலைக் காலமும்,
பிரிந்து வாடுவோரும் இல்லையோ?

Twilight that torments lovers, and loneliness,
Does the country he has gone to, Not have these, my friend?

தேமொழி

unread,
May 8, 2025, 12:00:31 AMMay 8
to மின்தமிழ்
Screenshot 2025-05-08.jpg
வேள் பாரி

மரம் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே!
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர,
ஆடினிர், பாடினிர், செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே! (புறம். 109:11-18)

      கபிலர்

பொருள்:
மலை அடிவாரத்தில் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டி நிறுத்தினாலும்,
தேர்களை ஓட்டிக் கொண்டுவந்து நிறுத்தி இருந்தாலும்
பறம்பு மலை அடிபணியாது. உங்களது வாள் வன்மையால் அதனைப் பெறமுடியாது.
அதனை எப்படிப் பெறுவது என்பதை நான் அறிவேன்.
கேளுங்கள். நீங்கள் சிறிய யாழை வாசித்து,
உம் மகளிர் விறலியர் கோலம்பூண்டு முன்னே வர,
ஆடுவோரும் பாடுவோருமாகச் சென்றால்
அவன் தன் நாட்டையும் குன்றையும் சேர்த்தே உங்களுக்குத் தருவான்.

Even with all your armies
You won't be able to subdue him;
I know how to get it from him -
If you go playing the harp along with your songstresses
And sing and dance his praise
He will give away his country along with hills too.

தேமொழி

unread,
May 9, 2025, 2:52:20 AMMay 9
to மின்தமிழ்
Screenshot 2025-05-09.jpg

ஆதரவற்றோர் ஆனோம்!

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்! எம் குன்றும் பிறர்கொளார்!
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்! யாம் எந்தையும் இலமே! (புறம். 112)
      பாரி மகளிர்

பொருள்:
மூவேந்தர் முற்றுகையிட்டிருந்த அன்றைய முழுமதி நாளில்,
நாங்கள் எம் தந்தையோடு இருந்தோம். எங்கள் பறம்பு மலையும் கைப்பற்றப்படவில்லை.
இன்றைய முழுமதி நாளில்,
வெற்றி முரசையுடைய மன்னர்கள்
எம்மலையைக் கைப்பற்றிக்கொண்டனர். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்துவிட்டோம்.

On that day, under the white light of that moon,
We had our father and no enemies had taken the hill.
On this day, under the white light of this moon, the kings,
Whose royal drums announce the victory, have taken the hill.
And we! we have no father.

தேமொழி

unread,
May 9, 2025, 10:14:16 PMMay 9
to மின்தமிழ்
Screenshot 2025-05-10.jpg
பறம்பு மலையே, செல்கிறோம்!

பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ, பெரும்பெயர்ப் பறம்பே!
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல், கிழவரைப் படர்ந்தே! (புறம். 113:5-9)

      கபிலர்

பொருள்:
பறம்பு மலையே!
பாரி இல்லாததால் கையறு நிலையில் கலங்கிக்
கண்ணீர் மல்க வருந்தி - உன்னை வணங்கி
வாழ்த்துகின்றேன்.
திரண்ட வளையலை அணிந்துள்ள பாரி மகளிரின்
மணம் கமழ்கின்ற கரிய கூந்தலைத் தீண்டுவதற்கு
உரியவரிடம் அவர்களை ஒப்படைப்பதற்காக உன்னிடம்
விடைபெற்றுச் செல்கிறோம்.

As Paari is dead, with tears streaming from our eyes
And not knowing what to do,
We bow to you and leave, O' famed Parambu hills,
In search of one who will wed these dark tressed girls
Wearing small bangles in their forearms.

தேமொழி

unread,
May 11, 2025, 12:01:58 AMMay 11
to மின்தமிழ்
Screenshot 2025-05-11.jpg

தேர்களைக் கொடையளித்த மலையமான்

தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே! (புறம். 123:3-6)

      கபிலர்

பொருள்:
அழியாத நல்ல புகழ் விளங்கும் மலையமான்,
மது உண்டு மகிழாமல் இருக்கும்போது வழங்கிய அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்கள்,
பயன்நிறைந்த முள்ளூர் மலை உச்சியில் பெய்த
மழைத் துளிகளைவிடப் பலவாகும்.

Gilded chariots gifted by sober Malayan
Of lasting fame are innumerable
Than bounteous rain drops over Mullur peaks.

தேமொழி

unread,
May 11, 2025, 10:41:07 PMMay 11
to மின்தமிழ்
Screenshot 2025-05-12.jpg
மலையமான் திருமுடிக்காரி

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கள் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும்! எந்தை, நின் காண்கு வந்திசினே!
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே,
உழுத நோன்பகடு அழி தின்றாங்கு
நல்லமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே! (புறம். 125:1-8)
      வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்

பொருள்:
பகைவரது வலிமையை அழித்த ஆளுமை மிக்க மலையமானே!
பருத்தியில் நூல் நூற்கும் பெண், தூய்மை செய்து வைத்திருக்கும் பஞ்சினைப் போன்ற
நெருப்பு ஆறிய கொழுப்புடன் சேர்ந்த இறைச்சித் துண்டை
மது நிறைந்த குடங்களுடன் வழங்கினாய்.
உன்னை, உனது அவையில் காண வந்தேன்.
உழுத வலிமையான காளைமாடு வைக்கோலை விரும்பித் தின்பது போல,
நீ பெற்ற பொருளை எல்லோருக்கும் அளித்தபிறகு,
எஞ்சிய கள்ளினை விரும்பி உண்கிறாய். அது, நல்ல அமிழ்தம் ஆகட்டும்!

Soft cotton like chunky meat pieces along with toddy
You serve to those who come to your court seeking patronage;
I've come to meet you, the destroyer of enemies,
When you are happy in your court;
Like a bull that chews hay after a hard day's work
May the leftover toddy you partake be as sweet as nectar to you.

தேமொழி

unread,
May 12, 2025, 10:11:59 PMMay 12
to மின்தமிழ்
Screenshot 2025-05-13.jpg
முழவா? பலாப்பழமா?

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடு இன் தெண்கண், கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்! (புறம். 128:1-4)
      உறையூர் ஏணிச்சேரி முட மோசியார்

பொருள்:
ஊர்ப் பொது மன்றத்தில் உள்ள பலா மரத்தில் பழுத்த பலாப்பழங்கள் தொங்கின.
அவற்றிற்கு இடையே பாணர்கள் தங்கள் மத்தளத்தைத் தொங்க விட்டிருந்தனர்.
அதனைப் பலாப்பழம் என்று நினைத்த பெண்குரங்கு அதன் இனிய இசை எழுப்பும் கண்பகுதியில் தட்டியதும்
அது முழங்கியது. அந்த முழக்கத்தைக் கேட்ட அன்னப் பறவை ஒலி எழுப்பியது.

Thinking that it was a jackfruit,
A female monkey beat on a tightly tied drum
Which was hung on a jackfruit tree's big branch by drummers.
On hearing the sound, a perturbed gander rose up and made noise.

தேமொழி

unread,
May 14, 2025, 12:21:50 AMMay 14
to மின்தமிழ்
Screenshot 2025-05-14.jpg
ஆய் அண்டிரனின் யானைக் கொடை

ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி இன்றிப்
பெரு வெள்ளென்னின் பிழையாது மன்னே! (புறம். 129:5-9)

      உறையூர் ஏணிச்சேரி முட மோசியார்

பொருள்:
வானத்தில் நிறைந்திருக்கும் விண்மீன்களின்
எண்ணிக்கையை விட மிகுதியான யானைகளை இரவலர்க்கு
ஆய் அண்டிரன் வழங்குவான். வானத்தில் மேகமே இல்லாமல்
விண்மீன்கள் இன்னும் மிகுதியாக இருந்தால் கூட அவன்
வழங்கிய யானைகளுக்கு ஈடாகாது.

Number of elephants given away as gift
By mighty warrior Aai Andiran
Are far more than stars in the sky;
Even if stars are stacked together
Without any gap, they might not equal his gift.

தேமொழி

unread,
May 14, 2025, 8:53:59 PMMay 14
to மின்தமிழ்
Screenshot 2025-05-15.jpg
ஆயத்தோடு கூடு, என்றாள் தாய்

நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத்திறம் அறியாள் தாங்கி, தனிச் சேறல்
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு! (பரி. 11:109-114)
      நல்லந்துவனார்

பொருள்:
வையையாற்றில் பாய்ந்து ஒருவன் நீராடினான்.
அவ்வேளையில் கரையில் உறவினரோடு நின்ற ஒரு தலைவியைப் பார்த்தான்.
அவளும் அவனைப் பார்த்தாள். அப்போது வையை நீர், அவனை எதிர்த்திசையில் இழுத்துச்சென்றது.
அவன் நீரோடு செல்வதைக் கண்ட அவள், அவன் ஆற்றில் போன வழியில் கரையிலே தொடர்ந்தாள்.
அவளின் காதலை உணராத தாய், அவளை, 'நீ தனியே செல்லாதே' என்று தடுப்பதுபோல் கூவினாள்.
அதனால் அப்பெண் அழுதாள். இவ்வாறு காதலரைத் துன்பத்தில் ஆழ்த்தும் வகையில்
கார் காலத்தில் வையையில் புதுவெள்ளம் ஓடியது.

While he was transfixed looking at where she stood,
The river took him away in a different course;
So she left her kith and kin and moved towards him
While her mother shouted "Stay with your friends", to her dismay
As the reddish water of Vaigai crashed against the banks.

தேமொழி

unread,
May 16, 2025, 12:08:21 AMMay 16
to மின்தமிழ்
Screenshot 2025-05-16.jpg
ஆரவாரம் மிக்க ஊர்

எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்,
பழனக் காவில் பசுமயில் ஆலும்,
பொய்கை வாயில் புனல்பொருபுதவின்,
வல்வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல்பட்டுத் துள்ளுபு துரப்ப
நல்லெருது முயலும் அளறுபோகு விழுமத்துச்
சாகாட்டாளர் கம்பலை யல்லது ... (பதிற்று. 27:7-14)
      பாலைக் கௌதமனார்

பொருள்:
ஒளி பொருந்திய வளையல் அணிந்த இளம்பெண்கள், நீர்த்துறைக்கு அருகில் உள்ள மருத மரத்தில் ஏறி, நெல் வயல்களில் கதிர் கொய்ய வரும் பறவைகளை விரட்ட, ஓங்கிக் குரலை இசைப்பர்.
அது கேட்டு அருகில் உள்ள சோலைகளில் இருக்கும் மயில்கள் ஆடத்தொடங்கும்.
பொய்கையின் மதகில் கசியும் நீர் ஒலி எழுப்பும்.
அந்த நீர் போகும் வழியில் நெய்தல் மலர்ந்துள்ள சேற்று நிலத்தில்,
எருதுகள் பூட்டப்பெற்ற வண்டியின் சக்கரங்கள் புதையும்.
வண்டி ஓட்டுபவர், சேற்றிலிருந்து சக்கரங்களை மீட்பதற்காக
எருதுகளை ஓசை எழுப்பி விரட்டுவர்.
இவ்வாறாக பலவகையான ஒலிகள் நிறைந்த ஊர்.

The commotions heard in your country
Are the clear voices of the young women who climb on the trees
To chase away the birds that feed on the mature grains,
And the agitated noise of bullock cart drivers
Whose cartwheels are stuck in the rut
Of your country's flourishing paddy fields.

ஆங்கில மொழிபெயர்ப்பில் சோலைகளில் ஆடும் மயில் குறித்த தகவல் இல்லை !!!!!

தேமொழி

unread,
May 17, 2025, 1:08:24 AMMay 17
to மின்தமிழ்
Screenshot 2025-05-17.jpg
குட்டுவனால் வளம் அழிந்த ஊர்

அகன்கண் வைப்பின் நாடு மன் அளிய!
விரவுவேறு கூலமொடு குருதிவேட்ட,
மயிர்புதை மாக்கண் கடிய கழற,
அமர்கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பில் தானை பரவா ஊங்கே! (பதிற்று. 29:9-15)

      பாலைக் கௌதமனார்

பொருள்:
பெரும்பல் யானைக் குட்டுவன்,
போர் முழக்கத்துடன் பகைவர் நாட்டுடன் போருக்குப் புறப்படுவதற்கு முன்,
பலவகைத் தானியங்களுடன் இரத்தம் கலந்து படையலிட்டனர்;
எருதின் மயிர் சேர்ந்த தோல் போர்த்தப்பட்ட முரசின் பெரிய கண் பகுதியில் பேரொலி எழுப்பினர்.
அவன் போருக்குச் செல்லும்முன், வளம் நிறைந்ததாக இருந்த பகைவர் நாடு இனி இரங்கத்தக்கதாகும்.

These were countries with expansive towns
Before the legion of Kuttuvan with elephants
Destroyed them, sounding leather clad war drums,
Offering blood-soaked grains as sacrifice.

தேமொழி

unread,
May 18, 2025, 12:29:59 AMMay 18
to மின்தமிழ்
Screenshot 2025-05-18.jpg
உண்மையைச் சொல்லிவிடு

உடலினென் அல்லேன்! பொய்யாது உரைமோ!
யார் அவள், மகிழ்ந! தானே தேரொடு
தளர்நடைப் புதல்வனை உள்ளி, நின்
வளமனை வருதலும் வெளவியோளே! (ஐங். 66)
      ஓரம்போகியார்

பொருள்:
மகிழ்நனே! தானே தேர் உருட்டி விளையாடும்
தளர்ந்த நடையை உடைய மகனை நினைத்தபடி நீ
இல்லத்துக்கு வரும்போது, உன்னைத் தடுத்துக் கவர்ந்து சென்றவள் யார்?
நான் கோபத்துடன் இதனைக் கேட்கவில்லை. பொய்யில்லாமல்  உண்மையைச் சொல்வாயாக!

O' Joyous Chief! I am not against you,
Tell me without lying:
Who was that witching woman, who seized you
During your return in the chariot to your wealthy villa,
Thinking of your tottering son?

!!! தேரைப்  பயன்படுத்துவது தந்தையா மகனா?  இரு விளக்கங்களும் வேறுபடுகிறது !!!

தேமொழி

unread,
May 18, 2025, 10:48:56 PMMay 18
to மின்தமிழ்
Screenshot 2025-05-19.jpg
இதை உன் மனைவி கேட்டிருக்க வேண்டும்

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்
மலரணி வாயில் பொய்கை ஊர! நீ
என்னை நயந்தனென் என்றி! நின்
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே! (ஐங். 81)

      ஓரம்போகியார்

பொருள்:
நாரைகள் உடைத்து உண்ட வெண்மையான வயிற்றைக் கொண்ட ஆமை இறைச்சியை
அரிப்பறையை முழக்கும் உழவர், தங்கள் உணவுடன் சேர்த்து உண்பர்.
மலர்கள் மலர்ந்திருக்கும் பொய்கையை உடைய துறைக்குத் தலைவனே!
'நான் உன்னை விரும்புகிறேன்' என்று கூறுகிறாய். இதனை உன்னுடைய
மனைவி கேட்டால் மிகவும் வருந்துவாள்.

O' Chief of the habitat, where the heron cracking
The white-bellied tortoise ate its flesh,
The residue of which is gathered for the drummers' supper
And where the flowers beautify the lake with steps;
You said that you desired me,
If your wife hears the same
Surely she will be sad.

தேமொழி

unread,
May 19, 2025, 10:34:09 PMMay 19
to மின்தமிழ்
Screenshot 2025-05-20.jpg

பொருள்மீதே காதலர்க்குக் காதல்

விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்!
அருளே காதலர் என்றி நீயே! (அகம். 53:10-16)
      சீத்தலைச் சாத்தனார்

பொருள்:
மறவர் மறைந்திருந்து விட்ட அம்பினால் இறந்தவரின்
பெருமை எழுதி வைக்கப்பட்ட நடுகல்லுக்கு அருகில்
செந்நாய் ஒன்று தன் துணையுடன் தங்கியிருந்தது.
இல்லை என்று இரப்போர்க்கு, இல்லை என்று சொல்லாத
நம் தலைவன், அந்தக் கொடிய காட்டு வழியில் பொருள்
தேடிப் போய்விட்டான். நம்மை விடவும் தலைவனுக்குப்
பொருளின்மேல் தான் காதல் உள்ளது என்றேன்.
ஆனால் நீயோ, அவன், பொருள் மேல் கொண்ட காதலும்
அருளுடன் கூடியது என்கிறாய்.

Our lover went on a long, deserted path of gore.
It seems, for him the wealth earned thus
Is more valuable than we are!
Yet you say, that it is for love of us he cares more!

தேமொழி

unread,
May 21, 2025, 1:09:32 AMMay 21
to மின்தமிழ்
Screenshot 2025-05-21.jpg
கோவலர் குழலோசை

... மதவுநடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல் அம்குரல் கால்பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பயநிரை ஆயம்
கொடுமடி உடையர் கோல்கைக் கோவலர்
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனை நகுமாலை! (அகம். 54:6-12)
      மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

பொருள்:
பசுக்கள், வீட்டில் கயிற்றால் கட்டப்பெற்ற கன்றுகளை நினைத்துக்கொண்டதால் பால் சுரக்கும் பெரிய மடியை உடையன.
அவை கனைக்கும் குரலுடனும் கழுத்தில்
ஒலிக்கும் மணியுடனும் விரைந்து வருகின்றன. ஆயர்கள்,
மடியில் பொருள்கள் மடித்து வைக்கப்பட்ட வேட்டியை உடையவராய்,
புல்லாங்குழல் இசைத்தவராய், கோலைக் கையில் உடையவராய் மாடுகளுக்குப் பின்னால் வருகின்றனர்.
மாடுகள் தங்கள் வீடுகளை அறிந்து அவற்றிற்குள் செல்லும் மாலைக் காலம்.

The herds of cows, after grazing, rush to their houses;
Their udders brim with milk and their nipples swell up
When they think of their calves.
The cowherds follow them slowly,
Playing on konrai pipes and holding their crooks.

தேமொழி

unread,
May 21, 2025, 11:34:58 PMMay 21
to மின்தமிழ்
Screenshot 2025-05-22.jpg
வீடு மாறி வந்துவிட்டாய்!

பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்று ஆப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
எம் மனைப் புகுதந்தோனே! அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று
இம்மனை அன்று அஃது உம் மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே! (அகம். 56:10-16)
      மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

பொருள்:
பெரும் விருப்பத்துடன் பாணன் ஒருவன் பரத்தை வீட்டிற்குச் சென்றான்.
தெருவில் நின்ற கன்றை ஈன்ற பசு பாய்ந்ததால், அவன் தன் கையில் இருந்த யாழைக் கீழே போட்டுவிட்டு
ஓடிவந்து என் இல்லத்துள் புகுந்தான். அதைக்கண்டு
எனக்குள் உண்டான சிரிப்பை மறைத்துக்கொண்டு,
'இந்த வீடு நீ புகுவதற்குரிய வீடு அல்ல. நீ போக வேண்டிய வீடு அதுவாகும்' என்று அறிவுறுத்தினேன்.
அவன் மயக்கத்துடன் என்னைக் கையால் வணங்கி நின்றான்.
அதனை இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பை ஏற்படுத்துகிறது.

A cow sprang upon a Paanan;
At that, the paanan dropped down his yaal and rushed into our house;
I concealed my giggle and said unto him,
'This is not your house. It is yonder!'
At this, he stood worshipping me with folded hands.
It was fun, good fun, my friend!

தேமொழி

unread,
May 22, 2025, 9:36:56 PMMay 22
to மின்தமிழ்
Screenshot 2025-05-23.jpg
மணம் பேச வருகிறானடி

பல் பூங் கானல் பகல்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம், சென்மோ, தோழி!
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே! (நற். 235:4-10)
        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
பூக்கள் மலர்ந்த நெய்தல் சோலையில் பகலில் வந்து
இன்பம் நுகர்ந்து சென்றான் தலைவன்.
வண்டு தேன் உண்ணும் மாலை அணிந்த அவன்,
தனது தேரில் பூட்டிய குதிரைகளைச் செலுத்தும்போது
அவற்றின் கழுத்து மணி ஒலிக்கும்படியாக
மணம் பேசுவதற்காக வருகிறான்.
நாம் இந்தக் கடற்கரையில் இருக்கும் மணல் குன்றில்
ஏறிப் பார்க்கலாம், வா!

Our lover, whose chest is adorned with a garland swarmed by bees,
Came during the day for trysts with you and has departed, ruining your body.
Let us climb on the sand dunes that resemble the hills, O' friend,
To see the path of the lord, where he comes riding his proud horses,
To marry you!

தேமொழி

unread,
May 23, 2025, 10:24:30 PMMay 23
to மின்தமிழ்
Screenshot 2025-05-24.jpg
நோயுள் ஆழ்ந்திடாதே, தோழி

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர் எனத்
தாள் வலம்படுப்பச் சேண்புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல் வாழி, தோழி! (அகம். 61:1-5)
      மாமூலனார்

பொருள்:
தம் பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் முயற்சியில் உயிர் நீத்தவர்
இவ்வுலகில் தவம் செய்தவரே ஆவார். இதற்காக
நம்மைப் பிரிந்து தொலைவில் உள்ள நாட்டிற்குப்
பொருள் தேடிச் சென்றவர் நம் தலைவர்.
அவர் சென்ற நாட்களைக் கணக்கிடுவதற்கு நீண்ட சுவரில் போட்ட கோடுகளை
எண்ணி எண்ணித் துன்பத்துள் ஆழ்ந்திடாதே!

My friend, you sob every time
You behold the counting marks on the wall
Ever since our lover left us seeking wealth in a far-off place.
He resolved that those who die while performing acts of charity
Are fortunate and is determined to make his efforts fruitful.

தேமொழி

unread,
May 24, 2025, 9:14:40 PMMay 24
to மின்தமிழ்
Screenshot 2025-05-25.jpg
கிழிந்த ஆடை சொல்லிவிட்டது

என்னை நீ செய்யினும், உரைத்து ஈவார் இல்வழி,
முன்அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்!
நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள,
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?
(கலி. 73:14-17)
      மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
நீ என்ன செய்தாலும் அதைப் பிறர் சுட்டிக்காட்டாத இடத்தில் உள்ளாய்.
வளையல் அணிந்த பரத்தையரோடு நீ ஆடிய துணங்கைக் கூத்தில்
கிழிந்த உனது உடையுடன் வந்து பணிந்து என் ஊடலை விலக்க முயல்கிறாய்.
அந்தக் கிழிந்த ஆடையே உனது பரத்தமையை எடுத்துரைத்துவிட்டது.

If your cloth torn at the border,
By the tunankai dance of the goodly women,
Didn't come to convey it, none there'd be
To point your misdeeds, however grave they are;
You'd come to resolve my sulking, resorting to submission.

தேமொழி

unread,
May 25, 2025, 8:47:23 PMMay 25
to மின்தமிழ்
Screenshot 2025-05-26.jpg
இடப்பெயர்வும் குடியேற்றமும்

பண்புடை நல்நாட்டுப் பகை, தலை வந்தென
அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடிபோல, பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறைபகை தணிப்ப அக்குடி பதிப்பெயர்ந்தாங்கு,
நிறை புனல் நீங்க வந்து ... (கலி. 78:4-9)

    மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
தேனருந்தும் வண்டானது ஒரு பொய்கையிலிருந்து வேறு ஒரு
பொய்கைக்குப் போய்த் தங்கும், மீண்டும் பழைய பொய்கைக்கு வரும்
அந்த அளவிற்குப் பல பொய்கைகளைக் கொண்ட ஊரனே!
நல்ல பண்புடைய நாட்டிலே பகை வந்துவிட்டது என
அந்நாட்டைவிட்டுக் குடிமக்கள் நீங்கிச் செல்வர்.
தங்களைப் பாதுகாக்கும் தன்மை உடைய
வேற்று நாட்டு மன்னனின் ஆட்சியில் அவர்கள் தங்கியிருப்பார்கள்.
தன் நாட்டுக்கு வந்த பகையை அந்த மன்னன்
நீக்கிய பிறகு அக்குடிமக்கள் திரும்பத் தம் ஊருக்கு வந்து தங்குவர்.

Subjects of a virtuous land under siege, abandon it
For refuge in another town under another ruler's reign;
And later return home, as their monarch
Puts the foemen to rout!

தேமொழி

unread,
May 26, 2025, 11:30:59 PMMay 26
to மின்தமிழ்
Screenshot 2025-05-27.jpg
மழலை மொழி பேசு அமுதமே!

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,
பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற,
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா
பெருந்தகாய் கூறு, சில. (கலி. 81:11-15)

      மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
பெருமானே! விருந்தினர் வருவதால் தொடர்ந்து பல வேலைகளைச்
செய்துகொண்டிருந்தேன். நீ என்னைப் பற்றி நினைக்காமல்
தெருவில் விளையாடியபோது செவிலித்தாயர் உனக்குத்
திருத்தமான சொற்களைக் கற்பித்தனர்.
அப்படி நீ கற்ற சொற்களை நான் கேட்கும்படி கூறுவாயாக.
உன் தந்தையைப் பிரிந்து வருந்தும் என் நெஞ்சத்தில் இனிமை உண்டாகும்படி
உன் அமிழ்தம் போன்ற மழலைச் சொல்லில் பேசுவாயாக!

O' my noble one! you go oblivious of me
As I'm tied down, treating guests;
Do utter some words for me to delight in;
Words you've learnt to refinement
From the foster mothers at the main street.

தேமொழி

unread,
May 27, 2025, 9:07:25 PMMay 27
to மின்தமிழ்
Screenshot 2025-05-28.jpg
வள்ளல் காரி

... கறங்குமணி
வால் உளைப் புரவியொடு, வையகம் மருள
ஈரநல்மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வருநெடுவேல்,
கழல் தொடித் தடக்கை காரி! (சிறுபாண். 91-95)
      இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பொருள்:
மலையமான் திருமுடிக் காரி, ஒலிக்கிற மணியுடன்
வெண்ணிறத் தலைஅணி அணிவிக்கப்பட்ட குதிரையையும் தனது நாட்டையும்
மற்றவர்கள் மருளும்படியாக இரவலர்க்குக் கனிவுடன் வழங்கியவன்!
போர்த் தெய்வமாகிய கொற்றவை எப்போதும் தன்னிடம்
குடியிருக்கும்படி  கழலையும் நீண்ட வேலையும் தாங்கியவன்.
அவனது கண்கள் சினத்துடன் நெருப்புப் போல் இருக்கும்.

Kaari adorned with sliding anklets
Gifted horses with jingling bells
And white plumes
And awed people with his kind, good words.
But his bright, tall spear caused terror.

தேமொழி

unread,
May 28, 2025, 9:02:35 PMMay 28
to மின்தமிழ்
Screenshot 2025-05-29.jpg
எயில்பட்டினப் பரதவர் தரும் விருந்து

... நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,
தளைஅவிழ் தெரியல் தகையோன் பாடி
அறல் குழல் பாணி தூங்கி அவரொடு
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்!
(சிறுபாண். 158-163)

      இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பொருள்:
எயில்பட்டினத்தில் உள்ள பரதவப் பெண்கள் அரித்து எடுத்த
கள்ளை, பரதவர் தாமும் அருந்தி, பாணராகிய உங்களுக்கும் வழங்குவர்.
அழகிய மலர்கள் மலர்ந்த சோலைகளைக் கொண்ட கிடங்கில் என்னும் பகுதியை ஆண்ட
மாலை அணிந்த மன்னனைப் பாடி,
குழல் இசையின் தாளத்திற்கு ஏற்ப விறலியர் ஆடினால்
அந்த நகரில் எங்கே சென்றாலும் சுடப்பட்ட குழல் மீனையும்
உணவையும் உண்பதற்காகப் பெறுவீர்.

If you go to Eyilpattinam,
With groves full of flower clusters
And sing the praises of the noble king of Kidangil
With perfect rhythm and beats
As your viralis dance, they will give you
Kulal fish dishes and aged liquor in all the houses.

தேமொழி

unread,
May 29, 2025, 9:32:46 PMMay 29
to மின்தமிழ்
Screenshot 2025-05-30.jpg
நல்லியக்கோடனின் கொடை

கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர்பெற்ற எழில்நடைப் பாகரொடு
மாசெலவு ஒழிக்கும் மதனுடை நோன்தாள்,
வாள்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ ... (சிறுபாண். 257-260)

      இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பொருள்:
சிறந்த தச்சர் செய்து முடித்தபின் அதில் ஏறிப்பார்த்து,
நல்ல தேர் என்று புகழப்பெற்ற தேரையும் யானைகளையும்
அவற்றின் பாகனையும், குதிரையை விட வேகமாக இழுக்கும்
வலிமை வாய்ந்த வெள்ளை எருதினையும் வண்டியையும்
வண்டியோட்டியையும் பிற பொருள்களையும் தருவான்
நல்லியக்கோடன்.

He (Nalliakodan) makes a present of a chariot fine
That rolls with ease and proves quite fit by use.
A bull he adds, and a driver.
He sends you then with other gifts too.

தேமொழி

unread,
May 30, 2025, 10:06:34 PMMay 30
to மின்தமிழ்
Screenshot 2025-05-31.jpg
சுங்கவரி பெறும் பாதை

தடவு நிலைப் பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும்,
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் ... (பெரும்பாண். 77-82)
      கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
வளைந்து தாழ்ந்த பலாக்கிளையின் இரண்டு பக்கங்களிலும்
பலாப்பழங்கள் தொங்குவது போல் கழுதையின் மேல் மிளகுப் பொதிகள் தொங்கும்.
அந்தக் கழுதையின் முதுகு, பொதி சுமந்து காய்ப்பு ஏறியிருந்தது.
வணிகத்திற்காகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் செல்லும்
பாதைகளில் பாதுகாப்புக்காக வில்லேந்தி வீரர்கள் நிற்பர்.
அங்கே சுங்கவரி பெறப்பட்டது.

Merchants travel on wide roads where tolls are levied
Accompanied by their donkeys with scarred backs,
That carry loads of pepper sacks, well balanced,
Resembling jackfruits that grow on the curved branches of trees
These paths used by the merchants are
Protected by those with bows.
Reply all
Reply to author
Forward
0 new messages