தமிழகத்தை ஆண்ட நாயக்கர்கள் காலத்தில் தமிழ் மண்ணில் தெலுங்கு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/
சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நான்கு தெலுங்கு மொழிக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
திருவல்லிக்கேணி கோவில் :
கல்வெட்டுக் குறிப்பு எண்: 91
தெலுங்கு
16 ம் நூற்றாண்டு
1585 ரங்க ராயர்
கல்வெட்டுக் குறிப்பு எண்:90
தெலுங்கு 16-17 ம் நூற்றாண்டு
கல்வெட்டுக் குறிப்பு எண்:65
தெலுங்கு 18 ம் நூற்றாண்டு
கல்வெட்டுக் குறிப்பு எண்:69 தெலுங்கு 19 ம் நூற்றாண்டு
1585 ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட ஒரு தெலுங்குக் கல்வெட்டு உள்ளது. இந்த ஒரு கல்வெட்டைத் தவிர மற்றுமுள்ள 4 விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழில்தான் வெட்டப்பட்டுள்ளன.
- 1585 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழியில் வெட்டப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு (1967/81k) தெள்ளியசிங்கப் பெருமாள், வேதவல்லி நாச்சியார், சூடிக் கொடுத்த நாச்சியார் திருநட்சத்திரங்கள் வரும் திருநாட்களில் செய்யப்பட வேண்டிய கைங்கர்யத்திற்காகத் தயிர்ச்சோற்றுடன், தோசை, ஆப்பம், வடை, பானகம், பணியாரம், பொங்கல், தளிகை(அமுது) யுடன் கூடிய அமுதுபடி செய்விக்கும் சமையலுக்குத் தேவையான பொருட்களாக வெண்ணெய், நெய், பால், புளி, வாழைப்பழம், தயிர், பால், வெல்லம், அரிசி ஆகியனவும்; வழிபாட்டுக்குச் சந்தனம், சாம்பிராணி, பூக்கள், வெற்றிலை, வாழைப்பழம் போன்றவையும் வழங்கக் கொடை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
மேலும், நாயக்கர் காலத்தில் தெலுங்கு மொழி இலக்கியங்களும், இசையும் கலைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன என்பதையும் அறிய முடிகிறது.