புதுமைப்பித்தன்

7 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
2:19 AM (11 hours ago) 2:19 AM
to மின்தமிழ்
புதுமைப்பித்தன்
__________________________________‍
சொற்கீரன்.



நம் எழுத்துக்களின் பிரபஞ்சங்களுக்குள்
இன்னும் உட்கார்ந்து கொண்டு
குடைச்சலும் இரைச்சலும்
கொடுத்துக்கொண்டிருக்கும்
ஒரு மூல நெருப்பின் குரல்
இந்த எழுத்துச்சிற்பி புதுமைப்பித்தன்.
நான் சிறுபயலாய்
அந்த தாமிரபரணி ஆற்றங்கரையில்
பனங்குட்டிகளுக்கிடையே
"வெளிக்கு"இருக்கும் போதெல்லாம்
கயிறு போல இருக்கும் அரவு எனும்
பாம்பு பற்றி அல்லது
காலம் பற்றி யெல்லாம்
ஒன்றும் தெரியாது.
ஆனால்
அவர் எழுதிய "கயிற்றரவு"
எனும் சிறுகதை
எல்லா வாசலையும் திறந்து வைத்தது.
எல்லா வெளிச்சத்தையும் காட்டியது.
புதுமைப்பித்தன் எழுத்துக்களே
என்றைக்கும்
எங்கணும்
இந்த புல்லையும் புழுவையும்
மண்ணாங்கட்டிகளையும்
கல்லையும்
சிந்தனைக்கதிர் விரிக்கும்
"கல்பாக்கங்கள்"
ஆக்கிக்க்கொண்டேயிருக்கும்.

__________________________________________________



Reply all
Reply to author
Forward
0 new messages