1. செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010): இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

8 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 24, 2025, 3:57:40 PM (2 days ago) Nov 24
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      25 November 2025      கரமுதல


(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 729-733

729. காசாளர் வெருளி – Tamiaphobia

காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி.

கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள்.

00

730. காசு வெருளி – Cuprolaminophobia

காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி.

காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர்.

Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )

 lamina என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மென் தகடு. இரண்டும் சேர்ந்து செம்பு மாழையில் மென்தகடாக ஆக்கப்படும் காசினைக் குறிக்கின்றன.

00

731. காட்சி வெருளி – ostentlorphobia

காற்சட்டைகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பான தேவையற்ற பேரச்சம் காட்சி வெருளி.

காட்சிப்படுத்து வெருளி என்பதையே சுருக்கமாகக் காட்சி வெருளி என்கிறோம்.

பொதுவாக ஆடவருக்கே மிகுதியாக வருகிறது.

osten என்னும் இலத்தீன் சொல்லிற்குக் காட்சிப்படுத்து எனப் பொருள்.

00

732. காட்டுத்தீ வெருளி – Agripyrophobia

காட்டுத்தீபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காட்டுத்தீ வெருளி.

கிரேக்கத்தில் agri  என்றால் புலம் என்றும் pyro என்றால் தீ என்றும் பொருள்.

00

733. காட்டுக் குரங்கன் வெருளி-Ourakotagkophobia

காட்டு மனிதக் குரங்கு / காட்டுக் குரங்கன் (orangutans/orang-utan/orangutang/orang-utang) மீதான அளவுகடந்த பேரச்சம் காட்டுக் குரங்கன் வெருளி.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

++

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      25 November 2025      கரமுதல


(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): தொடர்ச்சி)

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010)

தமிழைப்போல் வேறு சில மொழிகளையும் செம்மொழிப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது அல்லவா?

ஏதோ ஒரு கட்டாயச் சூழலில் தமிழுக்கான செம்மொழி ஏற்பை இந்திய அரசு வழங்கிவிட்டதே தவிர அதற்கு முழு உடன்பாடு இல்லை என்பதுபோல் நடந்து கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியினரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தத்தம் மொழிக்குச் செம்மொழி ஏற்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆழமும் அகலமும் நுண்மையும் திண்மையும் தொன்மையும் பழமையும் புதுமையும் இளமையும் வளமையும்  எனப் பெரிதுபட்ட இலக்கியப் பரப்பைக் கொண்ட தமிழின் சிறப்பை நாம் அவர்களுக்கு உணர்த்தத்  தவறிவிட்டோம். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தைய அல்லது கிறித்துவக் காலத்திற்கு முந்தைய. இலக்கியச் சிறப்பு உடைய மொழிகளை மட்டும் கருதிப் பார்ப்போம் என்று அறிவிக்காமல் 1000 ஆண்டுப் பழமையான மொழி என வரையறுத்துப் பின்னர் 2000 ஆண்டுகள் தொன்மை என்ற கால அளவினை வலியுறுத்திய நமது போராட்டங்களுக்குப் பின் 1500 ஆண்டுகள் தொன்மையான மொழி எனக் காலவரையறை செய்தனர். எனவே,   தெலுங்கு, கன்னடம் முதலான மொழியினர் உடனே செம்மொழி ஏற்பினை வேண்டினர். இதனை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே வழக்கு முடிவிற்கு உட்பட்டு எனத் தெரிவித்து தெலுங்கு, கன்னட மொழிகளைச் செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். எனவே, செம்மொழிப் பட்டியல் என்ற பெயரில் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளையும் சேர்த்து, ஒப்புக்குச் சப்பாணியாக நிதியுதவி வழங்குவதே இந்திய அரசின் நோக்கமாக உள்ளது.

? நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

# உலக மொழிகளில் மூத்த மொழியாகவும் பிற மொழிகளுக்குத் தாயாகவும் விளங்கும் செந்தமிழை ஒவ்வொரு மொழியினரும் தத்தம் தாய்இன மொழி எனப் போற்றும் வகையில் நமது பரப்புரை அமைய வேண்டும். எனவே, வெறும் செம்மொழி அறிந்தேற்பை வழங்கிவிட்டதுடன் தன் கடமை முடிந்துவிட்டது என இந்திய அரசு கருதாமல் இந்தி, சமசுகிருதம் ஆகிய மொழிகளுக்குச் செலவழிப்பதற்குச் சமமான தொகையையாவது தமிழ் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் என ஒதுக்கிப் பெருமை கொள்ள வேண்டும். தமிழக அரசும்  செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தியது போல் தமிழே தமிழ்நாட்டில் தலைமையிடம் பெறவும் தமிழரே முதன்மை பெறவும் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசு அடிமையாக இருப்பதாகவே மாண்புமிகு முதல்வர் உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள். எனவே, அவரே அடிமைத்தளையை அறுத்தெறிய ஆவன செய்ய வேண்டும். படைப்பாளர்களும் ஊடகங்களும் நல்ல தமிழைக் கையாளவும் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கவும் மட்டுமே துணை நிற்கும் வகையில் நமது மொழிக் கொள்கை அமைதல் வேண்டும். வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பிற்கான அடிப்படை மொழியாகத் தமிழை மாற்ற வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகா; நனவாக்கித் தீருவோம்   என இந்திய, தமிழக அரசுகளின் நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாட்டில் தமிழ்ச் சூழலை உருவாக்குவதை ஒரு கண்ணாகவும் உலகநாடுகளில் தமிழைப் பரப்புவதை மற்றொரு கண்ணாகவும் கொண்டு தமிழக அரசும் இந்திய அரசும் செயல்படவேண்டும். இவ்வாறான செம்மொழி எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தினக்குரலுக்கும் தினக்குரல் வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages