நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: இலக்குவனார் திருவள்ளுவன்

16 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 28, 2026, 3:40:07 PM (5 days ago) Jan 28
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி)

பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

நாலடியார் 216

கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும்.

பதவுரை : கடையாயார் = கடைநிலையினர்;  நட்பில் = தோழமை உணர்வில்;  கமுகனையர் = கமுகு மரம்போன்ற தன்மையர்;  ஏனை = பிறர்;  இடையாயார் = இடைப்பட்ட நிலையினர்; தெங்கின் = தென்னைமரம் போன்ற;  அனையர் = தன்மையர்; தலையாயார் = முதன்மை நிலையினர்;  எண்ணரும் = எண்ணிப் பார்க்க இயலாத மதிப்பு மிக்க; பெண்ணை = பனைமரம்; போன்று = போன்ற;  இட்டஞான்று = விதையிட்ட பொழுது; இட்டதே= நீரிட்டதே போதும் எனக் கருதும்;   தொன்மை = பழைமைப் பண்புகள்; உடையார் = உடையவர்கள்;  தொடர்பு = நட்பு .

பாக்குமரம் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே பயன்தரும். அதுபோல், தொடர்ந்து உதவினால் மட்டுமே உதவுபவர் கடைப்பட்ட நண்பர்.

தென்னைமரத்திற்கு இடையிடையே  தண்ணீர் பாய்ச்சினாலும் பயன்தரும். அதுபோன்று உதவம் பொழுது மட்டும் நட்புத்தன்மையைக் கொள்பவர் இடைப்பட்ட நிலை நட்பினர்.

ஊன்றியபோது மட்டும் நீரூற்றிப் பின்னர் தண்ணீர் பாய்ச்சாமல் வளர்ந்து பயன்தருவது பனைமரம். பனைமரம் போன்ற தன்மையர் தலையாய நண்பர்.

அஃதாவது தொடர்ந்து உதவினால்தான் பயன்தரும் கமுகு மரம்போன்றவர் கீழோர். இடையிடையே கவனித்தால்தான் பயன்தரும் தென்னை மரம். இதுபோன்ற தன்மையர் இடைப்பட்டோர். விதையிட்டபொழுது மட்டும் தண்ணீர் ஊற்றினாலும் எப்போதும் பயன்தருவது பனை மரம். இத்தகைய தன்மையர் உயர்ந்த நட்பினர். கமுகிற்கும் தென்னைக்கும் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டால் அவற்றின் பயன்கெடும். பனைமரம் அத்தன்மையதல்லை. விதையிட்ட பொழுது நீர் ஊற்றிப் பின்னர் கவனிக்காமல் விட்டாலும் பயன் தரும் சிறப்பிற்குரியது. எனவே, தொடர்ந்து உதவாவிட்டாலும் நட்புணர்வுடன் இருப்போரிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். நாமும் பனைமரம் போன்ற தன்மையராய் விளங்குதல் வேண்டும்.

பனை மரத்திற்கு விதை ஊன்றியபின் அல்லது பிறகு நீரூற்றல் முதலிய எதுவும செய்யாமையின்,  ‘இட்ட ஞான்றிட்டதே’ எனக் கூறப்பட்டது.

தொன்மை யுடையார் என்பதே பழைமை எனத் திருவள்ளுவரால் ஓர அதிகாரம்(எண் 81) வைக்கப்பெற்று உரைக்கபபட்டுள்ளது.

நாம் பனைமரம்போன்ற தலையாய தன்மையராய் நட்பு உணர்வுடன் திகழ்வோம்! அத்தகையோர் தொடர்பையே கைக்கொள்வோம்!

 இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Jan 28, 2026, 5:42:32 PM (5 days ago) Jan 28
to மின்தமிழ்

"பனைமரம் தென்னை மரம் வாழை மரம்"...
குலவிளக்கு (1969)
பாடல் : கண்ணதாசன்
 https://www.youtube.com/watch?v=iln4Mz7QMJ4

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 30, 2026, 8:06:05 AM (4 days ago) Jan 30
to மின்தமிழ்
நன்றி அம்மா 

அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/81042602-a84c-4d49-b99f-a16c28e3d129n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages