நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 20, 2025, 12:27:16 AM (yesterday) Sep 20
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      20 September 2025      கரமுதல


(நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி)

நாலடி நல்கும் நன்னெறி 14 :

நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்

கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

(நாலடியார் பாடல் எண் 124)

பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும் இயல்பையும் காட்டுகிறது. போல்வது ஒப்பில் போலி ; எரிப்ப சுட்டு- உடம்பு வேகும்படி சுட்டு;  எவ்வ நோய்-துன்பந் தரும் நோய்; பரப்பக் கொடுவினைய ராகுவர்-மிகக் கொடிய தீ வினைகளைச் செய்பவராவர்; கோடாரும்- நடுவு நிலைமையுடையவரும்;  கோடி தவறி

  கடுவினைய ராகியார்ச் சார்ந்து – பாவச்செயல்களை யுடையவரைச் சேர்வராயின்; கோடிக் கடுவினைய- மிகப் பலவாகிய பாவச்செயல்களை யுடையவர் என்றும் பொருள் கொள்வர்.

பொருள்:

நெய் சுவையானது; ஊட்டம் தருவது; வலிமை தருவது. ஆனால் நெருப்பிலிட்டுக் காய்ச்சும் பொழுது நெய் தெறித்து உடலில் பட்டால் என்னாகும்? பெருந்துன்பம் உண்டாக்கும். அல்லது துன்பம் தரும் நோயை உண்டாக்கும். ஊட்டம் தரும் நெய்போன்ற எப்பொருளும் தீயின்பாற்பட்டால் துன்பமே விளைவிக்கும். அதுபோல் நெறிதவறாத நல்லோரும் தீவினையோர் பக்கம் சேர்ந்தால் தாமும் தீயராய் மாறிப் பிறருக்குத் துன்பம் விளைவிப்பர். ஆதலின் தீவினை புரிய – தீ வினையோர் உடன் சேர – அஞ்ச வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.   (௨௱௨ – 202) என்னும் குறள் மூலம்

தீயவை அவற்றைச் செய்யபவருக்கும் அதனால் பா்திப்புறும் பிறருக்கும் தீமைகளையே விளைவித்தலால் தீயவற்றைத் தீயினும் கொடியனவாக அஞ்சி விலக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

.நாலடியாருக்கு முன்னதாகவே திருவள்ளுவர் திருக்குறளில் தீ வினை யச்சம் குறித்துத் தனியதிகாரமமே வைத்துள்ளார். தீ நட்பு, கூடா நட்பு,கூடா ஒழுக்கம், பிறன் மனை விழையாமை முதலிய பலவும் தீ வினை அச்சத்தை வலியுறுத்துவனவே.

நல்லவர்களும் தீயோரின் பக்கம் சேர்ந்தால் தீவினைக்குத் துணைபுரிவோர் ஆவர். தீய செயல்கள் குறித்து அஞ்சி விலக எண்ணுபவர்கள் தீயோர் பக்கமும் சேரக்கூடாது.

எனவேதான் இடைக்கால ஒளவையாரும்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.

என்றார்.

நாம் தீயோர் பக்கம் சேராமல்

தீயன விளைவிக்காமல் இருப்போம்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்
--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages