1. உகிர் = உக் + இர். புறமெய் + இருத்தல்.
புறத்தில் மெய்யாய் இருப்பது, நகம்.
2. உகிர் = உகு + இர். உகுப்பதாய் இருத்தல், நகம்.
உகிர்பறவை = நீண்ட நகங்களைக் கொண்ட வௌவால்.
_____________________________________________________
புல்வாய், இரலை, கலை
புல்வாய் = புல் + வாய். புல்லையே பெரும்பாலும் தின்பது. சில மான் வகைகள், இலை, தழைகளை உண்ணும். 'புல்' என்பதை 'சிறிய' என பொருள் கொண்டால், 'சிறிய வாய்' உடையது எனவும் பொருள் கொள்ளலாம்.
இரலை = இரு + அலை. இரண்டு அலையலையாக நீளும் கொம்புகளை உடைய ஆண் மான்.
1. கலை = க் + அலை. மெய் + மேலும் கீழுமாக அலைபோல். உடலே அலைபோல துள்ளும் பெண்மான்.
2. கலை = கல் + ஐ. அசையாமை + பண்புப் பெயர் விகுதி. அசையாமல் நிற்பது, கலைமான்.
இவ்வாறு, எச்சொல்லுக்கும் இணையான அகராதிப் பொருளை நினைவில் கொள்ளாமல், சொல்லின் பொருட்காரணம் அறிந்து கற்றால், சொல்லும் பொருளும் என்றும் மறவாது.
_____________________________________________________
உமண், உப்பு, உவர்
உமண் = உ + மண். புறம் + மண். நிலத்திற்கு புறம், கடல். கடலின் மண். கடல் நீர் ஆவியாகி மீதம் மண் ஆதல், உப்பு.
உப்பு = உ + ப் + பு. கடல் + 'அதன்' எனும் பொருளுடைய 'ப்' எனும் ஒற்றெழுத்து + கொண்ட வெளிப்பாடு.
உவர் = உ + அர். கடல் + பிரிதல் / இருத்தல். கடல் நீரில் இருந்து பிரிவது. கடல் தன்மையாய், உவர்ப்பாய் இருப்பது.
_____________________________________________________
பாதிரி
1. பாதிரி : பாதி + இர் + இ. பாதியாய் + இருப்பது. பாதியாய் இருப்பது. நிமிர்ந்து இல்லாமல் தொங்கி இருப்பது. பாதி நன்கு மலர்ந்து இருப்பது. ஒரு வகையான மலர்.
2. 'பாதிரி' அம்பின் வடிவில் இருப்பதால், 'அம்பு' எனும் பெயரும்,
3. ஒரு படையைப்போல் நெருக்கமாக பூத்து இருப்பதால், 'அம்புவாகினி' ( அம்பு + வாகினி) எனும் பெயரும்,
4. வலியைப் போக்குவதால், பாடலம் ( பாடு + அல் + அம்) எனும் பெயரும்,
5. சிறிய காம்பினைக் கொண்டதால், 'புன்காலி' (புல் + காலி) எனும் பெயரையும் கொள்கிறது.
_____________________________________________________
குளிறு
குளிறு = க் + உள் + இறு. மெய் + உள்ளே + இறுக்கமாய் இருத்தல். குழிக்குள் ஒடுங்கி இருப்பது, நண்டு.
_____________________________________________________
ஆலல்
ஆலல் = ஆல் + அல். ஆலமரம் போல் + தொழிற் பெயர் விகுதி. ஆல்போல் பரந்து விரிதல். விரிந்து அதிர்தல். தோகை விரித்தாடும் மயில்.
'ஆலல் ஆலின'. மயில்கள் தோகை விரித்தாடின.
_____________________________________________________
பாலக்குருவி
பாலக்குருவி = பால் + அ + குருவி. ('க்' எனும் மெய், புணர்ச்சியில் மிகும்)
பால் = ப் + ஆல். வான் + ஆதல் மேலும் கீழுமாய்.
அ = தன்மையது.
குருவி = க் + உரு + வி. மெய்யின் சிறிய உருவாய், விரைவாய் இருத்தல்.
பாலக்குருவி = வானத்தில் சுழன்று விரைந்து கீழே இறங்குவதும் உயர்வதுமான, சிறிய விரைவான பறவை.
வானில், சுழன்று விரைவாக கீழே விழுவதுபோல் வந்து, மீண்டும் மேலே உயர்ந்து பறந்து தன்னுடைய இணையைக் கவரும் பண்புடையது.
தான் பிடித்த இரையை, மேலே தூக்கிப் போட்டு மீண்டும் பிடித்து உண்ணும்.
இப்பறவையைக் கண்டால் நல்ல சகுனம் என்பர்.
இதற்கு, பனங்காடை என்றோர் பெயருண்டு. ஏன்? பனம்பழத்தின் வெளிப்புறம் போன்று, நீலநிற கொண்டையும், வாலும், இறகும் இருக்கும். பனம்பழத்தின் உட்புறம் போன்று, பழுப்பு நிற கழுத்தும், உடலின் அடிப்புறமும் இருக்கும்!
அல்லது, இது பனைமரத்தில் கூடுகட்டி வாழ்கிறதா? தெரிந்தவர் தெளிவிக்கவும்.
_____________________________________________________