என்ன அருமையான கட்டுரையுடன் மீண்டும் வந்துள்ளீர்கள்!!
குமரன், நீங்கள் நன்கு அறிந்தது போல், வலைப்பதிவு என்பது அளப்பரிய
எழுத்துச் சுதந்திரத்தின் குறியீடு.
முன்னெப்போதுமில்லாத அளவில் 'எழுத்துத்தமிழ்' மின்வெளியில் உருவாகி
வளர்ந்திருக்கிறது. வலைப்பதிவின் எளிமையும் வீச்சுமே அதற்குக்காரணம்.
நான் அறிந்து, உற்சாகப்படுத்தி எத்தனை எழுத்தாளர்கள் மின்வெளியில்
உருவாகியுள்ளனர்! இது வரவு!
செலவுக்கணக்கை நீங்கள் காட்டியுள்ளீர்கள். சுதந்திரம் என்பது கவனமுடன்
கையாள வேண்டிய உரிமை. அது பொறுப்பை வளர்க்க உதவும் சாதனம். மின்வெளி
எழுத்தர்கள் பொறுப்பைக் கற்றுக்கொள்வர் என்று நம்புவோம்.
என்னைப் போன்ற சிலருக்கு வலைப்பதிவு ஓர் sounding board. எனது உரத்த
சிந்தனைகளின் வெள்ளோட்ட வெளி. ஓர் பள்ளியறை. பின்னூட்டத்தில் என் தவறுகள்
சுட்டிக்காட்டப்பட்டால் நான் கற்றுக்கொள்வதுடன், நன்றியும் காட்டுவேன்.
மின்வெளி ஓர் தத்துவ குருகுலம். இங்கு 'அகப்பாடு' (ஈகோ) குறைவாய் உள்ளோரே
காலத்தை வென்று தழைக்க முடியும். அதிக அகப்பாட்டு உள்ளோர் முட்டி, மோதி,
மனமுடைந்து அகல வேண்டியதுதான். 'நான்' எனும் அகப்பாடு அகன்று, கற்றது
கைமண் அளவு என்று தெள்ளத்தெளிவாய் காட்டும் உத்தம குருகுலம் மின்வெளி.
மின்வெளி கணக்கு கொண்டு நடப்பதால் கணியன் (பூங்குன்)வெளியாகிறது...
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
கண்ணன்
கண்ணன் ஐயா.
இன்னும் பாரி/கபிலர் கதையை நிறைவு செய்யவில்லை. வேலைப்பளுவால் அடுத்த பகுதிகளை இன்னும் எழுத முடியாமல் இருக்கிறது. விரைவில் எழுதி இடுகிறேன்.
நன்றிகள்.
அன்பன்,
குமரன்.