அண்மையில் நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்' எனும் நூலில் முதலாம்
இராஜேந்திரனைப் பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். ஆனால்
முதலாம் இராஜேந்திரன் எந்த வயதில் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார், எந்த
வயதில் உயிர் நீத்தார் போன்ற குறிப்புகள் அங்கு இல்லாமல் இருந்தது.
அச்சோழ மன்னன் (1012-1044) 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக மட்டுமே
குறிப்புகள் இருந்தன.
மின்தமிழ் அன்பர்கள் பல நூல்களை ஆய்ந்திருப்பீர்கள். முதலாம்
இராஜேந்திரன் முடிசூட்டிக் கொண்ட வயதும் உயிர்நீத்த வயதும் அறியத்
தந்தீர்களானால் எனக்கு மிகப் பயனாக இருக்கும்.
நன்றி.
கி.சதீசு குமார்
http://olaichuvadi.blogspot.com/
958 சுந்தர சோழர் அரியணை ஏறுகிறார்.
959 சேவூர் போர் - ஆதித்ய கரிகாலன் சிங்கக்குட்டி போல பாண்டிய படைகளுடன் போரிட்டது
964 ராஜேந்திர சோழர் பிறந்த ஆண்டாக இருக்கலாம்.
969 ஆதித்ய கரிகாலன் கொலை
970 உத்தம சோழர் அரியணை ஏறுவது
973 சுந்தர சோழர் மறைவு
985 அருள் மொழி வர்மர் அரியணை ( உத்தம சோழருடன் மூன்று ஆண்டுகள் சேர்ந்து
என்று ஒரு தகவல் )ராஜ ராஜர் என்ற பெயர் பெறுதல்
987 உத்தம சோழர் மறைவு / அல்லது பதவி நீத்தல்
993 ராஜ ராஜர் இலங்கை படை எடுப்பு
994 ராஜ ராஜர் சேர படை எடுப்பு ( கண்டலூர் சாலை ??)
???? மாலத்தீவு படை எடுப்பு
999 கங்கபாடி , நுரம்பபாடி படை எடுப்பு ( தற்போதைய கர்நாடகம் )
999 வெங்கி படைஎடுப்பு
1001 செம்பியன் மாதேவி மறைவு ( உத்தம சோழர் தாய் - பல கோவில்களை
கற்றளியாக மாற்றிய அற்புத அம்மை )
1003 சாளுக்ய ரட்டபாடி படை எடுப்பு ( ராஜேந்திரன் தலைமையில் )
1007 ஹோட்டுர் படை எடுப்பு ( ஹோட்டுர் கல்வெட்டு - ராஜேந்திரனின்
தலைமையில் - கொடூரமான காரியங்களை செய்ததாக கல்வெட்டு )
1008 உதகை படை எடுப்பு ( சேர போர் )
1010 பெரிய கோவில் பனி நிறைவு
1012 ராஜேந்திரர் அரியணை ஏறுவது - தன் தந்தையுடன் சேர்த்து ஆட்சி புரிதல்
1014 ராஜேந்திரர் அரசர் - ராஜ ராஜர் மறைவு ?? ( இருபத்தி ஒன்பது ஆட்சி ஆண்டுகள் )
1015 முதல் சோழ பிரதிநிதி கூட்டம் சீன சங் அரசவைக்கு விஜயம்
1018 ராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து ஆட்சி புரிதல் , இலங்கை படை எடுப்பு
1019 கங்கை நோக்கி
1020 இலங்கை போரில் வெற்றி - பாண்டிய குல ஹாரம் மீட்பு, இலங்கை அரசன்
மகிந்தன் மற்றும் அவன் மனைவி சிறை பிடிப்பு ( மதுரையில் பன்னிரண்டு
ஆண்டுகள் சிறை வைப்பு )
1021 மேலை சாளுக்ய படை எடுப்பு
1025 ஸ்ரீ விஜயம், கடாரம் கடல் வழி படை எடுப்பு
1031-௩௫ மேலை சாளுக்ய போர் வெற்றி, வெங்கி , களிடண்டி போர்
1033 இரண்டாவது குழ சீன சென்றடைகிறது . இதனுடன் ராஜேந்திர சோழர் போர்கள்
முடிவு - கங்கை கொண்ட சோழ புறத்தில் இருந்து செயல் படுத்தல்
1035 கங்கை கொண்ட சோழ புறம் கோவில் நிறைவு பெறுதல்
1044 ராஜேந்திர சோழர் மறைவு
i have factored the ages / dob - based on reasoning. since Rajathiraja
ascended throne in 1018 - you can back work what would have been his
age and his fathers age and arrive at the dates above.
rgds
vj
நான் இராஜேந்திரனின் வயதைக் கேட்டதற்கு காரணம், அண்மையில் மன்னன் மகள்
நாவலில் கீழ்கண்டவாறு படித்தேன்..
மன்னன் மகள்
அத்தியாயம் 35
பக்கம் 354
உருவிய வாள்கள், உரத்த குரல்கள்
// வந்தியதேவர் வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தாண்டி வருஷம்
பத்தாகிவிட்டாலும், இடைவிடாத போர்ப்பயிற்சியின் காரணமாகவும், உள்ளூர
அவருக்கு யாரிடமும் இருந்த அன்பின் காரணமாகவும், முகத்தில் முதுமை
அதிகமாகத் தட்டவில்லை//
இதில் அவருக்கு அகவை 60 என குறிப்பிடுகிறார் சாண்டில்யன்.
முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறிய சமயம் அவருக்கு அகவை 48. மன்னன் மகளில்
இராசராசர் உயிரோடில்லை. இராஜேந்திரன் அரியணையேறிய மூன்றாம் ஆண்டில்
இராசராசர் இறந்ததாகக் கணிக்கப்படுகிறது. அப்பொழுது இராஜேந்திரனுக்கு அகவை
ஐம்பதாக இருக்கலாம்..
இராசராசரின் தமக்கையை மணம் புரிந்த வந்தியதேவரின் அகவை 60, அதாவது தன்
மாமாவின் வயது தன்னைவிட 10 வயதுதான் அதிகம் என்று கூறுவது பொறுத்தமாக
இல்லை.
எனவே, சாண்டில்யன் தன் நாவலில் வந்தியதேவரின் வயதை தவறாகக்
குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படி பார்த்தால்,
// வந்தியதேவர் வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தாண்டி வருஷம்
பத்தாகிவிட்டாலும், இடைவிடாத போர்ப்பயிற்சியின் காரணமாகவும், உள்ளூர
அவருக்கு யாரிடமும் இருந்த அன்பின் காரணமாகவும், முகத்தில் முதுமை
அதிகமாகத் தட்டவில்லை//
வந்தியதேவருக்கு அகவை எழுபதாக இருக்குமோ..?
மனிதன் தன் மணவாழ்க்கையை ஆயுளின் பாதியைக் கடந்துவிட்டதன் நினைவாக
அறுபதாம் கல்யாணமாகக் கொண்டாடுகிறார்களோ?
அன்புடன்,
History is very much diff from historic fiction. If you want to pick
holes - you can pick many even in ponniyin selvan. Just work out the
age of Arul mozhi / rajendra - most probably Rajendra was born before
the assasination of adithya karikaala.
rgds
vj
2008/12/12 ஓலைச்சுவடி <Sathi...@gmail.com>:
--
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man
இருப்பினும் ஒரு மனிதனின் பாதி வயது என்று எதைக் கூறுகிறார்கள். 60 வயதை
பாதி வயது பூர்த்தி அடைந்ததாகக் கூறுவோரும் உளர். இந்த சந்தேகத்தை
யாராவது தீர்த்து வைக்க முடியுமா?
அப்படி பார்த்தால்,
--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com
அட! அப்படியா!! அப்புறம் என்ன 60 வயசு கிழடு என்பது? 40 வயதில் நம்ம ஊர்
பெண் கிழவி என அழைக்கப்படுகிறாள். இது கொடுமை!
ஜெர்மனியில் 40 வயதுக்காரர் இளைஞர். மூத்தோர் என்றால் 80க்கு மேலே என்று பொருள்.
அப்படியெனில் ஜோதிஷ முறைப்படி இராமானுஜர் ஒருவர்தான் 120 கணக்கைத்
தொட்டவர்! ஆச்சர்யம்!! ஆதிசேஷன் ஆச்சே!!
க.>
--~--~---------~--~----~------------~-------~--~----~
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---