சங்கத்தமிழ் நாள்காட்டி:சங்க இலக்கியப்பாடல்கள்-விளக்கங்கள் ஓவியங்களுடன்

50 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 31, 2025, 9:03:32 PM (6 days ago) Oct 31
to மின்தமிழ்

Screenshot 2025-11-01.png

மெலியும் என் நெஞ்சு

செவ்வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெருவரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே! (குறுந். 187)
          கபிலர்

பொருள்:
தோழி! சிவந்த மலைச் சாரலில் வருடை மான் குட்டி,
தன் தாய்மடியில் பாலை வயிறு நிறையக் குடித்துவிட்டு
மலையின் நிழலில் துள்ளி விளையாடும் நாட்டிற்குத் தலைவன்,
மலையை விடவும் வலிமையானவன் என்று கருதாமல்
என்னுடைய மனம், அவனை எண்ணி எண்ணி மெலிகிறது.

The man from the country-where a mountain goat kid
Drinks its mother's abundant, sweet milk to the full,
And romps around in the steep mountain's shade-
Is tougher than rock, my friend.
My heart is suffering,
Not considering that he is strong.

தேமொழி

unread,
Nov 1, 2025, 11:32:17 PM (4 days ago) Nov 1
to மின்தமிழ்
Screenshot 2025-11-02.png 

விரைந்து செலுத்துக!

இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே! (குறுந். 189)
          மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

பொருள்:
பாகனே! இன்று புறப்படுவோம். நாளைக்கு நமது பணியை நிறைவு செய்து வருவோம்.
குன்றில் விழும் அருவியைப் போல வெண் தகடுகள் பதிக்கப்பட்ட தேர் செல்லும்போது,
அதன் சக்கரங்கள், பயிர்களைத் துண்டாக்கும் விரைவுடன்
காற்றைப் போல் மாலையில் திரும்பி வந்து
தலைவியுடன் மகிழ்ந்து இருப்போம்.

Let us leave today and return tomorrow riding the white chariot,
Its wheels splendid and whirling as fast as the wind,
So that I can reach home by evening,
To embrace the chest of the young woman
And rejoice in her company.

தேமொழி

unread,
Nov 2, 2025, 9:07:15 PM (4 days ago) Nov 2
to மின்தமிழ்
Screenshot 2025-11-03.jpg

அன்பு அவ்வளவுதானா?

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம் பூங்கட்டி என்றனிர்! இனியே,
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர்!
ஐய! அற்றால் அன்பின் பாலே! (குறுந். 196)
        மிளைக் கந்தனார்

பொருள்:
தலைவனே! என் தோழி முன்பு உங்களுக்கு வேப்பங்காயைக் கொடுத்தாலும்,
வெல்லக்கட்டி என்று சொல்லி மகிழ்ந்து உண்டீர். இப்போதோ,
பாரியின் பறம்பு மலையின் இனிய குளிர்ந்த சுனை நீரைக் கொடுத்தாலும்
சூடாக உள்ளது, உவர்க்கிறது என்கிறீர்.
உம்முடைய அன்பு அவ்வளவு தானா?

When my friend gave you bitter neem fruit then
You said it was sweet like jaggery;
Now, even if she gives you cool water
That's sweet like spring waters from Paari's hills
It's hot and salty you say;
My lord! What happened to your love?
 

K. Jeyapalan

unread,
Nov 3, 2025, 8:40:25 AM (3 days ago) Nov 3
to மின்தமிழ்
வணக்கம்,

ஒரு சந்தேகம்.

//இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,//

இதில் "நாளைக்" என்பது சரியல்ல என்பது என் எண்ணம். கணினியில் எழுதிய போது தவறு நேர்ந்து இருக்கலாமா?

//இன்றே சென்று வருதும்; நாளை
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,//

தேமொழி

unread,
Nov 3, 2025, 7:14:52 PM (3 days ago) Nov 3
to மின்தமிழ்
வணக்கம் 

tamilvu.org தளத்தில் 

//இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,//

என்றுதான் உள்ளது . 

tamilvu.jpg

நன்றி 

தேமொழி

unread,
Nov 3, 2025, 7:24:02 PM (3 days ago) Nov 3
to மின்தமிழ்

Screenshot 2025-11-04.jpg 
அவளையே நினைத்திருந்தேன்!

... நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச்சினை வெட்சித்
தளை அவிழ் பல்போது கமழும்
மை இருங்கூந்தல் மடந்தை நட்பே! (குறுந். 209:4-7)
        பாலை பாடிய பெருங்கடுங்கோ

பொருள்:
பொருள்தேடிச் செல்லும் வழியில், வேறு ஒன்றையும் நான் நினைக்கவில்லை.
காட்டு வழியில் தழைத்து வளர்ந்துள்ள வெட்சியின் பூக்களைக் காணும்போது
தலைவியின் நீண்ட மை போன்ற கூந்தலின் மணம் எனக்குத் தோன்ற அவளிடம் கொண்ட
காதலை எண்ணியபடியே சென்றேன்.

As I pass through the wilderness in search of wealth,
In the blooming branches of vetchi,
Buds unfurl their petals aromatically,
Reminding me of my love for the dark haired lover.

Jeyapal K

unread,
Nov 4, 2025, 7:20:52 AM (2 days ago) Nov 4
to mint...@googlegroups.com
வலிமிகும்/மிகா இடங்கள் யோசிக்க வைக்கின்றன. 

நன்றி.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/hdFmIugV5qg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/315cecda-bde7-4a9d-99bc-c086baefbda9n%40googlegroups.com.

தேமொழி

unread,
Nov 4, 2025, 10:29:09 PM (2 days ago) Nov 4
to மின்தமிழ்
Screenshot 2025-11-05.jpg 

காக்கைக்கு உணவு

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே! (குறுந். 210)
        காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
உறுதியான தோளினைக் கொண்டவன் கண்டீரக் கோப்பெரு நள்ளி.
அவனது காட்டில் இடையர்க்கு உரிய பல பசுக்கள் இருந்தன. அவற்றிடமிருந்து பெற்ற நெய்யை,
வெண்ணெல் அரிசியால் சமைக்கப்பட்ட சோற்றுடன் கலந்து,
ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்தி நின்றாலும்
தலைவன் வருகையை அறிவிப்பது போல்
கரைந்த காக்கைக்குப் போதிய பலி ஆகாது.

My friend, we are obliged to the crow
That cawed and announced his arrival
And lifted the misery off your drooping shoulders.
Hence, any amount of food that we offer to the crow
Will only be a small reward!

தேமொழி

unread,
Nov 5, 2025, 8:11:59 PM (13 hours ago) Nov 5
to மின்தமிழ்
Screenshot 2025-11-06.jpg 
சேரலாதன் கோட்டையும் அகழியும்

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி,
வானுற ஓங்கிய வளைந்துசெய்புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி,
நின்னின் தந்த மன்எயில்! (பதிற்று. 53: 6-11)

        காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
உனது பகைவர்களைக் களத்தில் பொருது நீ வென்று கைப்பற்றிய கோட்டையில்
பகைவனின் உருவத்தைப் பாவை போல் அமைத்து அதற்குச்
சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிலம்பையும் தழை மாலையையும் அணிவித்து வாயிலில் வைத்திருப்பர். எந்திரங்களைக் கொண்டதும் தானே எய்யும் அம்புகளைக் கொண்டதும் அந்தக் கோட்டை வாயில்.
கொல்லும் தன்மையுடைய முதலைகளைக் கொண்டது அதன் ஆழமான அகழி.
வானத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்தும் வளைந்தும் அமைக்கப்பட்டது அதன் மதில்.

The fortress that you seized has
Curved and decorated walls reaching to the sky.
Guarded by murderous crocodiles in moats,
It has arrow-firing implements in its gates
From where volleys of arrows are launched.

Reply all
Reply to author
Forward
0 new messages