வீடுகளில் கொடி ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

4 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Aug 9, 2022, 5:52:28 AM8/9/22
to


வீடுகளில் கொடி ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 

 

 பொதுமக்களிடம் 75வது சுதந்திர தின விழா சிறப்புகளை விளக்கிய இளம் வயது மாணவர்கள் 

 

தேவகோட்டை - சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பொதுமக்களின் வீடுகளில் கொடி ஏற்றி கொண்டாட பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

                                        பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துலெட்சுமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.மாணவர்கள் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வீடுகளில் கொடி ஏற்றுதல் தொடர்பாக பாடல்களை பாடியும் ,பேசியும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.மாணவர்களின் புதிய விழிப்புணர்வு முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பொதுமக்களின் வீடுகளில் கொடி ஏற்றி கொண்டாட பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

 

வீடியோ :  

 https://www.youtube.com/watch?v=pS-5Xj-E_bU

 

 


IMG_0322.JPG
IMG_0317.JPG
IMG_0315.JPG
IMG_0330.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages