என் குழப்பத்தை நீக்குங்கள்

53 views
Skip to first unread message

Satish Kumar Dogra

unread,
Sep 30, 2018, 3:17:27 AM9/30/18
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தமிழ் அறிஞரிடம் "ஒரு" மற்றும்  "ஓர்" ஆகிய வடிவங்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்று கேட்டேன். அவர் ஆங்கிலத்தில் a மற்றும் an போல்தான் என்றார். அதாவது, vowelக்கு முன்  "ஓர்" என்பதும், consonantக்கு முன் "ஒரு" என்பதும் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலிருந்து அந்த விதிமுறையை அணுசரித்து வருகிறேன். வேறு யாராவது இதற்கு மாற்றாகப் பயன்படுத்தினால், இதை ஒரு பிழையாக எடுத்துக் கொள்வேன். 

ஆனால், தமிழ் மொழி மீது ஆளுமை வைத்திருப்பவர்கள் சிலர் இந்த விதிமுறையைத் தாண்டும்போது மனம் குழம்புகிறது. எடுத்துக் காட்டாக, திருமதி தேமொழி சுட்டியிருக்கும் பறநானூற்றுக் கட்டுரையில் இவ்வாறு உள்ளது "பரவலாக உள்ள ஓர் கருத்து". இதை எவ்வாறு புரிந்து கொள்வது?

============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

Suba

unread,
Sep 30, 2018, 3:52:38 AM9/30/18
to மின்தமிழ்
On Sun, Sep 30, 2018 at 9:17 AM Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:
நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தமிழ் அறிஞரிடம் "ஒரு" மற்றும்  "ஓர்" ஆகிய வடிவங்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்று கேட்டேன். அவர் ஆங்கிலத்தில் a மற்றும் an போல்தான் என்றார். அதாவது, vowelக்கு முன்  "ஓர்" என்பதும், consonantக்கு முன் "ஒரு" என்பதும் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலிருந்து அந்த விதிமுறையை அணுசரித்து வருகிறேன். வேறு யாராவது இதற்கு மாற்றாகப் பயன்படுத்தினால், இதை ஒரு பிழையாக எடுத்துக் கொள்வேன். 

ஆனால், தமிழ் மொழி மீது ஆளுமை வைத்திருப்பவர்கள் சிலர் இந்த விதிமுறையைத் தாண்டும்போது மனம் குழம்புகிறது. எடுத்துக் காட்டாக, திருமதி தேமொழி சுட்டியிருக்கும் பறநானூற்றுக் கட்டுரையில் இவ்வாறு உள்ளது "பரவலாக உள்ள ஓர் கருத்து". இதை எவ்வாறு புரிந்து கொள்வது?

நான் தமிழ் படித்தபோது ஆ.கி.பரந்தாமனார் நூலினை  இலக்கணம் கற்க அடிப்படையாக வைத்துக் கொண்டேன்.

எனது புரிதலில் ஓர் என்பது உயிரெழுத்துக்கு முன் வரவேண்டும் என்பது. ஆனாலும் பல வேளைகளில் பழக்கத்தில் வருவதில்லை.

எனது உ.வே.சாவுடன் ஓர் உலா நூலின் பதிவினைத் தொடங்கிய போது ’ஒரு உலா’ என எழுதியிருந்தேன். முனைவர் சந்திரபோஸ் அவர்கள் ஓர் என வரவேண்டும் எனக் குறிப்பிட அப்படி மாற்றி அமைத்தேன்.

சுபா 


 
============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேமொழி

unread,
Sep 30, 2018, 3:56:15 AM9/30/18
to மின்தமிழ்
கீழ்க்காணும் உங்கள் கருத்தில் நான் மாறுபட வேண்டியிருக்கிறது :-)


///
தமிழ் மொழி மீது ஆளுமை வைத்திருப்பவர்கள் சிலர் இந்த விதிமுறையைத் தாண்டும்போது மனம் குழம்புகிறது. எடுத்துக் காட்டாக, திருமதி தேமொழி
///

நீங்கள் கூறும் இலக்கண விதிதான் நானும் பயின்றது.

இருப்பினும் மாறான பயன்பாடுகள் உள்ளதையும் பார்த்துள்ளேன்.

எடுத்துக்காட்டு:
அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே
பாரதி

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ! 
பாரதி

திறந்தேன என்றோர் சொல் வரக்கேட்டான்
பாரதிதாசன் 


நான் "பரவலாக உள்ள ஓர் கருத்து"

என்று எழுதியபொழுது இலக்கணம் என்றெல்லாம் கவனித்து எழுதவில்லை.

அது தாய்மொழியாக இருக்கவும் தானே எழுதும் நிலையில் வந்துவிடுவது.

நான் ஆங்கிலம் எழுதும் பொழுதுதான் முதலில் சிந்தனையில் உருவாக்கி பின்னர் வெளியிடும் நிலை இருக்கும், அதனால் கால இடைவெளியும் இருக்கும்.

தமிழில் அது இருப்பதில்லை.

நானும் சரி/தவறு அறிந்து கொள்ளவே விரும்புகிறேன்.


..... தேமொழி

Satish Kumar Dogra

unread,
Sep 30, 2018, 4:09:12 AM9/30/18
to mint...@googlegroups.com
சுபா அவர்களுக்கும் தேமொழி அவர்களுக்கும் நன்றி.

இன்னும் சில வார்த்தைகள் எழுதுவதில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உதாரணம், சரியாகப் பாதி பேர் கருத்துகள் என்றும் பாதி பேர் குருத்துக்கள் என்றும் எழுதுகிறார்கள். பெரும்பான்மை பக்கம் சாயக் கூட முடியவில்லை. இரண்டும் 50-50


தேமொழி

unread,
Sep 30, 2018, 4:25:55 AM9/30/18
to mintamil

 
மின்னஞ்சலில்  அனுப்பப்பட்ட   மற்றுமோர் எடுத்துகாட்டு:

__________________________

  யான்  இதற்கிலன் ஓர் கைம்மாறே -திருவாசகம் -

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கோயில் திருப்பதிகம் – எட்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.



kanmani tamil

unread,
Sep 30, 2018, 4:27:15 AM9/30/18
to mintamil
கருத்துக்கள் 
கருத்துகள் 
இரண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை.
Free variation 

On Sun, 30 Sep 2018 1:39 pm Satish Kumar Dogra, <dogra...@gmail.com> wrote:
சுபா அவர்களுக்கும் தேமொழி அவர்களுக்கும் நன்றி.

இன்னும் சில வார்த்தைகள் எழுதுவதில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உதாரணம், சரியாகப் பாதி பேர் கருத்துகள் என்றும் பாதி பேர் குருத்துக்கள் என்றும் எழுதுகிறார்கள். பெரும்பான்மை பக்கம் சாயக் கூட முடியவில்லை. இரண்டும் 50-50


kanmani tamil

unread,
Sep 30, 2018, 4:36:04 AM9/30/18
to mintamil
மாணிக்கவாசகர் காலத்திலேயே ஒரு, ஓர்  என்ற இரண்டு சொல் வழக்காறுகளும் கட்டற்று வழங்கின என்று கொள்ள வேண்டும். 
'மாணிக்கவாசகர் தவறு' என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. 
அது படைப்பாளியின் உரிமை.
மொழி இலக்கணம் காலந்தோறும் மாறிக்கொண்டே தான் இருக்கும். இது உயிருள்ள மொழியின் இயல்பு. 
கண்மணி 

nkantan r

unread,
Sep 30, 2018, 4:45:05 AM9/30/18
to மின்தமிழ்
ஓர் ஒரு இப்படி விதி உள்ளதாக தமிழாசிரியர் கூறுவர். அப்படி விதி உள்ள சூத்திரம் ஏதும் இருந்தால் காட்டட்டும்.

இது ஒலி நயத்துக்காக. அவ்வளவே.

'ஒரு' பின் உயிர் நான் பார்த்ததில்லை. 'ஓர்' பின் உயிர்மெய் ஏராளம். சங்கப்பாடல்களில் பல உண்டு.

rnk

nkantan r

unread,
Sep 30, 2018, 4:59:17 AM9/30/18
to மின்தமிழ்
கருத்துக்கள் என்று சொல்வது சிறிது விகாரமாக இருக்கிறது. பலர் சொல்ல, எழுத, கேட்டும்-படித்தும் உள்ளேன். எனக்குப் பழக்கம் இல்லை.

rnk

தேமொழி

unread,
Sep 30, 2018, 5:01:25 AM9/30/18
to மின்தமிழ்
///ஒரு' பின் உயிர் நான் பார்த்ததில்லை. ///

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா 

தேமொழி

unread,
Sep 30, 2018, 5:09:47 AM9/30/18
to மின்தமிழ்

nkantan r

unread,
Sep 30, 2018, 5:27:44 AM9/30/18
to மின்தமிழ்
Tamilconcordance.in வழி பார்த்ததை எழுதினேன். தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள்- இவற்றில் ஓர் பின் உயிர்மெய் ஏராளம், ஏராளம். ஒரு பின் உயிர் காணக்கிடைக்கவில்லை. (நான் பார்த்தவரை)

rnk

Satish Kumar Dogra

unread,
Sep 30, 2018, 5:28:08 AM9/30/18
to mint...@googlegroups.com
ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்கு முன் an பயன்படுத்தக் காரணம் என்னென்றால் இரண்டு உயிரெழுத்துகளை தொடர்ந்து உச்சரிப்பதைவிட அவற்றுக்கு இடையில் ஒரு மெய் எழுத்து சேர்த்துவிட்டால் எளிதாக உச்சரிக்க இயலும். இங்கிலாந்தில் "draw and"யை  "draw r and" உச்சரிப்பார்கள், அதாவது இரண்டு  உயிரெழுத்துகளுக்கும் இடையே " r " சேர்ந்துவிடும். இதற்கு பெயர்  Intrusive r. இதைப் பற்றி ஒரு காணொளியைப் பார்ப்போம் - 


இதே காரணம் தான் உயிரெத்துகளுக்கு முன்  an பயன்படுத்தப்படுவதற்கும் பொருந்தும். இதையே ஒரு - ஓர் பயன்பாட்டிற்கு காரணமாக வைத்துக் கொள்ளலாம். 
 

kanmani tamil

unread,
Sep 30, 2018, 5:48:03 AM9/30/18
to mintamil
இரண்டு உயிர்களுக்கு இடையில் தோன்றுவது உடம்படுமெய். 
"இஈ உயிர் வழி யவ்வும் 
ஏனை உயிர்வழி  வவ்வும் 
ஏமுன் இவ்விருமையும் 
உயிர் வரின் உடம்படுமெய் என்றாகும். "
அவையாவன : யகர உடம்படுமெய்                                                                  வகர உடம்படுமெய் முதலியன.
நமது ஆங்கிலப் பயிற்சியின் காரணமாக ஆங்கில இலக்கண விதிகளை நம்மையறியாமல் தமிழுக்குப் பொருத்திப் பார்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
கண்மணி 

Satish Kumar Dogra

unread,
Sep 30, 2018, 5:49:35 AM9/30/18
to mint...@googlegroups.com
தேமொழி அவர்களே நீங்கள் செய்யுள் பகுதிகளிலிருந்து எடுத்துரைக்கும் எடுத்துக் காட்டுகள் பொருந்துமா என்பது தெரியவில்லை.
தமிழில் நான் இன்னும் ஆழமாக ஆராயவில்லை, ஆனால், ஆங்கிலத்தில் ஒரு என்பது இரண்டு syllables-உம்  ஓர் என்பது ஒரு syllable-உம் கணக்கிடப்படும். ஆகவே, தமிழிலும் அதே முறை என்றால், ஒரு - ஓர் ஆகியன செய்யுலில் வரியின் syllable கணக்கு சரி செய்யப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

கம்பராமாயணத்தில் பல வார்த்தைகளை கவிஞர் இதே syllable கணக்கு படிசெய்வதாகப் பார்க்கிறேன். 


Satish Kumar Dogra

unread,
Sep 30, 2018, 6:12:10 AM9/30/18
to mint...@googlegroups.com
கண்மணி அவர்களே,
நீங்கள் சொல்வது நான் புரிந்து கொள்ள நேரமும், முயற்சியும் தேவை, ஆனால், நீங்கள் சொல்வது தான் சரியான புரிதல் தரும் என்று நம்புகிறேன்.  
நிதானமாக கேட்டுக் கேட்டு நீங்கள் பயன்படுத்திய யகர் லகர் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டபின் இதைத் தெரிந்து கொள்கிறேன். 
நன்றி

தேமொழி

unread,
Sep 30, 2018, 6:12:14 AM9/30/18
to மின்தமிழ்
'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா'  என்பதை எடுத்தக் கொண்டீர்கள்  என்றால் அது பேச்சு வழக்கிலும் உண்டு.

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு  ராஜாவாம் அல்லது  பாட்டியாம்  அல்லது காக்காவாம்   <<    இது போன்று கதை சொல்லப்பட்டு கேட்டு வளர்ந்தவர்களே அனைத்துத் தமிழரும்.

தேமொழி

unread,
Oct 1, 2018, 2:09:55 AM10/1/18
to மின்தமிழ்


On Sunday, September 30, 2018 at 2:27:44 AM UTC-7, nkantan r wrote:
Tamilconcordance.in  வழி பார்த்ததை எழுதினேன். தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள்- இவற்றில் ஓர் பின் உயிர்மெய் ஏராளம், ஏராளம்.

///ஓர் பின் உயிர்மெய் ஏராளம்///

That is almost  about  50%


Source:
 http://tamilconcordance.in/SANGconc-1-oo1.html#%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D
1 X வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்/நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு - முல் 43,44
2 X ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை - மலை 229
3 X வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் - நற் 32/4
4 X எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் - நற் 62/7
5 X உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே - நற் 310/11
6 X ஓர் யான் மன்ற துஞ்சாதேனே - குறு 6/4
7 X ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு - குறு 28/2
8 X பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்/தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு - குறு 246/3,4
9 X செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே - குறு 304/8
10 X காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே - குறு 308/7
11 X செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே - குறு 377/5
12 X யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் - ஐங் 237/2
13 X இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை - பதி 19/24
14 X போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு - பரி 7/56
15 X அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் - பரி 9/75
16 X ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் - பரி 11/93
17 X கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் - பரி 11/100
18 X புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை - பரி 24/51
19 X உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா - பரி 29/1
20 X காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர்/தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக - கலி 36/18,19
21 X தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்/நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் - கலி 37/11,12
22 X தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/13
23 X தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/17
24 X புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/21
25 X புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் - கலி 47/2
26 X வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் - கலி 47/6
27 X நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் - கலி 51/4
28 X ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர்/வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் - கலி 56/6,7
29 X பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர்/நல்கூர்ந்தார் செல்வ மகள் - கலி 56/11,12
30 X இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்/ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் - கலி 65/24,25
31 X ஓர் யாட்டு ஒரு கால் வரவு - கலி 71/26
32 X தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்/புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு - கலி 82/23,24
33 X கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே - கலி 92/2
34 X தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்/பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே - கலி 92/25,26
35 X நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய - கலி 93/34
36 X ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்/வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி - கலி 96/35,36
37 X முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர்/புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் - கலி 97/6,7
38 X முறுவலார்க்கு ஓர் நகை செய்து - கலி 98/38
39 X அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்/வெள் ஏற்று எருத்து அடங்குவான் - கலி 104/18,19
40 X நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் - கலி 105/57
41 X மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர்/ஆயனை அல்லை பிறவோ அமரருள் - கலி 108/11,12
42 X தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் - கலி 108/27
43 X களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ - கலி 108/29
44 X காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை - கலி 108/49
45 X புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்/முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் - கலி 115/4,5
46 X கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர்/மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் - கலி 117/6,7
47 X மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்/போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள - கலி 117/7,8
48 X வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் - கலி 120/17
49 X குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ - கலி 135/8
50 X வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ - கலி 135/11
51 X புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ - கலி 135/14
52 X நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் - கலி 146/15
53 X வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்/தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் - அகம் 7/11,12
54 X நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே - அகம் 20/16
55 X உடை மதில் ஓர் அரண் போல - அகம் 45/18
56 X ஓர் யான் ஆகுவது எவன்-கொல் - அகம் 82/17
57 X ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ - அகம் 86/22
58 X கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே - அகம் 96/10
59 X ஓர் எயில் மன்னன் போல - அகம் 373/18
60 X விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்/தலைப்பாடு அன்று அவன் ஈகை - புறம் 70/17,18
61 X இன்னும் ஓர் யான் அவா அறியேனே - புறம் 137/3
62 X இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்/பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர் - புறம் 140/7,8
63 X பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர்/தேற்றா ஈகையும் உளது-கொல் - புறம் 140/8,9
64 X செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் - புறம் 150/7
65 X பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் - புறம் 152/13
66 X நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்/வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - புறம் 152/23,24
67 X காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்/வாணிக பரிசிலன் அல்லேன் பேணி - புறம் 208/6,7
68 X இன்னது ஓர் காலை நில்லலன் - புறம் 216/11
69 X இனையது ஓர் காலை ஈங்கு வருதல் - புறம் 217/6
70 X இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்/கரம்பை சீறூர் நல்கினன் எனவே - புறம் 285/16,17
71 X சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்/தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே - புறம் 311/6,7
72 X பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர்/தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட - புறம் 320/4,5
73 X ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே - புறம் 338/12
74 X சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்/பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு - புறம் 394/14,15
75 மயில் ஓர் அன்ன சாயல் மாவின் - மது 706
76 வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி - நற் 25/10
77 உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி - நற் 37/2
78 ஓர் எயின் மன்னன் போல - நற் 43/11
79 உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் - நற் 72/3
80 குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன - நற் 271/8
81 மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் - நற் 301/4
82 கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் - நற் 301/5
83 பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்/ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து - நற் 318/6,7
84 பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் - நற் 328/4
85 யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை - குறு 31/4
86 பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே - குறு 31/6
87 அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் - குறு 33/1
88 நீர் ஓர் அன்ன சாயல் - குறு 95/4
89 தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே - குறு 95/5
90 ஓர் ஏர் உழவன் போல - குறு 131/5
91 ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த - குறு 172/5
92 வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி - குறு 211/5
93 ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் - குறு 231/1
94 கன்று இல் ஓர் ஆ விலங்கிய - குறு 260/7
95 ஓர் இல் பிச்சை ஆர மாந்தி - குறு 277/3
96 கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை - குறு 282/2
97 ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை - குறு 295/4
98 நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் - குறு 312/4
99 தமர் ஓர் அன்னள் வைகறையானே - குறு 312/8
100 ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை - பதி 90/14
101 யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே - பதி 90/52
102 நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65
103 நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65
104 மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய - பரி 5/25
105 ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ - பரி 6/37
106 தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர்/யாறு உண்டோ இ வையை யாறு - பரி 6/92,93
107 தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் - பரி 16/25
108 நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் - பரி 20/65
109 ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் - கலி 5/14
110 தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்/அவலம் படுதலும் உண்டு - கலி 19/12,13
111 வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலி 23/9
112 அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் - கலி 23/11
113 சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் - கலி 23/13
114 இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை - கலி 49/13
115 ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின் - கலி 66/19
116 ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி - கலி 68/7
117 ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் - கலி 71/11
118 யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்/ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை - கலி 89/1,2
119 என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று - கலி 89/4
120 பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்/ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ - கலி 147/10,11
121 இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே - அகம் 12/5
122 ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் - அகம் 86/20
123 தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் - அகம் 117/12
124 முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் - அகம் 212/5
125 எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் - அகம் 257/4
126 ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ - அகம் 305/8
127 குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின் - அகம் 335/14
128 ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் - அகம் 369/24
129 தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் - அகம் 385/1
130 என் ஓர் அன்ன தாயரும் காண - அகம் 385/2
131 நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் - புறம் 5/4
132 நும் ஓர் அன்ன வேந்தர்க்கு - புறம் 45/8
133 நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே - புறம் 47/11
134 அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி - புறம் 51/4
135 ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல - புறம் 176/10
136 பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும் - புறம் 183/3
137 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே - புறம் 189/6
138 நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன - புறம் 192/3
139 ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் - புறம் 194/1
140 ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் - புறம் 194/1
141 நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும் - புறம் 198/14
142 நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் - புறம் 227/8
143 நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே - புறம் 246/15
144 ஓர் இல் கோயின் தேருமால் நின்னே - புறம் 300/6
145 உளன் என வெரூஉம் ஓர் ஒளி - புறம் 309/6

தேமொழி

unread,
Oct 1, 2018, 2:15:34 AM10/1/18
to மின்தமிழ்
மேலும் பேச்சு வழக்கில்

என்ன ஒரு அழகு 

என்ன ஒரு இனிமை 

எனக் கூறுவதுண்டு.  
Reply all
Reply to author
Forward
0 new messages