1. தமிழ்க்கூடல், உலத்தமிழ்ச்சங்கம் +++ 2.பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை +++ 3. தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

14 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 26, 2023, 7:20:12 PMSep 26
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தமிழ்க்கூடல், உலத்தமிழ்ச்சங்கம்

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      27 September 2023      அகரமுதல

புரட்டாசி 10, 2054 புதன் 27.09.2023

முற்பகல் 10.00 மணி

தமிழ்க்கூடல்

நூல் அரங்கேற்றம்



தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      27 September 2023      அகரமுதல


(தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்-தொடர்ச்சி)

கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

இனிய அன்பர்களே!

இளைஞர் அரண் கல்வியுரிமைப் பேரணி – மாநாடு, குடந்தை – 2023
2023 சூலை 16
மாநாட்டுத் தீர்மானங்கள் (வரைவு)


1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக நீதி வழங்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வோராண்டும் சூலை 16ஆம் நாளைத் தமிழக அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் படித் தமிழக மக்களையும் தமிழக அரசையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்பது குடிமக்களின் கல்வியுரிமைக்குப் புறம்பானதாகவும், வணிக மயத்துக்கும் இந்து மயம் இந்திய நடுவணாதிக்க மயத்துக்கும் வழிவகுப்பதாகவும் இருப்பதால் அக்கொள்கையைத் தமிழக மக்கள் அடியோடு மறுதலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்கும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வரவேற்கிறது.

3) அதே நேரத்தில் தமிழக அரசு அமைத்த குழு செயல்படாமல் முடங்கியிருப்பது குறித்தும், இதற்கிடையில் இந்திய அரசின் பிற்போக்கான கல்விக் கொள்கையின் சில கூறுகள் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல செயலாக்கப்பட்டு வருவது குறித்தும் இம்மாநாடு கவலை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு மறுதலித்து அதனை எவ்வகையிலும் செயல்படுத்த மறுக்கும்படித் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4) தமிழ்நாட்டுப் பலகலைக்கழகங்களின் தன்னாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் என்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் அறிவித்து இருப்பதைத் திரும்பப் பெறும்படி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டளர்கள், மக்கள் கல்வி இயக்கங்கள் நடத்தி வரும் போராட்டங்களோடு இளைஞர் அரண் தோழமை கொள்கிறது. .

6) பொதுநுழைவு(நீட்), பொ.ப.நு.தே.(cuet), தே.த.தே.( NExT) முதலான அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளைக் கைவிடும் படி இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழகச் சட்டப் பேரவை இயற்றிய நீட் விலக்குச் சட்டத்துக்கு இந்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வகையில் தமிழக மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும் படி தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7) தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் தன்னளிப்புடன் உழைத்து வரும் கல்வியாளர் பேராசிரியர் சவகர் நேசன் அவர்களின் சலியா முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகிறது. கல்விக் கொள்கையின் பரிமாணங்கள் என்ற அவரது ஆய்வறிக்கையைத் தமிழ்ச்சமூகம் ஆழ்ந்த கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கருதி, அவர்தம் முயற்சிகளில் அறிவார்ந்தும் உணர்வார்ந்தும் துணைநிற்க இளைஞர் அரண் உறுதி கொள்கிறது.

8) மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருவதாக இம்மாநாடு அஞ்சுகிறது. இந்த நிலையைச் சரிசெய்யத் தமிழக மக்களும் தமிழக அரசும் உடனே உரியவாறு செயல்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது,

9) தமிழகத்தின் கல்விச் சூழல் கெட்டுக் கிடப்பதில் தமிழக அரசின் ஆசிரியர் அமர்த்தக் கொள்கைக்கு ஒரு பங்கிருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமை, ஊதிய ஏற்றத்தாழ்வு, ஒப்பந்த ஆசிரியர் முறை, கௌரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தாமல் நிரந்தரமாகவே தற்காலிக ஆசிரியர்களாக வைத்துக் கொள்வது, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பின்மை, ஆசிரியர்களை அமர்த்துவதில் இலஞ்ச ஊழல் ஆகிய இவை அனைத்தும் கல்விச் சூழலைச் சீரழித்திருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. இந்நிலைமைகளை உடனே சீர் செய்யத்தவறினால் தமிழ் நாட்டில் கல்வி செத்துப்போகும் ஆபத்து இருப்பதாக இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

10) மாணவர்களை வதைத்து பெற்றோரைச் சுரண்டி அறமும் அறிவும் சார்ந்த கல்வியை நாசமாக்கும் தன்நிதிக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்விக் கூடங்களை அரசுடைமையக்க வேண்டும்; இதற்கிடையில் அவற்றின் மீது அரசு தீவிரமான கட்டுப்பாடுகள் செலுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11) தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கல்வி இயக்கமாக உருப்பெற்றுள்ள தாய்த்தமிழ் பள்ளிகளை அரசு-உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் படி இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்
 252

++++


பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      27 September 2023      அகரமுதல


(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி)

பூங்கொடி

உலுத்தர் தொல்லை

கடைத்தெரு வழியே காரிகை தனியாய்

ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50

நாகிளம் பருவ நல்லியல் மாதர்

உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின்

நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே

ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர்

மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55

தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ?

அல்லியின் வரலாறு

வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய்

களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ்

மயில்நகர் எனும்பேர் மருவிய நகருள்

கோசிகப் பேரினன் குலக்கொடி யாவேன்;    60

மாசி மாமகக் தண்புனல் ஆடும்

ஆசை துரப்ப ஆணை கோரினேன்;

தந்தை தடுத்தும் தவிரரும் ஆர்வம்

உந்த அவருரை உதறித் தனிமை

அஞ்சிலேன் ஆய்விலா நெஞ்சினேன் சென்றேன்; 65
ஒருமகள் ஆதலின் உருத்துத் தடுக்கா
திருந்தனர், ஆங்கோர் இடுக்கண் நேர்ந்தது;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages